Tuesday 29 October 2013

விவாதம் :

பூமராங் Vs தஜ்ஜால்

இரண்டு மாதங்களுக்கு முன்   எனக்கும் ”பூமராங்” என்ற புனைப்பெயரிலிருக்கும் ஒரு இஸ்லாமிய நண்பருக்குமிடையயே சிறிய விவாதம் ஒன்று நடைபெற்றது. அதிலிருந்து...

தஜ்ஜால் அழிப்பவன் 
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?/// 

பூம ராங்:
திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை(மரண தண்டனை) என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!

பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்.. அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது.. 
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!

விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!  

Mohamed Iqbal Basheer Ahamed:
 தன்னை நாத்திகன் என்று அடையாள படுத்தி கொண்டு இஸ்லாத்தை மட்டும் சாடுவதே தஜ்ஜால் அவர்களின் வேலை.இவருக்கும் இஸ்லாமோபோபியா தான இருக்கு.ஆனால் இவர் தன்னை நாதிகம் என்று அடையாள படுத்துவது தான் ஏன் என்று தெரியவில்லை

தஜ்ஜால் அழிப்பவன்:
Mohamed Iqbal Basheer Ahamed, என்னைப்பற்றி ஆராய்வதைவிட நண்பர் பூமராங்கிற்கு உதவலாம்.

Mohamed Iqbal Basheer Ahamed :
ஆராயும் அளவிற்கு இஸ்லாமொபோபியாவை தவிர உங்களிடம் ஒன்றும் இல்லை என்று எனக்கு தெரியும் சகோதரர் தஜ்ஜால்

பூம ராங் :
Mohamed Iqbal Basheer Ahamed// ப்ளீஸ் ..குப்பையை நோண்டாதீங்க ..!

Mohamed Iqbal Basheer Ahamed:
 ம்ம் சரி சகோதரர் பூம ராங்

தஜ்ஜால் அழிப்பவன்:
 Basheer Ahamed , இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா?

பூம ராங் :
“நம்பிக்கை கொண்டோரே..! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை..!” (அல்குர்ஆன்-4:19)

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங், குர்ஆன் 4:19 என்ன கூறுகிறது என்பதைக் கூட அறியாமல் பதிவிடும் உங்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.

Mohamed Iqbal Basheer Ahamed :
 //இஸ்லாம் வேண்டாமென்று வெளியேறியவன். எனக்கு இஸ்லாமொபோபியாவா?// இதை தான் ஆரம்பத்தில் இருந்து சொல்கின்றீர்கள்.காரணம் கேட்டால் இஸ்லாம் மனிதர்கள் சிந்திப்பதை தடை செய்கிறது என்பீர்கள்.பிறகு எப்படி நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேரினீர்கல் என்று கேட்டால் பதில் வராது. சரி நீங்கள் வாதத்தை தொடருங்கள்.தேவை இல்லாத பேசி வாதத்தை நான் திசை திருப்ப விரும்பவில்லை.

தஜ்ஜால் அழிப்பவன் :
குர்ஆன் 4:19 ற்கு அறிஞர் பீஜே தரும் விளக்கம்.
403. கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, அவளுக்குப் பிடிக்காத ஒரு ஆணை, பெண்ணின் பெற்றோர் வற்புறுத்தி, கட்டாயத் திருமணம் செய்து வைக்கின்றனர்.
இந்த நாகரீக உலகில் கூட இந்தநிலை இன்னும் நீடிக்கவே செய்கிறது. 21ஆம் நூற்றாண்டில் கூடப்பெண்களுக்குக் கிடைக்காத இந்த உரிமையை ஆறாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் வழங்கியது.

தனக்குத் தகுதியான மணமகளைத் தேர்வு செய்யும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போலவே, தனது கணவனைத் தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கும் உள்ளது.
இஸ்லாமிய வரம்பை மீறி விடாமல் பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தால் அவர்களின் அந்த உரிமையைப் பெற்றோர் பறிக்கக் கூடாது. அவளது விருப்பத்திற்கு மாற்றமாக அவளைக் கட்டாயப்படுத்தவும் கூடாது என்பதை இவ்வசனங்கள் (2:234, 4:19) தெளிவாகப்பறை சாற்றுகின்றன.
பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி.

பூம ராங் :
// பூம ராங், மீண்டும் சொல்கிறேன் குர் ஆனை தெளிவாக பொருளறிந்து படியுங்கள். பிறகு விவாதிக்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி// அப்படியெல்லாம் நழுவி ஓடிட முடியாது, தஜ்ஜால் ..! எனக்கு குர்ரான் தெரியாது என்று உங்களிடம் சொன்னேனா ..? விவாதிப்போம் வாங்க என்று தான் முதலிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன் ... பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?

பூம ராங்:
 மாலைநேர அசர் தொழுகை முடித்து வருகிறேன் ..இன்ஷாஅல்லாஹ்..!

தஜ்ஜால் அழிப்பவன்:
 //பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது!

