Sunday 27 October 2019

கொலைகார மதங்கள்-2

அடுத்தடுத்த பணிச் சுமைகளால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நீ...ஈஈஈண்ட... இடைவெளிக்கு மீண்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட, கேரளாவின் திரூர் பகுதியைச் சேர்ந்த ஃபைசலின் கதைக்குச் செல்வோம்.
ஃபைசலின் குடும்பத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகம் எதற்காக உதவ வேண்டும்?
விபின் - வயது 30. தினக்கூலி தொழிலாளி; திரூர் பகுதி சங்பரிவாரத்தின் முக்கிய நபர்; RSS அமைப்பின் ஒரு முக்கிய செயல்பாட்டாளர். ஆகஸ்ட் 24, 2017, காலை 7 மணிக்கு அவர் வீட்டிலிருந்து தனது அன்றாட அலுவல்களைக் கவனிக்க வெளியில் சென்றவர், சிறிது நேரத்தில் அதாவது அன்று காலை சுமார் 7.30 திருப்பனங்காடு பஞ்சாயத்து BP அங்காடியின் சாலை ஓரத்தில், ஆழமான வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டு, திரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவிக்கிறது. அவர் மீது நிகழ்தப்பட்ட கொலைத் தாக்குதல்  நிகழ்ந்த இடம் அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் மட்டுமே இருக்கும் என்கின்றனர்.
விசாரணையில் SDPIக்கு இக்கொலையில் தொடர்பிருப்பதாகவும், சுமார் ஆறு நபர் கொண்ட கும்பல் இதில் ஈடுபபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் காவல் தரப்பு கூறியது. கடந்த 2018 பிப்ரவரி 22ம் தேதி கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் அப்துல் லத்தீஃப் என்பவர் பெருந்தல்மன்னா பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். நாம் இக்கொலைகளின் பின்னணிகளைப் பார்க்கலாம்.
சரி, விபினுக்கும் SDPIக்கும் என்ன பகைமை?
அனில்குமார் (வயது 30) சவுதி அரேபியா-ரியாத்தில் பணி புரிந்து
கொண்டிருந்தவர். அங்கு முஹம்மதிய போதனைகளால் ஈர்க்கப்பட்டு, மதம் மாறி தனது பெயரை ஃபைசல் என்றும் மாற்றிக் கொள்கிறார். ஆண்டு விடுமுறையில் 2016 ஆகஸ்ட் மாதம் திரூர் திரும்புகிறார். தனது குடும்பம் மற்றும் உறவினர்களிடமும் முஹம்மதியத்தின் அருமை பெருமைகளையும் குர்ஆனின் மகத்துவத்தையும்  கூறி பரப்புரைகளிலும் ஈடுபடுவதுடன், குடும்பத்தினருக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கவும் செய்கிறார். இப்படி மதம் மாறுவது ஃபைசலின் குடும்பத்தினருக்கு புதிதல்ல காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே நகரில் வசித்து வரும் அவரது உறவினரும் தனது குடும்பத்துடன் முஹம்மதிய மதத்தைத் தழுவியுள்ளார்.
ஃபைசலுக்கு அவரது சகோதரியின் கணவர் வினோத்தின் உருவத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றத்தை, முஹம்மதிய மதப் பரவலைத் தடுப்பதாகக் கூறி உள்ளூர் RSS-சங்பரிவார் கூட்டமும் களத்தில் குதித்ததுஃபைசல் என்ற அனில்குமாரிடம் இந்து தர்மத்தின் அருமை பெருமைகளைக்கூறி  திரும்பவும் தாய் மதம் திரும்புமாறு வலியுறுத்தியதுடன் தவறும்பட்சத்தில் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல்களையும் விடுகிறது. அவர்களது மிரட்டல்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஃபைசல் தனது குடும்பத்தினரிடம் பரப்புரையில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுகிறார். விடுமுறை முடிவதற்கு சில நாட்கள் இருக்கையில், அவரது  மனைவி ப்ரியா, பத்து வயதிற்கு உட்பட்ட அவரது மூன்று குழந்தைகளும் முஹம்மதியத்தை ஏற்கின்றனர்இது இப்படியே தொடர்ந்தால் மேலும் குடும்ப உறுப்பினர்கள் பலர் முஹம்மதியத்திற்கு மாறிவிடும் அபாயமிருப்பதாக ஃபைசலின் மைத்துனர் வினோத் அச்சம் கொள்கிறார்.

