Saturday 21 December 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -30

விதியாமதியா?


உலகில் தொடர்ந்து கெண்டிருக்கும் குழப்பங்களுக்கு, சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நாடு, மதம், மொழி, நிறம், இனம், பொருளாதாரம் எனவும் இவற்றிற்குள் பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. இந்த பிரிவினைகள் ஏன்?   இவ்வினாவிற்கு

(ஆரம்பத்தில்) மனிதர்கள் அனைவரும் ஈமானுள்ள) ஓரே சமுதாயத்தினராகவே இருந்தனர். பின்னர் காலப் போக்கில் தமக்கிடையே வேறுபட்டு பிரிந்தனர்; அவர்களை நெறிப்படுத்த) பிறகு அல்லாஹ், நபிமார்களை நன்மாராயம் கூறுவோராகவும், அச்சமூட்டி எச்சரிப்போராகவும் (அவர்களின்பால்) அனுப்பிவைத்தான். மேலும் அம்மனிதர்களிடையே எதில் அவர்கள் கருத்து மாற்றங் கொண்டார்களோ அதில் தீர்ப்பு செய்வதற்காக சத்தியத்தைக் கொண்டுள்ள வேதங்களையும் அவர்களுடன் இறக்கிவைத்தான்; (அவ்வாறு) தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்த பிறகும், தங்களுக்கிடையே இருந்த பொறாமையினால் அ(வ்வேதத்)தைக் கொடுக்கப்பட்டவர்களேயன்றி (வேற எவரும்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை; ஆயினும் சத்தியத்தில் நின்றும் எதில் அவர்கள் மாறுட்டிருந்தனரோ அ(ந்த சத்தயத்)தின் பால் முஃமின்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அருளைக் கொண்டு நேர்வழி காட்டினான். அல்லாஹ் தான் நாடியவரை நேரான வழியில் செலுத்துகிறான்.
(குர்ஆன் 2:213)

 மனிதன் பல சமுதாயங்களாக பிரிந்ததற்கு அவனது பொறாமை குணம் மட்டுமே காரணம். எனவே இறுதியாக மீண்டும் தூதுவர்களையும், வேதங்களையும் மனிதர்களிடையே அனுப்பி, பிளவுபட்ட சமுதாயத்தை இணைக்க நாடுவதாக கூறுகிறான். இங்கு அல்லாஹ் குறிப்பிடும் சமுதாயம்முஹம்மது நபிக்கு கட்டுப்பட்டு வாழும் கூட்டத்தையே குறிக்கிறது.

தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் வேதத்தைக்கொண்டும், இன்னும் மனிதர்களுக்கு அவர்களுக்காக இறக்கி வைக்கப்பட்டதை நீர் விளக்குவதற்காக திக்ரை உம்பால் இறக்கி வைத்தோம். அவர்கள் சிந்திப்பவர்களாகி விடலாம்.
(குர்ஆன் 16:44)

மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும், முஃமீனான கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்டியாகவும், ரஹ்மத்தாக இருப்பதற்காக தவிர வேதத்தை உம்மீது நாம் இறக்கவில்லை.
(குர்ஆன் 16:64)

அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்தக் குர்ஆனில் திட்டமாக நாம் தெளிவாக்கியுள்ளோம்…
(குர்ஆன் 17:41)

(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை…
(குர்ஆன் 2:272)

(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பநதமும் இல்லை; …
(குர்ஆன் 2:256)

இதில் எவ்வித நிர்பந்தமும் இல்லையென மென்மையாகக் கூறிய அல்லாஹ், வழியைத் தேர்தெடுக்கும்  வாய்ப்பை மனிதனுக்கு வழங்கி, பொறுப்பிலிருந்து விலகியவன், குர்ஆனின் மற்றொரு பகுதியில் கூறுவதை கவனியுங்கள்,

நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவட்டது எவர் வழிகெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்கிறாரோ அவர் (அறுந்து) போகாத உள்ள கயிற்றின் உறுதியான முடிச்சை திட்டமாக பற்றி பிடித்துக் கொண்டார்…
(குர்ஆன் 2:256)

அன்றியும் எவரேனும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை தேடுவாரானால் அவரிடமிருந்து அது ஏற்கப்படவே மாட்டாது; இன்னும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(குர்ஆன் 3:85)

இஸ்லாம் மட்டுமே நேர்வழி. எனவே, அதைத் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கூறுகிறான். அவ்வாறு ஒரு மனிதன் நேரான வழியைத் தேர்ந்தெடுப்பதும்  தன்னுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் என வலியுறுத்தி மீண்டும் குழப்ப நாயனாகிறான். குர்ஆனில் பல வசனங்களில் "அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்" என்ற வாக்கியத்துடன் முடிவுறுவதை எல்லோரும் அறிந்த ஒன்று. எனவே மனிதன் நேர்வழியில் செல்வது அல்லாஹ்வின் நாட்டத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டது.

அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்.
(குர்ஆன் 2:272)

அல்லாஹ் நாடினால் அவர்களை நேர்வழியின் மீது ஒன்று சேர்த்து விடுவான் ஆகையால் அறியாதவர்களில் உள்ளவராக திண்ணமாக நீர்ஆகிவிடவேண்டாம்.
(குர்ஆன் 6:35)

தான் நாடுபவரை தன் ரஹ்மத்தில் புகச் செய்வான்.
(குர்ஆன் 76:31)

நிச்சயமாக எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது அவர்களுக்கு நீர் எச்சரிக்காவிட்டாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமமேயாகும் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 2:6)

வழியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்; - அல்லாஹ் எவரை வழி தவறச் செய்கிறானோ அவரை நேர்வழியில் செலுத்துபவர் எவருமில்லை.
(குர்ஆன் 13:33)

அல்லாஹ் தான் நாடியவரை வழி தவறச் செய்கிறான்; இன்னும் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்…
(குர்ஆன் 14:04)

அல்லாஹ் நாடினாலன்றி (எதையும்) நீங்கள் நாடமாட்டீர்கள்.
(குர்ஆன் 76:30)

உம்முடைய ரப்பு நாடினால் மனிதர்களை ஒரே சமுதாயத்தவராய் அவன் ஆக்கியிருப்பான் (அவன் அப்படி நாடாமையினால்) அவர்கள் கருத்து வேறுபாடு உள்ளவர்களாகவே இருந்து வருவார்கள்.
(குர்ஆன் 11:118)

வழி தவறச் செய்தது மட்டுமல்லாமல், மனிதன் நேர்வழியை அடைவதும் அல்லாஹ்வினால் தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுக்கப்பட்ட மனிதனை திரும்ப நேர்வழியில் செலுத்த யாராலும் இயலாது. அல்லாஹ்வின்  இந்த நிலையை மெய்பிக்க மேலும் சில குர்ஆன் வசனங்களை காண்போம்.

அல்லாஹ் அவர்களின் இதயங்களின் மீதும் அவர்களின் செவிப்புலன்களின் மீதும் முத்திரை வைத்து விட்டான் இன்னும் அவர்களின் பார்வைகளின் மீது திரையிருக்கிறது. மேலும் மகத்தான வேதனையுண்டு.
(குர்ஆன் 2:7)

அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும், அவர்களுக்கு பின்னால்  ஒரு தடுப்பையும் நாம் ஏற்படுத்தி விட்டோம்; (இவ்வாறே) நாம் அவர்களை மூடி விட்டோம், எனவே அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(குர்ஆன் 36: 9)

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையட்டு விட்டான்.
(குர்ஆன் 47:16)

அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் அவர்களை சபித்து அவர்களை செவிடாக்கி அவர்களுடைய பார்வைகளையும் குருடாகவும் ஆக்கிவிட்டான்.
(குர்ஆன் 47:23)

ஆனால்  அல்லாஹ்வால், தடுக்கப்பட்டவர்  -களையும், முடமாக்கியவர்களையும் இஸ்லாமெனும் பாதையில் மனிதர்களை  ஒன்றினைய அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது. "நீர் அச்சமூட்டி எச்சரிப்பவர்" என அல்லாஹ்வினால் வர்ணிக்கப்பட்ட தன் தூதரிடம், தான் கூறும் வழியை அவ்வாறு பின்பற்ற இயலாத, தன்னால் முடமாக்கப்பட்டவர்களிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்ள உத்தரவிடுகிறான்.

ஃபித்னா நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்காகே ஆகும்வரை அவர்களிடம் போர் புரியுங்கள்.
(குர்ஆன் 2:193)

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வேத வசனங்களை நிராகரித்திட்டார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் புகச் செய்வோம்; (அதில்) அவர்களுடை தோல்கள் கரிந்து விடும் போதெல்லாம் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அவையல்லா வேறு தோல்களை நாம் அவர்களுக்கு மாற்றிடுவோம்.
(குர்ஆன் 4:56)

உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்துங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்குமேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும் வெட்டுங்கள்…
(குர்ஆன் 8:12)

எந்த நபிக்கும் (விஷமங்களை தடுக்க) பூமியில் இரத்தத்தை ஓட்டுகின்றவரை (கொல்லாமல்) சிறைப்பிடித்து அவரிடத்தில் இருப்பது தகுமல்ல; உலகத்தின் (சொற்ப) நன்மையை விரும்புகிறீர்கள்.
(குர்ஆன் 8:67)

(போரிடுதல் தடைசெய்யப்பட்ட) புனிதமான மாதங்கள் சென்று விட்டால் முஷ்ரிக்கு (இணைவைப்பவர்)களை - அவர்களை நீங்கள் கண்ட இடங்களில் வெட்டுங்கள்; அவர்களைப் பிடியுங்கள், அவர்களை முற்றுகையிடுங்கள் (அவர்கள்நடமாடும் பாதைகளையெல்லாம் அவர்களுக்காக நீங்கள் நோட்டமிட்டவர்களாக உட்கார்ந்திருங்கள்.
(குர்ஆன் 22:9)

இவ்வாறாக அல்லாஹ்வினால் நேர்வழியிலிருந்து தடுக்கப்பட்டவர்கள் யார்? ஏன் அவ்வாறு தடுக்கப்பட்டார்கள்?

அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிருகங்களில் கெட்டது (அல்லாஹ்வை) நிராகரித்தார்களே அத்தகையோராவர் எனவே அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 8:55)

எனவே எவனொருவன்-அவனுடைய தீய செயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை) அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்.
(குர்ஆன் 35:8)

எந்த ஒரு மனிதனும் சுயமாக செயல்பட எவ்விதமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அனைத்தும் அல்லாஹ் இறுதி  செய்த விதிப்படியே நடக்கிறது.

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
(குர்ஆன் 57:22)

அவர்களில் பெரும்பாலானவர்களின் மீது (விதியின்) சொல் திட்டமாக உறுதியாகி விட்டது எனவே அவர்கள்  ஈமான்  கொள்ளமாட்டார்கள்.
(குர்ஆன் 36:7)

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் விதியுடன்(கத்ர்) படைத்திருக்கின்றோம்.
(குர்ஆன் 54:49)

புஹாரி ஹதீஸ்  3332      
உண்மையே  பேசுபவரும்உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாட்களில்) அந்தக் கரு (அட்டைப்போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக மாறிவிடுகின்றது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாட்களில் மெல்லப் பட்டசக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறி விடுகின்றது. பிறகு அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான் (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுத்தப்படுகின்றது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகின்றது. இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் விதியின் வலிமையைக் கூறுகிறது. பகுத்தறிவு  ஏற்கவில்லையென்றாலும் கட்டயமாக நம்பியே தீரவேண்டும். விதியை மறுப்பவர்களை  கடுமையாக எச்சரிக்கும் ஹதீஸ் ஒன்றைப்  பார்ப்போம்.

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01
…(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் மஅபத் அல் ஜுஹனீ என்பவரே விதியை(நம்புவது)ப் பற்றி மாற்றுக் கருத்துத் தெரிவித்த முதலாமவராவார். அக்கால கட்டத்தில் (யஹ்யா பின் யஅமர் ஆகிய) நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ(ரஹ்) அவர்களும் 'ஹஜ்' அல்லது 'உம்ரா'ச் செய்வதற்காக(ப்புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்களது (மறுதலிப்புக்) கூற்றைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சூழ்ந்து கொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் இடப்பக்கத்திலும் இருந்துக் கொண்டோம். பேச வேண்டிய பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டு விடுவார் என எண்ணி நானே பேசினேன்: "அபூ அப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்துக் கல்வி பயில்கின்றனர்" என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, "ஆனால், அவர்கள் 'விதி' என்று ஏதுமில்லை எனவும், நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலாகத்தான் நிகழ்கின்றன என்றும் பேசத் துணிந்து விட்டனர்" என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நான் விலகி விட்டவனாவேன்; என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்களாவர் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள். (இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார் மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கைக் கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றுக் கூறி விடுங்கள்)".
பிறகு அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "என் தந்தை உமர் பின் அல் கத்தாப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:…

குர்ஆனும் இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறது. உலகின் ஒவ்வொரு நிகழ்வும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. விதியை உண்மையான முஸ்லீம்களால் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது. அது ஈமானின் ஒரு பகுதியாகும்

முஸ்லீம் ஹதீஸ் : 1, அத்தியாயம்: 1, பாடம்: 1.01
…அடுத்து அவர், "ஈமான் (இறை நம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனின் தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதாகும்" என்றுக் கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் "உண்மை உரைத்தீர்கள்" என்றார்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள்.

அல்லாஹ் ஏற்படுத்திய விதியின் வழியே படைப்பினங்களின்   ஒவ்வொரு அசைவும் நிகழ்கிறதென்றால்மனிதர்களை நேர்வழிப்படுத்துவதாகக் கூறி தூதர்களையும் வேதங்களையும் அனுப்ப வேண்டிய தேவை என்னமனிதர்கள் எல்லோரையும் இஸ்லாமை ஏற்கும்படியான விதியை ஏன் எழுதவில்லை? மனிதர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற பாதையில் செல்ல, அல்லாஹ் ஒருபொழுதும் விரும்பவில்லைகாரணம், நரகத்தை நிரப்புதல் மட்டுமே அல்லாஹ்வின் குறிக்கோள்.

