Friday 13 March 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 8




“அல்லாஹ் அக்பர்..!

 அல்லாஹ்... அக்பர்...!”

என்ற பிலாலின் குரலால் மதீனா நகரின் அதிகாலை அமைதியைக் கிழிந்து கொடிருந்தது.  இரவில் நிழ்த்திய விளையாடுகள் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை தொழுகைக்கான அழைப்பு ஒலிப்பைதைக்கூட அறியாதவாராக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது…

“ஆயிஷ்... எழுந்திரு...!  ஃப்ஜ்ரு தொழுகைக்கான பாங்கு சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது...!” என்றவாறு அரக்கப்பறக்க காதுகளை மூடியவாறு எழுந்தார்.
ஆயிஷா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

”ஆயிஷ் சீக்கிரம் எழுந்திரு... இல்லையென்றால் ஷைத்தான் உன் காதுகளில் சிறுநீர் கழித்துவிடுவான்” (புகாரி 1144)

“அவனுக்கு சிறுநீர் கழிக்க வேறு இடமே இல்லையா?” மீண்டும் சுருண்டு படுத்துத் கொண்டார்.

“ம்ம்... சீக்கிரம் ஆகட்டும்” என்றார் முஹம்மது.

முனங்கிக் கொண்டே எழுந்த ஆயிஷா இவரும் குளிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்தார். முஹம்மது தனது மர்மஉறுப்பை நன்றாகத் தேய்த்துக் கழுவினார்; மூக்கை மூன்று சிந்தினார்; அவரது மூக்கின் துளைகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஷைத்தான் அலறியடித்துக் கொண்டு வெளியேறினான். (முஸ்லீம் 403) பின்னர் ஒளு என்ற சடங்கை முறையாக செய்து முடித்தார். ஆயிஷாவும், தனது மூக்கிலிருந்த ஷைத்தானை விரட்டியடித்தார்; அவரும் சடங்குகளை நிறைவேற்ற, பின்னர் ஒரே பாத்திரத்திலலிருந்து நீரை அள்ளி இருவரும் ஒன்றாகவே குளித்தனர்.

ஆயிஷா, தனது கணவருக்கு உடையை அணிவித்துக் கொண்டிருந்த பொழுது, அப்படியே இறுக்க அணைத்துக் கொண்டார்.

“ம்ம்.. விடுங்கள் இப்பொழுதான் கடமையான குளிப்பை நிறைவேற்றியிருக்கிறோம்... மறுபடியுமா...?” என்று செல்லமாக சிணுங்கினார்.
ஆயிஷாவின் தலையைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டார். 

”என்னாவோ தெரியவில்லை உன்னைக் காணும்பொழுதெல்லாம் நான் என்னையே மறந்து போகிறேன்”

”என்ன இருந்தாலும் உங்களுக்குப் பிரியமானவர் தாடைகள் சிவந்த அந்தக்  குறைஷிக் கிழவிதானே?”(புகாரி 3821)

“இல்லையென்று சொல்லவில்லை. அல்லாஹ் எனக்கு செய்த மிகப்பெரிய அருட்கொடை நீ தான். ஏனெனில் உன்னுடன் அல்லாமல் வேறெந்தப் பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை (புகாரி 3775).”

ஆயிஷாவின் முகத்தில் பெருமையும், கர்வமும் சிருங்காரமும்  வழிந்தோடியது.
”வெளியில் மக்கள் நடமாடும் ஓசை கேட்கிறது, தொழுகைக்காக வந்து கொண்டிருக்கின்றனர் போலிருக்கிறது” என்று முஹம்மதை மேலும் இறுக்கிக் கொண்டார். 

“ஆயிஷ்…! வாசனைத் திரவியம் இருக்கிறதா...?” என்றார்.

“எனது தந்தையார் அன்பளிப்பாக கொடுத்த கஸ்தூரி கலந்த வாசனைத் திரவியம் இருக்கிறது. அதை பூசி விடட்டுமா?”

“ம்ம்... கொண்டுவா...” 

