Thursday 21 June 2012

அற்புதக் கதைகள்-4, அமுதசுரபியாக மாறிய எச்சில்



நண்பர் ஒருவரின் இம்சை தாங்க முடியாமல், சில நாட்களுக்கு முன் சொற்பொழிவு கூட்டம் (பயான்) ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கு நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து ஒரு கதையைமட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒரு முறை முஹம்மதிற்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது, மறைவான இடம் கிடைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாராம். இதைக்கண்ட முஹம்மதின் தோழர், சற்று தொலைவிருந்த ஒரு மரத்திடம் சென்று, “ஏய் மரமே, அல்லாஹ்வின் தூதர் சிறுநீர் கழிக்க மறைவான இடம் தேடிக்கொண்டிருக்கிறார், உன்னால் அவருக்கு ஒரு மறைவிடம் உருவாக்கித்தர வேண்டும். இதை அல்லாஹ்வின் தூதர் பெயரால் ஆணையிடுகிறேன்” என்றாரம்.
உடனே, அந்த மரம் வேறுடன் பெயர்ந்து, நகர்ந்துவந்து, முஹம்மதிற்கு தோதாக, மறைவிடமாக நின்றுகொண்டதாம். முஹம்மது தனது தேவையை நிறைவேற்றிக் கொண்டதும், அந்த மரம் மீண்டும் நகர்ந்து சென்று தனது பழைய இடத்திலேயே நின்றுகொண்டதாம்.
சொற்பொழிவாளரோ, மேலும் சில கதைகளையும் கூறி, சிறிதுகூட வெட்கமில்லாமல் பகுத்தறிவிற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று முடித்தார் நான் எனது நண்பரைப் பார்த்தேன் அவர் முகத்தில் அசடுவழிய சிரித்தார். கல் பேசுகிறது, மரக்கட்டை அழுகிறது, உயிருள்ள மரம் நடந்துவருகிறது எனும்பொழுது உருவழிபாடு செய்கிறவர்களின் கல், மரக்கட்டைகளில் உள்ள உருவங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று கூறுவது இவர்களின் மதவெறிக்கு ஒரு சான்று. நாம் இவர்களின் உளறல்களைச் சுட்டிக்காட்டினால் மதநம்பிக்கை புண்பட்டுவிட்டதாக ஓலமிடுவார்கள், பத்தவாக்களை தூக்கிக்கொண்டு வெறிபிடித்து அலைவார்கள். ஆனால் பிறநம்பிக்கைகளை எள்ளிநகையாடுவார்கள்.
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(குர்ஆன் 22:73)
தெய்வங்கள் என்று கூறப்படும் பிறவைகள் எந்த சக்தியும் அற்ற ஜடங்கள், அவைகள் சைத்தானால் உருவாக்கப்பட்டவைகள் என்று குர்ஆன் கூறுகிறது. இதுதான் குர்ஆன் மூலம் அல்லாஹ்(முஹம்மது) கற்பிக்கும், மதங்களுக்கிடையே ஆன நல்லிணக்கம், அன்பு, அமைதி, சகோதரத்துவம், பகுத்தறிவு(?).
கடந்த பகுதியில் முடி மற்றும் எச்சிலைப்பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். முஹம்மது தனது எச்சிலைக் காறி உமிழ்ந்தபொழுது அவரது கைத்தடிகள், அதைக் கையில் பிடித்து முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொண்டதற்கான காரணம், அது புனிதமானவைகள் மட்டுமல்ல, அற்புதங்களின் பிறப்பிடமாகவும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும், அவர் காண்பித்துக் கொண்டதுதான். அவரது எச்சில் செய்த மற்றொரு அற்புதத்தையும் பார்க்கலாம். 

