Tuesday 7 January 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -32

சிலுவை மரணம் - கிருஸ்தவமும் இஸ்லாமும்



இயேசு சிலுவை மரணத்தின் போது  கூறியதை கவனியுங்கள்
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.
(லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
(மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன் என்பதுதானே ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity)  ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

மிகச் சாதாரண மனிதர்களே மரணத்தை மிகத் துணிவுடன் எதிர்கொள்கின்றனர். உதாரணத்திற்கு தூக்கிலிடப்படுவதற்கு முன்பு சதாம் ஹூஸைன் சிறிதும் அச்சமின்றி அமெரிக்காவின் அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தவாறே தூக்குக் கையிற்றை நெருங்கியதை  நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்அனைத்தையும் அறிந்த கடவுள்  இப்படி பயந்து நடுங்கி புலம்பிக் கொண்டே மரணமடைவானா? மேலும், மரணமடைபவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று இஸ்லாம் கேட்கும் கேள்விகளில் எந்த தவறுமில்லை. இயேசு கடவுளாக இருக்க முடியாது  என்ற முஸ்லீம்களின் வாதமும் சரியாகவே தோன்றுகிறது

ஆள்மாறாட்டம் செய்தால் மட்டுமே  ஈஸா நபியைக் காப்பாற்ற முடியுமென்ற நிலைமை  அல்லாஹ்விற்கு இல்லையே? ஆள் மாறாட்டத்தின் விளைவுகளைப் பார்க்கையில், ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  செயல் மாபெரும் குழப்பமாக உள்ளது என்ற கிருஸ்துவர்களின் கேள்விகளில் உள்ள நியாயத்தையும்  மறுக்க முடியாது. இயேசு சர்வவல்லமையுடைய கடவுள் என்பதும், அல்லாஹ் என்ற சர்வ வல்லமையுடைய இறைவன் தனது தூதரை ஆள்மாறாட்டம் செய்து காப்பாற்றினான் என்ற இந்த இருவாதங்களுமே  முட்டாள்த்தனமானவைகள் என்பது தெளிவாகிறது.

சிலுவையில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை மட்டுமே, கிருத்துவமும்இஸ்லாமும் கூறும் செய்திகளிலிருந்து நாம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆள்மாறாட்டக் கதையை ஆய்வு செய்வதற்கு முன் கிருஸ்தவர்களின் நம்பிக்கையை சற்று கவனிப்போம். கிருஸ்தவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு எதற்காக கொடூரமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டும்?


  1. சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில், மனிதர்களை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்க சாத்தான் கேட்ட பலியே கடவுளின் மரணம். இங்கு கடவுள், சாத்தானை ஏமாற்றிவிட்டார். அதாவது கடவுள் உயிர்த்தெழக் கூடியவர் என்பதை சாத்தான் அறியவில்லை.
  2.  கடவுளுடைய விதி மாற்றப்பட முடியாதாதென்பதால், தனது விதியை மீறிய மனிதர்களுக்காக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, கடவுளே ஏற்றுக் கொண்டு மரணமடைந்தார்.
  3.  சாத்தானை திருப்பதிப்படுத்த அவனுக்கு கொடுத்த விலையே கடவுளின் சிலுவைமரணம்.
  4.  கடவுள் எத்தனை அன்பானவர் என்பதை, அதாவது மனிதர்களுக்காக தனது உயிரைக் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்துகிறார்.
  5. சாத்தானின் தீமையை வெற்றிகொள்வதற்காக கடவுள் மரணமடைதார்.
  6.  மனிதர்களுடைய பாவங்களுக்காகவும் மட்டுமல்ல வியாதிகளுக்காகவும் கடவுள் மரணமடைந்தார்.
  7. மனிதர்களுடைய பாவங்களுக்காக கடவுள் மரணமடைந்தார்.


மனிதர்களுடைய பாவங்களுக்காக இயேசு சிலுவை மரணமைந்தார் என்பது பொதுவான கிருஸ்தவ நம்பிக்கையாக இருந்தாலும், மேற்கண்ட நம்பிக்கைகளின் தொடர்ச்சியே இது!

ஈஸா/இயேசுவை கடவுளாக சித்தரித்த பிறகு, கடவுள் எதற்காக மரணமடைய வேண்டும்? என்ற கேள்வி அன்றைய கிருஸ்தவர்களை வதைத்திருக்கிறது. அதற்கு விடை சொல்வதாக இப்படி பல கருத்துக்களை முன்வைத்தனர்.



மேற்கண்ட ஏழு கருத்துக்கள் காலப்போக்கில் இன்னும் வளர்ச்சியடையலாம். இந்த கருத்துக்கள் இஸ்லாமின் உளறல்களுக்கு சற்றும் குறந்தவைகள் அல்ல என்பதை சிந்திக்கும் திறனுள்ள எவராலும் அறிய முடியும்! இதன்மூலம், சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் ஈஸா/இயேசு என்பவர் எப்படி கடவுளின் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்பதை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். இங்கு கிருஸ்தவத்தை விமர்சிப்பது எனது நோக்கமல்ல என்பதனால் இவைகளை கடந்து செல்கிறேன்.

ஆள்மாறட்டக் கதையை தொடர்வோம்,
ஈஸா நபியின் உருவ அமைப்பிற்கு யூதாஸ் மாற்றப்பட்டான் என்ற பர்பனபாஸ் சுவிசேஷத்தின்  கருத்தை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதாஸ் என்ன தவறு செய்தான்? முப்பது வெள்ளிக்( காசுகளுக்)கு ஆசைப்பட்டு ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்தான். அவனது துரோகச் செயலுக்கு  தண்டனையாகவே ஆள்மாறாட்டத்தில் அவன் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான்.

யூதாஸ் காட்டிக் கொடுப்பதற்கு, ஈஸா நபி மறைந்திருந்து “கொரில்லா" முறைத் தாக்குதல்கள் நடத்திக் கொண்டிருக்கும் தீவிரவாத புரட்சிப்படை தளபதி இல்லையே! ஈஸா நபி யூத மக்களுக்கும், யூத அதிகரிகளுக்கும் நன்கு அறிமுகமானவர். அவரிடம் எந்த ரகசியமும் இல்லை. ஒவ்வொருவரும் அவரை நன்கு அறிவார்கள். தனது போதனைகளை எவ்வித ரகசியமுமின்றி வெளிப்படையாகவே செய்தார். அவர் தினமும் யூத கோவிலில், யூதமத குருமார்களுடனும், யூதமதச் சட்ட எழுத்தர்களுடனும், அங்கிருந்த மதவியாபாரிகளுடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர். ஈஸா நபியின் அற்புதங்கள் மூலமாகவும் அவரை எல்லோரும் மிக நன்றாக அறிவார்கள். ஈஸா நபியை கைது செய்ய அதிகாரிகள் வந்த போது, “நான் தினமும் இந்த கோவிலில் இருந்தவாறே உங்களுக்கு போதனை செய்தேன் அப்பொழுது என்னைக் கைது செய்ய உங்களது கரங்களை நீங்கள் உயர்த்தவில்லை. ஆனால் இப்பொழுது ஒரு திருடனைக்கைது செய்வதைப் போல இந்த நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்திருக்கிறீர்கள் “ என்றார்.

எனவே யூதாஸ்  முப்பது வெள்ளிக்(காசுகளுக்)கு ஆசைப்பட்டுமுத்தம் செய்து காட்டிக் கொடுத்ததாக கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வாதத்தற்காக அவன் ஈஸா நபியைக் காட்டிக் கொடுத்ததாகவும் அவனது துரோகத்திற்குப் பலனாக அவன் ஆள்மாறாட்டத்தில் மாட்டிக் கொண்டதாகவும் வைத்துக் கொள்வோம்.

அதாவது, ஆள்மாறாட்டத்திற்குப் பிறகு, மறு வினாடியிலிருந்து யூதாஸ் என்றொருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அதாவது யூதாஸின் உருவமும், குரலும் ஈஸா நபியைப்போல மாற்றப்பட்ட பிறகு யூதாஸின் உருவ அமைப்பில் ஒருவரும் அந்தப் பகுதியில் இல்லை. ஆனால், இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பிறகு யூதாஸ் மனவேதனையால் தற்கொலை செய்து கொண்டதாக பல கிருஸ்தவ ஆதாரங்கள் கூறுகிறது. இது எப்படி சாத்தியமாகும்?

சிலுவையில் மரணமடைந்த இயேசு நாதரின் உடல் அதாவது, குர்ஆனின் மொழியில் சொல்வதென்றால் ஈஸா நபியைப்போன்ற தோற்றமுடைய(யூதாஸ் என்ற)வரின் உடல் என்ன ஆனது? அது எப்படி எழுந்து சென்றது?

இயேசு கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்ததாகவும் சீடர்களுக்கு காட்சி தந்ததாகவும் கிருஸ்துவர்கள் கூறுகிறார்கள். கல்லறையிலிருந்தது உயிர்த்தெழுந்து சீடர்களுக்கு காட்சி தந்தது யூதஸா? யூதாஸிற்கு அத்தகைய அற்புத சக்தி வழங்கப்பட்டிருந்ததா?

