Monday 11 November 2013

பூமராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-4

பூமராங் Vs தஜ்ஜால்  - விவாதம் பகுதி-4

           
Aravind Swaamy :
முதலில் சுகத்தை எதிர்பார்க்கும் கள்ள உறவுக்கும் பணத்தை எதிர்பார்க்கும் விபச்சாரத்தையும் பிரித்தறியுங்கள்... பணி நேரம் தொடங்குகிறது... மாலை சந்திக்கலாம்!!

Kulasai Voice:
 Aravind Swaamy, முதலில் சுகத்தை எதிர்பார்க்கும்கள்ள உறவுக்கும் பணத்தை எதிர்பார்க்கும்விபச்சாரத்தையும் பிரித்தறியுங்கள்... பணி நேரம் தொடங்குகிறது...மாலை சந்திக்கலாம்!!////பணம் ஒரு தேவை என்றால்,சுகமும் ஒரு தேவை தானே!!!பணத்திற்காக செய்யும் கொலையையும்,கௌரவத்திற்காக செய்யும் கௌரவ கொலைகளையும் வேறுபடுத்த முடியுமா???நன்றி.தங்களின் விருப்பப்படியே மாலை சந்திக்கலாம்.


Aravind Swaamy:
கற்பழிப்பும் பணத்துக்கான விபச்சாரமும் சுகத்துக்கான விபச்சாரமும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் உடலுறவு!! மற்றபடி ஒவ்வொன்றும் அதில் பங்குபெறும் பங்காளி ஆக்கப்படும் பெண்ணின் நிலையில் இது மூன்றுக்குமிடையில் வேறுபாடுகள் உண்டு. சுகத்துக்காக நடத்தப்படும் கள்ள உறவில் ஆண் பெண் இருவருக்கும் சம பங்கில் குற்றம் உண்டு! பணத்துக்காக நடத்தப்படும் விபச்சாரத்தில் உயிர் வாழ வேறு வழியன்றி தன் உடலை விற்கும் பெண் கையில் பணம் இருக்கும் திமிரில் பெண்ணை நாடும் அந்த ஆணை விட குறைவான அளவே கண்ணியம் குறைந்தவளாக இருக்கிறாள்.. ஆனால் ஒரு ஆணால் வன்புணர்ச்ணிக்குட்படுத்தப்படும் பெண்ணோ எந்த தவறும் இழைக்காத அப்பாவியாக இருக்கிறாள்...
சுகத் தேவையும் பணத் தேவையும் ஒன்றென்றால் இந்த விவாதமே அர்த்தமற்றதாகி விடும்... தீவிர தாராள வாதிகள் (hardcore liberals) இதையே கூறுகிறார்கள்... எப்படி வீட்டில் மட்டுமன்றி வெளியிலும் நாம் உண்ணுகிறோமோ, அதே போல் நாம் வெளியிலும் உடலுறவு கொள்ளலாம்... இதில் குற்றவுணர்ச்சிக்கு இடமில்லை என்கிறார்கள்!! காமமும் பசியும் ஒன்றென்கிறார்கள்....

Kulasai Voice:
 சுவாமிஜி!!அவர்களே!!தோழர் தஜ்ஜால் அவர்கள் வன்புணர்ச்சிக்கு வரைவிலக்கணமாக ஒரு 5 விதிமுறைகளை சொல்லி இருக்கிறார்.அதில் முதல் இரண்டு விதிமுறைகள் அதாவது சம்மதம் மற்றும் விருப்பம் தொடர்பான நம் சந்தேகங்களை விளக்க சொன்னோம்.அதை அருமையான முறையில் நீங்கள் விளக்கிவிட்டீர்கள்.அது தான் சரியான விளக்கமும் கூட!!! ஆனால் பிறகு அந்த விளக்கத்திற்கு ஒரு விளக்கம் கொடுப்பதாக நினைத்து,உங்களை நீங்களே குழப்பி கொள்(ல்)றீர்கள்!!!
///உங்களின் அணுகூலத்தின் படி பெண்ணுக்கு பங்கு பங்களிப்பு குறைவாக இருப்பதால் விபச்சாரம் சரி என்று ஆகிவிடுமா??வாழ வழியின்றி விபச்சாரம் செய்கிறாள் என்ற கருத்தை நியாயப்படுத்தி பார்த்தால்,திருமணம் செய்ய வழியில்லாத ஒருவன் வன்புணர்ச்சி செய்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா??
///சுகத் தேவையும் பணத் தேவையும் ஒன்றென்றால் இந்த விவாதமே அர்த்தமற்றதாகி விடும்..///இரண்டும் வேறு வேறு என்றால் பணத்திற்க்காக தவறு செய்ததற்கும்,சுகத்திற்காக தவறு செய்ததற்கும் தண்டனை வேறு வேறு தருவார்களா??
           
