Saturday 24 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) - 4

நமது நண்பர் ANT, 
“அப்ப குர்ஆன் 6:101 ..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அல்லாவின் சொல் என்ன ஆவது?”

என்றொரு கேள்வியை கேட்டிருந்தார்.  அதற்கான பதிலை குர்ஆனிலிருந்தே பார்போம்!




குர்ஆன் 21:91
 தனது கற்பைக் (فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....
குர்ஆன் 66:12
... அவர் தமது கற்பைக்(فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். ...

குர்ஆன் மொழிபெயர்ப்புகளிலுள்ள தில்லாலங்கடி வேலைகளைப்பற்றி முன்பே பார்த்தோம். குர்ஆன் 21:91, 66:12  ’Farjahā’ - fā rā jīm (ف ر ج) என்ற சொல் எப்படி உருமாறுகிறது என்பதை  இப்பொழுது கவனிக்கலாம்.
’Farjahā’ என்ற சொல் இடம்பெறும் இன்னொரு குர்ஆன் வசனத்தையும் அதற்கான வெவ்வேறு மொழிபெயர்ப்புகளையும் கவனித்தால் இதிலுள்ள ஏமாற்றுவேலை எளிதாகப் புரியும்.

குர்ஆன் 24:31
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப்(furūjahunna) பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!...
பீஜே மொழிபெயர்ப்பு

இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக : அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்(furūjahunna) பேணிக்காத்துக் கொள்ளவேண்டும்...
தர்ஜுமா.காம் வெளியீடு

மேலும் (நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவேண்டும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் (furūjahunna) பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்...
சவுதி வெளியீடு

فَرْجَهَا-  farjahā  فُرُوجَهُنَّ- furūjahunna என்பதன் நேரடிப் பொருள் என்னவென்பதை நீங்களே அறிந்திருப்பீர்கள்  farjahā  என்றால்  ’Private part’  இலைமறைவுக்காயாக வெட்கத்தலம் என்றோ மர்மஸ்தானங்கள் என்றோ கூறிக்கொள்ளலாம்.  இங்கு மர்யம் பெண் என்பதால் பெண்ணின் மர்மஸ்தானம் என்று பொருள் கூறலாம். (மன்னிக்கவும்!) சற்று கீழிறங்கிக் கூறினால் ‘சாமானம்’ என்று சொல்லலாம். ஆனால் கற்பு என்று மொழிபெயர்ப்பது அல்லாஹ்விற்கு அரபி சொல்லிக் கொடுப்பதைப் போன்றதே!.

குர்ஆன் 21:91
தனது கற்பைக் (farjahā) காத்துக் கொண்ட பெண்ணிடம் நமக்குரிய உயிரை ஊதினோம்....

கற்பு என்பதைக் குறிப்பிட அரபியில் வேறு சொற்கள் இருக்கையில் எதற்காக அல்லாஹ் உடலுறுப்பைக் குறிப்பிடவேண்டும்? இருபாலினமும் உடலால் இணைந்து உருவாகும் வாரிசுகளை மட்டுமே முறையான வாரிசுவாகக் கருதவேண்டும். இங்கு மர்யம் தனது உறுப்பைப் பாதுகாத்துக் கொண்டவர்; உடலால் இணைப்பு ஏற்படவில்லை. எனவே ஈஸா தனது வாரிசு இல்லையென்பதே  அல்லாஹ்வின் லாஜிக்! அதனால் தான் இங்கு அல்லாஹ் உறுப்பைப்பற்றி பேசுகிறான்.

மர்யமின் கர்பத்திற்குக் அல்லாஹ்வின் ’விவகாரமான ஊதலே’ காரணம் இதைக் குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது. எனவே மர்யமின் மகனை அதாவது ஈஸாவை அல்லாஹ்வின் மகனென்று கூறுவதுதானே முறையான செயலாக இருக்க முடியும்? இது கிறிஸ்தவர்களின் வாதம்!

அண்ணன் பீஜே இதை எவ்வாறு மறுக்கிறார் என்பதைக் காண்போம்.

90. அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்!
ஈஸாநபியை அல்லாஹ்வின் வார்த்தை என்று 3:39, 3:45, 4:171 ஆகிய வசனங்களில் குர்ஆன் குறிப்பிடுகிறது. 4:171, 21:91, 66:12 வசனங்களில் அவனது உயிர் எனவும் ஈஸா நபியைப்பற்றிக் குர்ஆன் கூறுகிறது.

இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸாநபி இறைவனின் குமாரர் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுகின்றனர். குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாகவும் அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஈஸாநபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81)

பொதுவாக மனிதர்கள் உருவாக, பெண்ணின் சினைமுட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸாநபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால்தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு' எனும் கட்டளை மூலம்தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.

இறைவனின் உயிர் என்று ஈஸாநபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூறமுடியாது. ஏனெனில் 'இறைவனின் உயிர்' என்றால் 'அவனுக்கு உடமையான உயிர்' என்பதுதான் பொருள். 'அவனது ஒரு பகுதியான உயிர்' என்று பொருள் இல்லை.

