Wednesday 10 June 2015

ஏமாற்றுவாதங்கள்!

விடாமுயற்சியைப்பற்றிச்  சொல்லும் பொழுது வழக்கில்,

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

அம்மியை எதற்கு அடிக்க வேண்டும்?

பழமொழி சொன்னால் கேட்க வேண்டும் ஆராயக் கூடாது!

சரி.. சரி... நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்!

இணையத்தில் நாம் என்னதான் விளக்கினாலும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு சில இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் கண்டும் காணாதவர்களைப் போல இருக்கின்றனர்.

அந்த சிலரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமைப்பற்றித் தெரியாதவர்கள்.  தங்களது சொந்தக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் முன்வைத்து நமது ஆவியை(!) எடுப்பவர்கள்.

புத்திசாலித்தனமாக சிந்த்திப்பவர்களோ, தாங்கள் சொல்லும் மூத்திரச் சந்திற்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வோமென்று அடம்பிடித்து அறைக்கூவல் விடுபவர்கள்.

என்ன நடந்தாலும் சரி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மட்டும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்!

இவர்களின் அமைதி(!) நம்மைப் போன்றவர்கள் இணையத்தில் முன்வைக்கும் விமர்சனங்கள், உண்மையிலேயே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைச் சென்றடைகிறதா? என்று நாமே சற்று குழம்பிப் போகுமளவிற்கு இருக்கிறது.

இவர்களின் அமைதிக்கு  சில காரணங்கள் இருக்கிறது.

நம்மைப் போன்றவர்களுக்கு ஆலிம்கள் பதில் கூறத் துவங்கினால் நாம் பெரிய ஆளாக ஆகிவிடுவோமாம்!

இவைகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்கத் துவங்கினால் எதிர்க் கருத்துக்கள் மிக எளிதாக கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைந்து விடும் என்ற அச்ச உணர்வு அவர்களைத் தடுக்கிறதாம். இது ஒரு முல்லா என்னிடம் கூறிய பதில்.

ஆனால் கேள்விக்கணைகள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.

விளைவு!

அம்மி நகரத் துவங்கியிருக்கிறது.

மாஷா அல்லாஹ்!

பீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிதுபுதிதாக விளங்கங்கள் இணைந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளை தனித் தொகுதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லா!


பாவம் அல்லாஹ்!

குர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(!), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை! மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்(!), அழகிய முறையில் வர்ணனை செய்வது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்.

நகர்ந்திருக்கும் அம்மியைப்பற்றி சிறிது கவனிக்கலாம்.

குர்ஆன் அறிவியலுடன், வரலாற்றுடன், சமகால நாகரீகத்துடன், மனிதநேயத்துடன் முரண்படுவதுடன் தனக்குத்தானே முரண்படுவதை நாம் அறிவோம். மனிதன் படைக்கப்பட்ட விதத்தை குர்ஆன் கூறும் விதங்கள் அதன் உள்முரண்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. அதை விதவிதமாக நமது ஆலிம்கள் விளக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவார்கள். அறியாமை என்று கூறுவதைவிட ஏமாற்றுவாதம் என்று கூறுவது சரி!

பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளில் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக கூறும் TNTJ வின் அதிகாரபூர்வ இணையதளத்திலிலிருந்து...




இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.
இவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படி குர்ஆன் முரண்பட்டுp பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

”கருவுற்ற சினைமுட்டையிலிருந்து” என்ற பீஜேவின் கற்பனையை பலமுறை நாம் விவாதித்திருக்கிறோம் எனவே அதைபற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை.  பீஜே என்ன சொல்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.

ஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது
நெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.
மாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
அரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.
தண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.
என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.
இதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.
பீஜேவின் விளக்கத்தை ஆன்லைன் பீஜேவில்தான் படிப்போம் என்பவர்கள் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.

குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ?
அல்லாஹ்வே அறிவான்!

ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்கிதீர்கள்? என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா?

அதிலும் மிகத்தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்வகையில் விவரித்திருப்பதாக கூறிக் கொள்ளும் சமையல்காரர் இப்படித்தான் பதிலளிப்பாரா?

பீஜேவின் இடியாப்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பீஜே மிகபுத்திசாலித்தனமாக தனது விளக்கத்தில் இடியாப்பத்தின் மிக முக்கிய மூலப்பொருளை தவறாது குறிப்பிட்டு குர்ஆனை முட்டுக் கொடுத்து நிறுத்தப்பார்க்கிறார்.

தேறியதா என்பதுதான் இங்கு கேள்வி!

மனிதனின் படைப்பிற்காக குர் ஆன் பட்டியலிடும் மூலப்பொருட்கள்,

மண்

களிமண்

பிசுபிசுப்பான களிமண்

களிமண்ணின் மூலத்திலிருந்து

தட்டினால் ஓசைதரக்கூடிய களிமண்

நீர்

குதித்துக்குதித்து வெளியாகும் நீர்

விந்து

சொட்டுசொட்டாக ஊற்றப்பட்ட நீரிலிருந்து

எந்தப் பொருளாகவும் இருக்காத நிலையிலிருந்து

ஆகுக

ஓர் ஆத்மாவிலிருந்து..

பீஜேவின் ’இடியாப்ப’ உதாரணத்தை குர்ஆனுடன் பொருத்திப்பாருங்கள் பீஜே, இடியப்பத்தின் மூலம் அல்லாஹ்விற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க எடுத்திருக்கும் பெருமுயற்சிகள் உங்களுக்கே புரியும்.

