Tuesday 27 March 2012

ஜனநாயகவாதிகள் பின்னே வால் பிடித்து வாழும் இஸ்லாம்



மதக் கோட்பாடுகளையும், அதன் அசிங்கங்களையும், அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது மதவெறியர்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும், கொலை செய்வதும் பன்னெடுங்காலமாக நடைமுறையில் உள்ளதே. இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல. தங்கள் வேதங்களை படிக்கச் சொல்லி ஆய்வு செய்யுங்கள் என்று இவர்கள் தேனொழுக கூறினாலும் கேள்விக்குள்ளாக்கப்படாமல் அப்படியே “அனைத்தும் அற்புதம் என்று ஏற்க வேண்டும் என்பதே அவர்களின் நயவஞ்சமான  விருப்பம்.. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களையும் இவர்கள் விடுவதில்லை. விவாதம் என்று ஒப்புக்காக சில வாதங்களை அவர்கள் எடுத்துவைத்தாலும் பதில் சொல்ல முடியாத கட்டம் வரும்போது ஆத்திரமடைகின்றனர்; கோபம் கொள்கின்றனர். பொருளற்று அரற்றுகின்றனர். தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். பிற இடங்களில் அடக்கி வாசிக்கின்றனர். அதனால் பெரும்பான்மை பாரமரர்களைத் தன்னுடைய வன்முறைக்கும் ஆதிக்கத்திற்கும் திரட்டிட கோடிக்கணக்கில் செலவிடுகின்றனர்.
      இன்று கடையநல்லூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தொடர்பில்லாத இந்த வலைப்பூவில்  வந்துள்ள “லூத் என்ற லூசு என்ற கட்டுரைக்கு பொறுப்பாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதை அறியும் போது மனம் வருத்தமாக உள்ளது. பெரும்பாண்மையாக இருக்கிறோம் என்ற தைரியத்தில் இந்த வன்முறையை தாங்கள் ஏதோ வீராதி வீரர்கள் போல் நடத்தியுள்னர். நாங்களும் ஒருநாள் பெரும்பான்மையாகுவோம்; அன்று இவற்றிற்கெல்லாம் பதிலடி தருவோம் என்று கூறிக்கொண்டு இந்த இசுலாமிய வெறியர்களின் வீரத்தை இந்தியவரலாற்றினூடே ஒரு சிறு தொகுப்பாகப் பார்ப்போம்.
      இந்தியாவில் காலூன்றிய, இன்னும் சொல்லப்போனால் உலகம் முழுவதுக்குமான இசுலாமியர்களை இருவைகயாப் பிரிக்கலாம். ஒரு வகையினர் ‘முல்லா எனப்படுவர். இவர்களை எப்படி அடையாளம் காணுவது என்றால் ‘அரசையும் அரசு கஜானாவைய்ம் சார்ந்து வாழ்பவர்கள். அரசின் சட்ட திட்டங்களில் தலையிடுபவர்கள். அதற்கும் ஒருபடி மேலே அரசின் சட்ட திட்டங்களை வகுப்பவர்களாகவும் இருப்பவர்கள். அரசுக்கும் அதிலிருந்து கிடைக்கும் தன்னுடைய சுகத்திற்கும் இடையூறு இல்லாத இசுலாமிய சட்டங்களையே உண்மையான நபிவழி என்று சாதித்து பிற இசுலாமியக் குழுக்களை அழிக்க நினைப்பவர்கள். ஒரு வகையில் இவர்களை வகாபிகள் என்று கூட அழைக்கலாம். இவர்கள் கையிலேயே சமூக அதிகாரம் இருக்கும். அதாவது அரசு எந்திரத்தை பக்கப்பலமாகக் கொண்டவர்கள். இவர்களின் அரசு இருக்கும் இடங்களில் பிறமதங்களுக்கான உரிமை கிடையாது. வழிபாட்டுத்ளங்களை நிறுவ முடியாது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே இருக்கும் கோயில்களையும், பிறமத அடையாளங்களையும் அகற்றியுள்ளனர். அதுபோல பிற மதத்தினர்களுக்கென்று தனி வரிவிதிப்புக் கொள்கையும் கொண்டவர்கள். அச்சு அசலாக இவர்களை பார்ப்னர்களுடன் ஒப்பிடலாம். பார்ப்பனர்கள் பிற சாதிகள் மீது தொடுப்பதை இவர்கள் பிற மதங்கள் மீது தொடுக்கின்றனர். இவர்களுக்கும் தத்துவம், அறிவியல், மற்றும் சமூக வளர்ச்சிகளுக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பழமையை அப்படியே நிலை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் சமூக அக்கறை. தப்லீக் ஜமாத் என்று இந்தியவில் இயங்குபவர்கள் இந்த முல்லா வகையினர். தவ்ஹீத் ஜமாத், தமுமுக என்றும் பிரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் அதிகாரத்தை சுவைப்பதற்காக அடித்துக்கொண்டு நாறுபவர்கள்,
      இரண்டாவது வகையினர் ‘ஷூபிக்கள் எனப்படுவர். இவர்கள் இசுலாமியத் தத்துவ இயல் ஆசிரியர்களின் வழித் தோன்றல்கள். உலக முழுவதும் நடந்து வரும் தந்துவங்களைப் பயிலுவதும், புதிய தத்துவ விசாரனைகளை உருவாக்குதும், இசுலாமியத் தத்துவ சாராம்சங்களுடன் அதனை பொருத்துவதும், தேவைப்படும் இடங்களில் மாற்றத்தையும் வேண்டுபவர்கள். இறைவன் ஒருவன் என்பதையே இவர்கள் கொள்கையாக கொண்டாலும் மக்களின் மனங்களில், பண்பாடுகளில் ஏக இறைவனை  காண்பவர்கள். சுருங்கச் சொல்வோமானால் இவர்களை ஆன்மீகவாதிகள் என்று கூறலாம். தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் ஷூபிக்களே. இவர்களின் முக்கிய பண்பு, மக்களுடன் மக்களுடைய பண்பாட்டுடன் கலந்து வாழ்வதை ஆதரிப்பதாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் குடியேறிய இவர்கள் இந்துக்களுடன் இந்துக்களின் பண்பாடுகளுடன் கலந்து இசுலாத்தை பரப்பினர். பொட்டுவைத்தல், தாலிகட்டுதல், புர்கா அணியாத பெண்கள், விவசாயம் செய்தல், விவசாயத்தில் பெண்களும் ஈடுபடுதல் போன்ற எளிய மக்களின் பண்புகளை ஆதரிப்பவர்கள்,  இந்து தெய்வங்களிலும் அதன் சாரமான ‘கடவுள் என்ற ஆன்மாவை “நீங்கள் சிவன் என்கிறீர்கள்; நாங்கள் அல்லா என்கிறோம்; எதுவானாலும் கடவுள்தான் என்று ஏற்றுக்கொள்பவர்கள். இவர்கள் வழியில் வந்தவர்கள் இன்று பக்கீர்சாஎன்று இசலாத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களாகாக தனி குடியிருப்பு, தனி கல்லரை என்று இழிவுபடுத்தப்பட்டு வாழ்கிறார்கள். முல்லாக்களின் ‘தூய்மைபடுத்துல் என்ற வன்முறையையும் மீறி இந்த ஷூபிக்களின்  வழியிலேயே தமிழகத்தின் பெரும்பானமையான இசுலாமியர்கள் வாழ்தனர்; வாழுகின்றனர். ஆனாலும் பக்கீரசாக்களுடன் சமூக உறவு கொள்வதில்லை.
      ஷூபிக்களுக்கும் முல்லாக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் மிக முக்கியமான இரு வேறுபாடுகள் உள்ளன. முல்லாக்கள் சொத்துடமைவாதிகள். மனிதனைப் படைத்தது இறைவனை வணங்குவதற்காகத்தான்; அதாவது அதற்காக மட்டுமே உழைக்கவேண்டும் என்று இவர்கள் கூறினாலும் தனிச்சொத்தும், சந்ததிகளுக்கென்று சொத்துக்குவிப்பும் இவர்களின் முக்கிய குறிக்கோள். ஷூபி ஞானிகள் தனக்கென்று எந்த உடமைகளையும் மனங்கொள்ளாதவர்கள். அன்றாடத் தேவைகளான உணவு, உடை போன்றவற்றிற்கு ஏதாவது ஒருவகையில் ஏற்பாடு செய்து கொண்டால் போதும்; மற்றபடி இறைவனை தியானிப்பதில், இரண்டறக்கலந்துவிடுவதில் நாட்டம் கொண்டவர்கள். அதனையே மக்களுக்கும் போதித்தனர். இவர்களின் கோட்பாட்டினை புத்தரின் கோட்பாடுகளுடன் பொருத்தலாம். ஒருமுக்கிய வேறுபாடு புத்தர் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் இவர்களும் எப்பொழுதுமே மக்களுக்கு சொர்கத்திற்கான வழியை மட்டுமே காட்டினார்கள். இவர்களாலும் அறிவியல் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