அல்லாஹ் தேவையற்றவன் என்று முழங்குவார்கள். ஆனால் அவனுக்கொன்று உடமைகளும் இருக்குமாம். இதைவிட கோமாளித்தனமான விளக்கம் இருக்க முடியாது.  அல்லாஹ்விடம் உடமைகளாக உயிர்களை மட்டும்தான் வைத்திருக்கிறானா அல்லது வேறு ஏதேனும் விவகாரமாக வைத்திருக்கிறானோ என்னவோ? Mullahs knows the best!(?)

திருக்குர்ஆனின் 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவ நண்பர்கள் கூறுவதில்லை.

ஆதம் (அலை) பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் ஈஸாநபி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம் அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்! இல்லையென்றால் முஹம்மதால் தன்னை எப்படி முன்னிருத்தமுடியும்?

3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான் என திருக்குர்ஆன் தெளிவாகப்பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
onlinepj.com

’குன்’ என்ற வெற்றுச் சொல்லால்  ஈஸா மட்டுமல்ல எதையுமே அல்லாஹ் உருவாக்கவில்லை என்பதை நாம் முன்னமே பார்த்தோம். மேலும் ஆதமிற்கும் ஈஸாவிற்கும் உருவாக்கத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறதென்பற்குக் குர்ஆனே போதுமானதாக இருக்கிறது. எனவே 3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானதுதான் என திருக்குர்ஆன் தெளிவாகப்பிரகடனம் செய்கிறதுஎன்ற வார்த்தைகள் அர்த்தமற்றது.  கிறிஸ்தவர்கள் முன்வைக்கும் இறைவனின் புதல்வன் என்ற கோரிக்கையையை அவசரகதியில் மறுப்பதைப் போன்றது.

பெண்களை ஏமாற்றி கர்பமாக்கிய பிறகு, அக் கர்பத்திற்குக் தான் காரணமல்ல என்று கூறி நழுவும் வில்லன்களை திரைக்கதைகளில் நிறையவே பார்த்திருக்கிறோம். எண்ணற்ற திரைக்கதைகளில் இதுவே மையக்கருவாக இருந்தது. குர்ஆன் 6:102-ம் வசனத்தில் அல்லாஹ் கூறுவதும் அதைபோன்றதொரு நழுவல்தான். அன்றாட வாழ்விலும் இதுபோன்ற வழக்குகளைக் காணமுடியும். உதாரணத்திற்கு, என்.டி.திவாரி என்ற கிழவரும் இப்படித்தான் கூறிக் கொண்டிருந்தார். நல்ல வாய்ப்பாக அறிவியலின் வளர்ச்சி இதற்கொரு முற்றுப் புள்ளியை வைத்துவிட்டது. வேறுவழியின்றி என்.டி.திவாரி தனது திரைமறைவு வேலையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவரை அறிவியல் தள்ளிவிட்டது. ஆனால் கெட்ட வாய்ப்பாக நம்மிடம் அல்லாஹ் மற்றும் ஈஸாவின் மரபணுக்கள் நம்மிடமில்லை. முஹம்மது, மற்றும் அவரது அடிபொடிகளின் உளறல்களை வைத்துதான் இதற்கொரு தீர்வை கண்டிபிடிக்க வேண்டியிருக்கிறது.

அவசரகதியில் வெளியான அல்லாஹ்வின்(!) மறுப்பை சற்று நாகரீகமாகவே கூறுகிறேன்,

”மர்யமிடம் என் விரல் நகம் கூடப் படவில்லை, அவருடன் உடலுறவு கொள்ளவில்லை எனவே ஈஸா எனது மகனில்லை! ஆனால் மர்யம் கர்பமடைய நான் மட்டும்தான் காரணம்” என்பதே அல்லாஹ்வின் வாதம்!

சரி,  மர்யம் எவ்வாறுதான் கர்பமடைந்தார்?

பரிசுத்த ஆவி ஊதியதால் மர்யம் கர்பமடைந்தார்!

யார் இந்த பரிசுத்த ஆவி?

ஒரு நபர் சென்று  ஊதவேண்டிய அவசியமென்ன?

பரிசுத்த ஆவி எவ்விடத்தில் ஊதியது?



குர்ஆன் கூறும், மர்யமின் கர்பமடைந்த காட்சியை (குர்ஆன் 66:12) தஃப்ஸீர் அல்-ஜலாலைன் இவ்வாறு கூறுகிறது,

And Mary (wa-Maryama is a supplement to imra’ata Fir‘awna) daughter of ‘Imrān, who preserved [the chastity of] her womb, so We breathed into it of Our Spirit, namely, Gabriel — when he breathed into the opening of her shirt, by God’s creation of this action of his which reached her womb, thus conceiving Jesus — and she confirmed the words of her Lord, His prescriptions, and His, revealed, Scriptures and she was of the obedient, [one] of the obedient folk.

