Friday 19 December 2014

குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்!-3



“அஸ்ஸலாமு அலைக்கும்... “

“சகோதர சகோதரிகளே கேள்வி-பதில் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் கேள்வி கேட்க முடியும். ஒருத்தர் ஒரு கேள்விமட்டும் கேட்கலாம். துணைக் கேள்விகளுக்கு அனுமதி கிடையாது” என்று உதவியாளர் ஒருவர் விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

“மைக்க... கொஞ்சம் ஆஃப் பண்ணச் சொல்லு...” என்றேன்.

‘கிளிக்’ என்று மைக் ஆஃப் செய்யப்பட்டது

”ஏம்ப்பா... இந்துக்களுக்கும், கிறிஸ்டியன்களுக்கும் எத்தனை டோக்கன் கொடுத்திருக்கீங்க, எல்லாம் கரெக்டாதானே செஞ்சிருக்கீங்க?” இது நான்.

“மொத்தம் 10 டொக்கன்தான் குடுத்திருக்கோம், மஃரிப் தொழுகை இருக்க்றதால சீக்கிரமாக முடிச்சிறலாம்.  எல்லாம் நம்ப ஆளுகதான்ணே... விவகாரமா ஒன்னும் இருக்காது...!”

“சரி... மைக்க ஆன் பண்ணு ஆரம்பிக்கலாம்!”

“அஸ்ஸலாமு அலைக்கும்!  சகோதர சகோதரிகளே. இந்த பயான் சம்பந்தமான உங்க கேள்விகள கேட்கலாம்!”

கூட்டம் சிறிது சலசலத்து பின் அமைதியானது.

“எல்லோருக்கும் வணக்கம்! என் பேர் பிச்சாண்டி. குர்ஆன்ல நிறைய அறிவியல் முன்னறிவிப்புகள் இருக்குன்னு சொலறாங்க. அதையெல்லாம் எங்கள மாதிரி மாற்று மதத்த சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?”

“சகோதரர் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்னா... குர்ஆன்ல நிறைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்குது அத மாற்று மதத்தைச் சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேட்கிறாரு... அது ரொம்ப சிம்பிளானது... நீங்க எங்க இணையதளத்தில இலவசமாகவே படிச்சி தெரிஞ்சிக்கலாம் அல்லது நாங்க வெளியிட்டிருக்கிற (டுபாக்)குர்ஆனும் அறிவியலும்கிற புடிச்சு தெரிஞ்சிக்கலாம். சகோதரர் பிச்சாண்டிக்கு  அந்த புத்தகத்தோட பிரதி ஒன்னு கொடுத்திருங்க..."



“அஸ்ஸலாமு அலைக்கும்! என் பேர் ராபியா. உங்க பயான் ரொம்ப சிறப்பா இருந்திச்சு...அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுக்க துஆ செய்யறேன்...”

“மைக்க சரியா வைச்சு பேசுங்க...!”

“வேற கிரகத்தில உயிரினங்கள் இருக்கும்னு சொன்னீங்களே... அங்கே இருக்கிறவங்களும் அல்லாஹ்வைத்தான் வணங்குவாங்களா? அவங்களுக்கும் இதே குர்ஆன் தானா?”


“வேற்று கிரகத்திலிருக்கிறவங்களுக்கும் அல்லாஹ்வை வணங்குவாங்களா, ஆவங்களுக்கும் இதே குர்ஆன்தானான்னு சகோதரி ராபியாகேட்கறாங்க... அகில உலகத்திற்கும் ரஹ்மத்தாக குர்ஆனை அருளியிருப்பதாக அல்லாஹ் சொல்கிறான். ’கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்...’ என்று குர் ஆன் 10:66 சொல்கிறது. எனவே வேறகிரகங்களில் உயிரினங்கள் இருந்தால் அவர்களுக்கும் இதுதான் வழிகாட்டி. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். இதன் அடிப்படையில பார்த்தோம்னா அவர்களுக்கும் அல்லாஹ் மட்டுமே இறைவனாக இருக்க முடியும்!”



”அஸ்ஸலாமு அலைக்கும், என் பேர் அல்லாஹ் பிச்சை, நான் குஞ்சாண்டியூர்ல இருந்து வர்றேன். குர்ஆன்ல நவீன அறியலைப்பற்றி சொல்லியிருக்குனு நீங்க கொடுத்த விளக்கம் ரொம்ப ஸூப்பரா இருந்துச்சு...”

“ரொம்ப சந்தோஷம் நீங்க கேட்க விரும்பறதசீக்கிறமாக கேளுங்க நிறைய பேர் கேள்விகேட்க காத்துக்கிட்டிருக்காங்க...”

”சரி... வானத்தில உயிர்னங்கள் இருக்கிறத குர்ஆன் குறிப்பிடுறதா சொன்னீங்க, நம்ம ரஸூல்ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க மிஹ்ராஜ் பயணம் போனப்ப பார்த்த வானமும் நீங்க குறிப்பிடுற வானமும் ஒன்னுதானா?”

”க்ளிக்” மைக் நிறுத்தப்பட்டது. அருகிலிருக்கும் உதவியாளரிடம்,

“டேய்...  தம்பி... இங்கே வா... டொக்களை சரியான ஆட்களுக்குத்தான் குடுத்தியா?” என்றேன்

“ஆமாண்ணே... கரெக்ட்டாதான் கொடுத்தோம். எப்படி சொதப்பினாங்கன்னு தெரியலை நான் போய் பார்க்கறேன்!” என்றான்

“போ சிக்கிரம் போய்ப் பாரு நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்!”
“க்ளிக்” மீண்டும் மைக் ’ஆன்’ செய்யப்பட்டது.

“சகோதரர் என்ன கேட்கிறார்னா... ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க மிஹ்ராஜ் போன போது பார்த்ததாகக் கூறப்படும் வானத்தைப்பத்தி கேட்கிறார்”

“நான் அப்படிக் கேட்கல..” என்று சொல்லும் அல்லாஹ் பிச்சையின் குரலை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை.

“ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க சென்ற மிஹ்ராஜ் பயணம் ஆத்மரீதியான பயணம்தான்கிறத விஷயத்தை நீங்க மொதல்ல ஒரு விளங்கிக்கறனும். அழைச்சிக்கிட்டு போகற மாதிரியும், அங்கே வானங்கள் இருக்கிற மாதிரியும், அதற்குக் கதவுகளும் காவலாளிகளும் இருக்கிற மாதிரியும் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அந்த வானமும், குர்ஆன் நேரடியாகக் குறிப்பிடுற வானமும் ஒன்னு கிடையாது. நாம அடுத்த கேள்விக்குப் போகலாம்!”

”எல்லோருக்கும் வணக்கம். என்பேர் பிச்சாண்டி. குர்ஆன் 71:15 அல்லாஹ் ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்திருப்பதைப்பற்றி சொல்லறதை, நிறைய இஸ்லாமிய அறிஞர்கள், வளி மண்டல அடுக்குகளைக் குறிப்பிடுறதாக சொல்லி, படம் வரைஞ்சு பாகங்களைக் கூட குறிச்சிருந்தாங்க. ஆனால் நீங்க சொல்லற வானம் இப்போ வேறுமாதிரியாக இருக்கே?”




நான் சிரித்துக் கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன் உதவியாளர்கள், ஒன்றுமே நடக்காததைப் போன்று கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதைப் போன்று பாவனை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவனை அருகில் வருமாறு கண்களால் சைகை செய்தவாறு,

”சகோதரர் பிச்சாண்டி, குர்ஆன் குறிப்பிடும் ஏழு வானத்தைப்பற்றி கேட்கிறார். அவரது கேள்விக்குப் போவதற்கு முன்னால். வானத்தைப்பற்றி குர்ஆன் என்ன சொல்துங்கிற நாம பார்க்கனும்.

அல்லாஹ் வானத்தைப்பற்றி சொல்லும் போது, ஏழு வானம் என்று மட்டும் சொல்லவில்ல. அதன் பணிகளை, திருப்பித்தரும் வானம், பாதுகாக்கப்பட்ட முகடு என்று கூறுகிறான். அதன் கட்டமைப்பற்றிச் சொல்லும் போது, வானத்தைப் படைப்பது பெரிய பணி என்பதாகவும், தூண்களின்றி நிறுவியிருப்பதாகவும், பூமியின் மேல் விழாதவாறு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறான்”

உதவியாளர் அருகில் வந்தான். மைக்கை கைகளால் மூடியவாறு அவனிடம்,
“கேள்விகள் ஏண்டா இப்படி ஏடாகூடமா வருது? டோக்கன்களை ஒழுங்காத்தான் குடுத்திருக்கீங்களா?” என்று கிசுகிசுத்தேன்.

தெரியலைண்ணே ஏதோ தப்பு நடந்திருக்கும்னு தோணுது. டோக்கன்கள் கைமாறியிருக்கலாம். புரோகிராம சீக்கிரம் முடிச்சிறலாம்” என்றான்.

”சரி போய் ஏதாவது செய்” என்றவாறு நிகழ்ச்சியை மீண்டும் தொடர தயாரானேன்.

”இதை நாம் எப்படி விளங்கிக்கிறது என்பதுதான் முக்கியமானது.  சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பத்தையும், புறஊதாக் கதிர்களையும் தடுப்பது வானம்தான். இதைத்தான் அல்லாஹ், பாதுகாக்கும் முகடாக வானம் இருப்பதாகச் சொல்கிறான். பூமியிலிருந்து மேலே ஆவியாகி செல்லும் தண்ணீர் திரும்பவும் மழையாக பொழிகிறது; அதேபோல ஒலி-ஒளி அலைகளும் வானில் பட்டு திரும்பவும் பூமிக்கே திரும்புகிறது இதை திருப்பித்தரும் வானம் என்று குறிப்பிடுகிறான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் வானத்தைப்பற்றி விதவிதமாகக் குறிப்பிடுகிறான்.

பன்மையில அதாவது, நிறைய என்று சொல்வதற்கு அரேபிய வழக்கில் 7, 70, 70000 என்று சொல்வாங்க. குர்ஆன் இங்கு ஏழு வானம்னு சொல்லறது எண்ணற கேலக்ஸிகளைத்தான்னு நம்ம புரிஞ்சுக்கனும்!”

பிச்சாண்டியின் முகத்தில் தெறித்த எரிச்சலை என்னால் உணற முடிந்தது. அவர் எழுந்து திரும்பவும் ஏதோ கேட்க முயற்சிப்பதை நல்லவேளையாக உதவியாளர் ஒருவர் ’அன்பாக’ அடக்கிவிட்டார். துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே அறிவிக்கிறது எத்தனை உதவியாக இருக்கிறது!

மாஷா அல்லாஹ்!

நாலு காசு பார்க்கறதுக்கு எத்தனை கப்ஸா விடவேண்டியிருக்கு?  இன்னைக்கு அல்லாஹ்விற்கு இரண்டு ரக்ஆத் சுக்ரியாநஃபில் தொழுது அல்லாஹ்விற்கு நன்றி சொல்லயாகணும் என்று எண்ணிக் கொண்டேன். 



“அஸ்ஸலாமு அலைக்கும்! ஐயா என் பேர் முருகானந்தம். நான் சேலத்தில இருந்து வர்றேன். வானத்தில உயினங்களை படைத்திருப்பதாக குர்ஆன் குறிப்பிடறதாகச் சொன்னீங்க. வாதத்திற்கு அது உண்மையின்னு வைத்துக் கொண்டாலும், வேற்று கிரகங்களில் உயினங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, வானத்தில் உயிரினங்கள் இருப்பதாகக் குர்ஆன் கூறுவது தவறுதானே?”

ஷைத்தான் சடைபின்ன ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு! நான் அல்லாஹ்கிட்ட பாதுகாப்பு கேட்கிறதா இல்லை ஷைத்தான் கிட்ட பாதுகாவல் தேடறதா? இவனுக்கு என்ன பதிலச் சொல்லறது?

“சகோதரர் முருகானந்தம் முதலில் நாம ஒன்றை விளங்கிக் கொள்ளனும். குர்ஆன் கடவுளோட வார்த்தைகள் அதில் முரண்பாடு இருக்காதுன்னுங்கிற விஷயத்தில நாம தெளிவா இருக்கனும் இங்கே வானம்கிறது கேலக்ஸிகளைக் குறிப்பிடுறதாக நான் முதலிலேயே சொன்னேன். அந்த கேலக்ஸிகளுக்குளேதான் சூரியன்களும் கிரகங்களும் இருக்குது. 

நீங்க உங்களை அறிமுகப்படுத்தும் போது சேலத்தில் இருந்து வருவதாகச் சொன்னீங்க. உதாரணத்திற்கு சொல்கிறேன், நான் சேலம் அம்மாபேட்டை ஆறாவது வீதியில் ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறேன்னு சொல்லலை. யாரும் அப்படி தங்களை அறிமுகப்படுத்தவும் மாட்டாங்க. அதைப்போலதான் இதுவும். சில விஷயங்களை கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் நாம்தான் அதைப் சரியாகப் புரிஞ்சிக்கனும்!”



