Friday 11 January 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-17


PAEDOPHOLIA -1

நான் காணும் நடைமுறைக்கும் ஹதீஸ்களுக்கும் வேறுபாடுகள் தெரிந்தது. மேலும் ஹதீஸ்களை படிக்க அதிர்ச்சியில் உறைந்து போனேன். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமண வாழ்க்கை தொடர்பான ஹதிஸ்கள் என்னை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு ஹதீஸை சிறிதும் நம்ப முடியவில்லை. ஆயிஷா  அவர்களின் திருமண வயது ஆறு என்ற செய்திதான் அது.


அபூபக்கர் சித்தீக்  அவர்களிடம் அவருடைய மகள் ஆறு வயதே ஆன ஆயிஷா அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியச் சென்று பெண் கேட்டார்.
புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு ஹலால் - மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர்தாம் என்று சொன்னார்கள்.
மேலும் ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896, 5133, 5134, 5156, 5158, 5160). 


புகாரி ஹதீஸ் -3894
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்கு காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என் முடி வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னை சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள்/ நன்மையுடனும் அருள் வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது,  தன்னுடைய ஈரலின் ஒரு  பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அறுபத்தி மூன்றாம் வயதில் மரணமடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அதாவது ஆயிஷா  அவர்களை திருமணம் செய்யும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு வயது சுமார் ஐம்பத்தி இரண்டு. ஐம்பத்தி ஜந்து வயது முதியவர், தனது மகளை விட பதினொரு வயது சிறிய,  ஒன்பது வயதான ஒரு பெண் குழந்தையை புணர்வது சராசரியான மனநிலை கொண்ட மனிதர்களின் செயல் அல்ல.
 

Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள  கட்டுரையிலிருந்து…
Two main theories are often advance by orientalists to attack the pure character of Prophet Muhammad (pbuh) on his marriage to Aisha (r.a.) at her young age.
A. He was a Paedophile.
B. He was involved in child abuse.
Let's analyse each theory to dig out the truth, through the Guidance of Allah (SWT).
A. Prophet Muhammad (pbuh) married Aisha (r.a.) because he was a paedophile?
முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஒரு Paedophile (Psychosexual Disorder) மற்றும் Child abuse (Cruelty to Children) போன்ற மன வியாதிகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் குற்றம்  சாட்டப்படுகிறார்.

Paedophile – சிறுகுறிப்பு
Paedophile என்பது பருவ வயதை அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதற்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு காண்பது. வயது நிரம்பிய பெண்களிடம் திருப்தி அடையாதவர்  மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர் பெரியவர்களை விட முதிர்ச்சி அடையாத சிறுமிகளிடம் உறவு கொள்வதால் துன்பம் குறைவானது என காண்பவர். இந் நோய்  பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். பெண்கள் மிக மிக அரிதாக காணப்படுகிறது.                                               
 Brittanica encyclopedia 2008

கண்டறியும் முறை:
      குறைந்தபட்சம் தொடர்ந்து ஆறுமாதங்களுக்கும் மேலாக பருவம் அடையாத சிறுமிகளிடம் அல்லது குழந்தைகளிடம் உறவு கொள்ள தீவிரமாக  வற்பறுத்தல்,  ஈடுபடுவது தெடர்பான மனக்கண்வடிவம்  கொடுத்தல். இந்த வற்புறுத்தல் காரணமாக  அவர்களால் வெளிப்படையாக மனக்கவலை அடைவார். இத்தகையவருக்கு குறைந்தபட்சம் பதினாறு வயதும் அந்த சிறுமிகளை விட ஐந்து வயது பெரியவராக இருப்பார்.
DSM-III- R Diagnostic and Statistical Manual of Mental Disorders, rev. ed. 3,  (American Psychiatric Association).

