Sunday 23 November 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 6

”கடவுள்னு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெரியவரைப் பார்த்தேன்னு, மனுஷன மாதிரித் தோற்றம் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமா... சினிமாவில வர்றமாதிரி லைட்செட்டிங்ஸ்கெல்லாம் வைத்திருந்தார்னு சொல்லவேன்!” என்றேன்.

பெரியவர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்து,

“நீ அடங்கவே மாட்டியா?”

”உண்மையைச் சொல்லனும்னா... நீங்கதான் அல்லது நீங்க மட்டும்தான் கடவுளான்னு இந்த நிமிஷம்வரை எனக்குத் தெரியாது. நீங்கள் உங்களை கடவுள்-அல்லாஹ்னு அறிமுகம் செய்துகிட்டீங்க அவ்வளவுதான். இந்த மாதிரி சொல்லிக்கிறவங்களை தினமும் ரெண்டுபேரையாவது பார்க்கறேன்! இந்த சந்திப்பைப்பத்தி சொன்னால் முஸ்லீம்களே நம்பமாட்டாங்க, இதுல மத்தவங்களைபற்றி கேட்கவா வேணும்? உங்களோட மதிப்பு அந்தளவுக்குத்தான் இருக்கு நினைக்கிறேன்!”

“என்னைத் தவிர வேறு கடவுளில்லை!”

”உலகத்தில் எத்தனைவிதமான கடவுள் நம்பிக்கை இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?

“நம்பிக்கைகள் எத்தனை வேணுமானாலும் இருக்கலாம்... ஆனால், என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை!” என்றார்.

“இப்படித்தான் ஒவ்வொருத்தரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க! பாவம் மனுஷங்க இந்தக் கடவுளர்களால் குழம்பிப் போய் பைத்தியமாகி மண்டைய பிச்சிக்கிட்டு திரியறாங்க!” என்றேன்.

“தஜ்ஜால்... திரும்பவும் கடவுள்கள்னு சொல்லாதே! நான் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன். நான் மட்டுதான் கடவுள்!”என்றார்.

“எந்தவிதமான தேடுதல்களோ, ஆதாரங்களோ இல்லாம வெத்து வார்த்தைகளை மட்டும் வச்சிகிட்டு ஒரு கருத்தை எப்படி ஏத்துக்க முடியும்?”

”என்னோட வார்த்தைகளில் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்றார்.

“... ...!”

நான் ஒன்றுமே கூறாமல் அமைதியாக இருந்தேன். பெரியவர் மறுபடியும்,

“பதில் சொல்லு...!” என்று எனது முகத்தை ஆர்வமாகப் பார்த்தார்.

பெரியவரைப் பார்க்க பாவமாக இருந்தது. நான் எப்படியெல்லாமோ அவரிடம் உரையாடியபோதும் ஒரே ஒரு முறைமட்டும்தான் பொறுமையிழந்தார். நம்பிக்கையில்லை என்பதை இதைவிட நாசுக்காக எப்படிச் சொல்லமுடியும். இப்படி நச்சரிக்கிறார். ’வாயால வடை சுடறது’ன்னு சொல்லுவாங்களே அது எப்பவுமே குர்ஆனுக்குப் பொருந்தும், அது இந்தப் பெரியவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

”உங்களை மட்டும்தான் வணங்க வேண்டும்னு சொன்னீங்களே, அது எதுவுக்கு? அதனால உங்களுக்கு என்ன கிடைக்குது?” என்று உரையாடலை வேறு திசைக்கு மாற்றினேன்.

”தொழுகை மானக்கேடானவற்றைத் தடுக்கிறது” என்றார்

“மானக்கேடானவற்றைனு எதையெல்லாம் எப்படி வரைமுறை செய்யறீங்க?” என்றேன்.

“மானக்கேடானவைகள் என்றால் மானக்கேடான அனைத்தும்தான்!”

“அய்யா...! மானம்... அதாவது தனிமனித அல்லது சமுதாய ஒழுக்கங்கள் மீறுதலைத்தான் மானக்கேடுன்னு சொல்லறீங்கனு நினைக்கிறேன்!”

“ஆமாம்... அதேதான்!”

”ஒருசிலதைத் தவிர, தனிமனித அல்லது சமுதாய ஒழுக்கங்கள் சமுதாயத்துக்கு சமுதாயம், காலத்துக்கு காலம் மாறக்கூடியது. அதனால் உங்க கருத்துப்படி மானக்கேடானவைகள் என்றால் என்னான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்” என்றேன்.

“அதத்தான் குர்ஆன்ல  வரைமுறை செய்திருக்கிறேனே?”  என்றார்.

”அல்லாஹ் மானக்கேடாக நினைக்கிற சிலவற்றை குர்ஆனில இருக்கிறது தெரியும்; அதுவும்கூட அன்றைய சூழலுக்கும், அங்கு நிலவிய நாகரீகத்தையும் கருத்தில வைத்து சொல்லப்பட்டவைகளாகத்தான் தெரியுது”

“குர்ஆனில் சொல்லப்பட்டவை எல்லாமே எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதுதான்!”

“திருமணமே செய்யாம, அடிமைப்பெண்களோட கும்மாளம் போடலாம் கூத்தடிக்கலாம்னு சொல்லியிருக்கீங்களே அதுவா?”

“நீ இப்படி அநாகரீகமாக பேசக்கூடாது!”

”சரி...  அடிமைப்பெண்கள்னா யாரு ஹூரிலீன்கள் மாதிரி ‘அது’க்காகவே படைச்சிருக்கீங்களா என்ன? அவங்களும் எல்லோரையும் போல சாதரண மனுஷங்க தானே?”

“அவங்க சாதரண மனுஷங்கதான் நான் இல்லைனு சொல்லல ஆனா, அவங்க முஹம்மதுக்கு எதிரியாக இருந்தவங்க! அன்றைய காலகட்டத்தில, போர்களில் எதிரி நாட்டுப் பெண்களையும் உடைமைகளையும் கைப்பற்றுவது பரவலான வழமையாக இருந்தது. அதை திருத்தி  வரைமுறை செய்தேன்!”

“என்னென்ன திருத்தம் செய்தீங்க...?”

”அடிமைகளைக் கண்ணியமாக நடத்தனும். விரும்பினால் அடிமைப்பெண்களை திருமணம் செய்து கொள்ளாலம்னு சொல்லியிருக்கேன்”

“அவர்கள் எப்படி திடீரென்று எல்லாவற்றையும் மறந்து சம்பந்தமே இல்லாத அந்நியர்கள்கூட கூடுவாங்கனு சொல்லறீங்க?”

”... ...!?”

“இன்னைக்கு ஒரு எதிரி நாட்டுக்காரன் கைப்பற்றுவான், நாளைக்கு ஒரு எதிரிநாட்டுக்காரன் கைப்பற்றுவான், இன்னொருநாள் இன்னொருத்தன்... இப்படியே தொடர்ந்தால்... அவள் எத்தனையேருக்கு அடிமையாகறது? இல்லை எத்தனை பேர்களுடன் அவள் படுக்க வேண்டும்?  பெண்களுக்கென்று தனிப்பட்ட எந்த உணர்வும் இருக்கக் கூடாதா? இப்படி ஆண்களுக்கு பாலியல் ஊழியம் செய்யறது மட்டும்தான் பெண்களை படைச்சிருக்கீங்களா?”

