பக்கங்கள்

ஆன்மீகம்: ஒரு விவாதம்

ஆன்மீகம்: ஒரு விவாதம்

தோழர்களே,

ஆன்ம ஞானம் என்பவரும் நந்தன் என்பவரும் ஆன்மீகம் பற்றி  மறுமொழிப் பெட்டிப் பகுதியில் ஒரு விவாதம் செய்து வருகின்றனர். அது அடுத்தடுத்து வரும் பதிவுகாளால் தேடுதல் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்பதால் தனிப்பக்கமாக வெளியிட்டு அதற்கான இணைப்பையும் முகப்பில் கொடுத்துள்ளோம். இதுவரை நடந்துள்ள கேள்வி பதிலை இதன் உடற்பகுதில் பதிப்பித்துள்ளோம். இனிவரும் கேள்வி பதில்கள் இதன் மறுமொழிப் பெட்டில் தொடர்சியாக காட்சிப்படும்.

நந்தன் said...
நந்தன் said...
அனானி,
ஆன்மீகத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். தொடர்ச்சியாக எனது கேள்விகளுக்கு பதில் தருகிறீர்களா? ஆனந்த் சாகரும் பதில் சொல்லலாம்.
எனது முதல் கேள்வி;
1. ஆன்மீகம் என்றால் என்ன? (சுருக்கமாக)
6 February 2015 at 21:49

aanma gnanam said...
ஆன்மாவை விழிப்புற செய்வது
6 February 2015 at 23:16

நந்தன் said...
@ ஆன்மா ஞானம்
கேள்வி 2:
ஆன்மா என்றால் என்ன?
குறிப்பு: எனது கேள்விகள் உங்களுக்கு சிறு பிள்ளைத்தனமாகத் தெரியலாம் ஆனால் நான் சிறு பிள்ளை என்பதால் மறுக்காமல் பதில் சொல்லவும்.
8 February 2015 at 12:54

aanma gnanam said...
மிக சரியாகவே கேட்டுள்ளீர். ஆன்மா எதுவென்பதை அறிந்தால் மட்டுமே ஆன்மீகத்தை அறியமுடியும்.

ஆன்மா பிறப்பற்றது. அழிவற்றது.
ஜடப்பொருளுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் ஆன்மாக்கள் ஜடப்பொருளில் இல்லை என்பதே. ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் இணையும் போதே உயிரினமாகிறது. ஆதியில் இருந்தே இருந்து வரும் ஒற்றை ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் வியாபித்திருக்கிறது. இந்த வகையில் அனைத்து உயிரினமும் ஒன்றே. எல்லா உயிரும் ஒன்றே எனும் பொழுதே அனைத்துடனும் அன்பு பாராட்டி நேசிக்க முடியும். இன்னும் எளிதாகச் சொன்னால் அனைத்து உயிரிலும் உள்ள உயிரே. ஒவ்வொரு படி நிலையிலும் ஒவ்வொரு ஆன்மாவும் விழிப்படைந்தே ஒவ்வொரு உயிரும் மற்றொரு உயிராய் பரிணமித்தது. இந்த பரிணாமம் இறைநிலையை அடையும் பயணம். ஆன்ம விழிப்பின் விளைபொருள்களே அனைத்து உயிரினங்களும். மனிதன் உட்பட. ஆனால் மனிதனாய் இருப்பதால் நமக்கு மட்டுமே ஆன்ம விழிப்பு உண்டென்பது சிலர் கருத்து. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆன்மா உண்டு

நந்தன்
@ ஆன்மா ஞானம்
சில பிரச்சனைகளால் உடனடியாகத் தொடரமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும். அடுத்த பதிவு வந்துவிட்டதால் இந்த பதிவின் மறுமொழியில் தொடர்கிறேன். இனி தினசரி கேள்விகள் கேட்க முயற்சி செய்கிறேன்.
ஒரு வேண்டுகோள்: கேள்விகளுக்கு தொடர்புள்ள பதில்களை மட்டும் கூறவும். சிறு அளவில் கூறவேண்டிய பதிலுக்கு நீண்ட விரிவுரை சற்று புரிதலுக்கு சிரமமாக உள்ளது.கேள்வியும் பதிலும் சிறு அளவில் இருந்தால்தான் என்னைப் போன்ற மரமண்டைகளுக்குப் புரியும். நீண்ட விளக்கத்திற்குள் பதில் இருந்தால் எளிதாக புரியாது. விளக்கமாக கேட்கும்போது விளக்கமாக கூறிக்கொள்ளலாம். மதவாதிகளைப்போல் ஒற்றைவரியில் சொல்லவேண்டியதற்கு பலதையும் கூறி திசைத்திருப்பவேண்டாம்.
ஆன்மா என்றால் என்ன என்ற என் கேள்விக்கு ஆன்மாவின் தன்மைகளைக் கூறியுள்ளீர்கள்.
//இன்னும் எளிதாகச் சொன்னால் அனைத்து உயிரிலும் உள்ள உயிரே// என்று உங்கள் விரிவுரையில் எழுதியுள்ளீர்கள்.
இதனை ஆன்மா என்றால் உயிர் என்று எடுத்துக்கொள்ளலாமா.?

aanma gnanam said...
//இதனை ஆன்மா என்றால் உயிர் என்று எடுத்துக்கொள்ளலாமா.?//

ஆம்.
நந்தன் said...
@ஆன்ம ஞானம்.
//ஆன்மா பிறப்பற்றது. அழிவற்றது//என்று சொல்லியுள்ளீர்கள்.
கடவுள் பிறப்பற்றவர் இறப்பற்றவர் என்பதுபோல்தானே?
aanma gnanam said...
//கடவுள் பிறப்பற்றவர் இறப்பற்றவர் என்பதுபோல்தானே?//

கடவுள் என்றால் உங்கள் பார்வையில் என்ன?

நந்தன் said...
கடவுள் என்பது எதுவாக அல்லது எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது நமக்கு இங்கு தேவையில்லை. ஒரு புரிதலுக்காக ஒப்பிட்டு கேட்டுள்ளேன்
ஆனந்த் சாகர் said...
@நந்தன்,

//கடவுள் பிறப்பற்றவர் இறப்பற்றவர் என்பதுபோல்தானே?//

//கடவுள் என்பது எதுவாக அல்லது எவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது நமக்கு இங்கு தேவையில்லை. ஒரு புரிதலுக்காக ஒப்பிட்டு கேட்டுள்ளேன்//

ஆன்மா/உயிர்தான் கடவுள். ஆன்மா பிறப்பும் இறப்பும் அற்றது எனும்போது கடவுளுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது என்றே பொருள்.

aanma gnanam said...
//ஆன்மா/உயிர்தான் கடவுள். ஆன்மா பிறப்பும் இறப்பும் அற்றது எனும்போது கடவுளுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது என்றே பொருள்.//

நான் வழிமொழிகிறேன்.
நந்தன் said...
10. நந்தன்
கேள்வி :4
@ஆன்மா ஞானம்
//ஆதியில் இருந்தே இருந்து வரும் ஒற்றை ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் வியாபித்திருக்கிறது. //
ஒற்றை ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் பரவியுள்ளது என்றால் ஒற்றை ஆன்மா விலிருந்து (உயிரிலிருந்து அல்லது கடவுளிலிருந்து) அரைவாசியாக அல்லது கால்வாசியாக அல்லது சிறு சிறு துண்டுகளாக அல்லது கோடி கோடி கோடி.....யில் ஒரு துண்டாக ஒவ்வொரு உயிரினத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டு அல்லது பிரிந்துகொண்டு தனித்தனி உயிராக இருக்கிறதா அல்லது வேறு எவ்விதமாகத் தனித்தனி உயிர்களாக உயினங்கள் இருக்கிறது?
aanma gnanam said...
@நந்தன்

தாங்கள் ஆன்மாவை சர்க்கரைப் பொட்டலம் போல் கருதியிருக்கிறீர்கள்.கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

பேரான்மாவிடம் இருந்து வெளிப்படும் உயிர் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே அளிக்கப்படவில்லை. ஆதியில் இருந்தே உள்ள ஒற்றை ஆன்மாவின் பருப்பொருள் வெளியீடாய் ஒரு செல் உயிரியாய் வெளிப்பட்டு ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி பெருகிய பரிணாமவியலில் அந்த ஒற்றை உயிர்தான் பல்கிப்பெருகி அனைத்து உயிரினங்களாகவும் உள்ளது. டார்வினிசத்தின் படி சொன்னால் முதலில் உருவான ஒரு செல் உயிரியே பல்கிப் பெருகி இன்றைய பெரிய மிருகங்களாக பரிணமித்துள்ளது. இதைத்தான் ஆன்மா சந்ததி மூலம் கடத்தப்படுகிறது என்கிறேன். எளிய உதாரணம் , ஆயிரம் தீபங்களுக்கும் நெருப்பை கொடுப்பதால் முதலில் ஏற்றப்பட்ட தீபத்தின் நெருப்பின் அளவு குறையுமா என்ன?
நந்தன் said...
@ ஆன்ம ஞானம்.
//ஆதியில் இருந்தே இருந்து வரும் ஒற்றை ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் வியாபித்திருக்கிறது. //
// பேரான்மாவிடம் இருந்து வெளிப்படும் உயிர் ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனியே அளிக்கப்படவில்லை. ஆதியில் இருந்தே உள்ள ஒற்றை ஆன்மாவின் பருப்பொருள் வெளியீடாய் ஒரு செல் உயிரியாய் வெளிப்பட்டு ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி பெருகிய பரிணாமவியலில் அந்த ஒற்றை உயிர்தான் பல்கிப்பெருகி அனைத்து உயிரினங்களாகவும் உள்ளது.//
ஆன்மாவை (உயிரை) நான் சக்கரைப் பொட்டலமாக நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் சொல்லியுள்ளதை கவனியுங்கள்.
“ஆதியில் இருந்தே இருந்து வரும் ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் பரவியுள்ளது. பேரான்மாவிடமிருந்து வெளிப்படும் உயிர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்தினயே அளிக்கப்படவில்லை” என்றும்
“ஆதியில் இருந்தே உள்ள ஒற்றை ஆன்மாவின் பருப்பொருள் வெளியீடாய் ஒரு செல் உயிரியாய் வெளிப்பட்டு ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி பெருகிய பரிணாமவியலில் அந்த ஒற்றை உயிர்தான் பல்கிப்பெருகி அனைத்து உயிரினங்களாகவும் உள்ளது.”
-- என்றும் முரண்பாடாக கூறியுள்ளீர்கள்.
ஒரு செல் உயிராய் வெளிப்பட்டு இனப்பெருக்கம் அடைந்து பல செல் உயிரிகளாய் பரிணமித்து ஒவ்வொன்றும் தனித்தனி உயிர்களாய் இருக்கிறதா? அல்லது
ஒரே உயிர் எல்லா உயிரினத்திலிலும் வியாபித்து உள்ளதா?
ஏனெனில் எந்த உயிரினங்களும் ஒன்று போல் உண்பதில்லை, உறங்குவதில்லை, இறப்பதில்லை.. அனைத்தும் தனித்தனியாக நடைபெறுகிறது. அதன் இயற்பியல் வேதியியல் பண்புகளும் ஒன்றுபோல் இல்லை..
“ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி” என்றாலே தனித்தனியானதாகத்தானே பொருள்படும்..
உடற்செல்கள்கூட ஒன்றிலிருந்து பிரிந்து பல செல்களாக பரினமித்தாலும் ஒன்று போல் உண்பதில்லை, உறங்குவதில்லை, இறப்பதில்லை.. அனைத்தும் தனித்தனியாக நடைபெறுகிறது. தினமும் பல கோடி செல்கள் உருவாகின்றன. முதிர்ச்சியடைந்த அல்லது நோயினால் பலகோடி செல்கள் இறக்கின்றன.
அதனால் ஒரே உயிர் எல்லா உயிரினங்களில் பரவியுள்ளதா? (வியாபித்துள்ளதா?) அல்லது ஒன்றிலிருந்து பிரிந்து தனித்தனி உயிர்களாக உள்ளதா? என்பதை தெளிவாகச் சொல்லவும்.

aanma gnanam said...
//ஆதியில் இருந்தே இருந்து வரும் ஆன்மாதான் எல்லா உயிரினத்திலும் பரவியுள்ளது. பேரான்மாவிடமிருந்து வெளிப்படும் உயிர் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்தினயே அளிக்கப்படவில்லை” என்றும்
“ஆதியில் இருந்தே உள்ள ஒற்றை ஆன்மாவின் பருப்பொருள் வெளியீடாய் ஒரு செல் உயிரியாய் வெளிப்பட்டு ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி பெருகிய பரிணாமவியலில் அந்த ஒற்றை உயிர்தான் பல்கிப்பெருகி அனைத்து உயிரினங்களாகவும் உள்ளது.”
-- என்றும் முரண்பாடாக கூறியுள்ளீர்கள்//

இதில் முரண்பாடு எதுவும் இல்லை .

ஆன்மா ஒன்றுதான். பரிமாணங்கள்தான் பல.
உயிர் ஒன்றுதான் உடல்கள் வேறு.

aanma gnanam said...
//உடற்செல்கள்கூட ஒன்றிலிருந்து பிரிந்து பல செல்களாக பரினமித்தாலும் ஒன்று போல் உண்பதில்லை, உறங்குவதில்லை, இறப்பதில்லை.. அனைத்தும் தனித்தனியாக நடைபெறுகிறது. தினமும் பல கோடி செல்கள் உருவாகின்றன. முதிர்ச்சியடைந்த அல்லது நோயினால் பலகோடி செல்கள் இறக்கின்றன//

புவிஈர்ப்பு விசை மற்றும் புவி சுழற்சியால் கட்டமைந்த வளர்சிதை மாற்றம் மூப்பு முதிர்வு இவைகளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ளதொடர்பே தாங்கள் மேற்சொன்ன விடயங்கள். ஆன்மா காலத்திற்கு அப்பாற்பட்டது. காலத்தினால் அதனை கட்டுப்படுத்தவோ இயக்கவோ முடியாது
நீங்கள் மேற்சொன்னவை காலத்தினால் ஆன்மாவின் உடலில் ஏற்படும் நிகழ்வுகள்.

நம் உடலில் உள்ள செல்கள் பலவகை உண்டு. அவற்றின் மெய்க்கூறுகளின் அடிப்படையில் வேறுபடும். ஆன்மா ஒன்றே
aanma gnanam said...
தங்களுக்கு ஒரு எளிதான செயல்முறை விளக்கம் சொல்கிறேன்.

முதல் செல் தோற்றம் கீழ்க்கண்டவாறு

organic compounds உயிர்வேதிப் பொருட்களின் மீதான ஆன்மாவின் சேர்க்கை முதல் செல் உருவானது. முதல் செல் உடைந்து இரண்டாகிறது. முதல் செல்லின் ஆன்மா இரண்டாவது செல்லுக்கும் கடத்தப் படுகிறது. உயிர் வேதிப்பொருட்களின் சேர்மானம் அடுத்த செல்லாக பரிணமிக்கிறது. இந்தச் செயல் காரணமாக ஆன்மாவிற்கு எந்த இழப்பும் இல்லை. இன்னும் எத்தனை செல்கள் தோன்றினாலும் அவை உயிர் வேதிச்சேர்மத்தின் விகித மாறுபாடே. ஆன்மா வடிவம் கொண்டு எடை கொண்ட பொருளாக இருந்தால் மட்டுமே தாங்கள் கருதுவது போல அமையலாம். ஆன்மா அல்லது உயிர் ஆற்றலாகவே உள்ளது. ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த ஆன்ம ஆற்றல்தான் பேரான்மாகவும் உள்ளது. அதன் பல்வேறு பரிமானம்தான் அனைத்து உயிரிகளும். அந்த ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதனை பயன்படுத்தி நாம் விழிப்படையும் ஒரு செயல்முறைதான் ஆன்மீக வாழ்க்கை. ஒற்றைப் புள்ளியாய் இருந்த பேரான்மாதான் இவ்வளவு பெரிய பேரண்டமாய் உள்ளது. இன்னும் அதிகம் அதனை உணர சிந்தையைப்பெருக்கி உண்மையை உணர்வீராக.
நந்தன் said...
ஒன்று இரண்டாகி இரண்டு நான்காகி …… என்றாலே ஒவ்வொன்றும் தனித்தனியான உயிர்கள் என்றுதான் பொருள்படும் இது முரண்பாடுதான்.. ஆனாலும் இங்கு இதனை இப்பொழுது புறக்கணிப்போம்.
// உயிர் ஒன்றுதான் உடல்கள் வேறு// ஒரே உயிர்தான் எல்லா உயிரினங்களிலும் பரவியுள்ளது என்று எடுத்துக்கொள்கிறேன்.
கேள்வி 5:
//ஜடப்பொருளுடன் இணையும் போதே உயிரினமாகிறது// என்று 12-02-2015 அன்று சொல்லியுள்ள பதிலில் கூறியுள்ளீர்கள்.
எது ஜடப்பொருளுடன் இணையும் போது அந்த ஜடப்பொருள் உயிரினமாகிறது?

aanma gnanam said...
//ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் இணையும் போதே உயிரினமாகிறது. //

மேலே உள்ளதில் தட்டச்சு பிழை நீக்கி கீழே உள்ளவாறு படிக்கவும்.

ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் ஆன்மா இணையும் போதே உயிரினமாகிறது.

அந்தப்பதிவின் அடுத்த பதிவிலேயே இதை திருத்தி விட்டேன்.

ஜடப்பொருள்கள் என்பவை ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்கள் தனித்தோ கூட்டாகவோ உருவாவது. ஆன்மா அவற்றுடன் சேரும் பொழுதே அவை உயிரினமாக ஆகும்.


aanma gnanam said...
பருப்பொருளின் மீச்சிறு பொருள் என்னவென்ற ஆராய்ச்சியின் விடை இறுதியில் ஆற்றலாகத்தான் இருக்கும். அந்த ஆற்றல் பேரண்டம் அல்லது பேரான்மாவின் விரிதல் அல்லது விசையுறு இயக்கம் காரணமாக மீசான்களாக , பைமீசான்களாக , எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களாக . நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களாக இவற்றின் மின்னூட்ட சமனியாக நியூட்ரான்கள் என ஒர் அணு உருவானது. அதன் எலக்ட்ரான் எண்ணிக்கையும் நிறையும் 1 என இருந்தால் அது ஹைட்ரஜன். இப்படியான எலக்ட்ரான்களின் பெருக்கத்தை பொறுத்து அவற்றின் அணு எண்கள் மற்றும் நிறையைபொறுத்து பல்வேறு தனிமஙுகளாக உள்ளன. இதில் அதிக அணு எண்ணும் நிறையும் கொண்டு இயற்கையாய் கிடைக்கும் தனிமம் யுரேனியம். அதன் மீதான மிகைவேக எலக்ட்ரான் மோதலின் போது வெளிப்படும் அளப்பரிய ஆற்றலே ஆற்றலின் மற்றொரு பரிமாணமே பருப்பொருள் என்பதை அறியலாம்.

இவ்வாறு கிடைக்கப் பெறும் தனிமங்கள் பல்வேறு விகித சேர்மமாகவோ கலவையாகவோ ஜடப்பொருள் என்றழைக்கப்படுகிறது. இந்த ஜடப்பொருளின் மீல் பேரான்மாவின் ஆற்றல் வினை புரிகிறது. அவை உயிரினங்கள். அவ்வாறு வினைபுரிய முடியாத பொருட்கள் உயிரற்றவையாக உள்ளன.
நந்நன் said...
//ஜடப்பொருளுடன் ஆன்மா இணையும் போதே உயிரினமாகிறது//

ஆன்மா (உயிர்) இணைந்து உயிரினமான ஒரு ஜடப்பொருளைக் கூறவும்.
ஆனந்த் சாகர் said...
நந்தன்,

//ஆன்மா (உயிர்) இணைந்து உயிரினமான ஒரு ஜடப்பொருளைக் கூறவும்.//

ஜட உலகில் உள்ள நாம் உட்பட எல்லா உயிரினங்களின் உடல்களும் ஆன்மா இணைந்து உயிரினமான ஜடப்பொருள்கள்தான்.

நந்நன் said...
திருத்தம்:
//ஜடப்பொருளுடன் ஆன்மா இணையும் போதே உயிரினமாகிறது//

ஆன்மா (உயிர்) இணைந்து உயிரினமான ஒரு ஜடப்பொருளையும் அந்த உயிரினத்தையும் கூறவும்.

344 comments:

  1. நந்நன்18 February 2015 at 23:42

    @ ஆனந்த் சாகர்

    நம் உடல் எந்த ஜடப்பொருளுடன் ஆன்மா இணைந்து மனித உடலானது?

    ReplyDelete
  2. தஜ்ஜால்19 February 2015 at 13:09

    //ஜட உலகில் உள்ள நாம் உட்பட எல்லா உயிரினங்களின் உடல்களும் ஆன்மா இணைந்து உயிரினமான ஜடப்பொருள்கள்தான்.//

    ஜடப்பொருளான களிமண்ணில் அல்லாஹ்(!) தனது உயிரிலிருந்து ஊதியதைப் போன்றா?

    ReplyDelete
  3. ஆனந்த் சாகர்19 February 2015 at 14:45


    @நந்தன்,

    //நம் உடல் எந்த ஜடப்பொருளுடன் ஆன்மா இணைந்து மனித உடலானது?//

    சில காலம் கழித்து ஆன்மீகம் பற்றி விரிவாக பேசவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இப்பொழுது முழுமையான விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. இருப்பினும் இங்கு விவாதத்தில் ஆர்வத்தினால் இழுக்கப்படுகிறேன். இருந்தாலும் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு ஒரு சில முறை மட்டும் என் கருத்துக்களை இடைஇடையே பதிவிடுகிறேன்.

    நம் உடல் உட்பட எல்லா ஜடப் பொருட்களும் அணுக்களின் கூட்டு என்று நாம் அறிவோம். அணுவை உருவாக்குகிற எலக்ட்ரான், நியூட்ரான்,ப்ரோட்டான் ஆகியவைகளும் ஜடப்பொருள்கள்தான். இவைகள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகளினால் உருவாகும் பொருட்களில் இருந்தே தனிப்பட்ட ஆன்மா சேர்ந்து எல்லா உயிரினங்களின் உடல்களும் உருவாகின்றன.

    ReplyDelete
  4. நந்தன்19 February 2015 at 17:45


    //அணுவை உருவாக்குகிற எலக்ட்ரான், நியூட்ரான்,ப்ரோட்டான் ஆகியவைகளும் ஜடப்பொருள்கள்தான். இவைகள் சேர்ந்து உருவாகும் மூலக்கூறுகளினால் உருவாகும் பொருட்களில் இருந்தே தனிப்பட்ட ஆன்மா சேர்ந்து எல்லா உயிரினங்களின் உடல்களும் உருவாகின்றன. //

    @ ஆனந்த் சாகர்
    இவ்வாறு எலக்ரான் புரோட்டான் நியூட்ரான் இணைந்த எந்த ஜடப்பொருள் ஆன்மா இணைந்து மனிதனாக மாறியது?
    (குறிப்பு விருப்பம் இருந்தால் தொடரவும்.)

    ஆன்மா (உயிர்) இணைந்து உயிரினமான ஒரு ஜடப்பொருளையும் அந்த உயிரினத்தையும் கூறவும்.
    ஆன்ம ஞானம் பதில் சொல்வீகள் என எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
  5. Strain
    Protein
    Carbohydrates
    Lipids
    Nucleic acid

    50-56
    10-17
    12-14
    3-6
    Scenedesmus obliquus என்ற ஆல்கேயில் உள்ள புரதங்கள் , கார்போஹைட்ரேட்டுகள் . கொழுப்பு அமிலங்கள் நியுக்ளிங் அமிலங்கள். ஆகியன ஜடப்பொருள்கள். இவற்றை வைத்து ஒரு ஆல்கேவை நாம் தயாரிக்க முடியுமா அல்லது உருவாக்க முடியுமா. இந்த ஜடப்பொருள்களுடன் ஆன்மா இணையும் போதே அது ஆல்கே எனும் உயிரினமாகும். இது ஆல்கே மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும்தான்.

    ReplyDelete
  6. நந்தன் அவர்களே

    மனிதனின் மீச்சிறு அடிப்படை அலகு செல் என்பதை அறிவீர்கள். அந்த செல்களும் மேற்சொன்னபுரதங்கள் , கார்போஹைட்ரேட்டுகள் . கொழுப்பு அமிலங்கள் நியுக்ளிங் அமிலங்கள் ஆகியவற்றால் ஆனவையே. ஆன்மா அதனிடத்தில் இல்லை என்றால் அவை வெறும் வேதிப்பொருட்களே. ஆன்மாவுடன் அவை இணையும் போதே செல்லாகிறது. மேலும் இவை கார்பன்டைஆக்சைடு , ஹைட்ரஜன் , ஆக்ஸிஜன் , நைட்ரஜன் ஆகியவற்றின் கலவையே. அதையே மூலக்கூறுகளின் சேர்ம விகிதம் என்கிறேன்.

    ReplyDelete
  7. நந்தன்19 February 2015 at 20:14

    நீங்கள் சொல்லும் வேதிப்பொருள்கள் எல்லாம் இணைந்து மனிதன் என்ற முழுவடிவம் தோன்றியதா? அல்லது அவனது மீச்சிறு அலகு செல் தோன்றியதா?

    ReplyDelete
  8. இன்றும் மனிதன் முழு உடலாக தோன்றுவதில்லை தந்தையிடம் ஆன்மா கொண்ட விந்தணு தாயின் கருவறையில் சினைமுட்டையுடன் இண

    ReplyDelete
  9. நந்தன்19 February 2015 at 20:36

    அந்த செல் எப்படி முழு மனிதனாகியது?

    ReplyDelete
  10. மனிதனே முதலில் தாயின் கருப்பையில் உருவாவதே ஒரு செல்லாகதான். அந்த செல்லின் வளர்சிதை மாற்றங்களே உடல் மற்றும் உறுப்புகள் என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் .

    உலகின் முதல் செல் பல பரிணாமத்திற்கு பிறகே மனித செல்லானது. முதல் செல் ஒரு செல் உயிரியாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    தவிர லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்த பரிணாம வளர்ச்சியை சில நாட்களில் புரிந்து கொள்வது சற்றுக் கடினமே. இருப்பினும் அடிப்படை புரிதலான ஆன்ம ஆற்றலின் ஜடப்பொருள் மீதான வினையை விளங்கிக்கொள்வது எளிதுதான்.

    ReplyDelete
  11. நந்தன்19 February 2015 at 21:37

    //ஆற்றல் ஒருமித்து ஜடப்பொருளாகலாம். ஜடப்பொருளுடன் ஆன்மா இணையும் போதே உயிரினமாகிறது.

    18 February 2015 at 16:38//

    இனப்பெருக்கம் அடைவதையும்
    உயிரினத் தோற்றத்தையும் போட்டு
    ஒன்றுபோல் குழப்பாதீர்கள்.
    விந்தணுவும் முட்டையும் தன் பெற்றோரிடமிருந்து இனப்பெருக்கம் அடைவது வேறு. மனிதனாக முதலில் உருவாவது வேறு. ஒரு செல் உயிரிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்றால் அது இனப்பெருக்கம் வாயிலா புறச்சூழ்நிலைக்கேற்ப ஏற்பட்ட மாற்றம்.
    ஜடப்பொருளிலிருந்து ஒவ்வொரு உயினமும் தோன்றியது என்று சொல்லிவிட்டு அது எந்த ஜடப்பொருளிருந்து தோன்றியதும் ஒரு செல் உயிரிலிருந்து பரிணாமம் அடைந்த அறிவியலுக்குச் செல்லாதீர்கள். ஒரு செல் உயிரிலிருந்தே அனைத்து உயிரினங்களும் பரிணாமம் அடைந்தது. அது இனப்பெருக்க முறை. அதாவது பெற்றோர்களின் இனப்பெருக்கச் செல்லிலிருந்து பரிணாமம் அடைவது. இனப்பெருக்கச் செல்கள் எவையும் உயிரற்றவையும் இல்லை. இதன் பெற்றோர்களும் உயிரற்றவர்கள் அல்ல. அதனால் அங்கு புதிதாக ஆன்மா (உயிர்) நுழைய வேண்டிய அவசிமும் இல்லை.
    நீங்கள் சொல்ல வேண்டிது மனிதன் எந்த ஜடப்பொருளிலிருந்து உருவானான் என்பதே. (ஒவ்வொரு உயிரினமும் ஜடப்பொருளிலிருந்து தோன்றின என்று நீங்கள் சொன்னதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete
  12. திரும்பவும் முதலிலிருந்தே சொல்கிறேன்.


    //நீங்கள் சொல்ல வேண்டிது மனிதன் எந்த ஜடப்பொருளிலிருந்து உருவானான் என்பதே. (ஒவ்வொரு உயிரினமும் ஜடப்பொருளிலிருந்து தோன்றின என்று நீங்கள் சொன்னதை மறக்க வேண்டாம்/

    அந்த ஜடப்பொருட்கள் என்னவென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்


    /
    //பெற்றோர்களும் உயிரற்றவர்கள் அல்ல. அதனால் அங்கு புதிதாக ஆன்மா (உயிர்) நுழைய வேண்டிய அவசிமும் இல்லை.//

    அதையேதான் நானும் சொல்கிறேன்.ஆன்மா இடையில் புதிதாக நுழைவதில்லை. ஆதியில் இருந்தே இருக்கிறது. ஆன்ம ஆற்றல் அல்லாத அத்தனையும் ஜடப்பொருளே.

    //ஒரு செல் உயிரிலிருந்து பரிணாமம் அடைந்தான் என்றால் அது இனப்பெருக்கம் வாயிலா புறச்சூழ்நிலைக்கேற்ப ஏற்பட்ட மாற்றம்.//

    அந்தப்புறச்சூழ்நிலை சரி. அந்த மாற்றத்தை
    ஏற்படுத்திய புறச்சூழ்நிலை காரணி எது?

    /ஒரு செல் உயிரிலிருந்தே அனைத்து உயிரினங்களும் பரிணாமம் அடைந்தது. அது இனப்பெருக்க முறை//

    நான் சொல்வதும் அதுதானே. பரிணாமத்தின் பல படிகளிலும். உடல் மற்றுமே மாறும்.ஆன்மா ஒன்றே.

    அறிவியலின் பல விடை தெரியாத கேள்விகளுக்கு ஆன்மா என்பதே பதில்.


    //இனப்பெருக்கம் அடைவதையும்
    உயிரினத் தோற்றத்தையும் போட்டு
    ஒன்றுபோல் குழப்பாதீர்கள்.//

    நான் எப்பொழுது குழப்பினேன். உயிரினத்தோற்றம் என்பதிலேயே ஆன்மா அந்த உயிரினத்தினுள் வந்து விடுகிறது

    தனித்தனியாக ஒவ்வொரு உயிருக்கும் உயிர் அளிக்கப்படவில்லை என்று சொன்னதன் பொருளே இதுதான். ஆன்மா ஒன்றே. அந்த ஆன்மாவின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் இனப்பெருக்கம் என சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  13. நண்பர் நந்தன் அவர்களே

    இப்பொழுது ஆற்றல் வினைபுரியும் அல்லது ஊட்டம் பெறும் ஜடப்பொருள்களை பார்க்கலாம்.
    1) காந்த ஆற்றல் பெறும் இரும்பு.
    2) வெப்ப ஆற்றல் பெறும் உலோகங்கள்.

    இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவை ஜடப்பொருளின் மீதான ஆற்றல்களின் வினை அல்லது விளைவு எனலாம். இத்தகைய ஆற்றல்கள் ஜடப்பொருட்களை ஆற்றலால் நிறைக்கின்றன. ஆன்ம ஆற்றல் உயிர்ப்புள்ளதாலேயே அது வினை புரியத்தகுந்த அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடப்பொருட்களின் மேல் வினை புரிந்து உயிரினமாகிறது. ஆன்ம ஆற்றலை எதனுடனும் ஒப்பிட்டு அளவிட முடியாதது.
    ஆன்ம ஆற்றல் நிரந்தரமானது. மேலும் இங்கு
    சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தங்களுக்கு ஏதேனும் புரிதல் கிடைத்திருக்கும் அல்லவா. அதை தாங்கள் தெளிவு படுத்தினால் மேற்கொண்டு பேச ஏதுவாக இருக்கும். இல்லையென்றாலும் பரவாயில்லை தொடர்ந்து பேசலாம்.

    ReplyDelete
  14. ஆனந்த் சாகர்20 February 2015 at 11:16

    @நந்தன்,

    //@ ஆனந்த் சாகர்
    இவ்வாறு எலக்ரான் புரோட்டான் நியூட்ரான் இணைந்த எந்த ஜடப்பொருள் ஆன்மா இணைந்து மனிதனாக மாறியது?
    (குறிப்பு விருப்பம் இருந்தால் தொடரவும்.)//

    மனிதனுடைய உடல் எந்தெந்த வேதிப்பொருள்களால் ஆனது என்று கூகுளில் தேடினால் ஒரு பட்டியல் கிடைக்கும். இந்த எல்லா வேதிப்பொருள்களும் எலக்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற அணுவின் கட்டமைப்பான ஜடப்பொருள்களால் உருவானதே. உதாரணத்திற்கு, ஆல்கே வின் வேதிப்பொருள்களை ஆன்ம ஞானம் பட்டியலிட்டிருக்கிறார்.

    தயாராக இருந்த வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து முதல் மனிதன் தோன்றினான் என்று நாங்கள் கூறவில்லை என்பதை கவனிக்கவும். அறிவியல் கூறுகிற முதல் ஒரு செல் உயிரி வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து உருவானது என்றே கூறுகிறோம். பல பில்லியன் வருட பரிணாமத்தில் அதிலிருந்து தோன்றியவனே இன்றைய மனிதன்.

    ReplyDelete
  15. நந்நன்20 February 2015 at 19:44

    ஆன்ம ஞானம் அவர்களே, தாங்கள் ஆவர்த்தன அட்டவனைப் பற்றியும் (Periodic table) தீப்பந்தம் பற்றியும் பரிணாமம் பற்றியும் சில செய்திகள் எழுதியுள்ளீர்கள். அவை பற்றி எனது சில கருத்துக்களை இங்கு தருகிறேன்.

    ஆவர்தன அட்டவனையில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஜடப்பொருள்கள் அல்ல. பார்வைக்கு அவை ஜடப்பொருள்களாகத் தோன்றினாலும் அவற்றுக்குள்ளும் இயக்கமும், மாற்றமும் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகிறது. இந்த இயக்கமும் மாற்றமும் இல்லை என்றால் அவற்றுடன் எதுவும் இணையமுடியாது. எந்த உயிரினமும் தோன்றிருக்காது.

    முதல் தீப்பந்தத்திலிருந்து அடுத்து ஒரு தீப்பந்தத்தை உருவாக்கினால் முதல் தீப்பந்தத்தின் அளவும் தன்மையும் மாறாதுதான். ஆனால் புதிதாக உருவான தீப்பந்தம் முதல் தீப்பந்தத்தைப்போல் அளவிலும் தன்மையிலும் இருக்கத் தேவையில்லை. முதல் தீப்பந்தம் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியினால் ஆன தீப்பத்தமாக இருக்கும் போது, இரண்டாவது தீப்பந்தம் ஒரு வைக்கப்போராக இருக்கலாம்.. இவை இரண்டும் தன்மையில் வேறு வேறு. எவை ஒன்றும் தன்னிடம் இருக்கும் மூலப்பொருளின் அளவைக் கொண்டு முதலில் அணைந்து (இறந்து) போகலாம். அதனால் அவை இரண்டும் ஒன்றல்ல. அதுபோல உயிரினங்களின் உயிரின் தனமைகளும் ஒன்றுபோல் இருக்கமுடியாது. (உங்கள் எடுத்துக்காட்டிலுள்ள ஓட்டைதான் இது)
    காற்றிலுள்ள மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், நீர் ஆகியன மின்னல்களால் ஏற்பட்ட உயர் மின்னழுத்த தாக்குதலால் பாதிக்கப்படு அமினோ அமிலங்கள் உருவாகின. அதனுடன் புரதங்கள் இணைய உயிரின் அடிப்படையான RNA உருவாகி ஒரு செல் உயிரி தோன்றியது. அதிலிருந்து செல் பிரிதல் மூலம் இனப்பெருக்கமும், மாற்றமும் பெற்று பல செல் உயிரிகளும் பல உயிரினங்களும் பரணாம வளர்ச்சிப் பெற்று கிளைப்பிரிந்தன என்பது பரிணாமவியலின் அடிப்படை. பரிணாமவியல் எங்கும் ஆன்மா பற்றியோ அது இணைந்து உயிர் தோன்றியதாகவோ கூறவில்லை.

    பரிணாம அறிவியல் தோன்றி இரண்டு நூற்றாண்டுகள்கூட ஆகவில்லை. ஆன்மீகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அத்வைதத்துடன் உருவாகி கிளைபிரிந்து வந்துள்ளது. அதனால் பரிணாம அறிவியலை ஆன்மீகம் சொல்வதாக கதைக்காமல் உயிர் தோற்றத்தைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறதோ அதனை நேர்மையாக எடுத்துவையுங்கள். இஸ்லாமியர்கள் போல் அதுதான் இது இதுதான் அது, அறிவியலை குர்ஆன் முன்பே சொல்லிவிட்டது என்று புளுகுவது போல் நீங்களும் புளுக வேண்டாம்.