இதைப் போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் எந்த பதிலும் இல்லை…!

பர்னபாஸ் சுவிசேஷம் இதற்கு பதிலைச் சொல்லுகிறது. சிலுவையில் மரணமடைந்த ஈஸா நபியைப் போன்ற தோற்றமுடைய( யூதாஸ் என்ற)வரின் அடக்கம் செய்யப்பட்ட உடலை, கடவுளுக்கு அதாவது அல்லாஹ்விற்குப் பயப்படாத ஈஸா நபியின் சீடர்களில் சிலர்,   கல்லறையிலிருந்து திருடி, மறைத்து, இயேசு உயிர்த்தெழுந்ததாகக் கூறி அனைவரையும் குழப்பத்திலாழ்த்தி நம்பவைத்ததாகக் குற்றம்சாட்டுகிறது.

Those disciples who did not fear God went by night [and] stole the body of Judas and hid it, spreading a report that Jesus was risen again; whence great confusion arose.
 (Gospel of Barnabas 218:1)

ஈஸா நபியை ஏற்றுக் கொண்ட மக்களை, "ஈஸா நபி மரணத்திற்குப் பின்னும் உயிர்த்தெழுந்தார்" என்ற பொய்ச் செய்தியின் மூலம் திசை திருப்பி அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி தவறி, கிருஸ்துவம் என்ற பொய்யான மதத்தை உருவாக்கிய ஈஸா நபியின் சீடர்களைப் பற்றி அல்லாஹ்விற்கு எதுவுமே தெரியவில்லை. பிணத்தை மறைத்து, பொய்யை இட்டுக் கட்டி பெரும் பாவத்தை நிகழ்த்திய, ஈஸா நபியின் சீடர்களைக் கண்ணியமானவர்கள் வெற்றியாளர்கள் என்று குர்ஆனில் கூறுகிறான். பர்னபாஸ் சுவிசேஷத்தை எழுதியவருக்குத் தெரிந்த செய்தி கூட அல்லாஹ்விற்குத் தெரியவில்லை. குர்ஆன் ஒரு முழுமையற்ற, தெளிவற்ற புத்தகம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

குழப்பம் இத்துடன் நிறைவடையவில்லை. ஈஸா நபியைப் போன்ற தோற்றத்திற்கு ஒப்பாக்கப்பட்ட அந்த ஒருவர் யார்? அவர் ஏன் அவ்வாறு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற கேள்விகளுக்கு, குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் எந்தவிதமான  விளக்கமும் இல்லை. ஆனால் குர்ஆன் விரிவுரைகளில்  விளக்கம் காணப்படுகிறது.

துரோகத்திற்கு தண்டனையாக யூதாஸின் குரலும் உருவமும் ஈஸா நபியைப் போல மற்றப்பட்டது என்ற விளக்கங்களை நம் இதுவரை பார்த்தோம்இனி வேறு விதமான செய்திகளையும் வாதங்களையும் பார்ப்போம்.
குர் ஆனின்4 :157-ம் வசனத்திற்கு இப்ன் அப்பாஸ் கூறும் விரிவுரை
(And because of their saying: We slew the Messiah Jesus son of Mary, Allah's messenger) Allah destroyed their man Tatianos. (They slew him not nor crucified, but it appeared so unto them) Allah made Tatianos look like Jesus and so they killed him instead of him; (and lo! those who disagree concerning it) concerning his killing (are in doubt thereof) in doubt about his killing; (they have no knowledge thereof save pursuit of a conjecture) not even conjecture; (they slew him not for certain) i.e. certainly they did not kill him.
(ஈஸா நபியை கொல்லவுமில்லை, சிலுவையில் அறையவுமில்லை. டேஸியானோஸ் என்பவர் ஈஸா நபியின் உருவத்திற்கு ஒப்பாக்கப்பட்டார். அவரையே அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். )

தனது இதே கருத்தை இப்ன் அப்பாஸ் மற்றொரு விளக்கவுரையிலும் உறுதி செய்கிறார்.
(And they schemed) they, i.e. the Jews, planned to kill Jesus, (and Allah schemed (against them)) Allah wished to kill their man Tatianos: (and Allah is the best of schemers) the strongest of those who have a will; it is also said this means: the best of Makers. [Sura 3 aya 54 ; ibn Abbas]

கிருஸ்த்துவம் உருவானதைப்பற்றி கூறும் 61:14 ம் குர்ஆன் வசனத்திற்கு இப்ன் கதீர் கூறும் விரிவுரை
Imam Abu Ja`far bin Jarir Al-Tabari reported that Ibn `Abbas said, "When Allah decided to raise `Isa to heaven, `Isa went to his companions while drops of water were dripping from his head. At that time, there were twelve men at the house. `Isa said to them, `Some of you will disbelieve in me twelve times after having believed in me.' He then asked, `Who among you volunteers that he be made to resemble me and be killed instead of me; he will be with me in my place (in Paradise).' One of the youngest men present volunteered, but `Isa commanded him to sit down. `Isa repeated his statement and the young man again stood up and volunteered, and `Isa again told him to sit down. `Isa repeated the same statement and the young man volunteered. This time, `Isa said, `Then it will be you.' The appearance of `Isa was cast upon that young man, while `Isa, peace be on him, was raised to heaven through an opening in the roof of the house. The Jews came looking for `Isa and arrested the one that appeared as him, killing him by crucifixion. Some of them disbelieved in `Isa twelve times, after they had believed in him.
They divided into three groups. One group, Al-Ya`qubiyyah (the Jacobites), said, `Allah remained with us as much as He willed and then ascended to heaven.' Another group, An-Nasturiyyah (the Nestorians), said, `Allah's son remained with us as much as Allah willed and He then rasied him up to heaven.' A third group said, `Allah's servant and Messenger remained with us as much as Allah willed and then Allah raised him up to Him.' The last group was the Muslim group. The two disbelieving groups collaborated against the Muslim group and annihilate it. Islam remained unjustly concealed until Allah sent Muhammad,..
(இமாம் அபு ஜாஃபர் இபின் ஜரீர் அல்-தபரி அறிவிப்பதாக இப்ன் அப்பாஸ் கூறுவது, ஈஸாவை சொர்க்கத்திற்கு உயர்த்த முடிவு செய்த பொழுது, ஈஸா தன் தலையிலிருந்து (வியர்வை) நீர் துளிகள் சொட்டிய நிலையில் தனது சீடர்களிடம் சென்றார். அவ்வேளையில், பன்னிரண்டு பேர் அந்த வீட்டிலிருந்தனர். ஈஸா அவர்களிடம் கூறினார், பன்னிரண்டு முறை என்மீது விசுவாசம் கொண்ட பின்னரும் உங்களில் சிலருக்கு என் மீது விசுவாசமின்றிப் போகும் என்றார். பிறகு அவர் கேட்டார், என் உருவ அமைப்பிற்கு ஒப்பாக்கப்பட்டு எனக்கு பதிலாக (சிலுவையில்) கொல்லப்பட்டு; (மறுமையில்) என்னுடன், என்னுடைய இடத்தில் சொர்க்கத்திலிருப்பதற்கும் உங்களில் தன்னையே அர்பணிப்பதற்கு யார் இருக்கிறார் ? என்று கேட்டார். அவர்களில் இளைஞர் ஒருவர் தன்னை அர்பணிக்க முன்வந்தார். ஆனால் ஈஸா அவரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா தனது கோரிக்கையை மறுபடியும் கூற அதே இளைஞர் எழுந்து நின்றார். ஈஸா மறுபடியும் அந்த இளைஞரை அமரும்படி கட்டளையிட்டார். ஈஸா  மறுபடியும் கூற, மறுபடியும் அதே இளைஞர் எழுந்து நின்றார். இம்முறை ஈஸா, "அப்படியானால் அது நீர்தான்" என்றார். அந்த இளைஞரின் உருவ அமைப்பு ஈஸாவைப் போல மாற்றப்பட்டது. அந்த வீட்டின் கூரையிலிருந்த திறப்பு வழியாக ஈஸா வானுக்கு உயர்த்தப்பட்டார். ஈஸாவைத் தேடி வந்த யூதர்கள் அவரைப் போன்ற உருவ அமைப்பிற்கு மாற்றப்பட்ட அந்த இளைஞரை சிலுவையில் அறைந்து கொன்றனர். அவர்களில் சிலருக்கு பன்னிரண்டு முறை ஈஸாவின் மீது விசுவாசம் கொண்ட பின்னரும் அவர்களில் சிலருக்கு  விசுவாசமின்றிப் போனது.
அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு குழுவான, அல்-யாக்கூபிய்யாவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ் எங்களுடனே இருக்கிறான் என்றனர். மற்றொரு குழுவான, அந்-நஸ்தூரிய்யவினர் கூறினர் அவர் (ஈஸா) இருந்த போதும் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் மகன் தங்களுடனே இருப்பதாகக் கூறினர். மூன்றம் பிரிவினர் கூறினர், அவர் (ஈஸா) இருந்த போதும் அல்லாஹ்விடம் வானுக்கு உயர்த்தப்பட்ட பிறகும் அல்லாஹ்வின் சேவகரும், தூதரும் தங்களுடனே இருப்பதாக கூறினர். இறுதியான குழுவினர் முஸ்லீம்கள். நம்பிக்கையற்ற இரு குழுக்களும் முஸ்லீம் குழுவை அழிப்பதற்காகக்கு எதிராக ஒன்றினைந்தனர். அல்லாஹ் முஹம்மதுவை அனுப்பும் வரை இஸ்லாம் அநியாயமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்தது…)

இப்ன் கதீர் கூறும் இந்தக் காட்சியை சிறிது கற்பனை செய்து பாருங்கள்.

