Thursday, 18 October 2012

ஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10 காரணங்கள்


வேண்டுகோள் :
இந்தப் பதிவில் சில கடவுளர்களின் தன்மைகள் ஒப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை என்பதால் மூலத்தை திருத்தம் செய்வது முறையல்ல என்ற நோக்கில் கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களின் தன்மைகளை இங்கு அனுமதிக்க வேண்டியதாகிறது.  கட்டுரையின் ஆசிரியர் கூறும் கடவுளர்களையோ அல்லது அவர்களது சிறப்பியல்புகளையோ நாம் ஆதரிப்பதாக கருதவேண்டாம்.
இறையில்லா இஸ்லாம்.
ஏன் முஹம்மது பொய் நபி - நம்புவதற்கு 10  காரணங்கள்
அவைகள் இங்கே :
(1) முஹம்மதின் பிறப்புக்கு முன்பு அசாதரணமான இயற்கை அடையாளங்களோ அல்லது உலகை காக்க முஹம்மது வருவதை பற்றிய முந்தைய மத புருஷர்களின் முன்னறிவுப்புகளோ இல்லை.
 (2) முஹம்மது பிறந்தபோது இஸ்லாம் இல்லாமலிருந்தது. அவருடைய பிறப்பு விக்கிரக வழிபாடு செய்யும் குடும்பத்தில் நடந்தது. அவர் தன்னுடைய குழந்தை பருவத்திலும் இளவயது பருவத்திலும் அதையே பின்பற்றினார். முஹம்மதே காபிராக பிறந்து,  அவர் இஸ்லாமை கண்டு பிடிக்கும்வரை தன்னுடைய வாழ்க்கையின் 70 % காலத்தை பெருமைமிக்க காபிராகவே கழித்தார் என்பதே அதற்கு அர்த்தம்.
(3) அவருடைய முதல் திருமணம் எந்த முஸ்லிமாவுடனும் இல்லாமல் ஒரு யூத பெண்ணோடு நடந்தது. இஸ்லாம் இன்னும் தோன்றவில்லை என்றால் யூத பெண்ணோடுடனான அவருடைய திருமண சடங்கில் எந்த மத வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதே கேள்வி. நல்லது, அது சுத்தமான யூத முறையிலான திருமண சடங்கு என்பதே உண்மை.   முஹம்மது நபியின் முதல் திருமணத்தின் இஸ்லாமிய சடங்கை பற்றி குர்ஆனே எதையும் கூறவில்லை. எவ்வாறு முஹம்மதே தன்னுடைய நபித்துவத்தை பற்றியோ அல்லது இஸ்லாமின் இருப்பை பற்றியோ குறித்து எந்த யோசனையும் கொண்டிருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
(4) முஹம்மது அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட போற்றத்தக்க நபி என்றால் அவர் குழந்தையாக இருந்தபோதோ அல்லது அவர் வாலிபம் அடைந்தபோதோ இஸ்லாமை பற்றிய உண்மையை ஏன் அவர் வஹி அறிவிக்கவில்லை. அவருக்கு 40  வயதாகும்வரை அவர் ஏன் காலத்தை வீணாக்கினார்? இந்த உலகத்துக்கு வந்ததிற்கான அவருடைய நோக்கம் இஸ்லாமை வெளிப்படுத்தி மக்களுக்கு பிரசாரம் செய்வது மட்டுமே என்றால், பிறகு ஏன் அவர் வருடா வருடங்களாக சாதாரண மனிதனை போன்று வாழ்ந்து, எல்லாவிதமான பாலுறவு மற்றும் பொருளாதார கேளிக்கையை அனுபவித்து, தன்னுடைய வாழ்கையின் பாதியளவுக்கு மேல் கழியும்வரை காத்திருக்க வேண்டும்?
(5) அநேகமாக குர் ஆனில் கூறப்பட்டுள்ள இஸ்லாமின் எல்லா சடங்குகளும் சட்டங்களும் யூத மதத்திலிருந்து பிரதி எடுத்தவைகளே. எவ்வாறு முஹம்மது யூத மதத்தினால் மிக ஆழமாக தூண்டுதலுக்கு உள்ளானார் மற்றும் தவ்ராத்தினால் ஈர்க்கபட்டார் என்பதையே அது காட்டுகிறது. அதனால்தான், ஒரு புதிய மதத்தை கண்டுபிடிக்க எளிதான வழியாக, அவர் தவ்ராத்திளிருந்து குர்ஆனுக்கு காப்பி பேஸ்ட் செய்ய வேண்டியிருந்தது.
