Thursday 6 March 2014

டாடி... எனக்கொரு டவுட்டு!




எதற்காக இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறேன் என்பதை முதலில் கூறிவிடுகிறேன்.  Dad - Daddy என்றால் அப்பா! டவுட்டு – Doubt  என்றால் சந்தேகம் அல்லது நம்ப மறுப்பது. (இது எங்களுக்குத் தெரியாதா என்று சண்டைக்கு வரவேண்டாம்). டவுட்டு-ல் அதாங்க Doubt –ல் நமக்கு எந்த Doubt-ம் இல்லை. இந்த ’டாடி’ யார் என்பதுதான் விவாதத்திற்குரியது. தலைப்பிலுள்ள ‘டாடி’ என்பதை நாம் ”Daddy” என்று அப்படியே விளங்கிக் கொள்ளக் கூடாது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ’டாடி’ என்ற சொல் மறைவான பொருளைக் கொண்டது.

அதென்ன மறைவான உட்பொருள்?

இதற்கான பதிலைக் காண்பதற்கு முன், வேறு சில விளக்கங்களை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது முந்தைய கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு இது ஓரளவிற்கு நம்மைப்பற்றி புரிந்திருக்கும். தானுண்டு தனது மதவியாபரமுண்டு என்று கல்லாகட்டிக் கொண்டிருக்கும் முல்லாக்களை வம்பிற்கிழுப்பது நமது வாடிக்கை.  
அந்த முல்லாக்களின் முகத்திலிருப்பதென்ன?

உடனே... அசடு என்று பதில் சொல்லக் கூடாது! அது நம்மைப் போன்றவர்கள் கேள்விகளைக் கேட்கும் பொழுது முல்லாக்களின் முகங்களில் வழிவது. அதை அவ்வப்பொழுது அவர்களே துடைத்துக் கொள்வார்கள். நான் கேட்பது...எப்பொழுது அவர்கள் முகத்தாடைகளில் தொங்கிக் கொண்டிருக்குமே அது என்ன?
 ம்ம்... கரெக்ட்... அதேதான் தாடி..!

தாடிக்கும் Daddy-க்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது; முகச்சவரம் செய்யாதிருந்தால் Daddy க்கும் ’தாடி’வந்து விடும். இவ்வாறு  Daddy இப்பொது தாடி ஆகவிடுகிறார். அந்த தாடிதான் தலைப்பில் டாடி என்றாகிறது. மேலும் பிறமொழிச் சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்தும் பொழுது இவ்வாறான மாற்றங்கள் நிகழ்வது வழக்கிலிருப்பதுதான். இதை அறிவியல் அறிஞர்கள் தங்களது ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர்(!). அதற்காக பொருளையே மாறிவிடுவதா? என்று ஆவேசப்படுபவர்கள், முல்லாக்கள் எழுதிய குர்ஆன் விரிவுரைகளை வாசிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். எனவே நாம்   இவ்வாறு பொருள் விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது. (நன்றி: அண்ணன் பீ.ஜே) எனவே நமது தலைப்பு,

“தாடி(களே..!) எனக்கொரு டவுட்டு!”

Bracket போட்டவுடன் எந்தக் குழப்பமுமின்றி நமக்கு ’டக்’கென்று விளங்கிவிடுகிறது. இதுதான் அடைப்புக் குறிகளின் அற்புதம்! இது மற்ற புத்தகங்களுக்கில்லாமல் குர்ஆனுக்கென்றே அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சிறப்பாகும். இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விவாதிப்பதால்  அடைப்புக்குறிகளைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி நமக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. என்ன செய்வது குர்ஆனையும், முல்லாக்களின் விளக்கங்களையும் வாசித்து... கேட்டு... வாசித்து...   நாமும் இப்படியாகிவிட்டோம்!



குர்ஆன் இப்படிச் சொல்கிறது,

81:8 (உயிருடன் புதைக்கப்பட்ட) பெண் குழந்தை விசாரிக்கப்படும் போது.
81:9 “எந்தப் பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள்?” என்று.
இதற்கான பதிலையும் குர்ஆனே கூறிக்கொள்கிறது,

17:31 வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.
இந்த செய்தியை ஹதீஸ்களிலும் காணப்படுகிறது.

