Saturday 27 September 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 3

”தஜ்ஜால்...! ஒவ்வொரு கேள்வியாக கேளு! இல்லைனா மறந்திடுவேன்...!”

”என்னது மறதியா...!?”

“ஆமாம்... அதனாலதான் எதுவாக இருந்தாலும் எழுதி வச்சுக்குவேன்.

”அய்யா... இது எந்த இடம்..?”

“உன்னால இன்னும் கண்டுபிடிக்க முடியலையா..?” என்றவாறு சிரித்தார் பெரியவர்.

“தெரியல...!”

”நான் உட்கார்ந்திருக்கிற இதை ’அர்ஷ்’–ன்னு அரபியில சொல்லுவாங்க..!”

“என்னது... இந்தப் பாறைதான் ’அர்ஷ்’ஷா...?!”  என்றேன்.

“ஆமாம்...! ஏன் இதுல நான் உட்காரக் கூடாதா என்ன?”

“தாராளமா உட்காருங்க! ஆனா இப்படி ’குத்தவைத்து’  உட்கார்ந்திருக்கீங்களே இடைஞ்சலாக இல்லையா?”

“இது என்னோட ஸ்டைல்..!”

”எங்க ஊர்ல முல்லாக்கள், அல்லாஹ்வின் அரியாசணம் சிங்காசணம்ன்னு ஏதேதோ கதை... விட்டுட்டு இருக்காங்க...  அதையெல்லாம் கேட்டு, அரபு ஷேக்குகள் விலை உயர்ந்த வேலைப்பாடுகள் செய்த நாற்காலியில் சொகுசா உட்கார்ந்திருக்கிற மாதிரி ஏதாவது இருக்கும்னு கற்பனை செய்து வச்சிருந்தேன்... நீங்க என்னடான்னா.. ’பரதேசி’ படத்தில அதர்வா உட்காந்திருக்கிற மாதிரி பாறைமேல பரிதாபமா ’குத்த்வச்சு’ உட்கார்ந்திருக்கீங்களே?!”



”நீ பரிதாபப்படறியா இல்ல கிண்டல் செய்யறியா...?” என்றார் சலனமில்லாமல்.

ஆள் உஷாரகத்தான் இருக்கிறார். திடீரென்று கோபம் கொண்டு இந்த பிடி சாபத்தை என்று என்னை குரங்காகவோ இல்லை பன்றியாகவோ மாற்றித் தொலைத்தால் என்ன செய்வது? எனவே  அமைதியாக,

“அல்லாஹ்வின் அரியாசணம் ஏழாவது வானத்திலிருப்பதாக முல்லாக்கள் சொல்லக் கேட்டிருக்கேன் .... இதுதான் ஏழாவது வானமா?” என்றேன்.

“ஆமாம்...”

”வானம்னு... எதுவும் கிடையாது. நீலநிறத்தில் தெரிவது, ஒளிச் சிதறல்களினால உண்டாகிற காட்சிப்பிழைன்னு படிச்சிருக்கேன். ஆனா இது கான்கிரீட் தளம் மாதிரி உறுதியாயில்ல இருக்கு ..?” என்றேன்.

“நீ சொல்லறது அறிவியல். ஆனா... இது வேற...!”

“நீங்க மழுப்பறீங்க...!”

“இதைப்பற்றி நாம அப்புறமா பேசலாம்.”

”சரி...! உங்களோட பாறாங்கல்லை... ஸாரி... அர்ஷை எதுக்காக இத்தனை பேர் சுமக்கனும்?”

“மனிதர்களே பல்லக்கு தூக்கறதுக்கு அடிமைகளை வச்சிருக்கும் போது நான் வைக்கக் கூடாதா?”

“அடிமைகள் முறை மனிதாபிமான இல்லாததுன்னு மனிதர்களே நினைக்கிறாங்க. சட்டங்களை இயற்றி அதை ஒழிக்க பாடுபடறாங்க....  ஆனா... நீங்க...  இந்த வயதான கிழவர்கள் சுமக்க உட்கார்ந்திருக்கீங்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா...?”

