Showing posts with label ஆனந்த் சாகர். Show all posts
Showing posts with label ஆனந்த் சாகர். Show all posts

Friday, 22 August 2014

இஸ்லாமும் கைக்குழந்தைகளுடன் பாலுறவும்


ஜூலை 25,2014 




கைக்குழந்தைகளோடு பாலுறவு கொள்வதை கொமைனி(Khomeini) அனுமதித்தார் என்ற கதையில்  ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டு அண்மையில் திரு.ரிச்சர்ட் டாகின்ஸ்(Mr.Richard Dawkins) ஒரு ட்வீட் அனுப்பினார். இந்த கதையை faithfreedom.org தளத்தில் தான் படித்ததாக யாரோ ஒருவர் கூறினார். அதன் நம்பகத்தன்மையை நான் உறுதி செய்தேன். தஹ்ரீர் உல் வஸிலா(சுதந்திரத்தின் வழிவகைகள்) எனும் தன்னுடைய புத்தகத்தின் 4ஆவது வால்யூமில் கொமைனியால் இந்த ஃபத்வா வழங்கப்படுகிறது. அந்த புத்தகம் அரபியில் எழுதப்பட்டது. இந்த ஃபத்வாவை நான் கீழே வெளியிட்டிருக்கிறேன். பத்தியின்(paragraph) முதல் வரியை காபி பேஸ்ட் செய்து முழு வால்யூமையும் ஆன்லைனில் வெளியிட்டிருக்கிற பல டஜன் தளங்களை நீங்கள் கண்டுகொள்ளலாம். நான் அதை al-shia.org     http://www.al-shia.org/html/ara/books/lib-fqh/tahrir-2/tahrir25.htm  என்ற தளத்திலிருந்து பிரதி எடுத்திருக்கிறேன். 


அது கேள்வி# 12



مسألة 12 :
لا يجوز وطء الزوجة قبل إكمال تسع سنين ، دواما كان النكاح أو منقطعا ، و أما سائر الاستمتاعات كاللمس بشهوة و الضم و التفخيذ فلا بأس بها حتى فى الرضيعة ، و لو وطأها قبل التسع و لم يفضها لم يترتب عليه شى‏ء غير الاثم على الاقوى ، و إن أفضاها بأن جعل مسلكى البول و الحيض واحدا أو مسلكى الحيض و الغائط واحدا حرم عليه وطؤها أبدا لكن على الاحوط فى الصورة الثانية ، و على أي حال لم تخرج عن زوجيته على الاقوى ، فيجري عليها أحكامها من التوارث و حرمة الخامسة و حرمة أختها معها و غيرها ، و يجب عليه نفقتها مادامت حية و إن طلقها بل و إن تزوجت بعد الطلاق على الاحوط ، بل لا يخلو من قوة ، و يجب عليه دية الافضاء ، و هى دية النفس ، فإذا كانت حرة فلها نصف دية الرجل مضافا إلى المهر الذي استحقته بالعقد و الدخول ، و لو دخل بزوجته بعد إكمال التسع فأفضاها لم تحرم عليه و لم تثبت الدية ، و لكن الاحوط الانفاق عليها مادامت حية و إن كان الاقوى عدم الوجوب .

Islamiccentre.com என்ற தளம் கொமைனியின் புத்தகத்தின் பாரசீக மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட்டிருக்கிறது.


http://www.islamicecenter.com/AHKAAM/tahrirolwasyla_imam_khomeini_jeld_4_01.html
كسيكه زوجه اى كمتر از نه سال دارد وطى او براى وى جايز نيست چه اينكه زوجه دائمى باشد، و چه منقطع ، و اما ساير كام گيريها از قبيل لمس بشهوت و آغوش گرفتن و تفخيذ(4)اشكال ندارد هر چند شيرخواره باشد، و اگر قبل از نه سال او را وطى كند اگر افضاء نكرده باشد بغير از گناه چيزى بر او نيست ، و اگر كرده باشد يعنى مجراى بول و مجراى حيض او را يكى كرده باشد و يا مجراى حيض و غائط او را يكى كرده باشد تا ابد وطى او بر وى حرام مى شود، لكن در صورت دوم حكم بنابر احتياط است و در هر حال بنا بر اقوى بخاطر افضاء از همسرى او بيرون نمى شود در نتيجه همه احكام زوجيت بر او مترتب مى شود يعنى او از شوهرش و شوهرش از او ارث مى برد، و نمى تواند پنجمين زن دائم بگيرد و ازدواجش با خواهر آن زن بر او حرام است و همچنين ساير احكام ، و بر او واجب است مادامى كه آن زنده است مخارجش را بپردازد. هر چند طلاقش داده باشد، بلكه هر چند كه آن زن بعد از طلاق شوهرى ديگرى انتخاب كرده باشد كه بنابر احتياط بايد افضا كننده نفقه او را بدهد، بلكه اين حكم خالى از قوت نيست ، و نيز بر او واجب است ديه افضا را كه ديه قتل است بآن زن بپردازد اگر آن زن آزاد است نصف ديه مرد را با مهريه ايكه معين شده و بخاطر عقد دخول بگردنش آمده به او بدهد، و اگر بعد از تمام شدن نه سال با او جماع كند و او را افضاء نمايد حرام ابدى نمى شود و ديه بگردنش نمى آيد، لكن نزديكتر به احتياط آن است كه مادامى كه آن زن زنده است نفقه اش را بدهد هر چند كه بنا بر اقوى واجب نيست .

கீழே இருப்பது ஆங்கிலத்தில்(தமிழில்) இந்த ஃபத்வாவின் மொழிபெயர்ப்பு :
ஒருவர் தன்னுடைய மனைவியோடு அவள் ஒன்பது வயதை அடைவதற்குமுன்  உடலுறவு கொள்வது, அது நிரந்தர அல்லது தற்காலிக திருமணமாக இருப்பினும், அணுமதிக்கப்படக்கூடியது அல்ல. ஆனால் அந்த மனைவி இன்னும் தாய்பால் கொடுக்கப்படும் குழதையாக இருந்தாலும், காம இச்சையுடன் தொடுவது, கட்டி தழுவுவது, முத்தமிடிவது, தக்ஃபிஸ்/Takhfiz(அவளுடைய தொடைகளில் தன்னுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பது) போன்ற மற்ற எல்லா பாலுறவு இன்பங்களை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஆசனவாய் மூலம் பாலுறவு கொள்வது அனுமதிக்கப்படுகிறது. ஒன்பது வயதுக்கும் குறைவான சிறுமியுடன் உடலுறவு கொள்ளும் ஒரு ஆண் குற்றம் புரிந்திருக்கிறான். ஆனால் அந்த சிறுமி நிரந்தரமாக சேதாராத்திற்கு ஆளாகாமல் இருக்கும்பட்சத்தில் அது உடன்படிக்கையை மீறிய செயல் மட்டுமே. அதாவது, அவளுடைய கர்பக்குழாயும் அவளுடைய பெண்ணுருப்பும் அல்லது அவளின் ஆசனவாயும் அவளின் பெண்ணுருப்பும் ஒன்றாக ஆகிவிடுமாயின், அவலுடன் உடலுறவு கொள்வது அவனுக்கு நிரந்தரமாக ஹராம்(தடை செய்யப்பட்டது) ஆகும். ஆனாலும் இது முன்னெச்செரிக்கைக்காகத்தான். எந்த வகையிலும் அவளை சேதப்படுத்துவதின்மூலம் திருமணம் செல்லாததாக ஆகிவிடுவதில்லை. திருமணத்தின் எல்லா சட்டங்களும் இன்னமும் பொருந்தக்கூடியவையாகவே உள்ளன. அதன் பொருள், அவனிடமிருந்து அவள் சொத்துரிமை பெறுவாள், அவளிடமிருந்து அவன் சொத்துரிமை பெறுவான், அவன் ஐந்தாவதாக ஒரு நிரந்தர மனைவியை மணந்துகொள்ள முடியாது. மேலும் அவளுடைய சகோதரிகளை அவன் மணந்துகொள்ள முடியாது மற்றும் இதர சட்டங்கள்.

அவன் அவளை விவாகரத்து செய்திருந்தபோதிலும் அல்லது அவள் வேறொரு ஆணை மணந்து கொண்டிருந்தபோதிலும் அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய எல்லா செலவுக்கும் கொடுப்பது அவன்மீது கடமையாகும். இன்னும் ரத்த இழப்பீடுபோல், சேதாராத்திற்காக கொடுக்க வேண்டிய கடமைக்கு அவன் உட்படுத்தப்படுவான். அவள் சுதந்திரமான பெண்ணாக இருந்தால், அவளை அனுபவித்ததிற்காக ஒரு ஆணின் ரத்த இழப்பீடு தொகையில் பாதியையும் அவளுடைய வரதட் சினையையும்(மஹர்) அவன் அவளுக்கு கொடுக்க வேண்டும். 

ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் அவள் ஒன்பது வயதை அடைந்த பிறகு உடலுறவு கொண்டு அவளை சேதப்படுத்திவிட்டால், அவள் அவனுக்கு தடை செய்யப்பட்டவளாகமாட்டாள். அவன் எந்த உடன்படிக்கை மீறலையும் செய்யவில்லை. இருப்பினும், அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய செலவுகளுக்கு அவன் கொடுப்பது, அப்படி செய்வது அவன்மீது கடமை இல்லை என்றபோதிலும்,நல்லது.


ஒரு குழந்தையின் தொடைகளுக்கு இதையே ஒருவனுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பதற்கான அரபி வார்த்தை தக்ஃபிஸ்/Takhfiz என்பதாகும். ஜனநாயகம் என்பதற்கான சரியான வார்த்தை அரபியில் எப்படி இல்லையோ அதேபோல் தக்ஃபிஸ் என்பதற்கான சரியான வார்த்தை ஆங்கிலத்தில்(தமிழில்) இல்லை. ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு தேவையான வார்த்தைகளை கண்டுபிடித்துக்கொள்கிறது. உதாரனத்கிற்கு, இநுட் இனத்தவர்கள் (Inuits) பனி என்பதற்கு 15 வார்த்தைகளை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே இந்த இஸ்லாமிய வழக்கத்திற்கு "தொடை வேலை"(Thighing) போன்ற  ஏதாவது ஒரு வார்த்தையை நாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் அல்லது வெறுமனே அரபி வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.

அரபியிலிருந்து இந்த பதத்தை மொழிபெயர்க்க எனக்கு உதவுமாறு என்னுடைய நண்பர் திரு.சாம் சாலமனை நான் கேட்டுக்கொண்டேன். சாம் முன்னாள் முஸ்லிம் நீதிபதியாக இருந்தவர். அவர் ஷரியத்தை 15 வருடங்கள் பயின்றவர், இஸ்லாத்தை மிக நன்றாக அறிந்தவர். தக்ஃபிஸ் என்பது கொமைனியுடைய அல்லது ஷியா  இஸ்லாமின் கண்டுபிடிப்பு அல்ல. அது அனைத்து முஸ்லிம்களாலும், ஷியாக்கள், சுன்னிகள் ஆகியோர்களால் ஒரேமாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய நீதியியலின் ஒரு அங்கம் என்று அவர் எனக்கு கூறினார்.

