Wednesday 4 April 2012

ஓர் வேண்டுகோள்.



நண்பர்களே,
இசுலாமிய குடிபிறப்பிலிருந்து நாத்திகர்களாக மாறியவர்களின் ஒன்றிணைப்புக்கான இணையம் இது என்று நாங்கள் எங்களது முகவரியாக அறிவித்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இசுலாத்தை மட்டுமே நாங்கள் பெரும்பாலும் விமர்சிப்பதால் வேறு மதத்தை ஆதரிப்பவர்கள் என்று எம்மை சிலர் கருதிக்கொள்கிறார்கள். இந்து, கிறித்துவ மதங்களை ஏற்கனவே பலரும் நார்நாராகத் தோலுரித்துவிட்ட நிலையில் அதனைப்பற்றி இங்கு எழுதிட வேண்டிய தேவையில்லை. தமிழ் சூழலில் இசுலாத்தின் உண்மைகளைப் பற்றி எடுத்துக் கூறுவதில் குறைவான தாக்கமே உள்ளதால் அதனை விரிவாக எழுதுவது என்று இந்த இறையில்லா இசுலாம் என்ற இணையத்தை நடத்துகிறோம். அதனால் உங்களுக்கு ஒரு எமது வேண்டுகோள். இதில் வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பாக கருத்துக்களை கூறுதல், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல், கேள்விகளை பதிவு செய்தல் என்பதே சிறந்ததாக இருக்கும். அது தவிர்த்து இந்து, கிறித்துவ மதத்திலுள்ளதை தனி ஆவர்தனமாக பதிவு செய்து வெட்டி வேலை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். கத்தரித்தலுக்கு உட்படாது பின்னோட்ங்கள் வெளியிடப்படும் என்ற எமது நிலைப்பாடால் உங்கள் பின்னோட்ங்கள தொடர்ந்து வெளியிடப்படும். என்றாலும் எமது வேண்டுகோளை ஏற்பீர்கள் என நம்புகிறோம்.

Facebook Comments

36 கருத்துரைகள்:

Khader Mohideen said...

அருமை இது போன்றதொரு பதிவை நான் நீண்ட காலம் எதிர்பார்த்தேன் .
அருமை , இந்து ,கிறித்தவ முடை நாற்றத்தை இங்கு வந்து பரப்பவேண்டாம் .
அதனை உஜிலராநியிடமோ ,ஜெஹோவ வாக்குகளிடமோ வைத்து கொள்ளவும்.

RAJA said...

லட்சம் இந்துக்கள் மத்தியில் சிவன் கடவுள் இல்லை என்றோ, கிருஷ்ணன் கடவுள் இல்லை என்றோ உங்களால் உரத்த குரலில் சொல்ல முடியும். உங்கள் உயிருக்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் சில நூறு முஸ்லீம்கள் மத்தியில் அல்லா கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. நாத்திகர்களுக்கு இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் இடம் இல்லை. கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்கிறது பைபிள். அல்லா மறுப்பாளர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இந்து மதம் நாத்திகர்களையும் ஏற்றுக்கொள்கிறது. எனவே இங்கே நாத்திகம் என்று சொல்லிக்கொண்டாலும் நீங்கள் இந்துக்கள்தான். உங்கள் முன்னோர்கள் இந்துக்கள் என்ற வகையிலும் நீங்கள் இந்துதான்.

sajithkhan said...

//லட்சம் இந்துக்கள் மத்தியில் சிவன் கடவுள் இல்லை என்றோ, கிருஷ்ணன் கடவுள் இல்லை என்றோ உங்களால் உரத்த குரலில் சொல்ல முடியும்.//

சிவன் இல்லை, கிருஷ்ணன் இல்லை, ராமன் திருடன் என ஆந்திராவைத் தாண்டியும் சொல்லமுடியுமா!

RAJA said...

ஆந்திராவைத் தாண்டியுள்ள மாநிலங்களிலும் நாத்திகர்களை இந்துக்கள் தாக்கியதாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டால் மிகவும் கண்டிக்கத்தக்கது.

Khader Mohideen said...

/இந்து மதம் நாத்திகர்களையும் ஏற்றுக்கொள்கிறது//
அடி முட்டாள் ராஜாவே ,
எங்கே உனது இந்து மதம் நாத்திகத்தை ஏற்று கொள்கிறது . பொய் பேசாதே .
கடவுள் நம்பிக்கை இல்லாதவனை கொள் என்று சொல்வது உனது இந்து மத வேதமான ரிக்கும் , அதர்வணமும் தான் .
ஆங்கிலம் தெரிந்தால் கீழே உள்ள வரிகளை படித்து விளக்கம் சொல் .

slay - to kill violently.

அதாவது கொடூரமாக கொல்லப்பட வேண்டும் .இது தான் நாத்திகர்களுக்கு உன் வேதம் சொல்லும் தண்டனை .


slay the hater of devotion.
Slay everyone who pours no gift.
slay godless foes.
slaying non-sacrificing God-despisers!





