Saturday 13 July 2013

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?- 6

இப்ன் மஸ்வூத் அல் ஃபத்திஹா, அல் நாஸ் மற்றும் அல் ஃபலக் ஆகிய அத்தியாயங்களை குர்ஆனின் பகுதிகளல்ல என்று இறுதிவரை நிராகரித்தார் என்பதை கடந்த பகுதியில் பார்த்தோம். அல் ஃபத்திஹா, அல் நாஸ் மற்றும் அல் ஃபலக் ஆகியன பிரார்த்தனை வடிவிலானவைகள்;  எனவே அவைகள் குர் ஆனின் பகுதிகளல்ல என்பதே இப்ன் மஸ்வூத்தின் வாதம்.


ஆனால் உபை இப்ன் கஅப், தனது குர்ஆன் தொகுப்பில், பிரார்த்தனை வடிவிலான ஹப்த், கஹ்ல் என்ற இரண்டு அத்தியாயங்களை கூடுதலாக இணைத்திருந்தார் தொகுத்திருந்தார். 




முஹம்மதின் தோழர்கள் தங்கள் மனதில் தோன்றியவாறெல்லாம் குர்ஆனை உருவாக்கினர். அவர்களின் தொகுப்பிலிருந்த குழப்பங்களை இதுவரை கவனித்தோம். 

கடந்த பகுதியில் நாம் பார்த்த காணொளியில் ’இஜ்மா’ பற்றிய அறிஞர் பீஜே, கொடுத்த விளக்கம் நமது வாதங்களை உறுதிசெய்கிறது.  இரண்டு நிமிட காணொளியில் எத்தனை விதமான முரண்பட்ட விளக்கங்களைத் தருகிறார் என்பதை நன்கு கவனித்தால் விளங்கும்.  முஹம்மதுவின் தோழர்கள் குர்ஆன் தொகுப்பது உள்பட எந்த விஷயத்திலும் இஜ்மாவாக இருந்ததில்லை. ஆனால் குர்ஆன் ஹதீஸ்கள் கூறும் விஷயங்களில் ஒன்றுபட்டார்களாம்.  அவரும் விதவிதமாக சமாளித்துப் பார்க்கிறார்… முடியவில்லை!

அறிஞர் பீஜே அவர்களின் இந்த விளக்கத்தின் அடிப்படையிலும் கூட, குர்ஆன் என்ற புத்தகம் ஏக மனதுடன் ஒருமித்த கருத்துத்துடன் உருவாக்கப்பட்டவில்லை, பெரும்பான்மையோர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தொகுப்பு என்ற முடிவையே நாம் அடைய முடிகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட குர்ஆனின் தொகுப்பையே, அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று நம்புகின்றனர். அவர்கள் எதை வேண்டுமானாலம் நம்பலாம் அது அவர்களது தனிப்பட்ட உரிமை. அவர்களது மூடநம்பிக்கைளை, மற்றவர்கள் அறிவியல் பூர்வமான ஆதாரமாக ஏற்கவேண்டுமென்று வாதிடுவது அறிவார்ந்த செயல் அல்ல!

ஆய்வுகளோ, ஆதரங்களோ இல்லாமல், பெரும்பாண்மையோரின் கருத்தை உண்மையென்று ஏற்கமுடியுமா?

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதரமாக காண்பிக்கும் சிறுபிள்ளைத்தனமான வாதங்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இருக்கிறதா?

குர்ஆனை பாதுகாக்கப்பட்ட முறைகளைப்பற்றி பீஜே கூறுவதை கவனிப்போம்.  



ஜனவரி 2010-ம் ஆண்டு ஒன்பதாம் பதிப்பாக வெளியான “இதுதான் பைபிள்” என்ற நூலில் அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்.



இவ்வாறெல்லாம் குர்ஆன் பாதுகாக்கப்பட்டடிருக்கிறது என்பதை இன்று எவ்வாறு உறுதிசெய்வது?

முஹம்மது எழுதிப்பாதுகாத்ததாகக் கூறப்படும் குர்ஆனில் இருந்தவைகளும் தாஸ்கண்ட், சாமர்கண்ட் போன்ற இடங்களிலிருக்கும் குர்ஆனையும் ஒப்பிட்டுப்பார்க்க இஸ்லாமியர்களிடம் நம்பிக்கை என்பதைத் தவிர வேறு எந்த ஆதரமும் இல்லை.