“... ...!?”
”இதுதான் நீங்க கற்பித்த  ஒழுக்கமா?”

“இது நான் அனுதித்ததால விபச்சாரமாகது. இந்த அனுமதியைக் கடந்து தேடினால்தான் அது விபச்சாரம்”

“ISIS ஜிஹாதிகள், யஜீதி, கிறிஸ்தவ பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்னபனை செய்யும் செய்திகள் வெளியாகும் பொழுது, எங்க ஊர்ல இருக்கிற முல்லாக்கள் அதை மழுப்பி மறைக்கிறாங்க, சிலர் அதை இஸ்லாத்திற்கு எதிரானதாக சொல்லறாங்க. இன்றைக்கு அந்த அனுமதிகளை செயல்படுத்தக் கூடாதுன்னு சொல்லறாங்களே?”




”குர்ஆனில் நான் சொன்னவைகள் உலகம் அழியற வரைக்கும் செயல்படுத்தக் கூடியவைகள் அத ரத்து செய்யற உரிமை மனிதர்களுக்கு இல்லை. அந்த உரிமைகளை இன்றைக்கும் செயல்படுத்தலாம்!” என்றார்.

“ISIS ஜிஹாதிகள், யஜீதி, கிறிஸ்தவப் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிச்சது, விற்பனை செய்தது சரிதான் சொல்லறீங்களா?”

“ஆமாம் அவங்க குர்ஆனின் கட்டளைப்படிதான் செய்ததாகத்தான் கருத முடியும்!”  என்று கூறியவாறு அருகிலிருந்த படிக்கட்டில் இறங்கினார்.

“அய்யா இது என்ன இடம்?” என்றேன்

“சொர்க்கத்தை பார்க்கனும்னு சொன்னியே ...!”



பாழடைந்த படிக்கட்டு எந்த நிமிடமும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. முதியவர், எனது தோளைப்பற்றிக் கொண்டார். படிக்கட்டுகள் நீண்டு கொண்டே இருந்தது.

“என்ன இது இத்தனைப் படிக்கட்டுகள்” என்றேன்.

“பிரபஞ்சத்தைப் படைக்கறதுக்கு முன்னமே செய்தது.!” என்றார்.

“மனிதனை உருவாக்க களிமண்ணைப் பயன்படுத்தினதாக குர்ஆன்ல சொல்லியிருக்கு! இதையெல்லாம் எப்படி செய்தீங்க? உங்களுக்கு குயவன் வேலையுடன் கொத்தனார் வேலையும் தெரியுமா?”

என்னை முறைத்து பார்த்தவாறு,

“கிண்டல் செய்யறியா?” என்றார்

“மனிதன் இதையெல்லாம் கற்றுக் கொள்ள நிறைய வருஷம் ஆச்சு, உங்க கதை எப்படினு தெரிஞ்சுக்கத்தான்!”

“மனிதனுக்கு அதையெல்லாம் கற்றுக் கொடுத்ததே நான்தான்!”

படிக்கட்டு நீ...நீ...ஈ...ண்டு கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தூரம் போகுமோ தெரியவில்லை. உரையாடலும் தொடர்ந்து கொண்டிருந்ததால் அவ்வளவாக எனக்கு சிரமம் தெரியவில்லை.

“ஓ... அப்படியா எல்லாமே நீங்க கற்றுக் கொடுத்ததுதானா? இத்தனை நாளா எனக்கு இது தெரியவே இல்லை!”

“மனிதனோட ஒவ்வொரு அறிவும் நான் கொடுத்ததுதான்” என்றார் உற்சாகமாக.

“இரக்கமில்லாமை, நயவஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, சுயநலம், பேராசை, காமம்- இச்சை, கோபம் இதோட விளைவுகளான திருட்டு, கொலை, கற்பழிப்பு, ... இதெல்லாம் நீங்க கற்றுக் கொடுத்ததுதானா?”

”அதெல்லாம் ஷைத்தானோட வேலை!” என்றார்.

“ஷைத்தான் எங்கிருந்து இந்தக் கெட்ட குணங்களை கற்றுக் கொண்டான்? அவன் எதுக்காக இதையெல்லாம் மனுஷங்களுக்குச் சொல்லிக் கொடுக்கனும்?”

“ஷைத்தான், எனக்கும் மனிதனுக்கும் இடையில விரோதத்தை உண்டாக்க நினைக்கிறான். சிந்திக்கத் தெரியாதவன் ஷைத்தானோட வலையில விழுந்திடறாங்க!” என்றார்.

“சரி... இதனால ஷைத்தானுக்கு என்ன லாபம்?”

“ எல்லாம்... அவனோட தற்பெருமை, கர்வத்தினால வந்தது. என்மேல இருக்கிற கோபத்தை நான் படைச்ச மனுஷன் மேல காண்பிக்கிறான்!” என்று கூறியவாறு நின்று கொண்டார். அவர் மீதிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒளியின் அளவு குறைந்திருந்தது.

“அய்யா என்ன ஆச்சு?” என்றேன்.

“படிக்கட்டுல் இறங்க முடியல, கொஞ்சம் பொறு..!” என்று பெருமூச்சு வாங்கியவாறு, முழங்கால்களைப் பிடித்து அங்கேயே உட்கார்ந்து கொண்டார்.

எனக்குப் பார்க்க பரிதாபமாக இருந்தது. நானும் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.

“அய்யா... நான் பிடிச்சு விடட்டுமா?” என்றவாறு, கால்களைப் பிடிக்கப் போனேன்.

“இல்லை... வேண்டாம்...!” என்று என்னைத் தடுத்து, தனது கைகால்களை நீட்டி, உடலைத் தடவியவாறு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நான் அவர் முகத்தையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். முகமெல்லாம் பார்க்க அமைதியாக, நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் குர்ஆனில் எதற்காக இத்தனை வில்லத்தனம் காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. இதையும் எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை என்னுள்.

சிறிது நேரத்தில் அவர் பழைய நிலைமைக்குத் திரும்பினார். மெல்ல எழுந்து நின்றவர்,

“ம்ம்... வா போகலாம்!” என்றார்.

”ஷைத்தானுக்கும் உங்களுக்கும் நடக்கிற போட்டியில மனுஷனை எதுக்கு பலிகடாவாக்கினீங்க?” என்று மீண்டும் உரையாடலைத் துவங்கினேன்.

“இத்தனையுமே எல்லாமே நான் மனுஷனைப் படைக்கப் போய் உண்டான பிரச்சினைதான்!” என்றார்.

“சரி ஷைத்தானைப் படைக்கும் போது, அவன் உங்கள் கைகளை மீறிவிடுவான்னு உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியும்! அவனுக்கு நான் அவகாசம் குடுத்திருக்கேன்(Q7:15)!”

“எதுக்கு அவன் திருந்தறதுக்காகவா, இல்லை மனிதர்களை வழிகெடுக்கறதுக்காகவா?”

“இரண்டிற்காகவும்தான்!”

“இத்தனை தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி மனிதர்களைப் திருத்த முற்சிக்கிறதவிட ஒரே ஒரு ஷைத்தானைத் திருத்திருந்தாலே போதும்! அவனை உங்களால் ஜெயிக்க முடியாது!”