Child abuse– சிறுகுறிப்பு

சற்றும் ஏதிர்பாரத தண்டனைகளால் அளவுக்கு மீறிய உடல் ரீதியான  வேதனையையும் துன்பத்தையும் அளித்தல். மிகக் கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பது. அவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவம் என எதையும் சரிவர வழங்காதிருத்தல். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது அல்லது ஈடுபடுத்துவது.  இத்தகைய கொடுமைக்கு ஆளான சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, கற்கும் திறன், மொழி அறிவு மேலும் சில குறைபாடுகள் காணப்படும்

விவாதம்
Paedophile என்னும் மனநோய் கொண்டவர் சிறுமிகளையே தொடர்ந்து நாடுவர். ஆனால் முஹம்மது நபியின் மனைவிகளின் பட்டியலில், ஆயிஷாவைத் தவிர வேறு சிறுமியர்கள் இடம் பெறாத காரணத்தால்,  முஹம்மது நபி (ஸல்) அவர்களை, Paedophile என்ற மனநலை பதிப்படைந்தவர் என்று குற்றம் சாட்ட முடியாது என்றும்,  Child abuse-ல் கூறப்படும் பாதிப்புகள், ஆயிஷா அவர்களுக்கும் சிறிதும் பொருந்தவில்லை. நேர்மாறாக  தோற்றத்திலும், அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கினார். மேலும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலால் இறை அருள் பெற்றவராக இருந்தார் என்று  Why Did Prophet Muhammad (pbuh) Married Young Aisha Siddiqa (r.a.)? என்ற இணையதள கட்டுரையில் ஒரு மார்க்க அறிஞர் வாதிடுகிறார்.
முஹம்மது நபி  அவர்களின் Paedophilic செயல்பாடுகளுக்கு  ஹதீஸ்களிலிருந்து  மேலும் சில உதாரணங்கள்
 (Suhayli, ii.79: In the riwaya of Yunus I. I recorded that the apostle saw her (Ummu’l–Fadl) when she was a baby crawling before him and said, ‘If she grows up and I am still alive I will marry her.’ But he died before she grew up and Sufyan b. al-Aswad b. ‘Abdu’l-Asad  al-Makhzumi married her and she bore him Rizq and Lubaba… (ibn Ishaq, 2001, p. 311). 

(தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார், "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (குழந்தை தப்பியது !)
Musnad Ahmad: 25636
Muhammad saw Um Habiba the daughter of Abbas while she was fatim (age of nursing) and he said, "If she grows up while I am still alive, I will marry her." 
(அப்பாஸ் என்பவரின் மகள் உம்மு ஹபீபா என்ற குந்தையைக் கண்ட நபி (ஸல்), "இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால், இவளைத் திருமணம் செய்வேன்". என்று கூறினார்)
நம்முடைய அன்றாட வாழ்விலிருந்து ஒரு உதாரணம்
நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டிற்கு செல்லும் ஒருவர், அங்கு, உடைகள் ஏதும் அணியாத, ஆறு வயது பெண் குழந்தை கண்டால், எவ்விதமான கிளர்ச்சியும் அடைவதில்லை.  அதிக பட்சம், அந்த பெண் குழந்தையிடம் உடைகளை அணிந்து வருமாறு கூறுவார். இது தெளிவான மனநிலை கொண்ட சராசரி மனிதனின் செயல்.
மாறாக, உடைகள் ஏதும் அணியாத பெண் குழந்தையை கண்டு, ஒருவரது உணர்வுகள் கிளர்சியடைகிறதென்றால் அவர் நிச்சயமாக சராசரி மனநிலை கொண்டவர் அல்ல என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்றைய காலகட்டத்தில் ஐம்பத்து நான்கு வயது முதியவர் பருவமடையாத ஒன்பது வயது சிறுமியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால், சமுதாயத்தின் கடும் கோபத்திற்கு ஆளாவதுடன், சட்டத்தால் கடுமையாக  தண்டிக்கப்படுவார். முஹம்மது நபி மட்டும் ஏன் மன்னிக்கப்பட வேண்டும்?

சின்னஞ்சிறு மலர்கள் பாலியல்வன்முறை செய்யப்பட்ட செய்திகளைக் கேள்விப்படும் பொழுது நாம் வேதனையால் துடிப்பது ஏன்?
உடல் நலக் குறைவிலிருந்து மீண்டு, ஒரு முற்பகல் வேளையில் சகதோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அழைத்து, தலைவாரி உனக்கு நன்மை உண்டாகட்டும் என வாழ்த்தி(?) தாம்பத்திய வாழ்கைக்காக அறைக்குள் அடைத்தனர். அப்பொழுது தன்னுடைய விளையாட்டு பொம்மைகளுடன் முதலிரவு (முதல்பகல் என்பதே சரி) அறைக்குள் சென்ற ஆயிஷா   அவர்களுக்கு வயது ஒன்பது. பிறகு முஹம்மது நபி  அவர்கள் வந்தார் ஆயிஷா அவர்களுக்கு 'அதிர்ச்சியளித்தார்’ என்பதும் ஆயிஷா  அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்.
முஸ்லீம் ஹதீஸ் எண் 2780
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன...