ஆயிஷாவோடு மட்டுமில்லாமல் மற்ற மூன்று சின்னஞ்சிறுமிகளோடுகூட  பாலுறவுகொள்ள முஹம்மது முயன்றார், ஆனால் எல்லா மூன்று சிறுமிகளும் அலறி சத்தம் போட்டனர், தன்னுடைய பெயரை காப்பாற்றிக்கொள்ள அவர்களை அவர் போக விட்டுவிட்டார் என்பதும் சொல்லப்பட வேண்டும். மேலும் அவர் நடக்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின்மேல் காம இச்சை கொண்டு அதன் தாயிடம், அவள் வளரும்போது நான் இன்னும் உயிரோடு இருந்தால் அவளை மணந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அந்த குழந்தையின் அதிர்ஷ்டமாக அவள் வளருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இந்த கதைகளின் விவரங்கள் “The Life of Muhammad under the light of Reason”  என்ற என்னுடைய வெளிவரவிருக்கும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.


மூலம் : அலி சினா (Ali Sina)
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

Wednesday, 16 October 2013

மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 2

மௌலானா  அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு இரண்டாவது மின்னஞ்சல் - பாகம் 2




17/11/2007

மௌலானா அஜ்மல் காத்ரி  
திரு அலி,
முதலில் நான் வேண்டிக்கொள்ள விரும்புவது, முஹம்மது நபியை (அவர் மீது அல்லாஹ்வின் சாந்தியும் ஆசியும் உண்டாகட்டும்) பற்றி அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்துவதை  நிறுத்துங்கள்  என்பதுதான்... நீங்கள் மனிதத்தை மதிப்பதாக இருந்தால், நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணர்வுகளுக்கு  நீங்கள் மதிப்பும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்.

அன்பார்ந்த மௌலானா,
நான் முஹம்மதுவை அவமதிக்கவில்லை. நான் அவருக்கு எதிராக குற்றசாட்டுகளை வைக்கிறேன். முஹம்மது திருடராகவும், வெகுஜன படுகொலைகாரராகவும், கற்பழிப்பவராகவும் இருந்தார் என்று நான் கூறினால், நான்  ஹதீத், சீறா  மற்றும் குர்ஆனை ஆதாரங்களாக பயன்படுத்தி என்னுடைய உரிமைகோரல்களை   நிரூபிக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகளை  பொய்யென்று நிரூபிப்பது உங்களை சார்ந்தது.

நம்பிக்கைகள் என்பதைப்பற்றி சொல்வதென்றால், நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று யார் சொன்னது? நம்பிக்கை கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள்(நஜீஸ்);  அவர்களை சிலுவையில் அறையுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளை வெட்டுங்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய எதிரிகள், அவர்கள் நரகத்தின் எரிபொருள் ஆவார்கள் என்று கூறுகிற ஒரு மதத்தை எவரும் ஏன் மதிக்க வேண்டும்? நான் நம்பிக்கை கொள்ளாவதன் என்பதால் இது எனக்கு அவமரியாதை. எனக்கு எதிரான ஒரு அவமரியாதையை நான் ஏன் மதிக்க வேண்டும்?

மனிதர்களுடைய நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும் என்று நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். அது மடத்தனமானது. எந்த நம்பிக்கையையும், நம்முடைய சொந்த நம்பிக்கையையும் கூட நாம் மதிக்க வேண்டியதில்லை. நாம் எப்பொழுதுமே நம்பிக்கைகளை குறித்து கேள்வி கேட்க வேண்டும். மனிதர்கள் வளர்ச்சி அடைவதற்கு இது ஒன்றே வழி. நாம் நம்பிக்கைகளை மதித்து, அவைகளை குறித்து கேள்வி கேட்கவில்லை என்றால், அவைகளுக்கு சவால் விடவில்லை என்றால், பொய்யான நம்பிக்கைகளை நாம் எப்படி விட்டொழிக்கப் போகிறோம்? 

மேலும், மற்றவர்களுடைய நம்பிக்கைகளை முஸ்லிம்கள் மதிக்கிறார்களா? அவர்கள் எங்கெல்லாம் பெருவாரியாக இருந்து அவர்களுடைய கை ஓங்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பது, பஹாய்களையும்(Bahais) சீக்கியர்களையும் அஹ்மதிகளையும் ஹிந்துக்களையும் கொலை செய்வது என்பது ஏன்? முஸ்லிம்கள் தினந்தோறும் ஓதுகின்ற சூரா பாத்திஹா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவமரியாதை இல்லையா? முஸ்லிம்களை மறந்து விடுங்கள். முஹம்மது அவருடைய காலத்து மக்களின் நம்பிக்கையை மதித்தாரா? அவர் கஅபாவை உடைத்து உட்புகுந்து அந்த கோயிலை ஏன் அழித்தார்? அது அரபுகளுடைய மதத்தின் புனிதத்தை மிக அவமரியாதை படுத்தியது இல்லையா? அவர் தன்னுடைய பள்ளிவாசலை வேறு எங்காவது ஆரம்பித்து இருக்க முடியும். ஏன்  அவர் மக்களின் தெய்வங்களை தாக்கி அவமரியாதை படுத்த வேண்டும்? மற்ற முஸ்லிம்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை அவர் ஏற்படுத்தினார். விளைவாக, அவர் இருந்ததை போலவே, அவரை பின்பற்றுபவர்களும் துஷ்டர்களாகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகிறார்கள்; மதத்திலிருந்து வழி தவறியவர்கள் என்று ஒருவரை ஒருவர் கூறுகிறார்கள்; ஒருவரை ஒருவர் கொலை செய்கிறார்கள். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களின் கைகளில் போர்களில் கொல்லப்பட்டதைவிட அதிகமாக, சொந்த மதப்பிரிவு சண்டைகளில், சொந்த முஸ்லிம்களின் கைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கொல்லுதல் என்பது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உங்களுடைய நம்பிக்கையை மதிக்கும்படி மற்றவர்களை நீங்கள் கேட்டுக்கொள்ளும்போது, மற்றவர்களுடைய நம்பிக்கைகளை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதை தயவுகூர்ந்து ஆழ்ந்து பாருங்கள். இஸ்லாமிய நாடுகளில் அவர்கள் மற்ற மதங்களுக்கு வழங்குவதைக் காட்டிலும் மிக அதிகமான சுதந்திரத்தையும் உரிமைகளையும் முஸ்லிமல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள். ஷரியத்தை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் கொல்லப்பட வேண்டும் என்று நீங்களே கூறி இருக்கிறீர்கள். மனிதர்களுடைய நம்பிக்கையை இப்படிதான் நீங்கள் மதிக்கிறீர்களா? நீங்கள் ஒரு மரியாதையையும் கொடுக்காதபோது, நீங்கள் மட்டும் மரியாதையை கேட்கிறீர்கள்.

முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் இறுதியான, வல்லமையான தூதர். சரியானது, தவறானது என்பதை குறித்து தீர்ப்பளிப்பதற்கு  குர்ஆனே அளவுகோல்(புர்கான்). குர்ஆனால் வழங்கப்படும் நம்பிக்கை(ஈமான்) எனும் அளவுகோல் எதுவானாலும் அது இறுதித்தூதரின் உம்மதிற்கே(சமுதாயம்) கொடுக்கப்படுகிறது என்பதை குறித்து உங்களுடைய மனதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நல்லது, நான் அதை சந்தேகிக்கிறேன். அதனால்தான் இந்த உரிமைகோரலை தர்க்கப்பூர்வமான வழியில் நிரூபிக்கும்படி உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அவ்வாறு கூறுவதினாலேயே நான் நம்பிவிட மாட்டேன்.  அந்த உரிமைகோரல்களுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? மேலும் முஹம்மது அவ்வாறு கூறுவதினாலேயும் நான் நம்பிவிட மாட்டேன். எனக்கு ஆதாரம் தேவை. முஸ்லிம்கள் ஆதாரத்தை உரிமைகோரலோடு போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். எந்த ஆதாரத்தையும் கொடுப்பதிற்கு பதிலாக, ஒரு பொய்யை அடித்துக் கூறினால் அது உண்மை ஆகிவிடும் என்பதைப்போல, அவர்கள் உரிமைகோரலையே  திருப்பித் திருப்பி கூறுகிறார்கள்.

நான் உங்களுடன் தர்க்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட மாட்டேன். ஏனெனில், சுத்தமான தர்க்க அறிவு(pure logic) உங்களை சந்தேகவாதத்தையோ (Agnotism) அல்லது நாத்திகத்தையோ நோக்கி வழிநடத்தி செல்லும். நீங்கள் ஆன்மீகத்தில் நம்பிக்கைக் கொண்டு, உங்களுடைய இதயத்தை உங்களுடைய பகுத்தறிவு பின்பற்றும்படி அனுமதிக்காத பட்சத்தில் அது உங்களை எப்பொழுதும் தவறாகவே வழிநடத்தி செல்லும்... ஏனெனில் ஆத்மாவின் உறவு இதயத்தோடுதான் உள்ளது. ஆத்மாவானது தன்னுடைய சொந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது(அதனுடைய சொந்த கண்கள், காதுகள், முதலியன). சூரா பக்கராவில் கூறப்படுவதைபோல், குர்ஆன் முஹம்மது(ஸல்) நபியின் இதயத்தில் வெளிப்படுத்தப்பட்டது... அதனால்தான் எவருடைய ஆத்மாக்கள் செத்துவிட்டனவோ அவர்களை அல்லாஹ் "செவிடர்கள், ஊமைகள்" என்று விளிக்கிறான்.

அது ஒரு வல்லமையான அறிக்கைதான். தர்க்க அறிவு சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லுமென்றால், கடவுளிடம் நம்பிக்கை கொள்வது தர்க்க அறிவுக்கு புறம்பானது என்று அதற்கு பொருள் ஆகாதா? கடவுள் கொடுக்கவில்லை என்றால், மனிதர்களாகிய நமக்கு நம்முடைய மூளையை யார் கொடுத்தது? நம்முடைய மூளையை பயன்படுத்துவது ஏன் சந்தேகவாதத்திடமோ அல்லது நாத்திகத்திடமோ வழிநடத்தி செல்லும்? கலீலேயோ குறிப்பிட்டது போல், நம்முடைய மூளையை பயன்படுத்துவதை கடவுள் விரும்பவில்லை என்றால், ஏன் அதை அவர் நமக்கு தர வேண்டும்? கடவுளை கண்டடைய தர்க்க அறிவை நாம் பயன்படுத்தக்  கூடாது என்றால், நாம் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? 

தங்களுடை பொய்களால் எண்ணற்ற மக்களை ஏமாற்றி அவர்களிடம் உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; பகுத்தறிவு சிந்தனையை முயற்சி செய்யாதீர்கள்; தர்க்க அறிவை பயன்படுத்தாதீர்கள்; வெறுமனே நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுடைய இதயத்தை திறந்து நாங்கள் சொல்கிற எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கண்மூடித்தனமாக நம்புங்கள்; ஏனென்றால் இந்த மூளையற்ற ஏற்பு உங்களை வழிகாட்டலுக்கு இட்டு செல்லும் என்று கூறிய போலி தீர்க்கதரிசிகளுக்கு(நபிமார்கள்) பஞ்சமே இல்லை. இந்த பரிதாபமான மக்கள் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதற்காக அதுதான் நீங்கள் ஏற்றுக்கொள்கிற இடர்ப்பாடு(risk). கடவுளுடைய செய்தி தர்க்கப்பூர்வமானது  இல்லையென்றால், அது கடவுளுடைய செய்திதான் என்று நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்?
நீங்கள் கூறுவதற்கு முரணாக, கடவுள் பகுத்தறிவு உள்ளவராக இருப்பதால், நாம் உளறல்களை நம்புவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். பொய்மையிலிருந்து உண்மையை வேறுபடுத்துவதற்கான அறிவை அவர் நமக்கு வழங்கினார். வாழ்க்கையில் சிறு விஷயங்களில் நம்முடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக நாம் இருக்க வேண்டும் என்றால், கடவுளை கண்டடைய ஏன் நாம் தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்கக்கூடாது? 