Here's a few verses from the most sacred & authoritative Hindu scriptures,the Vedas,which calls for the slaying of the godless (aka Atheists)

Atharva Veda 11:2:23 Homage be paid him with ten Sakvari verses who stands established in the air's mid-region, slaying non-sacrificing God-despisers!

Rg Veda 3:24:1. AGNI, subdue opposing bands, and drive our enemies away.Invincible,slay godless foes:give splendour to the worshipper

Rig Veda 7:93:5 When two great hosts, arrayed against each other, meet clothed with brightness, in the fierce encounter.Stand ye beside the godly,smite the godless; and still assist the men who press the Soma.

Rig Veda 1:CLXXVI:4 Slay everyone who pours no gift, who, hard to reach, delights thee not.Bestow on us what wealth he hath: this even the worshipper awaits

Ath Veda 4:30:5 I bend the bow for Rudra that his arrow may strike and slay the hater of devotion.I rouse and order battle for the people, and I have penetrated Earth and Heaven.

Anonymous said...

இன்றைக்கு இந்து மதத்தாலோ, கிறிஸ்துவத்தாலோ - நாத்திகர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கருத்துரிமையுடன், கருத்து சொல்பவனின் உயிர், உடமைக்கும் பாதுகாப்புள்ளது. ஆனால் அமைதி மார்க்கத்தால் மட்டுமே பெருமளவு அச்சுறுத்தல் உள்ளது. தமிழக பகுத்தறிவாளர்களுக்கும் உண்மையான நாத்திக உணர்வில்லை. இறையில்லா இஸ்லாம் அந்த நாத்திகப்பணியை சிறப்பாக செய்கிறது. சரியான கட்டுரை.

Jenil said...

//உங்கள் முன்னோர்கள் இந்துக்கள் என்ற வகையிலும் நீங்கள் இந்துதான்.
//

Before sayong this u have to give the definition of HINDU

1) If someone who do not believe VISHNU, SIVA, BRAHMA and only worship KOTRAVAI can be called HINDU ??

2) If someone who does not agree SANSKRIT as a GOD speaking Lnaguage can be considered as HINDU ??

3) Can someone says "RAM" and "KRISHNA" and "RAM BRIDGE" as foolishness can be considered as HINDU ??

4) If u answer all the above a YES, then who is NOT HINDU ??

This is a shameless practice donne by ARYANS they will say any VILLAGE GOD as one AVATAR of VISHNU or SIVA...Other religions only hijack and covert DEVOTEES to their religion HINDUISM is the only SHAMELESS religion which will hijack other religions({e.g, People who worshipped only MADURAI VEERAN) itself...

If u do not agree with the above points tell me

1) How many GODS do ur religion have ?? WIll it be same for the next 10 years or will u keep on adding names ??

2) If MARIYAMMAN is ur GOD how many SANSKRIT texts has her name ??

PAATTIVAITHIYAM said...

எனக்குத் தெரிந்து ரிக் வேதத்தில் நாத்திகர்களைக் கொல் என்று சொல்லி இருப்பதால் இந்துக்கள் எல்லோரும் நாத்திகர்களைக் கொன்றதாக சரித்திரத்தில் படித்ததில்லை. நாத்திகன்தான் என்னை அதிகம் சிந்தனை செய்கிறான் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததின் அடிப்படையில் எழுதினேன்.
இந்து மதம் என்பது பிறர் நமக்கு வைத்துக்கொண்ட பெயர். இது சனாதன தர்மம். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு தெய்வங்கள் அனைத்தும் குடும்ப உறவு முறையை அடிப்படையாக கொண்டவை. சிவனின் மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் விநாயகன், முருகன் பார்வதியின் அண்ணன் விஷ்ணு என்றும் பெண் தெய்வங்கள் அனைத்தும் சக்தியின் அம்சங்களாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது.

Jenil said...

//எனக்குத் தெரிந்து ரிக் வேதத்தில் நாத்திகர்களைக் கொல் என்று சொல்லி இருப்பதால் இந்துக்கள் எல்லோரும் நாத்திகர்களைக் கொன்றதாக சரித்திரத்தில் படித்ததில்லை.//

U have never heard about 8000 samanas killed by Hindus ??

Is HINDUISM the base of UNTOUCHABILITY and CASTESIM in INDIA ??

Where will u include the killing done by UPPER CASTE HINDUS ???

HINDUS did not kill any atheists because there were not much athesist at the time when HINUDS had POWER ... EVEN HINDUS have done SATHRU SAMHARA POOJA to eliminate PERIYAAR who is a atheists as they didnt had the guts to KILL him themselves..

Jenil said...

