Tuesday 27 January 2015

குர்ஆன் கூறும் அறிவியல் : சூரியன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ!

அல்லாஹ்வின் உண்மை நல்லடியார்களே!

நாம் ஏறக்குறைய இந்த பருவத்தின் முன்பனிக்காலத்தின் இறுதிப்பகுதியை நெருங்கிவிட்டோம். அடுத்தது பின்பனிக்காலத்தின் மத்திலிருந்து வெயில் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது.  

காலை 8 மணிக்கெல்லாம்  வெயிலின் கொடுமை தனது வேலையைக் காட்டத் துவங்கி, நண்பகலின் உச்சத்தை அடைந்து சாலையில் நடந்து செல்வதே கடினம் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும். அத்துடன் அனல் காற்று வேறு!

வியர்வையில் குளித்து, உடலெல்லாம் பிசுப்பிப்பாகி, தாகத்தில் நாக்கு வெளியில் தள்ளி... நம்மை படாய்பாடுத்திட காத்திருக்கிறது இந்த வெயில். இதில் பெரும் துன்பம் பெண்களுக்குத்தான். எப்போதுமே உடல் முழுக்க மூடிக் கொண்டிருக்கும் ஆடைகளை அணிவதால், தோல் பிரச்னைகள் சிறுநீர் கோளாறுகள் என்று அவர்களின் நிலைமை சிக்கலாகிவிடுகிறது. ஆனால்  புர்க்கா அணிந்து செல்வதால் எத்தகைய பாதிப்புகளிலிருந்தும்கூட பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே அல்லாஹ்வும் ரஸூலும் நமக்குக் கற்றுத்தந்த விஷயங்கள்.



அல்லாஹ், தனது தூதரின் வாயிலாக வெளியிட்ட கட்டளைகளின் மகத்துவத்தை, கோடைவெயிலின் கொடுமையால் பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்பும் பெண்கள் துப்பட்டாவை தங்களைப் போர்த்திக்கொண்டு செல்வதை காணும் பொழுது நீங்களே உண்மையை அறிந்து கொள்ளலாம்.

மிகக் குறைவாக மழைபெறும்பகுதிகள், ஆறுகளே இல்லாத பாலவனப் பிரதேசங்களில் வெயிலின் கொடுமையைப்பற்றி சொல்லவே தேவையில்லை! அதேபோல குளிரின் தாக்கமும் இருக்கும்.

அன்றைய அரேபியர்களுக்கு இந்த பருவகால மாற்றங்கள் ஏன் நிகழ்கிறதென்பது புரியாத புதிராக இருந்தது. அன்று அவர்களுக்கு இருந்த வசதிவாய்ப்புகள் அவ்வளவுதான். இந்நிலையில், ஏழாம் நூற்றாண்டில் அவர்களுக்கு ஒரு மாபெரும் மனிதர் பொக்கிஷமாகக் கிடைத்ததார். அவர் இந்த பிரபஞ்சத்திற்கே சிறந்த முன்மாதிரியாக, தனது தூதராக, நேசராக, நம்மை நேர்வழிப்படுத்துவதற்காக அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்டவராவார். மூக்கை எப்படிச் சிந்துவது என்பதிலிருந்து மலம் கழித்தால் எத்தனைக் கற்களை எப்படி உபயோகிப்பது என்பதுவரை எல்லாவற்றையும் அல்லாஹ்வின் அருளால் அரேபியர்களுக்கு மட்டுமல்லமல் அகில உலகத்திகும் இன்றுவரை கற்பித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் அல்லாஹ், நமது கண்ணுமணி நாயகத்திற்கு அறிவியல், புவியியல், வரலாறு, கணிதம், பொருளாதாரம், சட்டம், கட்டப்பஞ்சாயத்து, சாபம் விடுவது, என்பதோடு மண்ணைவாரித் தூற்றி எதிரிகளைத் தாக்குவது போன்ற அதிபயங்கரமான சண்டைப் பயிற்சிகளையும், கண்களை தோண்டியெடுப்பது, தலை, கை-கால்களை போன்ற மருத்தவமுறைகளைக் கூட கற்பித்திருக்கிறான்.
அன்றைய அரேபியர்களுக்கு மட்டுமல்ல இன்றும்கூட 150 கோடி முஃமின்களுக்கு நடமாடும் (நடமாடிய) பல்கலைக் கழகம். சிந்தையை தூண்டிடும் அவரது வார்த்தைகள் அண்டசராசரத்தையே ஆட்டம் காண வைத்தது. பருவகால மாற்றத்திற்கான காரணத்தை அவரிடம் அவரது அற்புத போதனைகளில் தேடாமல் நாம் வேறெங்கு தேடுவோம்?

சூரியனிலிருந்து பூமிக்குக் கிடைக்கும் வெப்பம் எப்பொழுது ஒரே போலத்தான் இருந்துவருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலகாலங்களில் பூமியில் வெப்பம் அதிகரிக்கின்றது; அதேபோல வெப்பம் குறைந்து குளிராகவும் இருக்கிறது. சூரியன் அவ்வப்பொழுது கூடுதலாகவோ அல்லது குறைத்தோ வெப்பத்தை வெளியிடுவதில்லை; அல்லாஹ் அதற்கு அப்படி எந்தவிதமானக் கட்டளையையும் பிறப்பிக்கவில்லை எனும் பொழுது அதிகப்படியான வெப்பமும் குளிரும் எங்கிருந்து வருகிறது என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். 

பருவகால மாற்றங்கள் எதனால் நிகழ்கிறது?

ஸஹீஹ் புகாரி 537
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் முஸ்லிம் 1088
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வெப்பம் ஏற்படும்போது வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது" என்று கூறிவிட்டு, "நரகம் தனது இறைவனிடம் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு) முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதித்தான்" என்றும் குறிப்பிட்டார்கள்.

நரகம் விடும் பெரும்மூச்சுக் காற்றின் காரணமாகவே பூமியில் பருவகால மாற்றங்கள் ஏற்படுகிறது என்ற மிகப் பெரும் அறிவியல் உண்மையை இப்பொழுது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது அல்லாஹ் தனது தூதருக்கு அறிவித்துக் கொடுத்தது. எந்த அறிவியல் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காத அற்புத விளக்கம்.

மாஷா அல்லாஹ்!

மூச்சுவிடுவதற்கு அனுமதி கிடைக்கவில்லையெனில் நரகம் மூச்சு திணறி இறந்துவிடும் என்பதை அறிந்த அல்லாஹ் அதற்கு அவ்வாறான ஒரு சிறப்புச் சலுகையை வழங்கியிருக்கிறான். இதிலிருந்து அல்லாஹ்வின் அளவற்ற கருணையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

மாஷா அல்லாஹ்!

என்ன ஒரு அற்புதமான விளக்கம்! பாமரர்களுக்கும் புரியும் எளிய விளக்கம்!

ஆனால் அல்லாஹ் நமது பொண்ணுமணிக்கு கற்பித்துக் கொடுத்த அறிய பொக்கிஷங்களை அழிப்பதற்கென்றே இந்த காஃபிர் சைத்தான்கள் அறிவியல்(!) என்ற பெயரில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டிருக்கின்றனர். அவர்கள் எப்படியெல்லம் இட்டுக்கட்டி அப்பாவி மக்களை அறியாமையில் தள்ளுகிறார்கள் என்பதையும் கவனிப்போம்.

நாம் வசிக்கும் இந்த பூமி, ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறதாகவும், அது தன் அச்சில் கிட்டத்தட்ட 23½ பாகைகள் சாய்ந்திருக்கிறதென்றும் அபாண்டமான ஒரு பொய்யை துவக்கப்பள்ளியில் கற்பிக்கிறார்கள்.



காஃபிர்களின் பொய்(!) இத்துடன் முடிவதில்லை, புவியின் தனது அச்சில் சாய்ந்திருப்பதால் சூரியனிலிருந்து ஒளிக்கதிர்கள் பூமியின் மீது நேராக விழும் பொழுது வெப்பம் அதிகமாகவும், சாய்வாக விழும் பொழுது வெப்பம் குறைவாகவும் இருக்குமாம். பருவகால மாற்றத்திற்காக தாங்கள் கூறும் பொய்க்(!) காரணத்தை படம் வரைந்து விரிவாக விளக்குகின்றனர்.




காஃபிர்களின் இந்த விளக்கம் பொய்யானது!

ஏன் பொய்யாகிறது?

காஃபிர்கள் தங்களது விளக்கத்திற்கு ஆதரவாக ஒரு குர்ஆன் வசனத்தையோ அல்லது பலவீனமான ஒரு ஹதீஸைக் கூட காண்பித்ததில்லை; அவர்களால் காண்பிக்கவும் இயலாது. அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குக் கற்பித்துத் தராத எந்த ஒரு விஷயமும் பொய்தான்! இஸ்லாமியப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு,  காஃபிர்கள் கூறும் அறிவியலைக் கற்பிக்க வேண்டிய இழிநிலையில் இருக்கின்றனர். காஃபிகள் நிர்வகிக்கும் பள்ளிக்கூடங்களில் வேறுவழியில்லாமல் கற்றுக் கொள்வதைக் கூட மன்னித்துவிடலாம்

முஃமின்களின்  நிர்வாகத்தின் கீழிலிருக்கும் பள்ளிக்கூடங்களிலும் இதே கொடுமைதான். இதை எப்படி மன்னிப்பது?

அறிவியல் என்ற பெயரில் காஃபிர்கள் கூறுவதை நம்பி, அதைக் குர்ஆனுக்குள் நுழைத்து தங்களது செயலுக்கு நியாயம் தேடும் பெயர்தாங்கி முஸ்லீம்களை எப்படி மன்னிக்க முடியும்?

நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை முஃமின்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது ரஸூலும் கூறிய உன்னத போதனைகளை சிறுகச் சிறுக அழித்து, இஸ்லாமை அடியோடு அழிக்க  யூதர்கள் செய்யும் சதித்திட்டம்தான் இவைகள்!

நேரான கதிர்களாம் கடுமையான வெப்பமாம்!  கடுமையான வெப்பத்தைக் கொடுப்பது சூரியனுக்குக் கடமையாக்கப்படவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்!  அல்லாஹ்விற்கு ஸுஜூது செய்வதற்காக(22:18), நிழலுக்கு ஆதாரமாக (25:45), இரவு பகல் வேறுபாட்டையும், காலத்தையும் அறிந்து கொள்வதற்காக(6:96) பிரகாசமான (10:05) விளக்காக (25:61, 71:16, 78:13) இருப்பதற்காவே சூரியனைப் படைத்திருக்கிறான். இத்தனை செய்திகளைக் கூறும் அல்லாஹ்விற்கும், கண்மணி நாயகம் ரஸூல் ஸல்லல்லாஹூ அலைவலஸல்லம் அவர்களுக்கும், கடுமையான வெப்பமும் குளிரும் பூமியில் எதனால் உண்டாகிறதென்பது தெரியாதா?

சூரியனை அல்லாஹ் படைத்தானா? இல்லை இந்த காஃபிர்களும், பெயர் தாங்கி முஸ்லீம்களும் படைத்தார்களா?

சூரியனின் காரணமாகத்தான் பூமியில் கடுமையான வெப்பமும், கடுமையான குளிரும் உண்டாகிறதென்பதற்கு சான்றாக, அறிவியல் என்ற பெயரில் இட்டுக்கட்டும் காஃபிர்களும் அவர்களது கருத்திற்கு வால் பிடிக்கும் பெயர்தாங்கி முஸ்லீம்களாலும் ஒரு குர்ஆன் வசனத்தைக் கூட காண்பிக்க முடியாது! ஹதீஸ்களிலும் காண்பிக்க முடியாது! நரகம் விடும் மூச்சுக் காற்றினால்தான் கோடை காலத்தில் நாம் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நாம் உணரும் கடும் குளிரும் உண்டாகிறதென்பதை இதைவிட எப்படி இந்த காஃபிர்களுக்கு விளக்குவது? அதுமட்டுமல்ல நரகத்தின் கடுமையான வெப்பத்தினால்தான் மனிதர்களுக்கு காய்ச்சல் உண்டாகிறதென்கிற(புகாரி 3262,3263,3264) மருத்துவ உண்மையை இந்த பெயர்தாங்கிகள் என்று உணரப் போகிறார்களோ?

இந்த சூரியன் நாளை கியாமத்து நாளில் என்னவாகப் போகிறது தெரியுமா?

குர்ஆன் 81:1
சூரியன் சுருட்டப்படும் போது.

சூரியனை எப்படிச் சுருட்ட முடியும்? சுருட்டுவதற்கு அதென்ன பத்தமடை பாயா? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம். காஃபிர்களின் அறிவியல் போதனைகள் உங்கள் மனதில் பதிந்திருப்பதே இதற்குக் காரணம்.

சூரியனை ஏன் சுருட்ட முடியாது?

வட்ட வடிவிலிருக்கும் தோசை, சப்பாத்தி, பூரி போன்றவைகளை சுருட்டி வயிற்றுக்குள் தள்ளி ஏப்பம் விடுவதில்லையா? அதைபோல அல்லாஹ் கியாமத்து நாளில் சூரியனைச் சுருட்டிவிடுவான்.  

கோள வடிவிலிருக்கும் ஒரு பொருளை எப்படிச் சுருட்ட முடியும் என்பதுதானே உங்கள் கேள்வி?  சூரியன் கோளவடிவில் இருப்பதாகச் சொல்வதற்கு குர்ஆன் ஹதீஸ்களில் எந்த ஆதரமும் கிடையாது. நான் முன்பே கூறியதைப் போல் குர்ஆன்-ஹதீஸீல் சொல்லப்படாத, அல்லாஹ்வும்-ரஸூலும் நமக்குக் கற்பித்துத் தராத ஒரு செய்தியை எப்படி ஏற்க முடியும்?

குர்ஆனிலும் ஹதீஸ்களில் சொல்லப்படாத விஷயங்களே இல்லையென்பதை, பாவம் இந்த காஃபிர்கள் எப்படி அறிவார்கள்?

அவர்களுக்கு நல்ல அறிவை வழங்க அல்லாஹ்விடம் துஆச் செய்வோம்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ!



மௌலான மௌலவி பாஸில் பாகவி சிராஜி ரஷாதி தாவூதி இம்தாதி தஜ்ஜால்.

Facebook Comments

133 கருத்துரைகள்:

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

கோடை காலமும் குளிர்காலமும் ஏன் ஏற்படுகின்றன என்ற இஸ்லாமிய அறிவியல் செய்தியை(!) குரான்,ஹதீஸ் அடிப்படையில் மிக அற்புதமாக எடுத்துரைத்து முஹம்மது எப்படிப்பட்ட மாபெரும் அறிவியல் மேதை(!!) என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அதேசமயம் காஃபிர்களின் அறிவியல் பித்தலாட்டத்தையும் யூதர்களின் சதியையும்(!) அம்பலப்படுத்திவிட்டீர்கள். உங்களைப்போன்ற ஒரு தவப்புதல்வன் கிடைக்க முஸ்லிம் சமுதாயம் என்ன புண்ணியம் செய்ததோ! யார் பெற்ற மகனோ, இவன் யார் பெற்ற மகனோ......

nettrikkannthirappinum said...

Dear Friend, i feel muslims are not ready to think beyond their holy book is, accepting that their book is imperfect is tantamount to accetping (imaginary)defeat to non-believers and kafirs. They must be presented with an alternative purpose for their life if their current purpose of securing a permanent seat in heaven is proved wrong. What would be your solution for this situaton?

maha said...

சூரியன் தினம் அர்சுக்கு அடியில் படுத்து மறுநாள் உதிக்க அனுமதி கேட்டு அல்லாவை தொந்தரவு செய்வதைப் பற்றியும் விளக்கியிருக்கலாம். மூமின்கள் இதைப்பற்றி மூச்சு விடுவதே இல்லை. "மூச்சுவிடும்" மூமின் அந்த ஹதீஸ் யூதன் எழுதியது என்கின்றனர். அதே அதீஸில்தானே உலக முடிவு நாளில் சூரியன் மேற்கே இருந்து உதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றால் உடனே மான் கராத்தே காண்பித்து விடுகிறார்கள். நீங்களாவது இந்த காப்பிருக்கு விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க ஆனந்த்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

குர்ஆன் ஹதீஸ்களில் பலவிதமான அறிவியல் செய்திகள் பரவிக்கிடக்கின்றது அதையெல்லாம் விட்டுவிட்டு காஃபிர்கள் இட்டுக்கட்டும்(!) அறிவியலின் பின்னால் முஃமின்கள் ஓடிப்போனால் அல்லாஹ்விற்கும், அல்லாஹ்விற்கும் மேலான எங்கள் கண்மணி நாயகத்திற்கும் என்ன மரியாதை? அதன் பிறகு அவர்களை சொறிநாய்கூட சீண்டாது! இதைக் காணும் பொழுது இந்த முஃமினின்(!) உள்ளம் துடிக்கிறது. அதனால்தான் அவ்வப்பொழுது அறிவியல் பயான்(மதப் பிரசங்கம்) செய்து காஃபிர்-யூத-கிருஸ்தவ சதிகளை(!) அம்பலப்படுத்துகிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க நெற்றிக்கண்திறப்பினும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

//i feel muslims are not ready to think beyond their holy book is, accepting that their book is imperfect is tantamount to accetping (imaginary)defeat to non-believers and kafirs.// இருக்காதா பின்ன அதனாலதான் அறிவியலை இந்தப்பாடுபடுத்தறோம்!
//They must be presented with an alternative purpose for their life if their current purpose of securing a permanent seat in heaven is proved wrong. What would be your solution for this situaton?// இந்த வட்டத்தை உடைத்து வெளியேறுவது அத்தனை ஈஸி இல்லைதான். ஆனால் அதை உடைத்து வெளியேறிப் பாருங்க எத்தனை சுதந்திரமான, மகிழ்ச்சியான உலகம் இருக்குங்கிறது புரியும்! கடவுளும், மதமும் இல்லைனா வாழ்க்கையே இல்லையா? எந்தவிதமான பாகுபாடுமற்ற ஒரு சமுதாயம் அமையக் கூடாதா?

தஜ்ஜால் said...

வாங்க மஹா,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

//சூரியன் தினம் அர்சுக்கு அடியில் படுத்து மறுநாள் உதிக்க அனுமதி கேட்டு அல்லாவை தொந்தரவு செய்வதைப் பற்றியும் விளக்கியிருக்கலாம். // இதைப்பற்றி முன்பே பேசியிருப்பதால் மறுஒலிபரப்பு செய்யவேண்டாமென்று விட்டுவிட்டேன்.

// "மூச்சுவிடும்" மூமின் அந்த ஹதீஸ் யூதன் எழுதியது என்கின்றனர். // இப்படியே போனால் கடைசியில் குர்ஆன்கூட யூதர்கள் எழுதியது என்று சொல்ல மாடோமா என்ன?

//அதே அதீஸில்தானே உலக முடிவு நாளில் சூரியன் மேற்கே இருந்து உதிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்றால் உடனே மான் கராத்தே காண்பித்து விடுகிறார்கள். நீங்களாவது இந்த காப்பிருக்கு விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.// அதற்குத்தானே இந்த கடையை நடத்துகிறோம். உங்களைப் போன்ற காஃபிர்களுக்கும் இஸ்லாமைப்பற்றி விளக்கி(!) 72 ஐட்டங்களைப் பெற்றுத் தருவதே(?) எங்களது குறிக்கோள்! இஸ்லாம்கூறும் யுகமுடிவு நாளை இன்னொரு பயானில் கவனிப்போம்!