உணவைப் பெருகச் செய்த அற்புத எச்சில்,

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன்…..
அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள்..... பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.
(புகாரி)
ஒரு சிலருக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் உணவு, ஆயிரம் நபர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தும், முன்பிருந்ததைப் போல நிறைவாகவே இருப்பது எப்படி? நம்மைப் போன்ற ஒரு சராசரி மனிதனின் எச்சில் எப்படி உணவைப் பெருகச் செய்யமுடியும்? அதற்கான வேதிவினை என்னவோ?
நாம் இன்று உணவுத்தேவையில் தன்னிறைவடைந்துவிட்டதாக பீற்றிக்கொண்டிருந்தாலும் பட்டினிச்சாவு என்னவோ தொடர்கதையாகத்தான் இருக்கிறது. உணவைப் பெருகச் செய்யும் எச்சில் மூலமாவது பட்டினிசாவைக் குறைக்கலாமல்லவா? இஸ்லாம் பகுத்தறிவும், அறிவியலும் நிறைந்த பூர்வமான மார்க்கமல்லவா? எனவே வேதியியல் தெரிந்த ஈமாந்தாரிகள் விளக்க வேண்டும்.
எச்சில் மற்றும் முடியை பொருத்தவரையில் அவைகள் இருக்குமிடத்தில் இருக்கும்வரைதான் வெளியேற்றப்பட்டுவிட்டால் அது அசுத்தமானதுதான். ஆனால் தன்னை ஒரு புனிதப் பிறவியாகத்தான் முஹம்மது எண்ணிக் கொண்டிருந்தார்.  மருத்துவ குணம் கொண்ட எச்சில்,
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகிறேன்…
நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண்வலி  அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் உமிழ்ந்து அவர்களுக்காக (நலத்திற்கு) பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள்.
(புகாரி)
அடுத்தது விரல்களிலிருந்து நீர் சுரந்த அற்புதம்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கென்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். மக்கள், தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூ செய்வதற்கும் குடிப்பதற்கும் வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை என்று பதிலளித்தனர். உடனே, நபி (ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களுடைய விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத்தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும், உளூ செய்தோம்.
அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் (ரஹ்) கூறுகிறார்கள்:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள், நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம் என்று பதிலளித்தார்கள்.
(புகாரி)
ஒருவர் ஒளுச் செய்ய குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம். அப்படியானால் அன்று முஹம்மது ஆயிரத்து ஐநூறு லிட்டர்கள் தண்ணீர் சுரந்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளை அறியாத அல்லாஹ்  தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தயமும் செய்து கொள்ளுங்கள் என்று அப்பாவியாக கூறுகிறான்.
...தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!
(குர்ஆன் 5:06)
எந்த ஒரு மனிதனையும் கசக்கிப் பிழிந்தாலும் இத்தனை திரவம் சுரக்க வழியே இல்லை. நாமறிந்த வரையில் தாய்ப்பால், இரத்தம், எச்சில், வியர்வை, சிறுநீர், விந்து போன்றவைகள் மனித உடலிலிருந்து நீர்ம  வடிவில் வெளியேறுவதைக் காண்கிறோம். முஹம்மதிற்கு பீறிட்டு சுரந்து, அவரது கைத்தடிகள் ஒளு செய்யப் பயன்படுத்தியது இவற்றில் எதுவோ?
ஒருவேளை முஹம்மதிற்கு நீர் சுரப்பதை அல்லாஹ் முன்பே அறிந்திருந்தால் இப்படி ஒரு வசனத்தை இறக்கியிருக்கக் கூடும்.
தண்ணீர் கிடைக்காத போது முஹம்மதின் ’உறுப்பு’களிலிருந்து நாம் தண்ணீரை சுரக்கச்செய்வோம் அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள்!