//இது சனாதன தர்மம். தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது.//

ok Kepp the name as SANATHANA DHARMAM i have asked some question in thhe above post answer that ... Just rep[lace SAMATHANA DHARMAM in place of HINDUISM

Jenil said...

//இங்கு தெய்வங்கள் அனைத்தும் குடும்ப உறவு முறையை அடிப்படையாக கொண்டவை. சிவனின் மனைவி பார்வதி. இவர்களின் குழந்தைகள் விநாயகன், முருகன் பார்வதியின் அண்ணன் விஷ்ணு//

For SIVA, VISHNU and BRAMHA i have already asked questions...
Now comming too MURUGAN.. The name MURUGAN itself is stolen from TAMILIANS..Just read the below post
http://en.wikipedia.org/wiki/Murugan The second son of SIVA is different in each literature...In tamil literature he is worshiped as a NATURE SPIRIT...But in HINDU text he is adopted as SON of SHIVA...


சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_21.html

This is what i call shameless religion just to have more devoees these people are ready to add new GODS to their religion

Jenil said...

//பெண் தெய்வங்கள் அனைத்தும் சக்தியின் அம்சங்களாக கருதப்பட்டு வணங்கப்படுகிறது.//

Here is where ur intensions are clear the word AMSAM is very generic u can add as many GODs as possible and just frame a story like this "LORD SHIVA WAS HUNTING AT TAT TIME HE WALKED AROUND THE WORLD MANY TIMES AND HIS SWEAT WAS SCATTERED ALL OVER THE WORLD SO THOSE SWEAT DROPS DEVEOPED AS MANY GODS IN HIS "AMSAM" ".. See using the above story u can add as many GODS as u can and say the entire WORLD was following HINDUISM once upon a time..ENJOY ....

RAJA said...

ஜெனில் அவர்களே
சமணர்கள் நாத்திகர்கள் அல்ல. அவர்களை எந்த அரசனின் ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் கொன்றார்கள்?. திருநாவுக்கரசரை சுண்ணாம்புக்காளவாசலில் போட்டும், கல்லைக்கட்டி கடலில் போட்டும் அவரை அழிக்க சமணர்கள் முயற்சித்து தோற்றனர். இறுதியில் அனல்வாதம், புனல் வாதத்தில் தோற்றால் தாங்கள் அனைவரும் கழுவேறுவதாக சவால் விட்டு தோற்றனர். மக்களை பிளவு படுத்த சரித்திரத்தில் ஆரியர்கள் வந்தார்கள் என்று ஒரு நடக்காத கற்பனையை புனைந்து கிறிஸ்தவர்கள் திரித்து எழுதி அதையே பாடபுத்தகத்தில் வைத்து படிக்க வைத்ததால் நம் மக்களும் முட்டாள்தனமாக அதை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். சமணர்களைக் கொன்றதாக கூறுவதும் ஒரு அண்டப்புளுகுதான். சமணர்கள் காலத்தில்தான் தீண்டாமை நுழைந்தது என்று டாக்டர் சிவசக்தி பாலன் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.
ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் மனித குலத்தை மனித நேயத்துடன் வாழ வைக்கிறது. எந்த அரசனும் போரில் ஜெயித்தால் தோற்ற நாட்டின் கோவில்களை நொறுக்கியது கிடையாது. எத்தனை சாதி சண்டைகள் போட்டாலும் அடுத்த ஜாதிக்காரனின் கோவில்களை உடைத்ததில்லை. இதை எல்லாம் மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

Khader Mohideen said...

ராஜா என்ற ஆர் எஸ் எஸ் அடியாளுக்கு ,
சமணம் ஒரு சுத்தமான நாத்திக மதம், கடவுளை பற்றிய எந்த கோட்பாடுகளும் சமணத்தில் இல்லை ,
அது ஆண்ம்மா மோட்சம் பெறுவது மற்றும் அதற்கான வழிமுறைகளை பற்றி போதிக்கும் ஒரு கடவுளற்ற மதம்.
இந்த ஆன்மா மனித ஆன்மா மட்டும் அல்ல , எல்லா உயிர் ஜீவன்களின் ஆன்மா பற்றியது .
எல்லா காலத்திலும் ஒரு மதம் மற்றொரு மதத்தை அழித்தே வளர்ந்தது என்றால் அது இந்து மதத்தை தவிர வேறில்லை .
சமண,பௌத்த,சாங்கிய மதங்களை அழித்து அதனை இந்து மதமாகவே மாற்றிய பெருமை இந்தற்குண்டு .
கேடுகெட்ட மதங்களின் தொகுப்பே இந்து மதம் .
மதம் அழிவை தரும் அது இந்து மதம் மட்டுமல்ல , எல்லா மதங்களுமே !!!

Khader Mohideen said...