சரி…

உஸ்மான் காலத்தில் எழுதப்பட்டதாகாக் கூறப்படும் தாஸ்கண்ட், சாமர்கண்ட் கையெழுத்துப் பிரதிகளின் மீது நடைபெற்ற ஆய்வுகள் என்ன? அவை உஸ்மான் காலத்தை சேர்ந்ததவைகளே என்பதை எவ்வாறு உறுதி செய்கிறார்கள்? இதற்கு நம்பிக்கை என்பதைத் தவிர வேறு பதில் இல்லை.
இதுபோன்ற கேள்விகளை இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவதில்லை.  பாதுகாக்கப்பட்டது என்றால் ஆஹா… என்ன அற்புதம்..! என்று புல்லரித்துக் கொண்டிருக்கவேண்டும். மாறாக ஆதாரங்களைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
ஆதரங்களைக் கேட்பவர்களுக்கான பதில் இதுதான்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். திருக்குர்ஆன் 6:7 வசனம் அவர்களுக்கு நேரடியான மறுப்பாக உள்ளது. எழுத்து வடிவில் தந்திருந்தாலும் இவர்கள் ஏற்க மாட்டார்கள்' என்று கூறப்படுவதில் எழுத்து வடிவில் அருளப்படவில்லை' என்ற கருத்து அடங்கியுள்ளதை அறியலாம். வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். (திருக்குர்ஆன் 4:153) எழுத்து வடிவமாக ஒரு நூல் வானிலிருந்து இறங்க வேண்டும் என அன்றையமக்கள் கேட்டதிலிருந்து அவ்வாறு அருளப்படவில்லை என்பதை ஐயத்திற்கிடமின்றி அறியலாம். இவ்வேதம் எழுத்துவடிவில் அருளப்படவில்லை
152. எழுத்து வடிவில் திருக்குர்ஆன் onlinepj.com

அதுபோலவே அண்மைக் காலங்களில் இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆனை அல்லாஹ் முஸ்லீம்களின் இதயங்களில் வைத்துப் பாதுகாக்கிறான். எங்கள் இதயங்களில் பாதுகாப்பாக இருக்கிறது என்று அருகிலிருக்கும் ஹாஃபிஸ்களை(குர்ஆனை மனனம் செய்தவர்களை)ச் சுட்டிக்காட்டியும், குர்ஆனின் எழுத்துமுறைகளில் பிழைகள் இருப்பினும் நாங்கள் அதை எங்களது உள்ளங்களில் மனனமாக உள்ளதைக் கொண்டு திருத்தி வாசித்துக் கொள்கிறோம் என்றும் விளக்கமளிக்கின்றனர்.



’குர்ஆன் முஸ்லீம்களின் இதயத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது’ என்பது, அறிஞர் பீஜே அவர்களின் கருத்து மட்டுமல்ல.  பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களும் பரப்புரையாளர்களும் இக்கருத்தில் இப்பொழுது ஒன்றினைகின்றனர்.
இங்கு குர்-ஆனின் பாதுக்காப்புக்கு தானே பொறுப்பேற்பதாக இறைவன் கூறுகிறான்.ஆதாவது மனிதர்களிடம் குர்-ஆனை பாதுக்காக்கும் பொறுப்பை சாட்டாமல் அதனை தன்னளவில் வைத்துக்கொண்டான்.இதன் மூலம் உலகமுடிவு நாள் வரையிலும் குர்-ஆன் பாதுக்காப்பிற்கு எந்த ஒரு மனிதனும் தனிப்பட்ட முறையில் சிரத்தை மேற்கொள்ள தேவையில்லை என்பதை தெளிவாக இவ்வசனத்தில் விளங்கலாம்., ஒலி வடிவில் இறக்கப்பட்ட குர்-ஆனை மக்கள் மத்தியில் பாதுக்காக்க இப்படி ஒரு பிரத்தியேக ஏற்பாட்டையும் இறைவன் செய்தான்.

அப்படியல்ல! எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது - அநியாயக்காரர்கள் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (29:49)


மேற்கூறப்பட்ட வசனத்தில் "கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில்" என்ற வாசக அமைப்பை இறைவன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுமிகுந்தவர்களுக்கு மனன சக்தி மூலம் அவர்களின் மனங்களில் இறைவசனங்கள் பாதுக்காக்கப்படுகின்றன எனபதையும் அறியலாம்…

’நான் முஸ்லீம்’ தளத்திலிருந்து

குர்ஆனை மனதில் மட்டுமே பாதுகாப்பது மட்டுமே சரியானதென்று இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கமளிப்பது  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

முஹம்மது எழுதிப்பாதுகாத்த குர்ஆனின் எழுத்துபூர்வமான ஆதாரங்களை காண்பிக்க முடியுமா? என்ற கேள்வியை எதிகொள்ளமுடியாமல், ”நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர்” என்று கேள்வியை திரித்துக் கூறுகிறார். அந்த சிலர் யாரோ?