”.... ....!”

“பெரிய பெரிய கோள்களும் நட்சத்திரங்களும் வான்வெளியில யாருடைய உதவியுமின்றி அழகாக மிதக்குது. அவ்வளவு ஏன்!  மனிதர்கள், ’டன்’ கணக்கில் எடையிருக்கற செயற்களைக் கோள்களைக்கூட வானத்தில அழகா மிதக்க வைக்கிறாங்க, ஆனா உங்களின் இந்தப் பாறாங்கல்லை எட்டு பேர் சுமக்க வேண்டியிருக்கே...?!”

“அவங்க சுமக்கவில்லைனா.. அர்ஷ் கீழே விழுந்திரும்பா..! எல்லாம் ஒரு பந்தாதான்!” என்றவாறு வெடிச்சிரிப்பு சிரித்தார்.

“என்னது... பந்தாவா..? இந்தக் கோமாளித்தனமெல்லாம் அந்தக் கால ஸ்டைல்..! இப்ப யாரும் இந்த கற்பனைகூட செய்யறதில்ல!”

”உண்மைதாம்ப்பா... ஒத்துக்கிறேன்! குர்ஆன்ல சொல்லியிருக்கு, வேறமாதிரி நான் வந்த நம்பமாட்டாங்க. அவ்வளவு ஏன்... நீ கூட என்னை இன்னும் நம்பாமத்தான் இருக்கற...!”

“சரி நம்பறேன்... முதல்ல அந்தப் பாறையில இருந்து கீழே  இறங்குங்க...!”

முதியவர் மீண்டு அரபியில் ஏதோ சொல்ல, அர்ஷ் என்ற பாறையைச் சுமந்து கொண்டிருந்த கிழவர்கள் அதை சற்று கீழாக இறக்கினர். மெதுவாக அர்ஷின் மீது கைகளை ஊன்றி, கைத்தாங்கலாக மலக்குகள் அவரை கீழே இறக்கிவிட்டனர். முதியவர் வளைந்து நெளிந்துக் நெட்டிமுறித்துக் கொண்டிருந்தார்.

”அய்யா... அந்தக் கல்லை இன்னும் ஏன் சுமக்க வைக்கிறீங்க? அத தூரப் போடச் சொல்லுங்க” என்றேன்.

“ம்ம்... உஸே ஃபேக் தாலோ....” என்றார். அவர் சொன்னதுதான் தாமதம் கல் தூரப் போய் விழுந்தது. எத்தனை வருடச் சுமையோ ...!





கண்களுக்கு ஒளிவெள்ளம் பழகிவிட்டதால் காட்சி இன்னும்கூட தெளிவாகத் தெரிந்தது. நான் முதியவர்களை நோக்கி நடந்தேன். அருகில் நெருங்க நெருங்க ஒளியின் தாக்கம் கண்களைத் கூசச் செய்தது. அர்ஷை சுமந்து கொண்டிருந்த முதியவர்(மலக்கு)களை நெருங்க, அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

மலக்குகளை நிதானமாக கவனித்தேன்.  அவர்கள் நல்ல உயரம்; சுமார் 12-15 அடி இருக்கலாம். நான் அவர்களது  உயரத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தேன். முகம் மற்றும் உடலில் காணப்படும் சுருக்கம் அவர்களின் வயதின் முதிர்ச்சியை அப்பட்டமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. வயதானாலும் அழகான தோற்றத்திலிருந்தனர். அங்கி போன்று தலைமுதல் கால்வரை தளர்வான ஆடை தரையை தொட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுதான் கவனித்தேன்.

முதுகிலிருந்து ஏதோ நீட்டிக் கொண்டிருந்தது. என்ன அது?






அடப் பரிதாபமே...! அது... இறக்கைகள்தான்! இது ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது?

அவர்களது இறக்கைகளிலிருந்த சிறகுகள், அங்குமிங்குமாக உதிர்ந்து சொட்டையாகக் காட்சியளிக்கிறது.  வழுக்கை பிரச்சனை இவர்களையும் விடவில்லையா?  எனக்கு மிகவும் பரிதாபமாகவும், வருத்தமாக இருந்தது.

