Sunday 31 August 2014

அண்ணன் பீ.ஜை.க்கு ஒரு பகிரங்கக் கடிதம்


அன்பார்ந்த அண்ணன் பீ.ஜை. அவர்களுக்கு உங்களின் தம்பியருள் ஒருவனாகிய லூஸிஃபரின் பகிரங்கக் கடிதம். தாங்கள் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகச் செய்துவரும் காமெடிகளையும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நகைச்சுவை காட்சிகளையும் கண்டு இருவாய்களாலும் சிரித்து மகிழ்பவர்களில் நானும் ஒருவன். இன்னும் பல ஆண்டுகள் இவ்வுலகில் தாங்கள் வாழ்ந்து, தங்களின் பேச்சுகள் மற்றும் செயல்களால் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பீர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். அதற்காகவே தாங்கள் பல ஆண்டுகள் நோய்நொடியற்று வாழவேண்டுமென்று வாழ்த்தி இக்கடிதத்தைத் தொடருகிறேன்.

தங்களின் சமீபத்திய காமெடி ஒன்று பில்லி சூனியம் ஏவல் - மோசடி பற்றியது. உங்களுக்கு சூனியம் வைக்கக் கூறி சவால் விட்டு, அதற்காக ஐம்பது இலட்சம் ரூபாய்களை பரிசளிப்பதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். அதனை அகோரி மணிகண்டன் என்பவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆன்லைன்பிஜே யில் உள்ள அறிவிப்பு இப்படி சொல்கிறது.

பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் மோசடிகளும், கண்கட்டுவித்தைகளுமே தவிர வேரொன்ருமில்லை என்று பிரச்சாரம் செய்ததோடு எனக்கு வைப்பீர்களேயானால் 50 இலட்சம் ரூபாய் பரிசாக வழங்குவதாகவும், அதற்க்கு தேவையான பொருட்களையும் தருவதாக அறிவித்ததையடுத்து திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் தான் சூனியம் வைப்பதாக அறிவித்திருக்கிறார்.[2]

இந்த அறிவிப்பில் ‘கண்கட்டுவித்தைகளுமே’ என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? மந்திரத்தையா? அல்லது மெஸ்மரிஸம்- ஹிப்னாட்டிஸம் என்ற அறிவியல் கலையையா?

மந்திரத்தை நீங்கள் ஏற்கவில்லை. மெஸ்மரிஸம் - ஹிப்னாட்டிஸத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றுதானே பொருள். மெஸ்மரிஸம் மூலமாக மனோவசியம் செய்து ஒருவரை, உண்மையல்லாத கற்பனைகளையும் நம்பவைக்க முடியும் என்பதையும், தற்கொலைக்குக்கூட தூண்ட முடியும் என்பதையும் தாங்கள் மறுக்கிறீர்களா?

இந்த சவாலின் மூலமாக தாங்கள் பாதி நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி என்கிறீர்களா? விளக்குகிறேன்.

இந்திய தத்துவ மரபில் அவைதீக தத்துவங்களான சார்வாகம், பௌத்தம், ஜைனம் அகியனவும், வைதீக தத்துவங்களான சாங்கியம், வைசேஷிகம் ஆகியனவும் இறைவனை, அவனின் இருப்பை மறுக்கும் தத்துவ மரபுகளாக, 2500ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன. நிச்சயமாக இத்தத்துவங்கள் பற்றி, நீங்கள் படித்து பட்டம் பெற்ற அரபுக்கல்லூரிகளிலும் சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.  

இதனை நீங்கள் அறிந்திருந்தால், இத்தத்துவமரபில் வார்த்தெடுத்து வந்த இன்றைய இந்திய நாத்திகர்களைப்போல நீங்களும் ஆகியிருப்பீர்கள். இன்றைய தமிழக நாத்திகர்கள், பில்லி சூனியம் ஏவல் - மோசடி  போன்றவற்றை செய்யும் மந்திரவாதிகள், சாமியார்கள், சோதிடர்கள் மற்றும் குறிசொல்பவர்கள், கடவுளின் பெயரால் அற்புதங்கள் செய்பவர்கள், தாங்களே கடவுளின் அவதாரம் என்று மோடிவித்தை காட்டுபவர்கள், காசேதான் கடவுளடா என்பதை மனதில் வைத்துக்கொண்டு, கடவுள் உண்டு என்று பிரச்சரம் செய்பவர்கள் ஆகிய அனைவரையுமே சவாலுக்கு அழைப்பவர்களாக இருக்கிறார்கள். அலகிட்டுக்கொள்ளுதல், தீமிதித்தல் ஆகியவற்றையும், மேற்சொன்னவர்கள் செய்துகாட்டும் தந்திர வித்தைகளையும் சொய்துகாட்டி மக்களுக்கு அறிவு விளக்கப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். தாங்கள் இப்பொழுதுதான் இவற்றின் முற்பகுதி பிரச்சாரத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். ஆகவேதான் நீங்கள் பாதி நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்று முன்னர் குறிப்பிட்டேன்.

அகோரி மணிகண்டன் பாவம்? எதற்கு ஆசைப்பட்டாரோ? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மரணம் என்பது நிச்சயமான ஒன்று என்பதும், இந்த உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் அழிவது நிச்சயம் என்பதும் யாவரும் அறிந்ததே. இதனை, இன்று நேற்று அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கௌதமபுத்தர் சொல்லிச்சென்றுவிட்டார்.