குர்ஆன் 66:12 வசனத்திற்கு இப்ன் கதீர் தரும் விளக்கம் :

And Maryam, the daughter of `Imran who guarded her chastity (private part). meaning, who protected and purified her honor, by being chaste and f ree of immorality,

 (And We breathed into it (private part ) through Our Ruh, ) meaning, through the angel Jibril. Allah sent the angel Jibril to Maryam, and he came to her in the shape of a man in every respect. Allah commanded him to blow into a gap of her garment and that breath went into her womb through her private part; this is how ` Isa was conceived.

And we breathed into it through Our Ruh, and she testified to the truth of her Lords Kalimat, and His Kutub,) meaning His decree and His legislation.

அல்லாஹ்வின் ஆவி அதாவது பரிசுத்த ஆவி அதாவது ஜிப்ரீல் என்ற வானவர், மர்யம் அணிந்திருந்த ஆடையின் இடைவெளி வழியாக ரூஹ்ஹை(உயிரை) ஊதினாராம் அது அவரது உறுப்பின் வழியே சென்று கருப்பையை அடைந்ததாம்.

அதாவது அல்லாஹ்வின் பரிசுத்த ஆவி, மர்யமிடம் சென்று நெற்றியிலோ அல்லது முகத்திலோ அல்லது வயிற்றிலோ ஊதவில்லை; ஊதவேண்டிய இடத்தில்தான் ஊதியிருக்கிறது. இதற்கென்று ஒரு நபரை, அதுவும் ஆணின் வடிவத்தில் அனுப்பி, இடம் பார்த்து, இலக்கை நோக்கிச் சரியாக ஊதவேண்டுமென்றால், அந்த ஊதலில் தேவையானதை வைத்திருக்கிறார்கள் என்பதுதானே பொருள்!

அல்லாஹ்வின் ரூஹ்  ஒரு ஆணின் வடிவத்தில் செல்ல வேண்டும்?  பெண்ணின் வடிவத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு உயினத்தின் வடிவத்தில் சென்றிருக்கலாமே? (இதற்கான பதில் உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்!)

ஆணின் உருவத்தில் வந்தது அல்லாஹ் அனுப்பிய பரிசுத்த ஆவியென்ற வைத்துக் கொண்டு நாம் குர்ஆனின் கதையைத் தொடர்வோம்.

குர்ஆன் 19:18-22
18."நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

19."நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.

20."எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று (மர்யம்) கேட்டார்.

21."அப்படித் தான்'' என்று (இறைவன்) கூறினான். "இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்'' (என்று ஜிப்ரீல் கூறினார்.)

22. பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.

தனது அறையில் தனிமையிலிருக்கும் ஒரு பெண்ணின் முன்னே திடீரென அறிமுகமே இல்லாத ஒரு ஆண் தென்பெட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்? தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த ஊதல் வேலையை தனிமையிலிருக்கும் பெண்ணிடத்தில்தான் செய்ய வேண்டுமா? இது எனக்கு எளிதானது”, இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை” என்றெல்லாம் பீற்றுவதை  ஊரறிய எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறி ஊதுவதில், அல்லாஹ்விற்கு என்ன தயக்கம்?

குர் ஆன் 3:37
அவரை, (அக்குழந்தையை) அவரது இறைவன் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஸக்கரிய்யாவைப் பொறுப்பாளியாக்கினான். அவரது அறைக்கு ஸக்கரிய்யா சென்ற போதெல்லாம் அவரிடம் உணவைக் கண்டு, "மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?'' என்று கேட்டார். "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. அல்லாஹ் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குகிறான்'' என்று (மர்யம்) கூறினார்.

வெளிப்படையாக எல்லோர் முன்னிலையிலும் உணவை மர்யமிற்கு வழங்குவதற்கு அல்லாஹ்விற்கு வெட்கம் போலிருக்கிறது. அதனால் இரகசியமாக உணவைக் கொடுத்து சரி செய்திருக்கிறான். (நாங்கள் ஃபிகர்களை KFC க்கு அழைத்துச் செல்வதும், அவர்களது செல் போனுக்கு ரீசார்ஜ் செய்வதும் எப்படித் தவறாகுமென்று ஒரு அப்பாவிக்(!) காதல் மன்னர் கேட்கிறார்) மர்யமின் மீது அல்லாஹ்விற்கு ஒரு ’இது’ இருந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

உணவைக் கொடுத்து ’உஷார்’ படுத்தியிருப்பதாக நினைக்க வேண்டாம். என்ன இருந்தாலும் தனது வாரிசை சுமக்கப் போகிறவர் என்ற கரிசனமாக இருந்திருக்கலாம்.

இந்துமதத்தினர், மகாபாரதக் கதைகளில் வரும் கர்ணன் மற்றும் பாண்டவர்களின் பிறப்பிற்குக் கூறிக்கொள்ளும் காரணங்களுக்கும் ஈஸாவின் பிறப்பிற்குக் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கூறிக்கொள்ளும் காரணத்திற்கும் எந்த வேறுபாடுமில்லை.