“எங்களுக்கு நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்து இதை சுமந்துகிட்டு இருக்கிறோம். இப்பதான் விடுதலை கிடைத்தது. அல்லாஹ்விற்கு நன்றி... !” என்றனர்.

 “அல்லாஹ்விற்கு நன்றியா....!?”

நான் மலக்குகளுடன் பேசிக் கொண்டிருப்பதை முதியவர் கண்சிமிட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தார். இப்படி கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?

“ஆமாம்.. அவன்தானே இந்த பாரத்தை இறக்கச் செய்தான் அவனது கருணையே கருணை!” என்றனர்.

எனக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் என்றிருந்தது.

” லூசுகளா... அவன்தானே இந்த பாரத்தை உங்க மேல ஏற்றி வைத்தான்?”

“நீ, அப்படி நினைக்கக் கூடாது அது அல்லாஹ்வின் திட்டம். நாமெல்லாம் அவனோட அடிமைகள் அல்லாஹ்வுக்கு அடிமையா இருப்பதைக் கேவலமாக (Q 4:172) நினைக்க கூடாது!” என்றனர் கோரஸாக,

”அடக் கருமமே..!  இங்கேயும் இப்படித்தானா? சரி... எந்தத் தேவையுமில்லாத ஒருத்தருக்கு உட்கார அர்ஷும் அதைத் தூக்கறதுக்கு உங்கள மாதிரி அடிமைகளும் எதுக்கு?” என்றேன்.

”.... ....!?”

“பதில் சொல்லுங்க!”

“எங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாது!”

நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதே சுற்றிலும் பார்வையைச் செலுத்தினேன்.  சீரான சமதளம்; எவ்வளவு தூரம் நீள்கிறதென்பதை யூகிக்க முடியவில்லை. தொலைவில்  இன்னும் பலர் கீழே சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது.

அல்லாஹ் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெரியவரிடம் திரும்பினேன்.

”ஒன்னுமே தெரியாத மாதிரி எத்தன பவ்வியமா நடிக்கிறாங்க பாரு!” என்றார்

“யாரைச் சொல்றீங்க...?”

“வேற யார மலக்குகளைத்தான்...!”

எதற்காக மலக்குகளை கடிந்து கொள்கிறார்? ஏதாவது உள்விவகாரம் இருக்குமேன்று தோன்றியது. மலக்குகளைப் பார்க்கையில் எனக்கு பரிதாமாகத்தான் இருந்தது.

“அய்யா பெரியவரே... உங்களோட அடிமைகளான மலக்குகளுக்கு சிறகுகள் உதிர்ந்து போய் பார்க்கவே பரிதாபமா இருக்குது.  இப்படியே போனால் சீக்கிரமா சொட்டையா ஆயிரும்! உனது அடியார்கள், மலக்குகளை பரிதாபத்திற்குரியவர்களாக, இப்படி சொட்டை மலக்குகளை கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டாங்க!” என்றேன்

 “தஜ்ஜால்.. ஆரம்பத்திலிருந்தே நான் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். முல்லாக்களின் கற்பனையை எங்க மீது திணிக்காதே! மலக்குகளுக்கு வயதே ஆகாது, என்றும் இளமையாகவே இருப்பாங்ன்னு நான் சொல்லவேயில்லைப்பா இவனுகளாகவே கண்டதையும் கற்பனை செஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்ல!”

“.... ....!?”

“என்னுடைய ஒவ்வொரு படைப்பும் முடிவை சந்தித்தே தீரவேண்டும்!”

“இவங்களுக்கு அமேசான் காட்டில் விளையும் மூலிகை எண்ணெய் தேய்க்கச்  சொல்லாமில்ல..?” என்றேன்.

“உனக்கு எப்படித் தெரியும். நீ அமேசான் காட்டுக்குப் போயிருந்தியா என்ன?”