ஆயிஷா விலகிச் சென்றார். வாசனைத்திரவியத்தை முஹம்மதிற்கு தேய்த்துவிடும் பொழுது அவரது உடையில் ஆங்காங்கே கறைகள் தென்படுவதைக் கவனித்தார்.

“இருங்கள் இதோ...வந்துவிடுகிறேன்...!” 

“என்ன...!”

“உங்கள் ஆடைகளில் ’அது’ கறைகளை உண்டாக்கியிருக்கிறது. சுத்தம் செய்து தருகிறேன்” 

”... ...!?”

“இப்படி எல்லாவற்றையும் வெளியிலேயே சிந்திவிட்டால் என் வயிற்றி ஒரு பூச்சி புழு எப்படி உண்டாகும்...?”

முஹம்மது அசடு வழிய சிரித்தார்.

’குறைந்தபட்சம் ஈஸா நபிக்கு வழங்கப்பட்டதை போல இறந்தவைகளை எழுப்பும் ஆற்றலை அல்லாஹ்விடமிருந்து இவரும் பெற்றிருக்கலாம்…’ என்று மனதில் எண்ணியவாறு தண்ணீரை எடுக்கச் சென்றார்.

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொண்டுவந்து கறைகள் தென்பட்ட இடங்களையெல்லாம் சுத்தம் செய்தார். முஹம்மதின் ஆடையில் ஆங்காங்கே வட்டவட்டமாகத் தெரிந்தது (புகாரி 229-232).

”மக்கள் தொழுகைக்காக வந்து எனக்காக காத்திருக்கின்றனர் போலிருக்கிறது…” என்றவாறு வீட்டின் திரையை விலக்கி அவசரமாக வெளியேறினார்.

++++++

அன்று மதியம் ஒரு சவஅடக்க கலந்து கொண்டு, பகீஉ கல்லறையியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தலைவலிப்பதைப் போலத் தோன்ற தனது கைகளால் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து வலி அதிகரிக்கத் துவங்கியது.

“அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குத் தலைவலிக்கிறதா…?” என்றார் அருகிலிருந்த அவரது தோழர்.

’ஆம்’ என்பதைப் போல தலையசைத்து சைகை செய்தார்.

”தங்களது உடலும் அதிக வெப்பமாக இருப்பதைப் போலத் தோன்றுகிறது. உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை என்னால் நன்றாக உணரமுடிகிறது” என்றனர் இன்னொரு தோழர்.

“நரகத்திலிருந்து வெளியாகும் வெப்பம் அல்லாஹ்வின் தூதரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது” என்றனர் வருத்தத்துடன்.

சோர்ந்து போன நிலையில் ஆயிஷாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கே ஆயிஷா, 

”என் தலையே…!' என்று தனது தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.  இதென்ன ஒற்றுமை…இவளுக்கும் தலைவலியா…? என்று எண்ணியவாறு,

நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் பாவமன்னிப்புக் கோரி உனக்காக பிரார்த்திப்பேன்” என்றார்

“அது… என்றால்… எது?”

”இறப்பு…!”

அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் விரைவில் இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே என்னுடைய இல்லத்தில், நீங்கள் உங்களுடைய துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள்” என்றார் கோபமாக.

இல்லை… உனக்கு ஒன்றும் ஆகாது; நான்தான் இப்போது 'என் தலைவலியே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன்”(புகாரி 5666). என்று சமாளித்தார்.

”மதிப்பு வைத்திருப்பதெல்லாம் இருக்கட்டும், நான் கூறியதை நினைவில் வைத்திருக்கிறீர்களா…?”

“ம்ம்… நினைவிருக்கிறது…!” என்றார் உணர்ச்சியே இல்லாமல்

“… …”

“ஆயிஷ் … உண்மையிலேயே எனக்கு தலைவலியும் காய்ச்சலும்  இருக்கிறது நான் ஓவ்வெடுக்க விரும்பிகிறேன்” என்றார் முஹம்மது.

“அன்பளிப்பாக வந்த உணவு தயாராக இருக்கிறது, சாப்பிட்ட பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஆயிஷா.