அறைக்குள் நிகழப்போவதை அறிந்திருந்தால் விளையாட்டு பொம்மைகளை ஆயிஷா கொண்டு சென்றிருப்பாரா? (தன்னுடன் பொம்மைகளை வைத்து விளையாட ஒரு தாத்தா கிடைத்து விட்டதாகவே எண்ணியிருப்பார். ஆனால் முஹம்மது நபி விபரீதமான, வினோதமான பொம்மையை வைத்து விவகாரமாக விளையாடுவார் என்பதை ஆயிஷா எதிர்பார்க்கவில்லை. எனவேதான் இச்சம்பவத்தை "அதிர்ச்சியளித்தார்" என்று குறிப்பிடுவதாக நினைக்கிறேன்) வயது முதிர்ந்த ஒருவர் சிறுமியின் மேல் மோகம் கொள்வது விபரீதமாகத் தெரியவில்லையா?.  முஹம்மது நபி  அவர்கள் ‘அதிர்ச்சியளித்த’ பொழுது ஆயிஷா அவர்கள் பருவம் அடைந்திருந்தார்களா?.

புஹாரி ஹதீஸ் : 6130
ஆயிஷா  (ரலி)  கூறுகிறார்,
நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர்(பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்(சேர்ந்து) விளையாடுவார்கள்.

 (பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காக, சின்னப் பெண்ணாக இருந்ததாலும், பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் அனுமதிக்கப்பட்டிருந்தது) (Fateh-al-Bari page 143, Vol.13)

Islamic Q&A  எனக்கு அளித்த பதில்
". . . and for those who have no courses [periods] [(i.e., they are still immature) their ‘iddah is three months likewise, except in case of death] . . ." [al-Talaaq 65:4]

is an indication that it is permissible to marry girls below the age of adolescence. This is a good understanding, but the aayah makes no specific mention of either the father or the young girl. It could be said that the basic principle concerning marrying children is that it is forbidden unless there is specific evidence (daleel) to indicate otherwise. The hadeeth of ‘Aa’ishah states that her father Abu Bakr married her off before the age of puberty, but there is no other evidence apart from that, so the rule applies to all other cases.
Al- Muhallab said: "[The scholars] agreed that it is permissible for a father to marry off his young virgin daughter, even though it is not usually the case to have intercourse with such a young woman."
(The above was summarized from Fath al-Baari Sharh ‘ala Saheeh al-Bukhaari)
அன்றைய காலத்தில் சராசரியாக பதினேழு வயதில் பெண்கள் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்பதும்  மார்க்க அறிஞர்களின் கருத்து. சிறுவயதில் பருவமடைவது தற்காலத்திலேயே மிக அதிகமாக காணப்படுகிறது. உடல் வளர்ச்சியைத் தூண்டும் ரசாயணம் கலந்த உணவு வகைகளே இதற்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஒன்பது வயதில்  ஆயிஷா  அவர்கள் பருவம் அடைந்திருந்தார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?. அவர் பருவமடைந்திருக்கவில்லை என்றே ஃபதே-அல்-பாரியின் விளக்கம் கூறுகிறது?
குர் ஆன் 65:4 பருவம் அடையாத பெண்களை திருமணம் செய்து கொள்ளவும், அவர்களுடன் தாம்பத்தியம் கொள்ளவும் அனுமதிக்கிறது.
திருமணத்திற்கான வயதெல்லை? 
பெண்களின் திருமண விடயத்தில் இஸ்லாம் கட்டாயப்படுத்துவது பெண்ணின் சம்மதத்தினையும் அப்பெண்ணின் பொறுப்புதாரியின் (தகப்பன்) அங்கீகாரத்தையும் மட்டுமே இவ்விரண்டு சம்மதங்களும் ஒருங்கே கிடைப்பதால் இஸ்லாமிய திருமணத்தின் மூலம் எந்த பெண்ணுக்கும் எந்த காலத்திலும் அநீதி இழைக்கப்பட நூலளவும் வாய்ப்பில்லை.
விலைமாது என்றாலும் அவளின் சம்மதமின்றி கூடினால் அது வன்கலவிதான் இது ஒரு நியதி. ஆறு வயது குழந்தைக்கு திருமண வாழ்க்கையைப் பற்றியும், ஆண்-பெண் புணர்ச்சியைப் பற்றியும் என்ன தெரியும்? ஆறு வயது சிறுமியிடம் திருமணத்திற்கும், அவளுடன் கலவியில் ஈடுபடவும் எப்படி சம்மதம் பெற்றிருக்க முடியும்? (இறைவனே அறிவான்!).
 ஒன்பது வயதான ஆயிஷா அவர்களின் முழு சம்மதத்துடன்தான் அதிர்ச்சியளித்ததாக எந்த விதமான செய்தியும் இல்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், ஒன்பது வயதான ஆயிஷா  வன்கலவிக்கு ஆளாக்கப்பட்டார் என்பதே உண்மை.