பூம ராங் :
//பிறகு ஏன் இந்த ஓட்டம் ..?// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது//
உங்களுடைய இந்த முடிவை நண்பர்கள் மத்தியில் வைக்கிறேன்..! (இல்லைனா இருக்கவே இருக்கிறாரு ‘நடுநிலை’ நேற்று படமெல்லாம் போட்டு காண்பிச்சாரு..அ...சாமி)
இந்த விவாதத்தில் “தஜ்ஜால் அழிப்பவன்” வென்று விட்டாரா..? நான் இன்னும் எடுத்து வைக்காத வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டதா..?
சொல்லுங்கள், நண்பர்களே..!

பூம ராங் :
 திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குர்ஆன் 4:19 வசனம் என்ன கூறுகிறது ..அந்த வசனத்தை இங்கே காப்பி பண்ண முடியுமா ..?//நாம் இங்கே விவாதிப்பது கற்பழிப்பு பற்றி ..கற்பழிப்புக்கும் குர் ஆன் 4:19-க்கும் என்ன சம்பந்தம்..?//யாரோ ஒருவர் பூமராங் என்ற பெயரில் இப்படி ஒரு பதிலைக் கூறியிருக்கிறார். அது நீங்கள் இல்லையா பூமராங்?

பூம ராங் :
//இதுக்கும் கற்பழிப்புக்கு நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..?

பூம ராங் :
 //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?


தஜ்ஜால் அழிப்பவன் :
 //நீங்கள் கேட்ட விபரங்களுக்கும் என்ன சம்பந்தம் ..?// நானும் அதையேதான் கேட்கிறேன் குர் ஆன் 4:19 -ஐ இங்கு பதிவிட்டது யார்?

தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் பெயரில் போலி ஒருவன் உலவுகிறான் என்று நினைக்கிறேன்.


பூம ராங் :
 // அது தெரியாமால உங்களிடம் வாதம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் ..? //// உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?•        
/ நான் பதிந்த குர் ஆன் 4:19 வசனத்திற்கு ..தனியொரு விளக்கம் தேவைப் படவில்லை .. ஆனால் நீங்கள் வேறொன்றை மனதில் வைத்துக் கொண்டு தான் ..கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்று கேட்டீர்கள் ..அதற்கு நான் பதிலளிக்க முற்பட்ட பொழுது ..நீங்கள் பீஜே யின் விளக்கத்தை பதிந்து விட்டு ..ஒடுனிர்கள் ..அதனால் தான் உங்களுக்கு மயக்கம் தெளிவிப்பதற்காக ..நான் திரும்ப திரும்ப ..உங்கள் மூலமாகவே ..உங்களை தலைப்புக்கு கொண்டு வர முயற்சி செய்கிறேன் ..! சொல்லுங்கள்..! /////உங்கள் வாதம் முறியடிக்கப்பட்டுவிட்டது// எப்படி ..?

தஜ்ஜால் அழிப்பவன் :
 //எப்படி ..?//
இது எனது கேள்வி :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?

கற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.

பூம ராங் :
//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
//எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?//சம்பந்தமே இல்லாமல், போலி பூமராங்(?) குர் ஆன் 4:19 முன்வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

பூம ராங் :
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?///
திருக்குர்ஆன் ஒன்றும் பைபிள் அல்ல..! திருக்குர்ஆன் மனிதர்களுக்கான முழுமையான மார்க்கத் தரிசனம்.! அதன் அடிப்படையில் கற்பழிப்புக்கு என்ன தண்டனை என்பதை கூறி விட்டேன்..விவாதிக்க முன் வந்தால், அது சம்பந்தமான வசனங்கள் எங்கே, எப்படி இருக்கிறது என்பதை தெளிவு படுத்துவேன்..!

எனது இந்த கூற்றுக்கு மாறாக கற்பழிப்புக்கு தண்டனை இல்லை என்று உங்களால் நிறுவ முடிந்தால் செய்து பாருங்கள்..இது என்னுடைய சவால்..!
பிறகு இன்னொரு விஷயம், குருடு இரண்டு வகைப்படும்..
அகக்குருடு..புறக்குருடு..! புறக்குருட்டை கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் அகக் குருட்டான கருத்துக் குருட்டை ஒன்றுமே செய்ய முடியாது..
இருந்தாலும் உங்கள் கருத்துக் குருட்டை போக்க என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம்-இன்ஷாஅல்லாஹ் செய்வேன்..!
விவாதத்திற்கு ஒப்புக் கொள்ளுங்கள்..!
//தஜ்ஜால் அழிப்பவன் //கற்பழிப்பை சுட்டுகிற -விளக்குகிற வார்த்தை குர்ஆனில் இருக்கிறது ..வசனமும் இருக்கிறது ..! // இந்தக் கதைகளெல்லாம் வேண்டாம் குர்ஆன் வசனத்தைக் கூறவும்/// உங்களுக்கு தாகமெடுத்தால் குடிப்பதற்கு ..தண்ணீர் வேண்டுமா ? வாட்டர் வேண்டுமா ? வெள்ளம் வேண்டுமா ? பச்சநீலு வேண்டுமா ? மோய் வேண்டுமா ..? என்ன வேண்டும் ..!