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.
(குர்ஆன் 32:13)

(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான். (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.
(குர்ஆன் 11:119)

நரகத்தை நோக்கி, நீ நிரம்பி விட்டாயா? என்று நாம் கேட்கும் நாளில், இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது கூறும்.
(குர்ஆன் 50:30)

மறுமையின் மிக மிக முக்கியமான கேள்வி மார்க்கத்தைக்  குறித்ததே. அப்படியானால் தீர்ப்பு நாளின் விசாரணை வேடிக்கையாக தோன்றவில்லையா? (தீர்ப்பு நாளின் வேடிக்கைகளை இப்பகுதியின் இறுதியில் விரிவாகக் காணலாம்.) ஒருவர் இஸ்லாமை ஏற்பதும், மறுப்பதும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கிறது. எனவே இஸ்லாம் என்ற பாதையை தேர்ந்தெடுக்கத்தவறியவர்கள் தங்களது பாதை மாறிய பயணங்களுக்காக அல்லாஹ்வின் விதியின் மீது குற்றம் கூற முடியாது காரணம்,

துன்பத்திலிருந்து உங்களுக்கு ஏதாவது ஏற்படுமாயின் (அது) உங்களுடைய கரங்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றினாலேயாகும்.
(குர்ஆன் 42:30)

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இதுவே அல்லாஹ் உலகிற்கு ஏற்படுத்தித் தந்துள்ள விதியாகும்). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால்தான் (,உனக்குத் தரப்பட்டுள்ள தீர்மானிக்கும் அறிவு குறை பாட்டால்தான்) வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
(குர்ஆன் 4:79)

(இப்பகுதியை மீண்டும் படித்தால் ஒருவேளை தெளிவான முடிவிற்கு வர வாய்ப்பு இருக்கலாம் என்று நினைக்…கி…க…வி…#@#?@&?!!?)  விதியின் குழப்பத்தால் மட்டும்  புதிய நம்பிக்கைகளும், சமுதாயங்களும் உருவாவில்லை. தற்செயலாக உருவான கிருஸ்துவ நம்பிக்கையை பாருங்கள்.

Wednesday 11 December 2013

திரைக்குப் பின்னால்...! பகுதி -2

நாம் கடந்த பகுதியில் பார்த்த புகாரி ஹதீஸ்  4795, ”பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால்”... என்கிறது.

இஸ்லாமிய வழக்கில், இது ‘ஹிஜாப்' என்றும் நம்நாட்டில் நிகாப், பர்தா, புர்கா துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுவதாகக் கூறுகின்றனர்.

அதென்ன ஹிஜாப், பர்தா?


   

புர்கா                                   ஹிஜாப்                                   நிகாப்


குர்ஆன் 33:53 இப்படிக் கூறுகிறது,

 ”..அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்..” (...wa-idhā sa-altumūhunna matāʿan fasalūhunna min warāi ḥijābin...) என்கிறது. அதாவது, வீட்டுவாயிலில் தொங்கவிடப்படும் திரையைத்தான் இங்கு ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகிறது. புகாரி 4791-ம் நமக்கு இதே பொருளைத்தான் கூறுகிறது. ஹிஜாப் என்ற சொல் குர்ஆனில் மேலும் சில இடங்களில் (7:46; 17:45; 38:32; 42:51) திரை என்ற சொல்லைத், தடுப்புச் சுவர், திரை என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர். எந்த இடத்திலும் முல்லாக்கள் கூறுவது போல தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடை என்று பொருள்கொள்ளவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஹிஜாப் என்றால் திரை என்பதுதான் நேரடிப்பொருள். பெண்கள் என்ற இறைச்சியை  தலைமுதல் கால்வரை மூடிமறைத்துக் கொள்ளும் முறையென்று எங்கே இருக்கிறது?  

குர்ஆன் 33:59
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது...
பீஜே மொழிபெயர்ப்பு

பெண்கள், தலையின் மீது ஒரு துண்டுத் துணியை அணிவது, கி.மு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடரும் வழக்கமாகும். அசிரியர்கள், தங்களது உயர்குல பெண்களை திரையால் தங்களது தலைகளை மறத்துக் கொள்ளவும், விபச்சாரிகள், அவ்வாறு தலைகளை மறைத்துக் கொள்ள தடையையும் அவர்கள் விதித்திருந்தனர். இதன் பாதிப்புகளை ஐரோப்பிய, பாரசீக, நாகரீகங்களிலும், யூத, கிருஸ்தவ நம்பிக்கைகளிலும் காணலாம்.


    ஆதியாகமம் 24:65
     ... அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் மகன்” என்று பதில்         சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டாள்.

1.கொரிந்தியர் 11:4 – 6
தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும்.
5. தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும் தலை மயிரை மழித்துக் கொண்டவளுக்கு அவள் ஒப்பாவாள்.
6. ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் (முக்காடு போடாவிட்டால்) அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரை குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது மூடியிருக்க வேண்டும்.


தலையில் முக்காடு அணியும் வழக்கம் வடஇந்தியக் கலாச்சாரத்திலும் காணமுடியும். இந்த வழக்கம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தொற்றியிருக்கலாம். 