நெருப்பு அல்லது அதிக வெப்பத்தில் சுடப்படும்பொழுதுதான் களிமண் ஓசை தரக்கூடையதாக மாற்றமடையும்; எனவே மனிதன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்று கூறலாமா?

இடியாப்பம் தண்ணீரால் செய்யப்பட்டது.

குதித்து குதித்து வெளியாகும் நீரிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது

எதுவுமில்லாததிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது.

’குன்’ என்றவுடன் இடியாப்பம் உருவாகிவிட்டது. என்று குர்ஆனுக்கு பீஜே விளக்கம் கொடுக்க வேண்டும்.

இறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கும் ”என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்” என்ற பதில் இடியாப்பத்தை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான பதில்!
எனவே பீஜே இங்கும் சறுக்கி விழுகிறார்.

வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.
வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

வானம் என்ற சொல் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பீஜே, மெல்ல நழுவி, இருவகையான வானங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

...இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.
...இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.



எனவே வானம் என்பது,

வெட்டவெளியாகவும்,

ஏழு அடுக்குகள் கொண்ட வேறொரு அமைப்பாக,

இருவகைப்படும் என்ற அறிய கண்டுபிடிப்பை மனிதகுலத்திற்கு அறிவிக்கிறார். அவர் கூறுவதற்கு தயங்கினாலும், குர்ஆனைப் பொருத்தவரையில் வானம் என்பது திடப்பொருளாலான ஏழு அடுக்குகளைக் கொண்டது.

வானம் என்றால் என்ன?
நீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகலில் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.
வானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.

வானத்தைப்பற்றிய குர்ஆன் மற்றும் முல்லாக்களின் உளறல்களை நாம் முன்பே மிக விரிவாக விவாதித்திருக்கிறோம். குர்ஆன் மட்டுமல்ல பீஜேவும் தனக்குத்தானே எவ்வாறெல்லாம் முரண்படுகிறார் என்பதை இந்த இணைப்பை  சொடுக்கினால் உங்களுக்கே புரியும்.

அறிவுள்ள மனிதர்கள், மூடத்தனமான கருத்துக்களின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்று அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறதென்பதற்கு பீஜேவின் விளக்கங்கள் சிறந்த உதாரணம்!


தஜ்ஜால்



Facebook Comments

54 கருத்துரைகள்:

Unknown said...

super post. my brother theevira PJ bakthar.. I need some question answer post from u to explain about real islam

தஜ்ஜால் said...

வாங்க ஜாவித்,

உங்கள் வருகைக்குக் கருத்திற்கும் நன்றிகள்!
இஸ்லாம் பற்றிய கேள்விகளைக் கேளுங்கள் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

Anonymous said...

சான்சே இல்லை சூப்பர் நெத்தியடி தபோ பீ ஜே

C.Sugumar said...

உண்மைகளை மனிதன் படிப்படியாகக் கற்று வருகின்றான். அம்மணமாக விலங்குகள் போல் வாழ்ந்த மனிதன் தன்னைப்பற்றி இந்த உலகைப்பற்றி படிப்படியாக சிந்தித்து உருவாக்கி பின் பிழைகளை திருத்தம் செய்து உண்மைகளைக் கண்டு வருகின்றான்.உண்மைகள் முழுவதும் கண்டுபிடிக்கப்படவில்லை.தேடுதல் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது.எந்த ஒரு தனிப்பட்ட புத்தகமும் முழுமையான உண்மையை மனிதனுக்கு தர இயலாது.அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தம்.சமயத்திற்கும் இது பொருந்தும். குரான் முழுமையானது. 1400 ஆண்டுகளுக்கு முந்திய அரேபியாவின் சிந்தனைவளத்திற்கு அது ஒரு ஆதாரம் என்று கொள்ளலாம். ஆனால் அதிலே நின்று விட வேண்டும் என்று நினைப்பதுதான் பொிய முட்டாள்தனம்.
ஆனாலும் தங்களின் கருத்துக்கள் ஒன்றும் அக்னி ஏவுகணை போல் எப்படி தாக்குகின்றது. நன்றி.நன்றி.

C.Sugumar said...

திருத்ததம்
குரான் முழுமையானது அல்ல.

பிசாசுகுட்டி said...

அப்போ இடியாப்பத்தின் மகத்துவத்தையும் எப்படி செயப்படுகிறது என்ற பார்முலாவையும் - அரிசி கிடைக்காதா அந்த காலத்தில் அரேபியாவில் இருந்த தூதுவர், சாதாரண மனிதர் (இந்தியாவின் தென்னகத்தில் செய்யப்படும் இடியாப்பத்தை பபற்றி) எப்படி புட்டு புட்டு வைத்திருக்க (யா அல்லா புட்டை பத்தி கூட ஒரு வரியிலேயே சொல்லிவிட்டான்) முடியும்.. இதிலிருந்தே தெரியவில்லையா இது ஒரு இறை வேதம் என்று..

இப்போதாங்க தெரியுது பிராகெட்டின் மகத்துவத்தை பற்றி. குரான் வரி மாற்றம் செய்யப்படவில்லைன்னு சொல்லிக்கிட்டு ஆனா விளக்கங்களில் இப்படி இஷ்டத்துக்கு பிராக்கெட்டுக்குள் என்னாவேனுமினாலும் போட்டுகொள்ளலாம்.. ஏன் நானும் ஒரு தூதுவன் என்று கூட பீஜே போட்டுகொள்வர்.

Unknown said...

post some new articles every day I read all the articles. need some more articles to debunk science in quran

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
நன்றிகள்

அதென்ன த போ பீஜே?