“டிவி விளம்பரத்தில காண்பிச்சத சொன்னேன்”

“உனக்குக் காண்பிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. சரி... என்கூட வா..! பேசிக்கிட்டே போகலாம்.” என்றவாறு என்னை நோக்கினார்.

“முதலில், உங்ககிட்ட இருந்து வரும் வெளிச்சத்தை கொஞ்சம் குறைச்சு வையுங்க...! கண் வலிக்கிறது. என்னால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியல...” என்றேன்.

அவர் மீண்டும் கட்டளையிட ஒளி சரியான அளவிற்கு வந்தது. முதியவரை நன்கு கவனித்தேன். மலக்குகளைவிட நல்ல உயரம், அழகு, பெண்மை மிகுந்த முக அமைப்பு. மலக்குகள் அணிந்திருந்ததைப் போன்றதொரு அங்கி. தற்பொழுது பெரியவரை இந்த அளவிற்குத்தான் கவனிக்க முடிந்தது. அங்கிக்குள் என்னனென்ன ஐட்டங்கள் இருக்கிறதென்பதை கண்டறிய முடியவில்லை. இருவரும் நடந்து கொண்டிருந்தோம்.

திடீரென்று நின்ற பெரியவர், அங்கே சுருண்டு படுத்துக் கொண்டிருந்த ஒரு முதியவரைச் சுட்டிகாண்பித்து,

”இவர் யாரென்று தெரிகிறதா?” என்றார்.

“அய்யா... நான் இந்த இடத்திற்கு புதுசு. இங்கு ஒருவரையும் எனக்குத் தெரியாது. நீங்க கேட்கறதால சொல்லறேன்... தோற்றத்தைப் பார்த்தால் உங்க அடிமை, மூளை செத்த மலக்கு மாதிரி தெரியுது!” என்றேன்

”நீ சொன்னது சரி... இவர்தான் ஜிப்ரீல் “ என்றார்





”ஏது ... மலக்குகளுக்கெல்லாம்  தலைவர், வானவர் கோமான், சீமான்  என்பார்களே அவரா?”

“அவரேதான்!”

”என்ன ஆச்சு.. ஏன்.. இப்படி சுருண்டு படுத்திருக்கிறார் வயிற்றுவலியா?” என்றேன்.

”அது ஒரு பெரிய கதை...”

”ம்ம்... சொல்லுங்க...!”

”கிட்டத்தட்ட 1400 வருஷமா இப்படி இருக்காரு!”

“1400 வருஷமாவா...?”

“முஹம்மதை சந்திக்க பாறையிடுக்குள்ள  போனதுக்குப் பிறகுதான் இப்படி ஆயிட்டார்!”

“பாறை இடுக்கா... ? ...ஹீரா குகைன்னுதானே சொல்லுவாங்க...?” என்றேன்.

“சரி... உன் ஆசையை நான் கெடுக்கல... குகைன்னே வச்சிக்க...” என்றார்

“அப்படியென்ன அந்த குகையில நடந்தது?”

“ஏப்பா... எதுவுமே தெரியத மாதிரி கேட்காதே..!”

“அய்யா... நானென்ன அந்த குகையோட செக்யூரிட்டியாகவா இருந்தேன்...?”

“குகைல நடந்தவைகளை நீயே பலமுறை எழுதியிருக்கே... ஆனா அதுல உண்மையில்ல!”

“நான் ஹதீஸ்களில் சொல்யிருந்ததை எழுதினேன். அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் எல்லாம் புளுகாண்டிகளா... இல்ல... குர்ஆனுக்கு எதிரானதா என்ன?”

“அப்ப... அந்த குகையில இருந்தவங்க ரெண்டே பேர்தான் ஒன்னு ஜிப்ரீல் இன்னொன்னு முஹம்மது. ஜிப்ரீல் படுத்த படுக்கையா ஆயிட்டார் முஹம்மது சொன்னது உண்மையாயிருச்சு!”

“என்னதான் நடந்தது அத சொல்லுங்க...!”