முஹம்மதின் உடலிலிருந்து சுரக்கும் நீரின் பயன்பாடு ஒளுவுடன் நிற்கவில்லை

Imam Jalal al-Din Suyuti reports from Abu Ya’la, Hakim, Dar Qutni, Tabarani, Abu Nu’aym from Umm Ayman (also known as Barakah)
May Allah be pleased with her, who said, ‘the Prophet got up one night and urinated in a bowl. During that night, I rose in the state of thirst so I drank whatever was in the bowl. In the morning I told Him what I done and He smiled and said, ‘surely you will never have pain in your stomach’’. Abu Ya’ala’s wordings are as follows, ‘you will never feel stomach pain as of today’
Tabarani said: Hussain bin Is’haq al-Tustari informed us, who was informed by Uthman bin Abi Shaybah, who was informed by Shababah bin Sawwar, who was informed by Abu Malik al-Nakha’i who narrated from Aswad bin Qays, who narrated from Nubayh al-Anazi, who narrated from Umm Ayman, who said: ‘‘One night the Prophet got up and went to a side to urinate in the bowl. During the night, I rose and was thirsty so I drank whatever was in it and I did not even realize what it was. In the morning, He said, ‘Oh Umm Ayman! Throw away whatever is in the bowl’. I replied, ‘I drank what was in the bowl’. He thereafter smiled as such that His teeth appeared and said, ‘Beware! You will never have stomach pain’’. 
(உம்மு அய்மன் கூறுகிறார், ஒரு நாள் இரவில் எழுந்த அல்லாஹ்வின் தூதர் ஒரு கிண்ணத்தில் சிறுநீர் கழித்திருந்தார். தாகத்தின் காரணமாக இரவில் எழுந்த நான் கிண்ணத்திலிருந்ததைக் குடித்துவிட்டேன். அதிலிருந்தது என்னவென்றும் என்னால் அறியமுடியவில்லை. காலையில், ”ஓ உம்மு அய்மன், கிண்ணத்திலிருப்பதை  தூரமாக எறிந்துவிடு என்று அவர் கூறினார். “கிண்ணத்திலிருப்பதை நான் குடித்துவிட்டேன்” என்றேன். உனக்கு ஒருபொழுதும் வயிற்றுவலியே வராது என்று அவர் பற்கள் தெரிய சிரித்தவாறு கூறினார்.)
இந்த செய்தி தொடர்பாக வரும் மற்றொரு ஹதீஸ், “உனது வயிற்றை நரக நெருப்பு தீண்டாது” என்றும் முஹம்மது கூறினார் என்று போகிறது.
முஹம்மது சிறுநீர் கழித்ததும், உம்மு அய்மன் என்னவென்று அறியாமல் அதைக் குடித்ததும் தற்செயலான நிகழ்வுகளே. ஆனால் அதற்கு முஹம்மது கூறும் மருத்துவ விளக்கம் சகிக்க முடியாதவைகளாக உள்ளன. ஜூலை 13, 2007-ம் ஆண்டு எகிப்திலுள்ள The Middle East Media Research Institute என்ற நிறுவனம் முஹம்மதின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்துமே புனிதமானவைகளே என்றொரு ஃபத்வாவை வழங்கி, பெயர்தாங்கி முஸ்லீம்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டு. சாதரண கால்நடையான ஒட்டகத்தின் சிறுநீருக்கே மருத்துவகுணம் இருப்பதாகக் கூறுவதை ஏற்பவர்களுக்கு, இப்பிரபஞ்சத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த படைப்பான முஹம்மதின் சிறுநீரின் மீது சந்தேகம் தோன்றலாமா? நிச்சயமாகத் தோன்றியிருக்கக் கூடாது!