தஜ்ஜால் said...

வாங்க C.Sugumar

நன்றிகள்!!!

உலகில் மாறாமல் இருப்பது மாற்றம் ஒன்றுதானென்று 23-ம் புலிகேசியே சொல்லியிருக்கிறார். நம்முடைய முஃமின்களுக்கு அது புரியமலில்லை அதனால்தான் குர்ஆனுக்கு புதுப்புது விளக்கங்கள் கொடுத்து தாங்களும் புதுமையானவர்கள்தான் என்று காண்பித்துக் கொள்கின்றனர். என்ன்னதான் செய்தாலும் மண்டைமேலிருக்கும் கொண்டை மட்டும் மறையவே மாட்டேன் என்கிறது.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசுகுட்டி

நன்றிகள்!!!

ஏழு வானங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுவது வளிமண்டலத்தின் அடுக்குகள் என்று இதே பீஜே உட்பட அனைத்து முல்லாக்கள் விளக்கிய பொழுது புல்லரித்த முஃமின்களின் கூட்டம், ஏழுவானங்கள் என்பது // அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.// என்று பீஜே சொல்லும் பொழுது புல்லரிக்காமல் போய்விடுவார்களா என்ன?
இடியாப்பம், பாயா, சப்பாத்தி, புரோட்டா, குருமா என்று பீஜே இன்னும் எதையாவது உளறத்தான் போகிறார்.

முஃமின்கள் சிந்திப்பார்களா?

Ant said...

தான் சார்ந்துள்ள மதம் பெறுமை மிக்கது என்றும் தனித்தன்மை வாய்ந்தது ஒவ்வொரு மதப்பற்றாளரும் நினைக்கிறார். தனது என்னத்திற்கு மாறாக உண்மை தெரியவரும்போது அதை ஏற்றுக் கொள்ள அவர்களது ஈகோ இடம் தருவதில்லை. முஃமீன்களுக்கும் இது பெருந்தும். தான் இத்தனை காலம் நம்பி வந்தது பொய்யானது என்று மனம் கூறினாலும் மற்ற முஃமீன்களின் கூறும் மனதிற்கு ஆறுதல் தரும் தவறான வாதத்தை பிடித்துக் கொண்டு நடைமுறையில் குரானுக்கு முரன்பட்டும் சமுகத்தில் மதப்பற்றுள்ள இஸ்லாமியனாகவும் காட்டிக் கொண்டு போலியான வாழ்கை வாழ்கின்றனர். அதனால்தான் அவர்கள் எப்பாடுபட்டாவது குரானை அறிவியலோடு நேர்நிறுத்தி வருகின்றனர். உண்மைநிலையை அறிந்துள்ள சில முஃமீன்கள் தலையை காப்பற்றிக் கொள்ளவும் தங்கள் மனைவி குழந்தைகள் நிலையை கண்டும் இத்தளத்தில் வரும் கருத்துகளில் ஏற்புடையதாக இருந்தாலும் மவுனமாக இருந்து விடுகின்றனர். இந்நிலை தான் இஸ்லாம் ஏட்டு சுரக்காய் என்பதை புரிதாலின் ஆரம்ப நிலை. தொடரட்டும் முயற்றி. உண்மை விளங்கட்டும். இறுதியாக பீச்சே குறிப்பிட்டது தான் கட்டுரையின் ஹைலைட் ஏனெனில் பீச்சே-வே ஒரு இடியாப்பம் தான்.

ஆன்மஞானம் said...

தான் நம்பும் கொள்கையை மதத்திற்கு எதிரானது என்ற நிலையில் வெளியரங்கில் பகிரங்கமாய் கருத்து பகிர்வு என்பது இன்றைய காலகட்டத்தில் இயலாத ஒன்று. எனவேதான் புனைப்பெயர்களை சூடி கருத்துகளை பகிர்கிறோம். ஆனாலும் தனி மனிதர்களின் மனமாற்றம் ஒன்றே போதும் இந்தக் கருத்துகளின் தாக்கத்தின் சாட்சியாக.
ஆனாலும் ஒரு நாள் குழுவாய் நமது சுய அடையாளத்தோடு மத எதிர்ப்பு கருத்தை பகிரும் நாள் வரும். அதற்கு இன்னமும் முயல்வோம். அந்நாளில் மதங்களின் ஆளுமையற்ற மனித சமுதாயம் உருவாகியிருக்கும். இது எல்லா மதங்களும் அழிந்த பின்பே நடைபெறும்.

ஆன்மஞானம் said...

எல்லாவற்றையும் விட பயங்கரமான ஒன்று.
காலாவதியான கருத்துகளை எக்காலத்திற்கும் பொருந்தும் என சொல்லி
நாகரீக மனிதனை மீண்டும் ஆதிவாசியாக்கும் ஒரு செயல் நடந்து கொண்டிருக்கிறது.

தஜ்ஜால் said...

வாங்க Ant,
//தான் சார்ந்துள்ள மதம் பெறுமை மிக்கது என்றும் தனித்தன்மை வாய்ந்தது ஒவ்வொரு மதப்பற்றாளரும் நினைக்கிறார். தனது என்னத்திற்கு மாறாக உண்மை தெரியவரும்போது அதை ஏற்றுக் கொள்ள அவர்களது ஈகோ இடம் தருவதில்லை.// மறுக்க முடியாத உண்மை!

அதனால்தான் குர்ஆனுக்கு புதிதுபுதிதாக விளக்கங்கள் கூறி தங்களது ஈகோவை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். என்ன செய்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது அதுதான் குர்ஆனின் தனிப்பட்ட சிறப்பு!!