      இந்து கோயில்களுக்கு வரி செலுத்துதல், கோயில் விழாக்களுக்கு நன்கொடை செலுத்துதல், கடா வெட்டி சாமி கும்பிடவதற்கு ஆட்டுக்கிடா வழங்குதல், விழாக்காலங்களில் ஒருவருக்கொருவர் திண்பண்டங்களை பகிர்ந்துகொள்ளுதல், மாமா, மாப்பிள்ளை என்று உறவுமுறை சொல்லி ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்ளுதல் போன்று இந்துக்களுடன் தமிழக முஸ்லீம்கள் (பிற இந்தியப் பகுதிகளிலும் இருந்திருக்கலாம்) இணக்கமாக இருந்ததை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்ததே. காரணம் முல்லாக்களின் பிரச்சாரத்தைவிட ஷூபிக்களின் பிரச்சாரமே இந்திய மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதுதான். ஷூபிக்கள் இல்லையேல் இங்கு இசுலாம் விரைவாகப் பரவி இருக்கவே முடியாது. (கிறித்தவர்களும் இம்முறையையே பயன்படுத்தியதால்தான் உடையார் கிறிஸடின், தலித் கிறிஸ்டின் என்றானது) ஆனாலும் ஷூபிக்கள் முல்லாக்களால் இகழப்படுவதும் ஒடுக்கப்படுவதுமாக வரலாறு முழுக்க நடைபெற்றது.
      1990களில் உருவாக்கப்பட்ட தவ்ஹீத் பிரச்சாரக்குழுக்களால் இத்தகைய பண்புகள் குஃப்ர் (அல்லாவுக்கு மாற்றாக வேறு கடவுளை இணைவைத்தல்) என்றும், சாமிக்கு (சைத்தானுக்கு) படைக்கப்பட்டதை உண்ணக்கூடாது என்றும் விமர்சிக்கப்பட்டு தடுக்கப்பட்டது, படிப்படியாக பண்பாட்டுக் கலப்பு குறைக்கப்பட்டு “தூய இசுலாத்தை காப்பதாகக் கூறி மத அடிப்படையில் மக்களை இக்குழுக்கள் பிரித்துவிட்டனர். ஆர்.எஸ்.எஸ். எதிர்பார்ததும் இதையே. தை இவர்களே உருவாக்கித் தந்தனர்.
      இன்னொன்றையும் நாம் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். இசுலாமியர்கள்,இந்துக்கள் என்ற பொதுத்தன்மையில் தங்கள் இணக்கமான உறவை அனைத்து இந்துக்களுடனும் பேணிக்காக்கவில்லை. ஆதிக்க சாதியினரிடம் மட்டும்தான் இவ்வுறவை ஏற்படுத்திருந்தனர். தலித்துக்களை ஒரு ஆதிக்க சாதியினர் எப்படி நடத்தினார்களோ அப்படியே இவர்களும் நடத்தினர். ஒரு காலத்தில் ஏறக்குறைய இந்தியா சுதந்திரம் அடைந்த சில காலங்கள் வரை கூட நிலமானிய முறையையே முசுலீம்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடம் திணித்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களை ஒருமையில் பெயர் சொல்லி வாடா போடா என்று அழைப்பது, அய்யாவை கண்டதும் இடுப்பில் துண்டை கட்டுதல், எட்ட நின்று கைகட்டி பேசுதல், இழி தொழிலுக்கானவர்களாக இருத்தி வைப்பது, கூலியில்லாத ஏவல் வேலைகளை சுமத்துவது, வருடமானியத்திற்கு வண்ணார், நாவிதர், பறையர், பள்ளரிடம் அடிமை வேலை வாங்கியது போன்றவைகளை ஆதிக்கசாதியினர் போன்றே இசுலாமியர்களும் செயல்படுத்தினர். இன்றும் அதன் எச்சசொச்சங்களை பல கிராமங்களில் காணலாம். இதற்கு முக்கியமான ஒருகாரணம் உண்டு. இந்தியாவில் இசுலாமியராக மாறியவர்கள் ஆதிக்க சாதியினராகவே இருந்தனர். இந்தியாவிற்கு மதப்பிரச்சாரத்திற்கு வந்த முல்லாக்கள், ஷூபிக்களின் குறிக்கோளும் ஆதிக்க சாதியினராகவே இருந்தது. சமீபத்தில் தாழையூத்து என்ற கிராமத்தில் திருமதி கிருஷ்ணவேணி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேரந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் என்ற மதவெறியன் ஆதிக்க சாதியினருடன் சேர்ந்துகொண்டு ஊராட்சி மன்றக்கூட்டத்தை நடத்தவிடாமல் தாக்குதல் நடத்தி திருமதி கிருஷ்ணவேணியை நடைபிணமாக்கியுள்ளான். தலித் சகோதர்களே என்று வாய்கிழிய பேசும் எந்த இசுலாமிய அமைப்பும் இது குறித்து வாயே திறக்கவில்லை. நூற்றுக்கணக்காக வெளிவரும் இந்த நயவஞ்சகர்களின் பத்திரிக்கைகளும் மௌனமே சாதித்தன. இதிலிருந்தே இவர்களின் தலித் சகோதர்களேஎன்ற முழக்கம் விஷம் தோய்ந்த தேன் என்பதை அறியலாம்.
      உலக மக்கள் முழுவதையும் இசுலாமியராக மாற்றவேண்டும் என்ற முகம்மதுவின் கனவை நனவாக்கும் முல்லாக்களுக்கு முகலாயபடையெடுப்பு இந்தியாவிற்குள் தலம் அமைத்துத் தந்தது. ஆயுத பலம்தான் அதிகாரத்தை நிலைநாட்டும் என்பதால் படையெடுப்பிற்குப் பின்னே கொடிபிடித்து வந்த முல்லாக்கள் இசுலாத்தைப் பரப்பியதுடன் பிற மதங்கள் மீது ஆதிக்கமும் செலுத்தினர்.
இயற்கை எப்பொழுமே கொடுங்கோலர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை. அப்படி நடந்திருந்தால், அதுவே நிலையானதாக இருந்திருந்தால் நம் மனித சமுதாயம் எப்பொழுதோ அழிந்துவிட்டிருக்கும். ஆளும் வர்க்கத்தில்கூட சமூக நலன் கருதுபவர்களையும் அவ்வப்பொழுது இயற்கை தேர்ந்தெடுத்தே வருகிறது. சித்தார்தன் (புத்தர்), அசோகன் என்ற வரிசையில் அக்பர் என்ற இசுலாமிய வழிவந்த மன்னனும் ஒரு விதி விலக்கு. இந்துக்கள் என்பதற்காக மட்டும் திணிக்கப்பட்ட வரி (ஜிஸ்யா), உரிமை மறுப்பு போன்றவற்றை அவன் அடியோடு ஒழித்தான். இந்துப் பெண்ணை திருமணம் செய்து, இந்துப் பெண்ணாகவே வாழ அனுமதித்தது, இந்துஇசுலாமிய கோட்பாடுகளில் சிறந்தவற்றை ஒன்று சேர்த்து தீன் இலாகி என்ற புதிய மதத்தை உருவாக்க முயற்சித்தது என்று அக்பரின் மதநல்லிணக்க, சமூக அக்கறைக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. தூய இசுலாமியனாக இல்லாத அக்பரின் இச்செயல்களைக் கண்டு முல்லாக்கள் கொதித்தனர், பொருமினர். பத்வாக் கொடுக்கமுடியாமல் திணறினர். ஆம் அக்பர் மன்னரல்லவா ! பெரும்பான்மையும், அதிகாரமும்தானே வன்முறைக்கு வழிவகுக்கும்! அது அக்பர் கைகளில் அல்லவா இருக்கிறது! அதனால் முல்லாக்கள் பல்பிடுக்கப்பட்ட பாம்பாக அடக்கினர். இந்த வரிசையில் திப்பு சுல்தான் ஒரு புரட்சிகர சிந்தனையாளராக இருந்தாலும் ஆங்கில எதிர்ப்புப் போரில் தன் காலத்தை கழித்துவிட்டதால் சீரிய கருத்துக்களை மக்கள் முன் இவரால் எடுத்துவைக்க முடியவில்லை.
அக்பருக்குப் பின் வந்த முகலாய மன்னர்களிடமும் மதவெறியே ஓங்கி நின்றதால் மீண்டும் முல்லாக்கள் படம் எடுத்து ஆடினர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் வரவு மறுபடியும் முல்லாக்ளின் கொட்டம் எடுபடாமல் போகவே ஆங்கில ஏகாதிபத்தியத்திடம் கைக்கூலி வேலைபார்த்தனர். தில்லி மன்னன் பகதூர்ஷா, ஹைதரபாத் மன்னன் நிஜாம் போன்றோர் இதற்கு எடுத்துகட்டாக உள்ளனர். ஆனால் கைக்கூலி வேலைபார்ப்பதில் பார்ப்பனர்களை விஞ்சமுடியுமா? வெள்ளைக்காரனிடம் பார்பனர்களின் கை ஓங்கியதும் அவர்களுடன் சமரசம் செய்துகொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் (உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மாரக்கம் எங்களுக்கு) என்று புலம்பிக்கொண்டனர்.
பார்பனர்களின் ஆதிக்கம் உறுதிபட்ட இதே காலக்கட்டத்தில் அம்பேத்கார், பூலே, தந்தை பெரியார் போன்றோர் இந்து ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை உயர்நிலைக்கு எடுத்துச் சென்றனர். பார்பனீயத்தையும் இந்துமதக் கோட்பாடுகளையும் நார்நாராக கிழித்தெறிந்தனர். பார்பனர்களோ, தங்களுக்கு எப்பொழுதும் அடியாளாக வேலை செய்யும் ஆதிக்கசாதி சூத்திரர்களை ஏவிவிட்டு இவர்களைத் தாக்கினர். ஆங்கில ஏகாதிபத்தியத்தியம் தமது கொள்ளைக்கு ஜமீன்களின் ஆதரவு தேவைப்பட்டதால் பார்பனர்களின் வன்முறைக்கு துணை போனது.