புகாரி 7214
ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் 'நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

..அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (-துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை. என்ற வரிகளைப் படித்து அதிர்ச்சியடைந்திருப்பீர்கள் Don’t get emotion!. ஒரு கிராமத்தையே அந்தப்புரத்தில் வைத்திருந்தவருக்கு, தனியாக மறுபடியும், மற்ற  பெண்களைவேறு தொட்டுப்பார்க்க வேண்டுமா? ”இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று எரிச்சலடைய வேண்டாம். தன் கணவரைப்பற்றி, ஆயிஷா வலிந்து கூறவேண்டிய அவசியம் என்னவோ? முஹம்மது பெண்மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டு அன்றே இருந்திருக்கிறது போலும்!



நாம் பெண்சிசுக் கொலைக்கு வருவோம். இது இன்றும் நமது சமுதாயத்தில் தொடரும் ஒரு அவலம்தான். குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்ட சிசுக்களின் உடலை நாய்கள் குதறின என்ற செய்திகளைக் கேட்கும் பொழுது நமது கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. பெண் சிசுக் கொலைக்கு மிக முக்கியமான காரணம் திருமணச் சந்தையில் கேட்கப்படும் வரதட்சனைதான்! இல்லாமை மட்டுமே காரணமென்றால் ஆண், பெண் பேதமின்றி அனைத்து  சிசுக்களும் கொல்லப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

நான் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள், அண்ணன் பீ.ஜேவையே சொல்லச் சொல்கிறேன்! மஹ்ர் என்ற மணக் கொடையின் சிறப்பைப்பற்றி அண்ணன் பீ.ஜே சொல்லும் பொழுது இவ்வாறு கூறுகிறார்.

வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண்குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர்.
108. மஹர் (மணக்கொடை)
இங்கு விவகாரம் என்னவென்றால், அன்றைய அரேபியாவில் மணமகனுக்கு வரதட்சனை வழங்கும் வழமையில்லை. உதாரணத்திற்கு, நமது கண்மணி முஹம்மது பின் அப்துல்லாவே கதீஜாவிற்கு ஒட்டகங்களை மணக்கொடையாக வழங்கி திருமணம் செய்தார் என்கின்றனர்  எனவே அங்கு பெண்குழந்தைகளைக் கொல்வதற்கு வரதட்சணை காரணமில்லை; வறுமையும் காரணமில்லை. அல்லாஹ் சொர்க்கலோக பானத்தை அருந்திவிட்டு ஏதோ உளறியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.

பெண்சிசுக் கொலை என்ற செய்திகள் வெளியாகும் பொழுது, முல்லாக்கள் மேற்கண்ட குர்ஆன் வசனங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டும், கற்பழிப்பு செய்திகள் வரும்பொழுது புர்க்காவைத் பிடித்து தொங்கிக் கொண்டு, சந்தில் சிந்துபாட முயற்சிப்பது நாம் அறிந்த விஷயமே!




அவர்களது கூற்றிலேயே நாம் தொடர்வோம். 


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களை, அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதுடன், போதாக் குறையாக இஸ்லாமை ஏற்க வருபவர்களிடம். அவ்வாறு செய்யக்கூடாதென்ற உறுதிமொழி வாங்கவும் முஹம்மதிடம் ஆணையிடுகிறான்.


குர்ஆன் 60:12
"நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக!