(6) அன்பினாலும் பிரசாரத்தினாலும் அல்லாமல், வாள் முனையிலேயே முஹம்மது இஸ்லாமை பரப்பினார். எந்த விலை கொடுத்தேனும் ஆட்சி புரிவதே அவருடைய செயல் தந்திரமாக இருந்தது.
(7) இயலாத, குற்றமற்ற, உதவி செய்வாரில்லாத மக்களை முஹம்மது கொன்றார், ஒரு பரிசுத்த நபியின் செயல்களாக அவற்றை எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாது.
(8) தன்னைத்தானே  பரிசுத்த நபி என்று அழைத்துக்கொண்டு, முஹம்மது பல பெண்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தி, அவருடைய செயல்களுக்காக எவருக்கும் பதில் கூற வேண்டாதவராக இருந்தார். மைனரான ஆயிஷாவுடன் திருமணம், தன்னுடைய சொந்த மருமகளான ஜைனப் பின்த் ஜஹ்ஷ் என்பவரை மணந்து கொண்டது போன்று, அவருடைய சில செயல்கள் கேலி செய்யும்படி வெட்கப்பட தக்கவைகள். எப்படி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எவரையும், எங்கும், எந்த வழியிலும் தவறாக பயன்படுத்துவது என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்த இன்னொரு அதிகாரமிக்க சர்வாதிகாரிதான் முஹம்மது என்பதையே அது நிரூபிக்கிறது.
(9) ஒரு நபி செய்யக்கூட்டிய எந்த அற்புதத்தையும் ஒருகாலும் முஹம்மது நிகழ்த்தவில்லை. கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்வதற்கு பதில், அவர்களுடைய நிலங்களை பிடுங்கிக்கொண்டு, அழுகின்ற குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக்கி நன்றாக வாழ்ந்துவந்த, அன்பு நிறைந்த, அமைதியான குடும்பங்களை முஹம்மது அழித்தார்.
(10) தன்னுடைய வாழ்க்கையில், மனித இனத்திற்கு முஹம்மது பேரழிவை ஏற்படுத்தினார், அதுவே அவருடைய சாத்தானிய மனதுக்கு போதுமானது. அதனால்தான், இறப்பதற்கு முன்பும்,  தன்னை பின்பற்றியவர்களுக்கு மதத்தின் பெயரால் ஜிஹாதின் மனநிலையையும் செய்திகளையும் விட்டு சென்றார். அது இன்னமும் உலகம் முழுவதும் நம்முடைய வாழ்க்கைக்கு பெரும் துன்பத்தை விளைவித்துக்கொண்டு இருக்கிறது. ஒரு உண்மையான நபி உயிர்களை அழிப்பதை  ஒருக்காலும் விரும்பமாட்டார், ஆனால் தன்னுடைய மக்களுக்காக தன்னுடைய சொந்த உயிரையே தியாகம் செய்வார் என்றே நான் கூற முற்படுகிறேன். முஹம்மது தன்னுடைய வாழ்க்கையிலும் சரி, தன்னுடய மரணத்திற்கு பிறகும் சரி ஒரு நபியாக இருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
இப்படிப்பட்ட குற்றங்களை செய்த மற்ற எந்த மதத்தின் எந்த பரிசுத்த புருஷரின் உதாரணத்தை தயவுகூர்ந்து எனக்கு கொடுங்கள். வரலாற்றிலிருந்து மற்ற சில புகழ் பெற்ற மத புருஷர்களை பார்ப்போம் :
இயேசு கிறிஸ்து : முகம்மதை போல,  அவர் எந்த போரையும் தொடங்கவில்லை, ஒருபோதும் அப்பாவி மக்களை கொல்லவில்லை, பெண்களை தவறாக பயன்படுத்தவில்லை. அவர் ஒருபோதும் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதே அதற்கு ஆதாரம். இந்த உலகத்தை விட்டு செல்லுவதற்கு முன்பு அவர் தன்னுடைய குணநலத்தின்மீது எந்த கேள்விக்குறியையும் விட்டுசெல்லவில்லை.