அன்று மாலை மற்ற மனைவிகளில் இல்லங்களுக்கும் சென்றுவந்தார். நாட்கள் கடந்தது. தவறாமல் முறை வைத்து ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் சென்று வந்தார்.  எந்த மனைவியியரின் வீட்டிற்குச் சென்றாலும்  அவருக்கு ஆயிஷாவின் நினைவுதான். எப்பொழுது ஆயிஷாவின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நாள் வருமென்று ஏங்கித் தவித்தார்(புகாரி 4830 ).  அவரது உடல் நிலை குறித்த செய்திகள் மதீனா முழுவதுமே பரவத்துவங்கியது.



ஒவ்வொரு நாளும் அவரது நிலைமை மோசமடைந்து கொண்டே வந்தது. தலைவலியில் துவங்கியது காய்ச்சல், உடல்வலி என்று நாளொரு நோய் பொழுதொரு வலியுமாக விரிவடைந்து, அவரால் எழுந்து நடப்பதற்குக்கூட முடியாமல் போனது.  வழக்கம் போல முஹம்மதைச் சந்திக்க இப்ன் அப்பாஸும், அலீயும் வந்திருந்தனர் வந்திருந்தனர். பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பின்னர் அலீயை நோக்கி,

 “அலீ... நான் ஆயிஷாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெறவே விரும்புகிறேன்”

“மனைவியரிடையே நீதம் செலுத்துமாறு அல்லாஹ் கூறியிருக்கிறனே?”

”மனைவியர்கள் அனைவரது வீட்டிற்கும் சென்று வருவதற்கு எனக்கு ஆசைதான். ஆனால் என்னால் முடியவில்லை” என்றார்

அலீ அமைதியாக முஹம்மதையே கவனித்துக் கொண்டிருந்தார். 

”மற்ற மனைவியர்கள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லையா...?”

“நான் அவர்கள் எல்லோரிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். தயவு செய்து என்னை ஆயிஷாவின் வீட்டிற்கு அழைத்து செல்” என்றார்.

முஹம்மதின் நிலைமையை உணர்ந்த அலீயும் அப்பாஸும் அவரை எழுந்திருக்கச் செய்தனர். எழுந்து நின்றவர் நிற்க முடியாமல் மீண்டும் படுக்கையில் துவண்டு விழுந்தார்.

“அல்லாஹ்வின் தூதரே இந்த நிலையில் அங்கு செல்ல வேண்டுமா...? தேவையான மருத்துவத்தை இங்கேயே செய்யலாமே...!” என்றார் அலீ.

இல்லை என்பதைப் போலத் தலையசைத்து...

“நீ இன்னும் மனதில் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறாய்...”

“இல்லை..! என் மனதில் அப்படி எதுவுமில்லை. உங்கள் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஓய்வு அவசியம் என்பதற்காகவே சொன்னேன்” என்றார்

“அலீ... நீ எனக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறாய் இந்த ஒரு உதவியையும் செய்...! நான் ஆயிஷாவின் வீட்டிற்கு சென்று அங்கேயே சிகிச்சை செய்து கொள்கிறேன். என்னை எப்படியாவது ஆயிஷாவின் வீட்டில் சேர்த்து விடு” என்றார்.

“சரி... அல்லாஹ்வின் தூதரே...! உங்கள் விருப்பப்படியே செய்கிறேன். நீங்கள் எனது தோளையும் அப்பாஸ் அவர்களின் தோளையும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களை அங்கு சேர்த்து விடுகிறோம்” என்றார்.

முஹம்மதுவை மீண்டும் எழுந்திருக்கச் செய்து தங்களது தோள்களை பற்றிப் பிடிக்குமாறு செய்தனர். அவரை நோக்கி,

“வாருங்கள் போகலாம்” என்றார்.

முஹம்மதால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் தளர்ந்து பின்னிக் கொண்டிருந்தது.

”என்னால் அடியெடுத்து வைக்க முடியவில்லை...!” என்றார் பரிதாபமாக.

