Saturday 27 September 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 3

”தஜ்ஜால்...! ஒவ்வொரு கேள்வியாக கேளு! இல்லைனா மறந்திடுவேன்...!”

”என்னது மறதியா...!?”

“ஆமாம்... அதனாலதான் எதுவாக இருந்தாலும் எழுதி வச்சுக்குவேன்.

”அய்யா... இது எந்த இடம்..?”

“உன்னால இன்னும் கண்டுபிடிக்க முடியலையா..?” என்றவாறு சிரித்தார் பெரியவர்.

“தெரியல...!”

”நான் உட்கார்ந்திருக்கிற இதை ’அர்ஷ்’–ன்னு அரபியில சொல்லுவாங்க..!”

“என்னது... இந்தப் பாறைதான் ’அர்ஷ்’ஷா...?!”  என்றேன்.

“ஆமாம்...! ஏன் இதுல நான் உட்காரக் கூடாதா என்ன?”

“தாராளமா உட்காருங்க! ஆனா இப்படி ’குத்தவைத்து’  உட்கார்ந்திருக்கீங்களே இடைஞ்சலாக இல்லையா?”

“இது என்னோட ஸ்டைல்..!”

”எங்க ஊர்ல முல்லாக்கள், அல்லாஹ்வின் அரியாசணம் சிங்காசணம்ன்னு ஏதேதோ கதை... விட்டுட்டு இருக்காங்க...  அதையெல்லாம் கேட்டு, அரபு ஷேக்குகள் விலை உயர்ந்த வேலைப்பாடுகள் செய்த நாற்காலியில் சொகுசா உட்கார்ந்திருக்கிற மாதிரி ஏதாவது இருக்கும்னு கற்பனை செய்து வச்சிருந்தேன்... நீங்க என்னடான்னா.. ’பரதேசி’ படத்தில அதர்வா உட்காந்திருக்கிற மாதிரி பாறைமேல பரிதாபமா ’குத்த்வச்சு’ உட்கார்ந்திருக்கீங்களே?!”



”நீ பரிதாபப்படறியா இல்ல கிண்டல் செய்யறியா...?” என்றார் சலனமில்லாமல்.

ஆள் உஷாரகத்தான் இருக்கிறார். திடீரென்று கோபம் கொண்டு இந்த பிடி சாபத்தை என்று என்னை குரங்காகவோ இல்லை பன்றியாகவோ மாற்றித் தொலைத்தால் என்ன செய்வது? எனவே  அமைதியாக,

“அல்லாஹ்வின் அரியாசணம் ஏழாவது வானத்திலிருப்பதாக முல்லாக்கள் சொல்லக் கேட்டிருக்கேன் .... இதுதான் ஏழாவது வானமா?” என்றேன்.

“ஆமாம்...”

”வானம்னு... எதுவும் கிடையாது. நீலநிறத்தில் தெரிவது, ஒளிச் சிதறல்களினால உண்டாகிற காட்சிப்பிழைன்னு படிச்சிருக்கேன். ஆனா இது கான்கிரீட் தளம் மாதிரி உறுதியாயில்ல இருக்கு ..?” என்றேன்.

“நீ சொல்லறது அறிவியல். ஆனா... இது வேற...!”

“நீங்க மழுப்பறீங்க...!”

“இதைப்பற்றி நாம அப்புறமா பேசலாம்.”

”சரி...! உங்களோட பாறாங்கல்லை... ஸாரி... அர்ஷை எதுக்காக இத்தனை பேர் சுமக்கனும்?”

“மனிதர்களே பல்லக்கு தூக்கறதுக்கு அடிமைகளை வச்சிருக்கும் போது நான் வைக்கக் கூடாதா?”

“அடிமைகள் முறை மனிதாபிமான இல்லாததுன்னு மனிதர்களே நினைக்கிறாங்க. சட்டங்களை இயற்றி அதை ஒழிக்க பாடுபடறாங்க....  ஆனா... நீங்க...  இந்த வயதான கிழவர்கள் சுமக்க உட்கார்ந்திருக்கீங்களே உங்களுக்கு இரக்கமே இல்லையா...?”

”.... ....!”

“பெரிய பெரிய கோள்களும் நட்சத்திரங்களும் வான்வெளியில யாருடைய உதவியுமின்றி அழகாக மிதக்குது. அவ்வளவு ஏன்!  மனிதர்கள், ’டன்’ கணக்கில் எடையிருக்கற செயற்களைக் கோள்களைக்கூட வானத்தில அழகா மிதக்க வைக்கிறாங்க, ஆனா உங்களின் இந்தப் பாறாங்கல்லை எட்டு பேர் சுமக்க வேண்டியிருக்கே...?!”

“அவங்க சுமக்கவில்லைனா.. அர்ஷ் கீழே விழுந்திரும்பா..! எல்லாம் ஒரு பந்தாதான்!” என்றவாறு வெடிச்சிரிப்பு சிரித்தார்.

“என்னது... பந்தாவா..? இந்தக் கோமாளித்தனமெல்லாம் அந்தக் கால ஸ்டைல்..! இப்ப யாரும் இந்த கற்பனைகூட செய்யறதில்ல!”

”உண்மைதாம்ப்பா... ஒத்துக்கிறேன்! குர்ஆன்ல சொல்லியிருக்கு, வேறமாதிரி நான் வந்த நம்பமாட்டாங்க. அவ்வளவு ஏன்... நீ கூட என்னை இன்னும் நம்பாமத்தான் இருக்கற...!”

“சரி நம்பறேன்... முதல்ல அந்தப் பாறையில இருந்து கீழே  இறங்குங்க...!”