Anonymous said...

I think the same person is commenting with multiple usernames. So sick bastard. You are not against a religion. You are against a beautiful nation India and human race you sick motherfucker. Go get a life rather than wasting our time.

Anonymous said...

Try to be like Gandhi. Love people. Respect t other faiths.
Shame on you. Your mother raised you like this. Shame shame shame. Aaaaaaaaakh Thhu.

சிந்திக்கமாட்டார்களா said...

லாயிஹ இல்லை அல்லாஹ் முஹம்மதுர்ரலூஸுல்லாஹ்

சிந்திக்கமாட்டார்களா said...

லாயிஹ இல்லை அல்லாஹ் முஹம்மதுர்ரலூஸுல்லாஹ்

தஜ்ஜால் said...

வாங்க Anonymous,

உங்களைப் போன்றவர்களை இத்தளம் மகிழ்வுடன் வரவேற்கிறது! எங்களது பணி மிகச் சரியான திசையில் செல்கிறது என்பதை உங்களது பொன்னான கருத்துக்களால் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்! மிக்க நன்றி!

//I think the same person is commenting with multiple usernames.// நீங்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம் அது உங்களது தனிப்பட்ட உரிமை.

//So sick bastard. You are not against a religion. You are against a beautiful nation India and human race you sick motherfucker. Go get a life rather than wasting our time. Try to be like Gandhi. Love people. Respect t other faiths. Shame on you. Your mother raised you like this. Shame shame shame. Aaaaaaaaakh Thhu.// காந்தியின் போதனைகளை வழிதவறாம கடைபிடிக்கிற ஒரே உத்தம சீடர் நீங்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதை நாங்கள் நம்பிவிட்டோம்! உங்களது பிறப்பையும் வளர்ப்பையும் அற்புதமான கருத்தாழமிக்க சொற்களால் உலகறிய செய்துவிட்டீர்கள்! உங்களால்தான் இந்த மனித குலமே சிறப்பா இருக்கிறது.

தம்பி… ராசா… கண்ணு.. செல்லம்.. பதிவுக்கு பதில் சொல்லத் தெரியுமா … தெரியாதா...?

தஜ்ஜால் said...

வாங்க சாதிக்,

//லாயிஹ இல்லை அல்லாஹ் முஹம்மதுர்ரலூஸுல்லாஹ்//
இதென்ன கலீமா புதிசா இருக்கு!

ஆனந்த் சாகர் said...

காந்தியை அப்படியே பின்பற்ற வேண்டும் யார் சொன்னது? அப்படி சொல்பவர்கள் அறிவுக்குருடர்கள். அவரைவைத்து பிழைப்பு நடத்த விரும்புவர்கள். அவரின் பல கொள்கைகள முட்டாள்தனமானவை. அவர் பல அபத்தங்களை உளறியிருக்கிறார். உதாரணத்திற்கு, விவசாயத்தில் இயந்திர உபகரனங்களை அறவே பயன்படுத்த கூடாது என்றார். ஐரோப்பாவில் ஹிட்லர் யூதர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்துக்கொண்டிருந்தபோது அதற்கு தீர்வாக, யூதர்கள் அனைவரும் செங்கடலில் குதித்து மூழ்கி ஒட்டுமொத்தமாக இறந்து ஹிட்லரின் மனசாட்சியை எழுப்பவேண்டும் என்று திருவாய் மலர்ந்தார். அச்சு நாடுகள் இரண்டாம் உலகப்போரில் மேலோங்கியபோது கோமான் முசோலினியை இந்தியாவுக்குள் வரவேற்க வேண்டும் என்று அவர் பிரிட்டிஷ் அரசுக்கு யோசனை கூறினார்.

ஆனந்த் சாகர் said...

தஜ்ஜால்,

//இஸ்லாம்கூறும் யுகமுடிவு நாளை இன்னொரு பயானில் கவனிப்போம்!//

பூமி தட்டையானது என்ற இஸ்லாமிய அறிவியலை குரான்,ஹதீஸ் அடிப்படையில் விளக்கி, நாம் வாழும் இந்த தட்டையான பூமி ஒரு காளை மாட்டின் கொம்பின்மேல் நிற்கிறது என்று முஹம்மது சொன்ன ஹதீசையும் எடுத்துக்காட்டி ஒரு சிறப்பான, மார்க்க விளக்க பயானை செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

சட்டம் said...
This comment has been removed by the author.
சட்டம் said...
This comment has been removed by the author.
தஜ்ஜால் said...

@சட்டம்,

//தஜ்ஜால் என்ற பெயரில் நல்ல பிள்ளையாகப் பேசுவது ஆனந்த் என்ற பெயரில் காவி விஷத்தை கக்குவது ஆன்ட் என்ற பெயரில் குறும்பு செயுவது நீ என்ன சைக்கோவா . நீ முதல்ல தெளிவாகு அப்புறம் விவாதம் பண்ணு .//
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை....!!!

தஜ்ஜால் said...

@சட்டம்,

//டேய் உண்மையிலே நீ ஒரு முன்னாள் முஸ்லிம்னா இப்படி ஒரு சிந்தனையே வந்து இருக்காது // சிந்தனை இப்படி வராதுனா...வேற எப்படியெல்லாம் வரும்?
//காவி டவுசர்தான் இப்படி எல்லாம் சிந்திக்க சொல்லுது. /// காவிடவுசர்கள் சிந்திக்கிறாங்களா? எப்ப... இருந்து? சொல்லவேயில்ல...

தம்பி… ராசா… கண்ணு.. செல்லம்.. பதிவுக்கு பதில் சொல்லத் தெரியுமா … தெரியாதா...?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//தஜ்ஜால் என்ற பெயரில் நல்ல பிள்ளையாகப் பேசுவது ஆனந்த் என்ற பெயரில் காவி விஷத்தை கக்குவது ஆன்ட் என்ற பெயரில் குறும்பு செயுவது நீ என்ன சைக்கோவா . நீ முதல்ல தெளிவாகு அப்புறம் விவாதம் பண்ணு .//

என்ன சட்டம், ரொம்ப சூடாகிவிட்டீர்களா? நீங்கள் விவாதம் செய்ய முன்வந்து தஜ்ஜாலின் தர்க்கபூர்வமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் விவாதத்திலிருந்து நழுவி ஓடிவிட்டீர்கள். பிறகு நீங்கள் நல்ல பிள்ளை மாதிரி இஸ்லாம் சரியா இல்லையா என்று சிந்திக்கிறேன் என்றெல்லாம் நடுநிலையாக சிந்திக்கிறவர் மாதிரி பாவ்லா காட்டினீர்கள். உங்களால் இதற்குமேல் நல்ல பிள்ளை மாதிரி நடிக்க முடியவில்லைபோலும்! இனிமேலும் பொறுக்க முடியாது என்று என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளற ஆரம்பித்து விட்டீர்கள். இஸ்லாத்தை அம்பலப்படுத்தினால் உடனே இது சியோனிச, ஹிந்துத்வா சதி என்று முஸ்லிம்கள் அரற்ற ஆரம்பித்துவிடுவார்கள். இப்படி அர்த்தமில்லாமல் அரற்றுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக இஸ்லாத்தை பற்றி விவாதிக்க முன்வாருங்கள்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//டேய் உண்மையிலே நீ ஒரு முன்னாள் முஸ்லிம்னா இப்படி ஒரு சிந்தனையே வந்து இருக்காது//

இப்பொழுதுதான் நீங்கள் ஒரு உண்மையான முஸ்லிம்போல பேச ஆரம்பித்து இருக்கிறீர்கள். உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்! நடுநிலையாக சிந்தித்து பார்ப்பதால்தான் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். சிந்திக்க மாட்டோம் என்று அடம்பிடிப்பவர்கள்தான் முஸ்லிமாக தொடர்கிறார்கள்.

// காவி டவுசர்தான் இப்படி எல்லாம் சிந்திக்க சொல்லுது. டவுசரை கழட்டு உண்மை புரியும்.//

தஜ்ஜாலுடன் நீங்கள் செய்த விவாதத்தில் உங்கள் டவுசர் கிழிந்து தொங்கியதே. அதை முதலில் கழற்றுங்கள். உங்களுக்கு அறிவு நாணயம் இருந்தால் எங்கள் பதிவுகளுக்கு பதில் அளியுங்கள். அதை விட்டுவிட்டு காவி,பாவி என்றெல்லாம் உளறுவது நகைப்புக்குரியது.

maha said...

That's why many Muslim clerics says reading Quran and hadith by own self is "danger" to Muslims. If you are a common Muslim and read Quran and hadith with rationality, you will leave Islam. Same goes to other religion. Only thing in other religion, you can be an atheist in Hindu, Buddhist or Christian family and society. Muslim do not have this advantage. We may see major ideological clash in between Muslim and ex-muslim within 100 years.

சட்டம் said...

இந்த தளத்துக்கு வந்து அண்ணன் ஆனந்த் , தஜ்ஜால் இவங்க என்ன சொன்னாலும் இந்த மூமின்கள் உடனே நம்பி இஸ்லாத்தை வெறுத்து வெளியேற வேண்டுமாம். நல்லா பகல்கனவு காண்றாங்க. இஸ்லாத்தை பற்றி துளி கூட நல்லவிதமா பேசாத உங்களுக்கு ஏன் இந்த வெட்டி வேலை. இஸ்லாத்தே வேணான்னு சொல்லிட்டு தளத்தோட தலைப்புல எதுக்கு இஸ்லாம் . அய்யா ஆனந்து விவாதத்தில் தோற்றேன் என்றால் அது என்னுடைய தவறு.

சட்டம் said...

உங்கள் தளத்தில் விவாதம் என்ற பெயரில் நான் நுழைந்தது எனது தவறு .ஒத்துக்கொள்கிறேன். குருடரிடம் வண்ணங்களை பற்றி விவாதிப்பதும் உங்களிடம் இஸ்லாத்தை பற்றி விவாதிப்பதும் ஒன்று. பதிவு பதிவு ன்னு சொல்றீங்களே அது எங்கய்யா இருக்கு. நீங்க பேசுனா தர்க்கம். நீங்கள்தான் இஸ்லாம் மேல் கொண்டுள்ள வெறுப்பால் நபியைப்பற்றியும் ,இஸ்லாத்தை பற்றியும் உளறிக் கொட்டுவதற்கு பேர் பதிவா. இதில் நான் உளறுவதாக ஒரு கருத்து ஆனந்த் சொல்றார். நீங்கள் முன்னாள் முஸ்லிமல்ல காவி டவுசர்தான் என உங்கள் பதிவுகளே சாட்சி சொல்லும். உளறலை பில்டப் கொடுத்து ஜால்ரா தட்ட ஒரு குரூப். நல்லா வருவீங்க

சட்டம் said...

நீங்கள் முன்னால் முஸ்லிம்தான் என நிரூபியுங்கள். பிறகு இஸ்லாத்தை பற்றி உளறலாம். எங்கோ இணையத்தில் வாந்தியெடுத்த கருத்துகளை பதிவு என்ற பெயரில் உளறுவதை விட்டு விட்டு புள்ள குட்டிகளை படிக்க வைங்க.

சட்டம் said...

உங்கள் பதிவுகள் மூலம் ஒன்று புரிகிறது. நீங்கள் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் உங்கள் உளறல் அளவுக்கதிகமாக போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் படைப்புகளில் இஸ்லாமிய வெறுப்பும் முஸ்லிம்களின் மேலான பகையுணர்ச்சியும்தான் தெரிகிறது. கேட்டால் நாத்திகம் என்ற போர்வை . போர்வையை மீறி காவி டவுசர் தான் தெரிகிறது.

சட்டம் said...

//காந்தியை அப்படியே பின்பற்ற வேண்டும் யார் சொன்னது? அப்படி சொல்பவர்கள் அறிவுக்குருடர்கள். அவரைவைத்து பிழைப்பு நடத்த விரும்புவர்கள். அவரின் பல கொள்கைகள முட்டாள்தனமானவை//
.
நீர் கோட்சேவின் சீடர் என்பதற்கு இந்த ஒரு பின்னூட்டம் சாட்சி. காவி டவுசர் கிழியுது.

Ant said...

@சட்டம்
//தஜ்ஜால் என்ற பெயரில் நல்ல பிள்ளையாகப் பேசுவது ஆனந்த் என்ற பெயரில் காவி விஷத்தை கக்குவது ஆன்ட் என்ற பெயரில் குறும்பு செயுவது நீ என்ன சைக்கோவா . நீ முதல்ல தெளிவாகு அப்புறம் விவாதம் பண்ணு .// வேலைப்பளுவிற்கு நடுவேதான் மார்க்க பணி. எனவே, தஜ்ஜால் ஆனந்த் ஆண்ட் வேறு வேறு என்று உடனடியாக மறுப்பு தெரிவிக் இயலவில்லை. திரு. தஜ்ஜால் கருத்துகளை தர்க்க ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் பின்னூட்டம் வழியாக அலசிபார்த்து கருத்துஇடுகிறோம். அவர் மற்றவர்கள் கருத்துகளை மதிக்கிறார். தன் கருத்துகளை தினிப்பதில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத எதையும் பின்பற்ற இயலாது இஸ்லாமின் மறுபக்கத்தை அறிய வரும்போது தங்களால் தாங்கி கொள்ள இயலவில்லை. காரணம் தங்கள் மனசாட்சியும் இந்திய நாட்டு பாகன் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பின்பற்றும் வாழ்கை நெறிமுறைதான். இஸ்லாம் மட்டுமே உள்ள நாட்டில் இல்லாததால் உள்ள சுதந்திரத்தை தங்களால் அனுபவிக்க முடிகிறது ஆனால் இஸ்லாம் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் மற்றவர்கள் நிலையை என்னிப்பாருங்கள் தெரியும். பன்முகத்தன்மையே வளர்ச்சிக்கு அடிப்படை. அதுவே அமைதிக்கு வழி. இஸ்லாம் அல்ல.

maha said...

Sattam, why not you answer dajjal rationally and break his nose? You are just winning and complaining. If you can provide rational answer, everyone of us will accept. Can you? You also must prepare to accept the truth based on rational thinking.

சட்டம் said...

மஹா அவர்களே

பகுத்தறிவாளர்களிடம் பகுத்தறிவுடன் பதில் சொல்லலாம் . இவர்கள் பகுத்தறிவாளராக இருந்தால் மதக்கருத்துகளை உதாசீனப் படுத்துபவராக இருந்தால் பரவாயில்லை. இவர்களுக்கு இஸ்லாம் மட்டுமே விரோதி
பெரியார் பகுத்தறிவாளராக அறியப்படுவது எதனால்? மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் மனிதனை மனிதனே அடிமைப்படுத்தும் செயல்களின் எதிர்விளைவாகவும் கடவுளின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சாரார் சுகபோகமாக வாழ்வதும். உழைக்கும் வர்க்கம் அல்லல் பட்டு சூத்திரப்பட்டம் பெறுவதை எதிர்த்தார். இத்தகைய முற்போக்கான எண்ணங்கள் எதுவும் இவர்களுக்கு இல்லை. எமது மக்களுக்கும் இவர்கள் அறிவுரை தேவையில்லை. நாங்கள் நாயக்கர் , தேவர் , கவுண்டர் போன்ற இடைநிலை சாதியினரிடம் மாமா முறையும் ஆசாரி. பர்னாந்து போன்றோரிடம் தகப்பன் மகன் உறவும் பள்ளர்களிடம் தாத்தா முறை உறவும் கொண்டாடி வருகிறோம். இவர்கள் உளறும் உளறலில் ஏதோ இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற தொனியே இருக்கிறது. நாம் இருக்கும் நாட்டில் நிலவும் அமைப்பை வைத்து இஸ்லாத்தை இவர்கள் எடை போடுவதில்லை. ஒரு கற்பனை கருத்தையே மென்மேலும் நிஜமாக்க துடிக்கின்றனர். எங்களிடம் பார்ப்பனியம் இல்லை. தீண்டாமை இல்லை. கலிமாவை சொல்லி இஸ்லாத்தை ஏற்கும் எவனும் மறு கணத்திலிருந்து மற்ற எல்லா அடையாளத்தையும் துறந்து முஸ்லிம் என்று மட்டுமே அறியப்படுகிறான். இந்து மதத்தை மீண்டும் ஏற்க வைக்கும் காவிகள் அவனை ஒரு அந்தணனாக மாற்றுவாரா . மாட்டார். இந்திய முஸ்லிம்கள் நாத்திகர்களாலும். மதச்சார்பற்றவர்களாலும் ஒரு போதுதூற்றப்படுவதில்லை..பாகன்களிடம் பத்திரமாகவே இருக்கிறோம். எங்கள் மதத்தை தூற்றும் கூட்டம் காவிக்கூட்டம் மட்டுமே.

சட்டம் said...

என் வாதத்திறணை நிலை நாட்டும் இடம் இதுவல்ல என்பதை புரிந்து கொண்டேன்.
இவர்கள் தங்களுடைய தளத்தின் தலைப்பை மாற்றும் வரை என் கருத்துகள் அல்லது ஆனந்து சொன்னது போல் உளறல்கள் வந்து கொண்டேதான் இருக்கும்

சட்டம் said...

பகுத்தறிவாளர்கள் எனப்படுவோர் சமூகநீதியை நிலைநாட்டினர். இந்து மதத்தை சாடினர். அதற்காக இந்துக்களை வெறுக்கவில்லை. இவர்களிடம் இஸ்லாமியத்தின் மீதான சாடலும் அதைவிட முஸ்லிம்களின் மீதான வெறுப்புமே அதிகமாய் உள்ளது. இதனாலேயே இவர்கள் கருத்துகள் உளறலாய் தெரிகிறது. காவிக்கூட்டம்தான் எங்கள் முன்னோரை சாதியின் பெயரால் கொடுமைப்படுத்தி இஸ்லாத்திற்கு விரட்டியது. இன்று ஆடு நனைகிறது என ஓநாய் அழுகிறது.

தஜ்ஜால் said...

// இவர்கள் பகுத்தறிவாளராக இருந்தால் மதக்கருத்துகளை உதாசீனப் படுத்துபவராக இருந்தால் பரவாயில்லை. இவர்களுக்கு இஸ்லாம் மட்டுமே விரோதி//
தங்களால் பதிலளிக்க முடியாமல் முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டவுடன், மதவாதிகளிடமிருந்து வெளிப்படும் வழக்கமான பல்லவிதான் இது. “மத உணர்வை புண்பட்டுவிட்டது” “ஊடக பயங்கரவாதம்” என்று இன்னும்சில வாக்கியங்களை வைத்திருக்கிறார்கள். யாரை, எப்பொழுது, எங்கு, எப்படி விமர்சிக்க வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும் அதை திரு சட்டம் அவர்கள் எங்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை! இத்தளத்தின் நோக்கத்தை அறிமுகத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறோம்.

