Tuesday 28 August 2012

சவால்


Dr.அலிசினா தன்னை ஒரு ஈரானிய முஸ்லீம் என்று அறிமுகம் செய்கிறார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமையும், அதன் நிறுவனர் முஹம்மதுவையும் அவரது போதனைகளையும் www.faithfreedom.org மூலம் மிகக்கடுமையாக விமர்சனங்களையும் கட்டுரைகளையும், விவாதங்களையும் வெளியிட்டுவருகிறார். முஹம்மதுவின் மீதான தனது குற்றச்சாட்டுகளை மறுத்து நிறுவுபவர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.  இந்த வினாடிவரை, நூற்றி ஐம்பது கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இஸ்லாமிலிருந்து ஒருவராலும் அலிசினாவின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு. முஹம்மது, கடவுளின் தூதரென்பதில் திடமான நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமியர்கள் எவரேனுமிருந்தால் சவாலை எதிர்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கற்றறிந்த அறிஞராக இல்லையென்றாலும் இப்பொழுதும் பரிசை வெல்லமுடியும். அலிசினா அவர்களுடன் விவாதம் செய்ய ஒரு அறிஞரை நீங்கள் சம்மதிக்கச் செய்யவேண்டும். அவர், முஹம்மதின் மீதான அலிசினா அவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்து நிறுவ வேண்டும் அல்லது முஹம்மது கடவுளின் தூதர்தான் என்பதை நிறுவ வேண்டும்.
முன்னெப்பொழுதும் இருந்திராத அளவிற்கு முஸ்லீம்கள் உண்மையை உணர்ந்து இஸ்லாமைவிட்டு வெளியேறுகின்றனர். இன்று லட்சக்கணக்கான முன்னாள் முஸ்லீம்கள் இஸ்லாமின் (மறைக்கப்பட்ட) உண்மைகளை கேள்வி கேட்கின்றனர். தங்களது விமர்சனங்களை உயிருக்கு அஞ்சாது முன்னெப்போது இருந்திராத அளவிற்கு உலக அளவில் வெளியிடுகின்றனர். முன்னாள் முஸ்லீம்களின் இந்த கேள்விகள் பதிலளிக்கப்படவில்லையெனில் இஸ்லாமின் வீழ்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானதே.
இனி, Dr.அலிசினாவின் சவால் நண்பர் ஆர்ய ஆனந்த் அவர்களின் மொழிபெயர்ப்பில்
 
