Friday 1 November 2013

பூம ராங் Vs தஜ்ஜால் - விவாதம் பகுதி-2

பூம ராங் :
// திருக்குர்ஆன் 24:2 வசனத்தை பார்க்கவும் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
குர்ஆன் 24:2 விபச்சாரம் பற்றியது.
           
பூம ராங்:
விபச்சாரம் என்றால் என்ன ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
குர்ஆன் 24:2
அறிஞர் பீஜேவின் விளக்கம்
299. மக்கள் முன்னிலையில் தண்டனை
திருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரணதண்டனையும், திருமணம் செய்யாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறுகசையடிகளும் வழங்கப்பட வேண்டும் என்பது நபிவழியில் கிடைக்கும் சட்டமாகும். இவ்வசனத்தில் (24:2) நூறுகசையடிமட்டும் தண்டனையாககுறிப்பிடப்பட்டிருக்கும்போது இதற்குமாற்றமாக இருவகையான தண்டனைகள் எப்படிச்சரியாகும்? என்பதை அறிய 115வதுகுறிப்பைக் காண்க!
இதுபோன்றதண்டனைகளை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்தவேண்டும் என்பதும் ஒன்றாகும்.
எனவே மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் தண்டனை வழங்கப்படுவதன் நோக்கத்தை எட்டமுடியும். இதனால்தான் மக்கள்பார்த்துக் கொண்டிருக்கட்டும்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
           
மேற்கொண்டு விபச்சாரத்தைப் பற்றி பேசவிரும்பவில்லை, திருக்குரானின் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப் படும் // என்கிறீர்களே அதைதான் எங்கே என்று கேட்கிறேன்? பதில் தெரியுமா? தெரியாதா?

பூம ராங்:
திருக்குர்ஆன் 5:33 பார்க்கவும் ..
           
தஜ்ஜால் அழிப்பவன்:
பூமராங், குர்ஆன் 5:33 எங்களைப் போன்றவர்களுக்கான தண்டனையைக் கூறுகிறது.
           
தஜ்ஜால் அழிப்பவன்:
புரியவில்லையா?
           
பூம ராங்:
திருக்குர்ஆன் 33:58 முதல் 61 வரையுள்ள வசனங்களை பார்க்கவும் ..

தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் , தெரியாமல்தான் கேட்கிறேன், குர்ஆனைப்பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?

பூம ராங்:
உங்களுக்கு தெரியுமா ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
தெரியும். தெரிந்ததால்தான் இப்படி ஒரு கேள்வியை வைத்தேன்.
           
பூம ராங்:
 மேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..?
           
தஜ்ஜால் அழிப்பவன்:
//மேலே நான் தந்த வசனங்களை படித்தீர்களா ..இல்லையா ..?// அதற்கான விளக்கத்தையும் என்னால் கூறமுடியும்!

தஜ்ஜால் அழிப்பவன்:
குர்ஆன் 33:59 ஹிஜாப் பற்றிப் பேசுகிறது

பூம ராங்:
திருக்குர்ஆன் 5:33 பார்க்கவும்// இதற்கு என்ன விளக்கம் ..? 61 வரையுள்ள வசனங்களை சேர்த்து பார்க்கவும் ..

தஜ்ஜால் அழிப்பவன்:
குர் ஆன் 5:33 உங்கள் முஹம்மது நபியை மறுப்பவர்களுக்கான தண்டனையைப்பற்றி பேசுகிறது.

பூம ராங் :
//முக்கியமாக 61 வது வசனம் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
குர் ஆன் 33:60 வசனத்திற்கான் அறிஞர் பீஜேவின் விளக்கம்

185. நயவஞ்சகர்கள் வெளியேற்றப்படுவது குறித்த முன்னறிவிப்பு
இவ்வசனத்தில் (33:60) நபிகள்நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலைவிரைவில் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த அறிவிப்பு நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே நிறைவேறியது.

குர் ஆன் 33:61 அதன் தொடர்ச்சியே! என்ன பூமராங் இப்படியே தொடர்ந்தால் குர் ஆனின் 6666 வசனமும் வந்துவிடும் என்று நினைக்கிறேன்


Aravind Swaamy:
அண்ணே. பூமராங் அண்ணே!! இடையில் வருவதற்கு மன்னிக்கவும்.. தஜ்ஜால் சொல்ல வருவது என்னவென்றால், குரானும் அதை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமும் கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் ஒன்றாகவே பார்க்கிறது. அதனால் கற்பழிக்கப்பட்ட பெண்களும் கூட அவர்கள் மேல் தவறில்லை எனும் போதும் கசையடிக்கு உள்ளாகிறார்கள். இந்த கசையடிக்குப் பயந்து தான் இஸ்லாமிய சட்டங்கள் உள்ள நாடுகளில் கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்கள் அதை புகாராக பதிய மறுக்கிறார்களோ என்னவோ? அதனால் தான் அங்கு, கற்பழிப்புக்களே இல்லை என்று ஷரியா ஆதரவாளர்களால் பெருமைப் பட முடிகிறதோ என்னவோ?

