Thursday 13 December 2012

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் -15


தொடர் 15  (பலதாரமணம்  ஏன்?)

பெண்களுக்கு ஒரு குறிபபிட்ட வயதைக் கடக்கும் பொழுது தாம்பத்தியத்தில் நாட்டம் முற்றிலும் குறைந்துவிடுகிறது. ஆனால் ஆண்கள் நிலை வேறுவிதமாக மாறிவிடுகிறது. வயதானாலும் அவர்களின் தாம்பத்திய உணர்வுகள் குறைவதில்லை. எனவே அவர்கள் வழி தவறி விடாமல் இருக்கவும் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது என்கின்றனர் மார்க்க வல்லுனர்கள்.

ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைகள் ஏன் தேவைப்படுகிறது என்பதை மிக சுலபமாக பட்டியலிட முடியும்.

பெண் மோகம்
துணையின் மீது வெறுப்பு- இணையின் அழகு மற்றும் குணம்
துணையின் நோய் -  உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள்
வாரிசு

சவ்தா அவர்களைத் தவிர முஹம்மது நபி அவர்களின் மனைவியர் அனைவருமே மிக மிக அழகானவர்கள். ஓரிருவரைத்தவிர அனைவரும் முப்பது வயதிற்குட்பட்ட இளம் பெண்கள். எனவே முஹம்மது நபி  அவர்களுக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காரணங்கள் பொறுத்தமற்றது. மேலும், அதற்கு ஆதரமாக ஹதீஸ், வரலாற்று செய்தி, அல்லது அறிஞர்களின் விளக்கம் என எந்த ஒரு தகவலும் இல்லை. இஸ்லாமில் பலதாரமணத்திற்கான அனுமதி ஏன்? மிக பிரபலமான இஸ்லாமிய பேச்சாளர் Dr.ஜாகீர் நாயக் அவர்களின்பதில்:
                இப்போது நாம் இஸ்லாம் ஏன் - ஒருஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.

1. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் - அனுமதியளிக்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் 'ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் 'உங்களுக்குப் பிடித்தமான பெண்களை - இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவோ - நன்னான்காவோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்).' என்று சுட்டிக் காட்டுகின்றது.

குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு - இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் - அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் - பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.

மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸுரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் - '(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது' என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர - கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் கொள்கைகளில் - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:

1. 'ஃபர்லு'- கட்டாயக் கடமைகள்
2. 'முஸ்தகப் ' - பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை
3. 'முபாஹ் '- அனுமதிக்கப்பட்டவைகள்
4. 'மக்ரூ ' - அனுமதிக்கப் படவும் இல்லை - அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.
5. 'ஹராம் '- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.
மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் - ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.
முஹம்மது நபி  ஏன் நான்கு மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்? என்ற கேள்விக்கு Dr.ஜாகீர் நாயக் அவர்களின்பதில்

 2. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு - ஆணினத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.
                இயற்கையிலேயே ஆணிணமும் - பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் - ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.

                யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் - நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் - பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் - எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் - மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.
Dr.ஜாகீர் நாயக் தொடர்கிறார்,
3. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.
அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மாத்திரம் - பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நியூயார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும். ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.  
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாகஉள்ளனர்.
மறுப்பு :


அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள் எண்ணிக்கை
வயது
சதவீதம்
ஆண்களின்
எண்ணிக்கை
பெண்களின்
எண்ணிக்கை
0-14 வயதிற்குள்
20.4%
3,10,95,847
2,97,15,872
15-64 வயது வரை
67.2%
10,00,22,845
10,04,13,484
65 வயதிற்கு மேல்
12.5%
1,55,42,288
2,16,53,879
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்/பெண் விகிதாச்சாரம்
வயது
ஆண்/பெண்
விகிதாச்சாரம்
பிறப்பின் பொழுது
1.05
 15 வயதிற்குள்
1.05
15-64 வயது வரை
1.0
65 வயதிற்கு மேல்
0.72
மொத்த மக்கள் தொகையில்
0.97
எனவே மேற்கண்ட வாதத்தின் அடிப்படையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இளம்வயது ஆண்களும் வயதான கிழவிகளுடன் பலதாரமணம் புரிந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதை உங்களால் ஏற்க முடியுமா?