    நாம் இங்கு ஆன்மீகத்தைப்பற்றித்தான் விவாதம் செய்து வருகிறோம். நான் ஆன்மா எப்படி ஜடப்பொருளுடன் இணைந்தது என்று செயல் விளக்கமெல்லாம் கேட்கவில்லை. எளிமையான சிறு சிறு கேள்விகள்தான் கேட்டு வருகிறேன். அதனால் ஆவர்த்தன அட்டவணை பரிணாம பாடங்கள் எல்லாம் எடுத்து தேவையற்று அலட்டிக்கொள்ளாமல்,

    இந்த கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.
    முதல் உயிரிமட்டும் ஜடப்பொருளில் ஆன்மா இணைந்து தோன்றிஅபின் பிற உயிரினங்கள் பரிணாம வழியாக மாற்றம் பெற்றனவா அல்லது ஒவ்வொரு உயிரினமும் ஜடப்பொருளுடன் ஆன்மா இணைந்ததால் உயிரினமாக தோன்றியதா? என்பதே என் கேள்வி.
    கேள்வி தெளிவாக இருக்கிறது என்று நம்புகிறேன். பதில் தாருங்கள்.
    .

    ReplyDelete
  16. நந்நன்20 February 2015 at 19:52

    திருத்தம்.
    இந்த கேள்விக்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்.
    முதல் உயிரிமட்டும் ஜடப்பொருளில் ஆன்மா இணைந்து தோன்றியபின் பிற உயிரினங்கள் பரிணாம வழியாக மாற்றம் பெற்றனவா அல்லது ஒவ்வொரு உயிரினமும் ஜடப்பொருளுடன் ஆன்மா இணைந்ததால் உயிரினமாக தோன்றியதா?ஆன்மீகம் என்ன சொலகிறதி என்பதே என் கேள்வி.
    கேள்வி தெளிவாக இருக்கிறது என்று நம்புகிறேன். பதில் தாருங்கள்.

    ReplyDelete
  17. //தயாராக இருந்த வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து முதல் மனிதன் தோன்றினான் என்று நாங்கள் கூறவில்லை என்பதை கவனிக்கவும். அறிவியல் கூறுகிற முதல் ஒரு செல் உயிரி வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து உருவானது என்றே கூறுகிறோம். பல பில்லியன் வருட பரிணாமத்தில் அதிலிருந்து தோன்றியவனே இன்றைய மனிதன்.//

    நான் சொல்வதை என்னை விட தெளிவாக ஆனந்த் கூறியிருக்கிறார். இதைவிட சிறந்த பதில் இல்லை.

    ReplyDelete
  18. //முதல் உயிரிமட்டும் ஜடப்பொருளில் ஆன்மா இணைந்து தோன்றிஅபின் பிற உயிரினங்கள் பரிணாம வழியாக மாற்றம் பெற்றனவா//

    ஆமாம்.

    ReplyDelete
  19. நந்நன்20 February 2015 at 21:21

    //தயாராக இருந்த வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து முதல் மனிதன் தோன்றினான் என்று நாங்கள் கூறவில்லை என்பதை கவனிக்கவும். அறிவியல் கூறுகிற முதல் ஒரு செல் உயிரி வேதிப்பொருள்களின் சரியான கலவையில் ஆன்மா இணைந்து உருவானது என்றே கூறுகிறோம். பல பில்லியன் வருட பரிணாமத்தில் அதிலிருந்து தோன்றியவனே இன்றைய மனிதன்.//

    ஆனமீகம் இதைத்தான் கூறுகிறதா?
    நேர்மையாக பதில் சொல்லவும்.

    ReplyDelete
  20. //முதல் தீப்பந்தத்திலிருந்து அடுத்து ஒரு தீப்பந்தத்தை உருவாக்கினால் முதல் தீப்பந்தத்தின் அளவும் தன்மையும் மாறாதுதான். ஆனால் புதிதாக உருவான தீப்பந்தம் முதல் தீப்பந்தத்தைப்போல் அளவிலும் தன்மையிலும் இருக்கத் தேவையில்லை. முதல் தீப்பந்தம் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியினால் ஆன தீப்பத்தமாக இருக்கும் போது, இரண்டாவது தீப்பந்தம் ஒரு வைக்கப்போராக இருக்கலாம்.. இவை இரண்டும் தன்மையில் வேறு வேறு. எவை ஒன்றும் தன்னிடம் இருக்கும் மூலப்பொருளின் அளவைக் கொண்டு முதலில் அணைந்து (இறந்து) போகலாம்//

    மூலப்பொருள்களை நான் ஜடப்பொருள் என்கிறேன். நெருப்பை ஆன்மா என்கிறேன். நீங்கள் சரியாகவே புரிந்து கொண்டீர்கள் .


    //காற்றிலுள்ள மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், நீர் ஆகியன மின்னல்களால் ஏற்பட்ட உயர் மின்னழுத்த தாக்குதலால் பாதிக்கப்படு அமினோ அமிலங்கள் உருவாகின. அதனுடன் புரதங்கள் இணைய உயிரின் அடிப்படையான RNA உருவாகி ஒரு செல் உயிரி தோன்றியது //

    நீங்கள் சொல்லும் மின்னல் பத்து லட்சம் வோல்ட் மின்னழுத்தம் கொண்ட மின்னாற்றல். இது நீங்கள் சொன்ன சூழ்நிலை புறக்காரணிகளில் ஒன்று. தவிர நீரில் மட்டுமே அதிகமாக உள்ளது ஹைட்ரஜன். வாயுமண்டலத்தில் வெகு சொற்பமே. அது நமக்கு இப்பொழுது தேவையில்லை. தாங்கள் சொல்லும் RNA எப்படி உயிர் பெற்றது. அதையே ஆன்மா கொடுத்தது என்கிறோம்.

    ReplyDelete
  21. //ஆனமீகம் இதைத்தான் கூறுகிறதா?
    நேர்மையாக பதில் சொல்லவும்.//

    எனது ஆன்மீகம் இதைத்தான் சொல்கிறது.

    ReplyDelete
  22. //பரிணாமவியல் எங்கும் ஆன்மா பற்றியோ அது இணைந்து உயிர் தோன்றியதாகவோ கூறவில்லை.//

    அறிவியல் இந்த நிகழ்வுக்கெல்லாம் மூலம் எது என்ற விடையை இன்னும் அறியவில்லை. நான் அதை ஆன்மா என்கிறேன். அறிவியல் இதை ஆராய்ந்து பின்னர் ஏற்றுக்கொள்ளும். ஆன்மீகத்தை மதம் சார்ந்தது என கருதும் வரை அறிவியல் இதை ஏற்பது கடினமே.

    பரிணாம அறிவியல் தோன்றி இரண்டு நூற்றாண்டுகள்கூட ஆகவில்லை. ஆன்மீகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அத்வைதத்துடன் உருவாகி கிளைபிரிந்து வந்துள்ளது. //


    ஆன்மா காலத்திற்கு அப்பாற்பட்டது. எனது கொள்கைகள் அத்வைதத்தின் பிரிவு என நான் எப்பொழுதும் சொல்லவில்லை. தவிர எனக்கு அத்வைதத்தை பற்றி முழுமையாகத்தெரியாது. இங்கு அறிவியலை உண்மைப்படுத்தும் கருத்துகளை மட்டுமே ஆன்மீகமாக பேசி வருகிறேன். எவ்விடத்திலும் மதம் சார்ந்த கருத்துகளை சொல்லவில்லை. அறிவியல் கருத்துகளைக் கொண்டே ஆன்மீகத்தை நான் விளக்குகிறேன். நாளை அறிவியல் மாறினால் என் கொள்கைகளும் மாறலாம்.

    ReplyDelete
  23. இந்தக் கருத்துகள் என்னுடையவை தவிர எந்த மதப்புத்தகத்திலும் இருக்காது.


    //ஆவர்தன அட்டவனையில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஜடப்பொருள்கள் அல்ல. பார்வைக்கு அவை ஜடப்பொருள்களாகத் தோன்றினாலும் அவற்றுக்குள்ளும் இயக்கமும், மாற்றமும் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகிறது. இந்த இயக்கமும் மாற்றமும் இல்லை என்றால் அவற்றுடன் எதுவும் இணையமுடியாது. எந்த உயிரினமும் தோன்றிருக்காது.//

    ஆவர்த்தன அட்டவனையில் உள்ள தனிமங்களின் மாற்றத்திற்கு அவற்றின் எலக்ட்ரான் கவர்விசை மற்றும் நிலைத்தன்மையை அடைய வேண்டிய இயற்கை நியதி. நிலைத்தன்மை எனப்படுவது
    மந்த வாயுக்களின் தன்மையை அடைவது. இதற்கு காரணமாவது அணுக்களின் இடையேஏற்படும் விசைகளின் காரணமாக ஏற்படும் ஆற்றலே.

    இதையேதான் உயிரினங்களும் இறைத்தன்மையை அடைய அடையும் மாற்றங்கள். இதற்கு காரணம் ஆன்மா எனும் ஆற்றலே. இறைநிலை என்பது பிறந்த குழந்தையின் மனநிலை அல்லது ஒரு இறைவன் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என நான் நினைக்கிறேனோ அந்த நிலை.

    ReplyDelete
  24. லூஸிஃபர்20 February 2015 at 23:01

    // முதல் செல் தோற்றம் கீழ்க்கண்டவாறு:
    organic compounds உயிர்வேதிப் பொருட்களின் மீதான ஆன்மாவின் சேர்க்கை முதல் செல் உருவானது.
    (17 February 2015 at 19:29 இல் aanma gnanam சொன்னது)
    இதில் உயிர் ஆற்றல் (பேரான்மா). உயிர்வேதிப் பொருட்களோடு சேருவதுதான் உயிரினத்தின் தோற்றம் என்கிறார். இதிலிருந்து உயிர்வேதிப் பொருளும், பேரான்மாவும் வெவ்வேறு என்றாகிறது
    //அந்த ஆற்றல் பேரண்டம் அல்லது பேரான்மாவின் விரிதல் அல்லது விசையுறு இயக்கம் காரணமாக மீசான்களாக , பைமீசான்களாக , எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களாக . நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களாக இவற்றின் மின்னூட்ட சமனியாக நியூட்ரான்கள் என ஒர் அணு உருவானது. // (18 February 2015 at 19:26 இல் aanma gnanam சொன்னது)
    இதில் உயிர் ஆற்றலே உயிர்வேதிப்பொருள் (அணு) என்கிறார். இதிலிருந்து உயிர்வேதிப்பொருளும், பேரான்மாவும் ஒன்று என்றாகிறது.
    ஆகவே ஜடமும் அதுவே. சித்துவும் அதுவே.
    இரண்டுமே அதுவான பிறகு இங்கு பாவம் ஏது? புண்ணியம் ஏது? சொர்க்கம் ஏது? நரகம் ஏது? எதுவுமே இல்லையே. இதைத்தானே நாங்களும் செவிப்பறை கிழிய கத்திக்கொண்டிருக்கிறோம்.
    ஆகவே ஜடமும் சித்துவும் ஒன்றா? ஆமாம். ஒன்றுதான்.
    ஆகவே ஜடமும் சித்துவும் வேறுவேறா? ஆமாம், வேறுவேறு தான்.
    இது என்ன புதுக் குழப்பம் ?
    -- லூஸிஃபர்

    ReplyDelete
  25. நந்நன்21 February 2015 at 09:42

    //எனது ஆன்மீகம் இதைத்தான் சொல்கிறது.
    இந்தக் கருத்துகள் என்னுடையவை தவிர எந்த மதப்புத்தகத்திலும் இருக்காது.//
    ஏற்கனவே உள்ள ஆன்மீகக் கருத்துகளில் உடன்பாடு இல்லாததால் ஆன்மீக ஞானம் என்பவர் புதிதாக ஆன்மீகக் கருத்துக்களை வளர்த்து வருகிறார். நாம் அவரது ஆன்மீகக் கருத்துக்களுடன் விவாதம் செய்து வருகிறோம். இது புதிது என்பதால் ஆன்மீக ஞனத்தின் ஆன்மீகம் என்று பெயரிட்டுக் கொள்ளலாமா?

    ReplyDelete
  26. //ஏற்கனவே உள்ள ஆன்மீகக் கருத்துகளில் உடன்பாடு இல்லாததால் ஆன்மீக ஞானம் என்பவர் புதிதாக ஆன்மீகக் கருத்துக்களை வளர்த்து வருகிறார்//

    நான் எதையும் வளர்க்கவில்லை. எனது நம்பிக்கைகளை மட்டுமே பகிர்கிறேன். இது எனக்கு சரி அவ்வளவுதான். இதை எல்லோரும் ஏற்கவேண்டும் என நான் கட்டாயப்படுத்தவில்லை. நான் ஆன்ம விழிப்பை பயன்படுத்தி எத்தனை நல்லவிதமாய் செயல்படமுடியுமோ அப்படியே செயல்பட்டு வருகிறேன். நான் நம்பியது எனக்கு சரி என்பதை உணர்த்த மட்டுமே விவாதிக்கிறேன்.

    ReplyDelete
  27. // முதல் செல் தோற்றம் கீழ்க்கண்டவாறு:
    organic compounds உயிர்வேதிப் பொருட்களின் மீதான ஆன்மாவின் சேர்க்கை முதல் செல் உருவானது.
    (17 February 2015 at 19:29 இல் aanma gnanam சொன்னது)
    இதில் உயிர் ஆற்றல் (பேரான்மா). உயிர்வேதிப் பொருட்களோடு சேருவதுதான் உயிரினத்தின் தோற்றம் என்கிறார். இதிலிருந்து உயிர்வேதிப் பொருளும், பேரான்மாவும் வெவ்வேறு என்றாகிறது
    //அந்த ஆற்றல் பேரண்டம் அல்லது பேரான்மாவின் விரிதல் அல்லது விசையுறு இயக்கம் காரணமாக மீசான்களாக , பைமீசான்களாக , எதிர்மின்னூட்டம் பெற்ற எலக்ட்ரான்களாக . நேர்மின்னூட்டம் பெற்ற புரோட்டான்களாக இவற்றின் மின்னூட்ட சமனியாக நியூட்ரான்கள் என ஒர் அணு உருவானது. // (18 February 2015 at 19:26 இல் aanma gnanam சொன்னது)
    இதில் உயிர் ஆற்றலே உயிர்வேதிப்பொருள் (அணு) என்கிறார். இதிலிருந்து உயிர்வேதிப்பொருளும், பேரான்மாவும் ஒன்று என்றாகிறது.
    ஆகவே ஜடமும் அதுவே. சித்துவும் அதுவே//

    எனது கருத்தை மிக சரியாக புரிந்து கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்.

    ReplyDelete
  28. //இது புதிது என்பதால் ஆன்மீக ஞனத்தின் ஆன்மீகம் என்று பெயரிட்டுக் கொள்ளலாமா? //

    முதலில் சொன்னீர்களே புளுகுகிறேன் என்று அதனால் ஆன்மீகப்புளுகு என்று வைத்துக்கொள்ளுங்கள். நந்தனின் மகிழ்ச்சிதான் முக்கியம். பெயரை வைத்து விட்டுத்தான் விவாதிப்பேன் என்றாலும் எனக்கு சம்மதமே. சிறு பிள்ளைகளின் சந்தோஷத்திற்கு நான் எப்பொழுதும் தடை சொன்னதில்லை.

    ReplyDelete
  29. நந்தன் அவர்களே

    உங்களிடம் இருந்து இன்னமும் நிறைய கேள்விகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  30. நந்நன்21 February 2015 at 21:59

    லூஸிஃபர் உங்கள் கருத்துகளின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியுள்ளார். அதுதான் சரி எனபதுபோல் "என் கொள்கையை புரிந்து கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்" என்று கூறியுள்ளீர்கள். முரண்படாக கவதுதான் உங்கள் கொள்கையா?
    உங்கள் விளக்கங்களில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. தொடர் கேளவிகளுடனாக அவகைளப் பார்ப்போம்.
    ஆன்மீகம் பரிணாமவியலைக் கூறவில்லை. நாம் ஆன்மீகத்தைப் பற்றிதான் விவாதிக்கிறோம் என்பதால் புளுகுகிறீர்கள் என்று கூறினேன. புளுகுகளை புளுகு என்றுச் சொல்லாமல் வேறு எப்படிச்சொல்வது.

    கேளவி:
    நாய், பன்றி, மரம், செடி, கொடிகளுக்கெல்லாம் ஆன்மா உண்டா? இல்லையா?

    ReplyDelete
  31. //லூஸிஃபர் உங்கள் கருத்துகளின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டியுள்ளார். அதுதான் சரி எனபதுபோல் "என் கொள்கையை புரிந்து கொண்டவர்களில் நீங்களும் ஒருவர்" என்று கூறியுள்ளீர்கள். முரண்படாக கவதுதான் உங்கள் கொள்கையா?//

    சரியாகவே சொல்லியிருக்கிறார். பேரான்மாவின் விசையுறு இயக்கத்தின் விளைபொருளான ஜடப்பொருளுடன் பேரான்மா ஆற்றல் வடிவிலே இணைவதுதான் உயிர். இதைத்தான் முதலில் இருந்தே சொல்லி வருகிறேன். நீங்கள் முரண்பாடு என சொல்வது எனது கருத்துகளா உங்களின் புரிதலா.

    ReplyDelete
  32. - லூஸிஃபர்21 February 2015 at 23:39

    ஆன்மஞானம் அவர்களே,
    உங்களுடையத் தத்துவம் ஒரு புதிய வார்பு என்று நீஙக்ள் பறைச்சாற்றுகிறீர்கள். ஆனால், இது புதிய தத்துவமும் அல்ல, ஒரு புண்ணாக்கும் அல்ல. தத்துவம் பயின்றவர்களுக்கு அது புதிய மொந்தையில் பழைய கள்தான். உலகளாவிய தத்துவ நூல்களில் இதனை அகநிலைக் கருத்து முதல் வாதம் என்பார்கள். இந்திய தத்துவ நூல்களில் இக்கருத்துகள் பிர்மவாதம், அத்வைதம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலைய தத்துவ அறிஞர்களான சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பெர்கலி முதலியோரும், இஸ்லாமிய சூஃபி அறிஞர்களும் இந்த அகநிலைக் கருத்துமுதல் வாதத்தையே முன்வைத்தார்கள்.
    இந்தியாவில், அகம் பிரம்மாஸ்மி, தத்துவமஸி ஆகிய மந்திர வாக்கியங்கள் விரிவுபடுத்தப்பட்டே உபநிஷத்துகளில் விளக்கப்படுகின்றன. குறிப்பாக பிரகத்தாரண்யகோ உபநிஷதம், பிரம்மம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. இதுவே அடுத்து வந்த, கேரளா - காலடி யில் தோன்றிய ஆதிசங்கரரால் இன்னும் விரிவாக்கப்பட்டு அத்வைத சித்தாந்தமாகப் பரிணமித்தது.
    அக்காலத்திலேயே சார்வாகரும், புத்தரும், மகாவீரரும் இந்த அகநிலைக் கருத்து முதல் வாதத்தை எதிர்த்து முறியடித்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்களுடைய தத்துவங்ளை அவைதீக (வைதீகத்துக்கு எதிரான) தத்துவங்கள் என்று பாரம்பரிய தத்துவ ஆசிரியர்கள் வெறுப்போடு குறிப்பிடுகின்றனர்.
    ஆறு தரிசனங்கள் (ஷட் தரிசனங்கள்) என்று கூறப்படும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், ஆரண்யகம், உபநிஷதம் ஆகியவற்றில் சாங்கியமும் வைசேஷிகமும் இந்த பரமாத்துமா – ஒரே ஆத்மா – என்ற கற்பனையை முறியடித்து வெற்றிகண்டவையே.
    இந்த வரலாற்று உண்மைகளை அறிந்த பிறகும் இன்னும் எத்தனை காலத்துக்கு அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?
    இவைகளையெல்லாம் அறிந்த பிறகும், ‘‘என்னுடைய கொள்கை புதிய கொள்கை, புடலங்காய் கொள்கை” என்று கதைத்துக்கொண்டிருக்கத்தான் போகிறீர்களா? அவ்வாறுதான் என்றால் இந்த விவாதத்தில் நானும் இணைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
    நன்றி
    - லூஸிஃபர்

    ReplyDelete
  33. உங்களிடம் ஒரே ஒரு கேள்வி

    இடி மின்னல் மின்னழுத்தத்தில் ஹைட்ரஜன் அம்மோனியா எல்லாம் சேர்ந்து RNA உருவாகி செல் உருவானது என்றீர்களே இதில் எந்த வேதிப்பொருள் உயிராக மாறியது.

    ReplyDelete
  34. //உங்களுடையத் தத்துவம் ஒரு புதிய வார்பு என்று நீஙக்ள் பறைச்சாற்றுகிறீர்கள்//

    //லூசிபர் அவர்களே இதை நான் எவ்விடத்திலும் எப்பொழுதும் கூறவில்லையே. இட்டுக்கட்டுவது சரியான செயலல்ல.
    இதனை அகநிலைக் கருத்து முதல் வாதம் என்பார்கள். இந்திய தத்துவ நூல்களில் இக்கருத்துகள் பிர்மவாதம், அத்வைதம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மேலைய தத்துவ அறிஞர்களான சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பெர்கலி முதலியோரும், இஸ்லாமிய சூஃபி அறிஞர்களும் இந்த அகநிலைக் கருத்துமுதல் வாதத்தையே முன்வைத்தார்கள்.
    இந்தியாவில், அகம் பிரம்மாஸ்மி, தத்துவமஸி ஆகிய மந்திர வாக்கியங்கள் விரிவுபடுத்தப்பட்டே உபநிஷத்துகளில் விளக்கப்படுகின்றன. குறிப்பாக பிரகத்தாரண்யகோ உபநிஷதம், பிரம்மம் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது//

    இவற்றை உங்கள் மூலமே நான் அறிகிறேன். நான் மிகசாதாரண மனிதன். எனது வார்த்தைகள் முழுக்க எனது சுய அனுபவமேயன்றி வேறு எதுவுமில்லை. நீங்கள் மேலே சொன்ன கருத்துகளின் மூலம் நீங்கள் ஆன்மீகம் என எதை புரிந்துள்ளீர்களோ அதை நான் பேசவில்லை. எனது கருத்துகளை தாங்கள் விமர்சிப்பதை நான் வரவேற்கிறேன்.அடுத்தவர் கருத்தை என்னிடம் விவாதிக்க வேண்டாம். ஆன்மீகம் என்ற பதத்தை நான் பயன்படுத்துவது அது ஆன்மாவைப்பற்றி பேசுகிறது என்ற அர்த்தம் கொடுக்கவே அதாவது புரிதலுக்காக.

    ReplyDelete
  35. அடர்ந்த காடு
    அங்கே ஒரு மனிதனும் ஒரு புலியும்
    ஒரு மானும்
    பசி தீர புல்லைத்தேடி மானின் நடை
    பசி தீர இரையைத்தேடி புலி
    மனிதன் புலியின் கண்ணில் படவில்லை.
    மானைக்கண்டு அதனைக் கொன்று
    உணவாய் தின்றது புலி.
    இந்தச் செயலில் பாவம் என எதுவும் உண்டா?
    இல்லை
    அதன் பின்னர் புலியும் மனிதனும்
    எதிர் எதிரே
    புலிக்கு பசியில்லை எனவே
    மனிதனைப் பொருட்படுத்தவில்லை.
    மனிதன் பசியில் இருந்தாலும்
    புலி அவனுக்கு இரையில்லை.
    இருந்தும் புலியின் மீதான பயத்தில்
    அதனைக் கொன்றான். பின்னர்
    புலியின் தோலை வணிக நோக்கில்
    எடுத்துக் கொண்டான்.
    இந்தச் செயலில் பாவம் எது?
    அதுவே மனிதனின் செயல்.
    அவன் அறியாமையா ,
    இல்லை பொருளாசையா.

    ReplyDelete
  36. நந்தன் அவர்களே

    E=MC×C

    என்ற சார்பியல் கொள்கை கூறுவதில் தாங்கள் நிறை× திசைவேகம் ×திசைவேகம் என்ற பக்கத்தை பார்க்கிறீர்கள். நான் ஆற்றல் என்பதை பார்க்கிறேன். இரண்டும் ஒன்றென்பது இருவரும் அறிந்ததே.

    ReplyDelete
  37. குவாண்டம் அறிவியல் வரும் வரை ஆற்றல் அலைகளாகத்தான் பரவும் என அறிவியல் நம்பியது. குவாண்டம் கொள்கைதான் மாபெரும் அறிவியல் வளர்ச்சியை தந்தது. அதில் நான் அலைவடிவ ஆன்ம ஆற்றலை பற்றி பேசுகிறேன். நீங்கள் அதன் மற்றொரு வடிவான துகள்களைப் பற்றி பேசுகிறீர்கள்.

    ReplyDelete
  38. //சொர்க்கம் ஏது? நரகம் ஏது? எதுவுமே இல்லையே. இதைத்தானே நாங்களும் செவிப்பறை கிழிய கத்திக்கொண்டிருக்கிறோம்.//

    சொர்க்கம் என்பதும் நரகம் என்பதும் மனிதனுக்கு மறுமை உண்டு என கண்ணுக்கு தெரியாத வேறு உலகை காட்டி ஆசை காட்டும் அல்லது பயமுறுத்தும் ஒரு மலிவான யுக்தி. மதவியாதிகள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்த கைக்கொள்ளும் ஒரு தந்திரம். அதனை ஆன்மாவிற்கான வாழ்க்கை என வியாக்கியானம் கொடுப்பர்.அத்தனையும் கட்டுக்கதை .

    சொர்க்கம் நரகம் இரண்டையும் நாம் நமது
    வாழ்நாளுக்கு பின்தான் அடையமுடியும் என ஒரு மூடக்கருத்தை சொல்வார்.

    உண்மையில் இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை உண்டா என்றால் இல்லை என்பதே பதில். உண்மையில் நம்மை நினைவு கூறத்தக்க ஏதேனும் நன்மையோ சிந்தனையோ வேண்டுமானால் நாம் நமது வாழ்க்கையின் அடையாளமாய் விட்டுச்செல்லலாம்.

    இறப்பு என்பது மனித இயக்கம் நின்று போதலே.

    ReplyDelete
  39. நந்நன்22 February 2015 at 22:37

    //இடி மின்னல் மின்னழுத்தத்தில் ஹைட்ரஜன் அம்மோனியா எல்லாம் சேர்ந்து RNA உருவாகி செல் உருவானது என்றீர்களே இதில் எந்த வேதிப்பொருள் உயிராக மாறியது.//

    உயிர் செல்லில் உள்ள அனைத்து வேதிப்பொருள்களும் ஒன்றிணைந்து இருந்தால்தான் அது உயிராக இருக்கும். தனித்த எந்த வேதிப்பொருளும் உயிராக இல்லை. பொதுவாக வளர்ச்சியுள்ள பொருளை நாம் உயிர் எனக் கூறுகிறோம். அந்த அடிப்படையில் தனித்த வேதிப்பொருள் எதுவும் உயிராக இல்லை.(அதில் இயக்கம் உள்ளது என்பது வேறு. அது அறிவியலுக்குரியது. தத்துவத்திற்கு வளரும் பொருள் மட்டுமே உயிருள்ளவைகள்)

    புரிதல் கோளாரா முரண்பாடா என்பதை பிறகு பார்ப்போம்.

    எனது அடுத்த கேள்வி;
    விதைக்கு உயிருண்டா இல்லையா?

    ReplyDelete

  40. //உயிர் செல்லில் உள்ள அனைத்து வேதிப்பொருள்களும் ஒன்றிணைந்து இருந்தால்தான் அது உயிராக இருக்கும். தனித்த எந்த வேதிப்பொருளும் உயிராக இல்லை. பொதுவாக வளர்ச்சியுள்ள பொருளை நாம் உயிர் எனக் கூறுகிறோம். அந்த அடிப்படையில் தனித்த வேதிப்பொருள் எதுவும் உயிராக இல்லை//

    அப்படியெனில் உயிர் செல்லில் என்னென்ன வேதிப்பொருள் உண்டோ அத்தனையும் அதே விகிதத்தில் ஒன்று சேர்த்து ஒரு உயிர்செல்லை உருவாக்க முடியும் என சொல்கிறீர்கள். அறிவியல் இந்த முறையை பயன்படுத்தி ஏதேனும் உயிர் செல்லை உருவாக்கியுள்ளதா?

    ReplyDelete
  41. //புரிதல் கோளாரா முரண்பாடா என்பதை பிறகு பார்ப்போம்.//

    வார்த்தைப்பிழைகள் சிலநேரம் முரண்பாடாக தெரிந்தாலும் கருத்து முரண்பாடு இருந்தால் நான் சொன்னது தவறு என நீங்கள் நிரூபிக்கும் பொருட்டு எனது பிழையை ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்வதில் எனக்கு எந்த தடையும் இல்லை.

    ReplyDelete
  42. ஒரு அணுவை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.

    ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.

    இரண்டு கருத்துகளுமே அறிவியல் உண்மைகள்.

    அணு ஆற்றலாக மாறும் . ஆற்றல் அணுவாக மாறும். அணுவும் ஆற்றலும் இணைந்தால் உயிரினமாக மாறும். அந்த ஆற்றல் ஆன்ம ஆற்றல்.

    அணு முதலா ஆற்றல் முதலா என்ற கேள்வி வந்தால் ஆற்றல்தான் முதல் என்பதே பதில்.

    அந்த ஆற்றல் நம்முள் ஆன்மாவாய் உள்ளது. ஆன்ம ஆற்றலை எப்படி உணரலாம்?
    ஆன்மா உள்ளதா என ஆய்ந்து அறிந்து நம்புங்கள். ஆன்மா எதுவென்பதை உணரலாம். பின்பே ஆன்ம ஆற்றலை உணரலாம்.
    அதற்கு முதல்படி மனதை ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

    பின்னர் ஆன்ம ஆற்றலை எண்ண அலைகளாய் வெளிப்படுத்துதல்.அதற்கு நீங்கள் வெற்று மனதில் ஒருஒருசூழலை
    உருவாக்கும் வார்த்தைகளை தங்கள் மொழியிலேயே உச்சரியுங்கள். உதாரணத்திற்கு உங்கள் நண்பரொருவரின் நலம் நாடும் பொருட்டு அவருக்கு இன்னல் தீரவேண்டும் என்று உச்சரியுங்கள். ஆழ்நிலை தியானத்தில் சட்டென கவனம் மாறும் வரை உச்சரியுங்கள். அந்த நிகழ்வின் பின் நிகழ்வுகளை கவனியுங்கள்.ஆன்ம ஆற்றலின் வலிமையை நீங்களே உணர்வீர்கள். இது நிகழ்ந்த பின் ஆன்மாவின் விழிப்புற்ற நிலையில் உங்கள் செயல்பாடுகளின் மாற்றங்களை காணுங்கள்.

    ReplyDelete
  43. நந்நன்23 February 2015 at 22:55

    //அப்படியெனில் உயிர் செல்லில் என்னென்ன வேதிப்பொருள் உண்டோ அத்தனையும் அதே விகிதத்தில் ஒன்று சேர்த்து ஒரு உயிர்செல்லை உருவாக்க முடியும் என சொல்கிறீர்கள். அறிவியல் இந்த முறையை பயன்படுத்தி ஏதேனும் உயிர் செல்லை உருவாக்கியுள்ளதா?//
    நல்ல கேள்விதான். இதற்கு இப்பொழுது பதில் சொல்லப்போனால் விவாதம் திசை திரும்பிவிடும். ஆனாலும் விவாதத்தினூடாக இதற்கும் பதில் சொல்கிறேன்.

    எனது அடுத்த கேள்வி:
    முறித்துப்போட்ட முருங்கை மரக்கிளைக்கு உயிருண்டா?

    ReplyDelete
  44. அது இறக்கும் வரை உயிர் உண்டு.

    ReplyDelete
  45. //நல்ல கேள்விதான். இதற்கு இப்பொழுது பதில் சொல்லப்போனால் விவாதம் திசை திரும்பிவிடும். ஆனாலும் விவாதத்தினூடாக இதற்கும் பதில் சொல்கிறேன்./

    ஆமாம் , இல்லை ஏதாவது ஒரு பதில் போதும். உங்கள் பதிலை விவாதிக்க மாட்டேன்.

    ReplyDelete
  46. ஆனந்த் சாகர்25 February 2015 at 09:19

    ஆன்ம ஞானம்,

    //உண்மையில் இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை உண்டா என்றால் இல்லை என்பதே பதில்.//

    இறப்பு என்ற ஒன்று இல்லை. வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை எப்பொழுதும் தொடர்ந்துகொண்டே இருப்பது, நிரந்தரமானது,முடிவில்லாதது. உடலை மட்டும் நாம் மாற்றிக்கொள்கிறோம்.

    ReplyDelete
  47. ஆனந்த் சாகர்25 February 2015 at 09:26

    ஆன்ம ஞானம்,

    //இறப்பு என்பது மனித இயக்கம் நின்று போதலே.//

    உடலைவிட்டு ஆன்மா நிரந்தரமாக பிரிந்து செல்லும்பொழுது உடலின் இயக்கம் நின்றுவிடுகிறது. இதைதான் இறப்பு என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் நாம் ஒருபோதும் இறப்பதே இல்லை. ஏனெனில் நாம் அந்த உடல் அல்ல, அதற்குள் இருக்கும் ஆன்மாவே நாம். ஆன்மாவிற்கு அழிவில்லை.

    ReplyDelete
  48. ஆனந்த் சாகர்25 February 2015 at 09:32

    ஆன்ம ஞானம்,

    //எனது கொள்கைகள் அத்வைதத்தின் பிரிவு என நான் எப்பொழுதும் சொல்லவில்லை. தவிர எனக்கு அத்வைதத்தை பற்றி முழுமையாகத்தெரியாது.//

    நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து எழுதுவதாக சொல்லும் கருத்துக்கள் அத்வைத கருத்துக்களே. நமக்கு முன் இருந்த , தற்காலத்திலும் இருக்கிற பல ஆன்மீக ஆசான்கள் ஆன்ம உண்மைகளை அறிந்து சொன்ன கருத்துக்கள்தான் அத்வைதம். அத்வைதமே உண்மையான ஆன்மீகத்தை சொல்கின்றது. அத்வைதம் என்றால் இரண்டல்ல என்று பொருள். அதாவது எல்லாமுமாக இருப்பது ஒரே ஆன்மாதான் என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை கருத்து.

    ReplyDelete
  49. //இறப்பு என்ற ஒன்று இல்லை. வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. வாழ்க்கை எப்பொழுதும் தொடர்ந்துகொண்டே இருப்பது, நிரந்தரமானது,முடிவில்லாதது. உடலை மட்டும் நாம் மாற்றிக்கொள்கிறோம். //

    இந்தக் கருத்து ஆன்மா தனித்து எண்ணங்களுடன் உலவும் என்பது போல் உள்ளதே.ஏன் அதே உடலில் இருப்பதை விட்டு அடுத்த உடல் செல்கிறது. மேலும் பல பிறவிக் கொள்கையை ஆதரிப்பதாக உள்ளது.
    முதுமையின் காரணமாக இறந்தால் அந்த உடல் தகுதியற்றது என்ற முடிவுக்கு வரலாம். சிறு வயதினர் மரணத்தை என்னவென்று சொல்வது. வெளியேறிய ஆன்மா வேறு உடல் தேடுவதை விட அதே உடலில் நுழையலாமே. ஆன்மாவை அற்புதப் பொருளாக எண்ணுவது மூடநம்பிக்கைக்கே வழிவகுக்கும். இதை என்னுடைய பாமரத்தனமாக கேள்விகளே.
    நான் ஆன்மாவை காற்றைப் போல நீரைப் போல ஒரு அத்தியாவசியமான ஆற்றலாகவே கருதுகிறேன். இருக்கும் ஒரு பிறப்பில் அந்த ஆன்ம விழிப்பை கொண்டு மனித குலத்திற்கு என்ன நன்மை செய்யலாம் என்பதே. எனது நோக்கமாக உள்ளது.

    ReplyDelete
  50. ஆனந்த் சாகர்26 February 2015 at 11:45

    @ஆன்ம ஞானம்,

    //இந்தக் கருத்து ஆன்மா தனித்து எண்ணங்களுடன் உலவும் என்பது போல் உள்ளதே.//

    ஆம், ஒற்றை ஆன்மா தனித்தனி ஆன்மாவாகவும் இயங்குகிறது. ஒவ்வொரு தனி ஆன்மாவுக்கும் சுதந்திரம்(free will) கொடுக்கப்பட்டுள்ளது.

    //ஏன் அதே உடலில் இருப்பதை விட்டு அடுத்த உடல் செல்கிறது.//

    ஒவ்வொரு முறையும் புது அனுபவத்தை அனுபவிப்பதற்காக ஒவ்வொரு ஆன்மாவும் உடல்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன.

    // மேலும் பல பிறவிக் கொள்கையை ஆதரிப்பதாக உள்ளது.//

    எல்லா ஆன்மாக்களும் தொடர்ந்து பிறவி எடுத்துக்கொண்டே இருக்கின்றன.

    //முதுமையின் காரணமாக இறந்தால் அந்த உடல் தகுதியற்றது என்ற முடிவுக்கு வரலாம். சிறு வயதினர் மரணத்தை என்னவென்று சொல்வது.//

    ஆன்மா வயதை பார்ப்பதில்லை. ஒரு உடலில் இதுவரை பெற்ற அனுபவம் போதும் என்று ஆன்மா முடிவு செய்தவுடன் அந்த உடலைவிட்டு அது நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது.

    // வெளியேறிய ஆன்மா வேறு உடல் தேடுவதை விட அதே உடலில் நுழையலாமே.//

    ஒரு உடலில் பெற்ற அனுபவம் போதும் என்று முடிவு செய்த பிறகுதான் ஆன்மா அந்த உடலைவிட்டு நிரந்தரமாக வெளியேறுகிறது. எனவே அதே உடலில் அந்த ஆன்மா மறுபடியும் நுழையாது.