அப்படியானால் அன்றைய அரேபியகளிடம், நெடுங்காலமாக, பெண்சிசுக் கொலையென்பது பரவலாகக் காணப்பட்ட ஒரு செயலாக இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இதன் பொருள். மேலும் இல்லாததை இட்டுக் கட்டுவது, திருடுவது விபச்சாரம் செய்வது போன்றவைகள் பெண்களின் முக்கியமான பணியாகவும் இருந்திருக்கிறது. இஸ்லாம் பெண்களை மிகவும் கண்ணியப்படுத்துகிறது(புல்லரிக்கிறது!). இன்றும் இஸ்லாமியப் பெண்மணிகள் இப்படித்தானோ?  எதற்குக் கேட்கிறேன் என்றால் குர்ஆன் எக்காலத்திற்கும் பொருந்தும் வேதம் என்றல்லவா முழம்போட்டுக் கொண்டிருக்கின்றனர்! அதனால் விளைந்த சந்தேகம் இது!

ஓரிச்சேர்க்கை செய்தார்கள் என்பதினாலும்,  ஒட்டகத்தின் கால்நரம்புகளை துண்டித்தார்கள் என்பதினாலும் ஊரையே அழித்ததாகவும், சனிக்கிழமை மீன் பிடித்தார்கள் என்ற காரணத்திற்காக குரங்குகளாக மாற்றிவிட்டதாகவும் பீற்றிக் கொள்ளும் ஒரு வெங்காயம், அநியாயமாக ஒரு பாவமும் அறியாத குழந்தைகள் கொல்லப்படும் பொழுது ஹூரிலீன்களைப் பார்த்து ஜொள்ளுவிட்டுக் கொண்டிருந்தானோ என்னவோ!

இஸ்லாமியர்கள் அன்றைய அரேபியர்களை இழிவாகப் பேசுவதை அறிவீர்கள். அப்பொழுதானே முஹம்மது உயர்ந்தவர் என்று காண்பிக்க முடியும். எல்லாம் இருகோடுகள் தத்துவம்தான்.

இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள்; தங்களுக்குள் தொடர்ந்து போர் புரிந்து கொண்டார்கள்; பெண்கள் ஒட்டகத்தைவிடக் குறைத்து மதிப்பிட்டனர்; முஹம்மது மட்டுமே இக்குறைகளை களைந்து பெண்களுக்கு  மனித அந்தஸ்து கொடுத்தார், கூடவே தாயின் காலடியில் சொர்க்கமிருக்கிறது கண்மணி நாயகம் கூறினார் என்றெல்லாம் கதைப்பார்கள்.

இவர்களின் கூற்றில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது?

முஹம்மதின் மனைவி கதீஜா மிகப் பெரும் வியாபாரத்தை நிர்வகித்தார் என்று கூறுவதும் இவர்கள்தான். கதீஜாவின் பணியாள் தானே இவர்களது கண்ணுமணி பொண்ணுமணி? இவர்கள் சொல்வது போல, அரேபியர்கள், பெண்களை இழிவாக கருதும்  ஒரு சமுதாயமாக இருப்பின், எப்படி கதீஜா என்ற ஒரு பெண்மணி இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியும்?

மேலும்,  லாத், மனாத் உஸ்ஸா என்ற பெண் தெய்வங்களையே அவர்கள் வழிபாடு செய்தனர் என்பதை குர்ஆனும் ஒப்புக் கொள்கிறது.  மேலும் அவர்கள் தங்களது பெண்களை ஆபரணங்களைக் கொண்டு அழகுசெய்து பார்த்திருக்கின்றனர் என்கிறது குர்ஆன்.
குர்ஆன் 43:18
...ஆபரணங்களைக் கொண்டு வளர்க்கப்பட்டதும் வழக்கில் தெளிவாக எடுத்துக் கூற இயலாததுமான ஒன்றையா (அல்லாஹ்விற்கு சந்ததிகளாக்குகின்றனர்)
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு
(குர்ஆன் 43:18-ல் ஒரு விவாதம் இருக்கிறது. கட்டுரையின் மையக்கருத்திற்கு தேவையில்லாததால் அதைப்பற்றி நாம் பிறகு பார்க்கலாம்.)

அதைப்பற்றியெல்லாம் நாங்கள் பேசத் தயாரில்லை. அன்றைய அரேபியர்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து கொலை செய்தனரென்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது அதை மட்டுமே நாங்கள் பேசுவோம் என்பார்களோ?
சரி.. அப்படியே வைத்துக் கொள்வோம்.