புத்தர் : சத்தியத்தையும் அமைதியையும் தான் உண்மையாகவே தேடி  அவை மனித குலத்தை அடைய செய்வதற்காகவே, தன்னுடைய செல்வசெழிப்பான பின்புலத்தினால் தான் பெறக்கூடிய எல்லா அனுகூலங்களையும் தன்னுடைய வீட்டையும் சொகுசான வாழ்க்கையையும் விட்டுவிட்ட ஒரு மனிதர். எவருடைய கழுத்திலும் வாளை வைக்காமலேயே அவர் அதை செய்தார். அவர் உண்மையான பரிசுத்த குண நலன் கொண்டவராக இருந்தார்.
ராமர் : இந்து மதத்திலும், இந்துக்களின் வழிபாட்டு கடவுளான "ராமர்"  பரிபூரணமான பரிசுத்த மனிதராகவே இருந்துள்ளார். அவர் தன்னுடைய சொகுசான முழு ராஜ்ஜியத்தையும் விட்டுவிட்டு, தன்னுடைய வாழ்க்கையின் பல வருடங்களை காடுகளில் கழித்தார். இயலாத மக்களை அவர் ஒருபோதும் கொல்லவோ அல்லது கொடூரமாக வேதனை செய்யவோ இல்லை. இந்து மதத்தை தழுவும்படி அவர் எவரையும் பலவந்தபடுத்தவில்லை. ஒரு பரிசுத்த மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அது இன்னொரு எடுத்துக்காட்டு.   
மேலே கூறப்பட்ட மதங்களில் எந்த ஒன்றையும் உண்மையானது என்று நான் நியாயபடுத்தவில்லை. ஆனால், நான் சொல்ல விரும்புவதெல்லாம், முஹம்மதோடு ஒப்பிடும்போது எந்த மத புருஷரும்  நம்பத்தகாத குண நலன் ஏதுமின்றி உயர்வாகவும் சுத்தமாகவுமே இருக்கிறார் என்பதே.
மறுபக்கம், இந்த "பரிசுத்தமற்ற" முஹம்மது மனித குலமும் நாகரிக சட்டங்களும் அனுமதிக்காத எல்லாவற்றையும் செய்தார். அவர் இரத்தவெறிபிடித்த நபியாக இருந்தார். கோடிக்கணக்கானவர்களின்  ரத்தம் அவரின் கைகளின்மேல் உள்ளது. முஸ்லிமும் முஸ்லிமாவும்  முஹம்மது மற்றும் இஸ்லாம் பற்றிய மாயையிலிருந்து வெளியேறி, உண்மை நிலையை ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு ஏற்றவர்களாக ஆக வேண்டும்.   தான் சுயமாக உருவாக்கிய பொய்களின் புத்தகத்தில்(குர் ஆன்) தவ்ராத்தில் உள்ளவைகளை காப்பி பேஸ்ட் செய்து     கோடிக்கணக்கானவர்களை முட்டாளாக்கி, தந்திரமாக தன்னை தானே நபி(தீர்க்கதரிசி) என்று அறிவித்துக்கொண்ட மனிதன் நபியாக இருக்க முடியாது. ஒருபோதும் மற்றவருக்காக உயிரை  கொடுக்காத, ஆனால் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்த மனிதன் எந்த மதத்திலும் அங்கம் வகிக்க முடியாது.  இந்த உலகத்தை விட்டு செல்வதற்கு முன்பு, இவ்வளவு அதிகமான துன்பத்தையும் சச்சரவுகளையும் அழிவையும் விட்டு சென்ற மனிதன் கடவுளால் அனுப்பப்பட்ட நபி என்று அழைக்கப்பட தகுதி இல்லாதவன்.  
முஹம்மது, அவராகவே, தன்னுடைய குண நலத்தின்மீது பெரிய கேள்விக்குறியை விட்டு சென்றார். அவர் வாழ்ந்த முறையின் காரணமாக, விஷயங்களை புரிந்து கொள்ளும் அறிவு உள்ள, அழுக்கை அழுக்கு என்று அழைக்கவும் தீமையை தீமை என்று அழைக்கவும் போதுமான தைரியமும் உள்ள கல்வி அறிவு பெற்றவர்களால் அவர் ஒருக்காலும் பரிசுத்த நபி என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.