    // ஆன்மாவை அற்புதப் பொருளாக எண்ணுவது மூடநம்பிக்கைக்கே வழிவகுக்கும்.//

    ஆன்மா அற்புதமானதுதான். அது எல்லையற்ற ஆற்றலாக இருக்கிறது. இல்லாத ஒன்றை நம்புவதுதான் மூடநம்பிக்கை. ஆன்மா தான் விரும்பும் எதையும் படைக்கும் சக்திமிக்கது. எனவே அதை பொருத்தவரை மூடநம்பிக்கை என்று எதுவும் இல்லை.

    // இதை என்னுடைய பாமரத்தனமாக கேள்விகளே. //

    உங்கள் கேள்விகளை பாமரத்தனம் என்று நான் நினைக்கவில்லை.

    //நான் ஆன்மாவை காற்றைப் போல நீரைப் போல ஒரு அத்தியாவசியமான ஆற்றலாகவே கருதுகிறேன்.//

    ஆன்மாவே நீராகவும் காற்றாகவும் இன்னும் பிற அனைத்தாகவும் இருக்கிறது.

    // இருக்கும் ஒரு பிறப்பில் அந்த ஆன்ம விழிப்பை கொண்டு மனித குலத்திற்கு என்ன நன்மை செய்யலாம் என்பதே. எனது நோக்கமாக உள்ளது.//

    உங்கள் நல்ல நோக்கத்திற்கு எனது வாழ்த்துக்கள். தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று கருதி கூறுகிறேன். நீங்கள் சொல்லும் ஆன்ம விழிப்பை இன்னும் அதிகம் பெற்று இன்னும் பல ஆன்மீக உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  51. //நீங்கள் சொல்லும் ஆன்ம விழிப்பை இன்னும் அதிகம் பெற்று இன்னும் பல ஆன்மீக உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.//

    எனக்கு ஏற்புடையது ஏற்பல்லாதது என ஒருபக்கம் இருந்தாலும் ஆன்மாவைப் பற்றி மேலதிகம் அறிந்து கொள்ள தங்களிடம் பிறவிக் கொள்கை பற்றி சற்று விளக்கம் கேட்கலாமா ? தங்களுக்கு சம்மதம் எனில் சில ஐயங்களை கேட்கிறேன்.

    ReplyDelete
  52. நந்தன்26 February 2015 at 21:13

    முறித்துப்போட்ட முருங்கை மரக்கிளைக்கு உயிருண்டா? என்ற கேள்விக்கு அது இறக்கும் வரை உயிர் உண்டு என்று பதில் சொல்லியுள்ளீர்கள். எல்லா உயிர்களுக்கும் அது இறக்கும் வரை உயிர் உண்டுதான். முறித்துப்போட்ட முருங்கை மரக்கிளை எந்த நிலை வரை உயிருடன் இருக்கும்.

    (குறிப்பு: மூன்று நாளாக இணைய இணைப்பு வாங்காததால் காலதாமதமாக வந்துள்ளேன்.மன்னிக்கவும்)

    ReplyDelete
  53. நீங்கள் முருங்கை மரத்திற்கு உயிர் உண்டு என ஏற்பீர்கள்தானே. அந்த முருங்கை மரத்திலிருந்து முறிக்கப்பட்ட அந்த கணத்தில் அதற்கு உயிர் உண்டு. பின்னர் முருங்கை மர வீர்கள் மூலம் அதற்கு கிடைக்கக்கூடிய நீர் மற்றும் சத்துகள் படிப்படியே குறைய ஆரம்பிக்கும்.அது மரணத்தை விளைவிக்கும். அந்த நிகழ்வுகளின் இடையில் அதுமண்ணில் நட்டப்பட்டால் அது உயிர் பிழைத்து மீண்டும் துளிர்க்கும். அது மரணித்த பிறகு நட்டப்பட்டால் அது துளிர்க்காது. இதை அர்த்தப்படுத்தியே அதற்கு இறக்கும் வரை உயிருண்டு என கூறினேன். முருங்கை மரக்கிளை முறிக்கப்பட்ட கணத்தில் உயிர் உண்டு பின்னர் தனது உயிரை இழக்க ஆரம்பிக்கிறது.

    ReplyDelete
  54. மேற்சொன்னவை முருங்கையின் பண்புகளை ஒத்த மரங்களுக்கே பொருந்தும். சிலமரக்கிளைகள் முறிக்கப்பட்ட உடனேயே மரித்துப்போகலாம். எனவே அவற்றை மீண்டும் நட்டினாலும் துளிர்க்காது. ஏனெனில் வெட்டுப்பட்ட உடனேயே அவை ஆன்ம ஆற்றலை இழந்து விடும். முருங்கை போன்ற மரங்கள் அவ்வாறின்றி முறிக்கப்பட்ட பின்னும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆன்ம ஆற்றலை இழக்காதிருக்கின்றன.

    ReplyDelete
  55. ஆனந்த் சாகர்27 February 2015 at 10:20

    ஆன்ம ஞானம்,

    //எனக்கு ஏற்புடையது ஏற்பல்லாதது என ஒருபக்கம் இருந்தாலும் ஆன்மாவைப் பற்றி மேலதிகம் அறிந்து கொள்ள தங்களிடம் பிறவிக் கொள்கை பற்றி சற்று விளக்கம் கேட்கலாமா ? தங்களுக்கு சம்மதம் எனில் சில ஐயங்களை கேட்கிறேன்.//

    உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு பதில் தெரிந்தால் கூறுகிறேன்.

    ReplyDelete
  56. நந்தன்27 February 2015 at 10:29

    @ஆன்ம ஞானம்.
    விதைக்கு உயிர் உண்டு என்று கூறியுள்ளீர்கள். எனது சட்டைப்பையில் இரண்டு கொண்டக்கடலை (விதை) உள்ளது. ஆனல் வளரவில்லை. உயிர் இருந்தால் அது வளரவேண்டுமே! ஏன் வளரவில்லை?

    ReplyDelete
  57. மண் மற்றும் நீர் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி காணமுடியும். ஆன்ம ஆற்றல் அதன் உள் ஆற்றலாக உள்ளது. அதன் வளர்ச்சி மற்றும் முளைத்தல் புறக்காரணிகளின் ஜடப்பொருள் சேர்க்கையே. உமது பையில் இருந்தாலும் அது உயிரோடு இருக்கும். தகுந்த சூழ்நிலையில் தனது உயிர்மையை வெளிப்படுத்தும். ஆன்மா ஆற்றலானது.
    வளர்சிதை மாற்றமே வளர்ச்சியாகும். மண்ணில் நட்டவுடன் முளைக்கும் தன்மையே உயிருடன் இருக்கிறது என்பதன் ஆதாரம்.

    ReplyDelete
  58. ஆனநத் அவர்களே

    ஆன்மா தனித்த எண்ணங்கள் கொண்டது எனில் உடலை விட்டு பிரிந்தபின்னும் அது எண்ணங்களோடு இருக்கும் எனில் பல துர்மரணங்களுக்கு மற்றும் கொலைகளுக்கு விடை கிடைத்திருக்குமே?
    அப்படி எதுவும் உண்டா?

    ReplyDelete
  59. ஆனந்த் சாகர்28 February 2015 at 10:18

    @ஆன்ம ஞானம்,

    //ஆன்மா தனித்த எண்ணங்கள் கொண்டது எனில் உடலை விட்டு பிரிந்தபின்னும் அது எண்ணங்களோடு இருக்கும் எனில் பல துர்மரணங்களுக்கு மற்றும் கொலைகளுக்கு விடை கிடைத்திருக்குமே?
    அப்படி எதுவும் உண்டா?//

    விடை இருக்கிறது. நேரிடையாக கேள்வி கேளுங்கள். பதில் கூறுகிறேன்.

    ReplyDelete
  60. ஆனந்த் சாகர்28 February 2015 at 10:23

    @ஆன்ம ஞானம்,

    //ஆன்மா தனித்த எண்ணங்கள் கொண்டது எனில்...//

    ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    ReplyDelete
  61. ஆனந்த் சாகர்28 February 2015 at 11:13

    @லூசிஃபர்,

    //அக்காலத்திலேயே சார்வாகரும், புத்தரும், மகாவீரரும் இந்த அகநிலைக் கருத்து முதல் வாதத்தை எதிர்த்து முறியடித்திருக்கிறார்கள்.//

    அப்படியெல்லாம் அவர்கள் ஒன்றும் அத்வைத உண்மைகளை முறியடிக்கவில்லை. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று கூறி அவர்கள் தங்கள் அறியாமையைத்தான் பறைசாற்றிவிட்டு போயிருக்கிறார்கள். ஆதி சங்கரர் ஆத்மா இல்லை என்ற புத்தரின் கொள்கையை முறியடித்திருக்கிறார்.

    // ஆகவேதான் அவர்களுடைய தத்துவங்ளை அவைதீக (வைதீகத்துக்கு எதிரான) தத்துவங்கள் என்று பாரம்பரிய தத்துவ ஆசிரியர்கள் வெறுப்போடு குறிப்பிடுகின்றனர். //

    வைதீகம் ஆன்மா உண்டு என்கிறது. அது இல்லை என்று கூறுகிற தத்துவங்கள் அவைதீகம் (வைதீகமற்றது) என்று குறிப்பிடுவது எப்படி வெறுப்பு ஆகும்? உங்கள் பின்னூட்டத்தில்தான் அதிக வெறுப்பையும் கோபத்தையும் பார்க்கிறேன்.

    //ஆறு தரிசனங்கள் (ஷட் தரிசனங்கள்) என்று கூறப்படும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், ஆரண்யகம், உபநிஷதம் ஆகியவற்றில் சாங்கியமும் வைசேஷிகமும் இந்த பரமாத்துமா – ஒரே ஆத்மா – என்ற கற்பனையை முறியடித்து வெற்றிகண்டவையே.//

    ஒரே ஆத்மா என்பது கற்பனையல்ல. அது நிஜம். அது மட்டுமே நிஜம். மற்ற எல்லாமே வெறும் மாயைதான்.

    ReplyDelete
  62. நந்தன்28 February 2015 at 13:22

    . // ஜடப்பொருளுடன் ஆன்மா இணைவதால் உயிர் உண்டாகிறது. முதல் செல் மட்டுமே அவ்வாறு உண்டானது. பிற உயிரினங்கள் அதிலிருந்து பரிணாமம் அடைந்தன.) // இது உங்கள் கூற்று.
    இப்பொழுது விதை என்ற ஒரு உயிர் பொருளுக்கு //மண் மற்றும் நீர் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி காணமுடியும். ஆன்ம ஆற்றல் அதன் உள் ஆற்றலாக உள்ளது.// என்று சொல்லுகிறீர்கள்.

    எந்த ஜடப்பொருளுடனும் ஆன்மா இணைந்து விட்டால் அது அந்த ஜடப்பொருளின் உள் ஆற்றலாகத்தான் இருக்கும். அனைத்து உயிர்களுக்கும் இதே நிலைதான். அதனால் விதையிலும் மட்டும் அது உள் ஆற்றலாக இருக்கவில்லை. ஆனால் உயிர்கள் வளர்கின்றன, இயங்குகின்றன. விதை மட்டும், மண் மட்டும் நீர் இணைந்தால் தான் வளர்கிறது என்றால் ஆன்ம ஆற்றல் இயங்க மண் மற்றும் நீரின் சக்தி தேவை என்றாகிறது. ஜடப்பொருளுடன் ஆன்மா இணைந்தே இன்னும் சொல்லப்போனால் RNA-வாக இருந்தாலும்கூட ஆன்மா இல்லாமல் உயிராகாது என்பது உங்கள் கருத்து. ஆன்மாதான் "முதல்" ஆற்றலும் கூட. அப்படி இருக்க ஆன்மா உள்ள விதையை உயிர்பிக்க ஆன்மாவிற்கு மண்ணும் நீரும் ஏன் தேவைப்படுகிறது.?

    ஒரு விதையை எடுத்து ஒரு சில நாட்கள் ஈரத்துணியில் சுற்றி வைத்தாலே அது முளைக்கத் தொடங்கிவிடும். அதே சமயம் அதனை ஒரு கோப்பை நீரில் ஊரவைத்தால் முளைக்காது. உப்பலாகி இரண்டு மூன்று தினங்களில் ஒரு வித நாற்றம் எடுக்கத் தொடங்கி விடும். அதாவது அழுகத் தொடங்குகிறது என்று பொருள். இங்கு மண் அதற்குத் தேவைப்படவில்லை. தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மட்டுமே மண் (உணவுகளைப் பெற) தேவைப்படுகிறது.

    அந்த விதையை வேறு ஒரு சோதனைக்கு உட்படுத்துவோம். செடியிலிருந்து எடுத்ததும் அதனை காயப்போடாமல் அப்படியே சாக்குப் பையில் கட்டிவைப்போம். அது என்னவாகிறது. பூசனம் பிடித்து கெட்டுப்போகிறது.

    காயவைக்காவிட்டால் கெட்டுப்போகிறது என்பதால் விரைவாக காயவைக்க அடுப்பில் ஒரு சட்டியை வைத்து வறுத்து எடுப்போம். (அதிக வெப்பத்தால்) அப்பொழுதும் அந்த விதை, நீரை சேர்த்தாலும் மண்ணை சேர்தாலும் முளைப்பதில்லை.

    முருங்கைக் கிளை நிலை வேறுவிதமாக உள்ளது. அது காய்துவிட்டால் நீரும் மண்ணும் சேர்ந்தாலும் முளைப்பதில்லை. அதுபோல முருங்கைக்கிளைய ஒரு குளத்தில் மூழ்க வைத்து ஊரவைத்தாலும் முளைப்பதில்லை. மண்ணில் ஊன்றி நீரைச்சேர்த்தால் மட்டுமே வளர்கிறது.

    இன்னும் சில உதாரணங்களைப் பார்ப்போம். நீர்தாவர விதைகள் மண்ணில் முளைப்பதில்லை. அது நீரில் மூழ்கி இருந்தால் மட்டுமே முளைக்கிறது, வளர்கிறது. நன்னீர் தாவரங்கள் கடல் நீரில் முளைப்தில்லை. கடல்நீர்த் தாவரங்கள் நன்னீரில் முளைப்பதில்லை. மீனினங்களும் அப்படியே. கோழி முட்டை தகுந்த வெப்பநிலையில் மட்டும் குஞ்சு பொரிக்கிறது. மீன் முட்டையோ நீரிருந்தால் மட்டுமே குஞ்சு பொரிக்கிறது. இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைக் காட்டலாம்.

    ஆன்மாதான் அனைத்திற்கும் உயிர் கொடுக்கிறது என்கிறீரகள். ஆனால் ஆன்மாவை (உள் ஆற்றலை) இயக்க மண் மற்றும் நீர் என்ற ஜடப்பொருள்கள் தேவை என்றாகிறது.. ஜடப்பொருள்கள் வளர்ந்தால்தான் அதற்கு உயிர் உண்டு என்று பொருள். ஒரு செல் உயிரியையே எடுத்துக்கொள்வோம். அது இயங்காவிட்டால் அதற்கு உயிர் உண்டென சொல்ல மாட்டோம். அப்படியானால் ஆன்மாவின் நிலைதான் என்ன? ஜடப்பொருள்களுக்கு அது உயிர் வழங்குகிறதா? அல்லது ஜடப்பொருள்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் ஆன்மாவை இயக்குகிறதா? விதை ஏறெகனவே உள்ள ஒரு உயரிடமிருந்து பிரிந்து வந்த ஒரு உயிரிதான் என்பதை மறக்கவேண்டாம்.

    குறிப்பு; உயிர் உண்டாக மண் மற்றும் நீர் மட்டுமல்ல. வேறு வேறு சூழ்நிலைகளும் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன்.

    ReplyDelete
  63. //ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. //

    ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லையெனில் பரிணாம வளர்ச்சி என்பதே இல்லாமல் போயிருக்கும். நான் கேட்பது மனித உடலை விட்டு பிரிந்த பின் அதற்கு தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் உண்டா?
    அப்படி உண்டெனில் உடலை விட்டு பிரிவதிலிருந்து அதன் நிகழ்வுகளை சற்று விளக்கலாமா?

    Reply

    ReplyDelete
  64. //இப்பொழுது விதை என்ற ஒரு உயிர் பொருளுக்கு//

    உயிர் (அ) ஆன்மா+ பொருள்= விதை

    மீண்டும் மீண்டும் ஆன்மாவை தன்னுள்ளே கொண்டுள்ள ஜடப்பொருள்களின் வளர்சிதை மாற்றத்தையே நீங்கள் ஆன்மாவை விளக்க எடுத்துக் கொள்வது ஏன். வெறும் ஜடப்பொருள்களின் வளர்ச்சியை நிகழ்த்துவதே ஆன்மாதான் என உணருங்கள் .

    தகுந்த சூழ்நிலையில் மட்டுமே உயிரினங்கள் பிறக்கும் . வாழும் . வளரும். இது இயற்கையின் விதி. அனைத்துமான ஆன்மாவே தனது விதியை மீறுமா?

    தங்களின் வாதப்படி உயிரினம் என்பது இயங்கும் வளரும் என்கிறீர்கள். உயிரினம் என்பது உணவு எடுத்துக்கொள்வது கழிப்பது இனப்பெருக்கம் செய்வது. இவை மூன்றும்
    தாங்கள் சொன்ன இயக்கம் வளர்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து ஐந்து குணநலன்கள் அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது. இதில் இயக்கமும் வளர்ச்சியும் ஜடப்பொருள்களுக்கும் உண்டு. மற்ற மூன்றும் உயிரினங்களுக்கு மட்டுமே உண்டு. இந்த மூன்றில் இனப்பெருக்கமே முதன்மையானது. அதற்கு உணவு தேவை. போதிய சத்து போக மீதம் கழிவாகும். இதுதான் ஒரு செல் உயிரியிலிருந்து பலசெல் உயிரி வரை நடக்கும் நிகழ்வுகள். இதன் பின்தான் அவற்றின் வளர்ச்சியும் இயக்கமும்
    இதில் இனப்பெருக்கம் என்பதே ஆன்ம நிகழ்வு ஆன்மா அதனை உயிரினம் என உறுதி செய்கிறது..

    எளிதாகச்சொன்னால் விதையை உயிர்ப்பொருளாக வெளிப்படுத்தியதோடு ஆன்மா தனது இருப்பை உறுதி செய்கிறது. அந்த உயிர்ப்பொருளில் ஆன்மா தங்குவதும் வெளியேறுவதும் புறக்காரணிகளால் அமையும். ஆற்றல் உள்ளே இருப்பதால்தான் தகுந்த சூழ்நிலை அமைந்தால் அந்த விதை விருட்சமாகிறது.


    ReplyDelete
  65. ஆனந்த் சாகர்1 March 2015 at 14:12

    @ஆன்ம ஞானம்,

    //ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லையெனில் பரிணாம வளர்ச்சி என்பதே இல்லாமல் போயிருக்கும்.
    நான் கேட்பது மனித உடலை விட்டு பிரிந்த பின் அதற்கு தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் உண்டா?//

    உடலுடன் அல்லது வேறு எந்த ஜடப்பொருளுடனும் சேர்ந்து இருந்தால்தான் ஆன்மாவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஆன்மா தனித்து இயங்கக்கூடியது. அது பூத உடல் எடுப்பது ஜட உலக அனுபவ்ம் பெறுவதற்குத்தான்.

    //அப்படி உண்டெனில் உடலை விட்டு பிரிவதிலிருந்து அதன் நிகழ்வுகளை சற்று விளக்கலாமா?//

    நாம் ஆன்ம உலகில் இருந்து இந்த ஜட உலக அனுபவம் பெறுவதற்காக வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறோம். நாம் இந்த ஜட உடல் அல்ல. மனித அனுபவத்தை, ஜட உலக அனுபவத்தை அனுபவிக்கின்ற ஆன்ம படைப்புகள்தான் நாம். நம்முடைய உண்மையான இல்லம் ஆன்ம உலகமே, இந்த ஜட உலகம் அல்ல. ஆன்மாவாகிய நாம் நம்முடைய தற்காலிக ஜட உடலைவிட்டு நிரந்தரமாக பிரிந்தவுடன் நம்முடைய இல்லமான ஆன்ம உலகத்திற்கு செல்கிறோம். பிறகு கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் இந்த ஜட உலகத்திற்கு வருகிறோம். இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
  66. //உடலுடன் அல்லது வேறு எந்த ஜடப்பொருளுடனும் சேர்ந்து இருந்தால்தான் ஆன்மாவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறீர்களா?//


    நிச்சயமாக

    //நாம் ஆன்ம உலகில் இருந்து இந்த ஜட உலக அனுபவம் பெறுவதற்காக வந்துவந்து போய்க்கொண்டிருக்கிறோம். நாம் இந்த ஜட உடல் அல்ல. மனித அனுபவத்தை, ஜட உலக அனுபவத்தை அனுபவிக்கின்ற ஆன்ம படைப்புகள்தான் நாம். நம்முடைய உண்மையான இல்லம் ஆன்ம உலகமே, இந்த ஜட உலகம் அல்ல. ஆன்மாவாகிய நாம் நம்முடைய தற்காலிக ஜட உடலைவிட்டு நிரந்தரமாக பிரிந்தவுடன் நம்முடைய இல்லமான ஆன்ம உலகத்திற்கு செல்கிறோம். பிறகு கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் இந்த ஜட உலகத்திற்கு வருகிறோம். இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது//

    இந்தக்கருத்துகளின் படி ஒரு ஆன்மா ஆன்மிக உலகில் இருந்து ஜட உலகில் எந்த வடிவில் நுழைகிறது.

    மீண்டும் ஒரு உடலை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மனித உடலின் வளர்ச்சியில் எந்த
    நிலையில் உடலுக்குள் வருகிறது?

    ஆன்மா அனுபவத்தை கொண்டு தனித்து இயங்கும் ஆற்றலால் எண்ணங்கள் கொண்டது எனில் பிறந்த குழந்தைக்கு அந்த ஆன்மாவின் முந்தைய அனுபவ அறிவு அது முந்தைய உடலை விட்டு பிரிந்த நிலையில் இருக்குமா அல்லது பிறந்த குழந்தையின் அனுபவ அறிவை கொண்டிருக்குமா?

    ReplyDelete
  67. //அப்படியானால் ஆன்மாவின் நிலைதான் என்ன? ஜடப்பொருள்களுக்கு அது உயிர் வழங்குகிறதா? அல்லது ஜடப்பொருள்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் ஆன்மாவை இயக்குகிறதா? //


    // ஜடப்பொருளுடன் ஆன்மா இணைவதால் உயிர் உண்டாகிறது. முதல் செல் மட்டுமே அவ்வாறு உண்டானது. பிற உயிரினங்கள் அதிலிருந்து பரிணாமம் அடைந்தன.) //


    //அணு முதலா ஆற்றல் முதலா என்ற கேள்வி வந்தால் ஆற்றல்தான் முதல் என்பதே பதில்.//

    //ஆன்ம ஆற்றல் உயிர்ப்புள்ளதாலேயே அது வினை புரியத்தகுந்த அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஜடப்பொருட்களின் மேல் வினை புரிந்து உயிரினமாகிறது//

    ஏற்கனவே சொன்னவைகளிலேயே பதில் உள்ளதே. திரும்ப திரும்ப ஒரே விஷயத்திலேயே நிற்கிறோம். தங்களால் ஆன்ம ஆற்றலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிர் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் ஏன் ஆன்மாவை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.

    உயிர் என்பதை தங்கள் கருத்தால் விளக்கலாமே.

    ReplyDelete
  68. ஆனந்த் சாகர்2 March 2015 at 11:00

    @ஆன்மா ஞானம்,

    ((( //உடலுடன் அல்லது வேறு எந்த ஜடப்பொருளுடனும் சேர்ந்து இருந்தால்தான் ஆன்மாவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறீர்களா?//

    நிச்சயமாக)))

    உங்களின் இந்த கருத்து உண்மையல்ல. இது மட்டுமல்ல, ஆன்மாவை குறித்த உங்களின் மேலும் சில கருத்துக்களுடன் நான் மாறுபடுகிறேன்.

    ஆன்மா என்பது எல்லையற்ற ஆற்றல். ஆற்றல் நிலையிலேயே அது விழிப்புணர்வுடன் இருக்கிறது. இந்த ஜட உலகம் ஆன்மாவின் விழிப்புணர்வினால்தான் தோன்றியது. ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லையென்றால் இந்த பௌதீக பிரபஞ்சமே தோன்றியிருக்காது. விழிப்புணர்வினால்தான் பருப்பொருள் உருவாகிறது. அதாவது ஆன்மா தன்னுடைய விழிப்புணர்வினால் தன்னுடைய ஆற்றலை ஜடப்பொருளாக வெளிப்படுத்துகிறது. ஆன்மா விழிப்புணர்வாக இருக்கிறது.

    ReplyDelete
  69. ஆனந்த் சாகர்2 March 2015 at 11:14

    @ஆன்மா ஞானம்,

    ((( //உடலுடன் அல்லது வேறு எந்த ஜடப்பொருளுடனும் சேர்ந்து இருந்தால்தான் ஆன்மாவுக்கு விழிப்புணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறீர்களா?//

    நிச்சயமாக)))

    உங்களின் இந்த கருத்து உண்மையல்ல. இது மட்டுமல்ல, ஆன்மாவை குறித்த உங்களின் மேலும் சில கருத்துக்களுடன் நான் மாறுபடுகிறேன்.

    ஆன்மா என்பது எல்லையற்ற ஆற்றல். ஆற்றல் நிலையிலேயே அது விழிப்புணர்வுடன் இருக்கிறது. இந்த ஜட உலகம் ஆன்மாவின் விழிப்புணர்வினால்தான் தோன்றியது. ஆன்மாவுக்கு விழிப்புணர்வு இல்லையென்றால் இந்த பௌதீக பிரபஞ்சமே தோன்றியிருக்காது. விழிப்புணர்வினால்தான் பருப்பொருள் உருவாகிறது. அதாவது ஆன்மா தன்னுடைய விழிப்புணர்வினால் தன்னுடைய ஆற்றலை ஜடப்பொருளாக வெளிப்படுத்துகிறது. ஆன்மா விழிப்புணர்வாக இருக்கிறது.

    ReplyDelete
  70. ஆனந்த் சாகர்2 March 2015 at 11:16

    @ஆன்மா ஞானம்,

    //இந்தக்கருத்துகளின் படி ஒரு ஆன்மா ஆன்மிக உலகில் இருந்து ஜட உலகில் எந்த வடிவில் நுழைகிறது.//

    ஆன்ம உடல் வடிவில்.

    //மீண்டும் ஒரு உடலை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மனித உடலின் வளர்ச்சியில் எந்த
    நிலையில் உடலுக்குள் வருகிறது?//

    கரு உருவாகும் நேரத்தில்.

    //ஆன்மா அனுபவத்தை கொண்டு தனித்து இயங்கும் ஆற்றலால் எண்ணங்கள் கொண்டது எனில் பிறந்த குழந்தைக்கு அந்த ஆன்மாவின் முந்தைய அனுபவ அறிவு அது முந்தைய உடலை விட்டு பிரிந்த நிலையில் இருக்குமா அல்லது பிறந்த குழந்தையின் அனுபவ அறிவை கொண்டிருக்குமா?//

    ஒரு ஆன்மாவின் முந்தைய ஜட உலக பிறப்புகளின் அனுபவங்கள் அனைத்தும் அதனுடைய ஆழ்மனதில் தகவல்களாக பதிவாகி இருக்கும். அந்த ஆன்மா இன்னொரு பிறப்பு எடுக்கும்போது முந்தைய பிறப்புகளின் நினைவுகள் எதுவும் வெளி மனதின் நினைவுக்கு வராது. ஆனால் எல்லா அனுபவங்களும் ஆழ்மனதில் பதிவாகி இருக்கும்.

    ReplyDelete
  71. //மீண்டும் ஒரு உடலை தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மனித உடலின் வளர்ச்சியில் எந்த
    நிலையில் உடலுக்குள் வருகிறது?//

    கரு உருவாகும் நேரத்தில்.


    கரு உருவாகும் நேரம் என்பது எது?

    தந்தையின் விந்தணு உருவாகும் நேரமா ?
    இது இருக்காது ஏனெனில் ஒரு லட்சம் விந்தணுக்கள் உருவானாலும் ஒன்றே ஒன்றுதான் சினைமுட்டை யுடன் சேரும். தவிர இதில் தாயின் பங்களிப்பு இல்லாமல் போய்விடும்.

    சினை முட்டையை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கருவாதல் நிகழ்வு என எடுத்துக்கொண்டால் விந்தணுவிற்கு உயிர் இல்லை என ஆகிவிடுமே. விந்தணு முட்டையை உடைத்து உள் நுழைய ஏதுவாக கூரிய தலையும் உடல் பகுதியும் தாயின் பெல்லோபியன் குழாய் வழியே நீந்திச் செல்ல
    ஏதுவாக வாலையும் கொண்டதாக உள்ளது. இதுவும் ஏற்கத்தக்கதல்ல. நித்யமாய் இருக்கும் ஆன்மா புதிஉயிரியினுள் நுழைகிறது என்ற கருத்துதான் வருகிறது.
    எது கரு உருவாகும் நேரம் என அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  72. //இந்தக்கருத்துகளின் படி ஒரு ஆன்மா ஆன்மிக உலகில் இருந்து ஜட உலகில் எந்த வடிவில் நுழைகிறது.//

    //ஆன்ம உடல் வடிவில்.//

    ஆன்ம உடல் என்பதை சற்று விளக்கினால் அறிந்து கொள்வேன்.

    பவுதீக உடலின் மற்றொரு பரிமாணம் என்ற பதிலை தவிர வேறு பதில்களில் விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  73. //ஒரு ஆன்மாவின் முந்தைய ஜட உலக பிறப்புகளின் அனுபவங்கள் அனைத்தும் அதனுடைய ஆழ்மனதில் தகவல்களாக பதிவாகி இருக்கும். அந்த ஆன்மா இன்னொரு பிறப்பு எடுக்கும்போது முந்தைய பிறப்புகளின் நினைவுகள் எதுவும் வெளி மனதின் நினைவுக்கு வராது. ஆனால் எல்லா அனுபவங்களும் ஆழ்மனதில் பதிவாகி இருக்கும்.//

    ஒவ்வொரு செல்லிலும் மனம் உண்டு என சொன்னீர்கள் என்பதால் மனம் என்பது உயிர்ப்பொருளின் ஒரு பகுதி எனக்கருதலாம். அப்படி எனில் மனதில் நினைவுகளை சேமிக்க பல செல்கள் தேவை. இதன்மூலம் ஆன்மிக உடல் செல்களால் ஆனவை என்று சொல்கிறீர்களா. எண்ணங்கள் அலைவடிவானவை என்றாலும் அவற்றின் மூலம் உயிர்ப்பொருள்களே. ஆன்ம உடலின் மெய்க்கூறுகளை விளக்கலாமா.

    ReplyDelete

  74. //காயவைக்காவிட்டால் கெட்டுப்போகிறது என்பதால் விரைவாக காயவைக்க அடுப்பில் ஒரு சட்டியை வைத்து வறுத்து எடுப்போம். (அதிக வெப்பத்தால்) அப்பொழுதும் அந்த விதை, நீரை சேர்த்தாலும் மண்ணை சேர்தாலும் முளைப்பதில்லை.//

    இடி மின்னலின் ஆற்றலால் உயிர் உருவாகவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். சாதாரண சட்டி வெப்பத்தில் விதை மரிக்கிறது எனில் 10 லட்சம் வோல்ட் மின் ஆற்றலில் உயிர் எப்படி உருவாகியிருக்கும் ?

    மேலும் கெட்டுப்போதல் என்பது உயிர்ப் பொருள்களுக்கே உரித்தானது. அவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் உணவாக மாறுகிறது. அதுவே விதையின் உயிர்த்தன்மைக்கு மற்றுமொரு சாட்சி.

    சேவலின் கூடல் இல்லையென்றாலும் கோழி முட்டையிடும். அந்த முட்டையை எந்த புறக்காரண சூழ்நிலையிலும் குஞ்சு பொறிக்காது என்பதை அறியவும். சேவலின் விந்தணுவுடன் கோழியின் முட்டை சேர்ந்தால் மட்டுமே அந்த முட்டை உயிர் பெறும். வெறும் சேவலின் விந்தணுவாலும் குஞ்சு பொறிக்க முடியாது. இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம்.

    ஆன்மா ஒரு உயிரினத்திடம் இருந்து அதன் குழந்தைக்கு செல்வதாலே ஆன்மா சந்ததிகள் மூலம் கடத்தப்படுகிறது. ந

    ReplyDelete
  75. ஆனந்த் சாகர்3 March 2015 at 19:22

    @ஆன்ம ஞானம்,

    //எது கரு உருவாகும் நேரம் என அறிய விரும்புகிறேன்.//

    ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் இணைந்து பெண்ணின் கர்ப்ப பையில் ஒரு கருவாக உருவாகுவதையே கருத்தரிப்பது என்கிறோம். ஆணின் விந்தணுவுக்கும் உயிர் இருக்கிறது, பெண்ணின் சினை முட்டைக்கும் உயிர் இருக்கிறது. ஆனாலும் அவை இரண்டும் சேர்ந்து ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஆனால் உயிரினமாக உருவாகுவதையே கரு உருவாகும் நேரம் என்று குறிப்பிடுகிறேன்.

    ReplyDelete
  76. ஆனந்த் சாகர்3 March 2015 at 19:29

    @ஆன்ம ஞானம்,

    //ஆன்ம உடல் என்பதை சற்று விளக்கினால் அறிந்து கொள்வேன்.பவுதீக உடலின் மற்றொரு பரிமாணம் என்ற பதிலை தவிர வேறு பதில்களில் விளக்கினால் நன்றாக இருக்கும்.//

    ஆன்ம உடல் என்பது ஒற்றை ஆன்மாவின் ஒரு சிறு அளவிலான நகல். அது ஆற்றல் மயமான உடல். அதுதான் நம்முடைய உண்மையான அடையாளம், இந்த பௌதீக உடல் அல்ல.

    ReplyDelete
  77. ஆனந்த் சாகர்3 March 2015 at 19:57

    @ஆன்ம ஞானம்,

    //ஒவ்வொரு செல்லிலும் மனம் உண்டு என சொன்னீர்கள் என்பதால் மனம் என்பது உயிர்ப்பொருளின் ஒரு பகுதி எனக்கருதலாம்.//

    இங்கு நான் மனம் என்று குறிப்பிட்டது உடல் சார்ந்த மனதைத்தான்(physical mind). இதை வெளிப்புற மனம்(outer mind) என்றும் கூறலாம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் உள்ள மனமானது இந்த உடல் சார்ந்த மனம்தான். நமக்கு உள்புற மனம் உண்டு. அதை நாம் ஆழ்மனம்(subconscious mind) என்று அழைக்கிறோம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. நம்முடைய அனுபவங்கள் உடல் சார்ந்த மனதிலும் ஆழ்மனதிலும் பதிவாகின்றன. எனவே உடல் சார்ந்த மனதை வேண்டுமானால் உயிர்ப்பொருளின் ஒரு பகுதி என்று கூறலாம். ஆனால் ஆழ்மனது அப்படிப்ட்டதல்ல. அது ஜட உலகிற்கு அப்பாற்பட்டது.

    // அப்படி எனில் மனதில் நினைவுகளை சேமிக்க பல செல்கள் தேவை. இதன்மூலம் ஆன்மிக உடல் செல்களால் ஆனவை என்று சொல்கிறீர்களா.//

    ஆன்ம உடல் ஆற்றல் உடல் என்பதால் அதில் ஜட உடலைப்போன்று செல்கள் இல்லை.

    // எண்ணங்கள் அலைவடிவானவை என்றாலும் அவற்றின் மூலம் உயிர்ப்பொருள்களே.//

    இல்லை. எண்ணங்கள் விழிப்புணர்வினால் உண்டாகின்றன. நான் ஏற்கெனவே கூறியபடி, விழிப்புணர்வினால்தான் ஜடப்பொருள்களே உருவாகின்றன. உயிர்ப்பொருள்களுக்கு மூலம் விழிப்புணர்வே.

    //ஆன்ம உடலின் மெய்க்கூறுகளை விளக்கலாமா.//

    ஒற்றை ஆன்மாவின் ஆற்றல்தான் நம்முடைய ஆன்ம உடலின் மெய்க்கூறுகள்.

    ReplyDelete
  78. //ஒற்றை ஆன்மாவின் ஆற்றல்தான் நம்முடைய ஆன்ம உடலின் மெய்க்கூறுகள்//

    இதை ஏற்றுக்கொள்கிறேன்.



    //ஆனால் ஆழ்மனது அப்படிப்ட்டதல்ல. அது ஜட உலகிற்கு அப்பாற்பட்டது. //

    இதனை கொஞ்சம் விளக்கலாமா.