ராஜா என்ற ஆர் எஸ் எஸ் அடியாளுக்கு ,
சமணம் ஒரு சுத்தமான நாத்திக மதம், கடவுளை பற்றிய எந்த கோட்பாடுகளும் சமணத்தில் இல்லை ,
அது ஆண்ம்மா மோட்சம் பெறுவது மற்றும் அதற்கான வழிமுறைகளை பற்றி போதிக்கும் ஒரு கடவுளற்ற மதம்.
இந்த ஆன்மா மனித ஆன்மா மட்டும் அல்ல , எல்லா உயிர் ஜீவன்களின் ஆன்மா பற்றியது .
எல்லா காலத்திலும் ஒரு மதம் மற்றொரு மதத்தை அழித்தே வளர்ந்தது என்றால் அது இந்து மதத்தை தவிர வேறில்லை .
சமண,பௌத்த,சாங்கிய மதங்களை அழித்து அதனை இந்து மதமாகவே மாற்றிய பெருமை இந்தற்குண்டு .
கேடுகெட்ட மதங்களின் தொகுப்பே இந்து மதம் .
மதம் அழிவை தரும் அது இந்து மதம் மட்டுமல்ல , எல்லா மதங்களுமே !!!

Jenil said...

//மக்களை பிளவு படுத்த சரித்திரத்தில் ஆரியர்கள் வந்தார்கள் என்று ஒரு நடக்காத கற்பனையை புனைந்து கிறிஸ்தவர்கள் திரித்து எழுதி அதையே பாடபுத்தகத்தில் வைத்து படிக்க வைத்ததால் நம் மக்களும் முட்டாள்தனமாக அதை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். //

If Aryans didn't come from outside where did the GOD language SANSKRIT came from ???

"Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan."

http://en.wikipedia.org/wiki/Sanskrit

Jenil said...

//சமணர்களைக் கொன்றதாக கூறுவதும் ஒரு அண்டப்புளுகுதான்.//

After commiting murder u are able to say it as sucide also..U r surely RSS...U will say all muslims in GUJRAT commited sucide..

During 5th, 6th and 7th century Buddhism and Jainism were the popular religions in South India. The king Koon Pandian also was maravar. But his wife Mangayarkarasi is a Saivaite. In the time the king got Boils (வெப்பு நோய்).

The queen asked Sambandhar a saiva poet to come to Madurai to treat her husband. Accordingly Sambandhar came and treated the king with some hymns and some magic remedies like Camphor. The king got cured and Sambandhar asked him to kill the Jain priests.

The King Koon Pandiyan and Queen Mangayarkarasi were ordered to kill the Jain priests. The Jain priests were forcefully put over sharp, tall, conical structures (கழுமரம்) in sitting posture. Their bodies were pierced by those conical structures. In this way 8000 priests were killed. These things were happened in a village near Madurai called Samanatham (சாமநத்தம்). Even now during the Chaitra month festival (April - May) this massacre is celebrated in Madurai by a group of Hindus.

http://en.wikipedia.org/wiki/Koon_Pandiyan

Jenil said...

//சமணர்கள் காலத்தில்தான் தீண்டாமை நுழைந்தது என்று டாக்டர் சிவசக்தி பாலன் அவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளார்கள்.//

The base for casteism is MANUMRITI Rules and VARNASHRAMA DHARMA.. Now u r saying JAINS introduced Untouchability.... There is a LIMIT to LIE.. Answer this

Y DID ur LORD RAM killed SAMBOOHAN ??

Jenil said...

//ஆயிரம் கடவுள்கள் இருந்தாலும் மனித குலத்தை மனித நேயத்துடன் வாழ வைக்கிறது.//

Mr. RAJA is giving new definition for HUMAN RIGHTS...

1. SUDHRAS shud not enter temples or take water from common POND.

2. "ALL Four VARNAS are created by me and even if i decide that cannot be changed" - LORD KRISHNA , BAHAVAT GITA.

3. In K.K District 1887 LOw caste people went to court just for weraing dress above their waist ..

The above situations are called HUMAN condtions all of us shud agree with Mr.Raja...

Jenil said...

//எந்த அரசனும் போரில் ஜெயித்தால் தோற்ற நாட்டின் கோவில்களை நொறுக்கியது கிடையாது. எத்தனை சாதி சண்டைகள் போட்டாலும் அடுத்த ஜாதிக்காரனின் கோவில்களை உடைத்ததில்லை. இதை எல்லாம் மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்//

புஷ்ய மித்திர சுங்கன் (கி.மு. 184-151) தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்துள்ளார். மேலும் ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்தார். அதேபோன்று ஹுன அரசன் மிகர குலன் (கி.பி. 528-இல்) தனது தலைநகரான ஷாகாலாவிலிருந்த பௌத்த ஸ்தூபிகள், மடங்களின் செல்வங்களைக் கொள்ளையிட்டு அவற்றைத் தரைமட்டமாக்கினார். கௌட மன்னன் சசாங்கன் (கி.பி. 610-இல்) புத்த கயாவிலிருந்த போதி மரத்தைத் தோண்டி எடுத்துக் கொளுத்தினார். பாடலி புத்திரத்திலிருந்த புத்தரின் பாதச்சுவடு பொறித்திருந்த கற்பலகையை உடைத்தார்கள். பௌத்த விகாரைகள் இடிக்கப்பட்டன. பௌத்த துறவிகள் நேபாளம் வரை துரத்திச் செல்லப்பட்டனர்.