முஹம்மது --- நீர்  மனித குலத்துக்கு ஒரு சாபக்கேடு. பல விதவைகளுக்கும், அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கும், உம்முடைய தந்திரமான தீய விருப்பங்களுக்கும் பொய்களுக்கும் பலிகடாவான சிறுவர்களின் உதவி செய்வாரில்லாத பெற்றோர்களுக்கும் நீர் ஒரு சாபக்கேடு. நபி என்று சுயமாக அறிவித்துக்கொண்ட உம்முடைய ரத்தம் படிந்த தலையின்மீதே  வெட்கத்தின் சிம்மாசனம்.   
————————————————————————–
இம்ரான் பிராசத்(ஸ்பெயின்) Imran Firasat (Spain)
A proud ex Muslim
www.mundosinislam.com
(Temporarily taken down because of attacks from Muslims hackers
Will be back soon)
செப்டம்பர் 4 , 2012
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Monday, 8 October 2012

ஹிஜ்ரத்


கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். புதிய சகாப்த்தம் என்று அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. ஆம், முஹம்மதின் வாழ்கை, ஹிஜ்ரத்திற்குமுன் ஹிஜ்ரத்திற்குப்பின் என்று முரண்பட்ட இரண்டு பகுதிகளாக காணப்படுகிறது. ஹிஜ்ரத்திற்குமுன் அவரது செயல்களில் கற்பனையாக உளறிக் கொண்டிருந்தது மற்றும் குழந்தை ஆயிஷாவுடன் திருமணம் என்பதைத் தவிர குறைகாண வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் அனுமதி என்ற பெயரில் அவர், வன்முறையாளராக பெரும் அளவிலான குற்றச்செயல்களை நிகழ்த்தியது ஹிஜ்ரத்திற்குப் பின்னர்தான். மக்கா நகரத்து குரைஷியர்களால் முஹம்மது மற்றும் அவரது அடியார்களின் உயிருக்கு மிகப்பெரும் அச்சுருத்தல் ஏற்பட்டதாலேயே ஹிஜ்ரத் நிகழ்ததென்றும், அவர்களுக்கு பதிலடிகொடுக்கவே வேறுவழியின்றி தாக்குதல்களும், சூறையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதாக கூறும் அதேவேளையில், அல்லாஹ்வின் அறிவுறுத்தல் அல்லது ஆணை காரணமாகவே முஹம்மதுவும், அவரது சீடர் குலாமும், தங்களது தாயகமான மக்கா நகரை பிரிந்து செல்ல நேர்ந்தது என்று முரண்பாடகவும் கூறுவார்கள்.
இஸ்லாமியர்களின் கூற்றுப்படி, முஹம்மதிற்கு ஆதரவாக இருந்த அபூதாலிப், சீமாட்டி கதீஜா ஆகியோரின் மரணத்திற்குப்பிறகு அவரது வாழ்க்கையும், பொருளாதார நிலைமையும் கேள்விகுறியாகிறது. இன்றைய ரூபாய் மதிப்பில் சுமார் 264 ஆயிரம் கோடி மதிப்புடைய சீமாட்டி கதீஜாவின் செல்வம் முழுவதையும் இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்து ஓட்டாண்டியாகிவிடுகிறார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதுவைப்பற்றி வர்ணனை செய்யும் பொழுது அவர் குறைஷிகளின் கூட்டத்திலேயே மிகச்சிறந்த பண்பாளர், நம்பிக்கையாளர்அல்அமீன்என்றெல்லாம் கதையளப்பார்கள். ஆனால் குர்ஆனோ முஹம்மதிற்கு, குறைஷிகளிடையே அப்படியொன்றும் மகத்தான மரியாதை இருந்ததில்லை என்கிறது.
"இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுகின்றனர்.
(குர் ஆன் 43:31)
தங்களது கடவுளர்களை தரக்குறைவாக ஏசுகிறார் என்ற முறையில் முஹம்மதின் மீது மக்கத்து குறைஷிகளுக்கு கோபமிருந்திருக்கிறது அதை அபூதலிப்பிடம் தெரிவித்திருந்தனர். அபூதாலிபின் மரணத்திற்குப் பிறகு மக்காவில், முஹம்மதின் உயிருக்கு அச்சுருத்தல் இருந்ததா? முஹம்மது தரப்பில் முன்வைக்கப்படும் ஹதீஸ்களில் இரண்டைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், (பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படுபாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள் அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்...
