Monday 22 April 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -25


வன்கலவியும் வேதவெளிப்பாடும்
முஹம்மது நபியும் அவரது படையினரும் பல போர்களை சந்தித்தவர்கள். இவற்றில் ஓரிரு போர்களைத் தவிர மற்றவையெல்லாம் முஹம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான திடீர் தாக்குதல்களே. ஒவ்வொரு போரின் முடிவிலும் பெருமளவு பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் போர்கைதிகளாக கருதப்பட்டு முஸ்லீம்களால் அடிமைகளாக்கப்பட்டனர். இந்த அடிமைகளை போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதை முன்பே பார்த்தோம். இந்த அடிமைகளுக்கு சில அடிப்படை உரிமைகள் மட்டுமே வழங்கப்பட்டது. சுதந்திரமான  மனிதர்களைப் போல வாழ அடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவில்லை.

ஆண் அடிமைகள் கடுமையான உடல் உழைப்பிற்காக பயன்படுத்தப்பட்டனர். பெண் அடிமைகள் வீட்டு வேலைகளுக்கும்அவர்களது ஆண் எஜமானர்களின் உடல் தேவைகளுக்கும் பயன் படுத்தப்பட்டனர்பலர் தங்களது அடிமைப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டினர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பொருளீட்டுவதை முஹம்மது நபி தடைசெய்தார். இந்த அடிமைகளை பிறருக்கு இரவல் தருவதும், விற்பனை செய்வதும் அல்லது சுதந்திரமாக விடுதலை செய்வதும் எஜமானரின் உரிமைகளாகும்சுருக்கமாகச் சொல்வதென்றால், அடிமைகளென்பவர்கள் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த கால்நடைகள்.

இத்தகைய அடிமைப் பெண்களையே குர்ஆன், "(போரில்) உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" என்று குறிப்பிடுகிறதுஇஸ்லாமியர்களுக்கு நான்கு மனைவிகளை மட்டுமே அனுமதித்த அல்லாஹ், இந்த அடிமைப் பெண்களின் விஷயத்தில் எந்த விதமான எண்ணிக்கை எல்லைகளையும் விதிக்கவில்லை. அடைப்புக்குறிகளுக்குள் "போரில்" என்று சொல் இருப்பதால் அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்பதில்லை. விலை கொடுத்தும், பரிசுப் பொருளாகவும் அடிமைகளைப் பெறலாம்"(போரில்)"  அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவைகள்  மொழிபெயர்ப்பாளர்களின் இடைச்சொருகல். "உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" என்ற வார்த்தையின் உண்மைப் பொருளை மாற்ற அவர்கள் கையாளும் தந்திரம்.

"உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" என்பதை நேரடியாகக் கூறுவதென்றால் அடிமைகள். அவர்களை எஜமானர்கள் தங்களது இச்சைகளுக்கு விருப்பம் போல உபயோகப்படுத்தலாம். எகிப்திய ஆளுனரால் முஹம்மது நபிக்கு பரிசாக வழங்கப்பட்ட மரியத்துல் கிப்தியாவும் ஓர் அடிமையே. அடிமைகளுடன் விருப்பம் போல கூடி அதன் மூலம் நிறைய அடிமைகளை உற்பத்தி செய்து கொள்ளவும் அல்லாஹ் அனுமதிக்கிறான். இதன் விளக்கங்கள் சிலவற்றை மட்டும் காணலாம்.

விபச்சாரி-விபச்சாரகன் இருவருமே தங்களது செயலை நன்கு அறிவார்கள். விபச்சாரகன், ஏதோ ஒரு காரணத்திற்காக உடலை விற்கும் விபச்சாரியின் முழு சம்மததத்துடன்தான் அவளது இறைச்சியை சுவைக்கின்றான். இப்படி இருவரின் சம்மதத்துடனே நடக்கும் உறவு அல்லாஹ்விடத்தில் கடுமையான தண்டனைக்குரியது.

பனூ முஸ்தலிக் போரில் முஹம்மது நபி  அவர்களின் படையினர், போர்கைதிகளாக எதிரிகளை பிடிக்கின்றனர்.

புகாரி ஹதீஸ் -4138
இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு அஸ்ல் பற்றிக் கேட்டேன். அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (ரலி) குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில்) எங்கள் மனைவியரைப் பிரிந்து (தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. (அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) அஸ்ல் (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம் (ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்
 (புகாரி 5210,4138,2229,2542)
Sahih Muslim Book 008, Number 3371:
Abu Sirma said to Abu Sa'id al Khadri (Allah he pleased with him): O Abu Sa'id, did you hear Allah's Messenger (may peace be upon him) mentioning al-'azl? He said: Yes, and added: We went out with Allah's Messenger (may peace be upon him) on the expedition to the Bi'l-Mustaliq and took captive some excellent Arab women; and we desired them, for we were suffering from the absence of our wives, (but at the same time) we also desired ransom for them. So we decided to have sexual intercourse with them but by observing 'azl (Withdrawing the male sexual organ before emission of semen to avoid-conception). But we said: We are doing an act whereas Allah's Messenger is amongst us; why not ask him? So we asked Allah's Messenger (may peace be upon him), and he said: It does not matter if you do not do it, for every soul that is to be born up to the Day of Resurrection will be born.

நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது போர்க் கைதிகளில் மிகச்சிறந்த (அழகிய) அரபு பெண்கள் சிலர் கிடைத்தனர். எங்கள் மனைவியரைப் பிரிந்து தனிமையில் இருந்தது எங்களை வாட்டியதால், அந்த பெண்களுடன் உடலுறவு கொள்ள விரும்பினோம்.  அப்பெண்களிடமிருந்து (அவர்களுடைய) விடுதலைக்கான  தொகையையும் பெற விரும்பியதால் ‘அஸ்ல்' (சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு) செய்ய நினைத்தோம். ஆனால்) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா என்று (எங்களுக்குள் பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்).

அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச்சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்.


புஹாரி ஹதீஸ்   : 6603      
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக் கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது (புணர்ச்சி இடைமுறிப்பு) அஸ்ல் செய்து கொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்படியா செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்கள் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாக்கியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

இத்தகைய உடலுறவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு புனிதமான(?) காரணம், சஹாபாக்கள், நீண்ட காலங்களாக தங்களது மனைவியர்களைப் பிரிந்து இருந்தனர். எனவே அவர்களால் இச்சையை கட்டுப்படுத்த முடியவில்லை. தனது அடியர்களான  சஹாபாக்களின் “…”தேவையறிந்த  அல்லாஹ்(!), பெண் போர்க் கைதிகளின்“ சூறையாடும் அனுமதிகளை வஹீயாக இறக்கினான். (அல்லாஹ்விற்கு(!) இது ரொம்ப முக்கியம்) அல்லாஹ்வே பரிதாபப்பட்டு தான் கூறிய ஒழுக்கநெறிகளை மீறிய அனுமதியாக வஹீ இறக்குமளவிற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட சஹாபாக்கள் அனைவருமே, பெண்களின் வாடையைக் காணமல்"காய்ந்து" போயிருந்தனரா?

சஹாபாக்கள் வருடக்கணக்கில் தங்களது மனைவியரைப் பிரிந்திருந்தனரா?

          இல்லை…! நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின்படி நபிகளாரின் காலத்தில், சில வாரங்களுக்கு மேல் எந்த ஒரு போரும் நீடிக்கவில்லை (இது நீஈஈஈ…ண்ட காலமாம் …!). ஒருவேளை நீடித்திருந்தாலும் ஆண்களை விட அறிவிலும், வலிமையிலும் பலவீனமானவர்கள் என திருக்குர்ஆன் வர்ணணை செய்யும் பெண்களை அதாவது பெண் போர்க்கைதிகளையும் அவர்களது பெண் குழந்தைகளையும் வேட்டையாடுவது முறையானதா?

        மேற்கண்ட ஹதீஸ்கள் அஸ்ல் (Coitus interruption- புணர்ச்சி இடைமுறிப்பு) செய்வதை தவிற்பது பற்றி மட்டுமே விளக்குகிறது. போரில் அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட பெண்களுடன் புணர்ச்சியில் ஈடுபட முஹம்மது நபி  அவர்களும் தடையேதும் விதிக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.  தனது மருமகன் அலீயின் லீலைகளை, முஹம்மது நபி  ஆதரிப்பதைப் பாருங்கள்.

புஹாரி ஹதீஸ் : 4350
புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் குமுஸ் நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென எடுத்துக் கொண்ட அடிமைப் பெண்ணுடன் உறவு கொண்ட பின்) குளித்து விட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், இவரை நீங்கள் பார்க்க மாட்டீர்களா என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா என்று கேட்க நான், ஆம்! என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது என்று சொன்னார்கள்.

முஹம்மது நபியோ அல்லது சஹாபாக்களோ பெண் கைதிகளுடன் உறவில் ஈடுபடுவதற்கு அந்த கைதிகள் சம்மதித்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இந்தக் காட்சியை கற்பனை செய்து பாருங்கள்,

அக்காலத்தில் கைதிகளை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருந்ததாகத் தெரியவில்லை. எனவே கைதிகள் விலங்கிடப்பட்டு திறந்தவெளிகளில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் பனூகுறைழாவில் நிறுத்தி வைக்கப்பட்டதைப் போல ஆண்களையும், பெண்களையும் தனித்தனியே நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.


(இந்தப் படம் வேறொரு நிகழ்வைக் குறிக்கிறது. முஹம்மது மற்றும் அவரது கைத்தடிகளின் செயலை விளக்குவதைப் போன்றிருப்பதால் அதையே பயன் படுத்தியிருக்கிறேன்)


போரில் கைப்பற்றப்பட்ட எதிரிகளின் பெண்கள் நிலையை சற்று கவனிப்போம். அப்பெண்களின் பாதுகாவலர்களாக இருக்கும் ஆண்கள் தந்தை, கணவன், சகோதரர்கள், மகன்கள் அல்லது உறவினர்கள் போர்களத்தில் கொல்லப்படுகிறார்கள். அல்லது அவளது கணவன் கைதியாக செயலற்றுப்போய் பரிதாபமாக நிற்கிறான். பெண்கைதிகள் பங்குவைத்து பிரிக்கப்பட்டு அவரவர் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறார்கள். உடனே அப்பெண்கைதிகள், ஆஹா…! எங்களுக்கு புதிய உடலுறவுத் துணை கிடைத்து விட்டது இதற்காகத்தன் நாங்கள் இத்தனை நாள் ஏங்கிக் காத்திருந்தோம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துச் செல்வார்களா? அல்லது இது அல்லாஹ்வின் தீர்ப்பு எனக்கூறி ஆடைகளை அவிழ்த்து தயாராக நிற்பாளா?

இது பெண்ணாகப் பிறந்ததின் இழிநிலை. நிச்சயமாக எந்தப் பெண்ணும் இந்த நிலையை கற்பனை செய்வதைக் கூட விரும்பமாட்டாள் நிச்சயமாக முஹம்மது நபி மற்றும் அவரது படையினரின் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டிருக்க மாட்டார்கள். தங்களால் முடிந்த எதிர்ப்பை ஏதாவது ஒரு வழியில் வெளிக் காட்டியிருக்க வேண்டும்.

தங்களது கண்முன்னே வல்லுறவுக்காக இழுத்துச் செல்லப்படும் தனது தாயையோ, மனைவியையோ, மகளையோ சகோதரியையோ காணும் ஒரு பெண் அல்லது ஆண் எப்படி எந்த நிலையிலிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பெண் கைதிகள்  "அதற்குசம்மதித்திருப்பார்களா? அவர்கள் இணங்கவில்லையென்றால்?

கொடூரமான வன்கலவிக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்…!
இல்லையென்று மறுக்கின்றனர் இஸ்லாமிய அறிஞர்கள். அதாவது ஹதீஸ்களில் பெண் கைதிகளுடன் உடலுறவு கொண்டதாகவே கூறப்பட்டுள்ளது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்படவேயில்லைஎனவே அவர்கள் கற்பழிக்கப்படவில்லை என்று விளக்கமளிக்கின்றனர்.

விபச்சாரியின் சம்மதத்துடன் நிகழும் உடலுறவை முறையற்றது என தடைசெய்த அல்லாஹ், எப்படி இந்த சம்மதமின்றி நிகழும் உடலுறவை அனுமதித்திருக்க முடியும்? வாதத்திற்காக, அவர்கள் சம்மதித்திருந்தாலும் அது விபச்சாரம்தானே?

கள்ளத்தொடர்பு என்பது தங்களது துணைவர்களுக்கு தெரியாமல், நம்பிக்கை துரோகம் செய்து காதல் கொண்டு இணைவதாகும். ஆனாலும் சம்பந்தப்பட்ட இருவரின் முழு ஒப்புதலோடுதான் கள்ளத் தொடர்புகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. அல்லாஹ் இதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமென்கிறான். திருக்குர் ஆனின் பல பகுதிகளிலும், ஹதீஸ்களிலும் இந்த கள்ளத்தொடர்பை வன்மையாக கண்டிக்கும் வசனங்களைக் காணலாம்.

பாதிப்பிற்குட்பட்ட அப்பெண்களின் நிலையில் தங்கள் அன்புக்குரிய தாயை, மனைவியயை, மகளை, சகோதரியை அல்லது தங்களின் நெருக்கமான உறவுவழி பெண்களை ஒரு நிமிடம்  கற்பனை செய்து பார்த்தால், சூழ்நிலையின் கொடூரம், மறுப்பவர்களுக்கு விளங்கும்.

          தங்களின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்தவர்கள் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் தயார் நிலையில் இருக்க முடியும்? அந்தப் பெண்கள் அதற்கு இணங்கியிருப்பார்களா? அப்பெண்கள் உடலுறவு கொள்ளப்பட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றது.

முஹம்மது நபி மற்றும் அவரது  படையினரின் இச்செயலை என்னவென்று அழைக்க முடியும்?

வன்கலவி…கற்பழிப்பு…!       மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை.

இஸ்லாமிய ஷரியத்தின்படி விபச்சார குற்றத்திற்கே கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் பொழுது கற்பழிப்பை எப்படி அனுமதித்திருப்பார்கள்?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா?

நிச்சயமாக முடியாது !

முழு குர்ஆனிலும் அப்படி ஒருவார்த்தையே கிடையாது. பெண்களுக்கு இழைக்கப்படும் இக்கொடூரத்தை அல்லாஹ் அறியவில்லையா? அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட செயலா?

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை, புஹாரி, முஸ்லீம் போன்ற மிக நம்பகமான ஹதீஸ்களிலிருந்தேனும் காண்பிக்க முடியுமா?

நிச்சயமாக எவனாலும் முடியாது !
ஏன்…?

மேலும் சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணி ஹதீஸ்களையும் காண்போம்

வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்
       முஹம்மது நபி அவர்களின் படையினரால் போரில் கைப்பற்றப்படுவதற்கு முன்பு வரை முன்பு வரை சுதந்திரமாக வாழ்ந்தவர்கள்அவரவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப கற்பு நெறியை பின்பற்றி வாழ்ந்தவர்கள்நிச்சயமாக அற்ப தேவைகளுக்காக உடலை விற்கும் கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட அனுமதி,
நபியே (பெண்களில்) எவருக்கு மஹர்ளைக் கொடுத்திருக்கிறீரோ அத்தகைய உம்முடைய மனைவியரையும், அல்லாஹ் (போரின் மூலம்) உமக்கு கொடுத்தவற்றில் உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைப் பெண்கள்)...
 (குர்ஆன் 33:50)
மற்றவர்களுக்கும் வழங்கப்பட்ட அனுமதி,
(ஆனால்தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.
(குர்ஆன் 23:6)
தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்) பழிப்புக்குரியவர்களல்லர்.
(குர்ஆன் 70:30)
Sunaan Abu Dawud: Book 11,  number 2150
Abu Said al-Khudri said: "The apostle of Allah sent a military expedition to Awtas on the occasion of the battle of Hunain. They met their enemy and fought with them. They defeated them and took them captives. Some of the Companions of the apostle of Allah were reluctant to have intercourse with the female captives in the presence of their husbands who were unbelievers. So Allah, the Exalted, sent down the Qur'anic verse, "And all married women (are forbidden) unto your save those (captives) whom your right hand possesses". That is to say, they are lawful for them when they complete their waiting period."" [The Qur'an verse is 4:24].

Sahih Muslim: Book 008, Number 3432:
Abu Sa'id al-Khudri (Allah her pleased with him) reported that at the Battle of Hanain Allah's Messenger (may peace be upon him) sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them captives, the Companions of Allah's Messenger (may peace be upon him) seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, Most High, sent down regarding that:" And women already married, except those whom your right hands possess (4: 24)
(ஹூனைன் போரில் நபியின் படை வெற்றி பெறுகிறது. போரில் ஈடுபட்ட நபித்தோழர்கள், தங்கள் கைப்பற்றிய பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்கின்றனர். நபித்தோழர்களில் சிலர், அப்பெண்கைதிகள் திருமணமானவர்கள் என்பதாலும், காஃபிர்களான அவர்களின் கணவர்கள் இருப்பதாலும் உடலுறவு கொள்ளத் தயங்குகின்றனர்இந்செய்தி நபியிடம் கூறப்பட்டவுடன், அடிமைகளின் திருமணங்களை ரத்து செய்யும் வசனங்களை (குர்ஆன் 4:24) அல்லாஹ் இறக்கினான்)
அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப் பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…
              (குர்ஆன் 4:24)

போர்க்கைதிகளில் தம்பதிகளும் இருந்தனர். சஹாபாக்களில் சிலர் தம்பதிகளை அவர்களது திருமணபந்தத்தை சிதைக்கத் தயங்குகின்றனர் திருமணமானவர்கள் என்பதாலும் அவர்களது கணவர்களின் முன்னிலையிலும் உடலுறவு கொள்ள சஹாபாக்களில் தயங்குகின்றனர். ஆனால் அல்லாஹ்(?),  சஹாபாக்களின் செயலை விரும்பவில்லைதிருமண உறவைப் வலுக்கட்டாயமாகப் பிரித்து, அப்பெண் கைதிகளின் இறைச்சியை போர்வீரர்களுக்கு விருந்தாக்கினான் எனக்கூறும் திருக்குர் ஆனின் 4:24 வசனத்தின் பின்னணியை மனிதாபிமானமுடையவர்களால் எப்படி ஏற்க இயலும்கற்பை பாதுகாக்க பணிக்கும் அல்லாஹ் இப்படி கற்பழிப்பை ஊக்குவிப்பானா? சத்தியமாக இருக்க முடியாது…!

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்கு அறிவுறுத்திக் கூறுவது என்னவென்றால், மனைவியர்களைப் பிரிந்திருக்கும் நேரத்தில் அற்பமான காமஇச்சையை கட்டுப்டுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் அல்லது முடியாதவர்கள் கற்பு என்ற ஒழுக்கத்தில் பேணுதல் செய்கிறாம் என்று சிரமத்திற்குள்ளாகத் தேவையில்லை என்பதுதான். ஒருவேளை ஒழுக்கத்தை மீறினாலும், நெறி தவறி விட்டோமே குற்ற உணர்ச்சியை களைவதற்காக வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அனுமதி(!) "பழிப்பிற்குரியவர்களல்றர்" என்ற மாபெரும் அற்புத அனுமதி. (த்ரீயெம் பிரின்டர்ஸ், K.A நிஜாமுத்தீன் மன்பஈ அவர்களின் மொழபெயர்பில் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்" எனவும் சவுதி வெளியீடு, முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழிபெயர்ப்பில் "நிந்திக்கப்படுபவர்களல்ர்” எனவும் உள்ளது)

          நாம் இங்கு முக்கியமான ஒன்றை கவனிக்கத் தவறுகிறோம் குர்ஆன் 23:5-6, 70:30 காணப்படும் "பழிப்பிற்குரியவர்கள் அல்லர்/ பழிப்பிற்குரியகுற்றமல்ல" என்பதன் உட்பொருள் அன்றைய காலகட்டத்திலும் இது பழிப்பிற்குரிய ஈனத்தனமான செயலாகவே இருந்துள்ளது என்பதுதான். இல்லையெனில்பழிப்பிற்குரியவர்கள் அல்லர்" என்ற சொல் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பழிப்பிற்குரிய மகாபாவமான செயலைத் தடுக்க வேண்டிய தடுக்க வேண்டிய இறைவனே(!) "பழிப்பிற்குரிய குற்றமல்ல" என்று அனுமதித்தான் என விளக்கம் தரமுனைந்துள்ள இஸ்லாமியர்களின் மனிதாபிமானத்தை நினைத்து வேதனைப்படுகிறேன்.

கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனை குர்ஆனில் இல்லாததற்கான காரணமும் இதுதான்.

இந்த இழிவான செயல்களை இறைவன் அனுமதித்திருப்பானா? நிச்சயமாக ஒரு சராசரி மனிதன் கூட இந்த கேவலமான அனுமதிகளை வழங்கமாட்டான். இது கருணைமிக்கவன் என்று கூறப்படும் இறைவனின் அனுமதிகளாக இருக்க முடியாது. எனவே குர்ஆன் வசனங்கள் முழுவதுமே  முஹம்மது நபியின் கற்பனைகளின் விளைவுதான் என்பது  தெளிவாகிறது.

மிகக் கேவலமான சகிக்க முடியாத செய்தி என்னவென்றால், இன்று புனிதப்போரில் ஈடுபட்டுள்ள ஜிஹாதிகள் வெற்றி பெற்றால் இதைவிட கொடுமையான நிகழ்வுகள் அரங்கேறுவது உறுதி. காரணம் மேற்கூறிய குர்ஆனின் கற்பழிப்பு அனுமதிகள் இன்றும் 100%   செயல்படுத்த அனுமதிக்கப்பட்டவைகள்இதை ரத்து செய்ய எந்த முல்லாவாலும்  இயலாத விஷயம்.

ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் தளத்திலிருந்து  "வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்" பற்றிய விளக்கம்.
http://www.binoria.org/q&a/miscellaneous.html#possessions
Question:
What is the meaning of right hand possession and what was the purpose of having them. Some brothers in America think it is okay to have right hand possessions now in the USA.
கேள்வி :
(வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் என்பதன் பொருள் என்ன அவர்களை அடைந்ததற்கான தேவை என்ன. அமெரிக்காவில், வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொள்வது இன்றும் சரியானதே என்று அமெரிக்காவில் இருக்கும் சில சகோதரர்கள் நினைக்கிறார்கள்)

Answer: 
Right hand possessions (Malak-ul-Yameen) means slaves and maids, those came in possession of Muslims through war or purchase. After having the possession of slave maid it is lawful and correct to have sexual relation with them. Even today if Muslims get possession over infidel country, this condition is possible, lawful and correct. 
(வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்கள் எனபது அடிமைகளைக்குறிக்கும். அவர்களை போர் அல்லது (பொருள் கொடுத்து) வாங்குவதன் முலம் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அவர்களை சொந்தமாக்கிக்கொண்டபின்னர் அவர்களுடன் பாலியல்உறவு கொள்வது (ஷரியத்) சட்டபூர்வமாகவும் சரியானதும். இன்றும் கூட காஃபிர் (இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத) நாடுகளை  வெற்றி கொண்டால், இந்த (சட்ட) நிபந்தனை செயல்படுத்தக் கூடியதாகவும்சட்டபூர்வமாகவமானதாகவும்சரியானதாகவும் இருக்கிறது)

முஹம்மதை, என்னுடைய தூதராக ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையெனில் கொலை புரியவும்கொள்ளையடிக்கவும், கற்பழிக்கவும் முழு உரிமையை முஹம்மதிற்கு நாம் வழங்கியுள்ளோம். என்பதே மனிதனுக்கு, அல்லாஹ் கற்பிக்கும் போதனையா?

மாற்று மதத்தினரின் செயல்கள் அல்லாஹ்வை மிகுந்த அவமானப்படுத்திவிட்டது எனவே அவர்களைத் தண்டிக்கவும், அவமானப்படுத்துவதற்காகவும் முஹம்மது நபி கடுமையாக நடந்து கொள்ள அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்டார் என்கின்றனர்.

புஹாரி ஹதீஸ்   :  2926     
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல் முஸ்லிமே ! இதோ…! என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கின்றான் அவனை நீ கொன்று விடு என்று கூறும்

இந்த அற்பமனிதர்களின் புறக்கணிப்பால் அல்லாஹ், அவமானமடைந்து விட்டான் எனக் கூறுவது, அவனுடைய வல்லமைக்கு இழுக்கு! சர்வவல்லமையுடைய இறைவன் தன்னை அவமானப்படுத்தியவனை கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே அவன், தன்னை இழிவு படுத்தியவர்களை தண்டிக்க விரும்பினால் அற்ப மனிதர்களின் உதவியின்றி நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு, மூளையைச் செயலிழக்கச் செய்யலாம், இதயத் துடிப்பை நிறுத்த முடியும். அல்லது அவன் அளிக்கும் தண்டனையை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால் எல்லேரும் காணும் விதமாக வானில் உயர்த்தி தரையில் வீசி எறிந்து சிதறடிக்கலாம். அது மற்றவர்களுக்கும் பாடமாக அமையும்.