”என் பேர் ANTony.  அல்லாஹ் உயிரினங்களை எங்கே பரவச் செய்திருக்கிறான் வானங்களிலா அல்லது பூமியைப் போன்ற கோள்களிலா என்பதை தெளிவாகச் சொல்லனும். வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருக்கிறான் என்றால் நீங்க கொடுக்கும் விளக்கத்தின்படி, கேலக்ஸி முழுவதும் உயிரினங்கள் பரவியிருக்குனு பொருள்வரும். கேலக்ஸிகளுக்குள் சூரியனைவிட மிகப் பெரிய red giant superகளும் இருக்கலாம். அதற்குள்ளும் உயினங்கள் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டிவரும்.  கேலக்ஸிகளை உள்ளடக்கிய, எண்ணற்ற பேரண்டங்கள் இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. இவைகள் அல்லாமல் அல்லாஹ்வும் அவனது உதவியாளர்களும், இறந்த நபிமார்கள் வசிக்கும் வானங்களும், சொர்க்கம் நரகம் இருப்பதாகக் கூறப்படும் வானமும் இருக்கிறது. அதனால் வானம் என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் தரவேண்டும்”



இது கேள்வியில்ல... Rivet!  இப்ப எப்படித் தப்பிக்கிறது… கலங்காதே... நோ அழக்கூடாது… தைரியமாக இருக்கனும் முகத்தை துடைச்சுக்க… சும்மா சிரிச்சு வை… ஐய்யோ நான் என்ன பதிலச் சொல்லுவேன்…



”சகோதரர் ANTony இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்களை வாசிப்பவர் என்று நினைக்கிறேன்…”

திடீரென்று  உதவியாளர் என்னை நோக்கி ஓடிவந்து காதில் “அண்ணே மேல தொடரவேண்டாம் நம்ம மானம் போயிரும் ஏதவது சொல்லி தப்பிச்சிருங்க…” என்று கிசுகிசுத்தான்.

“சீக்கிரமா… மஃரிப் பாங்க சொல்லு... அதுவரை ஏதாவது சொல்லிவைக்கிறேன்” என்று கிசுகிசுத்தவாறு கூட்டத்தை நோக்கி,

”சகோதரர் ANTony-யைப் பாருங்க குர்ஆனை ஆய்வு நோக்கோடு வாசித்திருக்கிறார் என்பது அவரது கேள்வியிலிருந்து புரிகிறது. முஸ்லீகளான நாம் ஒரு நாளும் அதைப் பொருளணர்ந்து வாசிப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

ANTony நீங்க குர்ஆனை ஆய்வு செய்திருக்கலாம், ஆனால் தவறாகப் புரிஞ்சிருக்கீங்க! குற்றம் சொல்லனும்கிற நோக்கத்தோட அணுகினால் அதிலிருக்கும் உயர்ந்த தத்துவங்கள் உங்களுக்குப் புலப்படாது… உங்க கேள்வியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. குர்ஆன் கருவின் வளர்ச்சியைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறது. அலக் என்ற சொல் மிகத்துள்ளியமாக ஆரம்ப நிலைக் கருவின் அமைப்பை விவரிக்கிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து கருவின் வெவ்வேறு நிலைகளையும் கூறுகிறது.” 

நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இல்லாத அறிவியலை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். இதோ மஃரிப் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

”குர்ஆன் 2:259-ல் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியைக் கூறிவிட்டு உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலெல்லாம் ஒரு முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அதுபற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.

இந்நிகழ்ச்சியில் இருப்பதாக இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?

உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில்தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதைமக்கிப் போகின்றது. அதேசமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.”

கூட்டம் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தது.

”இப்படி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி குர்ஆன் முன்னறிவிப்புச் செய்கிறது. இவ்வாறு குர்ஆன் கூறும் ஒவ்வொரு சான்றுகளையும் இன்றுவரை எந்த அறிவியல் அறிஞர்களாலும் மறுக்க முடியவில்லை. எனவே வானத்தைப்பற்றி குர்ஆன் கூறுவதில் தவறு இருக்காது இருக்கமுடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இப்பிரபஞ்சத்தையே படைத்தவன் கூற்றி எப்படித் தவறு இருக்க முடியும்.

நாம் சகோதரர் ANTony-யின் கேள்விக்கு வருவோம்...

கேலக்ஸி என்பது கோள்கள், நட்சத்திரங்கள் ரெட் ஜெயண்ட் சூப்பர் எனப்படும் செம்பூதங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கியது.  உதாரணத்திற்கு சூரியனில் உயிரினங்கள் வாழமுடியாது காரணம் அதன் வெப்பம். இந்த செம்பூதங்கள் சூரியன் கோள்களென்று அனைத்தையும் விழுங்கக் கூடியவைகள். எனவே உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கே தெரியும் போது இத்தனையும் படைத்த இறைவனுக்குத் தெரியாதா? அப்படியானால் அவனது வார்த்தைகளான குர்ஆன் எப்படி தவறான பொருளைத் தரும்? இப்படித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

அப்படியானல் இதை எப்படி விளங்குவது?

உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

“அல்லாஹ் அக்பர்.. ” என்று பாங்கு ஒலிக்கத் துவங்கியது
”தொழுகைக்கு நேரமாகிவிட்டது நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். சகோதரர் ANTony, உங்கள் கேள்விக்கான அதிகப்படியான விளக்கங்களை எங்கள் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!”

கூட்டம் கலையத் துவங்கியதால் ஏற்பட்ட சலசலப்பில் ANTonyயின் குரல் எடுபடவேயில்லை.

இனிமேல்  ஒத்திகை பார்க்காம கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு வரவேகூடாது. கேள்வி கேட்கறவங்களை இண்டர்வியூ பண்ணாம அனுமதிக்கவும் கூடாது. கேள்வி கேட்கறது சுலபம். பதில் சொல்லிப்பாருங்க அப்பத் தெரியும் அதோட கஷ்டம் என்னாங்கிறது!

என்ன... நான் சொல்லறது சரிதானே.?


தஜ்ஜால்(ஸல், அலை, ரலி, ரஹ்)

Facebook Comments

81 கருத்துரைகள்:

பிசாசுகுட்டி said...

அல்லாஹூ அக்கப்போர்.. ப்பா.. பயான நேர்ல கேட்குற மாதரியே இருந்தது. நான் பீஜே(ஜொள்) அவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை - என் அப்பா தான் நான் குரானை பற்றி) அறியாத காலத்தில் கேட்டிருந்தார்.. அப்புறம் நானும் கேட்கனுமின்னு ஆசைப்பட்டேன் அன்பை விதைக்கும் மார்க்கம் (சல்லுவே பதிமூனை காதலிச்சிதானே கல்யாணம் பண்ணினார் ??!! சிரிக்க கூடாது) "ஏன் காதலை அனுமதிப்பதில்லைன்னு" (ஏன்னா அப்போ இரு முஸ்லீம் பொண்ணு என்னை லவ் பண்ணிக்கிட்டு இருந்திச்சி) அப்பால அந்த பொண்ணு வேறோத்தரை நிக்கா பண்ணி இப்போ தலாக்கும் பண்ணிடுச்சி.. இப்போ அடுத்த கேள்வி ஆண்களுக்கு அஞ்சு திருமணம்.. பெண்களுக்கு எத்தனை லிமிட் இதை பத்தி ஏன் அல்லா யோசிக்கல ? எல்லாத்துக்கும் விளக்கம் இருக்குனா இதுக்கு என்ன விளக்கம் ?
கதீஜா காதலிச்சி சல்லுவை நிக்கா பண்ணலாம், ஷாஜகான் மும்தாஜை நிக்கா பண்ணலாம், இப்போ பண்ணினா என்ன தப்பு..
அல்லா கிருபை உடையவன்ன்னு சொன்னா அப்புறம் தப்பான கேள்வி கேட்டா அதை புதுத்தூதர் எப்படி தப்புன்னு சொல்லமுடியும்.. சொல்றதுக்கு அவர் யார்.. தூதர் மட்டும்தானே ? தூதர் தப்பு சொல்றார்ன்னா நான் எதுக்கு தூதர பாலோ பண்ணனும் ?

பாருங்க துணை கேள்வி கேட்கக்கூடாதுன்னு சொல்றீங்க.. பாருங்க மண்டைக்குள்ள எத்தனை குழப்பம் இருக்கு..

Ant said...

//(டுபாக்)குர்ஆனும் // அட பிராக்கெட் எந்த அளவு உதவுது.
//ANTony// Capitalisation கூட முந்தைய கட்டுரையின் பின்னூட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உதவியுள்ளது.
//இது கேள்வியில்ல... Rivet! இப்ப எப்படித் தப்பிக்கிறது… கலங்காதே... நோ அழக்கூடாது… தைரியமாக இருக்கனும் முகத்தை துடைச்சுக்க… சும்மா சிரிச்சு வை… ஐய்யோ நான் என்ன பதிலச் சொல்லுவேன்…// சிரிப்பை தவிர்க்க இயலவில்லை.
//உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”// இதைத்தான் ஒரு கூட்டம் கட்டுரை போட்டு விளக்குகிறது.[http://carbonfriend.blogspot.in/]
//கேள்வி கேட்கறது சுலபம். பதில் சொல்லிப்பாருங்க அப்பத் தெரியும் அதோட கஷ்டம் என்னாங்கிறது!// முழுவதும் கேள்வி பதில் உரையாடல் வடிவில் தரவும்.

தஜ்ஜால் said...

வாங்க பிசாசுகுட்டி,
நன்றிகள்!

//அன்பை விதைக்கும் மார்க்கம் (சல்லுவே பதிமூனை காதலிச்சிதானே கல்யாணம் பண்ணினார் ??!! சிரிக்க கூடாது) "ஏன் காதலை அனுமதிப்பதில்லைன்னு"// சரிதான் காதலிக்காம எப்படி பதிமூனுங்கிற எண்ணிக்கையை ரீச் பண்ண முடியும். கவனிக்கனும் இது ரேஷன் கார்டுல எழுதன எண்ணிக்கைதான். அப்புறம் போனவந்ததுன்னு அது வேற தனிக்கணக்கு இருக்கு. காதலில்லாம எப்படி ஒரு மனுஷன் ஐட்டங்களோட எண்ணிக்கை அதிகரிச்சிருக்க முடியும்? உங்க கேள்வி நியாயந்த்தான்! என்ன வித்தியாசம்னா நம்ம முஹம்மது மரத்த சுத்தி டூயட் பாடி ஓடினாராங்கிறது ஹதீஸ் ஆதரம் இல்லை! கதீஜா முஹம்மது மேல மையல் கொண்டத பெருமையா பீத்துவாங்க அப்ப அது அவங்களுக்கு விபச்சாரமா தெரியாது. ஆனா இதையே வேற பொண்ணுக செய்தா விபச்சாரம் அபச்சாரம்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானுக!


// பெண்களுக்கு எத்தனை லிமிட் இதை பத்தி ஏன் அல்லா யோசிக்கல ? எல்லாத்துக்கும் விளக்கம் இருக்குனா இதுக்கு என்ன விளக்கம் ?// பொம்பளைங்கள உயிரும் உணர்வுமுள்ள ஜீவனாக முஹம்மதுக்கு தெரியலை அல்லாஹ்வுக்கும் தெரியலை. பெண்ணுறுப்பை விலை கொடுத்து வாங்கறதாதான் நினைச்சிருக்காங்க.


//அல்லா கிருபை உடையவன்ன்னு சொன்னா அப்புறம் தப்பான கேள்வி கேட்டா அதை புதுத்தூதர் எப்படி தப்புன்னு சொல்லமுடியும்.. சொல்றதுக்கு அவர் யார்.. தூதர் மட்டும்தானே ? // என்னங்க நீங்க... பதில் சொல்லனும்ன விஷயம் தெரிஞ்சிருக்கனும் இல்லேனா கூட ரெண்டு கேள்விதான் இனாமா கிடைக்கும். இப்படியே போச்சுனா வெறும் கேள்வி மட்டும்தான் மிஞ்சும்! அதுக்குதான் விவரமா துணைக் கேள்வி கேட்கக்கூடாதுன்னு நாங்க சொல்லறது இதெல்லாம் யாவார நுணுக்கமுங்க..

தஜ்ஜால் said...

வாங்க ANT
நன்றிகள்!
//ANTony// Capitalisation கூட முந்தைய கட்டுரையின் பின்னூட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க உதவியுள்ளது.

//ANTony// விளையாட்டாக செய்துதான் சீரியஸாக நினைக்காததற்கு நன்றி! உங்க கேள்விக்கு ஒரு முல்லாவின் இடத்திலிருந்து பதில் சொல்லிப்பார்த்தேன்.

//(டுபாக்)குர்ஆனும் // அட பிராக்கெட் எந்த அளவு உதவுது.
இருக்காதா பின்ன? நமக்கும் பிராக்கெட் போடத்தெரியும்னு காண்பிக்க வேண்டாமா?


//உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”// இதைத்தான் ஒரு கூட்டம் கட்டுரை போட்டு விளக்குகிறது.[http://carbonfriend.blogspot.in/]
இவ்வளவுதாங்க குர்ஆனின் அறிவியல்!


//முழுவதும் கேள்வி பதில் உரையாடல் வடிவில் தரவும். // ஒரு மாற்றத்திற்காகத்தான் உரையாடல் வடிவில் எழுதத் துவங்கியிருக்கிறேன். அதில் சில விஷயங்களைக் கற்பனையாகச் சேர்ப்பதால் தாக்கம் குறையுமா?

Anonymous said...

1400 வருடங்களா இந்த ஒற்றை குரான வைத்தே கதயை ஓட்டியாச்சு. உங்கள சமாளிக்கறது பெரிய விக்ஷயமா என்ன

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
//1400 வருடங்களா இந்த ஒற்றை குரான வைத்தே கதயை ஓட்டியாச்சு. உங்கள சமாளிக்கறது பெரிய விக்ஷயமா என்ன/// எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க தெரியுமா? அண்மையில் முகநூல்ல நடந்த விவாதத்தை போடறேன் பாருங்க.!

Anonymous said...

தங்களிடம் ஒரு வேண்டுகோள். அல்லாஹ்விற்கும் ஒரு டோக்கன் குடுத்து குர்ஆன் 20:14 by PJ வின் அடிப்படையில் தங்கள் பாணியில் விளக்கம் கொடுக்கவும். பாவம் மண்ணிலிருந்து எல்லாம் படைத்தவனுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை என்று அல்லாஹ் வை எல்லோரும் ஏளனம் செய்யப்போகிறார்கள். தஜ்ஜால் உன் காவல்.

Anonymous said...

ஆன்மிகத்தில் அறிவியலை தேடுவது மலத்தில் அரிசியை தேடுவது என்பதை என்றுதான் உணர்வார்களோ

Anonymous said...

குர் ஆன் 20:14 என்பது பிஜெ வால் குர்ஆனை தழுவி எழுதப்பட்ட புதிய வெர்சன்

ஆனந்த் சாகர் said...

//ஆன்மிகத்தில் அறிவியலை தேடுவது மலத்தில் அரிசியை தேடுவது என்பதை என்றுதான் உணர்வார்களோ//

ஆன்மீகம் என்பது வேறு, மதம்(சமயம்/மார்க்கம்) என்பது வேறு. சடங்குகள், வழிபாடு, மத சட்டங்கள் இவைகளை கொண்டதே மதம் என்பது. ஆன்மீகத்தில் இவை எதுவும் கிடையாது. அறியாமையினால் மதவாதிகள் ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தை தவிர, மற்ற பல மதங்களில் பல ஆன்மீக கருத்துக்கள் உள்ளன. இதனால் ஆன்மீகமும் மதமும் ஒன்று என்று கருதிவிட முடியாது.

ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு அல்ல. ஆன்மீகம் என்பதே அறிவியல்தான். குவாண்டம் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆன்மீக கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன.

Anonymous said...

ஆன்மிகத்தின் உச்சம் . மதத்தின் தோற்றம். தான் அறிந்த ஆன்மஞானத்தால் கூட்டம் சேர்க்கின்றனர். அவர்கள் காலத்திற்கு பின்பு சுயநலவாதிகளால் மதமாக உருவாக்கப்படுகிறு. எந்த ஆன்மீகவாதியாவது அந்த ஞானத்தின் வெளிப்பாடாய் அறிவியல் கண்டுபிடிப்பு ஏதேனும் நிகழ்த்தியுள்ளனரா? பிளாங்க் விஞ்ஞானியா இல்லை ஆன்மீகவாதியா

Anonymous said...

ஆன்மீகத்தின் தேடல் நிரூபணம் ஆகாத ஆன்மா எனப்படும் வஸ்துவை மனிதத்தின் அடுத்த நிலையை நோக்கி நகர்த்தும். அறிவியலில் தேடல் மட்டுமேஉண்டு. நிரூபணங்கள் வாழ்க்கைக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும். ஆன்மீகம் ஒற்றையடி பாதை.

Anonymous said...

சக்கரம் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. அதன் பயன்கள் என்ன என்பது தெரியும். அதனை யோகாவிற்கு விளக்கம் கொடுக்க பயன்படுத்தியது ஆன்மீகம். இதற்கும் பிஜெ வின் விளக்கங்களுக்கும் வித்தியாசம் இல்லை. ஏனெனில் அவர்கள் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை குர்ஆன் ஒளியில் விளக்குவார்கள். ஏதேனும் பதிதாய் எதிர்காலத்தில் நிரூபணம் ஆகும் என விளக்கம் சொல்வார்களா? இந்த கேள்வி ஆன்மீகவாதிகளுக்கும் சேர்த்துதான்

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
//ஆன்மீகம் என்பது வேறு, மதம்(சமயம்/மார்க்கம்) என்பது வேறு. சடங்குகள், வழிபாடு, மத சட்டங்கள் இவைகளை கொண்டதே மதம் என்பது. ஆன்மீகத்தில் இவை எதுவும் கிடையாது. அறியாமையினால் மதவாதிகள் ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தை தவிர, மற்ற பல மதங்களில் பல ஆன்மீக கருத்துக்கள் உள்ளன. இதனால் ஆன்மீகமும் மதமும் ஒன்று என்று கருதிவிட முடியாது.// இது ஒரு புதிய மதம் இப்பொழுதான் ஜீசஸை சந்தித்திருக்கிறார்கள் இனி இதிலிருந்து தூதர்களும் வேதங்களும் வரும்!


//ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு அல்ல. ஆன்மீகம் என்பதே அறிவியல்தான். குவாண்டம் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆன்மீக கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன.// அறிவியல் ஏதவது கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டால், அது எங்களுக்கு முன்னே தெரியும் தங்களைத் தாங்களே சொறிந்து கொள்ளும் மதவாதியின் கூற்றிற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
// தங்களிடம் ஒரு வேண்டுகோள். அல்லாஹ்விற்கும் ஒரு டோக்கன் குடுத்து குர்ஆன் 20:14 by PJ வின் அடிப்படையில் தங்கள் பாணியில் விளக்கம் கொடுக்கவும். பாவம் மண்ணிலிருந்து எல்லாம் படைத்தவனுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை என்று அல்லாஹ் வை எல்லோரும் ஏளனம் செய்யப்போகிறார்கள்.// அல்லாஹ்விற்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. இந்த முல்லாக்கள்தான் அல்லாஹ்வைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,
எல்லாம் ஒரே Anonymous தானா அல்லது வேறு வேறு நபர்களா?
// ஆன்மிகத்தின் உச்சம் . மதத்தின் தோற்றம். தான் அறிந்த ஆன்மஞானத்தால் கூட்டம் சேர்க்கின்றனர். அவர்கள் காலத்திற்கு பின்பு சுயநலவாதிகளால் மதமாக உருவாக்கப்படுகிறு.// கடவுளையும் விடமுடியாமல், நடப்பிலிருக்கும் தங்களுக்குப் பிடித்தமான மதங்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கும்பொழுது ஆத்மா, ஆத்மஞானம் என்று எதையாவது கூறத் துவங்குகின்றனர்.
இந்த ஆத்மா, ஆத்மஞானம் என்பதை எங்கிருந்து எடுத்தனர் என்றால் அது மதத்திற்குள்தான் முடிவடையும். ஆனால் இவர்கள் மதவாதிகள் இல்லையாம்!

ஆனந்த் சாகர் said...

//ஆன்மிகத்தின் உச்சம் . மதத்தின் தோற்றம்.//

நீங்கள் தலைகீழாக சொல்கிறீர்கள். மனிதர்கள் பயம், அறியாமை, உலக ஆதாயம் காரணமாக பொய்களின் அடிப்படையில் பல நம்பிக்கைகளை தோற்றுவித்து மதங்களை உருவாக்கினர். இந்த பொய் மதங்களை கடந்து ஆன்ம அறிவு அடைபவர்கள்(நினைவு கூறுபவர்கள்) ஆன்மீகத்தில் லயிக்கின்றனர். எனவே ஆன்மிகத்தின் உச்சம் மதமல்ல. மதங்களை கடந்து ஆன்ம அறிவில் உயர்வதுதான் ஆன்மீகமாக மலர்கிறது. இதுவும் பரிணாம வளர்ச்சிதான்.

// தான் அறிந்த ஆன்மஞானத்தால் கூட்டம் சேர்க்கின்றனர். அவர்கள் காலத்திற்கு பின்பு சுயநலவாதிகளால் மதமாக உருவாக்கப்படுகிறு.//

ஆன்ம அறிவை அடைந்தவர்கள் ஆசான்களாக இருந்து அந்த அறிவை மற்ற மனிதர்களுக்கு போதிப்பது அவசியமான ஒன்று. அந்த வகையில் கூட்டம் சேர்ப்பது நல்ல விஷயம்தான். சுயநல கூட்டம் ஆன்ம அறிவிலிருந்து விலகி பொய் மத நம்பிக்கைகளை அதில் புகுத்தி அதை ஒரு மதமாக மாற்றினால் அது அந்த கூட்டத்தின் செயல்பாடு. அதனால் உண்மையான ஆன்மீகத்திற்கு எந்த பங்கமும் நேர்ந்து விடாது. உண்மையான ஆன்மீகம் காலம் காலமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது.

// எந்த ஆன்மீகவாதியாவது அந்த ஞானத்தின் வெளிப்பாடாய் அறிவியல் கண்டுபிடிப்பு ஏதேனும் நிகழ்த்தியுள்ளனரா?//

அறிவியல் கண்டுபிடிப்பு என்று நாம் சொல்வது இந்த பொருள் சார்ந்த உலகத்திற்கு சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது இந்த பொருள் உலகத்திற்கு அப்பாற்பட்ட மற்றொரு பரிமாணத்தை, யதார்த்தத்தை பற்றிய அனுபவமாகும். இதை பயிற்சியின் மூலம் எந்த ஒரு மனிதரும் அனுபவித்து பார்க்கலாம். பொருள் உலகத்தில் புதிய கண்டுபிடிப்புகளை செய்வது ஆன்மீகத்தின் நோக்கமல்ல. ஆன்மீகம் அணுக்களை கடந்த(quantum level/sub atomic level) அனுபவமாகும். ஆன்மீக யதார்த்தமும் (spiritual reality) பொருள் உலக யதார்த்தமும்(physical reality) இருவேறு பரிணாமங்களை சார்ந்தது.

// பிளாங்க் விஞ்ஞானியா இல்லை ஆன்மீகவாதியா//

இது ஆன்மீகம் என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீகள் என்பதை பொருத்த்தது. நம்முடைய உண்மையான இயல்பு அன்பு என்பதால், அன்பாக இருப்பதுதான் ஆன்மீகம் என்பது என்னுடைய வரையரை. பிளாங்க் மதங்களை, சித்தாந்தங்களை கடந்து எல்லோரிடமும் அன்பாக இருந்திருந்தால் அவர் ஆன்மீகவாதி தான். அவர் பொருள் உலக அறிவியலார் என்பது நாம் அறிந்ததே.

Ant said...

//இசை கேட்பதால் என்ன கேடு//
www youtube com/watch?v=dvWxPLRJmZ8
இசை பகுத்தறிவை தடுக்கிறது!!! அறிஞர் பீ சே யின் வாதம்.

Ant said...

//வேற்று கிரக வாசிகள்//www youtube com/watch?v=klSJLWE2tho
வேற்று கிரகவாசிகள் கிடையாது அறிஞர் பீ சே யின் வாதம்.

Anonymous said...

ஒரே ஆள்தான் .

Anonymous said...

ஆன்மீகம் என்ற பதமே ஆன்மா என்ற சொல்லின் நீட்சி. மனிதன் மூளையை மனம் என்று வேறு பொருளாக உருவகப்படுத்தினானோ அன்றுதான் ஆன்மா எனும் கொள்கை உருப்பெற்றது. மூளையின் எண்ணங்கள் உயிர் கொண்டு அழிவில்லா நிலையை எட்டுவதே ஆன்மா. ஆக ஒரு மூளை என்பது அழியக்கூடியது. ஆன்மா அழிவில்லாதது என்ற கொள்கைவலுப்பெறுகிறது. ஆனால் உயிர் என்பது என்ன? என்பதைப்பற்றி தங்கள் கருத்து தெரிந்தால் மேற்கொண்டு பேசுகிறேன்

Anonymous said...

தஜ்ஜால் அவர்களே

நான் கடந்த இரண்டு வருடங்களாக தங்கள் தளத்தை வாசித்து வருகிறேன். தங்கள் எழுத்து நடை எனக்கு பிடிக்கும். வலைத்தளங்களில் கண்ணியமான நடைகளுல் ஒன்று தங்களது. தொடரட்டும் உங்கள் விழிப்புணர்ச்சி பணி.

Anonymous said...

