Wednesday 19 March 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -37

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

உலக வாழ்வின் பிரதிபலன், மண்ணறையில் முன்கர், நக்கீர் என்ற இரு மலக்குகளின் விசாரணையிலிருந்து துவங்குகிறது. அவர்களது எளிமையான கேள்விகளுக்கு சரியான பதில் கூறியவர்களுக்குப் பரிசாக மண்ணறை 70 முழம் விரிவடைந்து  பிரகாசிக்கும். அவர்களிடம் மணமகனைப் உறங்கு எனக் கூறப்படும். சரியான பதிலளிக்கத் தவறியவர்களின் மண்ணறைகள் இருண்டு, அவர்களது விலா எலும்புகள் ஒன்றோடொன்று இணையுமளவிற்கு நெருக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரைத்  தொடருமாம்.

இறந்த உடல் பேச வேண்டுமென்றால்  குறிப்பிட்ட அந்த உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழவேண்டும்?

உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள். நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள, வாளின் முனையைவிட கூர்மையான, முடியை விட மெல்லிய "ஸிராத்" என்ற  பாலத்தைக் கடக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விடுவார்கள். மற்றவர்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அல்லாஹ்வின் முன்னே நிறுத்தப்படுவார்கள். என்ற அவர்களது செயல்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப, வலக்கரத்திலும், இடக்கரத்திலும் வழங்கப்படும் "மீஸான்" என்ற தராசில்   அவர்களது செயல்கள் பற்றி பதிவு புத்தங்கங்கள் எடை போடப்படும்.

எடைபோடப்பட இருப்பவைகள் நன்மை தீமைகள் பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டுமல்ல வேறு சில பொருட்களும் உள்ளன.

புஹாரி ஹதீஸ் எண் : 2853
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் எவர் அல்லாஹ்வின் பாதையில் (புனிதப் போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டி வைக்கின்றாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும் அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும்,அதன் சாணமும் அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும் தராசில் அவரது நற் செயல்களின்) தட்டில் (வைத்து எடை) போடப்படும்.

இன்றைய காலத்தில் குதிரைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது என்பதை நாம் அறிவோம். குதிரை என்று ஹதீஸில் குறிப்பிடப்படுவதைப் போர்க்களத்தில் பயன்படும் வாகனங்களைக் குறிப்பிடுகிறதெனில், இன்றைய ஜிஹாதிகளுக்காக நாளை மறுமையில் எடைபோடத் தயாராக இருப்பவைகளாவன, போர்விமானம், போர்க்கப்பல், பீரங்கிகள் மற்றும் இதர வாகனங்கங்களின் எரி பொருட்களும், உயவு எண்ணெய், மசகு பொருட்களும், வாகனங்களின் உதிரி பாகங்களும் கழிவுகளாகவும்தான்  இருக்க முடியும். அல்லது நன்மையை அதிகமாக்கிக் கொள்ள குதிரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையிலிருந்து அது செய்ததும் இன்னும் தீமையிலிருந்து அது செய்ததும் தன் முன்னே கொண்டு வரப்பட்டதாகக் காணும் நாளில் …
(குர்ஆன் 3:30)

ஒவ்வொரு ஆத்மாவும் விசாரணையை சந்திக்க வேண்டுமா? எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக விசாரணை செய்தால் ரகசியமாக செய்த தவறுகள் எல்லோருக்கும் தெரிந்து நாம் இழிவடைந்து விடுமே என்று முஸ்லீம்கள் கவலையடையத் தேவையில்லை மறுமையில் ரகசிய விசாரணைகளும் உள்ளது.

புஹாரி ஹதீஸ் : 4685         
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது
(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, அபூ அப்திர்ரஹ்மானே அல்லது இப்னு உமரே (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார். அல்லது இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார், அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன் என்று கூறுவான்.…

 இந்த விசாரணைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

முஸ்லீம் ஹதீஸ் எண் : 317,  அத்தியாயம்: 1, பாடம்: 1.94,
அறிவிப்பாளர் : அபூஹுரைரா  (ரலி).
நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று கூறியபோது (உக்காஷா எனும்) ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மற்றொருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், "இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்" என்று சொன்னார்கள்.

விசாரணையிலிருந்து எழுபதாயிரம் பேர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். மனிதர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிக மிக குறைவான எண்ணிக்கையே. சொர்க்கத்திற்கு  செல்ல வேறு குறுக்கு வழிகள் ஏதேனும்  உள்ளதா?

நடைமுறை வாழ்வில் பரிந்துரை தவிற்க முடியாததொரு செயல். பரிந்துரை செய்வதும், பரிந்துரைக்கப்படுவதும்  நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது எனலாம். பரிந்துரைகளால் ஏற்படும் தீய விளைவுகளையும் மறுப்பதற்கில்லை. தகுதியற்றவர்களுக்குச்  செய்யப்படும் பரிந்துரைகளால் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். சிபாரிசுகளால் தண்டனைகளின்  பிடியிலிருந்து தப்பித்தவர்களின் பட்டியல் நீளமானது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் இத்தகைய உதவிகள்  மரணத்திற்கு பின்னும் தொடருமாபரிந்துரைகளால் நரக தண்டனகளிலிருந்து தப்பிக்கவும் சொர்க்கத்திற்கு  செல்லவும் முடியுமா?

 குர்ஆன் என்ன சொல்கிறது?

இன்னும் எந்த ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவிற்கு எந்தப் பலனையும் அளிக்க முடியாத அதற்காக எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத இன்னும் அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்களே அத்தகைய (கியாமத்) நாளை  பயந்து கொள்ளுங்கள்
(குர்ஆன் 2:48)

ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவைத் தொட்டும் எதையும் பலனளிக்காத அதற்கு எவ்விதப் பரிந்துரையும் பலன் தராத இன்னும் அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்களே - அந்த மறுமை நாளை  நீங்கள் அஞ்சுவீர்களாக
(குர்ஆன் 2:123)

முஃமின்களே ! கொடுக்கல் வாங்கலும் நட்புறவும் பரிந்துரையும் (எந்த நாளில் பலன்) இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன்…
(குர்ஆன் 2:254)

அவனன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் எந்த பரிந்துரை செய்பவனும் இல்லை
(குர்ஆன் 6:51)

அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு (உதவி) எதனையும் செய்யச் சக்தி பெறமாட்டாது. அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே சொந்தம்.
(குர்ஆன் 82:19)

பரிந்துரைகள் பலனளிக்காதா? மறுமை வாழ்வில் பரிந்துரைகளால் அல்லாஹ்வின் தீர்ப்பை மாற்ற முடியாதா?

எந்த பரிந்துரையாளனும் இல்லையென்று உறுதியாகக் கூறிய பின்னரும் என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது? என்று ஆத்திரப்பட வேண்டாம். அல்லாஹ்வின் முன் பேசவும், பரிந்துரை செய்து கொடிய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றவும் சக்தி பெற்றவர்கள் இருக்கிறார்கள். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதில் உறுதியாகவும் இருக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களும்  உள்ளன.

முஸ்லீம் ஹதீஸ் : 289,  அத்தியாயம் : 1, பாடம் : 1.85,
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).
"சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதன் நானாவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவனும் நானாவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

பரிந்துரைத்தலைப்பற்றி கூறும்  ஹதீஸ்கள்குர்ஆன் வசனங்களுக்கு எதிரானவைகள் அல்ல. மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதை உறுதி செய்யும்  குர்ஆன்வசனங்கள் சில…

அவனுடைய அனுமதிக்குப் பின்னால் அல்லாமல் (அவனிடம்) பரிந்துரை செய்பவர் எவருமில்லை
(குர்ஆன் 10:3)

யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …
(குர்ஆன் 34:23)

அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவருக்கு (அவருடைய) சொல்லைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (எவருக்கும்) பரிந்துரை பலனளிக்காது
(குர்ஆன் 20:109)

பரிந்துரை செய்வதற்கு மலக்குகளும் உள்ளனர் எனக் கூறும்  குர்ஆன் வசனங்கள்,
அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர (வேறு எவர்க்கும்) அவர்கள் (மலக்குகள்) பரிந்துரை செய்யமாட்டார்கள்
(குர்ஆன் 21:23)

மேலும் வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர்; அவர்களுடைய பரிந்துரை அல்லாஹ் எவரை நாடி திருப்தியும் கொண்டானோ அவருக்கு அனுமதியளித்த பின்னரே தவிர எதையும் பலன் தராது.
(குர்ஆன் 53:26)

கொடுக்கல் வாங்கலும், நட்புறவும் பரிந்துரையும் பலனளிக்காத நாள் இருக்கிறது, அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை எந்த பரிந்துரையாளனும் இல்லை என்றெல்லாம்  கம்பீரமாக முழக்கமிட்ட  குர்ஆன் வசனங்கள்  இப்பொழுது அர்த்தமற்றதாகத் தெரியவில்லையா?