          இரவு நேரத் தாக்குதல்களில் எதிரிகளின் குழந்தைகளும் இறக்கும் அபாயம் உள்ளதே? என்ற நபித்தோழர்  ஒருவரின் அச்சத்திற்கு, முஹம்மது நபி மிகக் கனிவான பதிலைக் கூறி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.

புஹாரி ஹதீஸ்  : 3012         
 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது இணை வைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள்.…

மாற்று மதத்தினர் இருக்கவே கூடாது என்று அல்லாஹ் விரும்பினால், முஹம்மதுவின் கையில் வாளைக் கொடுத்து கொல்லச் செய்வதை விட, யூதர்கள், கிருஸ்துவர்கள்  என எந்த ஒரு மாற்று மத குழந்தைகளும் பூமியில் பிறக்காமல் தடுப்பது எளிதல்லவா?

தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும். முஹம்மது நபி, முஸ்லீம்களின் மனதில் அவர் வலுவாக பதிய வைத்துள்ள பேய்க்கதைகள் உள்ள வரையிலும் அவர்களால் சிந்திக்கவும் முடியாது, அவரது போதனைகளில் நிறைந்திருக்கும் அபத்தங்களை உணரவும் முடியாது.

முஸ்லீம் பெண்மணி ஒருவர், TNTJ-வினரின் இஸ்லாமிய கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றில் "வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களைக்" குறிப்பிட்டு, இது  வன்கலவி செய்ய குர்ஆன் அனுமதிப்பதைப் போன்றுள்ளதே? என்று கேள்வி கேட்டார். அதற்கு, தவ்ஹீத் ஜமாத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தஃபி, பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார், "முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்களின் காலத்திற்கு முன்பு வரை போர்கைதிகள் அடிமைகள்தான் அவர்களை தங்கள் விருப்பம் போல பயன்படுத்தலாம் என்ற நிலையிருந்தது. ஆப்ரஹாம் லிங்கன் காலத்திற்குப்பின் உருவாகிய புதிய சிந்தனைகளின் காரணமாகவே இந்த அனுமதிகள் உங்களுக்குத் தவறாகத் தெரிகிறது. மேலும் இது அல்லாஹ்வின் அனுமதி எனவே சஹாபக்களின் செயலில் தவறில்லை" என்றார்.

 நம் மார்க்க அறிஞர்களின் வாதம் எப்படி மனசாட்சியுள்ள மனிதர்களால் ஏற்க முடியும்?

அடிமைப் பெண்களுடன் கூடுவதும், அவர்களை விருப்பம் போல பயன்படுத்துவதும்முஹம்மது நபியால் துவங்கி வைக்கப்படவில்லைஇது அவருக்கு  முன்பிருந்தே பின்பற்றப்படும் ஒரு நடைமுறை இதற்கு முஹம்மது நபியை எப்படிக்  குறை கூற முடியும் ? என்றும் மறுக்கின்றனர்.

          எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள் உள்ளனர். ஆனால், முஹம்மது நபி இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை அல்லாஹ் தனக்கு வேதவாக்காக அருளியதாகக் கூறி குர்ஆனிலும்  எழுதிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும்.

முஹம்மது நபி கற்பழிப்பதை நியாயப்படுத்தி அல்லாஹ்வின் பெயரால் சட்டபூர்வமாக்கிவிட்டார்

இஸ்லாம் எந்தவகையான ஒழுக்கநெறிகளைப் போதிக்கிறது?

மதுவும், வட்டியும்பல தெய்வக் கொள்கையும், உருவ வழிபாடும் முஹம்மது நபிக்கு முன்பிருந்தவைகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஈனத்தனமான செயல்களை இறைவனின் அனுமதியென்று கூறிக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?

சராசரியாக சிந்திக்கக் கூடிய எவராலும் குர்ஆனின் இந்த அனுமதிகளிலுள்ள முட்டாள்த்தனத்தை அறிய முடியும். கற்றுணர்ந்த மார்க்க அறிஞர்களுக்குத் தெரியாதா? அவர்களென்ன இரக்கமில்லாதவர்களா?
         
          நிச்சயமாக  அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இத்தகைய விவாதங்களை பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இஸ்லாமின் முரண்பாடுகளையும், முட்டாள்த்தனங்களையும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினாலும் அதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரே பதில்  “அல்லாஹ்வின் கடும்கோபத்திற்கு ஆளாக வேண்டாம்" என்பதுதான்.

இன்று இஸ்லாமிய பெண்கள் திரைக்குப் பின்னால் வாழ்வதற்கும் "பர்தா" என்ற திரைகளுடன் நடமாடுவதற்கும் உமர் பின் கத்தாப்பின் நச்சரிப்பு மட்டுமே காரணம் என்பதை முன்பே கண்டோம். பெண்களின் ஒழுக்கத்திற்காகவும் கண்ணியத்தை காப்பாற்றவும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் வற்புறுத்தியவரின் ஒழுக்கத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Ibn Sa'd, volume 2, Page 438 
Narrated Umar

From "A slave girl passed by me who attracted me, and I cohabited with her while I was fasting".
(உமர் பின் கத்தாப் கூறுகிறார்: என்னைக் கடந்து சென்ற அடிமைப் பெண்களில் ஒருத்தி (அழகால்) என்னை ஈர்த்ததாள் நான் நோன்பு வைத்திருந்த பொழுதும், அவளுடன் கலவியில் ஈடுபட்டேன்.)

நோன்பு வைத்திருக்கும் வேளையில் அழகான பெண்ணைக் கண்டிருக்கிறார். உடனே அவளைத் தனது இச்சைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார். அந்த அடிமைப்பெண் உமர் பின் கத்தாப்பின் மனைவி என்றோ, பிற்காலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டதாகவும் எந்த  குறிப்புகளும் இல்லை. சுருக்கமாக சொல்வதென்றால் அழகானவளைப் பார்த்தேன் வேலையை முடித்தேன்.

நோன்பின் கதி? அதோ கதி…!
முஹம்மது நபியின் காலத்திலும், அவருக்கு பிறகும் பல லட்சக்கணக்கான ஆப்ரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர். கருப்பின அடிமைகளை விற்கும்விற்பனைச் சந்தை கிபி 1960 வரையிலும் மக்காவில் இருந்துள்ளது. ஆனால் அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக உள்ளதை நீங்கள் பார்க்கலாம். இதே போல அமெரிக்காவிற்கும் ஆப்ரிக்க கருப்பின அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு பல்கிப் பெருகி ஒரு பெரும் சமுதாயமாகி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆகும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். ஆங்கிலேயர்களால் அடிமைகளாக இந்தியாவிற்குக்   கொண்டு வரப்பட்ட நைஜிரியா, தான்ஸானியாவைச் சேர்ந்த ஆப்ரிக்க பழங்குடி கருப்பின மக்கள் மக்கள்  குஜராத் மாநிலத்தில் வசிப்பதை இன்றும் காணலாம்.
அரேபியாவிலிருந்து  கருப்பின மக்கள் விரட்டியடிக்கப்படவுமில்லை. அரேபிய  தீபகற்பத்தில் கருப்பின மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?

 அடிமைப் பெண்களை, தங்களது பாலியல் தேவைகளுக்காக உபயோகப்படுத்திக் கொண்ட மிருகங்கள், ஆண் அடிமைகளின் பாலியல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக ஆடு, மாடுகளுக்கு இன்றும் கிராமப்பகுதிகளில் "காயடிப்பதைப்" போன்று  ஆண் அடிமைகளின் விதைகளை அடித்து  மலடுகளாக ஆக்கவிட்டனர். இப்பொழுது உங்கள் மனதில் இப்படி ஒரு கேள்வி எழலாம்இத்தனை கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அடிமைகளாக எஜமானர்களின் காலடியிலேயே ஏன் வீழ்ந்து கிடக்க வேண்டும்? வாழ விரும்பினால் எங்காவது ஓடிப்போக வேண்டியதுதானே?

முஸ்லீம் ஹதீஸ் எண்: 101, அத்தியாயம்: 1, பாடம்: 1.31 அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
"தன் எஜமானர்களிடமிருந்து ஓடிப்போகிற அடிமை, அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொல்லச்) செவியுற்றிருக்கிறேன்.
முஸ்லீம் ஹதீஸ் எண்: 102, அத்தியாயம்: 1, பாடம்: 1.31,  அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).
"(தன் எஜமானிடமிருந்து) ஓடிப் போன அடிமைக்கான (இறைவனின்) அடைக்கலம் நீங்கிவிடுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

சிந்தித்துப்பாருங்கள், அடிமை ஒடிப்போவதற்கும் இறைமறுப்பிற்கும் என்ன தொடர்பு?

புஹாரி ஹதீஸ்: 2534
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:    
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.


சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான்.  

Facebook Comments

168 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

நண்பர் தஜ்ஜால்,

இது மிக அருமையான பதிவு. பாராட்டுகள்.

இஸ்லாமியர்கள் இதற்கு பதில் சொல்வார்களா? நிச்சயமாக பதில் சொல்ல மாட்டார்கள். அவர்கள் வழக்கம்போல அமைதியாக கண்டு கொள்ளாமல் நழுவி விடுவார்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ஆனந்த்,

நன்றி.

வழக்கம் போல முஸ்லீம்கள், நாம் இருக்கும் திசைக்குக் கூட வரமாட்டார்கள். இதுவே நாம் சொல்வது உண்மையென்பற்கு சரியான ஆதாரம்.

Ant said...

ஆகுக என்றால் ஆகவிடும் அளவு சக்திபடைத்த அல்லா தன்னால் படைக்கப்பட்டவர்களாக மனித எதிரிகளை கண்டுபிடித்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மனிதர்களை நாடவேண்டிய நிலையில் உள்ளதை வைத்து பார்த்தால் அல்லாவின் நிலை தெரியும். சிந்திக்க மாட்டீர்களா என்று அல்லா அடிக்கடி கேட்பதை கேட்டவர்கள் சிந்தித்தால் நலம். கட்டுரையின் ஒவ்வொருவரியும் சிந்திக்க துாண்டும் விதமாக உள்ளது.

Anonymous said...

Ifeel shame to be a muslim
Shahabdeen (Sri Lanka)

தஜ்ஜால் said...

வாருங்கள் Ant,

’குன்’ என்ற ஒற்றை சொல்லின் மூலம் அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும். ஆனால் மூலப் புத்தகத்தில் எத்தனை முறை எதற்காக ’குன்’என்று சொல்ல வேண்டுமென்பதை படைப்பின் துவக்கத்திலேயே முடிவு செய்து விட்டான். அதை மீறி அவனால் செயல்பட முடியாது.

அல்லது

’குன்’ மந்திரம் தீர்ந்து போயிருக்கலாம்.

வேறுவழியில்லாமல் அற்ப மனிதர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டியதாயிற்று!

தஜ்ஜால் said...

வாருங்கள் ஷஹாப்தீன்,
//Ifeel shame to be a muslim/// சில வருடங்களுக்கு முன்பு, இஸ்லாம் பற்றிய உண்மைகள் அறியத் துவங்கிய பொழுது இதே நிலையில்தான் நாங்களும் இருந்தோம். தொடர்ந்த தேடல் பல உண்மைகளை அறியச் செய்தது.

வாருங்கள் ஷஹாப்தீன் அறிவுசார் உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்!

இப்ன் லஹப் said...

ச்ச்ஷ்ஹ்ஹ்ஹ்ஹ், எப்பா இப்பவே கண்ணா கட்டுதே :)
அந்த அராபிய வியாபாரியிடம் ரொம்ப அதிகமாக எதிர்பார்ர்க்கின்றனர்.
சொன்னாலும் ஒரு அல்லா பொயை சொன்னார், போட்டு இப்படி கிழிகிறீர்களே தஜ்ஜால்.
எல்லா முஸ்லீமும் அல்லாஹ்வின் அடிமை என்பது தெரியும்,
அது என்ன அல்லாஹ்வின் அடிமையின் அடிமை ?
நல்ல கூத்து :)
13 பொண்டாட்டி கட்டுனப்பவே அண்ணனின் யோக்கியதை தெரியவேண்டாம்.
ஒரு முஸ்லீம் 4 பொண்டாட்டி கட்ட அல்லா உத்தரவு போட்டபோது அது தனக்கு செல்லாது என்று சக தோழர்களை ஏமாற்றியவருக்கு, அடிமைகள் எல்லாம் ஜுஜுபி !!

Unknown said...

//தன்னைப் புறக்கணித்தவர்களை தண்டிக்க அல்லாஹ்விற்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? முஸ்லீம்கள், இந்த ஒரு கேள்வியை சிந்தித்தால் போதும் எல்லா உண்மைகளும் விளங்கிவிடும்.//
அருமையான விளக்கம்.

சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும் என்பதால்தான் யாரும் சிந்திப்பதில்லை.முகம்மது சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்ற குருட்டு மூடநம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இப்படியேதான் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதுதானே முகம்மதின் நோக்கமே.அதை மிகச் சரியாக கடைபிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் இஸ்லாமியர்கள்.

தஜ்ஜால் said...

வாருங்கள் இப்ன் லஹ்ப்,

//தோழர்களை ஏமாற்றியவருக்கு,// ஆம், அன்று முஹம்மது தன்னை நம்பியவர்களை அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி ஏமாற்றினார். இன்று இஸ்லாமிய மதவியாபாரிகள் முஹம்மதின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,
//சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும் என்பதால்தான் யாரும் சிந்திப்பதில்லை// மட்டுமல்ல சிந்திக்க விடுவதில்லை.

சர்வ வல்லமையுடையதாகக் கூறப்படும் கடவுளுக்கு ஒரு மனிதனின் உதவி தேவையா? என்ற கேள்விக்கு மதவியாதிகள் தரும் விளக்கம் இருக்கிறதே....... ஷ்ஹ்ஹ்ஹ்ஹ், எப்பா தாங்கமுடியவில்லை!

சிவக்குமார் said...

நீண்ட பதிவில் நிறைய உழைப்பு தெரிகிறது. நல்ல பதிவு.

ஆப்ரிக்கர்கள் காயடிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா ?

1970 கள் வரையில் சௌதியில் அடிமை வணிகம் இருந்தது குறித்து வேறு ஏதாவது விரிவான உங்களது/ மற்றவரது பதிவுகள் இருக்கிறதா ?

நந்தன் said...

சதைப் பசி. அதைத்தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. அதனால் சமூகப் பயன்பாட்டுக்கு எதுவும் அவர்கள் உருவாக்கவில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் தமிழானவன்,

விக்கிபீடியாவில் அடிமைகள் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளது.

தஜ்ஜால் said...


வாருங்கள் நந்தன்,

//சதைப் பசி. அதைத்தவிர அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை.// ஆம் அவர்களுக்கு பெண்களின் சதை மீது வெறி. அது கடவுளையும் துணைக்கு வரவழைத்தது.

Ant said...

// வன்கலவி…! கற்பழிப்பு…! மிருகங்கள் கூட இது போன்ற ஈனத்தனமான செயலைச் செய்வதில்லை .... கற்பழிப்பு குற்றத்திற்கான தண்டனையை குர்ஆனிலிருந்து கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது … !// கற்பழிப்பு என்பது வட்டியை விட கொ‌டுமையானதா? அலீயின் கற்பழிப்பை நியாயப்படுத்தியது, அஸ்ல் செய்ய நினைத்த சஹாபாக்களிடம் சந்தோசத்தை அணுபவிக்க கூறியது என்று அனைத்துமே கற்பழிப்பை ஊக்கப்படுத்துவதாக தான் உள்ளது. தாக்குதல் நடத்தி ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவும் கூட்டத்தை ஊக்கபடுத்த அல்லா கொடுத்த ஊக்க மருந்தான கற்பழிப்பை எப்படி அல்லாசாமியால் தடுக்க முடியும்.

Anonymous said...

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்..,
முதலில் இந்த இனைய தளத்தின் தலைப்பை கண்டு அதிர்ந்தேன், கோபப்பட்டேன் பிறகு இனத்தை படிக்கும் பொது எனக்குள் வந்த முதல் கேள்வி என்னவென்றால் 1400 வருடத்திருக்கு முன்பு வந்த திர் குரான் இன்றைய வின்ஞனத்துடன் பேசப்பட்டு வருகிறது. இன்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இருக்கும் தொழில் நுட்பங்களை கொண்டு கண்டுபிடுக்கும் விசியங்களை 1400 வருடத்திருக்கு முன்பு எல்லாம் வல்ல இறைவன் இறுதி இறைதூதர் கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் மீது வஹீயாக இறக்கப்பட்ட திர் குரான் கூறுகிறது என்பதும் இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது கண்மணி நாயகம்(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட புத்தகம் இல்லை என்பது தெரிய வருகிறது.

Anonymous said...

ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர் எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் இந்த திர் குரானை இயற்ற முடியுமா? அதுவும் அராபிய இலக்கண வலுனர்களின் கருப்பனைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்கண வார்த்தைகள், வரிகளின் அணிவகுப்பு, திர் குரானை ஓதினால்( படித்தால்) வரும் ராகம் சீரான ஓவிய வடிவில் இருக்கும் எழுத்துகள் இவற்றை ஒரு எழுத்த படிக்காத மனிதனால் உருவாக்க முடியுமா என்று சிந்தித்து பாருங்கள் சகோதர்களே..,
இறையில்லா இஸ்லாம் என்ற தலைப்பு நான் எப்படி பார்க்கிறேன் என்றால் (லா இல்லாஹா) இறைவன் இல்லை (இல்லல்லாஹ்) அல்லாவை தவிர!!!
இறைவன் இல்லை (லா இல்லாஹா) என்று நீங்கள் ஒப்புக்கொண்டுவிடீர்கள், இன்ஷா அல்லா (இல்லல்லாஹ்) அல்லாவை தவிர என்று எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு புரியவைப்பனாக ~ஆமீன்!

Anonymous said...

இப்பொது நீங்கள் இங்கு பதிவு செய்திருக்கும் புஹாரி ஹதிஸ்களுக்கு பதிலை விளக்க விரும்புகிறேன்.

புகாரி ஹதீஸ் -4138, 6603
இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறிய ஹைத்ஸ்சை குறிப்பிட்டு இருகிறீர்கள், அதில் வரும் ஒரு வரியை பாருங்கள் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறி இருப்பதை
"நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே!" என்று கூறியதின் பொருள் அதை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் என்று பொருள். அதை நீங்கள் செய்திருந்தால் தவறேதும் இல்லை என்று கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறவில்லை, நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! என்றால் அதை செய்யாதே என்று பொருள்.

சஹிஹ் முஸ்லிம் புத்தகம் 008, எண்:3371 என்ற பதிவில் இருக்கும் இருக்கும் நியாயத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், தவறான கண்ணோடாதில் பார்ப்பதும் நம் கண்களில் தான் இருக்கிறது.
"அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச்சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்." என்று அபத்தமாக கூறிப்பிட்டு இருப்பதை சற்று சிந்தித்து பாருங்கள் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் கூறியது போல் நினைத்திருந்தால் உலகத்தில் அவர்கள் தான் மிகப்பெரிய செல்வந்தராக அப்போது இருந்திருப்பார். கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பாருங்கள், மிக எளிமையாக கயற்று கட்டிலில் படுக்க கூடியவராகவும், சஹர்(நோன்பு நாட்களின் விடிய காலை உணவு), இப்தார்( நோன்பு திறக்கும் போதும்) பெருசம் பலத்தை மட்டுமே அவர்கள் நோன்பு வைத்தார்கள் என்பது இஸ்லாமியர்கள் அனைவரும் அறிந்தது. கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் கூறுவது போல் செல்வத்தின் மீது ஆசை கொண்டவார்க்க இருந்திருந்தால் அவர் மாளிகையில் இருதிருக்கலாமே, சிந்தித்து பாருங்கள் சகோதர்களே..,

Anonymous said...

புஹாரி ஹதீஸ் : 4350
புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதில் இருக்கும் உண்மைய பொருளை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு இருகிறீர்கள்.
அடிமை பெண், அடிமை பெண் என்று கூறுவதை சற்று சிந்தித்து பாருங்கள், ஹதிஸ்களில் வரும் அடிமை பெண்கள் என்ற வார்த்தை கொத்தடிமை கிடையாது. அவர்களை அடித்து துன்புறுத்துவதோ, அவர்களின் உழைப்பை பறித்துக்கொண்டு அவர்களை கொத்தடிமை படுத்துவதோ கிடையாது. போரில் கணவன்களை இழந்த பெண்கள், போரில் பெண்களை விட்டுவிட்டு புறமுதுகை காட்டி ஓடியவர்களின் வீட்டு பெண்களை அடிமை பெண்கள் என்று குறிப்பிட்டு இருகிறார்கள்.
அதரவு இல்லாமல் இருக்கும் பெண்களை யார் காப்ற்றுவது நீங்களா இல்லை நானா? சிந்தியுங்கள் எனவே கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்கள் மனதிற்கு பிடித்த பெண்கள் அவர்களில் இருந்தால் அவர்களை (திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று) "அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது என்று சொன்னார்கள்" என்றால் அதில் இருக்கும் அர்த்தத்தை பாருங்கள் அலீ (ரலி) அவர்கள் பெண்களை ஏமாற்றுபவர் இல்லை என்று நபி அவர்களுக்கு தெரிந்திருகிறது என்பதை உணருங்கள் . கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களின் தோழருடன் வந்து கொண்டிருந்த பொது, இரு சஹாபாக்கள் வருகிறார்கள் அப்போது அந்த சஹாபாக்கள் இறை தூதரிடம் கேட்கிறார்கள் நோன்பு வைத்திருக்கும் பொது ஏன் மனைவியை நான் முத்தமிடலாமா அப்படி செய்தால் அந்த நோன்பு கூடுமா என்று அப்போது கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள் முத்தமிடலாம் தவறு இல்லை என்று, அதே கேள்வியை மற்றொருவர் கேட்கும் பொது இல்லை மிதமிடக்கூடது என்று கூறினார்கள். இதை கண்ட கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் தோழர் நபியிடம் கேட்டார் முதல் மனிதருக்கு அனுமதித்தது ஏன், இரண்டாவது மனிதருக்கு தவிர்க்க கூறியது ஏன் என்று, அதற்க்கு கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய பதில் என்னவென்று தெரியுமா? " முதல் மனிதன் நோன்பு வைத்திருக்கும் பொது அவர் மனைவியை முத்தமிடுவது நிறுத்திக்கொண்டு நோன்பையும் நிறைவேற்றுவார் ஆனால் இரண்டாவது மனிதர் அவர் மனைவியை முத்தமிட்டால் அவர் எல்லை தாண்டக்கூடிய மனநிலையில் உள்ளவர் நோன்பை முறித்து கொள்வார் என்று கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களின் தோழருக்கு விளக்கினார்கள்.

Anonymous said...

சகோதர்கர்களே உங்களுக்கு இரு நண்பர்கள் இருகிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள், ஒருவர் நல்ல பண்புகளை கொண்டவர் மற்றும் ஒருவர் நல்ல பண்புகளோடு சில தீய பழக்கங்களையும் கொண்டவர் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களிடமும் இருவரும் தனித்தனியாக வந்து ஒரு கேள்வியை வைகிறார்கள் நண்பனே இன்று நாம் சுற்றுல்லா சென்று வருவோம் என்று நல்ல நண்பன் அத கேள்வியை கேக்கும் போதும் நாம் சரி வருகிறேன் என்று கூறுகிறோம் இதே சில தீய பழக்கம் உடைய நண்பன் கேக்கும் பொது இல்லை வர முடியாது என்று கூறுகிறோம் காரணம் யாருடன் செல்வது சரி என்று நமக்கே தெரிந்திருக்கும் பொது, கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் மகத்துவம் மிக்க இறை தூதர் அவருக்கு நம்மைவிட சிந்திக்க கூடிய சிந்தித்து பாருங்கள்.

Anonymous said...

TNTJ , சுன்னத் ஜமாஅத், இன்னும் பலர் கூறும் இஸ்லாமிய தகவல்களை ஏற்றுகொள்ள வேண்டாம் அது ஒருவருக்கு ஒருவர் கூறுவதில் கருத்து வேறுபாடுகளும், முரண்பாடான விசியங்களும், அசிங்கங்களும் இருக்க தான் செய்யும் காரணம் இவர்கள் மனிதர்கள் எனவே தருகள் செய்வது இயல்பு, உண்மை இஸ்லாத்தை தேட விரும்புவர்கள் அதை அவரவர்களின் வேத நூல்களிலும், திர் குரானிலும் தேடுங்கள் உங்களுக்கு உண்மையான இறையுள்ள இஸ்லாம் புலன்பட எல்லாம் வல்ல இறைவன் உதைவி செய்வானாக~ ஆமீன்.

மற்றொரு சிந்திக்க வேண்டிய விசியம்: புஹாரி ஹதிஸ்கள் என்பது கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் இயற்றியது இல்லை, இறைவனால் இறக்க பட்டதும் இல்லை, அது நபி வாழ்ந்த முறையை நபியுடன் வாழ்ந்தவர்களும், நபி தோழர்களும், சஹாபாக்களும் பதிவு செய்ததை தான் புஹாரி ஹதிஸ் என்கிறோம். எந்த ஒரு நூல் பாமரன் கையில் வருகிறதோ அதை அவன் வசதிக்கு ஏற்றவாறு அவன் மாற்றி கொள்கிறான், ஆனால் திர் குரான் இறைவனால் அருளப்பட்டது அதில் வார்த்தைகள் திருத்தம் செய்யப்பட்டோ, முரண்பாடான வார்த்தைகளோ இல்லை என்பது இஸ்லாமியர்கள் அறிந்த உண்மை உங்களும் விரைவில் புரிவர்தர்க்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக~ ஆமீன்.