உலகத்தையே கட்டி ஆளப்பிறந்த உண்மையான மதத்தின் பிரதிநிதிகளின் நிலையோ, ஆர்.எஸ்.எஸ்-ன் இசுலாமியர்கள் அந்நியர்கள்என்ற பிரச்சாரத்தினைக்கண்டு தங்கள் தாய்நாடு இந்தியாதான் என்று நிரூபிக்க படாதபாடு படவேண்டியதாகிவிட்டது.. தமது மதவெறி,  பத்தவாக்களை எல்லாம் மூட்டைக்கட்டி பரண்மேல் போட்டுவிட்டு கைகட்டி வாய் பொத்தி ஜனநாயகவாதிகள் மற்றும் நாத்திகவாதிகளின் பின்னே ஒழிந்து கொண்டனர். பெரியாரையும், அம்பேத்காரையும் புகழ்ந்தனர். அவர்களின் எழுத்துக்களைப் பரப்பினர். பெரியார். அம்பேத்கார் கைகள் ஓங்கிவிடாதா என்று ஏங்கினர்.
இங்கு, தாய்நாடுஎன்றால் என்ன என்ற ஒரு சிறு குறிப்பையும் பார்த்துவிடுவோம். முகலாய, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலங்களில் இசுலாமியர்களில் முல்லாக்களும் பிரச்சாரர்களும் அரபிய தேசங்களிலிருந்து குடியேறிய வந்தேரிகளாக இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் இங்குள்ள இந்துமதத்திலிருந்து மதம்மாறிய பூர்வகுடிகளே. அதுபோல பார்ப்பனர்கள் ஆரியர்களாக, வந்தேரிகளாக இருந்தாலும் பல நூற்றாண்டு காலங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து இதனையே தமது தேசமாகவும் அதனுடைய நலனையே தமது நலனாகவும் கருதுவதால் அவர்களும் இந்நாட்டினர்தான். ந்த ஒரு சமூகமும் ஒருநாட்டில் சில தலைமுறைகளாக வாழ்ந்து அந்நாட்டின் நலனையே தனது நலனாக கருதுமானால், அச்சமூகம் தான் வாழும் நாட்டினை தாய்நாடாகக் கூறிக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் எவருக்கும் எதுவும் தாய்நாடாக இருக்க முடியாது. வரலாறு முழுக்க மனித சமுதாயம் ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்தே வந்துள்ளது. அதனால் தலைமுறை தலைமுறையாக வாழும் பார்ப்பனர்களையோ, பூர்வகுடிகளாக இருந்து மதம் மாறிய இசுலாமியர், கிறித்தவர்களையோ அந்நியன் என்று கூறுவது தேசபத்தியல்ல, தேசவெறி. இன்னும் நாம் சொல்வதென்றால் எந்த ஒரு மனிதனையும் நாடு, மொழி, மதம், இனம் என்று பிரித்து வன்முறையை ஏவிவிடுபவர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் விலங்குகள், நாயைவிட கேவலமானவர்கள். தேசபக்தி, மதம், என்ற போர்வையில் வாழும் வல்லூறுகள். இங்கே பாரதிதாசனுடைய ஒரு பாடலின் சிலவரிகளை நினைவு கூறுவோம்.
உன்வீடு உனது பக்கத்து வீட்டு
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகளிடையில் திரையை விலக்கி
நாட்டுடன் நாட்டை இணைத்து
மேலே ஏறு
வானிடிக்கும் மலைமேல் ஏறிநின்று
பாரடா... பாரடா உனது மானிடப்பரப்பை...
தந்தைப்பெரியாரின் வெற்றிப்படிகளும், ஜனநாயக, கம்யூனிச அமைப்புகள் இசுலாமியர்களுக்கு ‘சிறுபான்மையினர் என்று அளித்துவரும் ஆதரவும் இசுலாமிய மதவெறியர்களை மீண்டும் தலைதூக்கத் தூண்டுகிறது. ஆனாலும் இவர்கள் நாத்திகர்கள் என்பதால் எச்சரிக்கையாகவும் இருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரங்களுக்கு அடிவிழும்போது ஜனநாயக, கம்யூனிச அமைப்புகளுடன் ஒட்டிக்கொண்டு தலையைக் காப்பாற்றிக் கொள்வதும், மதவெறி என்று வரும்போது ஏதும் அறியாத அப்பாவியாக ஒதுங்கிக் கொள்வதும் என்று நயவஞ்சக நாடகமாடுகிறார்கள். மதம் என்று வரும்போது ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் கைகோர்த்துக் கெள்வதற்குக் கூட இந்த நயவஞ்சகர்கள் தயங்குவதில்லை. கேரளாவின் பாடபுத்தகத்தில் மதம் தனக்கு வேண்டாம் என்று ஒரு பாடம் இருந்ததற்காக ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இசுலாமியர்களும் இணைந்து கொண்டு வெறியாட்டம் போட்டது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஜனநாயக, கம்யூனிச அமைப்புகள் இவர்களுக்கு அளித்துவரும் ஆதரவை நிறுத்திவிட்டால் ‘பல குஜராத்துகள் இன்னேரம் நடந்தேறியிருக்கும். ஒரு குஜராத்தின் அனுபவம் அதாவது தலித்துகளை ஆயுதமாகப் பயன்படுத்திய நரேந்திர மோடியின் தந்திரத்தைக் கண்டு இசுலாமிய அமைப்புகள், எவரை வாடா, போடா அசிங்களங்கள் என்று ஆதிக்கசாதிகளுடன் சேர்ந்துகொண்டு அழைத்தார்களோ அவர்களுடன் (கட்சிகளுடன்) கூட்டுச்சேர நாயாக அலைகிறார்கள். இந்த வெட்கம் கெட்ட கட்சிகளும் கூட்டுச் சேர்ந்துகொள்கின்றன.
  அதுபோல இந்துவிலிருந்து இசுலாமாக மாறியவர்களை முன்னிருத்தி ஏராளாமான நிதிகளையும் வழங்கி தமது தோல்களை பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். எடுத்துக்காட்டு அடியார், சமரசம் ஆசிரியர் சிராஜுல் ஹசன், சேக் அப்துல்லா என்ற கொடிக்கால் செல்லப்பா, அன்வர் பாலசிங்கம், நம்ம அப்துல்லாவாகிய பெரியார் தாசன் போன்றோரைக் கூறலாம். இவர்கள் மூலம் இந்துவே போற்றும் இசுலாம் என்றும், இந்து மதத்தை விமர்சிக்கவைத்து பின்னால் ஒளிந்துகொள்வதுமாக இருக்கின்றனர். பிரச்சனை என்று வந்தால் அவர்கள் வேறு தாங்கள் வேறு என்பதுபோல் கூறிக்கொண்டு “இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்றுதான் எங்கள் மதம் கூறுகிறது என்று பசப்புவதுமாக உள்ளனர். இந்த மதவெறியர்களுக்கு இலக்கும் தீனுக்கும் வலியத்தீன் என்ற பசப்புகளுக்கு இன்னுமொரு முகமூடிகளாக செயல்படுபவர்கள் மதுரை ஆதீனம் மற்றும் குன்றக்குடி அடிகளார்.
கொடிக்கால் செல்லப்பாவின் கதை ஒரு தனிக்கதை. அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து மதம் மாறியவர் என்பதால் உனக்கு தரும் நிதியைக் கொண்டு பிரச்சாரத்துடன் நிறுத்திக்கொள். பெண் வேண்டும் கீண்டும் என்றல்லாம் கேட்கக்கூடாது என்று உள்ளூர் ஜமாத்தில் எவரும் அவருக்கு பெண்கொடுக்கவில்லை. அதனால் கேரளா சென்று திருமணம் செய்து கொண்டார். காலப்போக்கில் இசுலாமியர்களின் உண்மைமுகம் தெரிந்துவிட்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று இன்னும் இசுலாமியராக இருக்கிறார்ட. அன்வர் பாலசிங்கம்கூட தனது கருப்பாயி என்ற நூர்ஜஹான் என்ற நாவலில் மீனாட்சிபுரத்தில் இசுலாத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிக்கும் உயர்ஜாதி இசுலாமியர்களைப்பற்றி எழுதியதால் இந்த முல்லாக்கள் எங்களிடமே காசுவாங்கிக் கொண்டு எங்களையே எதிர்த்து எழுதுகிறாயா என்று கடுப்பாகி உள்ளனர்.
ஜனநாயக, கம்யூனிச அமைப்புகளில்லாமல் உயிர்வாழ முடியாத இசுலாமிய அமைப்புகள், அதே ஜனநாயக, கம்யூனிசவாதிகள் இசுலாமிய மதவெறியை அம்பலப்படுத்தினால் பத்வாக்களை வழங்கி வெறிபிடித்த இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையில் இறங்குகின்றனர். அவர்கள் பத்துவா கொடுத்தால் இனி நாம் பதினொருவா கொடுத்து பதிலடி கொடுப்போம்.
நந்தன் 