முதியவர் மீண்டு அரபியில் ஏதோ சொல்ல, அர்ஷ் என்ற பாறையைச் சுமந்து கொண்டிருந்த கிழவர்கள் அதை சற்று கீழாக இறக்கினர். மெதுவாக அர்ஷின் மீது கைகளை ஊன்றி, கைத்தாங்கலாக மலக்குகள் அவரை கீழே இறக்கிவிட்டனர். முதியவர் வளைந்து நெளிந்துக் நெட்டிமுறித்துக் கொண்டிருந்தார்.

”அய்யா... அந்தக் கல்லை இன்னும் ஏன் சுமக்க வைக்கிறீங்க? அத தூரப் போடச் சொல்லுங்க” என்றேன்.

“ம்ம்... உஸே ஃபேக் தாலோ....” என்றார். அவர் சொன்னதுதான் தாமதம் கல் தூரப் போய் விழுந்தது. எத்தனை வருடச் சுமையோ ...!





கண்களுக்கு ஒளிவெள்ளம் பழகிவிட்டதால் காட்சி இன்னும்கூட தெளிவாகத் தெரிந்தது. நான் முதியவர்களை நோக்கி நடந்தேன். அருகில் நெருங்க நெருங்க ஒளியின் தாக்கம் கண்களைத் கூசச் செய்தது. அர்ஷை சுமந்து கொண்டிருந்த முதியவர்(மலக்கு)களை நெருங்க, அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.

மலக்குகளை நிதானமாக கவனித்தேன்.  அவர்கள் நல்ல உயரம்; சுமார் 12-15 அடி இருக்கலாம். நான் அவர்களது  உயரத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தேன். முகம் மற்றும் உடலில் காணப்படும் சுருக்கம் அவர்களின் வயதின் முதிர்ச்சியை அப்பட்டமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அவர்களை ஆண் என்றோ பெண் என்றோ என்னால் சொல்ல முடியவில்லை. வயதானாலும் அழகான தோற்றத்திலிருந்தனர். அங்கி போன்று தலைமுதல் கால்வரை தளர்வான ஆடை தரையை தொட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுதான் கவனித்தேன்.

முதுகிலிருந்து ஏதோ நீட்டிக் கொண்டிருந்தது. என்ன அது?






அடப் பரிதாபமே...! அது... இறக்கைகள்தான்! இது ஏன் இவ்வளவு கேவலமாக இருக்கிறது?

அவர்களது இறக்கைகளிலிருந்த சிறகுகள், அங்குமிங்குமாக உதிர்ந்து சொட்டையாகக் காட்சியளிக்கிறது.  வழுக்கை பிரச்சனை இவர்களையும் விடவில்லையா?  எனக்கு மிகவும் பரிதாபமாகவும், வருத்தமாக இருந்தது.

“எங்களுக்கு நினைவு தெரிஞ்ச காலத்திலிருந்து இதை சுமந்துகிட்டு இருக்கிறோம். இப்பதான் விடுதலை கிடைத்தது. அல்லாஹ்விற்கு நன்றி... !” என்றனர்.

 “அல்லாஹ்விற்கு நன்றியா....!?”

நான் மலக்குகளுடன் பேசிக் கொண்டிருப்பதை முதியவர் கண்சிமிட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தார். இப்படி கவனிக்க வேண்டிய அவசியம் என்ன?

“ஆமாம்.. அவன்தானே இந்த பாரத்தை இறக்கச் செய்தான் அவனது கருணையே கருணை!” என்றனர்.

எனக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் என்றிருந்தது.

” லூசுகளா... அவன்தானே இந்த பாரத்தை உங்க மேல ஏற்றி வைத்தான்?”

“நீ, அப்படி நினைக்கக் கூடாது அது அல்லாஹ்வின் திட்டம். நாமெல்லாம் அவனோட அடிமைகள் அல்லாஹ்வுக்கு அடிமையா இருப்பதைக் கேவலமாக (Q 4:172) நினைக்க கூடாது!” என்றனர் கோரஸாக,

”அடக் கருமமே..!  இங்கேயும் இப்படித்தானா? சரி... எந்தத் தேவையுமில்லாத ஒருத்தருக்கு உட்கார அர்ஷும் அதைத் தூக்கறதுக்கு உங்கள மாதிரி அடிமைகளும் எதுக்கு?” என்றேன்.

”.... ....!?”

“பதில் சொல்லுங்க!”

“எங்களுக்கு இப்படியெல்லாம் யோசிக்கத் தெரியாது!”

நான் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதே சுற்றிலும் பார்வையைச் செலுத்தினேன்.  சீரான சமதளம்; எவ்வளவு தூரம் நீள்கிறதென்பதை யூகிக்க முடியவில்லை. தொலைவில்  இன்னும் பலர் கீழே சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது.

அல்லாஹ் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட பெரியவரிடம் திரும்பினேன்.

”ஒன்னுமே தெரியாத மாதிரி எத்தன பவ்வியமா நடிக்கிறாங்க பாரு!” என்றார்

“யாரைச் சொல்றீங்க...?”

“வேற யார மலக்குகளைத்தான்...!”

எதற்காக மலக்குகளை கடிந்து கொள்கிறார்? ஏதாவது உள்விவகாரம் இருக்குமேன்று தோன்றியது. மலக்குகளைப் பார்க்கையில் எனக்கு பரிதாமாகத்தான் இருந்தது.

“அய்யா பெரியவரே... உங்களோட அடிமைகளான மலக்குகளுக்கு சிறகுகள் உதிர்ந்து போய் பார்க்கவே பரிதாபமா இருக்குது.  இப்படியே போனால் சீக்கிரமா சொட்டையா ஆயிரும்! உனது அடியார்கள், மலக்குகளை பரிதாபத்திற்குரியவர்களாக, இப்படி சொட்டை மலக்குகளை கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டாங்க!” என்றேன்

 “தஜ்ஜால்.. ஆரம்பத்திலிருந்தே நான் இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். முல்லாக்களின் கற்பனையை எங்க மீது திணிக்காதே! மலக்குகளுக்கு வயதே ஆகாது, என்றும் இளமையாகவே இருப்பாங்ன்னு நான் சொல்லவேயில்லைப்பா இவனுகளாகவே கண்டதையும் கற்பனை செஞ்சா அதுக்கு நான் பொறுப்பில்ல!”