2016 நவம்பர் 19ம் தேதி, ஃபைசல் சவுதி அரேபியா திரும்பிச் செல்வதற்கு முந்தைய தினம், அவரது உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக தனது வீட்டிலிருந்து தானூர் இரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் 16 பேர் கொண்ட சங்பரிவார கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை நிகழ்ந்த இடத்திற்கும் ஃபைசலின் வீட்டிற்கும் சுமார் 500மீட்டர் தொலைவுதான் இருக்கும் என்கிறனர். முஹம்மதியர்களின் கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முக்கியக் குற்றவாளிகளாக ஃபைசலின் மைத்துனர் வினோத், திரூர் பகுதி RSSன் முக்கிய பிரமுகர்களான மததில் நாராயணன்(47), விபின் (30) உட்பட 16  BJP/RSS உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. இதில் மததில் நாராயணன் 1998ம் ஆண்டு இதேபோல மதம் மாறிய யாஸீர் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர் என்பதும் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் விபின் நிபந்தனை பிணையில் வெளிவந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபைசலின் மதமாற்றம் நீண்ட காலமாக முஹம்மதிய மதத்தைப்பற்றி படித்து முழுவதுமாக அறிந்துகொண்டு யாருடைய வற்புறுத்தலுமின்றி, முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நிகழ்ந்ததாக, அவரது தந்தை, அனந்தக்கிருஷ்னன் கூறுகிறார்ஃபைசலின் மரணத்திற்குப் பிறகு அவரது தாய் மீனாக்ஷி, தந்தை அனந்தக்கிருஷ்னன், சகோதரிகள் இருவர், மற்றொரு மைத்துனர் என 13 பேரும் முஹம்மதியத்தைத் தழுவிவிட்டனர்.
ஃபைசல்(அனில்குமார்), விபின், வினோத், நாராயணன், அப்துல் லத்தீப் இவர்களுக்குள் தனிப்பட்டமுறையில் எந்தவிதமான பகைமையும் இல்லை மத நம்பிக்கைகளைத் தவிர!
தனிப்பட்ட மனிதர்களின் செயல்களுக்கு மதத்தை எப்படி குறைகூற முடியும், முஹம்மதிய மதம்தான் வன்முறையை போதிக்கிறது ஆனால் எங்களது இந்து மதம் அப்படியில்லை அது அன்பின் மறு உருவம் என்றும் சிலர் வரலாம். அடிப்படையில் இத்தகைய வாதேமே முரண்பாடனது. விவாதமுறையில் இத்தகைய கோரிக்கையை No true Scotsman fallacy என்பார்கள். மேலும் இவைகளை நாம் தனிநபர்களின் குற்றச் செயல்களாகக் காணமுடியாது. ஏனெனில் அதற்கான தரவுகள் எதுமில்லை. மாறாக மதவெறி மட்டுமே இவ்விவகாரங்களில் முதன்மைப்படுகிறது. உதாரணத்திற்கு, அண்மையில் சற்றேறக் குறைய வட இந்தியா முழுக்க சங்பரிவார கும்பல்களால் பரவ விடப்பட்ட மாட்டு மதவெறியை மட்டும் கவனிப்போம்.
பசு மாட்டை வைத்து வன்முறையில் இறங்குவது கலகம் செய்வது இந்தமதவெறியர்களுக்கு புதிதல்ல! இதன் துவக்கப்புள்ளி பள்ளிகூட வரலாற்று புத்தகங்களில் இன்றும் கூட புல்லரிக்க கற்பித்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் CE1857-ல் நிகழ்ந்த சிப்பாய் கலகம்தான். இது பின்னாளில், பாலகங்காதர திலகன் போன்ற இந்துமத மதவெறியர்களால் தேசபக்தி என்ற பெயரில் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. நான் இவ்வாறு குறிப்பிடுவதால் பசுப் பாதுகாவலர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் என் மீது கோபம் வரலாம். அவர்களுக்காக பாலகங்காதர திலகனைப்பற்றி இன்னொன்றையும் குறிப்பிடுகிறேன். 1890-ல் புலமணி பாய் என்ற பதினோரு வயது சிறுமி தன்னைவிட வயதில் மிகவும் முதிர்ந்த அவரது கணவரால் உடலுறவு கொள்ளப்படும் பொழுது இறந்து போகிறார். CE1891-ல் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு, பெண்களின் திருமணவயதை 10லிருந்து 12 ஆக உயர்த்த சட்டம் கொண்டுவர முயன்றது; அப்பொழுது அதை எதிர்த்துக் குரல் கொடுத்த பாலகங்காதர திலகன், ஆளும் ஆங்கிலேய-கிருஸ்தவ அரசாங்கத்திற்கு இந்துமத உரிமைகளில் தலையிட அதிகாரமில்லை என்றார். பாலகங்காதர திலகனை இவ்வாறு பேசவைத்தது பெண்கள் பருவமடைந்தவுடனேயே திருமணம் செய்து கொடுத்திட வேண்டுமென்ற மத சாஸ்திரங்களால் ஊட்டப்பட்ட வெறியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