// நாங்கள் நாயக்கர் , தேவர் , கவுண்டர் போன்ற இடைநிலை சாதியினரிடம் மாமா முறையும் ஆசாரி. பர்னாந்து போன்றோரிடம் தகப்பன் மகன் உறவும் பள்ளர்களிடம் தாத்தா முறை உறவும் கொண்டாடி வருகிறோம்// இப்படியொரு ஒரு சூழல் 1980- களுக்கு முன்னால் இருந்தது உண்மைதான் ஆனால் என்று இந்து மதவெறி கும்பல்களும், வஹாபியிஸங்களும் தலையெடுத்ததோ அன்றே இத்தகைய நட்பும், உறவுகளும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது! ஆனால் திரு சட்டம் இங்கு வந்து கதையளந்து கொண்டிருக்கிறார்!

தஜ்ஜால் said...

//இவர்கள் உளறும் உளறலில் ஏதோ இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம் என்ற தொனியே இருக்கிறது.//
இந்து மதத்தை விமர்சித்ததற்காக, எந்த இந்துவும் பெரியாரையோ, அல்லது அம்பேத்காரையோ கொல்லவில்லை! டாவின்ஸி கோட் திரைக்கதையை எழுதியதற்காக டான் பிரவுனை எந்தக் கிறிஸ்தவரும் கொல்லவில்லை! ஆனால் இஸ்லாமை விமர்சித்ததற்காக கொல்லப்பட்டவர்கள் ஏராளம்! அவ்வளவு ஏன், நான் எழுதிய ஒரு கட்டுரைக்காக அப்பாவியான செந்தோழன்ஷா அவர்களைப் பலிகடாவாக்கி அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய முஸ்லீம்களை நண்பர் சட்டம் அறிவாரா?

// நாம் இருக்கும் நாட்டில் நிலவும் அமைப்பை வைத்து இஸ்லாத்தை இவர்கள் எடை போடுவதில்லை.// நம் நாட்டில் நிலவு இஸ்லாமா? இவர் உண்மையிலேயே இஸ்லாம் என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. நம் நாட்டில் முஸ்லீம்களை மற்ற மதத்தினருடன் இணக்கமாக வைத்திருக்க மிகப் பெரும் உதவியாக இருந்த ஸூஃபியிஸத்தை இவர்களால் இஸ்லாமாகவே அங்கீகரிக்க முடியவில்லை! நம் நாட்டில் நிலவும் இஸ்லாமாம் வேடிக்கை!

// ஒரு கற்பனை கருத்தையே மென்மேலும் நிஜமாக்க துடிக்கின்றனர்.// எது கற்பனை? குர்ஆனும் ஹதீஸ்களுமா கற்பனை? எங்களைப் போன்றவர்கள் கேட்டிருக்கும் எந்த ஒரு கேள்விக்கும் இதுவரை தர்க்கரீதியாக பதிலைச் சொல்ல 150 கோடி முஸ்லீம்களில் ஒருவருமில்லை!

// கலிமாவை சொல்லி இஸ்லாத்தை ஏற்கும் எவனும் மறு கணத்திலிருந்து மற்ற எல்லா அடையாளத்தையும் துறந்து முஸ்லிம் என்று மட்டுமே அறியப்படுகிறான்.//”கருப்பாயி என்ற நூர்ஜஹான்” புத்தகத்தை நண்பர் அறியவில்லை போலும்! மேலும் இஸ்லாம் என்பது ஆன்மீகமோ மதமோ அல்ல! இஸ்லாம் ஒரு “CULT” அங்கு ஆள்பிடிப்பதுதான் பிரதான நோக்கம்! குரைஷிகளிடமே ஆட்சியதிகாரம் இருக்க வேண்டுமென்ற முஹம்மதின் போதனையை நண்பர் அறிவாரா?

// இந்து மதத்தை மீண்டும் ஏற்க வைக்கும் காவிகள் அவனை ஒரு அந்தணனாக மாற்றுவாரா .// “தாய் மதத்திற்கு” திருப்பி அழைத்து வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்து இந்துவெறியர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி இது!

தஜ்ஜால் said...

// இந்திய முஸ்லிம்கள் நாத்திகர்களாலும். மதச்சார்பற்றவர்களாலும் ஒரு போதுதூற்றப்படுவதில்லை..பாகன்களிடம் பத்திரமாகவே இருக்கிறோம். எங்கள் மதத்தை தூற்றும் கூட்டம் காவிக்கூட்டம் மட்டுமே.//
திரு சட்டம் அவர்களை நினைத்தால் சற்று பாவமாகத்தான் இருக்கிறது. கண்களில் கட்டப்பட்டிருக்கும் பக்கப்பட்டைகளை விலக்கி நடப்பு உலகத்தை அவர் சற்று கவனிக்க வேண்டும். வேற்று கிரகத்திலிருந்து வந்தவரைப் போல பேசிக் கொண்டிருப்பது சிரிப்பைத்தான் வரவழக்கிறது!

தஜ்ஜால் said...

//என் வாதத்திறணை நிலை நாட்டும் இடம் இதுவல்ல என்பதை புரிந்து கொண்டேன். இவர்கள் தங்களுடைய தளத்தின் தலைப்பை மாற்றும் வரை என் கருத்துகள் அல்லது ஆனந்து சொன்னது போல் உளறல்கள் வந்து கொண்டேதான் இருக்கும்//

வாதத்திறனா? முதலில் இஸ்லாம் என்றால் என்னவென்பதை கற்றுக் கொள்ளுங்கள் வாதம், பக்கவாதமெல்லாம் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்! ஆனால் உங்களது பதில்களால் எங்களுக்கு நன்றாக பொழுது போவதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன். உங்களது கருத்துக்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!

சட்டம் said...

கடையநல்லூர் ஜமாத்தின் நடுவே போய் நின்று நான்தான் கட்டுரை எழுதியது என்று சொல்லி தோழரை காப்பாற்றி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? உயிர் பயம் என்றால் காவல்நிலையத்தில் ஆஜராகியாவது சொல்லியிருக்கலாம். அல்லது வெகுஜனப் பத்திரிகை எதிலாவது விளம்பரமாவது கொடுத்தீரா. அந்த நிகழ்ச்சியை வைத்து இஸ்லாமை இன்னும் வசை பாடினீரே தவிர அந்த தோழரை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தீரா? நீர் செய்த தவறுக்கு பாவம் அந்த அப்பாவி பலியானார்.

சட்டம் said...

//திரு சட்டம் அவர்களை நினைத்தால் சற்று பாவமாகத்தான் இருக்கிறது. கண்களில் கட்டப்பட்டிருக்கும் பக்கப்பட்டைகளை விலக்கி நடப்பு உலகத்தை அவர் சற்று கவனிக்க வேண்டும். வேற்று கிரகத்திலிருந்து வந்தவரைப் போல பேசிக் கொண்டிருப்பது சிரிப்பைத்தான் வரவழக்கிறது!//

//இப்படியொரு ஒரு சூழல் 1980- களுக்கு முன்னால் இருந்தது உண்மைதான் ஆனால் என்று இந்து மதவெறி கும்பல்களும், வஹாபியிஸங்களும் தலையெடுத்ததோ அன்றே இத்தகைய நட்பும், உறவுகளும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது! ஆனால் திரு சட்டம் இங்கு வந்து கதையளந்து கொண்டிருக்கிறார்! //

1980 க்கு அப்பறம் அண்ணன் செவ்வாய் கிரகத்துலதான் குடியிருக்கிறீர்களா.

உங்

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//இந்த தளத்துக்கு வந்து அண்ணன் ஆனந்த் , தஜ்ஜால் இவங்க என்ன சொன்னாலும் இந்த மூமின்கள் உடனே நம்பி இஸ்லாத்தை வெறுத்து வெளியேற வேண்டுமாம். நல்லா பகல்கனவு காண்றாங்க.//

முஹம்மதை பற்றிய, இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை குரான், ஹதீஸ்,சீரா அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்து கூறுவதே எங்களின் நோக்கம். நாங்கள் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை குரான்,ஹதீஸ்,சீராவை வைத்து எவரும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

// இஸ்லாத்தை பற்றி துளி கூட நல்லவிதமா பேசாத உங்களுக்கு ஏன் இந்த வெட்டி வேலை. //

இஸ்லாத்தை பற்றி நல்ல விதமாக பேச ஒன்றுமே இல்லை என்பதுதான் நிஜம்.

//இஸ்லாத்தே வேணான்னு சொல்லிட்டு தளத்தோட தலைப்புல எதுக்கு இஸ்லாம் .//

இஸ்லாம் என்ற பெயரை பயன்படுத்தாமல் எப்படி அதை அம்பலப்படுத்த முடியும்?

// அய்யா ஆனந்து விவாதத்தில் தோற்றேன் என்றால் அது என்னுடைய தவறு.//

தஜ்ஜாலுக்கு உங்களால் தர்க்க ரீதியாக பதில் அளிக்க முடியவில்லை. ஆதமின் படைப்பை பற்றி குரான் கூறுவது முற்றிலும் அறிவுக்கு புறம்பான கட்டுக்கதை என்ற உண்மையை அம்பலப்பட்ட பிறகும் ஒப்புக்கொள்ள உங்களுக்கு நேர்மை இல்லை. இதை தவிர்க்க விவாதத்திற்கு வந்தது தவறு என்று சப்பை கட்டு கட்டுகிறீர்கள்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நீர் கோட்சேவின் சீடர் என்பதற்கு இந்த ஒரு பின்னூட்டம் சாட்சி. காவி டவுசர் கிழியுது.//

காந்தியின் அஹிம்சை கொள்கையை எந்த நாடும் பின்பற்றுவதில்லை. அதே போன்றதுதான் ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற ஏசுவின் போதனையும். அது நடைமுறை சாத்தியமற்றது. இதை நெல்சன் மண்டேலாவும் கூறினார். சமீபத்தில் ஒபாமாவும் கூறினார். இதை நான் சொன்னால் கோட்சேவின் சீடர் என்பது உளறல்.

அதுசரி, சாகும்வரை மிகப்பெரிய வன்முறையாளராக இருந்த முஹம்மதுவை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களுக்கு காந்தியை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? முஸ்லிம்களின் கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்,அயோக்கியத்தனம். காந்தியின் பல செயல்கள் சுயநலமிக்கவை, முரண்பாடானவை, அறிவுக்கு புறம்பானவை.

சட்டம் said...

ஹமுராபி சட்டங்கள் நடைமுறையில் இருந்த காலத்தில் அதாவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றிருந்த காலத்தில் ஓரு சீர்திருத்தக்கருத்து அது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதைப்பற்றி நீங்கள் பேச அருகதை உள்ளதா. அப்படியெனில் ஹமுராபி சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்கிறீரா. ஹமுராபி சட்டத்தின் ஆதரவாளருக்கு காந்தியை பிடிக்காமல் இருப்பது ஆச்சர்யமில்லை.

சட்டம் said...

//முஹம்மதை பற்றிய, இஸ்லாத்தை பற்றிய உண்மைகளை குரான், ஹதீஸ்,சீரா அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் எடுத்து கூறுவதே எங்களின் நோக்கம். நாங்கள் கூறுவது உண்மையா, பொய்யா என்பதை குரான்,ஹதீஸ்,சீராவை வைத்து எவரும் சரிபார்த்துக்கொள்ளலாம். //

நபியவர்கள் நடத்திய போர்களை கொள்ளை என்பீர். இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வன்முறை செய்தவர்களை திருப்பிஅடிததால் அது பயங்கரவாதம். முறையாக மணம் புரிந்து தாம்பத்யம் நடத்தினால் அதை பாலியல் வன்முறை என்பீர். எதையும் சரியாகப்புரியாத உங்களிடம் விவாதிப்பது எப்படி சரியாகும்?

Ant said...

//முறையாக மணம் புரிந்து தாம்பத்யம் நடத்தினால் அதை பாலியல் வன்முறை என்பீர். எதையும் சரியாகப்புரியாத உங்களிடம் விவாதிப்பது எப்படி சரியாகும்?// 6 வயது சிறுமியை 51 வயது ஆண் திருமணம் செய்தால் அது முறையான திருமணமா? எதிரியை சித்திரவதை செய்து கொன்று அவனது மனைவியை அன்றே திருமணம் என்ற பெயரில் அணுபவித்தல் முறையானதா?

//இஸ்லாத்தே வேணான்னு சொல்லிட்டு தளத்தோட தலைப்புல எதுக்கு இஸ்லாம் .// ஹூபல் அல்லா இருந்தால் வணங்கி விட்ட போங்கள் ஆனால் அதை நம்பாதவர்களை கொலைசெய்வது எந்த வகையில் நியாயம்? கடவுளை மறுத்து போச இஸ்லாமில் அணுமதி உண்டா? கடவுள் நிந்தனை என்று இன்று கொலை செய்வதை கடைபிடிப்பது இஸ்லாம் மட்டுமே!
//இந்த தளத்துக்கு வந்து அண்ணன் ஆனந்த் , தஜ்ஜால் இவங்க என்ன சொன்னாலும் இந்த மூமின்கள் உடனே நம்பி இஸ்லாத்தை வெறுத்து வெளியேற வேண்டுமாம். நல்லா பகல்கனவு காண்றாங்க.// இஸ்லாமியனாக இருக்க வேண்டும் இலலை உயிருடன் இருக்க கூடாது இது எந்த வகையில் நியாயம்?

// நாங்கள் நாயக்கர் , தேவர் , கவுண்டர் போன்ற இடைநிலை சாதியினரிடம் மாமா முறையும் ஆசாரி. பர்னாந்து போன்றோரிடம் தகப்பன் மகன் உறவும் பள்ளர்களிடம் தாத்தா முறை உறவும் கொண்டாடி வருகிறோம்// அவர்களை காயல்பட்டினத்து முஸ்லீம்கள் ஏன் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கு பெண் தருவதில்லை. (அது போலவே கீழக்கரை முஸ்லீம்களும்). கபா இருக்கும் இடத்திற்கு ஏன் மாற்று மதத்தினரை அனுமதிப்பதில்லை. உங்களது தீண்டாமை நியாயமாக படுவது எவ்வாறு?

Ant said...

/ நாங்கள் நாயக்கர் , தேவர் , கவுண்டர் போன்ற இடைநிலை சாதியினரிடம் மாமா முறையும் ஆசாரி. பர்னாந்து போன்றோரிடம் தகப்பன் மகன் உறவும் பள்ளர்களிடம் தாத்தா முறை உறவும் கொண்டாடி வருகிறோம்// குரைஷிகள் சன்னி அஹமதியா என்று ”சமுதாயம்” என்ற பெயலில் இஸ்லாம் அழைப்பது என்ன?

இஸ்லாமியர் அல்லாதவர்களளை இஸ்லாம் காபிர் என்று அழைப்பது இழிவாகத்தான். சாதியால் உயர்வு தாழ்வு கடைபிடித்தாலும் இனக்கமாக வாழ முடிந்தது. ஆனால், காபிர் என்று முத்திரை குத்தப்பட்டால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது. இப்போது புரிகிறாதா? இஸ்லாம் காபிர் என்று அழைக்கும் இழிவான மனிதர்கள் இஸ்லாம் இருக்கும் இடத்தில் இல்லை என்று.

// நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (குர்ஆன், 49:013) // அல்லாவே விளக்கம் எல்லாம் குடுத்திருக்காரு. அதில் இருந்து அவர்தான் மனிதனை பிரித்துள்ளார் என்று அறிந்து கொள்ளலாம்.

//மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களை பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” … (முஸ்லிம், 3723)// அரேபிய குறைஷிகளின் அடிமைகளாக இருந்து அல்லாவை சந்திக்க வாழ்த்துகள்.

சட்டம் said...

//இஸ்லாமியர் அல்லாதவர்களளை இஸ்லாம் காபிர் என்று அழைப்பது இழிவாகத்தான். சாதியால் உயர்வு தாழ்வு கடைபிடித்தாலும் இனக்கமாக வாழ முடிந்தது. ஆனால், காபிர் என்று முத்திரை குத்தப்பட்டால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது. //

இறைமறுப்பாளனை இறைமறுப்பாளன் (காபிர்) என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது.

சட்டம் said...

//6 வயது சிறுமியை 51 வயது ஆண் திருமணம் செய்தால் அது முறையான திருமணமா? //

அரபு நாட்டில் அரசியல்ரீதியாக நடந்த ஒரு திருமணம்தான் மேற்சொன்னது. நபி அரபு நாட்டு அரசர். அங்கு நடைமுறையில் இருந்த வழக்கமே.

சட்டம் said...

//அவர்களை காயல்பட்டினத்து முஸ்லீம்கள் ஏன் மேலப்பாளையம் முஸ்லீம்களுக்கு பெண் தருவதில்லை. (அது போலவே கீழக்கரை முஸ்லீம்களும்). கபா இருக்கும் இடத்திற்கு ஏன் மாற்று மதத்தினரை அனுமதிப்பதில்லை//

அவர்கள் தமது குடும்பத்தினரை தவிர வேறு எவருடனும் மணபந்தம் வைப்பதில்லை. ஊர் வழக்கம் எப்படி இஸ்லாமிய கருத்தாகும்.

இறைவனை நம்பாதவனுக்கு ஆலயத்தில் என்ன வேலை. கலிமா சொல்லி முஸ்லிமாக மாறுங்கள். உங்கள் ஆசை நிறைவேறும். மக்கா மட்டுமல்ல பல வணக்கத்தலங்களிலும் இந்த கட்டுப்பாடு உண்டு.

சட்டம் said...

//சாதியால் உயர்வு தாழ்வு கடைபிடித்தாலும் இனக்கமாக வாழ முடிந்தது.//

ஆமாம் அய்யரும் தலித்தும் சம்மந்தியாக இருந்தார்கள். நம்பூதிரியும் ஈழவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். சிவன் கோவிலில் தலித்துகள்தான் மந்திரம் சொன்னார்கள்.

நல்லா சொல்றாங்க டீடெயிலு.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//ஹமுராபி சட்டங்கள் நடைமுறையில் இருந்த காலத்தில் அதாவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றிருந்த காலத்தில் ஓரு சீர்திருத்தக்கருத்து அது.//

அறிவு வளர்ச்சி இல்லாத பழங்காலத்தில் ஹமுராபி அப்படிப்பட்ட சட்டங்களை ஏற்படுத்தினார். அவை காட்டுமிராண்டி சட்டங்களே. அவற்றை இன்றைய நாகரீக மனிதர்கள் ஏற்கமாட்டார்கள்.

// மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.//

அந்த காட்டுமிராண்டி சட்டங்கள் எந்த நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. அவை அந்த கால மனிதர்களுக்கு தீங்கையே விளைவித்தன.

//அதைப்பற்றி நீங்கள் பேச அருகதை உள்ளதா. அப்படியெனில் ஹமுராபி சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்கிறீரா.//

நான் எப்பொழுது ஹமுராபியை துணைக்கு அழைத்தேன்?

// ஹமுராபி சட்டத்தின் ஆதரவாளருக்கு காந்தியை பிடிக்காமல் இருப்பது ஆச்சர்யமில்லை.//

இப்படியா கோமாளித்தனமாக சம்பந்தமில்லாமல் பேசுவது!

சட்டம் said...

//அதே போன்றதுதான் ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற ஏசுவின் போதனையும். அது நடைமுறை சாத்தியமற்றது. //
ஹமுராபி சட்டங்கள் நடைமுறையில் இருந்த காலத்தில் அதாவது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றிருந்த காலத்தில் ஓரு சீர்திருத்தக்கருத்து அது. மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதைப்பற்றி நீங்கள் பேச அருகதை உள்ளதா. அப்படியெனில் ஹமுராபி சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என சொல்கிறீரா. ஹமுராபி சட்டத்தின் ஆதரவாளருக்கு காந்தியை பிடிக்காமல் இருப்பது ஆச்சர்யமில்லை.