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 581-590) தென்னாற்காடு மாவட்டத்திலிலுள்ள பாடலி நகரில் சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அங்கேயே சிவன் கோவிலைக் கட்டினார். பல்லவன் மகேந்திரவர்மன் (கிபி 610-630 இல்) சமண மதத்தைத் தழுவியபோது, அவர் காலத்தில் வாழ்ந்த, சைவ மதத்துக்கு மாறியிருந்த திருநாவுக்கரசரைப் (அப்பர்) பல இன்னல்களுக்கு ஆளாக்கினார். அதே மன்னர் சைவ சமயத்தைத் தழுவியபோது, தென்னாற்காடு மாவட்டம் திருவதிகையிலிருந்த சமணப் பள்ளியை இடித்துவிட்டு, அதே இடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார். ஹர்சர் (கி.பி. 643-இல்) கன்னோசியில் கூட்டிய சமணர் மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டது. தமிழகப் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் (கி.பி. 641-670) மதுரையில் 8000 சமணர்களைக் கழுவிலேற்றினான். குகையிடிக் கலகம் என்ற பெயரால் பௌத்த விகாரைகளும் சமணர் பள்ளிகளும் இடிக்கப்பட்டன. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டத்தில் சமணர் குகைகளெல்லாம் சிவன் கோவில்களாக மாற்றப்பட்டன. இன்றைக்குத் தமிழகத்தின் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள் இருந்த இடங்களில் எல்லாம் ஒரு காலத்தில் பௌத்த, சமண மடங்கள் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மைகளாகும்.

இவையன்றியும் இந்து மன்னர்களே இந்துக் கோவில்களை கொள்ளையடித்த சம்பவங்களும், சிலைகளை அப்புறப்படுத்திய சம்பவங்களும் வரலாற்றில் நடந்தேறியுள்ளன. முதலாம் விக்ரமாதித்தன் (கி.பி. 655-681) என்ற சாளுக்கிய மன்னர், காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1133-இல் சைவ-வைணவப் பகை காரணமாக, தில்லைக் கோவிந்தர் சிலையை இரண்டாம் குலோத்துங்கன் கடலில் எறிந்தார். கி.பி. 1579-இல் கோல்கொண்டா அரசனின் படைத்தலைவன் முரஹரிராவ் என்ற மராத்தியப் பிராமணர், அகோபில நரசிங்கர் கோவிலைக் கொள்ளையிட்டார். கி.பி. 1783-இல் மராட்டியப் படைத்தலைவர் பரசுராம் தலைமையில் சென்ற குதிரைப் படையினர் சிருங்கேரி சாரதா பீடத்தைக் கொள்ளையடித்துப் பிராமணர்களைக் கொன்றனர். சராதா தேவி சிலை தாக்கப்பட்டது. கி.பி. 1791 அக்டோபரில் மராட்டியர் நாணா சாகிப் சிருங்கேரி மடத்தைத் தாக்கினார். கி.பி. 1798-இல் இந்தூரின் ஹோல்கராகிய முதலாம் ஜஸ்வந்த் ராவ் என்பவர் நாத்துவாடா கோவிலைக் கொள்ளையடித்தார். மீண்டும் 4.1.1804 அன்று புஷ்கரம் கோவில் கொள்ளையடிக்கப்பட்டது.


Now compare HINDUISM with other religions

Jenil said...

Mr. RAJA ...

Our ail is to remove ALL religions but this site concentrates on ISLAM...But if u try to use this GAP to INSERT HINDUISM we will be forced to show all NONSENSE in HINDUISM also...

OUR AIM is

FORGET GOD THINK ABOUT HUMANS...

RAJA said...