இன்றைய சூழலில் ஒரு பெண், இதுபோன்று தன்னைக் கர்பமாக்கிய கயவன் கடவுள் தானென்று கூறினால் இந்த மதவாதிகள் என்ன செய்வார்கள்? அறிவியலைத் தஞ்சமடைய மாட்டார்களா?

பேய் மற்றும் வேற்று கிரகவாசிகளைச் சந்தித்ததாகக் கூறுபவர்களை கவனித்தால் பொதுவான ஒரு உண்மை புலப்படும். அதாவது அந்த அனுபங்கள் மிகப் பெரும்பாலும் அவர்கள் மட்டும் தனிமையிலிருந்த பொழுது சந்தித்தாகக் கூறுவர். இந்தப் பேய்களும் வேற்று கிரகவாசிகளும் பொதுவெளியில் வருவதற்கு  வெட்கம் வெட்கம் கொள்வதைப்போல அல்லாஹ்விற்கும் அவனது ஆற்றலுக்கும் வெட்கம் போலிருக்கிறது.

நாம் பரிசுத்த ஆவி ஊதிய காற்றைத் தொடர்வோம்

சாதரணமாகக் காற்றை ஊதினால் கருத்தரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ’அவ்விடத்தில்’ காற்று புகுந்தால் கர்பமாகிவிடுவார்கள் என்றிருந்தால் பெண்களின் நிலைமை அவ்வளவுதான்! பெண்கள் ’அதை’  காற்றுப் புகாதவாறு மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைவந்திருக்கும்.

பரிசுத்த ஆவியின் விவகாரமான ஊதலில் என்ன இருந்தது? மர்யமிடம் வந்தது பரிசுத்த ஆவிதானா?


தொடரும்...

தஜ்ஜால்

Sunday 18 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -3




கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் வாரிசு என்ற கோரிக்கையை முவைத்த பொழுது, அதை மறுக்கும் விதமாக இப்படியொரு எதிர்க் கேள்வியை அல்லாஹ்(!) முன் வைக்கிறான்.

குர்ஆன் 6:101
..அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அரபி ஒலிபெயர்ப்பு:
..annā yakūnu lahu waladun walam takun lahu ṣāḥibatun

அல்லாஹ்வைப்பற்றிய முஹம்மதின் கற்பனை எவ்வாறு இருந்ததென்பதை இக் குர்ஆன் வசனம் நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. இதில் ṣāḥibatun என்ற சொல்லை நமது தமிழக முல்லாக்கள் மனைவி என்று மொழிபெயர்த்திருக்கின்றனர்.  ṣāḥibatun என்பதற்கு தோழி‘ என்பதுதான் நேரடிப் பொருள். ஆங்கிலத்தில் கூறினால்‚ girl friend’’ என்று சொல்லலாம். அல்லது திருமணபந்தமின்றி சேர்ந்து வாழும் ஒரு இணை என்று சொல்லலாம். 

அல்லாஹ்விற்கு தோழியா?

நாம் இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டும் அல்லாஹ் ஒரு ஆண்பால்தான்! இல்லையெனில் தனக்கொரு மகனைப் பெற்றுத்தர பெண்ணின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை! சர்வ வல்லமையுடையவனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்பவனால், பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையாம்!

குர்ஆன் 6:102  நம்மிடம் கேட்கும் கேள்வியின் பொருள்,  அவன் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளாத நிலையில் அவனுக்கு எப்படி மகன் இருக்க முடியும்? மேலும் ஒரு பெண்ணின் உதவியின்றி தன்னால், தனக்கு ஒரு வாரிசை உருவாக இயலாதென்பதுதான் அல்லாஹ் இங்கு தரும் வாக்குமூலம்!

ஆம்!

அல்லாஹ்வும் அப்படித்தான் நினைக்கிறான். ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டு, விந்தைச் செலுத்தி, அதன் மூலம் அப்பெண் கருத்தரித்து, கருவளர்ந்து குழந்தையைப் பெற்றெடுத்தால் மட்டுமே அது தனது குழந்தையாக இருக்க முடியும் என்ற மனித சிந்தனையைக் கடந்து அல்லாஹ்வினால்(!) சிந்திக்க முடியவில்லை!

வானங்களையும், பூமியையும், மலக்குகள், ஜின்கள், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள், ஆதாம், ஹவ்வா(ஏவாள்).... இன்னும் எண்ணற்றவைகளை பிறரின் உதவியின்றி, முன்மாதியின்றி படைத்ததாக பீற்றிக் கொள்ளும் ஒரு கடவுளால், ஒரு பெண்ணின் உதவியின்றி தனக்கொரு மகனை உருவாக்க முடியவில்லையாம்.  இதுதான் குர்ஆன் 6:101 நமக்குக் கூறும் செய்தி!

தன்னைக் கையாலாகாதவன் என்று எவரும் நினைத்து விடக் கூடாதென்பதற்காக,  தனக்கு சர்வ வல்லமை இருப்பதாக அல்லாஹ் அறிவித்துக் கொள்ளும் ஒரு வசனத்தைக் காண்போம்.