அதாவது குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதற்கு  ஆதாரம் குர்ஆன் வசனம்தான். குர்ஆன் உள்ளங்களின் வழியாகவே கடத்தப்பட்டது என்ற இவர்களது இந்த வாதம் அன்றைய முஸ்லீம்கள் அபார நினைவாற்றல் கொண்டவர்கள் என்ற மூடநம்பிக்கையைத்தான் சார்ந்திருக்கிறது; மாறாக ஆதாரங்களைக் கொண்டதல்ல.

ஹிப்ஸுல் உலமா மதரஸாக்களில் குர்ஆனைத் தங்களது உள்ளங்களில் கடத்துவதற்கும், அதை சரிபார்ப்பார்க்கும் பொழுதும் விவாதங்களில் ஆதாரமாக கேட்கும் பொழுதும் எழுத்து மற்றும் அச்சுக்கலையின் பங்கை வசதியாக மறந்து விடுகின்றனர். உள்ளங்களில் வைத்துப் பாதுகாப்பதாக அல்லாஹ்வே கூறிய பின்னரும் எழுதி அச்சடித்து விற்பனையாகவும், இலவசமாகவும் வெளியிடுவது அல்லாஹ்வின் மீது இவர்கள் கொண்ட அளவற்ற அவநம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.

உஸ்மான் காலத்தில் குர்ஆனின் இதர பிரதிகள் எரிக்கப்பட்டதாக கூறுவது கூட, இத்தகையதொரு தந்திரமாகத்தான் இருக்க வேண்டும்!

முஹம்மது அதிகாரப் பூர்வமாக எந்த ஆவணத்தையும் விட்டுச் செல்லவில்லையா?

ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
...எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன்
புகாரி 4679

குர்ஆனைப் பாதுகாக்க வேண்டிய முதல் கடமையும் பொறுப்பும் முஹம்மதிற்குத்தான் இருக்கிறது. அல்லாஹ்விடமிருந்து தனக்கு வந்த ’வஹீ’க்களை எழுதச் செய்ததுடன் பிரதிகள் எடுத்தும் பயன்படுத்த அனுமதித்திருந்தார்.

முஹம்மதை கொலை செய்வதற்காக செல்லும் உமர், அவரது சகோதரி ஓதும் குர்ஆன் வசனங்களை கேட்டு மனம் மாறி முஹம்மதின் ஆதரவாளராக மாறியதாகக் கூறப்படும் நிகழ்ச்சியில் குர்ஆனின் பகுதி இடம்பெற்றிருந்தன என்பதை முன்பே கவனித்தோம்.

..Thereupon ‘Umar returned to his sister and brother-in-law at the time when khabbab was with them the manuscript of Ta Ha, which he was reading to them. When they heard ‘Umar’s voice  Khabbab hid in a small room, or in a part of the house, and Fatima took the page and put under her thigh…
(Page 156, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மதீனாவின் ஆட்சியாளராக முழு அதிகாரத்துடன் இருந்திருக்கிறார். சுமார் 48 எழுத்தர்கள் அவருடன் இருந்தாகவும் கூறுகின்றனர். குர்ஆனை ஓதும் முறையிலும் கருத்திலும் குழப்பங்கள் தோன்றியுள்ளதை முஹம்மது (அல்லாஹ்) அறிந்திருந்திருந்தார் என்பதை முன்பே பார்த்தோம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது இரண்டுபேர் குர்ஆனின் ஒரு வசனம் தொடர்பாகக் கருத்து முரண்பாடு கொண்டு சர்ச்சை செய்து கொள்ளும் சப்தத்தைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தில் கோபம் தென்பட எங்களிடம் வெளியே வந்து, "உங்களுக்கு முன்னிருந்தோர், வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம் 5180)

அப்படியிருக்க, முஹம்மது குர்ஆனைத் முழுமையாகத் தொகுத்து, தெளிவான விளக்கங்களுடன் அதிகாரப்பூர்வமாக ஒன்றை வழங்கியிருக்க வேண்டுமல்லவா?