“அத எப்படி என் வாயால சொல்லுவேன்...!” என்ற பொழுது அவரது கண்களில் நீர் தழும்பியது.  குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார். என்ன சொல்வதென்று புரியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் தனது அங்கியை உயர்த்தி சுருட்டியவாறு ஜிப்ரீல் படுத்திருந்ததற்கு அருகில்  சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்.  அபொழுது அவரது கெண்டைக்கால் (Q 68:42) தெரிந்தது.

கீழே அமருமாறு கையால் சைகை காண்பிக்க, நானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.

”சரி... சரி.. அழாதிங்க... அமைதி... அமைதியா இருங்க...!” என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்தார். பிறகு குனிந்து ஜிப்ரீல் அணிந்திருந்த அங்கியின் விளிம்பை கைகளால் எடுத்து ‘ட்ட...ர்ர்..ர்ர்’ என்று மூக்கை சிந்தினார்.  

”அய்யா... உங்கள கடவுள்னு சொல்லிக்கிறீங்க ஆனா இப்படி அழறீங்களே...?”

“அல்லாஹ்... இரக்கப்படுவான், மகிழ்ச்சியடைவான், நன்றி சொல்வான்(Q 4:147), கோபப்படுவான்(Q 2:90), கேலிசெய்வான்(Q 9:79), சிரிப்பான், சபிப்பான்(Q5:60), சதி செய்வான்னு... சொன்னா எதிர்க் கேள்வியில்லாம நம்புவீங்க... இதையெல்லாம் செய்யறவன் அழமாட்டானா...?” என்றார்.

“தாராளாம அழுது புலம்புங்க... அது உங்க தனிப்பட்ட உரிமை,  ஆனா ஜிப்ரீலோட  டிரஸ்ல மூக்கை சிந்தி வைக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்ல...! என்றேன்.

”அல்லாஹ் சதி செய்வதில் சிறந்தவன் (Q 8:30) என்பதை கேள்விப்பட்டதில்லையா...?”

“ம்ம்...ம்... கேள்விப்பட்டிருக்கேன். சரி... இன்னும் கொஞ்சம் சதி செய்து மூக்கை நல்லாவே துடைச்சிக்கங்க...!” என்றேன்.

மறுபடியும் மூக்கை சிந்தி சுத்தம் செய்தவாறு,

“நாம என்ன பேசிட்டிருந்தோம்..? என்றார்.

”ஹீரா குகையப்பத்தி பேசினோம்...!”

”அப்ப ஜிப்ரீல் ரொம்ப அழகாக இருப்பார். அவர பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரியா இருக்கும்னா, எப்படி இருந்திருப்பார்னு நீயே சிந்திச்சு பாரு!” என்ற போது பெரியவரின் கண்கள்விரிந்து பிரகாசமானது.

”சொல்லுங்க...!”

“அப்ப... முஹம்மதுக்கு சுமார் 40 வயசு இருக்கும் அவரோட மனைவிக்கோ 55 வயதுக்கும் அதிகமா இருந்தது. வயதான ஒரு மூதாட்டியால 40 வயது ஆணோட இச்சைகளை தீர்க்க முடியுமான்னு நீயே யோசித்துப் பாரு...!” என்றார்.

“முடியாதுதான்..!”

“இதுல நம்ம ஆளுக்கோ ’அது’ கொஞ்சம் ஜாஸ்தி. விதவிதமாக கற்பனை செய்ய ஆள் வேற..!”

“.......!”

“போதாக்குறைக்கு, V.O வாக வேறு இருந்தார்”

“ஏது... கிராம அதிகாரியாகவா?”

”அட நீ வேற... வெட்டி ஆஃபீஸராக இருந்தார். கதீஜாவோட தயவுலதான் முஹம்மது தன்னோட   வயிற்றும் பொழப்பு ஓட்டிக்கிட்டு இருந்தார்”

”முஹம்மதோட சிறந்த ஒழுக்கத்தினால் மக்கா நகரிலேயே நம்பிக்கைக்குரிய சிறந்த மனிதராக மதிக்கப்பட்டாருன்னு முல்லாக்கள் சொல்லறாங்க. நீங்க என்னடான்ன இப்படிச் சொல்றீங்களே...!?”