Facebook Comments

43 கருத்துரைகள்:

kasiyaribrahim said...

முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளுக்காக கண்ணீர் சிந்தும் கம்யுனிஸ்ட் கட்சிகள் நியாவான்கள் .ஆனால் கடையநல்லூர் உழைக்கும் மக்களின் உணர்வுகளை ஸ்டாலின் இரண்டரை கோடி கொலைகளை விட ,அமெரிக்காவின் அணுகுண்டுவீசி கொன்ற கொலைகாரத்தனத்தை விட கொடியதாக காட்டும் கீ போர்டு உழைப்பாளி நந்தன் .
உங்களது கட்டுரை வரிக்கு வரி பொய்கள் என்பதை என்னால் நிருபிக்க முடியும்..ஒரு ஜமாத்தினர் தங்களது உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்து ஒரு நபரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக அந்த ஜமாத்தினரையும் மக்களையும் எத்தனை கொடுமையாக வர்ணித்துள்ளார்.
நந்தன் ஒரு எழுத்து தீவிரவாதி .இவர் அரசாண்டால் அவருக்கு எதிரான கருத்துக்களை மூச்சு விட்டால் கூட சவக் குழியாக இருக்கும்

RAJA said...

இதுவரை நான் தெரிந்து கொள்ளாத பல விஷயங்களை தங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன். நன்றி நந்தன். தொடருங்கள்.

சிவப்பு குதிரை said...

ஆழ்ந்து எழுந்து இருக்கின்றீர்கள் நந்த்ன் வாழ்த்துக்கள்.கசியஇப்புராஹிம் பாய் அவர்களே கட்டுரையில் பொய் இருப்பதாக சொல்லி இருக்கின்றீர்கள் எங்க எல்லாம் பொய் சொல்லி இருக்காருனு கொஞ்சம் சொன்ன நானும் தெரிஞ்சுப்பென்.. தந்தை பெரியார் மட்டும் இல்லன இன்னக்கி நம்மலால இருமாப்ப பேசிட்டு இருக்க முடியது என்பது நாம் கண்டிப்ப ஒத்துக்குட்டுததான் ஆகனும்...

Anonymous said...

இன்றைய யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டும் கட்டுரை.
நன்றி!

Anonymous said...

இன்று இஸ்லாத்தை பலரும் விமர்சிப்பதற்கும் இஸ்லாமியர்கள் என்றாலே 'முரடர்கள்' என்று வெறுப்பு கலந்த பயத்துடன் ஒதுங்குவதற்கும் காரணம், ஒரிஜினல் இஸ்லாமியர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் இந்தத் துஷ்டர்களே.

நந்தன் said...

காசியார் இபுராகிமே,
தனக்கும் அந்த கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்று கூறியும் மன்னிப்பு கேட்டால்தான் விடுவோம் என்று கூறியதால் பள்ளிவாசலுக்கு மன்னிப்பு கேட்க வந்த துராப்ஷாவை தவ்ஹீது ரௌடிகள் அடித்தார்களே இதனை சும்மா விடுவதா? இசுலாமியராக இருந்து வெளியேறி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆயிரக்கனக்கானோர் ஒன்றிணையும் முயற்சியில் உள்ளோம். நாங்களும் பெருன்பான்மையானதும் இதற்கு பதிலடி கொடுப்போம். வரலாறுகள் மறக்கப்படாது.

இசுலாத்தை விமர்சிப்பதற்காக கொலைவரை செய்யும் உங்களூக்கு நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் மட்டும் மயிலிறகால் வருடிக்கொடுக்கவேண்டுமோ? நீங்கள் எப்படி கொலைகள் செய்தீர்களோ அதேமொழியில்தான் நாங்களும் பதில் கூறமுடியும். உனக்கு ஒரு நியாயம்; பிறருக்கொரு நியாயமா?

sajithkhan said...

இந்தப் பதிவை எழுதியவர் இஸ்லாமியர்கள் மீது தீராத பகைமை கொண்டுள்ளார் போலும். முஸ்லீம்கள் மாற்று மதத்தினருடன் குறிப்பாக இந்துக்களுடன் பழகிய விதத்தை மேல்தட்டு முஸ்லீம்களின் பார்வையில் இருந்து எழுதியிருக்கிறார். இதிலிருந்து இவர் ஆதிக்க முஸ்லீம் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார் என்று புலனாகிறது. எங்கள் ஊர் கடையாம்பட்டினத்திற்கு வரட்டும் இந்த நந்தன், முஸ்லீம்களும்,, மீனவ மக்களும், ஏனைய சாதி தாழ்த்தப்பட்ட மக்களும் பரஸ்பரம் ஒற்றுமையாக இருப்பதை காணவைக்கலாம். ஒருசில வசதி படைத்த ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் வாடா போடா என்றழைத்திருக்கலாம். அது போன்று தாழ்த்தப்பட்ட சாதியிலேயே உள்ள பணம் படைத்தவர்களும் அப்படித்தான் அழைக்கின்றனர். இந்த தளம் பாட்டாளிகளின் உயர்வுக்காக வெவ்வேறு அமைப்புகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களால் இயக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்த தளத்தின் அநேக கட்டுரைகள் மார்க்சிய ஆய்வு முறையில் அமைந்தவை அல்ல.

Anonymous said...

//எங்கள் ஊர் கடையாம்பட்டினத்திற்கு வரட்டும் இந்த நந்தன், முஸ்லீம்களும்,, மீனவ மக்களும், ஏனைய சாதி தாழ்த்தப்பட்ட மக்களும் பரஸ்பரம் ஒற்றுமையாக இருப்பதை காணவைக்கலாம்// நீங்கள் சொல்லும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பற்றி ஏதும் அறியாதவர்கள். குரானையும் ஹதீஸ்களையும் படித்து புரிந்து கொண்டவர்கள் அல்லது அப்படிப்பட்டவர்களின் சொல்கேட்டு நடப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களின் கை ஓங்கும்போது நீங்கள் குறிப்பிட்ட முஸ்லிம்களும் பாதிக்கப்படுவார்கள்.
இதனால் தான் Muslims are the greatest victims of Islam என்கிறார்கள்.

நந்தன் said...

கடையாம்பட்டி மட்டுமல்ல, எல்லா கிராமங்களிலும் இப்பித்தான் ஒற்றுமையாக உள்ளார்கள் என்று இசுலாமியர்கள் பசப்புகின்றனர். கடையாம்பட்டி எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள். அங்கே வந்து விபரங்களை சேகரித்து அம்பலப்படுத்துறேன். மீனாட்சிபுரத்தை ஆஹா ஒகோ என்று கூறி தம்பட்டம் அடித்தவர்கள் தானே நீங்கள். இப்பொழுதி அன்வர் பாலசிங்கம் அம்பலப்டுத்தியதும் அலறுகிறீர்களே.

நந்தன் said...

குர்ஆனையும், ஹதீதுகளையும் படித்தால் ஆதிக்கசாதி இந்துகூட ஒரு நிமிடம் உங்களுடன் உறவாடமாட்டார்கள்.

நந்தன் said...

இசுலாத்தின் அசிங்கங்களையும் அபத்தங்களையும், இசுலாமியர்களின் மதவெறியையும் அம்பலப்படுத்தினால் கொலைவெறிபிடித்து அலையும் இசுலாமியர்கள் மீது அன்பையும், அடக்கத்தையும் நாங்கள் காட்டவேண்டும் என்று விரும்புகிறீர்களா சாதிஜ்கான்? வேடிக்கைதான் போங்கள்.

S.Ibrahim said...

////இசுலாமியராக இருந்து வெளியேறி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆயிரக்கனக்கானோர் ஒன்றிணையும் முயற்சியில் உள்ளோம். நாங்களும் பெருன்பான்மையானதும் இதற்கு பதிலடி கொடுப்போம். வரலாறுகள் மறக்கப்படா///
நீங்கள் பெரும்பான்மையாக வரும்புளுது இதற்கு பதிலடி கொடுப்போம் .பொய்க்கு மேல் பொய்.நந்தன் முஸ்லிமாக இருந்து மனம் மாறியதாக வேடம் போட வேண்டாம்.மனமாறிய முஸ்லிம் எப்படி பேசுவான் என்பதற்கு செங்கொடியை உதாரணமாக் கொள்ளலாம்.
//// நீங்கள் எப்படி கொலைகள் செய்தீர்களோ அதேமொழியில்தான் நாங்களும் பதில் கூறமுடியும். உனக்கு ஒரு நியாயம்; பிறருக்கொரு நியாயமா?///
நாங்கள் எங்கே கொலை செய்தோம்? மோடியின் கொலை வெறி யல்லவா உம்மிடம் பேயாட்டம் ஆடுகிறது .
உம கட்டுரை படித்த இஸ்லாத்திற்கு எதிராக எழுதும் கம்யுனிஸ்ட் சுஜித்கான் கூட உம்மை புரிந்துகொண்டுள்ளார்.நீர் சொல்லுவதுபோல இஸ்லாமியராக் இருந்து வெளியேறியவர்கள் ஆயிரகனக்கிலோ நூற்றுக் கணக்கிலோ அவர்களில் ஒருவர் கூட உம கட்டுரையை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் .

S.Ibrahim said...

சிவப்பு குதிரை ///தந்தை பெரியார் மட்டும் இல்லன இன்னக்கி நம்மலால இருமாப்ப பேசிட்டு இருக்க முடியது என்பது நாம் கண்டிப்ப ஒத்துக்குட்டுததான் ஆகனும்..///

பெரியாரின் திகவினர்களே இன்று வாய் மூடி புத்தக வியாபாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்புறம் ,கர்நாடகாவில் ,ஆந்திராவில்,கேரளாவில் எந்த பெரியார் இருந்தார்.?

S.Ibrahim said...

///தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்களையும் இவர்கள் விடுவதில்லை///
சிவப்பு குதிரை,இது பொய்.நம்பர் 1 [தொடரும் ]

நந்தன் said...