“.... ....!?”

“என்னுடைய ஒவ்வொரு படைப்பும் முடிவை சந்தித்தே தீரவேண்டும்!”

“இவங்களுக்கு அமேசான் காட்டில் விளையும் மூலிகை எண்ணெய் தேய்க்கச்  சொல்லாமில்ல..?” என்றேன்.

“உனக்கு எப்படித் தெரியும். நீ அமேசான் காட்டுக்குப் போயிருந்தியா என்ன?”

“டிவி விளம்பரத்தில காண்பிச்சத சொன்னேன்”

“உனக்குக் காண்பிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. சரி... என்கூட வா..! பேசிக்கிட்டே போகலாம்.” என்றவாறு என்னை நோக்கினார்.

“முதலில், உங்ககிட்ட இருந்து வரும் வெளிச்சத்தை கொஞ்சம் குறைச்சு வையுங்க...! கண் வலிக்கிறது. என்னால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியல...” என்றேன்.

அவர் மீண்டும் கட்டளையிட ஒளி சரியான அளவிற்கு வந்தது. முதியவரை நன்கு கவனித்தேன். மலக்குகளைவிட நல்ல உயரம், அழகு, பெண்மை மிகுந்த முக அமைப்பு. மலக்குகள் அணிந்திருந்ததைப் போன்றதொரு அங்கி. தற்பொழுது பெரியவரை இந்த அளவிற்குத்தான் கவனிக்க முடிந்தது. அங்கிக்குள் என்னனென்ன ஐட்டங்கள் இருக்கிறதென்பதை கண்டறிய முடியவில்லை. இருவரும் நடந்து கொண்டிருந்தோம்.

திடீரென்று நின்ற பெரியவர், அங்கே சுருண்டு படுத்துக் கொண்டிருந்த ஒரு முதியவரைச் சுட்டிகாண்பித்து,

”இவர் யாரென்று தெரிகிறதா?” என்றார்.

“அய்யா... நான் இந்த இடத்திற்கு புதுசு. இங்கு ஒருவரையும் எனக்குத் தெரியாது. நீங்க கேட்கறதால சொல்லறேன்... தோற்றத்தைப் பார்த்தால் உங்க அடிமை, மூளை செத்த மலக்கு மாதிரி தெரியுது!” என்றேன்

”நீ சொன்னது சரி... இவர்தான் ஜிப்ரீல் “ என்றார்





”ஏது ... மலக்குகளுக்கெல்லாம்  தலைவர், வானவர் கோமான், சீமான்  என்பார்களே அவரா?”

“அவரேதான்!”

”என்ன ஆச்சு.. ஏன்.. இப்படி சுருண்டு படுத்திருக்கிறார் வயிற்றுவலியா?” என்றேன்.

”அது ஒரு பெரிய கதை...”

”ம்ம்... சொல்லுங்க...!”

”கிட்டத்தட்ட 1400 வருஷமா இப்படி இருக்காரு!”

“1400 வருஷமாவா...?”

“முஹம்மதை சந்திக்க பாறையிடுக்குள்ள  போனதுக்குப் பிறகுதான் இப்படி ஆயிட்டார்!”

“பாறை இடுக்கா... ? ...ஹீரா குகைன்னுதானே சொல்லுவாங்க...?” என்றேன்.

“சரி... உன் ஆசையை நான் கெடுக்கல... குகைன்னே வச்சிக்க...” என்றார்

“அப்படியென்ன அந்த குகையில நடந்தது?”

“ஏப்பா... எதுவுமே தெரியத மாதிரி கேட்காதே..!”

“அய்யா... நானென்ன அந்த குகையோட செக்யூரிட்டியாகவா இருந்தேன்...?”

“குகைல நடந்தவைகளை நீயே பலமுறை எழுதியிருக்கே... ஆனா அதுல உண்மையில்ல!”

“நான் ஹதீஸ்களில் சொல்யிருந்ததை எழுதினேன். அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் எல்லாம் புளுகாண்டிகளா... இல்ல... குர்ஆனுக்கு எதிரானதா என்ன?”

“அப்ப... அந்த குகையில இருந்தவங்க ரெண்டே பேர்தான் ஒன்னு ஜிப்ரீல் இன்னொன்னு முஹம்மது. ஜிப்ரீல் படுத்த படுக்கையா ஆயிட்டார் முஹம்மது சொன்னது உண்மையாயிருச்சு!”

“என்னதான் நடந்தது அத சொல்லுங்க...!”

“அத எப்படி என் வாயால சொல்லுவேன்...!” என்ற பொழுது அவரது கண்களில் நீர் தழும்பியது.  குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார். என்ன சொல்வதென்று புரியாமல் நான் நின்று கொண்டிருந்தேன். அவர் தனது அங்கியை உயர்த்தி சுருட்டியவாறு ஜிப்ரீல் படுத்திருந்ததற்கு அருகில்  சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்.  அபொழுது அவரது கெண்டைக்கால் (Q 68:42) தெரிந்தது.

கீழே அமருமாறு கையால் சைகை காண்பிக்க, நானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.

”சரி... சரி.. அழாதிங்க... அமைதி... அமைதியா இருங்க...!” என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்தார். பிறகு குனிந்து ஜிப்ரீல் அணிந்திருந்த அங்கியின் விளிம்பை கைகளால் எடுத்து ‘ட்ட...ர்ர்..ர்ர்’ என்று மூக்கை சிந்தினார்.  