தஜ்ஜால் said...

வாங்க ஆன்மஞானம்,

//எல்லாவற்றையும் விட பயங்கரமான ஒன்று.
காலாவதியான கருத்துகளை எக்காலத்திற்கும் பொருந்தும் என சொல்லி
நாகரீக மனிதனை மீண்டும் ஆதிவாசியாக்கும் ஒரு செயல் நடந்து கொண்டிருக்கிறது.// 1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. வரலாற்றின் சக்கரங்களை பின்னுக்குத் தள்ளும் முயற்சியில் ஓயாமல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

Unknown said...

ramalan arambirichu. atha pathi speciala ethavathu eluthunga thajjal

Anonymous said...

Please other people also write and send that to Dajjal.He will review it ad then post in his blog.

ananth said...

//ஏழு வானங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுவது வளிமண்டலத்தின் அடுக்குகள் என்று இதே பீஜே உட்பட அனைத்து முல்லாக்கள் விளக்கிய பொழுது புல்லரித்த முஃமின்களின் கூட்டம்,//

இஸ்லாமிய காமெடிகளிலேயே பெரிய காமெடி இந்த ஏழு வான காமெடிதான். ஒரு முல்லா எதையாவது உளறும்போது மற்ற மூமின்கள் உடனே டேப் ரெக்கார்டராகி பதிவு செய்து விடுகின்றனர். அது முழு உண்மை என்று நம்பி கண்ட இடத்திலெல்லாம் ரெக்கார்டரை ஃப்லே செய்கிறார்கள். குரானில் முதல் வானில் நட்சத்திரம் இருக்கிறது என்று இருக்கிறதே மற்றும் நபிகளார் ஒவ்வொரு வானமாக கதவை திறந்து போய் சக "சாமி ஏஜெண்டுகளை" சந்தித்து, நைல் இயுப்ரேட்ஸ் நதிகளின் மூலத்தையும் பார்த்ததாக சொல்லப்பட்டிருக்கிறதே என்றால் உடனே ரீல் அறுந்து தொங்கி விடுகிறது அவர்களின் முகத்தை போலவே. வளி மண்டலம் வழுக்கி விழுந்த உடனே இதெல்லாம் புரிய கடுமையான ஆராய்ச்சி தேவை என்று சொல்லி விடுகிறார்கள். சொல்லி சில நாட்களில். முதல் வானம் தெரிந்த வானம் மற்ற ஆரு தெரியாத வானம் என்கிறார்கள். அப்போ எதுக்காக நிரூபிக்கப்படாத ஒன்றை அறிவியல் என்கிறீர்கள் என்றால், மூச்சு விடுவதில்லை. இது போல சொந்த காசில் "அறிவியல்" சூனியம் வைத்துக் கொள்வதில் மூமிங்களுக்கு நிகர் மூமிங்கள்தான். பெரிய பேங்கு ( பிக் பேங் ) , நெருப்புக்கோழி முட்டை உலகம், உலகம் உருண்டை என்பதை நிரூபிக்க இரவும் பகலும் ஒன்றின் மீது ஒன்று சுற்றுவதாக நம்மிடம் சுற்றுவது எல்லாம் இந்த வகையை சேர்ந்தவையே. ஒன்று மற்றும் புரியவில்லை. அவர்களுடைய அறிவியல் அடி முட்டாள்தனம் என்று தெளிவாக நிறூபிக்கப்பட்ட பிறகும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதையே திரும்ப திரும்ப பேச ஒரு கெர்த்து வேண்டும். அவர்களின் கான்ஃபிடன் எனக்கு பிடித்திருக்கிறது.

ஆன்மஞானம் said...

என்னதான் விஞ்ஞானரீதியாக வானியலை பற்றி விளக்கினாலும் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
நாளையே அறிவியல் பூமி உருண்டையல்ல சதுரம் என்று சொன்னாலும் அதற்கும் குரான் வழியில் விளக்கம் தருவார்கள்.
ஐயா
தூங்குறவன எழுப்பலாம்.
தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா?
எல்லாம் அறிந்த முல்லாக்கள் நன்கு அறிந்த விடயங்கள்தான் தாங்கள் கூறுவது. அதை ஒத்துக்கொண்டால் அவர்கள் பிழைப்பு என்ன ஆவது.
சாதாரண முஸ்லிம்கள் நபியை அவர் இவர் என்று கூறாமல் அவர்கள் இவர்கள் மற்றும் (ஸல்) என்றுதான் கூறுவார்கள். ஆனால் அல்லாஹ்விற்கே குரான் விளக்கம் சொல்லும் ஜெய்னுலாப்தீன் என்பவர் நபியை அவர் இவர் என்றுதான் கூறுவார். ஏனென்றால் அவருக்கு உண்மை தெரியும்.
மதங்களும் சட்டங்களும் சாமான்யர்களை ஆட்டிப்படைக்கவே எனும் கொள்கையை
நிரூபிப்பவர். அவருக்கு தெரியும் அவர் இவர் என்றால் அல்லா ஒன்றும் செய்த மாட்டான் என. மத வியாபாரிகளின் கைகளில் இருந்து இந்த மக்கள் விடுபடுகிறார்களோ அன்றே அவர்கள் நேர்வழி பெறுவர்.

குரானை காமெடி பீஸாக்கிய பெருமை அண்ணன் பீஜேவையே சாரும்.

அவர் அல்லாவை வைத்து கல்லா கட்டும் ஒரு முல்லா மட்டுமே என அவர் பின்னால் உள்ளவர் உணரட்டும்.