சட்டம் said...

மேலே உள்ள பதிவில் விடுபட்டதை சேர்த்துள்ளேன் அதையும் படிக்கவும்.

சட்டம் said...

ஆனநத்
//இஸ்லாம் என்ற பெயரை பயன்படுத்தாமல் எப்படி அதை அம்பலப்படுத்த முடியும்?//

இஸ்லாம் என்றாலே இறைவனும் நபியும் தான். பிறகு எப்படி இறையில்லா இஸ்லாம் என்ற பெயர் பொருத்தமாகும்.

சட்டம் said...

//இஸ்லாமியனாக இருக்க வேண்டும் இலலை உயிருடன் இருக்க கூடாது இது எந்த வகையில் நியாயம்?//

அப்படிஎன்றால் உலகில் முஸ்லிம்கள் மட்டும்தான் உள்ளனரா. அடடா இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நபியவர்கள் நடத்திய போர்களை கொள்ளை என்பீர்.//

முஹம்மது போர்கள் நடத்தினாரா? எதை போர் என்று அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நடத்தியது எல்லாமே அதிரடி பயங்கரவாத தாக்குதல்கள். அந்த கோழை வீரமாக எந்த போரும் நடத்தியதில்லை. அவர் தன்னுடைய கொள்ளை கூட்டத்தோடு சென்று கிராமங்கள், நகரங்கள்மீது யாரும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர ஆயுதங்களைக்கொண்டு திடீர் தாக்குதல் செய்து அப்பாவி ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொண்டு அவர்களின் பெண்களையும் சிறுவர்களையும் அடிமையாக்கி கொண்டு செல்வதையே சாகும்வரை செய்து வந்தார். இதை அவர் கஸ்வா (Qaswa) என்று அழைத்தார். அவரே இதை போர் என்று அழைக்கவில்லை.

இன்னொன்று, வலிய போர் செய்வது கூட ஒரு உண்மையான இறை தூதர் செய்யும் செயல் இல்லை.

// இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் வன்முறை செய்தவர்களை திருப்பிஅடிததால் அது பயங்கரவாதம்.//

முஸ்லிம்கள் மீது மற்ற மதத்தினர் எவரும் வலிய வன்முறை செயலை செய்வதில்லை. முஹம்மதுவை பின்பற்றி முஸ்லிம்கள்தான் மாற்று மதத்தினர் மீது வலியவந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

// முறையாக மணம் புரிந்து தாம்பத்யம் நடத்தினால் அதை பாலியல் வன்முறை என்பீர்.//

முஹம்மது திடீரென்று ஊருக்குள் அடியாட்களுடன் புகுந்து கண்ணில்பட்ட ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிகொண்டு சென்று அவர்களை தங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்வதை நீங்கள் முறையாக மணம் புரிந்து தாம்பத்யம் நடத்துவது என்று திரித்து கூறுகிறீர்கள். இப்படி பேசுவது அயோக்கியத்தனம் இல்லையா?

// எதையும் சரியாகப்புரியாத உங்களிடம் விவாதிப்பது எப்படி சரியாகும்?//

நான் சரியாக புரிந்துகொண்டுதான் பேசுகிறேன். நீங்கள்தான் உண்மையை மறைத்து திரித்து பேசுகிறீர்கள்.

சட்டம் said...

ஆனந்த்

நான் எப்பொழுது ஹமுராபியை துணைக்கு அழைத்தேன்?












// ஹமுராபி சட்டத்தின் ஆதரவாளருக்கு காந்தியை பிடிக்காமல் இருப்பது ஆச்சர்யமில்லை.//

இப்படியா கோமாளித்தனமாக சம்பந்தமில்லாமல் பேசுவது//
//காந்தியின் அஹிம்சை கொள்கையை எந்த நாடும் பின்பற்றுவதில்லை. அதே போன்றதுதான் ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற ஏசுவின் போதனையும். அது நடைமுறை சாத்தியமற்றது. இதை நெல்சன் மண்டேலாவும் கூறினார். சமீபத்தில் ஒபாமாவும் கூறினார். இதை நான் சொன்னால் கோட்சேவின் சீடர் என்பது உளறல். //

இயேசு பெருமானின் போதனை நடைமுறைக்கு ஒவ்வாதது என நீர் சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம். வன்முறைதான் தீர்வு என்பதே உமது பதிவில் உள்ள அர்த்தம். அதுதான் ஹமுராபி சட்டங்கள்.



சட்டம் said...

யூதர்களின் இறை நம்பிக்கையை சீர்படுத்தியவர் ஏசு. அவரது வழி யூதக்கருத்துகளின் எதிர் நிலை.
நபிகள் அரபிகளின் இறை நம்பிக்கையை சீர்படுத்தியவர். அவரது நிலை அரபிகளின் சிலைவணக்கம் , மூடநம்பிக்கை ஆகியவற்றின் எதிர்நிலை.
தான்நம்பிய கொள்கையை அது

சட்டம் said...

சாதாரண மனிதனாக இருந்த முகமது நபித்துவம் கிடைத்த பிறகு தான் பெற்ற ஞானம் அனைவருக்கும் கிடைக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
சத்தியத்தையும் ஏகத்துவத்தையும் பரப்ப அவர் எடுத்த அத்தனை முயற்சிகளையும் விஷமப்பிரசாரத்தால் அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ பேர் திசை திருப்ப முயன்றும் இஸ்லாமியத்தின் ஒரு செங்கலைக்கூட அசைக்கமுடியவில்லை. அல்லாஹ்வே எங்கள் காவலன். இஸ்லாமிய ஆன்மீக தத்துவங்களை பவுதீகப்பொருளாக புரிந்து கொண்டவர்கள் என்று உண்மையை உணர்கிறார்களோ அன்றே அவர்களின் பிறப்புப்பயனை அடைவர். இல்லையேல் அஞ்ஞானியாகவே அறியப்படுவர்

சட்டம் said...


//முஹம்மது போர்கள் நடத்தினாரா? எதை போர் என்று அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? முஹம்மது நடத்தியது எல்லாமே அதிரடி பயங்கரவாத தாக்குதல்கள். அந்த கோழை வீரமாக எந்த போரும் நடத்தியதில்லை. அவர் தன்னுடைய கொள்ளை கூட்டத்தோடு சென்று கிராமங்கள், நகரங்கள்மீது யாரும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர ஆயுதங்களைக்கொண்டு திடீர் தாக்குதல் செய்து அப்பாவி ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொண்டு அவர்களின் பெண்களையும் சிறுவர்களையும் அடிமையாக்கி கொண்டு செல்வதையே சாகும்வரை செய்து வந்தார். இதை அவர் கஸ்வா (Qaswa) என்று அழைத்தார். அவரே இதை போர் என்று அழைக்கவில்லை. //

ஆனநத் அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதராக இருந்தாலும் ஆறாம் நூற்றாண்டில் நடந்ததை நேரில் பார்த்ததை போல் பேசுகிறார். சரி பரவாயில்லை. உங்கள் பாஷையில் போர் என்றால் என்ன? எதிரிகளிடம் போய் அய்யா சாமி நாங்க ரொம்ப பாவம் உங்க வீடு வாசல் நில புலத்தையெல்லாம் விட்டுட்டு போயிடுங்க என்று சரணடைய வைக்க வேண்டும். அப்படித்தானே .

என்னன்னே நீங்க இதுல வீரமான போர்னு வேற சொல்றீங்க. அது எப்படி ரொம்ப வீரமா போய் பிச்சை சாரி போர் புரியனுமோ?

எந்தக் காலத்திலும் எதிரிகளை வென்றால் அவர்களுடைய உடைமை வென்றவனையே சேரும். எல்லா நாட்டிலும் இதுதான் நடைமுறை .
ஏசு மற்றும் காந்தி இவர்களின் அஹிம்சையும் தவறு என்கிறீர். நபியையும் குறை சொல்கிறீர். என்னதான் சொல்லவருகிறீர்?

சட்டம் said...

இஸ்லாம் பர்ளுவான கட்டாயககடமைகளாக ஐந்து கடமைகளைத்தான் சொல்கிறது. மற்ற சுன்னத்தான செயல்களை செய்வதும் செய்யாததும் அவர் விருப்பம். அதனை செய்யாமல் விட்டால் எந்த தவறுமில்லை. அதில்தான் நபியவர்கள் வாழ்க்கை முறைகள் சுன்னாவாக கருதப்படுகிறது. ஆனால் இவற்றை செய்தால்தான் அவன் முஸ்லிம் என வரன்படுத்தும் உமது செயல் சற்றும் நேர்மையற்றது. இந்த வாதத்தை விரலாட்டிகளிடம் போய் சொல்லுங்கள்.

சட்டம் said...

//இன்னொன்று, வலிய போர் செய்வது கூட ஒரு உண்மையான இறை தூதர் செய்யும் செயல் இல்லை. //

இதைப்பார்யா இறைதூதர் எப்படி இருக்கனும்னு கட்டளை போடறாரு.

நல்லாவே வந்துட்டீங்க

சட்டம் said...

//நம் நாட்டில் முஸ்லீம்களை மற்ற மதத்தினருடன் இணக்கமாக வைத்திருக்க மிகப் பெரும் உதவியாக இருந்த ஸூஃபியிஸத்தை இவர்களால் இஸ்லாமாகவே அங்கீகரிக்க முடியவில்லை! நம் நாட்டில் நிலவும் இஸ்லாமாம் வேடிக்கை//.

சுபியிசத்தை இஸ்லாம் இல்லை என நான் எப்பொழுது சொன்னேன்.! வஹாபிகளால் இழந்த இஸ்லாத்தின் மான்பை உயிரோடு வைத்திருப்பதே சுபியிசம்தான் என்பதை நம்புபவன் நான். நீங்கள் தற்போதைய வஹாபிகளை வைத்து இஸ்லாத்தை எடை போடுவது தவறு. வஹாபிகள் இறைவனை ஆண்டானாகவும் தங்களை அடிமைகளாகவும் சித்தரித்து இஸ்லாத்தில் ஆன்மீகமே இல்லை என்ற தோற்றத்தை உருவாக்கியவர்கள். வெறும் அடையாளம் மற்றும் சுன்னாக்களை கடைப்பிடித்தாலே போதும் என்ற பொருள் சார்ந்த உலகை படைத்து விட்டார்கள். அவர்களுக்கு ஞானமோ , ரட்சண்யமோ கிடையாது. எழுதப்பட்ட கட்டளைக்கிணங்க செயல்படும் கம்ப்யூட்டர் போன்றவர்கள்.
சுபிகள் ஆண்டவனை காதலனாய் நண்பனாய் உருவகித்து ஆன்மஞானத்தை அடைந்தவர்கள். சுபிகளை இஸ்லாமியர் என்றேதான் நான் மதிக்கிறேன். ர

சட்டம் said...

. //இதை அவர் கஸ்வா (Qaswa) என்று அழைத்தார். அவரே இதை போர் என்று அழைக்கவில்லை. //

உமது அறியாமையை என்ன செய்வது . கஸ்வா என்பது நபியவர்களின் ஒட்டகத்தின் பெயர்

ரொம்பவே நல்லா வந்துட்டீங்க

தஜ்ஜால் said...

//கடையநல்லூர் ஜமாத்தின் நடுவே போய் நின்று நான்தான் கட்டுரை எழுதியது என்று சொல்லி தோழரை காப்பாற்றி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? உயிர் பயம் என்றால் காவல்நிலையத்தில் ஆஜராகியாவது சொல்லியிருக்கலாம். //

இந்தக் காட்டுமிராண்டிகள் பிரச்சினையை செந்தோழன்ஷாவுடன் முடித்துக் கொள்ளவில்லை. யாரைத் தாக்குவது என்று புரியாமல் அடுத்ததாக வெளிநாட்டிலிருந்த தோழர் செங்கொடியின் மீது திருப்பினர். அங்கிருந்த உள்ளூர் மதவெறியர்களுடன் இணைந்து அவரது உயிரைப்பறிக்க திட்டமிட்டனர். இதுதான் திரு சட்டம் தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய/தமிழக இஸ்லாமியர்களின் சகிப்புத்தன்மையின் லட்சணம்!
நான் இன்றும் என்னை மறைத்துக் கொண்டிருப்பதற்கு, இஸ்லாமிய மதவெறியர்களால் தாக்கப்படுவேன் என்ற அச்சம் மட்டுமே காரணம். இப்பொழுதும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டியது முஹம்மதின் போதனைகளைப் பின்பற்றும் இஸ்லாமியர்களதான்.

//அல்லது வெகுஜனப் பத்திரிகை எதிலாவது விளம்பரமாவது கொடுத்தீரா. அந்த நிகழ்ச்சியை வைத்து இஸ்லாமை இன்னும் வசை பாடினீரே தவிர அந்த தோழரை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தீரா? நீர் செய்த தவறுக்கு பாவம் அந்த அப்பாவி பலியானார்.//
குறிப்பிட்ட கட்டுரைக்கும் செங்கொடிக்கும், செந்தோழன்ஷாவிற்கும் எந்த சம்பந்தமில்லை என்பது திரு சட்டம் உட்பட அனைத்து முஸ்லீம்களுக்கும் தெரியும். உங்களில் எத்தனை பேர் தோழர்கள் இருவரிடமும் மன்னிப்பைக் கேட்டிருப்பீர்கள்? அல்லது வெகுஜனப் பத்திரிகை எதிலாவது விளம்பரமாவது கொடுத்தார்களா? அல்லது இந்த மதவெறிமடையர்களின் செயலால் தோழர்கள் இருவரும் சந்தித்த பொருளாதார இழப்புகளைதான் சரி செய்தார்களா?

//1980 க்கு அப்பறம் அண்ணன் செவ்வாய் கிரகத்துலதான் குடியிருக்கிறீர்களா. // அதற்குப் பிறகுதான் இந்த மண்ணிற்கு சம்பந்தமே இல்லாத கலாச்சாரத்தை இங்கு கொண்டுவந்து விட்டீர்களே? தம்பி! இன்னும் கனவுலகத்தில்தான் இருக்கிறார்

தஜ்ஜால் said...

@ சட்டம்

//அரபு நாட்டில் அரசியல்ரீதியாக நடந்த ஒரு திருமணம்தான் மேற்சொன்னது.//

9 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்ளுமளவிற்கு அப்படியென்ன அரசியல் தேவை? இப்படியெல்லாம் செய்துதான் முஹம்மது தனது பிழைப்பை ஓட்டவேண்டுமென்றால், அதற்குப் பதிலாக அவர் தனது நாக்கை பிடுங்கி நாண்டு கொண்டு செத்திருக்கலாம்!

//நபி அரபு நாட்டு அரசர்//

பிழைப்பிற்கு வழிதெரியாமல் மக்காவிலிருந்து ஓடிப்போன ஒரு ஓடுகாலி எப்படி அரபு நாட்டின் அரசரானார்?.

//அங்கு நடைமுறையில் இருந்த வழக்கமே.//
அப்படினால் முஹம்மது பின்பற்றியது, மற்றவர்களுக்குப் போதித்தது அரரேபிய கலாச்சாரத்தைதான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்! சிறுமிகளுடன் உடலுறவு கொள்ளும் ஒரு அரேபியக் காமவெறியர் (மரியாதை அவசியமா?) பிரபஞ்சத்திற்கு எப்படி சிறந்த முன்மாதிரியாக இருக்க முடியும்?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//உமது அறியாமையை என்ன செய்வது . கஸ்வா என்பது நபியவர்களின் ஒட்டகத்தின் பெயர்//

Ghazwah என்று எழுதுவதற்கு பதில் Qaswa என்று தவறுதலாக என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் எழுதிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

முஹம்மது மக்காவிலிருந்து மதினாவுக்கு ஓடிப்போனதிலிருந்து அவர் சாகும்வரை சுமார் 9 வருட காலத்தில் அவர் பல திடீர் தாக்குதல்களை நடத்தினார். அவை இரண்டு வகைப்படும். ஒன்று சரிய்யாஹ்(Sariyyah). இன்னொன்று கஸ்வாஹ் (Ghazwah). இவை போர்கள் அல்ல, பயங்கரவாத தாக்குதல்கள்.

சரிய்யாஹ்(Sariyyah) என்பது முஹம்மது கட்டளையிட்டு, ஆனால் அவர் நேரிடையாக பங்கேற்க்காமல் நடந்தவை. அவை மொத்தம் 73.

கஸ்வாஹ் (Ghazwah) என்பது முஹம்மது நேரிடையாக கலந்துகொண்ட அதிரடி திடீர் தாக்குதல்கள். அவை மொத்தம் 27.

இவற்றில் மிக பெரும்பாலான தாக்குதல்கள் தன்னையும் தன்னுடைய மூமின் கொள்ளை கூட்டத்தையும் வளமாக்கிக்கொள்ள, தன்னுடைய இஸ்லாம் என்ற cult ஐ வளர்ப்பதற்கு நிதி திரட்ட, பெண்களை பாலுறவுக்காக பிடிக்க நடத்தப்பட்டவைகள்தான்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//இதைப்பார்யா இறைதூதர் எப்படி இருக்கனும்னு கட்டளை போடறாரு.//

பின்னே, ஒருவன் எந்த கேடுகெட்ட செயலை செய்பவனாக இருந்தாலும் அவனை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் என்ன மடையர்களா?

தஜ்ஜால் said...

//இதை அவர் கஸ்வா (Qaswa) என்று அழைத்தார். அவரே இதை போர் என்று அழைக்கவில்லை. //

உமது அறியாமையை என்ன செய்வது . கஸ்வா என்பது நபியவர்களின் ஒட்டகத்தின் பெயர்.

ரொம்பவே நல்லா வந்துட்டீங்க//
ஆனந்த் தட்டச்சுப்பிழையில் “Qaswa” என்று குறிப்பிட்டது என்னவென்று உமக்குத் தெரியுமா?

“Ghazwa”

தம்பி சட்டம், எங்களிடமே தக்கியாவா?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//இயேசு பெருமானின் போதனை நடைமுறைக்கு ஒவ்வாதது என நீர் சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம்.//

எந்த கிறிஸ்தவ நாடுகள் தங்களை தாக்குபவர்களுக்கு மறு கன்னத்தை காட்டிக்கொண்டு இருக்கின்றன என்று சொல்லுங்கள். அவர்கள்தான் பயங்கரவாத முஸ்லிம்களுக்கு செமத்தையாக உதை கொடுக்கின்றனர். அவர்கள் செய்வதற்கு என்ன அர்த்தமோ அதுதான் என்னுடைய அர்த்தமும்.

// வன்முறைதான் தீர்வு என்பதே உமது பதிவில் உள்ள அர்த்தம். அதுதான் ஹமுராபி சட்டங்கள்.//

உங்களுக்கு அதிக அறிவு ஒன்றும் தேவை இல்லை. சராசரி அறிவோடு என்னுடைய பதிவை படித்து பாருங்கள். நான் சொல்வது என்னவென்று புரியும்.

தஜ்ஜால் said...