“இல்லை...! அவன் வெற்றிபெறமாட்டான்!” 

“ஷைத்தானின் வலையில் விழுந்தவங்களை என்ன செய்வீங்க?”

“இதில என்ன சந்தேகம்! நரகத்துக்குத்தான்”

“இன்னைக்கு இருக்கிற மக்கள் தொகையில் முஸ்லீம்கள் சுமாரா 21 சதவீதம் இருப்பாங்க. மீதி இருக்கிறவங்க எல்லோருமே ஷைத்தானின் வலையில விழுந்தவங்க, அப்படித்தானே?”

“ஆமாம்!”

”நீங்களே சிந்திச்சுப் பார்த்து சொல்லுங்க. வெற்றி யாருக்கு?”

“இல்லை என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது!”

“அய்யா... கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாம ஷைத்தானுக்குத்தான் வெற்றி!”

“இது வெற்றியில்ல... மனிதனுடைய தோல்வி!!!”

“நீங்க எப்படி வேணுமானாலும் சொல்லலாம். ஆனால் ஷைத்தான் உங்களை ஜெயிச்சுட்டான்!”

”ஷைத்தானிய குணங்கள் அழிவையே தரும்!”

”சரி... நீங்க சொல்லும் ஷைத்தானிய குணங்கள் அவனுக்குள் எப்படி வந்தது? அவனாகவே தனக்குள்ள உருவாக்கினானா?”

“... ...!?”

“அப்படி அவனால் உருக்கிக் கொள்ள முடியும்னா அவனையும் படைப்பாளன்னு சொல்லலாமே?”

“அவனையே நான்தான் படைச்சேன்; அவனை என்னால் அழிக்கவும் முடியும்! அவன் எப்படிப் படைப்பளன் ஆக முடியும்?”

“உங்களால மிகவும் வெறுக்கப்படுற அதாவது ஷைத்தானால் மனிதனுக்குள் ஏற்றப்பட்ட இந்த கெட்ட தன்மைகள் எங்கிருந்து உருவானது அப்படீங்கிறதான் என்னோட கேள்வி!”

“... ...!?”

“நீங்க மட்டும்தான் படைப்பளர்னு சொன்னால் சந்தேகமே இல்லாம சொல்லறேன் இரக்கமில்லாமை, நயவஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, சுயநலம், பேராசை, காமம்-இச்சை,... இதெல்லாமே உங்க தன்மைகளில் இருக்கிறதுதான்!”

“சுத்தி... சுத்தி... நீ என்னையே குற்றவாளி ஆக்கற!” என்றார்.

“அய்யா... நீங்க தப்பாக புரிஞ்சிக்கிறீங்க! நானாக எதையும் சொல்லல... நீங்களும், உங்க அடியார்களும் சொல்லறதிலிருந்துதான் இந்த முடிவுக்கு வர்றேன்!”

ஒருவழியாக நீண்ட நேரத்திற்குப்பிறகு படிக்கட்டு பயணம் ஒரு முடிவிற்கு வந்தது. பெரியவர் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டார்.

“அய்யா இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?” என்றேன்.

மேலும்கீழும் மூச்சு வாங்கியபடி,

“அதோ... அங்கே தெரியுது பார்” என்று சுட்டிக்காட்டினார்.

சற்று தொலைவில் நிறைய கட்டிடங்கள் தெரிந்தது. இருவரும் அவற்றை நோக்கி நடக்கத் துவங்கினோம். அருகில் செல்லச் செல்ல கட்டிடங்களின் பிரம்மாண்டம் புரிந்தது. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இடையே மிக நீண்ட இடைவெளி இருந்தது. எங்களுக்கு அருகிலிருந்த ஒரு கட்டிடத்தை நெருங்கினோம்.




திகில் சினிமாவில் வரும் ‘பேய் மாளிகையை’ நினைவூட்டியது. பிரபஞ்சத்தை படைப்பதற்கு(!) முன்னமே கட்டியிருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

சொர்க்கத்திற்கு அருகில் செல்லச் செல்ல.. கூச்சலும் குழப்பமுமாக களேபரமாக குழாயடிச் சண்டையே பரவாயில்லை எனத் தோன்றுமளவிற்கு சத்தமாக இருந்தது. நான் பெரியவரின் முகத்தைப் பார்த்தேன்.

“நீ என்ன கேட்கப் போறேன்னு தெரியும் நானே சொல்லறேன்”

“ம்..ம்ம் சொல்லுங்க...!” என்றேன்.

“... அது... சொர்க்கவாசி ஆண்கள் வரிசையில நிற்கறாங்க அவங்களுக்குள்ள சலசலப்பு!” என்றார்

நான் மறுபடியும் அவரைப் பார்த்தேன்.

“பிரச்சினை ஒன்னுமில்லை. ஹூரிலீன்கள் கொஞ்சம் பற்றாக்குறை!”

“என்னது...? ஹூரிலீன்..கள்... பற்றாக்குறையா... ...?”

”எதுக்கு... இப்படி... சத்தம்போட்டு கத்தறே?” என்றார்.

“சரி... சரி... எத்தனை முக்கியமான விஷயம் இவ்வளவு சாதரணமா சொல்லறீங்க! ஏன் அன்ன ஆச்சு?” என்றேன்.

”ஜிஹாதிகள் எண்ணிக்கை இப்படிப் பெருகும்னு நான் கனவா கண்டேன்!  கொல்லப்பட்டவனும் தன்னை ஜிஹாதின்னு சொல்லறான், கொல்லறவனும் தன்னை ஜிஹாதின்னு சொல்லறான். இங்க இவனுக பஞ்சாயத்தை தீர்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிறுது. என்னை என்னதான் பண்ணச் சொல்லறே?”

“... ...!?”

“பொடிப் பசங்கள்ல இருந்து வயதான கிழவிகள்வரைக்கும் தங்கள் ஜிஹாதின்னு சொல்லி வாதம் செய்தால் ஒரு கடவுளால என்னதான் செய்யமுடியும்?”

“அவர்கள் விரும்பியது கிடைக்கும், ஒவ்வொருத்தருக்கும் 72 ஐட்டங்களக் கொடுக்கறத வாக்கு கொடுத்தீங்க?”

“இல்லைனு சொல்லவில்லை. அவர்கள் விரும்பியது கிடைக்கும் ஆனால் வரிசையில் நிற்க வேண்டும்! 1500 வருஷத்திற்கு முன்ன இருந்த நிலைமை வேறு. இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?”

“அதனால..?”

“வேறென்ன... ரேஷன்... ஷிஃப்ட்... முறைய செயல்படுத்திவிடேன்!”

”என்னது ஹூரிலீன்களுக்கு ஷிஃப்ட் முறையா...?

“ஆமாம் ’அது’க்குதான் வரிசையில நிக்கிறாங்க...!”

“கூடிய சீக்கிரத்தில் 8 மணிநேர வேலை, Over time, PF, ESIனு எல்லாத்தையும் கொண்டுவந்திடுவீங்கனு நினைக்கிறேன்!”

“வா.. உள்ள போய் பார்க்கலாம்!” என்று கையைப் பிடித்து இழுத்தார்.

“இல்லை... வேண்டாம்... அந்தக் கேவலத்தை பார்க்க விரும்பல!  நரகம் எங்க இருக்கு?”என்றேன்

“அது பக்கத்து காம்பவுண்ட்தான்!” என்றார்.