மனிதன் தன்னை விட உயர்வானவர் என ஒரு பக்கம் வழிபாட்டில் மூழ்குகிறான். மறுபக்கம் தன்னை விட தாழ்ந்தோர் என இழிபாட்டில் இறங்குகிறான். என்று அவன் அனைவரும் தம்மைப்போன்றே என்று உணரத்துவங்குகிறானோ அன்றே அவன் மதத்தை துறந்து விடுவான். இருப்பது ஒரு பிறப்பே என்பதை உணர்ந்தால் அன்றே பகைமையைத் துறந்து விடுவான். பிறப்பில் ஏதும் உயர்வில்லை. வாழும் வாழ்க்கை முறைதான் உயர்வும் தாழ்வும் என்பதை அறிந்தால் அன்றே அவன் செருக்கை துறந்து விடுவான்.

ஆனந்த் சாகர் said...

//ஆன்மீகம் என்ற பதமே ஆன்மா என்ற சொல்லின் நீட்சி.//

ஆன்மாவை பற்றிய அறிவை நினைவுக்கு கொண்டு வருவது ஆன்மீக செயல்.

// மனிதன் மூளையை மனம் என்று வேறு பொருளாக உருவகப்படுத்தினானோ அன்றுதான் ஆன்மா எனும் கொள்கை உருப்பெற்றது.//

மூளை, மனம் இவற்றின் அடிப்படையில் ஆன்மா ஒன்று இருப்பதாக கூறமுடியாது. ஆன்மாவின் இருப்பு தனித்துவமானது.

// மூளையின் எண்ணங்கள் உயிர் கொண்டு அழிவில்லா நிலையை எட்டுவதே ஆன்மா.//

இது தவறான நம்பிக்கை. பௌதீக மூளையின் எண்ணங்கள் ஆன்மா அல்ல. மனித மூளை ஒரு பௌதீக பொருள். அதைக்கொண்டு நாம் செய்யும் சிந்தனைகள் ஒரு ஆற்றல் மட்டுமே. ஆனால் ஆன்மா இவைகளுக்கு அப்பாற்பட்டது. உடலும், மனமும், ஆன்மாவும் வெவ்வேறானவைகள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான விழிப்பு நிலை(consciousness) உள்ளது. நாம் இவை மூன்றும் கலந்த படைப்புகள்.

// ஆக ஒரு மூளை என்பது அழியக்கூடியது. ஆன்மா அழிவில்லாதது என்ற கொள்கைவலுப்பெறுகிறது.//

பௌதீக பொருளான மூளை அழியக்கூடியது. ஆன்மா பிறப்பில்லாதது, மரணிக்காதது, என்றும் அழிவில்லாதது.

// ஆனால் உயிர் என்பது என்ன? என்பதைப்பற்றி தங்கள் கருத்து தெரிந்தால் மேற்கொண்டு பேசுகிறேன்//

ஆன்மாவைத்தான் நாம் உயிர் என்று அழைக்கிறோம்.

Anonymous said...

அன்பு ஆனந்த் அவர்களே

தாங்கள் ஆன்மா என்பதை உயிர் என்பீர்கள் என்பது நான் அறிந்ததே! உயிர் என்பதை எவரும் கண்டிலர். ஆன்மா பிறப்பற்றது எனும் பொழுது அது ஆதியில் போய் ஒற்றை ஆன்மாவாய் தனிக்கும். அந்த ஒற்றை ஆன்மாவை கடவுள் என அஞ்ஞானிகள் நம்பி மதமெனும் மாயையில் வீழ்கின்றனர். மதத்தை அகற்றி விட்டு ஆதி பிரபஞ்சத்தின் ஒற்றை ஆற்றல் எனக் கொண்டால் பெருவெடிப்புக் கொள்கைக்கு காரணமான அந்த ஆற்றல் எனலாம். இருவகைப் பார்வையிலும் அந்த ஆதிஒற்றை ஆற்றலின்(primary elemental or spiritual or celestial or universal energy or force) முந்தைய நிலை என்ன . இதை அறிவியல் இன்னும் ஆய்ந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகம் இத்தோடு நிறுத்திக்கொண்டு கடவுள் என்ற பதிலோடு முடித்து விட்டு கடவுளை வைத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது. மேலும் உயிர் என்பது இயக்கம் என்க. தாங்கள் law of consevation of energy யை தயவு செய்து ஆன்மாவோடு ஒப்பிட வேண்டாம்.

ஆனந்த் சாகர் said...

அன்பார்ந்த அனானி,

//தாங்கள் ஆன்மா என்பதை உயிர் என்பீர்கள் என்பது நான் அறிந்ததே!//

நல்லது.

// உயிர் என்பதை எவரும் கண்டிலர்.//

ஆன்மா(உயிர்) அணுக்களின் கூட்டினால் உருவாகும் ஒரு பொருள் அல்ல. அது அனைத்துக்கும் மூலமான ஆற்றல். எனவே நாம் நம்முடைய பௌதீகக்கண்ணைக்கொண்டு அதை ஒருக்காலும் பார்க்கவோ பௌதீக உடலின் மூலம் உணரவோ முடியாது.

// ஆன்மா பிறப்பற்றது எனும் பொழுது அது ஆதியில் போய் ஒற்றை ஆன்மாவாய் தனிக்கும்.//

உண்மைதான். இருப்பது ஒரே ஒரு ஆன்மாதான். அந்த ஒரே ஆன்மாவுக்குள்தான் எல்லா பிரபஞ்சங்களும் யுக யுகமாக தோன்றுவதும் அழிவதுமாக இருக்கின்றன.

// அந்த ஒற்றை ஆன்மாவை கடவுள் என அஞ்ஞானிகள் நம்பி மதமெனும் மாயையில் வீழ்கின்றனர்.//

இது மாயை அல்ல. உண்மையானது. அந்த ஒற்றை ஆன்மாவை கடவுள் என்றோ, மூலாதாரம் என்றோ, பிரபஞ்ச ஆற்றல் என்றோ, உயிர் சக்தி என்றோ, எந்த பெயரைக்கொண்டும் நாம் அழைக்கலாம்.

// மதத்தை அகற்றி விட்டு ஆதி பிரபஞ்சத்தின் ஒற்றை ஆற்றல் எனக் கொண்டால் பெருவெடிப்புக் கொள்கைக்கு காரணமான அந்த ஆற்றல் எனலாம்.//

இந்த உண்மையை மதம் சொன்னால், ஏன் மதத்தை வலுக்கட்டாயமாக அகற்ற வேண்டும்? உண்மையை யார் சொன்னாலும் நடுநிலையாக ஏற்பது தான் அறிவு நேர்மை.

// இருவகைப் பார்வையிலும் அந்த ஆதிஒற்றை ஆற்றலின்(primary elemental or spiritual or celestial or universal energy or force) முந்தைய நிலை என்ன .//

ஆன்மா எப்படி தோன்றியது என்பது ஆன்மாவுக்கே தெரியாது! அது தோற்றம் என்பது இல்லாமல் நித்திய காலமாக இருந்துகொண்டே இருக்கிறது. ஆன்மா விழிப்பு நிலை அற்றதாக (unconscious) இருந்தது. அது விழிப்பு நிலை(consciousness) அடைந்த பிறகே அது தன்னுடைய முடிவற்ற ஆற்றல்களை அறிந்து கொண்டது.

//இதை அறிவியல் இன்னும் ஆய்ந்து கொண்டிருக்கிறது.//

இந்த பௌதீக பிரபஞ்சத்தில் இருந்துகொண்டு அதை அறிந்துகொள்ள முடியாது. இது ஆன்மாவுக்கே தெரியாத ஒன்று!

// ஆன்மீகம் இத்தோடு நிறுத்திக்கொண்டு கடவுள் என்ற பதிலோடு முடித்து விட்டு கடவுளை வைத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது.//

ஆன்மீகம் இருக்கிற யதார்த்தத்தை சொல்கிறது. இதை வைத்து ஆன்மீகவாதிகள் கல்லா கட்டுகிறார்கள் என்பது ஆன்மீகத்தின்மீது தேவையற்ற வெறுப்பு கொண்டோரின் வீண்பழி. நல்ல காரியங்கள் புரிவதற்கு நியாயமான முறையில் பணம் சேகரிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல.

// மேலும் உயிர் என்பது இயக்கம் என்க.//

உண்மைதான். உயிர் மட்டுமல்ல், உயிரற்ற பொருள்கள் என்று நாம் கருதும் அனைத்துமே இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அனைத்துக்குள்ளும் இயக்கம் சர்வ சதா காலமும் இருந்து கொண்டே இருக்கிறது.

// தாங்கள் law of consevation of energy யை தயவு செய்து ஆன்மாவோடு ஒப்பிட வேண்டாம்.//

ஆற்றலின் அழியாமை என்பது பௌதீக பிரபஞ்சத்தை நடத்திக்கொண்டிருக்கும் சட்டங்களில் ஒன்று. இந்த சட்டங்களை ஆன்மாவே ஏற்படுத்தியது. மேலும் ஆன்மாவே முடிவற்ற ஆற்றல்தான். எனவே மேற்கண்ட பிரபஞ்ச சட்டத்தின்படி ஆன்மாவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

Anonymous said...

அன்பு ஆனந்த் அவர்களே

மீண்டும் மீண்டும் ஆன்மா=ஆற்றல் என்றே சொல்கிறீர்கள். ஏன் அது மதச்சாயத்தில் நனையாத ஆற்றலாக இருக்கக்கூடாது? அந்த பேராற்றலின் பருப்பொருள் வெளியீடுதான் நாம் என ஒத்துக்கொள்வீர்களா?

ஆனந்த் சாகர் said...

அன்பார்ந்த அனானி,

//மீண்டும் மீண்டும் ஆன்மா=ஆற்றல் என்றே சொல்கிறீர்கள்.//

இதுதான் உண்மை என்கிறபோது எத்தனை முறை வேண்டுமானாலும் அதைத்தானே கூறமுடியும்!



// ஏன் அது மதச்சாயத்தில் நனையாத ஆற்றலாக இருக்கக்கூடாது?//

உண்மையை ஆன்மீகம் சொன்னால் என்ன, அல்லது 20 ஆம் நூற்றாண்டு அறிவியலார்கள் சொன்னால் என்ன? யார் சொன்னாலும் உண்மை உண்மைதானே!



// அந்த பேராற்றலின் பருப்பொருள் வெளியீடுதான் நாம் என ஒத்துக்கொள்வீர்களா? //

ஆம். அந்த ஒற்றை ஆன்மாவின்(ஆற்றலின்) வெளிப்பாடுதான்(manifestation) எல்லா பிரபஞ்சங்களும்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

(((வாங்க ஆனந்த்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!
//ஆன்மீகம் என்பது வேறு, மதம்(சமயம்/மார்க்கம்) என்பது வேறு. சடங்குகள், வழிபாடு, மத சட்டங்கள் இவைகளை கொண்டதே மதம் என்பது. ஆன்மீகத்தில் இவை எதுவும் கிடையாது. அறியாமையினால் மதவாதிகள் ஆன்மீகத்தையும் மதத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். இஸ்லாத்தை தவிர, மற்ற பல மதங்களில் பல ஆன்மீக கருத்துக்கள் உள்ளன. இதனால் ஆன்மீகமும் மதமும் ஒன்று என்று கருதிவிட முடியாது.// இது ஒரு புதிய மதம் இப்பொழுதான் ஜீசஸை சந்தித்திருக்கிறார்கள் இனி இதிலிருந்து தூதர்களும் வேதங்களும் வரும்! )))

அலி சினா கடவுளை நம்ப ஆரம்பித்ததை, ஏசுவை பற்றிய அவரது புது நம்பிக்கையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். பைபிள் கூறும் ஏசுவை அல்ல, NDE (Near Death Experience) அனுபவம் பெற்றவர்கள் மறு உலகில் ஏசுவை சந்தித்து திரும்பியதை அவர் நம்புகிறார். இதை நானும் ஏற்கிறேன். ஆனால் அவர் ஏசுவை மட்டும் முன்னிலை படுத்துகிறார். இதை நான் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நம்பிக்கைகளை புது யுக மதம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

((( //ஆன்மீகமும் அறிவியலும் வேறு வேறு அல்ல. ஆன்மீகம் என்பதே அறிவியல்தான். குவாண்டம் அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஆன்மீக கருத்துக்களை மெய்ப்பிக்கின்றன.// அறிவியல் ஏதவது கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்டால், அது எங்களுக்கு முன்னே தெரியும் தங்களைத் தாங்களே சொறிந்து கொள்ளும் மதவாதியின் கூற்றிற்கும் இதற்கும் எந்த வேறுபாடுமில்லை.)))

இங்கே நான் குறிப்பிடும் ஆன்மீக கருத்துக்கள் என்பது முஸ்லிம்கள் கூறுகிற மத கருத்துக்கள் போன்றது அல்ல. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குரானின் வசனங்களோடு ஒப்பிட்டு முஸ்லிம் அறிஞர்கள் எனப்படுவோர் நடத்தும் நகைச்சுவை நாடகம் அல்ல நான் குறிப்பிடும் ஆன்மீக அறிவியல் கருத்துக்கள். உண்மையான ஆன்மீக கருத்துக்களை நிரூபிக்க இப்படிப்பட்ட போலி நாடகம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. உண்மையான ஆன்மீகத்தை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து அறிந்து கொள்ளலாம்.