குர்ஆன் 16:40
ஒன்றை நாம் நாடினால் "ஆகு' எனக் கூறுவதே நமது கூற்றாகும். உடனே அது ஆகி விடும்.

படைப்பின் ஆரம்பத்தைப்பற்றியும், நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் இயேசுவின் உருவக்கம் பற்றிய  குர்ஆனின் கதையாடல்களை வாசித்தவர்களுக்கு இது ஒரு அர்த்தமற்ற பீற்றல் என்பது புரியும்! ஈஸாவின் உருவாக்கம்பற்றிக் கூறும் பொழுது,

குர்ஆன் 66:12
இம்ரானின் மகள் மர்யமையும் அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம்...

அல்லாஹ், தனது இருக்கையில் ’ஸ்டைலாக’ அமர்ந்தவாறு ’குன்’ (ஆகுக) என்று கூறியிருக்கலாமே? அதைவிடுத்து மர்யமிடம் சென்று எதற்காக தனது உயிரை ஊதவேண்டும்? 

உண்மையில், ’குன்’ என்ற வெற்றுச் சொல்லால் அல்லாஹ்(!) எதையுமே உருவாக்கியதில்லை. அப்படி உருவாக்கியதற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. அல்லாஹ் பெரிதாகப் பீற்றிக் கொள்ளும் எந்தப் படைப்பையோ அல்லது அழிவுகளையோ ’குன்’ என்ற சொல்லால் உடனடியாக நிகழ்த்திடவில்லை.

உதாரணத்திற்கு, இணைந்திருந்தாக அல்லாஹ் கூறும் வானங்களையும் பூமிகளையும்  (நன்கு கவனிக்கவும் பூமியை மட்டும்) பிரித்து அமைப்பதற்கு ஆறு(எட்டு!?) நாட்கள் தேவைப்பட்டதாம். அந்த பூமியில் தனது பிரதிநிதியாக ஆதாமைப் படைக்க, தூசி/ஈரமண்/களிமண்/தட்டினால் ஓசை தரும் களிமண் என்ற ஏதோ ஒரு பொருளை ஆதாரமாகக் கொண்டு அல்லாஹ் தனது இரண்டு கைகளால் மண்ணைப் பிசைந்து, உருட்டித் திரட்டி, வடிவமைத்து உயிரை ஊதி உருவாக்க வேண்டியிருந்தது. நூஹ் நபி காலத்தில் அவரது எதிரிகளை அழிக்க பெரும் வெள்ளம் தேவைப்பட்டது; பெரும் வெள்ளத்திற்காக மழையைப் பொழிவித்தும், நிலத்தில் ஊற்றைப் பெருகச் செய்தும்; அதனால் பூமியை நீரால் நிறைக்க வேண்டியிருந்தது;  அவ்வெள்ளத்திலிருந்து தனது படைப்புகளைக் காப்பாற்றி, உயிரினங்களைத்  தழைக்கச் செய்ய கப்பல் தேவைப்பட்டதாம்; அந்தக் கப்பலைச் செய்ய நூஹ் நபியின் உதவி தேவைப்பட்டது; ... இப்படி.. இன்னும்... நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். ஒவ்வொன்றும் நிகழ நிறைய கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது இவற்றில் எதுவும் உடனடியாக நிகழவில்லை.

ஈஸா/இயேசுவின் உருவாக்கத்தால் மர்யமின் கற்பின் மீது விழுந்த கேள்விக்குறியை மறுக்கும் விதமாக அல்லாஹ் கூறும் பொழுது,

குர் ஆன் 3:59
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.

குர்ஆனின் மூன்றாம் அத்தியாயமாக இருக்கும் ஆலு இம்ரான், முஹம்மது மதீனாவில் கூறியது. அவர், தன் வாழ்வின் கணிசமான பகுதியை, அதாவது சுமார் 23 ஆண்டுகள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  கால இடைவெளி அவருக்கு மறதியை உண்டாக்கி விட்டது. மறதி என்பது வழக்கமான மனித இயல்புதான். ஆனால் அவர் மக்காவில் முன்பு வெளியிட்ட அத்தியாயங்களை வாசித்தால் முரண்பாடுகள் எளிதாகப் புரியும். ஆதமின் படைப்பைப் பற்றி முன்பு கூறியதை கவனியுங்கள்,

குர்ஆன் 38:72
அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' 

குர்ஆன் 15:29
"அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்)

எனது கேள்வி என்னவென்றால், அல்லாஹ், ஆதமை மண்ணால் உருவமைத்து தனது உயிரை ஊதி உருவாக்கினானா? அல்லது மண் பொம்மையாக இருந்த ஆதாமிடம் ’குன்’ என்று கூறியவுடன் உயிர்பெற்றதா? நான் தற்சமயம் இந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

ஈஸா, ‘குன்’ என்ற சொல்லால் உருவானவரல்ல!  அவரை உருவாக்க ஒரு வானவர்(?), தனிமையிலிருந்த மர்யமைச் சந்தித்து ஊதித் தள்ள வேண்டியிருந்தது. அவர் கருவுற்று, கருவைச் சுமந்து, கரு வளர்ச்சியடையும் வரை 9-10 மாதகாலம் காத்திருந்து, வேதனைகளைத் சகித்துக்கொண்டு,  ஈஸாவைப் பிரசவிக்க வேண்டியிருந்தது. ’குன்’ என்ற சொல்லால் அல்லாஹ் எதையும் உடனே உருவாக்கியதாக குர்ஆனில் ஆதாரமில்லை. எனவே ’குன்’ என்றால் ’பிம்பிளிக்கி பிலாப்பி !’