“என்னை அங்க கூட்டிகிட்டு போங்க!” என்றேன்

“வா போகலாம்..!” என்றவாறு நடக்கத் துவங்கினார்.

தூரத்தில் நெருப்பு எரிவது தெரிந்தது. இவரும் அதன் அருகில் நெருங்கினோம். மிக பிரம்மாண்டமான நெருப்பு ஆனால் என்னால் வெப்பத்தை உணரமுடியவில்லை.

“என்ன இங்கே இத்தனை அமைதியாக இருக்கு?” என்றேன்.

“மனுஷங்க எல்லோரும் கீழ்தளத்துக்கு போயிருப்பாங்க... அதனால அமைதியா இருக்கு நினைக்கிறேன்! உன்னால நரகத்தோட வெப்பத்தை உணர முடியுதா?” என்றார்.

”இல்லை...!”

“இல்லையா..?” என்று அதிர்ந்தார்.

“ஆமாம்..! நான் நம்பிக்கைகளில் இருந்த காலத்தில்கூட உங்க சொர்கத்தை நினைத்து என்றைக்குமே நான் ஆசைப்பட்டதுமில்லை. நரகத்தைக் நினைத்து கொஞ்சமும் பயந்ததில்லை!”

“என்ன..?”

“கேடுகெட்ட உங்க சொர்க்கத்தைவிட இந்த நரகமே மேலானது..!” என்றவாறு நரகத்திற்குள் பாய்ந்தேன்.

“அவர்... ஏய்.. என்ன காரியம் செய்திட்டே...?” என்று கத்தியவாறு, என்னைப் பிடிக்க கைகளை நீட்டினார். 

முடியவில்லை! நான் கீழே சென்று கொண்டிருந்தேன் முதியவரின் உருவம் கண்களிலிருந்து மறையத் துவங்கியது.
மிதப்பது போலிந்தது.

முஹம்மதை சந்திக்க வேண்டுமென்று நினைத்தது நினைவிற்கு வந்தது. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?

நரகம் இத்தனை மென்மையாக, குளிராக இருக்குமா?

“ஏசியை  ஆஃப் பண்ணு..!” என்று ஒரு பெண்குரல் கேட்டது.

”என்னது நரகத்திலேயும் ஏசியா?”  என்றேன். ஆமாம்  இந்தக் குரலை இதற்கு முன்பே கேட்டிருக்கிறேன். எனக்கு நன்கு அறிமுகமான குரல்!

அட எனது துணையாரின் குரல்!

“அவரும் நரகத்திற்கு வந்துவிட்டாரா? என்ன கொடுமையாக இருக்கிறது அவர் பெரிய ஈமான்தாரியாயிற்றே? என்ற சிந்தனை என்னுள்.

என்னை யாரோ பிடித்து உலுக்குவது போல் இருந்தது.

“எழுந்திரிங்க...!” என்று மீண்டும் துணைவியாரின் குரல்.

நரகம் கண்களிருந்து சட்டென மறைந்து! நான் மருத்துவமனையில் இருப்பதை உணர முடிந்தது.

“என்னைக்காவது ஒரு நாள்தான் பள்ளிவாசலுக்கு போகறது. போனாலும் ஒழுங்காகத் தொழுகாமல் போய்த் தூங்கவேண்டியது!” என்று புலம்பிக் கொண்டே நான் படுத்திருந்த படுக்கையை சரி செய்து கொண்டிருந்தார்.


“நான்... தூங்கினேனா?” என்றேன்


“தூங்காம...?”


“அடிப்பாவி..! இவனுக போட்ட ‘பாம்’ல செத்துப் பொழைச்சி வந்திருக்கேன். செத்த எலி, பெருச்சாலிகளை திங்கறனுகளோ என்னவோ?” என்றேன்.


”உங்களுக்கு, அவங்கள கரிச்சுக் கொட்டலைனா தூக்கமே வராது!” என்று தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் அப்படித்தான்!


நான் கண் விழித்ததும் என்னை பார்த்து, “இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!” என்று கண்ணாடியைக் கழட்டியவாறு சொல்லும் மருத்துவர் இல்லாதது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது.



நான் கண்களை மீண்டும் மூடினேன். பெரியவர் வரவில்லை!



தஜ்ஜால்

Wednesday 12 November 2014

மீண்டும் ஒரு மிஹ்ராஜ் - 5

“ஏன்.. என்ன ஆச்சு..? என்றேன்.


”ஒன்னுமில்லை..! என்றார்.


”அல்லாஹ், ஜிஹாதிகளை மிகவும் விரும்புவதாகப் படித்திருக்கிறேன்.ஏன் அது உண்மையில்லையா?”

“மத்தவங்களைவிட ஜிஹாதிகளை உயர்வாகக் சொன்னது நான்தான்” என்றார்.


“ஜிஹாதிகளால் உங்களுக்கு என்ன லாபம்?”


“அவர்கள் உன்னதமானவர்கள் இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும்.எடுக்கவும் துணிந்தவர்கள்.அவங்களை மற்றவங்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்ட நினைத்தேன்.”

”அவங்க தங்களோட உடலையும், உயிரையும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் அது அவங்களோட தனிப்பட்ட உரிமை.அடுத்தவங்க உயிரை எடுக்கறதுக்கு இவனுக யார்?உயிரை மட்டுமா எடுக்கறானுக, உடைமைகளையும் கொள்ளையடிக்கிறாங்க!”




”அதைக் கொள்ளைன்னு கேவலம் பண்ணாத.. அது கனீமத்!(ganimat-போர்களில் கிடைக்கும் பொருட்கள்) நான் அவர்களுக்குக் கொடுத்தது இறைநம்பிக்கை உலகில் நிலைபெறனும்னா இந்த மாதிரி தேவைகள் இருக்கு!”







”உங்க ஜிஹாதிகளைப் பார்த்து மத்தவங்களும் ஆளுக்கொரு குரூப்பை அதேமாதிரி ஃபார்ம் பண்ணி வச்சிருக்கானுக. அவங்களும் இறைநம்பிக்கையை மட்டுமல்ல தேசபக்தியையும் முன்னிறுத்திதான் போராடராங்க.அவங்க ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள்! அவங்களையும் நீங்க கட்டாயமாக ஜிஹாதிகள் கணக்கில சேர்த்து சொர்க்கலோக சல்லாபங்களை வழங்கனும்!”



”நீ யாரைச் சொல்லற?”


“எங்க ஊர்ல ஆன்மீகப் பணியோட, தேசப்பணியில் ஈடுபட்டு நாட்டுக்கு சேவை செய்யற எத்தனை குரூப் இருக்கு தெரியுமா?”


”… …?!”


”29-11-1997,14-02-1998 கோயமுத்தூர்ல இந்த ஜிஹாதிகளோட மோதல் நடந்தது. இதுல நவம்பர் 29ல் இருந்து டிசம்பர் 1 க்குள் அந்த மூனு நாள்ல,  ஏறக்குறைய அன்றைய மதிப்புக்கு ரூபாய் 70 கோடிக்கு நம்ம ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகளுக்கு கனீமத் கிடைச்சது, கூடவே 20 பேரோட உயிரும் கிடைச்சிருக்குன்னா பார்த்துக்கங்க! அட அவ்வளவு ஏன், அன்றைக்கு கோவையில நடந்த தாக்குதல்ல ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள், கனீமத் பொருட்களை கைப்பற்றுவதை நான் நேர்லயே பார்த்திருக்கேன். ஒரு இத்துப்போன டீக்கடையில இருந்த பழைய பிஸ்கட்டைக்கூட விடலன்னா பார்த்துக்கங்க!”