Aravind Swaamy:
சுகத் தேவையும் பணத் தேவையும் ஒன்றென்றால் இந்த விவாதமே அர்த்தமற்றதாகி விடும்... தீவிர தாராள வாதிகள் (hardcore liberals) இதையே கூறுகிறார்கள்... எப்படி வீட்டில் மட்டுமன்றி வெளியிலும் நாம் உண்ணுகிறோமோ, அதே போல் நாம் வெளியிலும் உடலுறவு கொள்ளலாம்... இதில் குற்றவுணர்ச்சிக்கு இடமில்லை என்கிறார்கள்!! காமமும் பசியும் ஒன்றென்கிறார்கள்....நான் எதையும் நியாயப்படுத்தவில்லை... பணத்துக்கான விபச்சாரம் என்னும் நிகழ்வில் கற்பழிப்பு என்னும் நிகழ்வில் நடக்கும் தனி நபர் உரிமை மீறல் இல்லை... வன்முறை இல்லை...
நிச்சயமாக அப்படித் தான் இருக்கிறது... பணத்துக்கான விபச்சாரத்தைவிட சுகத்துக்கான கள்ளத்தொடர்புகள் ஒரு படி அதிக கேவலமானதாகவே எண்ணப்படுகிறது... தண்டனைகள் வழங்கித்தான் ஆக வேண்டுமென்றால் முன்னதற்குக் கொஞ்சம் குறைவாகவே நாகரிக சமுதாயம் வழங்க வேண்டும்!!
லிபரல்கள் கூட கற்பழிப்பை எதிர்க்கவே செய்வார்கள்...

Aravind Swaamy: கற்பழிப்பு கொடுமையானது. தனிமனித அளவில் அது ஒரு பெண்ணின் உடல் மீதும் சுயமரியாதையின் மீதும் நிகழ்த்தப்படும் வெறித்தனமான தாக்குதல் அது....கள்ள உறவும் விபச்சாரமும் பொதுச் சமுதாயம் நிறுவியிருக்கும் விழுமியங்களுக்கு எதிரானது... இவற்றுக்குள் இருக்கும் வித்தியாசங்களை நன்கு அறிந்திருந்தும் வாதத்துக்காக தெரியாதது போல் நடிக்கிறீர்கள்!!
           
Mohamed Saleem:
 தஜ்ஜால் அழிப்பவன் விவாதத்தின் அடிப்படை கேள்விக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்பதை இஸ்லாமிய நண்பர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மாலையில் /////////////மிண்டும் ஓரு முறை கேட்கிறேன் இஸ்லாமிய அடிப்படை கொள்கை என்ன முதலில் இஸ்லாத்தை சிரிது அளவு படித்தது விட்டு வந்தது விவாதிக்கவும்
           