Anonymous said...

பைபிள் கூறுகிறது இறைவன் ஒருவனே என்று ஆனால் அதை பாதிரியார்களும், கிறிஸ்துவ கொவிள்களும் மாற்றி விடானர். முழு பைபளில் நான் தான் இறைவன் என்றும் என்னை வாங்குங்கள் என்று ஈச நபி (ஸல்) அவர்கள் கூரிபிடுருப்பதாக கட்டிவிட்டால் நாள் கிருஷ்துவ மதத்தை ஏற்றுகொள்ள தயார்.

ஹிந்துகளின் வேதம்: ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் கூறுகிறது.., இறைவன் ஒருவனே அந்த இறைவனுக்கு உருவம் கிடையாது, இறைவனுக்கு ஆதியும், முடிவும் கிடையாது என்று ஆனால் கோவில்களிலும், மடங்களிலும் மூனுத்தி முக்கோடி தேவர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் நீங்கள் எதை நம்ப போகிறீர்கள் உங்கள் வேதம் கூறுவதையா? இல்லை கோவில் கருவறையில் கூட சலாபம் கொள்ளும் சாமியார்கள் கூறும் பொய் பிரசாரங்கலையா? சிந்தியுங்கள் நீங்கள் உங்கள் வேந்தங்களை நம்பக்கூடியவர்கள் என்றால் உங்கள் வேதகளில் இருக்கும் நீங்கள் கடைபிடிக்கும் நல்ல விசியங்களும் திர் குரானில் இருக்கிறது.

Anonymous said...

கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று ஏற்க்க மறுப்பவர்கள் உங்கள் உங்கள் வேதங்களில் வரும் கல்கி அவதாரம் புராணத்தை, கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் பிறப்பையும் வைத்து பாருங்கள் கல்கி அவதாரம் என்பது கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் வருகையை குறிக்கிறது என்பது உங்களுக்கு புரியும்.

என்னுடன் இந்த இஸ்லாமிய தகவல் உங்களுக்கு போதுமானதாக இருக்காது என்று நினைகிறேன். நான் இந்த தகவல்களை உங்களை போல் சிந்தித்து தெரிந்து கொண்ட மாணவன் எனவே நான் தெரிந்து கொள்வதற்கும் இன்னும் ஏராளமான விசியங்கம் இருக்கிறது எனவே நீங்களும் உங்கள் வேதங்களிலும் திர் குரானிலும் தேடுங்கள் என்று கூறி எண் உரையை முடிவு செய்துகொள்கிறேன் வாஹிர்தானா வல்கம்துலில்லாஹி ரப்பில்லாலமீன்!

ஆனந்த் சாகர் said...

சமர்தீன் அஹமத்,

முகம்மதுவும் அவரது கைத்தடிகளான சஹாபாக்களும் செய்த கற்பழிப்புகள், படுகொலைகள், சூறையாடல்கள், வழிப்பறி கொள்ளைகள், பயங்கரவாத அதிரடி தாக்குதல்கள் போன்றவற்றை விரிவாக விளக்கும் ஹதீத்கள், வரலாற்று சான்றுகள் பல உள்ளன. இவை இஸ்லாமிய அதிகாரப்பூர்வ மூல நூல்களில் பதியப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே நாங்கள் முஹம்மதையும் அவர் மதம் என்ற போர்வையில் உருவாக்கிய பயங்கரவாத அரசியல் இயக்கத்தையும் அம்பலபடுத்தி வருகிறோம். நீங்கள் முஹம்மத் செய்த அக்கிரமங்களுக்கு சப்பை கட்டுகிறீர்கள். எங்கள் எழுத்துக்களை தொடர்ந்து நிதானமாக படியுங்கள். திறந்த மனதுடன் உங்கள் சொந்த சொந்த மூளையை பயன்படுத்தி சிந்தியுங்கள். அப்பொழுது மெல்ல மெல்ல உண்மையை புரிந்து கொள்வீர்கள். http://alisina.tamil.org

http://manidhan.wordpress.com என்ற தளங்களுக்கும் விஜயம் செய்யுங்கள். வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆனந்த் சாகர் அவர்களே!

கற்பழிப்புகள், படுகொலைகள், சூறையாடல்கள், வழிப்பறி கொள்ளைகள், பயங்கரவாத அதிரடி தாக்குதல் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே! நீங்கள் பதிவு செய்த அபத்தங்களுக்கு நான் கற்று கொண்ட சிறு விசியங்களை கூறும்போதே அதை சப்பைக்கட்டு என்று கூறுகிறீர்கள், இதே வார்த்தையை நானும் உங்களிடம் கூறலாமல்லவா? அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் கூறுவது தான் சரி என்று சப்பைக்கட்டு காட்டுகிறீர்கள் என்று. உங்கள் பதிவுகளை என்னை பொறுமையாக படிக்க சொல்லும் நீங்கள் முதலில் பொறுமையாகவும், மத சார்பற்றும் படியுங்கள் உங்களுக்கு நான் கூறிய தகவல்களில் இருக்கும் உண்மை புலன் படும். நன்றி நண்பரே!!!

Anonymous said...

Mr.Sameerdeen Ahamed how do digest brutal muhamed acts. i also read quran and hadits. muhamed not a prophet of god , he was prophet of evil

Anonymous said...


""சஹிஹ் முஸ்லிம் புத்தகம் 008, எண்:3371 என்ற பதிவில் இருக்கும் இருக்கும் நியாயத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், தவறான கண்ணோடாதில் பார்ப்பதும் நம் கண்களில் தான் இருக்கிறது"".
Mr.Sameerdeen Ahamed , if muhamed raped your child or wife or mother , how did you see

Anonymous said...

Mr.Sameerdeen Ahamed ask your mother and wife about muhamet acts, how they judge him

Anonymous said...

உங்கள் பெயர் கூட பதிவு செய்ய தெரியம் இல்லாத சகோதர்களே, நீங்கள் கூறுவதை தான் நானும் கூறுகிறேன், கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் இல்லை என்று கூறுவதற்கு வேறு எந்த ஒரு தகவலும் இல்லையா? இறைவனால் அருள்ளப்பட்ட திர் குரான் இன்றைய விஞனத்துடன் தொடர்புடையாதாக இருக்கிறது. இதை இறைத்தூதர் இல்லாதவர் எப்படி கூற முடியும் சிந்தியுங்கள். ஏன் பிழைகள், மனைவி மற்றும் தாயை இதில் நீங்கள் ஈடுபடுத்தி பேசினால் உண்மையை நன் சொல்லாமல் இருக்க முடியுமா? சகோதர்களே நீங்கள் கூறியது போல் என் தாயிடமும், மனிவியிடனும் இதை நான் காட்டினேன், கண்மணி நாயகம்(ஸல்)அவர்கள் மீது இப்படியான பொய் பிரச்சாரம் செய்யும் உங்களின் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். நீங்கள் பிள்ளை, மனைவி, தையை வைத்து கூறியது போல் நானும் உங்களை பார்த்து கேட்கலாமல்லவா உங்களுக்கு அவர்கள் ஏதேனும் நீங்கள் என்னக்கு குறிபிட்டது போன்ற துரோகம் ஏதேனும் இளைத்தார்களா என்று. மூன்று வயது பிள்ளையை கற்பழிக்கும் கொடுமை இன்று கூட நம் நாட்டில் நடக்கிறது, நம் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? ஒரு பெண் தனியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்க முடியுமா? நம் நாட்டில் ஆதாரத்துடன் இவைகள் நடகின்றனர்கள் செய்பவர்கள் இஸ்லாமியர்களா? நீங்கள் குற்றம் கூறும் கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் உரையை கேட்டு உண்மையாக நடப்பவன் எந்த பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், சக மனிதர்களுக்கும் துரோகம் செய்வதில்லை.

Anonymous said...

ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறப்படுவது ஹிந்து வேதங்களிலும் இல்லை, பைபிள் போன்ற எந்த நூல்களிலும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சட்டத்தின் வரலாறு தெரியுமா? இந்திய திருமண சட்டம் 1955- ல் நம் இந்திய மக்களுக்காக கொண்டுவரப்பட்டது காரணம் நம் நாட்டில் பெண்களை விட ஆண்கள் அதிகமாக இருகிறார்கள் என்பதற்காக தான் ஏன் என்ற கேள்வி உங்களுக்குள் வந்தால் அதற்க்கு என் பதில்: நம் நாட்டில் நடந்த பெண் சிசு கொலைகள் தான் காரணம். இந்தியாவை தவிர வேறு நாடுகளின் மாக்கள் தொகையை பாருங்கள் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருகிறார்கள் என்று உலக ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு ஒருத்தி என்றால் மீதம் இருக்கும் பெண்களை என்ன செய்வீர்கள்? அப்படியே என்றால் பெண் சிசு கொலை தான் உரியது என்று கூறப்போகிறீர்களா? நீங்கள் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் மீது பலி கூறுவதால் கேட்கிறேன் கடவுள் என்று கூறும் ராமனின் தந்தை தசரதுனுக்கு எத்தனை மனைவி? இல்லை இல்லை ராமர் உதமாரக சீதையுடன் மட்டும் தானே வாழ்ந்தார் என்று கூறினால் உங்கள் கடவுள் ராமர் பல பெண்களுடன் வாழ்ந்த தசரதருக்கு ஏன் மகனாக பிறக்க வேண்டும்?

Anonymous said...

இது ஒரு புறம் இருக்கட்டும் உங்கள் கடவுளின் இன்னும் ஒரு அவதாரமாக கூறப்படும் கண்ணன் எப்படி பட்ட உத்தமர் பெண்களை வீதியில் பார்த்தாலே சில்மிஷம் செய்ய கூறியவரை நீங்கள் கடவுள் என்று கூறுகிறீர்கள் அந்த கடவுள் உங்கள் வீடு பெண்களிடம் சில்மிஷம் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? பெண்களை அடிமை படுத்துகிறது இஸ்லாம் என்று கூறுகிறீர்களே உலகில் பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் கொடுக்கும் அமெரிக்கா, அந்த அமெரிக்கா நாட்டில் பெண்கள் இப்போது அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள் என்று அமெரிக்கா ஆய்வு கூறுகிறது, இஸ்லாம் பெண்களை அடிமைபடுதுகிறது என்றால் அவர்கள் ஏன் இஸ்லாத்திற்கு மாறவேண்டும் சுதந்திரமாக அவர்கள் மதத்திலேயே இருக்கலாமே. இஸ்லாம் என்ற ஒரு மார்க்கம் தான் பெண்களை மதிக்கிறது அவர்களுக்கு தகுந்த உரிமையும் மரியாதையும் கொடுகிறது என்று திர் குரானை படிபதாக கூறும் சகோதர்கள் மீண்டும் படியுங்கள்.

Anonymous said...

கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி பெண்களை மதித்தார்கள் என்ற உண்மை உங்களுக்கு புரியும். நீங்கள் இஸ்லாத்தை ஏற்க்க வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை உங்கள் மதத்தை விட்டு வெளியே வர கூறவும் இல்லை . குரான் வசனம்:" லக்கும் தீனுக்கும் வலியதீன்" இதன் பொருள் அவரவர் மார்க்கம் அவர்களுக்கு என்பதே இதன் பொருள். இது போன்று வேறு எந்த வேத நூல்களும் கூறியதில்லை அதனால் தான் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமாக இருக்கிறது. இருபினும் தகவல்களை கூறவேண்டியது உண்மையை தெரிந்தவர்களின் கடமை. ஏற்று கொள்வதும், ஏற்றுகொள்ளததும் உங்களிடம் தான் இருக்கிறது. நான் இவரு இங்கு பதிவு செய்ததை உங்கள் வீட்டு பெண்களிடம் கூறுங்கள் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று மனசாட்சியுடன் நீங்கள் உணருங்கள். இதை பார்க்கும் அனைவர்க்கும் மனதில் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் என்னக்கு இல்லை, ஒருவர் உண்மையை உணர்ந்தாலே அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். உங்கள் மதத்தை நான் அவமதிதிருந்தால் என்னை மணியுங்கள் சகோதர்களே! இஸ்லாம் வழியாக கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறியது என்னவென்றால் பிறர் மதத்தை நீ அவமதிகாதே என்று எனவே தான் நாம் எல்லா மதங்களையும் மதிக்கிறேன் ஆனால் அஞ்சுவதும் அடிபடிவதும் எல்லாம் வல்ல இறைவன் அல்லா ஒருவனுக்கே.

Anonymous said...

சஹிஹ் முஸ்லிம் புத்தகம் 008, எண்:3371 என்ற பதிவில் இருக்கும் இருக்கும் நியாயத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், தவறான கண்ணோடாதில் பார்ப்பதும் நம் கண்களில் தான் இருக்கிறது.(இதை மட்டும் படித்தவர்கள் கீழே நான் கூரிபிட்டதை தொடர்பு படுத்தி படுயுங்கள் நியாயம் உங்களுக்கு புரியும்)
"அஸ்ல் செய்ய விரும்பியதன் காரணங்களில் ஒன்றை இந்த ஹதீஸ் விளக்குகிறது. சஹாபக்களின் வெறித்தனத்தால் அப்பாவி பெண்கைதிகள் கருவுற்றால், அடிமைச்சந்தையில் ஆதரவற்ற அந்த பெண்களை நல்ல விலைக்கு விற்க முடியாது என்பது மற்றொரு காரணம்." என்று அபத்தமாக கூறிப்பிட்டு இருப்பதை சற்று சிந்தித்து பாருங்கள் கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் கூறியது போல் நினைத்திருந்தால் உலகத்தில் அவர்கள் தான் மிகப்பெரிய செல்வந்தராக அப்போது இருந்திருப்பார்.கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் நீங்கள் கூறுவது போல் செல்வத்தின் மீது ஆசை கொண்டவார்க்க இருந்திருந்தால் அவர் மாளிகையில் இருதிருக்கலாமே ஏன் குடிசையில் மிக எளிமையாக வாழ்ந்தார்கள், சிந்தித்து பாருங்கள் சகோதர்களே..,

Anonymous said...

"நியாயத்தை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பதும், தவறான கண்ணோடாதில் பார்ப்பதும் நம் கண்களில் தான் இருக்கிறது"

Anonymous said...

kaavi veri pidiththa veriyargalaaa!!! iniyaavathu thirunthungal daa.., ungal madhathil irukum unmaigalai eduthuvitaal neengal ellarum thookil thongavendiyathu thaan daaa!!! india freedom ku munadi hindu, muslim, christian ellam onna thaneda othumaiyaa irunthaaga, velaikaaranin piriththaalum soolchiyil mattikitu thane namoda indiya othuma seerkulanthu ponathu..,think 1st and create a blog. kaavi veriyai parappa unnakulaam oru blog "thuuu"

Anonymous said...

Sameerdeen Ahamed, we need answer forthis article not blaming

Anonymous said...

evan daa intha blog create pannavan avan, ithai marupadi padi "இறையில்லா இஸ்லாம் என்ற தலைப்பு நான் எப்படி பார்க்கிறேன் என்றால் (லா இல்லாஹா) இறைவன் இல்லை (இல்லல்லாஹ்) அல்லாவை தவிர!!!
இறைவன் இல்லை (லா இல்லாஹா) என்று நீங்கள் ஒப்புக்கொண்டுவிடீர்கள், இன்ஷா அல்லா (இல்லல்லாஹ்) அல்லாவை தவிர என்று எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு புரியவைப்பனாக ~ஆமீன்!" ella muslim um ipadi thaan islaththai paarkiraargal. daai kaavi naaye allah unnaku nalla buthiya kudukatum.., islathil unnaaal oru % kooda thavaru solla mudiyaathuda. unnaku islathil ithu pondra kelvigaluku santhegam irunthaal therinthavargalidan kaetu kathuko athai vituputu ipadi ellam panunaa unaku aappu thaandi kaavi naaiye thirunthi tholaigada manam ketta payalgala.

Anonymous said...

Sameerdeen Ahamed you justify muhamed rapes and murder as good acts, how can i accept you as sixth sense human. The womens who raped by muhamed and his followers were not your sisters and mother, childs. that's why you defence muhamed. First read your quran with conscience

raja said...

muslims have no answer .super post. this is usual threat by nonsense muslims

Anonymous said...

உங்கள் பெற்றோர்கள், சகோதரிகள், பிள்ளைகள் கற்பழிப்புக்கு நீகள் கூறிப்பிடும் நபரால் பதிக்க படிருகிரார்களா? பிறகு எப்படி நீங்கள் அவர்களை நீ குறை கூற முடியும்? உங்கள் வேதம் கூறுவதையே கூறுகிறேன் " கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீயில் விசாரிப்பதே மெய்" இப்பொது இறந்தவர்களிடம் நாம் நேரில் கேட்க்க முடியாது எனவே அவர்களை பற்றி யார் செய்து சொன்னாலும் அவர் மீது சுமத்தப்படும் குற்றத்துடன் அவர்கள் செய்த நன்மைகளையும் ஒப்பிட்டு பாருங்கள் நன்மை அதிகமாக செய்திருப்பவர் என்றால் அவர் மீது சுமத்தப்படும் குற்றம் பொய்யானது என்று நாம் விளங்கிகொல்ள்ளலாம், இல்லை இல்லை என்னக்கு அவரை நேரில் சந்தித்து கேக்க வேண்டும் என்றால் மறுமைநாள் வரை பொறுத்திருங்கள். ஆங்கிலத்தில் the judgement day எனப்படும் நாள். அன்று உங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்.

islamiyan said...

aivu kaetta naaigala oruvar meedhu kutram sumaththa vendum endraal aatharam vendrum endru theriyaathaa?
புஹாரி ஹதிஸ்கள் என்பது கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் இயற்றியது இல்லை, இறைவனால் இறக்க பட்டதும் இல்லை, அது நபி வாழ்ந்த முறையை நபியுடன் வாழ்ந்தவர்களும், நபி தோழர்களும், சஹாபாக்களும் பதிவு செய்ததை தான் புஹாரி ஹதிஸ் என்கிறோம். எந்த ஒரு நூல் பாமரன் கையில் வருகிறதோ அதை அவன் வசதிக்கு ஏற்றவாறு அவன் மாற்றி கொள்கிறான் endru kooriyathu ungal kangaluku theriyathaa? padiparivillatha kaavi muttaalgaa mudhalil olungaaga padiyungal daa

Anonymous said...

https://pagaduu.wordpress.com/2012/09/20/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/

Anonymous said...

Anonymous asked...
Sameerdeen Ahamed, we need answer for this article not blaming...

whoever may concern

if you need answer read my above and below comments or contact my email id worldiamb4u@gmail.com

My intention is not to convert any one.I do my best to help you,

with warm personal regards
Sameerdeen Ahamed

Anonymous said...

"unmai kasakkum"

Anonymous said...

intha kaavi naaigaluku bathil thevaiye illayaam ivargal kooriya poiyayai kaavigale padith cmt seiya vendum endru ninaithaargal anaal islamiyargalin cmt ku piragu answer sonnalum answer pannu answer pannunu solluraanga ithil irunthu enna therithu intha kaavi kangaluku answer thevai illai islamiyargalai naalu peru thitanum athu thaan avargalin ennam

Anonymous said...

yes "TRUE"..,islamiyargal koorum unmaigal kaavigaluku "kasakkugirathu" othikitaanga kaavi naaigal.

lion said...

perfect post, that's why muslims got angry

Ant said...

புஹாரி ஹதீஸ் இஸ்லாமியர்களால் குரானுக்கு விளக்கமளிக்க ஏற்றுக் கொள்வது. அதிலிருந்து வழங்கப்படும் ஆதாரங்களை மறுப்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகும். //நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே// அஸ்ல் செய்யாமல் இருந்தால் தவறேதும் இல்‌லை என்று தான் கூறுகிறது. இதற்கு ஆதாரமாக// மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்).// என்பது உடலுறவு இன்பத்தை முழுமையாக தனது தோழர்களை அணுபவிக்க கூறியதுதான். விபச்சாரத்தை தடைசெய்த அல்லாசாமி எங்காவது கற்பழிப்பை தடை செய்துள்ளாரா? என்ற கேள்விக்கு விளக்கம் 1400 ஆண்டுகளாக இல்லாத நிலையில் இனியா கிடைக்க போகிறது.

Ant said...

வலக்கரங்கள் பற்றி அல்லாசாமி தனது துாதருக்கு சொல்லும் போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறார் முஃமீன்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை இந்த வசனங்களை பார்த்தால் தெரியும்:
குர்ஆன் 33:50 ”உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்”.
குர்ஆன் 23:6 :”தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும்”
குர்ஆன் 70:30:” தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ”
குர்ஆன் 4:24: ”உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர”
வசனம் 33:50 க்கும் மற்ற வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக காண்க.

Ant said...

வலக்கரங்கள் பற்றி அல்லாசாமி தனது துாதருக்கு சொல்லும் போது என்ன வார்த்தையை பயன்படுத்துகிறார் முஃமீன்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை இந்த வசனங்களை பார்த்தால் தெரியும்:
குர்ஆன் 33:50 ”உம்முடைய வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்”.
குர்ஆன் 23:6 :”தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும்”
குர்ஆன் 70:30:” தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ”
குர்ஆன் 4:24: ”உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர”
வசனம் 33:50 க்கும் மற்ற வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக காண்க.

Tamilan said...

@Sameerdeen Ahamed ,
உட்டா விஞ்ஞானிகள்கூட குரானைப்படித்து விட்டுத்தான் அனைத்தையும் கண்டுபிடிக்கிறார்கள் என்று சொல்வீர்கள் போல. என்ன நீங்கள் வலைத்தளங்களுக்கு புதிதோ? //இப்போது இருக்கும் தொழில் நுட்பங்களை கொண்டு கண்டுபிடுக்கும் விசியங்களை 1400 வருடத்திருக்கு முன்பு எல்லாம் வல்ல இறைவன் இறுதி இறைதூதர் கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் மீது வஹீயாக இறக்கப்பட்ட திர் குரான் கூறுகிறது //
இதற்கு ஒரு உதாரணம் குடுங்கள். அப்புறம் பேசலாம்.

Ant said...

//குரான் வசனம்:" லக்கும் தீனுக்கும் வலியதீன்" இதன் பொருள் அவரவர் மார்க்கம் அவர்களுக்கு என்பதே இதன் பொருள்.// ஏற்கனவே இதற்கு முழுமையாக விளக்கம்மளிக்கப்பட்டுள்ளது. காண்க:
http://iraiyillaislam.blogspot.in/2012/02/blog-post.html

Anonymous said...

nam indiya naatil irukum yella kaavigalukum karpalippu endra vaarththai sarva saathanamaagivittathu.., nabi valiyaai pinbatriya manithanum kutra seyalil iduppathu illai.., ulaga aaivai paarungal 99% islamiyargal karpalippil idupattathe illa endru koorugirathu. apadi irukum pothu nabi eppadi avargalin tholargalai thavarana valiyil pengalai adaiya koori irupaar enbathai suya arivu irukum ella uyirinaththaalum unarnththu kolla mudiyum. indiavil eththanayo karpalippugal kadantha aandu dec maathathirku piragu eralamaana karpalippu valakkugal seithavargalil oruvar kooda islamiyargal illai. aanal nabiyai kurai sollum uthamakkuttam kadavul karuvaraiyil pala pengaludan salaabam kollum kootam, kaavi madangalai katti nadigaigalai karpalikkum kaavi kuttam, siru pillaigalai kuda karpaliththu kolai seiyum koothiruku inch inch ah solli puriya vaiththaal kooda avargalin mara mandaiyil erappovathu illai enbathu uruthiyaai therinthu vittathu.

Sameerdeen Ahamed said...

Ants talk to each other Proven by Qur'an and Scientist!

http://www.youtube.com/watch?v=NV9lerblXuc


Honey Bee scientific mentioned in quran Sura 16(Al-Nahl)
http://www.miraclesofthequran.com/scientific_67.html


The water cycle and the seas in the Quran:
http://www.islamweb.net/emainpage/index.php?id=134578&page=articles


Quran talking about aliens and galaxy:
http://www.endphysics.com/aliens_in_the_quran.html


Qur'an and Science: Moon Light is Reflected Light:
http://www.answering-islam.org/Quran/Science/moonlight_wc.html


Quran and Science:
http://islam.about.com/od/quran/a/Quran-And-Science.htm



Is it enough or u people want more?

Sameerdeen Ahamed said...

Quran and Science:

http://www.quranandscience.com/

Quran about Universe:
http://www.quranandscience.com/islam-and-science-universe.html

Quran about Earth:
http://www.quranandscience.com/earth.html

Quran about Animals:
http://www.quranandscience.com/animals.html

Quran about Plants:
http://www.quranandscience.com/plants.html

Quran about Legislative:
http://www.quranandscience.com/legislative.html

Quran about Historicals:
http://www.quranandscience.com/historical.html


Islam welcomes you to challenge

Sameerdeen Ahamed said...