Unknown said...

recently read a article to know whether miraj happened or not. muslim scholars accepted that there is no masjid al aqsa. but platea apdiye thirpi podranga. every place in the world is mosque for prophet muhammed. so avar building antha idathula ilenalum tholugai serum


Itha ninakum podhu "UNNAI NAINAITHU" charlie comedy than niyabagam varthu athavathu eightu lagnangal ucham peetra oruvan thirupi avara katti oruvan phonela baterry poadamalum pesalam epdi vendum analum pesalm kandukathenga..... lke this comedy their statement

thajjal unga badil enna

ஆன்மஞானம் said...

இஸ்லாமிய வலைஞர்கள் அனைவரும் ரம்ஜான் பிஸியில் உள்ளனரோ.
பின்னூட்டங்கள் ஆதரவாளர்களால் மட்டுமே பதியப்படுகிறது. எதிர்குரல் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது.

oneminuteforgod said...

sinoos

நீங்கள் குர்ஆணை முழுமையாக வாசித்ததுண்டா?
நீங்கள் சொல்லும் இறைவன் யார்?

Unknown said...

ஏற்கனவே தூதர் அவர்களால் குரானுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று கூறிக் கொண்டே விதவிதமான விளக்கங்களை நாள் தோறும் இவர்கள் கூறிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் திருத்தப்பட்ட வேதங்களின் வரிசையில் குரானும் சேர்ந்துவிட்டது என்பதை உறிதி செய்கிறார்கள்....

ananth said...

inge oru matha sandai. ithaipatri ethavathu karutthu irukkiratha?

https://www.facebook.com/SuryanFmPondicherry/photos/a.359151577548199.1073741828.358382604291763/668667759929911/?type=1&permPage=1

Anonymous said...

//குர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(!), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது //

அலிஃப் லாம் மிம் என்று குரானில் வருகிறதே? அதற்கு என்ன பொருள் என்று பிஜேவை கேட்டு சொல்லமுடியுமா?

Anonymous said...

Mr Tajjaal I've some questions for the fellow muslim readers in this blog, who is barking into all the blog and writing shit sharia.Please allow this questions to publish and all the readers are very welcome to comment on it..
Thanks,
I have couple of questions about your Islam, since you believe everything said about Islam is true.
We don’t believe any of the Muslims in the world including your ancestors, read understand and accept Islam. It happens to be either by rape, on the swords, or by mass extinction basis fundamental survival only. Because none of the Islamic invaders are educated or civilized they were literally barbarians.
Let’s discuss about the basic questions about Islam, don’t shout, curse or spit venom, if you are civilized please read carefully.
1. Why God chooses moohMAD to be messenger on what quality, illiterate, not successful in any venture, not a warrior, not a good soul, never heard of anything good like Jesus or any other apostles, like Buddha or any other Hindu/ Pagan saints. – he doesn’t know what is basic humanity.
(ii) His God is so cruel unintelligible because its and imagination of a stupid person or he picks such a stupid disciple as messenger.
2. If God wanted to tell a message why he can’t say the message to his own people he can declare it directly to them why would he need a messenger or a power broker like Neera Radia. Worst is why he made them non-Muslims and you guys are killing them or raping them. Don’t you see this an act of dictator or inhuman terrorist.

3. If the god can’t be seen by any one. How moohMAD did see the god… because he himself said, we can’t see him. – What makes him what he saw or visualize was god... What is the proof? Your way of asking? If sun does salute the god every night along with all the planets, and all lives in it worship him too. So why u brutal calling others khafir’s and killing them. Why the heck we need mosques to worship him.

4. Why Gabriel was the chosen on to teach MoohMAD – what kind of qualities he possess to teach Peace and Love or harmony (that’s why Islam become Piece and brute).

5. Islam is the only fascist method (it’s not religion – it never ever talk about theology or achieving or reaching god rather than fucking and screwing young girls and boys ) forcing people Slavery – cruelest of all man made discriminating practices to fellow human beings.

6. Who said Islam has no Caste system – you know its haram to touch an Arab by non-believers, Arabs don’t allow to touch their dead bodies by non-Muslims. MoohMAD is came from a low caste and used to be slaves, but when he grabs power he does enslave thousands, rape women ,kids and kill . The Bedouin tribes of Saudi are still untouchable. Or they were never allowed to marry an Arab Muslim, same to Africans. Even you are an Brahmin converted to Islam you can’t touch an Arab Muslim girl and live. It it’s so in India, there won’t be single muslim alive in India.

7. In Abrahamic messengers Jesus (in Christianty) himself never does any wrong doing against any other fellow human being, Esp., women and children. And never acquire wealth, lived with only one women – The devil in Christianity is the churches. Jesus never wanted to take the message to other regions other than Israel. Only the Romans used to trick the people to get away worshiping Caligula. Constantine used Jesus name to unite the anti-Caesar forces. Evil churches took the opportunity to grab power, crusades and colonization started from there.

Anonymous said...

Following the questions ..

11. What is the contribution of Muslims to the world, any medicine, science, technology, literature or anything to save human being from extinction or mass death?

12. why the God is so Idiotic he lost his teachings by messenger after messenger and till chooses and illiterate crude nature man to his disciple, and people around him write quran in bones and wood and slate stones, deer skins… someone here is having lot of fun about quran’s origin… it means no one on his followers has any knowledge of documenting any such a holy stuff. Why the stupid god made himself again stupid.. doesn’t he has the capability make moohMAD to learn Arabic in Twenty some years of qur’anic teachings. So powerful he is capable of humping matting 33 Women. Why don’t the god given him the basic power of read and write? All these 23/28 ? Years he simply mate and rape not learn to Read or write quran. Do you believe it’s the real work of god or real way to respect gods words writing in unholy bones and dead animal skins. Before him Moses got all of them in stones. Why moohMAD is not asking any such.