நீங்கள் சதியை காணவில்லையா? நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாது என்று முஹம்மது ஏன் வலியுறுத்தினார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது ஏனென்றால், அவருடைய உரிமைகோரல் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்பது அவருக்கு தெரியும். தான் ஒரு பொய்யர் என்பது அவருக்கு தெரியும். மக்கள் தங்களுடைய மூளையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உண்மையை கண்டுவிடுவார்கள்; தன்னுடைய பொய்களை ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

வழிகாட்டலை கண்டடைவது என்று வரும்போது, நாம் மடத்தனமாக இருப்பதை கடவுள் விரும்புகிறார் என்று நம்புவது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. நாம் நம்முடைய மூளையை பயன்படுத்தக் கூடாதென்றால், எந்த மதம் உண்மையானது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்வது? ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாமே நம்முடைய இதயத்திடம் முறையிட்டு, நம்முடைய மூளையை பயன்படுத்துவதற்கு எதிராக நம்மை எச்சரிக்கின்றன. எந்த ஒன்று சரியான ஒன்று? அதிக தர்க்க அறிவுப்பூர்வமாக உள்ள ஒன்றை நாம் பின்பற்ற வேண்டுமா அல்லது நம்மை அதிகமாக மிரட்டுகிற ஒன்றையா?

தர்க்க அறிவைக்கொண்டு மட்டுமே நாம் உண்மையை கண்டடைய முடியும். உண்மை தர்க்க அறிவுப்பூர்வமானது. பொய்மையே தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. முஹம்மது கடவுளுடைய உண்மையான தூதர் இல்லை என்பதை காண்பதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் இதுதான். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள், கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று ஒருவர் உங்களிடம் கூறினால், நீங்கள் உடனடியாக அவரைவிட்டு விலகிவிட வேண்டும். ஏனென்றால் அந்த நபர் கடவுளுடைய தீர்க்கதரிசி அல்ல. அவர் ஒரு கபட வேடதாரி. முஹம்மது ஒரு பொய்யர் என்பதை காண்பதற்கு இது போதுமானதாக இல்லையா?

யார் செவிடன், ஊமையன், குருடன்? தன்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக உண்மையை கண்டடைபவனா அல்லது சிந்திக்காமல் நம்பிக்கை கொள்பவனா? இஸ்லாத்தை பொய்யென்று நிரூபிப்பது எவ்வளவு எளிமையானது என்பதை நீங்கள் காண்கிறீர்களா?

தர்க்க அறிவினால் நீங்கள் கடவுளிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடுவீர்கள் என்பது உண்மையல்ல. தர்க்க அறிவினால் நீங்கள் முஹம்மதுவிடம் உள்ள உங்களுடைய நம்பிக்கையைத்தான் இழந்து விடுவீர்கள். முஹம்மதுவுக்கு கடவுளை பற்றிய புரிதலே இருந்ததில்லை. கடவுளை பற்றி அவர் என்னவெல்லாம் சொன்னாரோ, அவை எல்லாமே அறிவீனமானது. தான் விரும்புகிற எதையும் செய்கிற, எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத, போற்றி புகழப்பட விரும்புகிற, மூளையற்ற நம்பிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கிற, சுதந்திர சிந்தனையாளர்களை தண்டிக்கிற சதாம்  ஹுசேனை போன்ற, துன்புறுத்தி இன்பம் காணும்(sadist) சர்வாதிகாரியை போன்று கடவுளை அவர் உருவகித்தார். கடவுளை பற்றிய வரையறை அதுவல்ல.

முஹம்மதுவை போன்ற இவ்வளவு குறைவான மதிநுட்பம் உள்ள ஒரு மனிதனால் கடவுளுடைய மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் அவரை மனம் போனபோக்கில் ஆட்சி செய்பவராக அவர் விவரித்தார். கடவுளை பற்றிய முஹம்மதுவின் புரிதல் மடத்தனமானது. அதனால்தான் நீங்கள் உங்களுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சி செய்யும்போது, அவருடைய அல்லாஹ்விடம் நீங்கள் நம்பிக்கையை இழந்து விடுகீர்கள். முஹம்மதுவுடைய கடவுள் தர்க்க அறிவுக்கு புறம்பானவர். மிகவும் அறியாமை மிக்க ஒரு மனிதனுடைய மனதில் உருவகிக்கப்பட்ட உண்மையில் இல்லாத ஒரு பாத்திரம் தானே ஒழிய, அவர் கடவுள் இல்லை.

நான் இஸ்லாத்தை துறந்த பிறகு நான் கடவுளை கண்டடைந்தேன். நான் அதை தர்க்க அறிவினால் கண்டேன். கடவுளை கண்டடைய நான் பகுத்தறிவை விட்டுவிடவேண்டி வரவில்லை. உண்மை தர்க்க அறிவுக்கு புறம்பாக இருக்க முடியாது. பொய்மைதான் தர்க்க அறிவுக்கு புறம்பானது. கடவுள் என்பது படைப்பின் அடிநாதமாக விளங்கும் ஒரே கோட்பாடு (Single Principle) ஆகும், ஒரு சர்வாதிகாரி அல்ல.

மனிதகுலம் பிளவுபட்டு இருப்பதற்கு காரணம், மனிதர்களில் பெரும்பான்மையினர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளர்களில் நம்பிக்கை கொள்வதுதான். நாம் இந்த பைத்தியக்காரத்தனத்தை நிறுத்திவிட்டு, தன்னை கண்டடைவதற்காக கடவுள் நமக்கு கொடுத்துள்ள மிகப் பெரிய பரிசை நாம் பயன்படுத்தினால், நாம் எல்லோருமே உண்மையான ஒரே கடவுளை கண்டடைவோம். மனித இனத்திற்கு இடையே உள்ள இந்த பிளவுகள் மறைந்து போகும். 

நீங்கள் ஷைத்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (அவற்றை மின்னஞ்சலில் கூற மாட்டேன்) எனக்கு காண்பிக்கப் படும்வரை, நானும் இஸ்லாத்தையும் முஹம்மது (ஸல்) நபியையும் பற்றி இதே மாதிரியானவைகளை கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகின்ற ஒவ்வொன்றும் உண்மையானதுதான் என்பதை அல்லாஹ் எனக்கு நிரூபித்து விட்டான்(சந்தேகமே இல்லை).

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் (signs/ஆயாத்) உங்களுக்கு காண்பிக்கப்பட்டன என்றால், அவைகள் எனக்கு காண்பிக்கப்படவில்லையே. நீங்கள் நம்புவதை நான் நம்ப முடியாது. ஏனெனில் நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்கவில்லை. அத்தாட்சிகள் இல்லாத பட்சத்தில் நான் செய்யக்கூடியதெல்லாம், என்னுடைய மூளையை பயன்படுத்தி தர்க்க அறிவுப்பூர்வமாக இருக்க முயற்சிப்பதுதான். நான் அதை செய்யும்போது, முஹம்மது ஒரு கபட வேடதாரி என்பதை நான் பார்க்கிறேன். நான் திரும்பவும் கூறுகிறேன். என்னுடைய புகார் கடவுளை பற்றி அல்ல. நான் நிராகரிப்பது முஹம்மதுவைத்தான். கடவுளோடு முஹம்மதுவுக்கு எந்த தொடர்பாவது இருந்தது என்று நான் நினைக்கவில்லை. அவர் கடவுளை புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவு.

பகுத்தறிவுக்கு புறம்பாக நாம் அவரிடம் நம்பிக்கை கொள்வதை கடவுள் விரும்புவாரா? அது இறைநிந்தனை(blasphemy). கடவுள் பகுத்தறிவுக்கு புறம்பானவர் அல்ல. சாத்தான் தான் பகுத்தறிவுக்கு புறம்பானவன். உங்களுடைய மூளையை பயன்படுத்தாதீர்கள்; கண்மூடித்தனமாக நம்புங்கள் என்று முஹம்மது உங்களிடம் கூறுகிறார் என்றால், முஹம்மது சாத்தானிடமிருந்து வந்தவர்தனே ஒழிய அவர் கடவுளிடமிருந்து வந்தவர் அல்ல என்பதற்கு அதுவே நிரூபணம்.

பரிதாபமான முஸ்லிம்களுக்கு அதுதான் நிகழ்ந்திருக்கிறது. சாத்தானையையே அன்றி, கடவுளை அவர்கள் வணங்காததால் அவர்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள்; ஒவ்வொருவரோடும், தங்களுக்குள் மற்ற ஒவ்வொருவரோடும் நிலையாக போரில் ஈடுபடுகிறார்கள். ஏன் பூமியில் முஸ்லிம்களே மிகவும் ஏழைகளாகவும் மிகவும் துர்பாக்கியமான நிலையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஏன் அவர்கள் நிலையாக தங்களுக்குள் ஒவ்வொருவரோடும் மற்ற ஒவ்வொருவரோடும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்? அது ஏனென்றால், அவர்கள் சாத்தானை வணங்குகிறார்கள் என்பதுதான்.

கடவுளுடைய அத்தாட்சிகளை பற்றி நீங்கள் பேச முடியாது என்று கூறுகிறீர்கள். அது எனக்கு என்ன நன்மையை செய்கிறது? அந்த அத்தாட்சிகள் யதார்த்தமானது என்றால், நீங்கள் தர்க்க அறிவுப்பூர்வமான வழியில் அவைகளை விளக்க முடியும். நீங்கள் தவறாக வழிநடத்தப் படவில்லை என்பதை நான் எப்படி அறிந்து கொள்வேன்? அந்த அத்தாட்சிகளை பற்றி எனக்கு கூறுங்கள். நீங்கள் முட்டாளாக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நான் நிரூபிப்பேன். நான் என்னுடைய மூளையை பயன்படுத்த வேண்டுமா அல்லது உங்களுடைய மூளையையா? நீங்கள் கண்ட அத்தாட்சிகள் உங்களை திருப்தி படுத்தினால் அது உங்களுக்குத்தான் நல்லது! நான் எந்த அத்தாட்சிகளையும் பார்க்காதவரைக்கும் நான் நம்ப வேண்டியதில்லை. ஆதாரம் இல்லாமல் நம்பிக்கை கொள்வது முட்டாள்தனமாக ஆகிவிடும். பகுத்தறிவுக்கு புறம்பான மற்ற ஏராளமான மதங்களில் ஒன்றில் நம்பிக்கை கொள்ளாமல் இஸ்லாத்தில் நான் ஏன் நம்பிக்கை கொள்ள வேண்டும்?