தமிழன்:

இப்போது இருக்கும் தொழில் நுட்பங்களை கொண்டு கண்டுபிடுக்கும் விசியங்களை 1400 வருடத்திருக்கு முன்பு எல்லாம் வல்ல இறைவன் இறுதி இறைதூதர் கண்மணி நாயகம்(ஸல்) அவர்களின் மீது வஹீயாக இறக்கப்பட்ட திர் குரான் கூறுகிறது என்பதற்கு ஆதாரம் போதுமா தமிழன் அவர்களே?


விஞ்ஞானிகளின் கையில் திர் குரான்
https://www.google.com.hk/webhp?source=search_app#q=scientist+reading+quran&site=webhp&source=univ&tbm=vid&tbo=u&sa=X&ei=_vt9Ub-EDYyZiAfi64DYDg&ved=0CHEQqwQ&bav=on.2,or.r_cp.&bvm=bv.45645796,d.aGc&fp=d88d649009a6a996&biw=1137&bih=632

இப்போது என்ன கூறப்போகிறீர்கள்.



Anonymous said...

ippo vaagadaaa kaavi naaigalaaa ippo yavanukum vaaiya thorakka mudiyalayaaa? kaavigaluku seruppadi inum paththavillai endraal vaagadaaa inum tharugirom kaavi naaigal create pannirukum intha blog naala engaluku imaan koraiya porathu illadaaa aana neega quran ah padichikite irunga ungaluku oru naal puriyum.

Anonymous said...

karpalipu nu neega solura varthaiya kaatudaaaa naaigala panniki porantha panni pasagalaa neega paelurathaye thingira panni kootathuku nallathu enga theriya poguthu.

சிவப்புகுதிரை said...

அட Sameerdeen Ahamed பாய் என்னாபோங்க நீங்க ..நம்ம குரான்ல இல்லாத அறிவிலோ கணக்கோவ இல்ல..கிட்டதட்ட இதுவரைக்கும் கண்டு புடிச்ச அனைத்தும் குரான்ல இருந்தானே வந்து இருக்கு அது குராங்குல இருந்து மனிதன் பிறந்தான் என்றாலும் சரி உலகம் உருண்டை தான்னு சொன்னாலும் சரி..

அட பாய் இதுல முக்கியம அமெரிக்காவில் உள்ள காபிர்கள் NASAல உள்ள ஆயிவுகூடத்துல குரான்ன வட்சுதான் கண்டு புடிக்குறான்க .ஆனா உண்மை மூஃமின்கள் உள்ள சவுதிகாரங்க என்னனா ஒன்னதையும் கைட்டமாற்றாங்களே பாய் .இத பத்தி ஏன் நீங்க யோசிக்ககூடது ..

Unknown said...

இறையாலயம் என்று கூறும் மெக்காவில் உள்ள ஹரமை புகைப்படத்தில் பார்த்தமாத்திரத்தில் அதை மெக்கா என்று ஒரு இந்து சட்டென்று கூறும் அளவிற்கு நவீன விஞ்ஞானத்தின் உதவியால் ஊடகம் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சி இல்லை என்று வைத்துக் கொள்வோம், அது மெக்காவில் உள்ள ஹரம் தான் (ஆலயம்) என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். விஞ்ஞான உதவி இல்லாமல் தன் ஆலயத்தை உலக முஸ்லிம்கள் எவ்வாறு உணர்ந்திருப்பார்கள்..?அல்லது அந்த அரபு நாட்டு அல்லா எவ்வாறு உணர்த்தியிருப்பான்..? ஒரு ஆலயத்தையே இப்படித்தான் இருக்கும் என்று உலக முஸ்லிம்களுக்கு உணர்த்த அருகதையற்றவனால் தன் வேதத்தில் உள்ளது அறிவியல் சம்பந்தப்பட்டது என்று எவ்வாறு உணர்த்த முடியும்??இப்படி ஒரு கட்டுக் கதையை மிகைப்படுத்தி உணர்த்தியது படித்து பட்டம் பெற்ற ஆலிம்கள் அல்லவா? அறிவியலை இன்று உணர்வதாக உளறுபவர்கள் வேதம் தந்த அன்றே உணர்த்தியிருக்க வேண்டாமா,உணர்ந்திருக்க வேண்டாமா..??

சிவப்புகுதிரை said...
This comment has been removed by the author.
சிவப்புகுதிரை said...
This comment has been removed by the author.
சிவப்புகுதிரை said...

//Anonymous said...
ippo vaagadaaa kaavi naaigalaaa ippo yavanukum vaaiya thorakka mudiyalayaaa? kaavigaluku seruppadi inum paththavillai endraal vaagadaaa inum tharugirom kaavi naaigal create pannirukum intha blog naala engaluku imaan koraiya porathu illadaaa aana neega quran ah padichikite irunga ungaluku oru naal puriyum.

29 April 2013 11:46
Anonymous said...
karpalipu nu neega solura varthaiya kaatudaaaa naaigala panniki porantha panni pasagalaa neega paelurathaye thingira panni kootathuku nallathu enga theriya poguthu.

29 April 2013 11:51//




இந்த மாதிரி வசவு சொற்க்களை தவிர வேர என்ன தெரியும் உங்களுக்கு மூஃமின்களே.பழிகள் அனைத்தையும் வேறு ஒருவர் மீது சொல்லியே பொலப்பை நடந்த்திக்கொண்டு இருக்கின்றீர்கள்..நாங்கள் காவியா அல்லது EX-MUSLIM ம என்று தெரிந்துக்கொண்டு நீங்கள் ஒன்னும் கைட்டபோவதுயில்லை.நாங்கள் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இருந்தால் சொல்லலாம் இல்லையேல் உங்கள் தாவா வேளையை அப்பாவி மக்களிடம் செய்து உங்களை நீங்கள் ஏமாத்திக்கொள்ளலாம்....நீங்கள் வசவு சொற்களை நிறுத்திவிட்டு உங்கள் சகோக்கள் கடையநல்லூரில் அடித்துக்கொண்டு சாகின்றார்கள் அவர்களிடம் போய் சொல்லுங்கள் இப்படி எல்லாம் சண்டை போட்டுக்கொண்டால் அல்லா உங்களுக்கு சுவனத்தில் கன்னிபெண்களை தரமாட்டாண் என்று

Anonymous said...

http://www.vinavu.com/2013/04/29/contract-islamic-marriages/

Ant said...

படைப்பின் விதிகளை மனித மூலையை பயன்படுத்தி அறிவதே அறிவியல். ”குன்” என்றால் ஆகிவிடும் அளவு சக்திபடைத்த அல்லாசாமி அதை அறிவியல் வைத்துதான் உருவாக்கினார் என்றால் அதை படைத்தது அல்லாசாமி இல்லை என்றாகிவிடுகிறது. அறிவியலை அறிந்துதான் அல்லா உலகை படைத்தார் என்றால் ... அல்லாசரி ஆசாமிதானா? என்ற கேள்வி எழுகிறதே!

Tamilan said...

@சிவப்புகுதிரை/ant/ Iniyavan ,இந்த நண்பர் இவ்வளவு தூரம் வந்து இந்த தளத்தைப்பார்பதே பெரிய விஷயம்.
எனது கேள்வி எதற்கு என்றால் , அவர்களுக்கு நிரைய மாற்று தளங்களை அறிமுகப்படுத்துவதுதான்.

Tamilan said...

@Sameerdeen Ahamed, நீங்கள் குடுத்த தளத்தைப்படித்துவிட்டு , ஆடிப்போய்விட்டேன். இவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகள் குரானில் இருக்கிறாதா என்று!!!!!!.

நீங்கள் குடுத்த முதல் இணைப்பு.
http://www.quranandscience.com/islam-and-science-universe.html
இதற்கு பதில்
http://pagaduu.wordpress.com/2012/03/15/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/ , இதைப்படித்து விட்டு வாருங்கள் விவாதிக்கலாம்.

Tamilan said...

@சிவப்புகுதிரை,
//அட பாய் இதுல முக்கியம அமெரிக்காவில் உள்ள காபிர்கள் NASAல உள்ள ஆயிவுகூடத்துல குரான்ன வட்சுதான் கண்டு புடிக்குறான்க .ஆனா உண்மை மூஃமின்கள் உள்ள சவுதிகாரங்க என்னனா ஒன்னதையும் கைட்டமாற்றாங்களே பாய்//
என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்.
சவுதி ஆளுங்க , முஹமதுவும் , அல்லாவும் சொன்னா மாதிரி , எப்படி,எப்படி எல்லாம் அடிமைப்பெண்களை(வேலைக்காரிகளை) அனுபவிக்லாம், 4 பெண்களை கண்ணாலம் கட்டிக்கிட்டு பிள்ளைய பெத்துக்கலாம் என்று வேறுவிதமாக ஆராச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த ஆராச்சி முடிந்ததும் அறிவியலுக்கு வருவார்கள்.

Anonymous said...

manitha jenmangalidam paesalaam ungalai pondraa kaavigalaal valikaedukka pattavargalidam epadi puriya vaippathu.

Anonymous said...

@sameerdeen ahamed, neega indha naaigaluku bathil sollikitu irukaathiga ivangala thirunthuvaanga appo puriyum ivangaluku soluratha theliva sollitiga ini ivangalachi kaavigalaachi nu vituduvendiyathu than

ஆனந்த் சாகர் said...

காவிகள், ஹிந்துத்வா, மோடி என்றெல்லாம் அலறுவதையும் ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி திட்டுவதையும் விட்டுவிட்டு, நாங்கள் எடுத்துக்காட்டும் ஆதாரங்களுக்கு நேர்மையான, நேரடியான பதிலை முஸ்லிம்கள் தரவேண்டும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் சமீர்தீன் அஹ்மத்,

cool down, இஸ்லாமை விமர்சித்தாலே காவி நாய்களாகவும், கள்ளக் கிருஸ்துவனாகவும்தான் இருக்க வேண்டுமென்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? இத்தளம் முழுக்க முழுக்க முன்னாள் முஸ்லீம்களால்தான் நிர்வகிக்கப்படுகிறது. இதை தெளிவாக குறிப்பிடவும் செய்திருக்கிறோம். எனவே தேவையற்ற வசவுகளைத் தவிர்த்தல் நலம்.

உங்களுக்குத் தேவையான பதிலை நண்பர்கள் மிகத் தெளிவாக அளித்துள்ளதால் எனது பணி எளிதாகிவிட்டது.
”குர்ஆனில் அறிவியல்” எனும் அரதப் பழசான வாதத்தை எத்தனை காலத்திற்குத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக உத்தேசம்? அவைகளை கிழித்து தோரணமாகக் தொங்கவிட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டது. பக்கப்பட்டைகளை விலக்கி உலகைக் காணுங்கள்.

தஜ்ஜால் said...

@சமீர்தீன் அஹ்மத்,
//இறையில்லா இஸ்லாம் என்ற தலைப்பு நான் எப்படி பார்க்கிறேன் என்றால்.../// குர் ஆனையும் ஹதீஸையும் இப்படித்தான் திரித்துக் கூறுகிறீகள் எனப்தை அழகாக நிரூபித்து விட்டீர்கள்.


//நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! என்றால் அதை செய்யாதே என்று பொருள்.// எதை???

//போரில் கணவன்களை இழந்த பெண்கள், போரில் பெண்களை விட்டுவிட்டு புறமுதுகை காட்டி ஓடியவர்களின் வீட்டு பெண்களை அடிமை பெண்கள் என்று குறிப்பிட்டு இருகிறார்கள்.//

முஸ்லீம் 2885 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரின்போது (ஹவாஸின் குலத் தார் வசிக்கும்) "அவ்தாஸ்' என்ற பகுதிக்கு ஒரு படையை அனுப்பினார்கள்.18 அவர்கள் எதிரி களை எதிர்கொண்டு, போரிட்டு அவர்களை வெற்றி கொண்டனர். (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) அவர்களின் சில பெண்களையும் அவர்கள் சிறை பிடித்தனர். (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப் பெண்களுக்கு இணைவைப்பாளர்களான கணவர்கள் இருக்கிறார்கள் என்பதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் அப்பெண்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தவறாகக் கருதினர். இது தொடர்பாகவே பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:
மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண் களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24)
அதாவது, (போரில் சிறை பிடிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட) அப்பெண்களின் காத்திருப்பு (இத்தா)க் காலம் முடிந்துவிட்டால், அவர்கள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர் களாக ஆகிவிடுவர். (அவர்களுடன் நீங்கள் தாம்பத்திய உறவு கொள்ளலாம்.)

சமீர்தீன் உங்களுக்கு இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்.

sagodharan said...

சகோ சமீர்தீன்
இங்கு பதிவிடும் நபர்கள் நீங்கள் நினைப்பதுபோல் மாற்று மதத்தவர்கள் இல்லை!முதலில் அதனை விளங்கவும்! இந்த வலைதளத்தை இப்போதுதான் படித்திருக்கிறீர்கள் போல!
இதற்க்கு முன்னர் உள்ள தலைப்புகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நடுநிலையோடு படிக்கவும்! முடிவு உங்கள் கையில்தான்!அல்லாவின் கையில் அல்ல ! ஏனென்றால் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளாதவரை அல்லா உங்களை மாற்றுவதில்லை!
அஸ்ல் என்ற ஒரு ஹதீதிலேயே இவையெல்லாம் என்ன சொல்கின்றன என்பதை ஆராயப்போக அது என்னைபோன்ற நபர்களுக்கு இதுவரை இல்லாத இஸ்லாத்தின் மறுபக்கத்தை (தேடலின் முடிவு) இயம்பியது!
ஆகவே முதலில் அக்காலமாகட்டும்,இக்காலமாகட்டும் தவறு தவறுதான் என்ற முடிவோடு ஆராய்ந்து பாருங்கள் ! உண்மை உங்களை தேடி வரும்!ஆனால் விடாதீர்கள்! உங்களின் கருத்துக்களுக்கு முழு சுதந்திரம் உண்டு சகோதரரே ! பதிவிடுங்கள் ! மார்க்கவாதிகள் கூறும் விளக்கங்கள் எவ்வளவு மோசமானது என்பதை உணர்வீர்கள்!

Sameerdeen Ahamed said...

தஜ்ஜால்: அவர்களே நான் மேலே குறிப்பிட்ட கருத்துகளையே உங்களால் சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலையில் நீங்கள் எப்படி குரானையும், ஹதிஸ்களையும் சரிவர புரிந்து கொன்றுக்க முடியும் என்று நினைகையில் எனக்கு வியப்பாக இருக்கிறது. என் பெயரில் பதிவு செய்யப்பட்ட எந்த கருத்திலும் பிற மதங்களை பற்றிய அவதூர் வார்த்தைகள் இருக்காது இருபினும் என் பெயரை போட்டு உங்கள் பதிவை செய்திருகிறீர்கள் பரவா இல்லை, எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்று கற்று கொண்டவன் நான் என்னை பிற மதங்களுக்கு எதிரியாகும் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். என் கருத்துக்கு பதில் யாரிடமும் இருந்தும் வராத நிலையில் மேலும் மேலும் கேள்விகள் தான் வைக்கீர்கள் அதில் எனக்கு வருத்தம் இல்லை என்னிடம் சில கேள்விகளையும் கேட்டுவிட்டு உங்களால் முடிந்த சில பதில்களையும் கூறிவிட்டு "சமீர்தீன் உங்களுக்கு இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்" என்று கூறி விடைபெறும் உங்களில் எண்ணம் என்ன? நீங்கள் மட்டும் தான் சிந்திக்க தெரிந்தவர்கள் மற்றவர்கள் முட்டாள்கள் என்றா நினைப்பா? சகோதரரே! குரானை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கும், உங்களுக்கும் தான் அறிவு குறைபாடாக இருக்கிறதே தவிர குரானில் குறையோ, தவறோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் இஸ்லாத்தில் இருந்து விலகியவர்கள் என்று கூறிப்பிட்டு இருந்தீர்கள் அதில் என்னக்கு வருத்தம் இல்லை இருபினும் மீண்டும் நீங்கள் இஸ்லாத்தை தலுவுவீர்கள் என்று நம்புகிறேன்.

Sameerdeen Ahamed said...

இஸ்லாத்தை விட்டு விலகியதாக கூறிய சகோதர்களே நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலகியர்தற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களிடம் ஈமான் குறைபாடாக இருப்பதாகவே நான் எண்ணுகிறேன். உங்களிடம் உங்கள் பெற்றோர்களை சிலர் குற்றம் சுமத்துகிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள் அப்போது அவர்களிடம் நீங்கள் கேட்பீர்கள் அவர்கள் கூறும் நியமான பதில் உங்களுக்கு ஏற்றுகொள்ள முடியாத நிலையில் இருந்தால் அதை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட்டு விட்டு அதற்காக உங்களை பெற்ற பெற்றோர்கள் மீது நீங்களும் குற்றம் சுமத்துவீர்களா? அதே போல் தான் மார்க்கமும், மார்க்கத்தை சரிவர புரிந்துக்கொள்ள முடியவில்லை என்பாதால் அதை குறை கூறுவது மிகப்பெரிய தவறு. இஸ்லாத்தை விட்டு விலகிய சகோதர்களே உங்களால் குரானையும், ஹதிஸ்யும் புரிந்துக்கொள்ள முடியவில்லை என்றால் அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் அதை விட்டுவிட்டு இறையில்ல இஸ்லாம் என்ற ஒரு தலைப்பில் blog உருவாக்கி கொண்டு இஸ்லாத்தை புரிந்துக்கொள்ள நினைக்கும் சிலரையும் வழிகெடுப்பது புரிந்துகொள்ள முடியாத பெற்றோர்களை பிறர் கண்களுக்கு குற்றவாளிகளாக கட்டுவதற்கு சமம் இல்லையா? சிந்தியுங்கள் சகோதர்களே.., மீண்டும் என்னிடம் சிலர் கேட்கலாம் நீங்கள் குரானுக்கும், ஹதிஸ்க்கும் விளக்கம் கூறுங்கள் என்று அவர்களுக்கு நான் மீண்டும் சொல்லிகொள்கிறேன் குரானை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கும், உங்களுக்கும் தான் அறிவு குறைபாடாக இருக்கிறதே தவிர குரானில் குறையோ, தவறோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னைவிட, உங்களை விட மார்க்க விசியங்களில் தேர்ச்சிபெற்றவர்கள் இருகிறார்கள் அவர்களிடம் உங்கள் கேள்விகளை தேடுங்கள் நீங்கள் உண்மையாக விடை விரும்புபவர்களாக இருந்தால்.

சிவப்புகுதிரை said...

Sameerdeen Ahamed // நன்றி பாய் .அப்படியே எந்த மார்க அறிசர்களிடம் கேட்கனும்னு கொஞ்சம் சொன்னிங்கனா அவருக்கிட்ட கேட்டுகுலாம்.ஏன்னா இங்க இருக்குர பல மார்க்க அறிந்சர்கள் தான் சொல்லுவது மட்டும் தான் மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு திரிக்கின்றார்கள்.முதலில் நீங்கள் அனைவரையும் ஒன்னு சேர்த்து இவரு தான் சரியான அறிந்சர்னு ஒரு Standard முடிவுக்கு வந்து சொல்லுங்கள்.அப்பரம் பேசிக்கலாம் இதபத்தி..

ha ha said...

''Sameerdeen Ahamed ,you are good comedian

Ant said...

அலிசீனாவை கண்டு உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக்- கே ஓடும் போது வேறு எந்த மார்க்க மேதையை இந்த உலகில் தேடுவது.

தஜ்ஜால் said...

வாருங்கள் சமீர்தீன்,
// என் பெயரில் பதிவு செய்யப்பட்ட எந்த கருத்திலும் பிற மதங்களை பற்றிய அவதூர் வார்த்தைகள் இருக்காது இருபினும் என் பெயரை போட்டு உங்கள் பதிவை செய்திருகிறீர்கள் பரவா இல்லை, எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என்று கற்று கொண்டவன் // நான் பதில் கூறியது உங்களுக்காக அப்படியிருக்கும் பொழுது உங்கள் பெயரைக் குறிப்பிடுவதில் தவறென்ன?

மற்ற மதங்களி மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொண்டிருக்கலாம். அதற்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது இந்திய/தமிழக கலாச்சார சூழலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

//என் கருத்துக்கு பதில் யாரிடமும் இருந்தும் வராத நிலையில் ...// உங்களது கேள்வி/கருத்து என்ன?? அஸ்ல் செய்வதைப் பற்றி ஹதீஸின் பொருளைத் திரித்துக் கூறியிருந்தீர்கள் அதை மற்றொரு ஹதீஸ் மூலம் மறுத்திருந்தேன் அவ்வளவே!! இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது.

குர் ஆனில் அறிவியல் என்ற வாதத்தை முன்வைத்து தாவா செய்திருந்தீர்கள். அதை பல முறை பல தளங்களில் மறுத்து, கிழித்து தோரணமாகத் தொங்க விட்டுவிட்டனர். alisina.org, faithfreedom international.com தளங்களில் சென்று பார்த்துக் கொள்ளவும். அதையே மீண்டும் கூற எனக்கு விருப்பமில்லை.

//"சமீர்தீன் உங்களுக்கு இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன்" என்று கூறி விடைபெறும் உங்களில் எண்ணம் என்ன? நீங்கள் மட்டும் தான் சிந்திக்க தெரிந்தவர்கள் மற்றவர்கள் முட்டாள்கள் என்றா நினைப்பா?// நீங்கள் (முஸ்லீம்கள்) சிந்திக்க மறுக்கிறீர்கள் என்பதை அறிவேன்.

//குரானை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கும், உங்களுக்கும் தான் அறிவு குறைபாடாக இருக்கிறதே தவிர குரானில் குறையோ, தவறோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்./// உங்கள் கருத்துப்படி, குர்ஆனை ஆதரிக்கும் உங்களுக்கும் புரியவில்லை, எதிர்க்கும் எங்களுக்கும் புரியவில்லை. யாருக்குமே புரியாத ஒரு புத்தகத்தால் என்ன பயன்??

Sameerdeen Ahamed said...

சிவப்புகுதிரை// சகோதரரே! நீங்கள் கூறுவது மிகவும் சரியானது தான் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டிகளில் ஒரு standard இல்லை அது மிகவும் வருந்ததக்கது. மீண்டும் சொல்கிறேன் தவறு மனிதர்களுக்கு இடையில் தானே தவிர மார்க்கதிலோ, திர் குரானிலோ இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் நான் மார்க்கவிசியங்களை சுயமாக சிந்தித்து தெரிந்து கொண்டவன் என்று முழுமையாக சொல்லிவிட முடியாது இருப்பினும் எல்லா மார்க்க அறிஞர்கள் கூறும் நல்ல விசியங்களை பகுத்தறிவோடு சிந்தித்து எடுத்துக்கொண்டேன் என்று உறுதியாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். நாத்திகனாக இருந்த பேராசிரியர் பெரியார் தாசன் எதற்க்காக இஸ்லாத்தை ஏற்று கொன்றார் என்று சிந்தியுங்கள்.

Ant அவர்களே // அலிசீனாவை கண்டு உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக் ஓடுவதாக நீங்கள் குறுவது போல் நானும் கூறலாம் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு வாதிக்க தேதிகள் இல்லாத வேளையில் மட்டும் தான் அலிசீனா, ஜாஹிர் நாயக் அவர்களை வாதிக்க அழைக்கிறார் என்று (அவர் பெரியவர் இவர் பெரியவர் என்று நாம் வாதித்தால் பேசிக்கொண்டே போகவேண்டியது தான்). ஜாஹிர் நாயக் ஒரு உலக பேச்சாளர் அவர் தேதிகளை மனதில் வைத்து கொண்டு நாம் நடுநிலையாக அணுகவேண்டும். நான் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகளை மின் அஞ்சல் வழியாக தொடுத்தேன் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை அதற்காக என் கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியவில்லை என்று நான் குரிவிடமுடியுமா? அவர் இருக்கும் அதிக வேலைகளையும் அவர் மார்க்கத்திற்காக ஒதுக்கும் நேரத்தையும் ஒரு சக மனிதராக நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக் என்ற பட்டத்தை நீங்கள் தான் அவருக்கு கொடுத்திருகிறீர்கள் அவர் தன்னை மாணவனாக தான் பார்க்கிறார், நானும் மார்க்கத்தை தெரிந்து கொண்டு பேசும் மார்க்க கல்வி மாணவனாக தான் ஜாகிர் நாயக் அவர்களை பார்கிறேன்.

Sameerdeen Ahamed said...