அதுபோலவே ஒருமனிதனின் மரணம் எப்பொழுது நிகழும் என்பதை இறைவனே அறிவான், மனிதனால் அறிய முடியாது   என்பது இறைவன் மீது நம்பிக்கைகொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு. ஆனால் உங்களுக்கு மட்டும் இந்த இந்தக் கோட்பாடு பொருந்தாது என்பதை உணர்த்திவிட்டீர்கள். எப்படி என்கிறீர்களா? அகோரி மணிகண்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்திலிருந்து  48 நாட்களுக்கு தாங்களுக்கு மரணமே நிகழாது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்திக்கொள்கிறீர்கள்? அல்லாவிடத்திருந்து இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தங்களுக்கு மட்டும் மரணமில்லை என்று தனியாகச் செய்தி எதுவும் வந்ததா? அல்லது அல்லாஹ்விற்கு நிகராக நீங்களும் ஆகிவிட்டீர்களா? மரணத்தை வென்று விட்டீர்களா? அவ்வாறானால் ஷிர்க் (இணை வைத்தல்) என்னும் மாபெரும்பாவத்தை நீங்கள் செய்தவராகிவிடுவீர்கள்.

அதுமட்டுமல்ல, இந்த சவாலின் மூலம் இன்னுமொரு சிக்கலையும் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக் கொண்டு விட்டீர்கள் என்பதை தாங்கள் உணரவில்லையா? ஆம், தாங்களின் எதிரிகளும், மற்றும் தங்களின் மரணத்தை ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் நண்பனாக நடித்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நயவஞ்சகர்களும் இந்த சவாலைத் தங்களுக்குச் சாதகமாகத் பயன்படுத்த முடியும் என்பதைத் தாங்கள் எப்படி உணராமற்போனீர்கள். இந்த கால கட்டத்தில் மேற்கூறப்பட்டவர்களால் சாதாரண மனிதனுக்கு ஏற்படுவதுபோல் தங்களுக்கு மரணம் எற்பட்டாலும் கூட அது பில்லி சூனியத்தால் வந்ததுதான் என்றுகூறி இந்த மூடநம்பிக்கை மக்களை நம்பவைத்துவிட முடியுமே! தமிழகத்தில் சில மடலாயங்களில் அவ்வாறு நிகழ்ந்ததாகப் பேசப்படுவதும் உண்டு. இதையெல்லாம் தாங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா?

மாந்ரீகம், பில்லி-சூனியம் ஆகியவற்றைப் பொய் என்று நிரூபிக்க தாங்கள் எடுதுள்ள முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், இங்கே உங்களுக்கு ஒரு சவாலை நாங்கள் முன்வைக்கிறோம்.

பில்லி சூனியத்தை நிரூபிக்க முடியுமா, என்று சவால்விட்ட பி.ஜைனுல்ஆபிதீன் ஆகிய உங்களுக்கும், பில்லி சூனியத்தை நிரூபித்து காட்டுகிறேன் என்று அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அரியமங்களம் அகோரி மணிகண்டனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இருவருமே விளம்பரத்திற்காக செய்வதாகவே எங்களுக்குப் படுகிறது.

பேய், பூதம், பிசாசு, குட்டிச்சாத்தான் முதலிய இல்லாத தேவதைகளை இருப்பதாக நம்பிக்கொண்டு அவற்றிற்கு மந்திரம் சொல்லி, படையலிட்டு, வணக்க வழிபாடுகளை நடத்தி தங்களின் பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று மணிகண்டன் போன்றவர்கள் நம்புகிறார்கள் அல்லது மற்றவர்களை நம்ப வைக்கிறார்கள்.

நீங்களோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய பேயாக, மிகப்பெரிய பூதமாக, மிகப்பெரிய பிசாசாக, மிகப்பெரிய குட்டிச்சாத்தானாக இறைவனை அல்லாஹ்வை இருப்பதாக நம்பிக்கொண்டு, கற்பனைசெய்து கொண்டு அவற்றிற்கு மந்திரம் சொல்லி, வணக்க வழிபாட்டுத் தொழுகைகளை நடத்தி தங்களின் பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லது மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள். ஆகவே எங்களைப் பொருத்தவரையில் இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கமாகத்தான் இருக்கின்றீர்கள்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு சவாலை நாங்கள் முன்வைக்கிறோம். நீங்கள் மிகச்சிறந்த நம்பிக்கையாளர் என்பதையும், தாங்கள் தொழும் இறைவனே உண்மையானவன் என்பதையும் ஒரு பேச்சுக்காக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இன்னும் ஓராண்டுக்குள் உங்களது பிரார்த்தனையால் இந்தியமக்களை, (அல்லது) தமிழ்நாட்டு மக்களை, (அல்லது) தமிழகத்தின் ஏதேனும் ஒரு மாவட்டத்து மக்களை, அல்லது தலைநகர் சென்னையில் வாழும் மக்களை மட்டுமாவது முழுக்க முழுக்க முஸ்லிம்களாக மாற்றிக்காட்டுங்கள்.

இதை நிகழ்த்திக் காட்டுவீர்களானால், உங்களின் இறைவன் உண்மையானவன் என்பதையும், உங்களின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் உண்மையானவை என்பதையும் ஏற்கிறோம். அவ்வாறு நிகழாவிட்டால் உங்கள் இறைவன் பொய்யானவன் என்பதையும், உங்களின் நம்பிக்கையும் பிரார்த்தனையும் போலியானவை என்பதையம் நீங்கள் ஏற்க வேண்டிவரும். இதையே சவாலாக ஏற்று ஓப்புதல் அளியுங்கள் போதும். இது தவிர வேறு விவாதங்களோ, விதண்டாவாதங்களோ தேவையில்லை.


