Thursday 11 December 2014

குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்!-2



வேற்றுகிரக உயிரினங்களைப்பற்றி குர்ஆன் முன்னறிவிப்பு செய்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்!

இஸ்லாமிய வானவியல் அறிஞர்கள், ”Rabbi al alameen(1:2)”,  "sabʿa samāwātin (65:12)",  "Dabbatun(42:29)"   இப்படி மூன்றே வாக்கியங்களில் மாபெரும் அறிவியல் பேருண்மையை கண்டறிந்ததுடன்,  இந்த முன்னறிவிப்பின் மூலம் குர்ஆனை இறைவேதமென்றும் நிரூபித்துவிட்டனர்.
ஜஸாக்கல்லாஹ்!

என்னது... முன்னறிவிப்புச் செய்யவில்லையா?

நீங்கள், இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள் கொடுக்கும் ஆய்வு முடிவுகளை குர்ஆனின் அடிப்படையில் அணுகியிருந்தால், அவர்கள் முன்வைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்துகொண்டிருக்கலாம். குர்ஆனின் அடிப்படையில் குர்ஆனை ஆய்வு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

குர்ஆனை ஆய்வு செய்வதை அல்லாஹ் எப்பொழுதுமே விரும்புகிறான். 

குர்ஆன் 4:82
இந்தக் குர் ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால், இதில் அநேக முரண்பாடுகளைக் அவர்கள் கண்டிருப்பார்கள்.
ஈமான்தாரிகளான நாம், உடனே நடுநிலையாக ஆய்வு செய்கிறேன் பேர்வழியென்று கிளம்பி விடக்கூடாது.  இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே குர்ஆனை ஆய்வு செய்யும் பொழுது, முதலில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக முடிவுசெய்திட வேண்டும். அதாவது குர்ஆனில் எந்த விதமான முரண்பாடுகளோ உளறல்களோ இருக்காது என்ற முடிவுடன் மட்டுமே குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டும். இதைத்தான் மேற்கண்ட  வசனத்தில், ”இந்தக் குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா?” அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதில் ”அல்லாஹ்விடமிருந்து வந்ததே”   என்று மட்டுமே இருக்கவேண்டுமென்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கோடிட்டுக் கண்பித்திருக்கிறான். இதுவே குர்ஆனை ஆய்வு செய்யும் முறையாகும். 

இந்த ஆய்வுகளை நாம் எப்படிச் செய்ய வேண்டும்?

குர்ஆனில் வேற்று கிரக உயிரினங்கள் பற்றிய முன்னறிப்பு இருக்கிறது என்று கூறி, நமக்கு நாமே புல்லரித்துக் கொள்வதுடன் ஈமாந்தாரிகளைப் புல்லரிக்கச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த முன்முடிவுடனேயே இந்த ஆய்வைத் துவக்கியிருக்கிறோம். எனவே நமது கவனம் அதன் மீது மட்டுமே இருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைபாய விடக்கூடாது. 

குறிப்பாக இது போன்ற ஆய்வுகள் செய்யும் பொழுது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் அல்லாஹ்வின் தொல்லை இதுபோன்ற நேரங்களில் அதிகமாக இருக்கும்.  என்னடா இவன் அல்லாஹ்வின் தொல்லை என்று குழப்புகிறானே என்று குழம்ப வேண்டாம்.

...நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது. கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அது போல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷைத்தான் இருப்பதை அல்லாஹ் பல இடங்களில் உறுதி செய்கிறான். ஆனால் அவனால் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதென்பதும், எல்லாவிதமான கெடுதல்களும் அல்லாஹ்வினால் மட்டுமே உருவாகிறது, ஒரு மரியாதை நிமித்தமாகவே அந்தக் கெடுதல்கள் ஷைத்தானுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதே மண்ணடி மகா சன்னிதானம் பீஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை முன்பே கவனித்தோம். 

குர்ஆன் 4:78
...அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே!

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முழுக்கமுழுக்க குர்ஆனின் அடிப்படையிலேயே அந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்; அவரது விளக்கத்தில் எந்தத் தவறுமில்லை என்பதையே குர்ஆன் 4:78 நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, அல்லாஹ்வின் தொல்லைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ள அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக ஆய்வைத் துவங்க வேண்டும். 