Mohamed Saleem :
///////சலீம் கவனிக்க வேண்டும். நாம் பேசிக்கொண்டிருப்பது ///////அங்கே கூறி இருப்பது உங்களுக்கு புரியவில்லை சற்று தெளிவுபடுத்துகிறேன் பெண் என்பவள் பழ்கலத்தில் ஓரு போதை பொருள்கள் போன்று பன்படுத்தியது இந்த அண்ணன் வர்க்கம் அதாவது ஓரு பெண்ணை யார் வேண்டுமானாலும் விபசாரத்துக்கு அழைக்களை (பெண்)அவர்கள் விருப்பம் இன்றி அந்தகாலத்தில் இதை தனே இந்த சுரா உணர்த்துகிறது ..இது போல் பெண்கள் யாரும் ஆவர்கள் விருப்பம் இன்றி புணர்வது தவறு என்று எண்ணி பல இடங்களில் பெண்களை குரான் பாதுகாத்து வுள்ளது பெண்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளது ???இப்போ உங்கள் கேள்ளிவிக்கு பதில் இது ....முஸ்லிம்கள்..குரான் ஹதீஸ்கள். நபி கட்டிய வழியின் பின்னால் வழகுடியவர்கள் அந்தகாலத்தில் ???இப்போ உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்தத் ??இல்லை இன்னும் வில்லகம் தேவை??
           
Mohamed Saleem:
 Aravind Swaamy அண்ணே என்ன சொல்வரிக்க கொஞ்சம் தெளிவா சொல்லுனே ...ஓரு இடத்தில் பெண் அனுமதியின்று புணர்வது கற்பழிப்புக்கு சமம் சொன்னிர் அடுதவரிரியில் விபசாரம் வெறு கற்பழிப்பு வெறு என்று குறுகிர்???
           
Aravind Swaamy :
தம்பி, மறுபடியும் படித்துப் பார்!! புரியும்.... புரியலைனா போய் ஹோம்ஒர்க் பண்ணு!!!

Mohamed Saleem :
Aravind Swaamy, இதில் புரிவதற்கு ஒன்றுமே இல்லை விபசாரம் எண்பது ,,கற்பழிப்பு என்பதும் ஒன்று .நான்கு நபர்கள் ஓரு பெண்ணை வலுக்கடையமாக வன்புணர்ச்சி செய்தார்கள் என்றால் அது விபச்சாரமே ...இதில் மனித உரிமை மீறல் இருந்தாலும் பெண் என்பவள் பதிக்க பட்டாலும் இதும் ஓரு வகையான விபச்ரமே
//////ஹோம் வொர்க அப்படியா கொஞ்சம் இருந்தா கொடுங்க எனக்கு ரொம்ம பிடிக்கும் ஹோம் வொர்க் ,,,,,,,,,,சும்மா தமசுனே தமாசு
           
Aravind Swaamy:
ஒரு மனைவி விருப்பமின்றி தன் கணவனுடைய ஆசைக்காக உறவு கொள்கிறாள் என்றால் அது அவன் தரும் பாதுகாப்புக்காகவும் அவன் அளிக்கும் உணவு உடை இருப்மிடத்துக்காபவும் அவள் செய்யும் விபச்சாரம்!!!
அதே இடத்தில் ஒரு கணவன் தனக்கு தன் மனைவி மேல் இந்த சமுதாயம் திருமணம் என்ற அமைப்பின் மூலம் அளித்த அதிகாரத்தால் அவளுடைய விருப்பமின்றி கொள்ளும் உறவு வன்புணர்ச்சி தான்....
           
Mohamed Saleem:
நீங்கள் சொன்னதில் எது ??????/கற்ப்பு & விபசாரம் இதில் எது விப்பச்சரம் உங்களுக்கு புரிகிறதா ?????Aravind Swaamy ??  Aravind Swaamy //////பெண்கள் முழு சம்மதத்துடன் புணர்வது மட்டமே விபசாரம் இல்லை ?இல்லைய னே ????அப்போ காசுக்கும் & சம்மதம் இல்லாத திருமணம் ......நான்கு நபர்கள் வர்புணர்ச்சி இது அனனத்தும் கற்பழிப்பு விபச்ரமே தனே அண்ணா ?
           