ஆப்ரஹாமிய மதங்கள் பிற நாகரீகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி; உள்ளூர் மக்கள் இரண்டாம்தர குடிமக்களக்கிய நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடியும்.  அவர்கள், தலையில் முக்காடு அணியாத உள்ளூர் பெண்களை நாகரீகமற்றவர்களாக வரையறை செய்தனர். கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு மிரட்டல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய உள்ளூர் பெண்கள், வேறுவழியின்றி தங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் நாகரீகங்களைப் பின்பற்றத் துவங்கினர். பின்வரும் குர்ஆன் வசனமும் இதை ஆதரிக்கிறது.

குர்ஆன் 33:59 முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுகிறதா?
...அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும்; அப்பொழுது அவர்கள்(பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்;...
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

...அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்க(ளுடைய தலையிலிருந்து முகங்க)ளின் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! இது அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்படுவதற்கு மிக நெருக்கமானதாகும். அப்பொழுது அவர்கள் நோவினை செய்யப்படமாட்டார்கள்....
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

குர்ஆன் 33:59-ன் ஒலி மற்றும் மொழிபெயர்ப்பைக் காண்போம்.
...l-nabiyu (நபியே) qul (சொல்வீராக) li-azwājika (உங்கள் மனைவியர்களிடமும்) wabanātika (புதல்விகளிடமும்) wanisāi l-mu'minīna (நம்பிக்கை கொண்ட பெண்களிடமும்)  yud'nīna (தொங்க விடுமாறு) ʿalayhinna min (தங்களுடைய) jalābībihinna(புற ஆடைகளின் மீது) dhālika (அது) adnā (மிக ஏற்றது) an yuʿ'rafna (இது அவர்கள்  அறியப்படுவதற்கு) falā yu'dhayna (துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு)...

புறஆடைகளின் மீது தொங்கவிடுவதால் துன்புறுத்தல்களிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே இதன் கருத்து. எதை தொங்க விடவேண்டும் என்ற எவ்விதமான குறிப்புமில்லை. மேலும் இந்த வசனத்தில், குர்ஆன் மொழிபெயர்பாளர்களும், விரிவுரையாளர்களும் குறிப்பிடுவதைப் போன்று தலை, முடி, முந்தானை அல்லது  முக்காடு  என்ற சொற்கள் எதுவும் இடம்பெறல்லை.

இஸ்லாமியர்கள் கூறும் ஹிஜாப் நடைமுறைகள் :
ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையிலும், தளர்வான ஆடைகளால் உடலின் பரிமாணங்கள் தெரியாதவாறு மறைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய விதியாகும் என்கிறது வஹாபியத் தரப்பு.

"சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்று கருதும் மற்றொரு தரப்பான ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர்சுற்றித்திரியும் தப்லீக்வாதிகளும், முகம் உட்பட முழுவுடலும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டுமென்று வாதிடுகின்றனர். அவ்வாறே அவர்கள் தங்களது இல்லப்பெண்களுக்கு, கூடுதலாக கையுறை மற்றும் காலுறைகளை அணிவித்து, மூடி மூட்டையாகக் கட்டியும் வைத்துவிட்டனர்.



   



இது பெண்களை அவமதிக்கும் கேடுகெட்ட பைத்தியக்காரத்தனம் என்ற விமர்சனங்கள் எழும்பொழுது, இஸ்லாம் முகம், கை மற்றும் கால்களை மூடி மறைக்கச் சொல்லவில்லை என்று நழுவும் வஹாபிய தரப்பு, அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாமென்று ’அந்தர் பல்டி’ அடிக்கிறது. ஆக எப்படி நோக்கினாலும் இஸ்லாமியப் பெண்கள், நடமாடும் கூடாரங்களிலிருந்து விடுதலையளிக்க முல்லாக்கள் தயாரில்லை.

முல்லாக்கள், இஸ்லாமியப் பெண்களை மூட்டைகட்டி வைப்பதற்கு குர்ஆன் 24 அத்தியாயத்தின் 31–ஆம் வசனத்தை மிக முக்கியமான ஆதரமாகக் காண்பிக்கின்றனர். இவ்வசனம், பெண்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டுமென்பதையும், எந்தப் பகுதியை வெளிப்படுத்தலாம் என்பதையும் வரையறை செய்வதாக அவர்கள் கருதுகின்றனர். பெண்கள் தங்களது உடலை மறைக்கக் கூறுவதாக முல்லாக்கள் சுட்டிக்காட்டும் பகுதியை முதலில் காண்போம்.

குர்ஆன் 24:31,
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ...
பீஜே மொழிபெயர்ப்பு
இதிலும் முல்லாக்களின் திருவிளையாடல்கள் உள்ளன. குர்ஆன் 24:31-ன் ”...Wal yadhribna bi khumurihinna ala juyubihinna...” என்ற சொற்றொடர் எப்படி உருமாறுகிறது என்பதை கவனிப்போம்

... தம் வெட்கத்தலங்களைப் பேணிக் கொள்ள வேண்டும்; தம் அலங்காரத்தை – அதிலிருந்து (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர (மற்றவற்றை) அவர்கள் வெளியாக்கக் கூடாது; தம் முன்றானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை) மறைத்துக் கொள்ள வேண்டும்.
கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்.
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு
நாம் பார்த்த இந்த மூன்று மொழிபெயர்ப்புகளில், கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனியின் மொழிபெயர்ப்பும் ஓரளவிற்கு ஒன்றுடன் ஒன்று பொருந்தி வருகிறது.
khumurihinna ala juyubihinna” என்பது எதைக் குறிக்கிறது?