முதலில் Rabbi al alameen என்ற வாக்கியம் வேற்றுகிரக உயிரினங்களின் இருப்பை எப்படி நிறுவுகிறது என்பதை கவனிப்போம்.

Dr. ஷப்பீர் அலீ சொல்வது :
குர்ஆன், பல பூமிகள் இருப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடுகிறது, ஏனெனில், குர்ஆனில் முதல் அத்தியாமே ”அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” கூறுகிறது. உண்மையில், ’பிரபஞ்சங்கள்’ என்ற பன்மைச் சொல்லை, இங்கு ’அல்-ஆலமீன்’ என்று கூறுகிறது. 

மனிதர்களோ அல்லது எந்த விதமான உயிரினங்களும் இல்லாத இடத்தில் அல்லாஹ், ”நான்தான் rabbi al alameen”, நான்தான் rabbi al alameen” என்று சொல்லிக் கொண்டிருக்க அவன் என்ன ’லூஸா’? என்று சொல்லாமல் சொல்கிறார் Dr. ஷப்பீர் அலீ.  

......
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1)
உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)
திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள். அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது. .....

நான்தான் rabbi al alameen” என்று அல்லாஹ் கூறுவதற்கு அங்கு உயிரினங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா என்ன? வானங்கள், பூமிகள், மலைகள்கூட சிந்திக்கும் திறன்கொண்டவைகளாக இருக்கிறது. அவ்வளவு ஏன் நிழல்கள்கூட அல்லாஹ்வின் மகத்தும் அறிந்து அல்லாஹ்விற்கு ஸுஜுது செய்வதாக குர்ஆன் கூறுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். 

குர்ஆன் 33:72
வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.

குர்ஆன்13:15.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

குர்ஆன் 16: 48
 அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

வானங்களும், பூமியும் மலைகளும் சிந்தித்துச் செயல்படக்கூடியவை என்பதே மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்குக் கூறும் செய்திகள்.  இப்பொழுது இஸ்லாமிய அறிவியல் வல்லுநர்களின் rabbi al alameen என்ற விளக்கம் வழுவிழந்து விட்டதாகத் தோன்றலாம். இது போன்ற வேளைகளில் மனம்தளராமல் ஹதீஸ்களுக்குள்ளோ, தப்ஸீர்களுக்குள்ளோ நுழைந்து விடவேண்டும்.

இப்ன் கதீர், தபரி போன்றவர்கள் alameen என்ற பதத்திற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதைப்பார்க்க வேண்டும்.

இப்ன் கதீர் தரும் விளக்கம் :
Al-` Alamin is plural for ` Alam, which encompasses everything in existence except Allah. The word `Alam is itself a plural word, having no singular form. The ` Alamin are different creations that exist in the heavens and the earth, on land and at sea. Every generation of creation is called an ` Alam. Al-Farra` and Abu ` Ubayd said, " ’Alam’ includes all that has a mind, the Jinns, mankind, the angels and the devils, but not the animals. ''
தபரி தரும் விளக்கம் :
Alamin is the plural of alam, Which is itself collective noun like ‘mankind’, ‘group’, or ‘army’... alam is noun for the different kinds of communities-each kind is an ‘alam’. The members of each generation of each kind are the ‘alam’ of that generation and that time. Mankind is an ‘alam’ and aa the people of a period of time are the ‘alam’ of the time. Jinn are an ‘alam’ and so on with the other species of creation; each species is the ‘alam’ of its time.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்ந்த, ஜின்களின் மனிதர்களை, இதர உயிரினங்களையும் தான் இந்த ‘அல்-ஆலமீன்’ என்ற சொல் குறிப்பிடுகிறது என்று எழுதி  வைத்திருக்கின்றனர். (இதையெல்லாம் சொல்லி மூளைகெட்ட தப்லீக் ஜமாத்காரர்களுக்குகூட பயான் செய்ய முடியாது. இதில் நாத்தீகர்களை எப்படி சமாளிக்க முடியும்?) இது தஃப்ஸீர் எழுதியவர்களின் சொந்தக் கருத்து, இட்டுக்கட்டப்பட்டது, அறிவிப்பாளர்கள் வரிசையில் கோணல் இருக்கிறது, மிகவும் பலவீனமானது, குர்ஆனுக்கு முரண்பட்டவைகள்!