ஈஸா நபி தன் சீடர்களின் முன் நின்று கொண்டு கூறுகிறார், சொர்க்கத்திற்குவரும்படி எனக்கு அழைப்பு வந்திருக்கிறது, நான் அங்கு சென்று இன்பங்களில் திளைக்கப் போகிறேன். யூதர்கள் என்னைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே எனக்கு பதிலாக  அடிகளையும், உதைகளையும், சவுக்கடிகளையும், கொடுமைகளையும், அவமானங்களையும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து கொடூரமான முறையில் சிலுவையில் மரணமடைய விரும்புபவர் உங்களில் யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பாரா? இதுதான் தெய்வீகத் தன்மையா?

வேறொருவர் ஒப்பாக்கப்பட்டாமல் ஈஸா நபியை சொர்க்கத்திற்கு உயர்த்த முடியாதா? ஈஸாவிற்குப் பதிலாக வேறொருவர் ஒப்பாக்கப்பட்டால் மட்டுமே, அல்லாஹ்வால் அவரை(ஈஸா) சொர்க்கத்திற்கு உயர்த்த முடியும் என்று கூறுவது  சிறுபிள்ளைத்தனமாகத் தெரியவில்லையா?

இப்ன் கதீர் கூறும் இந்த முட்டாள்தனத்தைவாதத்திற்காக உண்மையென்று வைத்துக் கொள்வோம். சிலுவையில் கொல்லப்பட்ட ஒருவரைத் தவிர மீதம் உள்ள பதினொரு சீடர்களுக்கும், ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டதும், சிலுவையில் கொல்லப்பட்டது ஈஸா நபி அல்ல என்பதையும் மிக நன்றாக எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அறிவார்கள். அபாண்டமான  பொய்ச் செய்திகளான இயேசுவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் கூறி அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய அவசியம் என்ன? இதற்காக அவரது சீடர்கள் உறவுகளையும், உடைமைகளையும் துறந்து பரதேசிகளாக சுற்றித் திரிந்தனர். பலர் கடுமையான அவமானங்களுக்கும்துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி கொடுமையான தண்டனைகளால் உயிரை விட்டனர் என்பது கிருஸ்த வரலாற்று செய்திகள்.

தெரிந்தே ஒரு பொய்யைத் திட்டமிட்டு பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

 சிலுவை மரணத்திற்குப்பின் ஈஸா/இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறுவது பகுத்தறிவிற்கு  ஏற்புடையது அல்ல! இயேசு உயிர்த்தெழுந்த கதை பர்னபாஸ் சவிசேஷம் கூறுவதைப் போல உண்டாக்கப்பட்டிருக்கலாம். குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதை அர்த்தமற்றது. அது அல்லாஹ்வை கையாலாகதவனாக சித்தரிக்கிறது.

பர்னபாஸ் சுவிசேஷத்துடனும் குர்ஆன் முரண்படுகிறது என்பது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்இயேசு நாதர் உயிர்தெழுந்த கதையும், குர்ஆன் கூறும் ஆள்மாறட்டக் கதையும் அர்த்தமற்றது. இப்படியொரு நம்பிக்கை ஏன் உருவானது?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வீடியோ ஆதரங்களுடன் வெளியிடப்பட்டது. இதை ஆள் மாறட்டம் என்று உறுதிபடக் கூறும் அவர்களது ஆரவாளர்களையும், அரசியல்வாதிகளையும், அறிவு ஜீவிகளையும்  நீங்கள்  இன்றும் பார்க்கலாம்.

இப்படியொரு (நஸ்தூரிய்யா - நெஸ்ட்ரோனிய) கிருஸ்துவர்களின் கூட்டம், முஹம்மது நபியின் காலத்தில் அன்று பாரசீகம், டமாஸ்கஸ் மற்றும் வட அரேபிய பகுதிகளில் வாழ்ந்து வந்தது. இவர்கள் ஈஸா/இயேசு மனித பண்புகளும் தெய்வீகத்தன்மையும் தனித்தனயே கொண்ட ஒரு மனிதரே என்றும் கடவுளால் மகனான தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவர் என்று நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை கிபி 428-431-ளில் நெஸ்டோரஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர்கள், கடவுளின் மகனைக் கொல்லவே முடியாது கடவுள் ஏதேனும் யூதரின் முகத்தை இயேசுவிற்கு ஒப்பாக மாற்றி அவனை சிலுவையில் அறைந்து கொல்லுமாறு சூழ்ச்சி செய்து தனது மகனைக் காப்பாற்றி விட்டார் என்று நம்பிவந்தனர். இந்தக்  கதை குர்ஆனையும் விட்டுவைக்கவில்லை.

இயேசு சிலுவையில் மரித்தார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கைக்கு யார் பொறுப்பு?

குர்ஆன் சொல்வது உண்மையான தகவலாக இருக்குமானால், ஈஸா நபியின் எதிரிகள் அவரை கொன்று விட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும் என்று அல்லாஹ் அவர்களை ஏமாற்றுவதற்கு முடிவு செய்தான். அதனால், “ஈஸா நபி சிலுவையில் மரித்தார்என்ற திட்டம் அல்லது நம்பிக்கை வருவதற்கு காரணமே அல்லாஹ் தானே! இது இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும். ஈஸா நபியின்  சீடர்கள் ஏமாற்றப்பட்டது "தற்செயலாக அல்லது ஒரு விபத்தாக நடந்தது" என்று சொல்வீர்களானால், நாம் இந்த முடிவுக்கு வரலாம், அது என்னவென்றால், “உலகத்தில் மிகப்பெரிய ஒரு பொய்யான மதம் உருவாகப் போகிறது" என்பதை அல்லாஹ் அறியாமல் இதை செய்தான் என்று நாம் முடிவு செய்யலாம். இல்லை, அல்லாஹ் இதை தெரிந்தே வேண்டுமென்றே செய்தான் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு பொய்யான மதங்களை உலகத்தில் உருவாக்கும் வியாபாரம் உள்ளது என்று முடிவு செய்யலாம். ஆக, இஸ்லாமின் இறைவனாகிய அல்லாஹ், ஒரு சின்ன விஷயத்தை கூட சரியாக செய்யத் தெரியாத "அறியாமையில்" இருக்கிறான் என்று முடிவு செய்யலாம், அல்லது "அவன் தெரிந்தே ஏமாற்றக் கூடியவன்" என்ற முடிவிற்கு வரலாம்
முஹம்மது நபியின் கூற்றுப்படிஈஸா நபியின் பணி ஒரு மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.  ஈஸா நபி 33 ஆண்டுகள் ஏகத்துவ போதனையை போதிப்பதில் கழித்தார் (அதிலும், அவர் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஏகத்துவத்தை போதித்தார் என்று குர்ஆன் கூறுகிறது), அப்படியிருந்தும், அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட (வானில் உயர்த்தப்பட்டசில நாட்களுக்குள் இஸ்ரவேல் மக்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர். முதல் பிரிவு மக்கள் ஈஸா நபியின் போதனை கேட்டவர்கள் ஈஸா நபி உயிர்தெழுந்ததாக நம்பியதால் "கிறிஸ்தவர்களாக" மாறிவிட்டனர், இவர்கள் கற்பனைகூட செய்யக்கூடாத பாவமான "ஷிர்க்" (இணைவைத்தல்) என்ற மாபெரும் பாவத்தை செய்தவர்களாயினர். இரண்டாம் பிரிவு மக்களாகிய இவர்கள் "ஈஸாநபியின்  போதனைக்கு" கீழ்படியாததினால், இவர்களும் "இறைவனின் மிகப்பெரிய நபியை" புறக்கணித்த அல்லது நம்பாத பாவத்திற்கு ஆளானார்கள். ஆக, ஈஸா நபியை நம்பினவர்கள், ஈஸா நபியை நம்பாதவர்கள் இந்த இரு பிரிவினரும் கடைசியில் நரக நெருப்பிற்கு ஆளானார்கள். அதாவது, ஈஸா நபி, கடைசி வரை முஸ்லீமாக இருக்கக்கூடிய ஒருவரைக் கூட அவரால் உருவாக்க முடியவில்லை, அப்படிப்பட்ட ஒருவரையும்  இஸ்லாமுக்கு மாற்றவுமில்லை!