”அய்யா... உங்கள கடவுள்னு சொல்லிக்கிறீங்க ஆனா இப்படி அழறீங்களே...?”

“அல்லாஹ்... இரக்கப்படுவான், மகிழ்ச்சியடைவான், நன்றி சொல்வான்(Q 4:147), கோபப்படுவான்(Q 2:90), கேலிசெய்வான்(Q 9:79), சிரிப்பான், சபிப்பான்(Q5:60), சதி செய்வான்னு... சொன்னா எதிர்க் கேள்வியில்லாம நம்புவீங்க... இதையெல்லாம் செய்யறவன் அழமாட்டானா...?” என்றார்.

“தாராளாம அழுது புலம்புங்க... அது உங்க தனிப்பட்ட உரிமை,  ஆனா ஜிப்ரீலோட  டிரஸ்ல மூக்கை சிந்தி வைக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்ல...! என்றேன்.

”அல்லாஹ் சதி செய்வதில் சிறந்தவன் (Q 8:30) என்பதை கேள்விப்பட்டதில்லையா...?”

“ம்ம்...ம்... கேள்விப்பட்டிருக்கேன். சரி... இன்னும் கொஞ்சம் சதி செய்து மூக்கை நல்லாவே துடைச்சிக்கங்க...!” என்றேன்.

மறுபடியும் மூக்கை சிந்தி சுத்தம் செய்தவாறு,

“நாம என்ன பேசிட்டிருந்தோம்..? என்றார்.

”ஹீரா குகையப்பத்தி பேசினோம்...!”

”அப்ப ஜிப்ரீல் ரொம்ப அழகாக இருப்பார். அவர பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரியா இருக்கும்னா, எப்படி இருந்திருப்பார்னு நீயே சிந்திச்சு பாரு!” என்ற போது பெரியவரின் கண்கள்விரிந்து பிரகாசமானது.

”சொல்லுங்க...!”

“அப்ப... முஹம்மதுக்கு சுமார் 40 வயசு இருக்கும் அவரோட மனைவிக்கோ 55 வயதுக்கும் அதிகமா இருந்தது. வயதான ஒரு மூதாட்டியால 40 வயது ஆணோட இச்சைகளை தீர்க்க முடியுமான்னு நீயே யோசித்துப் பாரு...!” என்றார்.

“முடியாதுதான்..!”

“இதுல நம்ம ஆளுக்கோ ’அது’ கொஞ்சம் ஜாஸ்தி. விதவிதமாக கற்பனை செய்ய ஆள் வேற..!”

“.......!”

“போதாக்குறைக்கு, V.O வாக வேறு இருந்தார்”

“ஏது... கிராம அதிகாரியாகவா?”

”அட நீ வேற... வெட்டி ஆஃபீஸராக இருந்தார். கதீஜாவோட தயவுலதான் முஹம்மது தன்னோட   வயிற்றும் பொழப்பு ஓட்டிக்கிட்டு இருந்தார்”

”முஹம்மதோட சிறந்த ஒழுக்கத்தினால் மக்கா நகரிலேயே நம்பிக்கைக்குரிய சிறந்த மனிதராக மதிக்கப்பட்டாருன்னு முல்லாக்கள் சொல்லறாங்க. நீங்க என்னடான்ன இப்படிச் சொல்றீங்களே...!?”

முதியவர் என்னை முறைத்துப் பார்த்தவாறு,

”ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நல்லாவே நடிக்கிற...” என்றார்.

”நீங்க சொல்லி... நான் கேட்கறதுதானே நல்லாயிருக்கும்..!” என்றேன்

”திருமணத்திற்கு வேற  நல்ல, அழகான, இளமையான பெண்கள் கிடைச்சிருந்தா, இவரு எதுக்காக தன்னோட அம்மா வயசில இருக்கிற பொம்பளைகிட்ட போகணும்?”

”சரி... அதுக்கும்,  ஜிப்ரீல் இப்படி ஆனதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றேன்.

முதியவர் என்னை மீண்டும் முறைத்துப் பார்த்துவிட்டு சிரித்தார்.

“சரி... சொல்லுங்க...” என்றேன்

”கதீஜாவை தவிர்க்க, தவம் செய்யப் போறேன்... தியானம் செய்யப் போறேன்னு... ஏதாவது கதையளந்துட்டு... வீட்டிலிருந்து முஹம்மது அப்பப்ப... ’எஸ்’ ஆயிடுவாறு...!”

”.... ....!”

“இந்த அம்மாவும் ஆள அனுப்பி தேடிக் கண்டுபிடிச்சு, திரும்பவும் ஒட்டகத்தை அடைச்சு வக்கிற மாதிரி பட்டியில கொண்டுவந்து அடைச்சு வைப்பாங்க... இது அவங்களுக்கு அன்றாட வாடிக்கையாகவே ஆயிருச்சு”

“... ..!”

”இந்த மாதிரி இருக்கறப்ப..  ஒரு தடவ முஹம்மது  பாறை இடுக்குல... சரி.... ஹீரா குகைக்குள்ள வந்து ஒளிஞ்சுகிட்டாரு...”

”.... ....!”

”முஹம்மதோட நிலைமைய பார்க்கையில எனக்கு பரிதாபமா இருந்தது. ஜிப்ரீல்கிட்ட, நீங்க... போய் அவருக்கு ஆறுதலா சில வார்த்தைகளை சொல்லிட்டுவாங்கன்னு அனுப்பி வச்சேன்...”

“..... ...!”

“இந்த லூசு... ஏற்கெனவே நல்ல ஃபிகரு, அதுல இன்னும் ’மேக்கப்’ போட்ட அழகான பொம்பள மாதிரியே இருபான்ன்(ள்). அப்படியே அந்த பாறையிடுக்குல போக எல்லாமே விபரீதமா போயிருச்சு...”