’Rabbi al alameen’ என்ற வாக்கியம் நமக்கு சருக்கலை ஏற்படுத்திவிட்டது என்பதற்காக மனம் தளரக்கூடாது. "Dabbatun மற்றும் sabʿa samāwātin” நமக்கு நிச்சயமாக உதவும்!   

ரஹ்மத் ராஜகுமாரன் என்னதான் சொல்லவருகிறார் என்பதைப் பார்க்கலாம்.

... வேற்றுலகம் என்பது சாத்தியமா? அங்கு வாழும் மக்கள் நம்மை விட அறிவில் முதிர்ச்சியானவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே திருக்குர்ஆனைத் திறந்தால்,
'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும்(ṭarāiqa) நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (23:17)
மேற்கண்ட வசனத்தில் நம்மை மாதிரி வேறு படைப்பினங்களும் உள்ளன. அந்த படைப்பினங்களுக்குத் தேவையானதையும் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய அல்லாஹ் அடுத்த வசனத்தில் நம் பூமியை 7 பூமி என்று கூறுகிறான்.
'அவனே 7 வானங்களையும், பூமியிலும் அதே போன்றும் படைத்தான்.' (65:12).
இதைப் பார்க்கும் போது நாம் வாழும் பூமியைப் போன்ற வேறு பூமிகளும் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.

அடைப்புக் குறிகளுக்கிடையே, குர்ஆன் வசனம் எங்கே இருக்கிறது என்பதைத் தேடிப் படிக்க வேண்டியதாக இருக்கிறது. குர்ஆனுக்கு இப்படியும் அடைப்புக் குறிகளை இடமுடியுமா என்று நம்மை வியக்க வைக்கிறார். ரஹ்மத் ராஜகுமாரன் மிகப் பெரிய அறிஞர்தான் சந்தேகமே இல்லை!

அந்தக் குர்ஆன் வசனம் என்னவென்பது எனக்கே மறந்து போய்விட்டது. 

குர்ஆன் 23:17
உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் (ṭarāiqa) படைத்துள்ளோம். இப்படைப்பு பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.
பீஜே மொழிபெயர்ப்பு

ரஹ்மத் ராஜகுமாரன் குறிப்பிடும் இந்த குர்ஆன் 23:17 வசனத்தில் ஏழு வானம் என்று மொழிபெயர்த்திருப்பது மற்ற குர்ஆன் வசனங்களைக் கருத்தில் கொண்டு வானம் என்பதாக பொழிபெயர்த்திருக்கிறார்கள். ’ṭarāiqa’ என்றால் வழி, பாதை என்பதுதான் நேரடிப் பொருள். வானங்களில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரஹ்மத் ராஜகுமாரன் முயற்சிப்பதை சுவனப்பிரியன் என்ற அறிவியல் அறிஞர் எப்படி வழிமொழிகிறார் என்பதைப் பார்க்கலாம். 


'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

அறிஞர் சுவனப்பிரியன் போன்ற அறிஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அறிவியலுக்குள் குர்ஆனை மிகத் திறமையாக நுழைத்திருக்கிறார்.  ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அறிஞர் சுவனப்பிரியன் அவர்களின் கருத்தைப் பிரதிபளிக்கும் Answering Christianity தளத்தின் ALIENS IN THE QURAN என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து மீண்டும்...

In Sura 42, Verse 29 (42:29) of the Quran, we are told, "Among His (God's) signs is the creation of the heavens and the earth,and the living creatures that He has scattered through them :and He has power to gather them together when He wills." Before proceeding further, a point or two must be noted. The word "sama",translated "heavens", is also the Arabic for "sky".
குர்ஆன் 42:29
வானங்களையும் (l-samāwāti), பூமியையும் (wal-arḍi) படைத்திருப்பதும் உயிரினங்களை (dābbatin) அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை.

வானத்தில்தான் நட்சத்திரங்களும், இதர கோள்களும் இருப்பதாகவும், அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாவும் அறிவியல் கூறுகிறது. வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாக மேற்கண்ட குர்ஆன் வசனம் உறுதிபடக் கூறுகிறது. இரண்டையும் இணைத்துப் பாருங்கள் குர்ஆனின் முன்னறிவிப்பு எளிதாகப் புரியும்!

