பக்கங்கள்

Sunday, 6 November 2011

எது தியாகம்? அல்லது எது தியாகத் திருநாள்?




          தியாகம் என்றவுடன் முஹம்மதியர்களின் நினைவிற்கு வருபவர்கள் இப்ராஹிமும்(Abraham), இஸ்மாயீலுமே. நீங்கள் இணையதளத்தில் தியாகம்(Sacrifice) என்று தேடினால் கிடைக்கும் முடிவுகளில் இவர்களிருவருமே பெரும்பான்மையாக இருப்பார்கள். யூதர்களும், கிருஸ்துவர்களும்  மற்றும் முஹம்மதியர்களும் தங்களை இப்ராஹிமின் வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றனர்.

முஹம்மதியர்களின் நம்பிக்கை இப்படி கூறுகிறது :
இன்றைக்கு சற்றேறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த அல்லாஹ்வின் தூதரான இப்ராஹிம் தன்னுடைய தள்ளாதவயதிலும்(85) தனது அடிமைப்பெண்(பணிப்பெண்) ஹாஜிராவுடன் செய்த லீலைகளின் காரணமாக இஸ்மாயில் என்ற மகனை பெற்றெடுக்கிறார். குழந்தைப்பேறு இல்லாத இப்ராஹிமின் வயதான மனைவி சாராவினால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது சக்களத்தி ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் வெறுக்கிறார் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்ற நினைக்கிறார். அதற்கேற்றவாறே, ஹாஜிராவையும் பச்சிளங் குழந்தை இஸ்மாயிலையும் ஆளரவமற்ற பாலைவன வெயிலில் விட்டுவிடுமாறு அல்லாஹ்வும் இப்ராஹிமிடம் கட்டளையிடுகிறான்.

 ஹாஜிராவையும் இஸ்மாயிலையும் சில உணவுப் பொருட்களுடன் அரேபியப் பாலைவனத்தில், ஸபா, மர்வா எனும் இரண்டு குன்றுகளுக்கு அருகில் தன்னந்தனியே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் ஓடிவந்துவிடுகிறார். கைவசமிருந்த உணவும் குடிநீரும் தீர்ந்ததும் பிரச்சனை துவங்குகிறது.  தாகத்தாலும் பசியாலும் வீறிட்டு அழும் குழந்தைக்காக உதவிதேடி அங்குமிங்குமாக அலைமோதுகிறார் ஹாஜிரா. நாதியற்றுப்போன தங்களுக்கு உதவிசெய்ய வழிப்போக்கர்கள் யாரேனும் தென்படமாட்டார்களா? என அங்குமிங்குமாக அலைபாய்கிறார். அப்பொழுது ஒரு வானவர் குழந்தையின் அருகே தோன்றி தன் கையிலிருக்கும் தடியினாலோ அல்லது தன்னுடைய சிறகினாலோ தரையை தட்டுகிறார். உடன் அந்த இடத்திலிருந்து நீர் குமிழியிட்டு வெளியேறுகிறது. குழந்தை இஸ்மாயீல் காலால் அழுது உராய்த்த இடத்திலிருந்து நீர் பீறிட்டுக் கிளம்பியதாகவும் சொல்லப்படுகிறது. "ஸம் ஸம்" என்று கூறி அந்த நீரை ஹாஜ்ரா தனது கைகளால் அணைகட்டித் தடுக்கிறார். அவர் அவ்வாறு தடுக்கவில்லையெனில் அந்நீர்  ஆறாக பெருக்கெடுத்து ஓடி அப்பகுதியை செழிக்கச் செய்திருக்கும் என்பதும் முஹம்மதியர்களின் ஜதீகம். கிணறாக சுருங்கிய அந்நீரைக் குடித்து பாலைவனத்திலிருந்து தப்பிப் பிழைத்து மீண்டும் இப்ராஹீமையே வந்தடைகின்றனர்(?). 

       ஆண்டுகள் பதிமூன்று கடந்ததும் அடுத்த களம் தயாரானது. அல்லாஹ், இப்ராஹிமிற்கு இஸ்ஹாக் என்ற மகனைக் கொண்டு நற்செய்தியை (கு 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28) தனது தூதர்கள் வாயிலாக கூறுகிறான்  இதைக்கேட்ட  தொண்ணூறு வயதான அவரது மனைவி சாரா நம்பமுடியாமல் தனது முகத்திலறைந்தவாறு சப்தமிட்டு சிரிக்கிறார் (கு 11:72,51:29). அல்லாஹ்வின் அற்புதத்தால் மாதவிடாய் அறவே நின்றுபோன மூதாட்டி சாரா, இஸ்ஹாக் என்ற மகனைப் பெற்றெடுக்கிறார்.  இஸ்மாயீலின் மீதான சாராவின் வெறுப்பு அதிகமாகிறது. (இதற்கு வாரிசுரிமை, இஸ்ஹாக்கிற்கு தாய்பாலை மறக்கச்செய்யும் நிகழ்சியின் பொழுது சாராவை கேலி செய்ததது, இஸ்ஹாக்கை வழிகொடுத்து விடுவாரோ என வருத்தப்பட்டது என்று சில காரணங்களை யூதக்கதைகள் சொல்கிறது)

        இம்முறை அல்லாஹ் கடுமையான உத்தரவை வெளியிடுகிறான். இஸ்மாயீலை அறுத்து தனக்கு பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கனவில் கட்டளை பிறப்பிக்கிறான். முதலில் கனவை அலட்சியம் செய்தவர், அல்லாஹ்வின் வற்புறுத்தல் தாங்க முடியால் பதிமூன்று வயதான மகன் இஸ்மாயீலை நரபலி கொடுப்பதென்று முடிவு செய்கிறார்.  அதற்கென ஒரு நாளைக் குறித்து யாருமற்ற ஓரிடத்தில் மகனை நரபலியிட மகனை அழைத்தச் செல்கையில் இப்ராஹிமின் நரபலியை தடைசெய்ய முயன்ற சைத்தானை கல்லெறிந்து விரட்டுகிறார். மகனின் ஆலோசனைக்கேற்ப முகம் குப்புறக்கிடத்திய நிலையில் வைத்தவாறு மகனை அறுத்து பலியிட முயற்சிக்கிறார். பாறையையே இரண்டாக பிளக்கும் வாளால் சிறுவனின் கழுத்தை அறுக்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கையில், நரபலி சோதனை முடியுற்றதாகக்கூறி ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இப்ராஹிமின் இந்நரபலி முயற்சி "அல்லாஹ்வின் நண்பர்" என்ற தகுதியை அவருக்குப் பெற்றுத்தந்தது. இதன் நினைவாகத்தான் "பக்ரீத்" - ஆட்டுத் திருநாள் - தியாகத்திருநாள் என்று உலக முஸ்லீம்கள் ஆட்டை அறுத்துப் பலியிடுகிறார்கள்.  இப்ராஹீமின் நரபலி முயற்சியைத்தான் மாபெரும் தியாகமாக இஸ்லாம் போற்றுகிறது. முஹம்மதியர்களின் ஐந்தாவது கடமையான ஹஜ் சடங்குகளும் இதைத்தான் நினைவுகூர்கிறது.

       இதில் முஹம்மதியர்கள், இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் இஸ்ஹாக்கை அல்ல என்று கூறி பழைய ஏற்பாட்டுக்காரர்களுடன் மோதலுக்கும் நிற்கிறார்கள். யூதர்கள் இஸ்ஹாக்கின் வழித்தோன்றல்களாகவும் இஸ்மாயீல் அரேபியர்களின் தந்தையாகவும் அறியப்படுகின்றனர். யார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வமான வாரிசு? என்பதுதான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்குமிடையிலான பங்காளிச் சண்டையின் அடிப்படை

இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது யாரை? யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிரான கருத்தை முஹம்மது கூறினாரா?

       குர்ஆன், இஸ்மாயீலைத் தூதரென்றும் நல்லடியரென்றும் கஅபா புணரமைப்புப் பணியில் (கு 2:127) ஈடுபட்டதாக பெயரைக் குறிப்பிட்டு கூறுகிறது.  எனவே நபர்களின் பெயரைக் குறிப்பிடுவதில் குர்ஆனுக்கு எவ்வித தயக்கமுமில்லையென்பது தெளிவாகிறது.