“ஏய்…! நீ என்னத்தை உளறிகிட்டு இருக்கே!”




”அப்புறம் 14-02-1998-ல் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்த, தேசபக்தர்களின் ஜிஹாத் நடவடிக்கையிலும் ஏறக்குறைய ரூபாய்100 கோடிக்கு மதிப்புள்ள கனீமத் பொருள்களோட 58 பேரோட உயிர்களும் கிடைச்சதாம். அன்னைக்கும் இந்த ஜிஹாதிகளோட நடவடிக்கைகளை, நான் நேர்லையே பார்த்தேன். எல்லாத்தையும் விட தேசபக்தி ஜிஹாதிகளுக்கு  குஜராத்தில கிடைச்ச அன்ஃபால் (போர்களில் கிடைக்கும் பொருட்கள்)பற்றியும் உயிர்களைப்பத்தியும் உங்களுக்கே ரொம்ப நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்.”




“இதெல்லாம் ஜிஹாத் இல்ல! மதவெறிபிடிச்சவங்க... திட்டம் போட்டு செய்த கலவரம்! இதைப் போய் ஜிஹாத்னு சொல்லற நீ என்ன… லூஸா?” என்று எரிந்து விழுந்தார் பெரியவர்.


“இதென்ன அநியாயமா இருக்கு முஹம்மது, அன்னைக்கு குறைஷிகள், யூதர்கள், கிறிதவர்களுக்கும் இதையேதான் செய்தார்.இன்னைக்கு அந்த ’சுன்னா’வை கொஞ்சமும் தவறாம தலீபான்களும், ISIS ஜிஹாதிகளும் கடைபிடிக்கறாங்க!”


”… …!”


ஆக ஜிஹாதிகளும், ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகளும் கடவுளோட பேரைச் சொல்லிதான் கொலை செய்யறாங்கள், கொள்ளையடிக்கறாங்க, கற்பழிக்கிறாங்க. இந்த குரூப்ல ஒன்றை மட்டும் எப்படி புனிதமானத சொல்லறது?”


”உன்னோட உளறல கொஞ்சம் நிறுத்தறியா…? ஜிஹாதிகள் எனக்காக உயிரைத் தியாகம் செய்யறவங்க!”


”நம்ம ஆன்மீக-தேசபக்தி ஜிஹாதிகள் மட்டும் அவங்க பக்கத்து வீட்டுக்காரனுக்காகவா கொலை, கொள்ளை, கற்பழிப்புகளை செய்யறாங்க? அவங்களும் கடவுளுக்காக, கடவுள் பேரைச் சொல்லிதான் செய்யறாங்க!”


”உனக்கு பைத்தியம்தான்னு நினைக்கிறேன்!. டேய்… லூஸு ரெண்டும் வெவ்வேற!” என்று கத்தி, அமைதியானார்!


 



இனி இந்தப் பேசைத் தொடர்ந்தால் பெரியவர் என்னைக் கடித்துக் குதறிவிடுவார் என்று தோன்றவே சற்று பாதையை மாற்றினேன்.


“அய்யா கோபப்படாதீங்க நான் சொல்லறது பொய்யில்ல!ஒரு ஆட்சியாளருக்கு தனக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கற அடிமைகள் தேவை.அவர்களை தன்னிடமே தக்கவச்சிக்க அவர், மானே, தேனே, பொன்மானேன்னு கொஞ்சலாம்.அப்படி இளிச்சவாயன்கள் இருந்தால்தான் அவரோட வண்டி ஓடும்.உங்களுக்கு அப்படி ஏதாவது தேவை இருக்குதா?”


“நான் எந்த தேவையும் இல்லாதவன்!நான் செய்யறது செய்யச் சொல்லறதெல்லாம் மனிதர்களுக்காக, அவர்களது நன்மைக்காகத்தான்!”


“அய்யா இந்தக் கேள்வியை ஆரம்பத்தில இருந்து கேட்டுகிட்டே இருக்கேன்.நீங்க செய்யறாத சொல்லக்கூடிய ஒவ்வொரு செயலுமே உங்களை தேவையுள்ளவராகத்தான் காண்பிக்குது!”


”... ...!?”


“ஒரு உயிரினம் அல்லது ஜடப் பொருளின் ஒவ்வொரு அசைவு அல்லது மாற்றமும் ஏதோ ஒரு தேவையின் அடிப்படையிலதான் நடக்குது.நீங்கள் எந்தவிதமான தேவைகளும் இல்லாதவன்னு சொன்னால், நீங்கள் எந்தவிதமான மாற்றமும் இல்லாத ஜடமாக இருக்க வேண்டும்.ஆனால் உங்களின் நிலை அப்படியில்லையே?”


”... ...?!”


“பிரபஞ்சம், அர்ஷ், உதவிக்கு மலக்குகள், சொர்க்கம், நரகம், சாத்தான், வேதங்கள், பூமி, மனிதர்கள்,  தூதர்கள், ஜிஹாதிகள், அவங்களுக்கான விதி,  மரம் செடி கொடி.... இப்படி இன்னும் இன்னும்... இவ்வளவையும் உருவாக்கினது தேவையில்லாமலா?”


”நான் தேவையில்லாதவன் சொல்லறது அதனால் கிடைக்கிற பலன்களை வைத்துதான்.நீ லிஸ்ட் போட்டு சொன்ன எதிலிருந்தும் எந்தப் பலனையும் நான் அனுபவிகிறதுமில்லை; அவைகள் எனக்குள் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணறதுமில்லை!”


“அய்யா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம் பேசிக்கிட்டு இருந்ததையே சொல்றேன். அல்லாஹ் மகிழ்ச்சியடைவான், நன்றி சொல்வான்(Q4:147), கோபப்படுவான்(Q2:90), கேலிசெய்வான்(Q9:79), சிரிப்பான், சபிப்பான்(Q5:60) குர்ஆன்ல சொல்லியிருக்கதாக சொன்னீங்களே... நினைவிருக்கா...?”


“ஆமாம் நான் சொன்னதுதான்! அதற்கென்ன...?” என்றார் நெற்றியை சுருக்கியவாறு,


“பொதுவாக, சிரிப்பது, மகிழ்ச்சியடைவது, நன்றி சொல்வது, கேலி செய்வது, சதி செய்வது, கோபப்படுவது போன்ற செயல்கள்ஒருவரது மனநிலை ஏற்படுற மாற்றங்களின் வெளிப்பாடுதானே?”


“ஆமாம்..!”


“ஒருவர் ரொம்ப ஆவலாக எதிர்பார்க்கிற, மனநிறைவை தரக்கூடிய  காரியங்கள், நிறைவேறும் பொழுது மகிழ்ச்சிய வெளிப்படுத்துகிறார், இல்லையா?”

“ஆமாம்..!”


“அதேமாதிரி விருப்பமில்லாத காரியங்கள் நடைபெறும் பொழுது, அவர்  வெறுப்பையும், கோபத்தையும் வெளிப்படுகிறார்.  அப்படித்தானே?”