நாம் மர்யமின் கதையைத் தொடர்வோம்..

குர்ஆன் 19:17
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக ( بَشَرٌ-basharan-adult male) அவருக்குத் தோற்றமளித்தார்.

குர்ஆன் 19:18
"நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

குர்ஆன் 3.45
"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

அல்லாஹ்வின் ரூஹ் (உயிர்) ஒரு ஆணின் வடிவத்தில் மர்யமிடம் செல்கிறது; அது ஒரு ரூஹ்ஹை ஊதுகிறது. இது நமது முஹம்மது அவர்கள் மக்காவிலிருக்கும் பொழுது கூறியது. அவர் மதீனாவிற்குச் சென்றவுடன் ஒருமையிலிருந்த ரூஹ், மலக்குகளாகப்(குர்ஆன் 3.45) பன்மை வடிவம் பெறுகிறது என்பதை கவனிக்கவும். ஈஸா பற்றிய அறிவிப்பை,  மர்யமிடம் தெரிவிக்கச் சென்றது சென்றது அல்லாஹ்வின் ஒரு ரூஹ்ஹா? அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட மலக்குகளா? இதை நாம் அல்லாஹ்வின் உயிர்கள் மர்யமிடம் சென்றது என்று சொல்லலாமா?  இதைப்பற்றி பிறகு விவாதிப்போம். முதலில் அல்லாஹ்வின் ஒரு உயிர்(ரூஹ்) அதாவது ரூஹுல் குத்தூஸ் என்ற பரிசுத்த ஆவி செய்த செயலைப்பற்றிக் காண்போம்.

தொடரும்...


தஜ்ஜால்

Monday 5 May 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -2

குர்ஆன் 6:101-ல், மனிதர்களை நோக்கி அல்லாஹ் எழுப்பும் கேள்வி இதுதான்.

வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
பீஜே மொழிபெயர்ப்பு

முன் மாதிரியின்றியே வானங்களை மற்றும் பூமியைப் படைத்தவன்; அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

அவன் வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்.
தர்ஜுமா.காம் வெளியீடு

(அவன்) வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி (எவரும்) இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

அல்லாஹ்விற்கு மனைவி இல்லை அதனால் குழந்தையில்லை! இது நியாயமான வாதம்தானே?

இதைச் சொல்வதற்கு எதற்காக இத்தனை மொழிபெயர்ப்புகள் என்று கோபம் கொள்ள வேண்டாம்.  இதில் வழக்கம் போல குர்ஆனின் முட்டாள்தனமும் மொழிபெயர்ப்பாளர்களின் கைவரிசையும் உள்ளது.

அதைப் பார்ப்பதற்குமுன் மனைவி என்ற பதத்தை குர்ஆன் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் காணலாம்.  குர்ஆன் ஒரு அற்புதம்(!) என்பது நமக்குத் தெரியும். ஆனால் அதன் மொழிபெயர்ப்புகள் அதைவிட பேரற்புதமாகும். அதனால்தான் என்னவோ அண்ணன் பீஜே ஒரு விவாதத்தில், தமிழிலோ அல்லது வேறுமொழிகளில் உள்ளவைகளை நாங்கள் குர்ஆனாகக் கருதுவதில்லை என்றார். ஒவ்வொரு குர்ஆன் மொழிபெயர்ப்பாளரும் எத்தனை சிரமப்பட்டு, வேதனைப்பட்டு, விமர்சனங்கள் என்ற பெயரில் சகமுஸ்லீம்களிடம் செருப்படிபட்டு, சவுக்கடிபட்டு, மரண அடிபட்டு குர்ஆனை வேறொரு புத்தகமாகவே மாற்றி வெளியிடுகிறார்கள் தெரியுமா? அதை குழப்பக் குவியலான குர்ஆனுடன் ஒப்பிட்டால் எரிச்சல் வருமா,  வராதா? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு பெண்களைப்பற்றி புகழ்ந்துரைக்கும் ஒரு அழகிய வசனத்தைக் காண்போம்.




குர் ஆன் 2:223
உங்கள் மனைவியர் (نِسَاؤُكُمْ-nisāikum) உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!...

இவ்வசனத்தைப்பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள்; நம்மைப் போன்றவர்களாலும் மாற்று நம்பிக்கையிலிருப்பவர்களாலும் நிறையவே விமர்சிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் குர்ஆனின் மொழிநடைக்குள் செல்வோம்.

நிஸா என்பதன் மூலச்சொல் (ن س و) குர்ஆனில் ஏறக்குறைய 59 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ”அன்னிஸா” என்ற அத்தியாத்தைப்பற்றி குறிப்பிடும் பொழுது அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்.

மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, வாரிசுரிமை போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.

தலைப்பைப்பற்றி இவ்வாறெல்லாம் கூறும் அண்ணன் பீஜே, குர்ஆன் வசனத்திற்குள் வரும் பொழுது ”உங்களது பெண்கள்” என்று பொருள்படும் ”Nisāukum” என்ற சொல்லை “உங்களது மனைவியர்” என்று மொழிபெயர்ப்பு செய்து தனது அடியார்களின் காதுகளில் பூந்தோட்டத்தை அமைக்கிறார். இவர் மட்டுமல்ல ஏறக்குறைய அனைத்து தமிழ் மட்டுமல்ல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ”நிஸா” என்பதை பல இடங்களில் மனைவியென்றே மொழிபெயர்த்துள்ளனர். பிக்தால் போன்ற ஒரு சிலர் மட்டுமே “நிஸா” என்பதை “Women” என்று மொழிபெயர்த்துள்ளனர்.

குர்ஆன் நிஸா என்று குறிப்பிடும் 59 இடங்களையும் ஆய்வு செய்தால் அதுவே ஒரு தனி புத்தகமாக எழுத வேண்டிவரும். எனவே உதாரணத்திற்கு ஓரிரு வசனங்களை மட்டும் ஆய்வு செய்வோம்.

குர் ஆன் 2:187
நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம்(نِسَائِكُمْ-nisāikum) கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது...

குர்ஆன் 4:15
 உங்கள் பெண்கள்(نِسَائِكُمْ-nisāikum) வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்!...

குர்ஆன் 4:23
...உங்கள் மனைவியரின்(نِسَائِكُمْ-nisāikum) அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு(نِسَائِكُمُ-nisāikumu) (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர்....

குர்ஆன் 65:4
உங்கள் பெண்களில்(نِسَائِكُمْ-nisāikum) மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள்.

இரண்டிற்கும் மேற்பட்ட பெண்களைக் குறிப்பிட அரபியில் நிஸா என்ற சொல் பயன்படுகிறது. இதில் ஒருமைச் சொல் கிடையாது. ஆனால் இவர்கள் மனைவியர்/மனைவி என்று மொழிபெயர்த்துள்ளனர்.  ”உங்கள் பெண்களிடம் விரும்பியவாறு செல்லுங்கள்” என்று அல்லாஹ் சொன்னதை, இவர்கள் எதற்காக மனைவியரிடம்” என்று திருத்தி மொழிபெயர்க்க வேண்டும்?

இதேபோல பெண்களைக் குறிப்பிட குர்ஆன் பயன்படுத்தியுள்ள im'ra-atan - im'ra-atayni என்ற பதங்களும் மொழிபெயர்பாளர்களை தர்மசங்கடத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது.  இதையும் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் ’மனைவி’ என்றும் ஒரு சில இடங்களில் குர்ஆனின் உளறல் போக்கை சரிகாணும் விதமாக ‘பெண்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.  ஸுலைமானின் அடிமையாக இருந்த ஒரு ஜின், அரசி ஷிபாவைப்பற்றி குறிப்பிடுவதைக் கூறும் பொழுது,

குர்ஆன் 27:23
நான் ஒரு பெண்ணைக் (امْرَأَةً- im'ra-atan) கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள்.

குர் ஆன் 3:35
"இறைவா! என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' என்று இம்ரானின் மனைவி(امْرَأَتُ -im'ra-atu) கூறியதை நினைவூட்டுவீராக!

நாம் இதுவரைக் கண்ட பெண்பாலைக் குறிப்பிடும் இடங்களில் பெண் என்றோ அல்லது மனைவி என்றோ பொதுவாக மொழிபெயர்த்தால் விவகாரமான பொருள்வரும்.  பெண்கள் என்றால் யார்? தாயும் பெண்தான் தாரமும் பெண்தான்! மனைவி என்று மொழிபெயர்த்தால் முழுக் குர்ஆனும் காமெடி புத்தகமாகிவிடும். எனவே குர்ஆனை மொழிபெயர்த்தவர்கள் அவரவர் தேவைகளுக்கேற்ப மானே தேனே பொன்மானே என்று போட்டு நம்மிடம் ’ஜிகினா’ வேலை காண்பிக்கின்றனர்.

 பிறகு ஏன் அல்லாஹ் nisāikum, im'ra-atan போன்ற சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

மனைவியரின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை விதித்த அல்லாஹ், அடிமைப் பெண்கள் விஷயத்தில் எந்த வரைமுறைகளையும் விதிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். திடீர்த் தாக்குதல்கள் மூலம் அப்பாவி பெண்களைக் கைப்பற்றி அடிமைகளாக்குவதும், திருமணபந்தமின்றி, அவ்வடிமைப் பெண்களிடம் கூடுவதும்; அவர்களைத் தங்களது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தியபின் சந்தையில் விற்பதும்; மீண்டும் வேறொருவர் வாங்கிப் பயன்படுத்துவதும்; மீண்டும் விற்பது.... இப்படித் தொடரும் கேடுகெட்ட செயலை பழிப்பிற்குரியதல்ல; இவர்களுடன் உடலுறவு கொள்வது அனுமதிக்கப்பட்டதே என்கிறது குர்ஆன். (இதற்கும் விபச்சாரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையாம்!) எனவேதான் அல்லாஹ் மனைவியர்கள் என்று கூறாமல் பெண்கள் என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறான்.