நண்பர்களே
அவரவர் தொழிலுக்கேற்ப நான்கு வர்ணங்களை கிருஷ்ணர் படைத்தார் என்று கீதையில் கூறுகிறார். நாம் ஆயிரக்கணக்காக சாதிகளை உருவாக்கி கொண்டோம். உயர்வு தாழ்வு இடையில் நுழைந்தது. சாதிபேதம், உயர்வு,தாழ்வு கூடாது. அனைத்து உயிர்களும் சமம் என்று மகான்கள் போதித்து வழிகாட்டியுள்ளனர். மனிதர்களில் உயர்வு தாழ்வு பேதம் பார்ப்பது தவறு என்று நாமும் உணர வைக்க வேண்டும்.
பாரதத்தின் உயிர் ஆன்மீகம். அதை அழிக்க வெள்ளையனாலும், முகலாயனாலும், ஈவெரா கூட்டத்தாலும் முடியவில்லை. இது மகான்கள், ரிஷிகள், யோகிகள், சித்தர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற புமி. இங்கு அரசனை விட ஆண்டிக்குத்தான் மதிப்பு. இப்போது காணப்படும் சில போலி சாமியார்களை வைத்து மொத்தமாக எடைபோடக்கூடாது. நாத்திகத்தை பரப்பி இங்கு எதையும் சாதிக்க முடியாது. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் ஆன்மீக அனுபவங்கள் என்பது கிடையாது. இந்துவான ஒருவர் தன் ஆன்மீக அனுபவங்களை www.http://hinduvakanaaan.blogspot.in-என்ற வலைப்புவில் எழுதி வருகிறார்.
நம் முன்னோர்களை முட்டாள்களாக நினைப்பதுதான் தவறு. இஸ்லாம் என்ற ஆபத்திலிருந்து காக்க உங்கள் தளம் உதவுவதால் ஆதரிக்கிறேன்.

Khader Mohideen said...

ராஜா என்ற ஆர் எஸ் எஸ் நாயே ,
உன்னுடைய உதவியை நம்பி இந்த தளம் நடக்க வில்லை . இது உண்மையாகவே நாத்திகம் மற்றும் கம்முநிசம் ஊறி போன ஒரு கூட்டத்தினால் நடத்தபடுவது , இதற்கு உன்னை போன்ற மதவெறி பிடித்த எந்த ஒரு நாதாரியின் உதவியும் தேவை இல்லை, நீ இஸ்லாத்தை பற்றி மட்டம் தட்டி உனது இந்து மத முடை நாற்றத்தை இங்கு வந்து பரப்ப வேண்டாம். இங்கு இஸ்லாத்தை விமர்சிப்பது இஸ்லாத்தை மட்டும் இழிவு படுத்த அல்ல, விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எந்த கருத்தோ, மதமோ ,அரசியலோ, மனிதனோ இருக்க கூடாது என்பதற்காக வே !!!
அவரவர் தொழிலுக்கேற்ப நான்கு வர்ணங்களை கிருஷ்ணர் படைத்தார் என்பது சரி , இங்கு மலம் அள்ளுவது யார் என்பது தான் பிரச்சினையே !!
நீயும் உனது பிராமண குடிகளும் மலம் அல்ல ரெடி என்றால் நாங்களும் நான்கு வர்ணத்தை ஆதரிக்க ரெடி !!

Anonymous said...

//இஸ்லாம் என்ற ஆபத்திலிருந்து காக்க உங்கள் தளம் உதவுவதால் ஆதரிக்கிறேன். //
இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் போல இந்துத் தீவிரவாதிகளும் ஆபத்தானவர்கள்தான்.

தஜ்ஜால் said...

நண்பர் ராஜா அவர்களே! இஸ்லாம் தவறு என்பதால் இந்துமதம் சரியாகாது. எங்களைப் பொறுத்தவரையில் அனைத்து மதங்களும் குப்பைகளே. இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. இந்து மதத்தை விமர்சிக்க கூடாது என்றில்லை. இதற்குமேல் அதை விமர்சிக்க எதுமில்லை என்ற அளவிற்கு தந்தை பெரியார் விமர்சித்துவிட்டார்.

RAJA said...

நண்பர்களே
நான் ஏற்கனவே கூறியது போல் இது சித்தர்கள் புமி. ஆன்மீக புமி. இங்கு நாத்திகமும், கம்யுனிசமும் தோற்றுப்போகும். மதம் இல்லாத நாட்டை உங்களால் உருவாக்க முடியாது. மனித நேயத்தை உருவாக்க தொடரட்டும் உங்கள் முயற்சி.

Anonymous said...

//நண்பர்களே
நான் ஏற்கனவே கூறியது போல் இது சித்தர்கள் புமி. ஆன்மீக புமி.//
நண்பர்களே, இது ஆன்மிகம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் வெறியாட்டம் போட்ட ரத்தபூமி.
//இங்கு நாத்திகமும், கம்யுனிசமும் தோற்றுப்போகும்.// நாத்திகமும் இந்துமதத்தின் ஒரு பகுதி என்று ஜல்லி அடித்த ராஜா இப்போது நாத்திகம் தோற்கவேண்டும் என்கிறார் :)
//மனித நேயத்தை உருவாக்க தொடரட்டும் உங்கள் முயற்சி. // இந்து மதம் தோற்றுவித்த பார்ப்பனீயம் தோற்க ஆரம்பிக்கும்போது மனிதநேயம் தானாக உருவாகும்.

Khader Mohideen said...