ஆனால், மிக முக்கியமான, சர்ச்சைக்குறிய நரபலி நிகழ்ச்சியை (கு 37:100-108) மகனின் பெயர் குறிப்பிடப்பிடாமல் கூறுகிறது. முஹம்மதிய அறிஞர்கள், குர்ஆன் 37:10-108 வசனங்களில், வழக்கம்போல அடைப்புக்குறிகளுக்குள் இஸ்மாயீலை நுழைத்து தாங்கள் விரும்பியவாறு பொருள் விளங்கச் செய்துவிட்டனர்.   ஆனால் குர்ஆன் 37:101,112&113 வசனங்களை அவர்கள் சரிவர கவனிக்க(!) மறந்தது விட்டனர்.

 அல்லாஹ்வால் நன்மாராயம் கூறப்பட்ட மகனையே நரபலி சோதனைக்கு உட்படுத்தியதாகக் குர்ஆன் 37:101 கூறுகிறது. குர்ஆனின் 6:84, 11:71-72, 15:53, 19:49, 21:72, 29:27, 37:113, 38:45, 51:28 வசனங்கள், இஸ்ஹாக்கை, அல்லாஹ்வால் நற்செய்தியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்ட மகனென்று உறுதி செய்கிறது

நரபலி சோதனையில் வெற்றியடைந்த இப்ராஹிமிற்கு வாழ்த்துக்களைக் கூறுகையில்(கு 37:108-111) இஸ்ஹாக்கை தனது தூதராக தேர்வுசெய்த நற்செய்தியை இப்ராஹிமிற்கு தெரிவித்ததாக குர்ஆன் 37:112 கூறுகிறது. முஹம்மதியர்கள் கூறுவதைப் போல  நரபலி (கு 37:100-108) முயற்சிக்குள்ளானவர் இஸ்மாயீலாக இருப்பின், தன்மீதுள்ள இரக்கத்தின் காரணமாக அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் தந்தையாருக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக தன்னை முகம் குப்புறகிடத்தியவாறு அறுக்க வேண்டுமென்றெல்லாம் ஆலோசனை கூறி, மயிரிழையில் உயிர் பிழைத்தவரை அடியோடு மறந்து விட்டு, இவ்விடத்தில், இஸ்ஹாக்கை நபியாக தேர்ந்தெடுத்ததைக்கூறி வாழ்த்த வேண்டிய அவசியமில்லையே?

       யூதர்களின் நீண்டகால நம்பிக்கைக்கு எதிராக இஸ்மாயீலை முன்நிறுத்துவது முஹம்மதின் நோக்கமாக இருந்திருக்குமானால் பெயரைக் குறிப்பிட்டு உறுதியாக கூறியிருப்பார். உதாரணத்திற்கு, கிருஸ்துவத்தின், இயேசு இறைமகன் என்ற வாதத்தை மறுப்பதற்காக, இயேசுவைப்பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் "மரியமின் மகன் ஈசா" என்று அவரது தாயின் பெயருடனே குறிப்பிட்டு தனது வாதத்தை வலியுறுத்துகிறார். கிருஸ்த்துவத்ததின் அடிப்படையான இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முஹம்மது வன்மையாகவே மறுக்கிறார். எனவே, நரபலி நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் முஹம்மது கூறியதை பின்னுள்ளவர்கள் திரித்துவிட்டனர் எனலாம்.

மேலும், இப்ராஹிம், தனது அடிமைப்பெண் ஹாஜிராவையும், மகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு சென்ற பிறகு நீண்டகாலத்திற்குப் பின்னரே இஸ்மாயீலைத் தேடிவந்ததாக புகாரி ஹதீஸ் கூறுகிறது

புகாரி 3364 -ல் இருந்து,
…. அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அஙகே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார்/ இஸ்மாயீலின் அன்னை தன் அருகே இருக்க முன்னே சென்று/ நாஙகள் உஙகளிடம் தஙகிக் கொள்ள எங்களுக்கு நீஙகள் அனுமதியளிப்பீர்களா என்று கேட்க/ அவர்கள்/ ஆம் (அனுமதியளிக்கிறேன்)/ ஆனால் தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது என்று சொன்னார்கள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர். (ஜுர்ஹும் குலத்தார் தஙகிக்கொள்ள அனுமதி கேட்ட) அந்த சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு/ அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்... என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே/ அவர்கள் அங்கே தங்கினார்கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப/ அவர்களும் (வந்து) அவர்களுடன் தஙகினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சோர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடம் இருந்து அவர் அரபு மொழியை கற்றுக்கொண்டார். அவர் வாலிபரான போது அவர்களுக்கு பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விரும்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்த போது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள்/ தாம் விட்டுச் சென்ற (தம் மனைவி மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே/ இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர்/ எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்
எனவே, இப்ராஹிம் நரபலி கொடுக்க முயன்றது இஸ்மாயீலைத்தான் என்பது முஹம்மதியர்களின் குருட்டுநம்பிக்கையாகவே இருக்க முடியும். இது முஹம்மதிய அறிஞர்களின் இட்டுக்கட்டுதல்களுக்கு மேலும் ஓரு உதாரணம். இப்ராஹிம்-ஹாஜிரா-இஸ்மாயீல் இவர்களின் தன்னலமற்ற(?) தியாகத்தை நினைவு கூறுவதாக செய்யப்படும் ஹஜ் கிரியைகளுக்கும் சடங்குகளுக்கும் தேவையென்ன

சரி இவர்கள் இந்தக் கட்டுக்கதைகளின் மூலம் மனிதர்களுக்கு போதிப்பது தியாகமா? எது தியாகம்?
பிறர் நலனுக்காகத் தன்னலம் இழக்கும் தன்மையைத் தியாகம் எனலாம். இப்ராஹீம், பிறர் நலக்காகத் தன்னலம் கருதாமல் அப்படியென்ன தியாகம் செய்தார்? அதனால் மனிதகுலம் அடைந்த நன்மைகள் என்ன?
ஒன்றுமில்லை…!

இந்நரபலிக் கட்டுக்கதை, மனிதனுக்கு கற்பிக்கும் படிப்பினை தியாயாகமா?
தங்களது இறைவன் அல்லாஹ்விற்காக அனைத்தையும் இழக்கும் உயர்ந்த தன்மையையே இப்ராஹிம் நமக்கு உணர்த்துகிறார் என்று முஹம்மதியர்கள் பிரதாபிக்கின்றனர். இதன் பொருள், அல்லாஹ், மனிதாபிமானமற்ற தற்கொலைப்படை ஏதேனும் உருவாக்கும் திட்டத்திலிருக்க வேண்டுமென்பதைத்தவிர இவர்களிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

மனைவி மற்றும் குழந்தைகளைக் ஈவுஇரக்கமின்றி தவிக்கவிட்டுச் செல்வதுதான் தியாகமென்றால் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு ஆதரவற்றோர் இல்லங்களிலும் அநாதை இல்லங்களிலும்   இதன் சாட்சிகளைக் காணமுடியும்.

தியாகத்தின் பொருளை விளங்க சில உதாரணங்கள்.

மனிதகுலம் இன்றுவரை பல தியாகிகளையும் அதன் பலனையும் சந்தித்துள்ளது. அம்மை நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்ச்சர், மருந்தை தமது செல்லக் குழந்தையின் மீதே சோதனை செய்து பார்த்தவர். தொழுநோயைக் கட்டுப்படுத்துகிற மருந்தைக் கண்டுபிடித்த இன்னொரு விஞ்ஞானி, தம்மீதே தொழுநோயை வரவழைத்து ஆராய்ச்சி செய்வதற்காக, தொழுநோயாளி ஒருவரின் தசையை அறுத்து விழுங்கி இருக்கிறார். இத்தகையவர்களின் அபாரமான தீரம், தியாகம், கருணை ஆகியவைகளை அனுபவித்துக் கொண்டே, மனைவியின் நச்சரிப்பிற்கும், மிரட்டல்களுக்கும் அஞ்சி, கனவையும், கடவுளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, வைப்பாட்டியின் மகனை நரபலி கொடுக்க முயன்ற காட்டுமிராண்டி கதைகளை தியாக வரலாறு எனக்கூறி போற்றிப் புகழ்வதற்கு பகுத்தறிவற்ற மதவாதிகளால் மட்டுமே முடியும்!

தஜ்ஜால்

(பின் குறிப்பு: எஜமானியின் வெறுப்பிற்குள்ளான பரிதாபத்திற்குரிய அடிமைப்பெண்ணையும் அவளது மகனையும் மட்டுமே குறிவைத்து வஹீயால் தாக்கிக் கொண்டிருந்த அல்லாஹ்வின் செயல் எனக்கு விநோதமாகவே தோன்றுகிறது. சாரா-இப்ராஹிம்-அல்லாஹ் இவர்களில் யார், யாருக்கு எஜமானர்?  என்றே புரியவில்லை! )
***

53 comments:

  1. அருமையான கட்டுரை நண்பரே.