தனது வாழ்நாளில் எத்தனை பெண்சிசுக்களின் கொலையை முஹம்மது தடுத்திருக்கிறார்? அல்லது குறைந்தபட்சம் பார்த்திருக்கிறார்? அல்லது அவரது தொண்டரடிப் பொடிகளேனும் பார்த்துள்ளனரா? இப்படியொரு செய்தியை முஹம்மதின் வரலாற்றிலிருந்து காண்பிக்க முடியுமா?

முஹம்மது பெண் குழந்தைகளைப் பார்த்திருக்கிறார். அதை இல்லையென்று நாமும் மறுக்கப் போவதில்லை. அப்பொழுது அவரது வக்கிர உணர்வுகள் கிளர்ந்தெழுந்ததைத் தவிர வேறொன்றும் நிகழ்ந்ததில்லை. ஆயிஷாவின் நிலைமை நாமறியாததா?
பெண்குழந்தைகளை அன்றைய அரேபியர்கள் கொன்று குவித்ததாக வருத்தப்படும் அல்லாஹ்வின் கூற்றை வேறொரு கோணத்திலிருந்து அணுகலாம். முஹம்மது அல்லாஹ்வின் பெயரால் அனுமதித்த பலதாரமணத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முல்லாக்கள் இவ்வாறு கூறுகின்றனர்...

...இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும், சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது...
Islamkalvi.com
நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் அண்ணன் பீஜே இவ்வாறு கூறுகிறார்...
அன்றைய அரபுகள் சர்வ சாதாரணமாகப் பத்து முதல் இருபது மணைவியர் வரை மணந்து கொண்டிருந்தனர். அன்றைய காலத்து ஆண்களோ, பெண்களோ எவருமே பலதார மணத்தைத் தவறான ஒன்றாகக் கருதில்லை...
இரண்டு விளக்கங்களுமே பலதார மணமென்பது அன்றைய அரேபியக் கலாச்சாரத்தில் மிக சாதரணமாக இருந்ததொரு வழிமுறையென்று கூறுகிறது. அதாவது மிகப் பெரும்பான்மையானவர்களின் செயலை அடிப்படையாகக் கொண்டு முல்லாக்கள் இவ்வாறு கூறுகின்றனர். பெரும்பான்மையான ஆண்கள் குறைந்தபட்சம் பத்து பெண்களைத் திருமணம் செய்தனர் எனில், அன்றைய அரேபியாவில் ஆண்-பெண் விகிதம் எப்படி இருந்திருக்க வேண்டுமென்பதை நீங்களே யூகித்துப்பாருங்கள்!

பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்துக் கொன்றிருந்தால், முஹம்மதின் சமகால அரேபியாவில் திருமணத்திற்கு பெண்கள் இல்லாமல் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரு பெண் பல ஆண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் (இந்த லாஜிக் அவர்கள் சொல்வதுதான்). அண்ணன் பீ.ஜே மற்றும் இதர முல்லாக்கள் சொல்வதுபோல அறியாமை காலத்து அரேபியர்கள், பத்து முதல் இருபது மனைவியர்களை திருமணம் செய்வதற்கு எங்கிருந்து பெண்களைப் பெற்றனர்?

சொல்லுங்க...

தாடி(களே)...  சொல்லுங்க....!!!






தஜ்ஜால்

Facebook Comments

18 கருத்துரைகள்:

குட்டிபிசாசு said...

:)) சமூகத்தின் அவலத்திற்கு மதநம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை தான் தீர்வு என நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்.

ஆனந்த் சாகர் said...

//தானுண்டு தனது மதவியாபரமுண்டு என்று கல்லாகட்டிக் கொண்டிருக்கும் முல்லாக்களை வம்பிற்கிழுப்பது நமது வாடிக்கை.//

எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் முல்லாக்கள் அசரமாட்டோம் என்கிறார்களே!!!

ஆனந்த் சாகர் said...