தஜ்ஜால் said...

@ஆனந்த்,
//அலி சினா கடவுளை நம்ப ஆரம்பித்ததை, ஏசுவை பற்றிய அவரது புது நம்பிக்கையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.// அதேதான்!
//பைபிள் கூறும் ஏசுவை அல்ல, NDE (Near Death Experience) அனுபவம் பெற்றவர்கள் மறு உலகில் ஏசுவை சந்தித்து திரும்பியதை அவர் நம்புகிறார். இதை நானும் ஏற்கிறேன். // அவர்/நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பலாம் அது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஸ்பைடர்மேன்தான் உலகத்தைப் படைத்து பரிபாலம் செய்கிறான் என்று வேண்டுமானாலும் நம்பலாம். நம்பிக்கைகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் மற்றவர்கள் NDE அனுபவத்தில் இயேசுவை சந்தித்ததாக கூறியதை நம்புவதற்கும், முஹம்மது உட்பட கடவுளின் ஏஜென்ட்டுகளாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் கடவுளைக் கண்டதாகக் கூறுவதை நம்புவதற்கும் பெரிய வேறுபாடில்லை. இதற்கொரு ஆய்வும், இணையதளமும், இஸ்லாமை எதிர்த்துப் போராடுவதாக ’பில்ட்அப்’களும் தேவையா?
எனது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் அவுலியாக்கள் தன்னிடம் வருவதாகவும் தன்னிடம் பேசுவதாகவும் என்னிடம் கூறினார். நான் அவரது நிலையை நேரடியாகவே பலமுறை ஆய்வு செய்தேன். அவர் பொய் சொல்லவில்லை, நடிக்கவில்லை என்பதை என்னால் மிகத் தெளிவாகச் சொல்ல முடியும். ஆனால் அவர் சொன்னது உண்மையில்லை! உங்கள் கடவுள்களும் இவ்வளவுதான்.
நான் முன்பே பலமுறைகள் கூறியிருக்கிறேன். இங்கு அனைத்து விதமான மூடத்தனங்களும் எதிர்க்கப்படும். உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படுவது இஸ்லாமிற்கு என்பதால்தான் அதை இங்கு முன்னிலைப்படுத்தியும் இருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் நான்/நாங்கள் எதிர்ப்பது முஹம்மது போதித்த மூடத்தனத்தைதான் அப்பாவி முஸ்லீம்களை அல்ல! இந்த நிலையில்தான் நாங்கள், அலிசினா மற்றும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து மாறுபடுகிறோம்!
//ஆனால் அவர் ஏசுவை மட்டும் முன்னிலை படுத்துகிறார். இதை நான் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட நம்பிக்கைகளை புது யுக மதம் என்று சிலர் கூறுகின்றனர்.// மதங்களில் சீர்திருத்தங்களும் அதைத் தொடர்ந்து புதுப் பிரிவுகளும், அதன் பின்னர் தனித்த மதங்கள் கிளைப்பதும் நாம் பார்க்காததா என்ன?

Anonymous said...

அன்பு ஆனந்த் அவர்களே

தாங்கள் காணாத அல்லது உணராத ஒரு பொருளை கற்பனை செய்ய முடியுமா? அல்லது அதற்கு உருவம்தான் கொடுக்க முடியுமா

தஜ்ஜால் said...

@ஆனந்த்,
//இங்கே நான் குறிப்பிடும் ஆன்மீக கருத்துக்கள் என்பது முஸ்லிம்கள் கூறுகிற மத கருத்துக்கள் போன்றது அல்ல. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குரானின் வசனங்களோடு ஒப்பிட்டு முஸ்லிம் அறிஞர்கள் எனப்படுவோர் நடத்தும் நகைச்சுவை நாடகம் அல்ல நான் குறிப்பிடும் ஆன்மீக அறிவியல் கருத்துக்கள். உண்மையான ஆன்மீக கருத்துக்களை நிரூபிக்க இப்படிப்பட்ட போலி நாடகம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை. உண்மையான ஆன்மீகத்தை ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து அறிந்து கொள்ளலாம். //

முஸ்லீம்கள் மட்டுமல்ல பெரும்பாலான மதநம்பிக்கையாளரும் தாங்கள் உணர்ந்ததைத்தான் சொல்கிறார்கள். முஸ்லீம் அறிஞர்களின் கருத்து அதை நம்பாதவர்களுக்கு வேண்டுமானால் நகைச்சுவையாகத் தெரியலாம் அவர்களைப் பொருத்தவரையில் அது உண்மை. அதேபோல நீங்கள் சொல்வது உங்களைப் பொறுத்தவரையில் உங்களுக்கு உண்மை. ஆனால் மற்றவர்களுக்கு அது நகைச்சுவையாக தெரியும். நீங்கள் போலி நாடகம் நடத்துவதாக நான் நினைக்கவில்லை. அவர்களைப் போல உங்கள் வாதத்திற்கு வலுசேர்க்க முயற்சிக்கிறீர்கள் அவ்வளவே!
உண்மையான ஆன்மீகமா?
மறுபடியும் முதலிலிருந்து!

Anonymous said...

NDE பற்றி விளக்கலாமா

Anonymous said...

அன்பு ஆனந்த் அவர்களே
இதுவரை தாங்கள் பகிர்ந்தது தாங்கள் அனுபவித்து உணர்ந்தவையா அல்லது மற்றவரிடம் இருந்து கற்றவையா.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//அவர்/நீங்கள் எதை வேண்டுமானாலும் நம்பலாம் அது அவரவர் தனிப்பட்ட உரிமை. ஸ்பைடர்மேன்தான் உலகத்தைப் படைத்து பரிபாலம் செய்கிறான் என்று வேண்டுமானாலும் நம்பலாம்.//

சரிதான். இதைதான் நாம் மத சுதந்திரம்(freedom of religion), மனசாட்சி சுதந்திரம்(freedom of conscience) என்று கூறுகிறோம்.

//நம்பிக்கைகள் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. //

சரிதான். ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் பற்றி இந்த முடிவுக்கு வர முடியாது. உதாரணத்திற்கு, நான் சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அது இனிப்பதை அனுபவித்து அந்த அனுபவத்தை பற்றி சர்க்கரையை இதுவரை சாப்பிடாத ஒருவருக்கு கூறுகிறேன். அவர் சர்க்கரையை சாப்பிட்டு இனிப்பை அனுபவிக்காமல் சர்க்கரை இனிக்கும் என்பதை நம்பமாட்டேன் என்று சொல்வதுபோல் உள்ளது உங்களது(பொருள்முதல்வாதிகளின்/materialists) வாதம்.

//இருப்பினும் மற்றவர்கள் NDE அனுபவத்தில் இயேசுவை சந்தித்ததாக கூறியதை நம்புவதற்கும், முஹம்மது உட்பட கடவுளின் ஏஜென்ட்டுகளாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் கடவுளைக் கண்டதாகக் கூறுவதை நம்புவதற்கும் பெரிய வேறுபாடில்லை.//

லட்சக்கணக்கானவர்கள் NDE பெறுகின்றனர். ஆஸ்பத்திரிகைகளில் இது தினமும் நடக்கிறது. அந்த அனுபவத்தை பெறும்போது அவர்கள் மூளை இறந்துவிட்டது(brain dead) அல்லது சுயநினைவு இல்லாதவர்களாக(unconscious) இருந்தார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ மருத்துவ சான்றிதழ் (clinical report) இருக்கிறது. இது ஆதாரப்பூர்வமானது. இதை மறுப்பது பொருள்முதல்வாதத்தின் மேல் கண்மூடித்தனமாக வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு. உங்களது இந்த நம்பிக்கை மட்டும் எப்படி எப்பொழுதும் உண்மையாக இருக்க சாத்தியம் இருக்கிறது?

// இதற்கொரு ஆய்வும், இணையதளமும், இஸ்லாமை எதிர்த்துப் போராடுவதாக ’பில்ட்அப்’களும் தேவையா?//

எங்களை போன்றவர்கள் திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன் உண்மையை தேடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் எங்களது நம்பிக்கைக்கு முற்றிலும் மாற்றமான உண்மையை கண்டடையும்போதெல்லாம் எங்கள் பழைய நம்பிக்கையை வெட்கப்படாமல் தூக்கி எறிந்துவிட்டு அந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் குட்டைகளை போல தேங்கி நிற்காமல் நதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படிதான் அலி சினாவும் தன்னுடைய நம்பிக்கைகளை, நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்கிறார். இது அவரது சொந்த தேடலின் நம்பிக்கை; ஒவ்வொருவரும் அவரவர் உண்மையை அவர்களே தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகவே தன்னுடைய கட்டுரைகளில் கூறுகிறார். நீங்கள் இதை ஏற்க மனமில்லாமல் அவரின் இஸ்லாத்தை அம்பலப்படுத்தும் பணியை கொச்சைப்படுத்தும் விதமாக இஸ்லாத்தை எதிர்த்து போராடுவதாக பில்டப் கொடுக்கிறார் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனந்த் சாகர் said...

அன்பார்ந்த அனானி,

//இதுவரை தாங்கள் பகிர்ந்தது தாங்கள் அனுபவித்து உணர்ந்தவையா அல்லது மற்றவரிடம் இருந்து கற்றவையா.//

நான் ஆன்மீக அனுபவத்தில் முதல் வகுப்பு மாணவனாக இருக்கிறேன். எனவே என்னுடைய சொந்த அனுபவம் குறைவு. இந்த அனுபவத்தில் பழுத்த அனுபவசாலிகளான பல ஆசான்களிடமிருந்து கற்றதே அதிகம். அவர்கள் பெற்ற அனுபவங்களை, ஆன்ம அறிவை உண்மை என ஏற்கும் ஆன்ம பக்குவம் அடைந்திருக்கிறேன். வேண்டும்பொழுது அதிக ஆன்மீக அனுபவம் பெறுவேன்.

ஆனந்த் சாகர் said...

அன்பார்ந்த அனானி,

//NDE பற்றி விளக்கலாமா//

கூகுளில் தேடினால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். குறிப்பாக Mellen Thomas Benedict மற்றும் Anita Moorjani ஆகிய இருவரின் சொந்த அனுபவங்களை படித்து பாருங்கள்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//நான் முன்பே பலமுறைகள் கூறியிருக்கிறேன். இங்கு அனைத்து விதமான மூடத்தனங்களும் எதிர்க்கப்படும்.//

இது உங்கள் உரிமை. தாராளமாக செய்யுங்கள். அதை நான் வரவேற்கிறேன்.

//உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படுவது இஸ்லாமிற்கு என்பதால்தான் அதை இங்கு முன்னிலைப்படுத்தியும் இருக்கிறோம்.//

நல்லது.

// மீண்டும் சொல்கிறேன் நான்/நாங்கள் எதிர்ப்பது முஹம்மது போதித்த மூடத்தனத்தைதான் அப்பாவி முஸ்லீம்களை அல்ல!//

எங்களை போன்றவர்களும்தான். நாங்கள் சக மனிதர்களாக முஸ்லிம்களை நேசிக்கவே செய்கிறோம். நாங்கள் அவர்களின் மூட நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை. மாறாக இஸ்லாத்தின் பயங்கரவாத கொள்கையைத்தான் எதிர்க்கிறோம்.

//இந்த நிலையில்தான் நாங்கள், அலிசினா மற்றும் உங்களைப் போன்றவர்களிடமிருந்து மாறுபடுகிறோம்! //

மாறுபடுவது உங்களின் பிறப்புரிமை. எங்களுக்கு ஆட்சேபமில்லை. லக்கும் தீனுக்கும் வலிய தீன். எங்கேயோ கெட்ட குரல்?

Anonymous said...

meterial life என இவ்வுலக வாழ்க்கையை விமர்சிக்கும் அனைவரும்இந்த உடலற்ற் மறுமை என்ற கற்பனை வாழ்க்கைக்கு ஆயத்தமாக உள்ளதாகவே தெரிகிறது. இது ஹூரிப்பிரியர்களின் செயலை ஒத்ததாகவே இருக்கிறது. எனது கேள்வியெல்லாம் நமது கண் முன்னே பரந்து விரிந்துள்ள, நாம் அன்றாடம் சுகிக்கின்ற இவ்வுலக வாழ்க்கைதான் நிஜம் என்ற உண்மையை ஏன் மறுக்கிறார்கள். உங்கள் உடல் உண்மை. உறவுகள் உண்மை. சுக துக்கங்கள் உண்மை. இதில் நீங்கள் கண்ட ஒவ்வாத விடயம் எது. நடப்பு வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்கள் அல்லது வாழும் வாழ்க்கையின் புதிர்களை சந்திக்க திராணியற்றவர்களின் புலம்பலாகவே தெரிகிறது. இருப்பது ஒரு பிறப்பு. கிடைத்தது ஒரு வாழ்க்கை என ஒத்துக்கொள்ளுங்கள். உடலின் இயக்கம் நிற்கும் வரை வாழ்ந்து உணருங்கள். பொருள் உலகம் மட்டுமே உண்மை என்று உணருங்கள். நாட்களை வாழ்ந்து களியுங்கள். விட்டேற்றியாய் நாட்களை கழிக்காதீர்

Anonymous said...

i wasted my time with a robot which need a master to command.