    //ஆன்ம உடல் ஆற்றல் உடல் என்பதால் அதில் ஜட உடலைப்போன்று செல்கள் இல்லை//

    உயிர் கொண்ட உடலில் இருந்து வெளிப்படும் ஆன்ம ஆற்றலை ஆன்மிக உடல் என ஏற்றுக்கொள்கிறேன். அந்த ஆற்றல் ஆன்மாவினால் கட்டுப்படுத்தபடுகிறது என கருதலாமா இல்லை முழு ஆன்மாவுமே ஆற்றலாக உள்ளது என கருதலாமா. முழு ஆன்மாவும் வெளிப்பட்டபிறகு அந்த உடலில் உயிர் இருக்காது. அதன் பின் அந்த ஆற்றல் என்னவாகிறது. நான்காவது பரிமாணமான காலத்தின் பங்கு இதில் உண்டா. விழிப்புணர்வு பெற்ற ஆன்மாவின் நோக்கம் என்ன. (நான்காவது பரிமாணம் என்பது காலத்தினால் ஏற்படும் தோற்ற மாயை)

    ReplyDelete
  79. நந்நன்3 March 2015 at 22:03

    // மீண்டும் மீண்டும் ஆன்மாவை தன்னுள்ளே கொண்டுள்ள ஜடப்பொருள்களின் வளர்சிதை மாற்றத்தையே நீங்கள் ஆன்மாவை விளக்க எடுத்துக் கொள்வது ஏன். வெறும் ஜடப்பொருள்களின் வளர்ச்சியை நிகழ்த்துவதே ஆன்மாதான் என உணருங்கள்
    எளிதாகச்சொன்னால் விதையை உயிர்ப்பொருளாக வெளிப்படுத்தியதோடு ஆன்மா தனது இருப்பை உறுதி செய்கிறது. அந்த உயிர்ப்பொருளில் ஆன்மா தங்குவதும் வெளியேறுவதும் புறக்காரணிகளால் அமையும். ஆற்றல் உள்ளே இருப்பதால்தான் தகுந்த சூழ்நிலை அமைந்தால் அந்த விதை விருட்சமாகிறது. //

    நாம் இங்கு ஆன்மீகம் என்ற தலைப்பில் முதற்கட்டமாக ஆன்மா (உயிர்) பற்றி விவாதித்து வருகிறோம். ஜடப்பொருளுடன் அதற்கு வெளியேயிருந்து ஆன்மா இணைவதும் வெளியேறுவதும் பற்றிய கேள்விகள் கேட்டு வருகிறேன்.


    வளர்ச்சிதை மாற்றம் என்றால் என்ன? வளர்ச்சி என்பது செல்கள் பல்கிப் பெருகி விதையைப் பொருத்தவரை மரமாக வளர்வது. சிதைவு என்றால் செல்கள் இறந்துபோய் வெளியேறுவது. இவை இரண்டும் தொடர்ச்சியாக ஒரு உயிரிடத்தில் நடைபெற்று வரவேண்டும். வளர்ச்சி மிகைத்திருக்கும் காலம் வரை அது உயிருடன் இருக்கும். சிதைவு மிகைத்துவிட்டால் படிப்படியாக வளர்ச்சி குன்றி இறந்து போகும். கட்டுக்கடங்கா அதி வளர்ச்சியும் மரணத்திற்கு இட்டுச்செல்லும்.

    முளைக்காத விதைக்கு ஆன்மா இருப்பதாக நீங்கள் சொல்லியுள்ளீர்கள். ஆன்மா இருந்தால் வளர்சிதை மாற்றம் நிகழவேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தகுந்த ஈரப்பதம் கிடைத்ததும் அது முளைக்கத் தொடங்குகிறது. வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. வளர்சிதை நடைபெறாதவைகள் ஜடப்பொருள்தானே. எனவே ஜடப்பொருளை இங்கு உயிராக்கியது நீர். அதனால்தான் ஆன்மாவை இயக்கும் சக்தி நீரா என்று கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை.
    கோழிமுட்டையில் ஆன்மாவை இயக்கும் சக்தி வெப்பமாக உள்ளது. அதாவது எது ஒன்றும் புதிதாக முட்டையினுள் சேரவில்லை. தகுந்த வெப்பம் கிடைத்ததும் உயிராகிறது.

    ஆன்மா, உயிர், ஆற்றல் எதோ ஒரு பெயர்கொண்ட ஒன்று ஜடப்பொருளுக்கு வெளியே இருந்து ஜடப்பொருளுடன் இணைவதால்தான் உயிர் உண்டாகிறது என்பது உங்கள் கருத்து. அதிலும் முதல் உயிரிதான் அவ்வாறு இணைந்து உயிரானது. மற்றவைகள் எல்லாம் பரிணாமத்தில் மாற்றம் பெற்றவைகள் என்றும் சொல்லியுள்ளீர்கள். அந்த வகையில் விதையிலும் முட்டையிலும் ஆன்மா இருந்துதான் தீர வேண்டும். ஆனால் நீர் இணையும்வரை, வெப்பம் கிடைக்கும் வரை அவற்றில் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறவில்லை. ஏன்?

    இந்த எடுத்துக்காட்டுகள் மூலம் வேதிப்பொருள்களின் கூட்டினைவால் மாற்றங்கள் பெற்று தன்னுள்ளேயே வளரும் ஆற்றலாக அக்கூட்டுப்பொருள் மாறுகிறது என்பதை அறியமுடிகிறது. புறச்சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. வெளியிலிருந்து எந்த ஒரு ஆற்றலும் இணைவதும் இல்லை, வெளியேறுவதும் இல்லை. இப்படிக் கருதுவதில் என்ன பிழை உள்ளது?

    RNA_வுக்கு எப்படி உயிர் வந்தது என்பது உங்கள் கேள்வி. வேதிப்பொருள்களின் கூட்டிணைவால் ஜடப்பொருள் உயிராக முடியாது. ஆன்மா இணைந்தால்தான் முடியும் என்றால் அந்த ஆன்மாவுக்கு எப்படி ஆற்றல் வந்தது அல்லது அந்த ஆற்றல் எப்படி தானாக உருவானது என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது என்றால் அந்த ஒன்று எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் கடவுள் உலகைப் படைத்தான் என்றால் அந்தக் கடவுளை யார் படைத்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  80. //ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் இணைந்து பெண்ணின் கர்ப்ப பையில் ஒரு கருவாக உருவாகுவதையே கருத்தரிப்பது என்கிறோம். ஆணின் விந்தணுவுக்கும் உயிர் இருக்கிறது, பெண்ணின் சினை முட்டைக்கும் உயிர் இருக்கிறது. ஆனாலும் அவை இரண்டும் சேர்ந்து ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ ஆனால் உயிரினமாக உருவாகுவதையே கரு உருவாகும் நேரம் என்று குறிப்பிடுகிறேன். //

    விந்தணு சினைமுட்டை இரண்டுமே உயிருள்ளவைதானே அவற்றின் உயிர்தானே புதிய உயிரினத்தில் இருக்கும்.இங்கு வெளியிலிருந்து ஒரு ஆன்மா அந்தக்கரு உருவாகும் போது உள்நுழைகிறது என்பது ஏற்கத்தக்கதல்ல. வெளியில் இருந்து உள்நுழைந்து பின்னர் வெளியேறும் ஒரு பொருள் என்ற அர்த்தம் வருகிறது. அப்படியல்ல நண்பரே சந்ததி மூலம் கடத்தப்படும் ஆன்மா மனித உடல் இயக்கம் நின்றதும் ஆற்றலாக வெளிப்பட்டு பேரான்மா எனும் பேராற்றலோடு கலந்து விடுகிறது. இறப்புக்கு பின் ஆன்மாவின் நிலை என்பது பேரண்டத்தில் உள்ள ஒரு ஆற்றலே. முதலில் ஆன்மா அல்லது உயிர் வெளியிலிருந்து உடலில் நுழைவதில்லை என முடிவு செய்யலாம்.

    ஜடப்பொருளுடன் ஆன்மா இணைவது அந்த உயிரினத்தின் படிநிலையின் ஆரம்பநிலையில் மட்டுமே. பின்னர் ஒற்றை ஆன்மாவே எல்லா உயிரிலும் வியாபிக்கிறது என்பது எனது கருத்து. இவை தற்செயல் நிகழ்வுகளின் விளைவுகளே. இதை உணர்தலே ஆன்மீகம். அந்த அளப்பரிய எல்லையற்ற ஆற்றலை பயன்படுத்துவதே எனது நோக்கம். என்னால் இந்த பிறவிசுழற்சி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அறிவியல் ரீதியாக இதற்கு விளக்கமேதும் உண்டா? உண்டெனில் எனது சிந்தையை விரிக்க தயாராகிறேன்.

    ReplyDelete
  81. //முளைக்காத விதைக்கு ஆன்மா இருப்பதாக நீங்கள் சொல்லியுள்ளீர்கள். ஆன்மா இருந்தால் வளர்சிதை மாற்றம் நிகழவேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. தகுந்த ஈரப்பதம் கிடைத்ததும் அது முளைக்கத் தொடங்குகிறது. வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. வளர்சிதை நடைபெறாதவைகள் ஜடப்பொருள்தானே. எனவே ஜடப்பொருளை இங்கு உயிராக்கியது நீர். அதனால்தான் ஆன்மாவை இயக்கும் சக்தி நீரா என்று கேட்டுள்ளேன். பதில் சொல்லவில்லை.//

    தகுந்த ஈரப்பதம் கிடைத்ததும் முளைப்பதற்கான முன்தயாரிப்பு எதன் மூலம் நிகழ்கிறது.

    வெப்பத்தால் சுடப்பட்ட விதை எந்த நீரைக்கொண்டும் மண்ணைக்கொண்டும் வளராது என சொல்லி உள்ளீர்கள். வெப்பத்தால் அதன் ஆன்ம ஆற்றல் வெளியேறி விட்டது. முளைக்கத்தகுந்த விதையில் ஆன்ம ஆற்றல் நிலைஆற்றலாக உள்ளது. ஆன்மாவை இயக்க நீர் தேவையில்லை. ஆன்மாவைக் கொண்ட ஜடப்பொருள்கள் வளரவே நீர் தேவை.மண் தேவை.அதன் உயிர்தன்மையை தக்கவைப்பதே ஆன்மா.

    ReplyDelete
  82. ://இந்த எடுத்துக்காட்டுகள் மூலம் வேதிப்பொருள்களின் கூட்டினைவால் மாற்றங்கள் பெற்று தன்னுள்ளேயே வளரும் ஆற்றலாக அக்கூட்டுப்பொருள் மாறுகிறது என்பதை அறியமுடிகிறது. புறச்சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. வெளியிலிருந்து எந்த ஒரு ஆற்றலும் இணைவதும் இல்லை, வெளியேறுவதும் இல்லை. இப்படிக் கருதுவதில் என்ன பிழை உள்ளது?//


    தன்னுள்ளே உள்ள ஆற்றல் என நீங்கள் எதைகுறிப்பிடுகிறீர்களோ அதுதான் ஆன்ம ஆற்றல். ஆன்மா வெளியே இருந்து உள்ளே வருவதாக நானும் கருதவில்லை. எனவே உங்களின் இந்தக்கருத்தில் பிழையில்லை.


    //ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது என்றால் அந்த ஒன்று எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் கடவுள் உலகைப் படைத்தான் என்றால் அந்தக் கடவுளை யார் படைத்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்//

    அந்த ஒன்றுதான் ஆன்மா. அது நித்யமாய் உள்ளது. அது பிறப்பற்றது. அழிவற்றது. அது யாராலும் படைக்கப்படவில்லை. கடவுள் என்ற பதம் ஆன்மாவை குறிக்கப்பயன்படலாம். ஆனால் அது மதங்கள் படைத்த கடவுள் அல்ல. ஆக கடவுள் என்பதும் மதம் என்பதும் ஏனையோர் மேல் ஆதிக்கம் செலுத்த படைக்கப்பட்ட இந்த உலகத்தின் மோசமான படைப்புகள்.ஆதியில் இருந்தே காலத்தை தாண்டி இருந்து வரும் ஆன்மாவை எந்தக் கடவுளும் படைக்கவில்லை. ஏனெனில் கடவுள் என்ற ஒன்றுதான் இல்லையே.

    ReplyDelete
  83. ஆன்மா என்ற ஒற்றைப்புள்ளியே பேரான்மாவாய் விரிந்து அதன் ஆற்றல் ஒருமித்து பவுதிக மற்றும் ஜடப்பொருளாய் மாறி அதில் ஆன்மா ஆற்றல் வடிவில் வினைபுரிந்தவை உயிரினங்களாகவும் வினைபுரியாதவை ஜடப்பொருளாகவும் உள்ளன. இந்நிகழ்வு பூமியில் மட்டும் நடைபெறவில்லை. எனவே இந்நிகழ்வை காலத்தின் அடிப்படையில் புரிந்து கொள்ளமுடியாது. பூமியில் இருந்து இவற்றை பார்த்தால் காலம் என்ற நான்காவது பரிமாணம் பிடிபடாது. . பூமிக்கு வெளியில் தான் காலம் என்ற நான்காவது பரிமாணம் புரிபடும்.

    ReplyDelete
  84. ஆனந்த் சாகர்4 March 2015 at 16:17

    @ஆன்ம ஞானம்,

    //உயிர் கொண்ட உடலில் இருந்து வெளிப்படும் ஆன்ம ஆற்றலை ஆன்மிக உடல் என ஏற்றுக்கொள்கிறேன்.//

    ஆன்ம உடல் உடலிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அல்ல . ஆன்ம உடல் கரு உருவாகும்போது அதற்கு வெளியிலிருந்து அதை ஆட்கொள்கிற ஒன்று. ஆன்ம உடல் வேறு, ஜட உடல் வேறு. ஆன்ம உடல் ஜட உடலை தேர்ந்தெடுத்து அதை தனது ஜட உலக அனுபவத்திற்காக பயன்படுத்துகிறது.

    // அந்த ஆற்றல் ஆன்மாவினால் கட்டுப்படுத்தபடுகிறது என கருதலாமா இல்லை முழு ஆன்மாவுமே ஆற்றலாக உள்ளது என கருதலாமா.//

    உடலிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மற்றும் ஆன்மா என்று தனித்தனி ஆற்றல்கள் கிடையாது. ஆன்ம உடல் ஜட உடலில் இல்லையென்றால் அந்த ஜட உடலுக்கு மரணம் ஏற்படுகிறது. எனவே ஜட உடலின் இயக்கம் அதனுள் ஆன்ம உடல் இருப்பதாலேயே நடக்கிறது.

    // முழு ஆன்மாவும் வெளிப்பட்டபிறகு அந்த உடலில் உயிர் இருக்காது.//

    ஆன்ம உடல் நிரந்தரமாக வெளியேறிய பிறகு ஜட உடல் மரணிக்கிறது. ஆனால் முழு ஆன்மா வெளியேறுவதில்லை.

    // அதன் பின் அந்த ஆற்றல் என்னவாகிறது.//

    முழு ஆன்மா வருவதும் போவதுமாக இருப்பதில்லை. அது எப்பொழுதும் எங்கும் எதிலும் இருந்துகொண்டே இருக்கிறது. முழு ஆன்மாவின் நகல்களான ஆன்ம உடல்களே வருவதும் போவதும் என்ற தொடர் பிறவிகள் எடுத்துக்கொண்டு இருக்கின்றன.

    // நான்காவது பரிமாணமான காலத்தின் பங்கு இதில் உண்டா.//

    நாம் நினைக்கும் முக்காலம் என்பது மாயை.

    // விழிப்புணர்வு பெற்ற ஆன்மாவின் நோக்கம் என்ன.//

    தன்னுடைய விருப்பங்களை அனுபவித்து பார்ப்பதுதான் அதன் நோக்கம்.

    // (நான்காவது பரிமாணம் என்பது காலத்தினால் ஏற்படும் தோற்ற மாயை)//

    காலம் என்பதுகூட மாயைதான்.

    ReplyDelete
  85. //ஆன்ம உடல் உடலிலிருந்து வெளிப்படும் ஆற்றல் அல்ல . ஆன்ம உடல் கரு உருவாகும்போது அதற்கு வெளியிலிருந்து அதை ஆட்கொள்கிற ஒன்று. ஆன்ம உடல் வேறு, ஜட உடல் வேறு. ஆன்ம உடல் ஜட உடலை தேர்ந்தெடுத்து அதை தனது ஜட உலக அனுபவத்திற்காக பயன்படுத்துகிறது//


    ஆன்மா என்பது மனித மனதின் நகலாக அனுபவம் விருப்பம் என எதையோ தேடும் அதன் பயணம் எதை நோக்கி?

    பரிணாமத்தின் முதல் மனிதனுக்கு ஆன்ம உடல் இருந்ததா?

    பல ஜட உடல்கள் மூலம் அது பெறும் அனுபவம் மூலம் ஆன்மா விருப்பங்களை நிறைவேற்றும் என்றீர்களே அதன் நோக்கம் இதுதான் என்றால் ஆன்மா ஆற்றல் வடிவில் உள்ள மனித மனம் போல் உள்ளதா. அல்லது தனது விருப்பங்களை அடைவதன் மூலம் திருப்தி அடைகிறதா அல்லது அது பெறும் அனுபவங்களை வைத்து அது காணும் முடிவென்ன

    ReplyDelete
  86. ஆனந்த் சாகர்4 March 2015 at 17:10

    @ஆன்ம ஞானம்,

    //விந்தணு சினைமுட்டை இரண்டுமே உயிருள்ளவைதானே அவற்றின் உயிர்தானே புதிய உயிரினத்தில் இருக்கும்.//

    விந்தணு, மற்றும் சினை முட்டை ஆகியவற்றில் ஆன்ம ஆற்றல் அதாவது ஒற்றை ஆன்மா இருக்கிறது. மேலும் அவை இரண்டிற்கும் தனித்தனி விழிப்புணர்வு உள்ளது. ஆனால் அவற்றில் ஒற்றை ஆன்மாவின் நகலான தனி ஆன்மா(ஆன்ம உடல்) இல்லை.

    //இங்கு வெளியிலிருந்து ஒரு ஆன்மா அந்தக்கரு உருவாகும் போது உள்நுழைகிறது என்பது ஏற்கத்தக்கதல்ல.//

    ஒரு உயிரினம் கருவாக உருவாகும்போது ஆன்ம உடல் அதை தேர்ந்தெடுக்கிறது.

    //வெளியில் இருந்து உள்நுழைந்து பின்னர் வெளியேறும் ஒரு பொருள் என்ற அர்த்தம் வருகிறது.//

    கருவை தேர்ந்தெடுத்து அதில் தான் விரும்பும் அனுபவம் பெற்ற பிறகு அல்லது அந்த உடல் அனுபவத்திற்கு தகுதியில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகு ஒரு தனி ஆன்மா அதைவிட்டு நிரந்தரமாக வெளியேறுகிறது. இது உண்மை.

    // அப்படியல்ல நண்பரே சந்ததி மூலம் கடத்தப்படும் ஆன்மா மனித உடல் இயக்கம் நின்றதும் ஆற்றலாக வெளிப்பட்டு பேரான்மா எனும் பேராற்றலோடு கலந்து விடுகிறது.//

    ஒவ்வொரு செல்லிலும் ஒற்றை ஆன்மா(பேரான்மா) இருக்கிறது. செல்கள் பிரிந்து புது செல்கள் தோன்றும்போது இந்த ஆன்மாவும் கடத்தப்படுகிறது. ஆனால் அதில் தனி ஆன்மா என்கிற ஒற்றை ஆன்மாவின் நகல் இல்லை. இந்த தனி ஆன்மா ஜட உடலைவிட்டு பிரிந்தவுடன் ஆவி உலகிற்கு சென்று பிறகு மறுபடியும் ஜட உலக அனுபவம் பெறுவதற்கு வேறு ஒரு கருவை தேர்ந்தெடுத்து பௌதீக அனுபவம் பெறுகிறது. இது தொடர்ந்து நடைபெறுகிறது.

    // இறப்புக்கு பின் ஆன்மாவின் நிலை என்பது பேரண்டத்தில் உள்ள ஒரு ஆற்றலே.//

    ஜட உடலின் இறப்பிற்கு பின் அதில் இருந்த ஆன்ம உடல் சில காலம் கழித்து வேறொரு பிறவி எடுக்கிறது. ஆன்மா என்பதே ஆற்றல்தான்.

    // முதலில் ஆன்மா அல்லது உயிர் வெளியிலிருந்து உடலில் நுழைவதில்லை என முடிவு செய்யலாம்.//

    தனி ஆன்மா கருவை ஆட்கொள்கிறது. ஜட உடலின் மரணத்தின்போது அது நிரந்தரமாக அதைவிட்டு வெளியேறுகிறது. இப்படி தொடர்ந்து நடைபெறுகிறது. இது ஒரு பரிணாம செயல்பாடு.

    ReplyDelete
  87. ஆனந்த் சாகர்4 March 2015 at 17:35

    @ஆன்ம ஞானம்,

    //ஜடப்பொருளுடன் ஆன்மா இணைவது அந்த உயிரினத்தின் படிநிலையின் ஆரம்பநிலையில் மட்டுமே. பின்னர் ஒற்றை ஆன்மாவே எல்லா உயிரிலும் வியாபிக்கிறது என்பது எனது கருத்து.//

    முதல் ஜட உயிரினம்(உயிரினங்கள்) தான் அப்படி தோன்றியது. அப்பொழுதுகூட தனி ஆன்மாக்கள் அவற்றை ஆட்கொண்டன.

    // இவை தற்செயல் நிகழ்வுகளின் விளைவுகளே.//

    உயிரின தோற்றம் தற்செயல் அல்ல. அது ஆன்மாவின் திட்டமிட்ட ஏற்பாடு.

    // இதை உணர்தலே ஆன்மீகம். அந்த அளப்பரிய எல்லையற்ற ஆற்றலை பயன்படுத்துவதே எனது நோக்கம்.//

    எனது வாழ்த்துக்கள்.

    // என்னால் இந்த பிறவிசுழற்சி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. //

    உங்களுக்கு இன்னும் மேலதிக ஞானம் கிடைக்கும்போது பிறவி சுழற்சி உண்மையை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    //அறிவியல் ரீதியாக இதற்கு விளக்கமேதும் உண்டா? உண்டெனில் எனது சிந்தையை விரிக்க தயாராகிறேன்.//

    ஆழ்நிலை தியானத்தின்மூலம் நீங்கள் உங்கள் முற்பிறவிகளை தெரிந்துகொள்ளலாம். அல்லது நன்கு பயிற்சிபெற்ற மனநல மருத்துவர் மூலம் ஹிப்னாடிசம் வாயிலாக முற்பிறவிகளை நினைவுக்கு கொண்டுவரும் (past life regression) செயலை மேற்கொண்டு பாருங்கள்.

    ReplyDelete
  88. //ஜட உடலின் இறப்பிற்கு பின் அதில் இருந்த ஆன்ம உடல் சில காலம் கழித்து வேறொரு பிறவி எடுக்கிறது. ஆன்மா என்பதே ஆற்றல்தான். //


    அப்படி எனில் ஆன்மா குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வரம்பிற்குள் வருகிறதா?

    ஏனெனில் ஆன்ம வினையால் முதல் உயிரி தோன்றுகிறது. அது மரிக்கும் காலத்திற்குள் அதன் குழந்தை உயிரியை ஈன்றிருக்கும். இப்பொழுது இரண்டு ஆன்மாக்கள் உள்ளன. இரண்டாவது உயிரிக்கு ஆன்மா எப்படி வந்தது. மேலும் முதல் உயிரி மரிப்பதற்குள் எத்தனையோ உயிரிகளை ஈன்றிருக்கலாம். அடுத்த தலைமுறையில் முன்பு மரித்த ஆன்மாக்கள் உடலை அடைகின்றன என வைத்துக்கொள்வோம். இதிலிருந்து பிறவி சுழற்சி ஆரம்பமாகிறது எனில் மரித்த ஜட உடலில் இருந்து வெளியேறிய எண்ணிக்கையை பொறுத்துதான் உயிர்ப் பெருக்கம் அமைந்ததா அல்லது மாறுபடும் எண்ணிக்கைக்கேற்ப புதிய ஆன்மாக்கள் உருவாகினவா அதாவது ஆற்றல் அளிக்கப்பட்டதா. எல்லா ஆன்மாக்களும் மறுபிறவி எடுக்குமா அல்லது விழிப்படைந்த ஆன்மாக்கள் மட்டும் மறுபிறவி எடுக்குமா.
    மறுபிறவிக்கொள்கையின் படி ஆன்மாக்கள் எத்தனை முறை பிறவி எடுக்கும் என ஏதேனும் வரைமுறை உண்டா. தற்கால உதாரணமாக நம் நாட்டில் 1940-1950 ல்
    முப்பது கோடி ஜட உடல்கள் இருந்தன . தற்பொழுது 120 கோடி ஜட உடல்கள் உள்ளன. முப்பது கோடியில் சுமார் இருபது கோடி பேர் இப்பொழுது உயிருடன் இல்லை எனக் கொண்டால். தற்பொழுதுள்ள மீதம் நூறு கோடி ஜட உடல்கள் எப்படி ஆன்மாவை பெற்றன. அது ஒற்றை ஆன்மாவின் ஆற்றல் பகிர்வு என கொண்டாலும். அது ஏன் 120 கோடி ஜட உடல்களுக்கும் கிடைக்காதா.

    இதன் மூலம் தாங்கள் சொன்ன ஒற்றை ஆன்மாவின் நகல் 100 கோடி என கொள்வோம். அப்படிஎனில் ஒவ்வொரு உயிரிக்கும் வெளியில் இருந்தே ஆன்ம ஆற்றல் தனித்தனியாக கிடைப்பதாக அல்லவா கருத வழிசெய்கிறது.

    ReplyDelete
  89. நந்நன்4 March 2015 at 22:10

    --நான்
    //காயவைக்காவிட்டால் கெட்டுப்போகிறது என்பதால் விரைவாக காயவைக்க அடுப்பில் ஒரு சட்டியை வைத்து வறுத்து எடுப்போம். (அதிக வெப்பத்தால்) அப்பொழுதும் அந்த விதை, நீரை சேர்த்தாலும் மண்ணை சேர்தாலும் முளைப்பதில்லை.//

    நீங்கள்
    // இடி மின்னலின் ஆற்றலால் உயிர் உருவாகவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். சாதாரண சட்டி வெப்பத்தில் விதை மரிக்கிறது எனில் 10 லட்சம் வோல்ட் மின் ஆற்றலில் உயிர் எப்படி உருவாகியிருக்கும் ? மேலும் கெட்டுப்போதல் என்பது உயிர்ப் பொருள்களுக்கே உரித்தானது. அவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் உணவாக மாறுகிறது. அதுவே விதையின் உயிர்த்தன்மைக்கு மற்றுமொரு சாட்சி. //

    நான்
    மின்னலின் மின்னாற்றலால் உயிர் உண்டானதாக அறிவியல் கூறவில்லை. அமினோ அமிலங்கள்தான் உருவானதாக கூறுகிறது. விதை ஈரப்பதத்திலும், கோழிமுட்டை வெப்பத்திலும் உயிராகும் பொழுது, 10 இலட்சம் மின் அழுத்தத்தால் ஏற்படும் வெப்பத்திலும் உயிர் உண்டாகாது என்பதை அரிதிட்டுச் சொல்லமுடியாது. கொதிக்கும் நீரில் வாழும் வைரஸ்களையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
    கெட்டுப்போகாவிட்டாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது உயிராகும் தன்மையை இழந்துவிடுகிறது. முருங்கைக் கிளை பட்டுப்போகிறது. கோழிமுட்டை அழுகிவிடுகிறது. உயிர் தன்மை உள்ள பொருளாக இருந்தால்தான் உணவாக முடியுமா? நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், டானிக் இவை எல்லாம் உயிரற்ற வேதிப்பொருகள்தான். ( ஜடப்பொருள்கள் )


    நீங்கள்
    // சேவலின் கூடல் இல்லையென்றாலும் கோழி முட்டையிடும். அந்த முட்டையை எந்த புறக்காரண சூழ்நிலையிலும் குஞ்சு பொறிக்காது என்பதை அறியவும். சேவலின் விந்தணுவுடன் கோழியின் முட்டை சேர்ந்தால் மட்டுமே அந்த முட்டை உயிர் பெறும். வெறும் சேவலின் விந்தணுவாலும் குஞ்சு பொறிக்க முடியாது. இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம். //

    நான்
    அப்படியானால் இரண்டு ஆன்மாக்கள் இணைந்தால்தான் ஒரு புது ஆன்மா உருவாகுமோ? இது உங்களின் புது தத்துவமா? முறித்துப்போட்ட முருங்கை மரக்கிளையின் கதை என்னாவது? தற்கால குளோனிங் முறையை மறந்துவிட்டீர்களா? (சேவல் இணையாத கோழியின் முட்டை குஞ்சு பொரிக்காது என்பது அனைவரும் அறிந்ததுதான்)


    நான்
    //இந்த எடுத்துக்காட்டுகள் மூலம் வேதிப்பொருள்களின் கூட்டினைவால் மாற்றங்கள் பெற்று தன்னுள்ளேயே வளரும் ஆற்றலாக அக்கூட்டுப்பொருள் மாறுகிறது என்பதை அறியமுடிகிறது. புறச்சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. வெளியிலிருந்து எந்த ஒரு ஆற்றலும் இணைவதும் இல்லை, வெளியேறுவதும் இல்லை. இப்படிக் கருதுவதில் என்ன பிழை உள்ளது?//


    நீங்கள்
    // தன்னுள்ளே உள்ள ஆற்றல் என நீங்கள் எதைகுறிப்பிடுகிறீர்களோ அதுதான் ஆன்ம ஆற்றல். ஆன்மா வெளியே இருந்து உள்ளே வருவதாக நானும் கருதவில்லை. எனவே உங்களின் இந்தக்கருத்தில் பிழையில்லை.//

    நான்
    ஆன்ம ஆற்றல் வெளியே இருந்து உள்ளே வருவதாக சொல்லாவிட்டாலும் மரணிக்கும்போது வெளியேறுவதாகச் சொல்கிறீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லை வெளியேறுவதும் இல்லை என்று சொல்லியுள்ளேன். மரணிக்கும்போது வளர்ச்சி ஆற்றலை இழந்து சிதைவு ஆற்றல் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்த சிதைவாற்றல் தனித்த வேதிப்பொருளாக பிரியும் வரை அல்லது வேறு பொருளாக மாறும்வரை ( நிலக்கரி ) நடைபெறுகிறது.


    நான்
    //ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகாது என்றால் அந்த ஒன்று எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் கடவுள் உலகைப் படைத்தான் என்றால் அந்தக் கடவுளை யார் படைத்தது என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்//

    நீங்கள்
    // அந்த ஒன்றுதான் ஆன்மா. அது நித்யமாய் உள்ளது. அது பிறப்பற்றது. அழிவற்றது. அது யாராலும் படைக்கப்படவில்லை. கடவுள் என்ற பதம் ஆன்மாவை குறிக்கப்பயன்படலாம். ஆனால் அது மதங்கள் படைத்த கடவுள் அல்ல. ஆக கடவுள் என்பதும் மதம் என்பதும் ஏனையோர் மேல் ஆதிக்கம் செலுத்த படைக்கப்பட்ட இந்த உலகத்தின் மோசமான படைப்புகள். ஆதியில் இருந்தே காலத்தை தாண்டி இருந்து வரும் ஆன்மாவை எந்தக் கடவுளும் படைக்கவில்லை. ஏனெனில் கடவுள் என்ற ஒன்றுதான் இல்லையே. //

    நான்
    வேதிப்பொருள்களின் கூட்டிணைவால் அதனுள் தானாக ஆற்றல் ( உயிர் ) உண்டாகாது என்றல் அந்த பிறப்பற்ற அழிவற்ற ஆன்மா எப்படி உருவானது என்றுச் சொல்லுங்கள்.
    பொருள்களுக்கு வெளியே ஒரு ஆற்றல் ( ஆன்மா ) வேண்டும் என்றால் பிறப்பற்ற இறப்பற்றவன் கடவுள். அவன்தான் இந்த உலகத்தைப் படைத்தான்
    என்று கூறுவதற்கும் உங்கள் கருத்துக்கும் என்ன வேறுபாடு. (சொர்க்கம் நரகம் கதையை இங்கு தவிர்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்..

    ReplyDelete
  90. நந்தன் அவர்களே

    கட்டிடத்தின் விரிசலில் முளைக்கும் மரங்கள் எப்படி முளைக்கின்றன. சுட்ட செங்கல் சுட்ட களிமண் சுண்ணாம்பு கலவையான சிமெண்ட் காற்றில் உள்ள ஈரப்பதம் இவற்றின் உதவியில் கூட விதை வளர்வதற்கு காரணமான ஆற்றல் ஆன்மா.

    பூமியின் சுழற்சியால் உருவாகும் ஈர்ப்பு விசையால் அனைத்து பருப்பொருள்களும் ஈர்க்கப்படும். உயிரினங்களில் அவ்விசையால் வளர்சிதை மாற்றம் நடைபெறுகிறது. சூரியனின் ஒளி. மண் நீர் காற்று ஆகிய நான்குமே உயிரிகளின் வளர்ச்சிக்கு உதவும் காரணிகள். அகத்தே உள்ள ஆன்மாவே அவற்றின் உயிர்த்தன்மையாக உள்ளது.
    ஆன்மவியல் நிகழ்வுகளே இயற்கையின் நியதி எனப்படுகிறது.

    ReplyDelete
  91. //இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம். //

    எனதான் சொன்னேன்.

    //அப்படியானால் இரண்டு ஆன்மாக்கள் இணைந்தால்தான் ஒரு புது ஆன்மா உருவாகுமோ?//
    இப்படி நான் சொல்லவில்லையே

    தயவு செய்து இட்டுக்கட்ட வேண்டாம்.


    //தற்கால குளோனிங் முறையை மறந்துவிட்டீர்களா? //(

    குளோனிங் என்பது உடல் சேர்க்கை இல்லாமல் செல் சேர்க்கையால் நடைபெறுகிறது. ஆன்மா உள்ள செல்சேர்க்கை. திரும்பவும் கேட்கிறேன் ஆன்மா அற்ற உயிரினத்தோற்றம் எது வென்று சொல்லுங்கள்.

    ReplyDelete
  92. //நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், டானிக் இவை எல்லாம் உயிரற்ற வேதிப்பொருகள்தான். ( ஜடப்பொருள்கள் )//

    மாத்திரைகளில் வேதிப்பொருள் நுண்ணிய அளவே மற்றவை வெள்ளைக்கோதுமை மாவு . கேப்சூல்கள் மாட்டு எலும்புகளில் இருந்து கிடைக்கும் ஜெலட்டினால் ஆனவை.
    டானிக்கிலும் சார்பிட்டால் என்ற சர்க்கரையே அதிக வீதத்தில் உள்ளது. வெறும் பாராசிட்டமாலை உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதால் அதை கோதுமை மாவுக்குள் வைத்து அதை உணவென்று உடலை நம்ப வைக்கும் தந்திரமே. நம் உடலில் உள்ள வேதிப்பொருளில் குறைவு ஏற்பட்டால் அதை வெளியில் இருந்து கொடுக்கிறோம். இந்த உயிர்ப்பொருள் தன்மையால்தான் அவற்றிற்கு காலாவதி தேதி கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாடிக்ஸ் என்பவை உயிர்ப்பொருட்களே. இரும்புத்துண்டை உடல் ஏற்றுக் கொண்டால் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
    சித்தவைத்தியத்தில் இரும்புச்சத்தை ஏற்ற அயசெந்தூரம் என ஒரு பொருள் உண்டு. அதை எடுத்துக் கொள்ளும் அளவு ஒரு குண்டூசி முனையளவே . அதை நாக்கில் வைத்து விட்டு அரை லிட்டர் பசும்பால் அருந்த வேண்டும். இங்கும் மருந்து எனும் வேதிப்பொருளை உட்கொள்ள உணவுப்பொருள் உதவுகிறது.

    ReplyDelete
  93. ஆனந்த் சாகர்5 March 2015 at 15:39

    @ஆன்ம ஞானம்,

    தற்போது ஆன்மீகம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை என்றும் நந்தனும் நீங்களும் செய்கின்ற விவாதத்தில் ஒருசில கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கிறேன் என்றும் நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். உங்களின் கேள்விகள் நன்றாக இருக்கின்றன. அவற்றிற்கு பதில் அளிக்க விரும்பினாலும் இப்பொழுது வேண்டாம் என்று நான் நினைப்பதால் மீதமுள்ள உங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு அத்துடன் நான் நிறுத்த்திக்கொள்கிறேன். பொறுத்துக்கொள்ளவும்.

    //ஆன்மா என்பது மனித மனதின் நகலாக அனுபவம் விருப்பம் என எதையோ தேடும் அதன் பயணம் எதை நோக்கி?//

    ஆன்மா என்பது மனித மனதின் நகல் என்று நான் கூறவில்லை. தனி ஆன்மா என்பது பேரான்மாவின் நகல் என்றுதான் கூறுகிறேன். தனி ஆன்மாவின் நோக்கம்,அதாவது பயணம் முழு பரிணாமத்தை அடைவதுதான். பேரான்மாவின் நோக்கம் அதனுடைய விருப்பங்களை அனுபவித்து பார்ப்பதுதான்.


    //பரிணாமத்தின் முதல் மனிதனுக்கு ஆன்ம உடல் இருந்ததா?//

    இருந்தது.

    //பல ஜட உடல்கள் மூலம் அது பெறும் அனுபவம் மூலம் ஆன்மா விருப்பங்களை நிறைவேற்றும் என்றீர்களே அதன் நோக்கம் இதுதான் என்றால் ஆன்மா ஆற்றல் வடிவில் உள்ள மனித மனம் போல் உள்ளதா.//


    ஆமாம்.

    // அல்லது தனது விருப்பங்களை அடைவதன் மூலம் திருப்தி அடைகிறதா//

    பசி,தாகம் போன்ற அவசியமான உடல் தேவைகளை நிறைவேற்றிய பின்பு பசி,தாக உணர்வுகள் அடங்குகிறது. இந்த உணர்வுகள் அடங்குவதையே திருப்திப்படுதல் என்கிறோம். ஆனால் தன்னுடைய விருப்பங்களை அனுபவித்து பார்ப்பதின் மூலம் ஆன்மா இப்படிப்பட்ட உணர்வு அடங்கி போதல் என்ற திருப்தி அடைவதில்லை. ஏனெனில் அதற்கு அப்படிப்பட்ட உணர்வுகள் இல்லை.