குழப்பம் இத்துடன் முடியவில்லை. உதவி தேடி வரும் அடியார்களின் கூட்டத்திற்கு எல்லா நபிமார்களும் பரிந்துரை செய்ய இயலாமல் கவலையால் தவித்து மற்ற நபிமார்களை நாடிச் செல்லுமாறு கூறுவார்கள், இறுதியில் என்னிடம் (முஹம்மது நபியிடம்) வருவார்கள் அப்பொழுது (ஒரு முறை அல்ல) நான்கு முறை பரிந்துரை செய்து மிகக் குறைந்த அளவு நம்பிக்கை உடையவார்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிறார். அல்லாஹ்வின் தீர்ப்பு பரிந்துரைகளால் திருத்தப்படுவதற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகளை முஹம்மது நபி விவரிக்கிறார்.

(பெரிய ஹதீஸ்தான் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேறு வழியில்லை)
புகாரி ஹதீஸ்  : 7510           
மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்" என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்" என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், "அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்" என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும், "தற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்" என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும், "அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்" என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், "நான் அதற்குரியவன்தான்" என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதிய ளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ் மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதய மாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள். உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்" என்பேன். அப்போது, "செல்லுங்கள், எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்" என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள் உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம், என்று சொல்வேன். அப்போது, "செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் அணுவளவு, அல்லது, கடுகளவு, இறை நம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என்று சொல்லப் படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலை களைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்" என்பேன். அதற்கு அவன், "செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் ளஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், "(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூ கலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும் " என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம்,  “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை" என்று கூறினோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது) வரை வந்தபோது ஹஸன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நாங்கள், "இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை" என்று சொன்னோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக்கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்காரனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்" என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரைசெய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! (உலகில்) லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற் குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக" என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக ! லா இலாஹ இல்லல்லாஹ், என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்" என்று சொல்வான்.

பரம ரகசியமானதாக கூறுப்படும்  தீர்ப்பு நாளின் நிகழ்வுகள், திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே வெளியான திருட்டு DVD மாதிரி ஆகி விட்டதே !

மறுமை நாளில் இப்ராஹிம் நபிக்கும், உருவவழிபாடு செய்தவரான அவரது தந்தையாருக்குமிடையே  நடைபெற இருக்கும் உரையாடலையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைப் பற்றியும் முஹம்மது கூறுவதை கவனியுங்கள்.

புஹாரி ஹதீஸ் எண் :3350
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்      
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்கு தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹிமே! உங்கள் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அஙகே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும் பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

நரகத்திலிருந்து இறுதியாக வெளியேறுபவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே நடைபெறும் உரையாடலையும்  முன்னறிவிப்பு  செய்கிறார்.

முஸ்லீம் ஹதீஸ் எண்: 274,  அத்தியாயம்: 1, பாடம்: 1.83,
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
"இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, 'நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை) வன் உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ் எனக்கு வழங்கினான்!' என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், 'என் இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழப் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்' என்று கூறுவார். 'ஆதமின் மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?' என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், 'இல்லை; வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!' என்று வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.
பின்னர், முதலில் காட்டப் பட்ட மரத்தை விட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் காணும்) அவர், 'என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்' என்று கூறுவார். 'ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?' என்று அல்லாஹ் கேட்பான். அவர், 'வேறெதையும் கேட்க மாட்டேன்' என்று (மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு (இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.
பிறகு முதலிரண்டு மரங்களை விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் கண்ட) அவர், 'என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்' என்று கூறுவார். 'ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம்; என் இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்' என்று கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், 'என் இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!' என்று கேட்பார். அதற்கு இறைவன், 'ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?' என்று கேட்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
குறிப்பு :
இதை அறிவித்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, "நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?" என்று மக்களைக் கேட்டார்கள். அப்போது மக்கள், "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), "இவ்வாறுதான் (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், "ஏன் சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அகிலத்தின் அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?" என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

முஹம்மதுவை அல்லாஹ்வின் துதூதரென்று ஏற்க மறுத்தவர்களுக்கு தனது பரிந்துரை எவ்வித பலனும் அளிக்காது  என்கிறார்.

முஸ்லீம் ஹதீஸ் : 305, அத்தியாயம்: 1, பாடம்: 1.89,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:114)ஆவது இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைஷிக் கூட்டத்தாரே! (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) உங்களை நீங்களே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருவேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன்" என்று சொன்னார்கள்.

ஆனால் முஹம்மதுவை அல்லாஹ்வின் துதூதரென்று மறுத்த அவரது பெரிய தகப்பனார் அபூதாலிப் அவர்களது நிலையைப் பற்றி கூறுவதைப் பாருங்கள்,

முஸ்லீம் ஹதீஸ் : 308, அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
"அல்லாஹ்வின் தூதரே! தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்த அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்; (செய்தேன். அதனால்) அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையேல் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

முஸ்லீம் ஹதீஸ் : 309,   அத்தியாயம்: 1, பாடம்: 1.90
அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).
"அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; அவரை நான் நரகத்தின் மையப் பகுதியில் கண்டேன். எனவே, அவரை(க் கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பின் பகுதிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்" என்று கூறினார்கள்.

(மண்ணறையிலிருந்து அபூதாலிப் எழுப்பப்பட்டு விட்டாரா? அவருக்கு மறுமை நாளின் விசாரணை முடிந்து, நரகத்திற்கும் சென்று விட்டாரா…!? அப்படியானால், ஏற்கெனவே ஒரு கூட்டம் விசாரணையை சந்தித்து விட்டது. முன் சென்றவர்கள் மண்ணறையில்தான் இருப்பார்கள் என்றும், இறுதித்தீர்ப்பு நாள் இதுவரை நிகழவில்லை என்றும்  நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)

 மறுமை நாளின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் முன்கூட்டியே அறிந்ததெப்படிதன்னுடைய மனைவி ஆயிஷாவின் கற்பின் மீது அவதூறு கூறப்பட்ட பொழுது, உண்மையை அறிய முடியாமல் ஒரு மாத காலம் திணறியவர் மறுமையின் உரையாடல்களைக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?

ஷஃபியாவின் கணவன் கினானா, மறைத்து வைத்திருந்த  நகைகள் அடங்கிய தோல்பை இருக்குமிடம் தெரியாததால்அதை அறிவதற்காககினானாவை சித்திரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டவர் சொர்கத்திற்குள் இறுதியாக நுழைபவரின் புலம்பலைக்கூட மிகத் துள்ளியமாக கூறுவது மிகப்பெரிய அற்புதமாகும். இத்தகைய முஹம்மது நபி தன்னைப்பற்றி கூறும்பொழுது,

மறைவானதை நான் அறிந்தவனாக இருந்தால் நன்மையிலிருந்து (எனக்கு) அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; …
(குர்ஆன் 7: 188)


தன்னுடைய முடிவைப் பற்றியே தனக்கு தெரியாது என்று கூறுபவர் இறுதித் தீர்ப்பு நாளின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூறுவது வேடிக்கையிலும் மிகப் பெரிய வேடிக்கை. மிகச்சிறிய கடுகின் எடையை விட சிறிய அளவு ஈமான் உடையவர்களும் முஹம்மது நபியின் பரிந்துரை காரணமாக  நரகத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிந்த பிறகும், மறைவானது, பயங்கரமானது, என்றெல்லாம் குறிப்பிடப்படும் தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கும் குர்ஆன் வசனங்களில் எவ்வித அர்த்தமுமில்லை. ஏனென்றால் இந்த அளவிற்குக் கூட மிகச் சிறிய நம்பிக்கையில்லாதவர் முஸ்லீமாகவே இருக்க முடியாது.