அன்பான சகோதரர்களே அல்லாஹ்வின் அடியார்களே குர்ஆனின் அறிவியல் முன்னறிவிப்புகளை கண்டு மெய்சிலிர்த்து ஒரே புல்லரிப்பாக இருக்கிறது. எனது ஜிப்பாவிலிருக்கும் Steel wire brush-க்கு சிறிது நேரம் வேலை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்.

ஆக சகோதரர்களே நண்பர்களே அல்லாஹ் ஸுபஹால்லஹுத்தாலா நமக்கு எல்லாவித நவீன அறிவியல் உண்மைகளையும் அடங்கியதாக குர்ஆனை நமக்குக் கொடுத்திருக்குகிறான். ஆகையினால் குர்ஆனின் அறிவியல் உண்மைகளால் நாங்கள் புல்லரித்துக் கொண்டும் இருக்குகிறோம். யாரெல்லம் தங்களுக்கும் இதுபோல புல்லரிக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்களுக்கும் குர்ஆனைக் கொண்டு புல்லரிக்கும் முறையை எடுத்துச் சொல்லி அவர்களையும் புல்லரிக்க வைக்க இருக்கிறோம். அதற்காக ஒரு புல்லரிப்பு மாதரஸாவைத் துவங்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டவனாக எனது உரையை நிறைவு செய்கிறேன். 

அல்லாஹ் ஸுபஹால்லஹுத்தாலா நமக்கு புல்லரிக்கும் பாக்கியத்தை இம்மையிலும் மறுமையிலும் எருமையிலும் வழங்குவானாக!

ஆமீன்!

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

இத்துடன் இந்த பயான் நிறைவு பெறுகிறது.  அடுத்தது கேள்வி-பதில் நிகழ்ச்சி; பயான் தொடர்பான உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்க இருக்கிறேன். அதற்கு முன்னதாக உங்களிடம், துண்டு, பக்கெட்டுகளை ஏந்தி வரும் சகோதரர்களிடம், புல்லரிப்பு வளர்ச்சிக்காகவும், Steel wire brush வாங்குவதற்காகவும் உங்களால் இயலவில்லை என்றாலும் தாரளமாக ஹதியா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 


தஜ்ஜால்(ஸல், அலை, ரலி, ரஹ்)

Facebook Comments

12 கருத்துரைகள்:

Ant said...

அரபியில் ஒருமை பன்மையுடன் இருமையும் (..ஆனி என்ற பினனொட்டுடன் வரும்) உண்டு. (Singular, Dual, Pulural) ஆலம் என்பது ஒருமை ஆலமீன் என்பது பன்மை எனில் ஆலமத்தானி என்பது இருமையாகவும் இருக்க வேண்டும். உலகம் என்பதை உயிரனங்கள் வசிப்பதை மட்டுமே குறிப்பிடுகிறோம். கோல்கள் அணைத்தையும் உலகம் என்று குறிப்பிடுவதில்லை. உதாரணம் நிலா ஒரு துணைக் கோல் அதை உலகம் என்று குறிப்பிடுவதில்லை. எனவே, உலகம் என்று அல்லா சொல்வது வானங்களைத்தான். அது தான் ஏழு உள்ளது. ஆலம் என்ற சொல்லுக்கு வானம் என்று தமிழில் பொருள் உண்டு. எனவே அணைத்து மொழிகளையும் அறிந்தவன் என்பதால் அல்லா இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கலாம். அவன் ஞானமிக்கோன், அணைத்தும் அறிந்தவன் என்பதை எனது சிறுதுளி குரான் அறிவு மூலம் விரிவாக நிறுபித்து விட்டேன்!

Ant said...

//"அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே!// அவன் தெளிவாக செல்லியிருக்கிறான். அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தால் புரிந்து கொள்ளவிடாமல் செய்ததும் அவன் தான் என்று புரிய வருகிறது.

Ant said...

//அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.// இது தான் புரிய மாட்டேங்குது !!!

Ant said...

//நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.// அப்ப கில்லா வை காலையிலும் மாலையிலும் மாற்ற வேண்டுமா? புரியுது ஆனா ...