(புகாரி 520)
ஃபாத்திமா மட்டும் அங்கு வரவில்லையென்றால் மூச்சுதிணறி முஹம்மது இறந்திருப்பார் என்று கண்ணீர்மல்க மதப்பரப்புரை செய்வதை நீங்கள் அறிவீர்கள். மற்றொரு ஹதீஸையும் பார்ப்போம்.
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது? என்று நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஒரு முறை மக்காவில்) உக்பா பின் அபீ முஐத் என்பவன், நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களுடைய கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை நான் பார்த்தேன்...
(புகாரி 3678)
அபூதாலிப், மற்றும் சீமாட்டி கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு, மக்கத்து குரைஷிகளால் முஹம்மதின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் இருந்ததெனக் கூறிக்கொள்வது அல்லாஹ்விற்கும், குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் எதிரானது. ஏனெனில் முஹம்மது, அல்லாஹ்வின் உயர்மட்ட பாதுகாப்பிலிருப்பவர்.  முஹம்மதிற்கு எதிராக சூழ்ச்சி செய்வதைக்கூட அனுமதிக்க முடியாதென்கிறது குர்ஆன்.       
எனவே, நிச்சயமாக அவன், அவருக்கு முன்னாலும், அவருக்குப் பின்னாலும் பாதுகாவலரை நடத்துகிறான்
(குர் ஆன் 72:27)
தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்; அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்; அல்லது தமது காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே அவர்களை அவன் பிடிப்பான்..
 (குர்ஆன் 16:45)
அபூதாலிப் அல்லது கதீஜா இருந்தாலும் இல்லையென்றாலும் அல்லாஹ்விவின் பாதுகாப்பில் எந்த மாற்றமும் இருக்க முடியாதல்லவா? ஆனால் இவர்களோ முஹம்மதிற்கு எதிராக, குறைஷிகள் கடுமையான தொல்லைகள் விளைவித்ததாகவும், கொலைசெய்ய முயன்றதாகவும், கூறுவதன் மூலம் அல்லாஹ்வை கையாலாகாத கடவுளாக மாற்றிவிட்டனர். மக்காவில் முஹம்மதிற்கு,  அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றி ஹதீஸ் கூறுவதைப் பாருங்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?'' என்று கேட்டான். அப்போது "ஆம்' என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்'' என்று சொன்னான்.
அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்'' என்று சொன்னான்.
(இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
(முஸ்லீம்)
இங்கு, முஹம்மதைத் தாக்கும் நோக்கில், அபூஜஹ்லால், நெருங்கக்கூட முடியவில்லை, மீறி நெருங்கியிருந்தால் அவனது உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்களாம். இதே அபூஜஹ்லும் அவரது நண்பர்களும் ஒட்டகத்தின் கருப்பை சவ்வுகளை முஹம்மதின் தோள்மீது இட்டபொழுதும், உக்பா பின் அபீமுஐத் போர்வையால் மூச்சு திணறுமளவிற்கு முஹம்மதின் கழுத்தை நெரித்த பொழுதும் எதுவும் நிகழவில்லை. பாதுகாப்பிற்காக அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மலக்கு எங்கே போனது? அவர்களது உடல் உறுப்புகள் பிய்த்தெடுக்கப்படவில்லையே ஏன்? இதற்கான பதிலை இஸ்லாமியர்கள்தான் கூறவேண்டும். (அல்லாஹ்வின் நாட்டம் அல்லது திட்டப்படியே முஹம்மது யஸ்ரிப்(மதீனா) சென்றார் என்பதுதான் அவர்களது பதில்!)
சரி..! இப்படியொரு படுபயங்கரமான(!?) வானவர்களின் பாதுகாப்பு இருக்கையில், மக்காவை விட்டு எதற்காக ஓடவேண்டும்? மதீனாவாசிகளிடன் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும்? அல்லது  இதே வானவர்கள் மதீனாவிற்கு வந்து பாதுகாக்கமாட்டாரா? ஹிஜ்ரத்தின் அவசியம்தான் என்ன? தனது ஏற்பாடுகளின் மீது அல்லாஹ்விற்கே நம்பிக்கையில்லையா?, அல்லது மலக்குகள் மனிதர்களைவிட மிகபலவீனமானவர்களா?.
ஹிஜ்ரத்திற்கு காரணம் என்னவென்று இப்படி மண்டை பிய்த்துக் கொள்ளவேண்டியதில்லை. மதீனாவில் தனக்கு ஆதரவு பெருகியிருப்பதாக முஹம்மது கருதினார் அதனால் மதீனா சென்றுவிட்டார் அவ்வளவுதான்.
முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூரென்று அறிவித்துக் கொண்ட பத்தாம் ஆண்டில் தனது கொள்கைகளை மக்கா நகருக்கு வெளியிலிருப்பவர்களுக்கும் கூறத்துவங்குகிறார். ஹஜ்ஜின் காலம் துவங்கியவுடன் கஅபாவை வணங்க வந்த யஸ்ரிப்வாசிகளிடமும் தனது மதவியாபாரத்தை செய்கிறார். அது அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது. அதன் பயனாக தனது விற்பனைப் பிரதிநிதிகளை யஸ்ரிப் என்ற மதீனாவில் நியமித்து வியாபாரத்தை வளர்த்தெடுக்கிறார். இந்நிலையில் கல்வியறிவு இல்லாத யஸ்ரிப்(மதீனா)வாசிகளுடன் அகபாவில் ரகசியமாக சந்தித்து இரண்டுமுறை ஒப்பந்தங்களையும் செய்துகொள்கிறார்.
முதல் ஒப்பந்தத்தில், தன்னைப் பற்றிய செய்தியை யஸ்ரிப்பில் பரப்ப ஏற்பாடு செய்கிறார். இதன் பயனாக முஹம்மதை ஏற்றுக் கொண்டவர்களுடன் இரண்டாம் ஒப்பந்தமும் ஏற்படுகிறது. இப்னு அப்பாஸ் அப்துல் முத்தலிப், முஹம்மதின் சார்பாக பேசுகிறார்.
கஸ்ரஜ் கூட்டத்தினரே! முஹம்மது எங்கள் மக்களிடம் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் இருக்கிறார். எனினும் அவர் உங்களுடன் இணைந்துவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். அவரது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவதாக இருந்தால் நீங்கள் அழைத்துச் செல்லலாம்என்றார். கஅப் என்பவர் மதீனாவாசிகளின் சார்பாக உறுதிமொழி அளிக்கிறார்.
(இப்ன் ஹிஷாம்)
“O people of al-khazraj (the Arabs used the term to cover both Khazraj and Aus). You know what position Muhammad hold among us. We have protected him from our own people who think as we do about him. He lives in honour and safety among his people, but he will turn to you and join you. If you think that you can be faithful to what you have promised him and protect him from his opponents, then assume the burden you have undertaken. But if you think that you will betray and abandon him after he has gone out with you, then leave him now. For he is safe where he is.” …
(Page 203, Life of Muhammad a Translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah By A.Guillaume)
மக்காவில் முஹம்மது,  தக்க பாதுகாப்புடன்தான் இருந்திருக்கிறார், அவராது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாகவே மதீனா செல்கிறார் என்பதை கவனிக்கவேண்டும். ஆனால், முஹம்மது ஹிஜ்ரத் செய்ததற்கு, அல்லாஹ் கூறும் காரணங்களை கவனித்துப் பாருங்கள்,
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?
(குர்ஆன் 9:13)
மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களுக்குப் புகலிடம் அளித்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.
(குர் ஆன் 8:26)
முஹம்மதை குறைஷிகள் என்ன செய்தனர் என்பதில் அல்லாஹ்வினால் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை போலும்!. மேலும் ஹிஜ்ரத்தின் பொழுது மக்காவில் 70-80 பேர்களே முஹம்மதை ஏற்றிருந்தனர்.
உம்மைப் பிடித்து வைத்துக் கொள்ளவோ, உம்மைக் கொலை செய்யவோ, உம்மை வெளியேற்றவோ  மறுப்போர் சூழ்ச்சி செய்ததை எண்ணிப் பார்ப்பீராக! அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்.
(குர்ஆன் 8:30)
1.     மக்காவாசிகள் முஹம்மதை பிடித்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்தனர்,
2.     மக்காவாசிகள் முஹம்மதை கொலை செய்ய சூழ்ச்சி செய்தனர்,
3.     மக்காவாசிகள் முஹம்மதை மக்காவிலிருந்து வெளியேற்ற சூழ்ச்சி செய்தனர்.
அல்லாஹ் கூறும் இந்த மூன்று காரணங்களும் ஒன்றுக்கொன்று முரணானவைகள்.