சரி, அல்லாஹ்வின் தீர்ப்பைத் திருத்தும் வல்லமைமிக்க பரிந்துரை யாருடையது?

முஸ்லீம்  302
…பிறகு வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், "வானவர்கள் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைத்தூதர்களும் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைநம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்துவிட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்'' என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவிலான மக்களை அள்ளியெடுத்து, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை நரகத்திலிருந்து வெளியேற்றுவான்...

தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பை, தனக்குத் தானே பரிந்துரைகளையும், வேண்டுகோள்களையும் முன் வைத்து தீப்புகளை திருத்திக் கொள்கிறான் எனக் கூறும் இந்த ஹதீஸ் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா? தனக்குத் தானே பேசிக்கொள்ளும் அளவிற்கு  அல்லாஹ்வின் சிந்தனைமையத்தில் பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா?

நாம் பரிந்துரையைத் தொடர்வோம்.

அவன் அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவன் முன்னால் உள்ளவற்றையும் பின்னால் உள்ளவற்றையும் அறிவான்.
(குர்ஆன் 2:255)

யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …
(குர்ஆன் 34:23)

அல்லாவின் அனுமதியுடன் செய்யப்படும் பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்படும் என்றகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் கருத்துகளில் உள்ள  தர்க்கரீதியான முரண்பாடுகளைக் காண்போம்.மறுமையில் தங்களாகவே வெற்றி பெற்றவர்களுக்கு யாருடைய பரிந்துரையும் தேவையற்றது. தோல்வியடைந்தவர்களுக்கே பரிந்துரை தேவைப்படுகிறது. அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாமல் நரக தண்டனையை பெற்ற ஒரு முஸ்லீம்நல்ல முஸ்லீம் ஒருவரின் பரிந்துரையால் மன்னிக்கப்படுகிறார் என்று வைத்துக்  கொள்வோம்மனிதர்களின் பரிந்துரைகளைக் கேட்ட பிறகு மன்னிப்பதற்கு பதிலாக முதலிலேயே அல்லாஹ்வே   மன்னிப்பை வழங்கியிருக்க முடியுமே? அளவற்ற அருளும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வைவிட   மனிதர்கள்  இரக்க குணமும், மன்னிக்கும் இயல்புடையவர்களா?

அல்லாஹ்வும்அற்ப மனிதர்களின் பரிந்துரையை ஏற்று,  "ஓ மானிடனே உனது பரிந்துரையை ஏற்று அவனை நான் மன்னித்து நரகத்திலிருந்து விடுதலை செய்கிறேன்" என்று கூறி தன்னால் வழங்கப்பட்ட  தீர்ப்பை மாற்றுகிறான் என்றால், முதலில் கூறிய தீர்ப்பு சரியாக விசாரணை செய்யாமல் வழங்கப்பட்ட தவறானதா? முதலில் கூறிய தீர்ப்பு சரியானதுதான் என்றால் எதற்காக மாற்ற வேண்டும்பரிந்துரைகளால் தன்னுடைய தீர்ப்புகள்! மாற்றமடையும் என்பது அல்லாஹ்விற்கு முன்பே தெரியாதா? அவனது தீர்ப்பை மாற்றியமைக்கும் அளவிற்கு மனிதர்களால் என்ன கூற முடியும்? அற்ப மனிதர்கள்  தங்களது பரிந்துரையில் கூறப்போவது என்னவென்று அவனுக்கு முன்பே  தெரியுமென்றால் மனிதனிடம்  பரிந்துரை கேட்க வேண்டிய அவசியமென்ன?

முஸ்லீமான ஒரு மனிதரின் மீது   செய்யப்படும் இத்தகைய விசாரணைகளும் பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்உதாரணத்திற்குஅவரது பட்டோலைகள் பரிசோதனை செய்யவும், அதை எடை போடவும், அவரது செயல்களின் கோப்புகள் அவருக்குக்கு காட்சிகளாகவும், வாதங்களாகவும் காண்பிக்கப்படவும், விசாரணைகளும், பரிந்துரைகளும் முடிவடைந்து தீர்ப்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்கள் ஆகலாம் என்று வைத்துக் கொள்வோம். இது விரைவான நீதி என்பதில் எனக்கும் சந்தேகமில்லைஇன்றைய மக்கள் தொகையின்படி சுமார் 150 கோடி முஸ்லீம்கள் உள்ளனர். முன் சென்றவர்களும் இனி பிறக்க இருப்பவர்களையும்  சேர்த்து தீர்ப்பு நாளின்போது 500 கோடி முஸ்லீம்கள் இருப்பதாகவும் மாற்றுமதத்தினர் எவ்வித விசாரணையுமின்றி நரகத்தில் எறியப்பட்டதாகவும் வைத்துக்  கொள்வோம் (வாதத்திற்காக).

அல்லாஹ்வின் நீதிமன்றம் எவ்வித இடைவேளையும் இன்றி இயங்குவதாகக் கொண்டாலும், தீர்ப்பு வழங்கும் பணி நிறைவடைய  25000000000 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதாவது கடைசி முஸ்லீம் தன்னுடைய தீர்ப்பைப்  பெறுவதற்கு  47,564 ஆண்டுகள் ஆகும். சராசரியாக 60 - 70 ஆண்டுகள் வாழ்ந்த உலக வாழ்க்கையின் பிரதிபலனை அறிந்து கொள்வதற்கு, தலைக்கு ஒரு முழ உயரத்தில் உதிக்கும் சூரியனின் வெப்பத்தின் காரணமாக உண்டான வியர்வை குளத்தில், காது வரை  மூழ்கிய நிலையில் நிர்வாணமாக சுமார் 47,564 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் நீதீமன்றத்திற்கு தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளும் வார விடுமுறைகளும் இருக்குமானால் மேலும் சில ஆயிரம் ஆண்டுகள் வரிசையில் நிற்க வேண்டும்முஸ்லீம் அல்லாதவர்கள் மீதும்  விசாரணை இருக்கின்றதென்றால்  மேலும் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரிசையில் "மணியை" ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும். இது முட்டாள்த்தனமாக தோன்றவில்லையா?

பரிந்துரைகளால் தீர்ப்புகள் திருத்தப்பட்டாலும் அல்லது இல்லையென்றாலும் கவலையில்லை. நம் மீது கூறப்படும் தீர்ப்புகளுக்கு நம்முடைய செயல்கள் எந்த அளவிற்கு காரணிகளாக அமைகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் சொர்க்கவாசியாவதும், நரகவாசியாவதும்  தாயின் வயிற்றில்  நாற்பது நாள்  கருவாக இருக்கும் பொழுதே முடிவு  செய்யப்படுகிறது.