“நடந்தது என்ன ...? சொல்லுங்க” என்றேன் ஆவலாக...,

“ஜிப்ரீல், தப்பிக்க வழியில்லாத முட்டுச்சந்தில் மாட்டிகிட்ட மாதிரி ஆயிருச்சு...”

“ஜிப்ரீலுக்குத்தான் பறக்கறதுக்கு இறக்கை இருக்கே... அங்கிருந்து தப்பிச்சிருக்கலாமே...?” என்றேன்.

”அந்த அளவுக்கு மூளையிருந்த இவள்(ன்) இப்படி கிடக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது”

”அப்படி என்ன முட்டாள்த்தனத்தை செய்தார்...?”

“இறக்கைகள் எதுக்கு இடைஞ்சாலாகன்னு... அத கழட்டி வச்சிட்டு போயிருக்கா... எத்தனை வருஷம் அடக்கிவச்சிருந்த வெறியோ தெரியல, புள்ளிமான் மாதிரி துள்ளித் திரிந்த ஜிப்ரீல,  கடிச்சு.. பிறாண்டி வரிக்குதிர... மாதிரி ஆக்கிட்டான்” என்றார் ஏக வசனத்தில்.

“என்ன பெரியவரே சொல்றீங்க... ஜிப்ரீல்தான் தன்னை மூச்சுத்திணற கட்டிப்பிடிச்சதா ஹதீஸ்ல எல்லாம் முஹம்மது சொல்லியிருக்காரு...? ஜிப்ரீல் மரியாதையில்லாம நடந்துகிட்டதாக நான்கூட எழுதியிருக்கேன்!” என்றேன்.

“இப்படித்தான் உண்மைகள் எல்லாமே தலைகீழா இருக்கு..!” என்றார்.

“சரி... நீங்க... அந்த முஹம்மதை உண்டு இல்லேன்னு ஆக்கியிருக்கலாமே...?”

“அதையேன் கேட்கற... அதற்குப் பின்னாடி நடந்ததுதான் அதவிடக் கொடுமை..!” என்று சலித்துக் கொண்டார்.

தொடரும்...


தஜ்ஜால்

Thursday 18 September 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 2

”^*^*^...!” 

என்று யாரோ என்னை அழைப்பதைப் போன்ற ஒலி கேட்டது.‘^*^*^’ எனது பெற்றோர்களால் எனக்கு வைக்கப்பட்ட பெயர் அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. சுயவிளம்பரம் செய்வது கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்பது மட்டுமே காரணம் (என்னது... நம்ப..மாட்டீங்களா...!?) நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் கிணற்றுக்குள்ளிருந்து அழைப்பதைப் போன்று தோன்றியது. சிறிது நேரத்தில்...

“த...ஜ்...ஜா...ல்..! எழுந்திரு”

என்று சற்று உரத்த ஒலி!  இம்முறை அருகிலிருப்பதைப் போலத் தோன்றியது.

எனது நெருங்கிய நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் எனது புனைப்பெயர் தெரியாது. இஸ்லாமை விமர்சிக்கக் கூடியவன் என்பதைத் தவிர, என் மனைவிக்குக்கூட எனது புனைப்பெயரோ அல்லது  நான் செய்து கொண்டிருக்கும் இந்தப் பணியைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது.

யாராக இருக்கும்...?

தூக்கக் கலக்கம் எங்கு இருக்கிறேன் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல்,

“...ம்ம்...! சொல்லுங்கள்” என்றவாறு பார்வையைக் கூர்மையாக்க..., 

ஏற்கெனவே பார்வைக் கோளாறு இதில் எங்கே பார்வையைக் கூர்மையாக்குவது? சரி... சரி.. இருக்கின்ற பார்வையைக் கூர்மையாக்கினேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருவரையும் காணவில்லை. யாராக இருக்கும்...?

“நா...ன்...தான்... அல்..லா...ஹ்..!” குரலில் வயதின் முதிர்ச்சி தெரிந்தது.

தூக்கம் என்னைவிட்டு விலகுவதாகத் தெரியவில்லை; விழிப்பதும் உறங்குவதுமாக இருந்தேன்.

“அல்லாஹ்வா...!  மன்னிக்கவும்! குரல் ஒலியைத் தவிர வேறெதையும் என்னால் அறியமுடியவில்லை” என்றேன்.

நண்பர்கள் யாராவது மறைந்திருந்து விளையாட்டு காண்பிக்கின்றனரா? மங்கலான வெளிச்சம் என்னால் எதையும் சரிவரக் காண முடியவில்லை.

”நான்தா…ப்பா…அல்லா..ஹ்..!” முதுமையை குரலிலிருக்கும் நடுக்கத்தை கொண்டு நன்றாகவே உணர முடிந்தது.

”நீங்கள் அல்லாஹ் அல்ல..!” என்றேன் நான்.

தூக்கம் கலைந்து சற்று தெளிவான நிலையில் இருந்தேன். அதே குரல் மீண்டும்...

”த…ஜ்…ஜா…ல்..! ”

இனம் தெரியாத இடத்தில் இருப்பதாகத் தோன்றியது. நான் பள்ளிவாசலில் அல்லவா இருந்தேன்? இப்பொழுது எங்கிருக்கிறேன், எங்கிருந்து குரல் எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் தெளிவாக அறிய முடியவில்லை.

நான் சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தினேன்.  எனக்கு அருகில் ஒருவரும்  இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.  குரல் திறந்தவெளியிருந்து வருவதைப் போன்றிருந்தது. யாராக இருந்தாலென்ன பேசித்தான் பார்ப்போமே!.

“நீங்கள் அல்லாஹ்வா?”