ஆனந்த் சாகர் said...

//meterial life என இவ்வுலக வாழ்க்கையை விமர்சிக்கும் அனைவரும்இந்த உடலற்ற் மறுமை என்ற கற்பனை வாழ்க்கைக்கு ஆயத்தமாக உள்ளதாகவே தெரிகிறது. இது ஹூரிப்பிரியர்களின் செயலை ஒத்ததாகவே இருக்கிறது. எனது கேள்வியெல்லாம் நமது கண் முன்னே பரந்து விரிந்துள்ள, நாம் அன்றாடம் சுகிக்கின்ற இவ்வுலக வாழ்க்கைதான் நிஜம் என்ற உண்மையை ஏன் மறுக்கிறார்கள். உங்கள் உடல் உண்மை. உறவுகள் உண்மை. சுக துக்கங்கள் உண்மை. இதில் நீங்கள் கண்ட ஒவ்வாத விடயம் எது. நடப்பு வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவர்கள் அல்லது வாழும் வாழ்க்கையின் புதிர்களை சந்திக்க திராணியற்றவர்களின் புலம்பலாகவே தெரிகிறது. இருப்பது ஒரு பிறப்பு. கிடைத்தது ஒரு வாழ்க்கை என ஒத்துக்கொள்ளுங்கள். உடலின் இயக்கம் நிற்கும் வரை வாழ்ந்து உணருங்கள். பொருள் உலகம் மட்டுமே உண்மை என்று உணருங்கள். நாட்களை வாழ்ந்து களியுங்கள். விட்டேற்றியாய் நாட்களை கழிக்காதீர்//

இந்த பொருள் உலகத்தை புறக்கணிக்கும்படி நாங்கள் சொல்லவில்லை. இதை முழுவதுமாக அனுபவித்து வாழ வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதற்குத்தானே இங்கு வருகிறோம். பிறகு எதற்கு அதை துறக்க வேண்டும்? உங்களை போன்ற பாமரர்கள் இந்த பொருள் உலகம்தான் நிஜம் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் இந்த பொருள் உலகம்தான் மாயை(illusion). பருப்பொருள்(matter) என்பதே மாயைதான். அது உண்மையில் இல்லை. இந்த பொருள் பிரபஞ்சம் உண்மையில் ஒரு மாயைதான். இது நம் நிரந்தர வீடு இல்லை. இந்த பௌதீக பிரபஞ்சம் வேறொரு பரிமாணத்தில் உள்ள தகவல்களின் projection தான். இதை நீங்கள் அறிந்துகொள்ள தற்கால பௌதீக அறிவியல் கண்டுபிடிப்புகளை படித்து புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனந்த் சாகர் said...

//i wasted my time with a ரோபோட் which need a master to command.//

நான் என்னுடைய அனுபவ அறிவை மட்டும் சார்ந்திருக்காமல் பிற ஆசான்களிடமிருந்து அவர்களின் அறிவை பெற்றுக்கொள்கிறேன். அதை பெரிதும் மதிக்கிறேன்.

ஆன்மீகத்தில் அடிப்படை அறிவைக்கூட பெறாத, அதை புரிந்துகொள்ள இயலாத, விரும்பாத ஒருவருடன் நான் நேரத்தை கழித்திருக்கிறேன் என்று தெரிகிறது. இதுதான் பொருள்முதல்வாதிகளின் பிடிவாதம். நீங்கள் என்னை ரோபோட் என்று அழைத்தது உங்கள் அறியாமை காட்டுகிறது. பரவாயில்லை.

Anonymous said...

அன்பு ஆனந்த் அவர்களே

தங்களுடைய அகத்தை (ego)சீண்டினால் என்ன செய்கிறது என்று பார்த்தேன். நன்றாகவே சீறுகிறது. இதுதான் சுய அனுபவமற்ற ஆசான் வழி அனுபவத்தின் லட்சணம். அகத்தை ஆள்வதுதான் உண்மையான மனோரீதியான பரிணாம வளர்ச்சி. மேலும் தங்கள் வகையறாக்கள் ஒரு தியரியை நம்புவது அதைப் பரப்புவது. அதனைப்பற்றி விவாதிப்பது. அந்த தியரிக்கான ஆதாரங்களை அதிகரித்து அந்த தியரியை பலப்படுத்துவது என இருப்பதை விட அதை ஒரு கணமேனும் வாழ்ந்தோ செயல்படுத்தியோ உண்மையா பொய்யா என அறிவது உயர்வானது. உயர் தன்மை என்பது எதனாலும் சலனப்படாத ஒரு மகோன்னத நிலை எனப்படுவது வேதியல் வழியே விளக்கினால் (noble gases )ன் octadestate (எண்மநிலை) மனிதனுக்கு சொன்னால் பக்குவம். அதை அடைந்து விட்டால் எவரிடமும் வன்மம் பகைமை துவேஷம் எதுவும் இருக்காது. இவ்வுலகம் மாயை இல்லை அந்த எண்ணம்தான் மாயை. வாழ்க்கை வாழ்வதற்கே!

ஆனந்த் சாகர் said...

//தங்களுடைய அகத்தை (ஈகொ)சீண்டினால் என்ன செய்கிறது என்று பார்த்தேன். நன்றாகவே சீறுகிறது.//

ஓ..... அப்படியா!!!

//இதுதான் சுய அனுபவமற்ற ஆசான் வழி அனுபவத்தின் லட்சணம்.//

நல்லா இருக்கே உங்கள் லட்சணம்!!

// அகத்தை ஆள்வதுதான் உண்மையான மனோரீதியான பரிணாம வளர்ச்சி. மேலும் தங்கள் வகையறாக்கள் ஒரு தியரியை நம்புவது அதைப் பரப்புவது. அதனைப்பற்றி விவாதிப்பது. அந்த தியரிக்கான ஆதாரங்களை அதிகரித்து அந்த தியரியை பலப்படுத்துவது என இருப்பதை விட அதை ஒரு கணமேனும் வாழ்ந்தோ செயல்படுத்தியோ உண்மையா பொய்யா என அறிவது உயர்வானது. உயர் தன்மை என்பது எதனாலும் சலனப்படாத ஒரு மகோன்னத நிலை எனப்படுவது வேதியல் வழியே விளக்கினால் (noble gases )ன் octadestate (எண்மநிலை) மனிதனுக்கு சொன்னால் பக்குவம். அதை அடைந்து விட்டால் எவரிடமும் வன்மம் பகைமை துவேஷம் எதுவும் இருக்காது. இவ்வுலகம் மாயை இல்லை அந்த எண்ணம்தான் மாயை. வாழ்க்கை வாழ்வதற்கே!//

ஹி ஹி ஹி...... உங்கள் அறியாமை புரிகிறது.

Unknown said...

நல்ல பதிவு தோழரே...டுபாக்குரானுக்கு ஈடு இணையான புத்தகம் இந்த உலகில் ஏதுமில்லை...முக்காலத்திற்கும் உகந்தாற்போல் சொர்க்களைச் சொருகி அடைப்புக்குள் பல அர்த்தங்களை எடுத்துச் செல்லும் அற்புத புத்தகம். இறை(?)வார்த்தை திருத்தப்படாது ஆனால் அர்த்தங்கள் மட்டும் திருத்தப்படும்....!!!!!

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆனந்த்,
//சரிதான். ஆனால் எல்லா நம்பிக்கைகளையும் பற்றி இந்த முடிவுக்கு வர முடியாது. உதாரணத்திற்கு, நான் சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அது இனிப்பதை அனுபவித்து அந்த அனுபவத்தை பற்றி சர்க்கரையை இதுவரை சாப்பிடாத ஒருவருக்கு கூறுகிறேன். அவர் சர்க்கரையை சாப்பிட்டு இனிப்பை அனுபவிக்காமல் சர்க்கரை இனிக்கும் என்பதை நம்பமாட்டேன் என்று சொல்வதுபோல் உள்ளது. உங்களது(பொருள்முதல்வாதிகளின்/materialists) வாதம்.//

ஆனந்த், நான் பிறவி நாத்தீகனில்லை; மதவாதிகளும், உங்களைப் போன்றவர்கள் கூறும் ஆன்மீகத்தை ஆன்மீகத்தைத் தேடி அலைந்து. நீங்கள் சொல்லும் அனுபங்கள் அனைத்தையும் என்னுடைய இருபதுகளிலேயே சந்தித்தவன். அவைகள் என்னவென்பதையும் ஏன் ஏற்படுகிறதென்பதையும் அனுபவ ரீதியாகவே என்னால் விளக்க முடியும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் அவை நமது கற்பனைகளின் விளைவு!
//லட்சக்கணக்கானவர்கள் NDE பெறுகின்றனர். ஆஸ்பத்திரிகைகளில் இது தினமும் நடக்கிறது. அந்த அனுபவத்தை பெறும்போது அவர்கள் மூளை இறந்துவிட்டது(brain dead) அல்லது சுயநினைவு இல்லாதவர்களாக(unconscious) இருந்தார்கள் என்பதற்கு அதிகாரப்பூர்வ மருத்துவ சான்றிதழ் (clinical report) இருக்கிறது. இது ஆதாரப்பூர்வமானது.இதை மறுப்பது பொருள்முதல்வாதத்தின் மேல் கண்மூடித்தனமாக வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு. உங்களது இந்த நம்பிக்கை மட்டும் எப்படி எப்பொழுதும் உண்மையாக இருக்க சாத்தியம் இருக்கிறது?//
நீங்கள் இந்த இடத்திற்கு வருவீர்கள் என்பதற்காகத்தான் அவுலியா தன்னிடம் உரையாடுவதாக கூறிய ஒருவரைப்பற்றி உதாரணத்தை முன்னமே கொடுத்திருந்தேன். அவரை மட்டுமல்ல அதைப் போன்றவர்களையும் உங்களது பட்டியலில் சேர்த்துக் கொண்டு கடவுளுக்கான ஆதரமாக முன்வைக்கலாம். தெரியாமல்தான் கேட்கிறேன் உங்கள் கடவுளுக்கு நிஜவாழ்க்கையில் வருவதற்கு அப்படியென்ன தயக்கம்?
லட்சக்கணக்கானவர்கள் என்ன கோடிக்கணக்கானவர்கள் NDE பெறட்டுமே. பெரும்பான்மையானவர் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள் அப்படித்தானே? நீங்கள் சொல்லும் NDE அனுபவம் பெற்றவர்களைவிட அலிசினா மற்றும் உங்களால் வெறுக்கப்படும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம் எனவே முஸ்லீம்கள் சொல்வதை ஏற்பதுதான் தர்க்கரீதியாகவும் சரியாக இருக்கும். வசதி எப்படி? சுயநினைவு இல்லாதவர்கள் சொல்வது உண்மையா இப்படியொரு தர்க்கத்தை எங்கிருந்து கண்டடைந்தீர்கள்?

இறந்த பிறகு ஹூரிகள் கிடைக்கும் என்று நம்பும் முஸ்லீமிற்கும், உங்களது இந்த நம்பிக்கைக்குக் என்ன வேறுபாடு? அவர்களை எள்ளிநகையாட உங்களுக்கு என்ன தகுதி இருப்பதாக நம்புகிறீர்கள்? (மன்னிக்கவும்!)

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆனந்த்,

//எங்களை போன்றவர்கள் திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன் உண்மையை தேடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் எங்களது நம்பிக்கைக்கு முற்றிலும் மாற்றமான உண்மையை கண்டடையும்போதெல்லாம் எங்கள் பழைய நம்பிக்கையை வெட்கப்படாமல் தூக்கி எறிந்துவிட்டு அந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் குட்டைகளை போல தேங்கி நிற்காமல் நதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படிதான் அலி சினாவும் தன்னுடைய நம்பிக்கைகளை, நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்கிறார். இது அவரது சொந்த தேடலின் நம்பிக்கை; ஒவ்வொருவரும் அவரவர் உண்மையை அவர்களே தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் வெளிப்படையாகவே தன்னுடைய கட்டுரைகளில் கூறுகிறார்.// நம்மால் இங்கு அதிகமாக விவாதிக்கப்பட்ட முஹம்மதையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அவர் தான் வளர்ந்த சூழலுக்கு மாற்றமாக ஒன்றைக் கண்டடைந்தாகக் கூறினார். 13 ஆண்டுகால மக்கா வாழ்க்கையில் தான் கண்டடைந்தவைகளை போதித்தார். அவரது வரலாற்றில் மதீனா வாழ்க்கையை கழித்து பார்த்தால், உங்களது வாதப்படி அவர் அப்பழுக்கற்ற ஆன்மீகவாதி! ஆனால் இஸ்லாமை அணுகும் பொழுது மட்டும் உங்களது திறந்த மனது இறுகிவிட்டது போலும்!
நீங்கள் கூறும், உங்களது நம்பிக்கைகளுக்கு மாற்றமான உண்மைகள்(!) இன்று புதிதாக முளைத்தவைகளல்ல. சிந்தித்துப்பாருங்கள் தேங்கி நின்றுகொண்டிருப்பது யாரென்பது புரியும்.