இதோ பாருடா, செங்கொடியை உதாரணம் தர்ராரு, அவரையும் கடையதல்லூர் ரௌடிகள் தேடிக்கிட்டு இருப்பதை வினவின் பின்னூட்டத்திலும் அவரது தளத்திலுள்ள பின்னூட்டதிலும் பார்க்லாம்.

நான் இசுலாத்திலிருந்து வெளியேறிய மனசாட்சியுள்ளவன். மலத்தை மணல் அள்ளிபோட்டு மூடிவிட்டு, மணக்குது என்று சொல்லும் மிருகம் அல்ல நான்.

சாஜித்கான், கீழ்தட்டு இசுலாமியர்கள்தான் இவர்களுக்கு அடியாட்கள். அதுமட்டுமல்ல அவர்கள் தங்களை என்றுமே உழைப்பாளி என்று பிறமத உழைப்பாளிகளுடன் இணைந்ததே இல்லை. தன்னை ஒரு உயர்ந்த நாகரீகமும் அறிஒஉம் கொண்ட தனிப்பிறவிகள் என்றே இவர்களும் கருதுகின்றனர். குஜராத்தில் இந்த உழைப்பாளிகள் தலித்துக்களை இழிவுபடுத்தியதால்தான் குஜராத் தலித்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸிற்கு பலியானார்கள். இன்னும் தமிழகமுழுவதிலும் ஒரு தட்டு வட்டி ஓட்டும் இசுலாமியன் கூட இந்துக்களை முட்டாள்கள், சிலையை வண்ங்குபவர்கள், என்று தமக்குள் சொல்லிக்கொள்வதையெல்லாம் தாங்கள் அறிய மாட்டீர்களோ?. மனசாட்சி உள்ளவராக நீங்கள் இருந்து விவரமாக தெரியனும்னா, திருச்சி பாலக்கரை, குத்தபிஷா நகருக்கு போய் பாருங்கள். உண்மை தெரியும்.

உண்மையில் நீங்கள் இசுலாமியராக இல்லை என்றால் நீங்கள் ஒரு வேடமிடவேண்டும். தொப்பியும் தாடியும் வைத்துக்கொண்டு செல்ல வேண்டும்

sajithkhan said...

//கொலைவெறிபிடித்து அலையும்//

என்ன நந்தன் முஸ்லீம் என்ற உடன் ரொம்ப சூடாகிவிடுகிறீர்கள். உங்களது பதிவுகள் எவையும் மார்க்சிய அடிப்படையில் அமைந்தது அல்ல என்ற எனது குற்றச்சாட்டிற்கு இன்னும் பதிலைக் காணோமே. வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே அது எந்த மதமாக இருந்தாலும் பரஸ்பரம் ஒற்றுமைதான் நிலவுகிறது. அதுதான் ய்தார்த்தம். நீங்கள் ஒரு களப்பணி மார்க்சியராக இருந்தால் இதை நான் உங்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை. வர்க்க ரீதியான வேறுபாடு இருக்கும்போது அங்கு ஆதிக்க மனோபாவம் இருக்கும் என்பது உலக யதார்த்தம்தான். இது அனைத்து முஸ்லீம்களுக்கு மட்டுமான ஒன்றாக பார்க்கும் உங்களது பார்வைதான் பிழையானது என்பதும் அதற்கு மார்க்சிய சாயம் பூசிக்கொள்வது என்பது அதைவிட தவறானது, என்பதுதான் எனது குற்றச்சாட்டு. நீங்கள் பாட்டாளிகளுக்காக குரல் கொடுப்பவராக காட்டிக்கொள்வதினால்தான் மீண்டும்மீண்டும் இத நான் முன்வைக்கின்றேன். இனி, நீங்கள் எழுதியது மார்க்சிய அடிப்படையில் அமைந்ததுதான் என நிரூபிப்பது உங்களது கடைமை.

sajithkhan said...

//இதோ பாருடா, செங்கொடியை உதாரணம் தர்ராரு//

ஆம் செங்கொடியின் விமர்சன அணுகுமுறைக்கும் உங்களுக்கும் அதிகம் வித்தியாசங்கள் இருக்கின்றன. போய் செங்கொடியிடம் பாடம் கற்றுக்கொண்டு வாருங்கள்.

sajithkhan said...

//குஜராத்தில் இந்த உழைப்பாளிகள் தலித்துக்களை இழிவுபடுத்தியதால்தான் குஜராத் தலித்துக்கள் ஆர்எஸ்எஸ்ஸிற்கு பலியானார்கள்.//

அடேங்கப்ப என்ன ஒரு கண்டுபிடிப்பு. இன்னும் கொஞ்சம் போனால் மோடியின் கொலைவெறியாட்டத்திர்கு முஸ்லீம் மக்கள்தான் காரணம் என்று சொல்வீர். காழ்ப்புணர்வு முஸ்லீம்கள் மீது உங்களுக்கு அளவில்லா காழ்ப்புணர்வு.

செங்கொடி அறிந்துகொள்ளுங்கள் உங்களது மார்க்சீய கூட்டாளி நந்தனின் மார்க்சீயப் பார்வையை.

மணமேல்குடி said...

முல்லாக்கள் வலுவிழந்து வரும் நிலையில் அவர்களை தாக்குவதை விட கருத்தியல் ரீதியாக தவுகீத் என்ற பெயரில் ஹிந்து முஸ்லீம் ஒன்றிணைந்த கலாச்சாரம் பண்பாடு இவற்றை சீரழித்து இசுலாமிய மதவெறி ஊட்டி இசுலாமிய இளைஞர்களை மதவாதிகளாக மாற்றிவருகின்றனர் இதன் விளைவு இந்துத்துவா இயக்கங்கள் வளருவதற்கு பெரிதும் உதவுகிறது எனவே நாம் அம்பலப்படுத்தி அகற்ற வேண்டிய விசச்செடிகள் இந்த தவுகீது பிரசார குழுக்கள்தான் இவர்களின் வளர்ச்சி சாதாரண இசுலாமியமக்களை மதவாதத்தின் பக்கம் இழுத்து செல்வதுடன் அடியாட்களாகவும் மாற்றும் மற்றபடி கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துக்களும் சமூகத்தில் ஆய்வு செய்யப்படவேண்டியவையே நந்தனுக்கு வாழ்த்துக்கள்

நந்தன் said...

##வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களிடையே அது எந்த மதமாக இருந்தாலும் பரஸ்பரம் ஒற்றுமைதான் நிலவுகிறது. அதுதான் ய்தார்த்தம். நீங்கள் ஒரு களப்பணி மார்க்சியராக இருந்தால் இதை நான் உங்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை##

இல்லை சாஜித்கான், நீங்கள் இன்னும் தெருவில் இறங்கி உழைப்பாளிகளான இசுலாமியர்களுடன் பழகியதில்லை என்று நினைக்கிறேன். அல்லது நீங்கள் இசுமியன் என்ற அடையாளமில்லாதவராக அவர்களுடன் பழகி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்த உழைப்பாளிகள் கூட பறையன், பல்லன் என்றும் முனாக்கள் என்றும் கூற நிறைய சண்டைகளை சந்தித்தவன். இன்று கூட ஒரு அனுபவம். இசுலாமியராக உள்ள முடிதிருத்தும் தொழிளாளி தனது தாத்தா கடையில் வேலை செய்தவர்கள் பற்றி கூறும் போது காபிர்கள் என்ற சொல்லையே பயன்படுத்தினார். அவருடன் கலந்துறையாட முயற்சித்துள்ளேன். இனுனம் சில தினங்களில் அதனை பதிவு செய்கிறேன். அதுபோக நிறைய எடுத்துக்காட்டகளை பெயர் ஊர் விபரங்களுடன்கூட என்னால் கூறமுடியும். நாகரீகம் கருதியே அவைகளை தவிர்த்துள்ளேன்.

இது குறித்து என்னுடன் இணைந்து செயலாற்றிய (இந்து மதத்திலிருந்தும் இசுலாத்திலிருந்தும் வந்த)தோழர்களைக்கூட உங்களுடன் பேசவைக்க முடியும்.

குஜராத் விவகாரம் என்னுடைய கண்டுபிடிப்பல்ல. ஜனநாயக மீடியாக்களில் வெளிவந்ததுதான். விவரம் சில நாட்களில் சேகரித்துத்தர முயற்சிக்கிறேன்.

நந்தன் said...

நண்பர் மணமேல்குடி, முல்லாக்கள் வலுவிழந்து வருவதாக கூறுகிறீர்கள். இந்த முல்லாக்கள்தான் துராப்ஷாவிற்கு பத்வா கொடுத்தவர்கள். என்ன செய்யலாம்? தவ்ஹீதா, தப்லீக்கா என்று வரும்போது மட்டும் தப்லீக் வலுகுறைந்து காணப்படலாம். நாத்திகர்கள், கம்யூனிஸ்ட்கள் என்று வரும்போது இருவரும் ஒன்றுகூடிக் கொள்கின்றனரே. அப்படித்தானே துராப்ஷாவை அடித்தவர்கள் தவ்ஹீது வாதிதானே!

S.Ibrahim said...

சிவப்பு குதிரை பொய் நம்பர் இரண்டு ///விவாதம் என்று ஒப்புக்காக சில வாதங்களை அவர்கள் எடுத்துவைத்தாலும் பதில் சொல்ல முடியாத கட்டம் வரும்போது ஆத்திரமடைகின்றனர்; கோபம் கொள்கின்றனர். பொருளற்று அரற்றுகின்றனர். தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்////
எந்த ஊரில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரம் கூறுங்கள் ?

sajithkhan said...