ஒரு புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஒருவனுக்கு ஒருத்தி என்று உறுதியாக இருந்தால் பல  பெண்களின் திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் தடைபடும் அதன் காரணமாக ஒழுக்க கேடுகள்தான் அதிகமாகும். எனவே பலதார திருமணத்தின் மூலம் இஸ்லாம் தீர்வு காண்கிறது என்பதும்  Dr.ஜாகீர் நாயக் போன்றவர்களின் வாதம்.
Dr.ஜாகீர் நாயக் :
4. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது - நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.
ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்). அதுபோல - பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.
உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது அவர் அமெரிக்காவின் 'பொதுச் சொத்தாக மாறுவது'. இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் 'பொதுச் சொத்தாக' மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் - சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் - ஒரு ஆணுக்கு - இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் - அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.
ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது 'பொதுச் சொத்தாக மாறுவது' என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.
Dr.ஜாகீர் நாயக் அவர்கள் தவறான வாதத்தை முன்வைக்கிறார். அவரின் வாதத்திலுள்ள முரண்பாடுகளைக் காண்போம்
ஆண்/பெண் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, 2006 est.).
வயது
சதவீதம்
ஆண்களின்
எண்ணிக்கை
பெண்களின் எண்ணிக்கை
0-14 வயதிற்குள்
27.4%
91,92,19,446
87,02,42,271
15-64 வயது வரை
65.2%
2,15,20,66,888
2,10,03,34,722
65 வயதிற்கு மேல்
7.4%
21,31,60216
27,01,46,721
இதை வயது அடிப்படையில் பிரித்தால், உலகில் ஆண்/பெண் விகிதாச்சாரம்
வயது
ஆண்/பெண்
விகிதாச்சாரம்
பிறப்பின் பொழுது
1.06
15 வயதிற்குள்
1.06
15-64 வயது வரை
1.03
65 வயதிற்கு மேல்
0.79
மொத்த மக்கள் தொகையில்
1.01
எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.
Dr.ஜாகீர் நாயக் தொடர்கிறார்
 மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் - ஆண்களின் எண்ணிக்கையைவிட - பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.
2006 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது. பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,
நாடு
ஆண்/பெண்
விகிதாச்சாரம்
பஹ்ரைன்
1.03
ட்ஜிபௌடி
1.07
ஜோர்டான்
1.1
குவைத்   
1.5
ஓமன்      
1.31
கத்தார்    
1.93
ஐக்கிய எமிரேட்     
1.51


சவுதிஅரேபியா ஆண்/பெண் விகிதாச்சாரம்
வயது
ஆண்/பெண்
விகிதாச்சாரம்
பிறப்பின் பொழுது
1.05
 15 வயதிற்குள்
1.04
15-64 வயது வரைs
1.33
65 வயதிற்கு மேல்r
1.13
மொத்த மக்கள் தொகையில்
1.2