இஸ்லாம் அழகானதாகவும் அமைதிப்பூர்வமானதாகவும் இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொன்றும் மனித இயல்புக்கு இசைவானதாக இருக்கிறது.

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது. நீங்கள் இஸ்லாத்தை அழகானதாக பார்க்கிறீர்கள்.நான் அதை அசிங்கமானதாக பார்க்கிறேன். அது தனிப்பட்ட நம்பிக்கைகளை/கருத்துக்களை  அடிப்படையாகக்  கொண்டது(subjective). நாம் அழகியல் என்பதிற்குள் இறங்காமல் இருப்போமாக! எப்படியாயினும், இஸ்லாம் அமைதிப்பூர்வமானது அல்ல. அந்த உரிமை கோரல் ஒரு தமாஷ். முஸ்லிம்கள் எப்பொழுதும் சண்டையில்தான் ஈடுபடுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் முஹம்மதுவே 78 அதிரடி கொள்ளை தாக்குதல்களை நடத்தினார். "சண்டையிடுவது உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது"(குர்ஆன் 2:216), "நீங்கள் ஜிஹாதில் சண்டையிடவில்லையென்றால், கடுமையான வேதனையைக் கொண்டு அல்லாஹ் உங்களை தண்டிப்பான்"(குர்ஆன் 9:39) என்று குர்ஆன் கூறுகிறது.

இஸ்லாம் அமைதிப்பூர்வமானது என்று கூறுவது கேலிக்குரியது. இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக உள்ளது என்று நீங்கள் கூறும்போது நான் மாறுபட வேண்டியிருக்கிறது. மனித இயல்புக்கு இசைவாக ஏதாவது இருந்தால், அது இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடியும். இஸ்லாம் இயல்பாக புரிந்துகொள்ளப்பட முடிவதில்லை. அது போதனை செய்யப்பட வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் அதற்கு அடிபணிய விருப்பமில்லாதவர்களின் மேல் அது திணிக்கப்பட வேண்டியிருக்கிறது. அது இயல்பானது அல்ல என்பதற்கு இதுவே நிரூபணம். காதலில் விழுவது இயல்பானது. ஆர்வம் இயல்பானது.  மகிழ்ச்சியையும் நிறைவையும் நாடுவது இயல்பானது. இவைகளே திணிப்பு இல்லாமல் இயல்பாக நாம் செய்ய விரும்புவது. ஒரு நம்பிக்கையானது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால் அது இயல்பானது அல்ல.

இஸ்லாம் தர்க்க அறிவுப்பூர்வமானது அல்ல என்று முன்பு நீங்கள் கூறினீர்கள். இயல்பான ஒன்று எப்படி தர்க்க அறிவுக்கு புறம்பானதாக இருக்க முடியும்? மேலும் அது இயல்பானது எனில், ஜிஹாத் (புனித போர்) நடத்தி வாளினால் மற்றவர்கள் மேல் இஸ்லாத்தை வலுக்கட்டாயமாக திணிக்கும்படி ஏன் முஹம்மது தன்னை பின்பற்றியவர்களுக்கு கட்டளையிட்டார்? ஜிஹாத் என்ற கருத்தாக்கமே இஸ்லாம் மனித இயல்புக்கு எதிரானது என்பதற்கு நிரூபணம் ஆகும். அனுமதிக்கப்பட்டதை ஏவுவது; தடை செய்யப்பட்டதை தடுப்பது(amr bi’l ma’ aroof and nahy anil munkar) என்ற கருத்தே இஸ்லாம் மனித இயல்புக்கு முரணானது என்பதற்கு நிரூபணம் ஆகும்.  இஸ்லாம் மனித இயல்புக்கு இசைவானதாக இருந்தால், ஏன் அதை மனிதர்களின்மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டிய தேவை இருக்கிறது?

உங்களுடைய தகவலுக்காக, இந்த உலகில் இன்னும் முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்கள் (காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய விசேஷ பார்வையை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்திருக்கிறான்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் அவுலியாக்களும் (நண்பர்கள்/உதவி செய்பவர்கள்), முஹம்மது (ஸல்) நபியை உண்மையாக பின்பற்றுபவர்களும் அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்டது போன்ற  விசேஷ சக்திகள் கொடுக்கப்படுகின்றனர். முஹம்மதுவின் (ஸல்) நபித்துவத்திற்கு அவர்களே வெளிப்படையான ஆதாரமாக உள்ளனர். இவர்களில் ஒருவரிடம் அல்லாஹ் உங்களை கொண்டு வருவானாக. ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்.

முஹம்மதுவை உண்மையாக பின்பற்றுபவர்களான இவர்களில் எவராவது அவருடைய உரிமை கோரலை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால், எனக்கு எழுதும்படி தயவுசெய்து அவர்களை கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்.

என்னை மறந்து விடுங்கள். நான் உருப்படாதவன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த தளத்தை படிக்கின்ற இலட்சக்கணக்கானவர்களை பற்றி அல்லாமல், நீங்கள் என்னை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அவர்கள் உண்மையை அறிய வேண்டியத் தேவை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கவில்லையா? விசேஷ சக்திகள் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம்களை தயவுசெய்து அனுப்பி வையுங்கள். இறுதியாக இஸ்லாத்தின் உண்மையை அவர்கள் நிறுவட்டும்.

முஸ்லிம்களுக்கு விசேஷ சக்திகள் எதுவும் கிடையாது. அது பொதுமக்களின் விருப்பங்களுக்கும் ஒருதலைபட்சதுக்கும் ஏற்ப நடந்துகொள்ளும் அரசியல் தலைமைத்துவம் (Demagogy). இந்த வெற்று பேச்சுக்களால் எளிதில் ஏமாறக்கூடியவர்களை மயக்கலாம். ஆனால் சுதந்திரமாக சிந்திப்பவர்களை அல்ல. இஸ்லாம் என்பது ஒரு பொய் என்று எண்ணற்ற முஸ்லிம்களை நான் ஏற்றுக்கொள்ளும்படி செய்துள்ளேன். அதிகமான மக்கள் இந்த தளத்தை படிப்பார்கள் என்பதால் இந்த எண்ணிக்கை கட்டாயமாக வளர  உள்ளது. காண முடியாதவைகளை பார்க்கக் கூடிய உங்களுடைய ஞானம் பெற்ற அவுலியாக்களின் மறுப்பை நான் வெளியிடுவேன் என்ற என்னுடைய வாக்கை நான் உங்களுக்கு தருகிறேன். அதைப்பற்றி அவர்கள் எங்களுக்கு கூறட்டும். அவர்கள் எங்களுக்கு அத்தாட்சிகளை கொடுக்கட்டும். வருகை புரிந்து, நான் எவர்களை தவறாக வழிநடத்தி னேனோ அவர்களை வழிநடத்தும்படி அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

பனி இஸ்ரவேலின் தீர்கதரிசிகள் (நபிமார்கள்) முஹம்மது நபி (ஸல்) யை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் நபியுடைய (ஸல்) அவுலியாக்களின் அந்தஸ்து என்ன என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த உம்மத்தினுடைய (சமுதாயம்) அந்தஸ்து என்ன என்பதை பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனெனில் தவறான கைகளில் நீங்கள் நேரத்தை செலவிட்டிருக்கலாம். உங்களுடைய கருத்துருக்கள் (perceptions) தடுமாற்றமுள்ளதாக ஆகி இருக்கின்றன.

இது மதியீனமானது. முஹம்மதை பின்பற்றுபவர்களில் உள்ளவர்களாக இருக்கும்படி இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் பிரார்த்தனை செய்தார்கள் என்று யார் சொன்னது? இந்த முழுவதும் கேலிக்கதக்க உரிமை கோரலுக்கு எங்கே ஆதாரம் இருக்கிறது? ஆதாரமற்ற உரிமை கோரல்களை செய்வது முஸ்லிம்களாகிய உங்களுக்கு வழக்கம்தான். முரண்படுவதை நீங்கள் சகித்துக்கொள்ளமாட்டீர்கள் என்பதால் ஒருவரும் உங்களோடு முரண்படுவதற்கு ஒருபோதும் துணியவில்லை என்பதினால், நீங்கள் இந்த பொய்யான உரிமை கோரல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் உங்களுடைய சொந்த பொய்களை உண்மையிலேயே நம்புகிறீர்கள். உண்மையிலிருந்து எதுவுமே தூரமாக இருக்கவில்லை. முஹம்மதுவை பின்பற்றுபவராக இருக்கும்படி ஒருவரும் பிரார்த்தனை செய்ததில்லை. ஏனெனில் முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசியாகவே இருக்கவில்லை. எந்த ஒரு மதத்தினுடைய எந்த புனித நூலிலும் முஹம்மது கூறப்படவில்லை. முஹம்மது பைபிளில் கூறப்பட்டுள்ளாரா? இல்லை, அவர் கூறப்படவில்லை.

பிரயோஜனமற்றது என்று நான் யூகிக்கிற ஒரு நீண்ட கலந்துரையாடலாகவே இது இருக்கும். ஏனென்றால் நான் உங்களுக்கு ஹிதாயத்தை (வழிகாட்டல்) கொடுக்க முடியாது.

அப்படியானால் நீங்கள் எனக்கு ஏன் எழுதினீர்கள்? நரக நெருப்பைக்கொண்டு நீங்கள் என்னை மிரட்டினால் நீங்கள் என்னிடம் எறிகிற எந்த பகுத்தறிவற்ற உரிமை கோரலையும் கண்மூடித்தனமாக நான் நம்பிவிடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு ஆதாரம் தேவை. நீங்கள் ஒன்றையும் தரவில்லை. நான் பகுத்தறிவுக்கு புறம்பான ஒரு கடவுளை நம்ப மாட்டேன்; கண்மூடித்தனமாக பின்பற்றுபவனாக இருக்க மாட்டேன்.

உங்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க அல்லாஹ் விதித்திருந்தால், அவன் உங்களை நரக நெருப்பில் போடுவதென்று முடிவு செய்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அது வரும். நீங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, மனம் வருந்தி, அறிஞர்களிடம் போகாமல் அல்லாஹ்வின் அவுலியா அக்ராமிடம் செல்லும்படி நான் உங்களை சும்மா எச்சரிக்கிறேன். உங்களுடைய தீர்வு அவர்களிடமே உள்ளது. இல்லையென்றால், சீக்கிரமாகவோ அல்லது பிறகோ ஆனால் நிச்சயமாக தண்டனை உங்களிடம் வரும்... என்னை நம்புங்கள்... வெகு சீக்கிரமாகவே, இன்ஷா அல்லாஹ்.