அவர் தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் 1880-1890களில் தேசபக்தி என்ற பெயரில் இந்து மதவெறியை மாற்று நம்பிக்கையுடையவர்களுக்கு எதிராக குறிப்பாக முஹம்மதியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். முஹம்மதியர்களின் முஹ்ரம் ஊர்வலங்களுக்கு எதிராக, வீடுகளுக்குள்ளிருந்த விநாயகன் வழிபாட்டை வீதிகளுக்குக் கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்ல, 1893-ல் பக்ரீத் பண்டிகையின் பொழுது மாடுகளை அறுத்ததாகக் கூறி ஏற்பட்ட கலவரத்தில், இந்த பசுப் பாதுகாவலர்களால் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் நிகழ்ந்த கலவரத்தில் பாலகங்காதர திலகனின் பங்கை மறுக்க முடியாது. பின்னர் இது 1909, 1911, 1912, 1916, 1917, 1928, 1966, 2002, 2010, 2012, 2014, 2015, 2016, 2017 என ஒவ்வொரு ஆண்டும் தொடர்நிகழ்வானது. மாடுகளைப் பாதுகாப்பதாகக்கூறி மனிதர்களைப் பலியிட்டனர். சங்பரிவார குழுக்கள் அதிகாரத்திற்கு வந்தபின், 2015ம் ஆண்டு ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியானா, குஜராத், கர்நாடகா என பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களிலும் பசுப் பாதுகாவலர்கள் என்ற இந்துமத வெறியர்களும், அவர்கள் ஆதரவு அரசுகளும் முஹம்மதியர்கள் மற்றும் தலித் மக்கள் மீதும் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
பாலகங்காதர திலகனின் செயலை அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டே காணவேண்டுமென்று சிலர் கூறுகின்றனர்.
அப்படியென்ன சூழல்-தேவை?
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சூழல்; அதற்கெதிராக மக்களைத் திரட்டும் தேவை! (சில) முஹம்மதியர்களுக்கும் அன்றைய அரசாங்கத்திற்கும் இடையிலிருந்த நல்லுறவு, பாலகங்காதர திலகனை முஸ்லீம்களுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியதென்கின்றனர்.
அவ்வறெனில், தேபக்தி என்ற பெயரில் ஹிட்லர் நிகழ்த்திய வெறியாட்டங்கள் சரியானதே! தேசபக்தி என்ற பெயரில் இன்றும் சங்பரிவார கும்பல் செய்யல்படுத்தும் பல செயல்களையும் நாம் சரிகாண நேரிடும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் அன்றைய முஹம்மதியர்களில் சிலர் கொண்டிருந்த நல்லுறவே பாலகங்காதரனை முஹம்மதியர்களுக்கெதிராக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியதெனில், காலம்காலமாக ஆட்சியாளர்களுடன் மட்டுமே நெருக்கமாக உறவுபாரட்டிவரும் பிராமணர்களுக்கு எதிராக நம்முடைய பாலகங்காதரனுக்கு ஏன் கோபம் வரவில்லை?
பள்ளி மாணவனாக இருந்த பாலகங்காதரனிடம், பள்ளிவளாக தரையில் குப்பையாக சிதறிக்கிடந்த வேர்க்கடலையின் தோல்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்ட ஆசிரியரிடம், ”அவற்றை நான் எறியவில்லை; என்னால் அதை சுத்தப்படுத்த முடியாதுஎன்று வீரமாக மறுமொழி கூறியதாக பெருமையாகக் கூறுவர். ஆனால் இன்று விநாயக சதுர்த்தி என்ற பெயரில் (சமுதாயத்) தெருவெங்கும் அவர் வீசியெறிந்த (வன்முறைக்) குப்பைகளை நீக்கப் போவது யார்?
எனது நோக்கம் பாலகங்காதரனை விமர்சிப்பதல்ல ஆனால் சமுதாய அமைதியைக் குலைக்கும் செயல்களின் ஆணிவேர்களை அடையாளம் காண வேண்டியதும் நமது கடமையாகும்.
++++++++++++++++++++++