பொதுவாக முஹம்மதைப்பற்றி கூறும் பொழுது எழுத, படிக்கத் தெரியாதவர் என்பார்கள். அத்தகையவரிடமிருந்து எப்படி இலக்கிய நயமிக்க குர்ஆன் வெளிப்படமுடியும்? எனவே குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்றொரு வாதத்தை முன் வைப்பதை அறிவீர்கள். முஹம்மது எழுத்தறிவற்றவரா?

முஸ்லீம்கள் முஹம்மதை ”உம்மி நபி” என்பார்கள் அதாவது எழுத்தறிவற்றவராம்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர்...
 ...அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! ..
குர்ஆன் 7:157, 158

அறிஞர் பீஜே தரும் விளக்கத்தைக் காண்போம்

….7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகளுக்கு, உம்மீ எனக்குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்...

312. எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி

42:7. (மக்கா எனும்) நகரங்களின் தாயையும் அதைச் சுற்றியுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும்..
’உம்முல் குராநகரங்களின் தாய்'

உம்மி என்பது எனது தாய் என்ற பொருளையே முதன்மையாகத் தரும். உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் தங்களது தாயை “உம்மா” என்றழைப்பதைப் பரவலாகக் காணலாம்.
அறிஞர் பீஜே சொல்வதை போல உம்மி என்றால் தாயைச் சார்ந்திருப்பவர்கள் என்றே பொருள் கொள்வோம். தாயைச் சார்ந்திருப்பவர்கள் என்றால் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்று எப்படிப் பொருள் விளங்க முடியும்?  

உம்மி என்பதற்கு யூதரல்லாதவர்கள் என்ற பொருளும் உண்டு. அதாவது யூதர்களிடம் இருப்பதைப் போன்ற வேதத்தைப் பெறாத சமுதாயம் என்று இதன் பொருளை விவரிக்கின்றனர். (கோயமுத்தூரில் ’அல்-உம்மா’ என்றொரு இயக்கம் இருந்தது அதன் பெயரை எப்படிப் பொருள் கொள்வது?)

 இறுதிவரை முஹம்மது எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்தாரென்று எப்படி பொருள் கொள்கின்றனர் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. இவர்களது இந்த முடிவு குர்ஆனுக்கு எதிரானது.

முதன்முதலாக முஹம்மதிற்கு வந்த வஹீயைப் பாருங்கள்.
அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
குர்ஆன் 96:4,5

முஹம்மது எழுத்தறிவற்றவர் என்று பொருள்கொள்வது சரியல்ல!  ஆவணத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். 

இது முன்னோர்களின் கட்டுக் கதை. அதை இவர் எழுதச் செய்து கொண்டார்…
குர்ஆன் 25:5

குர்ஆனை மனித உள்ளங்களில் வைத்து பாதுகாப்பதே அல்லாஹ்வின் ஏற்பாடு எனில் குர்ஆனை எழுதச் செய்த முஹம்மதின் செயல் அல்லாஹ்வின் திட்டத்திற்கு எதிரானதல்லவா?

திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள். (பார்க்க: திர்மிதீ 3011)

...இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு
onlinepj.com

எழுதப்பட்ட ஏடுகளை முஹம்மது தனது இல்லத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தாராம். பிறகு ஏன் ஜைத் பின் தாபித் குர்ஆன் தொகுக்கும் பணியை மலையை நகர்த்தும் வேலை என்று நொந்து கொள்ள வேண்டும்? நேராக முஹம்மதின் இல்லத்திற்குச் சென்று ஏடுகளை சேகரித்திருக்க வேண்டும். ஏனெனில் அவைளை மட்டுமே முஹம்மதின் அங்கீகாரம் பெற்றவைகளாக கருத வாய்ப்புள்ளது!

முஹம்மதின் இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஓலை, தோல், கற்பலகைகள், மற்றும் விலங்குகளின் எலும்புகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த குர்ஆனின் பகுதிகள் எங்கே போனது?

முஹம்மதுவின் மரணத்தின்  பொழுது ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திய   ஆடு(!) ஒன்று பால்குடி வசனங்களை தின்றுவிட்டதாக ஆயிஷா கூறுகிறார். மற்றவைகள் எங்கே? உஸ்மான் எரித்தது மக்களிடையே புழக்கத்திலிருந்த குர்ஆனின் பிரதிகளைத்தான். முஹம்மதின் வீட்டில் பாதுகாக்கப்பாக இருந்தவைகளையல்ல!