இந்த தளத்தை(www.faithfreedom.org) நீக்கிவிடும்படி சில நேரம் என்னை கெஞ்சுகிற, சில நேரம் எனக்கு கட்டளையிடுகிற கோபமான முஸ்லிம்களிடமிருந்து எனக்கு பல மின்னஞ்சல்கள் வருகின்றன. கோரிக்கை வைப்பது, பயமுறுத்துவது ஆகிய இரண்டையும் வன்முறையை நாடும் மன நோயின்(psychopathology) அறிகுறிகள் என்றே நான் கருதுகிறேன்பயமுறுத்துவதை கொண்டு வாதிடுவது (Argumentum ad baculum ), பரிதாபத்தை கொண்டு வாதிடுவது( argumentum ad misericordiam) ஆகிய இரண்டுமே தர்க்க ரீதியில் தவறான வாதங்களாகும். 
இந்த தளத்தை நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, இதை நான் நீக்கிவிடவேண்டும் என்று விரும்பினாலோ, பயமுறுத்துபவராகவோ அல்லது பாதிக்கப்பட்டவராகவோ செயல்படுவதற்கு பதிலாக, முகம்மதுவுக்கு எதிரான என்னுடைய குற்றசாட்டுகளை தர்க்கரீதியாக தவறென்று நிரூபியுங்கள். நான் இந்த தளத்தை நீக்கிவிடுவதுமட்டுமல்ல, இஸ்லாம் உண்மையான மதம் என்று நான் வெளிப்படையாக அறிவித்துவிடுவேன். மேலும் 50,000 அமெரிக்க டாலர்களையும் வழங்குவேன்.  
முஹம்மது இப்படிபட்டவராக  இருந்தார்  என்று நான் குற்றம் சாட்டுகிறேன் :
தன்னை மட்டுமே உயர்வாக எண்ணும் மன நோயாளி(narcissist)
பெண்களை வெறுப்பவர் (misogynist)
கற்பழிப்பவர் (rapist)
குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்பவர்  (pedophile)
அதீத பாலுறவு வெறி கொண்டவர்  (lecher)
கொடூரமாக வேதனை செய்பவர்  (torturer)
கூட்டு கொலை செய்பவர்  (mass murderer)
தனி நபர் வழிபாட்டு தலைவர்  (cult leader)
ஆளை அனுப்பி கொலை செய்பவர்  (assassin)
பயங்கரவாதி (terrorist)
பைத்தியக்கார்ர் (madman)
கொள்ளை அடிப்பவர்  (looter)
நான் பல முஸ்லிம்களோடு விவாதம் புரிந்துள்ளேன். இஸ்லாமை அவர்கள் பாதுகாப்பதை இரண்டு வகைகளாக சுருக்கலாம் :
. முஹம்மதின் குற்றங்களை பற்றிய கதைகளை விவரிக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிராகரிப்பது (உதாரணம் : அடிபணிந்தோர்களின் (Submitters) தலைவரான எடிப் யுக்செல் என்பவருடனான விவாதம்)
. சார்பு அறவியல்(moral relativism) மற்றும் சூழ்நிலைக்கேற்ற ஒழுக்கநெறிகள்(situational ethics), .கா., "அந்த நாட்களில், குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்வது, ஆளை அனுப்பி கொலை செய்வது, கற்பழிப்பு, கொள்ளையிடுவது, படுகொலை செய்வது, பொய்யுரைப்பது, என்பவை எல்லாம் சாதாரண வழக்கங்கள், எனவே மற்ற எல்லோரும் செய்ததையே அவரும் செய்ததால் முஹம்மது குற்றமற்றவர் என்பதே". முகம்மதுவுக்கு கண்டனம் தெரிவிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உரிமை பாராட்டுவதற்காக, தங்க விதியின் ஏற்பு தன்மையையே கேள்விக்குறியாக்கும் அளவுக்குக்ம் முஸ்லிம்கள் செல்கின்றனர். மற்ற வார்த்தைகளில், எது நன்மை, எது தீமை என்பதை யார் கூறமுடியும்? அதை முடிவு செய்வது  இறைவனின் தூதரை சார்ந்தது.(உதாரணம் : யமின் ஜகரியா உடனான விவாதம்).
இஸ்லாமின் அரணாக முஸ்லிம்கள் வைப்பது  முதன்மையான இந்த இரண்டு வாதங்களே. பகுத்தறியும் எந்த நபரும் அவைகள் தர்க்கரீதியாக தவறான வாதங்கள் என்பதை காண்பார்.
இந்த குற்றசாட்டுகள் மறுக்கமுடியாதவை. அவைகள் இஸ்லாமிய மூல ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளன, அந்த வகையில் வாக்குமூலத்தை போன்று அவை  நன்மையானவை என்று நீங்கள் எளிதாக அவற்றை பொய்யென்று நிரூபிக்கமுடியாது. ஒரு குற்றவாளியை, அவன் வாக்குமூலம் கொடுத்தபிறகு, குற்றமற்றவர் என்று நீங்கள் விடுவிக்க முடியாது, புத்திசுவாதீனமின்மை என்று நீங்கள் கோரிக்கை வைத்தால் ஒழிய, இதுதான் என்னுடைய நோக்கமும்.
முஸ்லிம்கள் அடிக்கடி கேட்கின்றனர் : முகம்மதுவுக்கும் இஸ்லாமிற்கும் எதிரான உன்னுடைய குற்றசாட்டுகளை பொய்யென்று  நிரூபிக்கும் முயற்சி வெற்றி அடைந்ததா, இல்லையா என்பதை யார் தீர்ப்பு வழங்குவது? வாசகர்களே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள். ஒரு அணியினர் மற்ற அணியினருக்கு பயப்படாமல் இரண்டு வாதங்களும் முன்வைக்கப்படும்போது, எந்த அணியினர் சரியானவர்கள் என்பதை காண்பது கடினமல்ல. இந்த தளத்தில் விவாதங்களை வெளியிடுவேன். என் எதிரணியினர் அவைகளை எந்த இஸ்லாமிய தளத்திலும் வெளியிடும்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். நேருக்கு நேரான வாதங்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை தயவுகூர்ந்து குறித்துக்கொள்ளுங்கள். விவாதங்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.