    ReplyDelete
  2. இசுலாமியர்களின் வராற்றுப் புளுகுகளில் இதுவும் ஒன்று. நச் என்று அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  3. தியாகத் திருநாள் என்றவுடன் ராஜ சிம்மாசனத்தை துறந்த புத்தர் போல பெரிதாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். இந்த பதிவை படித்த பின்தான் தெரிகிறது. இஸ்லாம் என்றாலே வன்முறை இல்லாமல் இருக்காது என்பதற்கு தியாகத்திருநாளும் உதாரணமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. தஜ்ஜால் அருமையான பதிவு !! வாழ்த்துக்கள் !!.
    நண்பர் ராஜா அவர்களுக்கு ,
    தங்கள் ப்ரோப்ய்ல் படத்தில் இருக்கும் சிவ பெருமானின் மகத்துவம் என்ன ?
    சிவபுராண கதைகள் எல்லாம் என்ன அறிவியல் உண்மைகளா இல்லை இந்த படத்தை நீங்கள் வைத்திருக்க ஏதேனும் சிறப்பு காரணங்கள் உள்ளதா ?
    தெளிவு படுத்துங்கள்.
    ஏனென்றால் அடுத்தவனை கழுவ சொல்லும் முன் நமது கு.......யை கழுவ வேண்டுமே !!

    ReplyDelete
  5. ராஜா அவர்களே!
    கடவுள்தான் இல்லையே என்பதால் சமூக விரோதங்களை செய்வது அறிவீனம். சமூக நோக்கம் உள்ளவர்களே நாத்திகர்களாக மாறுவதும், மதங்களை அம்பலப்டுத்துவதுமான அறிவுசார் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதனால் தாங்கள், பிறரை குறை சொல்லுமுன் உங்களின் குறைகளை ஆய்வு செய்து கொள்ளவேண்டும். அல்லது இசுலாமியர்களை வெறுப்பேத்தனும் என்பதற்காக சிவனை தங்களின் அடையாளமாகக் கொண்டால் ...இப்பின்னூட்டத்தின் முதல் வரிகளை படித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. மானுடன்11 November 2011 at 12:09

    இந்த மண்ணில் உண்மையான தியாகம் செய்து - மானுட நலனுக்காக உழைத்தவர்கள் இன்று வரை மனிதர்களாக தான் நினைவுகூர்கிறார்கள். ஆனால் போலி தியாகிகள் தான் கொண்டாடப்படுகிறார்கள் - உயிர்ப்பலியிட்டு.

    ReplyDelete
  7. இப்னு லஹப்
    என்னுடைய இஷ்ட தெய்வத்தை வைத்திருக்கிறேன். உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு உருவம் இல்லாததால் நீங்கள் வைத்துக்கொள்ள முடியவில்லை. எல்லா மதங்களும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. எல்லா மதங்களிலும் சில கற்பனைகளும், மூட நம்பிக்கைகளும் இருக்கும். சிவபெருமான் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தத்தான் சொல்கிறார். ஆனால் அதர்மம் செய்பவர்களை மட்டும் அழிக்க சொல்கிறார். தன்னை வணங்காதவனை எல்லாம் கொல்ல சொல்லவில்லை. மனித குலத்திற்கு எது நல்லதோ அதை பின்பற்ற வேண்டும். இந்துமதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லா உயிர்களையும் நேசிக்கும் மதங்கள் எல்லாம் சிறந்தவையே. கிறிஸ்தவமும் இஸ்லாமும் தவிர வேறு எந்த மதமும் பிற இன மக்களை புண்டோடு ஒழித்ததில்லை. இதை உலகம் உணரச் செய்கிறேன்.

    ReplyDelete
  8. unmaiye terindu pesungada..aravekadugale.....

    ReplyDelete
  9. avoid wrong information...... Pls Free mind more than Read to Islam aft tell Insha Allah Ungaluku hithayath kidaikattum..............

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. மிஸ்டர் ராஜா
    இப்னு லஹாப் கேட்டது போட்டோ வின் மகத்துவம்
    மற்ற்றும் சிறப்புக் காரணங்கள். பொறாமையினால் அல்ல
    எல்ல மதமும் அன்பை போதிக்கிறது.
    அதர்மம் செய்பவர்கள் அளிக்கப்பட வேண்டும் என்றால்
    சிவன் செய்த தர்மங்கள் யாவை?
    லிங்கம் அறுந்து விழுந்த கதை தெரியும் தானே

    ReplyDelete
  12. சரி அது போகட்டும் இசுமயிலுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை ஹாஜரா அங்கும் இங்கும் ஓடினார் ஆனால் இப்போது நல்லாதானே தண்ணீர் வருகிறது ஏன் சம்ப்ரதாயம் என்ற பேரில் ஏன் தொங்கோட்டம் என்றபேரில் இப்போது ஓடுவது மூடனம்பிக்கைதனே மேலும் இப்ராஹிமுக்கு இறைவன் கட்டளை இட்டான் அதனால் நரபலி கொடுக்கப்பட்டது ஆடு இப்போ யாருக்கு கனவில் நரபலி கொடுக்க வகி வருகிறது ஏன் பக்ரித் அன்று ஆடு கொடுக்க வேண்டும் இதுவும் மூடனபிக்கைதனே

    ReplyDelete
  13. அனானி
    அல்லா எங்கே அன்பு செலுத்த சொல்லி இருக்கிறார்? முகமது மூலம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இத்யாதிகளைத்தான் செய்யச் சொல்லி இருக்கிறார். அதைத்தான் உலகெங்கும் அவரின் தொண்டர்கள் இஸ்லாத்தின் பெயரால் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவருடன் ஒப்பிடும்போது சிவன் எவ்வளவோ மேலானவர்.

    ReplyDelete
  14. சாகித்
    கடவுள் இருக்கிறார். அவர்தான் அல்லா என்று சொல்லி விட்டு கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் ஆகிய சமூக விரோத செயல்களை அல்லாவின் பெயரில் சட்டபுர்வமாக செய்வது சரியா?

    ReplyDelete
  15. உங்கள் அனைவரையும் நினைக்க பாவமாக உள்ளது .இந்த தளத்தை உருவாக்கியவனை நினைக்க இன்னும் அடி பாவமாக உள்ளது.உங்களது ஆட்டங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு ??? எத்தனை நாட்களுக்கு தான் இன்னும் வதந்திகளை பரப்ப போகின்றீர்கள்??? இருடி மூச்சு நிற்க்கும் முன் இதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்!!! இல்லாவிட்டால் நீங்கள் எங்கள் கண் முன்னே அழிந்து போய் விடுவீர்கள்!!!"உங்களுக்கு உங்கள் மர்ர்க்கம் எங்களுக்கு எங்கள் மர்ர்க்கம்"
    "இறைவா!!! இந்த நாச காரியத்தை செய்யும் இந்த அக்கிரம காரர்களுக்கு உன் நேர்வழியை கொடுப்பாயாக!!! இந்த பொய்யர்களின் கூற்றுக்களால் தூய்மையான மார்க்கம் ஒரு போதும் கலந்கமாகது!!!

    ReplyDelete
  16. Shifana
    இஸ்லாத்தின் உண்மைகளைக் கூறி எழுதுபவர்களை அடையாளம் தெரிந்தால் அரிவாள்,கத்தி, துப்பாக்கிமூலம் சொர்க்கத்திற்கு வழிகாட்டி விடுவீர்கள். அடையாளம் தெரியாததால் அல்லாவிடம் நேர்வழி கொடுக்க சொல்கிறீர்கள். உஙகளை நினைத்தால் பெரும்பாவமாக இருக்கிறது. கொஞ்சநாள் பாக்கிஸ்தானில் இருந்து விட்டு வாருங்கள். மறை கழண்டவர்களுக்கு பாகிஸ்தானில் வரவேற்பு அதிகம்.

    ReplyDelete
  17. ராஜா,
    உன்னுடைய இஷ்ட தெய்வம் சிவனா ?
    விஷ்ணு பெண் அவதாரம் கொண்ட போது அவனை புணர்ந்தானே அந்த காமாந்தகனா ?
    அவனை இஷ்ட தெய்வமாக கொண்ட மனித பிணம் தின்னும் அகோரிகளின் கூட்டமா நீ ?
    என்னாது பிற இன மக்களை இந்து மதம் கொள்ள வில்லையா? புண்ணாக்கு கதைகள் எதற்கு?
    இந்து மதத்தினால் அழிந்து நசித்து பொய் இன்று இந்து மதமாகவே மாறி போன புத்தம், சமணம் , சாங்கியம் பற்றி தெரியுமா?
    இதுவல்லாமல் கூட்டம் கூடமாக மக்களை கொன்ற வைணவ,சைவ ரத்த வெறி போர்கள் எத்தனை?