அபூபக்ர் அவர்களின் அங்கீகாரம் முதலில் மறுக்கப்பட்டது ஏன்?
நபி  அவர்கள், ஆயிஷா  அவர்களுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்குவதற்கு, அபூபக்ர் வர்களின் அங்கீகாரம் முன்று வருடங்கள் தாமதப்பட்டது ஏன்?
முஹம்மது நபி, ஆயிஷாவை மணமுடித்துத் தருமாறு கேட்டவுடன், அதற்கு அபூபக்ர் உடனே சம்மதிக்கவில்லை என்று  துவக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த இந்த ஹதீஸை சற்று கூர்ந்து கவனிப்போம்,

புகாரி ஹதீஸ் 5081
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா (ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் தங்களுடைய சகோதரன் ஆயிற்றே என்று கேட்டார்கள். …

பிறப்பால் சகோதரர்களாக  இருப்பவர்களுக்கும், கொள்கைகளின் அடிப்படையில் சகோதரர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாதவரா அபூபக்கர்? முஸ்லீம்களுக்குள் திருமணபந்தமே கூடதென்று நினைத்து விட்டாரா?
"ஆம்" என்று கூறினால், இஸ்லாமிய வரலாற்றில்  அபூபக்கரை விட ஒரு முட்டாளை நாம் காண்பது அரிது. (அபூபக்ர், தனது நண்பர் முஹம்மது நபியை தனது உடன்பிறந்த சகோதரராகவே நினைத்திருக்கிறார் ஆனால் முஹம்மது நபியின் பார்வைதான் வேறுவிதமாக இருந்திருக்கிறது)
 இல்லை என்று கூறினால், எல்லாம் தெரிந்தும் அவர் எதற்காக அப்படிக் கூற வேண்டும்?
முஹம்மது நபியின் கோரிக்கையால் அதிர்ச்சியடைந்து, எப்படி மறுப்பதென்று தெரியாமல் இவ்வாறு அவர் மழுப்ப முயற்சித்திருக்கிறார். வேறு வழி தெரியததால் தன் மகள் மிகச் சிறியவளாக இருக்கிறாள் எனவே மூன்று ஆண்டுகள் கழித்து அவள் வளர்ந்தவுடன் தம்பத்திய வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
 அபூபக்ர் அவர்களின் கோரிக்கையை நபி  அவர்கள் பெருந்தன்மையுடன்(?) ஏற்றுக் கொண்டார். அபூபக்ர் அவர்களின் கோரிக்கை மட்டும் இல்லையென்றல்…? (எழுதுவதற்கு எனது கைகள் கூசுகின்றன. இருப்பினும், உண்மைநிலையை விளக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை. முக்கியமான "அந்த" செயலுக்கு மட்டுமே மூன்றாண்டுகள் கால அவகாசம் பொருந்தும். சில்மிஷங்களும் "தொடைவேலைகளும்" இடைப்பட்ட மூன்றாண்டுகளில் நிழ்ந்துள்ளதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. எனவே பருவ வயதடையாத சிறுமிகளிடமும் சின்னஞ்சிறிய குழந்தைகளிடமும் அவர்களின் கணவர் என்ற தகுதியுடையவர்,  இத்தகைய சில்மிஷங்களில் ஈடுபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டதே என பிரபல ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லாஹ் கோமேனி  தனது ஃபத்வாவில் கூறுகிறார்).
அதிர்ச்சியளித்த’ நிகழ்ச்சி ஆயிஷா    அவர்களின் பெற்றோர்களின் முழு சம்மதத்துடனே நிகழ்ந்தது, பின்நாளில் ஆயிஷா அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். இதில் தவறொன்றுமில்லை என்றால், அகில உலகிற்கும் அழகிய முன் மாதிரியான  நபி   அவர்களின் அழகிய வழி முறை மூடி மறைக்கப்பட்டது ஏன்? பின்பற்ற வலியுறுத்தி பிரச்சாரம் ஏன் மேற்கொள்ளவில்லை?. நபி   அவர்களின் இந்த வழி முறையைப்பற்றி பகிரங்க மேடையில் விவாதிக்க முடியுமா? யாருடைய கருத்து சரியென்பதைக் கண்டறியதை இதைப்பற்றி ஒரு பொதுவிவாதம் நடத்துவதற்கு என்ன தயக்கம்?
(2008-ல் நேரடியாக விவாதிக்க TNTJ வின் தரப்பிலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் அவர்கள் பேசிய முறைமையும், விஷயத்தை கையாண்ட விதமும் என்னை சிந்திக்கவைத்தது. எனவே ஏற்படப்போகும் விளைவுளை நினைத்து தவிர்த்துவிட்டேன்.)
          முஹம்மது நபியின் வற்புறுத்தல் காரணமாகவே முஹம்மது நபி-ஆயிஷா திருமணம் நிகழ்துள்ளது என்பது ஹதீஸ்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட செய்தியாகும். ஆனால் சிறிது கூட வெட்கமில்லாமல்  எப்படி ஒரு பொய்யை  கூறுகின்றனர் என்பதை பாருங்கள்.
நமக்குள் இஸ்லாம் இணையதள  கட்டுரையிலிருந்து….
என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே… என்ற சந்தேகம் கூட எழலாம். ஆய்ஷா போன்ற ஒரு பெண் தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