முதியவர் என்னை முறைத்துப் பார்த்தவாறு,

”ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நல்லாவே நடிக்கிற...” என்றார்.

”நீங்க சொல்லி... நான் கேட்கறதுதானே நல்லாயிருக்கும்..!” என்றேன்

”திருமணத்திற்கு வேற  நல்ல, அழகான, இளமையான பெண்கள் கிடைச்சிருந்தா, இவரு எதுக்காக தன்னோட அம்மா வயசில இருக்கிற பொம்பளைகிட்ட போகணும்?”

”சரி... அதுக்கும்,  ஜிப்ரீல் இப்படி ஆனதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.

முதியவர் என்னை மீண்டும் முறைத்துப் பார்த்துவிட்டு சிரித்தார்.

“சரி... சொல்லுங்க...” என்றேன்

”கதீஜாவை தவிர்க்க, தவம் செய்யப் போறேன்... தியானம் செய்யப் போறேன்னு... ஏதாவது கதையளந்துட்டு... வீட்டிலிருந்து முஹம்மது அப்பப்ப... ’எஸ்’ ஆயிடுவாறு...!”

”.... ....!”

“இந்த அம்மாவும் ஆள அனுப்பி தேடிக் கண்டுபிடிச்சு, திரும்பவும் ஒட்டகத்தை அடைச்சு வக்கிற மாதிரி பட்டியில கொண்டுவந்து அடைச்சு வைப்பாங்க... இது அவங்களுக்கு அன்றாட வாடிக்கையாகவே ஆயிருச்சு”

“... ..!”

”இந்த மாதிரி இருக்கறப்ப..  ஒரு தடவ முஹம்மது  பாறை இடுக்குல... சரி.... ஹீரா குகைக்குள்ள வந்து ஒளிஞ்சுகிட்டாரு...”

”.... ....!”

”முஹம்மதோட நிலைமைய பார்க்கையில எனக்கு பரிதாபமா இருந்தது. ஜிப்ரீல்கிட்ட, நீங்க... போய் அவருக்கு ஆறுதலா சில வார்த்தைகளை சொல்லிட்டுவாங்கன்னு அனுப்பி வச்சேன்...”

“..... ...!”

“இந்த லூசு... ஏற்கெனவே நல்ல ஃபிகரு, அதுல இன்னும் ’மேக்கப்’ போட்ட அழகான பொம்பள மாதிரியே இருபான்ன்(ள்). அப்படியே அந்த பாறையிடுக்குல போக எல்லாமே விபரீதமா போயிருச்சு...”

“நடந்தது என்ன ...? சொல்லுங்க” என்றேன் ஆவலாக...,

“ஜிப்ரீல், தப்பிக்க வழியில்லாத முட்டுச்சந்தில் மாட்டிகிட்ட மாதிரி ஆயிருச்சு...”

“ஜிப்ரீலுக்குத்தான் பறக்கறதுக்கு இறக்கை இருக்கே... அங்கிருந்து தப்பிச்சிருக்கலாமே...?” என்றேன்.

”அந்த அளவுக்கு மூளையிருந்த இவள்(ன்) இப்படி கிடக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது”

”அப்படி என்ன முட்டாள்த்தனத்தை செய்தார்...?”

“இறக்கைகள் எதுக்கு இடைஞ்சாலாகன்னு... அத கழட்டி வச்சிட்டு போயிருக்கா... எத்தனை வருஷம் அடக்கிவச்சிருந்த வெறியோ தெரியல, புள்ளிமான் மாதிரி துள்ளித் திரிந்த ஜிப்ரீல,  கடிச்சு.. பிறாண்டி வரிக்குதிர... மாதிரி ஆக்கிட்டான்” என்றார் ஏக வசனத்தில்.

“என்ன பெரியவரே சொல்றீங்க... ஜிப்ரீல்தான் தன்னை மூச்சுத்திணற கட்டிப்பிடிச்சதா ஹதீஸ்ல எல்லாம் முஹம்மது சொல்லியிருக்காரு...? ஜிப்ரீல் மரியாதையில்லாம நடந்துகிட்டதாக நான்கூட எழுதியிருக்கேன்!” என்றேன்.