“நீ சொல்லறது சரிதான்”


“ஒருவர், தனது எதிரியை வெற்றி கொள்வதற்காக செய்யற இரகசியமான குறுக்குவழிகள்தானே சூழ்ச்சி?”


“ஆமாம்!”


“எந்தவிதமான தேவைகளும், புறக்காரணிகளால் தன்னுள் எவ்வித மாற்றமும் அடைய முடியாத ஒருவரால்,  ஒருவரை எப்படி எதிரியாகக் கருதமுடியும்?”

“... ...!?”


”தேவைகளே இல்லாதவர் எதற்காக கோபம் கொள்ளவேண்டும்?எதிரிகளை அழிக்க சூழ்ச்சி செய்யனும்?”


“... ...?!”


”ஆக, எந்த விதமான விருப்பு வெறுப்புமில்லாத ஒருவரால், எப்படி இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்? எனக்குத் தெரிந்தவரையில் உணர்வுகள் என்பது நமக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களோட ஒவ்வொரு செயலும் அல்லாஹ்விற்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் உங்க குர்ஆனின் வாக்குமூலம்!!!”


”... ...?!”


”விருப்பு, வெறுப்பு என்பவைகள் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.அப்படிப் பார்க்கும் பொழுது அல்லாஹ்வாகிய உங்களுக்கு தேவைகள் இருக்குங்கறதுதான் உண்மை!”


“இல்லை...  நீ சொல்லறது தவறான விளக்கம்!”


“சரி... நான் சொல்லறது தவறாகவே இருக்கட்டும்.சரியான காரணத்தை நீங்க விளக்குங்க?”


“ஒரு பெற்றோர் தனது குழந்தைகளை கண்டிகிறதும், தண்டிக்கிறதும் வெறுப்பினால் குழந்தைகளின் நன்மைக்காகத்தான்.அதனால் பெற்றோர்களுக்கு எந்த லாபமும் இல்லை!”


“அய்யா, நீங்க சொல்லறது உண்மைதான் மறுக்கல. ஆனால் சராசரி மனுஷங்களை மாதிரி திரும்பவும் லாப நஷ்ட கணக்கைப்பத்தியே பேசறீங்க! நான் கேட்கறது தேவைகளைப்பற்றி, அதனால் ஏற்படும் மாற்றங்களைப்பற்றியது. பெற்றொர்கள் இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம்; தங்களோட குழந்தைகளின் செயல்களுக்காக, சமுதாயத்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் அவங்களுக்கு இருக்கு.உங்களுக்கு அப்படி ஏதாவது நிர்பந்தம் இருக்க என்ன?”


“... ...!?”


”இஸ்லாமை விமர்சனம் செய்யறதும், கேள்விகேட்கறதுக்கும், உன்னோட வளர்ப்பு சரியில்லை அதனாலதான் நீ இப்படி இருக்கேன்னு என்னப்பார்த்து என்னுடைய நெருங்கிய சொந்தக்காரங்களே சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி தேவைகள் உங்களுக்கு இருக்கா?”


”நீ எல்லா விஷயங்களையும் குதர்க்கமாகவே புரிஞ்சு வச்சிருக்கே!”


“இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலம் செய்யறதாகச் சொல்லறதும், தேவைகள் இல்லாதவன் செல்லறதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டது!”


“நீ விதண்டாவாதமாகவே பேசிகிட்டு இருக்கே....!”


“அய்யா, அல்லாஹ்வுக்கு குர்ஆன் கொடுக்கும் தன்மைகளில் இருக்கற முரண்பாட்டைத்தான் சொல்லறேன்.சரி... தேவைகளே இல்லாத உங்களுக்கு உங்களுக்கு ஜிஹாதிகள் எதுக்கு?”


“ஜிஹாதிகளின் அவசியம் முஹம்மதிற்கு இருந்தது!”


“நீங்க சொல்லறதைத்தான் அவர் சொல்லிக்கிட்டு இருந்திருக்காரு!முஹம்மது மேல எதுக்கு பழியப் போடறீங்க?”


”அதென்ன முஹம்மது மேல திடீர் பாசம்?” என்றார் கிண்டலாக


”முஹம்மதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லைனு உங்களால் சொல்ல முடியலை.அதனால் முஹம்மதின் செயல்களுக்கு நீங்கதான் பொறுப்பு. போதாக்குறையாக விதியைவேறு எழுதிவச்சிருக்கீங்க அதனால எப்படிப் பார்த்தாலும் எல்லாத்துக்கும்  நீங்க மட்டும்தான் பொறுப்பு!”


”ஏப்பா நீ.... இந்த விதியைப்பத்திப் பேசறத விடவேமாட்டியா?”


”சரி... பேசவில்லை! சொர்க்கம் இருக்கு, அங்கே பாலும் தேனும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுது, தங்கம் இருக்கு, வெள்ளி இருக்கு, வைரம் இருக்கு வாழைப்பழம், திராட்சைப்பழம் இருக்கு கட்டில்களில் மார்பகம் பெருத்த கன்னிகள் தயாராக இருங்காங்கனு(Q 78:33) சொன்னது நீங்களா... இல்ல... அவரா?”


”நான் சொன்னதைத்தான் அவர் சொன்னார்”


”எந்த தேவைகளும் இல்லாதவன்னு சொல்லிகிட்டு, கவர்ச்சியான பொண்ணுகளைக் காட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன?அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர்  இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.  (Q 55:56) புத்தம்புது சரக்கு வச்சிருக்கேன் விளம்பரம் வேற செய்யறீங்க”


”அடப்பாவி...!!! அதெல்லாம் எனக்கில்ல... எல்லாம் உன்னை மாதிரி மனுஷங்களுக்காகத்தான்”


“சந்தடி சாக்கில என்னை அந்த லிஸ்ட்ல நுழைக்க வேண்டாம். தெரியாமத்தான் கேட்கிறேன், மார்பகம் பெருத்த பொண்ணுகள் வேணும்னு எவன் உங்ககிட்ட கேட்டது?”


”யாரும் கேட்கல..! நானாகத்தான் மனுஷங்களுக்கு பிடிக்குமேன்னு ஏற்பாடு செய்தேன்!”


”அய்யா... நான் தெரியாமத்தான் கேட்கிறேன், பாலூட்டிகளுக்கு இருக்கும் மார்பகங்களோட பணி என்ன?”


”குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக!”


“நித்திய கன்னிகளான ஹூரிகளுக்கு பெருத்த நிமிர்ந்த தளர்வடையாத மார்பகங்கள் எதுக்கு?”

”உங்களுக்கெல்லாம் பிடிக்குமேன்னுதான் பிரதியேகமா ஏற்பாடு (Q 55:35) செய்து வச்சிருக்கேன். அதுக்குப்போயி இப்படி கேள்வி கேட்கிறியே... உனக்கு வேண்டாம்னா விட்டுறு!”


“இந்த விஷயத்தை அத்தனை லேசில் விடமுடியாது.சொர்கத்திற்கு வர்ற மனுஷங்க எல்லோருமே நாக்கத் தொங்கப்போட்டுட்டு அலைவாங்கனு எப்படி முடிவு செய்தீங்க?”