அலீயின் மனதில் வேதனை.  தனக்கு நினைவு நினைவு தெரிந்த நாளிலிருந்து முஹம்மதை நிழல்போல பின் தொடர்பவர். தனது உலகமே முஹம்மதுதான் என்றிருந்தவர். 

எப்படியாவது ஆயிஷாவின் வீட்டில் சேர்த்துவிடுவோம் என்பதைப் போல அப்பாஸை நோக்கினார். அலீயும் அப்பாஸும் மெதுவாக நடக்கத் துவங்கினார்கள். முஹம்மதின் கால்கள் தரையில் கோடு போடுவதை போல இழுத்துக் கொண்டே சென்றது (புகாரி 2588).

ஆயிஷாவின் வீட்டை அடைந்தனர். அலீயைக் கண்டதும் ஆயிஷா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். முஹம்மதுவும் அதை கவனிக்கத் தவறவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படாத அலீ, முஹம்மதைப் படுக்கையில் படுக்க வைத்து அவரிடமிருந்து விடை பெற்றார்.

”ஆயிஷா... இங்கே வா..!” என்றார் முஹம்மது

“ம்ம்... சொல்லுங்கள்..” என்றவாறு அவரது அருகில் அமர்ந்தார் ஆயிஷா.

“நீ ... எதற்காக அலீயிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?”

“என்னைத் தலாக் செய்துவிட்டு, உங்களை வேறொரு திருமணம் செய்து கொள்ளுமாறு ஆலோசனை சொன்னவர்தானே அவர்!”

“அதை இன்னும் நீ மறக்கவில்லையா...?”

“எப்படி மறக்க முடியும்..?”

“அலீயைப்பற்றி உனக்குத் தெரியாதா... அவன் மிகவும் நல்லவன் எனக்காக தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவன். நல்ல அறிவாளி... திறைமைசாலி...” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது எரிச்சலாக இடைமறித்து,

“அவர்... புகழ் பாடுவதற்காகத்தான் இங்கு வந்தீர்களா...?"

“கோபித்துக் கொள்ளாதே ஆயிஷா... எனது உடல் நிலை இப்படியிருக்கும் பொழுது நீங்கள் அனைனைவரும் உங்களுக்கிடையே நிலவும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டாமா...?” என்றார்.

“இதைப்பற்றி நாம் பிறகு பேசலாம். இப்பொழுது நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்” என்றார் ஆயிஷா.

இவர்களை எப்படி ஒன்றினைப்பது?

முஹம்மதிற்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. இவர்களது இந்த மோதல் போக்கு பெரும் ஆபத்தில் முடிந்துவிடுமே என்று அஞ்சினார். மீண்டும் ஆயிஷாவிடம் பேசுவதற்கு முயற்சித்த பொழுது,

“காய்ச்சலால் உங்கள் உடல் மிகவும் கொதிக்கிறது, தண்ணீரால் அந்த வெப்பத்தை குறைக்கிறேன்” என்றவாறு எழுந்து சென்றார்.

ஆயிஷா, முஹம்மதின் தலையில் கணமான துணியைக் சுற்றி, இறுக்கிக்கட்டி அதில் நீரை அளவாக ஊற்றினார். அவரது காய்ச்சல் சிறிது குறைய, களைப்பில் அப்படியே உறங்கிப்போனார்.

ஆயிஷா தனது அடிமைப் பெண்ணை நோக்கி,

”அல்லாஹ்வின் தூதரை நன்கு கவனித்துக் கொள், நான் எனது தந்தையாரின் வீடுவரை சென்று வருகிறேன்” என்றார்.

சரியென்பதை போல அந்தப் பெண் தலையசைக்க, தலைமற்றும் முகத்தை மூடியவாறு ஆயிஷா வேகமாக வெளியேறினார். வெளியில் புழுதிக் காற்று வீசிக் கொண்டிருந்தது.
+++++



அலீ தனது வீட்டிற்குள் நுழைந்தார். கரகரவென்று கற்கள் உராயும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. தனது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றியவாறு,

“ஃபாத்திமா...! என்று அன்பாக குரல் கொடுத்தார்.