உண்மை என்னவெனில், முஹம்மது தனக்கு வஹீ மூலம் வழங்கப்பட்ட குர்ஆனை மட்டுமே தனது அற்புதமாகக் கூறுகிறார். அதனால்தான் குர்ஆனைப்போல ஒரு அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? பத்து அத்தியாயம் கொண்டுவரமுடியுமா? என்று பீற்றிக்கொண்டிருந்தார். முஹம்மதின் இந்த உளறல்களை மக்காவாசிகள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் முஹம்மதிடம், நீர் அல்லாவின் தூதரே என்பதற்கு சாட்சியாக,
"இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்ய வேண்டும், பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும், அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும், தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும், வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்க வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும்,
(குர்ஆன் 17:90 – 93)
என்று ஏதாவது ஒரு ஆதாரத்தையாவது காண்பிக்கவேண்டும் என்றனர். என்ன பதிலைக் கூறுவதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு முஹம்மதின் கைத்தடி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.
.."என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!
 (குர்ஆன் 17:93)
"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது...
(குர்ஆன் 18:110)
குர்ஆனின் கூற்றுபடி முஹம்மது நம்மைப்போன்ற உண்ணுகின்ற, உறங்குகின்ற, கடைத்தெருவில் நடமாடுகிற, ஒரு சராசரி மனிதரே. அவரால் ஆனால் ஹதீஸ்களோ அற்புதங்களை அள்ளிவிடுகிறது. இவற்றில் எதை ஏற்பது?
இந்த அற்புதக்கதைகளில் இவர்கள் எதைக்கூற முயற்சிக்கின்றனர்? பகுத்தறிவையா?
நிலவு பிளந்து மீண்டும் இணைகிறது
மரக்கட்டை ஓலமிட்டு அழுகிறது
கல் முகமன் கூறுகிறது
தொண்டையைச் செருமி காறி உமிழ்ந்த எச்சிலை முகத்தில் தேய்த்துகொள்கின்றனர்
எச்சில் நீருக்காக முண்டியடித்துக் கொள்கின்றனர்
சிரைக்கப்பட்ட தலைமுடி விநியோகம் செய்யப்படுகிறது
வியர்வை சேகரிக்கப்படுகிறது
நீரில் மூழ்கிய தலைமுடி நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது
மரம் நடந்து செல்கிறது
எச்சில் கண்வலியை குணமாக்குகிறது, உணவைப் பெருகச் செய்கிறது
விரல்களிடையே இருந்து அளவற்ற நீர்சுரக்கிறது
சிறுநீர் வயிற்று வலியைப் போக்குகிறது
எலும்புமுறிவை சரி செய்தது, கிணற்றில் நீரைப் பெருகச் செய்தது, இரவில் வழிகாட்ட ஒளியை அனுப்பிவைத்தது இவற்றிகெல்லாம் முதன்மையான விண்வெளிப்பயணம் என்று பட்டியல் நீளுகிறது. வேடிக்கை என்னவென்றால் உஹுது களத்தில் உத்பா அபீ இப்ன் வாக்கஸ், அப்துல்லாஹ் இப்ன் ஷிஹாப் ஜூஹ் ஆகியோரிடம் அடிவாங்கி நொந்துபோன முஹம்மதிற்கு அவரது எச்சில் ஏனோ உதவவில்லை.
இஸ்லாமின் இண்டுஇடுக்குகளிலிருந்தெல்லாம் அறிவியலை அள்ளிக்கொண்டுவரும் இஸ்லாமிய விஞ்ஞானிகள், மேற்கண்டவைகளுக்கும் அறிவியல் விளக்கம் கொடுப்பார்களா?
முஹம்மதின்  மீது இஸ்லாமியர்கள் சுமத்தியுள்ள பிம்பத்தைக் கிழித்தெறிய, இவர்களின் மூலநூல்களே போதுமானது நாம் எதையும் மிகைப்படுத்திக் கூறவேண்டியதில்லை