இது இதே கேள்வியை எதிர் கொண்டு தந்த பதில்கள் ..அதிலுள்ள ஒரு கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்ல வில்லை..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 மறுபடியும் முதலில் இருந்தா?


பூம ராங் :
 ///இது எனது கேள்வி :
கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?
கற்பழிப்பு பற்றி குர்ஆனின் கருத்தை உங்களால் இதுவரை முன்வைக்க முடியவில்லை.//
என்னிடம் பதில் இருக்கிறது என்று தான் முன்பும் சொன்னேன் ..இப்பொழுதும் சொல்கிறேன் ..! // மறுபடியும் முதலில் இருந்தா? /// விவாதத்தை சரியாக நடத்தாமல் நழுவி நழுவி ஓடினால், அது தான் உங்களுக்கு தண்டனை ..! அதனால் முறையாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கேட்பது புரியவில்லை? கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்.


Kulasai Voice :
மறுபடியும் முதலில் இருந்தா?///ஏம்னே!!!ஒத்துக்க வேண்டியது தானே!!!


பூம ராங் :
//இப்பொழுதும் சொல்கிறேன் .// பூமராங் உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் கேட்பது புரியவில்லை? கேள்வி புரியவில்லை என்றால் தயவு செய்து விளக்கம் கேளுங்கள், சொல்கிறேன்/// //எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?


தஜ்ஜால் அழிப்பவன் :
//கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? // இதில் என்ன புரியவில்லை? ///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?// குர்ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது?


பூம ராங் :
 //கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது? // இதில் என்ன புரியவில்லை// மௌனம் காக்க வில்லை ..அதனை சகித்துக் கொள்ளவும் செய்யாது ..அதற்கு திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் ..!  திருக்குரானின் சட்டப்படி கற்பழிப்புக்கு CAPITAL PUNISHMENT..மரண தண்டனை ..! அது பகிரங்கமாக நிறைவேற்றப்படும் ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன்? பதில் தெரியுமா? தெரியாதா?


பூம ராங் :
///எனது வாதத்தை எப்படி முறியடித்தீர்கள் ..?// குர் ஆன் 4:19 எதற்காக இங்கு பதியப்பட்டது? // பெண்கள் மீது யாரும் வலுக்கட்டாயம் செய்ய முடியாது ..அவளுடைய சம்பந்தமில்லாமல் அவளை யாரும் திருமணத்தின் மூலமாக கூட சொந்தம் கொண்டாட முடியாது ..இத்தியாதி ..இத்தியாதி ..!


தஜ்ஜால் அழிப்பவன்:
 //திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன்? பதில் தெரியுமா? தெரியாதா?
தொடரும்...

Facebook Comments

9 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்

சிந்திக்கமாட்டார்களா said...

சகோதரர் தஜ்ஜால்அவர்களுக்கு . ம் நடக்க ட்டும் விவாதம் மரிக்கட்டும் .மதவாதம்

ஆனந்த் சாகர் said...

கற்பழிப்பு என்கிற வார்த்தையோ கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனமோ குர்ஆனில் எங்குமே இல்லை. அது சரி, பல கற்பழிப்புகளை சர்வ சாதாரணமாக செய்த, கற்பழிப்பை செய்யும்படி சஹாபாக்கள் எனும் தனது கைதடிகளுக்கு ஊக்கமளித்த முஹம்மது எப்படி கற்பழிப்புக்கான தண்டனை குறித்த வசனத்தை குர் ஆனில் இறக்குவார்!

இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். எனவே உண்மையான இஸ்லாமிய அறிஞர்களிடம் மட்டுமே விவாதம் புரிவது பயனுள்ளது.

நாட்டுவேங்கை said...

பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.

பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.

பூமாராங்: என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

//இந்த பூமராங் என்பவர் உங்களிடம் விவாதம் புரியாமல் வெறும் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். //

முழுவிவாதத்தையும் பாருங்கள் இன்னும் தமாஷாக இருக்கும்!

தஜ்ஜால் said...

வாருங்கள் நாட்டுவேங்கை,

// என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நீங்கள் எப்படி முறியடித்தீர்கள் என்று கூறுங்கள்.//
ஆதாரம் இருப்பதாக இப்படிக் கூறிக் கொண்டே இரண்டு நாட்களை பூமராங் ஓட்டினார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் முஹம்மத் சாதிக்,

மதவாதத்தை வேறறுக்கவே நாம் இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Anonymous said...

இன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,
இன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.

Vellimedai Plus said...

சகோதரர் அவர்களே! என்னுடைய வலைப்பூவான வெள்ளிமேடை ப்ளஸ்ஸில் ”நவீன பிரச்சனைகளும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும்” எனும் தலைப்பில் 18.2.2014 கற்பழிப்புக்கான இஸ்லாமிய தண்டனை குறித்து பார்த்துக்கொள்ளவும்...