1.     முஹம்மதை, மக்காவிலிருந்து வெளியேற்ற விரும்புபவர்கள், அவரை எதற்காக பிடித்து வைக்க வேண்டும்?
2.     முஹம்மது தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக பிடித்துவைக்க சூழ்ச்சி செய்பவர்கள், எதற்காக  அவரைக் கொல்வதற்காக சூழ்ச்சி செய்ய வேண்டும்?
3.     முஹம்மதை கொல்ல சூழ்ச்சி செய்பவர்கள், ஊரைவிட்டு எதற்காக வெளியேற்ற சூழ்ச்சி செய்ய வேண்டும்?
இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறானாம்! சர்வவல்லமையுடையதாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்விற்கு, மக்காவில் புகலிடம் அளிக்கவோ, பலப்படுத்தவோ முடியவில்லை. இதை அல்லாஹ்வின் இயலாமை என்று கூறுவதே சரியானது. இதனால்தான் அல்லாஹின் திட்டப்படியே முஹம்மது மதீனா சென்றார் என்றொரு சமாளிப்பை கூறுகின்றனர். அல்லாஹ் அளித்ததாக  கூறிக்கொள்ளும் தூய்மையானவைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும், இருப்பினும் அடுத்துவரும் பதிவுகளில் அதைப்பற்றி பார்க்கலாம். உண்மையில், முஹம்மதின் ஆதரவாளர்கள் அனைவருமே ஹிஜ்ரத் செய்வதை விரும்பினர் என்று கூறுவதற்கில்லை, அவர்களில் சிலருக்கேனும் விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும், ஹிஜ்ரத் செய்வதற்காக எப்படியெல்லாம், கெஞ்சுகிறான், மிரட்டுகிறான் என்பதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
(குர் ஆன் 8:72)
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான புகலிடங்களையும், வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால் அவருக்குரிய கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்.
(குர் ஆன் 4:100)
.. உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பியதற்காக இத்தூதரையும், உங்களையும் (ஊரை விட்டு) அவர்கள் வெளியேற்றினார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பைச் செலுத்துகிறீர்கள். நீங்கள் பகிரங்கப்படுத்தியதையும், மறைத்ததையும் நான் நன்கு அறிபவன். உங்களில் இதைச் செய்பவர் நேர்வழி தவறி விட்டார்.
(குர் ஆன் 60:1)
மக்காவாசிகளின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதைக்கூட எல்லாம் வல்ல அல்லாஹ்வால் தெளிபடக் கூறமுடியவில்லை. முன்னுக்குபின் முரணாக ஏதேதோ உளறுகிறான். தங்களை அடித்து விரட்டியவர்களிடம் எவனாவது இரகசியமாக அன்பைச் செலுத்துவானா? இருக்க முடியாது! அப்படியெனில் விரட்டப்பட்டதாகக் கூறுவது பொய்! குறைஷிகள் மக்காவைவிட்டு வெளியேறுபவர்களைத் தடுக்க முயன்றனர் என்பதே மெய்! ஹுதைபியா ஒப்பந்தத்திலும்கூட குறைஷிகள், தங்கள் தரப்பிலிருந்து முஹம்மதிடம் வருபவர்களை திருப்பி தங்களிடமே அனுப்பிட வேண்டுமென்ற நிபந்தனை விதித்தனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
முஹம்மதின் சீடர்களில் பெரும்பாலும், அடிமைகளும், போக்கிரித்தனமாக ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த சில இளைஞர்களுமே! அரேபியர்கள், அடிமைகளைத் தங்களது உடமைகளாகவே கருதிவந்தனர். உதாரணத்திற்கு, உங்களுக்குச் சொந்தமான கால்நடைகளை பகிரங்கமாக கவர்ந்து செல்லப்படுவதை நீங்கள் அனுமதிப்பீர்களா? நிச்சயமாக இல்லை!  குறைஷிகள் அதையே செய்தனர்.