தஜ்ஜால்

Monday 18 June 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் - 11


12. ரைஹானா
புஹாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே! என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

புஹாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலாள வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
பனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. பெரிதாக போர் எதுவும் நிகழவில்லை. வேறு வழியின்றி பனூ குறைழா யூதர்கள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சரணடைவதற்கு முன்னால், முஹம்மது நபி என்ன தீர்ப்பு வழங்குவார்கள் எனபதைத் தெரிந்து கொள்ள தங்களிடம் நட்பாக இருக்கும் முஸ்லீம் அபூலுபாபாவை தூது அனுப்ப நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களிடம் சென்ற பொழுது அங்கிருந்த யூத பெண்களும் குழந்தைகளும் அழுவதைக் கண்டு மனம் இளகிவிட்டார். தங்களுக்கு எந்தவகையான தீர்ப்பு வழங்கப்படும் என்று கேட்டனர் அதற்கு தலையை சீவுவது போல சைகை காட்டினார். நபியவர்களின் ரகசிய தீர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம், நபி(ஸல்) அவர்களுக்க துரோகம் செய்துவிட்டதாக அபூலுபாபா மிகவும் வருந்தினார். தீர்ப்பு தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமின்றி சரணடைந்தனர்.
முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஆண்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பனூ குறைழா யூதஆண்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் தனியே நிற்க வைக்கப்பட்டனர். அவ்ஸ் என்ற யூத குழுவினர், நபி (ஸல்)அவர்களிடம் பனூ குறைழா யூதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள கோரிக்கை வைகின்றனர். அதற்கு “உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் விஷயத்தில் தீப்பு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என வினவ அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே தீர்ப்பை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய ஸாத் பின் முஅத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸாத் பின் முஅத் அகழ் போரில், அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மதீனாவில் தங்கியிருந்தார் அவர் வரவழைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கும் பணிஅவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகாரி ஹதீஸ் -4121
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
சஅத் பின் முஅத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) பனூ குறைளா குலத்தார் (தங்கள் கோட்டைகளிலிருந்து) இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) சஅத் பின் முஅத் அவர்களுக்கு ஆளனுப்பிட , அன்னார் கழுதையின்மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபி (ஸல்) தற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும்நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவரை …அல்லது  உங்களில் சிறந்தவரை …நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள் என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, (சஅதே) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கிவந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்) என்று கேட்டார்கள். சஅத் (ரலி), இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும், இவர்களுடைய பெண்களையும், குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திடவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி கூறினார்; அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் …அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.
முஹம்மது நபி விரும்பியவாறே தீர்ப்பு கூறிய, சஅத் பின் முஅத் அவர்கள்  அம்பு தைத்த காயத்தின் காரணமாக கடுமையாய் நோய்வாய்ப்பட்டார்
புகாரி ஹதீஸ்  : 4122                 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள் கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்த இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக.
புகாரி ஹதீஸ்:3803
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறை சிம்மாசனம் அசைந்தது-(34). இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று பதிலிளத்தார்கள்.
(இந்த  கொடூரமான தீர்ப்பு கூறியவரின் மரணத்திற்காக இறைவனின் சிம்மாசனம் அசையுமா?ஏன்? சஅத் பின் முஅத்-ன் மரணத்தை அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியவில்லையா?)
                சஅத் பின் முஅத் அவர்களின்  தீர்ப்பை நிறைவேற்ற, போரிடும் வலிமையுள்ள ஆண்களைக் கண்டறிவதற்காக, ஆண்களில் பருவ வயதடைந்தவர்களை கண்டறிய அவர்களது ஆடைகள் கழற்றப்பட்டு அவர்களது உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது அங்கு வெளிப்படையாக முடி முளைக்கப் பெற்றவர்களை பருவவயதடைந்தவர்களாக (ஆயுதம் ஏந்தி போரிடும் வலிமையுள்ளவர்களாக) கருதப் பெற்று கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Sunan Abu-Dawud Book 38, Number 4390:
Narrated Atiyyah al-Qurazi:
I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
(அவ்வாறான சோதனையில் தன்னுடைய மறைவிடங்களில் முடிமுளைக்கப் பெறாத காரணத்தால் தான் கொல்லப்படவில்லை என்பதை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய அதிய்யா அல் குரஸி என்ற ஸஹாபி அறிவிக்கிறார்)
The text of Sirat [Ibn Ishaq, page 464]:
Then they surrendered, and the apostle confined them in Medina in the quarter of d. al-Harith, a woman of B. al-Najjar. Then the apostle went out to the market of Medina (which is still its market today) and dug trenches in it. Then he sent for them and struck off their heads in those trenches as they were brought out to him in batches. Among them was the enemy of Allah Huyayy b. Akhtab and Ka`b b. Asad their chief. There were 600 or 700 in all, though some put the figure as high as 800 or 900. As they were being taken out in batches to the apostle they asked Ka`b what he thought would be done with them. He replied, 'Will you never understand? Don't you see that the summoner never stops and those who are taken away do not return? By Allah it is death!' This went on until the apostle made an end of them.
Huyayy was brought out wearing a flowered robe in which he had made holes about the size of the finger-tips in every part so that it should not be taken from him as spoil, with his hands bound to his neck by a rope. When he saw the apostle he said, 'By God, I do not blame myself for opposing you, but he who forsakes God will be forsaken.' Then he went to the men and said, 'God's command is right. A book and a decree, and massacre have been written against the Sons of Israel.' Then he sat down and his head was struck off.
(முஹம்மது நபி மதீனா சென்று அங்குள்ள கடைத் தெருவில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்தார். அப்பணியில் கைது செய்யப்பட்டவர்களும் ஸஹாபாக்களும் ஈடுபட்டனர். இந்த வண்ணமயமான நிகழ்ச்சியைகான மதீனாவாசிகள் அனைவரும் திரண்டுவந்தனர். கைதிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கைதிகளின் தலை தலையை வெட்டும் பணியில் முக்கிய தலைவர்கள் அபூபக்கர், உமர் போன்றவர்கள் ஈடுபட்டனர்சுமார் 800 - 900 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
பனூ குறைழா யூதர்களின் தலைவர், காப் பின் அஸதின் தலையை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழக்கததுடன் வெட்டி வீழ்த்தி தலையை வெட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்மற்ற கைதிகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது அவர்கள் அணிந்திருந்த உடைகளை ஸஹாபாக்கள் தங்களின் தேவைகளுக்காக எடுத்துக் கொண்டனர்.
பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் (ஷஃபியாவின் தகப்பனார்), பனூ குறைழாவினருக்கு உதவி செய்ய வந்தவர் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எப்பொழுதும் ஆடம்பரமாக ஆடையணிபவர். தன்னை கொலை செய்த பின்னர் தன்னுடைய உடையை யாரும் எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உடைமுழுவதும் சிறிய துளைகளாக கிழித்துக் கொணடார். எனவே அவர் அணிந்திருந்த ஆடையை முஸ்லீம்களால் கைப்பற்ற முடியவில்லை!
Bukhari  Book 14, Number 2665:
Narrated Aisha, Ummul Mu'minin:
No woman of Banu Qurayzah was killed except one. She was with me, talking and laughing on her back and belly (extremely), while the Apostle of Allah (peace_be_upon_him) was killing her people with the swords. Suddenly a man called her name: Where is so-and-so? I asked: What is the matter with you? She said: I did a new act. The man took her and beheaded her. I will not forget that she was laughing extremely although she knew that she would be killed.
(பனூ குறைழா நிகழ்ச்சியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். காரணம் தன்னுடைய கணவரையும், உறவினர்களையும் கொடுரமாக கொல்லப்பட்டதைக் கண்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அளவு கடந்து உரக்க சிரித்துக் கெண்டிருந்ததால், நபி (ஸல்) உத்தரவின்படி அப்பெண் கொல்லப்பட்டார்.)
Then the apostle divided the property, wives, and children . . . among the Muslims, and he made known on that day the shares of horse and men, and took out the fifth. A horseman got three shares, two for the horse and one for the rider. A man without a horse got one share (p. 466). Then the apostle sent Sa'd b. Zayd al-Ansari brother of b. 'Abdu'l-Ashhal with some of the captive women of B. Qurayza to Najd and he sold them for horses and weapons. [page 466]

பனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள்  போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.
போரில் கொள்ளையடிக்கப்பட்ட  உடைமைகள்  பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.

(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…
(குர்ஆன் 2:256)
The History of Tabari, vol 8, page 29-30
From his share of captive women, prophet gave his son-in-law, Ali a slave girl, Raytah bt Hilal to enjoy her at his will. He also presented Uthman b. Affan, his son-in-law, another slave girl Zainab b. Hayan, and bestowed another girl (name unknown) to his father in-law Omar Ibn Khattab. Omar gave that girl to his son Abdullah. Most of Prophet’s other elite companions received slave girls as gifts
(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)
The apostle had chosen one of their women for himself, Rayhana bint Amr . . . one of the women of . . . Qurayza, and she remained with him until she died, in his power. The apostle had proposed to marry and put a veil on her, but she said: "Nay, leave me in your power, for that will be easier for me and for you." So he left her. She had shown repugnance towards Islam when she was captured and clung to Judaism. (Ibn Ishaq p. 466)
(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)
Tabari VIII: 39
“Then the Messenger of Allah sent Sa’d bin Zayd with some of the Qurayza captives to Najd, and in exchange for them he purchased horses and arms.”

(குதிரைகளையும், ஆயுதங்களையும் பண்டமாற்று முறையில் வாங்க நஜ்த்திற்கு, ஸாத் பின் ஜைத் என்பவரை சில பனூ குறைழா அடிமைகளுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்)
பனூகுறைழா நிகழ்ச்சியை குர்ஆனின் 33: 26,27 குறிப்பிடுகிறது,
27.     வேதக்காரர்களிலிருந்து அவர்களுக்கு (பகைவர்களுக்கு) உதவி செய்தார்களோ அவர்களை அவர்களுடைய கோட்டைகளிலிருந்து அவன் இறக்கிவைத்து, அவர்களுடைய உள்ளங்களில் திடுக்கத்தையும் போட்டான்; (அவர்களிலிருந்து) ஒரு பிரிவினரை நீங்கள்  வெட்டினீர்கள்; மற்றொரு பிரிவினரை நீங்கள்  சிறைப்பிடித்தீர்கள்.
28.     அவர்களுடைய பூமி, அவர்களுடைய வீடுகள், அவர்களுடைய பொருட்கள் இன்னும (இதுவரை) எதனை நீங்கள் மிதிக்கவில்லையோ அத்தகைய (இதர பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினானான்.-அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கிறான்.
அல்லாஹ்விற்கு, தன் அடியார்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு, கல்வி, அறிவு, தொழில் நுட்பங்களின் மூலமாக அருளை ஏன் வழங்கத் தெரியவில்லை? இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன்? (264 ஆயிரம்  கோடி ரூபாயை துச்சமாக நினைத்து தானம் செய்தவரா இவர்?)

திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்து விட  குர்ஆன் கூறுகிறது.

திருடனும், திருடியும்- அவ்விருவரும் சம்பாதித்ததிற்கு பிரதியாக அல்லாஹ்விலிருந்துள்ள தண்டனையாய் அவ்விருவரின் கைகளை நீங்கள் துண்டித்து விடுங்கள்;…
(குர்ஆன் 5:38)
அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களின் செய்தியைப் பார்ப்போம்

புஹாரி ஹதீஸ்  6802             
 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு  அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
புஹாரி  ஹதீஸ் : 6803             
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.
கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு இவ்வளவு வன்முறை தேவையா? இதில் முஸ்லீம்களின் பொதுச் சொத்து  எவ்வாறு உருவாக்கப்பட்டது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களின் பொதுச் சொத்து மக்களின் வரிப் பணத்தினாலோ, செல்வந்தர்களின் தான, தர்மங்களினாலோ உருவாக்கப்படவில்லை. அது, அப்பாவி மக்களிடம் போரில் கொள்ளையிட்ட பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.
உண்மையைச் சொல்வதென்றால், முஸ்லீம்களின் பொதுச் சொத்திற்கு ஒட்டகங்களின் சாணம் கூட உரிமை கிடையாது.  உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலரால் திருடிச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், பனூ குறைழா, பனூ நளீர் பனூ முஸ்தலிக் போன்றவர்களிடமிருந்து முஹம்மது நபியால் கொள்ளையடிக்கப்பட்டவைகளேகொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட முஹம்மது நபியையும் அவரது கூட்டத்தினரையும் தண்டிப்பது யார்?