”உலகத்தில நடக்கிற விஷயங்களை நீ பார்க்கறதே இல்லை போலிருக்கு..?” என்றார் சற்று நக்கலாக.


“சரி மனிதன் அலைபவனாக இருக்கட்டும். குர்ஆன் 7:43 என்ன சொல்லியிருக்குனு உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.


“ம்ம்.. தெரியும்.. அத நீயே சொல்லு!” என்றார்


“(Q 7:43) அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம்... மனிதர்களோட உள்ளத்திலிருக்கும் குரோதத்தை எடுத்து விடுவதாகச் சொல்லற நீங்கள், அவனது உணர்வுகளிலிருந்து காமத்தை எடுத்திருக்கலாம் ஹூரிகளை பிரத்தியேகமாக படைக்கிற வேலையாவது மிஞ்சியிருக்கும்!”


“… …!”


”சொர்க்கத்தில வைத்து மனிதர்களோட மனதிலிருக்கும் குரோதத்தை எடுக்கறதுக்குப் பதிலாக, இந்த உலகத்தில வாழும்போது நீக்கியிருந்தால், எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இந்த உலகமே சொர்க்கமா இருந்திருக்கும்; நீங்க வேலைமெனக்கெட்டு சொர்ர்கத்தை படைக்கவேண்டிய வேலையே இருந்திருக்காது!”


“எனக்கே ஆலோசனை சொல்லறியா?”


”சொர்க்கத்தில வைத்து விதவிதமாக லைவ் ஷோ பார்க்கறதுல உங்களுக்கு அலாதியான விருப்பம்னு சொல்லறேன்.!”


”... ...!?”


”சொர்க்கவாசியாக வருகிற ஆண்களுக்கெல்லாம் நூறுஆட்களுக்கு சமமான உடலுறவு சக்தியெல்லாம் வழங்குவீங்களாமே? அதென்ன கணக்கு 72 ஹூரிகள்?”


“... ...!?”


”எனக்கு ரொம்ப நாளாகவே இன்னொரு சந்தேகமும் இருக்கு, ஜிஹாதிகள்  என்றால் யார்?”


”இதென்ன கேள்வி,  அல்லாஹ்விற்காக உயிர் துறப்பவர்கள் ஜிஹாதிகள்!”

“கொல்லறவனும் அல்லாஹ் அக்பர்னு சொல்லறான், கொல்லப்படறவனும் அல்லாஹ் அக்பர்னு சொல்லறான்.இவங்கள்ல யார் ஜிஹாதி, இதெல்லாம் என்ன வகையான ஜிஹாத்?”


”... ...!?”




”போதாக்குறைக்கு, இந்த காட்டுமிராண்டி ஜிஹாதிகளுக்கு சேவகம் செய்யறேன் முஸ்லீம் பெண்களில் ஒரு கூட்டம் செக்ஸ் ஜிஹாத் செய்யறேன்னு கிளம்பிட்டாங்க. வரவர ஜிஹாதிகளோட கணக்கு ஒரு வரைமுறையில்லாம போயிட்டிருக்கு. சரி... பெண்களுக்காக உங்க சொர்க்கத்தில என்ன ஏற்பாடுகளை தயார்படுத்தி வச்சிருக்கீங்க?அவங்களுக்கும் ஏதாவது 72 ஐட்டங்கள் இருக்குதா?”


“பெண்களுக்கு,அழகிய விலைமதிப்பில்லா ஆபரணங்கள், உயர்ந்த உணவுவகைகள் தங்கத்தால் ஆன கட்டில்கள், இன்னும் அவங்களுக்கு பிடித்தமானவைகள் அங்கு கிடைக்கும்!ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்படமாட்டார்கள் (Q4:124).” என்றார்.


“உங்க ஆபரணங்கயும், தங்கம், வெள்ளி வைரங்களை ஒரு பயலும் சீண்டலைன்னு, எல்லாம் வீணாகப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் புலம்பிக்கிட்டு இருந்தீங்க. திரும்பவும் அதையே சொல்றீங்களே...?போகற போக்கப் பார்த்தால் சொர்க்கத்தில் பெண்கள் நுழையறதே அல்லாஹ்வோட பெரிய கருணையின்னு சொல்லுவீங்க போல இருக்கும் போலிருக்கே?”


“... ...!?”


“பெண்களுக்கு பிடித்தமானது இருக்கட்டும்.நான் கேட்கறது பெண்களுக்காக நீங்க, உங்க தரப்பு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் பரிசுகள் என்ன?”


“அங்கே அவங்களுக்கு பிடித்தமானவைகள் எல்லாமே அங்கு கிடைக்கும்!”


நீங்கள் ஆசைப்படுபவை அங்கே உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் அங்கே உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர் (Q41:31,32).திடீர்னு ஒரு சொர்க்கவாசி ஓரினச் சேர்க்கை செய்ய விருப்பம் தெரிவித்தால் அதுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கீங்க?”


“ஓரினச்சேர்க்கை செய்ய உலக வாழ்க்கையிலேயே அனுமதி கிடையாது சொர்க்கத்தில எப்படி அனுமதிக்க முடியும்?அதுமட்டுமல்ல அவர்களால் அப்படி கேட்கவும் முடியாது.அந்த மாதிரி தீய எண்ணங்களை அவங்களை விட்டு நீக்கப்படும்!”


“அதாவது அங்கேயும் நீங்க எதை விரும்பறீங்களோ அதைத்தான் சொர்க்கவாசிகளும் கேட்பாங்க, அப்படித்தானே?அப்புறம் எதுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும்னு முழம்போடறீங்க? 72 பெண்களோட குடியும், குடித்தனமாக 24 மணிநேரமும் கட்டிலில் புரளறதுக்கு உலக வாழ்க்கையில மட்டும் உங்களால் அனுமதிக்கப்பட்டதா என்ன?”

“… …?”

”ஆண்களுக்காக, தொங்கிப்போகாத பெருத்த மார்பகங்கள், எப்பவுமே தளர்ந்து போகாத பெண்ணுறுப்பு இருக்கற மாதிரியெல்லாம் ஹூரிகளை ஸ்பெஷலாக தயார்படுத்திய உங்களுக்கு, பெண்களுக்காக பிரதியேகமான ஆண்களைப் படைக்கவேண்டுமென்று தோன்றவே இல்லையா?”


“பெண்களும் விரும்பினால், அவர்களுக்கும் ஹூரிகள் அங்கே கிடைக்கும்”


“அதென்ன... பெண்கள் விரும்பினால்....? அப்போ.... ஆண்கள் எல்லோரும் உங்கிட்ட வந்து, அல்லாஹ்... அல்லாஹ்... எங்களோட காமஇச்சை அடங்கவே மாட்டேன் என்கிறது அதனால சொர்க்கத்தில எங்களுக்கு ஹூரிலீன் பெண்களை ஏற்பாடு செய்யுங்க... அவங்களுக்கு கொழுத்த மார்பகங்கள் இருக்கனும்... நைஞ்சு போகாத பெண்ணுறுப்பு இருக்கனும், ஆனாலும் அவங்க எப்பவும் கன்னியாகவே இருக்கற மாதிரி செய்தால் செய்தால் நல்லாயிருக்கும்னு உங்ககிட்டவந்து சொன்னாங்களா என்ன?”