Anonymous said...

still more to go, sorry because of the 4096 characters restriction

13. Words of god directly given – who is Gabriel here…. How come you believe so strong every VAHI…? Instructed by Gabriel is given by God and claim it directly from God.

14. Quran was compiled by people after the death of moohMAD 100 years later, when none of the Sahabas or fellow rapists and murderers were alive, it was done by latter caliphates not by moohMAD or his followers. How much is true is the word of god directly from god? Any common sense thinking? I know it won’t. What guarantee it’s all true nothing but truth and truth alone?. Why would you believe so much of something you never seen or never going to see. But you still not ready to believe the one your culture teaches.

15. Please don’t call it THIRU quran, Thiru / SRI means is goddess laxmi’s Name , you can’t use the word in a path, there is no respect for women or no way of using kaffir gods… neither do Vedas or Marai they do also have only to mention by HINDU religious texts, not even Buddhists using such name . You can call holy quran or Punitha quran., Like the Christians call it Holy Bible.. Not Vedas or Marai. Because the moment u used it you compared it with your god and make them equal. So it’s a huge sin in Islam.

16. What kind of healthy hobbits your Arab guys have in Marriage, marrying paternal cousins and maternal cousins. Horrible, how can you sleep with your own sisters and brothers.

17. For your sake moohMAD was a Jewish clan, and kings of Saudi is Jewish they are not Arabs but Turkish Jews. Why no Saudis grow ugly beard while India and Pakistani Slave Muslims does.

18. How come none of the Muslims who does terrorist activist are the real muslims (In India and TN too), Who claims they are from Arabia by family name, for example in Madurai MoohMAD Ali was a hindu low cast guy , in every suicide attempt all the muslims are low class (and recently converted), even the Kasab guy is a low class muslim. While the upper class Muslims and Arabs, Mongol Muslims safe home and play the game behind the scene. Even ISIS does use muslims from india or pakistan considered as slaves and ask them to do clean toilet and wash clothes including Engineers. Are you an Arab slave or a human being?

Thank you very much, All are welcome to answer and ask this questions to other blogs where this guys are bragging about islam

பிசாசு குட்டி said...

அனானி (கூப்பிடரத்துக்கு ஒரு பேரு வச்சிருக்கலாம்) நல்ல கேள்விகள்.. ஆனா அவங்ககிட்ட பதில் கிடைக்காது.
வஹி வஹி ங்கிறாங்களே அப்படின்னா என்னன்னு (அறியாமை காலத்துல தேடிகிட்டு இருந்தேன்) அப்போ செங்கொடி, பகடு, இஇஇ, பறையோசை, மேலும் ஆர்யாஆனந்த் இவங்க எழுத்துக்களை படித்த பின்புதான் அது என்னன்னு புரிஞ்சிக்கிட்டேன்.. நம்மூரு பூசாரிங்களுக்கு சாமி வருதே (??) அதேதான்.. அந்தகாலத்துல அரபிங்களுக்கு இது என்னடா புதுசா பண்றானேன்னு நினைச்சிருக்காணுக..
ரெண்டு நாள் முன்னாடி பத்து வருஷமா பழகுற ஒரு முஸ்லீம் ஊழியர் என்கிட்ட விவாதம் பண்ண ஆரம்பிச்சார்... கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இஸ்லாத்துல எனக்கு பல குழப்பங்கள் (பீஜே சொல்ற குழப்பம் - போர் இல்ல) அப்படின்னு ஆரம்பிச்சேன்.. அவருகிட்ட கேட்ட ஒரு கேள்வி..
வெறும் கலிமா சொல்லிட்டா முசல்மானா ஆயிடலாமா, பேரை மாத்தாமலே மக்கா போய்டலாமா.. அதற்க்கு அவர் பதில் ஆய்டலாம்.. (உண்மை என்னன்னு எல்லாருக்குமே தெரியும்)
காபிர்களை தண்டிக்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கு, தண்டிக்கிற வேலையை அல்லாவே பாத்துக்கட்டுமே.. அவனோட வேலையை நீங்க பண்ணினா அவனுக்கு கோவம் வராதா வாழும்போதே எதற்கு நரகத்தை காண்பிக்கிறீர்கள் செத்து முடிச்ச பிறகு நரகத்தை பார்த்துக்கிறேனே என்றதற்கு .. கரெக்ட் அதெல்லாம் பெயர்தாங்கி முஸ்லீம்கள் பண்றது அப்படின்னார்..
அதானே இந்த வாழைப்பழம் காமெடியை போல இருந்தது அவரிடம் உரையாடிய அந்த ரெண்டு மணி நேரம்.
குறிப்பு : அவர் பெயர் தாங்கி முஸ்லீம்ன்னு சொன்னது பீசெ வையும் அவரு எழுதுற புதிய விளக்கத்தையும் சேர்த்து தான்.

ஆனந்த் சாகர் said...