    // அல்லது அது பெறும் அனுபவங்களை வைத்து அது காணும் முடிவென்ன//

    அனுபவித்து பார்ப்பதுதான் ஆன்மாவின் நோக்கம். அந்த அனுபவங்களை வைத்து எந்த முடிவையும் எடுப்பது அதன் நோக்கமல்ல.

    ReplyDelete
  94. ஆனந்த் அவர்களே

    தங்களிடம் இருந்து பெற்ற பதில்களின் மூலம் பலவற்றை அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி .
    தங்களது வருகையை அவ்வப்போது இத்தளப்பக்கத்தில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  95. //வேதிப்பொருள்களின் கூட்டிணைவால் அதனுள் தானாக ஆற்றல் ( உயிர் ) உண்டாகாது என்றல் அந்த பிறப்பற்ற அழிவற்ற ஆன்மா எப்படி உருவானது என்றுச் சொல்லுங்கள்.
    பொருள்களுக்கு வெளியே ஒரு ஆற்றல் ( ஆன்மா ) வேண்டும் என்றால் பிறப்பற்ற இறப்பற்றவன் கடவுள். அவன்தான் இந்த உலகத்தைப் படைத்தான்
    என்று கூறுவதற்கும் உங்கள் கருத்துக்கும் என்ன வேறுபாடு. (சொர்க்கம் நரகம் கதையை இங்கு தவிர்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்..//

    வேதியலின் படி வேதிப்பொருள்களின் கூட்டுச்சேர்க்கையால் உருவாகும் ஆற்றல் உள்ளே தங்காது. வெளிப்படத்தான் செய்யும். அவை பெரும்பாலும் வெப்பம் , ஒளி , ஒலி , மின்னாற்றல் ஆகிய நான்காகத்தான் இருக்கும். வேதிப்பொருட்களின் உள் ஆற்றல் என்பது அணுக்களின் உள் ஆற்றலே. அணுவைத்துளைத்து ஆராய்ந்து பார்த்தால் அதன் இறுதி நிலை ஆற்றலாகத்தான் இருக்கும். அணுவைத்துளைப்பதென்பது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சியல்ல என்பதை நினைவில் கொள்க.
    சாதாரணமாக நிகழும் வேதிவினைகள் அணுவின் கருவைச்சுற்றி வரும் எலக்ட்ரான்களினாலேயே நடைபெறுகிறது.
    ஒவ்வொரு அணுவின் எலக்ட்ரான் சேர்க்கை ,
    எலக்ட்ரான் இழத்தல் . எலக்ட்ரான் பகிர்தல் என அதன் வினை நடைபெறுகிறது. இந்நிகழ்வின்போது ஆற்றல் வெளிப்படுமே தவிர உள் ஆற்றலாய் எதுவும் உருவாகாது. இந்த வேதி வினைகள் எல்லா ஜடப்பொருளிலும் நிகழும்.
    உயிர்ப்பொருளில் நடைபெறுவது என்ன.
    இந்த எலகட்ரான் செயல்பாடுகள் ஆன்ம ஆற்றலால் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு முதலில் ஆன்மா ஜடப்பொருளுடன் வினைபுரிய வேண்டும். இங்கு ஆன்மா எப்படி வந்தது என்பீர்கள். இது நான் எப்பொழுதும் சொல்லும் நிகழ்முறைதான். ஆன்மா ஒருமித்து ஜடப்பொருளானது. அதன் மீது ஆன்மா ஆற்றலாக வினைபுரிந்து உயிர்ப்பொருளானது.

    கடவுள் என்ற வார்த்தைக்கு அனைத்தையும் கடந்து உள் ள ஒரு பொருளே என்பதுதான். எல்லையற்ற ஆற்றலான ஆன்மா எனவும் சொல்லலாம்.

    ReplyDelete
  96. நந்தன்5 March 2015 at 20:39

    ## //இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம். //

    எனதான் சொன்னேன்.

    //அப்படியானால் இரண்டு ஆன்மாக்கள் இணைந்தால்தான் ஒரு புது ஆன்மா உருவாகுமோ?//
    இப்படி நான் சொல்லவில்லையே

    தயவு செய்து இட்டுக்கட்ட வேண்டாம்.//இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம். //

    எனதான் சொன்னேன்.

    //அப்படியானால் இரண்டு ஆன்மாக்கள் இணைந்தால்தான் ஒரு புது ஆன்மா உருவாகுமோ?//
    இப்படி நான் சொல்லவில்லையே

    தயவு செய்து இட்டுக்கட்ட வேண்டாம். ##

    ஆன்மா என்றாலும் உயிர் என்றாலும் ஒன்றுதானே?

    "இரண்டு உயிர் இணைந்தால்", "இரண்டு ஆன்மா இணைந்தால்"
    என்ன வேறுபாடு?

    ReplyDelete
  97. உயிர்கள் என்பது பலவிடங்களில் நான் உயிரினங்களைக்குறிக்கவே பயன்படுத்தினேன். அது எனது வார்த்தைப்பிழை . அது தாங்கள் சொல்லும் பொருளையும் தரும் என்பதால் பிழைக்கு மன்னிக்கவும். இனி பிரித்தயறியும் விதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். உயிரினம் எனவும் ஆன்மா எனவும் தனித்தனி பதங்களை பயன்படுத்துகிறேன்.

    ReplyDelete
  98. ஆன்மா பிறப்பற்றது. அழிவற்றது.
    கடவுள் பிறப்பற்றவர். அழிவற்றவர்.
    ஆன்மா அதுவே எல்லாமுமானது.
    கடவுள் எல்லாவற்றையும் படைத்தார்.
    ஆன்ம நிகழ்வுகள் அனைத்தும் தற்செயலே.
    கடவுளின் செயல்களுக்கு காரணம் உண்டு.
    ஆன்மா எதையும் திட்டமிடுவதில்லை.
    கடவுளின் செயல்கள் திட்டமிடப் பட்டவை.
    ஆன்மா தானே அனைத்து உயிரினமானது.
    கடவுள் அனைத்தையும் படைத்தார்.
    ஆன்மாவை வழிபட வேண்டியதில்லை.
    கடவுளை வழிபட வேண்டும்.
    ஆன்மாவை உணர்தலே ஆன்ம விழிப்புணர்வு.
    கடவுளை அடைதலே ஆன்மீக மோட்சம்.
    ஆன்ம ஆற்றலை பயன்படுத்தலாம்.
    கடவுளின் ஆற்றலை பெறக்கூட முடியாது.
    ஆன்மா அற்புதமான ஒன்றல்ல.
    கடவுள் அற்புதமான ஒன்று.
    ஆன்மா உடலோடு சேர்ந்த ஒன்று.
    கடவுள் வெளியே தனிப்பொருளாக உள்ளது.
    ஆன்மா அறிவியலை மெய்ப்பிக்கும்.
    கடவுள் அறிவியலை பொய்ப்பிக்கும்.
    ஆன்மா சுயமான சார்பற்றது.
    கடவுள் மனிதனைச் சார்ந்த பலவீனமானது.
    ஆன்மா ஆற்றலாக உள்ளது.
    கடவுள் கற்பனையாக உள்ளார்.
    ஆன்மாவுக்கு கடவுள் தேவையில்லை.
    கடவுளுக்கு ஆன்மா தேவை.

    இவ்விதமே நான் கடவுள் கொள்கையுடன் முரண்படுகிறேன்.

    ReplyDelete
  99. வணக்க வழிபாடுகளால் கடவுள் தற்புகழ்ச்சி காரனாகிறான்.
    பூஜை சடங்குகளால் பலவீனனாகிறான்.
    காணிக்கை இடுவதால் பிச்சைக்காரனாகிறான்.
    ஆலயம் தேவைப்படுவதால் பாதுகாப்பற்றவனாகிறான்.
    தூதர்கள் தேவைப்படுவதால் மொழியற்றவனாகிறான்.
    அவன் வார்த்தைகளை விளக்க வேதநூல்கள்
    தேவைப்படுவதால் அறிவற்றவனாகிறான்.
    தண்டிப்பதால் கொடுமைக்காரனாகிறான்.
    சாத்தானை வெல்லமுடியாமல் கோழையாகிறான்.
    மறுமையைக்காட்டி பொய்சொல்வதால் ஏமாற்றுக்காரனாகிறன்.
    தனது இருப்பை புரிய வைக்க படாதபாடு படுகிறான்.
    இத்தனை மனித குணங்கள் உள்ளதால் அவனும் மனிதனின் படைப்புகளில் ஒன்றே.

    ReplyDelete
  100. கடவுள் ஆண்டவன் என அழைக்கப்படுவதை விட ஆண்டை என்பதுதான் பொருத்தமாகும்.
    ஆண்டை அடிமை முறைதான் கடவுள் பகதன் முறை. கஷ்டங்களை ஆண்டவன் சோதனை எனும் பொழுது தன்னம்பிக்கை குறைகிறது. இவ்வுலக கஷ்டம் மறுமை வாழ்வுக்கான முதலீடு எனும் பொழுது கண் முன்னே உள்ள வாழ்க்கை கசந்து போகுமே. பிறப்பது ஒரு முறை நன்மையோ தீமையோ இந்த வாழ்விலே முடிந்து விடும். ஆன்ம பலத்துடன் வாழ்ந்து பார்ப்போம்.வாழ்க்கையை வசந்தமாக்குவோம்.

    ReplyDelete
  101. வேதங்கள் கானல்நீரை குடிக்கச்செய்து மரணதாகத்தை தீர்க்கச் சொல்லும். ஏட்டுச் சுரைக்காயை உண்டு பசியாறச் சொல்லும்.
    காணாத ஊருக்கு இல்லாத வழியிலே முடிவற்ற பயணம் செய்யச்சொல்லும். மனிதத்தை கொல்லும் சாதிக்கு குடைபிடிக்கும். குலத்தின் பெயரில் பிரித்தாண்டு சூழ்ச்சி செய்யும். உழைப்பவன் உழைக்க மட்டுமே செய்யவேண்டும் ஊதாரிகள் உண்டு உறங்க வேண்டுமென ஒவ்வாத சட்டம் செய்யும். வலிய்வன் வகுத்த சட்டத்தால் எளியவனைக் கொல்லும். ஏழைகளின் எட்டாக்கனியாக வலியோனுக்கு வாயருகே கனியாக சமதர்மம் பேணுவோர்க்கு எட்டிக்காயாக இருப்பவையே வேதநூல்கள்.

    ReplyDelete
  102. //நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், டானிக் இவை எல்லாம் உயிரற்ற வேதிப்பொருகள்தான். ( ஜடப்பொருள்கள் )//

    அவை உணவுகள் அல்ல மருந்துகள். தவிர எல்லா உணவுகளிலுமே சிறிதேனும் கனிம தனிமங்கள் அல்லது வேதிப்பொருள்கள் இருக்கும். நிமுஸூலைட் என்பது தாங்கள் சொல்லும் ஒரு வேதிப்பொருளே. அதனை தொடர்ச்சியாக உட்கொண்டால் முதலில் புரோஸ்டேட் பாதிக்கிறது.பின்னர் சிறுநீரகம் செயலிழக்கும். நான் சொல்வது முழுமையாக உட்கொள்ளக்கூடிய உணவுகளை.

    ReplyDelete
  103. இயற்கையின் நியதிகளை அறிவியல் விளக்கம் சொல்லும்.
    உதாரணமாக
    எந்த ஒரு வேதிப்பொருளும் அதன் திட வடிவத்தில் உள்ளது அதன் திரவ வடிவத்தில்
    உள்ளதில் மூழ்கும்.அதாவது உருகிய இரும்புக்குளம்பில் இரும்புத் துண்டை போட்டால் மூழ்கிவிடும்.ஆனால் நீரின் திட வடிவான பனிக்கட்டி நீரில் மூழ்குவதில்லை .
    அதனை அறிவியல் விளக்கம் கொடுத்து விட்டது. ஏன் இப்படி ஒரு விதிவிலக்கு இருக்க வேண்டும் என்று கேட்டால் மதங்கள் சொல்லும் அது கடவுளின் ஏற்பாடு இல்லையென்றால் உலகமே நீரில் மூழ்கி மனிதன் வாழவே முடியாமல் போயிருக்கும் என்று. அதற்கு உலகமே மனிதனுக்காக படைக்கப்பட்டதென மமதை உண்டு. எனது ஆன்மீகம் சொல்கிறது . அது ஒரு காரணகாரியமற்ற தற்செயல் நிகழ்வு. மனிதன் அதன் அனுகூலத்தால் உயிரோடு இருக்கிறான் என்று

    ReplyDelete
  104. நந்தன்6 March 2015 at 20:27

    ஏதாஎது ஒரு புள்ளி காரணகாரியமற்றதாகத்தான் இருக்கவேண்டும். அதில் எனக்கு மாற்றுக்கருத்தல்ல. ஆனால் உங்களின் "ஆன்மா இணைகிறது,வெளியேறுகிறது, விழிப்புணர்வு பெறுதல், அடுத்த உயிரினமாக பரிணமித்தல் போன்றவை எல்லாம் கடவுள் கொள்கையுடன்தான் ஒத்துப்போகிறது. இதனை கேளவிகள் ஊடாக விளக்கிக்கொள்வோம். தனித்து வேண்டாம்.

    //இரண்டு உயிர்கள் இணைந்தே இனப்பெருக்கம். //
    // உயிர்கள் என்பது பலவிடங்களில் நான் உயிரினங்களைக்குறிக்கவே பயன்படுத்தினேன். அது எனது வார்த்தைப்பிழை . அது தாங்கள் சொல்லும் பொருளையும் தரும் என்பதால் பிழைக்கு மன்னிக்கவும். இனி பிரித்தயறியும் விதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். உயிரினம் எனவும் ஆன்மா எனவும் தனித்தனி பதங்களை பயன்படுத்துகிறேன். //
    இரண்டு உயிரினங்கள் இணைந்தே இனப்பெருக்கம் என்று எடுத்துக்கொண்டாலும் பிழைதான் என கருதுகிறேன். முருங்கை மரக்கிளையில் இரண்டு இனப்பெருக்கச் செல்கள் இணைவதில்லை.

    // குளோனிங் என்பது உடல் சேர்க்கை இல்லாமல் செல் சேர்க்கையால் நடைபெறுகிறது. ஆன்மா உள்ள செல்சேர்க்கை. திரும்பவும் கேட்கிறேன் ஆன்மா அற்ற உயிரினத் தோற்றம் எது வென்று சொல்லுங்கள். //


    குளோனிங் என்பது செல் சேர்க்கையால் உருவாக்குவது அல்ல. உயிரினத்தின் ஸ்டெம்ப் செல் ஒன்றை எடுத்து உயிரினமாக உருவாக்குவது. ஒரு ஸ்டெம்ப் செல்லிருந்து பல உயிர்களை உருவாக்கலாம். உங்கள் கருத்துப்படி ஆன்மா வெளியேறி இறந்த உடல் செல்லிலிருந்தும் உருவாக்கலாம்.

    இனப்பெருக்கச் செல்களை இணைத்து உயிர் உருவாக்குவது டெஸ்ட்யூப் பேபி முறை.

    ReplyDelete
  105. //குளோனிங் என்பதை உயிரியல் நகலெடுத்தல் எனச் சொல்லலாம். இதில் மூன்று முக்கிய வகைகள் உண்டு.* மரபணு குளோனிங் : ஒரு உயிரினத்தின் ஒரு மரபணுவை மட்டும் அல்லது டி.என்.ஏ.யின் ஒரு பகுதியை மட்டும் பிரதிகள் எடுப்பதாகும். * இனப் பெருக்கத்திற்கான குளோனிங்: இது பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு மிருகத்தை அல்லது வேறு உயிரினத்தின் முழுமையான பிரதிமையை உருவாக்கல்.* சிகிச்சை முறையான குளோனிங் : இது உடலிலுள்ள மூலக் கலங்களான ஸ்டெம் செல் மூலம் ஒருவரது உடலிலுள்ள பழுதடைந்த கலங்களுக்குப் பதிலாக அதேபோன்ற அச்சொட்டான ஆரோக்கியமான கலங்களை உருவாக்குவதாகும். உதாரணமாக நீரிழிவு நோயாளரில் பீட்டா செல்களை உருவாக்கும் முயற்சியைச் சொல்லலாம்.நாம் மேலே குறிப்பிட்ட டாலியை எப்படி உருவாக்கியிருப்பார்கள். குளோனிங் முறையில் டாலி உருவாக்கப்பட்டது என்று மட்டும் தெரிந்துகொண்ட நாம். அது எந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பதை பார்ப்போம். குறிப்பிட்ட ஆடு இறப்பதற்கு முன்னரான 5 நாட்களுக்குள் அந்த ஆட்டிலிருந்து திசு மாதிரிகளை எடுத்து உறைய வைக்கிறார்கள். ஆய்வுகூட சேமிப்பறையில் ஏற்கனவே இருக்கும் இதனோடு எந்தவித தொடர்புமற்ற வேறொரு பெண் ஆட்டிடம் இருந்து பெறப்பட்ட முட்டையில் இணைக்கிறார்கள்.அதனது டி.என்.ஏ.யை முழுமையாக அப்புறப்படுத்திய பின்னர் வளர்ப்பு ஆட்டின் டி.என்.ஏ.வை மாற்றீடு செய்கின்றனர். இவ்வாறு பெறப்பட்ட கருமுட்டையை பின்னர் ஒரு வாடகை (தாய்) ஆட்டின் கருப்பையில் வைத்து இயற்கையாக வளரச் செய்வார்கள். காலகதியில் ஆட்டுக்குட்டி பிறக்கும். ஒரு மாதமாகும் வரை குட்டியானது வாடகைத் தாயின் பாலைக் குடித்து வளரும். குளோனிங் செய்யப்பட்ட கருவைச் சுமக்கும் தாயானது அதே இனத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டியது அவசியமல்ல. இருந்தபோதும் ஒத்த அளவுள்ள இனங்களிலிருந்து தேர்வு செய்தார்கள். பொதுவாக ஒரு குட்டி கிடைக்கும். ஆனால் சில தருணங்களில் அதே மாதிரியான இரண்டு மூன்று குட்டிகள் கிடைப்பதுண்டு.//

    இந்த இணையத்தில் கிடைத்த தகவல் டோலி என்ற முதல் குளோனிங் ஆட்டுக்குட்டி இரண்டு இனப்பெருக்க செல்களின் சேர்க்கையால் பிறந்ததாகவே சொல்கிறது.
    ஸ்டெம் செல்கள் என்பவையும் உயிருள்ள செல்களே.
    செயற்கையாய் ஒரு செல் செய்யப்பட்டால் தாங்கள் கூறும் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
    ஆராய்ச்சி நிலையில் உள்ள கொள்கையை விட நிரூபிக்கப்பட்ட உண்மை வலியது.

    ReplyDelete
  106. //இரண்டு உயிரினங்கள் இணைந்தே இனப்பெருக்கம் என்று எடுத்துக்கொண்டாலும் பிழைதான் என கருதுகிறேன். முருங்கை மரக்கிளையில் இரண்டு இனப்பெருக்கச் செல்கள் இணைவதில்லை. //

    முருங்கை மரம் இயல்பின்படி விதை மூலம் பெருகும் ஒரு மரமே. அதன் ஸ்திரத்தன்மை குறைவு காரணமாக அதன் பச்சைக்கிளை முறிந்தாலும் தளிர்க்கிறது. அதன் தகவமைப்பு மற்றும் பிழைத்தல் (survival) காரணமான செயலை இனப்பெருக்கத்துடன் ஒப்பிடக்கூடாது.

    ReplyDelete
  107. இவ்வுலகில் உயிரினங்களின் வகைபாடு இரண்டு. தாவரம் மற்றும் விலங்கு
    இவை உயிரினங்கள் என்ற வகையில் ஒன்றுபட்டாலும் வாழ்க்கை முறையில் வேறுபடுகின்றன. எனவே தாவரத்தின் நியதிகளை கொண்டு விலங்குகளை விளக்குவதும். விலங்குகளின் நியதியை கொண்டு தாவரத்தை விளக்குவதும் மிக கடினமே. வளர்ச்சியிருந்தால்தான் உயிரினம் என்றால் மரங்கள் மட்டுமே இறக்கும் வரை வளரும். மனிதன் உட்பட பல விலங்குகள் குறிப்பிட்ட வயது வரையே வளரும். அதன் பின் அதே அளவிலேயே பல நாட்கள் வரை உயிருடன் இருக்கும்என்று அறிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  108. ஆனந்த் சாகர்7 March 2015 at 20:25

    @ஆன்ம ஞானம்,

    //அப்படி எனில் ஆன்மா குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வரம்பிற்குள் வருகிறதா?//

    தனி ஆன்மாக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பிற்குள் வருகின்றன.

    //ஏனெனில் ஆன்ம வினையால் முதல் உயிரி தோன்றுகிறது. அது மரிக்கும் காலத்திற்குள் அதன் குழந்தை உயிரியை ஈன்றிருக்கும். இப்பொழுது இரண்டு ஆன்மாக்கள் உள்ளன. இரண்டாவது உயிரிக்கு ஆன்மா எப்படி வந்தது. மேலும் முதல் உயிரி மரிப்பதற்குள் எத்தனையோ உயிரிகளை ஈன்றிருக்கலாம்.//

    ஒவ்வொரு கரு உருவாகும்போது தனி ஆன்மாக்களில் ஏதாவது ஒன்று அந்த கருவை தேர்ந்தெடுக்கிறது. இப்படி எத்தனை ஜட உலக உயிரினங்கள் தோன்றினாலும் அவற்றை தேர்ந்தெடுக்க தனி ஆன்மாக்கள் உள்ளன.

    // அடுத்த தலைமுறையில் முன்பு மரித்த ஆன்மாக்கள் உடலை அடைகின்றன என வைத்துக்கொள்வோம். இதிலிருந்து பிறவி சுழற்சி ஆரம்பமாகிறது எனில் மரித்த ஜட உடலில் இருந்து வெளியேறிய எண்ணிக்கையை பொறுத்துதான் உயிர்ப் பெருக்கம் அமைந்ததா அல்லது மாறுபடும் எண்ணிக்கைக்கேற்ப புதிய ஆன்மாக்கள் உருவாகினவா அதாவது ஆற்றல் அளிக்கப்பட்டதா.//

    ஜட உலக உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பே தனி ஆன்மாக்கள் படைக்கப்பட்டுவிட்டன. தனி ஆன்மாக்களே ஜட உலகிற்கு ஜட உடல்மூலம் வந்து ஜட உலக அனுபவம் பெறுகின்றன. எனவே ஜட உலக உயிரினங்களின் எண்ணிக்கையை பொருத்து தனி ஆன்மாக்கள் புதிதாக தோன்றுவதில்லை. மாறாக தனி ஆன்மாக்களின் எண்ணிக்கையை பொருத்தே ஜட உலக உயிரினங்கள் ஜட உலகில் தோன்றி தோன்றி மறைந்துகொண்டிருக்கின்றன.

    // எல்லா ஆன்மாக்களும் மறுபிறவி எடுக்குமா அல்லது விழிப்படைந்த ஆன்மாக்கள் மட்டும் மறுபிறவி எடுக்குமா.//

    எல்லா தனி ஆன்மாக்களும் மறு பிறவி எடுக்கின்றன. அதற்காகத்தான் அவை படைக்கப்பட்டன. இது ஒரு முடிவுறாத சுழற்சி. எல்லா தனி ஆன்மாக்களும் விழிப்படைந்த ஆன்மாக்களே. அவற்றின் விழிப்புணர்வு அளவு தான் ஒன்றுக்கொன்று மாறுபடுகின்றன.

    //மறுபிறவிக்கொள்கையின் படி ஆன்மாக்கள் எத்தனை முறை பிறவி எடுக்கும் என ஏதேனும் வரைமுறை உண்டா.//

    மறுபிறவி என்பது வெறும் கொள்கை அல்ல. அது உண்மை. ஒரு சுழற்சியில் எத்தனைமுறை பிறவி எடுக்கலாம் என்பதை ஒவ்வொரு தனி ஆன்மாவும் சுயமாக முடிவெடுக்கின்றன. அவற்றிற்கு முழு சுதந்திரம் உள்ளது.

    // தற்கால உதாரணமாக நம் நாட்டில் 1940-1950 ல்
    முப்பது கோடி ஜட உடல்கள் இருந்தன . தற்பொழுது 120 கோடி ஜட உடல்கள் உள்ளன. முப்பது கோடியில் சுமார் இருபது கோடி பேர் இப்பொழுது உயிருடன் இல்லை எனக் கொண்டால். தற்பொழுதுள்ள மீதம் நூறு கோடி ஜட உடல்கள் எப்படி ஆன்மாவை பெற்றன. அது ஒற்றை ஆன்மாவின் ஆற்றல் பகிர்வு என கொண்டாலும். அது ஏன் 120 கோடி ஜட உடல்களுக்கும் கிடைக்காதா.//

    தனி ஆன்மாக்கள் அதிகமாக தற்காலத்தில் மனித உயிரினங்களாக பிறப்பெடுத்திருக்கின்றன(பரிணாமம் அடைந்திருக்கின்றன). அதனாலேயே மனிதர்களின் எண்ணிக்கை இப்பொழுது கூடியிருக்கிறது.

    //இதன் மூலம் தாங்கள் சொன்ன ஒற்றை ஆன்மாவின் நகல் 100 கோடி என கொள்வோம். அப்படிஎனில் ஒவ்வொரு உயிரிக்கும் வெளியில் இருந்தே ஆன்ம ஆற்றல் தனித்தனியாக கிடைப்பதாக அல்லவா கருத வழிசெய்கிறது.//

    எந்த ஒரு உயிரினத்திற்கும் வெளியிலிருந்து ஆற்றல் கிடைப்பதில்லை. எல்லாமே பேரான்மாவிற்குள் அடக்கம். பேரான்மாவே எல்லாவற்றையும் இயக்கும் ஆற்றலாக உள்ளது. பேரான்மாவிற்கு வெளியே எதுவும் இல்லை.

    ReplyDelete
  109. ஆனந்த் சாகர்7 March 2015 at 20:30

    @ஆன்ம ஞானம்,

    //ஆனந்த் அவர்களே

    தங்களிடம் இருந்து பெற்ற பதில்களின் மூலம் பலவற்றை அறிந்து கொண்டேன்.மிக்க நன்றி . //

    நானும் தங்களிடமிருந்து பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.


    //தங்களது வருகையை அவ்வப்போது இத்தளப்பக்கத்தில் எதிர்பார்க்கிறேன்.//

    வழக்கம்போல் அவ்வப்போது இந்த தளத்திற்கு வந்து கொண்டிருப்பேன். இஸ்லாம் குறித்த எனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன்.

    ReplyDelete
  110. நந்தன்8 March 2015 at 13:10

    ஏனோ எனது பின்னோட்டத்தை கூகிள் ஏற்க மறுக்கிறது. அதனால் தனித்தனியாக பதிவிட்டுள்ளேன்.
    There are two ways to make an exact genetic copy of an organism in a lab: artificial embryo twinning and somatic cell nuclear transfer.

    2. Somatic Cell Nuclear Transfer
    Somatic cell nuclear transfer (SCNT), also called nuclear transfer, uses a different approach than artificial embryo twinning, but it produces the same result: an exact genetic copy, or clone, of an individual. This was the method used to create Dolly the Sheep.
    What does SCNT mean? Let's take it apart:
    Somatic cell: A somatic cell is any cell in the body other than sperm and egg, the two types of reproductive cells. Reproductive cells are also called germ cells. In mammals, every somatic cell has two complete sets of chromosomes, whereas the germ cells have only one complete set.

    Transfer: Moving an object from one place to another. To make Dolly, researchers isolated a somatic cell from an adult female sheep. Next they removed the nucleus and all of its DNA from an egg cell. Then they transferred the nucleus from the somatic cell to the egg cell. After a couple of chemical tweaks, the egg cell, with its new nucleus, was behaving just like a freshly fertilized egg. It developed into an embryo, which was implanted into a surrogate mother and carried to term. (The transfer step is most often done using an electrical current to fuse the membranes of the egg and the somatic cell.)
    The lamb, Dolly, was an exact genetic replica of the adult female sheep that donated the somatic cell. She was the first-ever mammal to be cloned from an adult somatic cell.
    How does SCNT differ from the natural way of making an embryo?
    Natural fertilization, where egg and sperm join, and SCNT both make the same thing: a dividing ball of cells, called an embryo. So what exactly is the difference between the two?
    An embryo's cells all have two complete sets of chromosomes. The difference between fertilization and SCNT lies in where those two sets come from.
    In fertilization, the sperm and egg have one set of chromosomes each. When the sperm and egg join, they grow into an embryo with two sets—one from the father's sperm and one from the mother's egg.
    In SCNT, the egg cell's single set of chromosomes is removed. It is replaced by the nucleus from a somatic cell, which already contains two complete sets of chromosomes. So, in the resulting embryo, both sets of chromosomes come from the somatic cell.

    ReplyDelete
  111. நந்தன்8 March 2015 at 13:13

    மேலுள்ள ஆங்கில உரையை நான் தமிழாக்கம் செய்யத்தேவையில்லை என கருதுகிறேன். சோமடிக் செல்லை முட்டை செல்லுடன் இங்கு இணைக்கப்படுவதுகூட கிடையாது. முட்டை செல்லில் உள்ள குரோமோசோம்களை நியூக்ளியஸ்ஸை மாற்றுவதன் மூலம் மாற்றீடுதான் செய்யப்படுகிறது. எனவே ஒரே செல்லிலிருந்துதான் குளோனிங் முறையில் டாலி என்ற ஆடும் உருவாக்கப்பட்டுள்ளது.
    தொடர்புள்ள இணைய முகவரி; http://learn.genetics.utah.edu/content/cloning/whatiscloning/

    // இவ்வுலகில் உயிரினங்களின் வகைபாடு இரண்டு. தாவரம் மற்றும் விலங்கு
    இவை உயிரினங்கள் என்ற வகையில் ஒன்றுபட்டாலும் வாழ்க்கை முறையில் வேறுபடுகின்றன. எனவே தாவரத்தின் நியதிகளை கொண்டு விலங்குகளை விளக்குவதும். விலங்குகளின் நியதியை கொண்டு தாவரத்தை விளக்குவதும் மிக கடினமே. வளர்ச்சியிருந்தால்தான் உயிரினம் என்றால் மரங்கள் மட்டுமே இறக்கும் வரை வளரும். மனிதன் உட்பட பல விலங்குகள் குறிப்பிட்ட வயது வரையே வளரும். அதன் பின் அதே அளவிலேயே பல நாட்கள் வரை உயிருடன் இருக்கும்என்று அறிந்து கொள்ளவும். //
    7 March 2015 at 19:41

    குறிப்பிட்ட வயதுக்குப்பின் மனிதன் உட்பட விலங்கினங்களில் வளர்ச்சி நின்று போகும் என்று உங்களுக்கு யார் சொன்னது. உங்கள் வயது 35 சுற்றி இருக்கும் என்று கருதுகிறேன். தினமும் பாலும் முட்டையும் சாப்பிட்டு பாருங்கள். உங்கள் எடை கூடிவிடும். வளர்ச்சி என்பது உயரம் மட்டுமல்ல.
    நாம் இங்கு உயிரினங்கள் எப்படி வளர்கிறது, சாப்பிடுகிறது என்று விவாதிக்கவில்லை. அதன் ஆன்மா பற்றி விவாதித்து வருகிறோம். அனைத்து உயிரினங்களிலும் இருப்பது ஒரே ஆன்மாதான் என்பது உங்கள் கருத்து. அந்த ஒரே ஆன்மா பற்றியும் அதன் தேவையைப்பற்றியும் நாம் விவாதித்து வருகிறோம்.

    இரண்டு ஆன்மாக்கள் (உயிரிகள்) இணைந்து ஒரு உயிர் உண்டானது என்று நீங்கள்
    சொல்லியுள்ளதால் அவ்வாறில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக குளோனிங் மற்றும் முருங்கை மரக்கிளையை சொல்லியுள்ளேன். முருங்கை மரக்கிளை மட்டுமல்ல. பதிகம் போடும் முறை (முருங்கை மரக்கிளை வளரும் முறை) பல தாவரங்களுக்கு உண்டு. ரோஜா செடி, மல்லிகைச் செடி போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும். வாழை மரம் முற்றிலும் வேறபாடானது. பக்ககிளை வெடித்தல் முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. இது போன்றும் வேறு தாவரங்கள் உண்டு.

    // முருங்கை மரம் இயல்பின்படி விதை மூலம் பெருகும் ஒரு மரமே. அதன் ஸ்திரத்தன்மை குறைவு காரணமாக அதன் பச்சைக்கிளை முறிந்தாலும் தளிர்க்கிறது. அதன் தகவமைப்பு மற்றும் பிழைத்தல் (survival) காரணமான செயலை இனப்பெருக்கத்துடன் ஒப்பிடக்கூடாது. // --- நீங்கள்
    6 March 2015 at 22:51


    இனப்பெருக்கம் இல்லாமல் வேறு என்னவாம்? வேடிக்கையான பதில். இதெல்லாம் இருக்கட்டும். ஆன்மா இணைகிறது வெளியேறுகிறது என்பதுதான் முதல் பொருள். இதன் மூலம் ஆன்மா என்ற ஒன்று தனித்து இருக்கிறதா இல்லையா என்பதே நாம் எட்ட வேண்டிய முடிவு. அல்லது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முடிவு.

    // வெப்பத்தால் சுடப்பட்ட விதை எந்த நீரைக்கொண்டும் மண்ணைக் கொண்டும் வளராது என சொல்லி உள்ளீர்கள். ## வெப்பத்தால் அதன் ஆன்ம ஆற்றல் வெளியேறி விட்டது. ## //---நீங்கள்
    3 March 2015 at 23:34

    மாத்திரைகளில் வேதிப்பொருள் நுண்ணிய அளவே மற்றவை வெள்ளைக்கோதுமை மாவு . கேப்சூல்கள் மாட்டு எலும்புகளில் இருந்து கிடைக்கும் ஜெலட்டினால் ஆனவை.
    டானிக்கிலும் சார்பிட்டால் என்ற சர்க்கரையே அதிக வீதத்தில் உள்ளது. வெறும் பாராசிட்டமாலை உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதால் அதை கோதுமை மாவுக்குள் வைத்து அதை உணவென்று உடலை நம்ப வைக்கும் தந்திரமே. நம் உடலில் உள்ள வேதிப்பொருளில் குறைவு ஏற்பட்டால் அதை வெளியில் இருந்து கொடுக்கிறோம். ## இந்த உயிர்ப்பொருள் தன்மையால்தான் ## அவற்றிற்கு காலாவதி தேதி கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாடிக்ஸ் என்பவை உயிர்ப்பொருட்களே. இரும்புத்துண்டை உடல் ஏற்றுக் கொண்டால் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
    சித்தவைத்தியத்தில் இரும்புச்சத்தை ஏற்ற அயசெந்தூரம் என ஒரு பொருள் உண்டு. அதை எடுத்துக் கொள்ளும் அளவு ஒரு குண்டூசி முனையளவே . அதை நாக்கில் வைத்து விட்டு அரை லிட்டர் பசும்பால் அருந்த வேண்டும். இங்கும் மருந்து எனும் வேதிப்பொருளை உட்கொள்ள உணவுப்பொருள் உதவுகிறது.
    4 March 2015 at 23:46

    உடலை நம்ப வைக்கும் தந்திரமே என்றால் ஆன்மாவையே டபாய்கிறார்கள் என்று பொருள். வறுத்த கொண்டைக்கடலையில் மட்டுமல்ல. அரைத்த கோதுமை மாவு, வேகவைத்த காய்கறிகள், அரிசியாக்கப்பட்ட நெல், உப்பு, பால், வெண்ணை..... அனைத்திலும் உங்கள் கருத்துப்படி ஆன்மா வெளியேறியவைகள்தான். நாம் உண்ணும் பெரும்பாலானவை உயிர்களற்றவை. ஆனால் இவைகள் உயிர் பொருள்கள் என்று இப்பொழுது குறிப்பிடுகிறீர்கள். எது சரி?

    ReplyDelete
  112. //உடலை நம்ப வைக்கும் தந்திரமே என்றால் ஆன்மாவையே டபாய்கிறார்கள் என்று பொருள். வறுத்த கொண்டைக்கடலையில் மட்டுமல்ல. அரைத்த கோதுமை மாவு, வேகவைத்த காய்கறிகள், அரிசியாக்கப்பட்ட நெல், உப்பு, பால், வெண்ணை..... அனைத்திலும் உங்கள் கருத்துப்படி ஆன்மா வெளியேறியவைகள்தான். நாம் உண்ணும் பெரும்பாலானவை உயிர்களற்றவை. ஆனால் இவைகள் உயிர் பொருள்கள் என்று இப்பொழுது குறிப்பிடுகிறீர்கள். எது சரி?//

    உணவுப்பொருட்கள் என்றுதான் குறிப்பிட்டேன். தாங்கள் உயிர்பொருள்கள் என நான் சொன்னதாக சொல்கிறீர்கள். எந்த இடத்தில் சொன்னேன் என சுட்டிக்காட்டவும்

    //இந்த உயிர்ப்பொருள் தன்மையால்தான் அவற்றிற்கு காலாவதி தேதி கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாடிக்ஸ் என்பவை உயிர்ப்பொருட்களே.//

    அழுகக்கூடியது கெட்டுப்போகக்கூடியது என்றால் அவற்றின் மீது பூஞ்சைகள் பாக்டீரியாக்கள் ஆகியன வளரும் என்பதை உயிர்ப்பொருள் தன்மை என குறிப்பிட்டேன்.இரும்பு போன்ற ஜடப்பொருட்கள் அழுகாது கெட்டுப்போகாது என்பதை பிரித்துக்காட்டவே அச்சொல்லை பயன்படுத்தினேன்.