//சுபியிசத்தை இஸ்லாம் இல்லை என நான் எப்பொழுது சொன்னேன்.! வஹாபிகளால் இழந்த இஸ்லாத்தின் மான்பை உயிரோடு வைத்திருப்பதே சுபியிசம்தான் என்பதை நம்புபவன் நான்.//

நீர் சொல்லுவதெல்லாம் இஸ்லாம் இல்லை தம்பி! குர்ஆன் சொல்லவேண்டும் முஹம்மது அதை போதித்திருக்க வேண்டும் போதித்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது காதல் கொள்ளுங்கள் என்று எங்கே இருக்கிறது? குர்ஆனை வாசித்தால் அல்லஹ்வின் மீது காதல் வராது கடுப்புதான் வரும்!

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நபிகள் அரபிகளின் இறை நம்பிக்கையை சீர்படுத்தியவர். அவரது நிலை அரபிகளின் சிலைவணக்கம் , மூடநம்பிக்கை ஆகியவற்றின் எதிர்நிலை.
தான்நம்பிய கொள்கையை அது//

முஹம்மது சிலை வணக்கம் தவறு என்று நம்பியிருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இங்கே வள்ளலார் செய்ததுபோல அதை கேட்பவருக்கு அன்பு வழியில் உபதேசம் மட்டும் செய்துவிட்டு போயிருக்க வேண்டும். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை என்று விட்டிருக்க வேண்டும். அவர் அப்படியா நடந்து கொண்டார்? தன்னை ஏற்காதவர்களை உண்மையை மறைப்பவர்கள்(காஃபிர்கள்) என்றார்; இணைவைப்பவர்கள்(முஷ்ரிக்குகள்) என்றார்; ஒவ்வொரு ஊராக சென்று அவர்கள் எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆண்களை கொலை செய்துவிட்டு அவர்களின் பெண்களை தூக்கி சென்று கற்பழித்தார்; அவர்களின் சொத்துக்களை எல்லாம் அபகரித்துக்கொண்டார். இந்த மாபாதக செயல்களை அவர் சாகும்வரை செய்து வந்தார்; மக்காவை அவர் கைப்பற்றியபோது காபாவில் இருந்த சிலைகளை வன்முறையாக எல்லாம் உடைத்து அழித்தார்; புனித 4 மாதங்கள் சென்றபின் இணைவைப்பவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள், அவர்களுக்காக ஒழிந்து காத்திருங்கள் என்று தன்னுடைய அடிபொடிகளான முஸ்லிம்களுக்க் கட்டளை இட்டார். இதுதான் இறை நம்பிக்கையை சீர்படுத்தும் லட்சணமா? இது கொஞ்சம் கூட அறிவே இல்லாத ஒரு மூர்க்கனின், காட்டுமிராண்டியின் அரக்கத்தனம்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//சரி பரவாயில்லை. உங்கள் பாஷையில் போர் என்றால் என்ன? எதிரிகளிடம் போய் அய்யா சாமி நாங்க ரொம்ப பாவம் உங்க வீடு வாசல் நில புலத்தையெல்லாம் விட்டுட்டு போயிடுங்க என்று சரணடைய வைக்க வேண்டும். அப்படித்தானே .//

போர் என்றால் போரிடும் இரு தரப்பும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போருக்கு தயாராக ஒரு தரப்பு இன்னொரு தரப்புக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். மக்கள் வாழும் இடத்துக்கு வெளியே போர்ககளத்தில் போர் நடக்க வேண்டும். சூரிய அஸ்தமனம் ஆனவுடன் போரிடக்கூடாது, மறுநாள் சூரியன் உதித்த பிறகே போரை தொடர வேண்டும். ஊருக்குள் உள்ள போரில் ஈடுபடாத பெண்களையும்,சிறுவர்களையும், ஏன் ஆண்களையும் கூட தாக்க கூடாது என்பவை பழங்காலத்திலிருந்தே போருக்கான விதிமுறைகள். இந்த விதிமுறைகளை பின்பற்றியே பழங்காலத்திலிருந்து போர்கள் மன்னர்களால் நடத்தப்பட்டு வந்தன. இதைத்தான் போர் என்பர். முஹம்மது செய்த தாக்குதல்கள் (Ghazwah/Sariyyah) எதுவும் இந்த வகையை சேர்ந்தது இல்லை. அவை அனைத்தும் பயங்கரவாத திடீர் தாக்குதல்களே.

//என்னன்னே நீங்க இதுல வீரமான போர்னு வேற சொல்றீங்க. அது எப்படி ரொம்ப வீரமா போய் பிச்சை சாரி போர் புரியனுமோ?//

போருக்கு தயாரான படையுடன் நேருக்குநேர் சண்டையிடுவதே வீரமான போர். முஹம்மது நடத்திய எந்த தாக்குதலும் இந்த வகை போர் அல்ல. மாறாக, ஒளிந்திருந்து திடீரென்று சிவிலியன்களை தாக்கும் பயங்கரவாத செயல்களையே அவர் செய்தார்.

சிந்திக்கமாட்டார்களா said...

முன்னாள் முஸ்லிம்களின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும் ?என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ,சட்டம் ,?

சிந்திக்கமாட்டார்களா said...

முன்னாள் முஸ்லிம்களின் சிந்தனை எப்படி இருக்க வேண்டும் ?என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ,சட்டம் ,?

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//ஆனநத் அவர்கள் இருபதாம் நூற்றாண்டு மனிதராக இருந்தாலும் ஆறாம் நூற்றாண்டில் நடந்ததை நேரில் பார்த்ததை போல் பேசுகிறார்//

முஹம்மதை பற்றி பேசுகிற முஸ்லிம்கள் எல்லோரும் அவர் வாழ்ந்த 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களா?

சட்டம் said...

//இருவரிடமும் மன்னிப்பைக் கேட்டிருப்பீர்கள்? அல்லது வெகுஜனப் பத்திரிகை எதிலாவது விளம்பரமாவது கொடுத்தார்களா? அல்லது இந்த மதவெறிமடையர்களின் செயலால் தோழர்கள் இருவரும் சந்தித்த பொருளாதார இழப்புகளைதான் சரி செய்தார்களா? //

எங்களைத்தான் மதவெறி மடையர்கள் என சொல்லிவிட்டீரே. நாங்கள் அதனாலேயே காப்பாற்றவில்லை என்றே இருக்கட்டும். நீர் ணமற்சொன்ன எதையும் ஏன் செய்யவில்லை. நீங்கள் ஏன் செய்யவில்லை என கேட்டால் ஏற்புடைய பதிலை சொல்லும். கேள்விக்கு கேள்வி பதிலாகுமா.

//ஆனந்த் தட்டச்சுப்பிழையில் “Qaswa” என்று குறிப்பிட்டது என்னவென்று உமக்குத் தெரியுமா?

“Ghazwa”

தம்பி சட்டம், எங்களிடமே தக்கியாவா? //

ghazwa என்றால் போர் யுத்தம் என்றுதானே பொருள் . பின்னாலிருந்து திடீரென அப்பாவிகளை தாக்குவது என எங்கிருந்து பொருள் கண்டீர்.

ரொம்ப நல்லா வந்துட்டீங்க

//தம்பி சட்டம், எங்களிடமே தக்கியாவா? //

இந்த அகந்தை ஒன்றே போதும் தங்களின் கொள்கை வீழ்கிறது என்பதை உணர்த்த.

சட்டம் said...

//குறிப்பிட்ட கட்டுரைக்கும் செங்கொடிக்கும், செந்தோழன்ஷாவிற்கும் எந்த சம்பந்தமில்லை என்பது திரு சட்டம் உட்பட அனைத்து முஸ்லீம்களுக்கும் தெரியும்//

உங்களை முன்னாள் முஸ்லிம் என நம்பி உங்கள் காவி வலையில் விழுந்து விட்டாரே

//அதற்குப் பிறகுதான் இந்த மண்ணிற்கு சம்பந்தமே இல்லாத கலாச்சாரத்தை இங்கு கொண்டுவந்து விட்டீர்களே? தம்பி! இன்னும் கனவுலகத்தில்தான் இருக்கிறார்.//

அதென்ன கணக்கு 1980 அதுதான் அண்ணன் ஞானமடைந்த ஆண்டா , அல்லது காவி அணிந்த ஆண்டா , முதலில் இருந்தே சொல்கிறேன் உங்கள் கொள்கை இஸ்லாமிய வெறுப்பல்ல , இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு. நீங்கள் சொல்லும் 1980 என்பது பொய். பாபர் மசூதியை இடித்தபின்பே இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட அசாதாரணமான சூழல் நிலவியது. அதன் பின்னே ஏற்பட்ட இஸ்லாமியரின் மீதான தாக்குதலும் , எங்களை தீவிரவாதிகளாய் சித்தரிக்கும் இந்துத்வா கொள்கைகளும் எங்களை எவ்வளவு மனவேதனைப் படுத்தியிருக்கும். கைபர் கணவாயை தாண்டி வந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள். நாங்கள் இந்தியர்கள் கிடையாது . அதுதானய்யா நீங்கள் சொல்ல வருவது. இந்த தளத்தில் ஒவ்வொரு ஹதீஸுக்கும் விஷமப்பிரசாரம் செய்யும் இதே வகையறாக்கள் தானே கோவையில் ஒரு சமூகவிரோதி ஒரு போலீஸைக் கொன்றதை இந்துவை முஸ்லிம் கொன்று விட்டான் என விஷமமாய் திரித்தது. எத்தனை சம்பவங்கள். ஆனால் ஆனந்த் சொல்கிறார் இஸ்லாமியரை எந்த மதத்தினரும் துன்புறுத்துவதில்லை என்று . 1980 என்றல்ல என்றுமே நாங்கள் எல்லோருடனும் இணக்கமாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். உங்களைப் போன்றோர்தான் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊத்துவது போன்ற செயல்களை செய்கிறீர்கள்.

சட்டம் said...

//நீர் சொல்லுவதெல்லாம் இஸ்லாம் இல்லை தம்பி! குர்ஆன் சொல்லவேண்டும் முஹம்மது அதை போதித்திருக்க வேண்டும் போதித்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது காதல் கொள்ளுங்கள் என்று எங்கே இருக்கிறது? குர்ஆனை வாசித்தால் அல்லஹ்வின் மீது காதல் வராது கடுப்புதான் வரும்//

இஸ்லாத்தை பற்றி நீங்கள் பாடம் எடுக்க தேவையில்லை. காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//ghazwa என்றால் போர் யுத்தம் என்றுதானே பொருள் . பின்னாலிருந்து திடீரென அப்பாவிகளை தாக்குவது என எங்கிருந்து பொருள் கண்டீர்.//

Ghazwa என்ற அரபி சொல்லிற்கு படை வீரர்களைக்கொண்டு தாக்குதல் செய்ய மேற்கொள்ளும் பயணம் அல்லது திடீர் தாக்குதல் (military expedition or raiding) என்று பொருள். முஹம்மது நடத்தியது அனைத்துமே போர் விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறான திடீர் தாக்குதல்களே. அவை முறையான போர்கள் அல்ல. அவற்றைதான் அவர் கஜ்வா(Ghazwa) என்று அழைத்தார். திடீர் தாக்குதல் நடத்துவதற்க்காக அரேபியாவில் உள்ளா கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் அவரது கொள்ளை கூட்டம் பயணித்ததால் அந்த திடீர் தாக்குதல்களை அவர் கஜ்வா(Ghazwa) என்று அழைத்தார்.

முஹம்மது மேற்கொண்ட தாக்குதல்களில் எது போர் நியதிகளுக்கு உட்பட்டு நடந்த போர் என்று உங்களால் கூற முடியுமா?

சட்டம் said...

/அவர் என்ன செய்திருக்க வேண்டும்? இங்கே வள்ளலார் செய்ததுபோல அதை கேட்பவருக்கு அன்பு வழியில் உபதேசம் மட்டும் செய்துவிட்டு போயிருக்க வேண்டும். அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் உரிமை என்று விட்டிருக்க வேண்டும்.//

150 கோடி முஸ்லிம்கள் நம்பும் நபிகளையும் விமர்சிக்கும் போதும் தாங்கள் இதே கொள்கையை பின்பற்றி இருக்கலாமே. ஏனய்யா கேவலமான வார்த்தைகளை கொண்டு விமர்சிக்கிறீர். ஊருக்குத்தான் உபதேசம் உமக்கு இல்லையா.

அன்பை போதித்த வள்ளலாரை தீ வைத்து கொளுத்தி விட்டு ஜோதியாகி விட்டார் என கதையும் விட்டு இன்று வரை அப்படியே நம்ப வைக்கிறீர்களே. அது எப்படி?
நபிகள் விஷயத்திலும்
இதே மாதிரி முடிவுதான் ஏற்பட்டிருக்கும். நீர் சொன்னது போல் செய்திருந்தால்.

//போர் என்றால் போரிடும் இரு தரப்பும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போருக்கு தயாராக ஒரு தரப்பு இன்னொரு தரப்புக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். மக்கள் வாழும் இடத்துக்கு வெளியே போர்ககளத்தில் போர் நடக்க வேண்டும். சூரிய அஸ்தமனம் ஆனவுடன் போரிடக்கூடாது, மறுநாள் சூரியன் உதித்த பிறகே போரை தொடர வேண்டும். ஊருக்குள் உள்ள போரில் ஈடுபடாத பெண்களையும்,சிறுவர்களையும், ஏன் ஆண்களையும் கூட தாக்க கூடாது என்பவை பழங்காலத்திலிருந்தே போருக்கான விதிமுறைகள். இந்த விதிமுறைகளை பின்பற்றியே பழங்காலத்திலிருந்து போர்கள் மன்னர்களால் நடத்தப்பட்டு வந்தன. இதைத்தான் போர் எ ஏபி நாகரான்பர்//

நீங்க பிஆர் சோப்ராவின் மஹாபாரதத்தையும்

சட்டம் said...

ஏபி நாகராஜன் அவர்களின் புராணப்படங்கள் நிறைய பார்ப்பீரோ .

மிக மிக நல்லா வந்துட்டீங்க

சட்டம் said...

//போருக்கு தயாரான படையுடன் நேருக்குநேர் சண்டையிடுவதே வீரமான போர். முஹம்மது நடத்திய எந்த தாக்குதலும் இந்த வகை போர் அல்ல. மாறாக, ஒளிந்திருந்து திடீரென்று சிவிலியன்களை தாக்கும் பயங்கரவாத செயல்களையே அவர் செய்தார். //

அப்பவே மிலிட்டன்ட்ஸ் , சிவிலியன் என வகைப்பாடு இருந்ததா?

சட்டம் said...

அப்போது இருந்தது இரண்டு வகை மனிதர்தாம். இஸ்லாமை ஏற்றுக் கொண்டோர். ஏற்றுக் கொள்ளாதோர்.இரு தரப்புமே ஒருவருக்கு ஒருவர் எதிரி. இதில் யாரை நீர் அப்பாவி என்கிறீர்.

சட்டம் said...

//போருக்கு தயாரான படையுடன் நேருக்குநேர் சண்டையிடுவதே வீரமான போர்//

இந்தப்போரில் யார் வீரன் என்பதற்காக இருபடையினரும் காலையிலிருந்து மாலை வரை போர்செய்வார்கள். மீண்டும் மறுநாள் போர்செய்வார்கள். எதுவரை நம்ம ஆனந்த் அண்ணன் மாதிரி யாராவது ஒருவர் நடுவராக நின்று யப்பா தம்பி நீதான்ப்பா வீரன் அப்படின்னு சொல்லி இஇஇ சார்பில் கப்பும் சிறந்த போர்வீரனுக்கு ஈஷா மையம் சார்பில் வீரன் ஆப் போர் அப்டின்னு ஒரு கிலோ ஞானமும் கொடுப்பார்கள். இந்தப் போர்ல ஒரு சொட்டு ரத்தம் கூட வராது. கொசு கடிச்சாக்கூட தடவிதான் குடுப்பாங்க. கொல்ல மாட்டாங்க. என்ன ஒரு போர் பார்த்தீர்களா.
ஆனந்த் அண்ணன் போரை ஏதோ ஆஸஸ் கப் டெஸ்ட் மாட்சு போல ரூல்ஸா சொல்றாரு.

போர் என்றாலே எதிரியை கொல்வதே. ரத்தமின்றி யுத்தமில்லை. போரில் தோற்றவன் சொத்து வென்றவனுக்கு. ஏதோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அரசர்கள் மிலிட்டரி வைத்திருந்ததாய் நினைத்தீரோ என்னவோ. வீட்டுக்கொரு ஆண் போரில் ஈடுபடுதல் உலகில் இருந்த வழமைதான். போரில்லாக் காலங்களில் சாமான்ய மனிதர்களாகவே இருப்பர். விவசாயம் செய்வதோ , கால்நடைகளை பராமரிப்பதோ ஏதோ ஒரு வேலை.
இப்படித்தான் ராணுவம் என்ற அமைப்பு வருமுன் இருந்த நிலைமை. அரேபிய தேசத்தில் அவர்கள் போரில் தோற்றவர்களை அவர்கள் சொத்து அனைத்தையும் பிடுங்கி அவர்களை அடிமையாய் விற்பதோ நடைமுறை. தன் ஆயுள் காலத்திலேயே இந்நடைமுறையை ஒழித்து அடிமைகளே இல்லை என்ற உன்னத நிலையை கொண்டு வந்தவர் எங்கள் நபிகள். இஸ்லாத்தின் எதிரிகளை கொஞ்சித்திருத்த அவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. விட்டால் நபிகள்பிரானையே கொல்லத் துணியும் மூர்க்கர்கள். நபிகளின் ஆன்மீக வாழ்க்கையை அறியக்கூட ஆர்வமில்லாதவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தவறு எங்களிடம் இல்லை அது உங்கள் பார்வையில் உள்ளது.

சட்டம் said...

//முஹம்மது மேற்கொண்ட தாக்குதல்களில் எது போர் நியதிகளுக்கு உட்பட்டு நடந்த போர் என்று உங்களால் கூற முடியுமா?//

நபிகளுக்கு அல்லாஹ்வின் நியதிகளுக்கு உட்பட்டுதான் போர் புரியத் தெரியும். ஆனந்தின் சொந்த நியதி சாரி போர் நியதி நபிகளுக்கு எதற்கு?

சட்டம் said...

//ஒவ்வொரு ஊராக சென்று அவர்கள் எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தி அவர்களின் ஆண்களை கொலை செய்துவிட்டு அவர்களின் பெண்களை தூக்கி சென்று கற்பழித்தார்; //

அண்ணன் ஆனந்த் கெளபாய் டைப் அசோகன் ஜெய்சங்கர் கர்ணன் படம் நிறைய பாத்திருக்காரு. அய்யா நான் நம்புறேன்.

நபிகள் ஒவ்வொரு ஊரா சுத்தி இஸ்லாத்தை வளர்த்ததற்கு இப்படி ஒரு குற்றச்சாட்டா.

ஆனந்த் அண்ணே ஏன் இப்படி நபிகள் மீது இப்படி குற்றச்சாட்டு வைக்கிறார்னா , வழக்கமா உள்ளதுதான் நம்ம ஊர்லயே ஒரு பொண்ணு தனக்குப்பிடிக்காதவரோட பேரைக்கெடுக்கிறதுக்கு கண்டு பிடித்த வழிகளில் ஒன்று பாலியல் குற்றச்சாட்டு. அதையே அண்ணனும் செய்கிறார். இதில் வீரம் , போர்னு அக்கப்போர் பண்றார்யா.