அனானி,

உங்களுடைய கேள்விகளுக்கு முஸ்லிம்களிடமிருந்து பதில் கிடைக்காது. அவர்கள் நம்பிக்கொண்டு இருப்பது சுத்த பொய் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குழந்தை பருவத்திலிருந்தே அவர்கள் இஸ்லாமிய வெறி ஏற்றப்படுவதால் இஸ்லாம் என்பது பொய் நம்பிக்கை என்று நிரூபிக்கப்பட்டாலும் அதை ஏற்க அவர்கள் பக்குவப்படவில்லை. உண்மைகளை ஏற்க மனம் தயாராக உள்ள, படித்த தலைமுறையை சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமே தைரியமாக முடிவெடுத்து இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள். முந்தைய தலைமுறையை சேர்ந்தவர்கள் மாறுவது கடினமே.

ஆனந்த் சாகர் said...

oneminuteforgod,

//sinoos

நீங்கள் குர்ஆணை முழுமையாக வாசித்ததுண்டா?//

குரானை நான் முழுமையாக படித்திருக்கிறேன்.

//நீங்கள் சொல்லும் இறைவன் யார்?//

இருப்பது எல்லாமே இறைவன்தான். இறைவன் இல்லாதது என்று எதுவுமே இல்லை.

sinoos என்றால் என்ன?

ஆனந்த் சாகர் said...


இஸ்லாம் கூறும் ஏகத்துவ கொள்கை 100% பொய்.

Unknown said...

recently I read Euphrates river was getting dry and gold are taking from that river. I read a hadith about prophet Muhammad prophecies this miracle. Thajjal avargale ithai patri ungala ans ena. athu unmaiya

ஆனந்த் சாகர் said...

ஜாவித் நசீம்,

முன்னறிவுப்புகள் என்று இந்த மாதிரியான நிறைய உளறல்கள் ஹதீஸ்களிலும் குரானிலும் உள்ளன. அதையெல்லாம் சீரியசாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அது சரி, யூப்ரடீஸ் நதியிலிருந்து எத்தனை கிலோ தங்கம் எப்பொழுது யாரால் எடுக்கப்பட்டது என்று ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?

அல்லாஹ்(கடவுள்) இருக்கிறார், ஆனால் முஹம்மது சொன்ன கற்பனை அல்லாஹ் இல்லவே இல்லை. முஹம்மதின் பொய்களை புறந்தள்ளுங்கள். கடவுள் எவரையும் எதற்காகவும் தண்டிக்க மாட்டார். நரகம் என்ற ஒன்று இல்லை. இருப்பது சுவர்க்கம் மட்டுமே. அதுவே நம்முடைய நிரந்தர வீடு. எல்லோரும் அங்குதான் இறுதியாக செல்வோம். எனவே முஹம்மது பயம் காட்டிய நரகத்தை பற்றி நினைத்து அஞ்ச வேண்டாம். நரக பயம் இல்லாமல் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருங்கள்.

Unknown said...

Anand Sagar. I read some Tamil anti Islamic articles .. I need more Tamil anti Islamic articles which is updating everyday. Arivu pasi apdi thapaninaichukathenga. can u refer way are Tamil blogs u know against islam

Anand Sagar said...

Javith Naseem,

I know many anti Islamic sites or we can say the sites that expose Islam and its founder Muhammad but those sites are in English. As far as I know, there is no such kind of website in Tamil dedicated to exposing true Islam, barring our blog Iraiyilla Islam. Senkodi has published many articles which expose Muhammad and Islam from his communist view point but still they are good to read and analyse.

I hope your appetite for knowledge about true Islam can be satiated by reading upcoming articles in Tamil in this blog. You know English and why not read articles written in English by visiting such sites as alisina.org, islam-watch.org, faithfreedom.org?

Anonymous said...

நரகம் என்று இல்லை.அதனால் நாம் ஜாலியாக இருப்போம்.முகம்மது சொல்லும் அல்லாஹ் இல்லை எனவே எல்லா பாவங்களையும் செய்வோம்.குடிப்போம்,கூத்தடிப்போம்.மறுமையில் நமக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும்.

ஆனந்த் சாகர் said...

அனானி,

நீங்கள் ஏதாவது புனைப்பெயரில் பதிவிட்டால் உங்கள் கருத்துக்களோடு உங்களை அடையாளப்படுத்த ஏதுவாக இருக்கும்.

//நரகம் என்று இல்லை.அதனால் நாம் ஜாலியாக இருப்போம்.//

ஆம், மகிழ்ச்சியாக இருப்போம்.

//முகம்மது சொல்லும் அல்லாஹ் இல்லை எனவே எல்லா பாவங்களையும் செய்வோம்.//

நரகத்தை பற்றி முஹம்மது பலவாறு அளந்து விட்டதால் மட்டும் பாவம் என்று கருதப்படுவதை மூமின்கள் செய்யாமல் இருக்கிறார்களா?

//குடிப்போம்,கூத்தடிப்போம்.//

அது அவரவர் விருப்பம். இதில் பாவம் எங்கிருந்து வந்தது? காபிர் ஆண்களை கொன்றுவிட்டு அவர்களின் பெண்களை கற்பழிப்பது, பாலியல் அடிமைகளாக வைத்துக்கொள்வது இஸ்லாத்தை பொறுத்தவரை பாவமில்லை, மாறாக அது ஒரு புனிதப்போர். ஆனால் எங்களுக்கோ அது மாபாதக செயல். குடிப்பது உடல் நலத்திற்கு கேடு. எனவே அதை தவிர்க்க வேண்டும், ஆனால் அதை பாவம் என்றெல்லாம் சொல்வது அறிவுடைமை இல்லை என்பது எங்களின் நிலைப்பாடு. உங்களுக்கு அது ஒரு பாவ செயல். நம் இரு சாராரின் சிந்தனையே வேறு வேறு. இல்லையா?