அல்லாஹ், ஈஸா நபியை எல்லோரும் காணும்விதமாக தன்னளவில் வானிற்கு உயர்த்தி பாதுகாப்பளித்திருக்கலாம் அல்லது ஈஸா நபி, அல்லாஹ்வின் ஏமாற்றும் செயலில் தன் சீடர்களாகிய நீங்கள் ஏமாறக்கூடாது என்று அவர்களை எச்சரித்து இருந்திருக்கலாம். ஆனால், ஈஸாநபி  தன் வாழ்நாட்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட எச்சரிக்கை செய்தியை அல்லாஹ்விடமிருந்து பெறவில்லை, அதனால், தன்னை பின்பற்றியவர்களுக்கு இதைப் பற்றி சொல்லவில்லை. இதன் பலனாக, உலகத்தின் கோடான கோடி மக்கள், இப்போது இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர், ஏனென்றால், "இயேசு தங்கள் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்" என்று அவர்கள் நம்புகின்றனர். ஏன் இவர்கள் இப்படி நம்புகின்றனர் என்றால், இந்த செய்தியை முதலாவது பரப்பியதே "ஏமாற்றும் இறைவனாகிய" அல்லாஹ்வும், படுதோல்வி அடைந்த ஈஸா மஸிஹாவுமே.

குர்ஆனை நாம் கூர்ந்து கவனித்தால், அல்லா "கிறிஸ்தவ மார்க்கத்தை" தெரிந்தோ அல்லது தெரியாமலோ துவக்கினான் என்ற முடிவிற்கு வரலாம். அதோடு மட்டும் குர்ஆன் நின்றுவிடவில்லைதான் செய்த குழப்பத்தை சரி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் "கிறிஸ்தவ மார்க்கத்தை" அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதாகவும் கூறுகிறது.

ஈஸா நபியின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கைக்கு அடித்தளம் அல்லாஹ் அமைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த பொய்யான செய்தியை கிறிஸ்தவர்கள் பரப்புவதற்கும் மிகவும் நேர்த்தியாக அல்லாஹ் உதவினான்.

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது, பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(குர்ஆன் 61:14)

இந்த வசனம் மிகவும் முக்கியமான வசனம். ஈஸா நபியின் போதனையை ஏற்க மறுத்த யூதர்களுக்கு எதிராக, அல்லா ஈஸா நபியை  பின்பற்றியவர்களுக்கு உதவி செய்ததாக இந்த வசனம் சொல்கிறது. மற்றும் இந்த வசனத்தின்படி " ஈஸாநபியின்  சீடர்கள் வெற்றியாளர்கள் ஆகிவிட்டார்கள்" என்று குர்ஆன் சொல்கிறது. எனவே, யூதர்களை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக மாறிய மற்றும் ஈஸா நபியை பின்பற்றியவர்களாகிய இவர்கள் யார்? இந்த விவரத்திற்கு சரியாக பொருந்துகிறவர்கள் சரித்திரத்தின் படி "ஆதி கிறிஸ்தவர்கள்" தான்.

இவர்களின் நம்பிக்கை "இயேசுவின் மரணத்தின் மீதும், அவர் உயிர்த்தெழுதந்தார்" என்பதன் மீதும் இருந்தது. ஈஸா நபியின் போதனை மாற்றப்பட்டது என்றும், உண்மை இஞ்ஜில் மாற்றப்பட்டது என்றும்  வாதிக்க முடியாது, ஏனென்றால், இந்த மக்கள் கூட்டம் குர்ஆன் வசனம் சொல்லும் மக்கள் அல்ல. ஒருவேளை குர்ஆன் சொல்வததைப் போல, முதல் நூற்றாண்டில் "முஸ்லீம்-கிறிஸ்தவ" கூட்ட மக்கள் இருந்ததாக ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மற்றவர்களின் மீது வெற்றியுள்ளவர்களாக இருக்கவில்லை. அவர்கள் மிக சீக்கிரமாக அழிக்கப்பட்டார்கள். ஈஸா நபியை பின்பற்றியவர்களில், யூதர்களை விட அதிகமாக வலிமையானவர்களாக இருந்தவர்கள் கிறிஸ்தவர்களே. ரோம சாம்ராஜ்ஜியத்தில் அதிகமாக பரவியது இந்த கிறிஸ்தவமே. இந்த கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை, இன்று உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் போலவே இருந்தது. ஆக, குர்ஆன் வசனத்தின் படி இந்த கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வர அல்லாஹ் உதவியாக இருந்தான் அதாவது வெற்றியாளர்களாக மாற்றினான். பின் எப்படி, கிறிஸ்தவம் வளர்ந்து, உலகத்தின் மிகப்பெரிய மதமாக மாறியது.? இது அல்லாவின் வல்லமை சக்தியினால் வளர்ந்தது! மற்றும் கிறிஸ்தவ அடிப்படை செய்தியாகிய " ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்" என்ற செய்தியை உருவாக்கியது யார்? அல்லாஹ்தான்.

ஈஸா நபி பற்றிய குர்ஆனின் செய்திகள் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் பல பில்லியன் மக்களை ஏமாற்றினான் என்றே பொருள் தருகிறது. இது மட்டுமல்ல, ஈஸா நபியின் சீடர்களும் " ஈஸா நபி சிலுவையில் கொல்லப்பட்டார்" என்று நம்பும்படி செய்து அவர்கள் அல்லாஹ்வின் வழியை விட்டு விலக அல்லாஹ் காரணமானான்யூத, ரோம ஆட்சியாளர்களை ஏமாற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் திட்டம்  நிறைய பலவிதமான கேள்விகளை எழுப்புகிறது.
குர்ஆன் சொல்வது உண்மையானால், அல்லாஹ் ஒரு தவறான செய்தியை ஆரம்பித்து, அது உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாகும் வரை அதை வளர்த்தான் என்பது தெளிவாகிறது. குர்ஆன் சொல்வது உண்மையானால், ஈஸா மஸிஹாவின் வாழ்க்கையின் முடிவு, பல மக்களை அல்லாஹ்வின் வழியிலிருந்து விலகச் செய்தது. இப்படி வழிவிலகச் செய்தவர் ஈஸா மஸிஹாவைத் தவிர ஒருவரும் உலக சரித்திரத்தில் இருக்கமுடியாது. ஏனென்றால், இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின்  இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும்  அளவிற்கு அல்லாஹ்வின்  குர்ஆன் குழப்பமாக உள்ளது.

ஈஸா நபியை அல்லாஹ் வானிற்கு உயர்த்திக்கொண்டதாக முஸ்லீம்கள் விளக்கமளிக்கிறார்கள்

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
 (குர்ஆன் 4:158)

இவ்வசனத்தில் ஈஸாநபியை, உயிருடன் தன்னளவில் (வானத்திற்கு?) உயர்த்திக் கொண்டதாக பொருள்விளங்க முடிகிறதா?

வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
(குர்ஆன் 4:157)

அல்லாஹ்வால் உயர்த்திக் கொள்ளப்பட்ட ஈஸா/இயேசு,சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக  உயிருடன் இருப்பதாக குர்ஆன் கூறும் செய்திகளைப் பார்த்தோம் பின்வரும் குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்,

முஹம்மது (அல்லாஹ்வின்) தூதரன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் திட்டமாக(க் காலம்) சென்று விட்டனர் எனவே அவர்கள் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ உங்களுடைய குதிங்கால்களின் மேல் புறங்காட்டி திரும்பி விடுவீர்களா?
 (குர்ஆன் 3:144)
முஹம்மது நபிக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் இறந்துவிட்டதாக குர்ஆன் 3:144-ம் வசனம் கூறுகிறது. அப்படியானால் ஈஸா நபியும் இறந்து விட்டாரா?

ஆக, ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு ஈஸா நபி வானுக்கு உயர்த்தப்பட்டார், சிலுவையில் அறையப்படவில்லை, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார், சிலுவையில் மரணமடையவில்லை, சிலுவையில் மரணமடைந்தார்மரணத்திற்குப்பின் உயிருடன் எழுந்தார் என்று எப்படி வாதம் புரிந்தாலும் குர்ஆன் முரண்படுவதை எளிதாகக் காணலாம்.

Facebook Comments

28 கருத்துரைகள்:

Ant said...

//இறைவனின் குணம் எப்படி இருக்கும் என்று எல்லாரும் பொதுவாக நம்பிக்கொண்டு இருக்கிறார்களோ, அப்படி இல்லாமல் அல்லாஹ்வின் இறைபார்வை வித்தியாசமாக உள்ளது. ஒரு சராசரியாக சிந்திக்ககூடிய மனிதன் விமர்சிக்கும் அளவிற்கு அல்லாஹ்வின் குர்ஆன் குழப்பமாக உள்ளது. // சிந்திக்க இதில் அத்தாட்சி உள்ளது! சிந்திக்க மாட்டார்களா?

Anonymous said...