புஹாரி ஹதீஸ்   : 3332      
உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
....இதனால் தான் மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளியிருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது (எதிர்பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான். இதைத் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் கருத்தை உறுதி செய்யும் விதமாக  குர்ஆனிலிருந்து ஒரு சில வசனங்கள்,

நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனுடைய நேர்வழியைக் கொடுத்திருப்போம். எனினும் ஜின்கள், மனிதர்கள் ஆகிய அனைவரிலிருந்தும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற என்னிலிருந்து உள்ள சொல் உண்மையாகி  விட்டது.
(குர்ஆன் 32:13)

(அவர்களில்) உம்முடைய ரப்பு அருள் புரிந்தவரைத் தவிர இதற்காகவே அவர்களை படைத்திருக்கிறான்ஜின்கள், மனிதர்கள் அனைவரினாலும் நரகத்தை திண்ணமாக நான் நிரப்புவேன் என்ற உம்முடைய ரப்பின் வாக்கு பூர்த்தியாகிவிட்டது.
(குர்ஆன் 11:119)

எவன் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ நெருப்பிலுள்ள அத்தகைய ஒருவனை நீர் ஈடேற்றிவிடுவீரோ?
(குர்ஆன் 39:19)

விதியின் வலிமையைக் கூறும் குர்ஆனின் (39:19) இந்தக் கேள்வி, விசாரணைகளையும், பரிந்துரைகளையும்  முற்றிலும் நிர்மூலமாக்குகிறது. இறுதி செய்யப்பட்ட விதியின் வழியே செல்லும் மனிதனிடம் விசாரணைகளும், பரிந்துரைகளும் எதற்காக? தன்னால் எழுதப்பட்ட விதியை எதிர்த்து போராடி வெற்றி  பெற வேண்டும் என்கிறானா?

மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படும் என்றால் குர்ஆனின்   2:48, 2:122-123, 2:254,4:123, 6:5, 6:70, 39:43-44, 82:18-19, 17:56-57 வசனங்கள் பொருளற்றவைகளாகின்றன. மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படாது என்றால் பரிந்துரையைப்பற்றி கூறும் குர்ஆனின் 10:03, 34:23, 20:109, 21:23, 53:26 வசனங்களும் ஹதீஸ்களும் அர்த்தமற்றவைகளாகின்றன. இத்துடன் விதியை வலியுறுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இஸ்லாமியக் கொள்கையும் கேலிகூத்தாகி விடுகிறது. ஒன்றிற்கொன்று நேர்எதிரான கருத்துகள்.

ஏன் இந்த முரண்பாடுகள்?

 சுருக்கமாகச் சொல்வதென்றால், முன்பு கூறியதை மறந்து  மறுபடியும் புதிதாக  இன்னொன்றை கூறும் குர்ஆனை இயற்றியவரின்  நினைவாற்றலின் குறைபாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை!

 உலக வாழ்க்கையையும்இறுதித் தீர்ப்பையும், பரிந்துரைகளையும் கடந்து சொர்க்கத்திற்கு எதற்காக  செல்கிறீர்கள்? அல்லாஹ்வை அடைவதற்காகவா? இஸ்லாமின் உச்சகட்ட கிளுகிளுப்புத் தத்துவக் COMEDYயை கூறாமல் எப்படி இருக்க முடியும்?



Facebook Comments

34 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

//மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படும் என்றால் குர்ஆனின் 2:48, 2:122-123, 2:254,4:123, 6:5, 6:70, 39:43-44, 82:18-19, 17:56-57 வசனங்கள் பொருளற்றவைகளாகின்றன. மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படாது என்றால் பரிந்துரையைப்பற்றி கூறும் குர்ஆனின் 10:03, 34:23, 20:109, 21:23, 53:26 வசனங்களும் ஹதீஸ்களும் அர்த்தமற்றவைகளாகின்றன. இத்துடன் விதியை வலியுறுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இஸ்லாமியக் கொள்கையும் கேலிகூத்தாகி விடுகிறது. ஒன்றிற்கொன்று நேர்எதிரான கருத்துகள். //

இஸ்லாம் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆனந்த் சாகர் said...

//மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படும் என்றால் குர்ஆனின் 2:48, 2:122-123, 2:254,4:123, 6:5, 6:70, 39:43-44, 82:18-19, 17:56-57 வசனங்கள் பொருளற்றவைகளாகின்றன. மறுமை நாளில் பரிந்துரை ஏற்கப்படாது என்றால் பரிந்துரையைப்பற்றி கூறும் குர்ஆனின் 10:03, 34:23, 20:109, 21:23, 53:26 வசனங்களும் ஹதீஸ்களும் அர்த்தமற்றவைகளாகின்றன. இத்துடன் விதியை வலியுறுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒப்பிட்டால், ஒட்டு மொத்த இஸ்லாமியக் கொள்கையும் கேலிகூத்தாகி விடுகிறது. ஒன்றிற்கொன்று நேர்எதிரான கருத்துகள். //

இஸ்லாம் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆனந்த் சாகர் said...


//ஏன் இந்த முரண்பாடுகள்?
சுருக்கமாகச் சொல்வதென்றால், முன்பு கூறியதை மறந்து மறுபடியும் புதிதாக இன்னொன்றை கூறும் குர்ஆனை இயற்றியவரின் நினைவாற்றலின் குறைபாடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை! //

நூறு சதவீதம் உண்மை.

ஆனந்த் சாகர் said...


// உலக வாழ்க்கையையும், இறுதித் தீர்ப்பையும், பரிந்துரைகளையும் கடந்து சொர்க்கத்திற்கு எதற்காக செல்கிறீர்கள்? அல்லாஹ்வை அடைவதற்காகவா? இஸ்லாமின் உச்சகட்ட கிளுகிளுப்புத் தத்துவக் COMEDYயை கூறாமல் எப்படி இருக்க முடியும்?//

அந்த நகைச்சுவை கூத்தையும் தனியொரு பதிவு போட்டு உங்கள் பாணியிலேயே விளக்கி விடுங்கள். நன்றாக ரசிப்போம்!

ஆனந்த் சாகர் said...

//..நிர்வாணமாக சுமார் 47,564 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.//

ஆயிஷாவின் அறிவித்த ஒரு ஹதீஸ், "நியாய தீர்ப்பு நாளில் விந்து போன்ற திரவம் வானிலிருந்து பூமியின்மீது விழும். அப்பொழுது மனிதர்கள் அனைவரும் நிர்வாணமாக மன்ணறைகளிலிருந்து உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்" என்று கூறுகிறது.

முஹம்மதுவின் கற்பனை திறன் அலாதியானது. அவர் பாமர மக்களை பயமுறுத்த சொன்ன இதுபோன்ற கதைகளில் கூட

அவர் எப்படியெல்லாம் கிளுகிளுப்பை சேர்த்திருக்கிறார் பாருங்கள்! அவருடைய சிந்தனை எப்பொழுதும் வன்முறை மற்றும் பாலுறவு பற்றியே இருக்கும்போல் தெரிகிறது.

ஆனந்த் சாகர் said...


//பரம ரகசியமானதாக கூறுப்படும் தீர்ப்பு நாளின் நிகழ்வுகள், திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே வெளியான திருட்டு DVD மாதிரி ஆகி விட்டதே ! //

பெரும்பாலான இஸ்லாமிய கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள் எல்லாமே பார்சிகள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிலை வணக்க அரபியர்களிடமிருந்து திருட்டுத்தனமாக முஹம்மது பிரதியெடுத்து அவர்களுக்கே இவர் புதிதாக பாடம் நடத்தியதுதான். அந்த வகையில் இஸ்லாம் ஒரு திருட்டு DVD என்றால் அது மிகையாகாது.

ஆனந்த் சாகர் said...


//உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள். நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள, வாளின் முனையைவிட கூர்மையான, முடியை விட மெல்லிய "ஸிராத்" என்ற பாலத்தைக் கடக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விடுவார்கள். மற்றவர்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அல்லாஹ்வின் முன்னே நிறுத்தப்படுவார்கள். என்ற அவர்களது செயல்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப, வலக்கரத்திலும், இடக்கரத்திலும் வழங்கப்படும் "மீஸான்" என்ற தராசில் அவர்களது செயல்கள் பற்றி பதிவு புத்தங்கங்கள் எடை போடப்படும். //

இது முழுக்க முழுக்க ஜோரோஷ்ட்ரா (பார்ஸி) மத நம்பிக்கை. இதை முஹம்மது அப்பட்டமாக ஈயடிச்சான் காப்பி அடித்திருக்கிறார். என்ன ஒரு வித்தியாசம் என்றால், அஹுரா மஸ்தா என்பதற்கு பதில், அல்லாஹ் என்று முஹம்மது போட்டுக்கொண்டார்.