திருக்கையில் கோதுமைமாவு அறைத்துக் கொண்டிருந்த ஃபாத்திமா அதை அப்படியே போட்டவாறு தனது கணவரிடம் வந்தார். அலீயின் முகத்தில் தவழும் சோகத்தை கவனித்தார்.

“அல்லாஹ்வின் தூதரை சந்தித்தீர்களா...?” என்றார்

“ம்ம்... சந்தித்தேன் அவரது உடல் நிலை என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. அவர் நம்மைவிட்டுச் சென்றுவிடுவாரோ என்று அஞ்சுகிறேன்!”

ஃபாத்திமாவின் கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

“அழதே என் அன்பே. நீ அழுவது அவரது வேதனையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார் அலீ.

”அனுமதி கொடுங்கள்... நான் இப்பொழுதே சென்று அவரைப் பார்த்து வருகிறேன்”

“... ...!”

“எந்த வீட்டில் இருக்கிறார்...?”

“ஆயிஷா..!”

“அங்கேயா...?” என்றார் புருவத்தை சுழித்தவாறு.

“ஆமாம்... அவர் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் நான்தான் அவரை அங்கு அழைத்துச் சென்றேன்!”

உடனே தந்தையைக் காணவேண்டுமென்ற ஃபாத்திமாவின் வேகம் குறையத் துவங்கியது.

“அபூபக்கரின் மகள் உங்களிடம் மரியாதையாக நடந்து கொண்டாரா...?”

“... ...” 

பதில் பேசவில்லை அமைதியாக இருந்தார். அதன் பொருள் ஃபாத்திமாவிற்குத் தெரியும்.

“அழதே ஃபாத்திமா...! அல்லாஹ்வின் தூதருக்காக நாம் அமைதியாக இருப்போம். அல்லாஹ்தான் நாடியதை செய்கிறான்” என்று தனது மனைவியை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

அவர்களின் முகத்தில் இயலாமையின் இறுக்கம் வலுவாக நிலவிக் கொண்டிருந்தது.
+++++



அபூபக்கரின் இல்லத்திற்குள் வேகமாக நுழைந்தார் ஆயிஷா. வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அபூபக்ர்,

“மெதுவாக... ஏன் இத்தனை வேகம்...?” என்றார்

“உங்களது நண்பரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வருகிறது. நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...? என்றார் ஆயிஷா.

”சற்று பொறுமையாக இரு ஆயிஷா! என்ன நடந்துவிட்டதென்று இப்படி பதட்டப்படுகிறாய்...?” என்றவாறு இருவரும் வீட்டிற்குள் நுழந்தனர்.

“அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரை சந்தித்து தனிமையில் உரையாடியிருக்கிறார். இதை அறிந்த பின்னர் பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும்?” என்று தொப்பென்று கீழே அமர்ந்தார்.

“சரி... அல்லாஹ்வின் தூதரது உடல் நிலை எப்படி இருக்கிறது...?” என்று அபூபக்கரும் அருகில் அமர்ந்து கொண்டார்.

”அதைத்தான் முன்பே சொன்னேனே...! சொல்லிக் கொள்ளும்படி இல்லை...!” என்றார் இறுக்கமாக.

”நீ அவரை சந்தித்தாயா...?”

“சந்திப்பதா...? இப்பொழுது அவர் எனது வீட்டில்தான் இருக்கிறார்!”

“அல்லாஹ்வின் தூதர், இன்று உனது இல்லத்திற்கு வரும் நாள் இல்லையே...?”

“சக்களாத்திகளின் சம்மதத்துடன் இனி என் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதாக இருக்கிறார். அப்பாஸ் மற்றும் அந்த மனிதரின் உதவியுடன் எனது இல்லத்திற்கு வந்து விட்டார்” (புகாரி 2588)

“அந்த மனிதரா... எந்த மனிதர்..?” 

“அவர் பெயரைச் சொல்வதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை..!” என்றார் கோபமாக,

”சரி... அவர் வஸியத்து(இறுதி விருப்பம்) கூறினாரா...?”