    போய் வரலாறு படியுங்கள் நண்பரே !!!
    பொய் வரலாறு பேசாதீர் !!!

    இங்கு இந்த வலை தளத்தை பற்றி ஒன்று சொல்ல ஆசை படுகிறேன் .... இஸ்லாத்தை எதிர்க்கும் நீங்கள் அதனை இந்து பாசிசத்திற்கு துணை போய் விடாதீர்?

    ReplyDelete
  18. 2:26. நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.

    ReplyDelete
  19. இப்னுலஹப்
    சிவபெருமான் காமனையே எரித்தவர். அவர் காமத்தினால் புணரவில்லை. அவரை இஷ்ட தெய்வமாக வைத்திருப்பவர்கள் எல்லாம் சைவர்கள். அசைவத்தையே தொடாதவர்கள். உங்களுக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை. எந்த இன மக்களை இந்து மதம் அழித்து ஒழித்திருக்கிறது? இந்து மதத்தில் எத்தனை சாதி சண்டைகள் வந்தாலும் எந்த சாதியும் மற்றொரு சாதியை புண்டோடு ஒழித்ததில்லை. ஆனால் இஸ்லாம்? அது நுழைந்த நாட்டில் இருந்த மதமோ, கலாச்சாரமோ நிர்மூலமாக்கிவிட்டது. வரலாறு தெரியாதவரே! இந்து மத தத்துவங்களில் புத்தம், சமணம் எல்லாம் கரைந்து போய்விட்டன. அரிவாளால் அல்ல. இஸ்லாத்துடன் ஒப்பிட்டால் சைவ, வைணவ (போர்கள் இல்லை.) சண்டை. புஜ்யம். இஸ்லாம் பிறந்த நாளிலிருந்து கொல்லப்பட்டவர்களில் ஒரு சதவீதம் கூட சைவ, வைணவ சண்டைகளால் செத்திருக்கமாட்டார்கள். இன்று வரை இஸ்லாத்தினால் பிற இன மக்கள் தினசரி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    இஸ்லாத்தை எதிர்த்தால் நாத்திகனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதி உள்ளதா?

    ReplyDelete
  20. இப்னு லஹப்
    50 வயதுக்கு பிறகு 12க்கும் மேற்பட்ட திருமணம் செய்து, மனைவியின் அடிமை மரியாவையும் , புருஷனை கொன்று விட்டு பெண்டாட்டியை கற்பழித்த, 54 வயதில் 9 வயது ஆயிஷாவுடன் உறவு வைத்த முகமது உங்கள் கண்களுக்கு காமாந்தகாரனாக தெரியவில்லை. இறுதி இறை தூதனாக தெரிகிறார். சிவ பெருமான் (விநாயகர், முருகன் இருவரும் உறவின் மூலம் பிறந்தவர்கள் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள்) காமாந்தகனாக தெரிகிறார். வேடிக்கையாக இல்லை? உங்கள் மெய்யறிவு புல்லரிக்க வைக்கிறது.

    ReplyDelete
  21. @ராஜா

    இந்து மதம் அசிங்கமும் ஆபாசங்களும் நிறைந்த மதம். இஸ்லாத்தை தாக்குவதாக நினைத்துக்கொண்டு இந்து மததத்திற்கு வக்காலத்து வாங்க வேண்டாம். கிருஷ்ணன் செய்யாத பொறுக்கித்தனமா?

    ReplyDelete
  22. அனானி
    பொத்தாம் பொதுவாக எதையும் கூறாதீர்கள். இந்து மதம் ஆன்மீகமும் தத்துவங்களும் நிறைந்தது. புரியாத மூடர்கள் விவாதம் செய்ய வேண்டும். கிருஷ்ணன் என்ன பொறுக்கித்தனம் செய்தார் என்று சொல்லுங்கள். விளக்கம் தருகிறேன். முகமதுவை விட பொறுக்கித்தனம் செய்தவர் உலகிலேயே எவரும் இல்லை.

    ReplyDelete
  23. //புரியாத மூடர்கள் விவாதம் செய்ய வேண்டும்.// இப்போது ராஜாவும் இஸ்லாமியர்களைப் போல பேச ஆரம்பித்துவிட்டார் :)

    ReplyDelete
  24. @RAJA,

    Krishna had a total of 16,108 wives, out of which eight were his princely wives and 16,100 were rescued from Narakasura, who had forcibly kept them in his harem, but all of them are considered to be incarnations of Goddess Lakshmi.

    http://en.wikipedia.org/wiki/Krishna

    Radha is recognized as the loveliest of all the cowgirls. She was the wife of Ayana and the daughter of the cowherd Vrishabhanu and his wife, Kamalavati. Radha was a childhood friend and soulmate of Krishna and the two were inseparable as playmates and later as lovers.

    http://krishnaisgreat.blogspot.in/2008/07/radha-krishna-divine-love.html

    ReplyDelete
  25. இது எதோ வயித்தெரிச்ச கோஸ்டிகள் போல் உள்ளதே!. சீக்கிரம் யாரவது இஸ்லாம் அல்லாத சமயம் ஒன்றை உருவாக்குங்க அப்பவாது உங்கள் தேடல் அடங்குதான்னு பார்ப்போம்.

    அல்லது குர் ஆன் அல்லாத நெறி நூல் ஒன்றை உருவாக்குங்கள். அப்படி உருவாக்கி வைத்துக் கொண்டு அழையுங்கள் இஸ்லாத்தை விட சிறந்த வாழ்வியல் மாற்றத்தை கொண்டு வரும் என்றால் நிச்சயம் வந்து விடுகிறேன்.

    ஆன ஒன்னுமட்டும் சொல்லிடுங்க பரிணாமம் தத்துவத்ததை நிறுவினால் என்னை எந்த மிருகத்தின் பரிணாமமாக கூறுவீர்கள் புதிய மதம் உருவாக்கினால் அதில் எந்தச் சாதியில் என்னைச் சேர்ப்பீர்கள்

    ReplyDelete
  26. //அல்லது குர் ஆன் அல்லாத நெறி நூல் ஒன்றை உருவாக்குங்கள்.// என்ன குரான் நெறி நூலா? தமாசு தமாசு :)

    ReplyDelete
  27. அனானி,
    முஸ்லீம்கள் விவாதத்திற்கு அழைப்பது ”நேரடி விவாதத்திற்கு வா. நான் அரிவாளோடு வருகிறேன் ” என்ற கதைதான். அதனால்தான் எவரும் பொது இடங்களில் இந்து மதத்தை தைரியமாக விமரிசனம் செய்பவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க பயப்படுகிறார்கள்.

    நான் ஒரு சிவ பக்தன். கிருஷ்ணர் 16108 பெண்களை மணந்த விஷயமே எனக்கு இப்போதுதான் தெரியும். இருந்தாலும் கிருஷ்ணர் குறித்த புத்தகத்தில் படித்து பார்த்தேன். நரகாசுரன் அந்தப்புரத்தில் இருந்த பெண்களை மணந்த விஷயம் உண்மைதான். இதில் ஒன்று கவனிக்க வேண்டும். நரகாசுரனை கொன்று விட்டு அந்தப்புரத்தில் உள்ள அழகான இளம் வயது பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவிட்டு மற்ற பெண்களை தன் படைவீரர்களிடம் பங்கிட்டு கொடுத்து அடிமைகளை அனுபவித்து, வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று கிருஷ்ணர் சொல்லவில்லை. அத்தனை பெண்களையும் மணந்தார். எப்படி? 16100 கிருஷ்ணர்களாக ஒவ்வொரு பெண்களையும் அவரவர் மாளிகையில் ஒரே சமயத்தில் மணந்து தான் சர்வ வியாபியாக இருக்கும் இறைவன் என்பதை உலகம் அறியும்படி மணம் செய்தார். அத்தனை பெண்கள் இல்லத்திலும் ஒரே சமயத்தில் வாழ்ந்து காட்டினார். என்னைப் போல் நீங்களும் இஷ்டத்துக்கு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுள்ள வைஷ்ணவர்கள் எவரும் பல திருமணங்கள் செய்து வாழவில்லை. அவர்கள் இராமாவதாரத்து ராமனைத்தான் பின்பற்றுகிறார்கள். என் நண்பனிடம் ஒரு முஸ்லீம் அறிவாளி ”முகமது நின்று கொண்டுதான் ஒண்ணுக்கு போகணும். அதிலும் ஒரு காலை சிறிது தூக்கிக்கொண்டு தான் ஒண்ணுக்கு போகனும். அது அறிவியல் ரீதியாக நல்லது ” என்று சொல்லி இருக்கிறார். அதற்கு என் நண்பர் ,”ஆமாம். நிச்சயம் அது அறிவியல் புர்வமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நாய்கள் கூட ஒரு காலைத் தூக்கிக்கொண்டுதான் ஒண்ணுக்கு போகிறது” என்று சொல்லியிருக்கிறார். கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் திருமண விஷயத்தில் சிந்தித்து வைஷ்ணவர்கள் அவரை பின்பற்றவில்லை. முகமது தூதனாக? இருந்தாலும் ஒண்ணுக்கு போறதுக்கு கூட அவரை பின்பற்றுகிறார்கள் முஸ்லீம்கள். நல்லவேளை கால்கழுவறதுக்கு கல்லை பயன்படுத்தணும்னு முகமது செய்து காட்டவில்லை.