Aravind Swaamy:
வன்புணர்ச்சியும் விபச்சாரமும் ஒன்று என்பதை பீஜேயைப் போன்ற கடைந்தெடுத்த மதவாதியால் மூளைச்சலவை செய்யப்பட்ட நீ நம்பலாம்... என்னை நம்பச் சொல்லாதே!!!
தம்பி ஒன்று கேட்கிறேன் ... கோபம் படாதே!! உன் தங்கை நாளைக்கு நான்கு பேரால் வன்புணர்ச்சி செய்யப்படுகிறாள் என்று வைத்துக்கொள்!! அவளை உன் பீஜே அண்ணன் விபச்சாரம் செய்த விபச்சாரி என்று உன்னை அழைக்க சொன்னால் சொல்வாயா? கசையடி கொடுக்க சொன்னால் கொடுப்பாயா??

Mohamed Saleem:
Aravind Swaamy /////??எதற்கு கோவம் தனிமனித வெறுப்பு உங்கள் விளங்குதலை .உங்களுக்கு விலக்கி கூறினால் ஏன் கோவம்
           
Aravind Swaamy:
குஜராத்தில் இந்து வெறியர்களால் வன்புணர்ச்சிக்குட்பட்ட முசுலிம் பெண்கள் விபச்சாரம் செய்த விபச்சாரிகளா? வேண்டுமானால் அப்படி கற்பழிக்கப்பட்ட முசுலிம் பெண்களுக்கி இசுலாமிய ஷரியாப் படி மரண தண்டனையோ கசையடியோ கொடுக்கலாமா??
 நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்! உன் தங்கையை என்னவென்று அழைப்பாய் நீ?? மதத்துக்காக மனிதனாக சிந்திப்பதைக் கூடவா மறப்பாய்??
           
Mohamed Saleem :
Aravind Swaamy குஜராத்தில் இந்து வெறியர்களால் வன்புணர்ச்சிக்குட்பட்ட முசுலிம் பெண்கள் விபச்சாரம் செய்த விபச்சாரிகளா? /////////விபசாரம் என்பதும் கற்பழிப்பு என்பதும் ஒன்ருத்னே இங்கு நீங்கள் சொவ்லதும் .....குஜராத்தில் .ஆண்கள் விபச்ரதுக்கு துணை சென்று உள்ளார்கள் அதாவது உங்கள் விளக்கம் வேண்டும் என்றால் மனித உரிமை மீறல் இப்போ னிகள் கூறுவது என்ன ?
தங்கையை தங்கை என்றே அழைப்போம்


Mohamed Saleem:
 ஷரியாப் படி மரண தண்டனையோ கசையடியோ கொடுக்கலாமா??////இங்கே ஆண்கள் தனே தவறு செய்து உள்ளார்கள் அதாவது விபசாரம் செய்துவுள்ளர்கள் அப்படி இருக்கா எப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தண்டனை Aravind Swaamy ???
           
Aravind Swaamy :
கற்பழிப்பும் விபச்சாரமும் ஒன்று இல்லை என்பதைத் தான் இவ்வளவு நேரம் உனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்... நீதான் கற்பழிப்பதும் விபச்சாரம் என்கிறாய்! கற்பழிக்கப்படும் பெண் விபச்சாரம் செய்தவளில்லை... ஆனால் கற்பழித்தவன் விபச்சாரம் செய்கிறான்... இந்த கருத்து ஏற்புடையது தான்... ஆனால் அப்படி குரானில் இருக்கிறதா? ஹதீஸில் இருக்கிறதா?

Mohamed Saleem:
Aravind Swaamy கற்பழிப்பும்////என்பது பத்திக்கப்டவரை குறிக்கும் ....கற்பழிப்பு செய்தவர்களை விபச்ரம் செய்தவர்கள் என்பதை தனே குறிக்கும் ...இன்னும் வில்லன்க வில்லைய ?
           
Aravind Swaamy :
குரானிலும் ஹதீஸிலும் கற்பழிக்கப் பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க கற்பழித்தவனுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்றிருந்தால் காட்டவும்!!
           