“இல்லை...!”

”நீ அவருக்கு நினைவூட்டியிருக்கலாமே...?”

”அவர் முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். நானும் அதைப்பற்றி தொடர்ந்து வற்புறுத்துகிறேன், மனிதர் வாயைத் திறந்து சொல்லமாட்டேன் என்கிறார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, குதிரையில் குழம்பொலி கேட்க இருவரும் அமைதியானார்கள்.




“அஸ்ஸலாமு அலைக்கும்..!” என்றவாறு வீட்டிற்குள் நுழைந்தார் உமர்.

”வாருங்கள் கத்தபின் மகனே...!” என்றார் அபூபக்ர்

ஆயிஷா முகத்தை மூடிக் கொண்டு திரை மறைவிற்குள் சென்றார்.

“ஆயிஷா நீ இங்குதான் இருக்கிறாயா...? நான் அல்லாஹ்வின் தூதரை சந்திக்கச் சென்றிருந்தேன் அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் தொல்லை கொடுக்க வேண்டாமென்று திரும்பிவிட்டேன்” என்றார்.

“... ...” 

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ஆயிஷா

“இன்னும் நமக்குச் சாதகமான பதில் நமக்குக் கிடைக்கவில்லை!” என்றார் அபூபக்ர்

“அல்லாஹ்வின் தூதரை அலீ பின் அபூதாலிப் சந்தித்து உரையாடியதாக செய்தி வந்ததுள்ளது!” என்றார் உமர்.

”அவருடன் என்ன பேசினார் என்பது தெரிந்ததா...?” என்றார் ஆயிஷா ஆர்வமாக,

“வழக்கமான நலம் விசாரிப்புதானாம்...!”

ஆயிஷாவிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது.

“மகளே ஆயிஷா... அரசியல் விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். இப்பொழுது உனது கவனம் தூதரின் உடல் நலனில் மட்டும்தான் இருக்க வேண்டும்..!”

“... ...!?”

“என்ன புரிந்ததா...?” என்றார் அபூபக்ர்

சரியென்பதைப் போல தலையசைத்தார் ஆயிஷா.

”அவர் எழுவதற்குள் நான் திரும்பிச் செல்லவேண்டும்...” என்று திரைமறைவிலிருந்து வெளியே வந்தார்.

“துணைக்கு யாரையாவது அனுப்பட்டுமா...?”

“வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன்”

“ஆயிஷா..! வெளியில் புழுதிக் காற்று இன்னும் குறையவில்லை” என்றார் அபூபக்ர்

தலை மற்றும் முகத்தை நன்றாக மூடியவாறு வெளியேறினார் ஆயிஷா.

“அலீ பின் அபூதாலிப்பிற்கு வஸியத்து செய்துவிட்டதாகவும், அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு அவர்தான் வரவேண்டுமென்றும் புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது” என்றார் உமர்.

“ம்ம்.. நானும் கேள்விப்பட்டேன். கடந்த ஹஜ்ஜின் போது அலீயைச் சுட்டிக் காண்பித்துவிட்டதாக ஒரு குர்ஆன் வசனத்தையும் குறிப்பிடுகின்றனர். அதன் பிறகே , ...இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்...(5:3) என்ற குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டதாக வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர்”

“ஆமாம்...! அதேபோல, ஒரு நாள் காலையில் நபி  அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது ஹசன் பின் அலீ  வந்தார்கள். உடனே நபி அவர்கள் ஹசன் அவர்களை  நுழைத்துக் கொண்டார்கள்; பிறகு ஹுசைன் அவர்கள் வந்தபோது அவர்களும் நபி அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு ஃபாத்திமா அவர்கள் வந்தபோது, அவர்களையும் நுழைத்துக்கொண்டார்கள். பிறகு அலீ வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்களாம். பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்களாம்” (முஸ்லீம் 4807)

”இதெல்லாம் எப்பொழுது நடந்தது..? உங்களுக்குச் சொன்னது யார்?” என்றார் உமர்

“என் மகள் ஆயிஷாதான் கூறினாள்”

“நாம் எல்லோருமே அல்லாஹ்வின் தூதருடன் எல்லா நேரத்திலும் இருப்பதில்லை. ஏதாவது இடைவெளியில் ஏடாகூடமாக நடந்துவிடுகிறது. முதலில் நாம் இதை ஒழுங்குபடுத்த வேண்டும்!”