    ReplyDelete
  28. //நான் ஒரு சிவ பக்தன். கிருஷ்ணர் 16108 பெண்களை மணந்த விஷயமே எனக்கு இப்போதுதான் தெரியும்.// உங்களை மாதிரிதான் பெரும்பாலான இஸ்லாமியர்களும் தங்கள் நபியின் லீலைகளைப் பற்றி ஏதுமறியாதவர்கள்.
    //16100 கிருஷ்ணர்களாக ஒவ்வொரு பெண்களையும் அவரவர் மாளிகையில் ஒரே சமயத்தில் மணந்து தான் சர்வ வியாபியாக இருக்கும் இறைவன் என்பதை உலகம் அறியும்படி மணம் செய்தார்.// இதே மாதிரிதான் முகமதுவும். நபிகளாக இருந்த பெண்களை மணந்து தானும் நபிதான் என்று உலகறியச் செய்தார்.
    //அத்தனை பெண்கள் இல்லத்திலும் ஒரே சமயத்தில் வாழ்ந்து காட்டினார்.// முகமதுவுக்கு ஸ்பெஷல் பவர் உண்டு. வயாக்ரா இல்லாமலேயே அவரால் எல்லாப் பெண்களையும் சமாளிக்க முடியும்.
    //என்னைப் போல் நீங்களும் இஷ்டத்துக்கு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை.// முகமதுவும் அப்படித்தான். தான் மட்டும் பல திருமணங்கள் செய்துவிட்டு மற்றவர்களையெல்லாம் நான்கோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
    // கிருஷ்ணரை கடவுளாக ஏற்றுள்ள வைஷ்ணவர்கள் எவரும் பல திருமணங்கள் செய்து வாழவில்லை.// முகமதுவை நபியாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர எவரும் பல திருமணங்கள் செய்து வாழவில்லை.
    //அவர்கள் இராமாவதாரத்து ராமனைத்தான் பின்பற்றுகிறார்கள்.// ஏன் கிருஷ்ணன் பின்பற்றத் தகாதவன் என்று ஒதுக்கிவிட்டார்களா?
    // கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் திருமண விஷயத்தில் சிந்தித்து வைஷ்ணவர்கள் அவரை பின்பற்றவில்லை.// இஸ்லாமியர்களும் திருமண விஷஷயத்தில் முகமதுவைப் பின்பற்றவில்லை. ஒன்றையே சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள் :)
    //முகமது தூதனாக? இருந்தாலும் ஒண்ணுக்கு போறதுக்கு கூட அவரை பின்பற்றுகிறார்கள் முஸ்லீம்கள். // நீங்க என்னடான்னா கிருஷ்ண பகவானைப் பின்பற்றமாட்டோம்னு அடம் பிடிக்கிறீங்க.

    அதெல்லாம் இருக்கட்டும், கிருஷ்ணம் அடுத்தவன் பெண்டாட்டியான ராதையை வைத்திருந்தாராமே உண்மையா?

    ReplyDelete
  29. அனானி
    நான் கிருஷ்ணர் 16100 வடிவம் எடுத்து மணந்தார் என்று சொல்கிறேன். நீங்கள் முகமதுவும் அப்படி செய்தார் என்கிறீர்கள். முகமது ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு நாளை ஒதுக்கி அவர்களோடு இருந்தார். ஒரே நேரத்தில் அனைவருடனும் இருக்கவில்லை. இஸ்லாத்திற்கு காமம் மட்டும்தான் தெரியும். புனிதமான காதல் என்று ஒன்று இருப்பது தெரியாது.

    என் சொந்த மூளையை பயன்படுத்த மாட்டேன். முகமது செய்த மாதிரியே செய்வேன் என்று சொல்லும் உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் புரியாது. நீங்கள் முகமது மாதிரியே ஒருகாலைத் தூக்கிக்கொண்டு ஒண்ணுக்கு போய் செங்கல்லால் துடைக்கும் ஈமானிய கடமையை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு சொர்க்கம் நிச்சயம். அப்படியே முகமது சொன்னது போல் உங்கள் வீட்டு பெண்களை பக்கத்து வீட்டு பெரிய பசங்களுக்கு முலைப்பால் கொடுத்து பாசத்தை வளரவிடுங்கள். அப்புறம் ஒரு வேண்டுகோள். ஜிகாத் கடமையை செய்யும்போது எதிர்பார்ட்டி மசுதிகளில் போய் குண்டு போட்டு செய்யுங்கள். ஈரான், ஈராக், பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் ஈமான்தாரிகள் அப்படித்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  30. //நான் கிருஷ்ணர் 16100 வடிவம் எடுத்து மணந்தார் என்று சொல்கிறேன். நீங்கள் முகமதுவும் அப்படி செய்தார் என்கிறீர்கள்.// கிருஷ்ணர் என்னும் கற்பனைப் பாத்திரம் 16100 வடிவம் எடுத்தார் என்ற பொய்யை நம்பும்போது நான் சொல்வதை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?

    //இஸ்லாத்திற்கு காமம் மட்டும்தான் தெரியும். புனிதமான காதல் என்று ஒன்று இருப்பது தெரியாது. //
    16100 பெண்டாட்டிகள் வைத்திருப்பது, ராதை என்ற அடுத்தவன் பெண்டாட்டியை வைத்திருப்பதன் பெயர் காதலா?

    //என் சொந்த மூளையை பயன்படுத்த மாட்டேன். முகமது செய்த மாதிரியே செய்வேன் என்று சொல்லும் உங்களுக்கு என்ன பதில் சொன்னாலும் புரியாது.// கிருஷ்ணர் வழியைப் பின்பற்றமாட்டேன் என்று அடம்பிடிக்கும் உங்களை அவர் தண்டிக்காமல் விடமாட்டார். அடுத்த ஜென்மத்தில் என்ன மிருகமாகப் பிறக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.

    //அப்படியே முகமது சொன்னது போல் உங்கள் வீட்டு பெண்களை பக்கத்து வீட்டு பெரிய பசங்களுக்கு முலைப்பால் கொடுத்து பாசத்தை வளரவிடுங்கள்.// அப்போ நீங்க அடுத்த வீட்டு பெண்ணோடு உறவு கொண்டு இதுதாண்டா காதல் என்று கிருஷ்ணரைப் போல சொல்லப்போகிறீர்களா?

    //அப்புறம் ஒரு வேண்டுகோள். ஜிகாத் கடமையை செய்யும்போது எதிர்பார்ட்டி மசுதிகளில் போய் குண்டு போட்டு செய்யுங்கள். // எப்படி சைவர்களும் வைணவர்களும் செய்தது போலவா?

    //ஈரான், ஈராக், பாகிஸ்தான் போன்ற முஸ்லீம் நாடுகளில் ஈமான்தாரிகள் அப்படித்தான் செய்கிறார்கள். // வட இந்தியாவில் இப்போதுகூட பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குகிரார்களே. அது மட்டுமா, பெண்குழந்தைகளை கருவோடு அழிக்கும் மதம் இந்து மதம் ஒன்று தான்.

    ReplyDelete
  31. அனானி
    நீங்கள் அலிசினா இணையதளத்தில் சென்று படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நம் பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். உங்களைப் போன்ற அறிவாளிகளுடன் இதற்கு மேல் விவாதம் செய்வது வீண்.