ஆனந்த் சாகர் said...


//முஸ்லீம் அல்லாதவர்கள் மீதும் விசாரணை இருக்கின்றதென்றால் மேலும் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரிசையில் "மணியை" ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்.//

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!!!!

Anonymous said...

நான் சின்ன வயசில இருந்த போது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.. இப்போ இல்லை. (ஆனந்த்சாகரின் மொழிபெயர்ப்பு கைங்கர்யம்)

அதுவுமில்லாம அல்லாவுக்கும் (??) எனக்கும் தொழுகை மூலமா நேரடி தொடர்பு இருக்கும்போது இடையில பூசாரி (இவர் மீது எப்போதும் நம்பிக்கை இல்லை) என்னத்த சொல்லப்போறாரு...??
பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொடுத்தே ஆகணுமின்னு சொல்லிபுட்டேன். அது கொடுக்குறதா இருந்தா 50000 வருஷமானாலும் லைன்ல நிக்கத்தயார்...
அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ? இல்ல வெறும் இளமையான ஆத்மா மட்டும் மேல போகுமா.. ?
தவறுதலாக இறந்த / கொலை செய்யப்பட்ட நபர் / குழந்தை / ஒரு பாவமும் அறியா ஊனமுற்றோர்களுக்கும் விசாரணை உண்டா.?
அனைத்தையும் படைத்த இறைவன் என்றால் ஏனைய விலங்குகள், பூச்சிகளுக்கு என்ன கிடைக்கும் ? ஒருவேளை சைனீசுகளுக்கு ஹோட்டல் திறந்திருப்பாரோ ?

Anonymous said...

தீர்ப்புகள் திருத்தப்படலாம்.. அவன் நாடினால் !!
எழுதியவைகள் மாற்றப்படலாம்.. அவன் நாடினால் !!
உருவாக்கப்பட்டவை அழிக்கப்படலாம்.. அவன் நாடினால் !!
புதிய வஹீக்கள் அறிவிக்கப்படலாம்.. அவன் நாடினால் !!

வஹீக்கள் வருகின்றது தெருவுக்கு தெரு உள்ள பூசாரிகள் வீடுகளில்..!!
என் எதிர்த்த வீட்டு வயதான பெண்மணிக்கும்..!!
கூடிய சீக்கிரம் எனக்கும் கேட்கும்..!!
அப்போ நானும் ஒரு கடவுளின் தூதுவன்..
மறுபடியும் ஒரு கடைசித் தூதுவன் அது நானாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி (ஹி ஹி ஹி)

Ant said...

//அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன் என்று கூறுவான்// அப்ப நேர்வழியை காட்டும் புத்தகம் தெளிவான புத்தகத்தின் பயன் என்ன?

Ant said...

//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்"// அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்? அதனால் தான் கோடி என்னிக்கை வரவில்லை. நேர்வழி புத்தகம் அவர்களை நேர்வழியில் செலுத்தாது என்று படைத்தவன் முடிவுகட்டிவிட்டானா?

Ant said...

//ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்// ஒருதலைபட்சமாக உள்ளதே!

ஆனந்த் சாகர் said...


//நான் சின்ன வயசில இருந்த போது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.. இப்போ இல்லை. (ஆனந்த்சாகரின் மொழிபெயர்ப்பு கைங்கர்யம்) //

என்னுடய மொழிபெயர்ப்பு கைங்கர்யம் இவ்வளவு வேலை செய்திருக்கிறது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் அதே சமயம் இன்னும் பல கட்டுரைகளை, விவாதங்களை மொழிபெயர்க்க ஊக்கத்தையும் தருகிறது. உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ஆனந்த் சாகர் said...


//பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொடுத்தே ஆகணுமின்னு சொல்லிபுட்டேன்.//

இப்படியே பெண்களும் 72 கன்னிப்பையன்கள் வேண்டும் என்று கேட்டால் அல்லாஹ் என்ன செய்வான் என்பதை பற்றி கண்மணி/பொன்மணி முஹம்மது ஒன்றுமே சொல்லவில்லையே!

// அது கொடுக்குறதா இருந்தா 50000 வருஷமானாலும் லைன்ல நிக்கத்தயார்... //

இந்த விஷயத்தில் நீங்கள் தனி ஆள் இல்லை. உங்களுடன் ஆர்ப்பரிக்கிற மிகப்பெரும் கூட்டம் இருக்கிறது. நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு வரிசையில் நிற்க அவர்கள் தயார்.

ஆனந்த் சாகர் said...


//அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ?//

முஹம்மதுவுக்கு தெரிந்ததெல்லாம் இந்த ஜட உலகம் (physical world) மட்டும்தான். இதை தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் விவரித்த சொர்க்கமும் நரகமும் கூட ஜட உலகம்தான். அவருக்கு மற்ற யதார்த்தங்கள் (realities) இருப்பது அறவே தெரியாது. மற்ற பரிமாணங்களில் உள்ள உலகங்கள் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியாது. எனவே அல்லாஹ்வுக்கும் அவற்றை பற்றி ஒன்றும் தெரியாது.

முஹம்மதுவை பொருத்தவரை மனிதர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது அவர்கள் ஜட உலகில் ஜட உடலோடுதான் எழுப்பப்பட்டு நரகத்திற்கோ சொர்கத்திற்கோ அனுப்பப்பட்டு அந்த உடலின்மூலமே வேதனையையோ இன்பத்தையோ அனுபவிப்பார்கள். முஹம்மது மிகவும் அறியாமையில் வாழ்ந்த மனிதர். அவருக்கு ஆன்ம உண்மைகள் எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

Ant said...

சிந்திக்க வேண்டிய செய்திகளாக இருந்தாலும் எழுத்து நடையால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அணைவரும் அதை பிரதிபளிக்கவும் செய்துள்ளனர். பாராட்டுகள்.

DEVAPRIYA said...

//Ant said...
//நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்"// அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்? அதனால் தான் கோடி என்னிக்கை வரவில்லை.//
வெளிப்படுத்தினவிசேஷம் 7:4முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்துநாற்பத்து நாலாயிரம்பேர்.
ஏசு பெயரில் உள்ள புனையலையே குர்ரனும் புனைகிறது நண்பரே.

பைபிள்படு- மேசியா கிறிஸ்து -இறுதி தூதர் வந்தால் அப்போது வாழும் தலைமுறையினரோடு உலகம் அழியும். ஏசுவும், பவுலும் தன் வாழ் நாளில் உலகம் அழியும் என்றனரே!கிறிஸ்து யார்- இயேசுவா? முகம்மது நபியா?
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html

இயேசு கிறிஸ்து ஒரே பேறான குமாரன் - இல்லையே?
மூல கிரேக்கத்தில் இல்லாதது ஏசு தேவனின் ஒரே பேறான குமாரன் என்றோ ஒரே குமாரன் என்றோ இல்லவே இல்லை.
http://pagadhu.blogspot.in/2014/03/blog-post_21.html

சுண்டல் பிரியன் said...