“அந்த ஹஜ்ஜில் அல்லாஹ்வின் தூதருக்கு அருகிலேயேதான் நானும் இருந்தேன். இதையெப்படி கவனிக்காமல் இருப்பேன்..? அல்லாஹ்வின் தூதர் ஹஜ்ஜில் இருந்த பொழுது மக்களுக்காக தொடர்ந்து உரையாற்றிக் கொண்டுதான் இருந்தார். எப்பொழுது சொல்லியிருப்பார்? ஒன்றுமே புரியவில்லை!”

“... ...!” அபூபக்ர் அமைதியாக இருந்தார். உமர் தொடர்ந்து,

”குர்ஆனில் சட்டங்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதானே! நீங்கள் குறிப்பிடும்(5:3) குர்ஆன் வசனத்திற்குப் பின்னரும் அல்லாஹ்வின் தூதருக்கு  பாகப்பிரிவினை பற்றிய கட்டளைகள் உட்பட நிறைய இறைச்செய்திகள்  வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தக் கட்டளைகளையெல்லாம் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?”

“... ...?”

“ஒருவேளை அந்த அந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இனி நிகழ இருப்பதை நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர உங்களது ஒத்துழைப்பு மிக அவசியம்!” என்றார் உமர்


தொடரும்…
தஜ்ஜால்.

Facebook Comments

13 கருத்துரைகள்:

Unknown said...

தஜ்ஜால் கட்டுரை நடையை விட கதை சொல்லும் நடை நன்றாக இருக்கிறது. எனது கணிப்புப்படி அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாக இவை தொகுக்கப்படலாம் என கருதுகிறேன். மிஹ்ராஜ் பயணத்திற்கு தஜ்ஜாலுடைய எழுத்துகள் மிளிர்கின்றத.
ஒரு வேளை ஹூரிகளின் தரிசனம் ஏதும் கிடைத்து விட்டதா? வைக்கவும் அதை மேலே. (keep it up)

சிந்திக்கமாட்டார்களா said...

இப்படி எல்லாவற்றையும் சிந்திவிட்டால் என்வயிற்றிலெப்படி புழு பூச்சி இருக்கும்
.
.
.புஹாரி மறந்த சிந்தனை,!
Supper👌

Ant said...

//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் ... (புகாரி 3775)// இது போன்று ஆதார பூர்வமாக தரும் போது முஃமீன்கள் உண்மையை அறிய முடிவதோடு எழுத்து நடையில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்று புரிந்து கொள்வர். வயது வந்தோருக்கான செய்திகள் கூட குரான் மற்றும் ஹதீஸ்களில் இருந்து அப்படியே பயன்படுத்தும் போதும் முஃமீன்களால் மறுக்க முடியாது. நாவல் வடிவிலான எழுத்து நடை நன்றாக உள்ளது. (புகாரி 3775) என்று ஆதாரங்களை குறிப்பிட்டதுபோல் குரானுக்கு பிராக்கட் போட்டு இல்லாத பொருளை புகுத்தி குரானை காப்பற்றுவது போல் அல்லாமல் அதே பிராக்கட்டை அதை அப்பலப்படுத்த பயன்படுத்துவது சிறப்பு. வாழ்த்துகள்!

லெமன் ஜூஸ் said...

ஆயிஷாவின் மனநிலையை ஹதீஸ் ஆதாரத்தினூடே விளங்கவைத்திருப்பது அருமை. வாழ்த்துக்கள் கூறி தொடரின் அடுத்த கட்டுரைக்கு காத்திருக்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆன்ம ஞானம்,

உண்மையாகத்தான் சொல்றீங்களா? நம்பலாமா…?