    ReplyDelete
  32. ராஜா,

    கிருஷ்ணருக்கு எத்தனை மனைவிகள் என்பதையே நான் சொல்லித்தான் தெரிஞ்சக்கவேண்டிய நிலையில் இருக்கும் நீங்கதான் உண்மையான அறிவாளி. இதில் சூப்பர் காமெடி என்னென்னா,
    //16100 கிருஷ்ணர்களாக ஒவ்வொரு பெண்களையும் அவரவர் மாளிகையில் ஒரே சமயத்தில் மணந்து தான் சர்வ வியாபியாக இருக்கும் இறைவன் என்பதை உலகம் அறியும்படி மணம் செய்தார்.// இப்படி ஒரு பிட்டப் போட்டீங்க பாருங்க உங்களைப்போல புத்திசாலி உலகத்திலேயே இருக்கமுடியாது.

    //உங்களைப் போன்ற அறிவாளிகளுடன் இதற்கு மேல் விவாதம் செய்வது வீண்.// இப்படி எஸ்கேப் ஆனா எப்படி?
    எல்லாத்துக்கும் பதில்(?) சொன்ன நீங்க இதுக்கு மட்டும் ஒன்றுமே சொல்லலியே - கிருஷ்ணன் அடுத்தவன் பெண்டாட்டியான ராதையை வைத்திருந்தாராமே உண்மையா?

    ராஜா, இதுக்கே திணருறீங்களே இன்னும் ஆபாசக் கதைகள் இந்து மதத்தில் நிறைய இருக்கு. ஒவ்வொண்ணா எடுத்துவிட்டா அவ்வளவுதான்.
    இந்த பொந்து மதத்தை வச்சுக்கிட்டுத்தான் தாய்மதத்தைப் பாருங்கோன்னு ஆட்டம் போடுறீங்க. இந்திரன், கிருஷ்ணன், ஐயப்பன் என்று ஒவ்வொரு சாமிக்குப் பின்னாலும் ஒரு அசிங்கமான கதை. கோயிலுக்குள்ள ஆபாச சிற்பம். அடுத்தவனை குறை சொல்றதுக்கு முன்னாடி உங்க மதத்தைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க, உங்களுக்கே 'உவ்வே' வரும்.

    ReplyDelete
  33. அனானி
    இந்து மதத்தில் நீங்கள் சொல்வது போல் அசிங்கமான கதை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விட்டது? கிருஷ்ணரை பிடிக்காதவர்கள் சிவனை வணங்கலாம். முருகனை, விநாயகரை, ஆஞ்சனேயரை யாரை வேண்டுமானாலும் வணங்கிக்கொள்ளலாம். எவரையும் பிடிக்கவில்லை என்றால் ஜோதிவடிவிலோ, தியானம் மூலமோ வழிபட்டுக்கொள்ளலாம். ஒரே இறைத்தூதரை ஏற்காவிட்டால் நரகம் என்று வற்புறுத்தவில்லை. முகமது பொறுக்கி என்று தெரிந்தும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. வாளைத் தூக்கிக்கொண்டு மதம் மாற மறுத்தவர்களைக் கொலை செய்ய சொல்லவில்லை.

    சைவரும், வைஷ்ணவர்களும் குண்டு போட்டு சண்டை போடவில்லை. ராதை கிருஷ்ணரின் குழந்தைப் பருவ தோழி. அங்கே காமம் இல்லை. தெய்வீக பக்தி. இது உங்களுக்கு புரியாது. திருச்செந்தூரில் வாழ்ந்த சங்கரசுவாமிகளே நான்கு வடிவங்களில் காட்சி கொடுத்தவர். கிருஷ்ணர் 16100 வடிவம் எடுப்பது முடியாத காரியமா?
    மனித குலத்தையே அழித்துக்கொண்டிருப்பது இஸ்லாம். ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகள் எல்லாம் இஸ்லாத்தினால் என்பதை உலகம் அறியும். இஸ்லாம் இருக்கும் இடத்தில் அமைதி என்பது பேச்சளவில்தான். இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் தவிர வேறு எந்த மதத்தை பின்பற்றினாலும் மனித குலத்துக்கு நன்மைதான். இவை இரண்டும் நாசகார மதங்கள். நான் இந்து. இந்து மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை.

    ReplyDelete
  34. //இந்து மதத்தில் நீங்கள் சொல்வது போல் அசிங்கமான கதை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விட்டது?// கேரளத்து நாயர் பெண்களிடமும் தேவதாசிகளிடமும் கேளுங்கள் என்ன பாதிப்பு என்று சொல்வார்கள்.

    //முகமது பொறுக்கி என்று தெரிந்தும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.// இந்துக் கடவுள்கள் எல்லாமே பொறுக்கிகள்தானே, இதுல எந்த பொறுக்கியை கும்பிடுறது? தேவர்களின் தலைவன் இந்திரனே அடுத்தவன் பெண்ட்டாட்டியை கற்பழித்த காமாந்தகன்தானே.

    //வாளைத் தூக்கிக்கொண்டு மதம் மாற மறுத்தவர்களைக் கொலை செய்ய சொல்லவில்லை.// வாளைத் தூக்கி செய்யவில்லை, கழுவில் ஏற்றி கொலை செய்தார்கள் இந்து மதத் தலைவர்கள். குஜராத்தில் முஸ்லிம் என்பதற்காக கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றில் குத்தி குழந்தையும் கொன்றிருக்கிறார்கள் பாவிகள்.

    //சைவரும், வைஷ்ணவர்களும் குண்டு போட்டு சண்டை போடவில்லை.// ஆமாம், கத்தியாலும் வாளாலும்தான் குத்தி செத்தனர். ஏனென்றால் அப்போது வெடிகுண்டுகள் புழக்கத்தில் இல்லை.

    //ராதை கிருஷ்ணரின் குழந்தைப் பருவ தோழி. அங்கே காமம் இல்லை. தெய்வீக பக்தி. இது உங்களுக்கு புரியாது.// குழந்தைப் பருவத் தோழின்னா பருவம் அடைந்து வேறோருத்தருடன் திருமணம் முடிஞ்சாலும் ஆட்டையப் போட்ரலாமா? காமம் இல்லை - நல்ல ஜோக். கிருஷ்ணன் குளத்தில் குளிச்சிட்டு இருந்த பெண்களையே ---- காட்டினாத்தான் உடைகளைத் தருவேன் என்று சொன்ன பொறுக்கி, ராதையை விட்டு வைத்திருப்பானா?

    //திருச்செந்தூரில் வாழ்ந்த சங்கரசுவாமிகளே நான்கு வடிவங்களில் காட்சி கொடுத்தவர். கிருஷ்ணர் 16100 வடிவம் எடுப்பது முடியாத காரியமா?// இந்த காதுல பூ சுத்துற வேலையெல்லாம் வேண்டாம்.

    //மனித குலத்தையே அழித்துக்கொண்டிருப்பது இஸ்லாம்.// இந்தியாவில் மனித குலத்தை மேல் சாதி கீழ்சாதி என்று கொடுமைப்படுத்துவது இந்து மதம்.

    // ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்புகள் எல்லாம் இஸ்லாத்தினால் என்பதை உலகம் அறியும்.// இந்தியாவில் இப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள்தான் குண்டு வைக்கிறார்கள் என்பதையும் உலகம் அறியும். இதனாலதான மோடிக்கு விசா கிடைக்க மாட்டேங்குது.

    //இஸ்லாம் இருக்கும் இடத்தில் அமைதி என்பது பேச்சளவில்தான்.// பார்ப்பனீயம் இருக்குமிடத்திலும் அமைதி இருக்காது.

    //இஸ்லாத்தையும், கிறிஸ்தவத்தையும் தவிர வேறு எந்த மதத்தை பின்பற்றினாலும் மனித குலத்துக்கு நன்மைதான். இவை இரண்டும் நாசகார மதங்கள்.// சொல்லிட்டாரு தொர. புத்த மதத்தையும் சமண மதத்தையும் கழுவேற்றி அழித்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கெல்லாம், தலித் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கொண்டுசெல்லும் காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் இதை சொல்ல எந்த அருகதையும் கிடையாது.

    //நான் இந்து. இந்து மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. // சொன்னாலும் எவனும் கேட்கப்போவதில்லை. கல்லையும் மண்ணையும் பாம்பையும் பல்லியையும் அசிங்கம் பிடிச்ச கண்ட்றாவிக் கடவுள்களையும் சாமியோவ்னு கும்பிடுவதற்கு எந்த மானமுள்ள மனுஷனும் விரும்பமாட்டான்.