Mohamed Ashik :
விபச்சாரத்துக்கு... அதில் ஈடுபட்ட ஆண் & பெண் இருவருக்கும் தண்டனை உண்டு.
('கற்பழிப்பு' எனப்படும்) பாலியல் வன்புணர்வுக்கு... யார் அதில் விருப்பம் காட்டி பலவந்தமாக ஈடுபடாரோ அவர் ஒருவருக்கு மட்டுமே தண்டனை. (இங்கே... உண்மையில் கற்பை இழந்த அந்த ஆணுக்கு தண்டனை. பெண் எதிர்த்ததால்... அவர் நிரபராதிதான்..!)
           
Mohamed Saleem:
பெண்கள் விருப்பம் இல்லாமல் புணர்வது கூடாது என்பது குரான் கூறுவது புரியவில்லை ????விவாதம் செய்யும் முன் சிந்தித்து பதில் தாருங்கள் தெளிவாக சொல்கிறது அனுமதி இன்றி திருமணம் புரிவது தவறு
           
Aravind Swaamy:
நீ கூறும் கருத்துக்கு ஆதாரங்கள் காட்டு!!
இப்படி கூறும் ஒரு குரான் வசனம், ஒரு ஹதீஸ் காட்டுங்கள்!!!
           
Mohamed Saleem:
 Aravind Swaamy////4::19...குரான் வசனமே பொதுமே அதுவே அதாரம் தான் ....மேலும் மேலே சில்ல வாசங்கள் உங்களுக்கு விளக்கம் கொடுக்க பட்டுள்ளது
பலவந்தமாக திருமணம் கூடாது... பலவந்தமாக உடலுறவு கூடாது... உண்மைதான்... அதற்கு வசனமுள்ளது... அப்படி ஈடுபட்டவருக்கு என்ன தண்டனை??
           
Mohamed Saleem https://www.facebook.com/photo.php?fbid=183635965112564&set=a.122698857872942.23877.122668927875935&type=1&theater

Aravind Swaamy:
மன்னிக்கவும்... 4:19இல் தண்டனை இல்லை... அதற்கும் விபச்சாரத்துக்கும் முடிச்சுப் போட்டு தான் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.. அதனால் தான் ஷரியா சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை தருகிறார்கள்... அந்த தண்டனைக்குப் பயந்து தான் கற்பழிக்கப்படும் பெண்கள் புகார் செய்வதில்லை... கற்பழிப்புகள் பதிவாவதில்லை... புள்ளிவிவரங்கள் ஷரியா சட்டத்தால் மட்டுமே கற்பழிப்பைத் தடுக்க முடியும் என்னும் மாயையை உருவாக்குகின்றன!!
 எனக்குத் தெரியாது.. கூறுங்கள்... இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஷரியா சட்டம் எது??
           
Mohamed Saleem :
2724. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். 'என்னை(ப் பேச) அனுமதியுங்கள்" என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், 'சொல்" என்று கூறினார்கள. அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்" (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
Volume  Book :54

Mohamed Saleem:
Aravind Swaamy/////உங்க இறை இல்ல நம்பிக்கை சற்று ஒதுக்கி விட்டு சிந்திக்கவும் 4:19 குறைபட்டு இருப்பது பெண் அனுமதி இல்லாமல் ஏதும் செய்ய கூடாது என்பது புரிகிறதா ..?அப்படி பெண் விருப்பம் இல்லாமல் புனர்வதோ ..திருமணம் செய்வதோ தவறு அதற்க்கு என்ன அர்த்ரம் ??