ராஜாவுக்கு தொப்பி தொப்பி ., சரி நாத்திகம் தோற்கும் என்றால் இந்துத்வா ஜெயுக்குமா ?
இது சித்தர்கள் புமி. ஆன்மீக புமி என்றால் எப்படி முப்பது கோடி பேர் இஸ்லாமியர்களாகவும், இருபது கோடி பேர் கிரிதவர்கலாகவும் , 10 கோடி பேர் சீக்கியர்களையும் மாறி போனாங்கோ !!!
மீதி எஞ்சி இருக்கும் இந்துக்களும் கூட சித்த மரபை பின்பற்றுவதில்லையே !!!
உன்னோடு ஒரு டீசன்ட் பேச்சு வைத்துகொள்ள முடியாது போலவே !!!

RAJA said...

கிறிஸ்தவமும் இஸ்லாமும் இந்தியாவில் எப்படி பரவியது என்று எல்லோருக்கும் தெரியும். முஸ்லீம் மன்னர்கள் ஆட்சி காலத்தில் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் இன்றைய முஸ்லீம்களின் முன்னோர்கள். வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் ஆரம்பித்து இன்று வரை இந்துக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதம் மாற்றி கிறிஸ்தவம் வளர்ந்துள்ளது. எவரும் குரானை படித்தோ, பைபிளைப் படித்தோ மதம் மாறவில்லை. சைவம், வைஷ்ணவம் போன்று புத்தம், சீக்கிய மதம் ஆகிவிட்டது. அனைவரும் வணங்கும் இறைவன் ஒருவனே என்ற இந்து மத அடிப்படைக் கருத்தினால் இந்து மதம் பிற மதத்தவர்களை மதம் மாற்ற முயலவில்லை. இதனால்தான் இந்தியாவில் பார்ஸி, யுத மதத்தினரும் நிம்மதியாக வாழ முடிகிறது.

Anonymous said...

ஆதி சங்கரா, ராமானுஜர் போன்ற பார்ப்பனர்கள் காட்டுமிராண்டித்தனமாக புத்த ஜைன மதத்தினரை கொன்றுதான் இந்து (பார்ப்பன) மதத்தைப் பரப்பினார்கள். கழுவேற்றப்படுவோம் என்று பயந்தே பலரும் அசிங்கம் பிடித்த இந்து மதத்திற்கு மாறினர்.

சிவப்புகுதிரை said...

ம்ம்ம் ராஜா...இப்பொழுது இந்து மததின் பருப்புக்கள் எடுக்கப்பட்டு கொண்டு இருங்கின்றது என்பது உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை.தலித்துக்கள் இப்பொழுது இந்து மதத்தை விட்டுவெளியேரி கொண்டு இருக்கின்றார்கள்..சோ நீங்கள் எல்லாம் தயாரவுங்கள் பீ அல்ல..

RAJA said...

சிவப்பு குதிரை
இந்து மதத்தின் குறைகளைக் களைய பலரும் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். எனவே இந்து மதத்திற்கு மாறுபவர்கள் மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கிறிஸ்தவ, முஸ்லீம் மதத்திற்கு மாறுபவர்களைப் போல் வெளியே விளம்பரப்படுத்தாமல் இருப்பதால் ஏதோ இந்து மதத்தை விட்டுத்தான் பலர் வெளியேறுவது போல் தோற்றம் தெரிகிறது.
வாதத்தில் தோற்ற சமணர்களைக் கழுவேற்ற நின்ற சீர் நெடுமாறன் முயன்ற போது திருஞானசம்பந்தர் அவர்களை மன்னித்து விட்டுவிடும்படி சொன்னார். இங்கே வரலாற்றை திரிக்கும் பணிகள்தான் நடக்கிறது.

Anonymous said...

இப்னு லஹப் வெங்காயம்
ஆர்எஸ்எஸ் காரன் என்றால் கேவலமா? ஆர்எஸ்எஸ் காரன் இந்திய சீன, பாகிஸ்தான் போர்களில் ராணுவத்துக்கு உதவியிருக்கிறார்கள். புயல் வெள்ள காலங்களில் சடலங்களை அப்புறப்படுத்துவதிலிருந்து உணவு வழங்குவது வரை மக்களுக்கு உதவி வருகிறார்கள். ரத்த தானம் செய்கிறார்கள்.
பாரதமே சுதந்திரத்திற்காக போராடியபோது சுதந்திரம் வேண்டாம் என்று கூறியது ஈவெரா கூட்டம். நேதாஜி போராடிக்கொண்டிருந்தபோது அவரை குறைகூறித்திரிந்தது கம்யுனிஸ்ட் கூட்டம். ஆர்எஸ்எஸ்ஸை குறைகூற இந்த கூட்டங்களுக்கு அருகதை இல்லை.
ஆர்எஸ்எஸ் காரர் நரேந்திரமோடி குஜராத்தை தலைசிறந்த மாநிலமாக உயர்த்தியுள்ளார். தாத்தா ஜோதிபாசு எத்தனையோ ஆண்டுகள் ஆண்டும் மேற்குவங்கம் முன்னேறியபாடில்லை. இப்போது அந்த கம்யுனிச கோட்டையும் தகர்ந்து விட்டது.
கம்யுனிச , நாத்திக கூட்டமே. கல்யாணம், கருமாதி எந்த வழியில் செய்வீர்கள்?. தாலி கட்டுவது இந்து கலாச்சாரம். மோதிரம், பைபிள் மாற்றுவது கிறிஸ்தவ கலாச்சாரம். முஸ்லீம்கள் கூட கருகமணி தாலி கட்டுகின்றனர். ஏன் சீனாக்காரனை பின்பற்றுவதில்லை? அங்குமே மதங்கள் இருக்கிறது.