//தலைப்பிலுள்ள ‘டாடி’ என்பதை நாம் ”Daddy” என்று அப்படியே விளங்கிக் கொள்ளக் கூடாது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ’டாடி’ என்ற சொல் மறைவான பொருளைக் கொண்டது. //

பீ.ஜெ. வின் தொழில் நுணுக்கத்தை கற்று தேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே!

ஆனந்த் சாகர் said...


//Bracket போட்டவுடன் எந்தக் குழப்பமுமின்றி நமக்கு ’டக்’கென்று விளங்கிவிடுகிறது. இதுதான் அடைப்புக் குறிகளின் அற்புதம்! இது மற்ற புத்தகங்களுக்கில்லாமல் குர்ஆனுக்கென்றே அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சிறப்பாகும்.//

அடைப்பு குறி போட்டு விளக்கோ விளக்கு என்று விளக்காவிட்டால் குர்ஆன் அல்லாஹ்வுக்கே விளங்காதே! அப்படியென்றால், அடைப்புகுறியின் மகிமையை என்னவென்று சொல்வது?

முஹம்மதுவுக்கு கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் குர்ஆன் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனின் அற்புதமே இந்த அடைப்புகுறிதான் என்றால் அது மிகையாகாது.

ஆனந்த் சாகர் said...

//இங்கு குர்ஆன் ஹதீஸ்களை விவாதிப்பதால் அடைப்புக்குறிகளைப் பயன்படுத்த சிறப்பு அனுமதி நமக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. //

இந்த சிறப்பு அனுமதி கிடைக்கப்பெற்றுவிட்டதால் ஏழாம் வானத்தில் உள்ள சொர்கத்திற்க்கு உயர்த்தப்படும் உன்னத அந்தஸ்தை அல்லாஹ்விடம் நீங்கள் பெற்றுவிட்டீர்கள்! எனவே 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கப்போகிறான். இந்த இஸ்லாமிய சொர்க்கத்தில் சதாகாலமும் அவர்களோடு உங்களுக்கு ஜல்சாதான்!

//என்ன செய்வது குர்ஆனையும், முல்லாக்களின் விளக்கங்களையும் வாசித்து... கேட்டு... வாசித்து... நாமும் இப்படியாகிவிட்டோம்!//

இஸ்லாமிய அறிஞர்களின் ஹதீஸ், குர்ஆன் விளக்கங்களை நம்புகிற எவருடைய நிலைமையும், "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்கிற கதைதான்.

Ant said...

குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபிளில் இருந்து எடுத்த கதையாக இருக்கலாம். தேவை இருந்ததால்தான் அந்த வசனம் பயன்படுத்த பட்டிருக்க முடியும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் குட்டிப்பிசாசு,

//சமூகத்தின் அவலத்திற்கு மதநம்பிக்கை அல்லது இறைநம்பிக்கை தான் தீர்வு என நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்.// மதவாதிகள்.. குறிப்பாக முஸ்லீம்கள் அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. இவர்கள் அனைவருக்கும், இனிவர இருப்பவர்களுக்கும் சேர்த்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது சிந்தித்து விட்டாராமே!

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,


//எனவே 72 ஹூருல் ஈன்களை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கப்போகிறான். இந்த இஸ்லாமிய சொர்க்கத்தில் சதாகாலமும் அவர்களோடு உங்களுக்கு ஜல்சாதான்!// ஹை.. ஜாலி..ஜாலி...!!
அண்மையில் பீஜே எழுதிய குர்ஆன் விரிவுரையை மீண்டும் முழுதாக வாசித்தேன் அதன் விளவுதான் இது!! அவர் கூறுவதை அப்படியே நம்பும் கூட்டத்தை என்னவென்று சொல்ல!

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT

//குழந்தைகளை பலியிடுதல் என்பது பைபிளில் இருந்து எடுத்த கதையாக இருக்கலாம். தேவை இருந்ததால்தான் அந்த வசனம் பயன்படுத்த பட்டிருக்க முடியும்.// இருக்கலாம்! யார் யாரோ எங்கோ பேசிக் கொண்டிருந்த கதைகளை அல்லாஹ்வின் பெயரால் சொல்வதுதானே முஹம்மதுவின் வாடிக்கை!