தெளிவான ஹதீஸ் ஆதாரங்களையும், தர்க்கரீதியான வாதங்களையும் அறிந்து கொண்டே மீண்டும், மீண்டும் உண்மையை மறைக்க முயலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் இட்டுக்கட்டலுக்கும், நம்பகத் தன்மைக்கு இது ஒரு உதாரணம்.

Facebook Comments

15 கருத்துரைகள்:

sagodharan said...

சகோ தஜ்ஜால்
நீங்க புரியாம தவறா விளங்கிக்கிட்டு பேசுறிங்க!
அது அந்த காலம்மா!
புரியல? ஜாஹிலியா! ஜாஹிலியா!
இப்ப புரிஞ்சிருச்சா? இப்ப எவனாவது ஆறு வயசு பெண்ணை ஒப்பந்தம் பண்ணி ஒன்பது வயசுல பாலியல் ரீதியா உறவு கொண்டா அந்த உறவை திருமணமாகவே முதலில் நீங்கள் என்ன, மார்க்கவாதிகளே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ,நீங்கள் என்னவோ அவர்கள் இப்போது அந்த சுன்னாவை தொடரவில்லை என்று ஆதங்கப்படுகிறீர்கள்!
இவ்வளவு சொல்றிங்களே நம்ம தாதா மட்டும்தான் சின்னபுள்ளய கண்ணாலம் கட்டுனாரா? அதுக்கு முன்னால யாரும் இதை செய்யலையா? ஆண்டாண்டு காலமா வழக்கத்துல இருந்ததுதாமா இது !(இதுதான் தாவா பாணி)
அப்பா நபி கொஞ்சம் புத்தி பேதலிச்சு இருந்தார் (அல்லாவும்தான் ), அதனாலதான் தெரில பாருங்க!

தஜ்ஜால் said...

வாருங்கள் சகோதரன்,
முஹம்மது காட்டுமிராண்டி வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

Unknown said...