அவ்வளவுதானா? தர்க்க அறிவு ஒருவரை முஹம்மதின் கடவுளிடம் அவநம்பிக்கை கொள்ளும்படி செய்துவிடும் என்று முதலில் கூறுகிறீர்கள். ஏனெனில் அவருடைய கடவுள் தர்க்க அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் புறம்பானவர். பிறகு உங்களிடம் அத்தாட்சிகள் உள்ளன, ஆனால் நீங்கள் அவைகளை சொல்ல முடியாது என்று கூறுகிறீர்கள். பிறகு உங்களுக்கு ஹிதாயத் இல்லை என்று கூறுகிறீர்கள். முஹம்மது கடவுளுடைய உண்மையான தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நீங்கள் இதுவரை கொடுக்கவில்லை. பிறகு நான் உங்களுடைய பகுத்தறிவுக்கு புறம்பான கடவுளையும் அவருடைய போலி தீர்க்கதரிசியையும் நம்பவில்லையென்றால், நான் நரகத்திற்கு அனுப்பப்படுவேன் என்று மிரட்டல்களை விடுக்கிறீர்கள். நீங்கள் ஒரு குழந்தையை பயமுறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? நாங்கள் பகுத்தறிவான மனிதர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. இஸ்லாம் உண்மையானது என்று நிரூபிக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தர்க்கப்பூர்வமான வாதங்களை முன்வைப்பதுதான். மிரட்டல்கள் மூடர்களுக்கு உரியது. புத்திசாலி மனிதர்களை அடிபணியும்படி  பயமுறுத்த முடியாது. போலி ஆசாமிகளுக்கும் கபட வேடதாரிகளுக்கும் இரையாகாதபடி பயன்படுத்துவதற்காகவே கடவுள் மூளையை நமக்கு கொடுத்திருக்கிறார். யார் வேண்டுமானாலும் மிரட்டல்களை விடுக்கலாம். எனக்கு தர்க்கப்பூர்வமான ஆதாரங்கள் வேண்டும். உங்களிடம் ஒன்றுமே இல்லை.   
         
சிந்திப்பதைப் பற்றி பயப்படாதீர்கள், அன்பார்ந்த மௌலானா அவர்களே. உங்களுடைய மூளையை பயன்படுத்துங்கள். நீங்கள் உங்களுடைய மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். தர்க்க அறிவைக்கொண்டு நீங்கள் யதார்த்தமான கடவுளை கண்டடைய முடியும். கபட வேடதாரிகளும் ஏமாற்று பேர்வழிகளும் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள். அவர்களுடைய பொய்களுக்கு இரையாகாதீர்கள். தங்களுடைய மூளையை பயன்படுத்தியதற்காக மனிதர்களை கடவுள் ஒருபோதும் தண்டிக்க மாட்டார். முஹம்மதுவை பின்பற்றுவதின் மூலம் நீங்கள் சாத்தானை பின்பற்றுகிறீர்கள். இந்த மனிதர் என்ன கூறினாரோ, செய்தாரோ அவை சாத்தானியத்தனமாகவே இருந்தன. ஒரு பொய்யரை பின்பற்றி உங்களுடைய வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

இஸ்லாம் உண்மையானது என்று உங்களால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது ஒரு பொய் என்று நான் நிரூபித்திருக்கிறேன். என்னுடைய கட்டுரைகளை தயவுகூர்ந்து படியுங்கள். நீங்கள் உண்மையை அங்கே காண்பீர்கள். என்னுடைய உரிமை கோரல்களுக்கு ஆதாரமாக  நான் குர்ஆனையும் ஹதீதையும் பயன்படுத்துகிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டால், என்னுடைய புத்தகத்தின் டிஜிட்டல் பிரதியை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். முஹம்மது பொய் உரைத்துக்கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரம் ஏராளமாக உள்ளது. சாத்தானுடைய தீர்க்கதரிசியை பின்பற்றுவதற்காக நீங்கள் வெகுமதி அளிக்கப்பட மாட்டீர்கள். விழித்துக்கொள்வதற்கு இதுவே நேரம். பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் விழித்துக்கொண்டு வருகிறார்கள். கடைசியாக இருந்து விடாதீர்கள்.


--- அலி சினா (Ali Sina)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் (Anand Sagar)   

Friday, 19 July 2013

மௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 1





மௌலான அஜ்மல் காதிரி தேவ்பந்த் பிரிவின் மூத்த மார்க்க அறிஞராகவும் ஜாமியத் -இ -இஸ்லாமின் (இஸ்லாமிய அறிஞர்களின் கழகம்) தலைவராகவும் இருக்கிறார். அவரை பின்பற்றுபவர்களால் அவர் பீர் (pir/புனிதர்) என்று மதிக்கப்படுபவராகவும் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குமிக்க மத குருமார்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஷரியத் மசோதாவை எதிர்க்கும் மக்கள் பிரதிநிதிகள் (law makers) கொல்லப்பட தகுந்தவர்கள் என்று 1999 ல் மௌலானா காதிரி பத்வா (fatwa) வழங்கினார்.

அவர் மேலும் கூறியிருக்கிறார் : "நம்முடைய மதரஸாக்களில் நாம் குர்ஆனிய  ஜிஹாதை போதிக்கிறோம். அல்லாஹ்வை தவிர வேறு எவருடைய அல்லது வேறு எந்த சக்தியின் மேலாதிக்கத்தையும் அனுமதிப்பதை இது மறுக்கிறது. முஸ்லிம் மார்க்கமே மேலான மார்க்கம் என்றும் இஸ்லாமிய கொள்கையே மிக சிறந்தது என்றும் மீதியான உலகம் செய்வது விரும்புகிற அளவுக்கு இல்லை என்றும் நாங்கள் நம்புகிறோம்."

இது மிகவும் சுவாரசியமான விவாதமாக மாறியது. மற்றவர்கள் குப்ர்(kufr/இறை நிந்தனை), ஷிர்க்(இணைவைப்பு), நிபாக்(nifaq/நயவஞ்சகம்), ஹசத்(hasad/பொறாமை) புரிவதாக மௌலானா காத்ரி குற்றம் சுமத்தினார். உண்மையிலேயே இந்த பாவங்களை செய்யும் குற்றவாளிகள்முஸ்லிம்கள்தான் என்றும் இஸ்லாமே கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய இறைநிந்தனை என்றும் நான் நிரூபித்தேன்.

17/11/2007

மௌலான அஜ்மல் காத்ரியிடமிருந்து அலி சினாவுக்கு முதல் மின்னஞ்சல் : 

திரு அலி,

ஷைத்தானுடைய உலகில் நீங்கள் பெரும் பெயரை சம்பாதித்துள்ளீர்கள்.

அன்பார்ந்த மௌலானா நீங்கள் சரி என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் மத்தியில் நான் பிரபலமாகிக்கொண்டு வருகிறேன். 

நான் ஏன் இதை சொல்கிறேன் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?  உங்களுக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்று எனக்கு புரிகிறது. உங்களை போன்றே ஏதோ ஒன்றாக..... ஒரு சந்தேகவாதியாக (an agnostic) நான் இருப்தேன்..... மேற்கத்திய தத்துவம் முதலிய இஸ்லாத்திற்கு எதிரான இவை எல்லாவற்றையும் நான் படித்தேன்.... ஆனால் அல்ஹம்துலில்லாஹ் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டினான்.   

அந்த நேர்வழியை எங்களுடன் பகிர்ந்து கொள்ள சிரத்தை எடுத்து கொள்வீர்களா? நீங்கள் கண்டதை கேட்பதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். நாங்கள் தவறவிட்டுவிட்ட ஏதாவது நல்லது இஸ்லாத்தில் ஒருவேளை இருக்கலாம்.

உங்களுக்கு எந்த சான்றையும் நான் தரமுடியாது. ஆனால் நம்மால் புரிந்து கொள்வதற்கும் காண்பதற்கும் அப்பாற்பட்ட மற்ற சக்திகள் இருக்கின்றன.

அந்த வாத அடிப்படையோடு(premise) எனக்கு எந்த மறுப்பும் இல்லை. இருந்தபோதிலும், எந்த வழிகளில் நமக்கு அப்பாற்பட்ட அந்த அமானுஷ்ய சக்திகள் முஹம்மதுவுடைய உரிமைகோரலை உண்மை படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? முஹம்மதையும் அவருடைய உரிமைகோரலை பற்றியும் தவிர, அந்த அமானுஷ்ய சக்திகள் பற்றி நாம் வாதம் புரியவில்லை. நான் கண்டவைகளின்படி, முஹம்மது உலகாதாய அதிகாரத்தை பெறுவதற்கு எளிதில்  ஏமாரக்கூடியவர்களை முட்டாளாக்கி பொய்யுரைத்த ஒரு கபட வேடதாரி. மற்ற எந்த தனிநபர் வழபாட்டு குழு தலைவரைவிட (cult leader) முஹம்மது எந்த வகையிலும் வேறுபட்டவர் அல்ல. என்னுடைய புகார் கடவுளையோ அல்லது அமானுஷ்ய சக்திகளை பற்றியோ அல்ல. என்னுடைய புகார் முஹம்மதையும் அவருடைய போலியான உரிமை கோரலை பற்றியும்தான். 

அல்லாஹ் எனக்கு   காட்டிய வழியை உங்களுக்கு காட்டுவானா என்று எனக்கு தெரியாது. ஆனால் நீண்ட காலமாக உங்களை பின்தொடருகிற தீய சக்திகளின் கைகளில் ஒரு கருவியாக  நீங்கள் ஆகியிருக்கிறீர்கள் என்ற  ஒன்று மட்டும் நிச்சயம், நிச்சயம், நிச்சயம். திரும்பி  வருவது என்பது இல்லாமல் போகலாம் என்கிற அளவுக்கு நீங்கள் சென்றுவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஷைத்தானால் பாதிக்கப்பட்டவராக இருகிறீர்கள். அதற்குமேல் ஒன்றும் இல்லை.

இது வெறும் ஆதாரமற்ற உரிமை கோரல். அல்லாஹ் உங்களுக்கு காட்டியது தர்க்க அறிவுப்பூர்வமானது என்றால், நீங்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டு எங்களையும் நம்பிக்கை(ஈமான்) கொண்டவர்களாக ஆக்கலாமே. கடவுள் என்பவர் தர்க்க அறிவுக்கு புறம்பான கடவுளாக இருக்க முடியாது என்பதால், அவருடைய வழிகாட்டலும் தர்க்க அறிவுப்பூர்வமானதாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் ,எந்த கபட வேடதாரியும் கடவுளுடைய தூதர் என்று உரிமை கோரி மக்களை முட்டாளாக்க முடியும். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி (நபி) என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று தர்க்க அறிவுப்பூர்வமான முறையில் எங்களுக்கு நீங்கள் கூறமுடியுமா?

உங்களுடைய அறிவை பற்றி நீங்கள் அகந்தையுடன் இருக்கிறீர்கள். ஏனெனில் இஸ்லாத்தை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. உண்மையிலேயே,  இஸ்லாத்தை பற்றிய அறிவில் நீங்கள் குறைபாடு உடையவர். நீங்கள் மனந்திருந்தாத பட்சத்தில், இங்கேயும் மறுமையிலும் வேதனையை பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். அல்லாஹ் ஏற்றுக்கொண்டால், காத்திருந்து பாருங்கள். அது உங்களிடம் வரும்போது தயவு கூர்ந்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். 