அகோரி மணிகண்டனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும், தெளிவும் உங்களிடம் எதிர்பார்க்கலாமா? 


லூஸிஃபர், 

Friday 22 August 2014

இஸ்லாமும் கைக்குழந்தைகளுடன் பாலுறவும்


ஜூலை 25,2014 




கைக்குழந்தைகளோடு பாலுறவு கொள்வதை கொமைனி(Khomeini) அனுமதித்தார் என்ற கதையில்  ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டு அண்மையில் திரு.ரிச்சர்ட் டாகின்ஸ்(Mr.Richard Dawkins) ஒரு ட்வீட் அனுப்பினார். இந்த கதையை faithfreedom.org தளத்தில் தான் படித்ததாக யாரோ ஒருவர் கூறினார். அதன் நம்பகத்தன்மையை நான் உறுதி செய்தேன். தஹ்ரீர் உல் வஸிலா(சுதந்திரத்தின் வழிவகைகள்) எனும் தன்னுடைய புத்தகத்தின் 4ஆவது வால்யூமில் கொமைனியால் இந்த ஃபத்வா வழங்கப்படுகிறது. அந்த புத்தகம் அரபியில் எழுதப்பட்டது. இந்த ஃபத்வாவை நான் கீழே வெளியிட்டிருக்கிறேன். பத்தியின்(paragraph) முதல் வரியை காபி பேஸ்ட் செய்து முழு வால்யூமையும் ஆன்லைனில் வெளியிட்டிருக்கிற பல டஜன் தளங்களை நீங்கள் கண்டுகொள்ளலாம். நான் அதை al-shia.org     http://www.al-shia.org/html/ara/books/lib-fqh/tahrir-2/tahrir25.htm  என்ற தளத்திலிருந்து பிரதி எடுத்திருக்கிறேன். 


அது கேள்வி# 12



مسألة 12 :
لا يجوز وطء الزوجة قبل إكمال تسع سنين ، دواما كان النكاح أو منقطعا ، و أما سائر الاستمتاعات كاللمس بشهوة و الضم و التفخيذ فلا بأس بها حتى فى الرضيعة ، و لو وطأها قبل التسع و لم يفضها لم يترتب عليه شى‏ء غير الاثم على الاقوى ، و إن أفضاها بأن جعل مسلكى البول و الحيض واحدا أو مسلكى الحيض و الغائط واحدا حرم عليه وطؤها أبدا لكن على الاحوط فى الصورة الثانية ، و على أي حال لم تخرج عن زوجيته على الاقوى ، فيجري عليها أحكامها من التوارث و حرمة الخامسة و حرمة أختها معها و غيرها ، و يجب عليه نفقتها مادامت حية و إن طلقها بل و إن تزوجت بعد الطلاق على الاحوط ، بل لا يخلو من قوة ، و يجب عليه دية الافضاء ، و هى دية النفس ، فإذا كانت حرة فلها نصف دية الرجل مضافا إلى المهر الذي استحقته بالعقد و الدخول ، و لو دخل بزوجته بعد إكمال التسع فأفضاها لم تحرم عليه و لم تثبت الدية ، و لكن الاحوط الانفاق عليها مادامت حية و إن كان الاقوى عدم الوجوب .

Islamiccentre.com என்ற தளம் கொமைனியின் புத்தகத்தின் பாரசீக மொழிபெயர்ப்பை இங்கே வெளியிட்டிருக்கிறது.


http://www.islamicecenter.com/AHKAAM/tahrirolwasyla_imam_khomeini_jeld_4_01.html
كسيكه زوجه اى كمتر از نه سال دارد وطى او براى وى جايز نيست چه اينكه زوجه دائمى باشد، و چه منقطع ، و اما ساير كام گيريها از قبيل لمس بشهوت و آغوش گرفتن و تفخيذ(4)اشكال ندارد هر چند شيرخواره باشد، و اگر قبل از نه سال او را وطى كند اگر افضاء نكرده باشد بغير از گناه چيزى بر او نيست ، و اگر كرده باشد يعنى مجراى بول و مجراى حيض او را يكى كرده باشد و يا مجراى حيض و غائط او را يكى كرده باشد تا ابد وطى او بر وى حرام مى شود، لكن در صورت دوم حكم بنابر احتياط است و در هر حال بنا بر اقوى بخاطر افضاء از همسرى او بيرون نمى شود در نتيجه همه احكام زوجيت بر او مترتب مى شود يعنى او از شوهرش و شوهرش از او ارث مى برد، و نمى تواند پنجمين زن دائم بگيرد و ازدواجش با خواهر آن زن بر او حرام است و همچنين ساير احكام ، و بر او واجب است مادامى كه آن زنده است مخارجش را بپردازد. هر چند طلاقش داده باشد، بلكه هر چند كه آن زن بعد از طلاق شوهرى ديگرى انتخاب كرده باشد كه بنابر احتياط بايد افضا كننده نفقه او را بدهد، بلكه اين حكم خالى از قوت نيست ، و نيز بر او واجب است ديه افضا را كه ديه قتل است بآن زن بپردازد اگر آن زن آزاد است نصف ديه مرد را با مهريه ايكه معين شده و بخاطر عقد دخول بگردنش آمده به او بدهد، و اگر بعد از تمام شدن نه سال با او جماع كند و او را افضاء نمايد حرام ابدى نمى شود و ديه بگردنش نمى آيد، لكن نزديكتر به احتياط آن است كه مادامى كه آن زن زنده است نفقه اش را بدهد هر چند كه بنا بر اقوى واجب نيست .