மிக மிக மிக நல்லா வந்துட்டீங்க

Unknown said...

சிரிப்புக்கும் சிந்தனைக்கும் உரிய பதிவு தோழரே...மண்ணடி மன்னாரு அறிவியலை குரானுக்குள் நுழைக்காமல் அவரால் பிசினஸ் பண்ண முடியாது. மேலும் முகம்மதின் ரசிகர்களாக இருக்கும் வரையில் மூமின்கள் சிந்தனையை குண்டுச் சட்டிக்குள் குர் ஆனை ஓட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்...

தஜ்ஜால் said...

வாங்க இனியவன்,

மிக்க நன்றி!

// மண்ணடி மன்னாரு அறிவியலை குரானுக்குள் நுழைக்காமல் அவரால் பிசினஸ் பண்ண முடியாது.// இன்ஷா அல்லாஹ்! இதைப் போன்று குர்ஆன் ஹதீஸ்களில் இருக்கும் அதி அற்புத அறிவியல்(!?) செய்திகளை உலகறிச் செய்வதே இந்த அடியானின் நோக்கம். அதற்கான தவ்ஃபீக்கை வழங்க அல்லாஹ்(!?) நமக்கு ரஹ்மத் செய்வானாக

தஜ்ஜால் said...

//உங்களை முன்னாள் முஸ்லிம் என நம்பி உங்கள் காவி வலையில் விழுந்து விட்டாரே//

யார் விழுந்தார்கள்?
சட்டம் தெளிவாகத்தானே இருக்கிறீர்?


///அதென்ன கணக்கு 1980 அதுதான் அண்ணன் ஞானமடைந்த ஆண்டா , அல்லது காவி அணிந்த ஆண்டா , // தமிழகத்தில் வஹாபியிஸம், வலுவாகக் காலூன்றத் துவங்கிய காலம்!

//முதலில் இருந்தே சொல்கிறேன் உங்கள் கொள்கை இஸ்லாமிய வெறுப்பல்ல , இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு. // உங்களுக்குத் திறமையிருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக இறையில்லா இஸ்லாமில் நாங்கள் சித்தரித்ததாக ஒரேஒரு வாக்கியத்தைக் காண்பிக்க முடியுமா?

தஜ்ஜால் said...

//நீங்கள் சொல்லும் 1980 என்பது பொய். பாபர் மசூதியை இடித்தபின்பே இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட அசாதாரணமான சூழல் நிலவியது. அதன் பின்னே ஏற்பட்ட இஸ்லாமியரின் மீதான தாக்குதலும் , எங்களை தீவிரவாதிகளாய் சித்தரிக்கும் இந்துத்வா கொள்கைகளும் எங்களை எவ்வளவு மனவேதனைப் படுத்தியிருக்கும். //

இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால் தீவிரவாதத் செயல்களுக்காக பிடிபட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏன் இஸ்லாமியர்களாக இருப்பது ஏன்? ISIS, al-Qaeda, Hezbollah, Indian Mujahideen, Jaish-e-Mohammed, Lashkar-e-Taiba., Jamaat-ul-Mujahideen Bangladesh, SIMI இவர்களெல்லாம் உங்கள் தோஸ்த் காந்தி சொன்ன அஹிம்சா வழிமுறை மூர்த்திகளா?

இவர்களைக் கண்டித்து அடக்கிவைக்க கையாலாகவில்லை அடுத்தவர்களைக் குறைகூறக் கிளம்பிவிட்டார்கள்!

//கைபர் கணவாயை தாண்டி வந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள். நாங்கள் இந்தியர்கள் கிடையாது . அதுதானய்யா நீங்கள் சொல்ல வருவது. //

வெங்காயம்!
உம்முடைய அறிவு ஏன் இவ்வளவு தரங்கெட்டத் தனமாக இருக்கிறது? இந்தியாவிலிருக்கும் முஸ்லீம்கள் அனைவரும் கைபர் கணவாயைத் தாண்டிவந்தவர்கள் என்று இங்கு சொன்னது யார்? உம்முடைய கீழ்த்தரமான கற்பனைகளை இங்கு விற்பனை செய்ய வேண்டாம்!

தஜ்ஜால் said...

//இந்த தளத்தில் ஒவ்வொரு ஹதீஸுக்கும் விஷமப்பிரசாரம் செய்யும் இதே வகையறாக்கள் தானே//
எது விஷமப் பிரச்சாரம்?

உங்களுடைய குர்ஆனும் ஹதீஸ்களும் தானே? அவற்றை எழுதியது நாங்கள் அல்ல! அவ்வளவு ஏன் இந்தப் பதிவில்கூட ஹதீஸ்களில் இருப்பதை அப்படியேதான் கொடுத்திருக்கிறோம் இதுவரை உங்களால் அதை மறுக்க முடியவில்லை.

// கோவையில் ஒரு சமூகவிரோதி ஒரு போலீஸைக் கொன்றதை இந்துவை முஸ்லிம் கொன்று விட்டான் என விஷமமாய் திரித்தது. எத்தனை சம்பவங்கள்.//

சட்டம், கோவையில் அந்த சமூகவிரோதிகளுக்கு எப்படி அவ்வளவு துணிச்சல் வந்தது? எங்கிருந்து வந்தது ? என்பதையும் அவர்களது தீச்செயலால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளையும் நாங்கள் நன்றாகவே அறிவோம்!.

// ஆனால் ஆனந்த் சொல்கிறார் இஸ்லாமியரை எந்த மதத்தினரும் துன்புறுத்துவதில்லை என்று . 1980 என்றல்ல என்றுமே நாங்கள் எல்லோருடனும் இணக்கமாகவே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். உங்களைப் போன்றோர்தான் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊத்துவது போன்ற செயல்களை செய்கிறீர்கள்.//

அப்படியானால் கொள்ளி எரிந்து கொண்டுதான் இருக்கிறதா? இணக்கம் சுணக்கம் என்று ஏதோ முனங்கிக் கொண்டிருந்தீர்கள்?

தஜ்ஜால் said...

// நீர் ணமற்சொன்ன எதையும் ஏன் செய்யவில்லை. நீங்கள் ஏன் செய்யவில்லை என கேட்டால் ஏற்புடைய பதிலை சொல்லும். கேள்விக்கு கேள்வி பதிலாகுமா.//

அகப்பட்டவரை தாக்கி அழிக்க வேண்டுமென்ற வெறி, செந்தோழன்ஷாவிடம் ஒருகுறைந்தபட்ச நேர்மையைக் கூட காண்பிக்க முடியாமல் தடுத்துவிட்டது. ஒரு அப்பாவியை அநியாயமாக தண்டித்தது நீங்கள். ஆனால் நான் பதில் சொல்ல வேண்டும்? முஹம்மதுவின் போதனைகளின் இலட்சணம் இவ்வளவுதான்!

நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி, எங்களது மதஉணர்வு புண்பட்டுவிட்டதென்று கையில் கிடைத்தவரையெல்லாம் நையப் புடைப்பீர்கள் உங்களால் அநியாயமாகப் பாதிக்கப்பட்டவர்களிடமெல்லாம் சென்று நாங்கள் இழப்பீடு செய்து கொண்டிருக்க வேண்டும் அப்படித்தானே?

இரண்டு அப்பவிகளை ஊர்கூடி தண்டித்திருக்கிறீர்கள்! இன்றுவரை அவர்களிடம் உங்களுடைய தவறுக்கு மன்னிப்பையோ வருத்தத்தையோ கேட்கவிடாமல் செய்து கொண்டிருப்பது எது?

தஜ்ஜால் said...

// போர் என்றாலே எதிரியை கொல்வதே. ரத்தமின்றி யுத்தமில்லை. போரில் தோற்றவன் சொத்து வென்றவனுக்கு. ஏதோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அரசர்கள் மிலிட்டரி வைத்திருந்ததாய் நினைத்தீரோ என்னவோ. வீட்டுக்கொரு ஆண் போரில் ஈடுபடுதல் உலகில் இருந்த வழமைதான். போரில்லாக் காலங்களில் சாமான்ய மனிதர்களாகவே இருப்பர். விவசாயம் செய்வதோ , கால்நடைகளை பராமரிப்பதோ ஏதோ ஒரு வேலை.
இப்படித்தான் ராணுவம் என்ற அமைப்பு வருமுன் இருந்த நிலைமை. அரேபிய தேசத்தில் அவர்கள் போரில் தோற்றவர்களை அவர்கள் சொத்து அனைத்தையும் பிடுங்கி அவர்களை அடிமையாய் விற்பதோ நடைமுறை. //

இப்படித்தான் உண்மைகளை உளறிக் கொட்டவேண்டும்! Good keep it up! ஆனால் ஒரு திருத்தம் முஹம்மது செய்தவைகள் போர்கள் அல்ல! திருட்டை, கொள்ளையடித்தலை நோக்கமாகக் கொண்ட திடீர்த் தாக்குதல்கள்!

//தன் ஆயுள் காலத்திலேயே இந்நடைமுறையை ஒழித்து அடிமைகளே இல்லை என்ற உன்னத நிலையை கொண்டு வந்தவர் எங்கள் நபிகள். //

என்னது…?

முஹம்மது தன்வாழ்நாளில் அடிமைமுறையை முற்றிலும் ஒழித்தாரரா? உமக்கு இஸ்லாமைப்பற்றி ஒம்றுமே தெரியாதென்பதற்கு இந்த வாக்குமூலமே போதுமானது!

//இஸ்லாத்தின் எதிரிகளை கொஞ்சித்திருத்த அவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்ல. விட்டால் நபிகள்பிரானையே கொல்லத் துணியும் மூர்க்கர்கள். //

ஓ.. அப்படியா?

தன்னை கடவுளின் தூதராக ஏற்க மறுத்தவர்களை நயவஞ்சகமாக் கொன்று குவித்தவர் முஹம்மது! தன்னுடைய பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த இப்படிப் பல்வேறு பொய்களை இட்டுக்கட்டிக்கூறிக் கொண்டார்!

//நபிகளின் ஆன்மீக வாழ்க்கையை அறியக்கூட ஆர்வமில்லாதவர்களுக்கு எல்லாமே தவறாகத்தான் தெரியும். தவறு எங்களிடம் இல்லை அது உங்கள் பார்வையில் உள்ளது.//

ஆன்மீகமா?

முஹம்மதிற்கு பெண்மீகம் மட்டும்தான் தெரியும். அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!

தஜ்ஜால் said...

//நபிகளுக்கு அல்லாஹ்வின் நியதிகளுக்கு உட்பட்டுதான் போர் புரியத் தெரியும். ஆனந்தின் சொந்த நியதி சாரி போர் நியதி நபிகளுக்கு எதற்கு?//

முஹம்மது செய்தவைகள் போர்களா இல்லை பயங்கரவாதச் செயல்களா என்பதை விவாதித்துவிடுவோம்.

என்ன… சட்டம் சரிதானே?

திறனிருக்கும் முஃமின்கள் பங்கெடுக்கலாம்!

Anonymous said...


//தனக்குப்பிடிக்காதவரோட பேரைக்கெடுக்கிறதுக்கு கண்டு பிடித்த வழிகளில் ஒன்று பாலியல் குற்றச்சாட்டு. அதையே அண்ணனும் செய்கிறார். இதில் வீரம் , போர்னு அக்கப்போர் பண்றார்யா.//

ஆமாய்யா … முஹம்மதுக்கு எதுக்குய்யா 13 பொண்டாட்டியும், கணக்கில்லாத வெப்பாட்டியும்?

அறுக்கவே மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அரிவாளா?

சட்டம் said...

//உங்களுடைய குர்ஆனும் ஹதீஸ்களும் தானே? அவற்றை எழுதியது நாங்கள் அல்ல! அவ்வளவு ஏன் இந்தப் பதிவில்கூட ஹதீஸ்களில் இருப்பதை அப்படியேதான் கொடுத்திருக்கிறோம் இதுவரை உங்களால் அதை மறுக்க முடியவில்லை.//

ஹதீஸ்களுக்கும் , குர் ஆனுக்கும் , இல்லாத சற்றும் பொருந்தாத விளக்கம் என்று தெரிந்தும் , இதுதான் உண்மை என அளந்து விடுவீர்களே அர்த்தங்கள். அதைத்தான் விஷமப்பிரச்சாரம் என்கிறேன். நாங்கள் எந்த ஹதீதை எல்லாம் ஏற்க மாட்டோமோ அதை வைத்து செய்வீர்களே ஒரு தக்கியா. அதையும்தான் விஷமப்பிரசாரம் என்கிறேன்.

சட்டம் said...

// உங்களுக்குத் திறமையிருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக இறையில்லா இஸ்லாமில் நாங்கள் சித்தரித்ததாக ஒரேஒரு வாக்கியத்தைக் காண்பிக்க முடியுமா? //

இதிலும் உண்மையை விளக்க விருப்பமில்லை. அதென்ன திறமையிருந்தால் என்ற சவால். ஏனென்றால் அவ்

சட்டம் said...

ஏனென்றால் அவ்வளவு திறமையாக முஸ்லிம்களை நம்ப வைத்திருக்கிறீர்கள். இது முன்னாள் முஸ்லிம்கள் நடத்தும் தளம்தான். காவிகள் நடத்தும் தளம் அல்ல என்று. நிரூபிக்கிறேன் இது காவிகள் நடத்தும் தளம்தான் என்று. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.

சட்டம் said...

//இஸ்லாமியர்கள் அனைவருமே தீவிரவாதிகள் கிடையாது என்பது உண்மைதான். ஆனால் தீவிரவாதத் செயல்களுக்காக பிடிபட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் ஏன் இஸ்லாமியர்களாக இருப்பது ஏன்? ISIS, al-Qaeda, Hezbollah, Indian Mujahideen, Jaish-e-Mohammed, Lashkar-e-Taiba., Jamaat-ul-Mujahideen Bangladesh, SIMI இவர்களெல்லாம் உங்கள் தோஸ்த் காந்தி சொன்ன அஹிம்சா வழிமுறை மூர்த்திகளா//
?

இதுதான் சங்பரிவாரின் கொள்கை. அதாவது அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி கிடையாது. ஆனால் தீவிரவாதிகள் அனைவருமே இஸ்லாமியர்தான்.
தீவிரவாதிகள் மனிதர்களே அல்ல. அவன் குடும்பத்தார் உள்ளே இருந்தால் கூட குண்டு வைக்க தயங்க மாட்டான்..
மேலும் நீர் மேற்சொன்ன இயக்கங்களின் பிபின்புலத்தில் உள்ள அரசியல் , அவை உருவான வரலாறு , உருவாக்கியது யார் , எல்லாத் தகவலையும் நீர் அறியாதவரல்ல.
பெட்ரோல் சார்ந்த பொருளாதரத்தை டாலர் சா
மதிப்பிலேயே வைத்திருப்பது என பல அரசியல் உண்டு.
விநாயக் நாதுராம் கோட்சே வையும் நீர் இஸ்மாயில் என்றுதானே சொல்வீர்.
இதுவரை உலகில் பிடிபட்ட பிடிபடாத தீவிரவாதிகளில் எல்லாருமே தீவிரவாதிதான். அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்துவது தவறு. தீவிரவாதிகளுக்கு மதம் இனம் கொள்கை எல்லாமே தீவிரவாதம்தான். வேறு எதுவும் கிடையாது. நீர் செவ்வாய்கிரகத்திலிருந்து பூமிக்கு வரவும்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//அண்ணன் ஆனந்த் கெளபாய் டைப் அசோகன் ஜெய்சங்கர் கர்ணன் படம் நிறைய பாத்திருக்காரு. அய்யா நான் நம்புறேன்.//

ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் மற்றும் அல் தபரி எழுதிய சீரா என்ற முஹம்மதின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் கூறப்பட்டுள்ள முஹம்மதின் குற்ற செயல்களையே நாங்கள் எடுத்து கூறுகிறோம். தைரியமிருந்தால் முஹம்மது அந்த குற்றங்களை செய்யவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்.

//நபிகள் ஒவ்வொரு ஊரா சுத்தி இஸ்லாத்தை வளர்த்ததற்கு இப்படி ஒரு குற்றச்சாட்டா.//

முஹம்மது ஊர் ஊரா சென்று திடீர் தாக்குதல் நடத்தி ஆண்களை கொன்றுவிட்டு அவர்களின் செல்வங்களை கொள்ளை அடித்து, பெண்களை எல்லாம் பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ள சிறைபிடித்து கொண்டு செல்வதையே சாகும்வரை செய்து வந்தார். இதைதான் மேற்சொன்ன ஆதாரபூர்வமான இஸ்லாமிய நூல்கள் கூறுகின்றன.

//ஆனந்த் அண்ணே ஏன் இப்படி நபிகள் மீது இப்படி குற்றச்சாட்டு வைக்கிறார்னா , வழக்கமா உள்ளதுதான் நம்ம ஊர்லயே ஒரு பொண்ணு தனக்குப்பிடிக்காதவரோட பேரைக்கெடுக்கிறதுக்கு கண்டு பிடித்த வழிகளில் ஒன்று பாலியல் குற்றச்சாட்டு. அதையே அண்ணனும் செய்கிறார். இதில் வீரம் , போர்னு அக்கப்போர் பண்றார்யா.//

முஹம்மதின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றசாட்டுகளுக்கும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//நபிகளுக்கு அல்லாஹ்வின் நியதிகளுக்கு உட்பட்டுதான் போர் புரியத் தெரியும். ஆனந்தின் சொந்த நியதி சாரி போர் நியதி நபிகளுக்கு எதற்கு?//

சரியானது என்று உலகம் முழுதும் மனிதர்கள் வகுத்துக்கொண்ட போர் நியதிகளின்படி முஹம்மது போர் செய்யவில்லை. யாரும் அறியாதவேளையில் அவர் தன்னுடைய மூமின் கொள்ளை கூட்டத்துடன் கிராமங்களுக்குள், நகரங்களுக்குள் புகுந்து அதிரடியாக திடீர் தாக்குதல் நடத்தி ஆண்களை கொலைசெய்துவிட்டு ,கொள்ளை,கற்பழிப்பு செய்வதையே சாகும்வரை செய்து வந்தார். எந்த ஆக்கிரமத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ் சொன்னது என்று முஹம்மது கூறிவிட்டால் அது அல்லாஹ் கொடுத்த நியதி ஆகிவிடாது. முஹம்மது தன்னுடைய மாபாதக செயல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அல்லாஹ்வின் பெயரை தவறாக பயன்படுத்திக்கொண்டார். குரான் அல்லாஹ்வின் வார்த்தை என்பதே புரட்டு,கடைந்தெடுத்த பொய்.

ஆனந்த் சாகர் said...