//இல்லை சாஜித்கான், நீங்கள் இன்னும் தெருவில் இறங்கி உழைப்பாளிகளான இசுலாமியர்களுடன் பழகியதில்லை என்று நினைக்கிறேன். அல்லது நீங்கள் இசுமியன் என்ற அடையாளமில்லாதவராக அவர்களுடன் பழகி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்///
ஹாஹாஹா…அய்யா நந்தன் நான் முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் எனது ஊரிலும் இருந்தேன் இப்போது சென்னையிலும் அவ்வாறுதான் இருக்கின்றேன். எங்கும் முறுகல் போக்கு இருந்ததை நான் கண்டதில்லை. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். அதுவல்ல நாம் பேசுவது ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தையே கட்டம் கட்டும் உமது பார்வைதான் கோளாறானது என்பதுதான் எனது வாதம். எந்த வர்க்கத்திலிருந்து நீங்கள் சமுதாயத்தை நீங்கள் நோக்கினீர்களோ அதன் வெளிப்பாடுதான் உங்களிடம் காணமுடிகிறது. உங்களுக்குத் தெரியுமா பண்ணையார் உணர்வு கொண்ட முஸ்லீம் வீட்டில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் சரளமாக உள்வருவார்கள் என்பது. இதை எந்த ஆதிக்க சாதிகள் வீட்டில் கூட காணமுடியுமா!

சிவப்பு குதிரை said...

காசி இபபுராஹிம் பாய் நீன்க கேட்ட கேள்வியே தவரானது .ஏன் பாக்கிஸ்த்தான்ல ஒரு கிருத்துவ எம்.பி பாராளமன்றது முன்னடியே பொட்டு தள்ளினான்க. ஏன் கேரளால ஒரு கிருத்துவ ஆசிரியர் கைய வெட்டலைய..இன்னும் பாக்கிஸ்த்த்டான்ல இருக்குர பல இந்துக்களின் நிலைமை மொசம தான் இருக்குது அப்பரம் வேரயத உதாரனம காட்டுரது.கொஞ்சம் மூலைக்கு வேல கொடுத்து பாருன்க எல்லாம் புரியும் ..

நந்தன் said...

##உங்களுக்குத் தெரியுமா பண்ணையார் உணர்வு கொண்ட முஸ்லீம் வீட்டில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் சரளமாக உள்வருவார்கள் என்பது.##

சாஜித்கான் தாங்கள் ஏதோ ஜனநாயவாதி, அறிவு ஜீவி என்று கருதி தங்களுக்கு பதில்கூறிவிட்டேன். தாங்கள் ஒரு ‘தூய இசுலாமியவாதி’ என்பதை புரிந்து கொண்டேன். நேர்மறையான கருத்தையே எதிர்மறைபோல் புரிந்துகொண்டு கருத்து கூறுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. கட்டுரையை நிதானமாக படியுங்கள். புரிந்துகொள்ள முயற்சியுங்கள். முடிந்தால் அந்தப் பண்ணைவீட்டிற்குச் சென்று சில நாட்கள் நிகழ்சிகளை கவனித்து தகவல்களை தாருங்கள். பிறகு ஒரு காலத்தில் விவாதங்களை வைத்துக்கொள்ளலாம். காலத்தை வீணாக்க விரும்பவில்லை

sajithkhan said...

முன் சொன்னதை பின் மறுக்கும் முரண் மனநிலையில் நந்தன்.
முதலில் ஷூபிக்களை ஒரு உயர்ந்த நிலையில் வைக்கிறார் நந்தன். நல்லது. ஆனால் அதற்குப் பின்தொடரும் வரிகளில் அதனை அவரே மறுக்கிறார். அதாவது இந்தியாவில் இஸ்லாம் பரவியதை ஷூபிக்களின் மகோன்னதமான மக்களுடன் பழகும் பண்பு சார்ந்த பிரச்சார முயற்சியினால் என்பதாக கூறிவிட்டு பின்னர், முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கீழ்த்தரமாக நடத்தியதாக குறிப்பிடுகிறார். எனில், ஷூபிக்கள் கற்றுக்கொடுத்த பண்புதான் என்ன என்ற கேள்வி எழுகிறது? மேலும், முஸ்லீம்களின் ஆதிக்க மனோபாவத்திற்கான காரணத்தையும் நநதனே குறிப்பிட்டுவிடுகிறார். அதாவது, ஆதிக்க சாதியினர் அதிகமாக இந்தியாவில் இஸ்லாமியர்களாக மாறியதே இதற்கான காரணம் என்றும் ஷூபிக்களின் குறிக்கோளும் அதுவேதான் என்றும் கூறிவிடுகிறார். பிறகு எதற்காக சூபிக்களை இவர் மெச்சிக்கொள்ள வேண்டும்? இவர் கூறவருவதிலிருந்து, இந்தியாவில் இஸ்லாம் அதற்குரியத் தன்மையில் ஷூபிக்களால் பரப்படவில்லை என்பதும் ஆதிக்க சாதியினர் முஸ்லீமாக மதம் மாறியதினாலேயே அவர்களிடம் தாழ்த்தப்பட்ட மக்களை தரக்குறைவாக (அப்படியல்ல என்பதுதான் எனது குற்றச்சாட்டு) நடத்திய பண்பு இருந்தது என்பதும் புரியவருகிறது. இதிலிருந்து இந்திய முஸ்லிம்களின் செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல என்பதையும் இவரே நிறுவிவிடுகிறார். உண்மையும் அதுதான் இஸ்லாம் மனிதனுக்கு மனிதனை தீண்டத்தகாதவனாக நடத்தச் சொல்லவில்லை.

மேலும், இங்கு பெரியாரின் செயல் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். நந்தன் கூறுவது போல ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினர் போன்றுதான் நடத்தினர் என்றால் அதுசமயம் அதை எதிர்க்காது என்ன வெங்காயமா உரித்துக்கொண்டிருந்தார்?

sajithkhan said...

அய்யா நந்தன்,

சாஜித்கான் தாங்கள் ஏதோ ஜனநாயவாதி, அறிவு ஜீவி என்று கருதி தங்களுக்கு பதில்கூறிவிட்டேன். தாங்கள் ஒரு ‘தூய இசுலாமியவாதி’ என்பதை புரிந்து கொண்டேன்.

இந்தப் பிளாக்கில் அறிவுஜீவி!களுக்கு மட்டும்தான் பதிலளிக்கப்படும் என்று போர்ட் வைத்திருக்கலாமே. இந்த முட்டாள் சாஜித் வந்திருக்க மாட்டேனில்லையா! உங்களது இந்த பதிலே ஜனநாயகத் தன்மையற்றது. நீங்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவதுதான் வேடிக்கை. பிறகு ஜனநாயகவாதியாக ஒரு முஸ்லீம் இருக்கமுடியாது என்பது நந்தன் மார்க்சியமா?

Khader Mohideen said...

அய்யா நந்தனுக்கு,
நீங்கள் மார்சிய வாதியா இல்லை ஆர்எஸ் எஸ் அடியாளா ?
\\உலகத்தையே கட்டி ஆளப்பிறந்த உண்மையான மதத்தின் பிரதிநிதிகளின் நிலையோ, ஆர்.எஸ்.எஸ்-ன் ‘இசுலாமியர்கள் அந்நியர்கள்’என்ற பிரச்சாரத்தினைக்கண்டு தங்கள் தாய்நாடு இந்தியாதான் என்று நிரூபிக்க படாதபாடு படவேண்டியதாகிவிட்டது.\\
தங்கள் தாய்நாடு இந்தியா என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் ‘இசுலாமியர்கள் அந்நியர்கள்’என்ற பிரசாரத்தினால் உண்டானது அல்ல.
அது பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்திய முஸ்லீம்களிடம் உள்ள ஒரு அடிப்படை உணர்வு.
ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ் ஐ தோற்றுவித்தது 1925 , இந்திய muslim லீகு ஆகா கான் மற்றும் ஜின்னா தலைமையில் 1906 இல் அமைக்க பட்டது.
இஸ்லாமியர்களின் மதவெறியை கேள்விக்குல்லாகாமல் அவர்களின் உண்மையான இந்திய நாட்டு பற்றை குறை கூறுவது மானக்கேடானது.
என் எனில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்கள் மற்றும் உண்மையான இந்துத்வா வாதிகளின் பங்கு என்ன என்பது வரலாறு படித்தவருக்கு தெரியும்.
\\பெரியாரையும், அம்பேத்காரையும் புகழ்ந்தனர். அவர்களின் எழுத்துக்களைப் பரப்பினர். பெரியார். அம்பேத்கார் கைகள் ஓங்கிவிடாதா என்று ஏங்கினர்.\\
எப்பா என்ன ஒரு பொய் . பெரியாரும் அம்பேத்கரும் இஸ்லாமியர்களின் சமூக ஒற்றுமையை தங்களின் நாத்திக மற்றும் தலித்திய சிதனா முறைகளை வளர்த்தெடுக்க பயன் படுத்தி கொண்டார்கள்.
கீழ்க்கண்ட வரலாற்று நிகழ்வுகளை தெளிவாக படிக்கவும். பொய் வரலாறு பேசி கம்முநிசத்தை கொல்லாதீர்.

http://en.m.wikipedia.org/wiki/File:Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG



Dr. Ambedkar was a protege of Jinnah and Jinnah nurtured him. In the case of Ambedkar, there has been marked response in his life after meeting the different leaders. After meeting Jinnah in January 1940 along with Periyar, Ambedkar became more confident and reassured.. Ambedkar, Periyar and Jinnah on Januay 9, 1940: Mohammad Ali Jinnah courted, mentored and helped Dr. Ambedkar get elected. He strived for a Muslim-Dalit coaltion that would have given them the majoirty. The Muslims of Bharat must reach out to the Dalits, form alliances with them, and liberate them from Untouchability through Islam.


http://rupeenews.com/2012/01/dalit-the-black-untouchables-of-india-vt-rajsshekar/

தஜ்ஜால் said...