மூல ஆசிரியர் : அலி சினா
தமிழாக்கம் : ஆர்ய ஆனந்த்

Facebook Comments

5 கருத்துரைகள்:

Unknown said...

சகோ.ஆ.ஆ,

அலி சினாவின் அனைத்து ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் அப்பொழுதுதான் ஜாகிர் நாயக் போன்றவர்களின் பொய் முகம் உலகுக்குத் தெரிய வரும்.

இனியவன்....

ஆர்ய ஆனந்த் said...

சகோ இனியவன்,

//அலி சினாவின் அனைத்து ஆக்கங்களையும் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் அப்பொழுதுதான் ஜாகிர் நாயக் போன்றவர்களின் பொய் முகம் உலகுக்குத் தெரிய வரும்.//

என்னால் முடிந்த அளவு அலி சினாவின் ஆக்கங்களையும் மற்ற சகோதரர்களின் ஆக்கங்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவேன்.

சகோதரன் said...

பழைய பிரதிகளை எரிப்பது மரபு என்பது இவர்கள் கூறும் மற்றொரு பதில்.
அங்கங்கு உள்ள நாடுகளுக்கு இஸ்லாம் பரவ ஆரம்பித்தவுடன் தப்பும்தவறுமாக குரானை ஓத ஆரம்பித்து விளக்கம் தவறாக கொடுத்து வந்ததனால் குரானை ஒன்று படுத்தி தொகுக்கும் பொறுப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது! இதற்கு எந்தவிதமான வஹியோ,கட்டளையோ யாரிடமிருந்தும் வரவில்லை! இவர்களாகவே அன்னாருக்கு செய்யும் தொண்டாக நினைத்து உருவாக்கியதுதான் இந்த குரான், இதன் ஆசிரியர் உதுமான் மட்டுமல்ல நிறையபேர் என்பதும் நாம் அறிந்த ஒன்று!
இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது இதுதான்!
குரானை தொகுக்கவே பதினைந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கிறுக்கு மார்க்கவாதிகள் பதினைந்து வருடம் என்பதை மிகக்குறைந்த கால அளவாக நினைத்து பைபிள் தொகுக்க ஆகிய கால அளவை வைத்துகொண்டுசிலாகிக்கிறார்கள். தப்பும் தவறுமாக ஓதி,விளங்கி பின்பற்றிய மக்கள் பதினைந்து வருடங்களில் எத்தனையோ!II இடைப்பட்ட 15 வருடத்தில் வேதம் கொடுக்கப்பட்ட அரபுலக மக்களுக்கு,சரியாக சென்றடையாத அஜமிகளுக்கு அல்லா எதை வைத்து தீர்ப்பளிப்பான்?
அதுவரை குரானை பின்பற்றாத விளங்காத (இன்றும் அப்படித்தானே) மக்களுக்கு என்ன தீர்ப்பு என்பதை அல்லாவே அறிவான் என்றும் கூறி மழுப்புவார்கள்!
காட்டுவாசிகளுக்கும் ,குரான் என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கும் ஓரிறை கொள்கையை எத்தி வைக்க இயலாத இறைவன் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க,இறைவனின் சொந்த மண்ணிலேயே (!) அவனுடைய நாவலை எடுத்துகூற இதனை வருடங்களா? என்பதை நினைக்கும்போது இறைவனின் முடக்குவாததை நினைத்து பரிதாபப்படவேண்டும்!

Anonymous said...

அன்பின் ஆ ஆ. அவர்களே தயவு செய்து அளிசினவுடைய கட்டுரைகளை மொழிபேர்த்து முஸ்லிம்களுக்கு பதில்அளிக்க உதவி செய்யவும் நன்றி
-அரோன் கண்ணன் குமாரசாமி

Dr.Anburaj said...

முஹம்மது இறந்த பின் அவரது மனைவியா்களின் வாழ்க்கை வரலாற்றை எழழுத வேண்டுகின்றேன். அவரதுமருமகன்அலி அவரது குடும்பததாரும் படுகொலை செய்யப்பட்ட வரலாற்றையும் அறந்து கொள்ள விரும்புகின்றேன்