கிமார்’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது என்ற குழப்பம் குர்ஆன் விரிவுரையாளர்களுக்கிடையே இருந்துள்ளது. இதைப்பற்றி பீஜே குழுவினர் கூறுவதை கவனிப்போம்,

...கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் ’கிமார்’ என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது...

’கிமார்’ என்றால் என்னவென்பதில் குழப்பம் இல்லையெனில் இப்படியொரு விளக்கெண்ணெய் விளக்கத்தை இவர்களே எழுதவேண்டிய அவசியமில்லை.  தலையில் அணியக்கூடிய துணியே ’கிமார்’ என்று பொழிப்புரை கூறிக் கொண்டே ”தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.என்கின்றனர். பீஜே, சொல்வதைப்போல முக்காடுகளை மார்பின்மீது போட்டுக்கொண்டால் தலையை எதைக் கொண்டு மறைப்பதாம்?(!) இப்படி இவர் உளறிக் கொட்டக் காரணம் ’கிமார்’ என்றால் முக்காடு அல்ல என்பதால்தான். கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனியும் “கிமார்” என்பதை முந்தானை என்கின்றனர். மேலும் பீஜே தரப்பு கூறும் இந்த விளக்கம் புகாரி கூறும் ஹதீஸுக்கு எதிரானது.

புகாரி 4758
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் தங்கள் மார்புக்கு மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும்!' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

இந்த ஹதீஸிலும் குழப்பம் இருக்கிறது ’துப்பட்டா’ ‘மார்பு’ போன்ற சொல் குறிப்பிட்ட குர்ஆன் 24:31 வசனத்தில் கிடையாது. அன்றைய பெண்கள் எதை மறைத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்த ஹதீஸையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

”கிமார்(khimar)” மறை, மூடு என்று பொருள் கொள்ளலாம். மறைக்க  உதவும் எந்த பொருளும் ”கிமார்”- தான். நாம் அணியும் ஆடை, கதவு, ஜன்னல்களில் தொங்கும் திரைகளும் ”கிமார்”-தான். முந்தானை என்றோ முக்காடு என்றோ சிறப்பாக பொருள்கொள்ள முடியாது. முந்தானை அல்லது தலையை மூடும் துணியைக் குறிக்கும் எந்த சொல்லையும்  இங்கு பயன்படுத்தப்படவேயில்லை!

குர்ஆனில் தூய அரபிமொழியினால் எழுதப்படவில்லை என்பதும் பிறமொழிச் சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் மொழி ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு. சானாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால குர்ஆனையும், குர்ஆனிலுள்ள சிரியாக் மற்றும் அராமிக்  மொழிக்கலப்பைபற்றி ஆய்வுசெய்த ஜெர்மன் ஆய்வாளர், ’khimar’ என்பதை சிரிய மொழியில் ’chimar’ என்பதாகக் கொண்டால் இடுப்புவார் (belt) என்றும் juyubihinna என்பதை இடுப்புப் பகுதியையும் குறிப்பிடுவதாகக் பொருள் கூறுகிறார்.

’wa-l-yadrib-na bi-khumuri-hinna `ala juyubi-hinna’ எனபதை ”இடுப்புவாரை அவர்கள் இடுப்பைச் சுற்றி அணிந்துகொள்ளாட்டும்” என்று பொருள் விளக்குகிறார். அதாவது கிருஸ்தவ துறவிகள் இடுப்பில் அணியும் கயிற்றைப்போன்றது என்று பொருள் விளக்கிகிறார்.


பீஜே மட்டுமல்ல பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் ’Juyubihinna’ என்பதை மார்பு என்றே மொழிபெயர்த்துள்ளனர். மார்பைக் குறிக்க அரபியில் Nahd அல்லது Sadr என்பார்கள்.   ‘Juyub’ என்பதன் நேரடிப் பொருள் பெண்களின் மார்பு அல்ல; மேற்சட்டை அல்லது மேற்சட்டையிலுள்ள திறப்பு (pocket - சட்டைப்பை) என்பதுதான். கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனி ”juyubihinna” என்பதை மேல்சட்டை என்றே பொழிபெயர்த்துள்ளதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். 

மார்பு என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம் என்றும் சிலர் வாதிடலாம்.  பெண்களின் அங்கங்களை நேரடியாக வர்ணனை செய்வதில் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எந்த தயக்கமும் கிடையாது.

எடுத்துக்காட்டாக,

சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் வழங்க இருக்கும் பெண்களைப்பற்றி கூறும் பொழுது...