Facebook Comments

9 கருத்துரைகள்:

vara vijay said...

Welcome bro, nice article true to the meaning.

Dr.Anburaj said...

தவறு.முஸ்லீம்கள் அதிக எணணிக்கையில் இந்துக்களை மதம் மாற்றி இங்கு அரேபிய காலிபேட்டை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.இது உருவானால் எங்கள் சகோதரிகள் எல்லாம் முஸ்லீம்களுக்க குமுஸ் வைப்பாட்டிகளாகதான் வாழ வேண்டும். மதம் மாறுவதை தடை செய்ய வேண்டும்.மனிதனுக்கு தன்னுடைய ஆன்மீக தாகத்தை தீர்க்கும் வழிமறைகளை பின்பற்றிக் கொள்ள அனுமதி சுதந்திரம் உள்ளது.அரேபியாவில் சில நல்ல கருத்துக்கள் இருந்தால் இந்துவாக இருந்தேஅந்த கருத்துக்களை பின்பற்றலாமே.ஏன் குழு கூட்டம் மாற வேண்டும்.மாப்பளா கலவலங்கள் காரணம் எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது இந்தக்கள்தாம். இந்துக்கள் ஒரு unorganised society.எனவே மதமாற்ற்ங்களை தடுத்தே தீர வேண்டும்.ஈராக்கில் எஸ்டி இனப் பெண்கள் 10000 பேர்களை இசுலாமிய தேச காடையர்கள் கடத்தி கொண்டு சென்று தங்கள் ராணுவ முகாம் களில் வேசியாக வைத்துள்ளாா்கள் என்ற செய்தி தாங்கள் அறிந்ததுதான். அரேபிய மத மாற்றம் என்பது எவ்வளவு கொடுமையானது என்பது தங்களக்கு விளங்கும் என்ற நினைக்கின்றேன். இந்து ஒருவன் மதம் மாறித்தொலைந்தால் இந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைகிறது. இந்துக்களின் எதிரிகளின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது.இசுலாம் மதத்தை துறந்தவனை கலிபா உமா் கொலை செய்தாா். மஹம்மது காலத்தில் கூட இது நடந்தது என்று நினைக்கின்றேன். அதுபோல் இந்துமதத்தை துறந்தவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.நாங்கள் என்ன செய்வது ? அரேபிய சிந்தனை இந்துக்களை கெடுத்துள்ளது அதுதான் உண்மை.

Dr.Anburaj said...

பஸ்ரா நாட்டின் ஆளுநா் ஹஜ்ரத் அபுமுசாவின் தூதா் ஹஜரத் உமா் அவர்களிடம் வந்தாா்கள்.பதிய செய்தி உள்ளதா என்று கேட்ட கலிபாவிடம் ஆம் முஸ்லீமான ஒருவா் காபீராகி விட்டாா் என்றாா். உமா் ” நீங்கள் அவரை என்ன செய்தீர்கள் என்றாா் .அதற்கு அவர் நாங்கள் அவரிடம் முஸ்லீம்மாக மாற கேட்டோம்.மறுத்ததனால் கொன்று விட்டோம் என்றாா்.

ஆதாரம்.தமிழ் ஹிந்து பத்திரிகையில் ரமலான் சிந்தனைகள் என்று வெளியான கட்டுரை நாள்.June 12, 2017.

Dr.Anburaj said...


ஹிந்தியாவில் இப்படி யாரையும் கொலை செய்யவில்லை.இசுலாம் மதத்தை துறந்தால் கொலை என்பது கொள்கை முடிவு.முஹம்மதுகாலத்தில் அவரது வஹியை எழுதியவருக்கும் முஹம்மதுவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் இசுலாத்தை துறந்தாா்.அவரும் கொலை செய்யப்பட்டாா்.