மிஹ்ராஜ் பயணம், ஓரு நண்பரின் நீண்ட வற்புறுத்தல்களுக்குப் பிறகே எழுதினேன். அதை ஏன் பாதியில் நிறுத்தினீர்கள் என்று என்னை இன்றும் கடிந்து கொண்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும் சரி என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி!

தஜ்ஜால் said...

வாங்க mohamed sadiq,

நன்றி!

//இப்படி எல்லாவற்றையும் சிந்திவிட்டால் // Pornography படங்களில் வரும் இறுதிக்காட்சிகளை முன்னறிவிப்பு செய்திருப்பாரோ…?

தஜ்ஜால் said...

வாங்க Ant,

நன்றி!
//உன்னுடன் ... பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் ... (புகாரி 3775)// குறிப்பிட்ட அந்த செய்திகளில், ’ஆயிஷாவின் ஆடைகளுக்குள்’ என்றிருப்பதை வழக்கம் போல நமது முல்லாக்கள் ’ஆயிஷாவின் போர்வைக்குள்’ என்று மொழிபெயர்த்து அல்லாஹ்விற்கும் முஹம்மதிற்கும் உதவி செய்திருக்கின்றனர். ஜஸாக்கல்லாஹ் !


// வயது வந்தோருக்கான செய்திகள் கூட குரான் மற்றும் ஹதீஸ்களில் இருந்து அப்படியே பயன்படுத்தும் போதும் முஃமீன்களால் மறுக்க முடியாது.// நீங்கள் சொல்வது சரிதான்! தமிழில் கிடைக்கும் ஹதீஸ்களை கூடுமானவரை அப்படியே உரையாடல்களுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன். அவற்றை வேறுபடுத்தி அறிவதற்காகவே ஊதநிற வண்ணத்தையும் பயன்படுத்தியிருக்கிறேன்.

நமது கருத்துக்களை, விமர்சனங்களை இந்த தொடருக்குள் செலுத்துவதற்கு வசதியாக தொடரின் அடுத்த பகுதில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் வர இருக்கிறது. அவர்களும் குர்ஆன்- ஹதீஸ்களின் ஆதாரங்கள் அடிப்படையில்தான் விவாதிப்பார்கள்.

தஜ்ஜால் said...

வாங்க லெமன் ஜூஸ் ,

நன்றி!

//ஆயிஷாவின் மனநிலையை ஹதீஸ் ஆதாரத்தினூடே விளங்கவைத்திருப்பது அருமை. //

இஸ்லாம் என்பது சர்வதிகார அரசியல் கோட்பாடு என்பதை எனக்கு முதலில் வெட்டவெளிச்சமாகியது இந்த வரலாறுதான். இதற்காக நான் மண்ணடி மகா சன்னிதானம் பீ.ஜை அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருக்கும் ஒரு ஜஸாக்கல்லா!

Anonymous said...

Excellent style

தஜ்ஜால் said...

வாங்க Infidel,

உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

Unknown said...

தஜ்ஜால் நான் உண்மையாகத்தான் சொல்கிறேன். அதிலும் ஆயிஷ் என்ற செல்லப்பெயரை எப்படி பிடித்தீர்கள். நன்றாக இருக்கிறது.

Unknown said...

காலை நேரம் எவ்வளவு ரம்யமாக அமைதியாக இருந்தாலும் இந்தமும்மத வியாதிகள் சத்தத்தால் அழகை கெடுத்து விடுகின்றனர்.

தஜ்ஜால் said...

@aanma gnanam

//ஆயிஷ் என்ற செல்லப்பெயரை எப்படி பிடித்தீர்கள்.//

தொண்டரடிப் பொடிகள் எழுதி வைத்திருப்பவைகளில் இருந்துதான்.
//இந்தமும்மத வியாதிகள் சத்தத்தால் அழகை கெடுத்து விடுகின்றனர்.// ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் தினமும் காலையின் அமைதியைக் கெடுத்துவிடுகின்றனர். இனிவரும் மாதங்களில் கோவில் ஒலிபெருக்கிகளும் கூட்டணி அமைத்துக் கொள்ளும்