கடவுள், உண்மையிலேயே இருப்பாரானால், அநியாயக்காரராக இருக்க முடியாது. அநியாயக்கார கடவுள் சாத்தானே தவிர, கடவுள் கிடையாது.   நீதிமிக்க கடவுள் ஒருவரை அவருக்கு எல்லா ஆதாரத்தையும் அத்தாட்சியையும் கொடுக்காம லேயே   நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக தண்டிக்க மாட்டார். முஹம்மது கடவுளுடைய தீர்க்கதரிசி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை. சாத்தானை பின்பற்றியதற்காக கடவுள் என்னை தண்டிக்கலாம் என்று நான் அஞ்சுவதால் முகம்மதை பின்பற்றுவதை நான் மறுக்கிறேன். நான் பார்த்தவரை, முஹம்மதின் செயல்களும் வார்த்தைகளும் மிகவும் சாத்தானியத்தனமாகவே இருந்தன. நான் போலி தீர்க்கதரிசியை பின்பற்றி அதற்காக நரகத்திற்கு செல்ல விரும்பவில்லை. அதனால்தான் நான் இஸ்லாத்தை துறந்து விட்டேன். எச்சரிக்கப்படவும் முஹம்மதின் உரிமை கோரலை ஆராய்ந்து பார்க்கும்படியும் குர்ஆனை படித்து அவர் உண்மையான தீர்க்கதரிசி(நபி) இல்லை என்பதை தாங்களே காணும்படியும் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். பொய்யான தீர்க்கதரிசியை நம்பி, நம்பிக்கை கொள்ளாதவர்களை வெறுப்பது, கொலை செய்வது போன்ற அவருடைய தீய ஏவல்களை செய்வதின் மூலம், அவர்கள் நரகத்திற்கு செல்லலாம்.

இஸ்லாத்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று இப்பொழுது கூறுகிறீர்கள். எல்லாம் தெரியும் என்று நான் ஒருபோதும் உரிமை பாராட்டியது இல்லை. நான் ஒரு மனிதன், தவறு செய்யகூடியவன். நான் தவறாக இருப்பது சாத்தியமே. அதனால் தான் எவரும் என்னுடைய தவறுகளை சுட்டி காட்டும்படி அழைப்பு விடுக்கிறேன். மனம் திருந்தி இந்த தளத்தை (faithfreedom.org) மூடிவிடுவது மட்டுமல்லாமல், நான் தவறென்று நிரூபிப்பவருக்கு என்னுடைய ஆன்மாவை ரட்சித்து நேரான வழியை காண எனக்கு உதவியதற்கு சன்மானமாக 50,000 டாலர்களை வழங்குவதாகவும் நான் வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

பலர் முயற்சி செய்தார்கள். ஆனால் ஒருவர் பின் ஒருவராக தோற்றுபோய் அவர்கள் தவறில் இருப்பதை நிரூபித்தனர். முஸ்லிம் அறிஞர்களோடு நான் செய்த ஒவ்வொரு விவாதத்திலும் நானே வெற்றி பெற்றேன். இப்பொழுது, இஸ்லாத்தில் எனக்கு முறையான பயிற்சி இல்லை என்பதும் என்னுடைய இஸ்லாமிய, அரபி மொழி அறிவு அவர்களின் அறிவுக்கு அருகில்கூட வரமுடியாது என்பதும் உண்மை. இருந்தாலும் மாற்றமில்லாமல் நானே வெற்றி பெறுகிறேன். எல்லா நேரமும் அவர்களே தோல்வி அடைகின்றனர். நான் புத்திசாலி, எனக்கு அதிக அறிவு உள்ளது என்பதினால் நான் வெற்றி பெறாமல், இஸ்லாத்தை பற்றிய உண்மையை நான் புரிந்து கொள்கிறேன், அதே வேளையில் அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்பதினால் தான் நான் வெற்றி பெறுகிறேன் என்பதையே இது நிரூபிக்கிறது. அறிவு என்பதற்கு புரிந்து கொள்ளுதல் என்று பொருளல்ல. ஒருவர் அதிக அறிவு உடையவராக இருந்து மிக சிறிதளவே புரிந்து கொள்பவராக இருக்க கூடும். இந்த படித்த முட்டாள்கள் புத்தகங்களை சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள்.

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு உங்களுடைய ஆதாரங்களை எழுதி, எங்களுடைய மன்றத்தில் (forum) அவைகளை பதிவிட்டு உண்மையை ஒவ்வொருவரும் படித்து அறிந்துகொள்ள செய்வதற்கு நீங்கள் மிக அதிகமாக வரவேற்கப்படுகிறீர்கள். அதைவிட எது சிறந்ததாக இருக்க முடியும்? இஸ்லாத்தை உயர்த்தி, முன்னாள் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் இஸ்லாம் கடவுளுடைய உண்மையான மார்க்கம் என்பதை அறிந்து கொள்ள உதவி செய்வதற்கு நான் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அலி சினா 


மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

Thursday, 30 May 2013

முஹம்மது : பயங்கரவாதி (A Terrorist)

"இயல்பாக அரசியல் ரீதியான அல்லது மத ரீதியான அல்லது சித்தாந்த ரீதியான குறிக்கோள்களை  அடைவதற்காக  ஆயுதம் தரிக்காத பொது மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை பயன்படுத்துவது அல்லது வன்முறையை கொண்டு அச்சுறுத்துவது; இது மிரட்டல் அல்லது  பலவந்தம் அல்லது பயத்தை  ஏற்படுத்துவது மூலம் செய்யப்படுகிறது"  என்பதே பயங்கரவாதத்தை பற்றிய அகராதி வரையரை. வருத்தமான  விஷயம், பயங்கரவாதத்தின் பொருளை தெரிந்து கொள்வதற்கு  நாம் அகராதியை  ஆலோசிக்க தேவையே இல்லை என்ற யுகத்தில் நாம்  வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் கூட அதை பற்றி அறிந்திருக்கின்றனர். அதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

ஆனால்  இஸ்லாமிய பயங்கரவாதம் 09/11/2001ல் தொடங்கவில்லை. 1979 ல் நடந்த இரானிய இஸ்லாமிய புரட்சியோடும் அது தொடங்கவில்லை.  முஹம்மதுவால் கூறப்பட்டவைகள் மற்றும் அவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னுதாரணங்கள் ஆகியவற்றில் தான் இஸ்லாமிய பயங்கரவாதம் தன்னுடைய மூல ஆதாரத்தை கொண்டுள்ளது.

மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்ற பிறகு, தன்னுடைய வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களில் கஸ்வா (Qaswa) எனப்படும் 78  க்கு  குறையாத அதிரடி தாக்குதல்களை முஹம்மது நடத்தினார். இந்த கஸ்வாக்களில் சில தாமாக முன்வந்த ஒருவராலோ அல்லது குழுவினாலோ நடத்தப்பட்டன. மற்றவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான போர் வீரர்களைக்கொண்டு நடத்தப்பட்டன. இருந்தாலும், முஹம்மதின் எல்லா ஊடுருவல்களின்  பொதுவான அம்சம் என்னவென்றால்,  அவைகள் முன்னறிவிப்பு இன்றி செய்யப்பட்டவை என்பதுதான். எதிரி தன்னை தயார் செய்து  கொள்வதற்கோ அல்லது ஆயுதம் ஏந்திக்கொள்ளவோ வாய்ப்பு கொடுக்கப்படாமல், பாதுகாப்பு  இல்லாதபோது பிடிக்கப்பட்டார்.  அந்த வகையில், முகம்மதுவால்  பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுதம் தரிக்காத பொதுமக்களே.

வரலாற்று ஆசிரியர் அபுல்  ஹுசைன் முஸ்லிம்  நிசாபுரி  எழுதுகிறார் : "இப்னு அஉன்  அறிவித்தார்: போரில்  அவர்களை சந்திப்பதற்கு முன்பாக, (இஸ்லாத்தை)  ஏற்றுக்கொள்ளும்படி (காபிர்களுக்கு/ நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு) அழைப்பு விடுப்பது அவசியமானதா என்று அவரிடம் விசாரித்து நபி( Nafi) க்கு நான் (கடிதம்)  எழுதினேன்.  இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் அது அவசியமாக இருந்தது  என்று அவர் (பதில்) எழுதினார். பனு முஸ்தலிக் (குலத்தினர்) மீது அவர்கள் அசதியாக இருந்து, அவர்களுடைய அவர்களுடைய   கால்நடைகள் நீர்நிலைகளில் குடித்துக்கொண்டு  இருந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்(அவர் மேல் சாந்தி உண்டாகட்டும்) அதிரடி தாக்குதல் நடத்தினார். அவர் (எதிர்த்து சண்டையிட்டவர்களை) கொன்றுவிட்டு  மற்றவர்களை சிறை பிடித்தார். அதேநாளில் அவர் ஜுவைரியா  பின்த் அல் ஹரித் என்பவளையும் சிறை பிடித்தார். அதிரடி தாக்குதல் புரிந்த படையினரில் இருந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரால் இந்த ஹதீத் தனக்கு கூறப்பட்டதாக நபி (Nafi) கூறினார்." முஸ்லிம் 19:4292

அதே எதிர்பாராத தன்மையையே (element of surprise) முஹம்மது தன்னுடைய எல்லா அதிரடி தாக்குதல்களிலும் பயன்படுத்தினார். புஹாரி எழுதுகிறார் : பஜ்ர் தொழுகையை இன்னும் இருட்டாக இருந்தபோதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடத்தினார். பிறகு அவர் சவாரி செய்து, "அல்லாஹு அக்பர்! கைபர் அழிந்து விட்டது. நாம் ஒரு சமுதாயத்தினரின்  அருகில் நெருங்கும்போது எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் காலைப்பொழுது மிகவும் துரதிஷ்ட வசமானது" என்று கூறினார்.  " முஹம்மதுவும் அவரது அவருடைய படையும் (வந்துவிட்டனர்)! என்று கூறிக்கொண்டு  மக்கள்  தெருக்களுக்கு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களை பலமாக தோற்கடித்தார். அவர்களுடைய போராளிகள் கொல்லப்பட்டனர்; குழந்தைகளும் பெண்களும் சிறை  கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சபிய்யா என்பவள் திஹ்யா அல் கல்பி என்பவனால் எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு அவளை மணந்துகொண்ட அல்லாஹ்வின் தூதருக்கு அவள்  சொந்தமானாள். அவளுடைய விடுதலையே அவளுக்குரிய மஹராக இருந்தது. புஹாரி 2.14.068

" எச்சரிக்கை  செய்யப்பட்டவர்களின்  காலைப்பொழுது மிகவும்  துரதிருஷ்டமானது"  என்று முஹம்மது கூறியதை இங்கே நாம் படிக்கிறோம்.   அவருடைய போருக்கான திட்டங்களை அறிவிப்பதாக இதை பொருள் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே அந்த நகரத்தின் வாயில்களை சென்றடையும்வரை அவருடைய ஆட்களுக்கு கூட தாங்கள் எந்த நகரை தாக்குவதற்கு சென்று கொண்டிருக்கிறோம்  என்பது தெரியாமல்   இருந்தது.  தான் தாக்க  விரும்பிய நகரங்களுக்கு அவர் ஒற்றர்களை அனுப்பி, அவர்கள் சிறிதளவே தயாராக  (least prepared) இருந்தபோது அவர்களை தாக்கினார். முஸ்லிம் மனதின் புரிந்துணர்வைக்கொண்டுதான்  இந்த "எச்சரிக்கை" என்பது பொருள் கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம்களை பொருத்தவரை, நாம் எல்லோருமே எச்சரிக்கபடுகிறோம். மதம் மாறும்படி அல்லது சாவதற்கு தயாராகும்படி அவர்கள்  அழைப்பு விடுத்துள்ளனர்.  இதுதான் எச்சரிக்கை. மற்ற எந்த எச்சரிக்கையும் இருக்காது. அவர்கள் எச்சரிக்கையை விடுத்துள்ள இந்த தருணத்திலிருந்து நாம் எல்லோருமே நியாய விளையாட்டுக்கு (fair game) உரியவர்களாக இருக்கிறோம். முஸ்லிமல்லாத எல்லோருமே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் தார்மீக இலக்குகளாகவே உள்ளனர். இன்றைய முஸ்லிம் போராளிகள் தங்களுடைய நபி என்ன செய்தாரோ அதையே அவர்களும் செய்து அவருடைய முன்னுதாரணங்களையே பின்பற்றுகின்றனர். ஒரே சீரான வழிமுறையும் (pattern) செயல்படும் விதமும் (modus operandi) ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. முஸ்லிம்களுடைய அனைத்து போர்களும் வெற்றிவாகைகளும் அதிரடி தாக்குதல்கள் மூலமானதாகவே இருந்து வருகின்றன. எப்பொழுதும் இதுவே அவர்களுடைய வெற்றியின் ரகசியமாகவும் வரலாறாகவும் இருந்து வருகிறது. "பயங்கரவாதத்தின் மூலம் நான் வெற்றியாளனாக ஆக்கப்பட்டுள்ளேன்" என்று ஒரு ஹதீதில் முஹம்மது பெருமையடித்துக்கொண்டார். புஹாரி 4:52:220.  