//மறுமையில் நமக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும்.//

முஹம்மது சொன்ன மாதிரி எந்த மறுமையும் கிடையாது. உயிர்த்தெழுதலும் கிடையாது. தீர்ப்பு நாளும் கிடையாது. நரகமும் கிடையாது. சொல்லவே வேண்டாம், சாத்தான் என்று எவனும் இல்லை. சொர்க்கம் என்று தனி இடமும் இல்லை. நாம் ஏற்கெனவே சொர்கத்தில்தான் இருக்கிறோம்! அதை நரகமாக அனுபவிப்பதும் அல்லது சொர்க்கமாக அனுபவிப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது!

rafeek said...

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது. அல்குர்ஆன் 22:5 -

ஆனந்த் சாகர் said...

ரபீக்,

குரான் முழுவதையும் நான் படித்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நீங்கள் எடுத்து காட்டிய வசனம் நான் அறியாதது அல்ல. குர்ஆனில் பக்கத்துக்கு பக்கம் இந்த மாதிரியான வசனங்களை நாம் பார்க்கிறோம். அது எல்லாமே சுத்த பொய் என்று எனக்கு இப்பொழுது நன்றாக தெரியும். ஒரு காலத்தில் நான் குரானை நம்பிக்கொண்டு இருந்தேன். அந்த நிலையை தாண்டித்தான் நான் வந்துள்ளேன். என்னை போன்று நீங்கள் எப்பொழுது உண்மையை உணரப்போகிறீர்கள்? நான் கடந்து வந்த பாதை மிக நீண்டது. என்னை போல் காலம் தாழ்த்தாமல் சீக்கிரமே நீங்கள் உண்மையை உணர உங்களுக்கு எனது நல் வாழ்த்துக்கள்.

ஆனந்த் சாகர் said...

மரணம், மறு வாழ்வு குறித்த கேள்விகளுக்கு ஆன்மீக அடிப்படையில் நான் பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். முஸ்லிம்கள் மட்டுமல்ல, எவர் வேண்டுமானாலும் கேள்விகளை கேட்கலாம்.

Unknown said...

OK Anand Sagar . recently my small father told. Allah is god for all peoples. he will punish humans in two ways. first he punish for our good and bad deeds then second its about praying allah

Unknown said...

adhavathu including Muslims all peoples will get punished for their bad deeds athuku konja naal naragathula irnthu than aganumam. then thandanai mudinjathum ne Allah va vanganinathu therinja avargaluku sorgam kadaisia. ila Vera kadavula vananguna avungaluku permanent hell this statement my small father told me

Unknown said...

nan keten oru thadavai naragathula pottuta udal karugi thirumba varamudiathe. he told me unoda yerinja udamba thirupi sari panni apram thandanai athathu permanent nargam kudupanam. ore kolapama irku antha naragam useless pola

ஆனந்த் சாகர் said...

ஜாவீத் நசீம்,

கடவுள் எவர் ஒருவரையும் எந்த ஒரு செயலுக்காகவும் தண்டிப்பதில்லை. கடவுளிடம் தண்டனை என்பதே கிடையாது என்ற நற்செய்தியை நான் உங்களுக்கு கூறுகிறேன். தண்டிப்பது கடவுளின் இயல்பு அல்ல. அது அவரால் முடியாதது. ஏனெனில் அப்படி தண்டிப்பது அவரது இயல்புக்கும், திட்டத்துக்கும் முரணானது, பொருந்தாதது. கடவுள் நம்முடைய கெட்ட செயல்களுக்காக தண்டிப்பார் என்று சொல்வது கடவுளை பற்றிய அறியாமையையே காட்டுகிறது. கடவுள் நம்மை தண்டிப்பதற்கு எந்த காரணமும் இல்லை! கடவுள் யார் என்பதை புரிந்து கொண்டால் நான் சொல்வது உங்களுக்கு சரி என்று தோன்றும். நரகம் என்று ஒரு இடம் இல்லை. ஆகவே உங்கள் சித்தப்பா சொல்வதைக்கேட்டு பயம் கொள்ளாதீர்கள். அவர் குரான்,ஹதீஸ் அடிப்படையில் இப்படி பேசுகிறார். முடிந்தால் அவருக்கு இந்த உண்மையை எடுத்து கூறுங்கள்.

Ant said...

தஜ்ஜால்! Are you there? ...

தஜ்ஜால் said...

Sorry friends! I will come soon

Unknown said...

makka vil nadantha vibathil 107 peru bali. allah tea kudika sendruvittar

Ant said...

What happened to Tajjal?

Anonymous said...

என்ன கடையை மூடிட்டிங்களா.

சின்னப்பையன் சட்டம்

ஆனந்த் சாகர் said...

//என்ன கடையை மூடிட்டிங்களா.

சின்னப்பையன் சட்டம்//

முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முழுதாக படித்துவிட்டு எங்களுடன் விவாதம் புரிய வருவேன் என்று நீங்கள் பல மாதங்களுக்கு முன்பு இந்த தளத்தில் கூறியது நினைவில் இருக்கிறது. இப்பொழுது தயாராக இருக்கிறீர்களா?

Anonymous said...

அண்ணே இன்னும் படிக்கனும்.
நான் தெளிவாகிட்டு வர்றேன்.
கொஞ்சம் டைம் குடுங்க

MatureDurai said...

//குர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ? //
என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை !
//ஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா? //
என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை !
வாழ்த்துக்கள் சகோ !
தங்கள் பணி தொடரட்டும் !

Anonymous said...

Nanbar arya anand avargalukku,

Mannikkavum tamilai angilathil yeluduvadarku.

Maru pirapu unmaiya?