    ReplyDelete
  35. அனானி
    இஸ்லாத்தினால் பாதிக்கப்பட்ட மூளைக்கு முகமது செய்த அயோக்கியத்தனங்கள் எல்லாம் அற்புதங்களாகவும், பிற மதங்களில் நடந்த அற்புதங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத கட்டுக்கதைகளாகவும்தான் தெரியும். உங்கள் கேள்விக்கு கிறிஸ்தவராக இருந்து இந்துவாகிய டி.ஏ.ஜோசப் என்ற வைணவப்பெரியவரிடம் விளக்கம் கேட்டேன். அவர் விளக்கம்
    கண்ணன் பல பெண்களை மணந்தது என்பது அந்தபெண்கள் பூர்வ ஜென்மத்தில் ஆண் முநிவர்களாக இருந்து இப்படி அவனுக்கு மனைவிகளாக இருக்கவேண்டுமென்று வரம்பெற்றதால் நிகழ்ந்தது.கண்ணனுக்கு காமம் இல்லை. இது மகாபாரத யுத்தத்தில் நிரூபணமாகிறது.செத்த குழந்தை பிழைக்க வேண்டுமானால் பெண் தொடர்பே இல்லாத ஒரு ஆண் அதை தொட வேண்டும் என்று ரிஷிகள் சொன்னபோது பீஷ்மர் தொட்டார் அது பிழைக்கவில்லை கண்ணன் தொட்டான் அது பிழைத்துக்கொண்டது.


    3. இனி முஸ்லிம்கலோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்கள் புரிந்து கொள்ளவும்மாட்டார்கள், வம்பு வளரும்.


    டி.ஏ.ஜோசப்

    ReplyDelete
  36. ராஜா,

    இந்து மதத்தினர் தங்கள் மதத்தில் நிறைந்திருக்கும் அசிங்கத்தையும் அருவருப்பையும் மறைப்பதற்காக ஏதாவது கதை விடுவது வழக்கம்தான். பாஞ்சாலிக்கு அஞ்சு புருஷன் என்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல ஐந்து குணங்கள் என்று பொய் சொல்லி சமாளிப்பார்கள். இந்து மதம் என்ற சாக்கடை எவ்வளவு சென்ட் அடித்தாலும் மணக்காது.

    இந்துக்களுக்கு தங்கள் மதத்தைப் பற்றி ஒழுங்காக தெரியாது. வாக்குவாதத்தில் திணறும்போது எஸ்கேப் ஆகிவிடுவார்கள். மற்றவர்களை குறை சொல்லும்முன் நீங்கள் பின்பற்றும் மதமும் அருவருப்பானதே என்பதை நினைவில் வையுங்கள்.

    ReplyDelete
  37. அனானி
    இந்து மதம் மூடத்தனம் நிறைந்தது, அருவருப்பானது என்றே வைத்துக்கொள்வோம். இந்துக்கள் விரதம், வழிபாடு என்ற பெயரில் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல் என்று தங்களைத் தான் வருத்திக்கொள்கின்றனரே தவிர பிறரை அல்ல. ஆனால் கிறிஸ்தவம், இஸ்லாம் இதற்கு மாறாக செயல்படுகின்றன.
    ராமருக்கு செருப்பு மாலை போட்டு தி.க.வினர் ஊர்வலம் போனபோது எந்த ரத்த ஆறும் இந்தியாவில் எந்த இடத்திலும் ஓடவில்லை. ஆனால் டெல்லி ஹஸ்ரத் பால் மசுதியில் முகமது முடி காணாமல் போனது என்று பல இடங்களில் வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ ஒருவர் குரானை எரித்தார் என்பதற்காக ஆப்கானிஸ்தானில் பல வெள்ளையர் கொல்லப்பட்டனர். இஸ்லாம் வரலாறே முகமது நபி இறந்தவுடன் பதவிக்காக ஆயிஷாவும் எதிர்கோஷ்டியினரும் போரிட்டு கொண்டுள்ளனர். முஸ்லீம் மன்னர்கள் பதவிக்கு வர அப்பனை , சகோதரனை சிறையில் அடைத்து கொன்ற வரலாறை உடையது. உங்களுக்கு நான் என்ன சொன்னாலும் இஸ்லாம் அமைதி மார்க்கமாகத்தான் தெரியும்.
    கிறிஸ்தவமும், இஸ்லாமும் லௌகீக வாழ்க்கையை மட்டுமே பேசுகின்றன. ஆன்மீக வாழ்க்கை அனுபவங்கள் அதில் இல்லை. என் கடவுளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகம் என்று செத்துப்போனபின் கிடைக்கும் சொர்க்கத்திற்காக நிகழ்கால வாழ்க்கையை நரகமாக்குகின்றன ஆபிரகாமிய மதங்கள். ஆன்மீக அனுபவங்களை ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர் கீழ்க்கண்ட தளத்தில் எழுதி வருகிறார். படித்துப்பாருங்கள்.http://hinduvakanaaan.blogspot.in

    ReplyDelete
  38. பைபிள்- Genisis இன் கூற்றுப்படி இப்ராகிம்(Al) அவர்கள் தனது முதல் மகனையே அறுத்து பலியிட முயன்றார்கள்.முதல் மகன் இஸ்மாயில்(al) அவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. Commanding Abraham to sacrifice his "only son" (Genesis 22.2, 22.12 ),Isaac was born when Abraham was 100 years old (Genesis 21.5) while Ismail was born to Abraham when Abraham was 86 years old (Genesis 16.16).Ismail was therefore 14 years older than Isaac.இசாக் (Al ) அவர்கள் இரண்டாவது மகன்.இப்ராகிம்(Al) அவர்களின் தியாகத்தை பொருந்திய இறைவன் அவர்களுக்கு இசாக்(Al) அவர்களைக்கொண்டு நற்செய்தி கூறுகின்றான்.அல்-குர்'ஆன்(37 -112 )....

    ReplyDelete
  39. இஸ்மாயில் ஆபிரஹாமின் வைப்பாட்டிக்கு பிறந்த மகன், எனவே வாரிசு உரிமை இல்லை. எனவே ஈசாக்கே முதல் வாரிசு. இஸ்மாயில் தவிர வேறு பிள்ளைகளும் வைப்பாட்டிகள் வழியாக ஆபிரகாமுக்கு உண்டு.

    ReplyDelete
  40. @ராஜா,
    பி.ஜே.வை விடப் பெரிய பொய்யராக இருப்பீர் போலிருக்கிறதே. குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்தவர்களையும் கொன்று குவித்தது இந்துப் பயங்கரவாதிகள்தானே.

    ReplyDelete
  41. அருமையான பதிவு தஜ்ஜால் என்றோ கனவில் கண்ட நரபலிக்கு இன்றும் விலங்குகளை பலியிடும் முறையை படித்தவர்களே செய்து கொண்டிருக்கும் பொழுது பாமரர்கள் என்ன செய்வார்கள்? இச் செயல் பகுத்தறிவாம் இவர்களை எப்படி அழைப்பது என்றே புரியவில்லை.

    ReplyDelete
  42. i think raja also the fundamendalist like muslim

    ReplyDelete
  43. அப்பனே நிமலன்
    உலகத்தில் ஆயிரம் என்ன லட்சம் மதங்கள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரவர் வழியில் விரும்பியபடி வழிபட்டுக்கொள்ளட்டும். அடுத்த மதத்தவனுக்கு இடைஞ்சல் செய்யாமல் உதவி செய்து சந்தோஷமாக வாழட்டும் என்று நினைக்கும் என்னையும், பிற மதங்களே இருக்கக்கூடாது. அவர்களை தம் மதத்திற்கு மாற்றிவிட வேண்டும். அல்லது அழித்து விட வேண்டும் என்று நினைக்கும் கிறிஸ்தவ, முஸ்லீம்களுடன் எப்படி ஐயா ஒன்றாக எடைபோடுகிறீர்கள். ஆயுதமே இல்லாமல் செல்பவனும் வெடிகுண்டு, அரிவாளுடன் அலைபவனும் ஒன்றா?

    ReplyDelete
  44. அனானி
    குஜராத்தில் முஸ்லீம்கள் தினசரி செத்துக்கொண்டிருக்கவில்லை. ரயிலை எரித்துக் கொன்றதற்காக தற்காப்புக்காக எதிர்தாக்குதலில் ஈடுபட்டதை குற்றம் என்பவரே. இன்றும் குஜராத் முஸ்லீம்கள் மோடியைத்தான் முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரிசாவிலும் கிறிஸ்தவர்கள் கொலைசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் ஏற்படுத்தும் பிரச்னைகளை கண்டுகொள்ளமாட்டீர்கள். பொய்யர் நீங்கள்தான். சோமாலியா, நைஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எப்படி அன்பைப் பொழிகிறார்கள் என்று Jihad watch இணையதளத்தில் பாருங்கள்.

    ReplyDelete
  45. @ raja
    ungalathu karuthukal sirikka vaikirathu

    ReplyDelete
  46. nandraga siriyungal. ungal santhosam en paakkiyam.