கேள்வி:
//கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன் என்பதுதானே ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை. ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில்(The Trinity) ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின்(The Trinity) மூன்று ஆளத்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.//
பதில்:
பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன் எண்ற வார்த்தை 3 நாள்கள் மட்டும் உலகப்பிரராகமாக மரித்து பிறகு மரணத்தை வேண்ற இயேசுவுக்கு எப்படி போறுந்தும் என்று கோஞ்சம் சிந்தித்து பார்த்தாலே புரியும் அவர் சதாரண மக்களைபோல் மரிக்கவில்லை ஏண். மரித்தார் மரணத்தை வேண்று உயிர்த்தேழந்தார். அவர் மரணத்தை வேண்றது மூலமே அவரின் அழிவில்லா தேவ்வதண்மையே காண்பிப்பதாக தேறியவில்லை உங்களுக்கு?. மரியாளின் மகனாகப் பிறக்கின்றார் என்ற வார்த்தை கூட அவர் ஆதியிலே வார்தையிருந்தது அந்த வார்தை மாமிசம் அகியது அடைப்பு குறிக்குள் உள்ள பைபிள் வசணத்தை நண்றாக கவணித்து வாசிக்கவும்

Anonymous said...

(யோவான் 1: 1 முதல் 18 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே(இயேசுவே) அவரை(பிதாவை) வெளிப்படுத்தினார்.)

Anonymous said...

யோவான் 1:1ம் அதிகாரத்தில் சோல்லபட்டுள்ளது போல் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. என்பது மூலம் ஏசு அதிமுதல் கோண்டு இருக்கிறவர்ராகவே இருக்கிரார் எண்பது தேளிவாக தேரிகிரதே? அப்படி காணமுடியாத இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக குராணிலும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்றது? அப்படு தேவணுடைய வார்த்தையின் வலிமை குற இது ஓரு சிறு உதாரணமாக கறுதலாமே? பிதா, குமாரண், இரண்டும் ஓண்றே என்பதும். தேவணிடத்தில் எப்போழது அதிமுதல் கோண்டு வார்த்தை அவர் வாயில் இறுந்ததோ அபாபோழது இறுந்தே இயேசுவும் இறுக்கின்றார் என்பது உங்களுக்கு எங்கள் வேதாகமத்தின் மூலம் குறிக்கோள்ள விரும்புகிண்றேன். அப்படி என்றால் கர்தரும், இயேசும் ஓரே இரைவண் என்பதும் மரியாளின் மகணாக பிறக்கும் முண்ணரே அவர் ஆதி முதல் கோண்டு இருக்கின்றார் என்பதே இதுமுதல் தேள்ளதேளிவாக தேரிகிரதே?.

Anonymous said...

கேள்வி:
//இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.//
பதில்:
இயேசு இல்லாவிட்டால் அந்த மூன்று நாட்கள் கர்த்தருக்கு தேவணாக சேயல்படமுடியாது என்று எப்படி தாங்கள் கூறமுடியும்?. அவர் சதாரண மணுஷ குமரணாகத்தானே பூமியில் அவதரித்தார். பிதாவுற்க்கு ஏற்ற மூழ சக்த்தியில் அவதரிக்கவில்லையே பூமியில்?
கேள்வி:
//இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?//

Anonymous said...

பதில்:
அது எப்படி தாங்கள் மற்றாரு கடவுள் என்று இயேசுவையும் கர்த்தரையும் பிரிக்கீன்றிர்கள் அப்படி பிரித்து பார்த்தணால் வந்த குழப்பமே தாங்களுடைய இந்த தவறான குற்றசாட்டின் காரணம். இந்த வசணத்தை படிக்கவும் யோவான் 10: 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதாவும் குமாரணும் ஓன்றான தேய்வம் என்று நான் மேலே உள்ள யோவான் 1ம் வசணத்தின் மூலம் பிதாவின் வார்த்தை இயேசு என்று சோல்லிவிட்டேன். அப்படி ஓன்றாயிருந்த சர்வ்வல்ல தேய்வணாகிய இயேசு மரிக்கும் போது அவருக்கு சம்மான அவரின் அங்கமான பிதாவினிடம் தானே அவரின் ஆன்மாவை ஓப்புவிக்க வேண்டும் சோல்லுங்கள் நன்பரே? இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.

Anonymous said...

அடுத்த குற்றசாட்டிற்க்கு பதில்:
சதாம் ஹூஸைன் போறுத்த வரை அவர் சதாரன மணிதன் துக்கு கயிற்றில் தோங்கி மரணம் அடையும் போழது வேதனை எற்படும் என்பது அவருக்கு தேரியும் மற்றும் அல்லாமல் சதாம் ஹூஸைன் சிறிதும் பயப்படவில்லை என்று எவ்வாறு தாங்கள் கூற இயலும் அமெரிக்காவை போறுத்தவரையில் அவர் என்ன மண்ணிப்பு கேட்டாலும் அவரே கோண்றுதான் அவார்கள் அவருக்கு பயம் இருந்த்து என்பதற்க்கு நல்ல அதாரம்மாக நான் ஓன்றை சோல்லவா அவரே அமெரிக்கா ராணுவம் பிடுத்தபோழது புனைக்கூட்டு போல் அமைதியாக இருந்தாரே அவரின் பயம் உங்கள் கண்களுக்கு தேரியாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்கு நன்றாகவே தேரிந்த்து. அவரை அமெரிக்கா ராணுவம் பிடிக்கும் மூன் நான் உயிருடன் சரண்டர் ஆக மாட்டேன் போராடி சாகுவேன் என்று சோண்ன அதே சதாம் ஹூஸைன் நாய் கூட்டு போல் மரணத்திற்க்கு பயந்து அமெரிக்கா ரணுவத்தினிடம் வந்த்தை தாங்கள் மரந்தாலும் நான் மரக்கவில்லை நன்பரே. மற்றும் அல்லாமல் சதாம் ஹூஸைன் மரணத்தின் அளவுகோலை புரிந்து கோள்ள அவரால் முடியாது தீர்கதரிசியும் இல்லை தேவனும் இல்லை. அணால் இயேசு தேய்வன் அவருக்கு சிலுவை தன்டனை கிடைப்பதற்க்கு முன்னரே அதின் வலி, கஷ்டம், தேரிந்த்தால்தான் அவர் பயந்து நடுங்க காரணம். மற்றும் அல்லாமல் இயேசு முழ தேய்வனாக பூமியில் அவதரிக்கவில்லை அவர் தேவணாக இருந்தும் தன்னை தாழ்த்தி மணுஷ குமரணாகதான் அவர் பூமியில் அவதரித்தார்.
கிழே கோடுக்கபட்டுள்ள இந்த கருத்தை ஓட்டியுள்ள பைபிள் வசனத்தை வாசிக்கவும்.
பிலிப்பியர் 2 அதிகாரம் 5 முதல் 11 வசனம்வரை வாசிக்கவும்
5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது;
6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்(பிதாவும் இயேசும் சம்மாணவர்கள் என்றாலும்) கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7 (தம்மைத்தாமே வெறுமையாக்கி, (அடிமையின் ரூபமெடுத்து), (மனுஷர் சாயலானார்.)
8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,(இயேசுவை தேவனாக தோழது கோள்ளும் படிக்கு.)
11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
இந்த ஏழாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது போல் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். என்பதின் மூலம் அவர் கடவுள் என்பதும் எதற்க்காக பூமியில் வந்தார்?. மணிதர்களின் பாவத்திற்க்காக மிகுந்த பாடுபட்டு சிலுவை மரணம் அடையவேன்டும் பின்பு மூண்றாம் நாள் உயிர்த்தேள வேண்டும் என்பதற்க்காக தானே அவர் பூமியில் வந்த்து?. அதனால் அவர் பூமியில் சதாரண மணுஷ குமாரன்னாக இருந்தும் சிலுவை மரணத்தின் கஷ்டம் ஏற்கனவே இயேசுவுக்கு தேரிந்தால் தான் அவர் இவ்வாரு பயந்துத்து. சிலுவை மரணத்தில் மணிதனாகவே மரித்தார் முழ கடவுள் தன்மையுடன் இல்லை. அதணால் சதாரன மணிதர்களுக்கு இருப்பது போல் பயம் இருக்கவே சேய்யும்.

Anonymous said...