ஆடுகள் தின்ற வசனத்தை இன்றைய குர்ஆனில் பார்க்க முடியுமா? இல்லை,  குர்ஆனை  மனதில் வைத்துப் பாதுகாக்கிறோம் என்பவர்களால்தான் சொல்ல முடியுமா?

இவ்விஷயத்தில் அவர்கள் பதில் சொல்லும் வரை பொறுத்திருப்போம். அதுவரை நாம் அடுத்த குழப்பங்களைப் பார்க்கலாம்…

குர்ஆன், சந்தேகத்திற்கு இடமில்லாமல் தன்னை ஒரு புத்தகம் என்று கூறிக்கொள்கிறது.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (தாலிகல் கிதாப். லா ரைப ஃபீஹீ)
குர்ஆன் 2:2
’கிதாப் – புத்தம்’ 
...தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும். நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது...
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,
onlinepj.com

முஹம்மதின் காலத்தில் மட்டுமல்ல அபூபக்கரின் காலத்திலும் குர்ஆன் புத்தகவடிவில் இல்லாமல் தனித்தனியாக ஏடுகளின் வடிவிலேயே இருந்தது. இரண்டாம் முறையாக உமரின் காலத்தில் ஒரே சுருளாக மாற்றப்பட்டது என்கிறது தபரியின் குர்ஆன் விரிவுரை. 
இவர்களோ முஹம்மதின் காலத்தில் குர்ஆன் புத்தக வடிவில் இல்லை என்கின்றனர். இதில் எதை ஏற்கவேண்டும்?

...நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்...
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு

எதையாவது கூறி குர்ஆனின் உளறல்களை சரிகட்ட வேண்டுமென்ற வேகத்தைத் தவிர இவர்களிடம் வேறு எதுவுமில்லை.  ”பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும்” என்ற அறிஞர் பீஜே வின் தரும் இந்த விளக்கத்தை, முஹம்மது அறிந்திருந்தாரா?

குர்ஆனைப், புத்தகவடிவில் பாதுகாக்கவேண்டுமென்ற எண்ணம் முஹம்மதிற்கு இருந்ததாகவோ, அல்லது பிற்காலத்தில் அல்லாஹ் அதை புத்தக வடிவிற்கு மாற்றிவிடுவான் என்று முஹம்மது நினைத்ததாகவோ, ஒரேஒரு ஆதாரத்தையாவது  காண்பிக்க முடியுமா?

இன்று குர்ஆன் மட்டுமல்ல புத்தகங்கள் அனைத்தும் மென்பொருள் வடிவில் வந்துவிட்டன. அல்லாஹ் அவற்றை அறியவில்லை போலும்! அதனால்தான் முன்னுக்குப்பின் முரணாக கூறிக்கொண்டிருக்கின்றனர்.

தாஸ்கண்டிலிருக்கிறது, துருக்கியிலிருக்கிறது என்று கூறியவர்கள், குர்ஆன் மூலப்பிரதிகளை திடீரென கைவிட்டது ஏன்?

ஜனவர் 2010 வரை குர்ஆன் எழுத்துப்பூர்வமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறென்றுதான் அறிஞர் பீஜேவும் கூறிவந்தார். ஆக மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை குர்ஆன் வரிவடிவில்தான் பாதுகாக்கப்பட்டிருந்தது. இடைப்பட்ட காலத்தில் குர்ஆனை ஒலிவடிவில் பாதுகாப்பதாக முடிவு செய்து கொண்டுள்ளனர்.

1400 ஆண்டுகளாக குர்ஆன் எழுத்துவடிவில் பாதுகாக்கப்படுகிறது எழுத்துவடிவத்தில் பாதுகாக்கப்படுவதாகக் கூறிவந்த இஸ்லாமிய அறிஞர்கள், இன்று குர்ஆன் ஒலிவடிவத்தில்தான் இறங்கியது, மனிதர்களின் இதயத்தில் வைத்துப் பாதுகாப்பது மட்டுமே சிறந்ததென்று வாதிடுவதற்கு, அவர்களிடம் எவ்விதமான ஆதாரமும் இல்லையென்பது மட்டுமே காரணம்.

சில இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் ஒலிவடிவத்தில் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்பதை மறுக்கின்றனர்

ன்று குர்ஆனில் எழுத்துப் பிழை என்று வாதிடும் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனை அல்லாஹ் ஓசை வடிவில்தான் பாதுகாத்தான் என்று கூறி அதன் எழுத்து வடிவத்தைக் கொச்சைப் படுத்தியும் அதில் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே குர்ஆனை எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட அதன் கண்ணியத்தின் மீது ஏற்படுத்தும் ஒரு களங்கமாகும்.

குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும். தொடர் – 2

வல்ல அல்லாஹ் தான் இறக்கியருளிய வேதத்திலேயே – “எழுதுகோல் மீதும் (அதனால்) அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக” (68:1) என்றும் அவனே எழுது கோலைக்  கொண்டு கற்றுக் கொடுத்தான்”(96:4) என்றும் எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றான்.  இவ்வாறிருக்க அவனது அற்புத வேதமாகிய குர்ஆனின் எழுத்து வடிவ தொகுப்பு என்பது இறை ஏற்பாடல்ல என்பது அறியாமை வாதமன்றோ!

எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தும் இறைவன், தான் அருளிய வேதத்தை எழுத்து வடிவிலும் பாதுகாப்பதற்கு அற்புதமான ஏற்பாட்டைச் செய்திருந்தான் என்பதே நமது சிந்தனைக்கு எட்டிய உண்மையாகும். ..
சத்தியமுழக்கம் தளத்திலிருந்து…

குர்ஆன் பாதுகாப்புபற்றி இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லையென்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

குர்ஆன் கடவுளின் வார்த்தைகளே என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் இது பாதுகாக்கப்பட்டது என்கின்றனர். மாறாக சான்றுகளின் அடிப்படையில் அல்ல!

உண்மையிலேயே குர்ஆன் கடவுளிடமிருந்து(!?) வந்ததெனில் அது இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குர்ஆன் இல்லாமல் வாழ முடியுமென்பதுதான் எதார்த்த நிலை. மட்டுமல்லாமல் அது மனிதனை கற்காலத்திற்கு அழைத்துச் செல்கிறதென்பதையும் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே வேதங்கள் சொல்லும் பல விஷயங்கள் மனிதர்களால் சீண்டப்படுவதே இல்லை.

முந்தின வேதங்கள் பாதுகாக்கப்படவில்லை, மாற்றப்பட்டது என்பதுதான் குர்ஆனின் மிக முக்கியமான குற்றச்சாட்டு.  இப்படி இருக்கையில் இப் பிரபஞ்சத்தின் அதிமுக்கியமான ஆவணத்தை இப்படி ‘அம்போ’ என விட்டுச் சென்றது ஏன்? இறுதிக் காலத்தில் அவருக்கு அந்தப்புரத்தில் அழகிகளை சேகரிக்கப்பதற்கே காலம் சரியாக இருந்தது. இதில் அல்லாஹ்வாம் குர்ஆனாம்!

பிறகு எங்கிருந்து, எதற்காக குர்ஆன்?

குர்ஆன் எழுத்துவடிவத்தில் முழுதொகுப்பாக மாற மிக முக்கிய காரணியாக இருந்தது, யமாமாவில் இஸ்லாமியர்கள் தரப்பில் நிகழ்ந்த மரணங்கள்தான். நாம் இங்கு கவனிக்க வேண்டியது,
..நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள்
புகாரி 4679
குர்ஆனை ஒரு புத்தகமாக உருவாக்க வேண்டுமென்று, முஹம்மது கனவிலும் நினைக்காத ஒரு செயலில் அபூபக்ரும் உமரும் ஈடுபடுகின்றனர். இரண்டு சாட்சியங்களின் அடிப்படையில் குர்ஆன் தொகுக்கும் பணியை செய்கின்றனர்.  குர்ஆனை இப்படித்தான் தொகுக்க வேண்டுமென்ற முஹம்மதின் வழிகாட்டுதல் ஏதேனும் இருந்ததா? அப்படி எதுவும் இல்லலையென்று நாம் உறுதியாகக் கூறமுடியும்!

பெரும் குழப்பங்களுக்கிடையே உத்மான் குர்ஆனைத் தொகுத்து வெளியிடும்வரை அதிகாரப்பூர்வமான குர்ஆன் என்ற ஒன்று புழக்கத்தில் இல்லை. அதுவரை அபூபக்கரின் தொகுப்பு ரகசியமாகவே இருந்துள்ளது. ஒருவரும் அறியாமல் வாசிக்க அதென்ன ”சரோஜாதேவி” புத்தகமா?