தஜ்ஜால் அவர்களே நான் கமெண்ட்ஸ் போடாவிட்டாலும் உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருபவன் நான். உங்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. முஸ்லிம்களின் பொய்களையும் அவர்களின் சிறுபிள்ளைதனமான வாதத்திற்கு மரண அடி செருப்படி சவுக்கால் அடி கொடுக்குகிறிர்கள்( எங்கையோ அடிக்கடி கேட்ட மாதிரி இல்ல ?) உங்களிடம் அவர்கள் கருத்து மோதல் சைய்வதை அழகாக தவிர்க்கிறார்கள். ஏனென்றால் முகமதுவின் டவுசர் அவிழ்ந்து விடும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். இன்னைக்கு பொதுவாக முஹம்மதுவை பற்றி யாரிடும் கேட்டாலும் சர்வ சாதரணமாக . அவன் ஒரு பெண் பித்தர்,பாலியல் வல்லுறவுகாரர் கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று பெரும்பாலோர் உடனடியாக கருத்து சொல்லும் நிலை தற்போது சர்வ சாதரணமாக உள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் மிக மிக சிறுபான்மையாக இருக்கும் நாட்டில் இடத்தில் கூட முகம்மதுவை விமர்சிப்பது என்பது கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத விசியம். வெகுண்டு எழுந்துவிடுவார்கள். மிக கடுமையான எதிர்ப்பு சமாளிக்கமுடியாத அளவு இருக்கும். மீண்டும் அதை பற்றி சிந்திக்க முடியாத அளவுக்கு செய்துவிடுவார்கள். ஆரம்பகால இணையதள முகம்மதுவின் விமர்சனகளின் பொழுது முஸ்லிம்களின் அதிகமான கமெண்ட்ஸ் வரும் (எதிர்ப்பும்,கொலை மிரட்டலும்) அனால் அதை மீறி நிறைய கட்டுரை கள் எழுதி எழுதி அவர்களை சகிக்புதன்மை உள்ளவர்களாக ஓரளவு மாற்றியது நன்மையான விசியமே. இன்று அவர்கள் பெரும்பாலும் இத்தகைய விமர்சனங்களை கண்டும் கானதவர்களாக இருக்கிறார்கள். இன்று எனது முஸ்லிம் நண்பர்களிடம் அவருடைய பாலியல் வல்லுறவு மற்றும் கொலை கொள்ளை பற்றி தைரியமாக பேசமுடிகிறது. அவர்களும் ஏதோ இது யூத சதி என்று மதரசாவில் சொல்லி கொடுத்ததை சிறுபிள்ளை வாதம் பேசி நழுவி கொள்கிறார்கள். ஆனால் பெரியதாக கோவித்து கொள்வதில்லை. இதற்கெல்லாம் காரணம் உங்களை போன்ற தைரியமானவர்கள் மிரட்டலுக்கு பயப்படாமல் தொடர்ந்து எழதி எழுதி முஸ்லிம்களை களைப்படைய செய்து சகஜமாக்கி சைய்துவிட்டிர்கள் தொடர்ந்து எழுதி கொண்டே இருங்கள் .
தஜ்ஜால்,ஆனாந்சாகர்,செங்கொடி,பகடு உங்கள் பணி தொடரட்டும். முஸ்லிம்களிடம் சகிப்புதன்மை வளரட்டும்.

Anonymous சுண்டல் பிரியன் said...

முஸ்லிம்கள் அவர்களுக்குள் திட்டமிட்டு பேசி முடிவு செய்து இத்தளத்தில் கமெண்ட்ஸ் எழுத மறுக்கிறார்கள். அவர்கள் உங்கள் தளத்தை பார்வை இட வருகிறார்களா.? அதற்கான தகவல் உங்களிடம் இருக்கிறதா...? கமெண்ட்ஸ் போடாமல் எத்தனை பேர் பார்வை இடுகிறார்கள். ஏனெறால் நான் கூட கமெண்ட்ஸ் போடா அலுப்பு பட்டு கொண்டு(நிறைய டைம் எடுக்கிறது) படிப்பதோடு நிறுத்திக்கொள்வேன்.
உங்கள் பதில் அவசியம்

Anonymous said...

குரான் பாதுகாக்கப்பட்டது பாதுகாக்கப்பட்டது... நம்பிக்கையில்லையா மேலே படியுங்கள்.. முன்பெல்லாம் கம்பியுட்டர் / இணையதள வசதி கிடையாது. அதிக பதிப்பகங்கள் கிடையாது (ஒவ்வொரு எழுத்தாக கோர்ப்பது - தமிழ் அரபி குரான் என்று வரும்போது எழுத்துக்கோர்ப்பு அரபி மொழி பிரச்சினை வரும்). அவ்வளவு ஏன், குரான் இல்லாமலேயே எவ்வளவோ இஸ்லாமிய குடும்பங்கள் இருந்திருக்கின்றன இப்போதும் சில குடும்பங்கள் இருக்கின்றன (கிடைக்காத காரணத்தினால் அதை பெறுவதே ஒரு அதிசயமாக கருதப்பட்டது). இப்போது தெரியவில்லையா அது பாதுகாக்கப்பட்டது என்று ? (ஹி ஹி)

ஒரு முறை குரானின் சிறு தொகுப்பை ஒரு பேழையில் வைத்து டெய்லி நீ அந்த பேழையை மட்டும்தான் சுத்தம் பண்ணனும் ஆனா நீ காபிர் என்பதால் புத்தகத்தை தொடக்கூடாது (??)என்று என் முஸ்லீம் முதலாளி சொன்னார்.. எனக்கு அப்போதிலிருந்தே குரான் மீது ஒரு வித வெறுப்பு வந்துவிட்டது. குரான் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு அர்த்தம் இதுதானா..?

குரான் வசனங்கள் வேண்டுமானால் (கண்ணுமனியின்) அதன் வசனங்களுக்கு ஏற்ப மாற்றப்படாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் மொழிபெயர்ப்புகள் மாறலாம் என்று சொல்லிவிட்டார் போலும் (குரான் அறிவியல் பிரச்சினைகளை சொல்கிறேன்). அதன் பின்புதான் அப்படி என்ன இருக்கு அதுல... ஏன் முதலாளி தடுத்தார் என்று தற்போதைய இணையதள வாயிலாக முதல் மூன்று தொகுப்புகளை படிக்கும்போதே என்னால் அதோடு ஒன்ற முடியவில்லை. (தற்போது எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது) வசனங்கள் ஒருவனை மிரட்டுவது போலவே இருக்கிறது. சரி வசனங்கள் வெளிப்பாட்டிற்கான காரணங்களை பார்த்தால் அவை அரபு யூதர்கள் சார்ந்த முன்விரோதம் மற்றும் நடவடிக்கைகளை குற்றம் / எச்சரிக்கை / வழிமுறைகளை மட்டும் சொல்கிறதே தவிர ஏனைய நாடுகளை அல்லது எதிர்காலத்துக்கான பொதுவான கருத்துக்களை காணவில்லை. மொழி பெயர்ப்பு செய்பவர்கள் அரபி சமுதாயத்தை வேண்டுமென்றே உலகளவில் (அனைவருக்கும் கூறப்பட்டது) என்று ஒருவித அரபி திணிப்பை தொடங்குகின்றனர்.

பொதுவாக சினிமாவில் உள்ள மாதிரி ஹீரோயிசம்-வில்லன் என்ற அடிப்படை மாதிரி மற்ற மத புத்தகங்கள் இருக்கும்போது இந்த புத்தகம் மட்டும் வித்தியாசமாய் வில்லத்தனம் மட்டுமே அதிகமாய் காணப்படுகிறது. யாரையோ (யூத/கிறிஸ்துவர்களை)எச்சரிக்கை மற்றும் அவர்களுக்கெதிராத அரபிகளை தயார் படுத்தவே மட்டுமே இந்த புத்தகம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது
இது பாதுகாக்கப்பட்டது என்பதால் நம் மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் மதவாதிகள் இவர்களுக்கு மட்டுமே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... ஏனெனில் தினம் தினம் யாராவது குர்ஆன் சம்பந்தமான குதர்க்கமான கேள்விகள் ஆராய்ச்சி என்று பலவாறு (ஒரு வித அச்சம் வெட்கம் பயத்துடனே) அவர்கள் பதில் அளிக்க வேண்டியிருக்கிறது.

எனக்கென்னவோ.. சுவர்க்கம் / நரகம் (??) சென்றபின்பு முதன் முதலில் கண்ணுமனியிடம் கேட்கும் முதல் கேள்வி : ஏனையா இப்படி ஒரு புத்தகத்தை இப்படி கொடுத்து தவிக்க விட்டுட்டே..
அல்லாவிடம் (?) கேட்க முடியாது.. ஏனெனில் அவன் கேட்கும் முதல் கேள்வி... கண்ணுமனிதான் தூதர்ன்னு நான் உன்கிட்ட சொன்னேனா ? சிந்திக்கமாட்டீர்களான்னு சொன்னத்துக்கு அர்த்தம் இப்போ புரியுதான்னு கேட்பான்..