பூம ராங் :
 அது உங்கள் கையில் தான் இருக்கிறது ..அறிவாளிக்கு சமிக்கையே போதும் ..உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..

தஜ்ஜால் அழிப்பவன்:
 //உங்களுக்கு இத்தனை வசனங்களை எடுத்துப் போட்டும் ஒண்ணும் விளங்கலையே ..// கற்பழிப்பிற்கான தண்டனை என்ன என்பதுதான் கேள்வி. இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களைப்பற்றியதல்ல நமது வாதம்.

பூம ராங்:
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். (24:2)
கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, "உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பüயுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), "என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம், "உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்கüடம் கேட்டேன். அவர்கள், "உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பüக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, "உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260
நபி (ஸல்) அவர்கள் பள்üவாசலில் இருந்து கொண்டிருந்தபோது "அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்கüடம் வந்து, "நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அüத்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்டார்கள். பின்னர், "உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர் "ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த ("அல்ஹர்ரா' எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270

தஜ்ஜால் அழிப்பவன்:
நீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது. விபச்சாரத்திற்கு இதை விட கொடூரமாக தண்டனை வழங்கப்பட்ட ஹதீஸ்களும் உள்ளது.

தஜ்ஜால் அழிப்பவன்:
தேவையில்லாத இணைப்புக்கள் வேண்டாமே. நான் பைபிளை நம்புபவன் அல்ல!
           
பூம ராங்:
/// நீங்கள் கொடுத்துள்ள ஹதீஸ் நமது விவாதத்திற்கு சிறிதும் பொருத்தமில்லாதது/// திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..!
தஜ்ஜால் அழிப்பவன்:
//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்றது என்று பொருள் வரும் பரவாயில்லையா?

பூம ராங் :
Aravind Swaamy // அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..!அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..!


Aravind Swaamy:
 // அதைத் தான் இங்கே நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் ..முந்திரி கோட்டை மாதிரி உனது தலையீடு இங்கே தேவை இல்லை ..!அதனால் அந்த பதிவை நான் நீக்குகிறேன் ..இது முடிந்ததும் உனக்கு எப்போது வேண்டுமானாலும் இது விசயமாக என்னோடு விவாதிக்கலாம் ..!// உண்மையைப் பட்டென்று சொன்னால்... நீக்கமா??? ...  very sad!!

தஜ்ஜால் அழிப்பவன்:
 பூம ராங், Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே!

பூம ராங்:
//திருக்குரானும் ஹதீஸ்களும் சேர்ந்தது தான் இஸ்லாம்..// இருக்கலாம். ஹதீஸைப் பின்பற்ற வேண்டுமென்றால் குர்ஆன் முழுமையற்று என்று பொருள் வரும் பரவாயில்லையா? /// அப்படி பொருளல்ல ..ஹதீசையும் பின்பற்ற திருக்குர்ஆன் சொல்வதால் ..திருக்குரானில் இதுவும் உள்ளது தான்.. !

பூம ராங்:
// Aravind Swaamy மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர் கூறியதில் தவறில்லையே!// தவறு இருக்கிறது ..விவாதத்தை திசை திருப்ப அவர் முயற்சிக்கிறார் ..!

தஜ்ஜால் அழிப்பவன்:
குர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை
           
பூம ராங்:
//குர்ஆன் - ஹதீஸ் விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை// திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..!

           
Aravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மையை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்??


தஜ்ஜால் அழிப்பவன்:
//திருக்குரானிலிருந்து ஆதாரம் கேட்டது நீங்கள் தான் ..!// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதாரம் கேட்கிறேன்.
பூம ராங்:
// ஆமாம். இப்பொதும் குர்ஆனிலிருந்துதான் ஆதரம் கேட்கிறேன்// அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே ..!  நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..? அதனை ஏற்கிறீர்களா ..? இல்லையா ..?

