Tuesday 21 March 2017

பெரியார் போற்றும் இசுலாம் : ஒரு சரடு பரப்புரை



பெரியார் குறித்து இஸ்லாமியர் பலவாறு தங்கள் புழுகுகளை அவிழ்து விடுவது ஒருவழக்கம். அதில் சில இன்றியமையாதவை :
  1. மதம் என்று ஒன்று உனக்கு தேவையென்றால் இஸ்லாத்திற்கு செல்லுங்கள்.
  2. இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்தது.
  3. 5-மணிக்கு நீ இஸ்லாத்திற்கு மாறினால், 5.05-க்கு உன்னிடமுள்ள தீண்டமை நீங்கிவிடம்.
  4. பெரியார் இஸ்லாத்தை விமர்சித்ததே இல்லை.
  5. பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. சாதி தீண்டாமையையே எதிர்த்தார்.
  6. பெரியார் இஸ்லாத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தால் இஸ்லாத்திற்கு வந்திருப்பார். (இப்பொழுது இதற்கு பெரியார்தாசனையும் துணைத்து அழைத்துக் கொள்கிறார்கள்.)
 தோழர்களேஇவைகளெல்லம் உண்மைதானா? பெரியாரின் இஸ்லாம் தொடர்பான சில கருத்துக்களை இங்கு தந்துள்ளேன். அவரின் கருத்துகளின் கால வரிசையையும் கவனத்தில்கொண்டு படியுங்கள்.

(1946 இல் சென்னையில் திப்புசுல்தான் நாளில் கலந்து கொண்டு ஆற்றிய உரை. குடி அரசு 16.11.1946)

இங்கு இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?

மதம் மனிதனுடைய சொந்த ஆத்மார்த்தத்திற்கா? அல்லது மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்கா? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு "எப்படியாவது அவனுக்குப் பறப் பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்" என்போம்.

தோழர்களே, மதப்போராட்டம் என்பதில் ஏதாவது அறிவுடைமையோ மேன்மையோ இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மதப்போராட்டம் என்பது ஒருவிதமான வெறி அல்லது மக்களை மக்கள் ஏய்த்துப் பிழைக்கச் சுயநல வழி என்பதல்லாமல் வேறு அதில் என்ன இருக்கிறது? 


பெண் ஏன் அடிமையானால் என்ற பெரியாரின் நூலிலிருந்து – எழுதப்பட்ட காலம் 1.1.1942
மற்றும்இங்கு இந்து மதத்தில் பறையனாகவோ, சண்டாளனாகவோ சூத்திரனாகவோ இருக்கிறவன் வேறு மதத்திற்கு, சிறப்பாக இஸ்லாம் மதத்திற்குப் போனால் அந்த மதத்தாருள் அவன் சரிசமமான மனிதனாக ஆகிவிடுகிறான் என்பதல்லாமல் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்று கேட்கிறேன். மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?

மதம் மனிதனுடைய சொந்த ஆத்மார்த்தத்திற்கா? அல்லது மற்றவர்களுடைய நிர்பந்தத்திற்கா? ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு "எப்படியாவது அவனுக்குப் பறப் பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்" என்போம்.

தோழர்களே, மதப்போராட்டம் என்பதில் ஏதாவது அறிவுடைமையோ மேன்மையோ இருக்கமுடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைய மதப்போராட்டம் என்பது ஒருவிதமான வெறி அல்லது மக்களை மக்கள் ஏய்த்துப் பிழைக்கச் சுயநல வழி என்பதல்லாமல் வேறு அதில் என்ன இருக்கிறது? 


(06-03-1962- இல்விடுதலைநாளிதழில் பெரியார் .வெ. ரா. தலையங்கம்.)