”இல்லை...! நானாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்தேன்.மனிதர்களோட குணத்தையும் செயல்களையும் அடிப்படையாக வைத்து இப்படியொரு ஏற்பாடுகளை செய்தேன்!”


”அப்போ… பெண்களுக்கென்று எந்த உணர்வும் கிடையாது?”


“… …?”


“நீங்களாகவே ஆண்களுக்கு காம உணர்வை தூண்டியும் விடுவீங்க, லேகியமும் கொடுப்பீங்க, ஹூரிலீன் பெண்களையும் ஏற்பாடு செய்வீங்க அப்படித்தானே?”

“... ...!?”

“நல்லா இருக்கு உங்க நியாயம்! சொர்க்கத்தில பெண்களுக்கு என்ன இருக்குனு கேட்டால், அவங்க விரும்பியதைக் தருவேன்னு மழுப்புவீங்க. ஆக சொர்க்கத்திலேயும் இந்த அப்பாவிப் பெண்கள், ஹூரிகள்கூட லீலை செய்யதிட்டு வர்ற ஆண்களோட காலைக் கழுவிக் குடிக்கனும் அப்படித்தானே?”

”…. …!?”

“தன்னுடைய கணவன் ஹூரிகளே கதின்னு இருக்கதினால, வெறுத்துப்போன மனைவி, தனக்கும் ஆண் ஹூரிகள் வேணும்னு கேட்டால் கிடைக்குமா, கிடைக்காதா?”


”இதைத்தான்அப்பவேசொன்னேன். அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு…(Q25:16). பெண்கள் விரும்பியது கிடைக்கும்!”


”கணவன் ஒருபுறம் ஹூரிலீன் பெண்களோட கூத்தடிப்பானாம்; மனைவி இன்னொரு புறம் ஆண் ஹூரிகளோட கூத்தடிப்பாளாம்; ஆனால் இவங்க ரெண்டுபேரும் கணவன் மனைவியாம்! ஆனாலும் ரொண்டுபேரும் ஒருத்தர்மேல இன்னொருத்தர் அன்பாக இருப்பார்களாம்! ஹிஜாபைப் பேணவேண்டும், திரைக்குப்பின்னால்தான் இருக்கனும், கற்பைப் பாதுகாக்கனும், மறைவிடங்களைப் பேணிபாதுகாக்கவேண்டும்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே, சொர்க்கத்தில அப்படி எதையும் பாதுகாக வேண்டாமா? இந்த பிரபஞ்சத்த படைச்சு, பூமியப் படைச்சு, அதுல மனுஷங்களையும்,  பலவிதமான உயிரினங்களையும் படைச்சு, விதவித நபிமார்களையும் அனுப்பி நேர்வழி காண்பிகிறேன், நேர்வழி காண்பிக்கிறேன்னு ஒவ்வொருத்தரையும் இம்சித்தது இந்த கேடுகெட்ட வாழ்க்கைக்காத்தானா?”


”…. ….!”

”தெரியாமத்தான் கேட்கிறேன், திருமணம், அன்பு, காதல் கற்பு இந்த மாதிரி வார்த்தைகளுக்கெல்லாம் உங்க மறுமை அகராதியில் என்ன பொருள்?”


”... ...!”


”நீங்க சொல்ல மாட்டீங்கனு எனக்குத் தெரியும்.உங்க ஆலீம்கள் சொல்லறத அப்படியே சொல்லறேன். திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை செம்மையாக பகிர்ந்து கொள்வது இஸ்லாமிய திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும். திருமணம் என்பது பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும் கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

“… …!”

”திருமணத்தைபற்றிய இந்த விளக்கத்தைமுல்லாக்களும், முஸ்லீம்களும் எந்த அளவுக்குப் பின்பற்றாங்கனு என்னால் சொல்ல முடியும்! இப்ப நாம அதைபத்தி பேச வேண்டிய அவசியமில்லை. உலக வாழ்க்கை நடைமுறையைவிட உங்க சொர்க்கலோக வாழ்க்கை எந்தவிதத்தில உயர்ந்ததுனு சொல்லறீங்க?”

”… …!”

”இந்த மாதிரி வேலைகளை ஏற்பாடு செய்யறவங்களுக்கு, உலகவழக்கில வேறொருபேர் இருக்கு...!”

”என்னுடைய உயர்ந்த படைப்பான சொர்க்கத்தையும், என்னையும் நீ கேவலப்படுத்தறே. உனக்குத் தெரியுமா, ”அவன் செய்வதுபற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள் (Q 21:23).” என்றார்.

“அவன்செய்வதுபற்றிவிசாரிக்கப்படமாட்டானா?இப்படி ஏதாவது சொல்லி தப்பித்தால் மட்டுமே உங்களால் காலம்தள்ள முடியும். அல்லாஹ்விற்கு நீதியாளன் ஒரு பேர் இருக்கறாதாக சொல்லுவாங்க; அப்படியே அந்தப் பேரையும் மாத்திடுங்க. உங்களையும், உங்க குர்ஆனையும் நினைச்சா சிரிப்புதான் வருது”

”.... ...!??”

”அய்யா கோபப்படதீங்க இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை. யார் சொல்லறது சரிங்கிறத உங்க சொர்க்கத்தை நேர்ல பார்த்து முடிவு செய்வோம். வாங்க இப்பவே போகலாம்” என்றேன்.


“இல்லை... வேண்டாம்...!” என்றார் அவசர அவசரமாக,


நிச்சயமாக அங்கு ஏதோ குழப்பம் இருக்கிறது என்று மனம் பரபரக்கத் துவங்கியது.முதியவரின் முகம் சுருங்கிப்போய், கோபமும் இயலாமையும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. நான் அவரை நோக்கி,

“அய்யா... வாங்க அப்படியே பேசிக்கிட்டே நடப்போம்... வாங்க...!” என்றவாறு, எங்கே போக வேண்டுமென்பதே  தெரியாமல் அடியெடுத்து வைக்கத் துவங்கினேன்.


”இந்தப் பக்கம் வா...” என்றவாறு பெரியவர் எனக்கு வலது புறமாக கையைக் காட்டினார். நான் பெரியவரைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தேன். நீண்ட நேரம் நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.


“அய்யா... நாம..ரொம்பதூரம் போகனுமா?” என்று மறுபடியும் உரையாடலைத் துவங்கினேன்.


“ஆமாம்... தூரம்தான்.குறுக்கு வழியொன்னு இருக்கு அதுல போனா அத்தனை தூரம் இருக்காது!” என்றவர் மீண்டும் அமைதியாகிவிட்டர். பெரியவரை ரொம்பவும் ’கார்னர்’ செய்துவிட்டேனோ என்றம் என்னுள். பெரியவரிடமிருந்து வெளிப்படும் ஒளியால் அருகிலிருப்பவற்றைத் தெளிவாக காணமுடிந்தது. கண்ணுக்கெட்டிய வரை சீரான சமதளத்தைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை; நீண்ட தூரம் சென்றது போலிருந்தது. எங்கும் ஒருவிதமான அமைதி நிலவிக் கொண்டிருந்தது.


“இத்தனை நாட்களாக கடவுள் இல்லை, இல்லைனு சொல்லிகிட்டு இருந்தியே இப்ப என்ன சொல்லப்போற?” என்று பெரியவர் தனது அமைதியைக் கலைத்தார்

தொடரும்...



தஜ்ஜால்