கீழே இருப்பது ஆங்கிலத்தில்(தமிழில்) இந்த ஃபத்வாவின் மொழிபெயர்ப்பு :
ஒருவர் தன்னுடைய மனைவியோடு அவள் ஒன்பது வயதை அடைவதற்குமுன்  உடலுறவு கொள்வது, அது நிரந்தர அல்லது தற்காலிக திருமணமாக இருப்பினும், அணுமதிக்கப்படக்கூடியது அல்ல. ஆனால் அந்த மனைவி இன்னும் தாய்பால் கொடுக்கப்படும் குழதையாக இருந்தாலும், காம இச்சையுடன் தொடுவது, கட்டி தழுவுவது, முத்தமிடிவது, தக்ஃபிஸ்/Takhfiz(அவளுடைய தொடைகளில் தன்னுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பது) போன்ற மற்ற எல்லா பாலுறவு இன்பங்களை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஆசனவாய் மூலம் பாலுறவு கொள்வது அனுமதிக்கப்படுகிறது. ஒன்பது வயதுக்கும் குறைவான சிறுமியுடன் உடலுறவு கொள்ளும் ஒரு ஆண் குற்றம் புரிந்திருக்கிறான். ஆனால் அந்த சிறுமி நிரந்தரமாக சேதாராத்திற்கு ஆளாகாமல் இருக்கும்பட்சத்தில் அது உடன்படிக்கையை மீறிய செயல் மட்டுமே. அதாவது, அவளுடைய கர்பக்குழாயும் அவளுடைய பெண்ணுருப்பும் அல்லது அவளின் ஆசனவாயும் அவளின் பெண்ணுருப்பும் ஒன்றாக ஆகிவிடுமாயின், அவலுடன் உடலுறவு கொள்வது அவனுக்கு நிரந்தரமாக ஹராம்(தடை செய்யப்பட்டது) ஆகும். ஆனாலும் இது முன்னெச்செரிக்கைக்காகத்தான். எந்த வகையிலும் அவளை சேதப்படுத்துவதின்மூலம் திருமணம் செல்லாததாக ஆகிவிடுவதில்லை. திருமணத்தின் எல்லா சட்டங்களும் இன்னமும் பொருந்தக்கூடியவையாகவே உள்ளன. அதன் பொருள், அவனிடமிருந்து அவள் சொத்துரிமை பெறுவாள், அவளிடமிருந்து அவன் சொத்துரிமை பெறுவான், அவன் ஐந்தாவதாக ஒரு நிரந்தர மனைவியை மணந்துகொள்ள முடியாது. மேலும் அவளுடைய சகோதரிகளை அவன் மணந்துகொள்ள முடியாது மற்றும் இதர சட்டங்கள்.

அவன் அவளை விவாகரத்து செய்திருந்தபோதிலும் அல்லது அவள் வேறொரு ஆணை மணந்து கொண்டிருந்தபோதிலும் அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய எல்லா செலவுக்கும் கொடுப்பது அவன்மீது கடமையாகும். இன்னும் ரத்த இழப்பீடுபோல், சேதாராத்திற்காக கொடுக்க வேண்டிய கடமைக்கு அவன் உட்படுத்தப்படுவான். அவள் சுதந்திரமான பெண்ணாக இருந்தால், அவளை அனுபவித்ததிற்காக ஒரு ஆணின் ரத்த இழப்பீடு தொகையில் பாதியையும் அவளுடைய வரதட் சினையையும்(மஹர்) அவன் அவளுக்கு கொடுக்க வேண்டும். 

ஒரு ஆண் ஒரு குழந்தையுடன் அவள் ஒன்பது வயதை அடைந்த பிறகு உடலுறவு கொண்டு அவளை சேதப்படுத்திவிட்டால், அவள் அவனுக்கு தடை செய்யப்பட்டவளாகமாட்டாள். அவன் எந்த உடன்படிக்கை மீறலையும் செய்யவில்லை. இருப்பினும், அவள் உயிரோடு இருக்கும்வரை அவளுடைய செலவுகளுக்கு அவன் கொடுப்பது, அப்படி செய்வது அவன்மீது கடமை இல்லை என்றபோதிலும்,நல்லது.


ஒரு குழந்தையின் தொடைகளுக்கு இதையே ஒருவனுடைய ஆணுறுப்பை வைத்து தேய்ப்பதற்கான அரபி வார்த்தை தக்ஃபிஸ்/Takhfiz என்பதாகும். ஜனநாயகம் என்பதற்கான சரியான வார்த்தை அரபியில் எப்படி இல்லையோ அதேபோல் தக்ஃபிஸ் என்பதற்கான சரியான வார்த்தை ஆங்கிலத்தில்(தமிழில்) இல்லை. ஒவ்வொரு சமுதாயமும் தனக்கு தேவையான வார்த்தைகளை கண்டுபிடித்துக்கொள்கிறது. உதாரனத்கிற்கு, இநுட் இனத்தவர்கள் (Inuits) பனி என்பதற்கு 15 வார்த்தைகளை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே இந்த இஸ்லாமிய வழக்கத்திற்கு "தொடை வேலை"(Thighing) போன்ற  ஏதாவது ஒரு வார்த்தையை நாம் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டும் அல்லது வெறுமனே அரபி வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்.