மதச்சண்டைகள் சைவம் -வைணவம் -சமணம் - பௌத்தம் என்று இருந்தது உண்மை. சில காலங்களில் இந்த சண்டைகள் வீரியம் இழந்துபோக வைக்கப்பட்டு விட்டது. இன்றும் கோவில்களில் இருக்கும் பணம் சில பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. இந்துக்களுக்கு முறையான சமய கல்வி கிடைக்கவில்லை.அமா்ந்து இருந்து வழிபாடு செய்ய அனைத்து இந்துக்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். புதிய கருத்துக்கள் புதிய சிந்தனைகள் புதிய முறைகள் வெளியாக தடை இந்து சமயத்தில் இல்லை.

Dr.Anburaj said...

பாலகங்காதர திலகரை திட்டுவதை விட்டு விட்டு ஸ்ரீநாராயணகுரு சுவாமி விவேகானந்தா் சாவித்திரி புலே போன்றவர்கள் குறித்து எழுதலாம்.

Anonymous said...

@Dr Anburaj - The point conveyed is that all religions have this tendency to get violent. While it is can be argued that Muslims have the propensity to get violent, in this case it was clearly the Hindus who got out of hand. Faizal/Arun Kumar studied the religion, was convinced of its truthfulness and converted. The right thing to do would have been to point out errors in the religion and its shortcomings/intolerance etc. But instead of doing that, they resorted to murder!

Also, why should the author not point out the non-nonsensical things said/done by Tilak? I think he was more constrained in pointing out his blabber than was necessary. Curiously behavior like yours is something I find in many atheist sites - obviously the author's family/religion will have a bearing on the topics and I see Christians rubbing their hands with glee when Islam/Hinduism/etc are being disproved, Muslims when Christianity/Hinduism and similarly Hindus - all without realizing those very same arguments apply to their own religion! This is a blog for irreligion - just that the original author happens to be a Muslim (I presume). This is not a blog to glorify Hinduism and bashing Islam - if that's what you had come here for - sorry for your disappointment.

Anonymous said...

Clarification: I mean the religion author was born into was Islam (I Presume)

Dr.Anburaj said...