//நீங்கள் இதை ஏற்க மனமில்லாமல் அவரின் இஸ்லாத்தை அம்பலப்படுத்தும் பணியை கொச்சைப்படுத்தும் விதமாக இஸ்லாத்தை எதிர்த்து போராடுவதாக பில்டப் கொடுக்கிறார் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.// எனது தேடலின் துவக்க காலத்தில் அலிசினாவின் எழுத்துக்கள் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நான் இப்பொழுதும் சொல்வேன் அதில் எனக்கு எந்த கூச்சமும் கிடையாது. ஆனால் இஸ்லாமியர்கள் பற்றிய அவரது சில கருத்துக்களுக்கும் இன்று அவர் மேற்கொண்டிருக்கும் நிலைக்கும் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்குமேல் அலிசினாவைப்பற்றி பேசவிரும்பவில்லை.

தஜ்ஜால் said...

வாங்க இனியவன்!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//இறை(?)வார்த்தை திருத்தப்படாது ஆனால் அர்த்தங்கள் மட்டும் திருத்தப்படும்....!!!!!// பின்னே..? குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கிறான் அதனால் அதைத் திருத்தினால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம். அர்த்தங்களைத் அல்லாஹ் கண்டுகொள்ள மாட்டான். அதனால்தானே முல்லாக்களின் வண்டி தடையில்லாமல் ஓடுகிறது.

தஜ்ஜால் said...

@ நண்பர் ஆனந்த்,


//எங்களை போன்றவர்களும்தான். நாங்கள் சக மனிதர்களாக முஸ்லிம்களை நேசிக்கவே செய்கிறோம். நாங்கள் அவர்களின் மூட நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை.// இன்று உங்களால் முஸ்லீம்கள் மட்டுமல்ல எந்த நம்பிக்கையைப்பற்றியும் பேசக்கூட முடியாது. ஏனென்றால் உங்களது நம்பிக்கையின் அடித்தளம் அப்படி இருக்கிறது.

//மாறுபடுவது உங்களின் பிறப்புரிமை. எங்களுக்கு ஆட்சேபமில்லை. லக்கும் தீனுக்கும் வலிய தீன். எங்கேயோ கெட்ட குரல்?//
வேறுவழி?

SAGODHARAN said...

சகோதரர் ஆர்ய ஆனந்த் என்னதான் சொல்ல வருகிறார்? கடவுள் இருக்கிறார் என்கிறாரா? இல்லை என்கிறாரா? ஒன்றுமே புரியாத குராஆன் போல விளக்கம் தருகிறார்? எனக்கு புரியும்படி விளக்க அவரை இதன் மூலம் விண்ணப்பிக்கிறேன் அனானிக்கும்,தஜ்ஜாலுக்கும் சேர்த்தே இதனை பதிவு செய்கிறேன்

Anonymous said...

ஆனநத் காமெடி மூடுக்கு வந்து விட்டார் என நினைக்கிறேன். ஆன்மிகம் பற்றிய அக இருளை நீக்கலாம் என அவரிடம் ஒரு டார்ச் யாராவது வாங்கி தாருங்களேன். குரான் போல் ஏதாவது இருக்கும். எனது அறியாமையை நீக்க ஏதாவது சொல்வார் என பார்த்தால் NDE என்ற செத்து செத்து விளையாடும் விளையாட்டை பற்றி பேசுகிறார். ஆனந்தின் இந்த புதிய மதத்திற்குள் அனைவரும் செல்வோம். ஏனோ நபிக்காக வாதாடும் பிஜெ போலவே ஆனந்தின் வார்த்தைகள் தெரிகின்றன. ஒரு வேளை அது என் அறியாமையால் இருக்கலாமோ. அறிவாளிகள் கூட்டத்திற்கு தெரியாமல் வந்து விட்டேன்.

தஜ்ஜால் said...

வாருங்கள் சகோதரன்,

ஆன்மீகவாதிகள் கடவுளை NDE அனுபவத்தின் மூலம் சந்திக்க நிறைய வாய்ப்பிருப்பதாகவும், NDE அனுபவத்தில் பெற்றவைகள் கடவுளுக்கான வலுவான ஆதாரம் என்கிறார். உபாயம்: திருவாளர் அலிசினா!

SAGODHARAN said...

NDE மூலம் கடவுளை சந்திக்கலாமா? வாய்ப்புகள் அதிகமா? உண்மயா ஆனந்த் அவர்களே? எனக்கு புரியவில்லை!

தயவு செய்து விளக்கவும்,.மேலும் இது வரை நாத்திக சிந்தனையோடு உள்ளவர்களே இந்த தளத்தில் பங்களிப்பு செய்கிறார்கள் என்று நினைத்தேன்! நீங்கள் என்ன கடவுள் நம்பிக்கை உண்மை என்கிறீர்களா?

SAGODHARAN said...

/எங்களை போன்றவர்கள் திறந்த மனதுடன், அறிவு நேர்மையுடன் உண்மையை தேடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் எங்களது நம்பிக்கைக்கு முற்றிலும் மாற்றமான உண்மையை//

என்ன உங்களுடய நம்பிக்கை 4 வரிகளில் விளக்க முடியுமா? உங்களுடய பழய நம்பிக்கை எது?
தயவு செய்து எனக்கு புரியவில்லை1 விளக்கவும்! நன்றி!

Anonymous said...

எதையுமே நம்பாமல் இருக்கும்பொழுது சில நேரங்களில் எதையாவது நம்பினால் சைக்காலாஜி திருப்தி கிடைக்குமோ என்று தோன்றுவது இயல்புதான். நமக்கு ஒரு நாள் மரணம் ஏற்படும் என்று தெரிந்த ஒரே உயிரினம் மனிதந்தான். பரிணாம வளர்ச்சி செய்த தவறை அந்த பரிணாம வளர்ச்சியே சரிகட்ட முயன்று உருவானதுதான் இறை நம்பிக்கை. என்னதான் நாத்திகம் பேசினாலும், சில வேளைகளில் இது எட்டிப் பார்ப்பது உண்மைதான். ஆனால் மதத்துக்குள் நுழைவது இன்னும் ஆபத்தாக இருப்பதால் அதற்கு வெளியில் இருப்பதே நல்லது. என் டி ஈ போன்றவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. தியானம் ஒருவகையில் உதவலாம். அதுகூட பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதிதான்.
மற்றபடி, மத வாதிகளின் சமாளிப்புகளை விவரித்த விதம் சூப்பர்.

ஆனந்த் சாகர் said...

சகோதரன்,

//சகோதரர் ஆர்ய ஆனந்த் என்னதான் சொல்ல வருகிறார்? கடவுள் இருக்கிறார் என்கிறாரா? இல்லை என்கிறாரா? ஒன்றுமே புரியாத குராஆன் போல விளக்கம் தருகிறார்? எனக்கு புரியும்படி விளக்க அவரை இதன் மூலம் விண்ணப்பிக்கிறேன் அனானிக்கும்,தஜ்ஜாலுக்கும் சேர்த்தே இதனை பதிவு செய்கிறேன்//

கடவுள் இருக்கிறது. அதை தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பது அது ஒன்று மட்டுமே. அதைத்தான் ஆன்மா என்று குறிப்பிடுகிறோம். அது ஒன்றே இருக்கிற யதார்த்தம். மற்ற எல்லாமே வெறும் மாயைதான்.

ஆனந்த் சாகர் said...

சகோதரன்,

//NDE மூலம் கடவுளை சந்திக்கலாமா? வாய்ப்புகள் அதிகமா? உண்மயா ஆனந்த் அவர்களே? எனக்கு புரியவில்லை!

தயவு செய்து விளக்கவும்,.மேலும் இது வரை நாத்திக சிந்தனையோடு உள்ளவர்களே இந்த தளத்தில் பங்களிப்பு செய்கிறார்கள் என்று நினைத்தேன்! நீங்கள் என்ன கடவுள் நம்பிக்கை உண்மை என்கிறீர்களா?//



NDE மூலம் மட்டுமல்ல. ஆழ்ந்த தியானத்தின் மூலமும் நாம் கடவுளை சந்திக்கலாம், அதனோடு உரையாடலாம். இந்த உடலைவிட்டு வெளியேறி மற்ற பரிமாணானத்தில் உள்ள உலகத்துக்கு சென்று வரலாம்.

SAGODHARAN said...

மதிப்பிற்குரிய ஆனந்திற்க்கு மிக்க நன்றி தங்களின் பதிலுக்கு.

என்ன இப்படி அதிர்ச்சி தரீங்க? அப்படின்னா நீங்க கடவுள் இருக்குதுன்னு அல்லது இருக்கிறார்னு சொல்ட்ரீங்களா? அவருக்கு வேதம் உண்டா? படைப்பின் அவசியம் என்ன? உலகின் உயிரின் முடிவு என்ன?

உங்கள இதுவரை கடவுள் மறுப்பாளர் என்றே நினைத்தேன்! இதற்க்கு முன் உள்ள நம்பிக்கைகளை பொய் எனக்கூறினீர்கள் எது பொய்? நீங்கள் எந்த நம்பிக்கையை பொய்யாக கண்டீர்கள்? ஏனென்றால் நான் இஸ்லாம் என்ற நபிக்கை சார்ந்த மதத்திலிருந்து விலகியவன்! ஏனென்றால் நான் கண்டவரை ஹிந்துக்களுக்கு உள்ள நம்பிக்கைகள் சமூக அக்கரை உள்ளதாக பெரும்பாலும் கண்டிருக்கிறேன்! அதுதான் உண்மயும் கூட! எண்னை தேய்த்து குளிப்பது,அமாவாசை பௌர்ணமி ஜோதிடம் இதுவெல்லாம் எந்தளவுக்கு அறிவியலோடு பின்ணிப்பிநைந்தது என்பதை நான் அறிவேன்! (இது முஹம்மது என்பவருக்கு தெரிய வாய்ப்பில்லை!) அப்படிருக்க எதை வைத்து உங்கள் மனம் நீங்கள் கூறும் தேடலுக்கு சென்றது? நீங்கள் கூறும் தகவலை தளத்தில் தேடினேன் ஆங்கிலத்தில் உள்ளது அவ்வளவாக புரியவில்லை! மன்னிக்கவும் நன்றி

Anonymous said...

சகோ. ஆனந்த்,

நீங்கள் அப்படி சென்றதுண்டா? கடவுளை கண்டதுண்டா? அதற்க்கு ஏதேனும் பயிற்சி உண்டா? ஏனென்றால் நான் தினமும் யோகா செய்கிறேன்! இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு! ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதைதான் ஏற்க்க முடியவில்லை!

SAGODHARAN said...

சகோ. ஆனந்த்,

நீங்கள் அப்படி சென்றதுண்டா? கடவுளை கண்டதுண்டா? அதற்க்கு ஏதேனும் பயிற்சி உண்டா? ஏனென்றால் நான் தினமும் யோகா செய்கிறேன்! இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு! ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதைதான் ஏற்க்க முடியவில்லை!

ஆனந்த் சாகர் said...

சகோதரன்,

//என்ன இப்படி அதிர்ச்சி தரீங்க?//

இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால் இன்னும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான அதிர்ச்சிகளுக்கு தயாராக இருங்கள்!

// அப்படின்னா நீங்க கடவுள் இருக்குதுன்னு அல்லது இருக்கிறார்னு சொல்ட்ரீங்களா?//

ஆமாம். கடவுள் இருக்கிறது. அது மதங்கள் போதிக்கிற கடவுள் அல்ல .

// அவருக்கு வேதம் உண்டா?//

கடவுள் வேதங்களை கொடுக்கவில்லை.

// படைப்பின் அவசியம் என்ன? உலகின் உயிரின் முடிவு என்ன?//

உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கவே விரும்புகிறேன். இருப்பினும் இந்த தளத்தில் நான் ஆன்மீகத்தை பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால் இந்த தளம் அதற்கான இடம் இல்லை. உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் நீங்களே உங்களிடமே வரவைப்பீர்கள்!

ஆனந்த் சாகர் said...

சகோதரன்,

//நீங்கள் அப்படி சென்றதுண்டா?//

இதுவரை விழிப்பு நிலையில் செல்லவில்லை. சில காரணத்திற்காக விழிப்பு நிலையில் செல்வதை தள்ளிப்போட்டு வருகிறேன்.



// கடவுளை கண்டதுண்டா? //

கடவுளை வெளியே தேட வேண்டாம். அது நமக்கு உள்ளேயே இருக்கிறது.