Dr.Anburaj said...

முகம்மது பின்பற்றிய பாலியல் ஒழுங்கினங்கள் தான் பெண்சிசு கொலைக்கு காரணம் என்று நினைக்கின்றேன்.கணவனைக் கொன்று மனைவியை கைப்பற்றுவது சாதரணமாக நடக்கும் செயல் -கரிமத். எனவேதான் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை-பாதுகாப்பின்மையிலன் காரணமாக சிசுகொலைகளை கோழை பெற்றோர்கள் செய்து இருக்கலாம். பிறர் மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்றோ பிரம்மச்சரியம் அருள்வாய் இறைவா என்று முகம்மது பிரார்த்திக்கவில்லையே.
நான் அறிந்த வகையில் பாலியில் ஒழுங்கீனம்தான் பெண்சிசு கொலைக்கு காரணம்.சிறயதோ பெரியதோ. எனது கருத்தை தாங்களும் வாசகர்களும் பரிசீலனைச் செய்யலாம்.

DEVAPRIYA said...

மேலுமொரு மேன்மையான இஸ்லாம் பற்றிய பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.
http://pagadhu.blogspot.in/

தஜ்ஜால் said...

வாருங்கள் தேவப்பிரிய சாலமன்,

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்!!!

தஜ்ஜால் said...

வாருங்கள் Dr.அன்புராஜ்,

//நான் அறிந்த வகையில் பாலியில் ஒழுங்கீனம்தான் பெண்சிசு கொலைக்கு காரணம்.// இன்று நாம் குப்பைத் தொட்டிகளில் காணும் அனைத்து சிசுக்களுக்கு இந்தக் காரணத்தை பொருத்தலாம்! ஒருவகையில் நமது சமுதாய அமைப்பும் அதற்கு காரணமாகிறது! குறிப்பாக பெண்குழந்தைகளைக் கொல்வதை பெண்கள் மீது சமுதாயம் கொண்டிருக்கும் அவமரியதையையும் வரதட்சனையையும், காரணமாகக் காண வேண்டிருக்கிறது. அன்றைய அரேபியச் சூழலில் பெண்சிசுக் கொலைக்கள் நடந்த குர்ஆன் கூறுவது உளறலாகத்தான் இருக்கிறது.

Unknown said...

நகைச்சுவை யான பதிவு என்றாலும் சிந்திக்க வைக்கும் சிறந்த கருத்துக்கள் (நன்றி சகோ..)

Dr.Anburaj said...