           
தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் //அந்த ஆதாரத்தை தான் தந்திருக்கிறேனே ..!// நான் இது வரை தந்த ஆதாரத்தில் என்ன பிரச்சனை ..?// அவைகள் எதுவும் கற்பழிப்புக் குற்றத்தைப்பற்றி பேசவில்லை. நீங்கள் கொடுத்தவைகள் இஸ்லாமிலிருக்கும் சில தண்டனைச் சட்டங்கள்பற்றியது. அதற்கான விளக்கமும் கொடுத்திருந்தேனே பார்க்கவில்லையா?
           
பூம ராங்:
Aravind Swaamy இந்த விவாதத்துக்கு மிகவும் தொடர்புள்ள உண்மையை, கற்பழிப்பையும் விபச்சாரத்தையும் இஸ்லாம் ஒன்றாகவே பார்க்கிறது என்பது எப்படி விவாதத்தை திசை திருப்பும் வாதம் என்று கூறுகிறீர்கள்?// நீ முதலில் இப்படி கேட்க வில்லை ..?
           
பூம ராங் :
 விபச்சாரத்தைப் பற்றி பேசுகிறதா ..இல்லையா ..?
           
தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங், நான் கேட்டது கற்பழிப்பு பற்றியது.

பூம ராங்:
முஹம்மது நபியின் ஆணையை ஏற்கவேண்டும் என்று சொல்கிற ..திருக்குரானின் ஆணைகள் ...3:32/ 3:132/ 4:59/ 8:20/ 8:46/ 24:52-54/ 47:33 / 64:12..

பூம ராங்:
கற்பழிப்பு என்றால் என்ன ..?
           
Kulasai Voice:
பூம ராங், கற்பழிப்பு என்றால் என்ன ..?///ஒரு வகை விபச்சாரம்!!
           
Aravind Swaamy:
நான் எப்படிக் கேட்டேன்? விடுங்கள்!! நான் இப்படிக் கேட்கிறேன்... விபசாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்கும், வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டா? இல்லையா? விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா? இப்படி நாம் கசையடி பெறுவோம் என்று தெரிந்த எந்த பெண் தான் தான் வன்புணர்ச்சிக்கு உள்ளானதை புகார் அளிப்பாள்?

பூம ராங் :
Aravind Swaamy ///விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்ணுக்குத் தரப்படும் தண்டனையை வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்ணுக்குத் தருவது நியாயமா?// இதுக்கு என்ன ஆதாரம் ..?  Aravind Swaamy, இது உன்னோட காவி சிந்தனையில் ஊறிய கற்பனை ..!
தஜ்ஜால் அழிப்பவன்:
இப்பொழுது மீண்டும் எனது கேள்வியைப் பதிகிறேன் ஏனென்றால் நண்பர் பூமராங் , விவாதத்தின் அடிப்படைக் கேள்வியை மறந்து விட்டதாக ஐயப்படுகிறேன். (விவாதத்தின் அடிப்படை கேள்வி பற்றிய நினைவு அவருக்கு இருப்பின் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை)

கற்பழிப்புக் குற்றத்திற்கான தண்டனை மட்டுமல்ல, கற்பழிப்பு என்றொரு சொல்லே குர்ஆனில் கிடையாது! பெண்ணினத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறையான கற்பழிப்பைபற்றி குர் ஆன்ஏன் மவுனம் காக்கிறது?

பூம ராங்:
முதலில் கற்பழிப்பு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் எனக்கு தேவை ..அப்பொழுதான் ..உங்களைப் போன்ற ஆசாமிகளுக்கு ..திருகுரானில் உள்ளதை சுட்டிக் காட்ட முடியும் ..!  விபச்சாரம் என்றால் என்ன ..?

தஜ்ஜால் அழிப்பவன்:
//விபச்சாரம் என்றால் என்ன ..?// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு? அது நீங்களா பூமராங்?
           
Aravind Swaamy:
மாலத்தீவில் கற்பழிப்புக்குள்ளான ஒரு பெண்ணுக்கு கசையடி வழங்கும்படி தீர்ப்பானது..
http://www.theguardian.com/world/2013/mar/01/maldives-girl-100-lashes-fornication
நார்வே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் கற்பழிக்கப் பட்டதற்காக 16 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்.

பூம ராங்:
 //விபச்சாரம் என்றால் என்ன ..?// குர் ஆன் 24:2 யாரோ ஒருவர் பதிந்ததாக நினைவு? அது நீங்களா பூமராங்..? /// அது நானே தான் வீணாக சந்தேகப் பட வேண்டாம் ..அந்த வசனத்திற்கும் நான் கேட்டுள்ள கேள்விக்கும் என்ன சம்பந்தம் ..?
           