உலகமெங்கும் ஒரே குர்ஆன் என்ற வாதம் உடைக்கப்படுகிறது ..
ஒரு இஸ்லாமிய அழைப்பாளர் இன்று காலை என்னோடு கைப்பேசியில் தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டார். அது உங்கள் பார்வைக்கு.....
* இந்த வீடியோவை பொருத்தமட்டில், இப்னு மஸ்வூத் என்பவரைப் பற்றி மட்டுமே பார்போம். ”கடைசிவரை” என்று பீஜே குறிப்பிடுவது எதனை என்றுச் சொன்னால், இப்னு மஸ்வூத் மரிக்கும் வரை என்று பொருள். உஸ்மான், இவரிடமிருந்த குர்-ஆனை பரித்து எறித்துவிடுங்கள் என்று ஆணையிட்ட பிறகும் இவர் கொடுக்கவில்லை. பாவம் இவர், தன்னிடமிருந்த குர்-ஆனுக்காக உயிரை தியாம் செய்தார்.
* இவர்களிடமிருந்து குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது குறிப்பிட்ட நான்கு நபர்களில், இந்த இப்னு மஸ்வூத் என்பவர் முதலாவது வருபவர்[1]. மேலும், முஹம்மதுவிடம் இவர் 70க்கும் அதிகமான அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளாராம், அவ்வளவு முக்கியமானவர் இவர்.
* மிகவும் வயது முதிர்ந்த பெரியவராக இருந்த இவரை அடித்து இவரது குர்-ஆனை பரித்துக் கொண்டதாக இஸ்லாமிய சரித்திரம் கூறுகின்றது. தன் குர்-ஆனை கொடுக்காததால் தாக்கப்பட்ட இவர், அதே காயங்களால் சில நாட்களில் மரித்தாராம்.
* 40க்கும் அதிகமான குர்-ஆன்களை சஹாபாக்கள் வைத்திருந்தனர். அதாவது ஒவ்வொருவரிடம் இருக்கும் குர்-ஆன்கள் வசனத்துக்கு வசனம் ஒரே மாதிரியாக அப்போது இருந்ததில்லை. அத்தியாயங்களின் வரிசைகள், வசன எண்களைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.
* வசன எண்ணிக்கையில் வித்தியாசம், வார்த்தைகளில் வித்தியாசம், அத்தியாயங்களில் வித்தியாசங்கள் இருந்தன. இதனைத் தான் பீஜே அவர்கள் குறிப்பிட்டார்கள், “இப்னு மஸ்வூத்திடம் இரண்டு அத்தியாயங்கள் இல்லை”. இது மட்டுமல்ல இன்னொரு சஹாபாவிடம் இரண்டு ஸூராக்கள் அதிகமாக இருந்தன.
* இந்த குர்-ஆனை சஹாபாக்களாகிய நாங்கள் ஒருமித்து ஏற்றுக்கொள்கிறோம்” என்ற கருத்து ஒருமித்து உருவானதில்லை. இது தான் இஸ்லாமிய சரித்திரம் சொல்லும் விவரம், இதனை பீஜே அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
* உத்மான் அரசு பதவியில் இருந்தபடியினால் தான், இப்படிப்பட்ட குர்-ஆனை நாம் வைத்திருக்கிறோம், வேறு ஒரு நபர் ஆட்சியில் இருந்திருந்தால், இன்று நாம் வைத்திருக்கும் குர்-ஆன் வேறு ஒரு குர்-ஆனாக இருந்திருக்கும் என்று மறைமுகமாக பீஜே சொல்கிறார். ஒரு வேளை இப்னு மஸ்வூத் ஆட்சியில் இருந்திருந்தால்? இன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆனில் 112 அத்தியாயங்கள் மட்டுமே இருந்திருக்கும். [இதைத் தானே, நாங்களும் 10 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறோம், தமிழ் முஸ்லிம்களே].
முடிவுரை:
இவைகளை பார்க்கும் போது, ஒரு சின்ன திட்டம் கூட இல்லாமல் அல்லாஹ் தன் வேதத்தை உலகிற்கு அனுப்பியுள்ளான் என்று தெரிகின்றது. முஹம்மதுவின் உயிரை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, ஒரு புத்தகமாக குர்-ஆனை தொகுத்துவிட்டு, அதனை சரி பார்த்து ஒரு அதிகார பூர்வமான தொகுப்பை அல்லாஹ் கொடுத்திருந்தால், இஸ்லாமிய சரித்திரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும், இப்னு மஸ்வூத் தம் உயிரை தியாகம் செய்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. அவ்வளவு ஏன், ஷியா என்ற இஸ்லாமிய பிரிவு உருவாகியிருந்திருக்குமா? என்பது கூட சந்தேகமே. ஏன் அல்லாஹ் முஹம்மது உயிரோடு இருக்கும் போதே குர்-ஆனை தொகுக்கவில்லை? சரி, முஹம்மதுவிற்காகவாவது இந்த ஐடியா வந்ததா என்று பார்த்தால், அதுவும் இல்லை. கடைசியாக, சஹாபாக்களாவது முஹம்மதுவிற்கு சொல்லி இருக்கலாம் அல்லவா? முஹம்மதுவும் சஹாபாக்களும் குர்-ஆனை ஒரு புத்தகமாக தொகுப்பதைவிட இன்னொரு பெரிய வேலையில் பிஸீயாக இருந்திருக்கவேண்டும்.
முஸ்லிம்களே, உங்கள் கைகளில் தவழுவது அல்லாஹ் இறக்கிய குர்-ஆனா? அல்லது உஸ்மான் அதிகாரத்தில் இருந்தபடியினால் தொகுத்த குர்-ஆனா?
உஸ்மான் தொகுத்த குர்-ஆனை மஸ்வூத் ஏன் ஏற்க மறுத்தார்?
மஸ்வூதின் குர்-ஆனை உஸ்மான் ஏன் ஏற்க மறுத்தார்? அதனை கொளுத்தவேண்டும் என்று ஏன் உஸ்மான் விடாப்பிடியாக இருந்தார்?
மஸ்வூதுக்கு 113, 114 அத்தியாயங்கள் குர்-ஆனின் ஒரு பாகம் என்று தெரியாமல் போனது எப்படி?
அரைகுறை விவரங்கள் அறிந்திருந்த மஸ்வூத்திடமா குர்-ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று முஹம்மது சொன்னார்? அரைகுறை குர்-ஆனையா மஸ்வூத் தன் பகுதியில் இருந்த முஸ்லிம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருந்தார்?
உஸ்மான் தொகுத்த குர்-ஆனைத்தான் அல்லாஹ் முஹம்மதுவிற்கு இறக்கியிருந்தான் என்பதற்கு என்ன கியாரண்டி?
நன்றி (answering islam)

Dr.Anburaj said...

குரான் தொகுப்பின் வரலாறு குறித்து கட்டுரை பதிவிடலாம். புதிய கட்டுரைகள் ஏதும் வரவில்லை.