அரபியிலிருந்து இந்த பதத்தை மொழிபெயர்க்க எனக்கு உதவுமாறு என்னுடைய நண்பர் திரு.சாம் சாலமனை நான் கேட்டுக்கொண்டேன். சாம் முன்னாள் முஸ்லிம் நீதிபதியாக இருந்தவர். அவர் ஷரியத்தை 15 வருடங்கள் பயின்றவர், இஸ்லாத்தை மிக நன்றாக அறிந்தவர். தக்ஃபிஸ் என்பது கொமைனியுடைய அல்லது ஷியா  இஸ்லாமின் கண்டுபிடிப்பு அல்ல. அது அனைத்து முஸ்லிம்களாலும், ஷியாக்கள், சுன்னிகள் ஆகியோர்களால் ஒரேமாதிரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய நீதியியலின் ஒரு அங்கம் என்று அவர் எனக்கு கூறினார்.

ஆயிஷாவோடு மட்டுமில்லாமல் மற்ற மூன்று சின்னஞ்சிறுமிகளோடுகூட  பாலுறவுகொள்ள முஹம்மது முயன்றார், ஆனால் எல்லா மூன்று சிறுமிகளும் அலறி சத்தம் போட்டனர், தன்னுடைய பெயரை காப்பாற்றிக்கொள்ள அவர்களை அவர் போக விட்டுவிட்டார் என்பதும் சொல்லப்பட வேண்டும். மேலும் அவர் நடக்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின்மேல் காம இச்சை கொண்டு அதன் தாயிடம், அவள் வளரும்போது நான் இன்னும் உயிரோடு இருந்தால் அவளை மணந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். அந்த குழந்தையின் அதிர்ஷ்டமாக அவள் வளருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இந்த கதைகளின் விவரங்கள் “The Life of Muhammad under the light of Reason”  என்ற என்னுடைய வெளிவரவிருக்கும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.


மூலம் : அலி சினா (Ali Sina)
மொழிபெயர்ப்பு : ஆனந்த் சாகர் 

Thursday 7 August 2014

பி.ஜெவின் மோடி மஸ்தான் வித்தை!!


நமது இறையில்லா இஸ்லாம் வாசகர்களுக்கு தெரியும் அண்ணன் பீ.ஜெ நல்லா காமடி பண்ணுவாருனு. ஆனா யாருக்கும் தெரியாது, அண்ணன் வித்தையெல்தலாம் காட்டுவாருனு. அதனால் தான் இந்த முறை மூமீன்களுக்கு அவரே முன் வந்து வித்தகாட்ட முடிவு எடுத்துட்டார்.என்ன வித்தைன்னு கேட்கிறிங்களா?இந்த வருடம் ரமலான் மாதம் நோம்பு 15ல் எங்க ஊர் சுவற்றில் எல்லாம் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அண்ணன் பி.ஜெ ஒரு பகிரங்க சவால் விட்டு இருந்தார். யாராவது அண்ணனுக்கு பில்லி சூனியம் வைத்து அண்ணனை மண்ண கவ்வ வைத்தால் அவர்களுக்கு 50 லட்சம் பணம் (ஹவால பணம் இல்லைங்க ஹலாலான பணம். இரண்டும் ஒன்னுதானே என்கிறீர்களா?) பரிசாக தரப்படும் என்று.

இதை பார்த்த உடன் எனக்கு நல்ல கோவம் வந்தது. ஏன் என்றால், எங்கே முஹம்மது நபிக்கு ஒரு யூதபொண்ணு ஆட்டு தொடையில் விசத்தை தடவி கொடுத்து அந்த விசம் அவரோட தொண்டையில் சிக்கி சிக்கல் ஏற்படுத்தியதே அதப் போல் நம்ம தமிழ்நாடு நபி பி.ஜெக்கு யாராவது எதாவது செய்து அதனால் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனால் தமிழ்நாடு மூமீன்கள் மானத்தை யாரு காப்பாத்துறது. ஏன் இவருக்கு இந்த வீண் வேலை என்று எல்லாம் கோபபட்டேன் .ஆனால் அப்பொழுது தான் அல்லாவுடைய வசனம் நினைவுக்கு வந்தது…….

’நன்மையை ஏவி தீமையை தடுங்கள்’ என்று இந்த வசனத்துக்காக தான் பீ.ஜெ இந்த வேலையை செய்து இருப்பார் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

01/08/2014 அன்று முகபுத்தகத்தில் உளாவிக்கொண்டு இருக்கும் போது ஒரு நண்பர், பீ.ஜெக்கு சூனியம் வைக்க திருச்சியில் அகோரி மணிக்கண்டன் என்பவர் ஒப்புக்கொண்டார் எனவும் இருவருக்கும் இடையில் ஒரு 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் கையொழுத்து ஆகிருக்கின்றது எனவும் அந்த ஒப்பந்த்ததில் நகலை எனக்கு அனுப்பி இருந்தார்.



அந்த ஒப்பந்ததில் நான்கு நிபந்தனைகள் இருந்தன.





இந்த ஒப்பந்தம் வெளிவந்ததிலிருந்து முகபுத்தகத்தில் பீ.ஜெவின் விசிலடிச்சான் குஞ்சுகள்,  மூஸா நபிக்கு பிறகு, பீ.ஜெ தான் சூனியம் இல்லை என்று நிரூபிக்க போகிறார் என சகட்டு மேனிக்கு தங்கள் சுவர்களில் கிறுக்கிதள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள்(ஆமா... சூனியம் இல்லைன்னு மூஸா எப்போ நிரூபிச்சாரு?).  



இஸ்லாத்தில் தற்கொலைக்கு அனுமதியுண்டா என்று பீஜேவின் எதிர் கோஷ்டியினர் தெருவில்மட்டும் போஸ்டர் ஒட்டாதா குறையாக முகநூல்நூல் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி, இது பீ.ஜெவின் மடதனமான ஒப்பந்தம் அவர் டப்பா டான்ஸ் ஆடபோகின்றார் எனவும் வாதிடுகின்றனர்.