“இப்படித்தான் உண்மைகள் எல்லாமே தலைகீழா இருக்கு..!” என்றார்.

“சரி... நீங்க... அந்த முஹம்மதை உண்டு இல்லேன்னு ஆக்கியிருக்கலாமே...?”

“அதையேன் கேட்கற... அதற்குப் பின்னாடி நடந்ததுதான் அதவிடக் கொடுமை..!” என்று சலித்துக் கொண்டார்.

தொடரும்...


தஜ்ஜால்

Facebook Comments

12 கருத்துரைகள்:

பிசாசு said...

அப்போ இனி கிளுகிளுப்பு தான் போங்க..
பறந்து தப்பிக்கமுடியிர ஜிப்ரீலுக்கே இந்த கதின்னா ரெக்கை இல்லா 72 ஹூரிக்களோட நிலைமை ? அப்புறம் எங்க உம்மாக்களுக்கு (தூதரோட மனைவிகள்) 72 காளையர்களை கொடுத்துருக்காங்களா இல்ல அவங்க என்ன பண்றாங்கன்னு பார்த்து சொல்லவும்.

sagodharan said...

super! ippadithaan unmayileye nadakkumnu ninaikkiren

Naga Che said...

நம்ம பீஜெ அண்ணனும் ஜெர்ரி அண்ணனும் (ஆபாச) பேச்சு போட்டி நடத்தியபோது பீஜெ க்ருப், யேசு நாதர் தனது சீடர்களை கட்டிபிடித்ததால் அவர் ஒரு ஹோமோ னு சொன்னார். இந்த கட்டுரையை மட்டும் நீங்க முதல்லையே எழுதிருந்திங்கன ஜெர்ரி க்ருப் பதிலடி கொடுத்திருக்கும்.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசு,

நன்றி!

//அப்புறம் எங்க உம்மாக்களுக்கு (தூதரோட மனைவிகள்) 72 காளையர்களை கொடுத்துருக்காங்களா இல்ல அவங்க என்ன பண்றாங்கன்னு பார்த்து சொல்லவும்.// இன்னும் அந்த பகுதிக்கு போகவில்லை. போனாத்தான் தெரியும் அது எந்த லட்சணத்தில் இருக்குன்னு!

தஜ்ஜால் said...

வாங்க சகோதரன்,

//super! ippadithaan unmayileye nadakkumnu ninaikkiren// என்ன இப்பிடி சொல்லீட்டிங்க? நான் சொல்லறது எல்லாமே மெய்யாலுமே அல்லாஹ் என்கிட்ட சொன்னது தானுங்க. என்னோட இந்த மிஹ்ராஜ் பயணத்தை நம்பறவவங்களுக்கு “சித்தீக்-வாய்மையாளர்” அப்படிங்கற பட்டம் வழங்கலாம்னு இருக்கோம்! எதுக்கும் ஒருதடவ சிந்திச்சுப் பாருங்க...

தஜ்ஜால் said...

வாங்க Naga Che,
நன்றி!
/// இந்த கட்டுரையை மட்டும் நீங்க முதல்லையே எழுதிருந்திங்கன ஜெர்ரி க்ருப் பதிலடி கொடுத்திருக்கும்/// எறை நாடலையோ என்னவோ?
//யேசு நாதர் தனது சீடர்களை கட்டிபிடித்ததால் அவர் ஒரு ஹோமோ னு சொன்னார்.// ஆமாம் உண்மைதான், அல்லாஹ்வும் அப்படித்தான் சொன்னார். முஹம்மது,ஜிப்ரீலைக் கட்டிப் பிடித்து கசமுச செய்ததும் அதே ரகம்தானாம்.

Anonymous said...

nice............. i like it....
i m waiting for next article

பிசாசு said...