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

மிக்க நன்றி!

இஸ்லாம் என்பதே முரன்பாடுகளின் மூட்டைதான். அதிலும் சில விஷயங்கள் மிகவும் கோமாளித்தனமானவைகள். அதிலொன்றுதான் இறுதி விசாரணையும் பரிந்துரைத்தலும். முன்னுக்குப்பின் முரணான செய்திகள். இதற்கு இன்னொரு காரணத்தையும் நாம் சொல்ல முடியும். வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட மனிதர்களின் கைவண்ணம் குர்ஆனுக்குள் இருக்கிறதென்பதுதான்! எனவே குர்ஆன், கடவுளின் வார்த்தைகள், பாதுகாக்கப்பட்டது, முரண்பாடற்றது என்பதைப் போன்ற முஃமின்களின் கோரிக்கைகள் குருட்டு நம்பிக்கைகளாகின்றது.

தஜ்ஜால் said...


வாருங்கள் Anonymous(s),

//பாதி நம்பிக்கை இருந்ததால எனக்கு 35 ஹீருன்கள் கொடுத்தே ஆகணுமின்னு சொல்லிபுட்டேன். அது கொடுக்குறதா இருந்தா 50000 வருஷமானாலும் லைன்ல நிக்கத்தயார்... // அது சரி இந்த கிழடு தட்டிய பூத உடல் கூடவே வருமா ? இல்ல வெறும் இளமையான ஆத்மா மட்டும் மேல போகுமா.. ? //
நீங்க கவலையே படவேண்டாம்! சொர்க்கத்தில் எல்லோருமே சம வயதுடையவர்களாக இருப்பார்களாம், ஆண்களின் வயது 33 ஆக இருக்குமென்கிறது முஹம்மதுவின் ஒரு அறிவிப்பு. அது மட்டுமா... இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.
// வஹீக்கள் வருகின்றது தெருவுக்கு தெரு உள்ள பூசாரிகள் வீடுகளில்..!!
என் எதிர்த்த வீட்டு வயதான பெண்மணிக்கும்..!!// நான் நம்பிக்கைகளில் இருந்த காலங்களில் எங்கள் வீட்டிலேயே இந்தக் கூத்து நடந்ததை பார்த்து புல்லரித்துப் போய் அதன் மீது அற்புதங்களைத் திணித்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
இரண்டு Anonymous இருக்கிறார்கள் இருவருமே ஒன்றுதானா?

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT

//அப்ப நேர்வழியை காட்டும் புத்தகம் தெளிவான புத்தகத்தின் பயன் என்ன?// புத்தகம் நேர்வழி காண்பிப்பதர்காக அல்ல! அதிகாரத்தை கைப்பற்ற குறுக்குவழியை காண்பிக்கவே! அந்த வகையில் புத்தகம் நன்றாகவே பயன்பட்டது, பயன்பட்டுக் கொண்டிருக்கிறது!
//அப்போது சிறு கூட்டமாக இருந்திருக்கும் அதனால் எழுபதாயிரம் பேர் என்பது அதிகமாதாக தெரிந்திருக்க வேண்டும்?// முஹம்மதின் மரணத்தின் பொழுது சுமார் ஒரு லட்சம்பேர் அவரை ஏற்றிருந்தாக ஒரு செய்தி கூறுகிறது. அப்படிப்பார்த்தால் 70000 என்பது மிகப் பெரிய எண்ணிக்கைதான்.
//ஆட்டிக் கொண்டு நிற்க வேண்டும்// ஒருதலைபட்சமாக உள்ளதே!// அல்லாஹ்வையும் முஹம்மதையும் படித்துப் படித்து நானும் ஆணாகிக்க வாதியாகிட்டேனோ?! இதில் சமஉரிமை கொடுக்க வேண்டுமென்ற உங்கள் போர்க் குரலை வரவேற்கிறேன். எனவே மணியை ஆட்டிக் கொண்டும் “......” “......” குலுக்கிக் கொண்டும் நிற்க வேண்டும் என்ற வஹீயை இறக்கிவிட்டேன்! போதுமா!!
எதற்காக அல்லாஹ் எல்லோரையும் நிர்வாணமாக வரிசையில் நிறுத்த வேண்டும்? அவன் பெரிய ஜொள்ளுவாயனாக இருப்பானோ?

தஜ்ஜால் said...

வாருங்கள் சாலாமன்,

முஹம்மது, யூதர்களின் புனையல்களையும், கிருஸ்தவர்களின் புனையல்களையும் மனம்போனபோக்கில் திருடியதோடல்லாமல், புத்தகங்களை திருத்திவிட்டதாக அவர்களையே குற்றவாளிகளாகவும் அறிவித்துவிட்டார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் சுண்டல் பிரியன்,

//இன்னைக்கு பொதுவாக முஹம்மதுவை பற்றி யாரிடும் கேட்டாலும் சர்வ சாதரணமாக . அவன் ஒரு பெண் பித்தர்,பாலியல் வல்லுறவுகாரர் கொலைகாரன் கொள்ளைக்காரன் என்று பெரும்பாலோர் உடனடியாக கருத்து சொல்லும் நிலை தற்போது சர்வ சாதரணமாக உள்ளது./// இந்த வெற்றிக்கான முதல் நன்றி இணையத்திற்குதான்! அதுமட்டுமல்லாமல் இந்த பிரச்சாரத்தை ஆங்கிலத்தில் முழுவீச்சில் முன்னெடுத்த இப்ன் வராக், அலிசினா, அபுல்காசிம் .... தமிழில், தோழர் செங்கொடி போன்றவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவர்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் கொடுத்த துணிவுதான் என்னையும் எழுதத் தூண்டியது.

முஸ்லீம்கள் களைப்படைந்து விட்டனர் என்பது உண்மைதான்! // முஸ்லிம்கள் அவர்களுக்குள் திட்டமிட்டு பேசி முடிவு செய்து இத்தளத்தில் கமெண்ட்ஸ் எழுத மறுக்கிறார்கள்.// ஆம்! அவர்களுக்குள் இவ்வாறான ஒரு உடன்படிக்கை இருப்பது உண்மைதான். ஏனென்றால் அவர்கள், நம்முடைய ஒரு கேள்விக்கு பதிலளித்தால் அதிலிருந்து பத்து கேள்விகளை நாம் முன்வைக்கிறோம். இறுதியில் கிணறுவெட்ட பூதம் வந்த கதையாக இஸ்லாமின் ஒட்டுமொத்த குப்பையும் வெளிவந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க அல்ல இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி நம்முடைய கேள்விகளைக் கண்டும்காணாமல் கடந்து செல்வதுதான்!
// அவர்கள் உங்கள் தளத்தை பார்வை இட வருகிறார்களா.? அதற்கான தகவல் உங்களிடம் இருக்கிறதா...?// பார்வைகளின் எண்ணிக்கையை மட்டுமே அறிய முடிகிறது. அதில் முஸ்லீம்களைப் பிரித்தறிய முடிவதில்லை! இணையத்தை மதப்பரப்புரைக்காக பயன்படுத்தும் முஃமின்கள், நிச்சயமாக நம்மை போன்றவர்களைத் தவிர்க்க முடியாது.

தஜ்ஜால் said...

வாருங்கள் Anonymous (3)
//சரி வசனங்கள் வெளிப்பாட்டிற்கான காரணங்களை பார்த்தால் அவை அரபு யூதர்கள் சார்ந்த முன்விரோதம் மற்றும் நடவடிக்கைகளை குற்றம் / எச்சரிக்கை / வழிமுறைகளை மட்டும் சொல்கிறதே தவிர ஏனைய நாடுகளை அல்லது எதிர்காலத்துக்கான பொதுவான கருத்துக்களை காணவில்லை// உண்மைதான். ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை/நிலப்பரப்பை/இனத்தை/சூழலை அடிப்படையாகக் கொண்டு பேசுவதென்ற பிரச்சனை குர்ஆனில் மட்டுமல்ல அனைத்து மதப்புத்தகங்களிலும் இருக்கிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இந்தப் புத்தகங்கள் கடவுளின் வார்த்தைகள் அல்ல என்பதற்கு இதுவே போதுமானது.