கேள்வி:
//1. சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில், மனிதர்களை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்க சாத்தான் கேட்ட பலியே கடவுளின் மரணம். இங்கு கடவுள், சாத்தானை ஏமாற்றிவிட்டார். அதாவது கடவுள் உயிர்த்தெழக் கூடியவர் என்பதை சாத்தான் அறியவில்ல.
3. சாத்தானை திருப்பதிப்படுத்த அவனுக்கு கொடுத்த விலையே கடவுளின் சிலுவைமரணம்.//
பதில்:
சாத்தானுக்கு கடவுளிடம் கேட்ட பலியில்லை இதையும் தாங்கள் தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள் பைபிளை போருத்த வரை மணிதர்கள் என்பவர்கள் சிறுவயது தோடங்கி பாவம் சேய்பவர்களாகவே சோல்லியுள்ளது. இந்த வசணத்தை வாசிக்கவும். ஆதியாகம்ம் 8 அதிகாரம் 21 வசணம் மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது இதன் மூலம் ரோம் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்;(நரகம்) தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான(சிலுவை மரணம்) நித்தியஜீவன்.(பரலோகம்) மணிதர்களை பாவத்தில் இறுந்து விடுவிக்க ஓரு பலி அவசியம் பைபிளில் பளய ஏற்பாட்டு காலத்தில் (இந்துக்களும் சேய்வதைபார்கலாம்) பாவத்திற்க்காக எந்த குறையும் இல்லாத ஆட்டை பலியிடுவார்கள் அது உணமாக இருக்கவும் கூடாது. ஏந்த குறையும் இருக்க கூடாது எந்த அட்டுடணும் இனைந்திருக்க கூடாது. அப்படி பார்க்கும் போழது எந்த பாவம் இல்லாத மணிதரும் இப் பூமியில் இல்லை அப்படியிருக்கும் சுழ்நிலையில்தான் பிதா தன் குமாரனை இப்பூமியில் அனுப்பினார். இந்த பைபிள் வசணத்தை படிக்கவும். (ரோம் 8: 3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். )
(யோவாண் 1: 29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் (சிலுவை மரணத்தின் மூலம்) சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணம் அடைந்து மூன்றாம் நாள் உயிர்த்தேழந்த்தின் மூலம் இனிமேல் பாவத்திற்க்காக ஆட்டை பலியிட தேவையில்லை.
கேள்வி:
//ஈஸா/இயேசுவை கடவுளாக சித்தரித்த பிறகு, கடவுள் எதற்காக மரணமடைய வேண்டும்?//

பதில்:
கடவுளுக்குதான் இந்த தகுதி உள்ளது என்று நான் மேலே உள்ள வசணத்தின் மூலம் ஏற்கனவே சோல்லிவிட்டேன் இனியாவது பைபிளை நன்றாக படித்து விட்டு கருத்து கூற வேண்டும் என்று கேட்டுக் கோள்கின்றேன்.
உங்கள்
J. ஷாபு.

Anonymous said...

இயேசுவின் மரணம்

http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspx

Anonymous said...

Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspx) நான் சேண்று பார்த்தேன் அதில் குறிப்பிடபட்டுள்ள அனைத்து விவரங்களும் ஏற்புடையதாகவும் இல்லை அறிவியலுக்கும் பகுத்தரிவிற்க்கும் கோஞ்சம் கூட சம்பந்தம்யில்லை பைபிளை முழவதுமாக படிக்காத இன்னோறு அப்பாவியின் கருத்தேயாகும் எப்படியேன்றால் இந்த கட்டுரையின் முக்கிய கருத்தே வில்லியம் ஷ்ரோடர் என்ற ஓருவரின் உடல் நாள்களையும் நேரத்தையும் அறிந்துகோள்ளவில்லையாம் அதுமட்டும் இன்றி அவருடைய குடும்பத்தினரையும் அடையாளம் கண்டுகோள்ளவில்லையாம் ஏப்படி அவர் இருந்தாரோ அவ்வரான சுழ்நிலையில்தான் இயேசுவும் இருந்த்தாக பைபிளை படிக்காமல் உளரியுள்ளார் அந்த அப்பாவி மணிதர். கிழே படியுங்கள் அவரின் தவறான அணுகுமுறையே அதில் இயேசுவை சிலுவையில் அறைவதற்க்காக கோண்டுபோவதற்க்கு முண்ணால் அவர் சுற்றிலுமிருந்த நிகழ்வுகளை அறிந்து இருந்தார் ஏன்று அவர் ஓரு வசணத்தை மட்டும் எடுத்துக் கோண்டு தப்பித்து கோள்ள நினைக்கின்றார்.

முதலில் அவரின் கூற்றசாட்டை பருங்கள்

//சுவிசேஷங்கள், கைது செய்யப்பட்ட இயேசுவின் உடல், அதனைச் சுற்றிலுமிருந்த நிகழ்வுகளை அறியாததாக இருந்தது என்று தெளிவாகக் கூறுகின்றன:

பிரதான ஆசாரியர்கள், இடைப்பட்ட நேரத்தில், இயேசுவுக்கு எதிராக

அநேக குற்றங்களை சாட்டினார்கள். பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ,

இவர்கள் உன் மேல் எத்தனையோ குற்றங்களைச்

சாட்டுகிறார்களே, அதற்கு நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா?

என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும்

சொல்லவில்லை. அதனால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். [மார்க் 15:3-5]

Anonymous said...

எனது மறுப்பு அடைப்பு குறிக்குள் உள்ள வசணத்தை நன்றாக கவணித்து வாசிக்கவும்.

மத்தேயு 26: 57,66

57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.

58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.

59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்;

60 ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து:

61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள்.

62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.

64 (அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.) (அவர் பேசமால் இறுந்தார் என்று சோண்ண அவரின் குற்றசாட்டு எவ்வளவு அறியாமை என்று தேறிகிறதா)

65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

66 உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள்.

அடுத்த தவறை பாருங்கள்

யோவான் 19: 25 முதல் 30வரை

25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26 (அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். ) (இயேசுவுக்கு அந்த வில்லியம் ஷ்ரோடர் போன்று உறவினர்களை அறியவில்லை என்ற குற்றசாட்டும் இந்த வசணம் மூலம் தவிடு போடி அகிவிட்டது என்று குறிக்கோள்ள விரும்புகின்றேன்.)

28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
இதன் மூலம் Anonymous வேளியிட்ட கட்டுரை ஓரு பாண சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போண்று அனைத்தும் தவரு என்று குறிக்கோள்ள விரும்புகின்றேன் வேத்த்தின் மூலம்.

ஷாபு

ஆனந்த் சாகர் said...

ஷாபு,

நீங்கள் சுயமாக சிந்திக்க விரும்பாத ஒரு சராசரி கிறிஸ்தவர் என்பது தெரிகிறது. சுய அறிவை இழந்துவிட்ட உங்களுடன் அறிவுரீதியாக விவாதம் புரிவது வீண்வேலை. உங்களோடு ரொம்ப கஷ்டமப்பா!!!

ஆனந்த் சாகர் said...

ஷாபு,

/// Anonymous சோண்ண வேப்தளத்தை (http://www.icschennai.com/QuranArticles/TamilAppendices/TamilAppendix22.aspx) நான் சேண்று பார்த்தேன்///

இந்த அனானி ரஷாத் கலீபா என்ற கயவரின் பின்பற்றிகளில் ஒருவர். அந்த கூட்டம் தமிழ் நாட்டிலும் தோன்றி உள்ளது. அந்த கூட்டத்தின் இணைய தளத்தை இவர் இங்கு பிரபல படுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்.

தஜ்ஜால் said...

J. ஷாபு.
வாருங்கள் ஷாபு,
மிகவும் பொங்கி விட்டீர்கள் என்று தோன்றுகிறது.
//இரைவன் வார்தை மாமிசம் அகியது எண்பது மூலம் கர்த்தரின் வார்த்தை தாண் குமாரண் என்பதை தேளிவாகுகிறதே. தேவன் வார்த்தை மூலம் தானே உலகத்தை படத்ததாக குராணிலும் எங்கள் பரிசுத்த வேதகமூம் குறுகின்றது? // குர் ஆனையும் ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் போலிருக்கிறதே? பலே பலே!!
//இயேசு இல்லாவிட்டால் அந்த மூன்று நாட்கள் கர்த்தருக்கு தேவணாக சேயல்படமுடியாது என்று எப்படி தாங்கள் கூறமுடியும்?. அவர் சதாரண மணுஷ குமரணாகத்தானே பூமியில் அவதரித்தார். பிதாவுற்க்கு ஏற்ற மூழ சக்த்தியில் அவதரிக்கவில்லையே பூமியில்? // அப்படியா? இயே செய்தாகக் கூறப்படும் அற்புதங்களை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?
// இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.//

இப்பொழுது உங்களுக்கான முதல் கேள்வி கேள்வி,
திரித்துவம் என்றால் என்ன?

தஜ்ஜால் said...

J. ஷாபு.

///பதில்:
அது எப்படி தாங்கள் மற்றாரு கடவுள் என்று இயேசுவையும் கர்த்தரையும் பிரிக்கீன்றிர்கள் அப்படி பிரித்து பார்த்தணால் வந்த குழப்பமே தாங்களுடைய இந்த தவறான குற்றசாட்டின் காரணம். இந்த வசணத்தை படிக்கவும் யோவான் 10: 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். பிதாவும் குமாரணும் ஓன்றான தேய்வம் என்று நான் மேலே உள்ள யோவான் 1ம் வசணத்தின் மூலம் பிதாவின் வார்த்தை இயேசு என்று சோல்லிவிட்டேன். அப்படி ஓன்றாயிருந்த சர்வ்வல்ல தேய்வணாகிய இயேசு மரிக்கும் போது அவருக்கு சம்மான அவரின் அங்கமான பிதாவினிடம் தானே அவரின் ஆன்மாவை ஓப்புவிக்க வேண்டும் சோல்லுங்கள் நன்பரே? இதன் மூலம் பிதாவும் குமாரனும் ஓரே தேய்வம் என்றும் மகத்துவத்தில் சம்மானவர்கள் என்று தேள்ள தேளிவாக தேரிகிறதே.//
இதைவிட தெளிவாக உளறுவது எப்படி என்பதை இனிமேல்தான் யாராவது கண்டுபிடிக்க வேண்டும்!