    உயிர்ப்பொருள்களின் விளைபொருட்கள் மீண்டும் அந்தத்தாவரமாகும் ஆற்றலைக்கொண்டிருந்தால் அவற்றில் ஆன்மா உள்ளது. விதைத்தாலும் முளைக்கவில்லை என்றால் அதில் ஆன்மா இல்லை என பொருள்.

    மேலும் தாங்கள் மனித செயல்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதால் இயற்கை நியதிகளை மனித நியதியாக கருதுகிறீர்.
    மனிதன் தோன்று முன்பே தாவரங்கள் தோன்றி விட்டன. அப்போதைய சூழ்நிலையில் ஏற்பட்ட அதன் பிழைத்தல் முறையை நான் சொல்கிறேன். தாங்கள் வணிக ரீதியாக மனிதன் முருங்கையை வெட்டி நடுவதை உதாரணம் சொல்கிறீர்கள். அதனால்தான் மண்ணில் மட்டுமே விழுந்து முளைக்க வேண்டிய விதை உங்கள் சட்டைப்பைக்கு சென்றது.
    அதேபோல் தாவரங்கள் உங்களுக்கான உணவை செய்வதற்காக தோன்றவில்லை என்பதையும் தாவரத்தின் இனப்பெருக்க முறையின் விளைபொருளை நாம் உணவாக உண்டு பழகிவிட்டோம். அதன் பிறகுதான் வேளாண்மை இன்ன பிற விஷயங்கள் எல்லாம் என்பதையும் நினைவு கூறுங்கள்.

    ஆன்மவியலை விவாதிக்கையில் தாவரங்களில் மனிதனின் பங்களிப்பை நீக்கி பார்த்தால் மட்டுமே ஆன்மாவின் இருப்பை புரிந்து கொள்ளமுடியும்.

    ReplyDelete
  113. நந்தன்9 March 2015 at 19:51

    ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு பதில் சொல்லி நன்றாகவே சமாளிக்கிறீர்கள்.
    ஜடப்பொருள், உயிர் பொருள் இப்பொழுது புதிதாக உயிர்தன்மைப் பொருள்.

    மருந்துப்பொருள்கள் ஜடப்பொருள்கள் என்பதால் உணவுப்பொருள்களில் வைத்து தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உணவுப் பொருள்கள் என்றால் உயிர்தன்மைப் பொருள்கள் என் புரிந்து கொள்கிறேன். உப்பும், பாலும் உயிர்தன்மைப் பொருள்களா?

    வாழைமரம் இயற்கையிலேயே பக்கவெடிப்பு முறையில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இதில் மனிதனின் கை வண்ணம் ஏதும் இல்லை. ரோஜா, மல்லிகை ஆகியனவும் இயற்கையிலேயே தனது கிளைகள் மூலம்தான் இனப்பெருக்கம் செய்கின்றன என நினைக்கின்றேன். மனிதனின் கைவண்ணம் இருந்தால் என்ன? நமக்கு இங்கு அது ஆன்மா உள்ள பொருளா இல்லையா என்பதுதானே? மனிதனின் கைபட்டதால் ஆன்மா இணைகிறதா அல்லது வெளியேறுகிறதா என்ன?

    உயிரினங்களின் உணவு சுழற்சி முறையை மறந்துவிட்டீர்களா? இயற்கையின் விதிப்படிதான் கொண்டைக்கலை என் சட்டைப்பைக்குள் வந்தது.

    // உயிர்ப்பொருள்களின் விளைபொருட்கள் மீண்டும் அந்தத்தாவரமாகும் ஆற்றலைக்கொண்டிருந்தால் அவற்றில் ஆன்மா உள்ளது. விதைத்தாலும் முளைக்கவில்லை என்றால் அதில் ஆன்மா இல்லை என பொருள். //
    சுற்றிவளைத்து பதில் சொல்லுவதிலும் கைதேர்ந்தவர்தான் நீங்கள். இப்பதில் மூலம் உணவுப் பொருட்களுக்கு ஆன்மா இல்லை என புரிந்து கொள்கிறேன். ஆனால் உயிர்தன்மை என்பதை எப்படி புரிந்து கொள்வது? பூஞ்சைகள், காளான்கள் அதில் வளர்வது என்பது, பிற உயிரினம் நாம் உட்பட உணவுப் பொருளாக அதை எடுத்துக் கொள்வதாகும். அழுகுவது என்பது சிதைமாற்றம் நிகழ்வதாகும். ஊறவைத்த கொண்டக்கடலை அழுகத் தொடங்கிவிட்டால் முளைக்காது. அதனால்தான் ஏற்கனவே நீங்கள், “ஆன்மா வெளியேறிவிட்டால் வளர்சிதைமாற்றம் நடைபெறாது” என்று சொன்னபோது நான் “ஆன்மா வெளியேறிவிட்டாலும் சிதைவுறும் நிகழ்வு நடைபெறும்” என்று ஒன்னதற்கு பதில் ஏதும் சொல்லாது இப்பொழுது “அழுகும்” என ஒப்புக்கொள்கிறீர்கள்.

    உயிர்தன்மை என்பதற்கும், ஆன்மவியலை விவாதிக்கையில் தாவரங்களில் மனிதனின் பங்களிப்பை நீக்கி பார்த்தால் மட்டுமே ஆன்மாவின் இருப்பை புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கும் சிறு விளக்கம் தரவும்.

    ReplyDelete
  114. நந்தன் அவர்களே

    சில ஜடப்பொருள்கள் இல்லாவிடில் வாழவே முடியாது. நீர் ஆக்ஸிஜன் போன்றவை. இதையும் தாங்கள் சொல்லியிருக்கலாம்.

    //உயிர்தன்மை என்பதற்கும், ஆன்மவியலை விவாதிக்கையில் தாவரங்களில் மனிதனின் பங்களிப்பை நீக்கி பார்த்தால் மட்டுமே ஆன்மாவின் இருப்பை புரிந்து கொள்ளமுடியும் என்பதற்கும் சிறு விளக்கம் தரவும்.//

    உயிர்தன்மை அல்ல உயிர்பொருள் தன்மை. உயிர்ப்பொருள்களாய் இருந்து பின்னர் உயிரின்றி ஜடப்பொருளானவை. அழுகும் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை.
    தாங்கள் சொன்ன நெல் விதை போன்றவை.

    ReplyDelete
  115. //உயிர் தன்மை உள்ள பொருளாக இருந்தால்தான் உணவாக முடியுமா? நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், டானிக் இவை எல்லாம் உயிரற்ற வேதிப்பொருகள்தான். ( ஜடப்பொருள்கள் )//
    //

    இந்த உயிர்ப்பொருள் தன்மையால்தான் அவற்றிற்கு காலாவதி தேதி கொடுக்கப்படுகிறது. ஆன்டிபயாடிக்ஸ் என்பவை உயிர்ப்பொருட்களே//


    //அவை உணவுகள் அல்ல மருந்துகள். தவிர எல்லா உணவுகளிலுமே சிறிதேனும் கனிம தனிமங்கள் அல்லது வேதிப்பொருள்கள் இருக்கும். நிமுஸூலைட் என்பது தாங்கள் சொல்லும் ஒரு வேதிப்பொருளே. அதனை தொடர்ச்சியாக உட்கொண்டால் முதலில் புரோஸ்டேட் பாதிக்கிறது.பின்னர் சிறுநீரகம் செயலிழக்கும். நான் சொல்வது முழுமையாக உட்கொள்ளக்கூடிய உணவுகளை.//

    ஜடப்பொருள், உயிர் பொருள் இப்பொழுது புதிதாக உயிர்தன்மைப் பொருள்.

    //மருந்துப்பொருள்கள் ஜடப்பொருள்கள் என்பதால் உணவுப்பொருள்களில் வைத்து தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உணவுப் பொருள்கள் என்றால் உயிர்தன்மைப் பொருள்கள் என் புரிந்து கொள்கிறேன். உப்பும், பாலும் உயிர்தன்மைப் பொருள்களா?//

    தாங்களாகவே உணவுப்பொருள்கள் எல்லாம் உயிர்ப்பொருட்கள் என கருத்து கூறி அதை நான் சொன்னதாக வேறு இட்டுக்கட்டுவது தங்களுக்கு அழகா?

    உணவுப்பொருள்கள் உயிர்ப்பொருள் தன்மை ஙகொண்டவை என்று சொன்னதை எல்லா உணவுப்பொருள்களும் உயிர்ப்பொருட்கள் என நான் சொன்னதாக திரித்தீர்கள்.

    மேலே குறிப்பிட்ட ஆன்டிபயாடிக்ஸ் என்பவை பாக்டீரியா அமீபா புரோட்டா சோவா போன்ற உயிரிகளைக் கொல்லும் எதிர் உயிரிகள் எனதான் சொன்னேன்.

    இவை என் வாதத்தில் உள்ள மெய்ப்பொருளை திரிக்க எனது வார்த்தைகளை வைத்து நீங்கள் விளையாடுவது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. வார்த்தை விளையாட்டால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் ஆகாது.

    ReplyDelete
  116. தாவரங்களின் வாழ்க்கை சுழற்சிக்கு மனிதன் தேவையில்லை. மனிதன் தவிர அத்தனை விலங்குகளும் உணவுக்காக மட்டுமே தாவரங்களையும் மற்ற பிராணிகளையும் சார்ந்துள்ளன. இதில் மனிதன் தன் சுயலாபத்துக்காக ஈடுபடும் முயற்சியில் அனைத்து உயிரினங்களும் தனக்காக படைக்கப்பட்டவை என எண்ணுகிறான்.அதன் அடிப்படையில் வந்த கொள்கையே உணவுச்சங்கிலி. உணவுச்சங்கிலியில் மனிதனை நீக்கிவிட்டாலும் வெற்றிடம் உருவாகாது. மனிதனின் உணவுத் தேவையில் இடம்பெறாத புலிகளும் சிங்கங்களும் யானைகளும் ஏன் குறைந்துள்ளன. மனிதனின் லாப வெறிதானே அதற்குகாரணம்.

    தாங்கள் அழுகுதல் என்றால் சிதைவு என்றீர்கள். சிதைவு என்பது கதிரியக்க தனிமங்களின் சிதைவுப்பண்பே. மற்றவை உருமாற்றமே. ரேடியம் தொடர்ந்து கதிரியக்க ஆற்றலை வெளியிட்டு சில காலம் கழித்து காணாமல் போய்விடும். தாங்கள் சொன்ன சிதைவை மறுபரிசீலனை செய்யவும்.

    ReplyDelete
  117. நந்தன்10 March 2015 at 21:49

    //உணவுப்பொருள்கள் உயிர்ப்பொருள் தன்மை ஙகொண்டவை என்று சொன்னதை எல்லா உணவுப்பொருள்களும் உயிர்ப்பொருட்கள் என நான் சொன்னதாக திரித்தீர்கள்.//

    உணவுப் பொருட்கள் உயிர் பொருள் தன்மை கொண்டவை என்று இப்பொழுது இந்த மரமண்டைக்கு புரிந்துள்ளது.

    ஜடப்பொருள், உயிர் பொருள், உயிர்பொருள் தன்மை கொண்டவைகளை விளக்கவும்.

    தங்கள் கருத்துப்படி வளர்ச்சிதை மாற்றம் என்றால் என்ன என்பதையும் கொஞ்சம் கூறவும்.

    ReplyDelete
  118. ஆனந்த் சாகர்11 March 2015 at 10:57

    @நந்தன்,

    எது உயிர்ப்பொருள், எது உயிரற்ற பொருள் என்ற கேள்வியையே நீங்கள் வெவ்வேறு வகையில் தொடர்ந்து கேட்டு அந்த கேள்வியையே சுற்றி சுற்றி வருகிறீர்கள். ஆன்ம ஞானமும் அதற்கு மாங்கு மாங்கென்று பதில் கூறிக்கொண்டு இருக்கிறார். உங்களிடம் வேறு கேள்வி எதுவும் இல்லையா? ரொம்பவும் போரடிக்கிறது! முருங்கை மரம், வாழை மரம், கொண்டைக்கடலை என்று உதாரணங்களைகாட்டி திரும்ப திரும்ப நீங்கள் கேட்கும் ஒரே கேள்விக்கு ஆன்ம ஞானம் மிக சுருக்கமாக பதில் அளித்து உங்களை அடுத்த கேள்விக்கு நகர்த்தி சென்றிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete
  119. நந்தன்11 March 2015 at 17:49

    @ஆனந்த சாகர்.

    ஆன்மா உள்ள பொருள், ஆன்மா அற்ற பொருள் என்பதை தெளிவாக வரையறுத்திடத்தான் நான் முயற்சிசெய்கிறேன். வளர்ச்சிதை மாற்றத்தையும், உயிர் பொருள் தன்மை என்றும் தேவையில்லாத விளக்கத்தை தந்துள்ளது யார் என்று பாருங்கள். அதனால் கடைசியாக இந்த மூன்று கேள்விகளையும் வைத்துள்ளேன். இந்த நான்கு கேள்விகளுக்கும் சுற்றிவளைக்காமல் பதில் சொன்னால் ஆன்மா விழிப்புணர்வு பெறுவதை அறிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
  120. உயிருள்ள பொருள் ஆன்மா உள்ள பொருள்.
    உயிரற்றவை ஜடப்பொருள்.
    உயிர்ப்பொருளாய் இருந்து ஆன்மா வெளியேறியபின் உள்ள உயிரற்ற பொருள் உயிர்ப்பொருள் தன்மை கொண்ட பொருள்.

    //மாற்றத்தையும், உயிர் பொருள் தன்மை என்றும் தேவையில்லாத விளக்கத்தை தந்துள்ளது யார் என்று பாருங்கள். அதனால் கடைசியாக இந்த மூன்று கேள்விகளையும் வைத்துள்ளேன். இந்த நான்கு கேள்விகளுக்கும் சுற்றிவளைக்காமல் பதில் சொன்னால் ஆன்மா விழிப்புணர்வு பெறுவதை அறிந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்//

    நீங்கள் ஆரம்பததில் இருந்தே எனது கருத்துகளை பொய்யாக்க வேண்டும் என்ற முனைப்பில்தான் விவாதம் செய்கிறீர்கள்.
    எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு ஏதாவது ஒரு கேள்வியாவது கேட்டீர்களா?
    இனி தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஓரிரு வரிகளிலே விடையளிக்கிறேன். இந்த நிபந்தனை எனக்கு மட்டுமே.தங்களுக்கு இல்லை. சுருங்கச் சொல்லின் விளங்க வைக்கும் முறையையே இனி பின்பற்றுகிறேன்.

    நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை சரியாக கணித்து அதற்கேற்றாற் போல் எதிர்கருத்தை பயன்படுத்தி விவாதத்தை கொண்டு செல்லும் திறமை உங்களிடம் உள்ளது. அதற்கு எனது பாராட்டுகள். தங்களிடம் கணிப்புத்திறன் சிறப்பாக உள்ளது.
    மென்மேலும் அதை வளர்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  121. //முருங்கை மரம், வாழை மரம், கொண்டைக்கடலை என்று உதாரணங்களைகாட்டி திரும்ப திரும்ப நீங்கள் கேட்கும் ஒரே கேள்விக்கு ஆன்ம ஞானம் மிக சுருக்கமாக பதில் அளித்து உங்களை அடுத்த கேள்விக்கு நகர்த்தி சென்றிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. //

    தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  122. நந்தன்12 March 2015 at 21:17

    //உயிருள்ள பொருள் ஆன்மா உள்ள பொருள்.
    உயிரற்றவை ஜடப்பொருள்.
    உயிர்ப்பொருளாய் இருந்து ஆன்மா வெளியேறியபின் உள்ள உயிரற்ற பொருள் உயிர்ப்பொருள் தன்மை கொண்ட பொருள்.//

    அதே கேள்வியில் மீண்டும் வருவதற்கு என்னை மன்னிக்கவும்.

    இம் மூன்றுக்கும் சில எடுத்துக்காட்டுதகளைக் கூறவும். அத்துடன் வளர்ச்சிதைமாற்றத்தைப் பற்றியும் கூறவும்.

    எனது அடுத்தக் கேள்வி: ஆன்மா விழிப்புணர்வு பெறுதல் என்றால் என்ன?

    அய்யா, நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆனாலும் அதிகம் தெரியாது. அதனால் தெரிந்துகொள்வதுடன் தங்கள் நிலைப்பாட்டை (ஆன்மீகம்) மறுக்கவும் செய்துவிடலாம் என்று கருதி விவாதம் செய்து வருகிறேன்.
    ஆரம்பத்தில் ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றுதான் கூறினேன். ஆனால் பாலாய்போன மனது ஒத்துழைக்க மறுக்கிறது. தங்கள் கருத்தை மறுக்க அனுமதிக்கிறீர்களா? அல்லது விவரங்களை மட்டும் தெரிந்து கொள் என்கிறீர்களா? என்பதையும் சொல்லிவிடவும்.

    ReplyDelete
  123. //இம் மூன்றுக்கும் சில எடுத்துக்காட்டுதகளைக் கூறவும். அத்துடன் வளர்ச்சி1தைமாற்றத்தைப் பற்றியும் கூறவும்//

    நெற்பயிர் உயிருள்ளது
    அரிசி உயிர்ப்பொருள் தன்மையுள்ளது
    இரும்பு துண்டு ஜடப்பொருள்.

    ReplyDelete
  124. செல் பிளந்து இரட்டித்தல் வளர்ச்சி..
    முதிர்ந்த செல்கள் இறந்து முடியாகவோ நகமாகவோ அழுக்காகவோ மாறுதல் சிதைமாற்றம்.

    ReplyDelete
  125. //அய்யா, நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவன். //
    அதை உங்கள் மூன்றாவது கேள்வியிலேயே உணர்ந்து விட்டேன்

    //ஆனாலும் அதிகம் தெரியாது. அதனால் தெரிந்துகொள்வதுடன் தங்கள் நிலைப்பாட்டை (ஆன்மீகம்) மறுக்கவும் செய்துவிடலாம் என்று கருதி விவாதம் செய்து வருகிறேன்.//
    அதையும் மிக திறமையாக செய்கிறீர்கள்.அதற்கு எனது பாராட்டுகள்

    //ஆரம்பத்தில் ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றுதான் கூறினேன். ஆனால் பாலாய்போன மனது ஒத்துழைக்க மறுக்கிறது. //
    ஆன்மிகத்தை அறிந்தால் அந்த மனதையே கட்டுப்படுத்தலாம்.


    //தங்கள் கருத்தை மறுக்க அனுமதிக்கிறீர்களா? //
    அது நந்தனின் சுதந்திரமான உரிமை.
    தங்கள் மறுப்புகளை வரவேற்கிறேன்.
    //
    //அல்லது விவரங்களை மட்டும் தெரிந்து கொள் என்கிறீர்களா? என்பதையும் சொல்லிவிடவும்.//.

    நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது உங்களுக்கு விவரம் சொல்ல. உங்களிடம் நான் கற்றுக்கொள்கிறேன். நம் இருவர் கருத்துகளில் இருந்து இதைப்படிப்பவர்கள் ஏதாவது கற்றுக்கொள்ளட்டும்.

    தங்களிடம் ஒரே ஒரு வேண்டு கோள். எனது கருத்துகளை மறுக்கும் போது அதை உங்கள் பார்வையிலும் விளக்கவும். இதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் கோருகிறேன். இனி கேள்விகளுக்குள் செல்வோம்.

    ReplyDelete

  126. //எனது அடுத்தக் கேள்வி: ஆன்மா விழிப்புணர்வு பெறுதல் என்றால் என்ன?//

    ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதனை பயன்படுத்தி நாம் விழிப்படையும் ஒரு செயல்முறைதான் ஆன்ம விழிப்புணர்வு.

    evolution of living beings

    ReplyDelete
  127. ஆனந்த் சாகர்13 March 2015 at 09:12

    @ஆன்ம ஞானம்,

    //ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதனை பயன்படுத்தி நாம் விழிப்படையும் ஒரு செயல்முறைதான் ஆன்ம விழிப்புணர்வு.

    evolution of living beings//

    எல்லாவற்றுக்கும் விழிப்புணர்வு உண்டு. தனி ஆன்மா ஒவ்வொன்றும் தான் உண்மையிலேயே யார் என்பதை அறிந்துகொள்வதே ஆன்ம விழிப்படைதல் என்பது. அதாவ்து, தான் இந்த உடல் அல்ல, மாறாக தான் என்பது ஆன்மாவே என்று உணர்தல். எல்லா தனி ஆன்மாக்களும் தங்களின் ஆன்ம ஆற்றலை விழிப்புடனோ அல்லது விழிப்பற்ற நிலையிலோ எப்பொழுதும் பயன்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

    ReplyDelete
  128. ஆனந்த் சாகர்13 March 2015 at 09:39

    @நந்தன்,

    //அய்யா, நான் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆனாலும் அதிகம் தெரியாது.//

    ஆன்மீகத்தை பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்பதால் அதில் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்பது தர்க்கப்பூர்வமாக ஏற்புடையதே. அதேசமயம் தெரியாத ஒன்றை மறுப்பது தர்க்க அறிவுப்பூர்வமாக தவறு.

    // அதனால் தெரிந்துகொள்வதுடன் தங்கள் நிலைப்பாட்டை (ஆன்மீகம்) மறுக்கவும் செய்துவிடலாம் என்று கருதி விவாதம் செய்து வருகிறேன்.//

    ஆன்மீகத்தை பற்றி தெரியாது, எனவே அதை பற்றி விவாதம் செய்யும்போது தெரிந்து கொள்ள வேண்டும், இருந்தாலும் ஆன்மீகத்தை மறுக்க வேண்டும் என்று முன்கூட்டியே எடுத்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் கண்மூடித்தனமாக ஆன்மீகத்தை மறுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று விவாதம் புரிவது என்பதுதான் உங்கள் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு அறிவு நேர்மைக்கு முற்றிலும் முரண்பாடான ஒன்று. உங்களின் இந்த நிலைபாட்டை விவாதத்தின் ஆரம்பத்திலேயே கண்டுகொண்டேன்.


    //ஆரம்பத்தில் ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றுதான் கூறினேன். ஆனால் பாலாய்போன மனது ஒத்துழைக்க மறுக்கிறது.//

    அதாவ்து, ஆன்மீகத்தை பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இல்லை. ஆனால் அதை எந்த வகையிலும் மறுக்க வேண்டும் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முன் முடிவை கண்மூடி பின்பற்றுவீர்கள். இருப்பினும் உங்களை நீங்கள் பகுத்தறிவுவாதி என்று மட்டும் நம்பிக்கொண்டு இருப்பீர்கள். அப்படிதானே?

    ReplyDelete
  129. ஆனந்த் அவர்களே

    நந்தனின் கேள்விகளை நான் ரசிக்கிறேன்.
    பொருள் முதல் வாதிகள் மற்ற மதங்களைப் போலவே ஆன்மீகமும் ஒரு மதம் என முன்முடிவெடுப்பது புதிதில்லையே. நந்தன் ஆன்மீகம் என்பதை அறிந்து கொண்டால் அவர் கருத்துகளை மாற்றிக் கொள்வார்.
    மேலும் ஒரு விண்ணபபம் நந்தனின் கேள்விகளுக்கு தாங்களும் பதிலளிக்க வேண்டும் என விரும்புகிறேன். நந்தனும் ஒரு பதிலளிக்கட்டும். மூவரின் கருத்துகளையும் படிப்பவர் அறிந்து கொள்ளட்டும். நானும் ஆன்மீகத்தை பற்றி மேலதிகம் அறிந்து கொள்வேன். தங்கள் கொள்கைகளில் சிலவற்றை பற்றி நான் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் அதைப்பற்றி நான் ஒரு தெளிவுக்கு வரும் வரை நமக்கிடையே விவாதம் வேண்டாம்.
    எனது விண்ணப்பத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  130. நந்தன்13 March 2015 at 21:37

    //ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதனை பயன்படுத்தி நாம் விழிப்படையும் ஒரு செயல்முறைதான் ஆன்ம விழிப்புணர்வு.//

    தங்கள் இருவரின் பதீலையும் ஒன்றிணைத்து எனது கேள்விகளை முன்வைக்கிறேன்.

    @ஆன்ம ஞானம்.

    விழிப்படைதல் என்றால் என்ன?

    @ஆனந்த சாகர். மேலுள்ள கேளவிக்கு நீங்கள்

    //அதாவ்து, தான் இந்த உடல் அல்ல, மாறாக தான் என்பது ஆன்மாவே என்று உணர்தல். //

    என்று பதிலளித்துள்ளீர்கள். ஆன்ம ஞானம் அவர்களின் பதிலையும் பார்த்து அடுத்த கேள்வியை கேட்கிறேன்.

    ReplyDelete
  131. //விழிப்படைதல் என்றால் என்ன?//

    ஆன்மாவை உணர்தல். தன் சுயம் குறித்த தேடல். நான் யார் என்ற கேள்விக்கான விடை காணல்.

    ReplyDelete
  132. நந்தன்15 March 2015 at 21:20

    @ஆன்ம ஞானம்.
    // ஆன்மாவை உணர்தல். தன் சுயம் குறித்த தேடல். நான் யார் என்ற கேள்விக்கான விடை காணல்.//

    இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    அவ்வாறு நீங்கள் பெற்ற விடை என்ன?

    @ஆனந்த சாகர்.
    //தனி ஆன்மா ஒவ்வொன்றும் தான் உண்மையிலேயே யார் என்பதை அறிந்துகொள்வதே ஆன்ம விழிப்படைதல் என்பது. அதாவ்து, தான் இந்த உடல் அல்ல, மாறாக தான் என்பது ஆன்மாவே என்று உணர்தல்.//

    உணர்தல் எளிதுதான். நான் என்பது எனது ஆன்மாதான் என நம்புவது எளிமையானதாகத்தான் தெரிகிறது. இதற்கு ஏதேனும் பயிற்சி எடுத்தால்தான் உண்மையாக உணர்தலாகுமோ?

    ReplyDelete
  133. //@ஆன்ம ஞானம்.
    // ஆன்மாவை உணர்தல். தன் சுயம் குறித்த தேடல். நான் யார் என்ற கேள்விக்கான விடை காணல்.//

    இதற்கு என்ன செய்ய வேண்டும்?

    அவ்வாறு நீங்கள் பெற்ற விடை என்ன?//

    முதலில் ஆன்மாவை நம்பவேண்டும். அதன் பின்னர் ஆழ்நிலை தியானம் மூலம் ஆன்மாவை விழிப்படைய செய்யவேண்டும்.
    ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில்தான் நான் உள்ளேன் . விடையை அறியும் முயற்சியில் உள்ளேன். விடை காணும் அளவிற்கு எனக்கு ஞானம் போதாது.

    ReplyDelete
  134. நந்தன்16 March 2015 at 21:30

    @ஆன்ம ஞானம்
    //ஆழ்நிலை தியானம் மூலம் ஆன்மாவை விழிப்படைய செய்யவேண்டும்.//

    ஆன்மா விழிப்படைதல் என்றால் ஆன்மாவில் என்ன மாறுதல் அடையும்?

    //விடை காணும் அளவிற்கு எனக்கு ஞானம் போதாது.//

    விடைகாண என்னனென்ன ஞானங்களை கற்க வேண்டும்?

    ReplyDelete
  135. நந்தன் அவர்களே

    உயிர் என்பதற்கு தங்களுடைய விளக்கத்தை அறியலாமா?

    ReplyDelete
  136. //@ஆன்ம ஞானம்
    //ஆழ்நிலை தியானம் மூலம் ஆன்மாவை விழிப்படைய செய்யவேண்டும்.//

    ஆன்மா விழிப்படைதல் என்றால் ஆன்மாவில் என்ன மாறுதல் அடையும்?

    //விடை காணும் அளவிற்கு எனக்கு ஞானம் போதாது.//

    விடைகாண என்னனென்ன ஞானங்களை கற்க வேண்டும்?//

    இதில் ஆன்மாவை நம்ப வேண்டும் என சொன்னதைப்பற்றி உங்கள் நிலை என்ன

    ஆன்மா விழிப்படைதல் என்பது தன் சுயம் உணர்தலே . ஆன்மா மாற்றம் அடைவதில்லை அதைக்கொண்டுள்ள உடலே
    பல்வேறு பரிமாணத்தில் பரிணாம வளர்ச்சியடையும். ஆன்மா எப்பொழுதும் ஆன்மாவே. அதன் உடல்களே மாறக்கூடியன.

    ReplyDelete
  137. நந்தன்17 March 2015 at 12:00

    @ஆன்ம ஞானம்
    // உயிர் என்பதற்கு தங்களுடைய விளக்கத்தை அறியலாமா//

    தங்களின் கருத்தைப்போலவே எனது கருத்தும். அறிவியலும் அப்படித்தான் சொல்கிறது.

    உயிர் என்பது ஒரு ஆற்றல். அதாவது வெப்ப ஆற்றல், மின்னாற்றல் என்பதுபோல 'உயிராற்றல்'.

    சரிதானே?

    ReplyDelete
  138. //தங்களின் கருத்தைப்போலவே எனது கருத்தும். அறிவியலும் அப்படித்தான் சொல்கிறது.

    உயிர் என்பது ஒரு ஆற்றல். அதாவது வெப்ப ஆற்றல், மின்னாற்றல் என்பதுபோல 'உயிராற்றல்'.//

    சரிதான். அந்த ஆற்றலின் காரணி எது?

    ஆன்மாவே அந்த ஆற்றல் என்பதை ஒத்துக்கொள்வீர்களா.
    அந்த ஆற்றலை உணர்ந்து நாம் பயன்படுத்தலாம் என்பதை ஒத்துக்கொள்வீர்களா
    இந்த இரண்டையும் ஒத்துக்கொண்டாலே போதும். ஆன்ம விழிப்பணர்வு என்பதை தங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  139. நந்தன்17 March 2015 at 22:52

    உயிராற்றலின் காரணி எது என்று கேட்டுவிட்டு ஆனமாவே அந்த ஆற்றல் என ஒத்துக்கொள்வீர்களா என்றும் கேட்டுள்ளீர்கள்.
    இதில் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.
    ஆன்மா = உயிர்
    உயிராற்றல் என்றாலும் ஆன்மா ஆற்றல் என்றாலும் ஒன்றுதானே? பிறகெப்படி உயிராற்றலுக்கு உயிராற்றலே (ஆன்மா) காரணியாகும்?

    ReplyDelete
  140. ஆன்மாவின் ஆற்றல் வடிவம் உயிர்.
    பருப்பொருள் வடிவம் அந்த உயிரைக்கொண்டுள்ள உடல்.

    ReplyDelete
  141. நந்தன்18 March 2015 at 18:35

    உயிராற்றல் என்றாலும் ஆன்மா ஆற்றல் என்றாலும் ஒன்றுதானே?

    ReplyDelete

  142. //உயிராற்றல் என்றாலும் ஆன்மா ஆற்றல் என்றாலும் ஒன்றுதானே//

    ஆம்

    ReplyDelete
  143. நந்தன்19 March 2015 at 17:57

    அந்த ஆற்றலின் காரணி எது? இது உங்கள் கேள்வி.

    எனக்குத் தெரிந்தவரை உயிராற்றலின் காரணி உணவு.

    தங்களின் கருத்து என்ன?

    ReplyDelete
  144. //அந்த ஆற்றலின் காரணி எது? இது உங்கள் கேள்வி.

    எனக்குத் தெரிந்தவரை உயிராற்றலின் காரணி உணவு.

    தங்களின் கருத்து என்ன?//

    தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்
    உயிரிகளின் உடல்களுக்கு ஆற்றல் தரும் உணவுகள் எப்படி உயிராற்றலின் காகாரணியகும். விளக்கவும்.
    அப்படியெனில் மரித்த ஒரு உயிரினத்திற்கு உணவு கொடுத்தால் உயிர்பெற்று விடும் என கருதுகிறீர்களா. தவறு .

    ReplyDelete
  145. நந்தனாரே

    இன்னமும் தாங்கள் ஆன்மா என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் புரிந்து கொள்ளாதது போலவே தாங்கள் பதிலளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல . தாங்கள் எதிர்நிலையில் விவாதிப்பதை உணர்ந்தே விவாதிக்கிறேன். நான் நம்பும் கொள்கைக்கு வலுசேர்க்கும் அல்லது எனது நம்பிக்கையை உண்மைப்படுத்தும் விதமாகவே விவாதிக்கிறேன். தாங்கள் எனது நம்பிக்கையை மறுக்கும் விதமாக விவாதிக்கிறீர்கள். இதுவரை நான் சொன்ன கருத்துகளை மறுக்கும் விதமாக தங்கள் நிலைப்பாட்டை உதாரணங்களுடன் விளக்க கோருகிறேன்.

    ReplyDelete
  146. நந்தன்23 March 2015 at 10:22

    அந்த ஆற்றலின் காரணி எது? இது உங்கள் கேள்வி.
    எனக்குத் தெரிந்த பதிலைச் செல்லியுள்ளேன்.

    தங்களின் கருத்தைக் கேட்டுள்ளதற்கு பதில் சொல்லலாம் தானே?

    ReplyDelete
  147. நந்தன்23 March 2015 at 10:26

    ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற்ற பிறகே ஒன்றை ஏற்பதும் ஏற்காததும் அறிவுடமை என்பது என் கருத்து. இது தவறா?

    ReplyDelete
  148. தவறேயில்லை

    ReplyDelete
  149. நந்தன்23 March 2015 at 19:39

    உயிர் (ஆன்ம) ஆற்றலின் காரணி எது?

    (கேள்வி உங்களதுதான் என்பதை மறக்கவேண்டாம்)

    ReplyDelete
  150. உயிர் (ஆன்ம) ஆற்றலின் காரணி எது?

    (கேள்வி உங்களதுதான் என்பதை மறக்கவேண்டாம்)

    ஆன்மா.

    ReplyDelete
  151. நந்தன்24 March 2015 at 18:09

    ஆன்மா ஆற்றலின் காரணி ஆன்மாதான் என்றால்... எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கமாக கூறவும்.

    ReplyDelete
  152. ஆன்மாவே எல்லாமுமானது. ஆன்மாவும் அதுவே ஆற்றலும் அதுவே. ஆற்றல் வடிவம் ஆன்மா பருப்பொருள் வடிவம் உடல்.

    தாங்கள் ஆன்மா என்பதை எப்படி புரிந்துள்ளீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா.

    ReplyDelete
  153. நந்தன்25 March 2015 at 17:43


    ஆன்மா என்றால் என்ன என்று அறிந்துகொள்ளத்தானே தங்களிடம் கேள்விகள் கேட்டு வருகிறேன். அதனை புரிந்துகொள்ள இன்னும் சந்தேகத்துக்குரிய கேள்விகள் உள்ளது.

    ஆன்மாதான் அனைத்து ஆற்றலுக்கும் மூலமானது என்று சொல்கிறீர்களா?

    அதன் பருப்பொருள் வடிவம் உடல் என்றால் உடலைவிட்டு வெளியேறிய பிறகு அதன் வடிவம் எப்படி உடலாக இருக்க முடியும்?

    (ஜடப்பொருளுடன்) பருப்பொருளுடன் இணைந்து முதல் உயிர் உண்டானது என்று சொன்னீர்கள். அப்படியானால் ஆன்மாவிற்கு முதலில் உடல் இல்லை என்றும் பொருளாகிறது.

    ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்றும் சொல்லியுள்ளீர்கள். அறிவியல் கூறும் ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி கூறுகிறீர்களா? அல்லது இது வேறா?

    நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்.
    கொஞ்சம் ஆன்மாவைப் (ஆற்றலை) பற்றி விரிவாகச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  154. //ஆன்மாதான் அனைத்து ஆற்றலுக்கும் மூலமானது என்று சொல்கிறீர்களா//

    ஆன்மாதான் அனைத்துமாக உள்ளது என்று சொல்கிறேன்.

    ReplyDelete
  155. //அதன் பருப்பொருள் வடிவம் உடல் என்றால் உடலைவிட்டு வெளியேறிய பிறகு அதன் வடிவம் எப்படி உடலாக இருக்க முடியும்?

    (ஜடப்பொருளுடன்) பருப்பொருளுடன் இணைந்து முதல் உயிர் உண்டானது என்று சொன்னீர்கள். அப்படியானால் ஆன்மாவிற்கு முதலில் உடல் இல்லை என்றும் பொருளாகிறது//

    ஆன்மாவுக்கு முதல் என்பது கிடையாது. அது நிரந்தரமானது.
    ஆன்மாவின் பருப்பொருள் வடிவத்தின் மீதான ஆன்மாவின் ஆற்றல் வடிவ சேர்க்கையே உயிரினங்கள். ஆன்ம ஆற்றல் சேர்க்கை நடைபெறாதவை உயிரற்றவை. அல்லது ஜடப்பொருள்.

    ஆற்றல் வடிவ ஆன்மா காலத்தால் பாதிக்கப்படாதது. பருப்பொருள் வடிவம் காலத்தின் தாக்கத்தால் பல்வேறு உருமாற்றம் அடைகிறது. அவ்வுடலை சிதைத்தால் அதாவது அதிக வெப்பமோ அணுக்கதிர் வீசியோ சிதைத்தால் அது ஆற்றலாக மாற்றமடையும். ஆன்மாவே ஆற்றலாகவும் பருப்பொருளாகவும் உள்ளது.