இதில் இருக்கும் முக்கியமான செய்தி என்னவெனில், இது பீ.ஜெ அண்ணனுடைய விளம்பரயுக்தி. முஹம்மது நபியை போல எல்லோரும் பீ.ஜெவை பற்றி பேசிக்கொண்டு இருக்க வேண்டும்; முக்கியமாக தேர்தலின்போது இறங்கிய தனது ரேட்டிங்கை என்ன விலை கொடுத்தாவது தேற்றிட வேண்டுமென்பது அவரோட அவா.

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவாங்க, ”கல்யாண வீடுன்னா அவன்தான் மாப்பிள்ளை! எழவு விழுந்தா அவன்தான் பொணம்!”  பீஜே அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது அதுதான் நினைவுக்கு வருது!.

இந்த விளம்பரத்தின் உச்சப்பட்ச நிகழ்வு எதுவாக இருக்கும் என்றால், 48 நாட்கள் கழித்தும் அண்ணன் பி.ஜெ தற்கொலை செய்துக்கொள்ளாமல் உயிரோடு இருப்பார்; அகோரி மணிக்கண்டனுடைய சூனியம் பலிக்காமல் போகும். அகோரி மணிகண்டண் இஸ்லாத்தை தழுவுவார்; அதன் மூலம் ஒரு சூனியகாரணையே இஸ்லாத்தை ஏற்க வைத்த பி.ஜெ! என்று தெருக்கள் தோறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மண்ணடி மகா சன்னிதானத்தின் கல்லா நிரப்படும்.

இந்த வித்தையை பீ.ஜெ செய்ய என்ன காரணம் இருக்கும் என வினா எழும்பும். பெரியார்தாசனை அப்துல்லாவாக்கியவர்களுக்கும் தன்னை டக்கால்டி என்று சொல்பவர்களுக்கு கொடுக்கின்ற பதில், அகோரி மணிகண்டனை  பிலாலாக மாற வைப்பது. இது மலிவான விளம்பரயுத்தியே தவிர வேற ஒரு வெங்காயமும் இல்லை. இந்த ஒப்பந்ததால் வரும் அனைத்து புகழும் மண்ணடி மகா சன்னிதானம் அண்ணன் பீ.ஜெவுக்கே!!!



சிவப்புக்குதிரை



பின்குறிப்பு:

இப்படி அசால்டா... 50 லட்ச ரூபாயை பந்தையம் கட்றாருன்னா அண்ணன் பீஜேகிட்ட இன்னும் எவ்வளவு பணம் இருக்கும்?

ஒருவேள.. தன்னோட மதவியாபரத்தை காண்பிச்சு, பேங்கில லோன் ஏதாவது வாங்கியிருப்பாரோ?

இதுக்குக்கூட லோன் கிடைக்குமா?

உண்மையச் சொல்லனும்னா பீஜெ அண்ணன் விட்ட சவால் அகோரி மனிகண்டன்கிட்ட இல்ல.. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு அல்லாஹ்மட்டுமே அறிவான்னு சொல்லற முஃமிகளுக்கு மத்தியில 48 நாள் தனக்கு எதுவும் நடக்காதுன்னு சவால்விட்டுச் சொல்லியிருக்கார்.  பீஜெ அண்ணன் நடத்தற போராட்டம் சூனியத்திற்கு எதிரானததில்ல அல்லாஹ்விற்கும் எதிராது!

என்னமோ போட... மாதவா...!

எல்லாம் அந்த அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!

Monday 4 August 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -8

நம்முடைய முஹம்மதிற்கு இருந்த வேறொரு பிரச்சினை, ஈஸாவை முன்னிலைப்படுத்துவதை விரும்பவில்லை; அதனால் அவருக்கு எந்தப் பலனுமில்லை. எனவே, ஈஸா மட்டுமல்ல, அல்லாஹ்விற்கு மகனாக எவருமில்லை என்றார். வாரிசுகளால் அரசியலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குழப்பங்களை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

இதுமட்டும் போதாதே?

ஈஸாவை மட்டுமல்ல பைபிளின் தீர்க்கதரிகள் அனைவரையும் பின்னுக்குத்தள்ள என்ன வழி?

அதற்குத்தானே அல்லாஹ் இருக்கிறான், உடனே ஒரு வஹியை இறக்குவதைத் தவிர அவனுக்கு வேறு என்ன வேலை?

குர்ஆன் 3:81
"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

இவ்வசனத்ற்கு அண்ணன் பீஜே தரும் விளக்கத்திலிருந்து சில பகுதிகளைமட்டும் பார்ப்போம். (முழுவதையும் படிக்க.)

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி
'நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி நபியாக வருவார்கள். அவ்வாறு அவர்கள் வரும் போது அனைவரும் அவர்களை ஏற்று உதவ வேண்டும்' என்பதுதான் இங்கே (திருக்குர்ஆன் 3:81) கூறப்படும் உடன்படிக்கை என்பது பெரும்பாலான அறிஞர்களின் விளக்கம்.
ஆனால் இவ்வசனத்தைக் கவனமாகப் பார்க்கும் போது இது யாரைப்பற்றியும் முன்னறிவிப்புச் செய்யவில்லை என்பதே உண்மையாகும். ....
நாம் அண்ணன் பீஜே தரும் விளக்கத்தை விரிவாக ஆய்வு செய்யத் தேவையில்லை. அண்ணனின் விளக்கத்திலுள்ள முரண்பாடுகளை அறிய, குர்ஆன் 3:81-ற்குப் பின்னர் அடுத்தடுத்துவரும் வசனங்களைக் கவனித்தால் போதுமானது.