பூம ராங்:
Aravind Swaamy // நீ சுய நினைவோடு இருக்கிறாயா..தம்பி ..?
தஜ்ஜால் அழிப்பவன் // விபச்சாரம் என்றால் என்ன ..? கற்பழிப்பு என்றால் என்ன ..? (நான் கேட்பது definition..!)

பூம ராங் :
Aravind Swaamy// நீ ஆதாரத்தை திருக்குர்ஆன் ஹதீஸ்-லிருந்து காட்டவேண்டும் ..! யாரோ ஒரு அப்துல் காதரோ அல்லது சவுதி அரேபியாவோ செய்வதெல்லாம் இஸ்லாம் அல்ல ..!
           
தஜ்ஜால் அழிப்பவன்:
இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்டனையை தெரிவிக்கின்றன, தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஆணின் உடலில் ஒரு பகுதி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறுப்பை வைத்துத்தான் முயற்சிக்க வேண் டிய அவசியமில்லை.
           
தஜ்ஜால் அழிப்பவன்:
பூம ராங் ?????????????????????


தொடரும்...

Facebook Comments

14 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

புமாரங் விவாதம் செய்யுங்கள்(மார்க்கத்தை காப்பாற்றுங்கள்)முதலில் இஸ்லாத்தின் பார்வையில் கற்பு/கற்ப்பழிப்பு எனும் வன்புணர்ச்சி என்ன என்பதைதெளிவுப்படுத்துங்கள் உங்கள் பார்வையில் விபச்சரமும் வன்புணர்ச்சியும் ஒன்றா?யூதம் /கிருஸ்துவகூடாம் காலியானதுபோல் இஸ்லாமும் காலியாகிக்கொண்டிருக்கிற்து. விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்

Ant said...

கட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது. வாதத்திறமையில் குரானில் தங்களுக்கு உள்ள நிபுனத்துவம் வெளிப்படுகிறது. தங்கள் தளத்தில் வெளி்யாகும் கட்டுரைகள் நிலைத்த தன்மையுடையதாக பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை மத தலைவர்களுக்கு விட்டுவைப்பதும் சிறப்பு. வாழ்த்துகள்.

நாட்டுவேங்கை said...

தஜ்ஜால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறேன். ஒரு லூஸிடம் மாட்டிக்கொண்டீர்களே! இசுலாமியர்கள் என்றால் லூஸுக்கள் என்று அர்த்தம். அதனால்தான் என்னிடம் பல முறை விவாதத்திற்கு கூப்பிட்டும் போகவில்லை. (நேரடி விவாதம் உட்பட)

உங்கள் நிலையைப்பார்தால் "அய்யா பின் லேடன் முகவரி எங்கே இருக்குன்னு" கேட்ட வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
ஒருவேளை இவங்களப்பார்த்துதான் வடிவேலு காமெடி பண்ணிணாரோ!!!

Unknown said...

விபச்சாரம் செய்துவிட்டாள் தீர்ப்பளியுங்கள் என்று கோறப்படுகிறதே, அவள் தான் விபச்சாரம் செய்தாள் என்பதற்கு ஏதேனும் ஆதாரத்தை நிரூபித்த பிறகுதான் தண்டனை தரப்பட்டதா அல்லது வாய் மொழி சாட்சிதானா...??வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..?

தஜ்ஜால் said...

வாருங்கள் சாதிக்,

//விவாதம் என்ற்பெயரில் வெறுப்பேற்றாதிர்கள்// என்னை வலிந்து விவாதத்திற்கு அழைத்ததும் அவர்தான். பதில் சொல்கிறேன் என்று வெறுப்பேற்றிவிட்டார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

//கட்டுரைகளை விட விவாதங்களே அதிக அளவு கருத்துகளையும் ஆதராங்களையும் திரட்டித் தருகிறது// உண்மைதான்! விவாதங்களிலிருந்து நாம் நிறைய தகவல்களைப் பெறமுடியும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் நாட்டு வேங்கை,

விவாத்தின் ஆரம்பத்திலே பூமராங் ஒரு வெத்துவேட்டு ஆசாமி என்பதும் பீஜே போன்ற முல்லாக்களின் போதனைகளைத் தவிர வேறொன்றும் அறியாதவர்கள் என்பதும் புரிந்தது. உடனேயே நான் வெளியேற விரும்பினேன். அவர் என்னை விடவில்லை. சரி அவருக்கு ஒரு பாடம் கற்பித்துவிட்டுப் போகலாம் என்று விவாதத்தை மறுபடியும் தொடர்ந்தேன். உண்மையெலே ஒரு லூஸுடன் உரையாடிய அனுபவத்தைத்தான் தந்தது.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,