//அதற்க்கு ஏதேனும் பயிற்சி உண்டா?//

இருக்கிறது. லாப்சங் ராம்பா "என்றென்றும் நீயே"(You Forever) என்ற தன்னுடைய நூலில் பல எளிய பயிற்சிகளை சொல்லி இருக்கிறார். மற்ற பலரும் பல நூல்களை எழுதி உள்ளனர். ஆஸ்ட்ரல் ப்ரோஜெக்ஷன் (Astral Projection) என்று கூகுளில் தேடிப்பாருங்கள். ஆழ்ந்த தியானமே போதும். இந்த பயிற்சி எதுவும் தேவை இல்லை.



// ஏனென்றால் நான் தினமும் யோகா செய்கிறேன்!//

நல்லது. அது உடல் சார்ந்த பயிற்சி. அதனால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. ஆனால் தியானம் முக்கியம்.



// இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு!//

உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றபடி உங்கள் ஆன்ம அறிவு விசாலப்படும்.



// ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதைதான் ஏற்க்க முடியவில்லை!//

ஆழ்ந்த தியானம் செய்யுங்கள். நீங்களே உண்மையை கண்டடைவீர்கள்! வேறு ஒருவரும் உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை.

Anonymous said...

கடவுள் இருக்கிறது. அது மதங்கள் போதிக்கும் கடவுள் அல்ல. அது பேரான்மா . பிறப்பில்லாதது. அழிவில்லாதது.வேற மானே தேனே எது வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளுங்கள். இறுதி வேதமொன்று வருகிறது. மதவியாபாரிகளிடம் மற்றுமொரு இல்லாக் கடவுள் மாட்டிக் கொண்டார். இந்த மதவியாபாரிகள் எல்லா மதங்களையும் அறிந்தவர்கள். எனவே மற்ற மதங்களில் உள்ள தவறுகளை நீக்கி புதிய மதம் உருவாக்கி புதிய கடவுளையும் உருவாக்குவார்கள்.பின்பு என்ன கல்லா கட்ட வேண்டியதுதான். 809 வருடம் கழித்து யாராவது குஜ்ஜால் என்பவர் உண்மையை விளக்கோ விளக்கென விளக்குவார். நல்லா படங்காட்றாங்கப்பா

Anonymous said...

அரிசி நிலத்தில் கிடந்தால் என்ன மலத்தில் கிடந்தால் என்ன அரிசிதான் முக்கியம்

Anonymous said...

இயல்பாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மதச்சாயம் பூசி ஆன்மீகம் எனும் நவீன மதபோதனையின் மூலம் அறிவியல் தத்துவங்கள் பலவற்றை கலந்தடித்து யாரும் குறை சொல்லா வண்ணம் புதிய மதமொன்றை கட்டியமைக்க வேண்டிய அவசியம் என்ன.

Anonymous said...

சகோ ஆனந்திற்கு!ஆன்மீகத்த்த்தை பற்றி தெரிந்து கொள்ளும் என்னை போன்ற தொடக்க நிலையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள ஏதேனும் தளம் உள்ளதாஅ? தமிழில்? நீங்கள் கூறிய ஆஸ்ட்ரல் projection பார்த்தேன் செய்து பார்க்க வேண்டும்! தாங்கள் எப்படி இதனில் ஈர்க்கப்பட்டீர்கள்? உங்களை தொடர்பு கொள்ள இந்த தளம் ஒன்றே உள்ளது தமிழில் அறிய எனக்கு ஆவலாக உள்ளது உதவவும் நன்றி!

Anonymous said...

முஹம்மதின் மிஹ்ராஜ் பயணத்தைப்பற்றி சொல்லும் பொழுது இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்வார்கள். அதிலொன்று ஆன்மீகரீதியான பயணம் என்பார்கள். மிஹ்ராஜ் பயணத்திற்கு PJ அவர்கள் கொடுக்கும் விளக்கம் அதுதான். எனவே முஹம்மது Astral projection முறையில் கடவுளைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.
இது எப்படி இருக்கு?

Anonymous said...

அப்டின்னா இவிங்க எறைதூதரும் அப்டித்தானா

தஜ்ஜால் said...

Anonymousகள் கவனத்திற்கு,

ஏதாவது ஒரு புனைப்பெயரிலோ அல்லது வேறுபடுத்தி அறியும் அடையாளத்துடனோ கருத்துகளைப் பதிந்தால் நலமாக இருக்கும். அல்லாஹ்(!) பேசுவதைப் போல ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது!

SAGODHARAN said...

சகோ ஆனந்திற்கு!ஆன்மீகத்த்த்தை பற்றி தெரிந்து கொள்ளும் என்னை போன்ற தொடக்க நிலையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள ஏதேனும் தளம் உள்ளதாஅ? தமிழில்? நீங்கள் கூறிய ஆஸ்ட்ரல் projection பார்த்தேன் செய்து பார்க்க வேண்டும்! தாங்கள் எப்படி இதனில் ஈர்க்கப்பட்டீர்கள்? உங்களை தொடர்பு கொள்ள இந்த தளம் ஒன்றே உள்ளது தமிழில் அறிய எனக்கு ஆவலாக உள்ளது உதவவும் நன்றி!

ஆனந்த் சாகர் said...

சகோதரன்,

//சகோ ஆனந்திற்கு!ஆன்மீகத்த்த்தை பற்றி தெரிந்து கொள்ளும் என்னை போன்ற தொடக்க நிலையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள ஏதேனும் தளம் உள்ளதாஅ? தமிழில்? //

எனக்கு தெரிந்து அப்படிப்பட்ட தளங்கள் தமிழில் மிக அரிதாகவே உள்ளது. நாம்தான் அந்த பணியை செய்யவேண்டும் போலிருக்கிறது! தியானத்தின் அடிப்படையிலான ஆன்மீக இயக்கங்கள் சில நம் நாட்டில் உள்ளன. அவற்றில் சில பிரம்மா குமாரிகள்(Brahma Kumaris), வேதாத்திரி மகரிஷி(Vethathiri Maharishi), மகரிஷி மகேஷ் யோகி(Maharishi Magesh Yogi), சுபாஷ் பத்ரி(Subash Patri/Patriji) போன்றவர்களின் இயக்கங்கள். ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பலரும் தியானங்களை சொல்லிக்கொடுக்கிறார்கள். இவர்களின் தளங்களுக்கு சென்று பார்க்கலாம். தியானம் என்பதே சிந்தனையற்ற நிலைக்கு செல்வதுதான். அந்த நிலையை அடைய ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு வழிமுறையை சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் ஆன்மீக உண்மைகளை பெரிய அளவில் இவர்கள் போதிப்பதில்லை. இவர்கள் யோகா, தியானம், கொஞ்சம் போதனை என்பதோடு நின்றுவிடுகிறார்கள்.

//நீங்கள் கூறிய ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஶந் பார்த்தேன் செய்து பார்க்க வேண்டும்! //

ஆழ்ந்த தியானத்தின்போதும் நம்முடைய சூட்சும உடல் (astral body) நம் உடலைவிட்டு வெளியே வரும். இது ஒரு அறிவியல். அதாவது எவரும் இதை அனுபவித்து அறிந்துகொள்ளலாம்.

//தாங்கள் எப்படி இதனில் ஈர்க்கப்பட்டீர்கள்?//

இளம் பருவ வயதுமுதல் ஆன்மீக விஷயத்தில் எனக்குள்ள அதீத ஆர்வம், தேடல் உண்மையை கண்டடைய வைக்கிறது.

// உங்களை தொடர்பு கொள்ள இந்த தளம் ஒன்றே உள்ளது தமிழில் அறிய எனக்கு ஆவலாக உள்ளது உதவவும் நன்றி!//

உலகம் முழுவதும் ஆன்மீக விழிப்புணர்வு பரவிக்கொண்டிருக்கிறது. இது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம். எனவே தமிழகத்திலும் விழிப்புணர்வு வளரும். தமிழில் பல தளங்கள் தோன்றும். நம் ஆன்மீக நாட்டம் ஒரே அலைவரிசையில் இருந்தால் நாம் வேறுவகையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனந்த் சாகராக நான் உங்களை சந்திக்க முடியாது. காரணம் நமக்கு தெரியும்!

ஆனந்த் சாகர் said...

//முஹம்மதின் மிஹ்ராஜ் பயணத்தைப்பற்றி சொல்லும் பொழுது இரண்டுவிதமான விளக்கங்களைச் சொல்வார்கள். அதிலொன்று ஆன்மீகரீதியான பயணம் என்பார்கள். மிஹ்ராஜ் பயணத்திற்கு PJ அவர்கள் கொடுக்கும் விளக்கம் அதுதான். எனவே முஹம்மது Astral projection முறையில் கடவுளைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.
இது எப்படி இருக்கு?//

முஹம்மது ஒரே ஒரு ஆன்மீக உண்மையைக்கூட சொல்லவில்லை, அறிந்திருக்கவில்லை. அவர் சூட்சும உடல் பயணம் செய்திருந்தால் உண்மையை கண்டிருப்பார், அதை சொல்லியிருப்பார். ஆனால் அவர் எப்படி எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னது எல்லாமே உண்மைக்கு புறம்பான பொய்கள் மட்டுமே. அவருக்கு தெரிந்ததெல்லாம் பௌதீக உலகம் மட்டுமே. அவர் விவரித்த நரகம், சொர்க்கம் எல்லாமே பௌதீக உலகம்தான். அவர் ஆன்ம உலகத்தை பற்றி ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. அவருக்கு ஆன்மா என்றால் என்ன என்பதுகூட தெரியவில்லை. அதனால்தான் அவர் குரானில் ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும் என்று கூறி தன்னுடைய அறியாமையை பறை சாற்றி இருக்கிறார்.

ஆனந்த் சாகர் said...

//இயல்பாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மதச்சாயம் பூசி ஆன்மீகம் எனும் நவீன மதபோதனையின் மூலம் அறிவியல் தத்துவங்கள் பலவற்றை கலந்தடித்து யாரும் குறை சொல்லா வண்ணம் புதிய மதமொன்றை கட்டியமைக்க வேண்டிய அவசியம் என்ன.//

அப்படி எந்த ஒரு புதிய மதத்தையும் நாங்கள் உருவாக்கவில்லை. அப்படி எந்த ஒரு நோக்கமும் இதில் இல்லை. ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆன்மீக ஆசான்களால் சொல்லப்பட்ட ஆன்மீக உண்மைகளையே நாங்கள் பேசுகிறோம். ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

Anonymous said...

ஆனால் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகளாக உள்ளதே

Ant said...

பீ சே கட்டுரை குறித்து ஒரு அஹமதியாவின் எதிர் கேள்வி.
[http://ahmadiyamuslimjamath blogspot in/2014/08/blog-post_26.html#more]
//நம் கேள்வியாவது, திருக்குரானும் நபிமொழியும் கூறுவனவற்றுள் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறானதுதான். திருக்குரானும் நபிமொழியும் எதனை உண்மை எனக் கூறுகிறதோ அதனை ஏற்பதே இஸ்லாம் ஆகும்.//

ஆனந்த் சாகர் said...

//ஆனால் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகளாக உள்ளதே//

ஆமாம். ஆனால் இன்றைய மனித இனம் எப்பொழுது பரிணமித்தது? கடந்த 40,000 வருடங்களுக்குள் என்று அறிவியல் கூறுகிறது. மனிதன் எப்பொழுது ஓரளவு நாகரீக வளர்ச்சி அடைந்தான்? கடந்த 10,000 வருடங்களுக்குள்தான்.

Anonymous said...

அது எந்த அறிவியல் என தெரியவில்லை.

Anonymous said...

ரிக் வேதம் இமயமலை தோன்றுவதற்கு முன்பே சுமார் இருபதாயிரம் வருடங்களுக்கு முந்தையது என ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்படி என்றால் அது பொய்யா.

ஆனந்த் சாகர் said...

//ரிக் வேதம் இமயமலை தோன்றுவதற்கு முன்பே சுமார் இருபதாயிரம் வருடங்களுக்கு முந்தையது என ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்படி என்றால் அது பொய்யா.//

பொய்தான். பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டதிலிருந்த இந்திய நிலப்பரப்பு அதிலிருந்து பிரிந்து ஆசியா கண்டத்தில் சேரும்போது மேலெழுந்த நிலம் இமயமலையாக உருவெடுத்தது என்று அறிவியல் கூறுகிறது. அப்பொழுது மனித இனமே தோன்றவில்லை. நீங்கள் வழக்கம்போல எந்த அறிவியல் என்று எதையாவது கேட்க வேண்டும் என்று கேட்டு வையுங்கள்!

Kitchen Shortcuts said...

எல்லா புகழும் இறைவனுக்கே..! இங்கே விவாதம் / கருத்து களம் என்ற பெயரில் தவறு நடப்பது மட்டும் என்னால் உணர முடிகிறது. நம்மை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்..! இது போன்ற தெரிந்தே தவறு செய்பவர்களை இம்மையிலும் இழிவுபடவேடும்..!