சிவப்புகுதிரை// சகோதரரே! நீங்கள் கூறுவது மிகவும் சரியானது தான் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டிகளில் ஒரு standard இல்லை அது மிகவும் வருந்ததக்கது. மீண்டும் சொல்கிறேன் தவறு மனிதர்களுக்கு இடையில் தானே தவிர மார்க்கதிலோ, திர் குரானிலோ இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் நான் மார்க்கவிசியங்களை சுயமாக சிந்தித்து தெரிந்து கொண்டவன் என்று முழுமையாக சொல்லிவிட முடியாது இருப்பினும் எல்லா மார்க்க அறிஞர்கள் கூறும் நல்ல விசியங்களை பகுத்தறிவோடு சிந்தித்து எடுத்துக்கொண்டேன் என்று உறுதியாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். நாத்திகனாக இருந்த பேராசிரியர் பெரியார் தாசன் எதற்க்காக இஸ்லாத்தை ஏற்று கொன்றார் என்று சிந்தியுங்கள்.
Ant அவர்களே // அலிசீனாவை கண்டு உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக் ஓடுவதாக நீங்கள் குறுவது போல் நானும் கூறலாம் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு வாதிக்க தேதிகள் இல்லாத வேளையில் மட்டும் தான் அலிசீனா, ஜாஹிர் நாயக் அவர்களை வாதிக்க அழைக்கிறார் என்று (அவர் பெரியவர் இவர் பெரியவர் என்று நாம் வாதித்தால் பேசிக்கொண்டே போகவேண்டியது தான்). ஜாஹிர் நாயக் ஒரு உலக பேச்சாளர் அவர் தேதிகளை மனதில் வைத்து கொண்டு நாம் நடுநிலையாக அணுகவேண்டும். நான் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகளை மின் அஞ்சல் வழியாக தொடுத்தேன் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை அதற்காக என் கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியவில்லை என்று நான் குரிவிடமுடியுமா? அவர் இருக்கும் அதிக வேலைகளையும் அவர் மார்க்கத்திற்காக ஒதுக்கும் நேரத்தையும் ஒரு சக மனிதராக நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக் என்ற பட்டத்தை நீங்கள் தான் அவருக்கு கொடுத்திருகிறீர்கள் அவர் தன்னை மாணவனாக தான் பார்க்கிறார், நானும் மார்க்கத்தை தெரிந்து கொண்டு பேசும் மார்க்க கல்வி மாணவனாக தான் ஜாகிர் நாயக் அவர்களை பார்கிறேன்.

Sameerdeen Ahamed said...

அழைப்பிற்கு நன்றி தஜ்ஜால் அவர்களே! எனதுவேண்டுகோள் மறுமுறை உங்களது கருத்தை பதிவு செய்யும் பொது தஜ்ஜால் என்ற உங்களுக்கு இருக்கும் நிஜபெயரை பதிவு செய்யகேட்டுகொள்கிறேன்.

// என் பெயரில் பதிவு செய்யப்பட்ட எந்த கருத்திலும் பிற மதங்களை பற்றிய அவதூர் வார்த்தைகள் இருக்காது இருபினும் என் பெயரை போட்டு உங்கள் பதிவை செய்திருகிறீர்கள் பரவா இல்லை// நான் பதில் கூறியது உங்களுக்காக அப்படியிருக்கும் பொழுது உங்கள் பெயரைக் குறிப்பிடுவதில் தவறென்ன?
(( என் பெயரை போட்டு உங்கள் பதிவை செய்திருகிறீர்கள் பரவா இல்லை என்று நான் குறிப்பிட்டு மட்டும் தான் இருந்தேன்,,, நான் கேட்காத கேள்விகளுக்கு பதில் எதற்கு?))

//மற்ற மதங்களி மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொண்டிருக்கலாம். அதற்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது இந்திய/தமிழக கலாச்சார சூழலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.// நான் இந்தியன் தமிழன் என்றதால் நான் இந்திய மண்ணலும், தமிழ் கலாச்சாரத்தாலும் வளர்க்கப்பட்டவன் என்று தவறாக நினைத்துவிட்டீர்கள். இது தான் உங்களது பிரச்சனை நீங்கலாக நினைத்துக்கொண்டு அது தான் சரி என்று ஒரு வட்டமிட்டு அதற்குள்ளே நிற்கிறீர்கள். நான் அரபு நாட்டிலோ, இந்திய திருநாட்டிலோ வளர்க்கப்பட்டவன் இல்லை. நான் இங்கு பதிவு செய்யும் கருத்து தமிழில் இருப்பதற்கு காரணம் கூட English To Tamil Conversion Online இணையதளமும் google translate உம் தான் காரணம்.

//என் கருத்துக்கு பதில் யாரிடமும் இருந்தும் வராத நிலையில் மேலும் மேலும் கேள்விகள் தான் வைக்கீர்கள் அதில் எனக்கு வருத்தம் இல்லை என்னிடம் சில கேள்விகளையும் கேட்டுவிட்டு உங்களால் முடிந்த சில பதில்களையும் கூறிவிட்டு(கூறுகிறீர்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன் )இதற்க்கு உங்கள் பதிலில்//உங்களது கேள்வி/கருத்து என்ன??// என்று நீகள் கேட்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று தெரியவில்லை.

alisina.org, faithfreedom international.com போன்ற இணையதளங்கள் குரான் விஞனத்தை பற்றி பேசுவதை கிழித்து தொகவிட்டதாக கூறும் நீங்கள் யாரை தான் நம்புவீர்கள் என்று தெரியவில்லை. alisina.org, faithfreedom international.com போன்ற இணையதளங்களை நாளை வேறு ஏதேனும் ஒரு இணையத்தளம் கிழித்து கொங்கவிடால் உங்கள் நம்பிக்கை வீனகிவிடுமா? ஆகாதா?
வீணாகும் என்றால் நீங்கள் யார்மீதும் நம்பகத்தன்மை இல்லதவர்காக இருக்குறீர்கள் என்று உங்களை தகுந்த மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்.., இல்லை வீணாகாது அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு என் கேள்வி சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய இந்த இன்யதலங்களை நீங்கள் விட்டுகொடுக்கத பொது, இறைனம்பிகையாளர்கள் எப்படி திர் குரானை விட்டுகொடுப்பார்கள். நான் ஆணித்தரமாக குரானை நம்புகிறேன் மத சார்பற்று.

// நீங்கள் (முஸ்லீம்கள்) சிந்திக்க மறுக்கிறீர்கள் என்பதை (அறிவேன்).// என்று கூறுவதற்கு நீங்கள் யார் சகோதரரே கடவுளா? நீங்களும் தவறு செய்யும் மனிதபிறவி தானே. எவன் ஒருவன் தலைகனத்துடன் எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறுகிறானோ அவனுக்கு எதுவுமே தெரியாது என்று நம் இந்திய பெரியோர்கள் கூரிருப்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் சிந்தனையை நான் மதிக்கிறேன் உங்கள் சிந்தனை உங்களை ஈமான் கொள்ளசெயும் என்று நான் நம்புகிறேன்.

குர்ஆனை ஆதரிக்கும் உங்களுக்கும் புரியவில்லை, எதிர்க்கும் எங்களுக்கும் புரியவில்லை. யாருக்குமே புரியாத ஒரு புத்தகத்தால் என்ன பயன்??// எனக்கும், உங்களுக்கும் புரியவில்லை என்று தானே கூறினேன் உலகில் யாருக்குமே புரியவில்லை என்று நான் குறிப்பிடவில்லையே.., புரியவில்லை என்பதற்காக என்ன பயன் என்று கூறுவது முட்டாள் தனமாக தெரியவில்லையா?

Sameerdeen Ahamed said...

பெயரில்லாமல் சிரிக்கும் கோமாளி ஒருவன் என்னை சிறந்த காமெடியன் என்று அழைத்திருக்கிறார் மிக்க நன்றி!

நந்தன் said...

மேலும், கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போரில்) உங்களுக்கு உடைமையாகிவிட்ட பெண் களைத் தவிர. (இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டமாகும். (4:24)

சமீர்தீன். ஹதீதுகள்தான் திருத்தப்பட்டவைகள் குர்ஆன் சரியானது என்று கூறுகிறீர்கள். மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தாருங்கள்.

சுட்டிகளை காட்டாதீர்கள்.

தஜ்ஜால் said...

@ சமீர்தீன்,
எனது நிஜப் பெயரை கூற விரும்பவில்லை. மன்னிக்கவும்!

alisina.org, faithfreedom international.com போன்ற இணையதளங்களை உதாரணத்திற்கு குறிப்பிட்டிருந்தேன். அவைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய உள்ளது.

//... இணையதளங்களை நாளை வேறு ஏதேனும் ஒரு இணையத்தளம் கிழித்து கொங்கவிடால் உங்கள் நம்பிக்கை வீனகிவிடுமா? ஆகாதா?// முதலில் இந்தக் கேள்வியே தவறு, நம்பிக்கை வைப்பது, தும்பிக்கை வைப்பதெல்லாம் உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகளின் வேலை. அறிவுபூர்வமாக ஆராய்ந்து ஏற்பதுதான் பகுத்தறிவாளர்களின் செயல்.

உங்களது குர்ஆனில் அறிவியல் என்ற அபத்தமான வாதத்திற்கு பல அறிஞர்கள் அழகிய மறுப்பை சவழங்கியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டவே மேற்கூறிய இணையதளங்களைப் பற்றி குறிப்பிட்டேன். அவைகளை எங்களது வாழ்வின் வழிகாட்டி என்பதைப் போன்று சித்தரிக்க வேண்டியதில்லை.

சிந்திக்க மறுக்கிறீர்கள் என்று கூறுவதற்கு கடவுள் என்ற கற்பனை கதாபாத்திரம்தான் வரவேண்டுமா?
//குரானை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கும், உங்களுக்கும் தான் அறிவு குறைபாடாக இருக்கிறதே தவிர குரானில் குறையோ, தவறோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.///
குர்ஆனை ஆதரிக்கும் உங்களுக்குப் புரியவில்லை. ஆனால் குர்ஆனில் குறை இல்லையாம்!! இதை குருட்டு நம்பிக்கை என்றல்லாமல் வேறு எப்படி அழைப்பது???

தஜ்ஜால் said...

@ சமீர்தீன்,
///உங்களது கேள்வி/கருத்து என்ன??// என்று நீகள் கேட்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது என்று தெரியவில்லை.// அவசியம் இருக்கிறது. // என் கருத்துக்கு பதில் யாரிடமும் இருந்தும் வராத நிலையில் மேலும் மேலும் கேள்விகள் தான் வைக்கீர்கள் ..// என்று 2 May 2013 08:48 அன்று நீங்கள் எழுதியுள்ளதற்கு என்ன பொருள்??

Ant said...

Sameerdeen Ahamed
//குரானை முழுமையாக புரிந்துகொள்ளும் அளவிற்கு எனக்கும், உங்களுக்கும் தான் அறிவு குறைபாடாக இருக்கிறதே தவிர குரானில் குறையோ, தவறோ இல்லை// உங்களை பற்றி நீங்கள் கொண்டுள்ள மதிப்பீடு சரியாக இருக்கலாம் ஆனால் முன்பின் தெரியாத பதிலளிக்காத ஜாஹிர் நாயக் பற்றி உயர்வாக எண்ணுவ‌து சரி குரான் மற்றும் ஹதீஸ்களின் உரிய ஆதரங்களுடன் கட்டுரையை கோர்வையாக எழுதி உங்களை போன்றவர்களுக்கும் பதிலளிக்கும் தஜ்ஜாலுக்கு அறிவு குறைபாடாக உள்ளது என்பது எவ்வாறு? அறிவு குறைபாடான ஒருவர் (”எனக்கும், உங்களுக்கும் தான்”, என்ற வரிகளை) வாசிக்க) எப்படி மற்றொருவரை அறிவாளி என புரிந்து கொள்ள முடியும்?
//என் கருத்துக்கு பதில் யாரிடமும் இருந்தும் வராத நிலையில்// உங்களது பினுாட்டங்கள் அணைத்தும் மற்றவர்களிடம் இருந்து பதில் பெற்றதால்தான் என்பதை உணருங்கள் // தஜ்ஜால் 3 May 2013 05:41//தேதியிட்ட பின்னுாட்டத்தில் உங்களுக்கு //உங்கள் கருத்துப்படி, குர்ஆனை ஆதரிக்கும் உங்களுக்கும் புரியவில்லை, எதிர்க்கும் எங்களுக்கும் புரியவில்லை. யாருக்குமே புரியாத ஒரு புத்தகத்தால் என்ன பயன்??// பதிலளித்துள்ளார் என்பதை வாசிக்வும்.
// நான் ஜாஹிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகளை மின் அஞ்சல் வழியாக தொடுத்தேன் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை// பதிலளிப்பவர்களின் அறிவாற்றலை உதாசீன்படுத்தி பதிலளிக்காதவரை உயர்வாக எண்ணுவது உங்கள் அறியாமையே. //மார்க்க மேதை ஜாஹிர் நாயக் என்ற பட்டத்தை நீங்கள் தான் அவருக்கு கொடுத்திருகிறீர்கள் // தமிழில் வஞ்சப்புகழ்ச்சி என்ற ஒன்று உண்டு என்பதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிவு பெறுக.

தஜ்ஜால் said...

வாருங்கள் Ant,

மிக்க நன்றி!!!

Ant said...

Sameerdeen Ahamed
//அலிசீனாவை கண்டு உலகமாகா மார்க்க மேதை ஜாஹிர் நாயக் ஓடுவதாக நீங்கள் குறுவது போல் நானும் கூறலாம் // நீங்கள் மட்டுமல்ல யார்வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம் தஜ்ஜால் தடை விதிக்க மாட்டார். தடை விதித்தால் விலக்க கோரி வேண்டுகோள் வைக்கலாம்.

Sameerdeen Ahamed said...

நந்தன் அவர்களே உங்கள் கேள்விக்கு மிக்க நன்றி,

திர் குரான் 2:24 கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.-- நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

உங்கள் கேள்வியை பார்த்ததும் முரண்பாடான சொல் ஏதேனும் இருக்கிறதோ என்று எண்ணி நான் குரானை பார்த்தேன் பார்த்ததில் தெளிவான விளக்கம் கிடைத்தது.
மேல் இருக்கும் குரான் வசனத்தில் தவறு ஏதும் இல்லையே சகோதரரே ஒரு முறை நீங்களே படித்து பாருங்கள்.

மஹர் என்பதற்கு விளக்கம் உங்களுக்கு தெரித்துருக்க கூடும் என்று நினைகிறேன் இருபினும் குறிபிடுகிறேன்.

மஹர் என்றால் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு மணமகன் அவனின் செல்வங்களை பிரிசாக அள்ளி கொடுப்பதே மஹர் எனப்படும்.

நாம் சிந்திப்பதற்கு சில வார்த்தைகளை பதிவு செய்கிறேன்.
நம் இந்தியாவில் பெண்கள் வீட்டில் இருந்து வரதட்சணை என்று கொள்ளை அடிப்பதை ஒரு முறை சிந்தித்து பாருங்கள்.

மணப்பெண் வீட்டில் வரதச்சனை என்ற பெயரில் கொள்ளையடித்து திருமணம் செய்துகொள்வது சரியா?

மணமகன் பெண்ணுக்கு செல்வங்களை அள்ளிக்கொடுத்து திருமணம் செய்துகொள்வது சரியா? என்று சிந்தியுங்கள் சகோதர்களே.

Sameerdeen Ahamed said...

தஜ்ஜால் அவர்களே உங்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணருகிறேன் காரணம் உங்களுக்கு பதில் அளிப்பதற்காகவே அதிகம் குரானில் தேடுகிறேன். எனக்கு தெரியாத பல விசியங்களை குரான் வழியாக கற்றுக்கொண்டுள்ளேன்.

சகோதரரே, தும்பிக்கை இல்லாத யானை பலவீனமானது, பலம்மற்றது அதே போல் தான் மனிதனும் நம்பிக்கை இல்லாத மனிதன் பலவீனமானவன் , பலமற்றவன். நம்பிக்கை இல்லை என்றால் மனிதனே இல்லை பிறக்கும் பொது தாயை நம்பி பிறக்கிறோம், வளரும் பொது தந்தையின் மீது உள்ள நம்பிக்கையில் வளர்கிறோம், பயிலும் பொது ஆசிரியரை நம்புகிறோம் எனவே நம்பிக்கை தான் உண்மையான பகுத்தறிவு என்பதை மறந்துவிட வேண்டாம் சகோதரே.

குரானில் இருக்கும் அறிவியலை கிழித்து தொங்கவிட்ட அறிவியல் ஆய்வாளர்கள் உலகம் உருண்டை வடிவம் என்று கூறியவரை விரட்டி அடித்து உலகம் தட்டை வடிவம் என்றனர் பிறகு உருண்டை வடிவம் தான் என்றனர்.

அதே அறிவியல் ஆய்வாளர்கள் நிலவில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் நிலவில் இருந்து வருவது என்றார்கள் பிறகு இல்லை அது சூரிய ஒளியின் பிரதிபலிப்பு என்றார்கள்.

விண்ணில் ஒன்பது கிரகம் மட்டும் தான் இருக்கிறது என்றார்கள் இன்று என்ற கிரகங்கள் விண்ணில் சுற்றுவதைபற்றி கூறுகிறார்கள்.

இப்படி நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சியில் உண்மையஈ கண்டரிபவர்கள் வரும் காலத்தில் குரானில் இருக்கும் உண்மையும் ஒப்புகொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு பத்து நிமிடம் கீழே இருக்கும் linK வீடியோ வை பார்க்க உங்களை கேட்டுகொள்கிறேன்.Miracle of Kaaba Islam Mecca Quran Miracle .

http://www.youtube.com/watch?v=coG1JV-_FYM

இது குருட்டு நம்பிக்கை இல்லை, குரான் குருட்டு தனமாக குரானை நம்புங்கள் என்று கூறிவே இல்லை மாறாக என்ன கூறுகிறது என்றால் என்னை சோதியுங்கள், சிந்தியுங்கள், சிந்து ஏற்றுகொள்ளுங்கள் என்று கூறுகிறது.

Sameerdeen Ahamed said...

Ant அவர்களே என்னை பற்றிய என் மதிப்பீடு சரியாக தான் இருக்கும் ஏன் என்றால் நான் கற்றுகொண்டே இருகிறேன் எனவே நான் என்னை இன்னும் LKG மாணவனாகவே மதிபீடுகிறேன். ஜாகிர் நாயக் அவர்களை UKG மாணவனாக நான் மதிபீடுகிறேன் அவளவு தானே தவிர நீங்கள் கூறுவது போல் ஜாகிர் நாயக் அவர்களை நான் மார்க்க மேதை என்று கூறவில்லை. உங்கள் அறிவை நான் குறைத்தும் எடை போடவில்லை என்பதை புரிந்துகொள்வதுடன் மற்றொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஜாகிர் நாயக் அவராக ஏதேனும் சொன்னால் நான் ஏற்க்க மாட்டேன் அவர் குரானில் இருக்கும் வசனங்களை குறிப்பிட்டு சொல்வதால் அதை என்னால் குரானில் பார்த்து புரிந்துகொள்ள முடிகிறது. ஜாகிர் நாயக் உலகம் முழுவதும் பயணிக்க கூடிய இஸ்லாமிய மாணவன் எனவே அவர் இருக்கும் அதிக வேலைகளையும் அவர் மார்க்கத்திற்காக ஒதுக்கும் நேரத்தையும் ஒரு சக மனிதராக பகுத்தறிவோடு என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜாகிர் நாயக் என்னக்கு முன் பின் தெரியாதவர் இல்லை, அவர் குரானை முழுமையாக மனதில் பதிவு செய்தது வைத்திருக்கிறார் அவரிடம் மார்க்க கேள்விகளை கேட்பதும் பதிலுக்காக காத்திருப்பதிலும் தவேர்த்தும் இல்லை. ஆனால் சகோதரர் தஜ்ஜால் குரானை முழுமையாக அறிந்து கொண்டவர என்ற சந்தேகம் என்னக்கு இருக்கிறது. அவர்களிடம் நான் குரான் சமந்த பட்ட கேள்விகளை கேட்டால் உங்களுக்கு பதில் தெரியவில்லை அதில் முரண்பட்டு இருக்கிறது என்று அவர் சொல்ல கூடும் எனவே தான் குரானை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டேன்.

தஜ்ஜால், Ant அவர்களே இருவரிடமும் என்னக்கு ஒரு கேள்வி நீங்கள் குரானை படிப்பதாக கூறுகிறீர்கள் அப்படி நீங்கள் படிக்கும் பொது உங்கள் கண்களில் குரானில் நல்ல விசியங்கள் இருப்பதாக தெரியவே இல்லையா? நல்ல விசியங்கள் இருக்கிறது என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு குரானை பற்றி தெரிஞ்ச நல்ல விசியங்களை இங்கு எனக்கு வசனகளுடன் பதிவு செய்யுங்கள் .

மீண்டும் ஒரு வேண்டுகோள் உங்களது பெயரை குறிப்பிட வேண்டாம், நீங்கள் பொது இறைனம்பிக்கையலரா இல்லை நாதிகரா என்று பதிவு செய்யுங்கள் மீண்டும் உங்களிடம் இருந்து விருப்பம் இல்லை என்ற பதிலை தவிர்க்கவும்.

நந்தன் said...

சமார்தீன்
உடமையாக்கிக்கொண்ட பெணகளைத்தவிர என்பதை மறைக்கிறீர்களே. அதனை விளக்கவும்.

hari said...

epudi madakunalum thelivana answer varthu sameerdeen kittenthu ithula iruka cmt la ivar cmt elame sariyathan iruku. nambikai thumbikainu raiming sonna athukum reply pakava solraar

@sameerdeen ahmed may i have your email id?

hari haran said...

come on sameer nadhan ku ungal pathilai sollungal parkkalaam

Sameerdeen Ahamed said...

நத்தன் அவர்களே நீங்கள் கூறிபட்டிருக்கும்படி (2:24) திர் குரானில் உடமையாக்கிக்கொண்ட பெணகளைத்தவிர என்ற வார்த்தையே கிடையாது என்பது நிதர்சமான உண்மை உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திர் குரான் 2:24 என்ற பகுதியை பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் படி வார்த்தையே இல்லாத பொது நான் எப்படி மறைக்க கூடும். உங்கள் சொந்த வார்த்தைகளை குரானில் திணித்து இங்கு கேள்வியாக தொடுக்காதீர்கள்.

Sameerdeen Ahamed said...

சகோதரர் ஹரி ஹரன் அவர்களே என்னை மின் அஞ்சல் வழியாக தொடர்புகொள்ள worldiamb4u@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு உங்கள் கேள்விகளை தொடுக்கவும் என்ன முடிந்த உண்மைகளை உங்களிடம் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நானாக எதுக்கும் கூறவில்லை என் கருத்து உங்களுக்கு புரிந்தால் "எல்லா புகழும் எல்லாம் வல்ல இறைவன் ஒருவனுக்கே" நன்றி சகோதரரே!

Sameerdeen Ahamed said...

சகோதரர்களின் புஹாரி ஹதிஸ் 4138 அஸ்ல் பற்றிய கேள்விக்கு பதில்.

இதற்க்கு விளக்கம் அளிப்பதற்கு முன்பு,
திர் குரான் 2:24 கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும், இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. என்று எல்லாம் வல்ல இறைவன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது வஹீயாக இறக்கப்பட்ட குரானில் இருக்கிறது.

ஹதிஸ் 4138 இதில், நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! என்று கூறிவிட்டு "மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" இதற்க்கு பொருள் உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை எனவே அந்த பெண்களுடன் தவறாக உடலுறவு கொள்ளாதீர்கள் என்பதை குறிக்கிறது.

திர் குரான் 2:24 பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது..-- நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

நீங்கள் கூறும் பதிலாக இருந்தால் நபி அவர்கள் அஸ்ல் செய்தால் அதில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அப்படி குறைவில்லை.

4138 ஹதிஸ் க்கு நீங்கள் கூறுவது பதிலாக இருந்தால் நபி அவர்கள் அஸ்ல் செய்தால் அதில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அப்படி குறைவில்லை.

இப்போது சகோதரர்களுக்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

Ant said...

//http://www.tamililquran.com/qurandisp.php?start=4#4:24// கூறுகிறது //4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். ...// நன்றாக வாசிக்கவும் கணவனுள்ள பெண்களில் போரில் பிடிபட்ட கணவனுள்ள பெண்களைதான் குறிப்பிடுகிறது காரணம் விதிவிலக்காக (அடிமைப் பெண்களைத் தவிர - proviso) அதை இந்த வசனம் கொண்டுள்ளது. உங்கள் விளக்கத்தில் தமிழ் குரானே வெளிப்படையாக காட்டியுள்ள இந்த அடிமைப் பெண்களைத் தவிர என்னும் - proviso ஏன் காணப்படவில்லை? அதுதானே குற்றச்சாட்டு.

Ant said...

மூன்று நாட்கள் ஒரு பெண்னுடன் உடலுறவு கொள்ளாமல் குடும்பம் நடத்த முத்ஆ திருமணம் நடத்த கூறவில்லை. //தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.// மூன்று நாட்கள் இன்பம் அனுபவித்தற்காக அல்லது அனுபவிப்பதற்காக பணம் தருவதற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வேறுபடு.

Ant said...

//நம் இந்தியாவில் பெண்கள் வீட்டில் இருந்து வரதட்சணை என்று ”கொள்ளை அடிப்பதை” ஒரு முறை சிந்தித்து பாருங்கள்.// ..//தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது// இன்பம் அனுபவிப்பதற்காக பெண்களுக்கு பணம் தந்தால் அதன் பெயர் என்ன? அதை ஒரு பெண் பெறுவது (மூன்று நாட்களுக்கு) பெறுமை சேர்ப்பதா? அரபு பெண்களை மற்வர்கள் இவ்வாறு மூன்று நாட்களுக்கு பணம் செலுத்தி இன்பம் அனுபவிக்க அவர்கள் அணுமதிப்பார்களா? எந்த இந்தியன் தங்கள் வீட்டு பெண்களை இவ்வாறு நடந்து கொள்ள அணுமதிப்பான்? பிரக்கெட்டில் உள்ள (திருமணம் செய்யத்) என்பதை எடுத்துவிடுங்கள் இன்னும் தெளிவு பெறலாம்.

Ant said...