ஹிஜ்ரத்துக்கு சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு, தத்தால் ரிக்கா (Dhatal Riqa) என்ற இடத்தில் அன்மார் மற்றும் த'லபா (கத்பான் எனும் சூரிய கிளை குழுக்கள்) குலத்தினர் ஒன்று கூடியுள்ளனர் என்கிற செய்தியை கூறிக்கொண்டு நடை வியாபாரி ஒருவன் மதீனாவுக்கு வந்தான். இதை கேள்விப்பட்டவுடன் முஹம்மது தன்னுடைய விசுவாசமான தோழரான உத்தம் (Utham) என்பவரை நகரத்தின் பொறுப்பாளியாக விட்டுவிட்டு, நானூறு (அல்லது எழுநூறு) ஆண் வீரர்களை கொண்ட குழுவோடு இந்த அரபு குலத்தினர் கூடியிருந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்றார். அங்கே ஒரு சில பெண்களை தவிர வேறு யாரையும் அவர் காணவில்லை. அவர்களுக்கு மத்தியில் ஒரு அழகான சிறுமி இருந்தாள். அவர்கள் அந்த பெண்களை சிறை பிடித்தனர். அந்த குலங்களை சேர்ந்த ஆண்கள் மலைகளில் தஞ்சம் அடைந்து கொண்டனர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 59).

தொழுகைக்கான நேரம் வந்தபோது, கத்பான் ஆட்கள் மலையில் உள்ள அவர்களுடைய மறைவிடத்திலிருந்து இறங்கி வந்து தாங்கள் தொழுகை புரியும்போது தங்கள்மேல் திடீர் தாக்குதலை நடத்தலாம் என்று முஸ்லிம்கள் பயந்தனர். இந்த பயத்தை புரிந்துகொண்டு, நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு பிரிவினர் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருக்க அந்த நேரத்தில் மற்ற பிரிவினர் தொழுகை புரிகின்ற "பயம் பற்றிய தொழுகை" (prayer of fear) என்பதை முஹம்மது அறிமுகப்படுத்தினார். பிறகு அவர்கள் தங்கள் முறையை பின்பற்றுவர். தொழுகையை குறைத்துக்கொள்கின்ற இந்த வசதியை குறித்து அல்லாஹ்விடமிருந்து ஒரு வஹி (வெளிப்பாடு) வந்தது. (4:100 - 102)

"நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, நிராகரிப்போர் உங்களுக்கு தீங்கிழைப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால், நீங்கள் தொழுகையை சுருக்கி கொண்டால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. நிச்சயமாக, நிராகரிப்போர் உங்களுடைய பகிரங்க விரோதியாவார்கள்"  (4 : 101)

தத்தால் ரிக்கா மீதான அதிரடி தாக்குதல் நடந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஹிஜாசுக்கும் அல் ஷாம் (சிரியா) க்கும் இடையே உள்ள துமாத்தல் ஜந்தல் (Dumatal Jandal) என்ற பாலைவன சோலையில்  பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதற்காக கத்பான் என்ற பெரிய குழு கூடியிருக்கிறது என்ற செய்தி முகம்மதுவுக்கு கிடைத்தது. இந்த இடம் மதீனாவிலிருந்து ஐந்து இரவுகள் பயணமாக இருந்தது. தன்னை பின்பற்றுவர்களில் ஆயிரம் பேரை முஹம்மது உடனடியாக கூட்டினார். அவர்கள்  இரவு நேரத்தில் சவாரி செய்து பகல் நேரத்தில் மறைந்து கொண்டனர்.

பனி உத்ராஹ் குலத்தை சேர்ந்த ரகசிய தகவல் கொடுப்பவனை வழிகாட்டியாக முஹம்மது வைத்துக்கொண்டார். அவர் இரவு நேரத்தில் இந்த குழுவை சென்றடைந்தார். ஆடுகள், ஒட்டகங்கள் அடங்கிய அவர்களுடைய மந்தைகளின் கால் தடங்கள் இன்னமும் நிலத்தில் இருந்தன. விலங்குகளின் மந்தைகளை முஸ்லிம்கள் அதிரடியாக தாக்கினர். மேயப்பர்களில் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் தப்பித்து ஓடி விட்டனர். மிகப்பெரிய கொள்ளை பொருட்களை முஸ்லிம்கள் கைப்பற்றினர். அந்த செய்தி தாமத் (Domat) மக்களை சென்றடைந்தபோது, அவர்கள் சிதறி ஓடினர். அவர்களுடைய இடத்தில் ஒருவரையும் நபி காணவில்லை. அவர் சில நாட்கள் தங்கியிருந்து, புலன் விசாரணை செய்துவர பல்வேறு குழுக்களை சுற்றுப்புற பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.  ஆனால் ஒரே ஒரு மனிதனை தவிர வேறு யாரையும் காணாமல் அவர்கள் திரும்பி வந்தனர். அவனை அவர்கள் சிறைக்கைதியாக பிடித்தனர். அந்த குலத்தை பற்றி அவனிடம் முஹம்மது கேட்டார். அதிரடி தாக்குதலை பற்றி அந்த மக்கள் கேள்விப்பட்டபோது அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர் என்று அந்த மனிதன் கூறினான். பிறகு இஸ்லாத்தை தழுவும்படி நபி அவனுக்கு அழைப்பு விடுத்தார். அவன் அதை ஏற்றுக்கொண்டான். பிறகு முஸ்லிம்கள் மதீனாவுக்கு திரும்பினர் (இப்னு ச'த் தபக்கத், வால்யூம் 2, பக்கம் 60).

முஸ்லிம்களை தாக்குவதற்கு கத்பான் ஆட்கள் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் உரிமை கோருகின்றனர். இது தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே எப்பொழுதும் பழியை சுமத்துகிற வழக்கமான இஸ்லாமிய மனநிலை தான். அவர்களுடைய சொந்த கதையே தெளிவாக்கி வைப்பதைப்போல், இந்த மக்கள் நாடோடிகளாகவும் மேய்ப்பர்களாகவும்  இருந்தனர்,  போரிடுபவர்களாக இருக்கவில்லை.  அதே சாக்குபோக்குகளை பயன்படுத்தி, இன்று முஸ்லிம்கள் மனித இனத்திற்கு எதிரான தங்களுடைய குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மீதே பழியை சுமத்துகின்றனர்.  தரபனி, வ பக்க; சபக்கனி, வ'ஷ்தக்க(Darabani, Wa baka; Sabaqani, Wa’shtaka). 

"அவன் என்னை தாக்கிவிட்டு அழ ஆரம்பித்தான்; பிறகு அவன் எனக்கு முன்பாக சென்று அவனை அடித்ததாக என்மீது  குற்றம் சுமத்தினான்" என்று ஒரு அரபி பழமொழி சொல்வதை போல்,  இதுதான் முஹம்மது மற்றும் அவரை பின்பற்றுபவர்களின் செயல்படும் விதமாக இருந்து வருகிறது.

ஆசிரியர் : அலி சினா            
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Thursday, 16 May 2013

முஹம்மதின் முகமூடியை கிழிப்பதற்கான நேரம்



வியாழன், 31 மார்ச் 2011 - கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders)

ஏன் இஸ்லாம் கொல்லக்கூடிய அபாயமாக உள்ளது  என்பதை அறிந்து கொள்வதற்கு குர்ஆனை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாத்தையும் குர்ஆனையும் மனதில் உருவகித்த முஹம்மதின் குணாதிசயத்தையும் கூட ஒருவர்  சிந்தித்து
  பார்க்கவேண்டும்.

குர்ஆன் வெறும் ஒரு புத்தகம் அல்ல. அல்லாஹ்வே அதை எழுதினார் என்றும் விண்ணில் உள்ள பலகையில் வைக்கப்பட்டுள்ள உம் அல் கிதாப் என்ற மூல ஏட்டிலிருந்து முகம்மதுவுக்கு எழுதி கொள்வதற்காக அது கூறப்பட்டது என்றும்  முஸ்லிம்கள் நம்புகின்றனர்.  விளைவாக,  அடக்கத்தில் உள்ளவைகளை பற்றி ஒருவரும் வாதம் புரிய முடியாது. அல்லாஹ்வே எழுதியவையோடு ஒத்து போகாமலிருக்க எவர்தான் துணிவு கொள்வார்? ஜிஹாத் என்கிற வன்முறை முதற்கொண்டு யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்ற முஸ்லிம் அல்லாதவர்கள், மதத்தை துறந்தவர்கள் ஆகியோரை வெறுப்பது, துன்புறுத்துவது வரையான முகம்மதிய நடத்தையின் பெரும்பகுதியை இது விளக்குகிறது. மேற்கில் உள்ள நாம் நியதிக்கு மாறானது (abnormal) என்று எதை கருதுகிறோமோ அது இஸ்லாத்திற்கு பரிபூர்ணமாக சர்வ சாதாரணமானதாக இருக்கிறது. முஹம்மது என்ற உருவகம் தான் இஸ்லாத்துடனான இரண்டாவது கடந்து போக முடியாத பிரச்சினை. அவர் யாரோ ஒருவர் அல்ல. அவர் அல்-இன்சான் அல்-காமில், பரிபூர்ண மனிதர். முஸ்லிமாக மாறுவதற்கு ஒருவர் ஷஹாதா (முஸ்லிம் சடங்கு) வை கூற வேண்டும். ஒருவர் ஷஹாதாவை கூறுவதின் மூலம், அல்லாஹ்வை தவிர வழிபடக்கூடிய வேறு கடவுள் இல்லை என்று சாட்சி கூறுகிறார்; முஹம்மது அவருடைய அடியார் மற்றும் தூதர் என்று சாட்சி கூறுகிறார்.