@சட்டம்,

//போர் என்றாலே எதிரியை கொல்வதே. ரத்தமின்றி யுத்தமில்லை.//

போர் என்றால் போரிடும் இரு தரப்பும் போருக்கு தயாரான பிறகு ஊருக்கு வெளியே போர்ககளத்தில் நடப்பது. இதுதான் முஹம்மதுக்கு முந்தைய பழங்காலத்திலிருந்தே உலகம் முழுதும் நடந்து வந்த போர் முறை. இப்படி எந்த ஒரு போரும் முஹம்மது செய்யவில்லை.
அவர் செய்தது எல்லாம் யாரும் அறியாத வேலையில் கொள்ளை கூட்டத்தோடு ஊருக்குள் புகுந்து கண்ணில் பட்ட அப்பாவி ஆண்களை எல்லாம் அதிரடியாக ஆயுதங்களால் தாக்கி கொன்றுவிட்டு அந்த ஊரில் உள்ள அவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு அவர்களின் குழந்தைகளையும் பெண்களையும் அடிமை படுத்தி கொண்டுசெல்வது; அந்த பெண்களில் அழகான 20 வயதுக்கு குறைவான இளம் பெண்களை தனக்கு எடுத்துக்கொண்டு மற்ற பெண்களை தன்னுடைய மூமின் கொள்ளை கூட்டத்துக்கு பங்கிட்டு கொடுப்பது. முஹம்மதுவும் அவரது மூமின் கொள்ளை கூட்டமும் அந்த பெண்களோடு அவர்களின் தந்தை,பிள்ளை,சகோதரன் கொலை செய்யப்பட்ட அன்று இரவே பாலுறவு கொள்வது வழக்கம். இந்த மகா கொடுமைகள் அந்த காலத்தில்கூட போர் முறை அல்ல. அது பயங்கரவாத காட்டுமிராண்டி செயல்.

// போரில் தோற்றவன் சொத்து வென்றவனுக்கு.//

யார் சொன்னது? முஹம்மது ஊர் சொத்தை கொள்ளை அடித்தால் அது வழக்கமான ஒன்றாகிவிடுமா? ஒரு மன்னன் இன்னொரு மன்னனை போரில் தோற்கடித்தால் தோற்றவனின் நாட்டை தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டு அதையும் அவன் ஆளுவான். மற்றபடி தோற்ற நாட்டில் உள்ள போரில் ஈடுபடாத ஆண்களை எல்லாம் கொலை செய்துவிட்டு அவர்களின் சொத்துக்களை எடுத்துக்கொண்டு அவர்களின் பெண்களை எல்லாம் கற்பழிக்க மாட்டான். மக்களின் சொத்தை அவன் எடுத்துக்கொள்ளமாட்டான்.

// ஏதோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அரசர்கள் மிலிட்டரி வைத்திருந்ததாய் நினைத்தீரோ என்னவோ. வீட்டுக்கொரு ஆண் போரில் ஈடுபடுதல் உலகில் இருந்த வழமைதான். போரில்லாக் காலங்களில் சாமான்ய மனிதர்களாகவே இருப்பர். விவசாயம் செய்வதோ , கால்நடைகளை பராமரிப்பதோ ஏதோ ஒரு வேலை.//

முஹம்மதுக்கு முந்தைய பழங்காலத்திலும் எல்லா நாட்டு அரசர்களும் நிரந்தரமான ராணுவ படைகளை வைத்திருந்தனர். குடிமக்கள் வேறு, ராணுவம் வேறு.

//இப்படித்தான் ராணுவம் என்ற அமைப்பு வருமுன் இருந்த நிலைமை.//

முஹம்ம்துவுக்கு முன்பே ராணுவம் என்ற அமைப்பு எல்லா நாட்டிலும் ஏற்பட்டிருந்தது.

// அரேபிய தேசத்தில் அவர்கள் போரில் தோற்றவர்களை அவர்கள் சொத்து அனைத்தையும் பிடுங்கி அவர்களை அடிமையாய் விற்பதோ நடைமுறை.//

முஹம்மது வாழ்ந்த அரேபிய பகுதி மன்னர் ஆட்சி செய்யும் ஒரு நாடாக இருக்கவில்லை. அங்கே எந்த அரசாங்கமும் இருக்கவில்லை. அங்கே மத்திய அதிகார மையம் என்று ஒன்று இருக்கவில்லை. நாகரீக வளர்ச்சி பெறாத மக்கள் அங்கு பல குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அந்த குழுக்கள் ஒன்றில் பிறந்தவர்தான் முஹம்மது. அவர் பார்த்து வளர்ந்தது எல்லாம் நாகரீகமற்ற மனிதர்களின் வாழ்க்கை முறையை. அங்கே அவ்வப்பொழுது இனக்குழுக்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடக்கும், கொலை,கொள்ளை சர்வ சாதாரணம். மற்றவர்களின் பெண்களை தூக்கிக்கொண்டு செல்வது, கற்பழிப்பது வழக்கம். இதை பார்த்து வளர்ந்த முஹம்மது அந்த காட்டுமிராண்டி வழக்கத்தையே சாகும்வரை பின்பற்றினார். இப்படிப்பட்ட காட்டுமிராண்டி எப்படி உலக மக்கள் அனைவருக்கும், ஏன் இந்த பிரபஞ்சத்துக்கே உலக முடிவுநாள் வரை முன்மாதிரி மனிதராக இருக்க முடியும்?

// தன் ஆயுள் காலத்திலேயே இந்நடைமுறையை ஒழித்து அடிமைகளே இல்லை என்ற உன்னத நிலையை கொண்டு வந்தவர் எங்கள் நபிகள்.//

நல்லா தமாஷ் பண்றீங்க! இஸ்லாத்தை நன்கு படித்து தெளிந்த பின்பு எங்களிடம் பேச வாருங்கள்.

தஜ்ஜால் said...

@சட்டம்

//இதிலும் உண்மையை விளக்க விருப்பமில்லை. அதென்ன திறமையிருந்தால் என்ற சவால். ஏனென்றால் அவ்//
//ஏனென்றால் அவ்வளவு திறமையாக முஸ்லிம்களை நம்ப வைத்திருக்கிறீர்கள். இது முன்னாள் முஸ்லிம்கள் நடத்தும் தளம்தான். காவிகள் நடத்தும் தளம் அல்ல என்று //
முஸ்லீம்கள் எங்களது தளத்தை கருத்தூன்றி கவனிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றிகள்
// நிரூபிக்கிறேன் இது காவிகள் நடத்தும் தளம்தான் என்று. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.//
இந்த வெற்று வாய்ச்சவடாலுக்கு குறைச்சலில்லை! உண்மையிலேயே உமக்குத் திறமையிருந்தால்(?) நிரூபிக்கலாம்!

சட்டம் said...

//வெங்காயம்!
உம்முடைய அறிவு ஏன் இவ்வளவு தரங்கெட்டத் தனமாக இருக்கிறது? இந்தியாவிலிருக்கும் முஸ்லீம்கள் அனைவரும் கைபர் கணவாயைத் தாண்டிவந்தவர்கள் என்று இங்கு சொன்னது யார்? உம்முடைய கீழ்த்தரமான கற்பனைகளை இங்கு விற்பனை செய்ய வேண்டாம்!//

வெங்காயம் என்று சொன்னால் பெரியார் பேரன் என நம்புவோமா.

கைபர் தாண்டி வந்தவர்கள் என முஸ்லிம்களை எப்பொழுது சொன்னேன்.
ஆரியர்களைத்தான் சொன்னேன். சரியாகப்படிக்கவும்.

//சட்டம், கோவையில் அந்த சமூகவிரோதிகளுக்கு எப்படி அவ்வளவு துணிச்சல் வந்தது? எங்கிருந்து வந்தது ? என்பதையும் அவர்களது தீச்செயலால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளையும் நாங்கள் நன்றாகவே அறிவோம்!.//

அப்பாவி என்பது அப்பாவி முஸ்லிம்கள் என்றால் சரி.

சட்டம் said...

//இப்படித்தான் உண்மைகளை உளறிக் கொட்டவேண்டும்! Good keep it up! ஆனால் ஒரு திருத்தம் முஹம்மது செய்தவைகள் போர்கள் அல்ல! திருட்டை, கொள்ளையடித்தலை நோக்கமாகக் கொண்ட திடீர்த் தாக்குதல்கள்!//

உளறுவது யார் என்று படிப்போருக்கு தெரியும்.

சங்க கால போர்முறைகளில் ஒன்றான ஆநிரைகவர்தல் என்னதென்று அறிவீரா?

தஜ்ஜால் said...

//இதுதான் சங்பரிவாரின் கொள்கை. அதாவது அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி கிடையாது. ஆனால் தீவிரவாதிகள் அனைவருமே இஸ்லாமியர்தான். //

பரவாயில்லையே..! சங்பரிவார பண்டாரங்களுக்கு நீர்தான் கொள்கைகளை வகுத்துக் கொடுக்கிறீர்கள் போலிருக்கிறதே?

//தீவிரவாதிகள் மனிதர்களே அல்ல. அவன் குடும்பத்தார் உள்ளே இருந்தால் கூட குண்டு வைக்க தயங்க மாட்டான்.//
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் இதுதான் முஹம்மதின் உன்னத போதனை! முஹம்மதுவிற்காக எதையும் எவரையும் இழக்கத்துணிபவனே உண்மையான ஜிஹாதி! பரவாயில்லை...! எப்பொழுதுமே உளறிக் கொண்டிருப்பீர் ஆனால் எப்படித் தெளிவாகப் பேசுகிறீர்கள் பேசுவது சட்டம் தானா? ஆச்சரியமாக இருக்கிறது!

தஜ்ஜால் said...

//மேலும் நீர் மேற்சொன்ன இயக்கங்களின் பிபின்புலத்தில் உள்ள அரசியல் , அவை உருவான வரலாறு , உருவாக்கியது யார் , எல்லாத் தகவலையும் நீர் அறியாதவரல்ல. பெட்ரோல் சார்ந்த பொருளாதரத்தை டாலர் சா
மதிப்பிலேயே வைத்திருப்பது என பல அரசியல் உண்டு. // தொண்டியில் சில இளைஞர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக டி-ஷர்ட் அணிந்து காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் சிக்கிக் கொண்டதை அறிவீர்கள். அவர்கள் எந்த பெட்ரோல் டாலர்களை மனதில் வைத்து ஆதரவு தெரிவித்தனர்? தம்பி சட்டம் எல்லாம் எங்களுக்குத் தெரியுமப்பா.. !

//விநாயக் நாதுராம் கோட்சே வையும் நீர் இஸ்மாயில் என்றுதானே சொல்வீர். // நான் என்ன சொல்ல்வேண்டுமென்பதை முடிவு செய்ய நீர் யார்?

தஜ்ஜால் said...

//இதுவரை உலகில் பிடிபட்ட பிடிபடாத தீவிரவாதிகளில் எல்லாருமே தீவிரவாதிதான். அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்துவது தவறு. தீவிரவாதிகளுக்கு மதம் இனம் கொள்கை எல்லாமே தீவிரவாதம்தான். வேறு எதுவும் கிடையாது.//
ஜிஹாத் செய்வதாக கூறிக் கொள்பவர்களும் அவர்களுக்காக பொதுவெளியில் பூசிமெழுகி ஆதரவை கோருவோரும் யார்? முஹம்மதின் போதனைகள் தலைக்கேறினால் அது தீவிரவாதத்தில்தான் முடியும்!
வெகுஜனங்களிடம் தீவிரவாத எதிர்ப்பதைப் போன்றும், இஸ்லாமிய வட்டத்திற்குள் புனிதப்போராளிகளின்(!) வீரதீர செயல்களை சிலேகித்துப் பேசும் இஸ்லாமியர்களின் இரட்டைவேடத்தை உம்மைவிட நான் நன்கு அறிந்தவன்!

தஜ்ஜால் said...

//அப்பாவி என்பது அப்பாவி முஸ்லிம்கள் என்றால் சரி.//

நீர் சும்மா இருந்தாலும் உமது வாய் அவ்வப்பொழுது உம்மை வெளிக் காண்பித்து விடுகிறது. நான் அப்பவிகளென்று குறிப்பிட்டது பதிக்கப்பட்ட அனைவரையும் சேர்த்துதான், நீர் நினைப்பதைபோல முஸ்லீம்களை மட்டும் குறிப்பிட்டு அல்ல!

தஜ்ஜால் said...

//சங்க கால போர்முறைகளில் ஒன்றான ஆநிரைகவர்தல் என்னதென்று அறிவீரா?//
முஹம்மது செய்தவைகள் போர்களா இல்லை பயங்கரவாதச் செயல்களா என்பதை விவாதித்துவிடுவோம்.

என்ன… சட்டம் தயாரா..?
உம்மால் முடியவில்லையெனில் போய் பெரியவர்கள் யாரையாவது அழைத்து வரவும்!

திறனிருக்கும் முஃமின்கள் பங்கெடுக்கலாம்!

சட்டம் said...

//இப்படித்தான் உண்மைகளை உளறிக் கொட்டவேண்டும்! Good keep it up! ஆனால் ஒரு திருத்தம் முஹம்மது செய்தவைகள் போர்கள் அல்ல! திருட்டை, கொள்ளையடித்தலை நோக்கமாகக் கொண்ட திடீர்த் தாக்குதல்கள்!//

நபிகள் பற்றி பேசக்கூட அருகதையற்றவர்களின் அற்பத்தனமான விமர்சனங்களின் வயது 1422 . இதில் ஒரு பங்கு வயது கூட இல்லாத உங்களின் விமர்சனம் நபியின் புகழை ஒரு துகள் அளவு கூட குறையாது. நபியின் ஞான வாழ்க்கையை புரிந்து கொள்ளவோ அறிந்து கொள்ளவோ ஆர்வமில்லாத உமக்கு நபி பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.

சட்டம் said...

//ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் முஹம்மத் இப்னு இஸ்ஹாக் மற்றும் அல் தபரி எழுதிய சீரா என்ற முஹம்மதின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களில் கூறப்பட்டுள்ள முஹம்மதின் குற்ற செயல்களையே நாங்கள் எடுத்து கூறுகிறோம். தைரியமிருந்தால் முஹம்மது அந்த குற்றங்களை செய்யவில்லை என்று ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்//
.அண்ணே ஒங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல. நபி செஞ்சார்னு நீங்க சொல்றத நான் செய்யலன்னு சொன்னா என்ன அர்த்தம். வரலாறையே மாத்தச் சொல்றீங்கன்னு அர்த்தம். இப்டி வெள்ளந்தியா இருக்காதண்ணே. கொஞ்சம் சூதானமா நடந்துக்கங்க.

சட்டம் said...

//முஹம்மது ஊர் ஊரா சென்று திடீர் தாக்குதல் நடத்தி ஆண்களை கொன்றுவிட்டு அவர்களின் செல்வங்களை கொள்ளை அடித்து, பெண்களை எல்லாம் பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ள சிறைபிடித்து கொண்டு செல்வதையே சாகும்வரை செய்து வந்தார். இதைதான் மேற்சொன்ன ஆதாரபூர்வமான இஸ்லாமிய நூல்கள் கூறுகின்றன//

நபி இவ்ளோ பிசியா இருந்துட்டு எப்படித்தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினாரோ.?

விட்டா நபிகளுக்கு குர் ஆனே தெரியாதுன்னு சொல்வீங்க போல .
//முஹம்மதின் மீது வைக்கப்படும் அனைத்து குற்றசாட்டுகளுக்கும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. //
.

அண்ணே உறுதியான ஆதாரம்னா எப்படி ராணா டார் முறுக்கு கம்பில செஞ்சதா.

சட்டம் said...

//முஹம்மது வாழ்ந்த அரேபிய பகுதி மன்னர் ஆட்சி செய்யும் ஒரு நாடாக இருக்கவில்லை. அங்கே எந்த அரசாங்கமும் இருக்கவில்லை. அங்கே மத்திய அதிகார மையம் என்று ஒன்று இருக்கவில்லை. நாகரீக வளர்ச்சி பெறாத மக்கள் அங்கு பல குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அந்த குழுக்கள் ஒன்றில் பிறந்தவர்தான் முஹம்மது. அவர் பார்த்து வளர்ந்தது எல்லாம் நாகரீகமற்ற மனிதர்களின் வாழ்க்கை முறையை. அங்கே அவ்வப்பொழுது இனக்குழுக்களுக்கிடையே அடிக்கடி சண்டை நடக்கும், கொலை,கொள்ளை சர்வ சாதாரணம். மற்றவர்களின் பெண்களை தூக்கிக்கொண்டு செல்வது, கற்பழிப்பது வழக்கம்//

ஒரு பதிவிலே அதே அரபிக்கூட்டத்தை அறிவார்ந்த கூட்டம். அறியாமைக் காலம் என்று சொல்வது தவறு அப்டின்னு. நபிகளுக்கு எழுதப்படிக்கத்தெரியாது அதனாலேயே குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை. அப்டின்னு சொன்னா நபிக்கு எழுதப்படிக்கத்தெரியாமலா வியாபாரம் செய்தார்னு கேட்கிறீங்க. இப்ப சொல்லுங்க அதுல எது உண்மைன்னு.

சட்டம் said...
This comment has been removed by the author.
சட்டம் said...

//நான் என்ன சொல்ல்வேண்டுமென்பதை முடிவு செய்ய நீர் யார்? //

இஸ்லாத்தையும் நபியையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என நீர் நிர்பந்திக்கும் பொழுது நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது.

சட்டம் said...

//முஹம்மது செய்தவைகள் போர்களா இல்லை பயங்கரவாதச் செயல்களா என்பதை விவாதித்துவிடுவோம்.

என்ன… சட்டம் தயாரா..? //

முதலில் போர் எது பயங்கரவாதம் எது என்று உளறாமல் தெளிவாகுங்கள். அதன் பிறகு நபியைப் பற்றி விவாதிப்போம்.

கால அவகாசம் கொடுக்கவும்.

தஜ்ஜால் said...

//தொண்டி இளைஞர்கள் , இப்படி டீ சர்ட் போட்டா அரெஸ்ட் பண்ணுவாங்கன்னு தெரியாம செய்தார்களா , தெரிந்து செய்தார்களா?ன்னு தெரியல. இந்தச்செயல் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதத்தின் கோர விளைவு என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை. //

பூசிமெழுகுவது என்று முதலில் குறிப்பிட்டிருப்பது இதைத்தான். ஒன்றுமே தெரியாதவர்களைப் போல பேசி வெகுஜனங்களின் காதில் பூவைச் சுற்றுவது!

//அமெரிக்காவின் ஆயுத மார்க்கெட்டிங் புத்தி அந்த இளைஞர்களுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் இதை செய்திருக்க மாட்டார்கள்..//

அமெரிக்கா என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமாலும் மார்கெட்டிங் செய்யட்டும் உங்களுக்கு அறிவு இல்லையா? கேள்வி அதுவல்ல இஸ்லாமிய இளைஞர்களில் குறிப்பிடதக்க ஆட்கள் மத அடிப்படைவாதிகளாக தீவிரவாதம் நோக்கி ஏன் செல்கின்றனர் என்பதுதான் அவர்களை அவ்வாறு எளிதில் ஈர்க்கச் செய்வது எது?

//எல்லாம் தெரியும்னு சொன்னவருக்கு எதுவும் தெரியாது. அல்லாஹ் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்//
அப்படியா...? போய் அவனையே வரச் சொல்லுங்கள்!
//முதலில் போர் எது பயங்கரவாதம் எது என்று உளறாமல் தெளிவாகுங்கள். அதன் பிறகு நபியைப் பற்றி விவாதிப்போம்.//

அதற்கு முன்னர் குறைந்தபட்சம் குர்ஆனையாவது பொருளுணர்ந்து வாசியுங்கள். அப்பொழுதான் இஸ்லாம் என்றால் என்னவென்று உமக்குப் புரியும். உம்முடைய சொந்தக் கருத்துகள், கற்பனைகள் குருட்டு நம்பிக்கைகளெல்லாம் இஸ்லாம் ஆகிவிடாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ”ஆதம் படைக்கப்படது எவ்வாறு என்ற விவாதத்தின் துவக்கத்திலேயே வெளிப்பட்டது உம்முடைய அறியாமை மட்டுமல்ல உம்முடைய குருட்டு நம்பிக்கையும்தான்.