    ReplyDelete
  47. எனக்கு ஒரு சந்தேகம் இதை யாராவது தீர்த்து வைங்க....
    முஹம்மது நபி வாழ்ந்தது Born Muḥammad ibn `Abd Allāh
    c. 570
    Mecca (Makkah), Arabia
    (now Saudi Arabia)
    Died 8 June 632 (aged 62)
    Yathrib, Arabia (present-day Medina, Hejaz, Saudi Arabia)இந்த காலத்தில் தான். அவரது வாழ்க்கை காலத்தில் தான் குர்ரான் அல்லாஹ்வால் இறக்கி விட பட்டது என்பது முஸ்லிம்களின் வாதம். நல்லது. பைபிள் இன் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அவை இறைவனால் இறக்கி விட பட்டது அல்ல மாறாக இறைவனின் வழிகாட்டலில் மனிடர்கள்ளல் எழுத பட்டது. இதன் மூல பிரதிகளான தோறா எனப்படும் ஏடு சுருள்கள் மத்திய கிழக்கு நாடுகளின் பல குகைகளில் கண்டு பிடிக்க பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியாக இவற்றின் வயது 2000 வருடங்களுக்கு முற்ப்பட்டது. இயேசுவின் வாழ்க்கை பற்றிய புதிய ஏற்றப்பட்டு பகுதிகள் மட்டும் 2000 ஆண்டுகல்லு பிறகு எழுதப்பட்டுள்ளன. ஆனால் பைபிள் இல் இருக்கும் பல விடயங்கள் குர்ரனிலும் இருக்கின்றன. உதாரணம் ஆபிரஹாம் போன்றவர்களின் வரலாறு. இது 2000 வருடங்களுக்கு முன்பான ஏட்டு சுருல்கக்ளில் இருக்கும் இருக்கும் அதே வேளை ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முற்ப்பட்ட குர்ரனிலும் இருக்கின்றன. ஆக குர்ரான் வரும் முன்பே அதில் இருக்கும் சில விடயங்கள் எழுதப்பட்டு விட்டன. அதற்க்கு ஆதாரங்களும் இருக்கின்றன தோல் ஏடுகள் வடிவில். இப்படி இருக்க குர்ரான் எப்படி இறை வேதம் ஆகும்? அதில் இருக்கும் விடயங்கள் தான் முதலே கூறப்பட்டு விட்டனவே? பிறகு அது எப்படிவானில் இருந்து இறங்கியது ஆகும்? கவனத்தில் கொள்க இது பைபிள் சரி என்றோ அல்லது கிறிஸ்தவர்களை ஆதரித்தோ எழுதப்பட்டது அல்ல. எல்லா மதங்களும் மனிதர்களை முட்டாள் ஆகுகின்றன எனும் நோக்கத்தில் எழுதப்பட்டது. எனது சந்தேகத்தை யாராவது துறை சார் அறிஞர்கள் தீர்த்து வைத்தால் நன்றி.

    ReplyDelete
  48. அணானி,

    //இப்படி இருக்க குர்ரான் எப்படி இறை வேதம் ஆகும்? அதில் இருக்கும் விடயங்கள் தான் முதலே கூறப்பட்டு விட்டனவே? பிறகு அது எப்படிவானில் இருந்து இறங்கியது ஆகும்?//

    வானிலிருந்து இறங்கியது என்றும் இறைவேதம் என்றும் யார் சொன்னது? முகம்மது என்பவர் தனக்குத்தானே கூறிக் கொண்டது,இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது நம்ப வேண்டும் அவ்வளவுதான். இன்று ஒரு வேதம் வானிலிருந்து ஒலி வடிவில் வந்தது என்றால் நம்புவீர்களா? உன் காதுக்கு மட்டும் கேட்டது என் காதுக்கு கேட்கவில்லையே என்று திருப்பிக் கேள்வி கேட்கமாட்டீர்கள்? இன்று மோசடி சாமியார்கள் கூறும் அருள் வாக்குகள் எப்படியோ அது போலத்தான் அன்று நம்பினார்கள். இவ்வளவு தொழில் நுட்பங்கள் நிறைந்த இந்தக் காலத்திலேயே நம்பவைக்க ஆள் இருக்கும் போது அந்தக் காலத்தில் இது ஒரு பெரிய விடயமே அல்ல. அது முட்டாள்கள் நிறைந்த காலம் ஏமாற்றுவது சுலபம்.

    ReplyDelete
  49. Iniyavaniniyavan Iniyavan

    எங்கே கேள்வி கேட்பது தடுக்கப்படுகிறதோ
    அங்கே மூட நம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன....

    ReplyDelete
  50. அன்றய முடநம்பிக்கையின் விளைவால் இன்றுசுட சுடபிரியாணி தாயாரிக்கப்படுகிறது ஆடுகளூம் மாடுகளும் கபாப் மற்றும்கைமா செய்யப்படுகிறது சிந்திக்கமட்டீர்களா......

    ReplyDelete
  51. ஒரு விடயம் தெடர்பான விளக்கம் சரியாக ஆராய்ந்து பார்க்காமல் மற்றவர் நம்பிக்கை யை கெச்சசை செய்யாதீர்

    ReplyDelete
  52. ஒரு விடயம் தெடர்பான விளக்கம் சரியாக ஆராய்ந்து பார்க்காமல் மற்றவர் நம்பிக்கை யை கெச்சசை செய்யாதீர்

    ReplyDelete
  53. அரேபிய மூடத்தனங்களை எடுத்துக் காட்டும் அருமையான கட்டுரை.அதைப்போலவே தொடா்ந்து வரும் கடிதங்களும் அருமையான தகவல்களை கொண்டுள்ளது.குறைகள் இருக்க லாம்தான். ஆனால் இந்து சமயத்தில் தீர்வு உள்ளது.
    1)ஆறுகள் நதிகள் எல்லாம் கடலை அடைவதுபோல் எல்லா மதங்களும் இறைவனைத்தான் அடைகின்றன.
    2) எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்ளும் அறியேன் பராபரமே.
    3) விரிந்து படும் சமயமெல்லாம் பார்க்கின் பரம் பொருளே என் விளையாட்டு அல்லால் வேறு வினையில்லை.
    4) நடமாடும் கோவில் நம்மவர்க்கு ஈதால் படமாடும் கோவில் பகவற்கு தாமே.
    5.யாருக்கும் ஈமின் அவன்இவன் என்றன் மின்
    6.மனிதன் தெய்வீகமானவன்.
    7.மனித குலத்தை இந்து என்று அடையாளப்படுத்தவில்லை இந்துசமய நூல்கள்.
    8.இந்து சமய நூல்கள் மனிதனை நல்லவன் கெட்டவன் என்றுதான் பிரித்துப் பார்க்கின்றது. முஸ்லீம் காபீர் என்று பிரிப்பதில்லை.
    9.இராமாயாணம் மகாபாரதம் ஆகியவைகள் தேச இன மொழி அடிப்படையில் ஆன எந்தகருத்தையும் ஆதரிக்கவில்லை.ஆனால் தர்மத்தை காக்க வேண்டும் என்பதே அதன லட்சியம்.
    10.தர்மத்தை காக்க வேண்டும்தர்மம் நம்மை காக்கும் என்பது இந்து சமயம்.
    11. ஏகபத்தினி விரதத்தை நவீன சித்தாந்தமாக உயா்ந்த பண்பாடாக முன்வைக்கின்றது இந்து சமயம்.
    12.பிரம்மச்சரியம் என்ற ஒழுக்கத்தை முன் வைத்து ஆண்கள் பெண்கள் அனைவரும் திருமணம் முடிக்கும் வரை கற்பு நெறிதவறாது வாழ வேண்டும் என்கிறது இந்து சமயம்.
    13.ஏக பத்தினி விரம் சிறந்த தவம் என்கிறது இந்து பண்பாடு.
    14. விரதங்களில் சிறந்த விரதம் பிரம்மச்சரிய விரதம்
    15.திருமணத்தை தெய்வீக பந்தம் என்கிறது இந்துசமயம்.வெறும் ஒப்பந்தம் என்ற கீழ்தரமான கருத்தை ஏற்கவில்லை.
    16.சைவ உணவுதான் மனிதனின் பண்பாட்டிற்கும் ஆன்மீக வளா்ச்சிக்கும் பொருத்தமானது என்கிறது இந்து சமயம்.
    ----------------------------------------------------
    இது போன்ற எந்த கருத்தும் அரேபிய காடடரபிகளில் புத்தகங்களில் உள்ளதா ?முஸ்லீம்களே விடைஅளியுங்கள்.

    ReplyDelete