வாழ்வின் அடிப்படை பிரம்மச்சரியம் என்று இந்திய சமய நூல்களில் விளக்கமாக காணப்படுகிறது. திருமணம் ஆகும்வரை அனுபிரம்மச்சரியம் காக்க ஒவ்வொரு ஆணும் கடமைப்பட்டவன் என்று பல நூல்களில் காணப்படுகின்றது. இக்காலத்தில் தோன்றிய ஸ்ரீமத்சுவாமிவிவேகானந்தா் சுவாமி சிவானந்தர் போன்ற சமயாச்சார்யார்களின் நூல்களில் பிரம்மச்சரியத்தைச் சிலாகித்து நிறையவே கருத்துக்கள் உள்ளன. இந்தியா வீழ்ச்சியுற்றதற்கு காரணம் பிரம்மச்சரியம் காக்கும் பண்பு ஆண்களிடம் மிகவும் அருகிவிட்டதுதான் காரணம் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பெண்களுக்கு வெளிப்படையாக கட்டாயமாக கற்பு வலியுருத்தப்படுகிறது.ஆனால் ஆண்களுக்கு ”இராமாயாணம்” மட்டுமே கதை வடிவில் ஆண்களுக்கும் கற்பு என்ற கருத்தை வலியுருத்துகின்றது.ரஷ்ய மானுடவியல் அறிஞர் Pitrim sorokin என்பவர் எழுதிய Sane Sex Order - ( pub.Bharatiya vidya Publications )என்ற புத்தகம் அற்புதமானது.பாலியல் ஒழுங்கீனங்கள் எப்படி மனித வாழ்வின் சமூக வாழ்க்கையை முன்னெற்றத்தை படைப்பாற்றலை குடும்ப அமைப்பை எப்படி எல்லாம் அழிக்கின்றது என்பதை தெளிவாக விளக்குகின்றார். மகாத்மா காந்தி எழுதிய Self-control or Self-indulgence என்ற புத்தகத்தில்
Moral Bankruptcy என்ற பிரஞ்சு புத்தகத்தின் சில பகுதிகளை வெளியிட்டுள்ளார்கள். நேரடியாக வே பிரம்மச்சரியம் பேசுகின்றது அப்புத்தகம். பெண்களுக்கு பாதுகாப்பு ஆண்கள் இராமனாக திருமணத்திற்கு முன் பிரம்மச்சரியம் காத்து திருமணத்திற்கு பின் ஏக பத்தினிவிரதம் காக்க வேண்டும். இலக்கியம் திரைப்படம் நாடகம் கவிதை கதைகள் கட்டுரை அனைத்தும் நாட்டில் பாலியல் ஒழுங்ககை எற்படுத்த முயல வேண்டும். இந்தியா ஒரு வல்லரசாக -கல்வியில் பண்பாட்டில் அறிவியலில் தொழில்நுட்பத்தில் மனித நேயத்தில் வல்லரசாக முடியும்.நாட்டில் பிரம்மச்சரியம் ஆஸ்ரமம் பொலிந்து சிறந்தால்.

துன்யா பிரியன் said...

பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்னவென்றால் போர்காலத்தில் ஆண்கள் அதிகமாக கொல்லப்பட்டார்கள். ஆக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. அதனால் மிதமிஞ்சிய பெண்களின் எண்ணிக்கையை சரி செய்ய ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்யலாம் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இதுவும் கூட பெண் சிசுக்கொலைக்கு மாற்றான விஷயம். பெண் சிசுக்கொலை என்பதே அதீத கற்பனை தான். நம்மூர் மாதிரி சிறிய அளவில் ஒரு வேளை வழக்கில் இருந்திருக்கலாம். தாராள பாலுறவு சமூகத்தில் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அபத்தமானது. தவறான தகவல்

துன்யா பிரியன் said...

பலதாரமணத்திற்கு விளக்கமாக முல்லாக்கள் சொல்வது என்னவென்றால் போர்காலத்தில் ஆண்கள் அதிகமாக கொல்லப்பட்டார்கள். ஆக பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. அதனால் மிதமிஞ்சிய பெண்களின் எண்ணிக்கையை சரி செய்ய ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்யலாம் என்ற விதி அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள். இதுவும் கூட பெண் சிசுக்கொலைக்கு மாற்றான விஷயம். பெண் சிசுக்கொலை என்பதே அதீத கற்பனை தான். நம்மூர் மாதிரி சிறிய அளவில் ஒரு வேளை வழக்கில் இருந்திருக்கலாம். தாராள பாலுறவு சமூகத்தில் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது அபத்தமானது. தவறான தகவல்

Dr.Anburaj said...

எனவேதான் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை-பாதுகாப்பின்மையிலன் காரணமாக சிசுகொலைகளை கோழை பெற்றோர்கள் செய்து இருக்கலாம்.
மதுரை மாவட்டத்தில் நான் பணியில் இருந்தபோது எற்பட்ட சொந்த அனுபவம்தான் இக்கருத்து. ஆண்கள் மத்தியில் குடி கும்மாளம் தொழல் இன்மை வன்முறை கொலை வழக்கு பழிக்கு பழி என்ற வாழ்ககை காரணமாக பெண்கள் படும் வேதனை சொல்லிமாளாது.எனவேதான் பெண்குழந்தை வேண்டாம் என கருணைக் கொலை செய்கின்றனர். பெண்குழந்தைகள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்குமானால் இந்தியாவிலும் அரேபியாவிலும் எங்கும் சிசுக் கொலை நடக்குமா ?