தஜ்ஜால் said...

வாங்க ANT,
///அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.// இது தான் புரிய மாட்டேங்குது !!!// ஒருவேளை நிழல் நேராக நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ?

தஜ்ஜால் said...

//எனவே, உலகம் என்று அல்லா சொல்வது வானங்களைத்தான். அது தான் ஏழு உள்ளது. ஆலம் என்ற சொல்லுக்கு வானம் என்று தமிழில் பொருள் உண்டு.// குர்ஆன் கூறும் உலகம், வானம், பூமி போன்றவைகளுக்கு இஸ்லாமியர்களிடம் ஒரு விளக்கத்தை கேட்டு வாங்குங்கள் பார்க்கலாம்!

ஆனந்த் சாகர் said...

//அறிஞர் சுவனப்பிரியன் போன்ற அறிஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//

இந்த இஸ்லாமிய அறிஞரின்(!) தமாஷ்களை படிப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. அவரது வலைப்பூவில் அனுதினமும் அவர் செய்து வரும் காமெடிகள் படு தமாஷ். வலைப்பூ வாசகர்களுக்கு ஒரு நல்ல காமெடியன் கிடைத்திருக்கிறார்.

ஆனந்த் சாகர் said...

//அவ்வளவு ஏன் நிழல்கள்கூட அல்லாஹ்வின் மகத்தும் அறிந்து அல்லாஹ்விற்கு ஸுஜுது செய்வதாக குர்ஆன் கூறுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். //

முஹம்மது கணக்கு வழக்கு இல்லாமல் கண்டமேனிக்கு உளறிய மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.

ஆனந்த் சாகர் said...

//ஷைத்தான் இருப்பதை அல்லாஹ் பல இடங்களில் உறுதி செய்கிறான். ஆனால் அவனால் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதென்பதும், எல்லாவிதமான கெடுதல்களும் அல்லாஹ்வினால் மட்டுமே உருவாகிறது, ஒரு மரியாதை நிமித்தமாகவே அந்தக் கெடுதல்கள் ஷைத்தானுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதே மண்ணடி மகா சன்னிதானம் பீஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை முன்பே கவனித்தோம். //

அப்படியானால் டம்மி பீசான ஷைத்தான் ரொம்ப... நல்லவன் போலிருக்கிறதே! இந்த நல்ல பிள்ளையை, பச்சை மண்ணை ஏன் மூமீன்கள் அநியாயமாக தினமும் பழித்துக்கொண்டு இருக்கின்றனர்? தீமைகளை செய்யும் அல்லாஹ் அல்லவா கேடுகெட்ட ஜென்மம்? அவனை அல்லவா முஸ்லிம்கள் பழிக்க வேண்டும்?

naga.che said...

நண்பரே. லின்க் கொடுக்கும்போது அதை underline செய்துவிடுங்கள். இல்லையென்றால் அதும் ஒரு சாதாரண வாக்கியமாக தெரிகிரது. நன்றி...

தஜ்ஜால் said...

வாங்க naga.che,

நன்றி!

உங்களது ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,
நன்றி!
// அப்படியானால் டம்மி பீசான ஷைத்தான் ரொம்ப... நல்லவன் போலிருக்கிறதே! இந்த நல்ல பிள்ளையை, பச்சை மண்ணை ஏன் மூமீன்கள் அநியாயமாக தினமும் பழித்துக்கொண்டு இருக்கின்றனர்? தீமைகளை செய்யும் அல்லாஹ் அல்லவா கேடுகெட்ட ஜென்மம்? அவனை அல்லவா முஸ்லிம்கள் பழிக்க வேண்டும்? //
எனக்கும் அதுதான் புரியவில்லை! ஷைத்தானால் எதுவும் செய்ய முடியாது. அவனால் சுயமாக செயல்பட முடியுமென்றால் அல்லாஹ்(!)வின் கடவுள்த் தன்மை கேள்விக் குறியாகிவிடும். எல்லாம் அல்லாஹ்தான் செய்கிறான் என்றால் ஷைத்தானின் மீது எதற்காக பழிபோட வேண்டும்?
மறைகழன்றிருப்பது முஸ்லீம்களுக்கா? இல்லை அல்லாஹ்விற்கா?