”ஆமாம்ப்…பா…” என்றது குரல் இயல்பான பேச்சு வழக்கில்,

”அசரீரீயாக இல்லாம… நேரடியாக என்னோட பார்வையில் தெரியற மாதிரி வந்தால் பரவாயில்லை!” என்றேன்.

கண்களுக்கு அந்த இருள் பழகிவிட்டதால், தொலைவில் சில உருவங்கள் அசைவது போலத் தெரிந்தது.

”நான் உனக்கு பக்கத்திலதான் இருக்கேன்… கொஞ்சம் பொறுமையா…இரு…!!! என்றவாறு, அரபியில் ஏதோ கட்டளைகளைப் பிறப்பிப்பது போலத் தோன்றியது.

திடீரென்று மிகப் பிரகாசமான வெளிச்சம் எங்கும் பரவ, நான் குரல் வந்து கொண்டிருந்த திசையை நோக்கினேன்.

எனக்கு சற்று தொலைவில், ஒளிவெள்ளத்தின் மத்தியில் ஏதோ ஒன்றை சிலர் சுமந்து கொண்டிருக்க அதில் முதியவரின் தோற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். கண்களைக் கூசச் செய்யும் பிரகாசம் அங்கு மேலும் பலர் இருக்கக் கூடும். அவர்களின் உருவ அமைப்பு மனிதர்களைப் போல இல்லாமல் சற்று பிரம்மாண்டமாக இருப்பதை யூகிக்க முடிந்தது. ஏதோ வித்தியாசம் தெரிகிறது எதையும் சரிவர என்னால் பார்க்க முடியவில்லை

மயக்கத்திலிருந்து எழுந்தவுடன் கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வியைச் சற்று தாமதமாகக் கேட்டேன். அதைக் கேட்கவில்லையென்றால் மயக்கத்திற்கு மரியாதையில்லாமல் போய்விடும்.

“நான் எங்கே இருக்கிறேன்?” என்றேன்.

“நீ…என்னோட இடத்திலதான் இருக்கற… தஜ்ஜால்!”

“அரபியில ஏதோ சொன்னீங்களே....?” என்று இழுத்தேன்

“அது.. பவர்  குறைவா இருந்தது அதனால சக்தியை கொஞ்சமாக கூட்டி வைக்க சொன்னேன்”

“இங்கே இருக்கிறவங்களுக்குத் தமிழ் தெரியாதா...?”

“இங்கே எல்லாருக்கும் எல்லா மொழியும் தெரியும். இருந்தாலும் அரபிதான் இங்கே அஃபிஸியல் லாங்வேஜ்!”

“விளையாடுனது போதும் பெரியவரே… நீங்க எல்லாம் யார்?”

“அட… போ…ப்பா… உண்மையச் சொன்னா நம்ப மாடேங்கற..! நான்தானப்பா அல்லாஹ்…!” என்றது குரல் பரிதாபமாக.

ஒப்புக் கொள்ளவில்லையன்றால் அம்முதியவர் அழுதே விடுவார் போலிருந்தது.

”நீங்க அல்லாஹ்தான்னு நான் எப்படி நம்பறது?”




”அல்லாஹ்கிட்டயே ஆதாரத்தை கேட்கிறயே இது உனக்கே நியாயமா இருக்கா?”

நான் சற்று தாழ்ந்த குரலில்,

“ஐயா… பெரியவரே நீங்க அல்லாஹ் இல்லைங்கறது எனக்குத் தெரியும்! ஏன்னா அல்லாஹ்வை மனிதர்களால் பார்க்க முடியாதுன்னு எங்க ஊர்ல முல்லாக்கள் வீதிக்கு வீதி மேடைபோட்டு லவுட்ஸ்பீக்கர் கிழிய கத்திக்கிட்டு இருக்கிறத நானே பல தடவைகள் கேட்டிருக்கேன்…!”

“அவங்க எப்படி என்னோட விருப்பத்தில் தலையிட முடியும்? அவங்க சொன்னா உண்மையாயிருமா? என்னை மனிதர்களால… பார்க்க முடியுமா… இல்லையாங்கிறத நான்தான் சொல்லனும். அவங்க இல்ல…!” என்றார் முதியவர்.

“மூஸாவின் சமூகத்தினர் அல்லாஹ்வை பார்க்க வேணும்னு சொன்னபோது அல்லாஹ் அவங்கள தண்டிச்சதாக (Q 2:55) குர்ஆன் சொல்லுது. அதனால மனிதர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவே முடியாதுன்னு சொல்லறாங்க!”

“மூஸாவோட சமுகத்தினர் தப்பு செய்ததால் அவங்களுக்கான நான் கொடுத்த தண்டனைதான் அது..!”

சுற்றிலும் பார்வையைச் செலுத்தினேன் முதியவரிடமிருந்து வெளிப்படும் ஒளி அந்தப் பகுதி முழுவதையும் பிரகாசிக்கச் செய்து கொண்டிருந்தது. இனம் புரியாத இடத்திலிருப்பதை என்னால் உணர முடிந்தது. எங்கும் ஒரே நிசப்தம்!

“உன்னால, என்னை இன்னும் நம்ப முடியல… இல்லையா?” பெரியவரின் குரல் கணீரென்று ஒளித்தது.

“ஆமாம்..!” என்றேன்.

“அல்லாஹ்வை உனக்குத் தெரியுமா… இதற்கு முன்னால வேற எங்கேயாவது… பார்த்திருக்கிறயா...?”

“இல்லை ..!”

“அப்புறம் எப்படி என்னை அல்லாஹ் இல்லைன்னு சொல்லற..?”

”அதுக்காக நீங்க சொல்லறதெல்லாம் நம்ப முடியுமா…?”

“நீ… இந்த ஆலிம்கள் எழுதினத …சொல்லறத… கேட்டதினாலத்தான்… இப்படி யோசிக்கிறேன்னு நினைக்கிறேன்!”