//கால அவகாசம் கொடுக்கவும்.// இதற்குத்தான் சொன்னேன். //உம்மால் முடியவில்லையெனில் போய் பெரியவர்கள் யாரையாவது அழைத்து வரவும்!// என்று!

ஆனந்த் சாகர் said...

சட்டம் என்ற பெயரில் இங்கு பதிவிடும் நபருக்கு இஸ்லாத்தை பற்றி ஓரளவுகூட சரியாக தெரியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அவருக்கு இஸ்லாத்தின்மேலும் அதை நிர்மானித்த முஹம்மதின் மேலும் குருட்டுத்தனமான நம்பிக்கையும் வெறித்தனமான ஈடுபாடும் பக்தியும் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் அவர் நாம் முஹம்மது மீது வைக்கும் எந்த குற்றசாட்டையும் பற்றி விவாதிக்கவோ அதை நேரடியாக மறுக்கவோ முன்வராமல், அறிவுபூர்வமாக,நாகரீகமாக எந்த பதிலும் தராமல், அவர் வெறுமனே நான்காம்தர மனிதர்களைப்போல சகட்டுமேனிக்கு சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டு இருக்கிறார். அவரின் பின்னூட்டங்களை நடுநிலையாக படிக்கிற எவரும் இதை அறிவர். அவருக்கு பதில் அளிப்பது நேரத்தை வீணாக்கும் செயல் என்பதால் அவருக்கு இனி பதில் அளிக்கப்போவதில்லை.

வேறு யாராவது அறிஞர் மட்டத்தில் பேசக்கூடிய முஸ்லிம்கள் கருத்து பகிர, விவாதம் புரிய முன்வந்தால் அதை வரவேற்கிறேன்.

தஜ்ஜால் said...


வழிமொழிகிறேன்…!

சட்டம் said...

காவி வேசம் கலைந்து விடுமோ என்ற பயம் வந்து விட்டதா. உங்கள் நான்காந்தர விமர்சனத்திற்கு நான்காந்தரமாகத்தான் கருத்து கூற முடியும். நீங்க பெரிய அறிஞர் என்ற எண்ணமா. என் போன்ற சிறுவனுக்கே பதில் இல்லை. பெரியவர் வேண்டுமாம். அல்லாஹ்வை வரச்சொன்னீர்கள் அல்லவா

வரச்சொல்கிறேன். இன்னும் இந்த இஇஇ
(இருளில் இருக்கும் இழிவானவர்கள் )
தளம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.
ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்த தளத்திற்கு வருவேன். இன்னமும் கற்றுக்கொண்டு விவாதிக்கிறேன். நீங்கள் காவிக்காலிகள் என்பதை உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து பின்னர் நிரூபிக்கிறேன். ஹதீஸ்
அத்தனைக்கும் உங்கள் விளக்கம் விஷமமானது என்பதையும் நிரூபிப்பேன்.
சவால் விடுகிறேன். ஆனால் அதுவரை இந்தத்தளம் இருந்தால் இது நடக்கும்.

இதற்கும் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் அதை பார்வையிடப் போவதில்லை. இஸ்லாத்தை பழித்தது தவறு என

maha said...

அது என்னய்யா எல்லா நாட்டு முஸ்லிம்களும் ஒரே மாதிரி பேசுகிறீர்கள். ஆரம்பிக்கும்போது மற்றவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்ற தொனியில் பேசுவது. முதல் திக்குமுக்காட வைக்கும் கேள்வியை கேட்டதும் இதெல்லாம் 1400 வருடமாக கேட்கப்பட்ட கேள்விகள்தான் என்று சமாளிக்கப் பார்ப்பது. போக போக என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குரானுக்கும் ஹதீஸுக்கும் மாற்றி மாற்றி தாவுவது. இதற்குமேல் ஒன்றும் பேசமுடியாது என்று அறிந்ததும் தனி மனித வசை பாடுவது. எல்லாவற்றையும் "தெளிவாக" விளக்கிவிட்டோம் என்று வெற்றியை தண்டோரா போடுவது. ஒரே தமாசுங்க. என்னதான் எல்லா கேள்விகளுக்கும் மொக்கை வாங்கினாலும், தனது பின்னூட்டம் கடைசியாக வருவதில் முஸ்லிம்கள் முனைப்பு காட்டுவது வேடிக்கைக்குறியது.

தஜ்ஜால் said...

//தனது பின்னூட்டம் கடைசியாக வருவதில் முஸ்லிம்கள் முனைப்பு காட்டுவது வேடிக்கைக்குறியது.//

இந்த விவாதத்திலேயே நாம் முன்வைத்த எத்தனை விவாவதங்க்ளுக்கு அவர் பதிலளித்திருக்கிறார் என்பது முழுமையாக பதிவை வாசித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். கடைசியாக பின்னூட்டமிட்டவரே விவாதத்தில் வெற்றிபெற்றவர் என்பதாக இணைய ஜிஹாதிகள் நினைத்துக் கொண்டு தொடர்ந்து உளறிக் கொண்டே இருப்பார்கள். அவர்களது மனநிலையை மிகச் சரியாக சொன்னீர்கள் மஹா!

Ant said...

//இறைமறுப்பாளனை இறைமறுப்பாளன் (காபிர்) என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது.// இது இறைமறுப்பாளன் என்று தாங்கள் குறிப்பிடுவதை யாரும் எதிர்க்கவில்லை. மாறாக காபிர் என்ற அரபு பதத்தில் அழைப்பது இழிவுபடுத்தியே அந்த சொல் இழிவை தரும் சொல். இறைவனை ஏற்க வேண்டும் என்று யாரும் கட்டாய படுத்தமுடியாது. இதுபோல் இஸ்லாமிர்கள் பற்றியும் இழிசொல் உள்ளது அதை கூறியனால் ஏற்பீர்களா?

Ant said...

//அரபு நாட்டில் அரசியல்ரீதியாக நடந்த ஒரு திருமணம்தான் மேற்சொன்னது. நபி அரபு நாட்டு அரசர். அங்கு நடைமுறையில் இருந்த வழக்கமே.//
6 வயது ஆஷியா எந்தநாட்டு அரசி?
நபி எந்த நாட்டு மன்னராக இருந்தார்?
கதிஜாவுக்கு வது கணவாராக பணயாற்றி வந்த முகமது அவரது மறைவுக்கு பிறகு தன் வயதை ஒத்த பெண்னை திருமணம் செய்யாமல் சிறுமை திருமணம் செய்த செயலுக்கு காரணம் அவர் வயது முதிர்ந்த கதிஜா சிறுவயது முகமதை திருமணம் செய்யத செயல்தானே?
அங்கு நடைமுறையில் இருந்த வழக்கத்தை அனைத்தையும் உலகில் உள்ளவர்கள் அணைவரும் பின்பற்ற வேண்டுமா?
அரபிகளின் நடைமுறை மற்ற பகுதிகளில் எதற்கு?

Ant said...

//நபி அரபு நாட்டு அரசர்// இப்படி ஒரு நாடு இருந்ததா? அங்கு முகமதில் தந்தை ஆட்சியில் இருந்தாரா? அல்லது முகமது போரிட்டு இந்த நாட்டை படித்தாரா?

Ant said...

//அவர்கள் தமது குடும்பத்தினரை தவிர வேறு எவருடனும் மணபந்தம் வைப்பதில்லை. ஊர் வழக்கம் எப்படி இஸ்லாமிய கருத்தாகும்.// அப்படியானால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்று தானே பொருள். அவர்கள் ஊர் வழக்கபடி அவர்கள் செய்வது சரியானால் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் பிரிவுக்குள் மணவந்‌தம் வைப்பதும் வேறு எவருடனும் மணபந்தம் வைக்காமல் (”அவர்களை” போலவே) ஊர் வழக்கம் வைத்திருந்தால் அதற்கு எப்படி இந்து மதம் பொறுப்பாகும்?.

Ant said...

//ஆனால், காபிர் என்று முத்திரை குத்தப்பட்டால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது. இப்போது புரிகிறாதா? இஸ்லாம் காபிர் என்று அழைக்கும் இழிவான மனிதர்கள் இஸ்லாம் இருக்கும் இடத்தில் இல்லை என்று.// காபிர்களையும் முஷ்ரிக்குகளையும் அல்லா ஏன் இஸ்லாமிர்கள் கொல்ல வேண்டும் என்று கூறுகிறான். அவனால் எல்லாம் முடியும் என்றால் இதையும் செய்து விட்டு போக வேண்டியது தானே. காபிர்களையும் முஷ்ரிக்குகளையும் ஒரு சாமி வந்து இஸ்லாமிர்களனை கொலை செய் என்று கட்டளையிட்டால் உங்கள் நிலைய என்ன?

Ant said...

// நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். உங்களில் அஞ்சுபவர்தான் அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன். (குர்ஆன், 49:013) // கிளைகளாகவும் கோதிரங்களாகவும் இருந்தால் தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள முடியும் என்று பிரிவினைக்கு அல்லா கரணம் வேறு குடுத்திருக்கான். அப்ப காபிர்களையும் முஷ்ரிக்களையும் அறிந்து கொளவதை விட்டு வெட்டி கொலை செய்ய அல்லா உத்திரவிட்டுள்ளது முடியாமைஃமுரண்பாடு இல்லையா?

Ant said...

///இறைவனை நம்பாதவனுக்கு ஆலயத்தில் என்ன வேலை. கலிமா சொல்லி முஸ்லிமாக மாறுங்கள். உங்கள் ஆசை நிறைவேறும். மக்கா மட்டுமல்ல பல வணக்கத்தலங்களிலும் இந்த கட்டுப்பாடு உண்டு.// கலிமா புலிமா எழுத்து வடிவில் இருந்தால் அதை வாசிக்கும் யாரும் முஸ்லிமாகிவிடமுடியுமா? கலிமா சொல்லி தொழும் முஸ்லீமையே தர்கா வழிபாடு செய்வதால் முஸ்லீம் என்று ஏற்றுக் கொள்வதில்லை தெரியுமா?

Ant said...

//ஆமாம் அய்யரும் தலித்தும் சம்மந்தியாக இருந்தார்கள். நம்பூதிரியும் ஈழவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். சிவன் கோவிலில் தலித்துகள்தான் மந்திரம் சொன்னார்கள்.

நல்லா சொல்றாங்க டீடெயிலு.// மேலப்பாளையம் கயல்பட்டிணத்துக்கு ஒரு நியாயம் அய்யர் தலித் நம்பூதிரி ஈழவர் க்கு ஒரு நியாயமா?

Ant said...

//அப்படிஎன்றால் உலகில் முஸ்லிம்கள் மட்டும்தான் உள்ளனரா. அடடா இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே// பாகிஸ்தான் விடு‌தலையானபோது இந்துகள் எத்தனை சதவீத் இப்போது என்ன? இதுவே வங்காள தேசத்துக்கும் பொறுந்தும். மற்றும் இந்தியா விடுதலை ஆனபோது முஸ்லீம்கள் எத்தனை சதவீதம் இப்போது என்ன?

PURATCHI said...

இதைப்போலத்தான் மதவாதிகளும் விளக்கமாக கொடுத்து குழப்புவார்கள்! இது வேற மாதிரி போல!

அது சரி, இதென்ன இந்த ஆன்மீகத்திற்க்கும் படித்த புத்திசாலிகளாகவே தேவைப்படுகிறார்கள்? ஹிந்துக்களுக்கு புரோகிதம்,அய்யர்,முஸ்லிம்களுக்கு,கிருத்துவர்களுக்கு மதகுருக்குகள்! இவர்களுக்கு படித்த ஆன்மீகவாதிகள்! என்ன உங்கள் ஒற்றை புள்ளி கடவுள் பாமர மக்களுக்குள் இறங்க மாட்டாரா?

Unknown said...

suriyana pathi post potta sattam yethayetha pathiyo pesrar

தமிழரின் தாய்மதம் said...

இஸ்லாத்தில் ,அறிவியலுக்கு விரோதமான சில விஷயங்களை முன்பு கண்டோம். இஸ்லாம் அறிவியலுடன் ஒட்டிப் போகிறது என்ற வாதம் ,ஒரு அப்பட்டமான பொயென்பதற்கு குரானும் சுன்னாவும் சாட்சி.இந்த குல்லா அணிந்த மூடர்கள்,குரானிலும் ஹடித்துக்கள் மற்று சுன்னாக்கள் அறிவியல் சிந்தனை நிறந்தவையென்று வாதாடியதோடு மட்டும் நிற்காமல், அவைகளில் இருக்கும் மூட நம்பிக்கைகளை உண்மையென்று நிருபிக்கவும் தயங்குவதில்லை.அதுமட்டுமின்றி,உலகமே, அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,இருட்டில் மூழ்கியிருந்த ஒரு காலக்கட்டத்தில்,இஸ்லாத்தில்,பல அறிவியல் மேதைகள் தோன்றி,அறிவு வளர்ச்சியை ஊக்குவித்தனர் என்று முஸ்லிம்கள் மார்தட்டிக்கொள்வர்.ஆனால்,உண்மை அதுவல்ல.எங்களுடையது என்று இவர்கள் சொந்தங்கொண்டாடும் ,இஸ்லாமிய அறிவியளாலர்களின் இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்த்தால் இவர்கள் இஸ்லாமியர்கள் தானா என்று நமக்கே சந்தேகம் வரும்.இந்த இஸ்லாமிய அறிவியலாளர்களின் இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்ப்பதற்கு முன்,இஸ்லாமிய அறிவியலாளர்களின் வரலாற்று சுறுக்கத்தை சிறிது பார்ப்போம்.அராபியா இஸ்லாம் மயமான பிறகு ஒரு காட்டுமிராண்டிக் கூட்டமாகத்தான் இருந்திருக்கும்- இல்லை இருந்தது.காமக் களியாட்டமும்,முஸ்லிமல்லாதவர்களுடன் போர்களும் பகிரங்கமாக பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன.இதற்கு ஒரு எடுத்து காட்டு,வெறு யாராக இருக்க முடியும்,காமுகன் முகமது தான் !முஸ்லிம் அல்லாதவர்களுடன் பல போர்களை நிகழ்த்தினான்,வேசி மகன் முகமது.தனது வளர்ப்பு மகனின்,மனைவி,ஜைனாபுடன் கள்ள உறவில் ஈடுபட்டான்,போரில்,கைதான பெண்களை கற்பழித்தான்.அவன் இறந்த பிறகு, பல இஸ்லாமிய சாம்ராஜியங்கள் உருவாகின.உலகத்தை டாருல் இஸ்லாமாக ஆக்குவது தங்கள் கடமை என்று எண்ணி,எகிப்து,பாரஸிகம்,ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவையே ஆக்கிரமித்தனர்.ஆனால்,இந்தியாவின் சிந்து தேசத்தில், காலை கூட வைக்க இவர்களால் முடியவில்லை.அதனால் இந்தியா இஸ்லாத்தின் கொடூரத்திற்கு அவ்வளவு ஆளாகவில்லை.ஆனால்,மற்ற நாகரிகங்கள் இஸ்லாத்திற்கு பலியாகி அழிந்து போன.அந்த நாகரிகங்களின் சுய கலாச்சாரம் அழிந்து, இஸ்லாமிய நாடென்று முத்திரை குத்தப்பட்டன.இஸ்லாத்தின் வருகைக்கு முன்,இந்த நாகரிகங்கள் இந்துக்களிடமிருந்து கணிதம்,ஆன்மிகம்,வேதவியல் (physics),இரஸாயனம்(chemistry) ,உயிரியல்(biology),மருத்துவம் போன்று பலவற்றை கற்றுக்கொண்டு பெருமையுடனிருந்தன.இந்துக்களின் உதவியால்,இந்த நாகரிகங்களும் பல அறிவியல் மேதைகளை உருவாக்கின.இஸ்லாத்தின் வருகைக்கு பிறகு,இந்த நாகரிக மக்கள் வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக்கப்பட்டனர்.பல அறிவியல் மேதைகளும் இப்படித்தான் இஸ்லாத்தைத் தழுவினர்.இப்பொழுது முஸ்லிம்கள் பெருமையாக கருதும் ,இஸ்லாமிய அறிவியல் மேதைகள் ஒன்றும் இவர்களுடையது அல்லர்.வெறும் இறக்குமதி தான்.இஸ்லாமிய அறிவியல் மேதைகளில்,முக்கால் வாசி பேர் அராபியர்கள் அல்லர் என்பதே இதற்கு சாட்சி.இனி இந்த இஸ்லாமிய அறிவியல் மேதைகளின் ,இஸ்லாத்தை பற்றிய கருத்துக்களை பார்ப்போம்.

1) ஸக்காரிய அர் ரஸி (கிபி 865-930) -ஒரு பாரஸீக ( persia) ) மருத்துவர்.இவரின் கருத்துக்கள் இஸ்லாத்தை கண்டிப்பதாகவே இருக்கின்றன.இவரின் தத்துவ நூல்கள் அனைத்தும் அழிந்து விட்டன (தீவிர இஸ்லாமியர்களின் வேலையாகத் தான் இருக்கும்),ஆனால் இவரின் இந்த உலக புகழ் பெற்ற வசங்கள் மட்டும் இன்று கிடைத்திருக்கின்றன :

“அறியாமையினால் சூழப்பட்ட,முரண்பாடமைந்த,பாரபட்சமிக்க மனைவிகளின் பழங்கதைகளை (குர்’ஆன்) கேட்டுகொண்டிருந்தால், ஒருவன் எப்படி தத்துவம் சார்ந்த விவாதங்களை பற்றி யோசிக்க முடியும் ”

“நீண்ட தாடியுடைய ஆட்டு மந்தையைப் போலிருக்கும் இந்த இறை தூதர்கள் எந்த ஒரு அறிவுபூர்வமான செய்திகளை பெச மாட்டார்கள்.மாறாக,இந்த ஆட்டு மந்தை,மக்களை தங்களின் புளுகு மூட்டைகளால்,மயக்கி,மூட நம்பிக்கையில் மூழ்கடித்து ,ஒரு அடிமை எப்படி ஒரு யஜமானனின் கட்டளைகளை கேட்டுக்கொண்டிருப்பானோ,அப்படி இந்த அப்பாவி மக்களையும் தங்களின்,புளுகு மூட்டைகளை கேட்கும் படி வற்புறுத்துவார்கள்.”

2)அபு அலி சினா (கிபி 980-1037) – ஒரு பாரஸீகர்.மருத்துவத் துறையில் பெரும்பங்காற்றியவர்.கடவுட் கொள்கையை மறுத்துறைத்தார்.கடவுளின் பரத்துவத்தை மறுத்து,கடவுள் மக்கள் நலன் மேல் அக்கறையில்லை என வாதாடியவர்.இவரின் இந்த கொள்கையால்,இவரை தீவிர முஸ்லிம்கள் வெறுக்கலாயினர்.இஸ்லாமிய தத்துவ ஞானி,அல்-கஜாலி,இவரை இஸ்லாத்தின் எதிரி என அறிவித்தான்.