Mohamed Ashik :
//பலவந்தமாக திருமணம் கூடாது... பலவந்தமாக உடலுறவு கூடாது... உண்மைதான்... அதற்கு வசனமுள்ளது... //----நன்றி...!
"பலவந்தமாக" என்பதால்... மேற்கண்டவை "பாலியல் வன்புணர்வு" என்ற விபச்சாரம்..! திருமணம் அல்லாத உறவான ''பாலியல் புணர்வு விபச்சாரம்'' அல்ல.
//அப்படி ஈடுபட்டவருக்கு என்ன தண்டனை??//
அதில் "பலவந்தமாக விபச்சாரம்" என்பதால்... பாவம் ஒருவருக்கு மட்டுமே..! ஏனெனில் பெண் தான் விருப்பப்பட்டேன் என்று ஒப்புக்கொள்ள மாட்டார். எனவே... ஒருவருக்கு மட்டுமே தண்டனை..!
அவரு மெரிட் என்றால்... மரண தணடனை. அன்மேரிட் என்றால்... நூறு கசையடி..!
இதில் என்ன குழப்பம்... சகோ.அரவிந்த் சாமி..!
"கற்பழிப்பு" என்பது தப்பான வார்த்தை..! அப்படி ஒரு மதிகெட்ட வார்த்தையை நுட்பமான அறிவுள்ள இஸ்லாம் கூறாது..!

Aravind Swaamy :
மேலே தரப்பட்ட ஹதீஸ் இருவரும் மனமுவந்து கொண்ட கள்ளுறவுக்கான தண்டனை பற்றியது!! வன்புணர்ச்சிக்கானது அல்ல...

Mohamed Ashik:
ஒரு பெண்ணை பலவந்தமாக ஒரு ஆண் பாலியல் வன்புணர்வு செய்கிறான் எனில்... அந்த பெண் அவனை கொலையும் செய்யலாம். அது அப்பெண்ணுக்கு ஜிஹாத். அந்த ஜிஹாத் தோற்கடிக்கப்பட்டு அவன் பலசாலியாக இருந்து தனது காரியத்தை பெண் விருபத்துக்கு விரோதமான வகையில் அவன் நிறைவேற்றி விட்டால்.. அவனுக்கு மட்டுமே விபச்சாரத்துக்கு உரிய தண்டனை. காரணம் அப்பெண் விபச்சாரத்தில் ஈடுபட வில்லை. இதை....
//நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால்//
என்பதில் இருந்து விளங்கலாம். ஒப்புக்கொள்ளா விட்டால்... அது ஒரு நபர் விபச்சாரம். ஒப்புக்கொண்டால் இருநபர் விபச்சாரம்.

Mohamed Saleem:
Aravind Swaamy ///அதற்க்கு மேலே ஓரு ஹதீஸ் பதிந்து உள்ளார்கள் அத்தையும் கொஞ்சம் பார்க்கவும்

Aravind Swaamy :
இதெல்லாம் ஏன் இறைவன் வழங்கிய குரானில் தெளிவாக இல்லை... ஏன் பிய்த்தும் கோர்த்தும் பொருள் கொள்ளவேண்டியுள்ளது?
இப்படி பிய்த்தும் கோர்த்தும் பொருள் கொள்வதால் தான் குழப்பங்கள் நிகழ்கின்றன... இறைவன் குழப்பங்களைத் தவிர்த்திருக்க வேண்டும்!!

Mohamed Ashik:
சகோ.அரவிந்த் சுவாமி.
அறிவுடையோருக்கு இஸ்லாம் எளிதாகவே புரிகிறது.முஸ்லிம்களுக்கு குர்ஆன் ஹதீஸ் இரண்டுமே இஸ்லாம். இரண்டுமே அல்லாஹ்வின் கட்டளைகள்தான். ஒன்றை மட்டும் பின்பற்றுவேன் என்று கூறினால் அவன் முஸ்லிமாக வாழ் முடியாது.
உங்களுக்கு இது கண்ணில் படவில்லையா...?
https://m.ak.fbcdn.net/...

Aravind Swaamy:
ஹதீஸ்களையும் கூட நீங்கள் கூறுவதைப் போல் பிய்த்துப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது!!

Mohamed Ashik:
சகோ.அர்விந்த் சுவாமி, முஸ்லிம்களுக்கு எந்த குழப்பமும் வரவில்லை. குழப்பம் உங்களுக்குத்தான்...! உங்களுக்கு அதை போக்கி, சத்தியமார்க்கத்தை புரியவைக்கவும்... நேர்வழி காட்டவும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..!