எனவே சவுதிஅரேபியா மற்றுமுள்ள இஸ்லாமிய நாடுகளில்,  ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் என்ற முறையை நடைமுறைப்படுத்துவது அல்லது Dr.ஜாகீர் நாயக் கூறுவது போல ஆண்களை  பொதுச் சொத்தாக மாறுவது சரியான தீர்வாக அமையும்.
Dr.ஜாகீர் நாயக்  தொடர்கிறார்,
கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?
பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அடிப்படை நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
மறுப்பு :
ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்கள் இணைந்தது. மகிழ்ச்சியான குடும்பங்கள் இணைந்த சமுதாயமும் மகிழ்ச்சியாக இருக்கும். அலுவல் காரணமாக வெளியே சென்று திரும்பும் கணவன் புதிதாக ஒரு பெண்ணை தனது துணைவியாக வீட்டிற்கு அழைத்துவந்தால் முன்பே இருக்கும் மனைவியின் மனநிலை எப்படியிருக்கும்?
முஹம்மது நபியின் அலுவல் போர்க்களத்திற்குச் செல்வது ஒவ்வொரு முறையும் அவர் விதவிதமான பல பெண்களுடனே தனது இல்லத்திற்கு திரும்பினார். அவரது மனைவியர்களால் எதுவும் பேசமுடியவில்லை. அவருடைய மனைவி(யர்கள்) அறிய பிற பெண்களுடன் கூடி மகிழ்ந்தார் அம்மனைவியர்களால் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை காரணம் அல்லாஹ்வின் அனுமதி.
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;.…
(குர்ஆன்2:223)
இக்குர்ஆன்வசனத்தின்படி, பெண்கள், ஆண்களைத் திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இஸ்லாமில் பெண்களின் நிலை கீழ்தரமானதாகவே வைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்  பல ஆண்களுடன் ஏன் வாழ முடியாது?

Facebook Comments

4 கருத்துரைகள்:

Anonymous said...

In Germany the old and rich women who lost their husbands, they keep the Turks migrated from turkey as sex slaves.Same as mohMAD was a sex slave to Kadija (A rich women twice lost her husbands). Probably PJ is advising the young muslims to go to US and marry the oldies...follow the footstep of their, you know who.
The problem is in US all the mullahs who become citizens to took Oath on constitution and pledge their legions to the country not to their religion. Which is completely selling out muhMAD's(Allahs) Laws before the US Laws.May be he doesn't know but the muslim immigrants never reveal it to their family in other countries, that they took an oath against allahs will.

தஜ்ஜால் said...

@வாருங்கள் Anonymous,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
முஹம்மதின் உளறல்களை சரிகாண முயன்றால் மடத்தனமாகவே முடிவடையும் என்பதற்கு ஜாகிர் நாயக் அவர்களின் விளக்கம் ஒரு உதாரணம். இதை அவர்கள் அறியாமல் அல்ல. வறட்டுத்தனமான பிடிவாதம் என்பதைத் தவிர வேறில்லை.
//The problem is in US all the mullahs who become citizens to took Oath on constitution and pledge their legions to the country not to their religion.// முஸ்லீம்கள், நாடு அல்லது மதம் என்ற வாய்ப்பில், உண்மையாக எதைத் தேர்தெடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

Unknown said...

வணக்கம் சகோ.

நல்ல விளக்கம் ஜாகிர் நாயக் ஒரு சந்தர்ப்பவியாபாரி.அந்த வகையில் அவர் நினைத்தது நடந்து கொண்டிருக்கின்றது.

//ஒரு பெண் பல ஆண்களுடன் ஏன் வாழ முடியாது?//

இதற்கு மூமின்கள் சொல்லும் காரணம்,தகப்பன் யாரென்று தெரியாதாம்.இதன் அடிப்படை கருப்பை,இதை நீக்கிவிட்டு ஒரு பெண் பல ஆண்களை மணமுடிக்கலாமா என்று தெரியவில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் இனியவன்,
//இதற்கு மூமின்கள் சொல்லும் காரணம்,தகப்பன் யாரென்று தெரியாதாம்.இதன் அடிப்படை கருப்பை,இதை நீக்கிவிட்டு ஒரு பெண் பல ஆண்களை மணமுடிக்கலாமா என்று தெரியவில்லை.// ஆணுக்கு அளவுகடந்த உடலுறவுச் சலுகைகள் ஆனால் பெண்ணுக்கு நேரெதிரான நிலை! இஸ்லாம் என்றாலே இரட்டை அளவுகோல்தான்.