குர் ஆன் 78:33
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்
அ.கா.அப்துல் ஹமீது பாகவி மொழிபெயர்ப்பு

(மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சமவயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு


...சம வயதுடைய கட்டழகியரும்,..
பீஜே மொழிபெயர்ப்பு

என்கிறது. வழக்கம் போல பீஜே ’முக்கியமான’ வார்த்தைகளைத் தனது மொழிபெயர்ப்பில் மறைத்துவிட்டார். இவர்கள், குர்ஆனில் இருப்பதை மறைத்தும் இல்லாததை திணித்தும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதன் மூலம், தங்களது கடவுளின் மானத்தைக் காப்பாற்ற நினைக்கிறனர். குர்ஆன் தெளிவானது, நன்கு விளக்கப்பட்ட புத்தகமென்று தன்னைத் தானே சான்றிதழ் வழங்கிக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாதத்திற்காக, பீஜே போன்ற முல்லாக்கள் சொல்வது போல ’Juyubihinna’ என்பதை மார்பு என்றே வைத்துக் கொண்டாலும் மார்பையும் மறைக்கக் கூறுவதாகத்தான் பொருள் விளங்க முடியும். தலை முதல் கால்வரை முழுவதையும் மறைக்க வேண்டுமென்று பொருள் கொள்ள முடியாது.

ஆடை அணிவதில் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப்பற்றி குர்ஆன் கூறும்பொழுது,

குர்ஆன் 24:60
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

நாம் குர்ஆனின் 24:60 ஐயும் இணைத்துப் பார்த்தால் பெண்கள், தங்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை துணியால் சுற்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று பொருள் கொள்ள முடியாது. அரேபிய போன்ற பாலைவனப் பகுதியில் வெப்பம் மிகுந்த நேரங்களில் ஓய்வெடுக்கும் பொழுது, ஆண்களும் பெண்களும் மேலாடைகளைக் களைந்திருப்பது வழக்கத்திலிருந்திருக்கிறது. அதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

குர்ஆன் 24:58
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை...

அவ்வாறு ஆடைகளைக் களைந்துள்ள ஒரு வேளையில்தான் திடீரெனெ வீட்டிற்குள் நுழைந்த முஹம்மது தனது மருமகள் ஜைனப்பை ஏடாகூடமான ஒரு கோலத்தில் பார்க்க நேர்ந்ததும், தனக்கேற்பட்ட தனது தனிப்பட்ட விகாரமான அனுபவங்களையெல்லாம் அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக வழக்கம்போல குர்ஆனுக்குள் நுழைக்க வேண்டிருந்தது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மேற்கண்ட குர்ஆன் 24:58 கூறப்பட்டதற்கு , முஹம்மதிற்கேற்பட்ட தனிப்பட்ட அனுபங்களே காரணமாக அமைந்திருக்கிறது.

குர்ஆன் 24:27
 நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

24:28 அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம், முஹம்மது யாரிடம் எவற்றை மறைக்கச் சொன்னார், எதற்காக மறைக்கச் சொன்னார் என்பவைகளை நாம் கடந்த பகுதியில் பார்த்தோம்.

அடுத்தது பெண்கள் தங்களது உடலில் எந்தெந்த பகுதிகளை யார் யாருக்கெல்லாம் வெளிப்படுத்தலாம் என்பதற்கான குர்ஆன் கூறும் அனுமதிகள்.

குர்ஆன் 24:31
..அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். ...

...walā yub'dīna (வெளிப்படுத்த வேண்டாம்) zīnatahunna (அலங்காரத்தை) illā (தவிர) mā ẓahara (வெளிப்படையாக இருப்பவைகள்) min'hā(அதனின்றும்)...

இங்கே ஜீனத்' என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள் என்று ஒரு தரப்பும் இயற்கையான உடல் அழகைக் குறிப்பதாக மறுதரப்பும் கூறுகின்றது. அழகோ அல்லது அழகலங்காரமோ எதுவாயினும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு மார்பை மறைக்க கூடுதலாக முந்தானைகளை அணிவது நமது அண்டை மாநிலமான கேரளாவில் மாறுபடுகிறது. பெண்கள் மேலாடை அணியாமல் இருப்பது இன்றும் சில நாகரீகங்களில் இருக்கிறது. அவ்வாறிருப்பதை அவர்கள்  ஒரு பொருட்டாக நினைப்பதுமில்லை. பொதுவாக உடைகள் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், புவியியல் சூழலுக்கும், காலத்திற்கும், நாகரீகத்திற்கும் ஏற்ப வேறுபடுகிறது.

வெளிப்படையானவைகள் எவை?