மனிதர்களைவிட்டு குர்ஆன் மறைந்துவிடக் கூடாது என்று அபூபக்கர் உருவாக்கிய தொகுப்பை மக்களிடையே கொண்டு சேர்க்கமல் ரகசியமாக வைத்ததேன்? அவரை அடுத்தவந்த உமரும் இரகசியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். மக்களைச் சென்றடையவேண்டிய கடவுளின்(!?) கட்டளைகளை, பொதுவில் வைக்காமல் தனது மகள் ஹஃப்ஸாவிடம் ஒப்படைடைத்துவிட்டு இறந்துபோகிறார்.

அபூபக்ர் மற்றும் உமர் முயற்சியால் உருவாக்கப்பட்ட தொகுப்பு இரகசியாமாக்கப்பட்டதற்கு ஏற்புடைய எந்த பதிலும் இஸ்லாமியர்கள் தரப்பில் இல்லை. அப்படியொரு தொகுப்பிருந்ததற்கு ஹதீஸ்களைத்தவிர எவ்விதமான ஆதரமும் இல்லை.

சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் எவருக்கும் குர்ஆனைப்பற்றிய நினைவு வரவில்லை. ஏனெனில் ஆட்சியாளர்களது கவனம் எல்லைகளை விரிவுபடுத்துவதிலிருந்தது. மெக்கா, மதீனா, இனக்குழுக்கள் என்று சிறிதாக இருந்த முஹம்மதின் அரசாங்கம், கலீஃபாக்களின் காலத்தில் வெற்றிகளை வாரிக்குவித்ததுடன் எல்லைகள் மிகபிரம்மாண்டமாக விரிவடையத் துவங்கியது.

முஹம்மது உயிருடன் இருந்தவரை அவரின் ஆன்மீக மற்றும் அரசியல் வழிகாட்டுதல் அந்த இனக்குழு சமுதாயத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் பரந்து விரிந்த ஒரு அரசாங்கமாக வளர்ச்சியடைந்த பொழுது வேறுபட்ட மக்களையும், கலாச்சாரங்களையும், சிந்தனைகளையும் ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முஹம்மதின் காலத்தில் இருந்ததை விட பல நூறுமடங்குகள் இஸ்லாமிய அரசாங்கம் விரிவடைந்திருந்தது. அதே அளவிற்கு பிரச்சனைகளும் குழப்பங்களும் விரிவடைந்திருந்து என்பதை சொல்லத் தேவையில்லை.  முஹ்ம்மது உயிருடன் இருந்த பொழுது குர்ஆனைக் கற்றறிந்தவர்கள், மதகுருக்காளாக உருவவெடுத்தனர். பெரும்பாலும் இவர்களே ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்தனர். ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட குர்ஆனையும் முஹம்மதின் செயல்களையும் ஆதாரமாகக் கொண்டனர்.  சக இஸ்லாமிய அமைப்பை எதிர்க்க, குர்ஆன், சுன்னா என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்களை இன்றும் காணமுடியும்.

இத்தகைய குழப்பமான சூழலில், பரந்துவிரிந்திருந்த அரசாங்கத்திற்கு மக்களைக் கட்டுப்படுத்தி ஒரே அமைப்பின்கீழ் திரட்ட சடங்குகளும், வழிமுறைகளும் தேவைப்பட்டது. அது கடவுளின் சொல்லாக உருமாறியது.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், அரசியல் காரணங்களால் ஏற்பட்ட சிக்கலான சூழலை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில், அல்லாஹ் என்ற கடவுளின் பெயரைக் கூறி, ஒரு கூட்டம் குர்ஆன் என்ற ஒன்றைக் காண்பித்து மிரட்ட, பின்னர் வந்த இன்னொரு கூட்டம் முஹம்மதுவின் வழிமுறை என்ற பெயரில் ’ஹதீஸ் அல்வா’ கொடுத்துள்ளது.

முஹம்மதிற்குப்பின் வந்த அவரது தோழர்கள் குர்ஆன் என்ற புத்தகத்தை உருவாக்கினர் என்பதை ஹதீஸ்களின் வாயிலாகப் பார்த்தோம்.  ஹதீஸ்கள் எனப்படும் வாய்வழிச் செய்திகளை வரலாற்று ஆதாரமாகக் கருதமுடியாது. ஏனென்றால், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்பார்கள். இங்கு வேடிக்கை என்னவென்றால், குர்ஆன் எவ்வாறு உருவானது என்பதை நமக்கு விளக்குவது ஹதீஸ்கள்தான். ஆக, இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி குர்ஆனைத் தாங்கி நிற்பது ஹதீஸ்கள்தான்.