ஷூஃபிகளின் தக்கம் மட்டும் இல்லாமலிருந்தால் நமது இந்திய முஸ்லீம்கள் தாலீபான்களையும் விஞ்சியிருப்பார்கள். இன்றும் ஓரளவேனும் பிறமதத்தவருடன் முஸ்லீம்கள் நல்லினக்கம் பேணுவதற்கு ஷூஃபிகளின் தாக்கமே காரணம். ஆனால் ஷூஃபிகள் முஸ்லீம்களே அல்ல என்பதுதான் தவ்ஹீத் கொள்கையாளர்களின் ஃபத்வா. கேரளாவில் உயர் ஜாதி முஸ்லீம்களான மாப்பிளைமார், அங்குள்ள கீழ்ஜாதி இந்துக்களான செரமக்கள் போன்றவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவதையும் அவர்களின் இல்ல விழாக்களுக்கு சென்றாலும் அவர்களின் இல்லத்தில் உண்ண மறுப்பதையும் நான் பாத்திருக்கிறேன். எனது பாட்டி இன்றும், எங்களுடன் சகோதரர்களாக பழகும் இந்துக்களின் வீட்டில் சமைக்கப்பட்ட எந்த ஒரு உணவையும் சாப்பிடமாட்டார் என்றால், இதன் தாக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தீண்டாமையை எதிர்த்து குரல்கொடுத்தவர்களின் வாதங்களிலுள்ள நியாயமும், பகுத்தறிவு வளர்ச்சியும்தான் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் மக்களை பிறசமுதாயங்கள் ஓரளவிற்காவது ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. இதில் மதங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. எங்களுடன் சேர்ந்து கொண்டால் இக்கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறி ஆசைகாட்டி வியாபாரம் செய்கிற மதவாதிகளின் வெற்றுச்சவடால்களை புறந்தள்ளிவிட்டு தொடருங்கள் நந்தன்

Anonymous said...

அருமயான உண்மைகள் நன்றி நத்தன்

Anonymous said...

http://natputanramesh.blogspot.in/2010/03/blog-post_31.html .... islamiyarkalin sathi unarvai purinthu kolla intha linkyil ulla katturaiyum vaasitthu paarungal..

Khader Mohideen said...

நந்தன் என் கேள்விக்கு ஆதார பூர்வமான பதில் உண்டா ?
உங்கள் பதில் இல்லை என்றால் நீங்கள் எழுதியது ஒரு பொய் , கட்டு கதை என்று புரிந்து கொல்லமா /////?

நந்தன் said...

இப்னுலஹப்,
கட்டுரையை முழுமையாக நிதானமாகப் படிக்கவும். நான் இந்தக் கட்டுரையில் எந்த இடத்திலும் இசுலாமியர்கள் அந்நியர்கள் என்று கூறவில்லை. மாறாக "முகலாய, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலங்களில் இசுலாமியர்களில் முல்லாக்களும் பிரச்சாரர்களும் அரபிய தேசங்களிலிருந்து குடியேறிய வந்தேரிகளாக இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் இங்குள்ள இந்துமதத்திலிருந்து மதம்மாறிய பூர்வகுடிகளே" என்று அவர்களும் இந்நாட்டை தாய்நாடாகக்கொண்டவர்கள் என்றுதான் எழுதியுள்ளேன். ஆனால் நீங்களோ,
## இஸ்லாமியர்களின் மதவெறியை கேள்விக்குல்லாகாமல் அவர்களின் உண்மையான இந்திய நாட்டுப் பற்றை குறை கூறுவது மானக்கேடானது.
என் எனில் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்கள் மற்றும் உண்மையான இந்துத்வா வாதிகளின் பங்கு என்ன என்பது வரலாறு படித்தவருக்கு தெரியும். ## என்று எழுதியுள்ளீர்கள். நான் இசுலாமியர்களின் மதவெறியையும் நாட்டுப்பற்றையும் முடிச்சுப்போட்டு கட்டுரையில் எங்கு எழுதியுள்ளேன்? ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரத்தால் தங்கள் தாய்நாடு இந்தியாதான் என்று நிறுவ இந்திய இசுலாமியர்கள் படாதபாடு படவேண்டிதாகிவிட்டது என்றுதானே எழுதியுள்ளேன். அது உண்மையில்லையா? நீங்கள்கூட உங்களின் அருகில் உள்ள இந்துக்கள் உங்களை இசுலாமியர் என்பதால் பாகிஸ்தானி என்பதுபோல் பார்க்கும் நிலையை உணர்ந்துதான் இருப்பீர்கள். இது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களே. மக இக என்ற கம்யூனிச அமைப்புக்கூட ‘காவி இருள்’ என்ற ஒரு ஒலிப்பேழை இயற்றியுள்ளதை தாங்கள் அறியமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ‘இந்து இந்து இந்துஸ்தான்
முஸ்லீம் ஜாவோ பாகிஸ்தான்’ என்ற பாடலும் உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் இந்த பிரச்சாரத்தைதான் சுட்டிக்காட்டியுள்ளேன். அதன் மூலம் ‘இப்படி ஆர்எஸ்எஸ்ஸின் பிரச்சாரத்தினால் பாதிக்கப்படும்போது இவர்களுக்கு ஜனநாயகவாதிகளும் கம்யூனிஸ்ட்களும் தேவைப்படுகிறார்கள்; ஆனால் இவர்களின் கொள்ளகைகளையும் நடைமுறைகளையும் விமர்சித்தால் பத்வா கொடுக்கிறார்களாம் பத்வா என்ற கருத்தில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
நீங்கள் எழுதியுள்ள காலக்கணிப்பு தவறானது. முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் காஜி மாலிக் என்ற துக்ளக் வமிசத்தவர். ஆண்டு கிபி 1321. அதாவது இசுலாமியர்கள் இந்தியாவில் நுழைந்து 700 ஆண்டுகளே ஆகிறது.
இப்னுலஹப், நீங்கள் இசுலாமியரா அல்லது ஜனநாயகவாதியா என்று நான் அறியேன். ஆனாலும் உங்களிடம் ஒரு கேள்வி. கிராமப்புரங்களில் தம்மள மூதேவி என்றும் கொஞ்சம் நாகரிகமானவர்களிடமும் நகரங்களிலும் தமிள் ஆளுங்க என்றும் சொல்லும் வழக்கம் உள்ளதா ? இல்லையா? அதன் பொருள் என்ன? பதில் தெரியாவிடினும் உங்களின் மூத்தோர்களிடம் கேட்டு பதில் எழுதுங்கள். இல்லையேல் உங்கள் தலை வெடித்துச் சிதறிவிடும். பதில் சொன்னால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும்.

Khader Mohideen said...

அய்யா நந்தனுக்கு,
கட்டுரையை முழுமையாக நிதானமாகப் படித்ததால் தான் உங்களை கேள்வி கேட்கிறேன்.
நான் கேட்ட படி ஆர்.எஸ்.எஸ் க்கும் , தீவிர முஸ்லீம்களுக்கும் இந்த சுதந்திர வரலாற்றில் என்ன பங்கு என்ற கேள்வியை முழுங்கிவிட்டீர்.
பெரியாரும் அம்பேத்கரும் இஸ்லாமியர்களின் சமூக ஒற்றுமையை தங்களின் நாத்திக மற்றும் தலித்திய சிந்தனா முறைகளை வளர்த்தெடுக்க பயன் படுத்தி கொண்டார்கள்.இது இல்லை என்றால் தகுந்த ஆதாரம் தரவும் . நான் எனது அருகிலிருப்பவர்களிடம் பாகிஸ்தானி போன்ற உணர்வை ஏற்படுத்தியதில்லை .
//நீங்கள் எழுதியுள்ள காலக்கணிப்பு தவறானது. முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் காஜி மாலிக் என்ற துக்ளக் வமிசத்தவர். ஆண்டு கிபி 1321. அதாவது இசுலாமியர்கள் இந்தியாவில் நுழைந்து 700 ஆண்டுகளே ஆகிறது.//
வரலாறு தெரியாமல் அதனை திரிக்க வேண்டாம், முதல் பள்ளிவாசல் கிபி 629 இல் கேரளாவின் கொடுங்கல்லூரில் ராஜ வர்மா குலசேகரன் மூலம் கட்ட பட்டது, முஹம்மது உயிரோடு இருந்த போதே கட்டப்பட்டது என்று தொல்பொருள் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்போது அந்த ஊரில் இருந்த பெரும்பான்மையானோர் இஸ்லாத்திற்கு வந்து விட்டனர் , அந்த மாப்பிள்ளை முஸ்லீம்கள் இன்றும் உள்ளனர்.
உமய்யாது கலிபா காலத்திலேயே முஹம்மது பின் காசிம் என்பவரின் தலைமையில் படை பஞ்சாப் சிந்து பகுதியை எட்டாம் நூற்றாண்டிலேயே பிடிக்க பட்டது, இஸ்லாமும் பரப்ப பட்டது.
ஆக இந்தியாவில் இஸ்லாம் முஹம்மது உயிரோடு இருந்த போதே பரப்பப்பட்டது.
உங்கள் சுய கருத்துக்களை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றுங்கள், வரலாற்றை மாற்றாதீர். ஏனெனில் இது தான் வரலாறு என்று பலர் உணர வாய்ப்புள்ளது !!!!!