//வெறும் வாய்மொழி சாட்சி என்றால் ஏன் பொய் சாட்சியாக இருக்கக் கூடாது..?// உண்மைதான்! வாய்வழிச் செய்திகளாக தொகுக்கப்பட்ட குர்ஆனையும் ஹதீஸையும் உலகமாக ஆதாரமென பீற்றிக் கொள்பவர்களிடம் வேறெதை நாம் எதிர்பார்ர்க முடியும்?

Alaudeen said...

இன்னும் உங்கள் நம்பிக்கை இஸ்லாத்தின் பக்கம் தான் உள்ளது,
இன்ஷா அல்லா மீண்டும் வருவீர்கள் அதனால் தான் தஜ்ஜால் வருகை மீது நன்பிக்கை வைத்து,புனை பெயரை கூட அவன் பெயரில் வைத்து உள்ளீர்கள்.

naga_che said...

கற்பழிப்பு வார்த்தை குரான் இருக்கோ இல்லையோ, நான் மூளை என்ற வார்தையை தேடி பார்த்தேன். ஒரு இடத்திலும் கிடைக்கவில்லை. என்ன செய்ய மூளை பற்றி நபிக்கு தெரிந்தால் தானே அவர் சொல்லுவார்.

Ant said...

விபச்சாரம் என்றால் என்ன?
//ஒருவர் சந்தேகத்திற்கிடமின்றி தனது மனைவியல்லாத வேறொரு பெண்ணுடன் எவ்வித உரிமையும் இல்லாத நிலையில் உறவு கொள்வது விபச்சாரம் என்று சொல்லப்படும். // இது ஒரு இஸ்லாமிய தளம் தரும் விளக்கம். அதே தளம் அதற்கான தண்டனையை வழங்குவது தொடர்பாக இப்படி சொல்கிறது: //விபச்சாரிகளை இரு வகையினராகப் பிரிக்கலாம்: 1.திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். 2.திருமணமாகாது விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள். //

திருமணம் ஆகதவனுக்கு மனைவி ஏது? அப்படியானல் விபச்சாரம் செய்வது எப்படி. (ஒரே பொருள் இங்கு அடுத்தவர் மனைவியுடனான உறவை குறிப்பிடுகிறது என்று ஆகிறது.) இதற்கு தண்டனை:
//1. நூறு கசையடிகள் அடித்தல்.
2. ஒரு வருடத்திற்கு நாடு கடத்தப்படல். ஆயினும் பெண்கள் நாடு கடத்தப்பட மஹ்ரம் அவசியமாகும். அந்நூர்: 2, முஸ்லிம்: (1690)//

திருமணமாகி விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை:
//மரணிக்கும் வரை கல்லெரிய வேண்டும்;. (இச்சட்டம் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது) //
ஆதாரம்:
http://www.salaf.co/article_alquran.php?id=3

Unknown said...

தஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்
பூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க
தஜ்ஜால் : குரான படிச்சியா ?
பூமராங் : படிச்சேன்
தஜ்ஜால் : இருந்துச்சா ?
பூமராங் : இருந்துச்சு
தஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க ?
பூமராங் : அதுதாங்க இது!!!!
தஜ்ஜால் : அடேய் !!!!

Unknown said...

தஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்
பூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க
தஜ்ஜால் : குரான படிச்சியா ?
பூமராங் : படிச்சேன்
தஜ்ஜால் : இருந்துச்சா ?
பூமராங் : இருந்துச்சு
தஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க ?
பூமராங் : அதுதாங்க இது!!!!
தஜ்ஜால் : அடேய் !!!!

Unknown said...

தஜ்ஜால் : நான் உன்கிட்ட என்ன கேட்டேன்
பூமராங் : கற்ப்பழிப்ப பத்தி கேட்டிங்க
தஜ்ஜால் : குரான படிச்சியா ?
பூமராங் : படிச்சேன்
தஜ்ஜால் : இருந்துச்சா ?
பூமராங் : இருந்துச்சு
தஜ்ஜால் : நீ விபசாரத்த பத்தி சொன்னது குரான்ல இருக்கு கற்பழிப்பு எங்க ?
பூமராங் : அதுதாங்க இது!!!!
தஜ்ஜால் : அடேய் !!!!