    //ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்றும் சொல்லியுள்ளீர்கள். அறிவியல் கூறும் ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி கூறுகிறீர்களா? அல்லது இது வேறா?//

    அறிவியல் கோட்பாடுதான்.
    இதன் மூலம்
    ஆன்மா ஆரம்பம் அற்றது. முடிவற்றது.
    ஆன்மாவை எவரும் உருவாக்கவும்முடியாது. அழிக்கவும் முடியாது.
    ஆன்மா நிரந்தரமானது
    என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  156. நந்தன்26 March 2015 at 13:18

    //ஆற்றல் வடிவ ஆன்மா காலத்தால் பாதிக்கப்படாதது. பருப்பொருள் வடிவம் காலத்தின் தாக்கத்தால் பல்வேறு உருமாற்றம் அடைகிறது. அவ்வுடலை சிதைத்தால் அதாவது அதிக வெப்பமோ அணுக்கதிர் வீசியோ சிதைத்தால் அது ஆற்றலாக மாற்றமடையும். ஆன்மாவே ஆற்றலாகவும் பருப்பொருளாகவும் உள்ளது.//

    அதாவது ஆன்ம ஆற்றலுக்கு இரண்டு வடிவங்கள் என்றுச் சொல்லுகிறீர்களா?

    ReplyDelete
    Replies


    1. //அதாவது ஆன்ம ஆற்றலுக்கு இரண்டு வடிவங்கள் என்றுச் சொல்லுகிறீர்களா?//

      ஆன்ம ஆற்றலுக்கல்ல
      ஆன்மாவிற்கே இரண்டு வடிவங்கள் உண்டு. ஆற்றல் வடிவம் உயிராகிறது. பருப்பொருள் வடிவம் உடலாகிறது.

      பிளாங்க்கின் குவாண்டம் தியரியை உதாரணப்படுத்தி கொள்ளவும்.




      Delete
  157. ஆனந்த் சாகர் said...


    //அது பூத உடல் எடுப்பது ஜட உலக அனுபவ்ம் பெறுவதற்குத்தான்.//

    1 March 2015 at 14:12"//

    திரு ஆனந்த் சாகர் அவர்களே,

    ஆன்மா பூத உடல் எடுப்பது ஜட உலக அனுபவம் பெறுவதற்குத்தான் என கூறியுள்ளீர்கள். இதன் மூலம் ஆன்மா அடைய விரும்புவது என்னவோ? இந்த அனுபவத்தால் ஆன்மாவிற்கு என்ன பலன் இருக்க முடியும்?

    X-Muslim

    ReplyDelete
  158. நந்தன் அவ்ர்களே என்ன ஆயிற்று

    ReplyDelete
  159. ஆனந்த் சாகர்2 April 2015 at 22:33


    @ X-Muslim,

    //திரு ஆனந்த் சாகர் அவர்களே,

    ஆன்மா பூத உடல் எடுப்பது ஜட உலக அனுபவம் பெறுவதற்குத்தான் என கூறியுள்ளீர்கள். இதன் மூலம் ஆன்மா அடைய விரும்புவது என்னவோ? இந்த அனுபவத்தால் ஆன்மாவிற்கு என்ன பலன் இருக்க முடியும்?//

    ஆன்மா தனக்கு எல்லா சக்திகளும் உள்ளன என்று தெரிந்து கொண்டதை அனுபவித்து பார்க்க விரும்பியே அது ஜட உடல் எடுக்கிறது. வெறுமனே ஒன்றை தெரிந்து கொள்வது என்பது வேறு, தெரிந்ததை அனுபவித்து பார்ப்பது என்பது வேறு. தனக்கு தெரிந்ததை, தான் விரும்புவதை அனுபவித்து அறிந்து கொள்வதே ஆன்மா ஜட உடல் எடுப்பதின் நோக்கம். பௌதீக பிரபஞ்சம் படைக்கப்பட்டதே ஆன்மா இந்த அனுபவம் பெறுவதற்காகத்த்தான்.

    ReplyDelete
  160. ஆனந்த் சாகர்2 April 2015 at 22:43

    @நந்தன்

    ஆன்ம ஞானம் அவர்கள் ஆன்மா என்றால் என்ன, அதன் தன்மை என்ன என்று போதுமானவரை உங்களுக்கு விளக்கி கூறிவிட்டார். திரும்ப திரும்ப ஆன்மா என்றால் என்ன என்று கேட்காமல் வேறு கேள்விகளை அவரிடம் கேட்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  161. ஆனந்த் சாகர்7 April 2015 at 10:15

    @நந்தன்,

    ஆன்மா உண்டு என்பதை இப்பொழுது ஏற்கிறீர்களா, அல்லது இன்னும் அதை மறுக்கிறீர்களா?

    ReplyDelete
  162. ஆன்மாவை நம்புதல் ஆன்மாவை ஏற்றுக்கொள்தல் இவை இரண்டும் நிகழ்ந்தாலே ஆன்ம விழிப்பை அடையமுடியும்.

    அறிவியல் பார்வையில் நிரந்தரமான ஆற்றல் என ஒன்று கிடையாது.
    ஆனால் ஏதோ ஒன்று நிரந்தரமாய் உள்ளது என ஒப்புக்கொள்ளும்.

    ReplyDelete
  163. ஆனந்த் சாகர்14 April 2015 at 09:51

    @நந்தன் & ஆன்ம ஞானம்,

    ஆன்மீகம் பற்றி விவாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை பற்றியெல்லாம் நீங்கள் இருவரும் விவாதிப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் ஆன்மா என்றால் என்ன என்பதோடு இப்படி நின்றுவிட்டீர்களே!

    ReplyDelete
  164. ஆனந்த் சாகர்14 April 2015 at 09:59

    ஆன்ம ஞானம்,

    //அறிவியல் பார்வையில் நிரந்தரமான ஆற்றல் என ஒன்று கிடையாது.
    ஆனால் ஏதோ ஒன்று நிரந்தரமாய் உள்ளது என ஒப்புக்கொள்ளும்.//

    இருப்பது ஒரே ஆற்றல்தான். அந்த ஒரு ஆற்றல்தான் தொடர்ந்து பல ஆற்றல்களாக இந்த சார்பு உலகத்தில் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு ஒளியை கூறலாம். இருப்பது வெள்ளை நிற ஒளி மட்டுமே. ஆனால் இந்த ஒரு வெள்ளை நிற ஒளியே பல லட்சக்கணக்கான வெவ்வேறு நிற ஒளிகளாக(நம்முடைய கண்களுக்கு ஒரு சில நிறங்கள் மட்டுமே தெரிகின்றன) மாறிக்கொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  165. jதிருவாசகம் முழங்குகின்றது

    புல்லாய் புடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பற்வையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வலலசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைப்புற்றேன்
    இதையும் சந்று பாிசீலனை செய்யலாமே

    ReplyDelete
  166. ஆனந்த் சாகர்4 June 2015 at 19:51

    Dr.அன்புராஜ்,

    //புல்லாய் புடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பற்வையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வலலசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இளைப்புற்றேன்
    இதையும் சந்று பாிசீலனை செய்யலாமே //

    நாம் மனிதர்களாக மட்டுமல்ல், எல்லாவித உயிர்களாகவும் பிறப்பெடுக்கிறோம் என்ற மேற்கண்ட திருவாசக கருத்து உண்மையே. ஆனால் இந்த பலவித பிறப்புகளால் நாம் இளைப்போ சலிப்போ அடைவதில்லை. இது நாம் விளையாடும் முடிவற்ற விளையாட்டு. நாம்தான் கடவுள். கடவுளாக இருந்துகொண்டு நாம் இப்படி பலவித அனுபவத்தை முடிவற்று அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

    ReplyDelete
  167. அலுவல் காரணமாக சற்று இடைவெளி விழுந்து விட்டது . மன்னிக்கவும்.

    நந்தன் அவர்களே மீண்டும் வருவீர்களா

    ReplyDelete
  168. முஹம்ம்த அலி ஜின்னா26 August 2015 at 12:07

    நான் ஏன் ஹிந்து மதத்தை துறந்து இஸ்லாத்தை தழுவினேன்?

    கங்கை கரை தோட்டத்திலே, கன்னிப்பெண்கள் கூட்டத்திலே, கண்ணன் நடுவினிலே மெய்மறந்து கிடந்தான். அவனை சுற்றியிருந்த பொம்மனாட்டிகளெல்லாம் “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என்று கண்ணனின் புகழை பாடிக்கொண்டிருந்தனர்.

    நான் நேராக கண்ணனிடம் சென்றேன். “கண்ணா நாட்டிலே அநீதி தாண்டவமாடுது. வந்து தருமயுத்தம் செய்” என்றேன். எனது சூம்பிப் போன நெஞ்சையும் காஞ்சி போன காம்பையும் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது. “உன்னை யாரடா உள்ளே விட்டது பறப்பயலே, வெளியே போ” என்றான்.

    “என்னிடமென்ன பொன்னழகு மேனியா இருக்கு, பூச்சரங்கள் சூடித்தருவதற்கு?. நான் வணங்கும் கடவுளே என்னை ஜாதிப்பெயர் சொல்லி திட்டுகிறான். பொம்மனாட்டிகளோடு கூத்தடிக்கிறான். எனக்கெதிராக நால்வர்ண தருமத்தை படைத்த இவன், எனக்காக தருமயுத்தம் செய்வானா?. இவனெல்லாம் ஒரு கடவுளா?. அடச்சே” என நொந்து போய் வெளியே வந்தேன். வெளியே வந்ததும், அல்லாஹு அக்பர் எனும் பாங்கு சத்தம் கேட்டது. சரி, கண்ணன்தான் என்னை கைவிட்டுவிட்டான், இந்த அல்லா சாமி என்ன சொல்லுது பார்ப்போம் என்று பள்ளிவாசலுக்கு போனேன்.

    அங்கிருந்த இமாம் பாய் என்னைக் கண்டதும் ஆரத்தழுவி “சகோதரா உள்ளே வா” என்றார். எனக்கு மிகுந்த ஆச்சரியமாய் போய்விட்டது. ஐயாயிரம் வருடங்களாக, நாங்கள் கோயிலுக்கு போனால் “உள்ளே வராதே, வெளியே நில், நீ தீண்டத்தகாதவன்” என்று உயர்ஜாதியினர் சொல்லித்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த இமாம், என்னை சகோதரா என்று நெஞ்சோடு அணைத்து வரவேற்கிறாரே என பிரமித்து போய் உள்ளே சென்றேன்.

    அல்லா சாமி எங்கே என்று சுற்றி முற்றி பள்ளிவாசலில் தேடினேன். நான் தேடுவதைப் பார்த்த இமாம் “என்ன விஷயம்?” என்றார். அல்லா சாமிய பாக்கனும் பாய் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே “இந்த உலகில் அல்லாஹ்வை பார்க்க முடியாது, மறுமை நாளில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வை பார்க்கலாம், அப்படித்தான் எங்கள் திருக்குரான் சொல்கிறது” என்றார்.

    “என்னங்க பாய், கண்ணனிடம் போனா வெளியே போடா பறப்பயலேனு சொல்லி விரட்டிவிட்டான். சரி அல்லா சாமியிடம் நம்ம கஷ்டத்த சொல்லி அழலாம்னு வந்தா, கண்ணுக்கே தெரியாத சாமிகிட்ட எப்படிங்க பாய் பேசறது?” என்றேன். உடனே பாய் திருக்குரானை எனது கையில் கொடுத்து “இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் தந்த மொபைல் போன். இதன் மூலம் அல்லாஹ்வோடு நீ பேசலாம், அல்லாஹ் உன்னுடன் பேசுவான். படித்துப் பார்” என்றார்.

    திருக்குரானை படித்தேன். படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். நேராக மீண்டும் கங்கை கரைத்தோட்டம் சென்றேன். அங்கே ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலையெல்லாம் திருடிக்கொண்டு மரத்தின் மேல் கண்ணன் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்து பெண்களெல்லாம் “நந்த லாலா, நந்த லாலா, புடவையைக் கொடு நந்த லாலா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக் கொள்” என்று கண்ணன் அவர்களை மேலும் சீண்டிக்கொண்டிருந்தான்.

    நேராக கண்ணனிடம் சென்றேன், அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

    “நிச்சயம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்திடுவாய்
    நேசரெல்லாம் அழுத பின்னே நீ சந்தூக்கு ஏறிடுவாய்
    அஞ்ஞான கப்ருஸ்தானில் நீ அடங்கி மண்ணாவாய்
    அறுதியில் உனை எழுப்பும் இறுதி கியாமத் நாளும் வரும்
    அந்நாளை உணர்ந்திடாமல் ஆனவத்தால் பிதற்றுகிறாய்”
    என்று சொல்லிவிட்டு திரும்பிப் பாராமல் பள்ளிவாசல் நோக்கி நடந்தேன். நன்றி.

    ReplyDelete
  169. முஹம்மத் அலி ஜின்னா26 August 2015 at 12:10

    “அம்பேத்கர் , பெரியார், அண்ணாதுரை, ஜின்னா சந்திப்பு – பாக்கிஸ்தானுக்குப் பிறகு, திராவிட நாடு” என 1940ல் பெரியாருக்கு ஜின்னா தந்த உறுதிமொழி:

    ஜின்னா என்றுமே ஆங்கிலேருக்கு எதிராக போராடவில்லை. ஆங்கிலேயரின் உதவியில்லாமல் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அவர் பார்ப்பனியத்துக்கெதிராக போராடினார். பார்ப்பனிய ஆதிக்கத்தை உடைக்க ஒரு இஸ்லாமிய நாடு தேவை என்று உரைத்தார். சொல்லப்போனால், அவருக்கு உருது சரளமாக பேச வராது. ஆனால் சர்ச்சில் போன்ற தலைவர்களே அவருடைய ஆங்கில புலமையையும், செவில்லி ப்ரான்ட் சூட்டு கோட்டு அணிந்து சுருட்டு ஊதும் ஸ்டைலையும் பாராட்டியதுண்டு.

    இங்கிலாந்து அரச குடும்பத்தின் வக்கீலாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஜின்னா ஒருவருக்கு மட்டுமே, இங்கிலாந்து அரசியை சந்திக்க பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தின் உள்ளே வரை ரோல்ஸ்ராய்ஸில் செல்லும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பலமுறை ஜின்னாவை வரவேற்கவும் வழியனுப்பவும் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாசல்வரை இங்கிலாந்து அரசி வந்தார் எனும் கௌரவமும் ஜின்னாவுக்கு உண்டு. ஆகையால்தான், கத்தியின்றி ரத்தமின்றி பேனா முனையில் ஒரு நாட்டை உருவாக்கிய தலைவன் என ஜின்னாவை கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் பாராட்டினார். எந்த ஒரு மீட்டிங்கிலும், ஜின்னாவின் அருகில்தான் சரோஜினி நாயுடு அமர்வார். ஒரு கட்டத்தில் ஜின்னாவை அவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூட பேச்சு அடிபட்டது.

    “காந்தியை அரைநிர்வாணப் பக்கிரியாக வைக்க, பல கோடிகளை நாங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கு – To keep Gandhi in poverty, we have to spend millions” என சரோஜினி நாயுடு அம்மையார் அடிக்கடி சொல்வார். பார்ப்பனியத்தை குழி தோண்டி புதைத்து பாக்கிஸ்தானை ஜின்னா உருவாக்கினாரென்றால் மிகையாகாது. ஆகையால்தான் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் திராவிட நாட்டை உருவாக்க ஜின்னாவை மூன்று முறை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஈழத்தமிழர் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் சகோதரர் வேதனையுடன் சொன்னது: “எங்களிடம் ஜின்னாவைப் போல் ஒரு தலைவன் இருந்திருந்தால், இந்நேரம் எங்களுடைய ஈழ நாட்டில் பிள்ளை குட்டிகளுடன் நிம்மதியாக நாங்களும் வாழ்ந்திருப்போம். கூட இருந்தே குழிப்பறித்து விட்டனர் அயோக்கியர்கள்”.

    பாக்கிஸ்தான் சுதந்திரம் அடைந்து ஒரே வருடத்தில் ஜின்னா இறந்துவிட்டார். அவர் மட்டும் சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், இன்ஷா அல்லாஹ் திராவிட நாடு உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  170. முஹம்மத் அலி ஜின்னா26 August 2015 at 12:12

    இஸ்லாத்தை ஏற்க வந்த அம்பேத்கரை, ஜின்னா ஏன் தடுத்து நிறுத்தினார்?:

    1932ல் தலித்துக்களுக்கு தனித்தொகுதிகள்(reserved constituencies) வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் முன் வந்தது. இதனை எதிர்த்து பூனாவில் காந்தி சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார். அப்பொழுது லட்சக்கணக்கான தலித்துக்களுடன் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்பேன் என்று அம்பேத்கர் அறிவித்தார். அப்படி ஒன்று நடந்தால் இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறிவிடுமென பயந்துபோன காந்தி உடனே உண்ணாவிரதத்தை கைவிட்டு அம்பேத்கரின் தலித் இடஒதுக்கீட்டு கோரிக்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டார். இதைத்தான் சரித்திரம் படைத்த பூனா ஒப்பந்தம் என சரித்திரம் சொல்கிறது.

    “ஐயாயிரம் வருடங்களாக தங்களை யாரும் அசைக்க முடியாதென இறுமாந்திருந்த “பிராமின் பனியா” ஆதிக்க வர்க்கம், இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக ஏற்போமென்று அறிவித்ததும் தடாலென காலில் விழுந்து விட்டதே !!. இஸ்லாத்துக்கு இவ்வளவு வலிமையா” என வியந்து போன அம்பேத்கர் “ஹிந்து மதத்தை ஒழிக்க இஸ்லாமே இறுதித்தீர்வு” என முடிவு செய்து தலித்துக்கள் இஸ்லாத்தை ஒட்டுமொத்தமாக ஏற்பது பற்றி ஜின்னாவிடம் பலமுறை ஆலோசித்தார்.

    1940ல் ஜின்னா லாகூரில் பாக்கிஸ்தான் பிரகடனம் (Pakistan Resolution Day, 23rd March 1940) செய்தார். உடனே பெரியாரை அழைத்துக்கொண்டு அம்பேத்கர் மீண்டும் ஜின்னாவை பம்பாயில் சந்தித்து திராவிட நாடு மற்றும் இஸ்லாத்தை ஏற்பது பற்றி பேசினார். “திராவிட நாட்டுக்கு என் முழு ஆதரவு உண்டு. முதலில் பாக்கிஸ்தான் சுதந்திரம். அடுத்து திராவிட நாடு” என பெரியாருக்கு உறுதிமொழி தந்த ஜின்னா, அம்பேத்கரை இஸ்லாத்தை ஏற்க வேண்டாம். கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்களென அறிவுறுத்தினார்.

    இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இங்கிலாந்து அரசி மிகவும் மகிழ்ந்து “5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும். நான் முழு உத்திரவாதம். தயார் செய்யுங்கள்” என வாழ்த்தி ஐக்கிய நாட்டு சபையின் (UNO) முழு அங்கீகாரத்தையும் வாங்கி கொடுத்தார். அம்பேத்கரை ஜின்னா இஸ்லாத்தை ஏற்க தடுத்தமைக்கு முதல் காரணம் “காபிர் எனும் எதிரி இருந்தால்தான் வலிமையான இஸ்லாமிய தேசம் உருவாகும். இல்லாவிட்டால் அரபு நாடுகள் போல் வக்கத்த நாடாகிவிடும்” என்று முழுமையாக நம்பினார். அதே சமயம் கிருத்துவத்துக்கு ஆதரவாக பேசி இங்கிலாந்து அரசியின் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் வென்றார். சுருக்கமாக சொல்லப்போனால், “பார்ப்பனிய ஆதிக்கத்தை ஒழிக்க இன்னொரு எதிரியும் தேவை. எதிரியின் எதிரி எனது நன்பன் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டு, ஸ்டைலாக சூட்டு கோட்டு அணிந்து சுருட்டை ஊதியவண்ணம் ரோல்ஸ்ராய்ஸில் ஜின்னா வலம்வந்தார்”. ஜின்னாவின் புத்தி சாதூர்யத்தை கண்டு பயந்துபோன காந்தி, நேரு, பட்டேல் ஆகிய மும்மூர்த்திகள் அலறியடித்துக்கொண்டு பாக்கிஸ்தானை தங்கத்தாம்பாளத்தில் ஜின்னாவுக்கு தாரைவார்த்தனர்.

    இன்று பாக்கிஸ்தான் இஸ்லாமிய அனுகுண்டை தயாரித்து பிராமணரின் திமிரை ஒடுக்கிவிட்டது. இனி எவ்வளவு பல்டியடித்தாலும், பாரதமாதாவால் பாக்கிஸ்தானுக்கெதிராக சுண்டுவிரலைக்கூட அசைக்கமுடியாதென்பது ஊரறிந்த ரகசியம். இப்பொழுது மீண்டும் அம்பேத்கரும் பெரியாரும் இணைந்து பிராமின்ஸை ஐ.ஐ.டியில் மண்டியிட வைத்துவிட்டனர். இனி ஜின்னாவும் பகத்சிங்கும் வந்துவிடுவர் என்பதில் ஐயமென்ன?

    ReplyDelete
  171. முஹம்மத் அலி ஜின்னா26 August 2015 at 12:16

    ஜின்னா சாஹிப் இருந்திருந்தால், திராவிட நாடு உருவாகியிருக்கும்:

    ஜனாப். ஜின்னா சாஹிபை நான் பாரட்டுவதற்கு காரணம் தந்தை பெரியார். உருது பேசத்தெரியாத பெரியாரும் தமிழ் பேசத்தெரியாத ஜின்னா சாஹிபும் இந்திய விடுதலை அரசியலில் நெருங்கிய நன்பர்களயிருந்தனர் எனும் விஷயம் பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. ஆனால் பெரியார்-ஜின்னாவுக்கிடையே இருந்த நட்பின் ஆதாரங்களையும் கடிதங்களையும் திராவிடர் கழகம் அழியாமல் இன்றும் பாதுகாத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    எதனால் இந்த நட்பு உருவானது என்பதை சிறிது கவனிப்போம்.

    திராவிட நாட்டை உருவாக்க ஒரு தலை சிறந்த சட்ட வல்லுனரும் ஆங்கிலேயரால் மதிக்கப்படும் தலை சிறந்த அரசியல் தலைவரின் உதவியும் பெரியாருக்கு தேவைப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில், இந்தியாவில் இந்த இரண்டு தகுதிகளும் கொண்ட ஒரே தலைவராக ஜனாப்.ஜின்னா சாஹிப் மட்டுமே இருந்தார்.

    எந்த அளவுக்கு என்றால், விக்டோரியா மகாராணியின் குடும்ப சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஜின்னாவின் தீர்வை கிட்டத்தட்ட அனைத்து குடும்ப உறுப்பினரும் முழு மனதாக ஏற்றனர். வின்ஸ்டன் சர்ச்சிலும் விக்டோரியா மகாராணியும் ஜின்னா ஒருவரை சந்திக்க மட்டுமே வாசல்வரை வந்து வரவேற்றனர், வழியனுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால்தான் ஸ்டைலாக சூட்டு கோட்டு அணிந்து, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் கத்தியின்றி ரத்தமின்றி ஜின்னாவால் பாக்கிஸ்தான் எனும் நாட்டை உருவாக்க முடிந்தது.

    ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமானால், ஐ.நா சபையால் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். ஐ.நா வரை எடுத்துச் செல்ல வேண்டுமானால் சட்டம், பொருளாதாரம், ராணுவம் ஆகிய துறைகளில் நுண்ணறிவும் அதை செயல்படுத்தும் அறிவும், ஆற்றலும் ஒரு தலைவனுக்கு தேவை. இந்த திறமைகளெல்லாம் இல்லாத காரணத்தினால்தான், கிட்டத்தட்ட 20 வருடங்கள் தமிழ் ஈழத்தை ஒரு தனி மாகாணமாக நடத்தியும் அதனை ஒரு தனி நாடாக மாற்றமுடியாமல், நீ தலைவனா நான் தலைவனா என அடித்துக்கொண்டு விடுதலைப்புலிகள் செத்தனர்.

    ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு என்பது போல், பதினைந்தே நாட்களுக்குள் சிங்களன் தமிழீழத்தை ஒட்டுமொத்தமாக அடித்து நொறுக்கி அந்த மண்ணின் மைந்தர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான். இது தவிர, பாரதமாதா எனும் சூன்யக்கிழவி சிங்களனுடன் சேர்ந்து தமிழனுக்கு செய்த துரோகம் சொல்லி மாளாது.

    ஆகையால்தான், சரியான அடிப்படையில்லாமல் தனித்தமிழ்நாட்டை உருவாக்க முனைந்தால் அது எந்த ஜென்மத்திலும் நடக்காது என்பதை நன்குணர்ந்த பெரியார், அண்ணத்துரை, அம்பேத்கர், முத்தையா செட்டியார், முதலியார் போன்ற தலைவர்கள் ஜின்னா எனும் அரசியல் மேதையை 1940 முதல் பல முறை சந்தித்து திராவிட நாட்டைப் பற்றி ஆலோசனை செய்தனர்.

    ஆனால் பாக்கிஸ்தானை உருவாக்குதில் ஜின்னா முழு மூச்சாக இருந்ததால், திராவிட நாட்டுக்கு சட்ட ஆலோசனை தர அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இருந்த போதிலும், அவர் எப்படி பாக்கிஸ்தானை உருவாக்குகிறார் என்பதை பெரியாருடன் இருந்த அனைத்து திராவிட தலைவர்களும் நுண்ணிப்பாக கவனித்து வந்தனர்.

    ஆங்கிலேயர் ஆட்சியில், தென்னிந்தியா முழுவதும் Madras Presidency எனும் அமைப்பின் கீழ் இருந்தது. அதைத்தான் திராவிட நாடு என தந்தை பெரியார் அழைத்தார் என்பதை நாம் மறந்து விடலாகாது.

    கடைசியாக 1944ல் பாக்கிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்படும், அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என இங்கிலாந்து ராணியும், சர்ச்சிலும் ஜின்னாவுக்கு உறுதிமொழி தந்தனர். அப்பொழுது மெட்ராசில் மீண்டும் ஒரு முறை பெரியாருடன் ஜின்னாவை அனைத்து திராவிடத் தலைவர்களும் சந்தித்து திராவிட நாடு பற்றி பேசினர். அப்பொழுது ஜின்னா அவர்களிடம், பாக்கிஸ்தான் விடுதலைக்குப் பிறகு திராவிட நாட்டை உருவாக்க தனது முழு ஒத்துழைப்பையும் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

    ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக இருந்தது. பாக்கிஸ்தான் விடுதலையடைந்த ஒரே வருடத்தில் 1948ல் உடல் நலம் குன்றி ஜின்னா மரணமடைந்தார். ஜின்னாவின் மரணத்தை கேள்விப்பட்ட தந்தை பெரியார் “அய்யோ, எனது இஸ்லாமிய சகோதரன் போய்விட்டானே” என்று வாய்விட்டு கதறி அழுதார்.

    ஆம். ஜின்னா மட்டும் ஒரு சில வருடங்கள் உயிரோடு இருந்திருந்தால், இன்று நாம் திராவிட நாட்டில் இதைவிட பலமடங்கு நன்றாக வாழ்ந்திருப்போம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    ReplyDelete
  172. முஹம்மத் அலி ஜின்னா27 August 2015 at 16:51

    கோ-விந்தா கோ-விந்தா:

    “வைசியன் கண்ணன் ப்ருந்தாவதனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுகிறான். அதைப் பார்க்கும் பாப்பான் “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறான்.

    இந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன், ஒரு ஷத்திரியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த ஷத்திரியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, அவனுடைய வாயில் பீயை திணித்துவிடுவான்.

    ஒரு வைசியனின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த வைசியன் கிருஷ்ணணை பிடித்து செருப்பால் அடித்து, ரெண்டு துண்டாக வெட்டி தண்டவாளத்தில் எறிந்து விடுவான்.

    ஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த இஸ்லாமியர் கிருஷ்ணன் மீது ஜிஹாத் செய்து தலையை உருட்டிவிடுவார்.

    ஒரு பாப்பானின் வீட்டுக்குள் புகுந்து அவனுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால், அந்த பாப்பான் கிருஷ்ணனை செருப்பால் அடித்து போலிஸை கூப்பிட்டு முட்டிக்குமுட்டி தட்டுவானா இல்லை “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா உருவுடி” என பாப்பாத்திக்களுக்கு சொல்லிக்கொடுத்து விளக்கு பிடிப்பானா?

    ReplyDelete
  173. ஆனந்த் சாகர்1 September 2015 at 10:40

    யாரப்பா இந்த முஹம்மது அலி ஜின்னா என்ற புனைப்பெயரில் எழுதும் நபர்? இங்கு வந்து சம்பந்தம் இல்லாமல் தமாஷ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்! ஆன்மிகம் பற்றிய விவாதப்பகுதியில் இப்படி சம்பந்தம் இல்லாமல் உளறுவது சிரிப்பை அல்லவா வரவழைக்கிறது!

    ReplyDelete
  174. முஹம்மத் அலி ஜின்னா18 September 2015 at 09:57

    “திருக்குரானை அலசு, ஆராய்ந்து பார், சவால் விடு. முடிந்தால் இதைவிட உயர்ந்த நீதி சொல்லும் ஒரு வேதத்தை எழுது அல்லது குறைந்த பட்சம் ஒரே ஒரு வாக்கியமாவது எழுதிக்காட்டு” என அல்லாஹ் மனித இனத்துக்கு 1400 வருடங்களாக சவால் வைத்துள்ளான். முயற்சி செய்த அறிவுஜீவிகளெல்லாம் இறுதியில் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்.

    “ஹிந்துக்கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் தந்தை பெரியார்.
    —–

    தமிழ் குரான் இன்டெர்னெட்டில் இருக்கிறது. படித்துப்பார். திருக்குரானின் அடிப்படை “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்”. எங்காவது ஓரிடத்தில், திருக்குரான் அநீதிதியை போதித்தால், அதை நிரூபி. அடுத்த நிமிடமே நான் இஸ்லாத்தை துறந்து நாத்திகனாகி விடுகிறேன்.

    திருக்குரானை படிக்க நீ முஸ்லிமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த ஆத்திகன் நாத்திகன் அனைவரும் படிக்கலாம்.

    ReplyDelete
  175. முஹம்மத் அலி ஜின்னா18 September 2015 at 10:00

    என்னோடு விவாதம் செய்ய விரும்புவோருக்கு, என்னைப்பற்றிய விளக்கம்:

    “உலகில் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்ட, சிலைவணக்கத்துக்கெதிராக ஜிஹாத் செய்” என திருக்குரான் சொல்கிறது. சிலைவணக்கத்தின் மூலக்கூறு பார்ப்பன ஹிந்து வர்ணதர்மம்.

    அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

    “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் தந்தை பெரியார். தந்தை பெரியார் சாகும் வரை பார்ப்பன வர்ணதர்மத்துக்கெதிராக ஜிஹாத் செய்தார் என்பதை எந்த பெரியாரிஸ்டாலும், பார்ப்பனராலும் மறுக்கமுடியாது. தந்தை பெரியார் செய்ததை 40 கோடி இந்திய முஸ்லிம்களால் செய்யமுடியாது. ஆக தந்தை பெரியாரே இந்திய முஸ்லிம்களின் தலைசிறந்த தலைவரென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    “எனது எதிரி பாப்பான், ப்ராஹ்மின்ஸ் அல்ல” என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முஸ்லிம்களை “உனது தேசபக்தியை நிரூபி, நாட்டை விட்டு வெளியேறு, ஹராம்ஜாதாக்கள்” என வாயில் வந்தபடி எங்களை 65 வருடங்களாக திட்டுகிறான். எங்களுடைய மண்ணில் எங்களை வாழமுடியாமல் செய்துவிட்ட பாப்பாரத் தேவடியாமவன்களை எதிர்க்கிறேன். அடிக்கு அடி, உதைக்கு உதை, மரியாதைக்கு மரியாதை. சீக்கியனும் தமிழனும் செய்ததை முசல்மான் செய்தால்தான் பாப்பானுக்கு புத்திவரும். எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்?. பாப்பானை திருப்பி அடிப்பீரா அல்லது உதைபட்டு சாவீரா?

    பார்ப்பனத்துவம் ஒழிந்தால், ப்ராஹ்மின் பாரதி கனவு கண்ட “பாருக்குள்ளே நல்ல நாடும்”, அல்லாமா இக்பால் கனவு கண்ட “சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாராவும்” உருவாகிவிடும். ஆகையால் பார்ப்பனத்துவத்துக்கெதிராக தந்தை பெரியார் போல் நானும் ஜிஹாத் செய்கிறேன்.

    ReplyDelete
  176. முஹம்மத் அலி ஜின்னா18 September 2015 at 10:29

    என்னோடு விவாதம் செய்ய விரும்பும் சனாதான ஹிந்துக்களுக்கு, நான் கேட்கும் கேள்வி:

    “நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன். எனது விந்துக்காக பார்ப்பன புனிதப்பசுக்கள் ஏங்கி நிற்கின்றன. நானே அவர்களின் கோ-விந்தன், கோ-வரதன்” என்கிறான் கீதையிலே செக்ஸ் பைத்தியம் கண்ணன். அவனை கடவுளென நீங்கள் வணங்குகிறீர். இந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணன் உங்கள் வீட்டுக்குள் புகுந்து உங்களுடைய பெண்கள் குளிக்கும் போது சேலைகளை திருடி அவர்கள் குளிப்பதைப் பார்த்து ரசித்தால்:

    அவனைப் பிடித்து செருப்பால் அடிப்பீரா அல்லது
    அவனுடைய வாயில் பீயை திணிப்பிரா அல்லது
    அவனை ரெண்டு துண்டாக்கி தண்டவாளத்தில் வீசுவீரா
    அல்லது போலீஸில் பிடித்துக்கொடுத்து முட்டிக்குமுட்டி தட்டுவீரா
    அல்லது அவன் மீது ஜிஹாத் செய்து போட் தள்ளுவீரா
    அல்லது “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு “இன்னும் நல்லா தடவு” என விளக்கு பிடிப்பீரா?.
    ———————-

    இந்த கேள்விக்கு பதில் சொல்வோரிடம் மட்டுமே விவாதம் செய்வதில் எனக்கு சுவாரஸ்யம் இருக்கிறது. நீங்கள் உங்கள் கருத்துக்களை தாராளமாக சொல்லலாம், திட்டலாம். எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. நன்றி.

    ReplyDelete
  177. ஆனந்த் சாகர்19 September 2015 at 16:33

    முஅஜி,

    உங்களுக்கு இஸ்லாம் என்ற பைத்தியம் அளவுக்கு அதிகமா ஏறி அது வெறியாக மாறியிருக்கிறது. பைத்தியம் பிடித்தவர்களுடன் அறிவுடைய எவரும் விவாதம் செய்ய முன்வரமாட்டார்கள். உங்கள் பைத்தியம் தெளிந்து தெளிவாக பேச ஆரம்பித்தால் உங்களுடன் சரிசமமாக பேசலாமா என்பதை பிறகு பார்ப்போம்.

    ReplyDelete
  178. ஆனந்த் சாகர்19 September 2015 at 16:45

    //அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற ஜிஹாத் செய்பவனே சிறந்த முஸ்லிமென திருக்குரான் அறிவிக்கிறது.//

    அதனால்தான் இஸ்லாம் ஒரு பாசிச கோட்பாடு என்கிறோம்.

    //அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல்.//

    சிலைவணக்கத்தை ஒழிக்க கட்டளையிட யார் இந்த அல்லாஹ்? சிலையை வணங்குவதும், வணங்காததும் தனி மனித உரிமை. வன்முறை மூலம் இந்த உரிமையை தடுக்க எவராவது முற்பட்டால் அதை முறியடிக்க ஜனநாயகம் தன் கடமையை செய்யும்.

    ReplyDelete
  179. ஆனந்த் சாகர்19 September 2015 at 17:01

    //காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். //

    கடவுளை பற்றி முகம்மதுவுக்கு ஒன்றுமே தெரியாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  180. ஆனந்த் சாகர்19 September 2015 at 17:30

    நீல் டொனால்ட் வால்ஷ் அவர்களின் The New Revelations என்ற புத்தகத்தின் 9 சாராம்ச அறிக்கைகளை கீழே தருகிறேன். கடவுளை பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களுக்கு இது உதவும் என்று நம்புகிறேன்.

    Nine New Revelations :

    1) God has never stopped communicating directly with human beings. God has been communicating with and through human beings from the beginning of time. God does so today.

    2) Every human being is as special as every other human being who has ever lived, lives now, or ever will live. You are all messengers. Every one of you. You are carrying a message to life about life every day. Every hour. Every moment.

    3) No path to God is more direct than any other path. No religion is the “one true religion”, no people are “the chosen people”, and no prophet is the “greatest prophet.”

    4) God needs nothing. God requires nothing in order to be happy. God is happiness itself. Therefore, God requires nothing of anyone or anything in the universe.

    5) God is not a singular Super Being, living somewhere in the Universe or outside of it, having the same emotional needs and subject to the same emotional turmoil as humans. That Which Is God cannot be hurt or damaged in any way, and so, has no need to seek revenge or impose punishment.

    6) All things are One Thing. There is only One Thing, and all things are part of the One Thing That Is.

    7) There is no such thing as Right and Wrong. There is only What Works and What Does Not Work, depending upon what it is that you seek to be, do or have.

    8) You are not your body. Who you are is limitless and without end.

    9) You cannot die, and you will never be condemned to eternal damnation.

    ReplyDelete
  181. முஹம்மத் அலி ஜின்னா22 September 2015 at 08:21

    சண்டாளர் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணந்திண்ணுமா?