/மணப்பெண் வீட்டில் வரதச்சனை என்ற பெயரில் கொள்ளையடித்து திருமணம் செய்துகொள்வது சரியா?

மணமகன் பெண்ணுக்கு செல்வங்களை அள்ளிக்கொடுத்து திருமணம் செய்துகொள்வது சரியா? என்று சிந்தியுங்கள் சகோதர்களே..// மணமகள் வரதட்சனை பெற்று ஆயுள் முழுவதும் குடும்பம் நடத்துவது சரியா? மணமகள் மூன்று நாட்களுக்காக செல்வத்தை பெற்றுக் கொண்டு இன்பம் அனுபவிக்க அணுமதிப்பது சரியா? என்று சிந்திக்க கூடாதா? சகோதர்களே!

Ant said...

/நம்பிக்கை இல்லாத மனிதன் பலவீனமானவன் , பலமற்றவன். நம்பிக்கை இல்லை என்றால் மனிதனே இல்லை..// இறைவன் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கையே.

Ant said...

Sameerdeen Ahamed
//Ant அவர்களே என்னை பற்றிய என் மதிப்பீடு சரியாக தான் இருக்கும் ... நான் என்னை இன்னும் LKG மாணவனாகவே மதிபீடுகிறேன். ஜாகிர் நாயக் அவர்களை UKG மாணவனாக நான் மதிபீடுகிறேன்// ஒரு எல்கேஜியும் யுகேஜியும் பிஎச்டி தஜ்ஜால் அவர்களை மதிப்பிட முடியாது.

//உங்கள் கண்களில் குரானில் நல்ல விசியங்கள் இருப்பதாக தெரியவே இல்லையா?// குரானில் உள்ள பல வசனங்கள் அக்கால மதங்களில் இருந்த மக்களிடம் இருந்த பழக்கவழங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது கண்கூடு. மறைந்துள்ள மறைக்கபடுகின்ற குறைகளை நேரடியாக விளக்குவதே கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளதால் எதிர்மறை வாதங்கள் மட்டுமே முன் வைக்கப்பட்டுள்ளது.

hari haran என்ற இந்து பெயரில் Anonymous ஆக http://www.youtube.com/watch?v=coG1JV-_FYM URL - ஐ பயன்படுத்தி பதிவிட்டு பின்னர் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வது என்பது மார்க்கவாதிகளிடம் இருந்து கற்றுக் கொண்டதா? ஒரு அனானிமஸ் ஐ கோமாளி என்று பாராட்டிய நீங்கள் இதை மற்றவர்கள் எவ்வாறு? பாராட்டினால் தகும் என்பதை சிந்தித்து பார்க்க.

Ant said...

Sameerdeen Ahamed
//ஹதிஸ் 4138 இதில், நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! என்று கூறிவிட்டு //

‘அஸ்ல்' என்பது சிற்றின்பப் புணர்ச்சி இடைமுறிப்பு எனவே அதை செய்ய வேண்டாம் என்றுதான் கூறினார் அதாவது உடலுறவை இடையில் நிறுத்த வேண்டாம் என்பதே (அஸ்ல் செய்யாமல் இருந்தால் தவறேதும் இல்‌லை என்று தான் கூறுகிறது).
இதற்கு ஆதாரமாக
// "மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்"// இதற்கு பொருள் அஸ்ல் செய்யாததினால் குழந்தை உறுவாகும் என்று பயந்து சாகவேண்டாம் என்று தனது சகாக்களை உற்சாகப்படுத்துகிறார் கண்ணுமனி.

Ant said...

Sameerdeen Ahamed
//பெயரில்லாமல் சிரிக்கும் கோமாளி ஒருவன் என்னை சிறந்த காமெடியன் என்று அழைத்திருக்கிறார் மிக்க நன்றி!// உங்கள் பதிவுகளில் கூகுள் பிளஸ் அடையாளம் இப்போது காணப்படவில்லை ஏன்? சிந்திக்க மாட்டீர்களா? இல்லை மற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் (உங்களைப்போலவே) என்ற நினைப்பா?
உங்களுக்கு தேவையான பதில்கள் இந்த பின்னுாட்டங்களில் அதிகம் உள்ளது. சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையில் அத்தாட்சி உள்ளது! சிந்திக்க மாட்டீர்களா?

தஜ்ஜால் said...

@சமீர்தீன்,
// இதற்க்கு பொருள் உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை எனவே அந்த பெண்களுடன் தவறாக உடலுறவு கொள்ளாதீர்கள் என்பதை குறிக்கிறது.// (மன்னிக்கவும்!! நான் இவ்வாறு எழுதுபவனல்ல நண்பர் சமீர்தீன் ஹதீஸின் பொருளைத் தொடர்ந்து திரித்துக் கொண்டே இருப்பதால் வேறுவழி தெரியவில்லை) அதாவது ’அஸ்ல்’ என்ற பெயரில் விந்தை வெளியில் சிந்தி நாசாமாக்கித் தொலைக்காதீர்கள் அதை பக்குவமாக உள்ளே செலுத்துங்கள் என்பதான். மேலும் நீங்கள் அவ்வாறு ’அஸ்ல்’ செய்தாலும், அல்லாஹ்வின் நாட்டப்படி உருவாக இருக்கும் உயிரை உங்களால் தடுக்க முடியாது என்பதுதான் இந்த ஹதீஸ் நமக்கு கூறும் செய்தி. மாறாக நீங்கள் கூறுவது போல //பெண்களுடன் தவறாக உடலுறவு கொள்ளாதீர்கள் என்பதை குறிக்கிறது// என்பதல்ல.

//திர் குரான் 2:24 பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது..-- நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.//4:24 என்பதற்குப் பதிலாகா 2:24 என்று எண் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நண்பர் ANT கூறியது போல அவ்வசனத்தின் துவக்கமே “அடிமைப் பெண்களைத் தவிர” என்றுதான் துவங்குகிறது எனவே அதன் மற்ற் நிபந்தனைகள் அவர்களுக்கு பொருந்தாது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தஜ்ஜால் said...

குர்ஆன் 4:24. உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சார மாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள்....

அடைப்புக் குறிகளுக்கிடையே இருக்கும் திருமணத்தின் மூலம் என்ற இடைச் சொருகலை நீக்கிப்பாருங்கள் அப்பட்டமான விபச்சாரத்தை(முத்ஆ) ஆதரிப்பதையும் விளங்கலாம்.

தஜ்ஜால் said...

இவர்கள் ”மஹ்ர்” என்பதை ”மணக்கொடை” என்று என்னதான் வார்த்தைகளால் அலங்காரம் செய்தாலும் முஹம்மதுவைப் பொறுத்தவரையில் அதன் பொருள் வேறுதான். அதாவது சட்டபூர்வமாக பெண்ணுருப்பை உடைமையாக்கிக் கொள்வதற்கு வழங்கப்படும் பொருள்தான் மஹ்ர்.

Abu Dawud
Book 11, Number 2126:
Narrated Basrah:
A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil. When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace_be_upon_him) said: She will get the dower, for you made her vagina lawful for you. The child will be your slave. When she has begotten (a child), flog her (according to the version of al-Hasan). The version of Ibn AbusSari has: You people, flog her, or said: inflict hard punishment on him.

சிவப்புகுதிரை said...

//She will get the dower, for you made her vagina lawful for you.// இதன் பொருள் நாங்கள் சொல்லிதான் தெரியவேண்டியதுயில்லை..(பெண் உருப்பை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ளுதல்)..இவர்கள் கொடுக்கும் இந்த மஹர்க்விவகாரம் எல்லாம் விபச்சார விடுத்திக்கு முற்றிலும் பொருந்தும்..இவர்கள் அந்த மஹர் கொடுக்குர விவகாரத்தை எதோ பெரிய விசையம் பெண்களுக்கு அவர்கள் வாழ்வுக்கு கொடுக்குர ஜீவனாம்சம் என்று எல்லாம் சொல்லி பீதிக்கொள்கின்றார்கள்..முகமது அப்படி நினைக்கவில்லை அவர் தன் சகாக்கள் வெறும் மேலாடையை மட்டும் இருந்தால் போதுமானது அதை கொடுத்து நீங்கள் அந்த உரிய பெண்னை திருமனம் செய்துக்கொள்ளலாம் என்று கூறுக்கின்றார்.அந்த மேலாடையை வைத்து அந்த பெண்ணால் என்ன செய்யமுடியும்.முகமதை பொருத்தவரை அவர் நீயாமானவர் நீ அந்த பொண்ணுக்கூட போனும்ன எதையாவது குடுத்துட்டு போ அவளோ தான்.அதுக்கூட இல்லனா எதாவது குரான் வசனத்தை சொல்லிட்டு அந்த பொண்ணுக்கூட ஜல்சா பண்ணு ..இதை இப்ப பாத்த மாமா(BROKER) செய்ர வேலை மாதிரி தெரியுது....

Sameerdeen Ahamed said...

Ant அவர்களே ஹரி/ ஹரி ஹரன் என்ற ஒரு சகோதரன் நான் கூறுவதில் இருக்கும் உண்மையை புரிந்து கொண்டமையை உங்களால் ஏற்றுகொள்ள முடியாத நிலையில் என் மீது குற்றம் சுமத்துகுரீர்கள்.. பார்பவர்களுக்கு தெரியும் சகோதரர் ஹரி அவர்கள் கருத்தை பதிவு செய்த நேரமும். என் நேரமும் மாறுபட்டிருப்பதை படிப்பவர்கள் உணருவார்கள். எனக்கு தெரிந்த சில இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்த தளத்தை பதிவு செய்தேன் சிலர் திட்டி விட்டு சென்று விட்டனர் சிலர் என்னிடம் சொன்னது இவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று, தெரிந்த கேள்விகளுக்கு பதில் ஆளிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை சில கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டு பதில் அளிக்கவும் செய்கிறேன். என்னை நானே பாராட்டி கொள்ள இங்கு என்னக்கு என்ன தேவை இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் உங்கள் மனதில் உங்களை மட்டும் இதை வாசிப்பவர்கள் பாராட்டவேண்டும் என்று நினைகிறீர்கள், இஸ்லாத்தில் இருந்து விலகிய சகோதரர்கள் நாங்கள் என்று கூறுபவர்களிடம் உங்களது பெயரை கேட்டால் சொல்ல மறுக்குறீர்கள், குரானை ஓதுவதாக கூறும் உங்களிடம் அதில் இருக்கும் நல்ல விசியங்களை கேட்டால் எதிர்மறை மட்டுமே வாதிக்கபடவேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னை LKG UKG என்று ஒப்புடோந்துடன் இருந்துருக்கலாம் ant என்னும் நீங்கள் தஜ்ஜால் என்றவரை UG PHD என்று புகழுவதை கண்டால் ant என்கிற நீங்கள் தான் தஜ்ஜால் என்றும் பதிவு செய்கிறீர்கள் என்று தோன்றுகிறது. பெயர் இல்லாத ha ha ha என்று பெயரிட்டவரை கோமாளி என்று கூறாமல் வேறு எவ்வாறு அழைப்பது, உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது அந்த ha ha ha நபர் நீங்களோ? இங்கு உண்மையை கூறும் என்னால் ஏன் நிஜ பெயரை குறிப்பிடுவது போல் என் நிஜ ID என் FACEBOOK , TWITTER , எந்த நாட்டில் இருகிறேன் எங்கு வேலை செய்கிறேன் போன்றவற்றை என்னால் பதிவு செய்ய முடியும்.., உண்மை இல்லாத கதைகளை கூறும் உங்களுக்கு தான் நிஜ பெயரை குறிப்பிட முடியவில்லை. நீங்கள் உண்மைகளை கூறுவதாக இருந்தால் உங்கள் உண்மை பெயரில் இதை செய்யலாமே.., உங்களுக்கு உங்களின் உண்மையான பெயரை சொல்லவே முடியவில்லை நீங்கள் உண்மை என்று குரான் பற்றி கூறும் விசியங்களை எப்படி நம்புவது? இதுவே உங்களின் மிகப்பெரிய பலவீனம்.

Sameerdeen Ahamed said...

Ant மற்றும் தஜ்ஜால் நீங்கள் யாராக இருங்கள் எவராக வேண்டுமானாலும் இருங்கள் உங்களுக்கு உண்மையை புரிய வைக்க மட்டுமே நன் என்னுகிரேனே தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. என்னை மீண்டும் மீண்டும் நன்மை செய்ய வைகிறீர்கள் எனவே இந்த வாய்ப்பை நான் நழுவ விடுவதாக இல்லை என்னால் என்னக்கு தெரிந்த உண்மைகளை கூறிக்கொண்டே இருப்பேன். கோபம் கொள்ளும் உங்களிடம் என்னக்கு அளிக்கும் பதிலுக்கு ஆதாரம் இல்லை என்று என்னால் நன்றாக விளங்கி கொள்ள முடிகிறது.

4138 ஹதிஸ் க்கு நீங்கள் கூறுவது பதிலாக இருந்தால் நபி அவர்கள் அஸ்ல் செய்தால் அதில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அப்படி குறைவில்லை.
திர் குரான் 4:24 கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும், இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. என்று எல்லாம் வல்ல இறைவன் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீது வஹீயாக இறக்கப்பட்ட குரானில் இருக்கிறது. இதில் நீங்கள் கூறுவது போல் (அடிமைப் பெண்களைத் தவிர - proviso)என்ற வார்த்தை குரானில் இல்லை சகோதரரே நீங்கள் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
மூன்று நாட்கள் ஒரு பெண்னுடன் உடலுறவு கொள்ளாமல் குடும்பம் நடத்த முத்ஆ திருமணம் நடத்த கூறவில்லை.// குடும்பம் நடத்த, திருமணம் நடத்த// நடத்த நடத்த நடத்த என்று உங்கள் வார்த்தையிலேயே முரண்பாடு இருக்கிறது இது குரானில் எங்கு இருக்கிறது???

/ இறைவன் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கையே // ஒரு நம்பிக்கை என்றால் அந்த ஒரு நம்பிக்கை எதன் மீது? ஒரு நம்பிக்கை ஒரு நம்பிக்கை என்றால் நானும் தான் ஒரு நம்பிக்கையாளன் அல்லா ஒருவனே என்ற நம்பிக்கை உடையவனாக இருகிறேன்.

Sameerdeen Ahamed said...

தஜ்ஜால் என்ற பெயர் கொண்டவருக்கும் கூறிக்கொள்கிறேன் இதில் நீங்கள் கூறுவது போல் (அடிமைப் பெண்களைத் தவிர - proviso)என்ற வார்த்தை குரானில் இல்லை சகோதரரே நீங்கள் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.
கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். "இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை", தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கணவனுள்ள பெண்களை மணப்பது விலக்கப்பட்டுள்ளது. "இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை" என்றால் திருமணம் ஆகாத பெண்களை தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. என்று தெளிவாக குரான் கூறுகிறது.
ant மற்றும் தஜ்ஜால் என்று பெயர் கொண்ட ஒரு நபரோ இல்லை இரு நபரோ இதை பொய் ஆக்குவதற்காக (அடிமை பெண்களை தவிர என்றும் வார்த்தைகளை திணித்தும் குரானில் இருக்கும் திருமணம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாருங்கள் என்று கூறுகிறார்கள்..,
சகோதரரே உங்கள் இஸ்டத்திற்கு குரானில் வார்த்தையை ?சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் நீங்கள் யார் இல்லை நான் தான் யார்?
குரானில் வார்த்தைகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் மனிதர்களில் யாருக்குமே உண்மை கிடையாதே கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட.., இறைவன் வஹியாக இறக்கிவிட்டான் ஆனால் இதை இப்படி மாற்றி கொள்ளுங்கள் என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூட சொல்ல முடியாது இப்படி இருக்கையில் ஏன் நாம் நம் இஸ்டத்திற்கு வார்த்தைகளை சேர்த்தும், விளக்கியும் பார்க்க வேண்டும்.
ஒ! வார்த்தையை விளக்கினால் தான் உங்களுக்கு தேவையான பதில் வருமா? அப்படி என்றால் உங்கள் வார்த்தையில் தானே தவறு இருக்கிறது.

Sameerdeen Ahamed said...

(மன்னிக்கவும்!! நான் இவ்வாறு எழுதுபவனல்ல நண்பர் சமீர்தீன் ஹதீஸின் பொருளைத் தொடர்ந்து திரித்துக் கொண்டே இருப்பதால் வேறுவழி தெரியவில்லை) என்று முதல் பதிவில் குறிப்பட்ட உத்தமர் கூறுவதை பார்த்து இவர் எவ்வாறு எழுதுபவர் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது சட்டபூர்வமாக பெண்ணுருப்பை உடைமையாக்கிக் கொள்வதற்கு வழங்கப்படும் பொருள்தான் மஹ்ர் என்று
இவர் கூறுவது உண்மை என்றால் இவர் இப்போது இருக்கும் இந்திய கலாச்சாரத்தை இழிவு செய்கிறார் எப்படி என்றால் இப்போதும் நடை முறையில் இருக்கும் வரதச்சனை என்பது பெண் வீட்டார் மணமகன் வீடிற்கு கொடுப்பது.
அப்போ பெண் வீட்டார் பெண்ணுக்காக ஆணின் ஆணுறுப்பை உடமையாக்கி கொள்வதற்கு வழங்கப்படும் பொருள்கள் தான் வரதச்சனையா?
இல்லை என் ஆணுறுப்பு வேண்டும் என்றால் வரதச்சனை கொடு என்று ஆண் அவனை விற்கிறான???

என்ன கூற நினைகிறீர்கள் தஜ்ஜால் அவர்களே யாரை பொய்யாக்க பார்க்க நினைகிறீர்கள்?

Books, page number, narrated by whomever .., this can be create by any human, so post your evidence from Quran. If you don’t have just stop your arguments Or try to understand by yourself,you don’t want to share with me that you agreed Quran just keep it yourself thats enough.

Sameerdeen Ahamed said...

Abu Dawud
Book 11, Number 2126:
Narrated Basrah:
நாளை சிவப்புக்குதிரை கூட Abu Dawud என்ற பெயரில் ஒரு book narrate செய்யலாம். மனிதர் கையில் ஒன்று கிடைத்தால் குரங்கு கையில் கிடைத்த பூமலைக்கு சமம்.

ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர் எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் இந்த திர் குரானை இயற்ற முடியுமா? அதுவும் அராபிய இலக்கண வலுனர்களின் கருப்பனைக்கு அப்பாற்பட்டிருக்கும் இலக்கண வார்த்தைகள், வரிகளின் அணிவகுப்பு, திர் குரானை ஓதினால்( படித்தால்) வரும் ராகம் சீரான ஓவிய வடிவில் இருக்கும் எழுத்துகள் இவற்றை ஒரு எழுத்த படிக்காத மனிதனால் உருவாக்க முடியுமா என்று சிந்தித்து பாருங்கள் சகோதர்களே..,

சிந்தித்து குரானில் இருக்கும் உங்கள் கேள்விகளை இங்கு கேளுங்கள். அதை விட்டு விட்டு உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் போட வேண்டியதை எல்லாம் இங்கு கருத்து என்ற பெயரில் போடாதீர்கள்.

Sameerdeen Ahamed said...

குரானை பற்றிய கேள்விக்கு நான் பதில் அளித்த பிறகு அதை ஏற்றுகொள்ள முடியாத நிலையில் வேறு புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை கேப்டத்தை தவிர்க்கவும். குரான் பற்றிய என் பதிலை ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் உங்களது சந்தேகம் தீரும் வரை குரானில் இருக்கும் வரிகளை பற்றி கேளுங்கள் பதில் அளிக்கிறேன். உலகில் இருக்கும் அனைவரும் ஆதம்(ஸல்) அவர்களின் பிள்ளைகள் தான் என்னவே நாம் அனைவரும் சகோதரர்கள், சகோதரர்களுக்கு கருத்து வேறுபாடு இருகிறதே தவிர இதை சண்டையாக என்ன வேண்டாம். உங்களுக்கு உடன் பிறவாத சகோதரனாக நான் நியாயமான பதிலை கூறவே நான் விரும்புகிறேன்.

Ant said...

// ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர் எழுத படிக்க தெரியாத ஒரு மனிதர் இந்த திர் குரானை இயற்ற முடியுமா? .... ஒரு எழுத்த படிக்காத மனிதனால் உருவாக்க முடியுமா என்று சிந்தித்து பாருங்கள் சகோதர்களே..,// குரான் வசனம் 16:103 தேவை என்ன? சிந்திக்க மாட்டீர்களா? முடியாவிட்டால் இதை வாசிக்கவும்:
http://iraiyillaislam.blogspot.in/search?updated-max=2013-04-09T16:10:00%2B05:30&max-results=5&start=2&by-date=false
உங்களது கேள்விகள் அணைத்தும் இந்த தளத்தில் முந்தைய கட்டுரைகளில் உள்ளது.

Ant said...

// பெயர் இல்லாத ha ha ha என்று பெயரிட்டவரை ... உண்மையான பெயரை சொல்லவே முடியவில்லை நீங்கள் உண்மை என்று குரான் பற்றி கூறும் விசியங்களை எப்படி நம்புவது? .// உண்மையை கூறுவதற்கு பெயர் ஏதற்கு வாதங்களுக்கு பதிலிளிப்பதை விட்டு வாதிக்க வரும் முஃமின்கள் பெயரை சொல் அட்ரசை குடுன்னு கேட்டு படுத்தியதெல்லாம் பகடு (http://pagadu.blog.com)தளத்தில் ஏராளம் கிடைக்கிறது அதோடு அதற்கான விளக்கமும் கிடைக்கிறது.
// இதுவே உங்களின் மிகப்பெரிய பலவீனம்// பலவீனம் அல்ல இதுதான் முஃமீன்களிடமிருந்து பாதுகாப்பு . பாதுகாப்பு என்பது அவசியமானது என்பதால் பலரும் உண்மை பெயரில் இணையத்தில் இணைவதில்லை.

Ant said...

http://www.tamililquran.com/qurandisp.php?start=4#4:24 கூறுகிறது 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். பாய் நல்ல படிங்க.

தஜ்ஜால் said...

@ சமீர்தீன்,
//இவர் இப்போது இருக்கும் இந்திய கலாச்சாரத்தை இழிவு செய்கிறார் ... இப்போதும் நடை முறையில் இருக்கும் வரதச்சனை என்பது பெண் வீட்டார் மணமகன் வீடிற்கு கொடுப்பது.// வரதட்சணை, மஹ்ர் இரண்டையுமே தவறு என்கிறேன். இரு மனங்கள் இணைவதற்கு பணமும் பொருளும் எதற்கு??
//அப்போ பெண் வீட்டார் பெண்ணுக்காக ஆணின் ஆணுறுப்பை உடமையாக்கி கொள்வதற்கு வழங்கப்படும் பொருள்கள் தான் வரதச்சனையா?// நிச்சயமாக அதில் சந்தேகமென்ன!! இது வரதட்சணை வாங்கியவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். நீங்களும் அப்படியா??

தஜ்ஜால் said...


@ சமீர்தீன்

///(அடிமை பெண்களை தவிர என்றும் வார்த்தைகளை திணித்தும் குரானில் இருக்கும் திருமணம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாருங்கள் என்று கூறுகிறார்கள்.., ///

சில மொழிபெயர்ப்புகளை கொடுத்திருக்கிறேன் திணித்தது யார்?? நீக்கியது யார் என்பதை நீங்களே தீர்மாணித்துக் கொள்ளுங்கள்.

//சகோதரர்களுக்கு கருத்து வேறுபாடு இருகிறதே தவிர இதை சண்டையாக என்ன வேண்டாம். உங்களுக்கு உடன் பிறவாத சகோதரனாக நான் நியாயமான பதிலை கூறவே நான் விரும்புகிறேன்.///

குர்ஆன் 4:24. உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். ---இது பீஜே மொழிபெயர்ப்பு.

4:24 அன்றியும், பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்களின் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) (அடிமைப் பெண்களில்) உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர..-- கே.ஏ. நிஜமுத்தீன் மன்பஈ மொழிபெயர்ப்பு.

4:24 பெண்களில் கணவனுள்ளவர்களும் (திருமணம் செய்து கொள்வதற்கு, விலக்கப்பட்டுள்ளனர். நிராகரிப்போருடன் நிகழ்ந்த யுத்ததில் பிடிக்கப்பட்டு) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர…--- முஹம்மது இக்பால் மதனீ மொழிபெயர்ப்பு.

4:24 இன்னும் (போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதரவில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது… -----தர்ஜுமா.காம் வெளியீடு

வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் என்று குர்ஆன் குறிப்பிடுவது யாரை???

தயவு செய்து குர்ஆனை பொருளுணர்ந்து வாசியுங்கள். குருட்டுத்தனமாக அதன் மீது விழாதீர்கள்!!!

தஜ்ஜால் said...

@ சமீர்தீன்

(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.
(குர்ஆன் 23:6)
தங்களுடைய மனைவியர்களிடமோ அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர நிச்சயமாக (இப் பெண்கள் விஷயத்தில்) பழிப்புக்குரியவர்களல்லர்.
(குர்ஆன் 70:30)

கணவன் உயிருடன் இருக்கும் பொழுது, அவன் மனைவிடம் உடலுறவு கொள்வதில் தவறில்லை, பழிப்பிற்குரிய செயல் அல்ல என்று கூறுவது என்ன நியாயம்?? இது ஷைத்தானின் வார்த்தைகளாகக்கூட இருக்கத் தகுதியற்றது!!!