yasir said...

நாத்திகர்கள் ஒன்றுகூடி இணைய ஏதுவான தளத்தை உருவாக்கியதற்கு மிக்க நன்றி தஜ்ஜால்.

Unknown said...

நல்ல ஒரு சந்தர்ப்பம் தந்து நாத்திகர்கள் கலாய்க்க அதே சமயம் மதமற்ற சமுதாயம் உருவாக சிந்திக்க ஏற்ற தளம் நன்றி அன்பரே...

அன்புடன் இனியவன்

Dr.Anburaj said...

மேலே சொலலப்பட்ட விசயங்கள் அனைத்தும் உண்மையாக இருக்கட்டும்.வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்.தான்.ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைக்கு வளரும் போது மாறும் போது மனிதா்கள் சுலபமாக மாற்றததை ஏற்பதில்லை.இதையே வரலாறு பதிவு செய்கின்றது. பாிணாமம் உயிாியலில் மட்டும் நடந்து கொணடிருக்கவில்லை. எழுத்து உடை பண்பாடு வீடு , ஊா் அமைப்பு ஆட்சிமுறை திருணம சமூக வாழ்வு அரசியல் ......... இப்படி எண்ணற்ற விசயங்களிலும் பாிணாமம் நடந்து கொண்டேயிருக்கின்றது.அணுவை பிளக்க முடியாது என்று உலகமே நம்பியது. அதையும் ஒருவன் முடியும் என்ற போது அந்த விஞ்ஞானியும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாளான். ஆனாலும் விஞ்ஞானம் வளா்ந்து வருகின்றது. பாிணாமம் வளா்ச்சியாக மனித வளமேம்பாடாக இருக்கும் போது அதைஎற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்திற்கு என்று ஒரு நபி கிடையாது.விஞ்ஞான உலகம் போல் தகுதி பெற்றவா்கள் எல்லாம் சமயத்ரதலைவா்களே.தகுதியால் மக்களை வெல்வ வேண்டும். அவரது கருத்துக்களில் சத்தியம் இருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வாா்கள் .இல்லையெனில் கைவிட்டு விட்டு தகுதிபடைத்த வேறு நபரை தேடிக் கண்டு பிடித்து பின்பற்றத் தொடங்கவாா்கள். விஞ்ஞானமும் இப்படித்தான். ஒரு விஞ்ஞானி கணடு பிடித்த கருத்தை மாற்றவோ நிராகாக்கவோ சாதாரணமான விசயம். நான் ...அவரது சீடன். எனது குரு சொன்னதை தவறு என்பவனைக் கொல்வேன் என்ற கருத்து விஞ்ஞான உலகில் இல்லை. இந்து மதம் ஒரு வேதத்தை நம்பி என்றும் இருக்காது.கீதையும் ாிக் வேதமுமு் உள்ளது.இதுவே முடிவ அல்ல.எல்லையற்ற இறைவனை விளக்கும் வேத புத்தகம் எல்லையற்றப் பக்கங்களைக் கொண்டதாகவே இருக்க முடியும். இந்தியாவில் நாத்திகா்களுக்கும் ஆத்திகா்களுக்கும் ஒரு போராட்டம் இருக்கவே செய்யும். உள்ளது. ஆனாலும் இந்தியாவில் சமூக சீா்திருத்தங்கள் சுலபமாக நடைபெற்று வருகின்றது. என்பதை மறந்து விடக் கூடாது.இந்தியாவில் புதியகருத்துக்களைச் சொல்வது ஆபத்தான காாியம் அல்ல. சிரமங்கள் ஏற்படலாம். கிறிஸ்தவ இசுலாமிய அமைப்புகள் சேணம் கட்டிய குதிரை போன்ற நிலை.பைபிளுக்கும் குரானுக்கும் மாறுபட்ட புதிய சிந்தனைக்கு பாிசு வெறுப்புதான் கடிதம் எழுதுகின்றவ்ா்கள் இதைஉணா்ந்து கொள்ள வேண்டும்.
சமய அமைப்புக்குளுக்கு அரசு அதிகாரம் கூடாது.