குர்ஆன், நேரடியாக மனைவியரைக் குறிப்பிடவே இல்லையா?

திருமணபந்தத்தில் இருக்கும் துணைவியர்களை அதாவது மனைவியைக் குறிப்பிட அரபியில்   أَزْوَاجًا-zawjan என்ற என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இப் பதத்தை இதே பொருளில் குர்ஆனும் ஏறக்குறைய 76 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. எனவே, பெண்களில் மனைவியரைப் பிரித்தறிவிக்கும் சொல்லை அல்லாஹ் அறியாமலில்லை.

ஆனால் அல்லாஹ் கூறுவதையெல்லாம் அப்படியே கூறினால் மனநிலை பாதிப்படைந்தவன் கூட இஸ்லாம் இருக்கும் திசைக்குக் கூடத் திரும்பமாட்டான். பிறகு கல்லாவை நிறைப்பதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் கூட்டத்தைக் கூட்டுவது எவ்வாறு? இதப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

எனவேதான், குர்ஆன் 2:187-ல் வரும் ”நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறுவதன் மூலம் மனைவியர்களுடன் மட்டும்தான் கூடவேண்டுமென்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கி, தாங்களது புத்தகத்தின் மீது இல்லாத புனிதத்தை ஏற்ற முனைகின்றனர். விருப்பம் போல அடிமைப் பெண்களுடன் கூடிவாழலாம்(4:3,24,25, 24:6, 33:50, 70:30) என்ற குர்ஆனில் அனுமதி வழங்கியுள்ள அல்லாஹ்வை இவர்கள் முட்டாளாக்குகின்றனர்.


குர்ஆன் 6:115
உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது. அவனது வார்த்தைகளை மாற்றுபவன் எவனும் இல்லை.

அல்லாஹ்வை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. அவனது வார்த்தைகளை மாற்றுபவர்கள் எவருமில்லையாம்!

மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கிறது; அரபுமொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது; அரபுமொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லாமல், மாறாக அதைவிட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது; என்று முஸ்லீம்களும், தெளிவானது, விளக்கமானது, விவரிக்கப்பட்டது என்றெல்லாம் தன்னைத் தானே சொறிந்து கொள்ளும்  குர்ஆனின் அழகு இதுதான்!


நான் தலைப்பிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டதாக நினைக்க வேண்டாம். நான் முன்பே கூறியபடி குர்ஆனின் அர்த்தமற்ற மொழிநடையை விவாதிக்கத் துவங்கினால் தனித்து ஒரு புத்தகத்தை எழுத வேண்டிவரும். ஆயினும் ஒரு சில செய்திகளைக் கூறுவது இங்கு தவிர்க்க முடியாததாகிறது. குர்ஆனை அதன் மூலமொழியில் அணுகினால் எப்படி இருக்கும் என்பதை விளக்கவே இவற்றைக் கூறுகிறேன். ஹதீஸ்களும், குர்ஆன் விரிவுரையாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களும் உதவில்லையென்றால் குர்ஆனின் ஆசிரியரென்று கூறிக் கொள்ளும் அல்லாஹ்விற்கே அது புரியாமல் போயிருக்கும்.

’அல்லாஹ்விற்கு மனைவியில்லை அதனால் வாரிசு இல்லை’ என்பதும் இதைப் போன்றதொரு ’தில்லாலங்கடி’ மொழிபெயர்ப்புதான்!

குர்ஆனைப் பொருத்தவரையில், வாரிசு என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே உருவாகவேண்டும் என்ற வரைமுறையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவால் இணைவதற்கும், வாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் திருமணமென்பது இரண்டாம் வாய்ப்புதான். ஏனெனில் ஒருவர் திருமணமின்றி அடிமைப்பெண்களுடன் உடலால் இணைவதையும் அதனால் குழந்தையைப் பெற்றெடுப்பதையும் குர்ஆன் தடைசெய்யவில்லை. மேலும் அவருக்குப் பிறந்த குழந்தை, சொந்த எஜமானின் குழந்தையாகக் கருதப்படும் அதேவேளையில், குழந்தையைப் பெற்றுக் கொடுத்த அந்த அடிமைப்பெண் அவரது மனைவி என்ற தகுதியைப் பெறுவதில்லை.

முஃமின்களுக்கு இத்தனை சலுகைகளை...

சிறிய திருத்தம்..!

முஃமின்களில் ஆண்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வழங்கிய அல்லாஹ்விற்கு மட்டும் மனைவி இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அல்லாஹ் ஒரு ஆணா...!?
தொடரும்...



தஜ்ஜால்