நந்தன் said...

இப்னு லஹப், நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப்பகுதிகளை நான் படித்த்தில்லை.நான் குறிப்பிட்டது தவறாக இருந்தால் சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த வரலாற்றுக் காலங்களுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை.

##நான் கேட்ட படி ஆர்.எஸ்.எஸ் க்கும் , தீவிர முஸ்லீம்களுக்கும் இந்த சுதந்திர வரலாற்றில் என்ன பங்கு என்ற கேள்வியை முழுங்கிவிட்டீர்.##

இக்கட்டுரையில் எந்த மத த்தினருடைய தேசபக்தியும் கேள்விக்குள்ளாக்கபடவில்லை. அதனால் உங்களின் இந்தக்கேள்விக்கு நான் பதிலளிக்கவில்லை.

பெரியார், அம்பேத்கார் பற்றி ஒரு குறிப்பு எழுதியுள்ளீர்கள். அது பற்றி ஒரு கட்டுரை விரைவில் தருகிறேன்.

நான் பின்னூட்டத்தில் எழுதியுள்ளது பின்வருமாறு;
நீங்கள்கூட உங்களின் அருகில் உள்ள இந்துக்கள் உங்களை இசுலாமியர் என்பதால் பாகிஸ்தானி என்பதுபோல் பார்க்கும் நிலையை உணர்ந்துதான் இருப்பீர்கள்

ஆனால் உங்களின் பதில்;

நான் எனது அருகிலிருப்பவர்களிடம் பாகிஸ்தானி போன்ற உணர்வை ஏற்படுத்தியதில்லை .

இது என்ன வகை பதில்? புரியவில்லை.

Khader Mohideen said...

தோழர் நந்தனுக்கு,
வரலாற்றுக் காலங்களுக்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை , ஆனால் உங்கள் பின்னூட்டம் அது தொடர்பானதே என்பதை மறந்து விட வேண்டாம்.
//முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுத்தவர் காஜி மாலிக் என்ற துக்ளக் வமிசத்தவர். ஆண்டு கிபி 1321. அதாவது இசுலாமியர்கள் இந்தியாவில் நுழைந்து 700 ஆண்டுகளே ஆகிறது.// இந்த தவறான வரலாற்று நிகழ்வை பதிவ செரிதத் நீங்கள், இது உங்கள் பின்னூட்டம் பாஸ் ...
அம்பேத்கர் பெரியார் பற்றி கட்டுரையை வரவேற்கிறேன், தயவு செய்து அதையா வது வரலாற்று பிழை , ஒருதலை பட்சமான முடிவுகளின்றி தரவும்.
//நீங்கள்கூட உங்களின் அருகில் உள்ள இந்துக்கள் உங்களை இசுலாமியர் என்பதால் பாகிஸ்தானி என்பதுபோல் பார்க்கும் நிலையை உணர்ந்துதான் இருப்பீர்கள்.///
இது என்ன வகை கேள்வி ? புரியவில்லை.

Unknown said...

Dear Nanadan,

I thought u have less knowledge Islamic invansion and also Indian History. Islamic invansion starte in near 702 by mohammed bin kashim an arab.

Still, you are believing in Aryan invansion. Pappans are not immigrants.They are also live like you. RSS only started counter attack of islam attack in 1925.

ஆர்ய ஆனந்த் said...

@Anonymous

நன்றாக சொன்னீர்கள். ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து பூர்வீக மக்களான திராவிடர்களை தோற்கடித்து அவர்களை தென் இந்தியாவிற்கு துரத்திவிட்டு, இந்தியாவின் வடபுலத்தில் குடியேறினர் என்பது எந்த ஆதாரமும் இல்லாத வெறும் கற்பனை கதையே. இதை சொல்வதால் என்னை பிராமணன் என்று நினைத்துவிட வேண்டாம். ஆரிய படையெடுப்பு கொள்கையை குப்பை தொட்டியில்தான் எறியவேண்டும் என்று அம்பேத்கரும் கூறியுள்ளார்.

மனிதகுலம் முழுவதும் ஒரே இனமே. இருந்தாலும் முக மற்றும் முடி அம்சங்களை பொருத்து அவை மங்கோலாயிட், நீக்ராய்ட் , காக்கசாயிட் என்று மூன்று பேரினங்களாக அறியப்படுகின்றது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் மங்கோலாயிட் இனத்தவர்களும் சில அந்தமான் தீவுகளில் நீக்ராய்ட் இனத்தவர்களும் வாழ்கின்றனர். மற்றபடி, காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை வாழும் அனைத்து இந்திய மக்களும் காக்கசாயிட் இனத்தவர்களே.

Anonymous said...

@Arya anand,
Actually Nandan is communist.Always communists defending muslim apologists in India only from 1930 till now.But,the same communists demolished all mosques in Albenia when they ruled Albenia.
So,communists behave like Islamic invaders in many part of world. Now, nandan personally affected some fanactic muslims that's why he attacking Islam not by theology like you or great ali sina. It is purely emotional.While attacking Islam, he compare muslims with pappans. Hence, he also some personal vengence on pappans like periyar.

Anonymous said...

Hi Nanthan,
your article is ok but don't threaten muslims. Definitely islam must be subjected to criticism but this should not lead to hatred towards muslims. This way will backfire.

mepp said...


நந்தனுக்கு வாழ்த்துக்கள்
//இசுலாமியராக இருந்து வெளியேறி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆயிரக்கனக்கானோர் ஒன்றிணையும் முயற்சியில் உள்ளோம். நாங்களும் பெருன்பான்மையானதும் இதற்கு பதிலடி கொடுப்போம். வரலாறுகள் மறக்கப்படாது.//
எங்கள் ஊரில் ஏராளமான முன்னாள் முஸ்லிம்கள் உள்ளனா; ஆனால் அவர்கள் இஸ்லாமிய முரடர்களுக்கு அஞ்சி தன்னை வெளிக் காட்டுவதுல்லை.

நான் என்னை இறை நம்பிக்கையற்றவன் என்று வெளிக்காட்டிக் கொள்கின்றேன். வளிக்காட்டுவதால்தான் சந்தேகமுள்ளவர்கள் என்னைத் தேடிவந்து விளக்கம் பெறுகின்றனர்.

எனக்குப் பயமில்லை சிறுவயதில் இஸ்லாத்திற்காக ஜிகாத்தில் EEடுபடவேண்டும் என்று நினைத்த நான் இப்பொழுது இதையே ஜிகாத்தாக செய்துவிட்டுப்போகின்றேன்.

நீங்கள் சொன்னதுபோல் எல்லோரும் இணைந்து பெரும்பான்மையாக வேண்டும். ஹதீஸ் குர்ஆனை முஸ்லிம்கள் எல்லோரையூம் பொருள் விளங்கி வாசிக்கப்பன்னினாலேயே போதும்.

சிந்திக்கக்கூடிய மனிதாபிமானமுள்ள முஸ்லிம்களை நாம் உள்வாங்கிவிட்டு திருடனை கற்பழிப்புக்கார முகம்மதுக்கு ஆதரவூ தெரிவிக்கும் வெறியர்களையூம் இப்படியே விட்டுவிட்டு வேறு மதங்களிலுள்ள வெறிபிடித்தவர்களையூம் இஸ்லாத்துக்கு மாறச் செய்தால் உலகம் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

Dr.Anburaj said...

RSS ன் கொள்கை இசுலாமியா்களுக்கு இணக்கமானதல்ல.பாக்கிஸ்தான் பிாிவினை செய்துள்ள தீமை அளவினை அனைவரும் அறிவோம். மனித இரத்தம் எவ்வளவு சிந்தியுள்ளது. பாக- வங்கதேச பிாிவினை பின் வங்கதேசத்தில் முஜிபுா் படுகொலை -- ராணுவ ஆட்சி மிண்டும் இந்துக்களுக்கு அநியாயம் என்று கதை நீண்டு கொண்டு செல்கின்றதே.தனிப்பட்ட முறையில் இந்து உயா்கள் எ்த்தனை பலியாகியுள்ளது ????????
இசுலாம் தனது மீது இருக்கும் அரேபிய வா்ணத்தை நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே R.S.S. ன் கொள்கை.இசுலாம் என்பது ஒரு அரேபிய வல்லாதிக்க இயக்கம்தானே. சவுதி அரேபியன் போல உடை உடுத்த வேண்டும், வீடு கட்ட வேண்டும், சாப்பிட வேண்டும் திருமணம் செய்ய வேண்டும் . சாமி கும்பிட வேண்டும் என்பதுதானனே அதாவது அரேபியன் போல் வாழ வேண்டும் என்துதானே இசுலாம். இது ஒரு கலாச்சார ஆன்மீக அமைப்பு அல்ல. இந்து கலாச்சாரத்தில் எந்த நன்மையையும் கருதாத பாிசீலிக்காத பாிசீலனை செய்வதை ஹராமாகக் கருதும் இயக்கம் வாகாபி இசுலாம்தான்.இதைத்தான் எதிா்க்கின்றது RSS.

Anonymous said...

எது எப்படியோ அனைவரும் பண்பாக வாதம் புரிந்தமைக்கு நன்றி