சிறுமிகள் மோகம் என்பது இன்றும் உள்ளது அதனால்தான் வன்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த வண்ணமாக இருக்கிறது. எனக்கு ஒரு டவுட் இவ்வளவு பெண்களை மணமுடித்தும்,அடிமைப் பெண்கள் கூடுதல் போனஸாக இருந்தும் சிறு பிள்ளையை மணமுடித்தது என்ன காரணம்.இதைக் கேட்டால் அந்தக் காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். முகம்மது நபித்துவம் ஆவதற்கு முன் நடந்த சம்பவம் என்றால் ஏற்றுக் கொள்ள நியாயமிருக்கிறது. நபியான பிறகு இந்த தவறு எப்படி ஏற்பட்டது? நரபலியை தவிர்க்க ஆடு பலியிட்டு எடுத்துக் காட்டப்பட்டது எனும் போது,சிறுமிகள் மணமுடிப்பதையும் அதற்குப் பகரமாக எதையாவது உணர்த்தியிருக்கலாமே?!!

சிவப்புகுதிரை said...

அருமையான இடுக்கை நன்பரே..பெண்களை அல்லாஹ் எதுக்காக படைச்சான் என்பதில் மூஃமின்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள்...அதற்க்காக மட்டும் அவர்களை சரியாக பயன்படுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

சிவப்புகுதிரை said...

அட என்ன இனியவன் நீங்க புறியாம பேசுரிங்க நம்ம முகமது நபி தவல்ர குழந்தைகிட்டையே மஜா பன்ன ஆசப்பட்டவரு அப்பறம் நடகுர குழந்தைகிட்ட ஆசப்படமாட்டாரா?? இதுக்கு பெரு தான் நபித்துவம் என்ன புறிதோ??????

தஜ்ஜால் said...

வாருங்கள் சிவப்புக்குதிரை,
பெண்கள் என்ற இனம் ஆண்களின் இச்சைக்காகவே என்பதுதான் அண்ணல் முஹம்மதின் கொள்கை. குழந்தையாவது கிழவியாவது. நம் முஹம்மது எல்லா இடத்திலும் விளையாடுவார்.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,
சிறுமிகளைத் திருமணம் செய்வதற்கு இஸ்லாமில் எந்தத் தடையுமில்லை. அதை உணர்த்தவே ஒரு சில புகைப்படங்களை இணைத்துள்ளோம்.

Anonymous said...

Good article .very much informative .you have done a great job .If every one read this article definitly they will change their faith towards Mr Nabi .

shakiribnu said...

காபிர் தஜ்ஜால் அவர்களே,

பச்சப்புள்ளையையும் நபி வழி திருமணம் செய்யலாம்,

அப்படி பச்சபுள்ளையாக இருந்தால் எப்படி செய்யலாம் என்பதை நமது மார்க்க அறிஞர்கள், காககககே செய்தவற்றிலிருந்து உதாரணமாக எடுத்துகொண்டு (வேற எதை எடுப்பார்கள்) விளக்குகிறார்கள்.

thighing என்றால் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள்.


http://www.youtube.com/watch?v=ENWaWcRvGtM

http://www.youtube.com/watch?v=_RMUyAy9zU0

சும்மா thighing என்று யூட்யூபில் போட்டு தேடுங்கள். நமது மார்க்க அறிஞர்களின் பயான்களில் புல்லரிப்பீர்கள்.

மத்தபடிக்கு உங்களை மாதிரி காபிர்கள் கற்பழிப்புக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி, செருப்படி, சவுக்கடியாக இங்கண ஒரு பதிவு எழுதியிருக்கேன்.

நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!

பார்த்து நீங்களும் நபிவழிகளை பாராட்ட வாங்க...

Tamilan said...

@தஜ்ஜால், அருமையான பதிவு நண்பரே,

Paedophelia தவறாக இருக்கிறது அதைத்திருத்தவும்.

தஜ்ஜால் said...

வாருங்கள் தமிழன்,
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

தஜ்ஜால் said...

வாருங்கள் ஷக்கீர்,

இந்த காஃபிருக்கு அறிவுரை வழங்கி தாவாப் பணி சிறக்க உதவுங்கள். வருகைக்கும் இணைப்புகளுக்கும் மிக்க நன்றி

ibn lahab said...

I agree with you thala tajjaal :)

ibn lahab said...

Wow, great narration,congratulations tajjaal ji, you are doing a great job for Islamic society.
Previously I had doubts about pedophelia,your article cleared all doubts. Thanks.

Anonymous said...

Super brother it's truth kept it up u r articles