மத்தேயு 27:40
சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில்,, ஏலி ஏலி லாமா சபக்தானி என்று கதறினார். இதன் பொருள், என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்பதாகும்.

இயேசு கடவுளா? சிரிப்புதான் வருகிறது. முதலில் திரித்துவத்தை விளக்குங்கள் பிறகு இதைப்பற்றி தொடர்கிறேன்.

தஜ்ஜால் said...

J. ஷாபு.

// அமெரிக்காவை போறுத்தவரையில் அவர் என்ன மண்ணிப்பு கேட்டாலும் அவரே கோண்றுதான் அவார்கள் அவருக்கு பயம் இருந்த்து என்பதற்க்கு நல்ல அதாரம்மாக நான் ஓன்றை சோல்லவா அவரே அமெரிக்கா ராணுவம் பிடுத்தபோழது புனைக்கூட்டு போல் அமைதியாக இருந்தாரே அவரின் பயம் உங்கள் கண்களுக்கு தேரியாவிட்டாலும் நடுநிலையாளர்களுக்கு நன்றாகவே தேரிந்த்து. அவரை அமெரிக்கா ராணுவம் பிடிக்கும் மூன் நான் உயிருடன் சரண்டர் ஆக மாட்டேன் போராடி சாகுவேன் என்று சோண்ன அதே சதாம் ஹூஸைன் நாய் கூட்டு போல் மரணத்திற்க்கு பயந்து அமெரிக்கா ரணுவத்தினிடம் வந்த்தை தாங்கள் மரந்தாலும் நான் மரக்கவில்லை நன்பரே.//

ஆக கைது செய்யப்பட்ட பொழுது சதாம் ஹுசைன் மரணத்தை எதிர்கொண்டு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டீர்கள். ஆனால் கடவுளான(?) இல்லை மூன்றில் ஒன்றான தெய்வம் இல்லை மூன்றில் ஒரு தன்மை இல்லை மகத்துவத்தில் சம்மான தெய்வம்...(தலை சுற்றுகிறது) எதற்காக புலம்பிக் கொண்டே உயிரைவிட வேண்டும்? சதாம் ஹுசைன் என்ற ஒரு அற்ப மனிதனுக்கு இருந்த தெளிவு கடவுளுக்கு இல்லாமல் போய்விட்டதே?

தஜ்ஜால் said...

J. ஷாபு

//தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.//
// .(பரலோகம்) மணிதர்களை பாவத்தில் இறுந்து விடுவிக்க ஓரு பலி அவசியம் பைபிளில் பளய ஏற்பாட்டு காலத்தில் (இந்துக்களும் சேய்வதைபார்கலாம்) பாவத்திற்க்காக எந்த குறையும் இல்லாத ஆட்டை பலியிடுவார்கள் அது உணமாக இருக்கவும் கூடாது. ஏந்த குறையும் இருக்க கூடாது எந்த அட்டுடணும் இனைந்திருக்க கூடாது. அப்படி பார்க்கும் போழது எந்த பாவம் இல்லாத மணிதரும் இப் பூமியில் இல்லை அப்படியிருக்கும் சுழ்நிலையில்தான் பிதா தன் குமாரனை இப்பூமியில் அனுப்பினார்.//

மனிதர்கள் பாவம் செய்தால் ஆட்டுக்குட்டியை பலியிடுவார்களாம். வேடிக்கையாகத் தெரியவில்லையா? பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், ஆடு என்ன பாவம் செய்தது?

பிதா தனது குமாரனை இப்பூமியில் அனுப்பி மனிதர்கள் செய்த பாவத்திற்கான செய்து கொண்டார் என்கிறீர்கள். தனது குமாரன் எப்படியும் மரணமடையமாட்டான் என்பது தெரிந்தே இதைச் செய்திருக்கிறார் உங்கள் பிதா! கடவுளுக்கு தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தும் மனிதனின் ஏமாற்றுத்தனத்திற்கு சற்றும் குறைந்ததில்லை உங்கள் பிதாவின் இந்த பலி நாடகம்!
சரி..! உங்களது நம்பிக்கைகளின்படி மனிதர்களின் பாவத்தை மன்னிக்கப் போவது யார்? பிதா தானே? இறப்பில்லாத தனது மகனை, இறப்பது போன்று நாடகம் நடத்தி, மனிதர்களின் பாவத்தை மன்னிக்க வேண்டிய தேவையென்ன? ஏன் நேரடியாக மனிதர்களின் பாவத்தை மன்னிக்க முடியாத அளவிற்கு அவருக்கு என்ன இடையூறு?

இந்தக் கோமாளித்தனத்தை தியாகம் என்று உளறிக் கொண்டிருக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

// உங்களோடு ரொம்ப கஷ்டமப்பா!!!///

என்ன செய்வது?

மதம்தான் வேறு மற்றபடி மதவாதிகள் ஒரே ரகம்தான்!

SAGODHARAN said...

ஏனப்பா யாரு இந்த ஷாபு? இருக்குற அக்கப்போரு பத்தாதுனு இது வேறயா? ஏற்கனவே குரானிலும்,புராணத்திலும் இருக்குற நாறிப்போன அடிமை சட்டங்களை விட பைபிளில் காணப்படும் அடிமை சட்டங்கள் சற்று கூடுதலாக நாறிப்போனதுதான்!

இதெலாம் ஷாபுவுக்கு தெரியாதா?

Unknown said...

பகாய் என்ற புது மதம் வந்துருக்கு அதிலும் அதே கூத்துத்தான். ஒரே குஸ்தமப்பா. இவர்கள் கிரிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏசுநாதரைப் பற்றி தவராக புரிந்துக் கொண்டுள்ளனர் என் கின்றனர். இவர்களிடமெல்லாம் இருந்து நம்மைக் காப்பாற்ற ஏசுனாதரே திருடனைப்போலோ இல்லை திருடிவிட்டோ வந்து என்னாதான் நடந்தது என்று சொன்னால் தேவலை.

univerbuddy said...

Dear Dajjal,

This is a comment unrelated to the current post.

I request you to come to the following Vinavu's post and comment on your experiance of circumcision.

http://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-121268

I am giving here 3 relevant comments.

-----------------------------------------
My comment

திப்பு,

//சிறுவயதில் ”சுன்னத்” செய்யப்பட்ட முசுலிம் ஒருவர் எனக்கு முன்தோல் இல்லையே என வருந்தினால் அப்போது வாருங்கள்,மேற்கொண்டு பேசுவோம்//

”சுன்னத்” செய்யத் தயார் செய்யப்பட்ட சிறுவன் வேண்டாமென்று கெஞ்சுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

கத்தி பட்டவுடன் வலிதாங்காமல் வேண்டாமென்று கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

முன் தோலை குறியின் மொட்டிலிருந்தி உரிக்கும் போது வலியின் உச்சத்தில் விடுங்கடா சைத்தான்களா என்று கூட கதறுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.

கதறிக்கதறி மூர்ச்சையாகி விடுவானே. அப்போது என்ன செய்கிறீர்கள்.
---------------------------------------------

Tippu's comment

வெறும் கற்பனை.சுன்னத் செய்வதற்கு முன் சிறு சிறு தேங்காய் துண்டுகளை வாயில் போட்டு மெல்ல சொல்வார்கள்.அந்த சிறுவன் மென்று கொண்டிருக்கும்போது திடீரென சுன்னத் செய்பவர் சிறுவனின் தொடையில் அடிப்பார்.ஏன் இந்த கிழவன் திடீர்னு நம்மள அடிக்கிறான் என அந்த சிறுவன் திகைத்து அடியின் வலியை உணரும்போதே சுன்னத் செய்யப்பட்டுவிடும்.மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.

---------------------
My comment

Tippu,

//மிஞ்சி மிஞ்சி போனால் ஐந்து அல்லது ஆறு வினாடிகளுக்கு மேல் ஆகாது.//

இது போன்ற உணர்ச்சியற்ற பதிலைத்தான் உங்களால் கொடுக்க முடியும்.

அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளில் எத்தனை நொடிகள்? அந்த நொடிகளில் சிறுவனின் நிலை என்ன என்பது தானேக் கேள்வி.

சிறுவனின் ‘தொடையில் அடிப்பதற்கு’ முன்னால், அவனின் குறியின் மீது கைவைப்பதற்கு முன்னால், அவன் ஆடைகளை களைய மாட்டீர்களா? அவன் தான் அம்மணமாவதால் திகைக்க மாட்டானா? அவனை ஒரு குறிப்பிட்ட நிலையி்ல் அமரவைக்க மாட்டீர்களா? அவனை அசையவிடாமல் தடுக்க அவனின் கால்களையும் கைகளையும் நான்கைந்து பேர் சேர்ந்து பிடித்துக் கொள்ள மாட்டீர்களா?