3:82  இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.
3:83 அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.96
3:84 "அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், மற்றும் (அவர்களின்) சந்ததிகளுக்கு அருளப்பட்டதையும், மூஸா, ஈஸா, மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுவீராக!
3:85 இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.
3:86 தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால்,

முன்சென்ற அல்லாஹ்வின் தூதர்களே அடுத்துவரும், வரயிருக்கும் தூதரின் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொண்டு, உதவுவதாக வாக்களித்துள்ளனர். முன்சென்ற தூதர்களைப் பின்பற்றுவதாகக் கூறும் யூத, கிறிஸ்தவர்களே தற்பொழுது வந்திருக்கும் இத்தூதரைக் கேள்விகள் கேட்டு தொல்லை கொடுக்காமல் நம்பித் தொலையுங்கள் என்பதுதான்.  முஹம்மதின் வருகையைப்பற்றி ஈஸா செய்த முன்னறிவிப்பு செய்தாராம்!

குர்ஆன் 61:6
"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதர். எனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்'' என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது "இது தெளிவான சூனியம்'' எனக் கூறினர்.

குர்ஆன் 3:81-ன் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் முஹம்மதின் காலத்திற்கு முன்பே, அவர் உட்பட அனைத்து நபிமார்களின் முன்னிலை எடுக்கப்பட்ட ஒப்பந்தம். அனைத்து நபிமார்களும் எந்தக்காலத்தில் ஒன்றினைந்து ஒரேகாலத்தில் இருந்தனர்?

இத்தொடரின் ஆறாவது பகுதியில் மௌலானா அஸீஸ் அவர்கள் எழுதிய ”தப்ஸீர் ஆயத் அந்நூர்” என்ற நூலிலிருந்து சில பகுதிகளை கொடுத்திருந்தேன்; அதிலிருந்து மீண்டும்...







இயேசுவின் உருவாக்கத்தில் மரியாளின் பங்கு எதுமில்லை என்ற கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை முன்னமே குறிப்பிட்டிருந்தேன். நாங்கள், அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களல்ல என்கின்றனர் இஸ்லாமியர்கள்




தன்னை மிக உயர்ந்த பிறவியாக முஹம்மது கற்பனை செய்து கொண்டார். இவ்வாறாக முஹம்மது தன்னை முன்னிலைபடுத்தி, தனது தற்காதல் கோளாறு மனநிலைக்குத் தேவையானவற்றை அல்லாஹ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மற்றவர்களிடமிருந்து வலிந்துபெற்றுக் கொண்டார். முன்னுக்குப் பின் முரணாக ஏதையாவது உளறி தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்து கொண்டார்.

கிறிஸ்தவத்திற்கும் முஹம்மதிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு, முஹம்மதின் மனைவி கதீஜா தனது கணவருக்கு ஹீரா குகையில் ஏற்பட்ட வினோத அனுபவத்திற்கு விளக்கம் அறிந்து கொள்ள நாடியது ஒரு கிறிஸ்தவரைத்தான். ஹீரா குகையில் முஹம்மதிடம் தகாதமுறையில் நடந்து கொண்டது ஜிப்ரீல்தான் என்று பார்வையற்ற கிறிஸ்தவர் கூறியதை முஹம்மதுவும் கதீஜாவும் அப்படியே நம்பியிருக்கின்றார் என்பதே இதற்கு மிகப்பெரும் ஆதாரம்.

நாம் முன்பே பலமுறை பார்த்த ஹதீஸ்தான் இருந்தாலும், நமது முஃமின்கள் ஆதாரம் இருக்கிறதா? என்று அலறுவார்கள். அதற்காக..

புகாரி ஹதீஸ் : 0003
ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.
...பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள். -வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ்  நாடிய அளவிற்கு ஹீப்ரு  மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார்....

கட்டிப்பிடி அனுபவத்திற்கு, வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா விளக்கம் கொடுக்கும்வரை, முஹம்மது மற்றும் கதீஜா குடும்பத்தினர் கிறிஸ்தவத்தை சரியான பாதையாக நினைத்திருக் வேண்டும். அதன் பின்னர் கிறிஸ்தவம் திரிக்கப்பட்ட மார்க்கமாக அறியப்பட்டிருக்கலாம். எனவே, கிறிஸ்தவம் என்றால், கிலோ என்ன விலையென்று கேட்கும் நிலையில் நம்முடைய முஹம்மது இருந்ததில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

”ரூஹுல் குத்தூஸ்” எங்கிருந்து வந்தது?

யூத, கிறிஸ்தவ நம்பிக்கைகளில் கூறப்படுக் கதைகளை, கருத்துக்களை அரைகுறையாக அறிந்து கொண்ட முஹம்மது, என்ன சொல்கிறோம் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் அப்படியே கூறியுள்ளார். அவரது அறியாமையினால் ”ரூஹுல் குத்தூஸ்” நுழைந்துவிட்டது. முஹம்மதின் உளறலில் இருந்த இந்தக் குழப்பத்தை, யூதர்கள் மிகச் சரியாக இனம் கண்டனர். கிறிஸ்தவத்தில் உள்ளதைப் போன்ற ‘பரிசுத்த ஆவி’ என்ற நம்பிக்கை இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யூதர்கள் தங்களது கடவுள் யாவே-வை பரிசுத்த ஆவி என்று பொருள்படும் “Ruaḥ ha-Ḳodesh” என்று அழைப்பர். ஆனால் முஹம்மதின் போதனைகளைப் பொறுத்தவரையில் ”ரூஹுல் குத்தூஸ் - பரிசுத்த ஆவி’ என்பது நிச்சயமாக அல்லாஹ் அல்ல! குழம்பிய யூதர்கள் முஹம்மதிடம் தங்களது சந்தேகத்தை முன் வைத்தனர்.