 முஹம்மதின் மக்கா வாழ்க்கையில் யூதர்கள் இடம்பெறவில்லை, எனவே பழி குறைஷிகளின் தலையில் போடப்பட்டது. இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது முஹம்மதிற்காக பரிந்து பேசிய அவரது பெரிய தந்தை இப்ன் அப்பாஸ், முஹம்மதையும், அவரது கூட்டத்தினரையும் அழிக்க அபூஜஹ்லுடன் இணைந்து பத்ருகளத்திற்கு வந்து,  முஹம்மதிடம் கைதியாக மாட்டிக்கொண்டதுதான் (முஹம்மதின் கதை, மிகவும் பலவீனமான திரைக்கதை! முன்னாள் சென்றால் கடிக்கிறது பின்னால் சென்றால் உதைக்கிறது)
முஹம்மதியர்களிடம், ஹதீஸ்கள் ஏன் இவ்வளவு கேணத்தனமாக, முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது என்றால் அது யூதர்களின் சதி என்பார்கள். சில வாரங்களுக்கு முன், இஸ்லாமிய அறிஞர்கள் சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, ”கற்றறிந்த உங்களைப் போன்ற ஆலீம்களே குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் பலவிதமாக குழப்பமாக பொருள் கூறிக்கொள்வது  ஏன்?” என்றேன். அதற்கு ஒரு ஆலீம் கூறினார், “இஸ்ரேலில், குர்ஆன், மற்றும் ஹதீஸ்களை தீவிரமாக ஆய்வு செய்வதற்கென்றே தனித்துறை ஒன்று செயல்படுகிறது. அங்கு நடைபெறும் மிக முக்கியமான பணி என்னவெனில், குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் தவறான, குதர்க்கமான பொருளையும், அதை முஸ்லீம்கள் மத்தியில் கூறும் போலி ஆலீம்களை உருவாக்கி, உலகம் முழுவதிலும் பரவச்செய்து குழப்பத்தை உருவாக்கி இஸ்லாமை அழிப்பதுதான் யூதர்களின் நோக்கம்என்றார்.
நான், ”நமது ஆலீம்களான ஜாகீர் நாயக், பீஜே, அப்துல்லா ஜமாலி, சம்ஸுதீன் காஸிமி, Dr.K.V.S. ஹபீப் முஹம்மது போன்றவர்களும் அந்த யூதர்களின் மதரஸாவில் படித்தவர்களோ?” என்றபொழுது அந்த ஆலீமின் முகத்தில் தெறித்த எரிச்சலை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்! கருத்து சொன்னால் கேட்கவேண்டும் ஆராயக்கூடாது. இதுதான் இஸ்லாம்!
 இவர்கள் இப்படியே தொடந்தால், இமாம்கள் அபூஅப்தில்லாஹ், அல்ஹஜ்ஜாஜ் போன்றவர்களின் வேடத்தில்கூட யூதர்கள் வந்தனர் என்று விரைவில் கூறிவிடுவார்கள் என்று நம்பலாம். அல்லாஹ்வின் மற்றொரு வஹீயான ஹதீஸ்களில் விதவிதமாக கைவரிசையை காட்டிய யூதர்கள், குர்ஆனை விட்டு வைத்திருப்பார்களா? நாம் ஹிஜ்ரத்தை தொடர்வோம்.
இவ்வாறாக யஸ்ரிப்(மதீனா)வாசிகள் தங்களது உயிரைகொடுத்து பாதுகாப்போம் என்று உறுதிமொழியளித்த பின்னர், தனக்குத் தக்கபாதுகாப்பு கிடைக்கும் என்று தெளிவடைந்த பிறகுதான் முஹம்மதிற்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ்(!)விடமிருந்தும் அனுமதி வருகிறது. (இல்லாத) அல்லாஹ் எப்படியும் தன்னை பாதுகாப்பான் என்று குருட்டுத்தனமாக முடிவெடுத்து ஓடுவதற்கு அவரென்ன அப்பாவி முஹாஜிரா?
இல்லாத எதிரியைக் கண்டு அஞ்சி நடுங்கிய முஹம்மது, ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு, கிபி 622 செப்டம்பர் 12ல் தனது நண்பர் மூளைசெத்துப்போன அபூபக்கர் துணையுடன் வீட்டிலிருந்து வெளியேறி கிபி 622 செப்டம்பர் 23ல் குபா சென்றடைந்தார். மதீனா வந்த பிறகும் முஹம்மதின் அச்சம் தீரவில்லை தனது கூடாரத்தை பாதுகாக்க இரவுநேர காவலுக்கும் ஏற்பாடுசெய்து கொள்கிறார். மலக்குகளின் பாதுகாப்பு என்னவாயிற்று? என்று குறுக்கு கேள்விகள் கேட்கக்கூடாது!

தஜ்ஜால்