Ant said...

//கோபம் கொள்ளும் உங்களிடம் என்னக்கு அளிக்கும் பதிலுக்கு ஆதாரம் இல்லை என்று என்னால் நன்றாக விளங்கி கொள்ள முடிகிறது.// மக்கா கட்டுரையில் உள்ள விடயங்களை விட்டுவிட்டு அறிவியல் புவியியல் என்று பினனுாட்டுங்களில் உள்தை அதுவும் நீங்கள் தவறாக புரிந்து கொண்டு அல்லது புரிய மறுத்து பின்னுாட்டும் இட்டுக் கொண்டுள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் பின்னுாட்டம் இடும் முன் பிறரது பின்னுாட்டங்களை முழுமையாக அறிந்து பதிலிடவும் ஏனெனில் அல்லாசாமி சிந்திக்க மாட்டீர்களரி சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி கேட்பதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களை சிந்திக்க வைத்தாலே வெற்றிதான். உங்கள் நண்பர்களுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்தபோது அவர்கள் பதில்களை சற்று சிந்தித்து பார்க்கவும் அது இந்த தளத்திற்கு வரும் அணைவரும் அறிந்ததுதான். சிந்திப்பீர்.

சிவப்புகுதிரை said...

//Abu Dawud
Book 11, Number 2126:
Narrated Basrah:
நாளை சிவப்புக்குதிரை கூட Abu Dawud என்ற பெயரில் ஒரு book narrate செய்யலாம். மனிதர் கையில் ஒன்று கிடைத்தால் குரங்கு கையில் கிடைத்த பூமலைக்கு சமம்.//
சப்பா...சமிரூதீன் பாய் முடியல ..இவலோ தான் நீங்கள் இசுலாத்தை அறிந்துக்கொண்டுயுள்ளீர்கள் என நினைக்கின்றேன்...மனிதர்கள் எழுதிய ஹதீதுகள் இல்லை என்றால் குரான் முழுமை அடையாது என்று எல்லோருக்கும் தெரிந்தது.நீங்க என்னான இப்படி பேசுரிங்க ..எங்க குரான்ல எப்படி தொழுவுரது எப்படி நோம்புவைகுரதுனு இருக்குனு கொஞ்சம் காட்டுங்களன்..ஹதிதுகள் இல்லனா குரான் டம்மி தான் .வெறும் குரானை வைத்து ஒரு ஆணியும் புடுங்க முடியாது சகோ....இப்ப உடனே சஹி ஹதிதுகளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என சப்பக்கட்டு கட்டாதீர்கள்..அதுவும் மனிதர்கள் எழுதியது தான்..

நந்தன் said...

@சமீர்.

சமீர், உங்களின் புரட்டல்களை நீங்கள் பதிவு செய்துவிட்டால் அனைவரும் எங்களை பொய் சொல்லுபவருகள் என்று நம்பி விடுவார்கள் என்று மீண்டும் மீண்டும் பொய் சொல்லவதில் பொருளில்லை.

குர்ஆனிலுள்ளதையே இல்லை என்று புளுவதில் வல்லவரான இவரிடம் விவாதிப்பதில் எந்த பொருளும் இல்லை. பலனுமில்லை.

தோழர்களே உள்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

Sameerdeen Ahamed said...

@Ant
[16:102]
(நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

[16:103]
"நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.

மேல் இருக்கும் குரான் வசனங்களை படியுங்கள்.

இறைவன் நபியிடம் கூறுகிறான், [16:102] நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.[16:103]
"நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும்.

பொருள்:
"இவ்வேத வசனங்களை ரோமிலிருந்து வந்திருக்கும்) ஒரு (கிறிஸ்தவ) மனிதன்தான் நிச்சயமாக உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான்; (இறைவன் கற்றுக்கொடுக்க வில்லை)" என்று அவர்கள் கூறுவதை நிச்சயமாக நாம் அறிவோம். என்று இறைவன் நபியிடம் கூறுகிறான் மேலும் அ(ந்தக் கிறிஸ்த)வன் (அரபி மொழியை ஒரு சிறிதும் அறியாத) அஜமி. இவ்வேதமோ மிக (நாகரிகமான) தெளிவான அரபி மொழியில் இருக்கிறது என்று கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறுகிறான்.


{இறைவன்: (நபியே!) உன்னக்கு கற்று கொடுப்பவன் மனிதன் தான் என்று கூறவில்லை,சிலர் நபியின் வார்த்தைகளை நம்பாமல், நபிக்கு இறைவன் கூறவில்லை மனிதன் தான் கூறுகிறான் என்று கூறுவார்கள் என்பதை நான் அறிவேன் என்று எல்லாம் வல்ல இறைவன் நபியிடம் கூறுகிறான்.

(நபியே!) நீர் கூறுவீராக.[16:104]. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு.

[16:105]. நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.}

எப்போதும் குரானில் இருக்கும் முன் பின் வசனங்களை படியும்கள் அப்போது தான் தெளிவான பதில் உங்களுக்கு தெரியும்.
" காய்கறி கடைக்கு சென்று ஒரு கிலோ கறி கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் தானே முட்டாள் காய்கறி கடைக்காரன் இல்லையே" அதே போல் குரானில் முன் பின் இருக்கும் வசனங்களை சரிவர படிக்காமல் "நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)" என்பதை வைத்துக்கொண்டு ஆஅ ஆதாரம் கிடைத்து விட்டது நபி க்கு குரானை சொல்லிகுடுத்தது மனிதன் என்று குறுவது மடமை. UG PHD படித்தவர்கள் இதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

Sameerdeen Ahamed said...

@Ant

உண்மையை கூறுவதற்கு யாரை கண்டும் பயப்பட வேண்டியது இல்லை, பொய்யை கூறுபவர்கள் தான் முகமுடி அணிந்தும், பெயரை மாற்றி கொண்டும் தவறுகளை செய்கிறார்கள். நீங்கள் உண்மையை கூறுபவராக இருந்தால் ஏன் மூமீங்களுக்கு பயப்பட வேண்டும்? நீங்கள் பெயரை சொள்ளததிர்க்கு எனக்கு இரண்டு காரங்கள் தோன்றுகிறது.
1. பெயரை கூறினால் உங்கள் மதம் அல்லது சாதி தெரிந்துவிடும் அவாறு தெரிந்தால் குரான் உங்கள் மதத்தை விட புனிதமாக இருக்கிறது என்று ஒப்புகொள்ள நேரிடும்.

2. நாத்திகர் என்று நீங்கள் உங்களை கூறிக்கொண்டால் குரானை நீங்கள் ஒப்புகொள்ள அறிவியல் ஆதாரங்கள் இருக்கிறது. அதற்க்கு விள்ளகமும் அளித்தேன்.
ுரானில் இருக்கும் அறிவியலை கிழித்து தொங்கவிட்ட அறிவியல் ஆய்வாளர்கள் உலகம் உருண்டை வடிவம் என்று கூறியவரை விரட்டி அடித்து உலகம் தட்டை வடிவம் என்றனர் பிறகு உருண்டை வடிவம் தான் என்றனர்.

அதே அறிவியல் ஆய்வாளர்கள் நிலவில் இருந்து வெளிப்படும் வெளிச்சம் நிலவில் இருந்து வருவது என்றார்கள் பிறகு இல்லை அது சூரிய ஒளியின் பிரதிபலிப்பு என்றார்கள்.

விண்ணில் ஒன்பது கிரகம் மட்டும் தான் இருக்கிறது என்றார்கள் இன்று எண்ணற்ற கிரகங்கள் விண்ணில் சுற்றுவதைபற்றி கூறுகிறார்கள்.

இப்படி நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சியில் உண்மையஈ கண்டரிபவர்கள் வரும் காலத்தில் குரானில் இருக்கும் உண்மையும் ஒப்புகொல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

இதை ஏற்றுகொல்லும்படி ஆகிவிடக்கூடாது என்று நீங்கள் நாத்திகர்கள் என்றும் உங்களை கூறிக்கொள்ள முடியவில்லை.

எனவே உங்களை பிறர் மடக்கிவிட கூடாது என்று சாதுரியமாக நாங்கள் இஸ்லாத்தை விட்டு விலகிய சகோதரர்கள் என்று கூருகுறீர்கள். சகோதரரே உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன் இஸ்லாத்தில் இருந்து விலகிய நபர்கள் உலகத்தில் 5% இருப்பார்களா என்றால் கூட அது சந்தேகத்திற்குரிய விசியம் தான் இஸ்லாமியர்களின் முக்கியமானவர்கள் அமெரிக்கர்கள் ஆனால் இன்று அமெரிக்காவில் தான் அதிகமானோர் இஸ்லாத்தை தழுவுகிறார்கள் என்பது உலக ஆய்வு என்பதை மறந்துவிடாதீர்கள்.

Sameerdeen Ahamed said...

@தஜ்ஜால்

//வரதட்சணை, மஹ்ர் இரண்டையுமே தவறு என்கிறேன்./// மஹர் கூடாது என்றால் பெண்ணுக்கு ஆண் எதுவும் கொடுக்க கூடாது மனதை மட்டும் தான் இருவரும் கொடுக்க பட வேண்டும் என்று கூறுகிறீர்கள். வரதச்சனையும் நாம் ஒழிக்க கூறுகிறோம் (வரதச்சனை ஒழிக்கப்படவேண்டிய ஒன்று அதில் சந்தேகம் இல்லை). இப்படி இருக்கையில் மணமகனும் மணப்பெண்ணுக்கு எதுவும் கொடுக்காமல் அந்த பெண்ணை திருமணம் செய்தால் அந்த பெண் எப்படி நம்புவாள் தன்னை இவன் எப்படி வைத்து காப்பாற்றுவான் என்று, எனவே பெண்களுக்கு நடக்கும் திருமணத்தின் மேல் நம்பிக்கை கொள்ளவே மணக்கொடை அளிக்கபடுகிறதே தவிர பெண்களை வாங்குவதற்கு இல்லை என்பதை பகுத்தறிவாளர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

Sameerdeen Ahamed said...

@தஜ்ஜால்

இதை நான் முன்பும் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தேன் இப்போதும் சொல்கிறேன்.

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.
{ கணவனுள்ள பெண்களை மனம் முடிப்பது விலக்கப்பட்டுள்ளது. அடிமைபெங்களைதவிர என்றால் போரில் கணவனால் விடப்பட்ட பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களை தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் பொருள்.} நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

மீண்டும் ஒரு முறை கூறிகொள்கிறேன்,
மஹர் என்பது பெண்களுக்கு நடக்கும் திருமணத்தின் மேல் நம்பிக்கை கொள்ளவே மணக்கொடை அளிக்கபடுகிறதே தவிர பெண்களை வாங்குவதற்கு இல்லை என்பதை பகுத்தறிவாளர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

Sameerdeen Ahamed said...

@சிவப்புக்குதிரை :
ஹதிஸ் இல்லை என்றால் குரான் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? ஹதிஸ்கள் எழுத்தபடுவர்தர்க்கு முன் குரான் இறக்கபாட்டுவிட்டது. ஹதிஸ்கள், இறை தூதர் கண்மணி நாயகம் ஸல் அவர்கள் இறப்பிற்கு பிறகே எழுதப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தொழுகை குரானில் குறிபிட்டு இருப்பது போல் மேஹராஜ் என்ற இரவில் இறக்கப்பட்டது. நீங்கள் கூறுவது போல் ஹதிஸ்-ல் இல்லை.

இஸ்லாமிய கடமைகள் 5

கலிமா: ஈமான் கொளுத்தல்
தொழுகை :அல்லாஹ்வை வணங்குதல்
நோன்பு: ஆகாரம் உட்கொள்ளாமல் இறையை பேணுதல்
ஜகாத்: எளியவர்களுக்கு உதவுதால்
ஹஜ்: இறைவன் ஆணைப்படி உருவாக்கப்பட்ட இடத்தை காணுதல்.

இவை அனைத்தும் குரானில் இருக்கிறது.

கலிமா/ ஈமான் பற்றி குரான் குறுவது:
22:24. பரிசுத்த வாக்கியம் (ஆகிய கலிமா தய்யிப்) அவர்களுக்கு (இம்மையில்) கற்பிக்கப்பட்டு மிக்க புகழுக்குரிய இறைவனின் பாதையிலும் அவர்கள் செலுத்தப்படுவார்கள்.
மேலும் 4 இடங்களில் கலிமா பற்றியும், 3000 இடத்திருக்கு மேல் ஈமான் பற்றியும் குரான் விளக்குகிறது.

குரான் நோன்பு வைப்பது எப்படி என்று கூறுகிறது குறுவது:
[2:187] இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.
மேலும் குரான் வசனம்: 2:183,2:184,2:185,2:196,4:92,5:89,5:95, 9.112,33:35,58:4,66:5 இத்தனை இடங்களில் நோன்பு எப்படி வைக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பதை புர்ந்துகொளுங்கள்.

தொழுகை பற்றி குரான்:

2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

மேலும் 845 இடங்களில் தொழுகை பற்றி குரான் விளக்குகிறது.

ஜக்காத் பற்றி குரான்:
2:43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

மேலும் 301 இடங்களில் ஜகாத் கொடுப்பது பற்றி குரான் விளக்குகிறது.

ஹஜ் பற்றி குரான்:
2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

மேலும் 12 இடங்களில் ஹஜ் எப்படி செய்ய வேண்டும் என்று குரான் கூறுகிறது.

உங்களிடம் எனது வேண்டுகோள் குரானில் இருக்கும் முதல் தாள் முதல் இறுதி தாள் வரை புரிந்து கொண்டு படித்து விட்டு வந்து இங்கு குரான் மீது குற்றம் சுமத்துங்கள். இல்லை என்றால் உங்களின் இந்த முட்டாள் தனத்தை நிறுத்திகொள்ளுங்கள்.

Sameerdeen Ahamed said...

நத்தன் அவர்களே என்னை வீழ்த்துவதாக நினைத்து கொண்டு உங்களையும் உங்கள் தோழர்களையும் அவமானப்படுத்தாதீர்கள்.., உண்மையை அறிந்து கொளுவதர்க்காக வாதிக்கபடும் பொழுது எப்படி நேரத்தை வீணாக்குவதாக நீங்கள் கூருகுறீர்கள். நத்தன் அவர்களே உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர்களுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

Sameerdeen Ahamed said...

உங்கள் அனைவருக்கும் கூறிகொள்கிறேன்:

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு புரியவைக்கும் சக்தியை எனக்கு கொடுப்பான் என்று நம்புகிறேன் உங்களுக்கு புரியவைப்பதற்கு எனக்கு தெரியாமல் இருக்கலாம் அதனால் குரான் மீது தவறு என்று நினைபவர்கள் நீங்கள் தான் முட்டாள். நான் மார்க்க வலுனரோ மேதையோ இல்லை என்று அவப்போது குறிப்பிட்டு இருந்தேன் மீண்டும் கூரிக்கொளிகிறேன் நான் பயிலும் மாணவனாக தான் இருகிறேன். என்னை புளுகுவதில் வல்லுநர் என்று கூறியவருக்கு சொல்லி கொள்ள விரும்பிகிறேன், உலகம் உருண்டை என்று கூறியவரை உலக மக்கள் யாரும் நம்பாமல் இவர் புளுவுகிறார் என்று கூறியவர்கள் தான் சில ஆண்டுகளுக்கு பிறகு உலகம் உருந்தை என்று ஒப்புக்கொண்டனர்.

raja said...

Sameerdeen Ahamed , don't you feel ashamed to post like this lies. are you creating new quran. May be you will say aisha was muhamed daughter."" Enna kodumai sir ithu""

Sameerdeen Ahamed said...

i am saying the truth of Quran, not add anything new which is not in the Quran. may be is the big word so you try to avoid it and speak the truth here not rubbish.

Sameerdeen Ahamed said...

Raja you should feel ashamed to accepting such peoples lies. Not me, i am just explaining the truth of Islam.

Raja said...

Sameerdeen Ahamed , i have read quran. but there is no contents which you said. everyone knows you are telling lies. this is one of the muslims tacktics. This is TAGIYAH

Raja said...

Sameerdeen Ahamed ,Be honest don't use tagiyya.

Sameerdeen Ahamed said...

@ Raja

You said that you read Quran.

What you read in Quran, explain me in details. let me know the good terms of Quran first and then we can talk about arguing part.

Ant said...

//உண்மையை கூறுவதற்கு யாரை கண்டும் பயப்பட வேண்டியது இல்லை,// பாய் முன்னர் உள்ள பின்னுாட்டங்களில் உள்ள கூகுள் பிளஸ் அடையாளம் இப்போது இல்லை காரணம் பயம் தானே. நீங்கள் அடையாளத்தை மறைத்தது ஏனோ? நாங்கள் அடையாளத்தை காட்டிக் கொள்வதில்லை அது முஃமீன்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கதான்.

Ant said...

//மஹர் என்பது பெண்களுக்கு நடக்கும் திருமணத்தின் மேல் நம்பிக்கை கொள்ளவே மணக்கொடை அளிக்கபடுகிறதே தவிர பெண்களை வாங்குவதற்கு இல்லை என்பதை பகுத்தறிவாளர்கள் புரிந்து கொள்ளுங்கள்.// மக்கா குடும்பம் நடத்த குடுத்தா அது வரதட்சனை அல்லது மஹர் ஆனால் மூனு நாளுக்கு மட்டும் பணம் குடுத்துட்டு சுகம் அணுபவித்தால் அதன் பெயர் என்ன?

தஜ்ஜால் said...

@ சமீர்தீன்,

இஸ்லாம் என்றால் தக்கியா என்று பொருள்கூறும் அளவிற்கு பொய்களைப் பதிந்திருக்கிறீர்கள் இஸ்லாமைப் பற்றி அரிச்சுவடிகூட அறிந்திராத நபராகத்தான் உங்களை மதிப்பிட வேண்டியிருக்கிறது

இன்று நீங்கள் ஐவேளைத் தொழுவதற்கும், அதன் முழுமையான தொழுகை முறையைபற்றியும் குர் ஆனிலிருந்து விளக்க முடியுமா என்பதுதான் நண்பர் சிவப்புக்குதிரையின் கேள்வி, அதை திரித்து ஏதோ ஒரு பதிலைக் கூறியிருக்கிறீர்கள் எத்தனை முறை தொழுகை எப்படித் தொழ வேண்டுமென்ற இஸ்லாமின் அடிப்படை விஷயத்தைக் கூட குர்ஆனிலிருந்து காண்பிக்க முடியாது.

///இதை நான் முன்பும் ஒரு முறை குறிப்பிட்டு இருந்தேன் இப்போதும் சொல்கிறேன்.

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.///

இவைகள் சமீர்தீன் அவர்கள் கூறியவைகள்

\\நீங்கள் கூறுவது போல் (அடிமைப் பெண்களைத் தவிர - proviso)என்ற வார்த்தை குரானில் இல்லை சகோதரரே நீங்கள் மீண்டும் ஒருமுறை பாருங்கள்.\\\ ant மற்றும் தஜ்ஜால் என்று பெயர் கொண்ட ஒரு நபரோ இல்லை இரு நபரோ இதை பொய் ஆக்குவதற்காக (அடிமை பெண்களை தவிர என்றும் வார்த்தைகளை திணித்தும் குரானில் இருக்கும் திருமணம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாருங்கள் என்று கூறுகிறார்கள்.., \\\\

இதற்கு மேல் இவரிடம் எப்படிப் பேசுவது??
இவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது ஏனென்று விளங்குகிறதா??

Tamilan said...

@ Sameerdeen Ahamed என்னா நண்பரே, உட்டா குரானுக்கு புது தஃப்சீர் எழுதுவீர்கள் போல. இதோ உங்களுக்காக இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய தஃப்சீர்.

Asbāb al-Nuzūl by Alī ibn Ahmad al-Wāhidī
(And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess…)
[4:24]. Muhammad ibn ‘Abd al-Rahman al-Bunani informed us> Muhammad ibn Ahmad ibn Hamdan> Abu
Ya‘la> ‘Amr al-Naqid> Abu Ahmad al-Zubayri> Sufyan> ‘Uthman al-Batti> Abu’l-Khalil> Abu Sa‘id al-Khudri
who said: “We had captured female prisoners of war on the day of Awtas and because they were already
married we disliked having any physical relationship with them. Then we asked the Prophet, Allah bless him
and give him peace, about them. And the verse (And all married women (are forbidden unto you) save those
(captives) whom your right hands possess) was then revealed, as a result of which we consider it lawful to
have a physical relationship with them”.
Ahmad ibn Muhammad ibn Ahmad ibn al-Harith informed us> ‘Abd
Allah ibn Muhammad ibn Ja‘far> Abu Yahya> Sahl ibn ‘Uthman> ‘Abd al-Rahim> Ash‘ath ibn Sawwar>
‘Uthman al-Batti> Abu’l-Khalil> Abu Sa‘id who said: “When the Messenger of Allah, Allah bless him and give
him peace, captured the people of Awtas as prisoners of war we said: ‘O Prophet of Allah! How can we
possibly have physical relationships with women whose lineage and husband we know very well?’
And so
this verse was revealed (And all married women (are forbidden unto you) save those (captives) whom your
right hands possess)”. Abu Bakr Muhammad ibn Ibrahim al-Farisi informed us> Muhammad ibn ‘Isa ibn
‘Amrawayh> Ibrahim ibn Muhammad ibn Sufyan> Muslim ibn al-Hajjaj> ‘Ubayd Allah ibn ‘Umar al-Qawariri>
Yazid ibn Zuray‘> Sa‘id ibn Abi ‘Arubah> Qatadah> Abu Salih Abu Khalil> Abu ‘Alqamah al-Hashimi> Abu
Sa‘id al-Khudri who reported that on the day of Hunayn the Messenger of Allah, Allah bless him and give him
peace, sent an army to Awtas. This army met the enemy in a battle, defeated them and captured many
female prisoners from them. But some of the Companions of the Messenger, Allah bless him and give him
peace, were uncomfortable about having physical relations with these prisoners because they had husbands
who were idolaters, and so Allah, exalted is He, revealed about this (And all married women (are forbidden
unto you) save those (captives) whom your right hands possess).

Tamilan said...

Tafsīr Ibn 'Abbās
[4:24]
(And all married women (are forbidden unto you save those (captives) whom your right hands possess) of
captives, even if they have husbands in the Abode of War, after ascertaining that they are not pregnant, by
waiting for the lapse of one period of menstruation.
(It is a decree of Allah for you) that which I have
mentioned to you is unlawful in Allah's Book. (Lawful unto you are all beyond those mentioned) as unlawful,
(so that ye seek them) marry (with your wealth) up to four wives; it is also said that this means: so that you
buy with your wealth captives; and it is also said that this means: so that you should seek with your money
marrying women for an agreed period of time (zawaj al-mut'ah)
but the lawfulness of this practice was later
abrogated, (in honest wedlock) He says: be with them as legitimate husbands, (not debauchery) not
indulging in adultery without having a proper marriage. (And those of whom) after marriage (ye seek
content) from whom you derive benefit, (give unto them their portions) give to them their full dowry (as a
duty) as an obligation upon you from Allah to give the dowry in full. (And there is no sin for you) there is no
harm for you (in what ye do by mutual agreement) in increasing or decreasing the amount of the dowry by
mutual agreement (after the duty hath been done) after the first obligation to which you have aspired. (Lo!
Allah is ever Knower) in relation to making lawful to you marriage for an agreed, limited period of time,
(Wise) in later making this practice unlawful; it is also said that this means: Allah is ever Knower of your
compulsion for marriage for an agreed, limited period of time, Wise in making such marriage unlawful
.

Tamilan said...

Tafsīr al-Jalālayn
And, forbidden to you are, wedded women, those with spouses, that you should marry them before they
have left their spouses, be they Muslim free women or not; save what your right hands own, of captured
[slave] girls, whom you may have sexual intercourse with, even if they should have spouses among the
enemy camp,
but only after they have been absolved of the possibility of pregnancy [after the completion of
one menstrual cycle]; this is what God has prescribed for you (kitāba is in the accusative because it is the
verbal noun). Lawful for you (read passive wa-uhilla, or active wa-ahalla), beyond all that, that is, except
what He has forbidden you of women, is that you seek, women, using your wealth, by way of a dowry or a
price, in wedlock and not, fornicating, in illicitly. Such wives as you enjoy thereby, and have had sexual
intercourse with, give them their wages, the dowries that you have assigned them, as an obligation;
you are
not at fault in agreeing together, you and they, after the obligation, is waived, decreased or increased. God
is ever Knowing, of His creatures, Wise, in what He has ordained for them.

Tamilan said...

Tafsir Ibn Kathir
24. Also (forbidden are) women already married, except those (slaves) whom your right hands possess. Thus has Allah ordained for you. All others are lawful, provided you seek them (with a dowry) from your property, desiring chastity, not fornication. So with those among them whom you have enjoyed, give them their required due, but if you agree mutually (to give more) after the requirement (has been determined), there is no sin on you. Surely, Allah is Ever All-Knowing, All-Wise.)