குர்ஆன் 17:85
(முஹம்மதே!) உயிரைப்(l-rūḥi) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக!

புகாரி7456
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) 'இவரிடம் 'உயிர்' (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!' என்றார். இன்னொருவர், 'இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)' என்றார்.
பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் 'ரூஹ்' பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், '(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) வசனத்தைக் கூறினார்கள். அப்போது அந்த யூதர்கள் ஒருவர் மற்றவரிடம் 'அவரிடம் கேட்க வேண்டாமென உங்களிடம் முன்பே கூறினோமே!' என்றார்கள்.

எதில் ஒற்றுமை இருக்கிறதோ இல்லையோ ’களிமண் தியரியை’ கூறுவதில் ஆப்பிரஹாமிய மதங்கள் ஒன்றிணைந்து விடுகின்றன. முஹம்மதுவும் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாகக் கூறவில்லை. எனவே யூதர்கள் மனித உடலில் இருக்கும் ‘உயிரை’ப்பற்றி முஹம்மதிடம் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியானல் யூதர்கள் குறிப்பிட்டது சந்தேகத்திற்கு இடமின்றி ’ரூஹுல் குத்தூஸை’த்தான்! முஹம்மது, யூத-கிறிஸ்த நம்பிக்கைகளுக்கிடையே தானும் குழம்பி அவரது அடிபொடிகளையும் குழப்பிவிட்டார். யூதர்களின் மீது முஹம்மது கொண்ட வெறித்தனமான கோபத்திற்கு இதைப் போன்ற கேள்விகளும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். குழப்பம் அத்துடன் நிற்காமல் முல்லாக்களை வந்தடைந்தது. அவர்கள் தங்களது பங்கிற்கு, யூதர்களின் நியாயமான இந்தக் கேள்வியை மிகத்திறமையாகத் திரித்து, ஜிப்ரீலுக்கு ‘ரூஹுல் குத்தூஸ்’ என்ற கூடுதல் பொறுப்பையும் வழங்கிவிட்டனர்.  அண்ணன் பீஜே இங்கு குறிப்பிடப்படும் ’ரூஹ்’ என்பதை வானவர் என்பதாக விளக்கமளிக்கிறார். இதனால் விளையும் குழப்பங்களை சுருக்கமாகக் கவனித்து விடுவோம்.

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
குர்ஆன் 66:12
இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை(رُوحِنَا-rūḥinā) ஊதினோம்...

 ‘நமது ரூஹ்’ என்பது ஜிப்ரீலைக் குறிப்பிடும் என்றால், களிமண் பொம்மையாக இருந்த ஆதாமின் உடலில் (15:29) ‘..எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது..’ (38:72)...எனது உயிரை அவரிடம் நான் ஊதும்... என்று திரும்பத் திரும்பக் கூறி அல்லாஹ் ஊதியதும், இன்று ஒவ்வொரு கருவிலும் (32:9) ‘...தனது உயிரை அவனிடம் ஊதினான்’ என்று கூறுவதும் ஜிப்ரீல் என்ற வானவரைத்தான் ஊதினான் என்று பொருள் கொள்ளலாம்.

குர்ஆனுக்கு நீங்கள் எப்படி விளக்கமளித்தாலும் மறுபடியும் மறுபடியும் அது பல்லை இளித்துக்கொண்டு தலையை சொறிந்து கொண்டு அசடுவழிந்தவாறே நிற்கும். அதன் தனித்துவமே அதுதான்!

எனவே,
4:171. வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையாவார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! மூவர் எனக் கூறாதீர்கள்!..

அல்லாஹ், ஈஸாவை மட்டுமே தனது உயிரென்று வர்ணனை செய்கிறான். ஆனால் ஆதாமையோ அல்லது அல்லாஹ் உயிரை(ஜிப்ரீலை?) ஊதுவதாகக் கூறும் ஒவ்வொரு கருப்பையினுள் இருக்கும் சதைக்கட்டியையோ, அது தனது உயிராக இருப்பதாக அழைத்து வர்ணனை செய்ததில்லை. இதுதான் ஈஸாவிற்கும் மற்றவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு. தனது உயிரை((ஜிப்ரீலை?)  ஊதினான் என்பதற்கும், தனது உயிராக இருக்கிறார் என்று பிரகனப்படுத்துவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. இதன் அடிப்படையில் நோக்கினாலும் ஈஸா அல்லாஹ்வின் மகனே!

பொதுவாகவே மனிதர்களுக்குத் தெய்வீகச் சாயம் பூவதென்பது உலகம் முழுக்க தொன்றுதொட்டு இருக்கும் வழக்கம்தான். தங்களுக்குப் பிடித்தமானவர்களை/கதாபாத்திரங்களை தெய்வநிலைக்கு உயர்த்தும் செயல்களை இன்றும் நாம் காணலாம்.  கிராமத்து காவல் தெய்வங்கள், பக்கத்து மாநிலத்திலிருக்கும் ஐயப்பன், இராமாயண, மகாபாரத புனைவுகள் என்று கிரேக்க புராணக்கதைகள்வரை நிறைய உதாரணங்களைக் கூறமுடியும். ஈஸாவின் கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்!


தஜ்ஜால்