Mohamed Saleem:
Aravind Swaamy குரானும் ஹதீஸ்யும் எர்கதவன் முஸ்லிம் இல்லை புரிந்து கொள்ளுங்கள்

Aravind Swaamy:
இவ்வளவு தெளிவான ஹதீஸ் இருக்கும் போதும் இசுலாமிய நாடுகளுக்குக் குழப்பம் ஏன்?
 பிறகு ஏன் அந்நாடுகளில் வன்புணர்ச்சிக்குள்ளான பெண்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும்??

Mohamed Saleem:
Aravind Swaamy தெளிவான ஹதீஸ்கள் உள்ளன என்று எர்மைக்கு நன்றி ...

Mohamed Ashik:
 //இவ்வளவு தெளிவான ஹதீஸ் இருக்கும் போதும் இசுலாமிய நாடுகளுக்குக் குழப்பம் ஏன்?//
அந்த பெண்ணும் விருப்பம் கொண்டாள் என்று பாலியல் வல்லுறவு கொண்டு மாட்டியவன் வாதாடுவான். அதற்கு பல ஆதாரங்களை வைப்பான். அந்த பெண் தன்னோடு தனியே ஒரு இடத்துக்கு வந்தாள் என்று ப்ரூவ் பண்ணுவான். தன்னோடு தனியே ஊர் சுத்தினாள் என்று ப்ரூவ் பண்ணுவான். பேஸ்புக் சாட்டிங்கில் நான் போட்ட செக்ஸி கமெண்ட்ஸ் க்கு லைக் அடித்தாள் என்று ப்ரூவ் பண்ணுவான். இப்போது நீதிபதி உணர்வார். இவளும் உடந்தை என்று..! அப்படியான பெண்களுக்கு தண்டனை வரத்தான் செய்யும். இப்படியான பெண்களுக்கு இஸ்லாம் ஏற்கனவே ஹிஜாப் மூலம் தடை போட்டுள்ளது. அதை மீறிய போது... அதற்குரிய 100 கசை அடிகளை பெண்ணும் பெற்றாக வேண்டும்.

Aravind Swaamy:
நான் ஹதீஸ்களைப் படித்தவன் கிடையாது... நீங்கள் படித்தவர்... அதைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்..

Mohamed Ashik :
இன்றய உலக சட்டங்களை விட எல்லாம் இஸ்லாம் மிக தெளிவாகவும் மிக மிக நடுநிலையாகவும் உள்ளது என்பதை அறியுங்கள். எந்த பெண்ணும் ஒரு ஆணை விபச்சாரத்துக்கு கூப்பிட்டு... பின்னர் அதை கற்பழிப்பு வழக்காக மாத்தி அவனுக்கு தண்டனை வாங்கி தந்து விட இயலாது... இஸ்லாத்தில்..! அறிக..!

Aravind Swaamy:
இங்கு தான் பிரச்சனையே!!! தன் மாற்றாந்தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு கசையடி தண்டனை எப்படி நியாயப்படுத்தப் படும்??

Aravind Swaamy :
ஆனால் கற்பழித்த ஆண் பெண் தன்னை அழைத்தாள் என்று காட்டி கசையடி வாங்க வைக்கலாம்!! இதற்கு பயந்துதான் கற்பழிப்புகள் பதிவாவதில்லையோ!!

Mohamed Ashik :
மீண்டும் சொல்கிறேன்... இஸ்லாமிய சட்டங்களை பற்றி நாம் விவாதிக்கலாம். அதை வைத்து தப்பாக தீர்ப்பு அளித்தோருக்கு எதிராக அந்த நாட்டுக்கு சென்று நீங்கள் மேல்முறையீடு செய்யுங்கள்.அதிலும் நீதி இல்லை என்று ஆனால்... அல்லாஹ் மறுமையில் அந்த நீதிபதிக்கு அவர் தவறான நீதி வழங்கி இருந்திருந்தால் மாபெரும் தண்டனை வழங்குவான். அநீதியில் பாதிக்கப்பட்ட நபருக்கு மாபெரும் நன்மைகளை/ பாவத்தை நீக்கி அருள்புரிவான். ஒருவருக்கு மறுமை நம்பிக்கை இல்லையேல்... அவருக்கு இஸ்லாம் புரியாது. அதை அவரால் சரிகானவும் இயலாது. அதை பின்பற்றவும் இயலாது.