Allah said,(Also (forbidden are) women already married, except those whom your right hands possess.) The Ayah means, you are prohibited from marrying women who are already married, (except those whom your right hands possess) except those whom you acquire through war, for you are allowed such women after making sure they are not pregnant.
Imam Ahmad recorded that Abu Sa`id Al-Khudri said, "We captured some women from the area of Awtas who were already married, and we disliked having sexual relations with them because they already had husbands. So, we asked the Prophet about this matter, and this Ayah was revealed, (Also (forbidden are) women already married, except those whom your right hands possess). Consequently, we had sexual relations with these women.'' This is the wording collected by At-Tirmidhi An-Nasa'i, Ibn Jarir and Muslim in his Sahih. Allah's statement,

Tamilan said...

@Sameerdeen Ahamed , இப்ப என்ன சொல்லுகிறீர்கள்? இதில் தெளிவாக அடிமைப்பெண்களை ,கணவன் இருந்தாலும் கற்பழிக்க அல்லாவும்/முகமதுவும் சொல்கிறார்கள் ,இந்த அல்லா(முகமது) சொன்னா மாதிரி , மேலப்பாளயம் முஸ்லிம் பாம் வைத்ததினால் , அதை முற்றுகையிட்டு , முஸ்லிமாக்களை முகமது செய்தாமாதிரி செய்யலாமா? இது தான் சரியான செயலாச்சே.. என்ன சொல்கிறீர்கள்?.

Ant said...

//(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள் ... (அல் குர்-ஆன் 2:221)// ஹூபல் - அல்லாசாமி தெளிவ சொல்லிபுட்டார் இணைவைக்கும் பெண்களை திருமணம் செய்யக் கூடாது என்று ஆனால் கணவன் உள்ளபோது கற்பழிக்க கூடாது என்று கூறவில்லை மாறாக அடிமையாக்கி 4:24 வசனம் வந்தபின்னர் கற்பழிக்க ஊக்கப்படுத்தியுள்ளான் மனிதாபிமானமற்ற ஞானமுள்ளவன். மனிதனை அடிமையாக்க கூடாது என்று ஒரு வசம் போட துப்பிருந்ததா ஹூபல் அல்லாசாமியிடம்.

Sameerdeen Ahamed said...

//பாய் முன்னர் உள்ள பின்னுாட்டங்களில் உள்ள கூகுள் பிளஸ் அடையாளம் இப்போது இல்லை காரணம் பயம் தானே.// முனால் இந்த என் கூகுளே+ அடையலாம் காணமல் போனதற்கு காரணம் நான் இந்த blog க்கு புதிது கூகுளே வழியாக மட்டும் தான் கருத்தை பதிவு செய்ய முடியுமோ என்று அதை பயன் படுத்தினேன். பிறகு பெயரை மட்டும் குறிப்பிடும் பதிவு செய்யலாம் ஒரு ஒரு நாளும் கூகுளே + sign in செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். இருப்பினும் என் சொந்த பெயரில் பதிவு செய்கிறேன் உங்களை போல் கோழைத்தனமாக இல்லை. உங்கள் கோழை பொய்யர் கூடத்தில் என்னை இணைக்க நினைக்காதீர்கள்.உங்களை கண்டு நான் ஏன் பயப்புட வேண்டும், அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே! மீண்டும் என் கூகுளே + வழியாக என்னளால் பதிவு செய்ய முடியும். உங்களால் உங்கள் சொந்த பெயரில் கூட பதிவு செய்ய முடியாத நிலையில் என் மீது குற்றம் சுமத்த உங்களுக்கு தகுதி இல்லை.

///மக்கா குடும்பம் நடத்த குடுத்தா அது வரதட்சனை அல்லது மஹர் ஆனால் மூனு நாளுக்கு மட்டும் பணம் குடுத்துட்டு சுகம் அணுபவித்தால் அதன் பெயர் என்ன?//// இந்த குறிப்பை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள், உங்களுக்கு யார் கூறியது என்பதை தெளிவு படுத்துங்கள்.

Sameerdeen Ahamed said...

//பாய் முன்னர் உள்ள பின்னுாட்டங்களில் உள்ள கூகுள் பிளஸ் அடையாளம் இப்போது இல்லை காரணம் பயம் தானே.// முனால் இந்த என் கூகுளே+ அடையலாம் காணமல் போனதற்கு காரணம் நான் இந்த blog க்கு புதிது கூகுளே வழியாக மட்டும் தான் கருத்தை பதிவு செய்ய முடியுமோ என்று அதை பயன் படுத்தினேன். பிறகு பெயரை மட்டும் குறிப்பிடும் பதிவு செய்யலாம் ஒரு ஒரு நாளும் கூகுளே + sign in செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். இருப்பினும் என் சொந்த பெயரில் பதிவு செய்கிறேன் உங்களை போல் கோழைத்தனமாக இல்லை. உங்கள் கோழை பொய்யர் கூடத்தில் என்னை இணைக்க நினைக்காதீர்கள்.உங்களை கண்டு நான் ஏன் பயப்புட வேண்டும், அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே! மீண்டும் என் கூகுளே + வழியாக என்னளால் பதிவு செய்ய முடியும். உங்களால் உங்கள் சொந்த பெயரில் கூட பதிவு செய்ய முடியாத நிலையில் என் மீது குற்றம் சுமத்த உங்களுக்கு தகுதி இல்லை.

///மக்கா குடும்பம் நடத்த குடுத்தா அது வரதட்சனை அல்லது மஹர் ஆனால் மூனு நாளுக்கு மட்டும் பணம் குடுத்துட்டு சுகம் அணுபவித்தால் அதன் பெயர் என்ன?//// இந்த குறிப்பை நீங்கள் எங்கிருந்து எடுத்தீர்கள், உங்களுக்கு யார் கூறியது என்பதை தெளிவு படுத்துங்கள்.

Sameerdeen Ahamed said...

எங்க குரான்ல எப்படி தொழுவுரது எப்படி நோம்புவைகுரதுனு இருக்குனு கொஞ்சம் காட்டுங்களன்./// இது தான் சிகப்புகுதிரை என்று பெயர் கொண்டவர் கேட்ட கேள்வி.

இதற்க்கு நான் நேற்றே தெளிவான பதிலை கொடுத்திருக்க வேண்டும். இன்று குறிபிடுகிறேன். நோன்பு எப்படி வைக்க வேண்டும் என்று குரானில் குறிப்பிட்டு இருப்பதை பதிவு செய்துவிட்டேன்.

தொழுகை என்பது இறைவனை வணங்குவது, ஈமான் கொண்டார்கள் ஒரு இறைவனை மட்டும் மனத்தால் நினைத்தாலே அது தான் தொழுகை, சஜிதா செய்யுங்கள் உங்கள் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்பிக்கொள்ளுங்கள் என்று குரானில் தெளிவாக குரான் கூறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

திர் குரான் 17:78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும்.

17:79. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்.

ஐந்து வேலை தொழுகை என்பதற்கு குரானின் ஆதாரம் கிடைத்து விட்டதா சகோதர்களே.

மேலும் சில சுன்னத் தொழுகையும் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள் ஆனால் அது இறைவன் இறக்கப்பட்ட பாரளன கடமை தொழுகை கிடையாது.

2:238. தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.

2:239. ஆனால், (தொழுகையின் நேரம் வந்து, எதிரி போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் ஓரிடத்தில் நின்று தொழ) நீங்கள் பயந்தால், நடந்து கொண்டேனும் அல்லது வாகனத்தின் மீது இருந்துகொண்டேனும் (தொழுங்கள்.) தவிர (உங்களுடைய பயம் நீங்கி) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகிவிட்டால் நீங்கள் (தொழுகையை) அறியாமலிருந்த சமயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் (தொழுகையை) கற்றுக்கொடுத்தபடி (தொழுது) அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்.

தொழுகைக்கு ஈமான் மட்டுமே முக்கியம் என்பதை திர் குரான் 2:239 விளக்குகிறது.

இப்படி குரான் கூறுகையில், இன்று மார்க்க அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது தொப்பி, அணியத்தான் வேண்டும் என்றும் இல்லை அணிய வேண்டாம் என்றும்.
தொழுகையில் விரல் அசைக்கவேண்டும் என்றும் இல்லை அசைக்க கூடாது என்றும்.

இதை சரிவர புரிந்து கொள்ளாமல் குரானில் அது இல்லை இது இல்லை அது ஹதிஸ்-ல் தான் இருக்கிறது என்று கூறுவது முட்டாள் தனம். குரானை ஓதுபவர்கள் முழுவதுமாக ஓதிவிட்டு கேள்விகளை தொடுங்கள். குரானில் உலகம் உருவாகியது முதல் முடிவு பெரும் நாள் வரும் வரை நடக்கும் எல்லா விசியங்களும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் சற்று சிந்தித்து பாருங்கள் உலகில் குரான் தான் மிகபெரிய புத்தகமாக இருக்கும். திர் குரான் என்பது இறைவன் மனிதர்களுக்காக இறக்கிய குறிப்பேடு அதில் நம் வாழ்வியலுக்கு உண்டான எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது அதை சரியாக நாம் பின்பற்றினால் நமக்கு நன்மை கிடைக்கும்.

என்னக்கு ஏற்ப்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன் நான் இருக்கும் நாட்டில் ஒரு ஆபிர்கருடன் தொழுகும் வாய்ப்பு என்னக்கு கிடைத்தது என் அருகில் இருந்த அந்த ஆப்ரிகர் தொழுகையில் அல்லாஹு அக்பர் என்று கூறியவர் கையை நெஞ்சில் கட்டிகொல்லவே இல்லை என் கவனம் சிதறியது. தொழுகை முடிந்த உடன் நான் அவரிடம் சலாம் கூறினேன் பதிலுக்கு அவரும் சலாம் கூறினார். மெல்ல பேச தொடங்கினேன், hi bro! where u from ? என்று கேட்டேன் சற்று என்னை மிரட்டலாக பார்த்து from Zambia என்று கூறிவிட்டு அவர் dua கேட்டுமுடித்தார். மேல மீண்டும் நான் may i ask you sumthing bro? என்று கேட்டேன் okay என்றார் during the prayer y u not hold ur hands in chest என்று கேட்டேன் its நாட் mentioned in quran என்று உடனடியாக பதில் கூறியதை கண்டு அதிர்ந்தேன் but the way of prayer details clearly mention in hadid என்று கூறினேன் was the book of hadid said by prophet muhammad ? என்று எனிடம் அவர் கேள்வி எழுப்பினார் நான் சட்ட்று தயங்கி கொண்டே No என்றேன் then y should i follow such books என்று கூறிவிட்டு anything else bro என்று கேட்டார் No Thanks என்றேன் உடனடியாக சலாம் கூறி விடைபெற்றார்.

எனவே தொழுகையில் அல்லாஹ்வின் மீது இருக்கும் ஈமான் மட்டுமே போதுமது என்று நான் அன்று புரிந்து கொண்டேன்.

Sameerdeen Ahamed said...

@ தமிழன் அவர்களே

அவர்கள் தமிழில் குறிப்பிட்டதை நீங்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட்டால் மீண்டும் ஆங்கிலத்தில் நான் குறிப்பிடவேண்டும் என்று நினைகிறீர்களா?

27 April 2013 09:19 அன்று நான் குறிப்பிட்டதை படியுங்கள்.

கற்பழிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டு வந்து இங்கு அந்த வார்த்தையை பதிவு செய்யுங்கள்.
இந்த தளத்தில் ஒரு வரைபடத்தில் தாடி வைத்திருக்கும் ஒருவர் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு போவது போல் காட்டபட்டுவிடால் அதற்க்கு பெயர் கற்பழிப்பு என்று அர்த்தமா? யூதர்களும், தாடி தான் வைத்திருந்தார்கள், ஹிந்து மத ரிஷிகளும் முனிவர்களும் தாடிதான் வைத்திருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

போரில் கணவன்களை இழந்த பெண்கள், போரில் பெண்களை விட்டுவிட்டு புறமுதுகை காட்டி ஓடியவர்களின் வீட்டு பெண்களை அடிமை பெண்கள் என்று குறிப்பிட்டு இருகிறார்கள்.
அதரவு இல்லாமல் இருக்கும் பெண்களை யார் காப்ற்றுவது நீங்களா ? அதற்காக தான் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் செய்தது கொள்ள சொன்னார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Sameerdeen Ahamed said...

Anonymous asked...

Sameerdeen Ahamed, we need answer forthis article not blaming

நான் இங்கு தாவா செய்ய வரவில்லை என்னக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே பதிவு செய்தேன்.
உங்களுக்கு என்னால் முடிந்தவரை எல்லா ஆதரங்களையும் பதிவு செய்துவிட்டேன். இனி இந்த தளத்தில் உங்களுக்கு நான் வருவதை விரும்பவில்லை, உங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று நான் விலகுவதாக நினைக்கும் சிலரை பற்றி என்னக்கு கவலை இல்லை, உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் worldiamb4@gmail.com க்கு உங்கள் கேள்விகளை தொடுங்கள். உங்களுக்கு என்னிடம் வாதிதே ஆகவேண்டும் என்றால் மேல் இருக்கும் ID க்கு உங்கள் கேள்விகளையும் வாதங்களையும் அனுப்பிவையுங்கள். இறை இல்லையாத இடத்தில் உங்களுக்குள் பெசிகொண்டால் உங்களுக்கு பதில் கிடைக்காது. உங்களுக்கு குரானின் உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் இறையுள்ளவர்களிடம் வாருங்கள் இன்ஷா அல்லா எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஈமான் கொள்ளச்செய்வான் என்று கூறி விடைபெற்று கொள்கிறேன் வாஹிர்தானா வல்கம்துலில்லாஹி ரப்பில்லாலமீன்!

Sameerdeen Ahamed said...

நான் இங்கு தாவா செய்ய வரவில்லை என்னக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே பதிவு செய்தேன்.
உங்களுக்கு என்னால் முடிந்தவரை எல்லா ஆதரங்களையும் பதிவு செய்துவிட்டேன். இனி இந்த தளத்திற்கு வருவதை நான் விரும்பவில்லை., உங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று நான் விலகுவதாக நினைக்கும் சிலரை பற்றி என்னக்கு கவலை இல்லை, உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் worldiamb4@gmail.com க்கு உங்கள் கேள்விகளை தொடுங்கள். உங்களுக்கு என்னிடம் வாதிதே ஆகவேண்டும் என்றால் மேல் இருக்கும் ID க்கு உங்கள் கேள்விகளையும் வாதங்களையும் அனுப்பிவையுங்கள். இறை இல்லையாத இடத்தில் உங்களுக்குள் பெசிகொண்டால் உங்களுக்கு பதில் கிடைக்காது. உங்களுக்கு குரானின் உண்மைகளை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் இறையுள்ளவர்களிடம் வாருங்கள் இன்ஷா அல்லா எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஈமான் கொள்ளச்செய்வான் என்று கூறி விடைபெற்று கொள்கிறேன் வாஹிர்தானா வல்கம்துலில்லாஹி ரப்பில்லாலமீன்!

dove said...

Sameerdeen Ahamed , you are like vadivelu, " Enna kaiya pudichu iluthiya !!!!!!!!!!!! . Ennama samilikiringa.

Raja said...

Sameerdeen Ahamed , once again you prooved you are fool just like common muslims. you have no proper answers. pls try to write a new holy quran . dont't follow current version quran. becoz this version only cotain how to rape childs and womens, how to kill innocent mens and womens, how to roppery, how to tell lies, and very ugly contents.

Raja said...

Sameerdeen Ahamed, also select a good human as prophet not like psycho muhamed

Ant said...

// Sameerdeen Ahamed:
ஹதிஸ் இல்லை என்றால் குரான் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது? ..
இஸ்லாமிய கடமைகள் 5

தொழுகை :அல்லாஹ்வை வணங்குதல்//
எல்லாஞ் சரி! எத்தனை தடவை வணங்கனும்! அஞ்சி தடவை வணங்குன்னு ஹூபல் அல்லாசாமி எங்கே சொல்லிகினாருன்னு சொல்ல முடியுமா?

Ant said...

Sameerdeen Ahamed:
//போரில் கணவன்களை இழந்த பெண்கள், போரில் பெண்களை விட்டுவிட்டு புறமுதுகை காட்டி ஓடியவர்களின் வீட்டு பெண்களை அடிமை பெண்கள் என்று குறிப்பிட்டு இருகிறார்கள்.//

முகமது கூட்டத்தால் கொலைசெய்யப்பட்டவர்களின் மனைவிகள், நிராயுதபாணிகளாக இருந்தவர்களின் மனைவிகளை கைது என்ற பெயரில் அடிமை படுத்தபட்ட பெண்களை வலக்கரங்களுக்கு சொத்தக்காரர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

//அதரவு இல்லாமல் இருக்கும் பெண்களை யார் காப்ற்றுவது நீங்களா ? அதற்காக தான் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் செய்தது கொள்ள சொன்னார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.//

அவர்களுக்கு ஆதரவாக இருந்த கணவர்களை கொலை செய்தது யார்? ஆதரவற்று இருந்தது ஆண் அடிமைகளும் தானே அவர்களை முஸ்லிமாக்களின் வலக்கரங்களுக்கு சொந்தக்கார்கள் என்று ஹூபல் அல்லா சாமி சொல்லவில்லையே ஏன்? பெண்களை அவர் படைக்க வில்லையா? ஆண் அடிமைகளுக்கு மனைவிகள் இருந்தாலும் அவர்களுடன் முஸ்லிமாக்கள் இன்பம் அணுபவிக்லாம் என்று ஏன் சொல்லவில்லை? சொன்னது முகமது தானே?

Ant said...

Sameerdeen Ahamed:
// மீண்டும் என் கூகுளே + வழியாக என்னளால் பதிவு செய்ய முடியும். .//

உங்கள் பதிவுகளை கூகுள் பிளஸ்-ல் மற்வர்கள் பார்வையிட கூடும் என்ற பயம் என்பதை அறியமுடிகிறது. Sameerdeen Ahamed: என்பது உங்கள் சொந்த பெயர் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.

// உங்களால் உங்கள் சொந்த பெயரில் கூட பதிவு செய்ய முடியாத நிலையில் என் மீது குற்றம் சுமத்த உங்களுக்கு தகுதி இல்லை.//
ஆதரங்களுடன் பதிவிடப்டும் பின்னுாட்டங்களின் உண்மை தனமையை ஆராய்ந்து பதிலளிக்காமல் உண்மை பெயர் ஊர் அட்ரஸ் என்று கேட்பது ஏன்? இது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இத் தளத்திற்கு வருகை தருபவர்களுக்கு நன்கு தெரியும்.

Ant said...

Sameerdeen Ahamed:
//நான் இங்கு தாவா செய்ய வரவில்லை என்னக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே பதிவு செய்தேன்.
உங்களுக்கு என்னால் முடிந்தவரை எல்லா ஆதரங்களையும் பதிவு செய்துவிட்டேன். இனி இந்த தளத்தில் உங்களுக்கு நான் வருவதை விரும்பவில்லை. .//
உங்களுக்கு உண்மையைபுரிய வைக்க இயன்ற அளவு முயற்சித்தோம் அதற்கான ஆதரங்களுடன் கூடிய வாதங்களை வைத்தோம் எந்த தனிநபரையும் இத்தளத்திற்கு வரக்கூடாது என்று இங்கு வருகை தருவோர் எண்ணுவதில்லை. ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்க உரிமை உள்ளது. உங்கள் மனதை புன்படுத்துவது நோக்கமல்ல மாறாக பன்படுத்தவே கருத்துகளை இட்டோம்.

தஜ்ஜால் said...

@ சமீர்தீன் அஹ்மத்,

//திர் குரான் 17:78. (நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (ளுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள்.....// மீண்டும் தவறாகக் கூறுகிறீர்கள். அடைப்புக் குறிகள் மொழிபெயர்பாளர்களின் கைவண்ணம். மனிதர்கள் தினமும் ஐவேளை அல்லாஹ்வைத் தொழவேண்டுமென்று எங்குமே கூறப்படவில்லை.
ஆஃப்ரிக்கருடனான உங்களது அனுபவத்தை கூறியுள்ளீர்கள், அந்த ஆஃப்ரிக்கர் கூறியது நிச்சயமாக உண்மைதான். நம்பிக்கைகளில் இருந்த காலத்தில், வெளிநாட்டில் இருந்த பொழுது இத்தகைய அனுபவத்தை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.
குர்ஆனில் ருக்குஉ, ஸுஜூது செய்வது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, தக்பீர்கட்டி நிற்பது, அத்தஹியாத்து என்ற அமர்வு, எத்தனை ரக் ஆத்துகள் என்பன எங்கு இருக்கிறது?
எப்படித் தொழவேண்டுமென்பதுகூட குர்ஆனில் இல்லையென்பதையே இது காட்டுகிறது. நண்பர் சிவப்புக்குதிரையின் கேள்வியில் தவறில்லை!



///ஒரு வரைபடத்தில் தாடி வைத்திருக்கும் ஒருவர் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு போவது போல் காட்டபட்டுவிடால் அதற்க்கு பெயர் கற்பழிப்பு என்று அர்த்தமா?/// அதற்கான விளக்கத்தை அப்படத்தின் அருகிலேயே கொடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவில்லையா நண்பரே?

ஹதீஸ்களில் முன்னுக்குப்பின் முரணான செய்திகள் இருப்பினும், இஸ்லாமைப் பொருத்தவரையில் குர்ஆன் உயிர் என்றால் ஹதீஸ் உடலாகும். ஹதீஸ்களில்லாமல் இஸ்லாமின் அடிப்படைக் கடமைகளைக்கூட செய்யமுடியாது.

//இனி இந்த தளத்திற்கு வருவதை நான் விரும்பவில்லை., உங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று நான் விலகுவதாக நினைக்கும் சிலரை பற்றி என்னக்கு கவலை இல்லை,/// உங்களை இத்தளத்திற்கு வராமல் செய்வது எங்களது நோக்கமல்ல. உங்களைப் போன்ரவர்கள் இங்கு வரவேண்டும் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே இவைகளை வெளியிடுகிறோம். சர்ச்சைக்குறிய விஷயங்களை வாதிடும் பொழுது காரசாரமாக இருந்தாலும் இறுதியில் சில உண்மைகளும் வெளியாகுமல்லவா? உண்மைகளை வெளிக்கொணர்வதே எங்கள்து பணி!!

சமீர்தீன்,
மீண்டும் மீண்டும் எங்களது தளாத்திற்கு வரவேண்டும் உங்களது மேலான கருத்துக்களைப் பதிய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட விருப்பமும் கூட.




சிவப்புகுதிரை said...

சம்சுதீன் பாய் வீட்ல கொன்ஜம் வேளை அதன் தொடந்து வர முடியல ஆனா நன்பர் தஜ்ஜாலும் ஆண்ட்டும் பதில் சொல்லிட்டாங்க ..நான் எவ்வாறு தொழுவ கண்டீர்களோ அவ்வாறு தொழுவுங்கள்னு முகமது பாய் சொல்லிட்டு பொய்ட்டாரு .இப்ப இங்க நம் மூந்மின்களிடம் என்ன சிக்கல்னா முகமது பாய் விரல ஆடுனார இல்லையனு பிரச்சன வருது.நமக்கு இருக்குர கேள்வி இதுல தான் ஒலுங்க முகமது பாய் குரான்ல ஆடுனார இல்லையானு சொல்லி இருந்தா நம்ம மூஃமின்களுக்கு குலப்பம் வந்து இருக்காது ஆனா நம்ம மூஃமின்களுக்கே புரியாத மாதிரி சொல்லிட்டு பொய்டாருனு தான் சொல்ல வரும்...அப்பறம் என்ன கேட்டிங்க 2:187 குரான் வசனத்தை பதி. இந்த வசனம் எந்த காலத்துக்கு பொருந்தும்னு ஒரு விடியோவுல கிழிச்சு இருக்கோம் வேனுன்ன நீங்க திரும்ப பாருங்க இந்த லிங்க கிளிக் பண்ணி.... http://iraiyillaislam.blogspot.in/2012/07/blog-post.html..

iraimai said...

nenjaithottu sollungal

iraimai said...

islathi sattangal enna solgiradhu kalima tholugai nonbu jakkath haj valkaikana valimuraikal palveru ullana immaiiyai kasthatutsn kalithi marumamaiyil suvanavalvu kidaikum idharku enna adaram pj vidam ketka venduma quiron i porutavarai arabu desm than ulagam inna eppadi malagugal arabu thandi varuvarkal

iraimai said...

iraivan ore nerathil ellar manathil qur onai download panniyieukkalame pavam avan kaiyalagadhava
indha ulagaun enna seitjndirundar anvanukkura veru nadugal theriuathaarabiavaithavira indha ulagin padaippin nokm enna thsnnai vananga oru ootam vendrum endra

Anonymous said...

சமீர்தீன்,
நீங்கள் பல வசனங்களில் பலவற்றைகுர்ஆனில் இல்லை என்று சொல்லியுள்ளீரகள். அது வரவேற்கத்தக்கது. நாமும் காலத்திற்கேற்றபடி குர்ஆனைத் திருத்த வேண்டும் என்றே கூறுகிறோம். அந்த சிறப்பான வேலையை தாங்கள் செய்து வருவதற்கு பாராட்டுகள். அந்தக்குரானின் பிடிஎஃப இருந்தால் கொடுத்துதவவும். மக்களிடம் எடுத்துச்செல்ல உதவும். பிடிஎஃப் இல்லை என்றால் எங்கு கிடைக்கும் என்று சொல்லவும்.
தங்களின் மேலான பணிக்கு வாழ்த்துக்கள்.

Safna said...

மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்..