“மூஸாவுடைய தொல்லை தாங்க முடியாம.., அல்லாஹ் தன்னை வெளிப்படுத்தின போது அந்த ஒளிபட்டு மலையே சிதறிப் போனதா குர்ஆன்ல(Q 7:143)  படிச்சிருக்கேன்”

”மூஸாவால என்னைப் பார்க்க முடியாதுன்னு சொன்னதும் நான்தான், மலைய சிதற வைத்ததாகச் சொன்னதும் நான்தான்... இல்லைன்னு சொல்லல.. நான் மூஸாவிற்கு என்னை காண்பிச்ச போது குறிப்பிட்ட அந்த ஒரு மலை மட்டும்தான் சிதறிப்போனது ஒட்டுமொத்த பூமியுமில்ல...!”

“......!?”

முதியவர் தொடர்ந்து கொண்டிருந்தார்...

”மத்தவங்களால எப்பவுமே என்னைப் பார்க்கவே முடியாதுன்னு சொல்லியிருக்கேனா? யாரிடமும் எப்பொழுதுமே என்னைக் காண்பிக்காம இருக்கிறதுனால எனக்கு என்ன லாபம்?”

“அதை நீங்கதான் சொல்லனும்..!”

”அப்ப.. என்னை அல்லாஹ்ன்னு ஏத்துக்க..”

“ஆனால்..., “அல்லாஹ் பல திரைகளுக்கு அப்பால் இருந்தோ, தூதர்களின் வழியாகவோ அல்லது வஹீ அறிவித்தோ தவிர (Q 42:51) மனிதர்களுடன் உரையாடுவதில்லைன்னு முல்லாக்கள் சொல்லிகிட்டு திரியறாங்க!” என்றேன்.

“ஆமாம் நான்தான் அப்படிச் சொன்னேன். நான் நேரடியாக உரையாடுவதில்லைன்னு சொன்னத மட்டும்தான் நீ கவனிச்சிருகே! அதுல இன்னொரு செய்தியும் இருக்குப்பா...!”

“நான் கவனிக்காத செய்தியா...?”

“அதுல பல திரைகளுக்கு அப்பால்ன்னு ஒரு வாசகம் இருக்கு கவனிச்சியா..?”

”ஆமாம் இருக்குது..!”

“அப்படின்னா என்னோட ஆற்றல தடுக்கக் கூடிய பொருட்கள் இருக்குதுன்னுதானே அர்த்தம்..?”

“ஆமாம்..!”

 “நீ தர்க்கரீதியாக விவாதிக்கிறவன் தானே?”

“ஆமாம்”

”ஆதாமை என்னோட இந்த இரண்டு கைகளால்தான் படைச்சேன்(Q 38:75). என்னோட ஒளிபட்டால் சிதறிவிடும்னா, என்னோட கைகள் பட்டால் என்ன ஆகும்? ஆதாமின் உடல் சிதறி இருக்க வேண்டுமா... இல்லையா?”

“ஆமாம்... சரிதான்  குர்ஆனில் களிமண்ணோ அல்லது ஆதாமோ அல்லது அவரது துணைவியோ சிதறியதாக குர்ஆனில் கூறப்படவில்லை..!” என்றேன்.

முதியவரின் கேள்வி சரியாகவே தோன்றியது. இது ஏன் எனக்குத் தோன்றாமல் போயிற்று?

“களிமண்ணோ அல்லது ஆதாமோ ஏன் சிதறல? என்னுடைய படைப்பில்,  எதை எப்படி செய்ய வேணும்கிறத  நான்தான் முடிவு செய்யனும் முல்லாக்கள் அல்ல!  இவனுக சிந்திக்கவே மாட்டானுக.. சிந்திச்சு.. பாருங்க.. சிந்திச்சு.. பாருங்கன்னு சொன்னா எவன் கேட்கிறான்” என்றார் சலிப்பாக.

“... ...!”

“இன்னைக்கு மனுஷனுங்க எத்தனையோ கருவிகளை உருவாக்கி வச்சிருக்காங்க இல்லையா?”

”ஆமாம்..!” என்றேன்.

”நேரடியாகக் கண்ணுல பார்க்கமுடியாத காட்சிகளையெல்லாம் எப்படி பதிவு செய்யறீங்க...நீயே சொல்லு!” என்றார்

பெரியவர் எடக்கு மடக்காகப் பேசினாலும் அதில் அவரது வாதம் சரியாகவே இருந்தது. என்னுடைய வேலை அவர் செய்து கொண்டிருந்ததால் நான் அமைதியாக இருந்தேன்.

“நான் இவ்வளவு சொல்றேன் ஆன நம்பமாட்டேங்கற.. இதையெல்லாம்... நீயே பாரு...” என்றவாறு அங்குமிங்குமாக சில இடங்களை அந்தப் பெரியவர் சுட்டிக்காட்டிய பொழுதுதான் அவற்றைக் கவனித்தேன்.

“இப்படி இறைந்து கிடக்கிறதே...  இதெல்லாம் என்ன...?” என்றேன்

“அத்தனையும்.. தங்கம்.. வெள்ளி... வைரம் முத்து பவள ஆபரணங்கள்...! என்றார் சலிப்புடன் பெரியவர்.

ஆபரணங்கள் தட்டுமுட்டு சாமான்கள் மலை மலையா குவிந்து கிடந்தன. ஏதோ... வில்லங்கமான இடத்தில் சிக்கிக் கொண்டுவிட்டதாக மனம் எச்சரிக்கத் துவங்கியது.

”பெரியவரே...இத்தனைப் பொருட்களும் கேட்பாரில்லாம ஏன் இருக்குது?