நம்ம மூமின்களுக்கு அடிக்கடி வரும் வித்தியாசமான கேள்வி மாதிரி எனக்கும் சில கேள்வி இருக்கு
இது பிற்பாடு கேட்கவேண்டிய கேள்வி, இருந்தாலும் இப்பவே கேட்குறேன்.. நீங்களே கேட்டு சொல்லுங்க.

உதானத்துக்கு இப்படி வச்சுக்குவோம் : எனக்கு சன்னிலியோன் மீது ரொம்ப ஆசை, ஆனா அவளுக்கு ரெண்டு காரணத்துக்காக நரகம் கிடைக்கும் (1.பொண்ணா பொறந்ததுக்கு 2. பண்ற பாவத்துக்கு)
நான் நரகத்துக்கு போனா தண்டனைகளுக்கு பிறகு சன்னியோட இருக்கலாமா (நரக தண்டனை காலம் எவ்வளவு) ?
இல்ல நான் சொர்கத்துக்கு போய்ட்டா சன்னி எனக்கு வேணுமின்னா நரகத்துலேர்ந்து தருவாங்களா..
என்னை பாத்து வேறொருவர் கேட்டாலும் சன்னி தருவாங்களா.. அப்போ ஒரிஜினல் சன்னி யாருன்னு எப்படி கண்டு புடிக்கிறது.
இருக்குறது எல்லாமே தங்கம் அப்படின்னாலும் அதுலயும் மாற்று கூட குறையதானே செய்யும்.

டேய் இதெல்லாம் நான் சொல்லவே இல்லையடான்னு சொல்வாரு.. விடாதீங்க.
அப்புறம் எதுக்கு தூதர்கிட்ட இந்தமாதிரி சொன்னீங்க வார்த்தையாலேயே சவுக்கடி கொடுங்க. (அதுக்காக போதும் உன் பயணம் நீ திரும்ப போ அப்படின்னு திருப்பி அனுப்பாதபடி கேளுங்க)

Anonymous said...

என்ன bro, மறந்துட்டீங்களா இப்படி ஒரு blog இருகிறத i m waiting boss for ur next article. its really funny.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசு,

//இல்ல நான் சொர்கத்துக்கு போய்ட்டா சன்னி எனக்கு வேணுமின்னா நரகத்துலேர்ந்து தருவாங்களா..
என்னை பாத்து வேறொருவர் கேட்டாலும் சன்னி தருவாங்களா.. அப்போ ஒரிஜினல் சன்னி யாருன்னு எப்படி கண்டு புடிக்கிறது. // சொர்க்கத்தில எது கேட்டாலும் கிடைக்கும்னு சொல்றாங்க அதனால ஒரே சன்னிலியோனை ஜெராக்ஸ் எடுத்து கேட்கறவங்களுக்கெல்லாம் கொடுபாங்களாம். மாஸ்டர் COPY-யை அல்லாஹ் வச்சுக்குவானாம். இது என்கிட்ட அல்லாஹ் சொன்னது நான் உங்களுக்கு சொல்லறேன். இதை எழுதிவச்சுக்கங்கோ பிற்காலத்தில உதவும்.

தஜ்ஜால் said...


வாங்க Anonymous,

//என்ன bro, மறந்துட்டீங்களா இப்படி ஒரு blog இருகிறத// மன்னிக்கனும் சகோ., அலுவலகத்தில் வேலை பெண்டு நிமிர்த்துகிறது அதனால்தான் எழுத முடியவில்லை. இன்னும் இரண்டு வாரத்தில் வேலைப்பளு குறைந்துவிடும் என்று நம்புகிறேன். இன்ஷா அல்லாஹ்! (?)

Unknown said...

இந்த பிளாக்ல உள்ள முதல் பதிவில் இருந்து அனைத்தையும் படிச்சிட்டேங்ணா என்ன ஒரு 15 நாள் ஆச்சு இவ்லோ இன்ட்ரஸ்டிங்கா ஒரு பிளாக்க பாத்ததே இல்ல அருமை வாழ்துக்கள் இதுல ஹைலைட்டே இந்த மிஹ்ராஜ் பயணம் தான் 2 முறை படிச்சுட்டேன்