இதற்கு விளக்கம் கூறுவதாகப் புகுந்த முல்லாக்கள், பெண்களை மூடிவைக்கப்பட வேண்டிய இறைச்சியாகக் கருதிவிட்டனர். அதன் விளைவே இன்று நாம் காணும் இந்த நடமாடும் கூடாரம்! குர்ஆன் பல இடங்களில் வெட்கத் தலங்களைப்பற்றி பேசுகிறது. ஒருவேளை அவைகளை மூடிவைக்க கூறியிருக்கலாம் என்று வாதிடலாம். வெட்கத்தலங்கள் என்பன எவை?  வெட்கத்தலங்கள் விவகாரம் ஆதாம் தம்பதிகள் துவக்கி வைத்த குழப்பம். எனவே அங்கிருந்தே வருவோம்.

குர்ஆன் 20:121
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர்...


ஆதாமும் அவரது துணையும் எவற்றையெல்லாம் வெட்கத் தலங்களாக கருதி மறைத்தனர்? நாம் இப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்!  வெட்கத்தலங்கள் பற்றி குர்ஆனிடம் எந்த வரையறையும் இல்லை.

குர்ஆன் 7:26
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக...

உடை என்பது முழுக்க முழுக்க மனிதனின் வாய்ப்புதான் எனபதை விளக்க இந்த குர்ஆன் வசனமே போதுமானது.  அதனால்தான் எதையும் குறிப்பிட்டுக் கூறாமல் ”தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை” என்று பொதுவாகக் கடந்து செல்கிறது. உண்மையில், பர்தா-புர்கா-ஹிஜாப் என்ற பெயரில் பெண்களை தலைமுதல் கால்வரை மூடிக்கொள்ளுமாறு குர்ஆன் அறிவுறுத்தவில்லை. ஜைனபுடனான தனது திருமண(வலீமா) விருந்தில், தனது தோழர்களின் செய்கையால் கடுப்பான முஹம்மது, தனது மனைவியரை திரைக்குள் மறைந்திருக்க உத்தரவிட்டார். அதையே காரணமாக் கொண்டு மற்ற பெண்களின் மீதும் திரையை திணிப்பது அர்த்தமற்றது.

இஸ்லாமிய அறிஞர்களின் ஆணாதிக்க சிந்தனை, பெண்களை அடிமைபடுத்தி தங்களது முழுகட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள ஏதுவாக குர்ஆனின் பொருளைத் திரித்து மொழிபெயர்க்கச் செய்துள்ளது. குர்ஆன் எதையும் குறிப்பிட்டுக் கூறாததால், ”குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ”யும் உள்ளது” என்று அல்லாஹ்விற்கே வஹீயை இறக்குகின்றனர். ஹதீஸ்களை கையிலெடுத்துக் கொண்டு அப்பாவி முஸ்லீம்களை தங்கள் விருப்பம் போல் ஆட்டுவிக்கின்றனர். குர்ஆன் விளக்கமானது (3:138), பேரொளி நிறைந்த சான்று (4:175), பேரொளியும் தெளிவும் நிறைந்தது (5:15), விரிவாக்கப்பட்டது, பூர்த்தியானது (6:66,115,116 18:54) தெளிவான ஆதாரம் கொண்ட நேர்வழி (45:20), எளிமையானது (54: 17, 22, 32, 40) என்ற குர்ஆனின் முனங்கலை இவர்கள் பொருட்படுத்துவதாக இல்லை!

மதவியாபாரிகளின் ”புர்கா போடும் புரட்சி” என்ற பீற்றலுக்கு பின்னால் மறைந்திருப்பது, திருமணச் சந்தையில் தங்களது பிள்ளைகள் விலைபோகமல், மற்றவர்களால் எங்கே நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற, ஒவ்வொரு அப்பாவி முஸ்லீம் பெற்றோர்களின் அச்சம் மட்டுமே!  இதைப்போன்ற மறைமுக மற்றும் நேரடி அச்சுத்தல்களின் மூலம் அப்பாவி மக்களை சமுதாயமாக ஒன்றிணைத்து தங்களது அரசியல் இலாபங்களுக்காக பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றனர்.  இதன் மூலம் முல்லாக்கள் பெற்ற அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்கள் என்னவென்பதை நீங்களே அறிவீர்கள்.

’பர்தா’ முறையின் வாயிலாக முல்லாக்கள், தங்களது பெண்களை அறிவற்றவர்களாகவும், தங்களது உடலால் ஆண்களைத் தவறான வழிக்கு கொண்டு செல்பவர்களாகவும், ஆண்கள் அனைவருமே அடக்க முடியாத காமவெறி பிடித்து அலையும் மிருகங்களாகவும் சித்தரிக்கின்றனர். வரலாற்றின் சக்கரங்களை பின்னோக்கி இழுக்கும் இவர்களின் செயல், முன்னேறிய ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானமே!

’புர்கா-பர்தா’ என்ற திரைக்குப் பின்னால் மறைந்திருப்பது ஆதிக்க வெறிகொண்ட மத அடிப்படைவாதிகளின் ஆணாதிக்க சிந்தனையும், காமவெறி பிடித்த இந்தக் கயவர்களின் கொடூர முகமும்தான்!



தஜ்ஜால்