முஹம்மதின் வாழ்க்கை அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்று குர் ஆன், ஆகையால் அல்லாஹ் விதிக்கி(றது)றான். இதன் பின்விளைவுகள் அதிபயங்கரமானவை, அனுதினமும் காணக்கூடியவை. முஹம்மதின் புத்தி சுவாதீனத்தை பற்றி அதிகப்படியான பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எல்லா ஆராய்ச்சியும் இருந்தபோதிலும் , அது அரிதாகவே கூறப்படுகிறது அல்லது விவாதிக்கப்படுகிறது. உலகில் உள்ள 150 கோடி முஸ்லிம்கள் பரிசுத்த நபி (தீர்க்கதரிசி) என்றும் பின்பற்றப்பட வேண்டிய முன்மாதிரி என்றும் மதிக்கிற ஒரு மனிதரின் உண்மையான இயல்பை பற்றி விவாதிப்பது தடை செய்யப்பட ஒன்றாகவே இருக்கிறது. மேற்கில், இங்கே நெதர்லாந்தில் அந்த தடை மீறப்பட வேண்டும்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களுக்கான பெய்த் ப்ரீடம் இண்டர்நேஷனல் (Faith Freedom International) ஐ நிறுவிய அலி சினா, ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு முன்னாள் முஸ்லிம் ஆவார். அவர் தன்னுடைய சமீபத்திய புத்தகத்தில், முஹம்மது தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவர்(narcissist), குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile), கூட்டு படுகொலைகாரர்(mass murderer), பயங்கரவாதி(terrorist), பெண்களை வெறுப்பவர்(misogynist), அதீத காம வெறி பிடித்தவர் (lecher), தனிநபர் வழிபாட்டு குழு தலைவர்(cult leader), பைத்தியக்காரர்(mad man), கற்பழிப்பவர்(rapist), கொடூரமாக சித்திரவதை செய்பவர்(torturer), ஆளை அனுப்பி படுகொலை செய்பவர்(assasin), கொள்ளை அடிப்பவர்(looter) என்பதை ஆதாரபூர்வமாக வாதிக்கிறார். மற்ற விதமாக நிரூபணம் செய்பவருக்கு 50000 டாலர்களை வழங்குவதாக அலி சினா அறிவித்திருக்கிறார். அந்த வெகுமதியை இதுவரை ஒருவர்கூட கோரவில்லை. ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனெனில்  சமகாலத்தவர்களின் சாட்சியங்களில் இருந்து பெறப்பட்ட  முஹம்மதின் வாழ்க்கை பற்றிய விவரிப்புகளான ஹதீத்கள் போன்ற இஸ்லாமிய நூல்களையே   அந்த விவரமானது அடிப்படையாக கொண்டது.

வரலாற்று முஹம்மது மதீனாவில் இருந்த கொள்ளையர் கும்பலின் காட்டுமிராண்டி தலைவராக இருந்தவர். எந்தவித உறுத்தல்கள் இன்றி, அவர்கள் கொள்ளை அடித்தார்கள்; கற்பழித்தார்கள்; படுகொலை செய்தார்கள். நூற்றுக்கணக்கான மனிதர்களின் தொண்டைகள் அறுக்கப்பட்ட, கைகளும் கால்களும் வெட்டி வசப்பட்ட, கண்கள் தோண்டப்பட்ட, ஒட்டுமொத்த குலங்களும்  படுகொலை செய்யப்பட்ட  காட்டுமிராண்டி களியாட்டங்களை மூல நூல்கள் விவரிக்கின்றன. 627 ஆம் வருடம் மதினாவில் இருந்த குறைழா  என்ற யூத குலம் நிர்மூலமாக அழிக்கப்பட்டது ஒரு உதாரணம். அவர்களுடைய தலைகளை துண்டித்தவர்களில் முகம்மதுவும் ஒருவர். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை எதிர்கொள்ளும்போது, அந்த பைத்தியக்காரத்தனம் எங்கிருந்து வருகிறது என்பதை காண்பது ஒன்றும் கடினமானது அல்ல.
குழந்தைகளிடம் காம இச்சை கொள்பவர் (paedophile) என்று முகம்மதுவை அழைத்ததின் மூலம் ஒரு மதத்தை அவமதித்ததற்காக வியன்னாவில் பெண்கள் உரிமை சேவகர் எலிசபெத் சபடிட்ஷ் உல்ப் அபராதம்  செலுத்தும்படி சமீபத்தில் தண்டனை கொடுக்கப்பட்டார்.  ஆனாலும் அதுதான் உண்மை. முஹம்மதின் விருப்பத்திற்குரிய மனைவியான, குழந்தை மனைவியான ஆயிஷாவின் சாட்சியங்களை பல ஹதீத்கள் கொண்டிருக்கின்றன. ஆயிஷா நேரடியாக :சொல்கிறார் : "நான் ஆறு வயதாக இருந்தபோது நபியவர்கள் என்னை திருமணம் செய்துகொண்டு, நான் ஒன்பது வயதானபோது என்னுடன் உடலுறவு கொண்டார்கள்."
வரலாற்றாசிரியர் தியோபன்ஸ்-Theophanes(கி.பி.752-817) கூற்றுப்படி, முஹம்மது காக்கா வலிப்புகாரராக இருந்தார். சில நேரங்களில் கக்கா வலிப்பு நெருக்கடிகளை மாய தோற்றங்கள் (hallucinations) பின்தொடருகின்றன; நெற்றியில் வியர்வை ஏற்படுகிறது; வாயில் நுரை தள்ளுகிறது. முஹம்மது தன்னுடைய காட்சிகளின்போது(visions) இந்த அறிகுறிகளையே காட்டினார்.

"மற்றொரு முஹம்மது" - The Other Muhammad (1992) என்ற தன்னுடைய நூலில் ப்ளெமிஷ் உளவியலார்(Flemish Psychologist) Dr.ஹெர்மன் சோமர்ஸ், நபி தன்னுடைய நாற்பதுகளில் அக்ரொமெகலி(acromegaly) என்ற நோயால் அவதிப்பட தொடங்கினார் என்ற முடிவுக்கு வருகிறார். மூளைக்கு கீழே அமைந்துள்ள சிறிய உறுப்பான பிட்யூட்டரி சுரப்பியில் (pituitary gland) ஏற்படும் கட்டியினால் இந்த நிலை ஏற்படுகிறது.   பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டி

மூளையில்  அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்போது, இல்லாத விஷயங்களை மனிதர்கள் பார்க்கவும் கேட்கவும் ஆரம்பிக்கிறார்கள். சந்தேக நோய்த்தனமான குணாதிசயங்களால் ஆன தொடர்ச்சியான மாய தோற்ற பாதிப்பு என்பதுதான் முஹம்மதின் வன்முறையை நாடும் மனநோய் நிலையை பற்றிய சோமர்சின் நோய் ஆராய்ச்சி முடிவு ஆகும்.
சந்தேகநோய்த்தனமான மாயதோற்ற மனசிதைவு நோய் (paranoid hallucinatory schizophrenia) யை பற்றி ஜெர்மானிய மருத்துவ வரலாற்றாசிரியர் அர்மின் ஜியஸ் (Armin Geus) பேசுகிறார். இதை போன்ற ஒரு பகுப்பாய்வு டெடெ கோர்குட் (De de Korkut) என்ற மருத்துவரால் எழுதப்பட்ட "முஹம்மதின் மருத்துவ வரலாறு"(The Medical Case of Muhammad)  என்ற நூலில் காணக்கிடைக்கிறது.

"முஹம்மதின் உளவியல் : நபியுடைய மூளையின் உள்ளே" - Psychology of Muhammad : Inside the Brain of a Prophet என்ற தன்னுடைய புத்தகத்தில், "அதிகாரத்தில் இருந்த வன்முறை மனநோயாளியின் பரிபூரண உருவகம்" என்று முகம்மதை டாக்டர் மசூத் அன்சாரி அழைக்கிறார். முஹம்மது அதிகார வெறி நாட்டங்களும், தாழ்வு மனப்பான்மையும், மனரீதியில் தடுமாற்றம் கொண்ட சந்தேக மனநோய் குணாதிசயத்தை கொண்டிருந்தார். தனக்கு பிரபஞ்ச பணி (cosmic mission) இருப்பதாகவும் தன்னை தடுக்க எதுவும் இல்லை எனவும் நம்பும்படி அவரை வழிநடத்தி செல்கின்ற காட்சிகளை (visions) அவர் தன்னுடைய நாற்பதுகளில் காண தொடங்கினார்.

உண்மை எப்பொழுதும் இனிமையாகவோ அல்லது அரசியல் ரீதியாக சரியானதாகவோ இருப்பதில்லை. நெதர்லாந்தில் வாழும் பத்து லட்சம் பேர் உட்பட உலகம் முழுவதும் உள்ள நூற்று ஐம்பது கோடி மக்கள்  முகம்மதை தங்களுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும்ப்டி   இஸ்லாமிய மதம் கடமையாக்குகிறது என்று மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் வாதிட முடியும்.

ஒருவர் முஸ்லிமாக மாறிய பிறகு திரும்பி செல்வது என்பதே கிடையாது. ஏனெனில் "தன்னுடைய மதத்தையோ அல்லது நம்பிக்கையையோ மாற்றிக்கொள்வதற்கு" ஒவ்வொரு நபருக்கும் உரிமை உள்ளது என்று மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையின் 18 வது பிரிவு கூறினாலும் கூட, நம்பிக்கையை துறப்பதற்கு இஸ்லாத்தில் மரண தண்டனையே உள்ளது.

இஸ்லாத்தையும் முஹம்மதையும் விமர்சனம் செய்து குரல் கொடுக்கிற எவரும் தனிப்பட்ட முறையில் மிக மோசமான அபாயத்திலேயே உள்ளார் - நான் அனுபவித்து இருப்பதை போல. இஸ்லாம் மற்றும் முஹம்மதின் செல்வாக்கிலிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் எவரும் மரண அபாயத்துக்கு உள்ளாகிறார். விஷயங்களின் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்வதை நாம் தொடர முடியாது.  முஹம்மதின் உண்மையான இயல்பையும்  குணத்தையும்  பற்றிய வெளிப்படையான விவாதம்  இஸ்லாத்தை விட்டு வெளியேற விரும்பும் உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த அறிவையும் ஆதரவையும் கொடுக்கும். நம்பிக்கையை துறந்தவ ர்கள் (apostates) நாயகர்கள். முன்பு எப்பொழுதும் இருந்ததைவிட அதிகமாக, உலகம் முழுவதும் உள்ள சுதந்திரத்தை நேசிக்கும் மனிதர்களின் ஆதரவுக்கு அவர்கள் தகுதியானவர்கள். இந்த விஷயத்தில் கட்சி அரசியல் விளையாடக்கூடாது. முகம்மதை அம்பலபடுத்துவதின் மூலம் இந்த  மக்களுக்கு நாம் உதவி புரிவதற்கு இதுவே சரியான தருணம்.


கீர்ட் வில்டெர்ஸ் (Geert Wilders) நெதர்லாந்தில் பாராளுமன்ற உறுப்பினர். அவர் சுதந்திரத்திற்கான கட்சியின் (PVV) தலைவராக உள்ளார். "HP/De Tijid" என்ற டச்சு மொழி வார இதழில் இந்த கட்டுரை மார்ச் 30, 2011 அன்று பிரசுரமானது.
 
மொழி பெயர்ப்பு : ஆனந்த்  சாகர்