      இதுபோல் நமது நாட்டின் மைனாரிட்டி உரிமை அவர்களது சமய கலாச்சார பண்பு என்பதற்காக பல காரியங்களில் நாம் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து வந்த காரணமே இன்று தமிழ்நாட்டுக்கு மைனாரிட்டிகளால் பெருங்கேடும், துரோகமும் அடைய வேண்டியவர்களாகி விட்டோம். மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம்பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி) அதனாலேயே நம் தமிழ்நாட்டில் உள்ள யோக்கியப் பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாயக்கேடான காரியங்களுக்கு இப்படிப்பட்ட மைனாரிட்டிகளின் பின்பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணிகிறார்கள். இந்தத் துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூகத் துரோகிகளுக்குப் பயன்பட்டு வாழக் காத்துக்கிடக்கிறார்கள். இந்தியக் கூட்டாச்சியில் தமிழ்நாடு ஒரு நாடாக இருக்கும் வரை தமிழ்நாடு இந்தக் கதிக்கு ஆளாகித் தான் தீரும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பதவி- பணவாதிகள் ஆனதனால் அவர்களுக்கு இந்த உண்மை ஒப்புக் கொள்ளத்தக்கது ஆகாது. பார்ப்பானுக்குப் பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதித்து அசிங்கப்பட்டு மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது. ஏன் இப்படி சொல்லுகின்றேன் என்றால் பார்ப்பான் துரோகம் செய்ய அவனுக்குக் காரணம் உண்டு. என்னவென்றால் அவன் பொய் பித்தலாட்ட உயர் வாழ்வு சரிந்து விழுகிறது. அதை வெளியிட்டு மக்களைத் திருப்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் துரோகக் கூட்டத்தில் இருந்து விலக இச்சைப்பட்டவர்கள் ஆவார்கள்.
இவ்வளவு எழுதப்பட்டதன் காரணம் மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும் அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் தமிழ்நாட்டுக்கு தமிழ் பெருவாரி மக்கள் சமுதாயத்துக்குக் கேடு என்பதை விளக்கவேயாகும். நான் ஒரு மனித தருமவாதி என்பதும் எதையும் திரை மறைவு இல்லாமல் திகம் பரமாய் கருத்துக் கொள்ளுகிறவன் என்பதையும் யாவரும் அறிவார்கள்.

தஜ்ஜால்




Facebook Comments

6 கருத்துரைகள்:

Ant said...

//இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது…//
பருக்கிக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கு கிடைக்க நாளாகாது என்பது அவர்களுக்கு நன்றாக புரிந்துள்ளதன் வெளிப்பாடுதான் இந்த வார்த்தைகள். (Read in between the lines).
//… தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார்.//
தீண்டாமை என்பதற்கு வரையிலக்கணம் தெரியாதவர்கள். ஒரு இந்து கிருத்தவ பெண் (அ) ஆண் திருமணம் நடைமுயைில் உள்ளது. இங்கு தீண்டாமை என்பது சாதி தாண்டி திருமணத்தை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.
இஸ்லாம் அல்லாத நபருடன் திருமண உறவு குறித்து நினைத்து பார்க்கவே முடியாது. திருமணம் ஆகியிருந்தாலும் கூட விவாக ரத்து தான். இது இவர்களுக்கு தீண்டாமையாக தெரிவில்லை.
//5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் // 5.00 மணிக்கு இசுலாமியன் அல்லாதவனாக மாறினால் 5.05க்கு உன் தலை போய் விடும் என்பதே சரி!

Ant said...

//மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?// இஸ்லாம் குறித்த அறிவு இல்லைாத நிலையில் மட்டுமே இவ்வாறு பேசியிருக்க முடியும். ஏனைய மதங்களை போல் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற தவறான புரிதலே இத்தகையா வார்த்தைகளாக வெளிவந்துள்ளன.

Ant said...

//மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும், “துரோகம் – பச்சைத் துரோகம்” என்கின்ற குழந்தைகளைத் தான் ஈனும்; ஈன்றும் வருகிறது. இது இயற்கைப் பண்பு. (அல்லது விதி)// இதன் பலனைத்தான் பாஜக அறுவடை செய்தது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் இருக்கும் ஆதலால் மோடி அதை சரியாக பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இதற்கு பெறும் பங்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியையே சாரும்.

Ant said...

பாருக் இழப்பிற்கு உள்ளான அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபாங்கள்.
ரிஷான நபிக் தான் இஸ்லாமின் கோரமுகத்தை தேலுரித்து காட்டத்துவங்கினாள். பாருக் தொடர்கிறார்.
வருந்ததக்கது ஆணவக் கொலை என்றும் கௌரவ கொலை என்றும் வரிந்து கட்டிய சமுக போராளிகள் அமைதியாக அடங்கியிருப்பதுதான்.

நந்தன் said...

/மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?// இஸ்லாம் குறித்த அறிவு இல்லைாத நிலையில் மட்டுமே இவ்வாறு பேசியிருக்க முடியும். ஏனைய மதங்களை போல் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற தவறான புரிதலே இத்தகையா வார்த்தைகளாக வெளிவந்துள்ளன. //

தந்தை பெரியாரை இதற்கு குற்றம் சொல்வது பொருத்தமற்றது. அன்றைய நிலையில் அவர் எடுத்துக்கொண்ட பணி சாதி தீண்டாமை ஒழிப்பு, அதற்காக கடவுள் மறுப்பு. ஆரம்ப காலத்தில் கடவுள் மறுப்பிலும்கூட பிடவாதநிலையில் இல்லை. காலம் அவரையும் மாற்றியது. இசுலாமியர்களையும் அவர்கள் செயல்பாடுகளின் நரித்தனங்களையும் புரிந்து கொண்டார்.

இந்து தத்துவங்களையும் புராணங்களையும் படித்த அவர் குர்ஆனை படிக்கவில்லை என்றே கருதுகிறேன். ஒருவர் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. படிக்காதது பற்றி தகுந்த ஆதரம் இல்லாது விமர்சிப்பது தவறு என்று அவர் இஸ்லாமிய கொட்பாடுளை விமர்சிக்காமல் இருந்தார் என்றே புரிந்து கொள்ளலாம்.

இன்றைய பெ, பெரியாரிய அமைப்புகள் அனைத்துக்கும் கூட இதைப் பொருத்தலாம்.

Ant said...

//நந்தன் said...
வர் குர்ஆனை படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.// இதுவே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
/மறுபடியும் அவன் இஷ்டப்பட்டால் அவனுக்கு இஷ்டமான மதத்திற்குப் போகலாமே. கூடாது என்று யார் சிறையில் வைத்துவிடுகிறார்கள்?// இஸ்லாம் குறித்த அறிவு இல்லைாத நிலையில் மட்டுமே இவ்வாறு பேசியிருக்க முடியும். ஏனைய மதங்களை போல் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற தவறான புரிதலே இத்தகையா வார்த்தைகளாக வெளிவந்துள்ளன. // இதில் தவறான விமர்சனம் இல்லை.

//தந்தை பெரியாரை இதற்கு குற்றம் சொல்வது பொருத்தமற்றது.//
//ஒருவர் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. படிக்காதது பற்றி தகுந்த ஆதரம் இல்லாது விமர்சிப்பது தவறு என்று அவர் இஸ்லாமிய கொட்பாடுளை விமர்சிக்காமல் இருந்தார் என்றே புரிந்து கொள்ளலாம்// கருத்துக்களே எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. தங்களின் வாதமே தகுந்த ஆதாரம்.
//இசுலாமியர்களையும் அவர்கள் செயல்பாடுகளின் நரித்தனங்களையும் புரிந்து கொண்டார்// தவறான வாதம். இசுலாமியர்கள் செயல்பாட்டை இஸ்லாமில் இருந்து வேறுபடுத்தி பார்க்க இயலாது. அடிப்படை இசுலாம்தான்.