Aravind Swaamy:
சரி! நாளை சந்திப்போம்! இனிய இரவாகுக!!

Mohamed Ashik:
//இதற்கு பயந்துதான் கற்பழிப்புகள் பதிவாவதில்லையோ!!//---தவறு தன்பக்கம் இல்லை என்றால்.... பதிவாகும். அப்படி பதிவான ஒரு வழக்குதான் இது...https://m.ak.fbcdn.net/...


Mohamed Saleem:
Aravind Swaamy/////////இதோ இந்த ஹதீஸ் உங்கள் குழப்பதை திர்த்து விடும் என்று நம்புகிறேன் விபச்ரம் புரிந்தவனுக்கு தண்டனை பிறர மிண்டும் அந்த தவறை செய்மாமல் இருக்க்வேவே மக்கள் மத்தியில் கள் எறிதல் ஆவன் ஏற்க மாறுதல் மரணதன்ன்டனை ///////////5270. ஜாபிர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது, 'அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து, 'நான் விபசாரம் செய்துவிட்டேன்' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பினார்கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து, 'உனக்கு என்ன பைத்தியமா?' என்றும், 'உனக்குத் திருமணம் ஆம்விட்டதா?' என்றும் கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவரின் மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாதைகள் நிறைந்த (அல்ஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.
Volume :6 Book :68//////////

தஜ்ஜால் அழிப்பவன்:
நமது இஸ்லாமிய நண்பர்கள் இன்னும் விவாதத்தின் மையக்கேள்வியைப் படிக்கவில்லை என்றே நினைக்கிறேன். அவர்களுக்காக மீண்டும் பதிகிறேன், //கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///

பூம ராங்:
 தஜ்ஜால் அழிப்பவன் // இன்னும் நிறுத்தலையா ..உங்க அக்கபோரை ..!
பூம ராங் அனைத்து சகோதரர்களும் மன்னிக்கவும் ..ஒரு அவசர வேலையால் .. நேற்றும் அதற்கு முன் தினமும் விடுப்பு எடுக்க வேண்டியதாகி விட்டது..!

தொடரும்...

Facebook Comments

2 கருத்துரைகள்:

Ant said...

// http://www.salaf.co/article_alquran.php?id=3// விபச்சாரத்திற்கு தரும் விளக்கம் இது: //ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி தனது மனைவியல்லாத வேறொரு பெண்ணுடன் எவ்வித உரிமையும் இல்லாத நிலையில் உறவு கொள்வது விபச்சாரம் என்று சொல்லப்படும். // இதற்குதான் 1. நூறு கசையடிகள் அடித்தல். 2. ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படல். அல்லது மரணிக்கும் வரை கல்லெரிய வேண்டும்.// இங்கு எந்த இடத்திலும் கற்பழிப்பை பற்றி குறிப்பிடப்படவில்லை தண்டனையும் தரப்படவில்லை. மேலும் முத்தா திருமணத்திற்கும் தற்கால விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? சிந்திப்பார்களா?

நாட்டுவேங்கை said...

விபச்சாரமும் கற்பழிப்பும் ஒன்றுதான்...
விபச்சாரமும் கற்பழிப்பும் ஒன்றுதான்...
விபச்சாரமும் கற்பழிப்பும் ஒன்றுதான்...
விபச்சாரமும் கற்பழிப்பும் ஒன்றுதான்...

ஆத்தா வையும் காசு கொடு....
அய்யய்யோ சப்பானி அழத்தொடங்கிட்டான்.... அரவிந்தசாமி லூசுகளிடம் மாட்டிக்கிட்டார்....பாவம்