”மனிதர்களுக்காக, சொர்க்கத்தில நான் செய்த தயாரிப்புகள்தான் இத்தனையும் (Q 35:33, 22:23). என்ன பண்ணறது ஒரு  பயகூட இத சீண்டல... இதவச்சு நாங்க என்ன பண்ணறதுன்னு, இதுக்கு ஏதாவது மதிப்பு இருக்கான்னு என்கிட்டயே திருப்பிக் கேட்கிறானுக. வீணாப் போகுதேன்னு மனசு கேட்காம  இங்க கொண்டு வந்திட்டேன் ” என்றார் பெரியவர்.

“என்னங்க.. பெரியவரே! சொர்க்கம் என்பது கொடுக்கல் வாங்கல் எதுவுமில்லாத எந்தத் தேவையுமில்லாத இடம்னு சொல்லறாங்க. அந்த மாதிரியான இடத்தில் இந்த உலோகங்களுக்கு எப்படி மதிப்பு இருக்க முடியும்?”

“நீ சொல்லறது சரிதான்... இந்த மனிதர்கள் உலகத்தில தங்கம்... தங்கம்னு அலையறானுகளே... அத நிறைய கொடுக்கலாம்னு திட்டம் போட்டேன் ஆனா...  இத நான் எதிர்பார்க்கல..! ”

இந்தப் பெரியவர்தான் அல்லாஹ்வா? நம்பவும் முடியவில்லை.  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை காரணம் முதியவரின் வற்புறுத்தல். 

“ஒரே... குஷ்ட்டமப்பா....!” என்ற கவுண்டரின் டயலாக்தான் நினைவிற்கு வந்தது. வெறும் ஆபரணக் குவியல்களை வைத்து இந்த முதியவரை அல்லாஹ் என்று முடிவு செய்வது சரியா? சரி.. வருவது வரட்டும் அல்லாஹ் என்றே தொடர்வது என்று முடிவு செய்தேன்.

“நீ...தான்....” என்று துவங்கிய வார்த்தை நின்றுவிட்டது.

முஸ்லீம்கள் அல்லாஹ்வை ஒருமையில் அழைப்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வை ’நீங்கள்’ என்று மரியாதையாக அழைத்தால் அவனது ஏகத்துவம் கெட்டுவிடுமாம். அவன் அதெற்கென்று பிரத்தியேகமாக ஒரு நரகத்தில் போட்டுத் தொலைத்தால் என்ன செய்வது என்ற அச்சத்தினால்தான் அல்லாஹ்வை ’அவன்’ ’இவன்’ ’நீ’ ’வா’ ’போ’ என்றெல்லாம் ஒருமையில் அழைப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில், அரபி இலக்கணத்தில் பன்மைச் சொல் கிடையாது எல்லாம் ஒருமைதான். அதனால் அல்லாஹ்வும் ஒருமையில் அழைக்கப்படுகிறான்.  ஆனால் இந்த முல்லாக்கள் விடுகிற ஏகத்துவ பீலா இருக்கிறதே...! தாங்க முடியலட...சாமி..! என்று அல்லாஹ்வே அலறியடித்து ஓடும் அளவிற்கு சென்றுவிட்டது.

ஆனால் முஹம்மதைப்பற்றி குறிப்பிடும்பொழுது இந்த அரபி இலக்கணம் இலக்கியத்தை எல்லாம் தூர எறிந்துவிட்டு கண்ணுமணி பொண்ணுமணி என்ற  அடைமொழிகளுடன் பன்மையில் மரியாதையாக அழைப்பார்கள். ஒருவேளை ஒன்றிற்கு மேற்பட்ட முஹம்மது இருந்தனரோ என்னவோ!? இந்த குருட்டுச் சூழலில் வளர்ந்ததால் அல்லாஹ்வை நானும் ஒருமையில் அழைத்து, வாழிபாடுகள், பிரார்த்தனைகள் என்றெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் இங்கு வயது முதிர்ந்த ஒருவரை, ஒருமையில் அழைக்க எனது மனம் இடம் தரவில்லை. போதாக்குறைக்கு ’...ங்க’ என்றழைக்கும் ஊர்வழக்கு வேறு.

எனவே திருத்தமாக..,

“நீங்க.. தான் அல்லாஹ்வா...!?” என்றேன்.

“அப்பாடா... இப்பவாவது... என்னை அல்லாஹ்ன்னு ஒப்புக்கொள்ள மனசு வந்ததே!” என்ற பொழுது குரலில் ஒரு நிறைவு தெரிந்தது.

“சரி.. எனக்கு என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லுங்க..!” என்றேன்.

பெரியவரி(அல்லாஹ்வி)டமிருந்து வெளியாகும் ஒளி சற்று குறைய நான் எனது பார்வையைக் கூர்மையாக்கி, முதியவர் இருக்கும் திசையை நோக்கினேன். இப்பொழுது காட்சி முன்பைவிட சற்று நன்றாகவே தெரிந்தது.

வயோதிகர்களைப் போன்ற தோன்றம் கொண்ட சிலர் பெருமூச்சு விட்டபடி சற்றேறக்குறைய தட்டை வடிவத்தில்  பாறை போன்ற ஒன்றை சுமந்து கொண்டிருந்தனர். பெரியவர் அதன் மீது ’குத்தவைத்து’ அமர்ந்திருந்தார். சந்தேகம் எதற்கு பேசமல் எண்ணிப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்தேன்.

சரியாக எட்டு பேர்!  (Q 40:7, 69:17 )

இல்லை எட்டு கிழவர்கள்! இல்லை எட்டு கிழவிகள்!

ச்சே ...என்ன குழப்பம் இது!

இவர்கள் கிழவர்களா இல்லை கிழவிகளா ஒன்றுமே விளங்கவில்லை.

“அய்யா... இவங்க எல்லாம் யார்? இது என்ன இடம்?”  என்றேன்.

தொடரும்...


தஜ்ஜால்