அந்த சமயத்தில் அந்த அப்பாவிச் சிறுவன் தேங்காய் தான் மென்று கொண்டு இருப்பானா? வேண்டாம் என்று கெஞ்சமாட்டானா???…

அந்த ஐந்து அல்லது ஆறு வினாடிகளின் மரண வேதனைக்குப் பிறகு ஒன்றுமில்லையா? காயம் ஆறும் வரை, பல நாட்கள், ஒவ்வொரு முறை குறி அசைக்கப்படும் சிறநீர் கழிக்கும் போதும் (ஏன் இருமும் போது) கூட வலிக்குமே.?

I will request Senkodi (senkodi dot wordpress dot com) and Dajjal (iraiyillaislam dot blogspot dot com) by commenting in their sites, to comment here about their experiances. Let us see.

-------------------------------------

ஆனந்த் சாகர் said...

Suresh Nand ,

//பகாய் என்ற புது மதம் வந்துருக்கு அதிலும் அதே கூத்துத்தான். ஒரே குஸ்தமப்பா. இவர்கள் கிரிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏசுநாதரைப் பற்றி தவராக புரிந்துக் கொண்டுள்ளனர் என் கின்றனர். //

பஹாய் மதம் 19 ஆம் நூற்றாண்டில் ஈரானில் தோன்றியது. அதை தோற்றுவித்த பஹாவுல்லாஹ் ஈரான் நாட்டு மன்னரால் சிறையில் அடைக்கப்பட்டு தன்னுடைய மரணம் வரை சிறையிலேயே வாழ்ந்தவர். அவர் சிறையில் இருந்தபடியே, கடவுளுடைய வஹி என்று கூறிக்கொண்டு சில புத்தகங்களை எழுதினார்.

நான் நபித்துவம், தூதுத்துவம் என்கிற ஆப்ரஹாமிய மதங்களின் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில் என்னுடைய தேடல்களின்போது பஹாவுல்லாஹ்வின் சில நூல்களை படித்து பார்த்தேன். அதில் உள்ள உளறல்களை பார்த்தபோது பஹாவுல்லாஹ் ஒரு போலி தூதர் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனாலும் பஹாவுல்லாஹ் வன்முறையை போதிக்காத, அமைதியை விரும்புகிற ஒரு மதத்தை தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார். பைபிள் மற்றும் குரானின் வன்முறை போதனைகள் அந்த கால மக்களுக்காக கொடுக்கப்பட்டன என்றும் அவைகள் இனி வரும் காலத்திற்கு பொருந்தாதவை என்றும் கடவுள் அன்பையும் அமைதியையும் விரும்புகிறார் என்றும் கூறினார்.

நாம் கேட்க விரும்புவது என்னவென்றால், கடவுள் அன்பையும் அமைதியையும் விரும்புகிறார் என்றால், அவர் பைபிளையும் குரானையும் வழங்கியபோது எதை புகைத்துக்கொண்டு இருந்தார் என்பதுதான்.

Dr.Anburaj said...

யுதமக்கள் தங்களை ரட்சிக்க கிறிஸ்து -மெசியா - என்ற இறைவனின் தூதரை அனுப்புவார் என்றும் நம்பினார்கள். எலியா என்ற தீர்க்கதரிசி சுழல் காற்றில் பரலோகம் சென்று விட்டாராம்.எலியா மீண்டும் வருவார்.கிறிஸ்து பின் வருவார் என்பது யுதர்களின் விசுவாசம். இயேசு தன்னை கிறிஸ்து என்றார்.எலியா புனித யோவான் என்றார்.எலியா சுழல்காற்றில் பரலோகத்திற்குச் சென்ற உடலோடுதான் வருவார்.எனவே யோவான்தான் எலியா என்ற கருத்தை யுத சபை ஏற்கவில்லை. இயேசு எலியாவின் மறுபிறவி என்பதுபோல் ஆவியிலும் தத்தவத்திலும் அவன் எலியா என்றார்.எப்படியோ எலியா பிறககவில்லை. இயேசு கிறிஸ்து அல்ல என முடிவு செய்யப்படுகிறது. தன்னை பொய்யாக” கிறிஸ்து-இறைவனின் தூதர்” என்று சொன்ன இயேசு வேதப்புரட்டன் என்ற குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையாக சிலுவையில் அறையப்பட்டார். காப்பாற்றப்பட்டு பிற நாடுகளில் உள்ள யுதர களைக் காண சென்று விட்டாா் என்றுஉள்ளது. புற சாதியினா வீடுகளுக்குச் செல்லாதீர்கள்.சாமாரியார் பட்டணங்களில் பிரசேகிக்காதிர்கள்.காணாமல் பேன ஆடுகளாகிய இஸ்ரவேலா் சந்ததியினா்வீடு களுக்கு மட்டுமே போங்கள் என்ற கருத்து கவனிக்கத் தக்கது. பைபிளில் ஆரம்பத்திலேயே சீடா்கள் இக்கதையை பின்னுக்கு தள்ளிவிட்டு இயேசுபைக்குறித்து பல தவறான கருத்துக்களை - இயேசு உலக மக்களின் பாவத்துக்காக சிலுவையில் உயிர் துறந்தார்- இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் - சிலுவையில் உயிர்த்தெழுங்தார -எழுதி பாழாக்கி விட்டனார். இன்று சபை அக்கருத்தக்களை எற்றுக் கொள்ள முடியாமலும் நீக்க முடியாமலும் தடுமாறுகின்றது. இந்துவாகிய சுவாமி விவேகானந்தருக்கு ”நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கின்றோம்.என்னைக்கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்ற இயேசு ஒரு அத்துவைதி.ஜீவன் முக்தர்.அவர் கிறிஸ்துவா,எலியாவா,சிலுவையில் செத்தாரா இல்லையா? பாவத்தை ரச்சிக்க வந்தாரா? இல்லையா ? என்ற கேள்விகள் குப்பைக்கு தள்ளுகிறார். கல்லால் எறிந்து கொல்லுங்கள் என்று விபச்சாரம் செய்த பெண்ணை இயேசுவின் முன் சநிறுத்தியயோது” உங்களின் யோக்கியன் முதல் கல்லை ஏறியக் கடவன் ” என்ற இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையிலம் ” பிதாவே இவர்களை மன்னியும்.தாங்கள் செய்வது என்ன என்று அறியமாட்டார்கள்” என்று பிரார்த்தனை செய்த இயேசு சிறந்த மனிதர்.புனிதர். இந்து மதம் போற்றும் ஜவன் முக்தர். சவை வேறு இயேசு வேறு எனப் பார்த்தால் இயேசுவின் சிறப்பு தெரியும்.ஆன்மீகம் என்பது சபைக்கு ிமாத்திற்கு உறுப்பினராக இருப்பது என்பதல்ல.மனிதன் ஜிவன் முக்தனாக மாற வேண்டும். அந்தணனாவதும் காட்டி வந்து ஆண்டாய் என்று மாணிக்க வாசகர் போற்றுகின்றாா். இந்தியாவி்ன் நோக்கம் ” மக்களை பிறாமணன் ஆக்க வேண்டும் என்பதே.

Dr.Anburaj said...

"Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்
இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?

Dr.Anburaj said...

"Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்
இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?

Dr.Anburaj said...

"Elia should precede christ "-எலியா கிறிஸ்துவுக்கு முன் வருவார் ” என்ற யுதர்களின் விசுவாசத்தை குரானும் முகம்மதுவும் மறந்து விட்டார்கள்.எனவேதான் முகம்மது அல்லா சொன்னார் என்று ஒரு புது கட்டுக்கதையை உருவாக்கி விட்டார். காதியானி முஸ்லீம்களும்
இயேசு காஷ்மீரில் இறந்தார் என புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இயேசுவின் பையிள் கூறும் வரலாறு ஜோடிப்புகள் நிறைந்தது. கிரேக்க நாட்டின் உள்நாட்டு கதைகளுக்கு எற்ப அவர்களுக்கு கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான இயேசுவின் வரலாறு எழுதப்பட்டள்ளது. பைபிள் பொய்கள் நிறைந்தது. Bible lacks fidelity of facts. எனது கடிதத்திற்கு விம்ர்சனங்களே இல்லையே ஏன் ? ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதா?

Dr.Anburaj said...

Posts Tagged ‘பிரம்மச்சரியம் ஏற்படும் நன்மைகள்’
சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..


சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
Close Path
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்)

Dr.Anburaj said...

முகம்மது பற்றிப் படித்து மனம் மிகவும் பாழ்பட்டுபோய்விட்டது.மேலும் தொடர்ந்து ஒழுக்கக் கேடான தகவல்களைப்பற்றியே சிந்தித்தால் நமது மனமும் தரம் கெட்டுப் போய்விடும்.காபீர்களின் மதம் என்று அரேபிய வல்லாதிக்க காடையர்களால் இழிவு படுத்தப்பட்டுவரும் இந்தியாவில் எவ்வளது அற்புதமான சமூக கருத்துக்கள் உள்ளன் என்பதை அனைவரும் அறியும்போமு ஒரு பெருமிதம் மகிழ்ச்சி பொங்குகின்றது. தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் போலுள்ளது.