    5000 வருடங்களாக பார்ப்பன வர்ணதர்ம சாக்கடையிலிருந்து வெளிவரத்துடிக்கும் தலித்துக்கள் அனைவரும் சேர்ந்து ஆட்சியை பிடித்து விட்டால் என்ன நடக்கும் என கற்பனை செய்து பார்த்தேன்:

    பிரதமர் (பறையர் ஜாதி), ஜனாதிபதி (சக்கிலியர் ஜாதி), வெளியுறவுத்துறை அமைச்சர் (தோட்டி ஜாதி), ராணுவ மந்திரி (பள்ளர் ஜாதி).

    இந்தியாவில் நடந்த இந்த மாபெரும் புரட்சியை உலகமே பாராட்டுகிறது. இந்தியாவுடன் மாபெரும் வர்த்தக உடன்படிக்கை செய்ய ஒபாமா பறந்து டெல்லி வருகிறார்.
    —————

    ஒபாமா: ஹலோ மிஸ்டர் பறையா, ஹவ் ஆர் யூ?
    பிரதமர்: (சொறிந்து கொண்டே) கும்புட்றேன் சாமி…
    ஒபாமா: ஓ..கே …. குட்.. வாட் நியூஸ்…?

    பிரதமர்: உப்புமாண்னே !. அவ்ளோ தூரத்லேருந்து ப்ளைட்லே வந்துருக்கீங்க .. களப்பா இருக்கும் .. சூடா ஒரு கப் கரம் சாயா அடிங்க.. (தனது கைப்பட அலுமினியம் லோட்டாவை மேலே தூக்கி சர்ர்ரருனு அடிச்சு மசாலா சாயாவை மலாய் போட்டு ஒபாமாவுக்கு தருகிறார்) ..

    ஒபாமா: ஆஹா.. பென்டாஸ்டிக் மிஸ்டர் பறையா .. நான் இது மாதிரி டீ லைப்ல சாப்ட்டதே கிடையாது… . .. சப்.. சப் .. சப் ..

    பிரதமர்: (புல்லரித்துப்போய்) உப்புமாண்னே !. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க… உள்ள நம்ம இப்ராஹிம் பாய் பீப் பாயாவும் பொரோட்டாவும் ரெடி பண்றார். அடிச்சு பாரு நய்னா .. சும்மா கும்முனு இருக்கும் ..
    (ப்ரேக் பாஸ்ட் முடிந்ததும் மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்கிறது)

    ஒபாமா: மிஸ்டர் பறையா.. ப்ரேக் பாஸ்ட் சூப்பர்… … … .. இந்த மாதிரி ப்ரேக் பாஸ்ட நான் சின்ன புள்ளையா இருக்கறப்ப ஆப்ரிக்காலே எங்க பாட்டி செய்வாங்க. அவுங்க ஞாபகம் வந்துடுச்சு……. இப்ப ஹஜ்ஜுக்கு போயிருக்காங்க. …. சரி பிஸினஸ் மேட்டர் பத்தி பேசலாம் .. எங்க உங்க பாரின் மினிஸ்டர்?

    பிரதமர்: அதோ.. கைல கம்பும் வளையத்தையும் வச்சுக்கினு மூலைலே நிக்கறாரே .. அவர்தான் நம்ம பாரின் மினிஸ்டர் ..

    ஒபாமா: ஓஹோ .. அப்படியா .. சரி .. அவர் கைல கம்பும் வளையமும் எதுக்கு?.

    பிரதமர்: அதுவா .. மீட்டிங் முடிஞ்சதும் அவர் டூட்டிக்கு போவனும் .. அதான் ..

    ஒபாமா: டூட்டியா .. அதென்ன டூட்டி?

    பிரதமர்: அவர் மினிஸ்டர் ஆவறதுக்கு முன்னாடி முன்சிபாலிட்டிலே பன்னி நாய் புடிக்கற வேல பாத்தாறுங்க .. “கா காசுனாலும் கவ்ர்மெண்ட் காசு .. எனக்கு இடஒதுக்கீட்ல கெடச்ச வேல .. செத்தாலும் என் வேலய ராஜினாமா செய்யமாட்டேன்னு” ஒரே புடிவாதமா இருக்காருங்க ..

    ஒபாமா: இம்ப்ரெஸ்ஸிவ்.. சரி .. நம்ம டிபன்ஸ் கன்ட்ராக்ட மொதல்ல கவனிப்போம் .. எங்க உங்க டிபன்ஸ் மினிஸ்டர்?

    பிரதமர்: அதோ கீழே குந்திக்கினு இருக்காரு பாருங்க .. அவர்தான் ..

    ஒபாமா: அவர் ஏன் மேலே சேர்ல ஒக்காரமாட்டாரா?. ஹாய் ப்ளடி சூத்ரா .. மேல ஒக்காரு மேன் ..

    பிரதமர்: அண்ணே வேணாங்க .. அவர உட்ருங்க .. அங்கேயே ஒக்காந்து பேசட்டும் ….. கம்பெல் பண்ணாதீங்க ..

    ஒபாமா: என்னா மேன் ப்ரச்ன?. மேல ஒக்காந்த என்னவாம்?

    பிரதமர்: அண்ணே .. இங்க அவரு செத்தாலும் ஒக்கார மாட்டாருங்க ..

    ஒபாமா: ஏன்… என்ன ப்ராப்ளம்?

    பிரதமர்: அது ஒன்னுமில்ல .. செவுத்துல பெரிய தேவர் போட்டோ இருக்குது பாருங்க .. அதான்.. ஹி..ஹி..

    ஒபாமா: வெரி சாட் .. சரி .. ஒங்க ஜனாதிபதி ஏன் வாய பொத்திக்கினு இடிச்சபுளி மாதி ஒக்காந்திருக்காரு? .. எதாச்சும் ப்ரச்னையா?

    பிரதமர்: அவர் இனிமே வாய தொறக்கமாட்டாருங்க …

    ஒபாமா: ஏன்? .. வாட்ஸ் த மேட்டர்?

    பிரதமர்: அவர் வாய்ல பெரிய ஜாதிக்காரங்க பீய திணிச்சுப்புட்டாங்க …

    ஓபாமா: ஒக்க்கே .. நான் கெளம்பறேன் .. எப்ப அமெரிக்கா வந்து இந்த கான்ட்ராக்ட்ல சைன் போடுவீங்க?

    பிரதமர்: அது ஒன்னும் பெரிய மேட்டர் இல்ல நய்னா .. நமீதா மாதிரி நாலு குட்டியும் பாரின் விஸ்கியும் செட்டப் பண்ணி வை .. நமீதா ஜட்டிலேயே அத்தன கையெழுத்தும் போட்டுட்றேன் .. ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  182. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 08:02

    நான் ஏன் பார்ப்பனரை எதிர்க்கிறேன்?:

    கொலைகாரனை பிரதமனாக்கி நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு “இது ஹிந்துக்களின் தேசம், இங்கே நீ முஸ்லிமா பொறந்ததே பாவம். உனக்கு நீதி வேண்டுமானால் பாக்கிஸ்தானுக்கு போ. இல்லாவிட்டால் உதைவாங்கி சாவு. எதிர்த்தால் தூக்கிலே தொங்குவாய்” என வெளிப்படையாய் பாராளுமன்றத்தில் சவடால் பேசுகின்றனர் பார்ப்பனரும், பார்ப்பன தேவடியாக்களும். போலீஸ்காரன் அதை கேட்டு சிரிக்கிறான். பார்ப்பன நீதிபதி அதை ஆமோதிக்கிறான்.

    நாங்கள் மண்ணின் மைந்தர்கள். இது எங்களுடைய மண். எங்களை எங்களுடைய மண்ணில் வாழவிடாமல் செய்கிறான் பாப்பான். என்னுடைய தேசபக்தியை இந்த தேவடியாமவனுக்கு நான் நிரூபிக்க வேண்டுமாம். நீங்கள் முஸ்லிம்களின் நிலையில் இருந்தால் என்ன செய்வீர்?

    40 கோடி முஸ்லிம்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடிவிடுவர் அல்லது காந்திகுரங்கு போல் கண், காது, வாயை பொத்திக்கொண்டு அனைத்து உரிமைகளும் இழந்து அடிமையாகிவிடுவர் என கனவு காண்கிறான் பாப்பான். “சீக்கியன் செய்ததையும், தமிழன் செய்ததையும் முசல்மான் செய்தால்தான் இவனுக்கு புத்தி வரும். ஒன்றுமே செய்யாமல் தூக்கிலே தொங்குவதைவிட, எதையாவது செய்துவிட்டு தொங்குவதே மேல்” என பெரும்பான்மை முஸ்லிம்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

    ஆகையால்தான் நான் பேசுகிறேன். என்னிடம் இருப்பது எழுத்து எனும் ஆயுதம்தான். அதன் மூலம் கருத்துப்போர் செய்கிறேன். அப்படியாவது பாப்பானுக்கு புத்திவராதா எனும் நப்பாசையில்.

    ReplyDelete
  183. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 08:15

    நான் பாப்பானை திட்டுவதெல்லாம், அவனுடைய கீதை மற்றும் ஹிந்துமத வேத புரணங்களின் அடிப்படையில் திட்டுகிறேன். நான் சொல்வதில் ஏதாவதொன்று பொய்யென நிரூபி பார்க்கலாம்?:

    1. உனது மதத்தின் அடிப்படை காமசூத்திரம்.

    2. உனது கோயில் சுவற்றில், ஆண் கடவுள்களும் பெண் கடவுள்களும் நாய் பன்றி போன்ற மிருகங்களும், பல்வேறு கோணங்களில் கூட்டாக புணர்கின்றனர்.

    3. லிங்கமும் யோனியும் உனது கடவுள்.

    4. உனது கடவுள் கண்ணன் ஒரு வைசியன் . அவன் ஒரு பொம்பள பொறுக்கி, செக்ஸ் பைத்தியம். அவன் ப்ருந்தாவணத்தில் பாப்பாத்திகளை “எனது விந்துக்காக ஏங்கி நிற்கும் புனிதப்பசுக்கள்” என அறிவிக்கிறான்.

    5. அந்த பொம்பள பொறுக்கி கிருஷ்ணனை செருப்பால் அடித்துவிரட்டாமல், அவன் பாப்பத்திக்களுக்கு விந்தேற்றும் போது நீ “கோ-விந்தா, கோ-விந்தா” என பயபக்தியுடன் கன்னத்தில் போட்டுக்கொண்டு தோப்புக்கரணம் போடுகிறாய்.

    7. நாங்கள் ஷத்திரியன் ராமனுக்கு பொறந்த ராம்ஜாதாக்கள் என பெருமையோடு சொல்கிறாய். ஷத்திரியனுக்கு பொறந்த பாப்பான் ராம்ஜாதாவா அல்லது ஹராம்ஜாதாவா என உனது ஊத்தப்பல் சங்கராச்சாரியாரிடம் கேட்டுச்சொல்.

    8. ஊரிலுள்ள வசதி படைத்த பெரிய மனிதர்களை பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு அழைத்து, பாப்பாத்திக்களை தைதக்கா தை என கையை காலை தூக்கி ஆடவைத்து பிட்டத்தை வளைத்து காட்டி “இது உனக்கு வேண்டுமா?. என்ன விலை தருவாய்?” என ஏலம் விடும் தேவடியா ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நடத்துகிறாய்.

    9. நீ ஷத்தியனுக்கும் வைசியனுக்கும் பாப்பாத்திக்களை விட்டு உருவி, தெய்வீக தேவடியாத்தனம் செய்து பிழைக்கிறாய். உனக்கு மானம் மரியாதை சூடு சொரணையிருக்கா?
    ————————–

    நான் மேலே சொன்னதில் ஏதாவது ஒரு வரி பொய்யென்று உனது கீதை, வேத புராணங்களின் அடிப்படையில் நிரூபித்தால், இனிமேல் ஜென்மத்துக்கும் பாப்பானை நான் இழிவு செய்யவே மாட்டேன். சவாலுக்கு தயாரா?.

    ReplyDelete
  184. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 09:03

    5000 வருடங்களாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆதிக்கஜாதியை எப்படி மண்டியிட வைத்தார் அம்பேத்கர்?:

    “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    ஆக ஆதிக்கஜாதியை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
    ————————–

    ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

    1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
    ——————-

    ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

    அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

    ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
    ————————

    ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

    காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

    ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

    காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

    ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

    காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

    ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

    காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

    ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
    ———————

    அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

    ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

    ReplyDelete
  185. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 09:06

    அரபு நாடுகளில் போர் வெடிக்கிறது. வளைகுடா இந்தியர் தாயகம் திரும்பினால், சோவியத் யூனியன் போல் இந்தியா சிதறும் அபாயம்.

    சனா: ஏமன் நாட்டு துறைமுகத்தில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 20 இந்தியர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது நேற்று சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ——————–

    வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இதில் 80 லட்சத்துக்கும் மேல் ஹிந்துக்கள். சவூதியில் மட்டும் 22 லட்சம் இந்தியர். இன்று அரபியும் அரபியும் அடித்துக்கொள்கின்றான். ஆனால் அப்பாவி இந்தியர் பலியாகின்றனர்.

    இது மிகப்பெரிய போராக வெடிக்கும், வளைகுடா முழுதும் பரவுமென சொல்லப்படுகிறது. அரபு நாடுகளின் பொருளாதாரம் குலைந்தால், அலைஅலையாக இந்தியர் தாயகம் திரும்புவர். இந்தியாவின் பொருளாதாரம் குலைந்து உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறிவிடும்.

    இந்தியா உடைந்தால், அது ஒரு வலிமைமிக்க இஸ்லாமிஸ்தான் பிறக்க வழிவகுக்குமென்பது உலமாக்களின் கணிப்பு. அல்லாஹு அக்பர்.

    ReplyDelete
  186. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 09:09

    வேதத்தை திரித்து தனது சொந்த தங்கையின் பேத்திகளுடன் அம்மணமாய் படுத்துக்கொண்டு “வேததண்டு எழுகிறதா” என ப்ரம்மச்சாரிய சோதனை செய்து பார்த்த செக்ஸ் பைத்தியம் காந்தியை கோட்சே எனும் ப்ராஹ்மணர் போட் தள்ளியது ஷரியா சட்டப்படி முற்றிலும் சரியே.

    தனக்கு வீரம் வரவேண்டுமென்பதற்காக, காந்தியை போட் தள்ளுவதற்கு முன்பு இஸ்லாத்தை தழுவி “இஸ்மாயில்” என தன் பெயரை மாற்றி பச்சை குத்திகொண்டார். உண்மையை சொல்லப்போனால், காந்தியை போட் தள்ளிய கோட்சே ஒரு ஜிஹாதி முஸ்லிம்.

    ReplyDelete
  187. முஹம்மத் அலி ஜின்னா23 September 2015 at 09:10

    வலிமை மிகுந்த யானை ஏன் ஒரு ஒல்லியான யானைப்பாகனுக்கு பயப்படுகிறது?. ஏன் அவனுடைய அடிமையாகி அவன் சொல்லும் வேலையை செய்கிறது?. அந்த யானையின் மனதில் பயத்தை உருவாக்குவதே யானைப்பாகனின் கலை.

    அதே போல் ப்ராஹ்மின்ஸ் அறிவுஜீவியாக இருந்தாலும், ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் கட்டுப்பட்டவன் எனும் அடிமைத்தனத்தை அவனது உள்ளத்தில் சிலைவணக்கம், கீதை, காமசூத்திரம், மஹாபாரதம், ராமாயணம் போன்ற பொய் பாதி மெய் பாதி கலந்த கட்டுக்கதைகள் மூலம் அவர்கள் விதைத்துவிட்டனர்.

    இந்த அடிமைத்தனத்தை அறுத்து தன்மானத்தையும் வீரத்தையும் ப்ராஹ்மணருக்கு தரும் வைத்தியமே சுன்னத்தும் கோமாதா பிரியாணியும். இஸ்லாத்தை தழுவியதும் ஒரு ப்ராஹ்மணர் “நான் ஒரு உஞ்சவிருத்தி அடிமை” எனும் மனநிலையிலிருந்து வெளியேறி “நான் ஒரு இமாம், பாதுஷா, கலீபா, மாவீரன்” என சிந்திக்க ஆரம்பித்து விடுகிறார்.

    சுன்னத் செய்து கோமாதா பிரியாணி சாப்பிட்டதும், அவருடைய ஆண்மை விழித்தெழுந்து முழுமையான தாகசாந்தி பெறுகிறது.

    ReplyDelete
  188. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:30

    // சிலையை வணங்குவதும், வணங்காததும் தனி மனித உரிமை. வன்முறை மூலம் இந்த உரிமையை தடுக்க எவராவது முற்பட்டால் அதை முறியடிக்க ஜனநாயகம் தன் கடமையை செய்யும். //
    ------------------

    பார்ப்பானின் தேசபக்தியும் பாரதமாதாவின் பரிதாப நிலையும்:

    மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.

    கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.

    நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
    ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் "ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா" என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.

    என்னைபோல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
    "வைசியன் கண்ணன்", பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது "கோ-விந்தா, கோ-விந்தா" என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.

    வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், குருட்டுக்கிழவி பாரதமாதாவை வெள்ளைக்காரனிடம் வப்பாட்டியாக அடகு வைப்பான்.

    என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.

    சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.

    பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பிவிடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.

    எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.

    பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்

    அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.

    தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.

    ஹிந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.

    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.

    பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊத்துவான்.

    பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அனுஅனுவாய் ரசிப்பான்.

    உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்

    இந்த அரைநிர்வாணப் பக்கிரி பாப்பானை யாரால் திருத்த முடியும்?

    ReplyDelete
  189. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:34

    // தலித்களை சாதி இந்துக்கள்(கிறித்தவர்கள்) ஒடுக்குவது போல் //
    ——————-

    அப்படியானால், ஏன் நீ திமிறி எழவில்லை?. அவனை ஏன் திருப்பி அடிக்கவில்லை?. ஏன் இன்னமும் அந்த ஹிந்து வர்ணதர்ம சாக்கடையிலேயே சொரணைக்கெட்ட பன்றியைப் போல் உழல்கிறாய்?.

    5000 வருடங்களாக ஆதிக்கஜாதி ஹிந்து உன்னை உதைக்கிறான். அவனுடைய மலத்தை தலையில் சுமக்கிறாய். அவனுடைய மலம் தின்று வளரும் பன்னியை உண்கிறாய். இருந்தாலும் அந்த ஹிந்து வர்ணதர்ம சாக்கடையை விட்டு வெளியேற மறுக்கிறாய்.

    நன்றியுள்ள நாய் என சொல்வார்கள். ஆனால், அந்த நாயை நாலு தடவை உதைத்தால், ஐந்தாவது தடவை அவன் மீது பாய்ந்து குதறிவிடும். உனக்கேன் ஒரு ஐந்தறிவு படைத்த நாய்க்குள்ள தன்மான உணர்ச்சி கூட இல்லை?.

    “எவ்வளவு வேணுமானாலும் ஒதைங்க அய்யா. பீய வாயில் திணிங்க அய்யா. ரெண்டு துண்டா வெட்டி தண்டவாளத்துலே வீசுங்க அய்யா. ஆனா என்னோட இட ஒதுக்கீட்ல மட்டும் கைய வக்காதீங்க அய்யா. நான் மானம் ரோஷம் சூடு சொரணை கெட்ட ஜென்மமய்யா” என ஒரு குவளை இலவச கஞ்சிக்காக இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் மலம் தின்னும் பன்றி போல் வாழ்கிறயே, உனக்கு தனமானமே கிடையாதா?.

    ReplyDelete
  190. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:36

    இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

    மீடியா மூலம் பாப்பானின் சிண்டை அறுக்க நான் ஒருவன் போதும். நான் எழுதுவதை பாப்பாத்தி ஜெயா, கலைஞர், முக ஸ்டாலின், தேவருக்கு பொறந்த பாப்பான் சுப்ரமண்ய சுவாமி, ராமநாதநாதபுரம் அரண்மனையில் தேவருக்கு பொறந்த பாப்பான் கமல ஹாசன் ஆகியோர் ஒரு வரிவிடாமல் வாசிக்கின்றனர். எந்த பாப்பானுக்கும் என்னோடு விவாதம் செய்யும் வக்கில்லை. அல்லாஹ்வின் அருளால், சோமநதபுரம் ஆலயத்தை 17 முறை மொட்டையடித்த மாவீரன் கஜினி முஹமது போல் இன்று நான் உணர்கிறேன். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!!.

    இன்ஷா அல்லாஹ், தமிழகம் முஹம்மது பட்டினமாக மாறும் நாள் நெருங்குகிறது. இந்த பொன்னான தருணத்தில், “பெரியார் ஒரு இஸ்லாமிய ஜிஹாதியாக வாழ்ந்தார், இஸ்லாமிய ஜிஹாதியாக இறந்தார்” எனும் சத்தியத்தை தமிழக முஸ்லிம்களிடம் எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம் “இஸ்லாமிய தாவா களப்பணி செயல் வீரர்களுக்கு” வந்துவிட்டது.
    ————–

    அல்லாஹ்வின் கட்டளைகளில் முதன்மையானது சிலைவணக்கத்தை ஒழித்தல். தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார், சிலைகளை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

    சரித்திரத்தில் பெருமானாருக்கு அடுத்தபடியாக ஹிந்து சாமி சிலைகளை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்குநூறாக உடைத்த ஒரே மனிதர் தந்தை பெரியாரென்றால் மிகையாகாது.

    தந்தை பெரியாரெனும் இஸ்லாமிய ஜிஹாதி சிங்கத்தை அழைத்துக்கொண்டு பாப்பானின் RSS, BJP ஹிந்துத்வா ஆபிஸ்களின் முன் “பாபரி மசூதியை திருப்பித்தரும் வரை பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து சுக்குநூறாக உடைத்தால்”, அடுத்த எலக்‌ஷனில் பாப்பாத்தி ஜெயாவும், முக ஸ்டாலினும் திருக்குரானை தலைமேல் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முஸ்லிமிடமும் எனக்கு ஓட்டுப்போடுங்கள் என கெஞ்சுவர்.

    பாப்பானின் வேட்டி நனைந்துவிடும்.

    ReplyDelete
  191. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:51

    // பெரியார் அண்ணா வழி வந்த மானமிகு ஜெயலலிதா //
    —————–

    பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்து சுக்குநூறாக உடைத்தெறிந்த இஸ்லாமிய ஜிஹாதி சிங்கம் பெரியாரின் பெயரைக் கேட்டதும் பயந்து நடுங்கி, பிள்ளயாரை வணங்கும் பாப்பாத்தி ஜெயாவையே “பெரியார் வழி வந்த மானமிகு ஜெயலலிதா” என சர்ட்டிபிக்கெட் தந்துவிட்டாய்.
    -------------

    தயவுசெய்து "Please prove you're not a robot" capchaவை நீக்கவும். பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது. நன்றி

    இன்னும் கொஞ்சம் போனால், பிள்ளையார் சிலையை நீயே செருப்பால் அடித்து “பெரியார் அண்ணா நாமம் வாழ்க” என அலறி உனது பூனூலை நீயே அறுத்து எறிந்துவிடுவாய்.

    உன்னைப்பார்த்தால், சோம்நாத் ஆலயத்தை 17 முறை மொட்டையடித்த கஜினி முஹமதுவிடம் மண்டியிட்டு:

    “ஆலம்பனா, சலாமலைக்கும். நீங்க இன்னிக்கு வருவேள்னு தெரிஞ்சு தங்கம் வெள்ளி அனைத்தையும் 108 மூட்டையா கட்டி ரெடியா வச்சிருக்கேன். ஒரு சின்ன வேண்டுகோள். போன தடவ ஒங்க அழகையும் வீரத்தையும் பாத்ததுலேருந்து, எம்பொன்னு ஆண்டாள் கட்னா ஒங்களத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல பிடிவாதமா நிக்கறா. குரான்லாம் மனப்பாடம் பண்ணிட்டா. நல்லா பில்டர் காபி போடுவா. ஒங்களோட காபுலுக்கு இவள கூட்டிண்டு போங்கோ. கண்கலங்காம பாத்துக்கோங்கோ. அடுத்த தடவ நீங்க வர்ரதுக்கு முன்னாடி இந்த அம்பிட்ட ஒரு வார்த்த சொல்லியணுப்ச்சா, எம்பொண்ணுக்கு வத்தல் வடாம் அப்பளம் எல்லாம் மூட்ட கட்டி ரெடியா வச்சுடுவேன். ஏதோ சுல்தான் கஜினியின் பேகம் ஆண்டாள் சுல்தானாவுக்கு இந்த ஏழை ப்ராஹ்மணனின் தாய்வீட்டு சீதனம்”

    என கண்கலங்கி சொன்ன சோம்நாத் பூசாரியின் ஞாபகம்தான் வருகிறது.

    ReplyDelete
  192. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:54

    // மேல்ஜாதிகாரனிடம் அடி தாங்க முடியாமலும் அவமானத்தாலும் அவனே மாறிவிட்டு போகிறான் //
    ——————–

    உண்மையை சொல்லப்போனால், எவ்வளவுதான் ப்ராஹ்மின்ஸை கேலி செய்தாலும், மனதின் ஒரு மூலையில் “தூய ஹலால் சைவ உணவு உண்ணும் ப்ராஹ்மின்ஸ்” எனும் ஒரு மரியாதையும் அன்பும் எங்களையறியாமல் வரத்தான் செய்கிறது.

    ஆதிக்கஜாதியிடம் 5000 வருடஙகளாக அடி உதை வாங்கும் தலித் மீது எவ்வளவுதான் இரக்கப்பட்டாலும், மனதின் ஒரு மூலையில் “பீ தின்னும் பன்னி சாப்பிடும் ஹராமி. தூ” எனும் வெறுப்பு எங்களையறியாமல் வரத்தான் செய்கிறது.

    ப்ராஹ்மின்ஸ் முதலில் இஸ்லாத்துக்கு வரவேண்டுமென்பதே எங்களுடைய துஆ. வேத ப்ராஹ்மணனுக்கு சத்திய வேதம் எளிதில் புரிந்துவிடும். பன்னிக்கறி சாப்பிடும் ஹராமிக்கு மண்டையில் ஏறவே ஏறாது.
    ——————-

    கோமாதா பிரியாணி சாப்பிட்டு பெரும்பாலான முஸ்லிம் ஆண்கள் வாட்டசாட்டமாய் அழகாய் இருப்பதால், ப்ராஹ்மின் பெண்களுக்கு அவர்கள் மீது எப்போதுமே ஒரு கடைக்கண் உண்டு.. இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அரேபியாவில் வாழும் பணக்கார முஸ்லிம்களும் ஷேக்குகளும், குறைந்தபட்சம் ஒரு இந்திய ப்ராஹ்மின் பெண்ணை இராண்டாவது அல்லது மூன்றாவது அல்லது நான்காவது மனைவியாக திருமணம் செய்யவேண்டும் என்பதே எனது துஆ. அப்படிச்செய்தால் “சாரே ஜாஹன் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” ஆகிவிடும்.

    கத்தியின்றி ரத்தமின்றி இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க, இதைவிட சிறந்த வழியுண்டா?.

    ReplyDelete
  193. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 09:57

    // எங்கள் தேவர், வன்னிய குல க்ஷத்ரியர் மற்றும் ஹிந்து க்ஷத்ரியர்கள் எல்லோரும் கஜினியை பார்த்தவுடன் மூச்சா போய் விட்டார்கள்.//
    ————–

    ஒரு முறை இரு முறையென்றால் பரவாயில்லை. 17 முறை !!.

    ப்ராஹ்மின் பூசாரியை விடுங்கள். அவருடைய பெண் ஆண்டாளுக்கு கஜினி மீது காதல் வந்துவிட்டது. ஆகையால் அய்யர்வாள் வாயைத்திறக்கவில்லை. குஜராத்தை ஆண்ட அரசர்கள், போர்வீரர்கள் அனைவரும் என்ன செய்தனர்?. கஜினிக்கு விளக்கு பிடித்தார்களா?.
    ———–

    800 வருட ஆட்சியில், ஏன் ஒரு பாதுஷா கூட ஷத்திரியர், வைசியர், தலித் பெண்ணை திருமணம் செய்யவில்லை?. அனைவருமே ப்ராஹ்மின் பேரழகிகளைத்தான் மணம் புரிந்தனர். தங்களுடைய மாமனாருக்கும் மச்சான்களுக்கும் அமைச்சர் பதவியும் ஆஸ்தான வித்வான் பதவியும் தந்து அவர்கள் மூலம் இந்தியாவை 800 வருடங்கள் ஆட்சி செய்தனர்.

    சினிமாவில் கூட முஸ்லிம் பாதுஷாக்களுக்கு ஹிரோயின் ப்ராஹ்மின் பெண்கள்தான். ஆரியவர்த்தா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த அழகிய ப்ராஹ்மின் பெண்கள் எப்படி மொகலாய பேரரசர்களை ஆடிப்பாடி மகிழ்வித்தனரென்பதை “நேத்து ராத்திரி யம்மா” பாடலில் மிக அழகாக விவரிக்கிறார் கமலஹாசன்.
    ————-

    “ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி
    அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

    கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபூல் ராஜா
    என் பேருதான் அப்துல் காஜா என் கிட்டேதான்
    அன்பே ஆஜா..
    அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன்..
    ஆனந்தம் வாரே வா…

    அனார்கலி நான்தானய்யா அன்பே சலீம் நீதானய்யா
    அம்மாடி ஆத்தாடி உன்னால தான்..

    என்னோடு வா துபாய் ஏராளந்தான் ருபாய்
    ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு
    உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய்

    குபேரன் உன் பையைத் தொட்டேன்
    குசேலனின் கையைவிட்டேன்
    அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன்
    ஆசைகள் அப்பப்பா ..”

    ஷாஜஹானுக்கு குபேர் எனும் பெயருமுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
    ———

    காதல் சின்னம் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் பேகமும் இஸ்லாத்தை தழுவிய ஒரு ப்ராஹ்மின்தான். ஆணழகன் என்றால் பாதுஷா, பேரழகி என்றால் ப்ராஹ்மின் பெண்கள் என்பதுதான் இறைவன் படைத்த நியதி போலும்.

    ReplyDelete
  194. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 10:00

    அப்துல் கலாமை விட ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் ஆயிரம் மடங்கு மேலானவர்:

    உங்கள் வீட்டை சுற்றி எதிரிக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சொத்துக்களை சூறையாடி, பெண்களை கற்பழித்து, வீட்டைக்கொளுத்த நிற்கிறது. நீங்கள் உதவி கேட்டு அலறுகிறீர். அக்கம் பக்கமிருப்போரெல்லாம் “நமக்கேன் வம்பு” என கதவை இறுக்க மூடிவிட்டு ஜன்னல் சந்து வழியாக அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஆவலோடு வேடிக்கை பார்க்கின்றனர். போலீஸ்காரனுக்கு போன் செய்தால் “உனது கடவுளை கூப்பிடு. என்னை ஏன் கூப்பிடுகிறாய்” என ஜோக்கடித்து எக்காளச்சிரிப்பு சிரிக்கிறான். அப்பொழுது உங்களூடைய சகோதரர் திடீரென அங்கே வந்து அந்த அயோக்கியரை வெடிகுண்டுகளாலும் இரும்பு பைப்பாலும் தாக்கி ஓட ஓட விரட்டுகிறார். 10 எதிரிகளை போட் தள்ளிவிட்டு மாயமாய் மறைந்து விடுகிறார். அவருக்காக உங்கள் குடும்பமே வாழ்நாள் முழுதும் இறைவனிடன் பிரார்த்தனை செய்யுமா செய்யாதா?.

    இதைத்தான் ஜனாப்.தாவூத் இப்ராஹிம் சாஹிப் 1993ல் செய்தார். அவருக்காக 40 கோடி முஸ்லிம்களும் அல்லாஹ்விடம் துஆ செய்கின்றனர். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை பற்றி அப்துல் கலாமிடம் கேட்ட போது, அவர் சாகும்வரை வாயே திறக்கவில்லை. இந்த தேவடியாமவன் ஒரு குடியரசுத் தலைவனா? சட்டத்தின் பாதுகாவலனா? (அப்பாடா. தந்தை பெரியார் புண்ணியத்தில், அப்துல் கலாமை 40 கோடி முஸ்லிம்கள் கேட்க நினைத்ததை இன்று மதிமாறன் தளம் மூலம் நான் கேட்டுவிட்டேன். நன்றி).
    ————————————

    “திருக்குரானை அலசு, ஆராய்ந்து பார், சவால் விடு. முடிந்தால் இதைவிட உயர்ந்த நீதி சொல்லும் ஒரு வேதத்தை எழுது அல்லது குறைந்த பட்சம் ஒரே ஒரு வாக்கியமாவது எழுதிக்காட்டு” என அல்லாஹ் மனித இனத்துக்கு 1400 வருடங்களாக சவால் வைத்துள்ளான். முயற்சி செய்த அறிவுஜீவிகளெல்லாம் இறுதியில் இஸ்லாத்தை தழுவிவிட்டனர்.

    “ஹிந்துக்கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் தந்தை பெரியார்.
    —–

    தமிழ் குரான் இன்டெர்னெட்டில் இருக்கிறது. படித்துப்பார். திருக்குரானின் அடிப்படை “அநீதிக்கெதிராக ஜிஹாத் செய்”. எங்காவது ஓரிடத்தில், திருக்குரான் அநீதிதியை போதித்தால், அதை நிரூபி. அடுத்த நிமிடமே நான் இஸ்லாத்தை துறந்து நாத்திகனாகி விடுகிறேன்.

    திருக்குரானை படிக்க நீ முஸ்லிமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த ஆத்திகன் நாத்திகன் அனைவரும் படிக்கலாம்.

    ReplyDelete
  195. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 10:06

    உனது கீதை போதிக்கும் வர்ணதருமப்படி, “பாப்பானின் குலத்தொழில் உஞ்சவிருத்தி, பாப்பாத்தியின் குலத்தொழில் உருவுதல்”.

    அவ்வளவு ஏன்?. ஜெயலலிதாவை எடுத்துக்கொள். இவர் எப்படி முதலமைச்சரானார்?. என்ன பெரிய சொதந்திர தியாகியா?. எம்.ஜி,ஆருக்கு வப்பாட்டியாக இருந்ததால் அவருடைய அரசியல் கட்சிக்கு வாரிசானார். அதற்கு முன்னால் பல ஹீரோக்களோடு ஆட்டம் போட்டார். ஜானகி ஜெயா சக்களத்தி சண்டையில் சந்தி சிரித்தது. என்ன பெரிய கற்புக்கரசியா?

    பார்லிமெண்டிலிருக்கும் சுஷ்மா சுவராஜ், வந்தனா ராஜே, ஸ்மிரிதி ஈரானி, அம்பிகா சோனி, ரேகா, ஜெயா பச்சன் போன்ற அனைத்து பாப்பாத்திக்களின் சரித்திரத்தையும் சிறிது புரட்டிப்பார்.. அனைவரும் ஷத்திரியனுக்கும் வைசியனுக்கும் வப்பாட்டியாய் இருந்து நன்றாக உருவிவிட்டதால்தான் இவர்களுக்கு அமைச்சர் பதவி, கார் பங்களா போன்ற அனைத்து வசதிகளும் கிடைத்தது. பார்லிமெண்டிருக்கும் எந்த பாப்பாத்திக்கும் கணவனில்லை. பெரிய பத்தினி தெய்வங்களா இந்த தேவடியாக்கள்?

    கடவுள் கண்ணனையே காதலனாக்கி கைக்குள் போட்டுக்கொள்ளும் பாப்பாத்திகளுக்கு துபாய், அபுதாபி ஷேக்குகள் பெரிய விஷயமா?. “சேக்கு சேக்கு, இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி. ராத்திரி பன்னெண்டு மணிக்கு யாருமே இல்லாத சமயத்தில், பௌர்ணமி நிலவின் ஒளியில் ஈரத்துணியுடன் தனியா வந்து மன்னவனுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் வாங்கனும்னு கிருஷ்ணர் கீதையிலே சொல்றார்”னு நல்லா மயக்கி, ஆசிர்வாதம் வாங்கறேன் பேர்வழினு குனிந்து பிட்டத்தை தூக்கிக்காட்டி அபுதாபி ஷேக்கை அப்படியே ஸ்வாஹா செய்வது இவர்களுக்கு கைவந்த கலை. நாளை அபுதாபி ஷேக்கு மண்டையைப்போட்டால், நான்தான் பட்டத்து மஹாராணினு அரியணையில் அவா ஏறி ஒக்காந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
    --------------

    தயவுசெய்து "Please prove you're not a robot" capchaவை நீக்கவும். பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது. நன்றி

    ReplyDelete
  196. முஹம்மத் அலி ஜின்னா24 September 2015 at 10:18

    தன்னை நாத்திகன் என சொல்லிக்கொள்ளும் ஹிந்துக்களிடம் நான் கேட்பது:

    1. உனது ஜாதியென்ன?.
    2. நாத்திகனாகிவிட்டால், ஜாதிகள் ஒழிந்து நாத்திகருக்குள் சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் வந்துவிடுமா?.
    3. ஒரு தலித் நாத்திகன், வன்னிய நாத்திகர் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்யமுடியுமா?
    4. ஒரு தலித் நாத்திகன், தேவர் நாத்திகர் வீட்டில் போய் பெண்கேட்டால் பெண்கொடுப்பாரா அல்லது பீயை திணிப்பாரா?
    5. நீ உண்மையான பெரியாரிஸ்ட் நாத்திகனென்றால், பெரியார் செய்தது போல் பிள்ளையார் சிலையை செருப்பால் அடிப்பாயா, காலால் எட்டி உதைப்பாயா, சுக்குநூறாக போட்டு உடைப்பாயா, கீதையை நடுத்தெருவில் போட்டு கொளுத்துவாயா?. ?
    6. நீ பாரத்மாதா தேவடியா முண்டையின் உண்மையான தேசபக்த பாப்பானென்றால், திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்துவாயா?.

    ReplyDelete