//பொதுவாக சினிமாவில் உள்ள மாதிரி ஹீரோயிசம்-வில்லன் என்ற அடிப்படை மாதிரி மற்ற மத புத்தகங்கள் இருக்கும்போது இந்த புத்தகம் மட்டும் வித்தியாசமாய் வில்லத்தனம் மட்டுமே அதிகமாய் காணப்படுகிறது. // அல்லாஹ் வில்லனுக்கெல்லாம் பெரிய வில்லன்! மிரட்டலால்தான் அவனால் நிற்க முடிகிறது இல்லையெனில் முஹம்மதின் உளறல்களை புத்திபேதலித்தவன் கூட சீண்டிருக்கமாட்டான்.
முஃமின்களின் கொலை மிரட்டல்கள் இல்லையெனில் குர்ஆன் என்ற இந்த புத்தகத்தை என்றோ கிழித்து தோரணமாகத் தொங்கவிட்டிருப்பார்கள். இதுதான் வில்லத்தனத்தின் பயன்!

இந்தியன்1947 said...

மூன்று அனானியும் நான் தான் - பெயர் வேண்டுமானால் இந்தியன்1947 ன்னு வச்சுக்கோங்க எனக்கு எம்மதமும் சம்மதம் (என் மனதுக்குள் வழிபடும் முறையில் மட்டும்) இந்த தளத்திற்கும், ஏனைய தளங்களுக்கும் மற்றும் ஆனந்த் சாகர் மொழிபெயர்ப்புகளையும் படித்து படித்து ஒவ்வொரு முறையும் மனதுக்குள் வழிபடும்போது இஸ்லாம் பக்கம் வரும் நேரம் மனதுக்குள் ஒரு நெருடல், அதுவுமன்றி நான் இருக்கும் வீட்டின் குளியலறை கண்ணாடியில் -குளிக்கும்/கழிக்கும்போதும் நடத்தப்படும் சடங்கின் வழிமுறையை முன்னாள் வாடகைதாரர் நோடீஸ் அடித்து ஒட்டி வைத்துள்ளார்.. அதில் கண்ணுமணி தான் தூதர்ன்னு நான் சாட்சி அளிக்கிறேன்.. என்ற வரி மேலும் என் நெருடலை அதிகப்படுத்துகிறது. யார் இவர் ? நான் / என் தகப்பன் / என் குழந்தை / என் பாட்டனார் / அல்லது உலகில் சிறந்தவர்கள் (ஆண் பெண் என்ற பாகுபாடன்றி) என்று நம் கண்முன்னே பாராட்டப்பட்டவர்கள் நற்குணங்களை விட சிறந்தவரா ? இல்லாத ஒருவருக்கு நான் எந்த நம்பிக்கையில் சாட்சி ஆக முடியும் என்று.. அவரின் வரலாற்றை பார்த்தால் அதிகாரம் தான் தெரிகிறதே தவிர அன்பு தெரியவில்லை..!!
இஸ்லாத்தை மட்டுமே குறை சொல்லவில்லை.. ஏனைய மதங்களின் நதி/ரிஷி மூலங்களும் அப்படித்தான் இருக்கிறது.

உங்களுக்கு தெரிந்த பத்தினிகள் பெயரை சொல்லுங்கள் என்று என்னை கேட்டல் முதலில் என் குடும்பத்தினரை தான் சொல்வேன். இது தான் லாஜிக், அப்படிஇருக்கும்போது யாரென்றே தெரியாத (தகப்பனார், அவருக்கு அவருடைய தகப்பனார்.... என்று வம்சாவழியாக சொல்லிக்கொடுத்து) கண்ணுமணியை தூதர்ன்னு எப்படி நான் சாட்சியாக முடியும்.

இதெல்லாம் நானாக சொல்லவில்லை... அல்லா (?) தான் சிந்திக்கசொல்றார்.

Ant said...

ஞானம் மிக்கோன் சிந்திக்கமாட்டீர்களா? சிந்திக்கமாட்டீர்களா? என்று அடிக்கடி கூறக் கேட்டு பழகிப்போனாதால் //“......” “......” குலுக்கிக் கொண்டும் நிற்க வேண்டும் // என்ற கோணத்தில் சிந்திக்க தவறிவிட்டேன்.வருந்துகிறேன் ! ?

SAGODHARAN said...

பதிவு அருமை! இப்படிப்பட்ட குழப்பங்களை வண்டி,வண்டியாக வைத்துக்கொண்டுதான் தெளிவான மார்க்கம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள்! இதனை அல்லாஹ் விளக்கியது,நபி விளக்கியது என்பதை தாண்டி இப்ப உள்ள மார்க்க மண்ணாங்கட்டிகள் புளி,புண்ணாக்கு வைத்து விளக்கு விளக்கு என்று தெரு தெருவாய் விளக்கி கொண்டிருக்கிறார்கள்! பாவம்!

இதில் சிரிப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு!

வலிப்பு வந்த நேரத்தில் உளறிய வசனங்களை இப்ப எடுத்து வைத்து கொண்டு இப்போது நடக்கும் சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்த்து தட்டி,நெளித்து ஆ! என்னா வசனம் யா! யா! அல்லாஹ்! என்று நரம்பு தெறிக்க கத்துவதுதான்!

வரப்பு,வாய்க்கால் சண்டை நடந்து அதற்க்கு இறக்கப்பட்ட(!), வசனத்தை உலகம் அழியும் காலம் வரை உபதேசமாக எடுத்துக்கொள்ள சொல்வதில் ஆரம்பித்து கடைசிவரை விட்டலாச்சாரியா கதை போல எல்லாம் படம்தான்!

இதில் மண்ணறை மறுத்தவனுக்கு செவில் அரை வரை ஒரே காமடிதான் !

இதில் கடைசி கூத்து தான் இந்த நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்கறது!

நல்ல வேள வழக்கு,வாய்தா மேட்டர்லாம் அப்ப இல்ல! இருந்திருந்தா செத்தான் அல்லாஹ் நம்ம அம்மாகிட்ட!

தஜ்ஜால் said...

வாருங்கள் சகோதரன்,

//இதில் சிரிப்பான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு!// குர்ஆன் வசனங்களுக்கான ஹதீஸ் பின்னணியுடன் அதிலிருக்கும் முரண்பாடுகளை சுட்டினால், இது குர்ஆனில் இல்லாதது குர்ஆனுக்கு முரணானது என்று ஹதீஸ்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு கூட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் அஹ்லே குர்ஆன்வாதிகள் இல்லை. சமீபத்தில் நிகழ்ந்த விவாதங்களில் எனது அனுபவம் இது.
ஆக, இஸ்லாமிலிருக்கும் முரண்பாடுகளை உணரத் துவங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

Dr.Anburaj said...

அன்புள்ள தஜ்லால் அவர்களே!
குல்யா அய்யுஹல் காபீரூன்
என்றால் என்ன செங்கொடி வலைதளத்தில் சாணக்கியம்-நஞ்சுண்ட மூர்த்தி என்பவர் அடிக்கடி இப்பதத்தைப் பயன்படுத்தி எனது கடிதங்களுக்கு பதில் எழுதியுள்ளார்.இதனுடைய அர்த்தம் என்ன ? காபீர்களை ஒழித்து கட்டணும் என்று முகம்மது கூறுகின்றாரா ?

C.Sugumar said...

அன்புராஜ் கேள்விக்கு பதில் தொியவில்லையா ? ஏன் மௌனம்

Unknown said...

இறைதுரோகியே இந்த உலகமே முஸ்லிமீனாலும் நீ முஸ்லீம் ஆகமாட்டாய்!
இந்த உலகமே இறைநிராகரிப்பவர் ஆனாலும் இன்ஷா அல்லாஹ் நாங்கள் முஸ்லிம் தான்