முஹம்மதின் மரணத்திற்குப்பின், பல தலைமுறைகளாக, வாய்வழிச் செய்தியாக கடத்தப்பட்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்ட, ஹதீஸ்கள் இல்லையெனில் குர்ஆன் என்ற புத்தகத்தின் நிலை கேள்விக் குறிதான்.

ஹதீஸ்களின் நிலைமையோ அதைவிட மோசமாக உள்ளது. உதாரணத்திற்கு, இமாம் புகாரி, தான் கேட்டறிந்த ஆறு லட்சம் ஹதீஸ்களிலிருந்து 7563 ஹதீஸ்கள் மட்டுமே  நம்பகமானது என்ற முடிவிற்கு வருகிறார்.  இதற்கு மேலும் ஹதீஸ்களின் பரிதாப நிலையை நான் கூறவிரும்பவில்லை.

தொகுக்கப்பட்ட சூழலும், முறையும் குர்ஆன் கடவுளின் வார்த்தைகளாக மட்டுமல்ல அல்ல முஹம்மதின் வார்த்தைகளாக இருக்கலாம் என்று நம்புவதற்குக்கூட தகுதியற்றது என்பதையே காணமுடிகிறது. 


தஜ்ஜால்.


பின் குறிப்பு :

இத்தொடர் முழுவதையும் இஸ்லாமியர்களின் பெரிதாகப் போற்றும் குர்ஆன் ஹதீஸ் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டே எழுதியிருக்கிறேன். 


குர்ஆனை ஆய்வு செய்த Gibbon, Carlyle, Salomon Reinach ,  Arthur Jeffery, Charles Adams, Christian al-Kindi, Wellhausen, Caetani, Wansbrough, Michael Cook, Patricia Crone, Martin Hinds… போன்ற அறிஞர்களின் தர்க்கரீதியான வாதங்களை வேறொரு வாய்ப்பில் பார்க்கலாம். 

Facebook Comments

7 கருத்துரைகள்:

சிவக்குமார் said...

பிரமாதமான திறனாய்வு, தொடருங்கள் தஜ்ஜால்.

sagodharan said...

வாழ்த்துக்கள் தஜ்ஜால்!

அருமையான விளக்கம்!

இன்னும் அறிஞர்களின் விளக்கங்களை தயவு செய்து பதிவு செய்யுங்கள், காத்திருக்கிறோம் !!உங்களின் பதிவு அருமை!இந்த வல்ல அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் குஜாலா எல்லாம் கிடைக்க துஆ செய்கிறேன்!

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

தர்க்க ரீதியான வாதங்கள், விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். அருமையான பதிவு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Ant said...

//நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்// ஏற்றுக் கொள்ளாவிட்டால் குரான் முரண்பாடு கொண்டது என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டுமே! வேறு வழி! அல்லாசாமியை ‌காப்பாற்றியாக வேண்டுமே! எனக் கென்னவோ நம்மூர் அய்யனார் சொள்ளமாடன் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

தஜ்ஜால் said...

வாருங்கள் நண்பர்களே,

பாராட்டிற்கு நன்றி!

இத்தொடரப் பொருத்தவரையில் இன்னொரு வாதமும் சேர்க்கப்பட வேண்டும். அதாவது குர்ஆனில் உள்ள நீக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட வசனங்கள். இது பெரும்பாலான குர்ஆனின் அத்தியாயங்களில் இருக்கிறது. இதைப்பற்றிய எந்த விதமான வழிகாட்டுதல்களும் குர்ஆனில் இல்லை. மீண்டும் நாம் ஹதீஸ்களிடமும் அறிஞர்களிடமும்தான் செல்ல வேண்டும். தான்தோன்றித்தனமாக குர்ஆனைத் தொகுத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Tamilan said...

வாழ்த்துக்கள் நண்பரே, இந்த மாதிரி எழுதுவற்கு எந்த அளவு படிக்கவேண்டும் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. நான் கூட பதிவு போடும் போது ஹதிஸ ஒன்னோன்னா படித்துக்கொண்டு இருந்தேன். தொடருங்கள் உங்கள் சமூக சேவையை.

தஜ்ஜால் said...

வாருங்கள் தமிழன்,

உண்மைதான், நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. என்னதான் படித்தாலும் இறுதியில், கற்றது கைமண் அளவு என்றாகிவிடுகிறது.